PDA

View Full Version : Makkal thilagam mgr part 22



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

fidowag
25th January 2018, 11:38 PM
தினத்தந்தி -19/01/18
http://i66.tinypic.com/2q2k5qu.jpg
http://i66.tinypic.com/b8l5hd.jpg

fidowag
25th January 2018, 11:40 PM
மாலை மலர் -19/01/18
http://i64.tinypic.com/2prigwn.jpg
http://i64.tinypic.com/fk4sc6.jpg

fidowag
25th January 2018, 11:41 PM
தின இதழ் -19/01/18
http://i66.tinypic.com/okv6ah.jpg

fidowag
25th January 2018, 11:42 PM
http://i63.tinypic.com/voscg8.jpg

fidowag
25th January 2018, 11:42 PM
மாலை சுடர் -19/01/18
http://i65.tinypic.com/4vr3fk.jpg

fidowag
25th January 2018, 11:43 PM
http://i63.tinypic.com/14llesx.jpg

fidowag
25th January 2018, 11:44 PM
தினச்செய்தி -19/01/18
http://i68.tinypic.com/9qbgcp.jpg

fidowag
25th January 2018, 11:46 PM
http://i65.tinypic.com/x2ti09.jpg

fidowag
25th January 2018, 11:47 PM
http://i64.tinypic.com/2hnxc3r.jpg

fidowag
25th January 2018, 11:50 PM
தினமலர் -25/01/18
http://i67.tinypic.com/10z1i6h.jpg
முடியாது. மறைந்து 30 ஆண்டுகள் ஆனாலும் ,எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்பது திண்ணம் .
http://i68.tinypic.com/rqvxft.jpg

Richardsof
26th January 2018, 06:30 PM
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த மக்கள் திலகத்தின் படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் .
குறிப்பாக பாடல்கள் அனைத்தும் தேன்சுவை . மெல்லிசை மன்னரின் இசையில் பாடகர் திலகம் டி .எம்.எஸ் , சீர்காழி கோவிந்தராஜன்
இசை அரசி சுசீலா , ஈஸ்வரி ஜானகி வாணிஜெயராம் , எஸ்.பி..பாலசுப்ரமணியம் ஆகியோர் பாடிய பாடல்கள் காலத்தால் மறக்க முடியாத காவிய கீதங்கள் .


மெல்லிசை மன்னர் எம் எஸ் வி தனியாக இசை அமைத்த படங்கள் கலங்கரை விளக்கம் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
படங்களில் ரீ ரெக்கார்டிங் மற்றும் பாடல்கள் எல்லாமே இனிமை .
கலங்கரை விளக்கம்
அன்பே வா
நான் ஆணையிட்டால்
நாடோடி
சந்திரோதயம்
பறக்கும்பாவை
பெற்றாலதான் பிள்ளையா
காவலக்காரன்
ரகசிய போலீஸ் 115
குடியிருந்தக்கோயில்
கண்ணன் என் காதலன்
புதிய பூமி
கணவன்
நம்நாடு
தேடிவந்த மாப்பிள்ளை
எங்கள் தங்கம்
குமரிக்கோட்டம்
ரிக் ஷாக்காரன்
நீரும் நெருப்பும்
ஒருதாய் மக்கள்
சங்கே முழங்கு
ராமன் தேடிய சீதை
உலகம் சுற்றும் வாலிபன்
நேற்று இன்று நாளை
சிரித்து வாழ வேண்டும்
உரிமைக்குரல்
நினைத்ததை முடிப்பவன்
நாளைநாமதே
நீதிக்கு தலை வணங்கு
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
இன்று போல் என்றும் வாழ்க
மீனவ நண்பன்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்


இன்று மாலை எம் எஸ் வி குழுவினர நடத்தும் மெல்லிசை மன்னரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் விழா இனிதே அரங்கேற வாழ்த்துக்கள் .

Richardsof
26th January 2018, 06:35 PM
அன்பே வா படத்தைப் பொருத்த வரை நான் எனது பள்ளிப்பருவத்தில் மடியில் எனது சிறிய தம்பியை அமர வைத்து பார்த்த ஞாபகம் இன்றும் பசுமையாக உள்ளது. அதன்பிறகு இப்படத்தை குறைந்தது ஏழெட்டு தடவை பார்த்து விட்டேன். பாடல்கள் மனனம் செய்து விட்டேன் .உள்ளம் என்றொரு கோவிலிலே பாடலும் ஏய் நாடோடி பாடலில் எம்ஜிஆரின் துள்ளலான நடனமும் எனக்கு மிகவும் பிடித்தவை. மெல்லிசை மன்னரும் வாலியும் மாயாஜாலம் பண்ணியிருக்கிறார்கள். சரோஜாதேவி கொள்ளை அழகு. சிம்லா காட்சிகள் தீவிரவாதத்தால் நாம் இழந்த சொர்க்க்த்தை ஏக்கத்துடன் காணச் செய்கின்றன. நாகேஷூம் இ்ப்படத்தில் மி்க அற்புதமாக நடித்திருப்பார். லவ் பேர்ட்ஸ் பாடலில் அபிநய சரஸ்வதியின் விரல் அசைவுகளை பல ஆண்டுகள் கழித்து மாதுரி தீக்சித் சாஜன் படப்பாடலில் பயன்படுத்தி கைத்தட்டல்களை அள்ளினார்.
எம்ஜிஆரின் படங்களும் பாடல்களும் இன்றும் எனக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருபவையாக உள்ளன.
Courtesy - mgr fan net

Richardsof
26th January 2018, 06:44 PM
BONGOS என்ற தாள வாத்தியக் கருவியை மிகச் சிறப்பாக மெல்லிசை மன்னர்கள் கையாண்டார்கள்.அதன் இனிய நாதம் தமிழ் திரை இசைக்கு புத்துணர்வுமிக்க புதிய சப்தத்தை வழங்கியது.இன்று ஏ.ஆர் ரகுமான் போல தாளத்தை சகட்டுமேனிக்கு போட்டு ” முழக்காமல் ” மிகவும் கச்சிதமாக திரையில் காட்சிகளுக்கு பொருத்தமாக பயன்படுத்தினார்கள்.

அதுமட்டுமல்ல கியுபாவில் தோன்றி பின் மெக்சிக்கோவில் நிலை பெற்ற நடன முறையில் பயன் பட்ட DENZONES என்ற இசை , ENRIQUE JORRIN என்பவரால உருவாக்கப்பட்டது.ஆங்கில இசையின் கலப்பும் ,கியூபா மற்றும் ஆபிரிக்க தாளத்தின் கலவைகளாக உருவான இந்த இசை பிரஞ்சு காலனித்துவ வாதிகளால் பரப்பபட்டது.இந்த இனிய கலவையின் விளைவாகத் தோன்றியதே CHA CHA CHA என்ற நடன இசை.இந்த இசை 1940 , 1950 களில் மிகவும் புகழ் பெற்றிருந்தது.இந்த CHA CHA CHA வை பயன்படுத்தி 1960 களில் வெளிவந்த பல படங்களில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பல வெற்றிப்பாடலகளைத் தந்தார்கள். அவற்றில் சில

1. அன்று வந்ததும் இதே நிலா [படம் : பெரிய இடத்து பெண் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P சுசீலா
இந்த பாடலில் நேரடியாக ” CHA CHA ” என்ற சொல் பிரயோகம் நேரடியாக வரும்.
2. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி
இந்த பாடலிலும் நேரடியாக ” CHA CHA ” என்ற சொல் பிரயோகம் நேரடியாக வரும்.

3. அவளுக்கென்ன அழகிய முகம் [படம் : சர்வர் சுந்தரம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி …..
இந்தப் பாடலில் நேரடியாக ” CHA CHA ” வராது ஆனால் தொனிப்புகளில் மிக துல்லியமாகத் தெரியும்.

உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் கொண்டு வந்த பெருமை அவர்களைச் சாரும் என்பதை நாம் அவர்களது பாடல்களை இன்று கேட்கும் போதும் உணரக்கூடியதாக இருக்கின்றது.இன்று சர்வ சாதாரணமாகப் பயன் படுத்தப்படும் வெளி நாட்டு வாத்தியங்களை எல்லாம் இவர்களே அறிமுகம் செய்தார்கள்.ஒரு மெலோடி [Melody ] யுகத்தை உருவாக்கி அதில் வாத்திய இனிமையையும் ,நவீனத்தையும் , காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தார்கள்.பாடல் மட்டுமல்ல பாடலுக்கு வரும் முகப்பு இசை [Opening Music] இடையில் வரும் வாத்திய இசை [Interlute] போன்றவற்றைப் புதுமையாக அமைத்து பாடலின் எல்லா பக்கத்தையும் இனிமையாக்கினார்கள்.ஹம்மிங் , கோரஸ் , விசில் , பறவை இனங்களின் ஒலிகள் , இரவின் ஒலி போன்ற சப்தங்களை எல்லாம் மிக நுட்பமாக பயன்படுத்தினார்கள்.மனதை கரைய வைத்து நினைவில் இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் இந்த இரட்டையர்கள்.காட்சிக்கு பொருத்தமான இசையை பயன்படுத்தி வந்த இரட்டையர்கள் மரபை விட்டு வில்கியவர்களல்ல என்பதும் கவனத்திற்குரியது.வாத்திய சேர்க்கைகளில் புதுமை இருந்தாலும் ராக அடிப்படைகளில் நின்று மனதை வசியம் செய்கின்ற பல பாடல்களை தந்தார்கள்.ராகங்களை “மறைத்து வைக்கும் “அதே நேரத்தில் அதன் குணாம்சங்களை பாத்திரங்களின் உணர்வு நிலைக்கு ஏற்ப கொடுக்கும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள்.சில பாடல்களில் ராகங்கள் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு விதமான மயக்க நிலலையில் , ரகசியமாக ஒளித்து வைக்கும் கலையை கை வரப் பெற்றார்கள் எனலாம்.கனமான ராகங்களில் மெல்லிசை தன்மை ஓங்கி நிற்கும்.பாடல்களைத் தந்து சாதனை படைத்தார்கள். சில சாதனைப் பாடல்கள்…

1. கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே [படம் : கர்ணன் ] பாடியவர்: P.சுசீலா ராகம்: சுத்த தன்யாசி

2. நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே [படம் : பார் மகளே பார் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம்: தர்மவதி
3. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் [படம் :பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம் : சிவரஞ்சனி
4. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் [படம் : பாக்கியலட்சுமி ] பாடியவர் : P.சுசீலாராகம் : சந்திர கெளன்ஸ்
5. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல [படம் : பாசமலர் ] பாடியவர்கள் : T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம் : ஆபேரி
6. தங்கரதம் வந்தது [படம் : கலைக்கோயில் ] பாடியவர்:பாலமுரளி கிருஷ்ணா + P.சுசீலா ராகம் : ஆபோகி
7. மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா [படம் : கற்பகம் ] பாடியவர்: P.சுசீலா ராகம் : கீரவாணி
8. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் [படம் : போலீஸ்காரன் மகள் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் ராகம் : ஆபேரி
9. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் ராகம் : கல்யாணி

10.ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை [படம் : பணத்தோட்டம் ]பாடியவர்: P.சுசீலா ராகம் : காபி

11. பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா [படம் : பணத்தோட்டம் ]பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா ராகம் : சாருகேசி

12 .பொன் என்பேன் சிறு பூ என்பேன் [படம் : போலீஸ்காரன் மகள் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + எஸ்.ஜானகி ராகம் : சாருகேசி

13 .தமிழுக்கும் அமுதென்று பேர் [படம் : பஞ்சவர்ணக்கிளி ] பாடியவர்: P.சுசீலா ராகம் : திலங்

14 .நான் உன்னை சேர்ந்த செல்வம் [படம் : கலைக்கோயில் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா ராகம் : மோகனக்கல்யாணி

15 .நெஞ்சம் மறப்பதில்லை [படம் : நெஞ்சம் மறப்பதில்லை ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா ராகம் :

COURTESY - NET

Richardsof
26th January 2018, 06:46 PM
எம்.எஸ்.விஸ்வநாதன் பெரும்பாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர். இருப்பினும் எம்.ஜி.யாரின் திரை ஞானம் காரணமாக இசையும் எம்.ஜி.யாரும் எம்.எஸ்.வியும் பிரிக்க முடியாத பந்தத்தில் கிடந்தனர். அது நாடோடி மன்னனில் தொடங்கி, உலகம் சுற்றும் வாலிபன் வழியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரையிலான நீண்ட பந்தம். வாலி என்ற மாபெரும் கலைஞனை உருவாக்க எம்.ஜி.யார். எம்.எஸ்.விஸ்வநாதன் , அன்றைய அரசியல் சூழல் இவை காரணம் என்றால் மிகையாகாது. கொடுத்ததெல்லாம் கொடுத்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ஏன் என்ற கேள்வி, புத்தன் ஏசுகாந்தி பிறந்தது, நான் ஆணையிட்டால் போன்ற எம்.ஜி.யார் கொள்கைவிளக்க பாடல்கள் இன்றளவும் அ.இ.தி.மு.க மேடைகளில் நமக்கு எம்.எஸ்.வியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.நேற்று இன்று நாளை எம்ஜியாரின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய படம். அவர் திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி வெளிவந்த முதல் படம். அதில் இடம் பெற்ற காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று என்ற கொள்கைவிளக்கப் பாடல் அதன் தன்மை கெடாமல் பட்டி தொட்டிகளில் இன்றும் முழங்கியவண்ணம் உள்ளது. அந்தப்பாடலுக்கு நமது எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்கள்தான் இசையமைத்தார்.

Richardsof
26th January 2018, 06:48 PM
எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.



எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.



மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.



இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..



பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.



அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால்யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின்எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல்அற்புதமாக இசைத்துள்ளார்.

Richardsof
26th January 2018, 06:55 PM
படகோட்டிக்கு அடுத்து வாலி ஸ்கோர் செய்தது ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில்தான். அதற்கும் முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கண்ணதாசன் மற்ற பாடல்களை எழுதியிருக்க வாலியின் “பருவம் எனது பாடல்” பாடலும், “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை” பாடலும் புகழ்பெற்றன.

அடுத்து வந்த படம்தான் எங்க வீட்டுப் பிள்ளை. 1965-ல் வந்த இந்தப் படம்தான் வாலியை இன்றுவரை நினைக்கும் அளவுக்குத் தூக்கி நிறுத்தியது. அதுவரை வசூல் மன்னனாகவும், மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய எம்ஜிஆர் என்ற அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும் தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும், மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது. இந்தப் பாடலைத்தவிர ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’, பாடலும் ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாடலும் வாலிக்குப் புகழ் சேர்த்தன.

(வாலி அடிக்கடி ஒரு கிளிஷே போல இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றுதான் சொல்லவேண்டும். தெய்வத்தாயில் வாடகை, விலை, இதயம் என்ற கான்செப்டை ஆரம்பித்தவர் நிறையப் பாடல்களில் திரும்பத் திரும்ப இதையே சொல்லியிருக்கிறார். ‘இந்தப் புன்னகை என்ன விலை’……….’.என் இதயம் சொன்ன விலை’, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்……………வாடகை என்ன தரவேண்டும்?) அடுத்துவந்த பஞ்சவர்ணக்கிளியில் புரட்சிக் கவிஞரின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலுக்கு அடுத்து (இங்கே இசை ரசிகர்கள் கொஞ்சம் கவனிக்கவேண்டும்.


‘துன்பம் நேர்கையில்’ பாடலுக்கு அடுத்து பாரதிதாசனின் இந்தப் பாடலுக்கு இணையாக இனிமையாக இசையமைக்கப்பட்ட புரட்சிக்கவிஞரின் பாடல் வேறு ஏதாவது இருக்கிறதா? பாரதிதாசனின் பாடல்கள் ஏராளமாய் இருக்கின்றன. மற்ற எந்த இசையமைப்பாளரையாவது பாரதிதாசனின் ஏதாவது ஒரு பாடலை எடுத்துக்கொண்டு ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்பதை விடவும் இனிமையாக இசையமைத்து புழக்கத்தில் விடச்சொல்லுங்களேன். அந்த இசையமைப்பாளரைத் தமிழுலகம் உலகம் உள்ளவரைக்கும் கொண்டாடும்) புகழ்பெற்ற பாடல் ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்’, மற்றும் ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’……………..

எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்கு அடுத்து எம்ஜிஆர் படங்களுக்கு வாலிதான் என்று அமைந்துவிடுகிறது. அடுத்து வருகிறது ‘பணம் படைத்தவன்.’ இதில் மொத்தம் ஏழு பாடல்கள். ஏழு பாடல்களில் ஆறு பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன. முக்கியமானவை இரண்டு பாடல்கள். ஒன்று – ‘கண்போன போக்கிலே கால்போகலாமா’, இரண்டாவது ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை’. இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதினார் என்றே இன்னமும் லட்சக்கணக்கானோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்

. இல்லை இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் வாலி. அதிலும் ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்’ என்ற ஒற்றை வரியில் காதலனின் பிரிவு நுட்பத்தைச் சொல்லும் இடத்தில் வாலி மிக உயரத்தில் நிற்கிறார் என்பதை உரத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. கண்போனபோக்கிலே கால்போகலாமா என்பதும் வாலியின் பெயர் சொல்லும் மிகச்சிறப்பான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தின் மற்ற பாடல்கள்…………’அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்’, ‘பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்’, ‘மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க’, அடுத்தது ‘எனக்கொரு மகன் பிறப்பான்’………………பாடல்களின் ‘தாக்கம்’ அப்போதெல்லாம் எந்தளவுக்கு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான் இதையெல்லாம் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது.

கவியரசர் பாடல்கள் எழுதும் படங்களிலும் ஓரிரு பாடல்களை வாலி எழுதுகின்ற சந்தர்ப்பம் நிறையவே வாய்க்கிறது. தம்மை நாடிவரும் சில பட அதிபர்களிடமும் இயக்குநர்களிடமும் “வாலி நல்லா எழுதறான் அவனிடம் எழுதிக்கங்க. எனக்காக காத்திருக்க வேணாம்” என்று கவிஞரே சொன்னதாகவும் கூறியிருக்கிறார் வாலி. குழந்தையும் தெய்வமும் படத்தில் ‘அன்புள்ள மான்விழியே’ பாடலும், ‘நான் நன்றிசொல்வேன் என் கண்களுக்கு’ என்ற இரு பாடல்களை எழுதுகிறார் வாலி. இவை கவியரசரின் மற்ற பாடல்களுடன் சேர்ந்து (குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, பழமுதிர்ச் சோலையிலே, கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே பாடல்கள் கண்ணதாசனுடையவை) செம ஹிட்டடிக்கின்றன.

எம்ஜிஆரின் கலங்கரை விளக்கம் படத்தில் ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’ ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் பஞ்சு அருணாசலம் இயற்றியவை. வாலி எழுதிய ‘நான் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்’, ‘என்ன உறவோ என்ன பிரிவோ’, ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’ மூன்று பாடல்களும் இசை ரசிகர்களைக் கொண்டாடவைத்த பாடல்கள். இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லவேண்டும். விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்ததாகச் சொல்லப்பட்ட ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ படத்திற்கு அடுத்து உடனடியாய் வந்த படங்கள் குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், நீலவானம், நீ………………. ஆகியன.

அதனால் இந்தப் படங்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்து வெளியாகாமல் இருந்து பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதனால் விஸ்வநாதன் பெயரில் வந்தன என்றும் சொல்லப்படுவதுண்டு. அதுபற்றிய விளக்கத்தை எம்எஸ்வியோ அல்லது ராமமூர்த்தியோ இதுவரை சொன்னதில்லை. ஆனால் கலங்கரை விளக்கம், குழந்தையும் தெய்வமும் பாடல்களை வைத்துப் பார்க்கும்போது இருவரும் சேர்ந்து இசையமைத்த படங்களே என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. எது எப்படியோ, எம்எஸ்வி முழுக்க முழுக்க ‘தனியாக’ இசையமைத்து வெளிவந்த படம் ‘அன்பே வா’தான்
courtesy net

Richardsof
26th January 2018, 07:06 PM
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .

“சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!


மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் ;

அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு எழுதச் சொன்னால் எப்படி ..?

சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..!
வேறு வழி இல்லை..! படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் .

சிரித்தார் கண்ணதாசன்.

சில காலம் முன் அவர் எழுதி இருந்த ஒரு கவிதை :
“ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் – இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான்..”

கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..!
அப்படி இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார் என்றால்…?

புரிந்து கொண்டார் கண்ணதாசன் !

மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .

எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசனுக்கு தெளிவாக தெரிந்து போனது தயாரானார் கண்ணதாசன்.
“சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்”

கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,
பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள் ..!

“மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !”

“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.

அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த வார்த்தைகள் :
“அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே”

கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :

“நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது
ந*ல்ல*வ*னும் தீய*வ*னே
கோப்பை ஏந்தும் போது”

“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?

கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி சில பாஸிடிவ் விஷயங்களை சொல்ல வேண்டாமா..?

“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் :

“புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
காதலில் போதை இல்லையோ
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ

மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ ?

நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு !”

சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் கண்ணதாசன்.

படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போதாவது தெரிகிறதா..?”

ஆம் .. யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் இந்த வித்தை ..
அது எங்கிருந்து வந்தது கண்ணதாசனுக்கு ..?

இதோ.. அதை கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!

தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே

உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”

ஆஹா..!

வாழ்க கண்ணதாசன் புகழ் ! வளர்க அவர் தாலாட்டிய தமிழ் !!

நன்றி: எழுத்தாளர் : Vallam John

Richardsof
26th January 2018, 07:11 PM
தம் படங்களுக்குப் பாடல்கள் எழுத புதுப்புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்றைக்கே முனைப்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்ணதாசனோடு எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியான பிரிவு தோன்றியிருந்ததால் அவரை நாடமுடியாத நிலை. மேலும், கண்ணதாசன் சிவாஜியின் படங்களுக்கு அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார்.

ஆகவே, தவிர்க்கவே முடியாமல் வாலி போன்றவர்கள் எம். ஜி. ஆர் படங்களில் தொடர்ந்து எழுதலாயினர். வாலியின் பாடல்கள் கண்ணதாசனே எழுதியவையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தியபோதிலும் கண்ணதாசன் பாடல்களோடு ஒப்பிடுகையில் ஒருபடி தாழ்ந்தே இருந்தன. மேலும் கவிஞர் வாலியும் எல்லாப் படங்களுக்கும் நிறைய பாடல்கள் எழுதி வந்தார். எம்.ஜி.ஆருக்குத் தமிழ் அறிந்த புலவர்கள்மீது அளப்பரிய மதிப்பும் பற்றும் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப் பற்றே தமிழறிஞரான கருணாநிதியோடு அவர் ஆழ்ந்த தோழமை கொள்வதற்குக் காரணம். அவர் எப்போதும் தமிழறிஞர்களையும் புலவர்களையும் மதிப்போடு போற்றியும் ஆதரித்தும் வந்திருக்கிறார் என்பதற்கு நிறைய சாட்சியாளர்களைக் காணமுடிகிறது. எம்.ஜி.ஆர் தம் படங்களுக்காகப் புதிய சிந்தனையாளர்களைத் தேடியதோடு நில்லாமல் அவர்களுக்குத் தம் படங்களில் இயன்றவிடங்களில் எல்லாம் உரிய வாய்ப்பைத் தந்து ஏற்றிவிட்டிருக்கிறார். தமிழ்த் திரையின் அபூர்வமான படைப்புகளைத் தந்த இயக்குநர் மகேந்திரன் எம்.ஜி.ஆர் தந்து புரந்ததால் ஆளானவர் என்பதை அவரது சுயசரிதைப் பக்கங்கள் கூறுகின்றன.

இத்தனைக்கும் மகேந்திரன் எம்.ஜி.ஆரின் படங்கள் எவற்றிலும் பங்கு பெற்றவரோ பணியாற்றியவரோ அல்லர். தம் கடைசிக் காலத்தில்கூட திரைப்படக் கல்லூரிக்கு பரிந்துரைக் கடிதம் ஒன்றைத் தந்து இயக்குநர் பாடப்பிரிவில் மாணவன் ஒருவனைச் சேர்க்க உதவுகிறார். அப்படிச் சேர்ந்த மாணவர்தான் பிற்காலத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வர்த்தகப் படங்களை வெற்றிகரமாக இயக்கமுடியும் என்பதை நிறுவிய இயக்குநர் ஆர். வி. உதயகுமார். அவர் முதலமைச்சராக இருந்தபோதும்கூட யார் அவரைச் சந்திக்கச் சென்றாலும் அவரே முன்வந்து கேட்கும் கேள்விகளில் ஒன்று 'சொல்லுங்க. நான் உங்களுக்கு என்ன செஞ்சு தரணும் ?' என்பதே. பஞ்சு அருணாசலம், புலமைப்பித்தன், முத்துலிங்கம் ஆகியோரும் எம்.ஜி.ஆரின் அறிமுகங்களே. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் நா. காமராசன். நா காமராசன் தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர்.

Richardsof
26th January 2018, 07:18 PM
எம்.ஜி.ஆர்



எம்ஜிஆர் 1 – எம்.ஜி.ஆரின் அக்கறை
எம்ஜிஆர் 2 – அண்ணாவின் தம்பிகள்
எம்ஜிஆர் 3 – எம்.ஜி.ஆரின் எம்.கே.டி அன்பு
எம்ஜிஆர் 4 – மனிதமும் மதநல்லிணக்கமும்
எம்ஜிஆர் 5 – நேரு எழுதிய கடிதம்
எம்ஜிஆர் 6 – இந்தி எதிர்ப்பு போராட்டமும் விமர்சனமும்
எம்ஜிஆர் 7 – எம்.ஜி.ஆரின் பொதுவுடமை
எம்ஜிஆர் 8 – தியாகி கக்கனுக்கு செய்த உதவி
எம்ஜிஆர் 9 – எம்ஜிஆரும் இந்திரா காந்தியும்
எம்ஜிஆர் 10 – என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்
எம்ஜிஆர் 11 – நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!
எம்ஜிஆர் 12 – கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்
எம்ஜிஆர் 13 – எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும்!
எம்ஜிஆர் 14 – நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!
எம்ஜிஆர் 15 – அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!
எம்ஜிஆர் 16 – நிழலில் எதிரிகள்; நிஜத்தில் நண்பர்கள்
எம்ஜிஆர் 17 – ஆங்கிள் பார்த்த எம்ஜிஆர்!
எம்ஜிஆர் 18 – ஸ்ரீதருக்குச் செய்த உதவி!
எம்ஜிஆர் 19 – அசைவ உணவுப் பிரியர்!
எம்ஜிஆர் 20 – பகட்டுக்கு மயங்காதவர்!
எம்ஜிஆர் 21 – மதியூகத்தின் மறுபெயர்!
எம்ஜிஆர் 22 – மல்லிகையைப் பிய்த்து தின்ற மக்கள் திலகம்!
எம்ஜிஆர் 23 – மென்மையான உள்ளம் கொண்டவர்!
எம்ஜிஆர் 24 – திரையுலகில் முடிசூடா மன்னர்!
எம்ஜிஆர் 26 – படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி!
எம்ஜிஆர் 27 – மனிதரை மனிதராக மதிப்பவர்!
எம்ஜிஆர் 28 – ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’!
எம்ஜிஆர் 29 – மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!
எம்ஜிஆர் 30 – எதையும் கொடுத்தே பழக்கம்!
எம்ஜிஆர் 31 – சந்திரபாபு நட்பு
எம்ஜிஆர் 32 – எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!
எம்ஜிஆர் 33 – குண்டு பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட குரல்வளம்!
எம்ஜிஆர் 34 – இரக்க சுபாவம் கொண்டவர்!
எம்ஜிஆர் 35 – எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்!
எம்ஜிஆர் 36 – m.g.r. ஆத்திகரா? நாத்திகரா?
எம்ஜிஆர் 37 – ‘‘நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா’’!
எம்ஜிஆர் 38 – நினைத்ததை முடிப்பவர்!
எம்ஜிஆர் 39 -படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’!
எம்ஜிஆர் 41 – அமுதசுரபி!
எம்ஜிஆர் 42 – ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்!
எம்ஜிஆர் 43 – மழையில் உதவிய கரங்கள்
எம்ஜிஆர் 44 – போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!
எம்ஜிஆர் 46 – சத்தியவதியின் வயிற்றில் பிறந்த சத்தியம்!
எம்ஜிஆர் 47 – உண்பது, உறங்குவது போல கொடுப்பதும் அவரது இயல்பு!
எம்ஜிஆர் 48 – அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்!
எம்ஜிஆர் 49 – ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
எம்ஜிஆர் 50 – எம்ஜிஆரின் அபார நினைவாற்றல்!
எம்ஜிஆர் 51 – எம்.ஜி.ஆரின் வாரிசுகள்!
எம்ஜிஆர் 52 – புரட்சித் தலைவர் வாழ்க!
எம்ஜிஆர் 54 – ரத்தம் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள்!
எம்ஜிஆர் 55 – இசைபட வாழ்ந்தவர்!
எம்ஜிஆர் 56 – கேட்காமலேயே கொடுத்தவர்!
எம்ஜிஆர் 57 – ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!
எம்ஜிஆர் 58 – நடனக் கலைஞர்!
எம்ஜிஆர் 59 – உரிமைக்குரல்!
எம்ஜிஆர் 60- நாடகக்கலை மீதான பிரியம்!
எம்ஜிஆர் 61 – முப்பிறவி எடுத்தவர்!
எம்ஜிஆர் 62 – பொருளாதாரம் தெரியாதவர்!
எம்ஜிஆர் 63 – சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்…
எம்ஜிஆர் 64 – மக்களின் அடிமை நான்!
எம்ஜிஆர் 65 – ஏழைப் பங்காளர்!
எம்ஜிஆர் 67 – மற்றவர்களுக்கும் மதிப்பளித்தவர்!
எம்ஜிஆர் 68 – சினிமாவிலும் பின்பற்றிய தர்மம்!
எம்ஜிஆர் 69 – அரசியல் வேறு, நிர்வாகம் வேறு
எம்ஜிஆர் 70 – தமிழ்ப் புலமை மிக்கவர்!
எம்ஜிஆர் 71 – விளம்பரத்தை விரும்பாத உள்ளம்!
எம்ஜிஆர் 72 – உதவும் மனம்!
எம்ஜிஆர் 73 – காட்சி அமைப்பாளர்!
எம்ஜிஆர் 74 – குழந்தை உள்ளம்!
எம்ஜிஆர் 75 – முதலும் கடைசியுமான விநியோகஸ்தர்!
எம்ஜிஆர் 76 – கொடுத்தது கோடிகள்!
எம்ஜிஆர் 77 – நரிக்குறவர்கள் அன்பு
எம்ஜிஆர் 78 – எடுத்துக்கொண்ட கடமைக்கே முதலிடம்!
எம்ஜிஆர் 79 – தொண்டருக்கும் தொண்டர்!
எம்ஜிஆர் 80 – ஆஸ்திரேலிய இயக்குநரின் பாராட்டு
எம்ஜிஆர் 81 – தொண்டர்கள் நலன்
எம்ஜிஆர் 82 – பத்திரிகையாளர்!
எம்ஜிஆர் 83 – வென்றாரும் இல்லை வெல்வாரும் இல்லை!
எம்ஜிஆர் 84 – தமிழ் வளர்த்தோன்!
எம்ஜிஆர் 85 – ‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’
எம்ஜிஆர் 86 – அப்படியேதான் இருந்தார் எம்.ஜி.ஆர்.!
எம்ஜிஆர் 87 – பெண்களை தெய்வமாக மதித்தவர்!
எம்ஜிஆர் 88 – கலைஞருக்கெல்லாம் வள்ளல்!
எம்ஜிஆர் 89 – நடிகர் நலனில் அக்கறை கொண்டவர்!
எம்ஜிஆர் 90 – படுத்துக்கொண்டே நடித்தவர்!
எம்ஜிஆர் 91 – ரசிகர்களுக்கு மதிப்பளித்து மகிழ்ச்சிப்படுத்தியவர்!
எம்ஜிஆர் 92 – ‘குடும்பத் தலைவன்’!
எம்ஜிஆர் 93 – சிறந்த கொடையாளி!
எம்ஜிஆர் 95 – கருணை உள்ளம் கொண்டவர்!
எம்ஜிஆர் 96 – ரசிகர்களை அரசியலில் வளர்த்தவர்!
எம்ஜிஆர் 97 – பொய்க்காலில் அல்ல, புகழ்க்காலில் நிற்கும் உயரம்!
எம்ஜிஆர் 98 – அரசியல் எதிரிகளையும் ஈர்த்த பண்பு!
எம்ஜிஆர் 99 – மூன்றெழுத்துக்குள் இருந்த மாமனிதம்!
எம்ஜிஆர் 100 -அவர் புகழுக்கு முடிவேது?

orodizli
27th January 2018, 11:08 PM
மக்கள் திலகம் நூற்றாண்டு நிறைவு பெற்று நூற்றியொன்று நிகழும் அவர்தம் பெருமை மிகு சரித்திர சாதனைகள் பாமலைகள் நம் ரசிக்க கண்மணிகள் வடித்திடும் எழுத்துக்கள் எல்லாம் அருமையோ அருமை...

Richardsof
28th January 2018, 06:17 PM
இருந்தார்…இருக்கிறார்..இருப்பார்…


சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்

பழகியவனாக இருந்தாலும் சரி, பழகாதவனாக இருந்தாலும் சரி.. ஒருத்தர் திடீரென ஆகாதவன் ஆகப்போய்விட்டால் அவனை எந்த அளவிற்கும் தரம் தாழ்த்திப் பேசி கேவலப்படுத்தி ஆனந்தப்படுவது மன விகாரங்களிலேயே டாப் ரகம்.



வியப்பு என்னவென்றால் அவர் உயிரோடு இருந்தபோது மட்டுமல்ல, இறந்து முப்பதாண்டுகள் ஆன பிறகும் அவரை முன்னணி அரசியல் கட்சிகளின் மேடைகளில் எதிர் மறையாய் விமர்சிக்கக்கூட எவருக்கும் தைரியமில்லை.

தமிழக அரசியல் வரலாற்றில் அப்பேர்பட்ட மகத்தான சக்தியாய் மக்களின் மனதில் இன்றும் சாகாவரத்துடன் வாழ்கிறது எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம்..



சிறுவனாய் கஞ்சிக்கு வழியின்றி மூன்று நாள் பட்டினியுடன் உயிருக்கு போராடியதை மறக்கவே முடியாததால்தான், நாட்டையே ஆளும் நிலைக்கு வந்தபோது லட்சோப லட்சோப குழந்தைகள் பள்ளிகளில் பசியாற மதிய உணவு திட்டத்தை எம்ஜிஆரால் சீர்பட உருவாக்க முடிந்தது.. சத்துணவு தந்த சரித்திர நாயகன் என பார் முழுவம் புகழ் பரவியது.. கிராமப்புறங்களில் பள்ளிகளை எட்டிப்பார்க்கமுடியாத வறுமைசூழ் குடும்பத்து சிறுவர்-சிறுமியரெல்லாம் மதிய உணவுக்கு உத்தரவாதம் என்ற நிலை வந்தவுடன் கல்விக்கூடங்களை நோக்கி வர ஆரம்பித்தனர்.

ஒன்றாம் வகுப்பில் தேர்வான மாணவனுக்கும், தோல்வி என கீழே இறக்கிவிடப்பட்ட மாணவனுக்கும் இடையே அறிவில் அப்படியென்ன மலையளவு வித்தியாசம் கண்டீர்கள் என்று அவர் மனதில் உறுத்தியதன் விளைவுதான், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை அனைவரும் பாஸ் என்று அவரின் அரசு போட்ட ஆணை. ஃ

ஃபெயில் என்பது இல்லையென்று வந்தபிறகு, மக்குப்பிள்ளை மக்கு பிள்ளை என்று காரணம் காட்டி குழந்தைகளை பள்ளியைவிட்டு நிறுத்தும் படலம் விடைபெற்று ஓடிப்போனது. மக்குப்பிள்ளைகள், கால ஓட்டத்தில் கல்வியில் வேகம்பெற்று பட்டப்படிப்பை நோக்கி முன்னேற ஆரம்பித்தார்கள்.

பொறியியல் படிப்பு என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலகட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர். இன்றைக்கு தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் எஞ்சினியரிங் படிப்பு படிக்காத ஆளே இல்லை என்கிற அளவுக்கு அதிசயமான நிலைமை..


மலையாளி என்று திடீர் அரசியல் எதிரிகளால் விமர்ச்சிக்கப்பட்ட அவர்தான் மதுரையில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்.. தஞ்சையில் தமிழுக்கென்றே ஒரு பல்கலைக்கழகத்தையும் உருவாக்கினார்..ஏதோ அரசியல் ஆதாயங்களுக்காக இதை செய்தவர் அல்ல.

வயிற்றுப்பாட்டுக்காக எட்டுவயதில் நாடக மேடையேறி நடிக்க ஆரம்பித்த முதலே வசனத்தமிழை அழகழகாய் உச்சரிக்க பழகியவர் அவர். ஆசானும் நகைச்சுவை நடிகருமான காளி என்.ரத்தினத்திடம் சகல வித்தைகளும் கற்றுத் தேர்ந்த எம்.ஜி.ஆர், 1936-ல் சதிலீலாவதி படத்தில் அறிமுகமாகி பின்னாளில் ஏற்றம் பெற்றதெல்லலாம் அடுக்கடுக்காய் தமிழில் பேசிய வீர நடை வசனங்களால்தான்.

1950களில் இளங்கோவன், கருணாநிதி, கண்ணதாசன் போன்றோரின் வசனங்கள் எம்ஜிஆர் வாயிலிருந்து வெளிப்பட்டபோதெல்லாம் கிராமத்து டெண்ட் கொட்டகைகளிலும், நகரத்து திரையரங்குகளில் கைத்தட்டல்கள் அடங்க நெடுநேரம் பிடித்தது..

1952ல் திமுகவில் சேர்ந்தபிறகு, தமிழை நூல்களிலும் மேடைகளிலும் நாடகங்களிலும் கோலேச்ச செய்த சக அரசியல் தலைவர்கள் மத்தியில், திரையில் தமிழை மேம்படுத்தும் குறியீடுகளை தவறாமல் படத்துக்கு படம் இடம் பெறச்செய்தவர் எம்ஜிஆர்.



முதன்முதலில் தயாரித்து நடித்து இயக்கிய நாடோடி மன்னன் (1958) திரைப்படமே, ‘செந்தமிழே வணக்கம்’ என்று தொடங்கும் பாடலோடுத்தான் ஆரம்பிக்கும் அந்த அளவு தமிழை நேசித்தவர் எம்ஜிஆர்

உனக்கு எந்த நாடு என்று கேட்கப்படும் ஒரு கேள்விக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களின் சிறப்பம்சங்களையெல்லாம் விவரித்துவிட்டு, முத்தாய்ப்பாக தமிழ் மண்ணையும் கலை,இலக்கிய பண்பாட்டு பெருமைகளையும் ஒரே ஷாட்டில் தொடர்ந்து ஒன்றரை நிமிடம் பாய்ந்ததோடு அருவியாய் எம்ஜிஆர் பேசும் விதம்… விக்ரமாதித்தன் (1962) படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே அந்த திரையுலக பொக்கிஷம் பற்றி புரியவரும்…

எங்கள் தங்கம் படத்தில், எம்ஜிஆர் தங்கியிருக்கும் ஓட்டை ஒடிசல் பேருந்தை இது விறகு வண்டி என்று கிண்டலடிப்பார் ஜெயலலிதா. அதற்கு பதிலடி கொடுத்துபேசுவார் எம்ஜிஆர்..’’ ஆமாம் இது தமிழ் விரோத சக்திகளை எரிக்,க விறகை கொண்டாரும் வண்டி.. எனக்கு அப்படியொரு தமிழ் வெறி.. நான் சாகும்போதும் தமிழ் படித்து சாகவேண்டும்.. என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’’ என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வார். எம்ஜிஆர் படங்களில் தமிழ் வீச்சு என ஒரு புத்தகமே எழுதலாம்..

தமிழையும் இங்கிலீசையும் கலந்து வாழ்ந்த மேலைநாட்டு நாகரீக கோமான்கள் மத்தியில் அவர் தமிழனாகவே வாழ்ந்தவர். அவரின் ராமாவரம் தோட்டத்தில் வருடத்தில் அமர்க்களப்படும் ஒரு திருநாள் எதுவென்றால் அது பொங்கல் பண்டிகையாகத்தான் இருக்கும்.

வீட்டில் உலைவைத்துவிட்டு நம்பிக்கையோடு அரிசிக்காக எம்ஜிஅர் வீட்டுக்கு செல்லலாம் என மறைந்த நடிகர் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் உதிர்த்த வார்த்தைகள் எவ்வளவு சத்தியம் வாய்ந்தவை என்பது, வள்ளல் கையால் வாங்கி துயரை போக்கி கொண்டவர்களுக்கு மட்டுமே நூறு சதவீத மகிமை புரியும்..மற்றவர்களுக்கு அது ஒரு செய்தியாக மட்டுமே தெரியும்.

திரையில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்த அவர் அரசியலிலும் வாக்குகளை அள்ளும் அதிசயமாகமே மாறிப்போனார். ஜுலியஸ் சீசர் சொன்னானே, Veni, Vidi,Vici… அதாவது, வந்தேன்.. பார்த்தேன்.. வென்றேன்.. என்று..அதேபோல திரையுலகிலும், அரசியல் உலகிலும் எம்ஜிஆர் வந்தார், பார்த்தார், வென்றார்.

மிகப்பெரிய அவமானங்களை சந்தித்தபோதும் அவர் அசரவேயில்லை.. அல்லா மீது என்ற வசனத்தை பேசமறுத்து, அம்மா மீது ஆணை என்று அலிபாபாவும் நாற்பது திருடர்களும்(1956) படத்தில் பேசியதால் எம்ஜிஆர் இல்லாமலேயே, அவரிடம் சொல்லாமலேயே சில காட்சிகளை பிடித்து படத்தையே முடித்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் சுந்தரம்.

அதைவிடக்கொடுமை, எம்ஜிஆரின் முகத்தையும் பெயரையும் கூட போடாமல், பானுமதியை மட்டுமே முன்னிறுத்தி ரிலீஸ் விளம்பரத்தை கொடுத்தார்கள். ஒரு படத்தின் கதாநாயகனை அடையாளம் காட்டாமலேயே பட விளம்பரம் வந்து பெரிய அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டவர் எம்ஜிஆர்.

ஆனால் அலிபாபா வெள்ளிவிழா கொண்டாடிய அதே ஆண்டில் தாய்க்குப்பின் தாரம், மதுரை வீரன் என இரண்டு வெள்ளிவிழா படங்களை கொடுத்து அவமானத்தை துடைந்தெறிந்த துருவ நட்சத்திரமாய் ஜொலித்தவர் அவர்.



எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பேவா, குடியிருந்தகோவில், அடிமைப்பெண், ரிக்சாக்காரன், உரிமைக்குரல் என எவ்வளவு மெகா மெகா ஹிட் படங்கள்.. இன்றைக்கும் தொலைக்காட்சிகளுக்கு, நேயர்களை மறுபடியும் மறுபடியும் அனைத்து தலைமுறையினரையும் அள்ளிவரும் அட்சய பாத்திரங்கள்..

1972ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது மறுபடியும் திரை மொழியிலேயே எதிர்ப்பை காட்டியவர். இந்திய திரை வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக பட வெளியீட்டில் எவ்வளவு இடையூறு காண முடியுமோ அவ்வளவு இடையூறுகளை சந்தித்தது, அவரின் சொந்தப்படமான உலகம் சுற்றும் வாலிபன்..

ஆனால் அத்தனை தடைகளையும் தகர்ந்தெறிந்துவிட்டு, 1973 மே 11ந்தேதி தமிழக திரையரங்குகளில், நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று பாடலோடு தொடங்கிய உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ரசிகர்கள் ஆரவாரம், அசைக்கமுடியாத அரசியல் சக்தியாகவே உருவெடுத்துவிட்டது..

1987, டிசம்பர் 24ந்தேதி மறைகிற வரை வெற்றிச்சரித்திரத்தையும் வெற்றிப்படையையும் எம்ஜிஆர் வசமே இருக்கும்படியும் அது அச்சாரமிட்டுவிட்டுப்போனது.. மூன்று முறை முதலமைச்சர், பாரத ரத்னா, மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் என எத்தனையெத்தனையோ புகழ்மாலைகளை அவர் தோளில் சூடியது

அதனால்தான் இந்தியாவின் ஒரு மாநில முதலமைச்சர் மறைந்த செய்தி பல்வேறு வெளிநாட்டு பத்திரிகைகளில்கூட வெளியாகும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக… கட்டுரையின் தலைப்பை மறுபடியும் படியுங்கள்..

Richardsof
28th January 2018, 06:24 PM
அடிமைப்பெண்’ வெற்றியடைந்தது எப்படி?”

புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; uneasy-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.

ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.

அன்று அடிமைப்பெண்
`அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.

`அடிமைப்பெண்'ணின் சாதனை
தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.

அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’
‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.
பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'
`அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவி நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.

Richardsof
28th January 2018, 06:48 PM
MGR formula

MGR acted in 116 films during the period from 1947 to 1978. He gave up acting in 1977 after he became Tamil Nadu Chief Minister. His last film ‘Maduraiyai Meetta Sundarapaandiyan’ (Madurai Liberator Sundarapaandiyan) was released in 1978. MGR himself directed parts of the film and completed it after the Director B. R. Panthulu died before shooting was over.

Twelve of MGR’s films were silver jubilee hits running for over 25 weeks each. Another 68 films ran for more than 100 at theatres during their first screenings. Even the MGR films that did not run for a 100 days initially turned out to be money-spinners in the long run as each re-release brought large audiences to theatres.

MGR

MGR had a formula of his own in the films he acted in. The story had to be sentimental with displays of mother-son love or brother-sister affection. Despite ups and downs and twists and turns, the good guy had to triumph in the end. Needless to say MGR was always the good guy except for a few in the early stages of his career. The films had to have a positive message imparting a lesson to the people. The hero was regularly portrayed as a paragon of virtue who fights for justice on the side of the oppressed. The hero sings philosophical songs. Besides these features, a typical MGR film always had thrilling fight scenes and titillating love song sequences. MGR got the finest villain actors to play opposite him.

oygateedat
28th January 2018, 10:26 PM
https://s18.postimg.org/wv28myhi1/IMG_7597.jpg (https://postimages.org/)

oygateedat
28th January 2018, 10:33 PM
https://s18.postimg.org/58zh24dix/IMG_7598.jpg (https://postimages.org/)
இன்று மாலை
கோவை
டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
பக்தர்கள்

நன்றி - திரு ஹரிதாஸ் - கோவை

orodizli
29th January 2018, 10:38 PM
மறு வெளியீடு காவியங்களின் சக்ரவர்த்தி எந்நாளும் வாழும் தனிப்பிறவி மக்கள் திலகம் டிஜிட்டல் தயாரிப்புகளின் அணிவகுப்பு விரைவில் துவங்கவிருக்கும் தகவல்...

orodizli
30th January 2018, 10:47 PM
இன்று முரசு தொலைக்காட்சியில் நம் மன்னன் மன்னவர், மக்கள் திலகம் வழங்கும் "தாயின் மடியில்" காவியம் ஓளி பரப்பாகிறது...

fidowag
30th January 2018, 11:25 PM
தினத்தந்தி 26/01/18
http://i67.tinypic.com/sebyoy.jpg

fidowag
30th January 2018, 11:26 PM
தினத்தந்தி27/01/18
http://i63.tinypic.com/54yhz6.jpg

fidowag
30th January 2018, 11:27 PM
தினத்தந்தி 28/01/18
http://i63.tinypic.com/2niw6th.jpg

fidowag
30th January 2018, 11:28 PM
தினத்தந்தி 29/01/18
http://i64.tinypic.com/o8vs4n.jpg

fidowag
30th January 2018, 11:30 PM
தினத்தந்தி -30/01/18
http://i66.tinypic.com/bisdi8.jpg

fidowag
30th January 2018, 11:31 PM
தினத்தந்தி -26/01/18
http://i63.tinypic.com/et8hsn.jpg

fidowag
30th January 2018, 11:32 PM
http://i68.tinypic.com/aeupds.jpg

fidowag
30th January 2018, 11:33 PM
http://i68.tinypic.com/fwnhxd.jpg

fidowag
30th January 2018, 11:34 PM
http://i63.tinypic.com/bzps.jpg

fidowag
30th January 2018, 11:35 PM
http://i67.tinypic.com/2dvr1c2.jpg

fidowag
30th January 2018, 11:36 PM
http://i68.tinypic.com/w4rr7.jpg

fidowag
30th January 2018, 11:36 PM
http://i63.tinypic.com/opv61k.jpg

fidowag
30th January 2018, 11:38 PM
http://i67.tinypic.com/24o59jm.jpg

fidowag
30th January 2018, 11:38 PM
http://i67.tinypic.com/28r16s6.jpg

fidowag
30th January 2018, 11:40 PM
சென்னை புத்தக கண்காட்சியில் திரு.சி.எஸ். குமார் , பெங்களூரு
http://i67.tinypic.com/jr7ad0.jpg

fidowag
30th January 2018, 11:42 PM
சென்னை புத்தக கண்காட்சியில் திருவாளர்கள் தம்பாச்சாரி,சி.எஸ்.குமார்,சுந்தர்
http://i65.tinypic.com/15hokqo.jpg

fidowag
30th January 2018, 11:45 PM
சென்னை புத்தக கண்காட்சியில் திருவாளர்கள் சுந்தர், நக்கீரன் கோபால், சி.எஸ். குமார்
http://i68.tinypic.com/2nbc7ba.jpg

fidowag
30th January 2018, 11:46 PM
தினத்தந்தி
http://i66.tinypic.com/20qnwxs.jpg

fidowag
30th January 2018, 11:47 PM
http://i67.tinypic.com/dnk85y.jpg

fidowag
30th January 2018, 11:51 PM
தினமலர் 25/01/18
http://i63.tinypic.com/29xybmv.jpg

fidowag
30th January 2018, 11:52 PM
http://i68.tinypic.com/n6ombm.jpg

fidowag
30th January 2018, 11:53 PM
http://i68.tinypic.com/9gg55w.jpg

fidowag
30th January 2018, 11:54 PM
http://i65.tinypic.com/vdlavm.jpg

fidowag
30th January 2018, 11:56 PM
http://i68.tinypic.com/296m3ib.jpg

fidowag
31st January 2018, 12:06 AM
மதுரை வண்டியூர் பழனிமுருகனில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " கடந்த வாரம்
வெளியாகி வெற்றிநடை போட்டது .

http://i66.tinypic.com/2d9v09z.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

fidowag
31st January 2018, 12:07 AM
http://i67.tinypic.com/xqm2c8.jpg

fidowag
31st January 2018, 12:10 AM
மதுரை மீனாட்சியில் கடந்த வாரம் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " குறுகிய இடைவெளியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது
http://i66.tinypic.com/a4yjnt.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

fidowag
31st January 2018, 12:10 AM
http://i66.tinypic.com/i2vo0g.jpg

fidowag
31st January 2018, 12:12 AM
http://i68.tinypic.com/2s1ahbo.jpg

fidowag
1st February 2018, 12:06 AM
தினத்தந்தி -31/01/18
http://i67.tinypic.com/2wqfr6o.jpg

fidowag
1st February 2018, 12:07 AM
http://i63.tinypic.com/dwatsw.jpg

fidowag
1st February 2018, 12:09 AM
http://i66.tinypic.com/2s1ohvl.jpg

fidowag
1st February 2018, 12:09 AM
http://i66.tinypic.com/5b436e.jpg

fidowag
1st February 2018, 12:10 AM
http://i63.tinypic.com/2zptoap.jpg

fidowag
1st February 2018, 12:11 AM
http://i64.tinypic.com/160pyeu.jpg

fidowag
1st February 2018, 12:14 AM
குமுதம் ரிப்போர்ட்டர்
http://i66.tinypic.com/2hezzwm.jpg

fidowag
1st February 2018, 12:16 AM
மாலை முரசு -31/01/18
http://i63.tinypic.com/kamjgk.jpg

fidowag
1st February 2018, 12:20 AM
சூப்பர் ஹீரோ மாத இதழ் -22/01/18
http://i66.tinypic.com/34s4f88.jpg
http://i64.tinypic.com/20sd736.jpg
http://i63.tinypic.com/14smz2q.jpg

fidowag
1st February 2018, 12:21 AM
http://i66.tinypic.com/zl2l4y.jpg

fidowag
1st February 2018, 12:24 AM
http://i66.tinypic.com/2db2f5t.jpg

fidowag
1st February 2018, 12:26 AM
30/01/2018 அன்று பிறந்த நாள் கொண்டாடிய பெங்களூரு காந்தி நகர் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.முனியப்பா அவர்களுக்கு திரு.சி.எஸ். குமார்
அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் காட்சி .
http://i65.tinypic.com/59yqsz.jpg

fidowag
1st February 2018, 12:28 AM
30/01/2018 அன்று பிறந்த நாள் கொண்டாடிய பெங்களூரு காந்தி நகர் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.முனியப்பா அவர்களுடன் திரு.மோகன்குமார் திரு.சி.எஸ். குமார், திரு.ரவி ஆகியோர்.
http://i63.tinypic.com/29vf0a1.jpg

Richardsof
1st February 2018, 07:43 AM
பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து 30 ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

Richardsof
1st February 2018, 06:07 PM
Flash back 1981


எம்.ஜி.ஆர்., நடத்திய ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு, மதுரையில், 1981ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமையில், கவர்னர் சாதிக் அலி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழக அரசும் நிதியுதவி வழங்கியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.மாநாட்டுக்காக மதுரை நகர் முழுவதும் அலங்கார வளைவுகளும், தமிழ் வளர்த்த அறிஞர்களின் சிலைகளும் நிறுவப்பட்டன. மதுரை நகரில் புகும் பகுதியிலேயே, கம்பீர நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. நகர் முழுவதும் அமைக்கப்பட்ட தோரண வளைவுகளுக்கு மட்டும் ஏழு லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. மதுரை மேலூர் சாலையில் அமைக்கப்பட்ட நக்கீரர் தோரண வாயிலை சத்தியவாணி முத்து திறந்து வைத்தார். மதுரை தமிழ்ச்சங்க தலைவர் டி.வி.எம்.பெரியசாமி இதற்கு தலைமை தாங்கினார். சேரன் நுழைவு வாயிலை நெடுஞ்செழியன் முன்னிலையில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சர் முத்தையா செட்டியார் தலைமை வகித்தார். சோழன் நுழைவு வாயில் திறப்பு விழாவுக்கு தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாநகராட்சி கட்டடங்கள், விருந்தினர் மாளிகைகள் புதுப்பொலிவு பெற்றன. சில விருந்தினர் மாளிகைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டன.


நகரில் நடமாடிய பிச்சைக்காரர்கள், பிச்சைக்காரர்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். உலகம் முழுவதிலும் இருந்து வந்த 600க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் பங்கேற்றனர். இலங்கை, மலேசியா நாடுகளில் இருந்து மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், செனகல், இந்தோனேசியா, மொரிஷியஸ், மேற்கு ஜெர்மனி, ஸ்வீடன், செக்கோஸ்லோவாகியா, நெதர்லாந்து, நேபாளம், பின்லாந்து, பிஜி தீவுகளில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்க பிரதிநிதிகள் வந்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகளை, தமிழக செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மற்றும் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.மகாராஜன் ஆகியோர் வரவேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள், பஸ்கள் மூலம் மக்கள் வந்து குவிந்தனர். இதற்காக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் பார்க்க வசதியாக 10 இடங்களில் "டிவி'க்கள் வைக்கப்பட்டன. இதில் 9 கோடி ரூபாய் மதுரை நகரில் நிரந்தர வசதிகளுக்காகவே செலவிடப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் மகால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அங்கு திருமலை நாயக்கரின் வரலாற்றை விவரிக்கும் ஒளி-ஒலி காட்சி துவக்கிவைக்கப்பட்டது.சீர்காழி கோவிந்தராஜனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்கியது.


மாநாட்டை துவக்கி வைத்து பேசிய தமிழக கவர்னர் சாதிக் அலி தமிழ் புலவரின் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற கூற்றின் அடிப்படையில் மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டார்.துவக்க விழாவில் தலைமை வகித்து பேசிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் நிறுவப்படும் என அறிவித்தார். கோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக கொண்டு வர தமிழக அரசு பாடுபடும் என குறிப்பிட்டார். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய விவசாய அமைச்சர் ஆர்.வி.சாமிநாதன் தான் தமிழன் என்ற முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தனது பேச்சின் போது உலகதத் தமிழ் மாநாடு நடைபெற காரணமாக இருந்த தனிநாயகம் அடிகளாருக்கு நன்றி தெரிவித்தார். மதுரை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் கேரள முதல்வர் நாயனார் கலந்து கொண்டார். பொதுமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில், பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாநாட்டு திடலில் நடந்தது. இதற்கென பந்தயத்திடலில் முப்பதாயிரம் பேர் அமரக்கூடிய பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கவிதை போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமுக்கம் மைதானத்தில் நடந்த கண்காட்சியில், பண்டை தமிழர்களுடைய கலை, நாகரிகம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் பல்வகை காட்சிகள் அமைக்கப்பட்டன. தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. மாநாட்டின் போது தமிழ் புலவர்கள் 49 பேருக்கு தங்கப்பதக்கங்களை முதல்வர் எம்.ஜி.ஆர்., வழங்கினார்.


இறுதி நாளான ஜனவரி 10ம் தேதி பிரதமர் இந்திரா மாநாட்டில் உரையாற்றினார். "உலக தமிழ் மாநாடு, வணக்கம்' என தமிழில் பேச்சை துவங்கிய பிரதமர் இந்தி மொழி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார். பிரமாண்ட அலங்கார வண்டிகளின் ஊர்வலத்தை பிரதமர் இந்திராவும், முதல்வர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் அமர்ந்து பார்த்தனர். இந்த ஊர்வலத்தை காண வழிநெடுகிலும் 25 லட்சம் பேர் கூடியிருந்தனர். இந்த ஊர்வலத்தில் 5 யானைகளில் இசைக்கலைஞர்கள், பெண்கள், போலீஸ் வாத்தியக்குழு, விவசாய காட்சி வாகனம், கொடி பிடித்த மாணவ, மாணவிகள், ஆசிரியைகள், மேளக்கலைஞர்கள், கரகாட்டக்காரர்கள், பொய்க்கால் குதிரை, தமிழ் வளர்த்த அயல்நாட்டு அறிஞர்கள், அவ்வையார், கண்ணகி, ஆண்டாள், கம்பர், தமிழன்னை வேடமிட்டவர்கள் கலந்து கொண்டனர்.விழா மேடைக்கு அருகே அமைக்கப்பட்ட தமிழன்னை சிலையை எம்.ஜி.ஆர்., திறந்து வைத்தார்.

orodizli
3rd February 2018, 02:35 PM
மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" டிஜிட்டல் வடிவாக்கம் எப்படி என நம் சகோதர பெரு மக்கள் கருத்துக்கள் பதிவிடவும்...

Richardsof
4th February 2018, 11:31 AM
சந்தர்: ஒரே மாதிரி இருக்கும் இரு நபர்களின் ஆள் மாறாட்டத்தை அடிப் படையாகக் கொண்டு வந்த படங்களி லேயே இதுதான் சிறந்த படம், சேகர். இடம் மாறி வந்தவர்கள், தொடர்ந்து அங்கேயே தங்கிவிடவேண்டிய அவசி யத்தை ஏற்படுத்தி இருப்பதில் இந்தக் கதை புதுமையாக இருந்தது. முன் பின் தெரியாத ஒருத்தியின் நல்வாழ்வுக்காகவும், அவள் குழந்தையின் மேல் உள்ள பாசத் துக்காகவும் ஜமீன்தார் வீட்டில் இளங்கோ ராமுவாகவே இருக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது மிகவும் பொருத் தமாக இருந்தது.

சேகர்: ஆமாம், இளங்கோ ஜமீன் மாளிகைக்குள் நுழைந்தவுடன், அந்த வீட்டுக் கதை முழுவதையும் பாத்திரங்களின் பேச்சின் மூலமே இளங்கோவுக்குப் புரிய வைத்தது, நல்ல அமைப்பு!

சந்தர்: இரட்டையரின் இரு பாத்திரப் படைப்புகளுமே பிரமாதம்தான்!

சேகர்: அதை எம்.ஜி.ஆர். நடித்த விதம், அதைவிடப் பிரமாதம்! பயந்தங்கொள்ளியாக வரும்போது, சிரிப்புடன் அழவும் வைக்கிறார். முரடனாக வரும்போது, வீரத்தைக் காட்டிச் சிரிக்க வைக்கிறார்.

சந்தர்: நம்பியாரிடம் அவர் சவுக்கடி வாங்கி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், 'நானும் உங்களுடன் வந்துவிடுகிறேன் அப்பா' என்று பெற் றோரின் படத்துக்கு முன் நின்று சைகை யால் பேசும் இடம், எவர் உள்ளத்தையும் உருக வைக்கும்.

சேகர்: இரண்டு பாத்திரப் படைப்பும் நன்றாகவே இருந்தன. ஆனால் வீட்டை விட்டு வந்த இரண்டு பேரும் அம்மா வைப் பற்றியோ, அக்காவைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்தது தான், அவ்வளவு சரியாக இல்லை!

சந்தர்: சரோஜாதேவிக்குப் புது மாதிரி ரோல். எப்போது பார்த்தாலும் அப்பாவை மட்டம் தட்டிக்கொண்டு...தினுசு தினுசாகப் புடவை கட்டிக் கொண்டு... காதிலே ஏதேதோ மாட்டிக் கொண்டு... அந்த அருமையான கலருக் கும், படப்பிடிப்புக்கும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

சேகர்: வின்சென்ட் - சுந்தரம் படப்பிடிப்பு, படத்துக்குத் தனிச் சிறப்பு கொடுத்தது. முக்கியமாக, பிருந்தாவனத்தில் அழகு கொழித்தது. ஓரிடத்தில், கீழே படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை மாடியிலிருந்து மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

சந்தர்: இந்தப் படத்திலே இன்னொரு புதுமை பார்த்தியா? தங்கவேலு - நாகேஷ் காமெடி ஜோடி!

சேகர்: ரொம்ப நாளைக்கப் புறம் தங்கவேலுவைப் பார்க் கிறதே சந்தோஷமா இருந்தது. அந்த மாவு மில்லிலே அவர் நடுங்கிக்கொண்டே நடக்கிற இடம்...

சந்தர்: அது தங்கவேலு முத்திரை! நாகேஷ் அந்த அசட்டு முகத்தையும், அரை மீசையையும் வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் தப்பு தப்பா வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு ரொம்ப பிரமாதமாக கடிச்சிருக்கார்... சே... நடிச்சிருக்கார்..!

சேகர்: மொத்தத்திலே பொழுது போகிறதே தெரியாமல் விறுவிறுப்பாகப் போகிறது படம். சமீபத்தில் வந்த நல்ல தமிழ்ப் படங்களில், 'எங்க வீட்டுப் பிள்ளை'க்கு ஓர் இடம் உண்டு.



-

Richardsof
4th February 2018, 11:34 AM
1970ம் வருடம்தான் கருணாநிதியின் சொந்த திரைப்பட நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் தயாரித்து எம்.ஜி.ஆரும் – ஜெயலலிதாவும் நடித்த ‘ எங்கள் தங்கம்’ படம் வெளிவந்தது!
இந்தப் படத்தை முரசொலி மாறன் தயாரித்து அவரே வசனமெழுதியிருந்தார்!
படத்தை கிருஷ்ணன்– பஞ்சு இயக்கியிருந்தார்கள்!
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்., உண்மையான எம்.ஜி.ஆராக அதாவது, சிறு சேமிப்புத் துறை தலைவராகவும், அதில் தங்கம் கதாபாத்திரத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்கு பரிசு வழங்குவது போலவும் ஒரே ஒரு காட்சியில் வந்திருந்தார்!
அதுதான் படத்தின் ஆரம்பம்!
அந்த சிறுசேமிப்புத் துறை தலைவர் எம்.ஜி.ஆரை படத்தில் முரசொலி மாறன்தான் அறிமுகப்படுத்துவார்!
படம் சித்ரா திரையரங்கில் வெளியாகி அமோகமாக ஓடியது!
அதில் எம்.ஜி.ஆர்., நடத்திய ஒரு கதாகாலேட்சேபமும், ‘ நான் செத்துப் பிழைச்சவண்டா! எமனை பார்த்துச் சிரித்தவண்டா’ பாடலும் எம்.ஜி.ஆருக்கே மிகவும் பொருத்தமாக இருந்ததாக அவர் ரசிகர்கள் நினைத்தார்கள்!
காரணம், எம்.ஜி.ஆர்., குண்டடிபட்டு திரும்பி வந்த சம்பவம்தான்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா இருவருமே காசு வாங்காமல் நடித்துக்கொடுத்தார்கள் என்று இந்த படத்தின் வெற்றி விழா மேடையில் மாறன் பேசிய போது, ரசிகர்கள் மனதில் எம்.ஜி.ஆரின் இமேஜ் உயரத்துவங்கி விட்டதாக தாத்தா வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்!

Courtesy sudhangan

Richardsof
4th February 2018, 11:39 AM
ஒளி விளக்கு (Oli Vilakku)

விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…

1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.

திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!

லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.

லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?

துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!

ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!

சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!

சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!

குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!

சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.

திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.

சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.

சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!

திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.

ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!

சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.

ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.

சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!

குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.

சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!

கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!

திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

Richardsof
4th February 2018, 11:41 AM
சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்





டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.

வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

ஷீலா: இந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்புக்கு அடுத்தபடியா என்னைக் கவர்கிறது ‘எடிட்டிங்’. அதுவும் அந்த ரேப்பிங் ஸீனில் எடிட்டிங் ரொம்ப நல்லா இருந்தது. அதேபோல, லதாவின் நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.

வதூது: டைரக்டரோட திறமைக்கு எடுத்துக்காட்டா அந்த ரேப் ஸீன்லே ரிக்கார்டு வால் யூமை அதிகப்படுத்துவதுபோல் காட்டுவது நன்றாக இருக்கிறது. ரேப் முடிஞ்சதும் ரிக்கார்டில் ஊசி தேய்ந்துகொண்டிருப்பது நல்ல டெக்னிக்!

ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!

(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

Richardsof
4th February 2018, 11:43 AM
சினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் - 40++
சிறுவயதில் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கின்ற போது ஒரு ஈர்ப்பு எப்பவும் இருக்கும்.வில்லன்கள் யாரையாவது கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் போதோ, இல்லை யாருக்காவது உதவி செய்ய வருகின்ற போதோ, படம் பார்க்கும் நம்மை எப்படா வருவார், சண்டை போடுவார் என எதிர்பார்க்க வைக்கும், ஏங்க வைக்கும் காட்சிகள் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். படத்தில் அவர் போடும் கத்தி சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு பள்ளி மைதானத்தில் வாழை மட்டை, தென்னையின் அரக்குமட்டை இவைகளை வைத்து சண்டை போட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.எங்க ஊர்ல ஏதாவது திருவிழான்னா மைதானத்துல திரை கட்டி படம் போடுவாங்க.10 மணிக்கு படம் அப்படின்னாலே 8 மணிக்கே பாயை தூக்கிட்டு போய் திரைக்கு முன்னாடி மண்ணைக் குவிச்சு அதுல பாய் போட்டு இடம் பிடிச்சி உட்கார்ந்து விடுவோம்.


படம் ஓட்டறவன் 10 மணிக்கு பத்து நிமிசம் முன்னாடிதான் வருவான்.அதுவரைக்கும் நம்மாளுங்க மைக்க பிடிச்சு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்படும் அப்படின்னு 8 மணியில இருந்தே கூவ ஆரம்பிச்சிடுவாங்க.ஆனாலும் பொட்டி வந்தபாடிருக்காது.அப்புறம் அவன் வந்தப்புறம் திரை கட்டி புரஜெக்டரை கரக்டா வச்சு ரீல் சுத்தி போடும் போது சவுண்ட் இருக்காது.அப்புறம் அதை சரிபண்ணி படம் போட எப்படியும் அரைமணி நேரம் ஆக்கிடுவாங்க.அந்த நேரத்துல திட்டிகிட்டே இருந்தாலும் திரையில எம்ஜிஆரை காண்பித்தவுடன் கோபம்லாம் போய் வர்ற மகிழ்ச்சி இருக்கே..அதை விவரிக்க முடியாது.விசில் பறக்கும், பேப்பர் பறக்கும்.


அப்படித்தான் எம்ஜிஆர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் எனக்கு அறிமுகம் ஆனது.அப்புறம் எப்பவாது தூர்தர்சனில் போடும் படங்களை பார்ப்பதோடு முடிந்துவிடும்.எம்ஜியார் அவர்கள் காலமான போது அவரின் படங்களை ஒரு வீட்டில் டெக் போட்டு காண்பித்தனர்.அப்போது தான் மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்களை பார்த்தேன்.
அடிமைப்பெண் படமும் அப்படித்தான்.எங்கள் ஊரில் ஒரு திருவிழாக் காலத்தில் பார்த்த ஞாபகம்.வில்லன் நம்பியார் இல்லாத படம்.சமீபத்தில் என்னுடைய மொபைல் புரஜக்டஃரில் இந்த படத்தினை டவுண்லோடு செய்து வைத்து இருந்தேன்.அதை எனது கிராமத்தில் என் பெற்றோருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதனால் தான் இந்த விமர்சனம்

வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.



செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...



இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.

பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.

ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.


இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.

கே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது (ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் போல..)
எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.திரையிட்ட அனைத்து இடங்களிலும் நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த படம்.

கண்டிப்பா எங்காவது உங்க ஊர்ல திரையிட்டாங்கன்னா பாருங்க...எம்ஜியார் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் படம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

Richardsof
4th February 2018, 11:57 AM
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்!
Posted by பால கணேஷ்

================================================== ============

================================================== ============

பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.


எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.


வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.


சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

================================================== ============

Richardsof
4th February 2018, 12:03 PM
காவல்காரன், ரகசிய போலீஸ் படங்களில் வாத்தியார் சண்டை வித்தியாசமாக இருக்கும்.
ஒளிவிளக்கு/நம் நாடு படத்தில் ஒரு தூள் கிளப்பும் சண்டை பார்த்த ஞாபகம் - அப்புறம் புதிய பூமி - சிறந்த சண்டைகளில் ஒன்று

நீரும் நெருப்பும் படம் ரொம்பவே சுமார். நான் ரசிச்சது இடது கையால வாள் சுழற்றுகிற லாகவத்தைத் தான்! ஆயிரத்தில் ஒருவன்ல அந்த பழங்கால பாய்மரப் படகை வடிவமைச்சு கொண்டு வந்த விதத்துக்காகவே பாராட்டலாம்!

வாள் சண்டை என்றவுடனேயே அதிகம் ஞாபகம் வருவது "நீரும் நெருப்பும்" தான்...
மாட்டுக்கார வேலன் சண்டைக்காட்சி எனக்கு மிகவும் பிடித்த சண்டைக் காட்சி..

என் தந்தை வாத்தியார், வாத்தியார் என்று உயிரை விடுவார்.எங்கப்பாவே வாத்தியார், அவருக்கு யாரு வாத்தியார்ன்னு ஒரு ஆர்வத்துல தான் எம்ஜியார் படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன்.. அப்புறம் அவரோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ், ரோமேன்ஸ், டயலாக் டெலிவரி, அப்புறம் சண்டை காட்சிகள் இப்படி ஒவ்வொன்னும் எனக்கு ரொம்ப பிடிச்சு போனது.. எவர்கிரீன் ஸ்டார் அண்ட் டிரெண்ட் செட்டர்ன்னு சொல்லணும் அவரை..!

நான் முதலில் அவர் சண்டையை ரசித்தது 'மாட்டுக்கார வேலனி'ல்.

எம் ஜி ஆர் - ஜஸ்டின் சண்டைக் காட்சிகள் பெரும்பாலான படங்களில் இருக்கும்.

நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியே! சில நாட்களுக்கு முன் ஒரு புலியுடன் எம்.ஜி.ஆர் சன்டையிட்டதை ரசித்துப்பார்த்தேன். சண்டைக்காட்சிகள் மட்டுமல்ல, காலத்தால் அழியாத தித்திக்கும் பாடல்கள் பலவற்றைத் தந்ததற்காகவே அவரை என்றும் மறக்க இயலாத வண்ணம் செய்து விட்டார்!

சண்டை காட்சின்னாலே வாத்தியார் படம்தாங்க. என்ன ஒரு வேகம், சுறுசுறுப்பு. சும்மா மின்னல் மாதிரி சுத்தி சுத்தி வருவாரு. 'ஆயிரத்தில் ஒருவன்' இப்பதான் ரெண்டு நாள் அப்படி ரசிச்சு பாத்தேன். அதே மாதிரி குடியிருந்த கோவில் சண்டை காட்சிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படமே எனக்கு அவ்வளவு பிடிக்கும். பல தடவ பாத்திருக்கேன். தலைப்பை படிச்சதுமே மனசுல வந்த படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. நீங்களும்
அதை பத்தி அழகா எழுதி இருக்கீங்க. ஆயிரம் இருந்தாலும் ஒரு கைல ஹீரோயினை தூக்கிண்டு, இன்னொரு கைல வாத்தியார் சண்டை போடற அழகே தனிதான், இல்லையா! :))
காவல்காரன் - குத்து சண்டை, அன்பே வா - குண்டனோட, இதயக்கனி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - வாள் சண்டை, படகோட்டி கடைசி சண்டை இப்படி எல்லாமே கிளாஸ்.
இதிலும் எப்பவும் ரொம்ப ரொம்ப ரசிச்சு பாக்கறது எம்.ஜீ.ஆர். நம்பியாரோட போடற சண்டைதான்.

Courtesy comments portion

Richardsof
4th February 2018, 12:06 PM
எத்தனை சண்டை போட்டாலும் புரட்சித் தலைவர் முகத்தில் துளிக் கூட அயர்வே தெரியாது! உடைகள் கசங்காது!அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி!
உங்கள் பதிவு, அதற்கு வந்திருக்கும் கருத்துரைகள் எல்லாமே ரசிக்க வைத்தது.
துரைஜி! புரட்சித் தலைவர் பாய்ந்து பாய்ந்து போடும் சண்டைகள் போலவே நீங்களும் பாய்ந்து பாய்ந்து போட்ட காமெண்டுகள் ரசிக்க வைத்தன!புரட்சித்தலைவரின் உண்மையான ரசிகன் நீங்கள் என்று மற்றொருமுறை (முதல்முறை எப்போ?) நிரூபித்து விட்டீர்கள்!

நான் மிகவும் ரசிக்கும் சண்டைக் காட்சி:
எங்கள் வீட்டுப் பிள்ளையில் ஒரு சினிமா காட்சிக்காக புரட்சித்தலைவர்
சண்டை போட வருவார். தன்னுடன் மோத வருகிறவர்களை மொக்கு மொக்கென்று மொக்கிவிடுவார். அடிபட்ட ஒருவர் டைரக்டரிடம் வந்து 'ஸார்! இவன் நிஜமாவே அடிக்கிறான், ஸார்!' என்பார்!
பயங்கர காமெடி!

Looking to the numerous comments conveying so many things about the fighting scenes of the heroes on the silver screen, I really feel like wathcing MGR movies just for the sake of comparing the same with the present day fighting scenes of so called heroes. The arguments and the counter arguments put forth by the readers of the post, make me really feel proud that I am a regular reader of this post. Above all, the comments are very very decent like the author of the post. THIS IS THE SUCCESS OF THE AUTHOR.

வரலாற்று நாவல்கள் படிக்கையில்...
வாள் சண்டைகள் பற்றிய வருணனைகள்
வருகையில்...
கற்பனையிலேயே அதற்கான
திரைபோட்டு
இப்படித்தான் போரிட்டு இருப்பார்கள்
என்று எண்ணம் தோன்றும்..
அதற்கு உயிரூட்டம் கொடுத்தவை
திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் சண்டைக் காட்சிகள்...

அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே...

சிலம்பத்தை நினைச்சதும் ‘தாயைக் காத்த தனயன்’ மனசுல வந்தது. பெ.இ.பெண் தோணாதது என் பிழை. அதுல வர்ற அந்த கம்பு சண்டை, அதுலயும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கண் மயங்கற நிலையிலயும் கம்பு வீசற லாகவம் இருக்கு பாருங்க... ரொம்பவே ரசிச்ச விஷயம் அது. நினைவுபடுத்தி, ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி பிரசன்னா கண்ணன்!

courtesy comments portion

Richardsof
4th February 2018, 12:13 PM
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள். * எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. *

எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர். * எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'. * எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'. *

எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'. * எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.

* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'. * எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'. * எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.

எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'. எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'. எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'. எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.

எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'. எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார். எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.

எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'. எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.

எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'. எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.

எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது. எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்). எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'. எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.

எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'. அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.

எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'. எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'. எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.

எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ. எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'. எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.

எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'. எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.

எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.

fidowag
4th February 2018, 04:01 PM
மாலைசுடர் -22/01/18
http://i68.tinypic.com/21eur5x.jpg

fidowag
4th February 2018, 04:02 PM
தினச்செய்தி -22/01/18
http://i63.tinypic.com/1nxydg.jpg

fidowag
4th February 2018, 04:04 PM
http://i66.tinypic.com/2ltk06.jpg

fidowag
4th February 2018, 04:11 PM
தின இதழ் -25/01/18
http://i65.tinypic.com/2lji63t.jpg
http://i66.tinypic.com/im33af.jpg
http://i67.tinypic.com/10ih2ef.jpg

fidowag
4th February 2018, 04:12 PM
http://i65.tinypic.com/2vsg1mt.jpg

fidowag
4th February 2018, 04:15 PM
தின இதழ் - 28/01/18
http://i63.tinypic.com/169kglc.jpg
http://i66.tinypic.com/fbfg9s.jpg
http://i65.tinypic.com/v3j5a8.jpg

fidowag
4th February 2018, 04:16 PM
தின இதழ் - 29/01/18
http://i64.tinypic.com/2rhvcxx.jpg

fidowag
4th February 2018, 04:18 PM
தமிழ் இந்து -30/01/18
http://i66.tinypic.com/m9txxc.jpg

fidowag
4th February 2018, 04:21 PM
தின இதழ் - 01/02/18
http://i63.tinypic.com/ru1d00.jpg
http://i63.tinypic.com/s4z1a0.jpg

fidowag
4th February 2018, 04:22 PM
தமிழ் இந்து - 02/02/18
http://i63.tinypic.com/2hf19ab.jpg

fidowag
4th February 2018, 04:23 PM
நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேட்டியில் இருந்து
http://i63.tinypic.com/zin4g6.jpg

ifucaurun
4th February 2018, 05:55 PM
மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" டிஜிட்டல் வடிவாக்கம் எப்படி என நம் சகோதர பெரு மக்கள் கருத்துக்கள் பதிவிடவும்...

நண்பர்களே, யாராவது என்னை திட்டினாலும் பரவாயில்லை. நான் உண்மையைத்தான் பேசுவேன். சொல்ல வேண்டாம் என்றுதான் இருந்தேன். நண்பர் கேட்டதால் சொல்கிறேன்.

எங்கள் ஊரில் எங்க வீட்டுப் பிள்ளை டிஜிட்டல் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதற்காக திருச்சிக்குப் போய் பாலஸ் தியேட்டரில் படம் பார்த்தேன். ஏண்டா போனோம் என்று ஆகிவிட்டது.

டிஜிட்டல் என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். படக் காட்சிகள் மங்கலாக இருக்கிறது. சவுண்ட் சரி இல்லை. சில காட்சிகள் ஜம்ப் ஆகின்றது.

டைட்டில் இசை மாற்றி கெடுத்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஏன் அதைப் போய் மாற்றுகின்றார்கள். நவீனத்துக்கு ஏற்றபடி படத்தை மெருகு ஏற்றலாமே தவிர, மூலத்தை மாற்ற இவர்கள் யார்? அதாவது நன்றாக உள்ளதா என்றால் அதுவும் இல்லை.

பேசாமல் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து இருக்கலாம். டிஜிட்டல் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

சரி, திருச்சி பாலஸ் தியேட்டர் பழைய தியேட்டர். இங்கேதான் அப்படி இருக்கின்றதா என்று பார்த்தால் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலும் இப்படித்தான் இருக்கிறது என்று தகவல் கிடைக்கின்றது.

மொத்தத்தில் ஏமாற்றி விட்டார்கள்.

தியேட்டருக்குப் போய் ஏமாந்து வருவதற்கு பதிலாக வீட்டிலேயே டிபன் டீ சாப்பிட்டபடி நல்ல பிரிண்ட்டில் டிவிடியில் எங்க வீட்டுப் பிள்ளை படம் பார்க்கலாம்.

எங்க வீட்டுப் பிள்ளை படம் தியேட்டரில் ஒரு வாரம் கூட ஓடாமல் போனால் அதற்கு இந்த குறைகள்தான் காரணம்.

எங்க வீட்டுப் பிள்ளையை ரிலீஸ் செய்தவர்களின் குடும்பத்தினர்தான் ராஜா படத்தையும் ரிலீஸ் செய்யப் போகிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. எங்க வீட்டுப் பிள்ளைக்கு டிஜிட்டல் ஒர்க் செய்தவர்தான் ராஜா படத்துக்கும் செய்யப் போகிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

நல்ல எண்ணத்தில் சொல்கின்றேன். மாற்று முகாம் நண்பர்கள் இப்பவே உஷாராக இருந்து ராஜா படம் நன்றாக வெளிவர ஏற்பாடு செய்யுங்கள். ஏமாந்து போகாதீர்கள்.

Richardsof
4th February 2018, 09:35 PM
மக்கள் திலகத்தின் டிஜிட்டல் படங்களான ஆயிரத்தில் ஒருவன் , ரிக் ஷாகாரன் , நினைத்ததை முடிப்பவன் , அடிமைப்பெண் 4 படங்கள் சென்னை அண்ணா சாலையில் தேவி வளாகத்தில் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது . இன்று இரவு 7 மணி காட்சியாக மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப்பிள்ளை தேவிபாலா அரங்கில் நடைபெற்று வருகிறது .

Richardsof
4th February 2018, 09:54 PM
http://i66.tinypic.com/29103uu.jpg

Richardsof
4th February 2018, 09:55 PM
http://i64.tinypic.com/2qun8ko.jpg

Richardsof
4th February 2018, 09:56 PM
http://i64.tinypic.com/2edb4o6.jpg

Richardsof
4th February 2018, 09:57 PM
http://i67.tinypic.com/2a9putc.jpg

Richardsof
4th February 2018, 09:59 PM
http://i66.tinypic.com/fs103.jpg

fidowag
4th February 2018, 10:59 PM
http://i63.tinypic.com/2akagzt.jpg

fidowag
4th February 2018, 11:00 PM
தினத்தந்தி -03/02/18
http://i65.tinypic.com/s2zbb6.jpg

fidowag
4th February 2018, 11:00 PM
தினத்தந்தி -04/02/18
http://i64.tinypic.com/21b0nyh.jpg

fidowag
4th February 2018, 11:10 PM
http://i63.tinypic.com/azhw5u.jpg

fidowag
4th February 2018, 11:10 PM
http://i64.tinypic.com/200qsmt.jpg

fidowag
4th February 2018, 11:11 PM
http://i66.tinypic.com/icqurs.jpg

fidowag
4th February 2018, 11:12 PM
http://i67.tinypic.com/2wqfr6o.jpg

fidowag
4th February 2018, 11:13 PM
http://i67.tinypic.com/2ey7rpw.jpg

fidowag
4th February 2018, 11:13 PM
http://i63.tinypic.com/35a7hwz.jpg

fidowag
4th February 2018, 11:16 PM
முதல் நாள் சத்யம் எஸ்கேப் திரையரங்கில் மாலை காட்சி (3.40) பார்க்க வந்திருந்த
ரசிகர்கள்
http://i64.tinypic.com/205a32c.jpg

fidowag
4th February 2018, 11:16 PM
http://i68.tinypic.com/2nqf79f.jpg

fidowag
4th February 2018, 11:17 PM
http://i68.tinypic.com/1z3otbl.jpg

fidowag
4th February 2018, 11:18 PM
http://i66.tinypic.com/jh4o7c.jpg

fidowag
4th February 2018, 11:20 PM
தேவி காம்ப்ளக்சில் வைக்கப்பட்ட பேனர் .
http://i63.tinypic.com/2dhs2v9.jpg

fidowag
4th February 2018, 11:24 PM
தேவி காம்ப்ளக்சில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில்
அசத்தலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தேவி பாலா அரங்கில் தினசரி இரவு 7 மணி காட்சி (03/02/18) முதல் நடைபெறுகிறது .

இன்று 04/02/18 (ஞாயிறு ) மாலை காட்சியின்போது பக்தர்கள் /ரசிகர்கள் ஒன்றுகூடி
விழா எடுத்தது பற்றிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .


http://i66.tinypic.com/ktetd.jpg

fidowag
4th February 2018, 11:25 PM
http://i66.tinypic.com/20h91ft.jpg

fidowag
4th February 2018, 11:26 PM
http://i68.tinypic.com/2eod47n.jpg

fidowag
4th February 2018, 11:27 PM
http://i67.tinypic.com/w0t40g.jpg

fidowag
4th February 2018, 11:28 PM
http://i64.tinypic.com/11ukpw1.jpg

fidowag
4th February 2018, 11:29 PM
http://i65.tinypic.com/2wggolv.jpg

fidowag
4th February 2018, 11:30 PM
http://i63.tinypic.com/14tsc1t.jpg

fidowag
4th February 2018, 11:31 PM
http://i64.tinypic.com/9057de.jpg

fidowag
4th February 2018, 11:32 PM
http://i68.tinypic.com/67qcma.jpg

fidowag
4th February 2018, 11:34 PM
http://i64.tinypic.com/2m80ghy.jpg

fidowag
4th February 2018, 11:36 PM
http://i65.tinypic.com/24liowp.jpg

fidowag
4th February 2018, 11:37 PM
http://i65.tinypic.com/2rmp3zm.jpg

fidowag
4th February 2018, 11:39 PM
http://i63.tinypic.com/2cdjspi.jpg

fidowag
4th February 2018, 11:41 PM
http://i66.tinypic.com/64ihzd.jpg

fidowag
4th February 2018, 11:41 PM
http://i63.tinypic.com/315y4he.jpg

fidowag
4th February 2018, 11:43 PM
http://i64.tinypic.com/15dktvt.jpg

fidowag
4th February 2018, 11:44 PM
http://i68.tinypic.com/19qqms.jpg

fidowag
4th February 2018, 11:46 PM
http://i63.tinypic.com/35kvrye.jpg

fidowag
4th February 2018, 11:47 PM
http://i64.tinypic.com/2j43m8g.jpg

fidowag
4th February 2018, 11:47 PM
http://i65.tinypic.com/v31s1d.jpg

fidowag
4th February 2018, 11:53 PM
வெள்ளி முதல் (02/02/18) சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக வாள் வீச்சில் தூள் கிளப்பிய "நீரும் நெருப்பும் " தினசரி
4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/hs2alv.jpg

orodizli
5th February 2018, 11:09 PM
All postings about Our Makkalthilagam are so good, kindly support & drafting several points of Puratchi Nadigar...

orodizli
6th February 2018, 02:53 PM
திரையுலக சக்கரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் பெருமை மிகு படைப்பு "எங்க வீட்டுப் பிள்ளை" சிறப்பான வசூலை பெற்று வருவதாக இனிய தகவல்கள் வருகின்றது தோழர்களே...

orodizli
6th February 2018, 08:44 PM
வெள்ளி முதல் (02/02/18) சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக வாள் வீச்சில் தூள் கிளப்பிய "நீரும் நெருப்பும் " தினசரி
4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/hs2alv.jpg
உலக திரைப்பட வரலாற்றில் மறு, மறு பழைய காவியங்களின் வெளியீடுகளின் ஒரே சக்கரவர்த்தி நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மட்டுமே என ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருவது மிக பெருமையான, பெருமிதமான நிகழ்வுகள்...

RAGHAVENDRA
6th February 2018, 10:34 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/27654590_1690081987709133_6449889176643650578_n.jp g?oh=deff829ffc331cf3329e865365642605&oe=5B23BBBE

Image of the Memento presented at the MGR Centenary celebration organised by MMFA - Mellisai Mannar Fans' Association

Richardsof
7th February 2018, 07:29 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/27654590_1690081987709133_6449889176643650578_n.jp g?oh=deff829ffc331cf3329e865365642605&oe=5b23bbbe

image of the memento presented at the mgr centenary celebration organised by mmfa - mellisai mannar fans' association

thanks raghavendar sir

Richardsof
7th February 2018, 07:42 AM
எம்.ஜி.ஆரும்.. திருச்சியும்..! அ.தி.மு.க பாதையில் மலைக்கோட்டை

தி.மு.க-வின் தேர்தல் பிரவேசமும் திருச்சியில்தான்; அ.தி.மு.க உருவாகக் காரணமான முதல் முக்கிய ஆர்ப்பாட்டம் நடந்ததும் திருச்சியில்தான்! 1949 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பேரணியோடு தொடங்கப்பட்டது தி.மு.க. அண்ணாவின் மீது ஈர்ப்பு கொண்ட எம்.ஜி.ஆர் 1952 ஆம் வருடம் தி.மு.க-வில் இணைந்தார். திராவிடக் கர்ணண் என்றும் போற்றப்பட்டார்.



கட்சிக்குள் கருணாநிதியோடு எம்.ஜி.ஆருக்குப் பிணக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். தி.மு.க-விலிருந்து வெளிவந்த எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது தொண்டா்கள் முதன்முதலாக திருச்சியில்தான் ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடத்தினர்.

திருச்சியைச் சேர்ந்த கே.சவுந்தர்ராஜன், தேவதாஸ், கரு.அன்புதாசன், குழ.செல்லையா, வடிவேலு, பாப்பாசுந்தரம், முசிறி புத்தன் உள்ளிட்ட ஏராளமானோர் தி.மு.க-விலிருந்து விலகி எம்.ஜி.ஆருடன் கை கோத்தனர். எம்.ஜி.ஆர். அனுமதியின்றியே அவரது ஆதரவாளர்கள் திருச்சியில் தி.மு.க கொடிகளை இறக்கி, தி.மு.க கொடியின் இடையில் தாமரைப் பொறித்த கொடிகளை ஏற்றி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். திருச்சி ரசிகர்கள் தந்த நம்பிக்கையில், 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் (அ.தி.மு.க) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்!


அ.தி.மு.க-வின் முதல் பொதுக்கூட்டம் 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆரைக் காணப் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.சவுந்தர்ராஜன், சவுந்தர பாண்டியன், தேவதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் ஆகியோரும் கலந்துகொண்டனர். 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க-வின் முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத் தேர்தலுக்கு திருச்சி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நிதி திரட்டினார் எம்.ஜி.ஆர். அந்தகூட்டத்தில் எஸ்.எம்.என். அமிர்தீன் முதல் தேர்தல் நிதியை வழங்கினார்.



அதைத் தொடர்ந்து தி.மு.க. அரசை எதிர்த்து எம்.ஜி.ஆர். அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் மெயின்கார்டுகேட் காமராஜ் வளைவில்தான் நடைபெற்றது. முதல் பொதுக்குழுவையும், மாநில மாநாட்டையும் எம்.ஜி.ஆர் திருச்சியிலே நடத்தினார். 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 23, 24 ஆகிய இரு நாட்கள் காட்டூரில் நடந்த மாநில மாநாடு தமிழகத்தில் அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இந்த வித்தானது அவரை 1980 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில் முதல்வர் என்னும் மரமாக்கியது. தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை ராசியாகக் கருதிய எம்.ஜி.ஆர்., பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்ட மேம்பாட்டுத் திட்டத்தினையும் மாநாடு நடந்த அதே இடத்தில், 1982 ஆம் வருடம் தொடங்கிவைத்தார். எம்.ஜி.ஆரின் ராசி என்றில்லாமல், அ.தி.மு.க-வின் ராசி என்பதுபோல் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவும் முதன்முதலில் திருச்சி

ஒத்தக்கடையில் நடைபெற்றக் கூட்டத்திலே பங்கேற்றார். இப்படி அ.தி.மு.க-வுடன் பெரிதும் தொடர்புகொண்ட திருச்சியை தலை நகரமாக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முனைந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அவரது எண்ணத்துக்கு எதிர்க்கட்சிகளிடத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து மக்கள் வந்துசெல்வது பெரும் சிரமம். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வந்துசெல்ல தமிழகத்தின் மையமான திருச்சியைத் தலைநகரமாக மாற்றியும், அங்கு தலைமைச் செயலகம் அமையப்பெற வேண்டும் என்றும் கருதினார் எம்.ஜி.ஆர். இதற்காக 1983 ஆம் ஆண்டு திருச்சியைத் தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.



இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனைப் பொருட்படுத்தாத எம்.ஜி.ஆர்., திருச்சி அண்ணாநகர் நாவல்பட்டிலும், முசிறி அருகிலும் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியைத் தொடங்கினார். மேலும், தனது இறுதிக் காலத்தில், திருச்சியில் தங்க விரும்பினார். இதற்காக குடமுருட்டி ஆற்றங்கரை அருகேகாவிரிக்கரையிலிருந்து உறையூர் செல்லும் சாலையில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டங்களுடன்கூடிய பங்களா வீட்டை, சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரிடமிருந்து வாங்கினார். தனது விருப்பப்படி மாற்றம் செய்யப்பட்டிருந்த பங்களாவைப் பார்ப்பதற்காக அவர் திருச்சி வந்திருந்தபோது, 'திருச்சியை தலைநகரமாக மாற்றினால், மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்' என்ற தனது எண்ணத்தையும் திருச்சி அ.தி.மு.க-வினரிடம் கூறியிருக்கிறார். பின், அமெரிக்கா சென்ற அவருக்கு உடல்நிலை மோசமானது. அதன்பின்னர் அரசியல் சூழ்நிலையும், இந்திராகாந்தி மரணமும், திருச்சியைத் தலைநகரமாக மாற்றும் திட்டத்தையே கைவிடும் நிலைக்குக் கொண்டுபோனது. எம்.ஜி.ஆரின் நிறைவேறாத திட்டத்தில், முக்கிய ஒன்றாக அது இருந்தது என்றே கூறலாம்.






`
எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றும் வகையில், திருச்சியைத் தமிழகத்தின் தலைநகரமாக்க வேண்டும் என்று முயற்சி செய்தார் ஜெயலலிதா. திருச்சியை சொந்த ஊர் என்று சொந்தம் கொண்டாடினார். எம்.ஜி.ஆரின் விருப்பமாக இருந்த திருச்சியிலிருந்து ஆர்.சௌந்தர்ராஜன் என்பவரை சத்துணவுத்துறை அமைச்சராக்கினார். இவர்தான் மதுரையில் எம்.ஜி.ஆர் முன்னிலையில்,ஜெயலலிதாவுக்கு வெள்ளி செங்கோல் வழங்கி புரட்சித்தலைவி என பட்டமும் வழங்கினார். மேலும், வீட்டுவசதித்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களாகவும் திருச்சியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கினார். திராவிட அரசியலில், குறிப்பாக அ.தி.மு.க தேர்தல் பாதையில், மலைக்கோட்டை திருச்சி முக்கிய பங்கு கொண்டே வந்துள்ளது... அந்தத் தொடர்பு இன்றும் தொடர்ந்து வருகிறது!

Gambler_whify
7th February 2018, 11:18 AM
http://i68.tinypic.com/2nqf79f.jpg

http://i64.tinypic.com/1961dv.jpg

Gambler_whify
7th February 2018, 11:22 AM
சென்ைன காசினோ தியட்டரில் 30 வாரங்கள் மேல் 211 நாட்கள் ஓடி சாதனை செய்த படம் எங்க வீட்டுப் பிள்ளை.
29 மற்றும் 30வது வார விளம்பரம்.

http://i64.tinypic.com/1961dv.jpg

Richardsof
7th February 2018, 05:07 PM
அன்றும் .. இன்றும்.. என்றும்..

http://i63.tinypic.com/2zptoap.jpg

தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முதலில் 7 திரையரங்குகளில் வெள்ளி விழா (25 வாரங்கள்) கொண்டாடி சாதனை செய்த படம் மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை. சென்னை காசினோ திரையரங்கில் 211 நாட்கள் ஓடி பழைய சாதனைகளை முறியடித்த படம். காசினோவில் மட்டுமே ரூ. 5 லட்சத்துக்கு மேல் வசூல் செய்தது.
http://i65.tinypic.com/2lbiczl.jpg

இதற்கு முன் அதே காசினோ திரையரங்கில் காதலிக்க நேரமில்லை படம் 25 வாரங்களைக் கடந்த ஓடினாலும் தினசரி 2 காட்சிகளாக நடைபெற்றது. ஆனால், எங்க வீட்டுப் பிள்ளை 3 காட்சிகளாக 211 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்ததையும் குறிப்பிட வேண்டும். தஞ்சையில் வெள்ளி விழா கண்ட படம் (யாகப்பா திரையரங்கம்) என்ற சிறப்பும் எங்க வீட்டுப் பிள்ளைக்கு உண்டு.


கடந்த 2-ம் தேதி டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு சென்னை, கோவை, வேலூர், திருச்சி நகரங்களில் பல திரையரங்குகளில் எங்க வீட்டுப் பிள்ளை படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் முறையில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள்.. சென்னையில்
1. ஆயிரத்தில் ஒருவன், 2.ரிக்க்ஷாக்காரன், 3.அடிமைப்பெண், 4.நினைத்ததை முடிப்பவன் ஆகிய படங்கள் தொடர்ந்து சென்னை தேவி திரையரங்க வளாகத்தில் வெளியாகி இப்போது 5வது படமாக எங்க வீட்டுப் பிள்ளையும் அதே வளாகத்தில் வெளியாகி உள்ளது.

மக்கள் திலகத்தின் பழைய டிஜிட்டல் படங்கள் தொடர்ந்து ஏசி அரங்குகளிலும் மால்களில் உள்ள திரையரங்குகளிலும் குறிப்பாக தேவி வளாகத்தில் (சத்தியம் அரங்கையும் சேர்த்துக் கொள்ளலாம்) வெளியாகி வருவதும் ஒரு சாதனைதான். வேறு எந்த பழைய படங்களுக்கும் கிடைக்காத பெருமை இது.


அந்த அளவுக்கு பெரிய ஏசி திரையரங்குகள், மால்களில் உள்ள திரையரங்குகள் மக்கள் திலகம் படங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளன. பழைய படங்கள் என்ன? சில நேரங்களில் ஒரு சில புதிய படங்களையும் கூட வசூலில் மிஞ்சிவிடும் ஆற்றல் மக்கள் திலகத்தின் படங்களுக்கே உண்டு. தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியான விதமே அதற்கு உதாரணம்.


முதலில் தேவி திரையரங்கை விநியோகஸ்தர் தரப்பில் அணுகியபோது புதிய படங்கள் வருவதால் இப்போதைக்கு எங்க வீட்டுப் பிள்ளைக்கு தியேட்டர் கொடுக்க முடியாது என்று திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி, இதற்காக காத்திருக்க வேண்டாம் என்று தேவி வளாகம் தவிர்த்து மற்ற திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. திடீரென தேவி திரையரங்கு சார்பில் எங்க வீட்டுப் பிள்ளை விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு தேவி பாலாவில் படத்தை திரையிட விரும்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். விநியோகஸ்தருக்கு இன்ப அதிர்ச்சி...

http://i64.tinypic.com/21b0nyh.jpg

தேவி பாலாவில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியாகி இப்போது நடக்கிறது. படத்தை வெளியிட மறுத்த தியேட்டர் நிர்வாகம் விரும்பிக் கேட்டு வாங்கி திரையிட்டிருக்கிறது. இடையில் நடந்தது என்ன? சஸ்பென்ஸை கடைசியில் பார்ப்போம்.

அதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ் பேக். மக்கள் திலகத்தின் 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படமான ரகசிய போலீஸ் 115 படம் 1968-ம் ஆண்டு வெளியாகி வசூல் பிரளயம் செய்தது. சென்னையில் மட்டுமே வெறும் பத்து நாட்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 470 ரூபாய், 44 காசுகள் வசூலாகி உள்ளது. சென்னையில் முதல் பத்து நாட்களில் மட்டுமே 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இத்தனைக்கும் இது பழைய டிக்கெட் கட்டணம்.


மக்கள் திலகம் புரட்சித் தலைவராக உருவெடுத்து மக்கள் செல்வாக்கோடு தமிழக முதல்வராக அரியாசனம் ஏறிய பிறகு தியேட்டர்களில் டிக்கெட் விலையை உயர்த்தினார். அதற்கு முன்பு 1968-ல் தியேட்டர்களில் அதைவிடக் குறைவான டிக்கெட் கட்டணமே இருந்தது. இத்தனைக்கும் சென்னையில் ரகசிய போலீஸ் 115 படம் ஏசி திரையரங்குகளில் வெளியாகவில்லை. சென்னையில் அப்போது ஏசி திரையரங்கம் அதிகம் இல்லை. இருந்தாலும் ஏசி திரையரங்கம் என்றால் டிக்கெட் கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அதைவிட ரகசிய போலீஸ் 115 படம் திரையிட்ட அரங்குகளில், ஏசி இல்லாத அரங்குகளில் குறைவான கட்டணம்தான்.

அப்படி இருந்தும் வெறும் 10 நாட்களில் சென்னையில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான வசூலை ரகசிய போலீஸ் வாரிச் சுருட்டினார் என்றால், M(aximum). G(uarantee). Ramachandran -ஐ வசூல் சக்ரவர்த்தி என்று அழைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

சென்னையில் 10 நாட்களில் வசூலான தொகையையும், வசூல் சக்ரவர்த்தி என்று மக்கள் திலகத்தைக் குறிப்பிட்டும் 1968-ல் படம் வெளியானபோது நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பரம்.

இதில், இன்னொன்று... எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியானபோது காசினோவில் மட்டுமே ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக வசூலித்தது என்று முதலில் சொல்லியிருந்தேன். அதற்கு ரகசிய போலீஸ் விளம்பரம் போல விளம்பர ஆதாரம் கிடைக்கவில்லை. அப்போதைய ரசிகர்கள் குறித்து வைத்திருந்தது மற்றும் நோட்டீஸ்கள்தான் உள்ளது.
http://i68.tinypic.com/2z70pk2.jpg
ஆனால், 10 நாட்களில் 5 தியேட்டர்களில் ரகசிய போலீஸ் 115 படம் 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்றால், காசினோவில் 211 நாட்கள் ஓடிய எங்க வீட்டுப் பிள்ளை படம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக (காசினோவில் மட்டும்) நிச்சயம் வசூலித்திருக்கும் என்று புரிந்து கொள்ள கணக்கில் புலியாக இருக்கத் தேவையில்லை. பச்சைக் குழந்தைக்கும் புரியும்.



இப்போது, தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளையை திரையரங்க உரிமையாளர்களே திரையிட விரும்பி விநியோகஸ்தரை அணுகியதன் சஸ்பென்சை உடைப்போம்...

கடந்த 2-ம் தேதி ‘ புதிய படம் வெளியாகி உள்ளது. தேவி வளாகத்திலும் அந்தப் படம் திரையிடப்பட்டது. படத்துக்கு ஒற்றை இலக்கத்திலேயே ஆட்கள் வந்துள்ளனர். பதறிப் போன தியேட்டர் நிர்வாகம் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை விநியோகஸ்தரிடம் விரும்பிக் கேட்டு வாங்கி தேவி பாலாவில் திரையிட்டுள்ளது.

முதலில் தேவி நிர்வாகம் மறுத்ததால்தான் எங்க வீட்டுப் பிள்ளை படம் 2-ம் தேதி தேவி பாலாவில் வெளியாகவில்லை. இரண்டு நாள் கழித்து 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் திரையிடப்பட்டது. அதிலும் நாளிதழ் விளம்பரத்தில் பகல் 12.30 மணி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், படத்துக்கு மற்ற திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால் முக்கிய நேரமான மாலைக் காட்சியாக 7 மணிக்கு திரையிட்டு வருகின்றனர். இதுதான் தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியான விதத்தின் சுவாரசியம்.

ஒரு சில புதிய படங்களை விடவும் மக்கள் திலகத்தின் பழைய படங்கள் வசூலைக் கொடுக்கும் என்பதற்கும் அதனால்தான் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் (ஏசி திரையரங்குகள், மால்களில் உள்ள திரையரங்குகள் கூட) விரும்புகிறார்கள் என்பதற்கும் இப்போதைய உதாரணமாக திகழ்கிறார் தமிழக மக்கள் சொந்தம் கொண்டாடும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’யான மக்கள் திலகம்.

1968-ல் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரகசிய போலீஸ் 115 படம் வெளியானபோது அன்று மட்டுமல்ல, எல்லா வகையறாக்களையும் ஓரம் கட்டி, ஏழைகளின் இதய தெய்வம் இன்றும் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார் . என்றும் திகழ்வார்.
http://i64.tinypic.com/rc7fwx.jpg
நன்றி - அகில உலக எம்ஜிஆர் மன்றம் முகநூல்

Richardsof
7th February 2018, 06:51 PM
COURTESY - FACEBOOK
MADURAI KANNAN MGR FAN

http://i64.tinypic.com/2rg0269.jpg

Richardsof
7th February 2018, 06:53 PM
http://i65.tinypic.com/rua8uf.jpg

Richardsof
7th February 2018, 06:54 PM
http://i65.tinypic.com/10gzlaf.jpg

Richardsof
7th February 2018, 06:55 PM
http://i63.tinypic.com/qzp28i.jpg

Richardsof
7th February 2018, 07:06 PM
திராவிட இயக்கத்தை வளர்த்தவர்... பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர்

அவர் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைத் தன் படங்களில் பேசினார். பாடல்களில் பரப்பி னார். நாடோடி மன்னன் படத்தில் நான்கு திராவிட மொழிகளிலும் ஒரு பாடலை வைத்தார். அவரது படங்களில் உதய சூரியன் சின்னம் வரும். அண்ணா என்ற பெயர் வரும். அண்ணா மறைந்தபிறகு அவரது உருவம் மறைந்து விடாமல், அவரது உருவத்தைக் கொடியில் போட்டுப் பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர்., என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அதனால் தான் நான் பேசுகிறேன். திராவிட இயக்கத்திற்கு அழிவு வரும் என்கிறார்களே அதனால் பேசுகிறேன். அண்ணா என்ற எழுத்தையும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். சோதனையான காலத்தில் திராவிட இயக்கத்தைப் பாதுகாத்தார்.

இன்றைக்குத் திரைப்படங்களில் எத்தனையோ வன்முறைக் காட்சிகள் வருகின்றன. அரிவாளால் துண்டு துண்டாக வெட்டுகின்ற காட்சிகள், கத்தியால் குத்திக் கொல்லுகின்ற காட்சிகள் வருகின்றன. ஆனால், எம்ஜிஆர் நடித்த எந்தப் படத்திலாவது ரத்தம் கொட்டுகின்ற காட்சிகள் உண்டா? குரூரமான காட்சிகள் உண்டா? வன்முறை உணர்வை ஏற்படுத்துகின்ற காட்சிகள் உண்டா?

எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகள் போர்த்திறனையும் வீரத்தையும் ஊட்டின. வக்கரித்துப் போன ஆத்திர உணர்ச்சியை ஏற்படுத்தவில்லை. அவரது படங்கள் கருத்து களைச் சொன்னது, கொள்கையைப் பேசியது. பிள்ளைகள் திருந்தி வாழ வேண்டும் என்றார். கலையை, தன் வாழ்வைச் சமூக முன்னேற்றத்திற்காகவே ஒப்படைத்துக் கொண்டு பாடு பட்டார்.

அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர்., அவர்களைப் பற்றித் தம்பி பிரபாகரன் அவர்கள் என்னிடம் சொன்ன போது, இவ்வளவு செய்து இருக்கின்றாரே... அவர் இன்னும் பத்து ஆண்டுகள் இருந்திருந்தால் இந்தப் படுகொலைகள் நடை பெற்று இருக்காதே... தமிழ் ஈழம் மலர்ந்து இருக்குமே... என்பதை எண்ணிப் பார்த்தேன். (கைதட்டல்) உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்கள் அவரைத் தெய்வமாகப் போற்றுகின்றார்கள். கோடானுகோடித் தாய்மார்கள் உள்ளங்களில் இன்றைக்கும் அவர் வாழ்கின்றார்.

அண்ணா இன்று உயிரோடு இருந்தால் எம்.ஜி.ஆரைப் பற்றி என்ன சொல்வாரோ, அண்ணா இமயம், நான் ஒரு கூழாங்கல், நான் அவரது தொண்டன் என்ற முறையில் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லுகிறேன்.

அவருடைய நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கு இந்த அரங்கத்தைத் தந்தவர்களுக்கு நன்றி. நெடுநேரம் அமர்ந்து இந்த எளியவன் உரையைச் செவிமடுத்ததற்கு நன்றி. எம்.ஜி.ஆர். புகழ் என்றைக்கும் நிலைத்து இருக்கும்.

இன்றைக்கு இந்த நூற்றாண்டுத் தொடக்கவிழாவை நடத்தியது போல், நிறைவு விழாவையும் கட்சி சார்பு அற்ற முறையில் நானே நடத்துவேன். வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க!

இவ்வாறு பொதுச்செயலாளர் வைகோ உரை ஆற்றினார்.

Richardsof
7th February 2018, 07:20 PM
தமிழ்த் திரைப்பட உலகில் வசூலில் சாதனை படைத்த எங்க வீட்டுப் பிள்ளை 1965-ம் ஆண்டு ஜனவரி 14-ல் வெளியானது. இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ், பண்டரிபாய், தங்கவேலு, நாகேஷ் நடித்தது. பாடல்கள் வாலி, ஆலங்குடி சோமு. இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி. தயாரிப்பு விஜயா புரொடக் ஷன்ஸ், நாகிரெட்டி, சக்ரபாணி. இயக்கம் சாணக்யா.

சிக்கல் இல்லாத தெளிவான கதை, அளவான வசனங்கள், உறுத்தல் இல்லாத காதல் காட்சிகள், மிகையில்லாத நடிப்பு. அற்புதமான படத்தொகுப்பு. தெவிட்டாத இசை. சுவையான காட்சிகள். எம்.ஜி.ஆர். என்ற நட்சத்திரக் கதாநாயகனுக்காகத் திணிக்கப்பட்ட காட்சிகளாக இல்லாமல் திரைக்கதைக்கு ஏற்ற காட்சிகளை மட்டுமே வைத்து சுவை குன்றாமல் கொண்டு போயிருக்கிறார்கள். பாடல்களில் ‘பெண் போனால்… இந்தப் பெண் போனால்’ என்ற பாட்டு மட்டுமே சுமார். அதுகூட இல்லாவிட்டால் அந்தக் காலத்து தியேட்டர் பீடா ஸ்டால்கள் பிழைப்பது எப்படி?

பூஞ்சோலை ஜமீன்தார் குடும்பக் கதை. ஜமீன்தாருக்கு ஒரு மகள், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைக் குழந்தைகளாக இரண்டு பையன்கள். பழனி பங்குனி உத்திரத் திருவிழாவில் இளைய மகன் காணாமல் போய்விடுகிறான். புத்திசாலியான ஜமீன்தார் தம்பதி தங்களிருவரின் புகைப்படங்கள் பொருத்திய லாக்கெட்டை இரண்டு மகன்களுக்கும் முதலிலேயே போட்டுத்தான் கூட்டிச் செல்கிறார்கள். சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்குப் பிறகு அதை ஆதாரமாக வைத்து அவர்கள் இணைகிறார்கள். சின்ன மகன் காணாமல் போன ஏக்கத்தில் ஜமீன்தாரிணி இறந்துபோக, அவர் இறந்த ஏக்கத்தில் ஜமீன்தார் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். பிறகு அவரும் இறந்துவிடுகிறார். ஜமீன்தாரின் பெண்ணுக்கே தனது தம்பியைத் திருமணம் செய்துவைத்துவிடுகிறாள் இளைய ஜமீன்தாரிணி.

ஜமீன்தாரின் மகன் ராமுவைப் படிக்க வைக்காமல், பயந்தாங்கொள்ளியாக வளர்த்து சொத்தை அபகரிக்கப் பார்க்கிறார் நம்பியார். கிராமத்தில் குடியானவர் வீட்டில் வளரும் இன்னொரு எம்.ஜி.ஆர். நன்றாகப் படித்ததுடன் அடி தடி சண்டைகளில் ஆர்வமுள்ளவராக வளர்கிறார். விவசாயத்தில் நாட்டம் போகவில்லை அவருக்கு. அந்த ஊருக்குப் பக்கத்தில் சங்கரன்காடு என்ற கிராமத்தில் பழைய ஜமீன்தாரிணி அம்மா புத்தி பேதலித்து, பேத்தியுடன் தனியாக வாழ்கிறார். அவர்தான் இரட்டையர்கள் புதிரை அவிழ்த்து கிளைமேக்ஸில் அனைவரையும் இணைத்து வைக்கிறார்.

குதிரை சவுக்கால் அடி வாங்கி நொந்துபோகும் சாது எம்.ஜி.யார் வீட்டைவிட்டு ஓட, இன்னொரு எம்.ஜி.ஆர். தற்செயலாக அதே வீட்டுக்கு வந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் முழுக்கதையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ராமாயணம், மகாபாரதம், பராசக்தி ஆகியவற்றுக்குப் பிறகு அதிகம் பாராயணம் செய்யப்பட்ட கதை இதுவாகத்தான் இருக்கும். நம்பியார், அப்பாவி எம்.ஜி.ஆரை அடிக்கும்போது நமக்கு ஏற்படும் வருத்தம் எல்லாம், துணிச்சல்கார எம்.ஜி.ஆர். வந்து நம்பியாரை அடிக்கும்போது மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது. இந்த ஒரு காட்சியே இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய ஈர்ப்பு.

தீமையை நன்மை வெல்லும் இந்த சவுக்கடியோபதேசம் பிற்காலத் திரைப்படங்களில் பல வழிகளில் காட்டப்பட்டாலும் ‘அசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டாய்க் கடை’ இனிப்பாக நாவில் புரளுவது இந்தக் காட்சிதான். இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் இந்தத் திரைப்படம்தான் வழிகாட்டிப் படமாக இருக்கும்.

வடிவேலு இக்காலத் திரைப்பட ரசிகர்களுக்கு அளித்திருக்கும் ஒரு பஞ்ச் டயலாக், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’. அதை இந்தத் திரைப்படத்தில் கேட்கலாம். தம்பி எம்.ஜி.ஆர். (இளங்கோ) ஏகப்பட்ட பலகாரங்களை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நைசாக நழுவிவிட, அப்பாவி எம்.ஜி.ஆர். (ராமு) அதே மேஜையில் வந்து உட்கார்ந்து, ‘ரெண்டு இட்டிலி’ என்று கேட்டதும் அந்த சர்வர், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’ என்று வாயைப் பிளக்கிறார்.

நாகேஷ் இப் படத்தில் கோவிந்தன் என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் வந்தாலும் குளறுவாயன் என்றே எம்.ஜி.ஆரால் அழைக்கப்படுகிறார். அவர் குளறுவதும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் சுருளிராஜனும் ஒரு ஓரத்தில் தெரிகிறார் பாருங்கள்.

ஒரு படத்தில் ஆயிரம் இருந்தாலும் சரியான திரைக்கதை இல்லாவிட்டால் வேலைக்காகாது. எம்.ஜி.ஆரின் அனாயாசமான நடிப்பு, அவரது நட்சத்திர வசீகரம், கதாநாயகிகள், பாடல்கள் என எல்லாம் சரியாக அமைந்திருந்த இந்தப் படத்திற்குத் தெளிவான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைதான் மகுடம். நாடோடி மன்னன், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், குடியிருந்த கோயில், நாளை நமதே ஆகிய அனைத்தும் வெற்றிப் படங்களாக இருந்தாலும் இரட்டை வேடக் கதாநாயகன் படங்களுக்கான டெம்பிளேட் படம் இதுதான். இந்தப் படம் தந்த வெற்றியை மறக்காமல் ‘புதிய பூமி’ திரைப்படத்தின் ஒரு பாடலே, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று ஆரம்பமாகிறது.

இதெல்லாம் இருக்கட்டும். காவியத் தன்மை பெற்றுவிட்ட அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் கட்டுரை எப்படி முடியும்? ஒரு வீட்டில் நடக்கும் அராஜகத்தை எதிர்க்கும் இளங்கோ என்னும் பாத்திரம் கொடுமைக்கார மாமாவின் கையிலிருக்கும் சாட்டையைப் பிடுங்கி அவரையே அடிக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வதில் வியப்பில்லை. ஆனால், அந்த வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சியில் வரும் பாடலில் ஏழை எளியவர்கள் எங்கே வந்தார்கள் என்று யாரும் கேட்கவில்லை. காரணம், சவுக்கு கையில் வந்ததும் இளங்கோ எம்.ஜி.ஆராகிவிடுகிறார். பாத்திரங்கள் தமிழக மக்களாகிவிடுகிறார்கள். “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று எம்.ஜி.ஆர். சொல்லும்போது திரையரங்கம் புல்லரிக்கிறது.

எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றியதில் இந்தப் பாடலுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இந்தப் படத்தை மறக்க முடியாத படமாக ஆக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது.

Gambler_whify
8th February 2018, 12:36 PM
http://i63.tinypic.com/2cdjspi.jpg


நண்பர் லோகநாதன் அவர்களக்ககு நன்றி.

Gambler_whify
8th February 2018, 12:43 PM
http://i65.tinypic.com/rua8uf.jpg

ஆவணத்ததிர்கு நன்றி எஸ்வி ாஅய்யா.

சேலத்தில் ஒரே நேரத்தில் 3 தியேட்டர்களில் வெளியான முதல்படம் எங்க வீட்டுப் பிள்ளை.

3 தியேட்டரிலும் சேர்த்து 175நாட்கள் தாண்டி ஓடி உள்ளது.

ஒரே தியேட்டரில் மட்டும் படம் வெளி ஆகி இருந்த்தால் 8 தியேட்டர்களி்ல் படம் வெள்ளி விழா கொண்டாடி இன்னும் சாதனை செய்து இருக்கும்.

Gambler_whify
8th February 2018, 12:49 PM
அன்றும் .. இன்றும்.. என்றும்..

http://i63.tinypic.com/2zptoap.jpg

தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முதலில் 7 திரையரங்குகளில் வெள்ளி விழா (25 வாரங்கள்) கொண்டாடி சாதனை செய்த படம் மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை. சென்னை காசினோ திரையரங்கில் 211 நாட்கள் ஓடி பழைய சாதனைகளை முறியடித்த படம். காசினோவில் மட்டுமே ரூ. 5 லட்சத்துக்கு மேல் வசூல் செய்தது.
http://i65.tinypic.com/2lbiczl.jpg

இதற்கு முன் அதே காசினோ திரையரங்கில் காதலிக்க நேரமில்லை படம் 25 வாரங்களைக் கடந்த ஓடினாலும் தினசரி 2 காட்சிகளாக நடைபெற்றது. ஆனால், எங்க வீட்டுப் பிள்ளை 3 காட்சிகளாக 211 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்ததையும் குறிப்பிட வேண்டும். தஞ்சையில் வெள்ளி விழா கண்ட படம் (யாகப்பா திரையரங்கம்) என்ற சிறப்பும் எங்க வீட்டுப் பிள்ளைக்கு உண்டு.


கடந்த 2-ம் தேதி டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு சென்னை, கோவை, வேலூர், திருச்சி நகரங்களில் பல திரையரங்குகளில் எங்க வீட்டுப் பிள்ளை படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் முறையில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள்.. சென்னையில்
1. ஆயிரத்தில் ஒருவன், 2.ரிக்க்ஷாக்காரன், 3.அடிமைப்பெண், 4.நினைத்ததை முடிப்பவன் ஆகிய படங்கள் தொடர்ந்து சென்னை தேவி திரையரங்க வளாகத்தில் வெளியாகி இப்போது 5வது படமாக எங்க வீட்டுப் பிள்ளையும் அதே வளாகத்தில் வெளியாகி உள்ளது.

மக்கள் திலகத்தின் பழைய டிஜிட்டல் படங்கள் தொடர்ந்து ஏசி அரங்குகளிலும் மால்களில் உள்ள திரையரங்குகளிலும் குறிப்பாக தேவி வளாகத்தில் (சத்தியம் அரங்கையும் சேர்த்துக் கொள்ளலாம்) வெளியாகி வருவதும் ஒரு சாதனைதான். வேறு எந்த பழைய படங்களுக்கும் கிடைக்காத பெருமை இது.


அந்த அளவுக்கு பெரிய ஏசி திரையரங்குகள், மால்களில் உள்ள திரையரங்குகள் மக்கள் திலகம் படங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளன. பழைய படங்கள் என்ன? சில நேரங்களில் ஒரு சில புதிய படங்களையும் கூட வசூலில் மிஞ்சிவிடும் ஆற்றல் மக்கள் திலகத்தின் படங்களுக்கே உண்டு. தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியான விதமே அதற்கு உதாரணம்.


முதலில் தேவி திரையரங்கை விநியோகஸ்தர் தரப்பில் அணுகியபோது புதிய படங்கள் வருவதால் இப்போதைக்கு எங்க வீட்டுப் பிள்ளைக்கு தியேட்டர் கொடுக்க முடியாது என்று திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி, இதற்காக காத்திருக்க வேண்டாம் என்று தேவி வளாகம் தவிர்த்து மற்ற திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. திடீரென தேவி திரையரங்கு சார்பில் எங்க வீட்டுப் பிள்ளை விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு தேவி பாலாவில் படத்தை திரையிட விரும்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். விநியோகஸ்தருக்கு இன்ப அதிர்ச்சி...

http://i64.tinypic.com/21b0nyh.jpg

தேவி பாலாவில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியாகி இப்போது நடக்கிறது. படத்தை வெளியிட மறுத்த தியேட்டர் நிர்வாகம் விரும்பிக் கேட்டு வாங்கி திரையிட்டிருக்கிறது. இடையில் நடந்தது என்ன? சஸ்பென்ஸை கடைசியில் பார்ப்போம்.

அதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ் பேக். மக்கள் திலகத்தின் 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படமான ரகசிய போலீஸ் 115 படம் 1968-ம் ஆண்டு வெளியாகி வசூல் பிரளயம் செய்தது. சென்னையில் மட்டுமே வெறும் பத்து நாட்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 470 ரூபாய், 44 காசுகள் வசூலாகி உள்ளது. சென்னையில் முதல் பத்து நாட்களில் மட்டுமே 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இத்தனைக்கும் இது பழைய டிக்கெட் கட்டணம்.


மக்கள் திலகம் புரட்சித் தலைவராக உருவெடுத்து மக்கள் செல்வாக்கோடு தமிழக முதல்வராக அரியாசனம் ஏறிய பிறகு தியேட்டர்களில் டிக்கெட் விலையை உயர்த்தினார். அதற்கு முன்பு 1968-ல் தியேட்டர்களில் அதைவிடக் குறைவான டிக்கெட் கட்டணமே இருந்தது. இத்தனைக்கும் சென்னையில் ரகசிய போலீஸ் 115 படம் ஏசி திரையரங்குகளில் வெளியாகவில்லை. சென்னையில் அப்போது ஏசி திரையரங்கம் அதிகம் இல்லை. இருந்தாலும் ஏசி திரையரங்கம் என்றால் டிக்கெட் கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அதைவிட ரகசிய போலீஸ் 115 படம் திரையிட்ட அரங்குகளில், ஏசி இல்லாத அரங்குகளில் குறைவான கட்டணம்தான்.

அப்படி இருந்தும் வெறும் 10 நாட்களில் சென்னையில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான வசூலை ரகசிய போலீஸ் வாரிச் சுருட்டினார் என்றால், M(aximum). G(uarantee). Ramachandran -ஐ வசூல் சக்ரவர்த்தி என்று அழைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

சென்னையில் 10 நாட்களில் வசூலான தொகையையும், வசூல் சக்ரவர்த்தி என்று மக்கள் திலகத்தைக் குறிப்பிட்டும் 1968-ல் படம் வெளியானபோது நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பரம்.

இதில், இன்னொன்று... எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியானபோது காசினோவில் மட்டுமே ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக வசூலித்தது என்று முதலில் சொல்லியிருந்தேன். அதற்கு ரகசிய போலீஸ் விளம்பரம் போல விளம்பர ஆதாரம் கிடைக்கவில்லை. அப்போதைய ரசிகர்கள் குறித்து வைத்திருந்தது மற்றும் நோட்டீஸ்கள்தான் உள்ளது.
http://i68.tinypic.com/2z70pk2.jpg
ஆனால், 10 நாட்களில் 5 தியேட்டர்களில் ரகசிய போலீஸ் 115 படம் 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்றால், காசினோவில் 211 நாட்கள் ஓடிய எங்க வீட்டுப் பிள்ளை படம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக (காசினோவில் மட்டும்) நிச்சயம் வசூலித்திருக்கும் என்று புரிந்து கொள்ள கணக்கில் புலியாக இருக்கத் தேவையில்லை. பச்சைக் குழந்தைக்கும் புரியும்.



இப்போது, தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளையை திரையரங்க உரிமையாளர்களே திரையிட விரும்பி விநியோகஸ்தரை அணுகியதன் சஸ்பென்சை உடைப்போம்...

கடந்த 2-ம் தேதி ‘ புதிய படம் வெளியாகி உள்ளது. தேவி வளாகத்திலும் அந்தப் படம் திரையிடப்பட்டது. படத்துக்கு ஒற்றை இலக்கத்திலேயே ஆட்கள் வந்துள்ளனர். பதறிப் போன தியேட்டர் நிர்வாகம் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை விநியோகஸ்தரிடம் விரும்பிக் கேட்டு வாங்கி தேவி பாலாவில் திரையிட்டுள்ளது.

முதலில் தேவி நிர்வாகம் மறுத்ததால்தான் எங்க வீட்டுப் பிள்ளை படம் 2-ம் தேதி தேவி பாலாவில் வெளியாகவில்லை. இரண்டு நாள் கழித்து 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் திரையிடப்பட்டது. அதிலும் நாளிதழ் விளம்பரத்தில் பகல் 12.30 மணி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், படத்துக்கு மற்ற திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால் முக்கிய நேரமான மாலைக் காட்சியாக 7 மணிக்கு திரையிட்டு வருகின்றனர். இதுதான் தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியான விதத்தின் சுவாரசியம்.

ஒரு சில புதிய படங்களை விடவும் மக்கள் திலகத்தின் பழைய படங்கள் வசூலைக் கொடுக்கும் என்பதற்கும் அதனால்தான் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் (ஏசி திரையரங்குகள், மால்களில் உள்ள திரையரங்குகள் கூட) விரும்புகிறார்கள் என்பதற்கும் இப்போதைய உதாரணமாக திகழ்கிறார் தமிழக மக்கள் சொந்தம் கொண்டாடும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’யான மக்கள் திலகம்.

1968-ல் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரகசிய போலீஸ் 115 படம் வெளியானபோது அன்று மட்டுமல்ல, எல்லா வகையறாக்களையும் ஓரம் கட்டி, ஏழைகளின் இதய தெய்வம் இன்றும் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார் . என்றும் திகழ்வார்.
http://i64.tinypic.com/rc7fwx.jpg
நன்றி - அகில உலக எம்ஜிஆர் மன்றம் முகநூல்


இது எல்லா விஷயமும் சத்தியம்.


தேவி யில் வெளியான புதுப்படம் என்று எல்லா வகையறாக்கள் என்று கடைசியிலும் குறிப்பு குடுத்திருக்கிறீர்கள்.

அந்தப்படம் மன்னர் வகையறா தானே எங்கள் ஊரிலயும் படம் காத்தாடுகிறது.

பல புதுப் படங்களை விட மக்கள் திலகத்தின் படங்கள் அதிக வசூல் குடுக்கும்.

எங்க வீட்டு பிள்ளை சாதன பெருமமையை நன்றாக புரியும் படி பதிவு போட்டதற்கு நன்றி எஸ்வி அய்
யா.

Richardsof
8th February 2018, 07:43 PM
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் வசூலில் சாதனைகள் புரிந்த சந்திரலேகா படத்தின் சாதனைகளை
http://i66.tinypic.com/z1uki.jpg
முறியடித்த முதல் படம் மக்கள் திலகத்தின் ''மதுரை வீரன் '' 1956ல் நடந்தது .
http://i64.tinypic.com/2e5r01x.jpg
மக்கள் திலகத்தின் ''நாடோடிமன்னன் '' 1958ல் வெளிவந்து அதற்கு முந்தய மதுரைவீரனின் வசூலை முறியடித்து ஒரு புதிய சாகப்தத்தை உருவாக்கினார் எம்ஜிஆர் .
http://i64.tinypic.com/dcpgz7.jpg
1958 முதல் 1965 வரை நாடோடி மன்னன் வசூலை எந்த படமும் நெருங்க முடியவில்லை .

நாடோடிமன்னன் ரிக்கார்டை 1965ல் வந்த எங்க வீட்டு பிள்ளை முறியடித்தது மிகப்பெரிய சாதனை .

1965 முதல் 1969 வரை எங்க வீட்டு பிள்ளை - வசூலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டார் .
http://i66.tinypic.com/fc5xft.jpg
1969ல் வந்த எம்ஜிஆரின் அடிமைப்பெண் முந்த சாதனைகளை முறியடித்து
http://i63.tinypic.com/95pf74.jpghttp://i64.tinypic.com/30wl3ee.jpg
முதலிடத்தில் மகுடம் சூட்டியது .

1970ல் மாட்டுக்கார வேலன்
http://i63.tinypic.com/vfj9g0.jpg
1971ல் ரிக் ஷாக்காரன்
http://i65.tinypic.com/vd1qub.jpg
1972ல் நல்லநேரம்
வசூலில் சாதனைகள் தொடர்ந்தாலும்
1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் - வசூல் வரலாற்றை உருவாக்கியது
1936-1973 வரை வெளிவந்த தமிழ் படங்களில் அதிக வசூல் மற்றும் சாதனைகள் புரிந்த காவியமாக உலகம் சுற்றும் வாலிபன் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது .
1974ல் உரிமைக்குரல் 200 நாடகளுக்கு மேல் ஓடி பல இடங்களில் உலகம் சுற்றும் வாலிபன் வசூலை முறியடித்து விட்டது .
[IMG]http://i63.tinypic.com/2j0jdsm.jpg
1975ல் இதயக்கனி மீண்டும் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்து காட்டிய படம் .http://i64.tinypic.com/xygdy.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் 1977ல் தமிழக முதல்வராக பதவி ஏற்று கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார் .
1947- 1977
30 ஆண்டு காலம் இந்திய திரை உலகில் முடிசூடா மன்னன்
1977-1987
10 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக ஆட்சி நடத்திய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .

1987 லிருந்து 2018 இன்று வரை 30 ஆண்டுகளாக எம்ஜிஆர் என்ற மாமனிதரின் திரை உலக ஆளுமைகள் , அரசியல் வெற்றிகள்
சமூக வலைத்தளங்கள் , ஊடகங்கள் , பத்திரிகைகள் தொடர்ந்து பயணித்து வருவது மூலம் உலகமெங்கும் வாழும் எம்ஜிஆரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெருமை கொள்கிறார்கள் . எங்கள் எம்ஜிஆர் வெற்றி பயணம் தொடரும் ...

orodizli
9th February 2018, 06:13 PM
கலையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் " எங்க வீட்டுப் பிள்ளை " டிஜிட்டல் சென்னை- ஸ்ரீநிவாசா, மற்றும் கோவை - ராயல் அரங்குகளில் மகத்தான 2 (இரண்டாவது) வாரமாக நாளிதழ்களில் விளம்பரம் தராமலேயே வெற்றி நடை போடுவது புரட்சி நடிகர் அவர்களுக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு...

orodizli
9th February 2018, 06:21 PM
11-02-2018 முதல் தஞ்சாவூரில் உண்மையாக, நியாயமாக வெள்ளி விழா ஓடிய " எங்க வீட்டுப் பிள்ளை" தஞ்சை - ஸ்ரீ ராணி பாரடைஸ் A/C dts அரங்கில் வெளியாவதாக விநியோகஸ்தர்கள் வழியாக தகவல்...

Richardsof
9th February 2018, 07:13 PM
10.2.1985

மக்கள் திலகம் முப்பிறவி கண்ட பின் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம்


10.2.1985 அன்று மக்கள் திலகம் மட்டும் முதல்வராக பதவி ஏற்று கொண்டார் .

ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் - ஏற்கனவே மந்திரி யாக இருந்தவர்கள் - பதவிகளை எதிர் பார்த்து இருப்பவர்கள -மற்ற கட்சி தலைவர்கள் - அரசியல் விமர்சகர்கள் - ஊடகங்கள் -பொது மக்கள் எல்லோரும்
வியக்கும்படி மக்கள் திலகம் நடத்திய அரசியல் தான் காரணம் .

எம்ஜிஆரால் இனி சுதந்திரமாக செயல்பட முடியாது .உடல்நிலை ஒத்துழைக்காது .நிர்வாக திறமை .அரசியல்
ஆளுமை .இவை எல்லாம் எதிர்பார்த்தவர்களுக்கு மக்கள் திலகம் கொடுத்த பதில் - தான் ஒரு சிறந்த அரசியல் தலைவர் - உடலில் வலுவும் மனதில் தைரியமும் உள்ள முதல்வர் என்பதை நிரூபிக்க ஒரு வாரம் மந்திரிகளின்
பட்டியலை காக்க வைத்து பின்னர் அவரது மந்திரிசபையினை விரிவு படுத்தியதன் மூலம் எல்லோருக்கும்
எம்ஜிஆர் - யார் என்பது புரிந்து கொள்ள முடிந்தது .

கட்சியையும் ஆட்சியும் தக்க வைத்து பிரமிக்க வைத்தவர் எம்ஜிஆர் ..

Richardsof
9th February 2018, 07:14 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் மூன்றாவது முறையாக பதவி ஏற்ற நேரத்தில் பெங்களுர் நகரில்வெளியான அவருடைய படங்கள் .

ஸ்ரீ - நாடோடி மன்னன்

சிவாஜி - நம்நாடு

விநாயகா - பல்லாண்டு வாழ்க

கினோ - அன்பே வா

பாலாஜி - இன்றுபோல் என்றும் வாழ்க

சூப்பர் - காவல்காரன்

முகுந்தா - அடிமைப்பெண்

நியூ சிடி - ஒளிவிளக்கு

ஒரே நேரத்தில் மக்கள் திலகத்தின் எட்டு படங்கள் அவரை வரவேற்கும் விதமாக பெங்களுர் நகரம் முழுவதும்

திரு விழாவாக காட்சி தந்தது .


ஒரு நடிகரின் 8 பழைய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி சாதனை படைத்தது -என்றால் அந்த பெருமை

மக்கள் திலகத்திற்கு மட்டும்தான் என்பது சரித்திரம் .

Richardsof
9th February 2018, 07:17 PM
THANKS - THIRU MANISEKARAN - NET
MGR was certainly "prophetic" in his own ways. He knew that his acting parameters were limited. He retained same style of acting from day one. Yet he felt that his ultimate strength would be songs. As has been stated several times, MGR looked into every angle and aspect of songs in his films.

1) MGR decided the song writers

2) Sat with them and went through the lyrics word for word and line for line. ( The late Marudhakazi and Valee related to me this)

3) He sat with MDs and approved the tunes. RM Veerappan said that all the tunes in MGR songs were approved by MGR. MGR event went to the extent of buying western vinyl records for the listening of the MDs- Kunnakkudi Vaithiyanathan has said this when songs for Navarathinam were composed

4) MGR decides the singers as well.


5) MGR decided the screenplay for the song scenes (Puthaneri Subramaniam related this with me at a breakfast talk in his house. He wrote a song "Veesu Thendrale Veesu" for Nadodi Mannan, for which MGR imagined the song scene. However the song was left out and later used in Ponni Thirunaal. But MGR does contribute to the picturisation)

The man's intense and deep involvement rewarded we fans very well in that his songs were instant hits, and his song scenes were powerful and left indelible impressions upon us.

Singers who sang for him and lyricists who wrote for him received many chances from other MDs as well.

Many of his songs bagged several coveted awards.

His song scenes were too costly and yet enriching. The song scene with the biggest expenditure in those days was Azhagiya Thamizh Magal Ival- Rickshawkaran- two lakhs then. (One of the fours immortal songs where MSV used too many instruments)

His dream songs were simmply matchless!

See the song scene of "Nadagamellaam Kanden Unthan Aadum Vizhiyile" in Madurai Veeran- the staring point of major dream songs. How about "Kannnil Vanthu Minnal Pol" in Nadodi Mannan - underwater scene, that drew the attraction of the press.


All his efforts paid off. ADMK stood for elections in December 1984, in the absence of MGR. MGR was admitted in Brooklyn Hospital USA for multiple ailments. Tamilnadu felt desperate. The video clipping of MGR conversing with his doctor was screened in all theatres. But more importantly, MGR's famous songs were played over AIR over and over for two weeks. His songs carpetted the entire country and permeated the hearts and souls of his ardent fans.



And MGR won with the biggest mandate.
Cho ramasamy wrote" THis is the biggest mandate MGR has received. With this mandate MGR could do two things:
a) Use his tremeondous influence to do something good for the country; or
b) decide to be arrogant.


When MGR was in the Brooklyn Hospital one particular song became a prayer for MGR- again a prayer by all major religious groups. The song is "Aandavane Un Pathangalai Naan Kanneeril Neerattinen" - Oli Vilakku. By Vaalee.
When MGR recovered and returned to Tamilnadu V. N Janagi, MGR's consort told Valee that it was Valee Bagyam that saved MGR. Valee said it was actually VN Janagi's Taali Bagyam that rescued him!



When you listen to MGR songs, there is a special power. And that undeniable and irrepressible power is this: When you listen to his songs, the MDs who composed for his songs would be lost out. The singers will be lost out. Automatically the image of MGR and MGR alone would appear before our faces.

Richardsof
9th February 2018, 07:24 PM
எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ...

நமக்குத் தெரிந்த ஒருவரது பெயரைச் சொன்னாலோ அல்லது ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலோ நமக்கென்று பழக்கமான அவரது முகம் நினைவினில் வந்து நிழலாடும். எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ... நினைவுக்கு வருவது ” நான் ஆணையிட்டால்” என்று சவுக்கை சுழற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை” எம்ஜிஆர் தான். அந்தப் படம் வந்தபோது (1965) நான் பள்ளி மாணவன். தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாது. எம்ஜிஆர் ரசிகன். அவ்வளவுதான். அந்த படத்தை பார்த்த பின்னர் , கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டு மாட்டுக் கொட்டகையில் கயிற்றை சவுக்குபோல் முறுக்கி ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் “ என்று பாடிய சந்தோஷமான நாட்கள் இனி வராது.

எனது பள்ளிப் பருவத்தில் நான் எம்ஜிஆர் ரசிகன். அதற்காக அவரது படங்களே கதி என்று இருந்தவன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. படிப்பில் கோட்டை விட்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் – சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். .. அப்பொழுதெல்லாம் சினிமா என்றால் நைட்ஷோதான். எம்ஜிஆர் படங்கள் தவிர வேறு பார்ப்பதில்லை. அப்புறம் கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்த்தேன்.

எங்கள் அம்மாவின் கிராமத்திலும் சரி, அப்பாவின் கிராமத்திலும் சரி உறவினர்கள் அனைவருமே அப்போது திமுக அனுதாபிகள். இயல்பாகவே நானும் திமுக அனுதாபியாகப் போனேன். ( இப்போது எந்த கட்சி அனுதாபியும் கிடையாது ) கூடவே எம்ஜிஆர் படங்களை காணும் ஆர்வம்.. நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியில் ” திராவிடப் பண்ணை” என்று புத்தக பதிப்பாளர் வீடும், பதிப்பகமும் இருந்தது. இதன் உரிமையாளர் பண்ணை முத்துக் கிருஷ்ணன். அறிஞர் அண்ணா புத்தகங்களை வெளியிட்டதற்காக அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். அவருடன் எனது அப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் நல்ல பழக்கம். அவருடைய வீட்டிற்கு திமுகவின் அப்போதைய முக்கிய தலைவர்கள் வருவார்கள். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோரை நேரில் பார்த்து இருக்கிறேன். எம்ஜிஆர் இங்கு வந்ததில்லை. அவர் திருச்சி வந்தால் ஆஸ்பி ஹோட்டலுக்கு சென்று விடுவார். எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை

அறிஞர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது திருச்சியில் 1970 இல் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்தது. மாநில சுயாட்சி கோஷம் எழுப்பப்பட்டது அங்குதான். அப்போது திருச்சியில் நடக்கும் திமுகவின் எந்த நிகழ்ச்சியானாலும், சிந்தாமணியில் உள்ள் அண்ணா சிலையிலிருந்துதான் தொடங்குவார்கள். அப்படியே இந்த மாநாட்டிற்கும் இந்த அண்ணா சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாலைவேளை என்பதால் அந்தபகுதி முழுவதும் விளக்குகள் மயம். ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் தேர் போன்று அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தலைவர்கள். எம்ஜிஆர் நடுநாயகமாக இருந்தார். கூட்டம் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அந்த ரதத்துடனேயே சென்றது. அவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் எம்ஜிஆரை முதன் முதல் பார்த்தேன். கொஞ்சதூரம் சென்றுவிட்டு நேரில் பார்த்த திருப்தியில் பாதியிலேயே வந்துவிட்டேன்.

அடுத்து அந்த மாநாட்டிற்கு நானும் சென்று இருந்தேன். மாநாட்டு மேடையில் அப்போது ஒருவர் முழங்கிக் கொண்டு இருந்தார். திடீரென்று மாநாட்டு பந்தல் முன்பு ஒரே சலசலப்பு. மைக் முன்பு பேசிக் கொண்டு இருந்தவர் நிறுத்தி விட்டார். ” எம்ஜிஆர் எம்ஜிஆர் ‘ என்று கத்தினார்கள். கூடவே வாழ்க, வாழ்க என்று கோஷம். அப்போதுதான் மேடைக்கு வந்தார் எம்ஜிஆர். இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல்.
இப்போது நான் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. ஆனாலும் நான் இப்போதும் எம்ஜிஆர் ரசிகன்தான். மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள எம்ஜிஆர் படப் பாடல்கள்தான .

courtesy-Elango - TAMIL MANAM .

Richardsof
9th February 2018, 07:25 PM
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.

courtesy- nakkeeran

ifucaurun
10th February 2018, 10:43 PM
http://i65.tinypic.com/rua8uf.jpg

ஆவணத்தை வெளியிட்டதற்கு நன்றி.

சென்னையில் 3 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் எங்க வீட்டுப் பிள்ளை.

காசினோ, பிராட்வே, மேகலா தியேட்டர்களில் வெள்ளி விழா.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பார்த்தால் 1965-ல் அதிக வசூல் செய்த படம் எங்க வீட்டுப் பிள்ளை. மொத்தம் 7 தியேட்டர்களில் வெள்ளி விழா.

தஞ்சாவூரில் முதல் முதலில் வெள்ளி விழா கொண்டாடிய படம் எங்க வீ்ட்டுப் பிள்ளை. (யாகப்பா டாக்கீஸ்)

கோயம்புத்தூரில் முதல் முதலில் வெள்ளி விழா கொண்டாடிய படம் எங்க வீட்டுப் பிள்ளைை (ராயல் டாக்கீஸ்) கோயம்புத்தூரில் முதல் முதலில் எங்க வீட்டுப் பிள்ளைதான் வெள்ளி விழா என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்து விளக்கம் கேட்டால் சான்று தரப்படும்.

ifucaurun
10th February 2018, 11:10 PM
ஆதித்தனாருக்கு மக்கள் திலகத்தை கண்டால் பிடிக்காது. அவருக்கு சொந்தமான தினத்தந்தி, மாலை முரசு பத்திரிகைகளில் மக்கள் திலகத்தின் பெயரை இருட்டு அடிப்பு செய்வார்.

மக்கள் திலகத்தின் சந்திரோதயம் படத்தில் கூட பத்திரிகை முதலாளியாக வரும் எம்.ஆர்.ராதா பாத்திரம் ஆதித்தனாரை கிண்டல் செய்வது போல இருக்கும்.

ஆதி்த்தனார் பத்திரிக்கைகள் ஆதரவும் இல்லை. மற்ற பெரும்பாலான பத்திரிக்கைகள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களிடம் இருந்தது. அந்த குறி்ப்பிட்ட இனத்தவர்களுக்கு திராவிட இயக்கம் திமுக என்றாலே பிடிக்காது. காங்கிரசைத்தான் தூக்கி பிடிப்பார்கள். மக்கள் திலகம் திமுகவில் இருந்ததால் அந்த குறிப்பிட்ட மேல்மட்ட இனத்தைச் சேர்ந்த பத்திரிக்கை முதலாளிகளும் மக்கள் திலகத்தை ஆதரிக்க மாட்டார்கள்.

இப்படி பத்திரிக்கை ஆதரவு இல்லாமல் மக்கள் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு திரைப்படத்துறையிலும் அரசியல் துறையிலும் மக்கள் திலகம் வெற்றி பெற்றார்.

நன்றி கெட்ட ஆதித்தனாருக்கு 1971 தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மக்கள் திலகம் பிரசாரம் செய்து வெற்றி பெற வைத்தார். அதுவும் கொஞ்ச காலம்தான். மக்கள் திலகம் அதிமுகவை தொடங்கிய பின் மறுபடி அவரை தினத்தந்தி, மாலை முரசு பத்திரிக்கைகள் இருட்டு அடிப்பு செய்தன. பட விளம்பரத்தைக் கூட வெளியிட மறுத்தார்கள்.

புரட்சித் தலைவர் ஆட்சி அமைத்ததும்தான் அவருக்கு ஆதரவாக செய்தி போட்டனர்.

ஆனால், பழசை எல்லாம் மனசில் வைத்துக் கொள்ளாமல் சென்னையில் ஆதித்தனார் சிலை அமைக்க அனுமதி கொடுத்ததோடு அந்த சிலையையும் முதல்வர் புரட்சித் தலைவர் திறந்து வைத்தார். எழும்பூர் பக்கத்தில் அந்த ரோடுக்கு
ஆதித்தனார் சாலை என்று பெயர் வைத்தார்.

நன்றி கெட்ட உலகத்திடம் நன்றியை எதிர்பார்க்காதவராக புரட்சித் தலைவர் இருந்தார். எல்லாருக்கும் நல்லது செய்தார்.

orodizli
11th February 2018, 09:58 AM
மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" கோவை- ராயல் அரங்கில் ஒரு வாரதொடு வினியாஹஸ்தரால் நிறுத்த பட்டுள்ளது, அனால் வசூல் ரூபாய் 114000.00 சூப்பர் ஆக ஆகி இருக்கிறது, நியாயமாக இரண்டு வாரங்கள் ஓடி இருக்க வேண்டும்...

Richardsof
11th February 2018, 11:04 AM
http://i67.tinypic.com/24ez23r.jpg
உண்மையான ரசிகர்கள் - தொண்டர்கள் - பொதுமக்கள் ஆதரவு - எம்ஜிஆரின் வெற்றி மேல் வெற்றி .

திரு மகாலிங்கம் சார்

தினத்தந்தி பற்றிய தங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே .

1967க்கு முன்பு தினத்தந்தி பத்திரிகை மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் விமர்சனத்தை எந்த அளவிற்கு மோசமாகவும் தரக்குறைவாகவும் எழுதியது என்பதை அன்றைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நன்கு அறிவார்கள் . 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தினத்தந்தியில் 1972 வரை எம்ஜிஆர் படங்களின் விளம்பரங்கள் செய்திகள் தொடர்ந்து இடம் பெற்றது .பின்னர் 1972-1977 வரை மீண்டும் தினத்தந்தியில் எம்ஜிஆர் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது .பின்னர் தினத்தந்தியின் வியாபார போக்கு நாடறிந்தது ,
அன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தினசரி பத்திரிகைகள் வார , மாத இதழ்களான
தினத்தந்தி
தினமணி
நவமணி
நவசக்தி
சுதேசமித்திரன்
ஹிந்து ஆங்கில பத்திரிகை
பேசும்படம்
குண்டூசி
கலைப்பூங்கா
அலைஓசை
கல்கி
ஆனந்த விகடன்
குமுதம்
மலைமுரசு பேப்பரில் எம்ஜிஆர் பற்றியும் எம்ஜிஆர் படங்களை பற்றியும் எதிர்மறையான தகவல்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது .ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களை பற்றி சிறிதும் கவலை படவில்லை . அதைபோல் அவருடைய ரசிகர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை .

மாறாக யாரெல்லாம் எம்ஜிஆரை தாக்கினார்களோ அவர்கள் எல்லாம் தங்கள் தவறை உணர்ந்து எம்ஜிஆரை பற்றியும் அவரின் நடிப்பை பற்றியும் மனித நேயத்தை பற்றியும் , அவரின் ஆளுமைகளை பற்றியும் . எம்ஜிஆரின் திரை உலக சாதனைகள் பற்றியும் அரசியல் வெற்றிகள் பற்றியும் அனைவரும் எழுதிவருவது மூலம் எம்ஜிஆரின் பொறுமைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி .என்பதை அறியலாம் .

எம்ஜிஆர் தன்னை நம்பினார்
தன்னுடைய ரசிகர்களை நம்பினார்
தொண்டர்களை நம்பினார்
மக்களை நம்பினார்
விளைவு ?

வெற்றி மேல் வெற்றி கண்டார் .
கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு வருகிறார் .

Richardsof
11th February 2018, 11:10 AM
தேர்தலில் தோல்வி பெற்றால் கருணாநிதி மக்களை கேவலமாக திட்டுவார் .
அப்படியும் சமாதானம் இல்லை என்றால் மக்களுக்கு சாபம் இடுவார் .
அரசியலில் ஜொலிக்காதவர்கள் மக்கள் மீது காரி உமிழ்ந்து தங்களையே அசிங்கப்படுத்தி கொள்வார்கள் .
ஆனால் மக்கள் மிகவும் திறமைசாலிகள் .
யாரை எங்கே எப்படி வைப்பது என்று தெளிவாக தீர்ப்பு வழங்கி சொல்லிவிடுவார்கள் .

Richardsof
11th February 2018, 11:26 AM
1977 அருப்புக்கோட்டை --------------- எம்ஜிஆரை தமிழக கோட்டைக்கு அழைத்து சென்றது.

1980 மதுரை மேற்கு --------------- மீண்டும் எம்ஜிஆரை தமிழக கோட்டைக்கு அழைத்து சென்றது.

1984 ஆண்டிபட்டி ---------------- மூன்றாவது முறை எம்ஜிஆரை தமிழக கோட்டைக்கு அழைத்து சென்றது.

Richardsof
11th February 2018, 11:59 AM
சாத்தியமான வரிகள்
சத்தியமான வார்த்தைகள்
சரித்திரத்தில் இடம் பெற்றவை
கற்பனை கோட்டை இல்லை
கனவை நினைவாக்கியவரின் கோட்டை
http://i63.tinypic.com/11w65xy.jpg


மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்


உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு


ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை

புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கிடும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே

பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும்

நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் !
என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு

ifucaurun
11th February 2018, 11:14 PM
http://i67.tinypic.com/24ez23r.jpg
உண்மையான ரசிகர்கள் - தொண்டர்கள் - பொதுமக்கள் ஆதரவு - எம்ஜிஆரின் வெற்றி மேல் வெற்றி .

திரு மகாலிங்கம் சார்

தினத்தந்தி பற்றிய தங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே .

1967க்கு முன்பு தினத்தந்தி பத்திரிகை மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் விமர்சனத்தை எந்த அளவிற்கு மோசமாகவும் தரக்குறைவாகவும் எழுதியது என்பதை அன்றைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நன்கு அறிவார்கள் . 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தினத்தந்தியில் 1972 வரை எம்ஜிஆர் படங்களின் விளம்பரங்கள் செய்திகள் தொடர்ந்து இடம் பெற்றது .பின்னர் 1972-1977 வரை மீண்டும் தினத்தந்தியில் எம்ஜிஆர் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது .பின்னர் தினத்தந்தியின் வியாபார போக்கு நாடறிந்தது ,
அன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தினசரி பத்திரிகைகள் வார , மாத இதழ்களான
தினத்தந்தி
தினமணி
நவமணி
நவசக்தி
சுதேசமித்திரன்
ஹிந்து ஆங்கில பத்திரிகை
பேசும்படம்
குண்டூசி
கலைப்பூங்கா
அலைஓசை
கல்கி
ஆனந்த விகடன்
குமுதம்
மலைமுரசு பேப்பரில் எம்ஜிஆர் பற்றியும் எம்ஜிஆர் படங்களை பற்றியும் எதிர்மறையான தகவல்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது .ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களை பற்றி சிறிதும் கவலை படவில்லை . அதைபோல் அவருடைய ரசிகர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை .

மாறாக யாரெல்லாம் எம்ஜிஆரை தாக்கினார்களோ அவர்கள் எல்லாம் தங்கள் தவறை உணர்ந்து எம்ஜிஆரை பற்றியும் அவரின் நடிப்பை பற்றியும் மனித நேயத்தை பற்றியும் , அவரின் ஆளுமைகளை பற்றியும் . எம்ஜிஆரின் திரை உலக சாதனைகள் பற்றியும் அரசியல் வெற்றிகள் பற்றியும் அனைவரும் எழுதிவருவது மூலம் எம்ஜிஆரின் பொறுமைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி .என்பதை அறியலாம் .

எம்ஜிஆர் தன்னை நம்பினார்
தன்னுடைய ரசிகர்களை நம்பினார்
தொண்டர்களை நம்பினார்
மக்களை நம்பினார்
விளைவு ?

வெற்றி மேல் வெற்றி கண்டார் .
கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு வருகிறார் .

உண்மை. பத்திரிக்கை பலத்தால் புரட்சித் தலைவர் வளரவில்லை. பெரிய நிறுவன பத்திரிக்கைகள், உயர்மட்ட இனத்தைச் சேர்ந்த முதலாளிகள் நடத்திய பத்திரிக்கைகள், அதிகமாக விற்பனை ஆன பத்திரிக்கைகள் எல்லாம் புரட்சித் தலைவருக்கு எதிராகவே எழுதின.

மக்கள் திலகத்தின் பட விமர்சனங்களிலும் படத்தையும் அவரையும் கிண்டல் செய்தே எழுதினார்கள்.

அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் எதிர் நீச்சல் போட்டு, படங்களில் நடித்தும் மக்களுக்கு உதவிகள் செய்தும் அதன் மூலம் கிடைத்த மக்கள் செல்வாக்கால் புரட்சித் தலைவர் வளர்ந்தார்.

நன்றி ஐயா.

okiiiqugiqkov
12th February 2018, 12:15 AM
இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் மக்கள் திலகத்தின் புகழ் மறையாது.

தமிழ் நடிகர்கள் தென்னிந்திய நடிகர்கள் மட்டுமல்லாது வட இந்திய நடிகர்களும் மக்கள் திலகத்தின் பெருமையை புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கால இந்தி நடிகர்கள் மட்டுமல்லாது இந்தக் காலத்து பிரபல இந்தி நடிகர்கள் கூட மக்கள் திலகத்தின் ரசிகர்களாகவும் அபிமானிகளாகவும் இருக்கிறார்கள். இது மக்கள் திலகத்தின் ரசிகர்களான நாம் எல்லாரும் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட வேண்டிய விடயம்.


பிப்ரவரி 6-ம் தேதி (6-2-2018) வெளியான தினத்தந்தி பேப்பரில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கின் பேட்டி வெளியாகி உள்ளது. இவர் இந்தியில் பிரபலமான நடிகராக இருக்கிறார். இப்போது பல மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் பத்மாவத் படத்தில் நடித்து இருக்கிறார்.

ரன்வீர் சிங்கின் பேட்டி..

http://i67.tinypic.com/2u9hncg.jpg

ரன்வீர் சிங் போல இப்பத்திய நடிகர்களின் நடை,உடை, பாவனை எல்லாம் அப்பவே ஸ்டைல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் செய்து அசத்தி விட்டார்.

மக்கள் திலகத்தைப் போற்றி பின்பற்றும் ரன்வீர் சிங்குக்கு நன்றி.

இருந்தாலும் அவர் ஸ்டைலும் அழகும் உனக்கு மட்டுமல்லாமல் யாருக்குமே வராதுப்பா ரன்வீர் சிங்.

மக்கள் திலகம் தனது தொப்பியின் வலது பக்கம் லேசாக மடக்கி விட்டிருக்கும் அழகு ஒன்று போதும்.

http://i67.tinypic.com/mvt7hl.jpg

fidowag
12th February 2018, 11:45 PM
இரங்கல் செய்தி
-----------------------
மக்கள்.திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரும் பக்தருமான திரு.மோகன்குமார் (வழக்கறிஞர் ) அவர்களின் அன்பு தந்தையார் திரு.எஸ்.மணி செட்டியார்
(வயது 82) அவர்கள் உடல் நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி இன்று இரவு மரணமடைந்தார் என்பதை
மிகுந்த துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அருள்
புரியட்டும் .

தனது தந்தையை இழந்து வாடும் திரு.மோகன்குமார் மற்றும் அவரது
குடும்பத்தினருக்கும் என் சார்பாகவும்,அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள்
சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .

இரங்கல் செய்தி அனுப்ப விரும்பும் நண்பர்கள் / பார்வையாளர்கள் 9841575552
-மோகன்குமார் என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் .
திரு.மோகன்குமார் (வழக்கறிஞர் ) அவர்களின் தந்தையாரின் பூத உடல் இன்று மாலை (13/02/2018) 5 மணி அளவில் சென்னை ஜார்ஜ் டவுன் , சண்முகராயன்
தெருவில் இருந்து (ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் ) ஊர்வலமாக
எடுத்து செல்லப்பட்டு மூலக்கொத்தளம் மயானத்தில் இறுதி அஞ்சலிக்கு பின்னர் எரியூட்டப்படும்

ஆர். லோகநாதன்,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

Richardsof
13th February 2018, 06:14 PM
மனித நேயர் எம்ஜிஆர்

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?

இந்த கேள்விக்கு பதில் காண சரித்திர புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் அனைத்து பெயர்களும் வரலாறாக அறிந்தவை மட்டுமே. நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்து, மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் ஒருவரை மக்கள் மறக்காமல் தாமாகவே முன் வந்து நினைவை போற்றுகின்றார்கள் என்றால் அந்த பெருமைக்கு சொந்தக்காரர், எம்ஜிஆர்.

கொடிது கொடிது இளமையில் வறுமை. அந்த வறுமையின் கொடூரம் தாங்காமல் இலங்கை, பாலக்காடு, சேலம், கோவை என குடும்பத்துடன் புலம் பெயர நேரிட்ட அவலத்தை சந்தித்தவர். அந்த துயர வடுக்களை அனுபவித்த காரணத்தாலேயே வாடிய மக்களை கண்ட போதெல்லாம் துயர் துடைக்க கரம் நீட்டியவர். தமிழக ஜனநாயகத்தின் வரலாற்றை எழுதினால் அவருடைய பெயரை நிச்சயமாக தவிர்க்க முடியாது. சினிமா கவர்ச்சியால் ஆட்சியை பிடித்தவர், அட்டை கத்தி வீரர் என வசைமாரி பொழிந்தவர்கள் தங்கள் உள்மனதை தொட்டுப் பார்த்தால், அவரது நீடித்த புகழுக்கு அது மட்டுமே காரணமல்ல என்ற உண்மை புரியும்.

மனித நேயம் என்பது எம்ஜிஆரின் ரத்தத்தில் ஊறிய குணம். 1940களில் சாதாரண நாடக நடிகராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்கு உதாரணம். நாடக கம்பெனியில் இருந்தபோது தேநீர் அருந்தும் வேளைகளில் தினமும் எம்ஜிஆரே தேநீருக்கு பணம் அளிப்பதை பார்த்த வி.கே.ராமசாமி, ‘ஏம்பா, தினமும் நீயே கொடுக்கிறாய்..?’ என்று கேட்டபோது, ‘எங்கள் வீட்டில் நானும் என் அண்ணனும் சம்பாதிக்கிறோம். ஆனால், நம்முடன் இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பாத்தியம் மட்டுமே. அவர்கள் கொண்டு செல்லும் பணத்தை எதிர்பார்த்து குடும்பமே காத்திருக்கும்’ என்று பதிலளித்தவர், எம்ஜிஆர். நாடக கம்பெனியில் 4 ரூபாய் சம்பாதித்தபோது இருந்த மனித நேயத்தை லட்சங்களில் சம்பாதித்தபோதும் பட்டுப்போகாமல் காப்பாற்றியதால் தான் கோடிக்கணக்கான மக்களின் நாயகராக உயர்ந்து நிற்கிறார்.

திரை உலகிலும் தன்னால் யாருக்கும் எந்தவித நட்டமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால் தான், தனது முயற்சிகளை ‘நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்’ என சொந்த பணத்தைக் கொண்டே செய்து பார்த்தவர். மேலும், தனக்கு சேர வேண்டிய பணம் வந்தால் போதும் என கருதாமல் தன்னுடன் திரைப்படத்தில் பணியாற்றிய கடைக்கோடி தொழிலாளி வரை சம்பளம் பட்டுவாடா ஆகி விட்டதா என்பதை உறுதி செய்யும் குணம் தான் அரசியல் வரை அவரை அழைத்து வந்தது.


திரைப்படம் என்பது மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலேயே புகைப் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்தவர். வில்லனை கை, கால்களை வெட்டி திருத்தாமல் அடி, உதையிலேயே திருத்துவது அவரது பாணி. இது என்ன சினிமாத்தனம் என்று கேட்கலாம். நிஜத்தில் எவ்வளவோ நடந்தாலும், எதிரியாக இருந்தாலும் ஒரு மனிதனை திருத்துவதற்கு அதுவே சிறந்த வழி என்பது அவரது கருத்து. ஆரம்பத்தில் தனது கதாநாயகியாக நடித்த பெண்களுக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் பின்னாளில் ஏற்பட்டபோது, அவர்களின் கதாபாத்திரத்தை அண்ணி கதாபாத்திரமாக மாற்றியவர். (உதாரணம்=உரிமைக் குரல்)

திரைப்படத்தில் தனக்கென இப்படி சில கொள்கைகளை பின்பற்றியது மட்டுன்றி, 1952ல் தான் இணைந்த திமுகவின் கொள்கைகளையும் படங்களில் புகுத்தினார், அந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருந்தும் கூட. அந்த துணிச்சல், வேறு எந்த நடிகருக்காவது இருக்குமா? அச்சம் என்பது மடமையடா.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு..., உன்னை அறிந்தால்... தூங்காதே தம்பி தூங்காதே... புதியதோர் உலகம் செய்வோம்... இப்படி அவரது பாடல்களை கேட்டால் போதும் ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்களை படித்து முடித்த உற்சாகம் மனதில் ஊற்றெடுக்கும்.

எம்ஜிஆரின் இந்த குணங்கள் தான், அரசியலிலும் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது. தமிழகத்தில் இருந்து மாநில கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புக்கு 1977ம் ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எம்ஜிஆர். மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். இது முரண்பாடாக தெரியவில்லையா? என்று கேட்டபோது, ‘நான் தனி ஆள் அல்ல. எனது விருப்பு வெறுப்பை பார்க்க. ஒரு மாநில முதலமைச்சர். எனவே, மாநிலத்துக்கு தேவையான உதவிகளை எப்படி பெற முடியுமோ அதை எப்படியும் பெறுவேன்’ என்பது அவரது பதிலாக இருந்தது. அந்த எண்ணம் தான் தமிழக மக்களிடம் இன்னமும் நிரந்தர முதல்வராக எம்ஜிஆரை அமர்த்தி வைத்திருக்கிறது.

அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வளைந்து கொடுப்பவரா? என்ற சந்தேகத்தை எழுப்பியவர்களுக்கு, ‘ராணுவம் வந்தாலும் எதிர்கொள்ள தயார்’ என மத்திய அரசுக்கு துணிச்சலாக சவால் விடுத்து மறைமுகமாக பதிலளித்தவர். இலங்கையில் உச்சகட்ட இனக்கலவரம் நடைபெற்றபோது போராளிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்ததோடு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சென்னைக்கு அழைத்து தனது சொந்த பணம் ரூ.5 கோடியை வழங்கியவர். பின்னாளில், இந்திரா காந்தி மூலமாக புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க உதவியவர்.

அரிசி, உணவு, போக்குவரத்து என சாதாரண ஏழை மக்களுக்கு தேவையான அனைத்தையும் மிக நிறைவாகவே பூர்த்தி செய்தது, எம்ஜிஆரின் 10 ஆண்டு கால தொடர்ச்சியான ஆட்சி. எம்ஜிஆர் போலவே திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து கோலோச்சி விடலாம் என பலரும் கருதுகின்றனர். சிலர் முயற்சித்தும் பார்க்கின்றனர். அவர்கள் எல்லாம், ‘மனித நேயம், ஏழைகளின் மீதான அன்பு, எதிரியாக இருந்தாலும் அரவணைக்கும் குணம், தன்னம்பிக்கை, நாடி வந்தோருக்கு வாரி வழங்குதல், தேடி வந்தோருக்கு பசிப்பிணி போக்குதல் என நினைத்து பார்க்க முடியாத மாபெரும் குணங்களே அவரது நிரந்தர வெற்றிக்கு காரணம் என்பதை அறியாதவர்கள்.

இன்றளவும் தமிழக அரசியல் அரங்கில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இருக்கும் மரியாதை அளவிட முடியாதது. அவரது சமாதியை தினந்தோறும் சுற்றி வணங்கிச் செல்லும் மக்களே அதற்கு சாட்சி.

வை.ரவீந்திரன்

Richardsof
13th February 2018, 06:22 PM
திரையில் பேசும் வசனம் பேச்சளவில் மட்டும் அல்ல, நிஜத்திலும் அப்படியாய் தான் வாழ்ந்தவர் எம்ஜிஆர் , ஹரிதாஸ் எனும் படம் தொடர்ந்து நான்கு தீபாவளி கண்ட திரைக் காவியம். அதை குறித்து கட்டுரை எழுதுவதற்கு நான் ப்ராட்வே ( இந்த திரை அரங்கில் தான் நான்கு வருடம் ஓடியது) திரை அரங்கு உரிமையாளர் திரு, சுரேஷ் அவர்களை 2008 ஆம் ஆண்டு சந்திதேன். அப்பொழுது உலகம் சுற்றும் வாலிபன்' திரைபடத்தை மறுபடியும் வெளியிட்டு இருந்தார்கள்.

எம்ஜிஆர் பற்றி திரு சுரேஷ் அவர்கள் சில சுவாரசியமான விசயத்தை பகிர்ந்து கொண்டார்.
எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்த நேரம், ஒரு படத்தின் வெற்றி விழா ப்ராட்வே திரை அரங்கில் மதியம் நடப்பாக இருந்தது, ஆனால் வேலை பளு காரணமாக
எம்ஜிஆர் அவர்கள்
3 மணி நேரம் தாமதமாக வந்தார், அவரை கண்டவுடன் கூட்டம் அலைமோதியது, ஆர்பரித்தது.
அந்த இரைச்சலில்லும் ஒரு ஏழை மூதாட்டியின் நடுக்கமான குரலை கேட்டு அவர் அருகில் செலுகிறார், அந்த மூதாட்டி எம்ஜிஆர் அவர்களிடம் , 'மவராசா உனக்காக நான் சமைச்சி ஒரு கை பிடி சோறு கொண்டு வந்தேன், ஆனா கூட்டத்தில் எல்லாமே கொட்டி போச்சு என்றார், அவ்வளவுதானே என கூறிய எம்ஜிஆர், உடனே மூதாட்டியின் கையில் ஒட்டியிருந்த 2 பருக்கை சோற்றை மூதாட்டியின் கையே வைத்தே ஊட்டி விட வைத்தார்'. இது தான் எம்ஜிஆர் .

Richardsof
13th February 2018, 06:28 PM
.




1940களில் தமிழ் திரையுலகம்

எம்.ஜி.ஆர் 1936-ல் தமிழ்த்திரைக்கு அறிமுகமாகி பதினோரு ஆண்டுகள் கழித்து 1947-ல் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார். அந்த சமயம் பி.யு சின்னப்பாவும் டி.கே. தியாகராஜ பாகவதரும் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாக இருந்த நிலை மாறியதால், ஓர் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. 1944 ஆம் வருடம் நவம்பர் 27-ல் லட்சுமி காந்தன் கொலைவழக்கில் கைதான பாகவதர் 1966-ல் விடுதலை பெற்று வந்ததும் படங்களில் முன்பு போல் ஆர்வம் காட்டவில்லை. சில படங்கள் நடித்தபோதும் அவை சரியாக ஓடவில்லை.

எம்.ஜி.ஆர் ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக நடித்த பிறகும் சில படங்களில் அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 1948-ல் பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’யில் எம்.ஜி.ஆர் தளபதி வேடம் ஏற்றிருந்தார். 1949-ல் பாகவதர் நடித்து வெளிவந்த ரத்னகுமார் படத்தில் பாலதேவனாக சிறுபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பாகவதருக்குத் தரவில்லை. அவர் சரிவை சந்தித்தார். அந்தச் சரிவு எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர் 1948-ல் வி.என். ஜானகியுடன் ‘மோகினி’, 1950-ல் ஜி. சகுந்தலாவுடன் ‘மந்திரிகுமாரி’, 1951-ல் மாதுரிதேவியுடன் ‘மர்மயோகி’ அதே ஆண்டில் அஞ்சலி தேவியுடன் ‘சர்வாதிகாரி’ என தொடந்து நடித்து முன்னேரிக்கொண்டே வந்தார். மர்மயோகி பேய்ப் படம் என்பதால் குழந்தைகள் பயப்படுவார்கள் என ஏ முத்திரை பெற்றது. அது நிஜப் பேய் அல்ல என்பதால் மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது.

“கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான் தவறும் என்றால் குறி வைக்க மாட்டான்” என்று எம்.ஜி.ஆர் பேசிய வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாயிற்று. பலர் தம் ஆண்பிள்ளைகளுக்கு ‘கரிகாலன்’ என்று பெயர் சூட்டினர்.

Richardsof
13th February 2018, 06:30 PM
பி.யு. சின்னப்பா

முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று “உத்தமபுத்திரன்” படத்தில் நடித்த பி.யு.சின்னப்பா, ஒரே படத்தில் பத்து வேடம் போட்டார். ‘ஜகதலப் பிரதாபன்’ படத்தில் நான்கு கதாநாயகிகளுடன் நடித்தவர், வாள்வீச்சில் கெட்டிக்காரர்; எம்.ஜி.ஆர் வியந்து போற்றும் மேடைக்கலைஞர். இவர் ராஜபார்ட வேடம் ஏற்ற நாடகங்களில் எம்.ஜி.ஆர் ஸ்திரீபார்ட் வேடம் ஏற்றிருக்கிறார். இத்தகைய சிறந்த கலைஞரின் மரணம் எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்துக்கு ‘ராஜபாட்டையை’ (நெடுஞ்சாலை) அமைத்துக் கொடுத்தது. 1951-ல் பி.யு. சின்னப்பா திடீரென ஒரு விபத்தில் காலமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆரின் (1952) படங்களில் ‘என் தங்கை’ இலங்கையில் ஒரு வருடம் ஓடி வெற்றிவாகை சூடியது. கிறிஸ்தவ மன்னராக எம்.ஜி.ஆர் நடித்திருந்த ‘ஜெனோவா’ (1953) நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடைபோட்டது. இந்தப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையை எம்.ஜி.ஆர் முதன்முதலாக அங்கீகரித்தார்.

Richardsof
13th February 2018, 06:31 PM
ஜனாதிபதி பரிசு பெற்ற ‘மலைக்கள்ளன்’

பியுசின்னப்பா 1951-ல் மறைந்த பின்பு தமிழ்த்திரையுலகில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்ப வாள்சண்டையில் தேர்ச்சி பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. பி.யு. சின்னப்பாவைப் போல எம்.ஜி.ஆரும் இரண்டு கைகளாலும் வாள் சுழற்றுவதில் கெட்டிக்காரர். 1954-ல் வெளிவந்த “மலைக்கள்ளன்” தமிழுக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது. 150 நாட்கள் வெற்றிநடை போட்ட இந்தப் படம் எம்.ஜி.ஆரின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

Richardsof
13th February 2018, 06:32 PM
1955 ல் குலேபகாவலி 1956-ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும், ஆகியன வெற்றிப் படங்களாக எம்.ஜி.ஆருக்கு அமைந்தன. மதுரை வீரன்’, ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆகிய படங்கள் எம்.ஜி.ஆருக்கு வெற்றிப் பரிசு அளித்தன. ‘தாய்க்குப் பின் தாரம்’ படப்பிடிப்பில் காளையுடன் சண்டை போடுவதில் எம்.ஜி.ஆர் காட்டிய தயக்கம் தேவருக்கும் அவருக்கும் இடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் எம்.ஜி.ஆரின் ‘கால்ஷீட்டுக்காக’ காத்திருக்காமல் தேவர்தனது அடுத்த படமான ‘நீலமலைத் திருடனில்’ ரஞ்சனை கதாநாயகன் ஆக்கினார். படம் எம்.ஜி.ஆர் படம் போலவே இருந்தது. பெரிய வெற்றியும் பெற்றது.

எம்.ஜி.ஆர் ரசிகர்களும் ரஞ்சனின் ரசிகர்களும் தம்முள் மோதிக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு சமமான ஒரு போட்டியாளர் வந்துவிட்டதான சூழ்நிலை உருவானது. எம்.ஜி.ஆர் உடனே தனது ‘நாடோடிமன்னன்’ படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கினார். பாதிப் படத்தை வண்ணப்படமாகவும் எடுத்தார். 1958-ல் வெளிவந்த நாடோடிமன்னனில் எம்.ஜி.ஆரை ரசித்த ரசிகர்கள் அதன்பின்பு ரஞ்சனை ரசிக்கவில்லை. அடுத்த ஆண்டு (1959) வெளிவந்த ராஜாமலையசிம்மனும், மின்னல் வீரனும் ரஞ்சனுக்கு தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. 1960-ல் வெளிவந்த ‘கேப்டன்’ ரஞ்சனும் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. படங்கள் ஓடாததால் அவர் தன் மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் போய்த் தங்கிவிட்டார். இப்போது தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர் தனிச்செல்வாக்கு பெற்ற உச்ச நட்சத்திரம் ஆனார். சிலருடைய மரணமும் சிலருடைய தோல்வியும் கூட எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தன.

Richardsof
13th February 2018, 06:51 PM
மீண்டும் மீண்டும் எம்ஜிஆர்...

—–சோழ. நாகராஜன்—————
பழையகாலத்துத் தமிழ் சினிமாக்களை இப்போது மீண்டும் பார்க்கவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி இணையம்தான் என்றாகிப்போன காலம் இது. யூடியூபில் மட்டுமே பழைய படங்களைக் காண இயலும் என்கிற நிலை தோன்றி அநேக காலம் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்த கதி.

உலகமெங்கும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை மங்கச் செய்திருக்கிற டிவிடி வருகை மற்றும் பரவலாகிவிட்ட இணையதளப் பயன்பாடு போன்றவை சினிமாக்களின் திரையரங்கத் திரையிடல்களுக்குப் பெரும் சவால்களாகியிருக்கின்றன. முதல்முறை வெளியீடுகளுக்குக்கூட வசூல் உத்தரவாதமற்ற நிலைமை உருவாகியிருக்கும் இன்றைய காலத்திலும் தமிழில் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் திரையரங்குகளில் திரையிடல் வாய்ப்பையும் ரசிகர்களின் அமோக ஆதரவினையும் பெற்றிருப்பவை எம்ஜிஆர் படங்கள் என்றால் அது மிகையல்ல.

. எம்ஜிஆர் நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ஒருசில படங்கள் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிடப்பட்டு ஒரு கலக்குக் கலக்கியது பல திரையரங்குகளில்.

புதிதாகத் தயாரிக்கப்படும் படங்களுக்குக்கூடக் கிடைக்காத பெரும் வரவேற்பைக் காலம்தோறும் எம்ஜிஆர் படங்கள் பெற்றுவருவதை உள்ளபடியே ஆய்வுக்குட்படுத்தினால் இங்கே எத்தனை ரசனை மாற்றங்கள் வந்தபோதிலும் எம்ஜிஆர் படங்களுக்கான வரவேற்பினை அவற்றால் ஒன்றும் செய்துவிட இயலவில்லை என்பதற்கான அடிப்படைகளை அறிந்துகொள்ளவும் இயலும். இந்தச் சூழலில் இதோ மற்றுமொரு எம்ஜிஆர் சினிமா 48 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, 5.1 ஒலி நுட்ப அமைப்புடன், சினிமாஸ்கோப் திரைப்படமாக வெளிவரத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப்படத்தில் மறைந்த ஜெயலலிதாவும், லட்சுமியும் அவருக்கு ஜோடிகள். அவர்களுடன் அசோகன், வி.கே.ராமசாமி, சோ போன்றோரும் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை.

ப.நீலகண்டன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 1970ல் இந்தப் படம் முதன்முதலில் வெளியானபோதே மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. சென்னையில் மட்டும் அது திரையிடப்பட்ட அரங்குகளில் தொடர்ந்து அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என். கனகசபை தயாரிப்பில் உருவான இந்த மாட்டுக்கார வேலன் படத்தின் டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட்ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறாராம்.

orodizli
15th February 2018, 10:33 PM
மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" தற்போது தஞ்சை- ராணி பாரடைஸ் A/C Dts அரங்கில் வெற்றி கரமாக நடை பெறுகிறது, அடுத்த மகத்தான டிஜிட்டல் வெளியீடுகள் "மாட்டுக்கார வேலன்", "இதயக்கனி"👌👍

orodizli
17th February 2018, 08:09 PM
16-02-2018 @Sunlife channel telecasted Makkalthilagam's "Navarathinam" & Today 17-02-2018 @ Mursasu channel Puratchi Nadigar's "Neethikku thalai vanangu" Showing...

orodizli
17th February 2018, 08:14 PM
சென்னையில் இணைந்த மூன்றாவது வாரமாக பொன் மன செம்மல் "எங்க வீட்டுப் பிள்ளை" வெற்றி நடை போடுகிறார்...

orodizli
17th February 2018, 08:25 PM
அள்ள, அள்ள குறையாத என்றும் அமுத சுரபிகள்(மக்கள் திலகம் காவியங்கள்) ஒன்றான "ஓளி விளக்கு" மீண்டும், மீண்டும் சென்னை - மகாலட்சுமி அரங்கில் தற்போது காட்சி தரிசனம் அளிக்கிறார்...

orodizli
18th February 2018, 10:35 PM
மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" சென்னை- மகாலக்ஸ்மி அரங்கு திரையிட ரூபாய் ஐம்பதாயிரங்களுக்கு மேலே ஒப்பந்த பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல், இப்போது வேறெந்த நடிகர் படங்களுக்கு இந்தளவு சந்தை மதிப்பு (Market Worth) இருக்குமா?! எவ்வளவு காலம் கடந்தாலும் புரட்சி நடிகரின் மங்காத சக்தியே மகத்தான சக்தி...

orodizli
19th February 2018, 06:44 PM
கடந்த வெள்ளி முதல் திருச்சி- முருகன் dts தினசரி 3 காட்சிகள் மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" வசூல் அருமை.. நேற்று மாலை காட்சியில் ரசிகர்கள் ஆராவாரங்கள் சூப்பர்... விரைவில் மீண்டும் தஞ்சை, குடந்தை, கரூர், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய தளங்களில் திரையீடு காண இருக்கிறார்...

orodizli
19th February 2018, 06:57 PM
சென்னை - மகா லட்சுமி dts குறுகிய இடைவெளியில் திரை காணும் திரையுலக சக்ரவர்த்தி "ஓளி விளக்கு" மிக சாதாரண பிரிண்ட் 3 நாட்களில் சர்வ சாதாரணமாக ஐம்பதாயிரம் ரூபாய்களை கடந்து அதிரி புதிரி சாதனை வசூலை படைத்து கொண்டிருப்பது அற்புதமான பொன் விழா (1968- 2018) 👍👌💐 மற்ற நடிகர்கள் நினைத்து பார்க்க இயலுமா? முடியுமா?

orodizli
20th February 2018, 08:51 PM
மக்கள் திலகம் வழங்கும் காவியம் "புதிய பூமி" தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகிறது... மற்றும் ... திருநெல்வேலி- அருணகிரி dts புரட்சி நடிகர்... புரட்சி தலைவராக உயர்வு பெற அடிகோலிய "நம்நாடு" காவியம் வெற்றி நடை போடுகிறது. தகவல் உதவி திரு esvee சார்...

orodizli
21st February 2018, 10:17 PM
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அபூர்வ பிறவி என்றும் திரையுலக, அரசியலுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் அவர் தம் இணையே இல்லா புகழுடன் கலந்தே இருந்து கொண்டிருக்கும் வாழ்வினை பார்த்து ஏங்கி கொண்டிருக்கும் சிலர் அடிக்கும் கூத்துக்கள் இனி தொடர்ந்து வரிசையாக நடக்கும் போல.....☺

orodizli
22nd February 2018, 06:14 AM
இப்போது மக்கள் திலகம் அவர்களின் 125 காவியத்தின் பெயரை தூக்கி கொண்டு காட்சிகள் அரங்கேறுகிறது, இதற்கு மற்ற நடிகர்கள் ஆசியோ முன் மாதிரியோ தேவை படுகிறதா? புலியை(சிங்கத்தை) பார்த்து பூனை(எலி) சூடு போட்ட கதையாக ஆகாமல் இருந்தால் சரி😊

Richardsof
22nd February 2018, 06:29 PM
அரசியலில் இறங்கியுள்ள நடிகர்கள் ஒரு முறை கடந்த கால அரசியல் மற்றும் தேர்தல் களங்களை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும்
இன்று அரசியலில் இருக்கும் நடிகர்களின் பரிதாப நிலைமைகளை . எண்ணிப்பார்க்க வேண்டும் .
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் .

orodizli
22nd February 2018, 09:08 PM
அரசியலில் இறங்கியுள்ள நடிகர்கள் ஒரு முறை கடந்த கால அரசியல் மற்றும் தேர்தல் களங்களை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும்
இன்று அரசியலில் இருக்கும் நடிகர்களின் பரிதாப நிலைமைகளை . எண்ணிப்பார்க்க வேண்டும் .
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் .

இது வரை இறந்த, இருக்கும் திரை உலகை சேர்ந்தவர்களை நடந்த, நிகழவிருக்கும் செயல் முறைகளை யோசிக்காது திட்டம் போடுகின்றனர் காற்றில் கோடு போடும் கும்பல்... எனதான் கூற வேண்டியுள்ளது , இவர்கள் யாரும் மக்கள் திலகம் எனும் மஹா சமுத்திரத்தின் ஆழம், அகலம், நீளம், உயரம் என எந்தவொரு அளவும் அறியா அப்பாவிகள்...

orodizli
23rd February 2018, 06:21 AM
சர்வதேச திரைபடங்களில் மறு வெளியீடுகளின் சக்ரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "ஆயிரத்தில் ஒருவன்" 23-02-2018 இன்று முதல் சென்னை-மஹாலக்ஸ்மி, நெல்லை-கணேஷ், அம்பாசமுத்திரம்-கல்யாணிஅரங்குகளிலும், "எங்க வீட்டுப் பிள்ளை" மதுரை- சென்ட்ரல் அரங்கிலும் திரையில் தரிசனம்...

Richardsof
23rd February 2018, 06:40 PM
ஷாரூக்கான் இன்று செய்வதை எம்ஜிஆர் அன்றே செய்துவிட்டார்!


‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்… அது முடிந்தப் பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என் பாடி அசத்தியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர் கடமையை குறிப்பிட்டு சொன்னாலும் அவரது பெயர் மூன்று எழுத்தில் இருப்பதால் அவ்வாறே ரசிகர்களால் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. இவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் தமிழக மக்களின் இதயங்களில் மறையாது வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 1968ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் நடித்த ‘தேர்த்திருவிழா’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்திருந்தார். அதில் அவரே நடிகராகவும் அவருக்கு அவரே ரசிகராகவும் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பலகாட்சிகளில் தான் ஒரு எம்ஜிஆர் ரசிகர் என்று அவரே கூறுவதாக காட்சிகள் இருக்கும்.

இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 50 வருடங்களை கடந்து விட்டது. ஆனால் இப்படத்தை போன்ற ஒரு படம் பாலிவுட்டில் தயாராகியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஃபேன்’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் ஷாருக்கான் இருவேடங்களில் நடித்துள்ளார். அவரும் அவருக்கு ரசிகராக அவரே நடித்துள்ளதால் இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இதை நம் புரட்சித்தலைவர் 50 வருடங்களுக்கு முன்பே செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Richardsof
23rd February 2018, 06:48 PM
தேர்த்திருவிழா
23.2.1968

மக்கள் திலகம் அவர்கள் 1963/1966 ஆண்டை போலவே 1968 பொங்கலுக்கு முன் ரகசிய போலீஸ் 115என்ற பிரமாண்ட வெற்றி படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தார் ..6 வார இடை வெளிக்கு பின்னர் தேவரின் தேர்த்திருவிழா படம் வெளியானது . இனிமையான பாடல்கள் - பொழுது போக்கு
படமாக வந்தது . மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து .
தேர்த்திருவிழா வெளிவந்து மூன்று வார இடைவெளியில் குடியிருந்த கோயில் படம் வந்துமாபெரும் வெற்றி சித்திரமாக வசூலில் முதலிடம் பெற்ற படமாக இருந்தது .

ரகசிய போலீஸ் 115-குடியிருந்த கோயில் இரண்டு மிகப்பெரிய ஹிட் படங்களுக்கு மத்தியில் தேர்த்திருவிழாஒரு ரசனையான -சிறந்த படமாக ரசிகர்களுக்குவிருந்தாக அமைந்தது .

Richardsof
23rd February 2018, 07:00 PM
தமிழ் நாடு சட்ட சபை மன்றத்தில் புரட்சி தலைவர் mgr., அவர்கள்1980-ஆம் வருடம் தமிழ் நாடு முதல்-அமைச்சராக சபையில் வீற்றிந்தபொழுது நிதி-அமைச்சர் திரு நாவலர் நெடுநசெழியன் அவர்கள் ஒரு புள்ளிவிவரம் அளிதத்தாவது,; இன்றைய திரைஉலகில் தெரிந்த முகம், தெரியாத முகம், புரிந்த முகம், புரியாத முகம், அறிந்த முகம், அறியாத முகம், போயிட்டு வந்த முகம், வந்திட்டு போன முகம் --- என்ற ரீதியில் உள்ள நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் 700- கும் குறைவான திரைகளில் ஓடும்போது நம் புரட்சிதலைவர் இப்பொழுது திரை உலகை விட்டு விலகிய பொழுதும் அவரின் பழைய திரைப்படங்கள் 900 -கும் அதிகமான திரை அரங்கங்களில் மக்களின் பேதாரவோடு வெற்றிநடை போடுகிறது - என சபை உறுப்பினர்களின் பலத்த கர கோஷங்களுடன் விளக்கம் அளித்தார்...அப்பொழுது இந்த செய்தி எல்லா நாளிதழ்களிலும் வெளியாகியது...

orodizli
24th February 2018, 10:39 AM
1980 ஆம் ஆண்டுகளில் மக்கள் திலகம் காவியங்களின் திரையரங்குகள் திரையீடுகள் எண்ணிக்கை மாபெரும் அளவான 1100 க்கும் மேலான அளவீடுகள் ஆகும்...

oygateedat
24th February 2018, 06:19 PM
https://s13.postimg.org/6ql7atdg7/1519193867152.jpg (https://postimg.org/image/612eygcwj/)

oygateedat
24th February 2018, 06:23 PM
https://s13.postimg.org/bdr9cjy87/1518971586264.jpg (https://postimg.org/image/rbzz2osg3/)

oygateedat
24th February 2018, 06:26 PM
https://s13.postimg.org/7u5bmylaf/1518109137173.jpg (https://postimg.org/image/igz4sdtfn/)

oygateedat
24th February 2018, 07:39 PM
https://s10.postimg.org/vxszjva6h/IMG_8022.jpg (https://postimg.org/image/v8a77i9mt/)

orodizli
24th February 2018, 10:09 PM
மறு வெளியீட்டு காவியங்களின் இலக்கணம் வகுத்த ஒரே கலையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் "குடியிருந்த கோயில்" தற்போது சென்னை- ஸ்ரீநிவாசா dts இல் திரையிட்டுள்ளது...

Gambler_whify
25th February 2018, 09:01 PM
நடிகை சிறீதேவி மக்கள் தலைவருடன் நம்நாடு படத்தில் நடித்திருக்கிறார். புரட்சித் தலவை ரை சித்தாப்பா என்று மழலை குரலில் சொல்லுவார்.

சங்கே முழுங்கு பட்டத்திலும் சீறிதேவி குழந்தையாக நடித்து இருக்கிறார். ஆனல் புரட்சி்த் தலவரோடு சேர்ந்து காட்சி இல்ைல. கொஞ்ச நேரம் மட்டுமே வருவார்.

மாரடப்பில் இறந்துபோன நடிகை சிறீதேவிக்கு அனுதாபத்துடன் வருந்துகிறோம்.

Gambler_whify
25th February 2018, 09:12 PM
https://s13.postimg.org/6ql7atdg7/1519193867152.jpg (https://postimg.org/image/612eygcwj/)

முதல்வர் பதவியிேலே புரட்சித் தலவர் இருந்தபோது ஒரு இஞ்ச் நிலம் கூட வாங்கவில்லை.

ராமாவாரம் தோட்டம், சத்தியா ஸ்டூடியோ, ராயப்பேட்ட கட்சி ஆபீஸ், வட பழனி ஸ்கூல் இுடம், நினைவு இல்லம் இருக்கும் இுடம் எல்லாமே புரட்சித் தலைவர் நடிச்ச காலத்தில் வாங்கியது. சினிமாவில் நடித்து உழைத்த பணத்தில் வாங்கினார். ஊழல் செய்து எந்த சொத்தும் வாங்கவில்லை.

பதவியப் பயன்படுத்தி சொத்து வாங்காத தலைவர் புரச்ட்சித் தலைவர். தான் உழைச்சி சம்பாதித்த ராமாவராம் தோட்டம் ஊமை ெசவிட்டுக் குழந்ைதைகள் பள்ளி, வட பழனி பள்ளி, ராயப்பேட்ட வீட்டை கட்சி ஆபிஸ் என்று தன் உழைப்பில் வந்த சொத்துக்களை தர்மத்துக்கும் கட்சிக்கும் எழுதி ெவச்ச ஒரே தலைவர் புரட்சித் தலைவர்.

Gambler_whify
25th February 2018, 09:16 PM
மாம்பலத்தில் வாங்கிய வீட்டயும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் ரசிகர்கள், தொண்டர்களுக்காக நினவு இல்லமாக மாற்ற உயில் எழுதி ைவத்து சென்ற தொண்டர்களின் தலைவன் புரட்சித் தலைவன்.

புரட்சித் தலைவர் வாழ்க.

Gambler_whify
25th February 2018, 09:22 PM
இப்போது மக்கள் திலகம் அவர்களின் 125 காவியத்தின் பெயரை தூக்கி கொண்டு காட்சிகள் அரங்கேறுகிறது, இதற்கு மற்ற நடிகர்கள் ஆசியோ முன் மாதிரியோ தேவை படுகிறதா? புலியை(சிங்கத்தை) பார்த்து பூனை(எலி) சூடு போட்ட கதையாக ஆகாமல் இருந்தால் சரி😊


சுகாராம் அய்யா எதுக்கு ஒளிவு மறவு. தயிரியமாக சொல்லுங்கள்.

ரஜனி காந்தோ கமலகாசனோ புரட்சித் தலவர் ஆக முடியாது.

இவர்கள் ஒருதடவை ஆட்சியை பிடிக்கிறதே முடியாது. சத்தியமா 3 முறை தொடர்ந்து இவர்களால் வெற்றி பெற்று ஆட்சி பிடிக்க முடியது.

இவர்கள் காரைக்குடி பக்கம் போனால் ஆச்சியை பிடிக்கலாம்.

oygateedat
25th February 2018, 09:23 PM
https://s10.postimg.org/ng6yvr8p5/1519573726748.jpg (https://postimg.org/image/rckarqtol/)

Gambler_whify
25th February 2018, 09:27 PM
நன்றி ரவிச்சந்திரன்,

கமலகாசன் நல்ல நடிகர்தான். ஆனால் மூன்றம் பிறை படத்தில் கமலகாசனைவிட சிறீதேவி பயித்தியம் மாதிரி நன்றாக நடித்திருந்தார்.

அந்த படத்தின் விருது விழாவில் சிறீதேவியின் நடிப்பை புரட்சித் தலவர் குறிப்பிட்டு பாராட்டினார். சிறீதேவிக்கு புரட்சித் தலைவர் விருது வழங்கியபோதுதான் எடுத்தது நீங்கள் போட்டிருக்கும் படம். நன்றி.

oygateedat
25th February 2018, 09:30 PM
https://s10.postimg.org/gr0ffkv15/IMG_8033.jpg (https://postimages.org/)

கோவை டிலைட் திரையரங்கில் மக்கள் திலகத்தின் பக்தர்கள்


Courtesy - VKM, Coimbatore

orodizli
25th February 2018, 10:06 PM
வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "குடியிருந்த கோயில்" தற்போது கோவை- டிலைட் அரங்கில் வெற்றி நடை காண்கிறது...

Richardsof
26th February 2018, 04:00 PM
சங்கே முழங்கு & ராமன் தேடிய சீதை

நேற்று விடுமுறை நாள் என்பதால் நீண்ட நாடகளுக்கு பிறகு சன் லைப் தொலைக்காட்சியில் எம்ஜிஆரின் இரண்டு படங்களையும் முழுவதுமாக கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது . சன் லைப் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் மட்டும் மிகுந்த எரிச்சலை தந்தது ,

ராமன் தேடிய சீதை

1972ல் வந்த படம் .பிரிண்ட் அட்டகாசமாக இருந்தது .புதுப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது .இந்த படத்தில் எம்ஜிஆரின் எனெர்ஜி சூப்பர் ,
எம்ஜிஆரின் உடைகள் மிகவும் பிரமாதம் . படம் முழுவதும் ஜாலியாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார் . இனிமையான பாடல்கள் குறிப்பாக என் உள்ளம் உந்தன் ஆராதனை மற்றும் நல்லது கண்ணே எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ..
சண்டை காட்சிகள் பற்றி கேட்கவே வேண்டாம் . குறிப்பாக மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் வர்ணிக்க வார்த்தை இல்லை .டைட்டில் காட்சி மிகவும் இனிமையாக இருந்தது .காஷ்மீர் காட்சிகள் மற்றும் ஒகேனக்கல் இயற்க்கை காட்சிகள் கண்களுக்கு விருந்து .

எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி பொருத்தம் ஏ ஒன் .எல்லா வயது ரசிகர்களும் என்றென்றும் விரும்பி பார்க்கும் படம் ராமன் தேடிய சீதை .


சங்கே முழங்கு


எம்ஜிஆரின் சிறந்த நடிப்பில் இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் வசனத்தில் படம் முழுவதும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தது .
கண்ணதாசனின் பாடல்கள் , மெல்லிசை மன்னரின் இசையில் எல்லா பாடல் காட்சிகளும் சூப்பர் ஹிட் ஹெலன் நடனத்தில் இடம் பெற்ற
பின்னணி இசை அமர்க்களம் . சிலர் குடிப்பது போலே நடிப்பார் -பாடலில் எம்ஜிஆர் - ஹெலன் நடன அசைவுகள் மற்றும் இசை மிகவும் அற்புதம்
சீக்கியர் வேடத்தில் காவல் அதிகாரியாக எம்ஜிஆரின் உடை மற்றும் தோற்றம் கட்சிதமாக இருந்தது
கோர்ட் காட்சிகளில் வி.கே . ராமசாமி மற்றும் அசோகனை எம்ஜிஆர் மடக்கும் விதம் சூப்பர் ..


எம்ஜிஆரின் இரண்டு வண்ணப்படங்ளை முழு திருப்தியுடன் பார்த்த மனநிறைவு கிடைத்தது . 46 ஆண்டுகள் முன்பு வந்த படம் போல் நினைக்க முடியவில்லை .

வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இப்படங்களை பார்க்க விரும்புகிறேன் .

சன் லைப் தொலைக்காட்சிக்கு நன்றி .
.

Richardsof
26th February 2018, 07:11 PM
திரை உலகில் எம்ஜிஆர் செய்தது என்ன ?
http://i67.tinypic.com/91070l.jpg

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்தது .
ரசிகர்களை முழுவதுமாக நம்பியது
http://i64.tinypic.com/8x3pf8.jpg


எம்ஜிஆர் அவர்கள் ஏற்று கொண்ட கதையின் தன்மைக்கு ஏற்றவாறு முழு ஈடுபாடுடன் நடித்தது .
தனக்கு பொருத்தமில்லாத கதைகளில் நடிக்க்க மறுத்தது .
மக்கள் ரசனைகளை அறிந்தது அதற்கேற்றவாறு காட்சிகளை அமைத்தது .
தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கைகளை படத்தின் மூலம் பிரகடனம் செய்தது
மன்னராட்சி காலத்தை தன்னுடைய வேடத்தினால் மக்கள் கண் முன் நிறுத்தியது
http://i68.tinypic.com/33f5508.jpg
.
வாள்வீச்சு , சிலம்பம் , குத்துசண்டை , கம்பு சண்டை வீரதீர சண்டைக்காட்சிகளில் நடித்தது
மக்கள் மனதை கொள்ளை அடித்த இனிய பாடல்களை வழங்கியது
வெண்கலக்குரலில் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது
எல்லா படங்களிலும் நீதி போதனைகளை வழங்கியது
யார் மனதையும் புண்படுத்தாத வசனங்களை பேசியது
சமூக படங்களில் திறமையான நடிப்பினால் வெற்றிக்கொடி நாட்டியது
நேர்மறையான வசனங்களை படங்களில் காட்டியது
திரையில் சொன்னதை ..... நிஜ வாழ்க்கையில் நடத்தி காட்டியது
http://i66.tinypic.com/2463lg0.jpg

1947லிருந்து இன்று 2018 வரை

திரைப்பட தயாரிப்பாளர்களை
திரைப்பட விநியோகஸ்தர்களை
திரை அரங்கு உரிமையாளர்களை

வாழ வைத்தார் .
வாழ வைக்கிறார்
வாழ வைப்பார் .

உலகில் எம்ஜிஆர் என்ற தனிப்பட்ட நடிகரால் மட்டுமே இந்த புகழை சாதிக்க முடிந்தது
2018 இந்த வாரம் .
1965ல் வெளிவந்த எங்கவீட்டு பிள்ளை - மதுரை மண்ணில் நேற்று சென்ட்ரல் அரங்கில் அரங்கு நிறைந்தது .
1965ல் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் சென்னை மஹாலக்ஷ்மி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெற்றி நடை .
1968ல் வெளிவந்த குடியிருந்த கோயில் சென்னை ஸ்ரீநிவாஸா மற்றும் கோவை டிலைட் வெற்றி நடை
சமூக ஊடகங்களில் எம்ஜிஆரின் பட்டி மன்றங்கள் - நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடிய வண்ணம் உள்ளது .
பத்திரிகைகளில் எம்ஜிஆர் பற்றிய பல் வேறு தொகுப்புகள் வந்த வண்ணம் உள்ளது .

எம்ஜிஆர் ரசிகர்கள் அன்றும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார்கள்
இன்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆரின் சாதனைகளை முன் நிறுத்தி மகிழ்கிறார்கள் .
நாளையும் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் .. கொண்டாடுவோம் .. மகிழ்வோம் .

orodizli
26th February 2018, 10:25 PM
நண்பர் திரு மஸ்தான் சாஹிப் , எதையும் ஒழிக்க, மறைக்க தேவையில்லை... மயிலிரகால் வருடி பதிவு போடுகிறோம், அவ்வளவே, திரு வினோத் சாரின் மக்கள் திலகம் பற்றிய எழுத்து நடை சூப்பர்...

oygateedat
27th February 2018, 12:05 AM
நமது
பாசத்துக்குரிய
நண்பரும்
நமது
திரியின்
ஆஸ்தான
பதிவாளருமான
திரு லோகநாதன்
அவர்களின்
அன்பு
மகன்
k l சந்தோஷ்
அவர்களின்
திருமண
வரவேற்பு
இன்று
சென்னையில்
நடைபெற்றது
மக்கள்
திலகத்தின்
ஏராளமான
பக்தர்கள்
கலந்து
கொண்டு
மணமக்களை
வாழ்த்தினர்.
எனக்கு
அழைப்பிதழ்
அனுப்பி
அலைபேசியில்
பேசினார்.
எனது
நெருங்கிய
உறவினர்
இல்ல
திருமண
விழா
பொள்ளாச்சியில்
நடைபெற்றது.
அதில்
கலந்து
கொள்ளவேண்டியிருந்ததால்
சென்னை
செல்லவில்லை.
மணமக்கள்
மக்கள்
திலகத்தின்
நல்லாசியோடு
வாழ்க
பல்லாண்டு
என
வாழ்த்தி
மகிழும்

- எஸ் ரவிச்சந்திரன்
திருப்பூர்

oygateedat
27th February 2018, 09:38 PM
https://s18.postimg.org/59hmhdv7t/IMG_8055.jpg (https://postimages.org/)

orodizli
27th February 2018, 10:49 PM
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குப் போட்டி என்றால் மிகவும் பிடிக்கும்...
போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார். நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை.

படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார். பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது. விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடும்.

‘உரிமைக்குரல்’ படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. ‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது. படத்தின் நடன இயக்குனர் சலீம். அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.பாடல் காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டது..!

பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்.

‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார். பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்.

ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார். விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் ஸ்ரீதரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் ஸ்ரீதருக்கு பயம் வந்து விட்டது.

‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது..?
அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே..?’ என்று ஸ்ரீதர் கவலை அடைந்தார். பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர். ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார். பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் ஸ்ரீதர் ஜாடை காண்பித்தார். எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார். எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார். எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு ஸ்ரீதரை நெகிழ வைத்தது...!!! நண்பர் விஜய்.....

orodizli
27th February 2018, 10:59 PM
மக்கள் திலகம் திரை காவியங்கள் திறனாய்வு கழகம் சார்பில் கடந்த 25-02-2018 அன்று திரையிட்ட எப்போதும் பிரகாசிக்கும் "மலை கள்ளன்" அறிவிப்பு வெளியிட்ட சில மணிகளிலேயே நிறைய தோழர்கள் மலரும் நினைவுகளோடு கண்டு பூரித்து, அளவுளாவி இருந்திருக்கின்றனர், தொடரட்டும் இந்த சேவைகள்...

orodizli
28th February 2018, 11:08 PM
மக்கள் திலகம், தான் தான் வசூலிலும் திலகம் என்பதை மீண்டும் சாதித்திருக்கிறார்கள், மதுரை மாநகரில் சென்ட்ரல் அரங்கில் 3 நாட்களில் ரூபாய் ஒரு லட்சத்தை கடந்திருக்கிறது "எங்க வீட்டுப் பிள்ளை" என நண்பர்கள் இனிய தகவல் கூறுவது மிக்க மகிழ்ச்சி...

orodizli
28th February 2018, 11:19 PM
மதுரையம்பதியில் கடந்த வாரத்திற்கு முன் சென்ட்ரல் அரங்கில் "நேற்று இன்று நாளை" புரட்சி காவியம் ரூபாய் 122000.00 வசூலை அள்ளி குவித்திருக்கிறது மக்கள் திலகம் காவியங்களே சரித்திரம் படைத்து கொண்டேயிருக்கிறது என்ற மன மகிழ்ச்சியும் நம்மை ஆட்கொள்கிறது தோழர்களே...எந்த நடிகர் படங்களும் நினைத்து பார்க்க முடியாது👍👌

orodizli
1st March 2018, 06:00 AM
பொன் மன செம்மலின் பக்தர் திரு லோகநாதன் அவர்களின் புதல்வர் சந்தோஷ் புது மண தம்பதியருக்கு நமது திரி உறுப்பினர்கள் சார்பாகவும், மக்கள் திலகம் ஆசிர்வாதமும் பெற்று மணமக்கள் "இன்று போல் என்றும் வாழ்க", "பல்லாண்டு வாழ்க" என வாழ்த்துவோம்...

orodizli
1st March 2018, 05:14 PM
நடிகர் ரஜினிகாந்தின் முதல் அரசியல் கூட்டம் வரும் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அப்போது எம்.ஜி.ஆரின் வெண்கல திருவுருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.

அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், முதல் முறையாக அரசியல் மேடையேற உள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலை கழக வளாகத்தில் வரும் 5ம் தேதி எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.


எம்.ஜி.ஆர் சிலை ஏ.சி.சண்முகம். அவருடைய பல்கலை கழகத்தில் நடைபெறும் இந்த விழாவில் மொரிஷியஸ் துணை ஜனாதிபதி கலந்து கொள்கிறார். இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் எம்ஜிஆருடன் நடித்த நடிகைகளும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ள இருப்பதால், ரஜினிக்கு எப்படி வரவேற்பு கொடுப்பது என்பது குறித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ரஜினி, அரசியல் தொடர்பான முக்கியமானbb விஷயங்களை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது... தகவல் உதவி மக்கள் திலகம் பக்தர் திரு esvee சார்...

orodizli
1st March 2018, 11:09 PM
திருநெல்வேலி - ரத்னா நாளை முதல் புரட்சி தலைவரின் "எங்க வீட்டுப் பிள்ளை" மற்றும் தூத்துக்குடி- ராஜ்,

நாகர்கோயில் -கார்திகேயன் , தென்காசி- பத்மம் ஆகிய dts அரங்குகளில் வெளியாகிறது & மதுரை- அரவிந்த் dts...

orodizli
1st March 2018, 11:17 PM
திருநெல்வேலி - ரத்னா நாளை முதல் புரட்சி தலைவரின் "எங்க வீட்டுப் பிள்ளை" மற்றும் தூத்துக்குடி- ராஜ்,

நாகர்கோயில் -கார்திகேயன் , தென்காசி- பத்மம் ஆகிய dts அரங்குகளில் வெளியாகிறது & மதுரை- அரவிந்த் dts...

fidowag
1st March 2018, 11:30 PM
14/02/18 - மாலைமலர்
http://i65.tinypic.com/mmv3fs.jpg

fidowag
1st March 2018, 11:31 PM
27/02/18 - மாலை முரசு
http://i65.tinypic.com/2s01ruc.jpg

fidowag
1st March 2018, 11:32 PM
27/02/18 - மாலை சுடர்
http://i65.tinypic.com/29glf2s.jpg

fidowag
1st March 2018, 11:33 PM
01/03/18 - மாலை மலர்
http://i67.tinypic.com/9sfhu9.jpg

fidowag
1st March 2018, 11:43 PM
01/03/18 - தின செய்தி
http://i65.tinypic.com/6nz8gk.jpg

fidowag
1st March 2018, 11:45 PM
01/03/18 - தின இதழ்
http://i67.tinypic.com/35au2i1.jpg

fidowag
1st March 2018, 11:46 PM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு.ஆர். லோகநாதன் அவர்களின் மூத்த குமாரனின் திருமண அழைப்பிதழின் தோற்றம்
http://i68.tinypic.com/2i9mqdz.jpg

fidowag
2nd March 2018, 12:00 AM
http://i64.tinypic.com/28ri1c4.jpg

fidowag
2nd March 2018, 12:01 AM
http://i68.tinypic.com/29mar8i.jpg

fidowag
2nd March 2018, 12:02 AM
http://i68.tinypic.com/s4z41e.jpg

fidowag
2nd March 2018, 12:03 AM
http://i63.tinypic.com/2u3uvd4.jpg

fidowag
2nd March 2018, 12:03 AM
http://i63.tinypic.com/207xlrb.jpg

fidowag
2nd March 2018, 12:04 AM
http://i66.tinypic.com/169j4ub.jpg

fidowag
2nd March 2018, 12:04 AM
http://i68.tinypic.com/bf2xky.jpg

fidowag
2nd March 2018, 12:22 AM
திருமண மண்டப வாயில் மற்றும் மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களின் தோற்றம்
http://i67.tinypic.com/2vd2xon.jpg

fidowag
2nd March 2018, 12:22 AM
http://i66.tinypic.com/2uyoqrc.jpg

fidowag
2nd March 2018, 12:23 AM
http://i66.tinypic.com/152p7j5.jpg

fidowag
2nd March 2018, 12:24 AM
http://i67.tinypic.com/1zlub2c.jpg

fidowag
2nd March 2018, 12:25 AM
http://i65.tinypic.com/de0k1x.jpg

orodizli
2nd March 2018, 04:18 PM
என்றும் வாழும் மக்கள் திலகம்... மிக குறுகிய இடைவெளியில் இப்போதும் சென்னை உட்பட 33 திரையரங்குகளில் வசூல் சக்ரவர்த்தி அளிக்கும் "அடிமைப்பெண்" டிஜிட்டல் மறு வெளியீட்டு விழா காண்பது எத்தகைய ஓர் சாதனை-சரித்திர நிகழ்வு?! அது மட்டுமா? Nsc ஏரியாவில் "எங்க வீட்டுப் பிள்ளை" சுமார் 20 அரங்குகளில் நடை பெறுகின்றார் எனும் இனிய தகவல் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி... சென்னை - சரவணாவில் "குடியிருந்த கோயில்", மற்றும் கிருஷ்ண வேணியில் "ரிக்க்ஷாக்காரன்" என பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார் நம் புரட்சி நடிகர்...

orodizli
2nd March 2018, 04:28 PM
மீண்டும், மீண்டும் சென்னை- மஹாலக்ஸ்மி அரங்கில் வசூல் பிரளயம் ஏற்படுத்தி இருக்கிறது வசூல் திலகம் வழங்கும் "ஒளி விளக்கு" சுமார் 1,06,000.00 அள்ளி குவிதிருக்கிறார், அது மட்டுமல்லாமல் தொடந்து வெளியாகிய நமது கோடிகளில் ஒருவன் அளிக்கும் "ஆயிரத்தில் ஒருவன்" கிட்டத்தட்ட அதே வசூலை அளித்திருக்கிறார் என்ற தித்திப்பான சேதியும் வந்துள்ளது உள்ளபடியே இரட்டிப்பு சந்தோஷம்...

orodizli
2nd March 2018, 04:36 PM
எட்டாம் வள்ளல் மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" சென்னை-அகஸ்தியாவில் ஏறத்தாழ ரூபாய் 90,000.00 வசூலை அற்புதமாக கண்டிருக்கிறது... மேற்கண்ட "அடிமைப்பெண்" திரையீடு தகவல் தந்த திரு esvee அவர்களுக்கு மிக்க நன்றி...

Richardsof
2nd March 2018, 07:07 PM
1. குடியிருந்த கோயில்

பொன்விழா ஆண்டில் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் திரைப்படம் சென்னை - சரவணா அரங்கில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

2. அடிமைப்பெண்

2017ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் டிஜிட்டல் வெளியீடு 100 திரை அரங்கிற்கு மேல் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது .2018 இந்த மாதம் சென்னை பாரத் , வில்லிவாக்கம் ஏ.ஜி .எஸ் , வேளச்சேரி - லக்ஸ் மற்றும் பரங்கிமலை ஜோதி அரங்குகளிலும் மற்றும் தமிழகமெங்கும் 33 திரை அரங்குகளில் இன்று முதல் வெற்றி பவனி வருகிறது .

3. எங்க வீட்டுப்பிள்ளை

இன்று முதல் தமிழகமெங்கும் 20 நகரங்களில் மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப்பிள்ளை திரைக்கு வந்துள்ளது .


4. ரிக்ஷாகாரன்

சென்னை - கிருஷ்ணவேணி திரை அரங்கில் இன்று முதல் நடைபெறுகிறது .

Richardsof
2nd March 2018, 07:11 PM
" சென்னை அடுத்த வேலப்பன் சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. விழாவில் மொரீஷியஸ் நாட்டு குடியரசு துணைத் தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கலந்துகொண்டு நூற்றாண்டு விழா கட்டடத்தை திறந்துவைக்கப்போகிறார். இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியைத் திறந்துவைக்கப்போகிறார். ரஜினி, எம்.ஜி.ஆரின் வெங்கலச் சிலையைத் திறந்துவைக்கப் போகிறார். அவரின் கையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்...அப்போது பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.ஜி.ஆருடன் நடத்த நடிகர், நடிகைகள், எம்.ஜி.ஆரின் உறவினர்கள்...என்று முக்கியமானவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகளை வழங்கப்போகிறார். அரசியல் வானில் ஜொலிக்கப்போகும் ரஜினிக்கு இந்த விழா ஒரு மகுடமாக இருக்கப்போகிறது " என்றார்.

Richardsof
2nd March 2018, 07:30 PM
அண்ணாவின் கணிப்பு

அறிஞர் அண்ணா அவர்கள், “எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் நமக்கும் ஏற்பட்ட உறவு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்டது அல்ல, சிலர் ஊக்குவித்து வந்தது அல்ல, பாச உணர்வுகளின் பிணைப்பாக ஏற்பட்ட உணர்வு. திமுக கழகம் அவரை இழப்பதோ, அவர் திமு கழகத்தைத் துறப்பதோ நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று எழுதினார்.

‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது, ‘எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணமானதை ஆராயச் சிலர் நினைக்கலாம். அது முடியாது. மயில் தோகைக்கு அழகு தருவது நீல வண்ணமா, பச்சை வண்ணமா, மஞ்சள் வண்ணமா, பொன்னிற வண்ணமா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டால் எப்படி முடியாதோ, அதைப்போலத்தான் எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றிக்குக் காரணங்களை ஆராய முடியாது. அவர் எந்தத் துறையிலும் வெற்றிக்கொடி நாட்டுவார். அவர் ஒரு கதை ஆசிரியராக, ஒரு இயக்குனராக, ஒரு இசை அமைப்பாளராக கலைத்துறையில் எந்தத் துறையில் இருந்தாலும் அவர் வெற்றியை நாட்டுவார். ஏன்? அவர் அரசியல் துறைக்கு வந்தாலும் நிகரற்ற வெற்றியை நாட்டுவார்”

என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள்.

Richardsof
2nd March 2018, 07:44 PM
வாலி MGR பாடல் r

தொட்டால் பூ மலரும்


ரசனையும், ரசிகனும் ; காலமும், காதலும் ; கருத்தும், கருவும் நேர வெள்ளத்தில் சில மாற்றங்கள் பெறுகின்றன. வெள்ளத்தில் நீர் பெருகி ஓடினாலும், அதில் நிற்கும் திட மரங்கள் பல உண்டு. அப்படி பட்ட தமிழ் இசை வெள்ளத்தில், அஸ்திவார தூண்களின் பாடல்களில் ஒன்று. இன்றைக்கு.

இசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லாம் : வாலி + டீ எம் எஸ் + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இதில் மூவரை இந்த ‘மூன்று பத்து இரண்டாயிரம்’ காலத்தில் காலன் வசம் சென்றனர் என்று சொல்வதை விட, கற்பக காலத்துல் கலந்தனர் என்றே கூறலாம். என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம்.ஜி.ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி, (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.

படகோட்டி (1964) திரைபடம். மாணிக்கம் (எம்.ஜி.ஆர்) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி. நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என : பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள். படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.


இசை நால்வர்
எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் “தொட்டால் பூ மலரும்” , எதோ ஒரு சந்த கவிவடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம் (உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்-டுங்கள்) . பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன, அதுவும் நான்கு நான்கு வரிகளில். வாலியின் “சொல் விளையாடல்கள்” மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.

இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை. முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ : மெல்லிசை மன்னர்கள்

இந்த படத்தில் வாலி போல், எம்.ஜி.ஆர் போல், டி எம் எஸ் -சும் ஒரு கதாநாயகன் தான். படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம். புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல். இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம், அத்தனையும் முத்துக்கள். இன்றைய காலகட்டத்தில். இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்….

பாடலின் சிறப்பு இன்னும் உண்டு : காட்சியமைப்பு. நீண்ட நெடும் கடற்கரை; தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல். முக உணர்சிகள் காட்டுவதில், கண் அசைவுகளில் சரோஜா தேவி #ஆஹா தான் ! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என கண் கவரும் வகையிலான பாடல். இறுதியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் #சபாஷ்.

COURTESY NET

fidowag
2nd March 2018, 11:42 PM
தமிழ் இந்து -01/03/18
http://i64.tinypic.com/23qxg1g.jpg

fidowag
2nd March 2018, 11:43 PM
தினத்தந்தி -01/03/18
http://i66.tinypic.com/vzvng3.jpg

fidowag
2nd March 2018, 11:44 PM
தினகரன் -2/03/18
http://i64.tinypic.com/162se0.jpg

fidowag
2nd March 2018, 11:46 PM
தின செய்தி --02/03/18
http://i66.tinypic.com/2a765xi.jpg