PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

sivaa
9th November 2017, 06:47 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23316615_1600725166644816_4195194985106592784_n.jp g?oh=900fd090fd910a6c95e820106bbaee7f&oe=5A9B9F11

sivaa
9th November 2017, 06:59 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23244195_1830657250559826_6369627333727223738_n.jp g?oh=5c945e9d9824961eac9f5d43893ffb15&oe=5A64248A

sivaa
9th November 2017, 07:29 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23167833_1601560573227942_5292996385106592900_n.jp g?oh=8cfdb24ed95750c6d8cf71470e99376c&oe=5A9BCF1F

sivaa
9th November 2017, 07:32 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23415407_1603050519745614_5045636519312682491_o.jp g?oh=c2f027babbc29d0a30fd298c8e6439ab&oe=5AA222E2

sivaa
9th November 2017, 07:44 AM
vaannila vijayakumaran



மண்ணாண்ட மன்னவர் கோட்டையல்ல... நடிப்புலக மன்னர்மன்னனின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் முதல் வெளியீட்டில், சேலம் ஓரியண்டல் தியேட்டரின் அலங்கார முகப்பு....(1959)



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/23244434_390040554765579_1164588055025813412_n.jpg ?oh=e267e24cdca4e76371440e2734dd7cdc&oe=5AA07294

sivaa
9th November 2017, 07:45 AM
vee yaar


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/23376553_1603400343043965_9211089566915739810_n.jp g?oh=9474fa53a286e28f43d77e19e34fd891&oe=5A9A2CE7

sivaa
10th November 2017, 02:15 AM
Murali Srinivas

சிவந்த மண் - 09-11-1969


இன்று சிவந்த மண் வெளியான நாள். படம் வெளியான 1969 நவம்பர் 9-ந் தேதி அன்று மதுரையில் என்னுடைய நேரிடையான அனுபவத்தை ஒரு சில வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். இந்த நாளின் நினைவிற்காக மீண்டும் அந்த பதிவு. இதில் படத்தைப் பற்றிய எந்த விமர்சனமும் இருக்காது. காரணம் நான் முதல் நாள் படம் பார்க்கவில்லை. ஒரு வாரம் கழித்துத்தான் பார்க்க முடிந்தது.
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கி திரிவோம் பறவைகள் போல்

எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள். அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.
நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். பொதுவாக சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம். 8-ம் நம்பரை சினிமாவில் ராசியில்லை என நினைப்பார்கள். கூடுமானவரை படத்தலைப்பில் கூட எழுத்துக்களின் கூட்டு தொகை எட்டு வராமல் இருக்க பெயரை முடிவு செய்யும்போதே கவனம் எடுத்துக் கொள்வார்கள்.. தீபாவளி 8ந் தேதி வந்ததால் ஒரு படம் ஒரு நாள் முன்னதாகவும் அடுத்த படம் ஒரு நாள் பின்னரும் வெளியிடப்பட்டது. பொதுவாக இன்று முதல் விளம்பரம் பார்த்திருப்போம். சிவந்த மண் விளம்பரம் மட்டுமே நாளை முதல் என்று கொடுக்கப்பட்டிருக்கும். காரணம் தீபாவளிக்கு பத்திரிக்கை அலுவலகம் விடுமுறை என்பதனால் அதன் காரணமாக படம் வெளியாகும் நவம்பர் 9ந் தேதி பத்திரிக்கைகள் வெளி வராது என்பதானாலும் முதல் நாள் அதாவது தீபாவளி நாளான நவம்பர் 8ந் தேதி தினசரிகளில் நாளை முதல் என்ற விளம்பரம் வெளியானது.
அன்றைய நாட்களில் எங்களது வீடு நகருக்கு சற்றே ஒதுக்குப்புறமான ஆரப்பாளையம் பகுதியில் இருந்தது.. அங்கே தீபாவளியை கொண்டாடி விட்டு மாலை எனது தாத்தா வீட்டிற்கு (நகரத்தின் மையப் பகுதி) வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள்.
மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம்.
மாலை எங்களது வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மறுநாள் ஸ்கூல் போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்]. அது போன்ற ஒரு கூட்டத்தை நான் வேறு எந்தப் படத்திற்கும் பார்த்ததில்லை. இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது மட்டும் அப்போது தெரிந்து கொள்ள முடிந்தது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அதை தொடர்ந்து வந்த 6 நாட்களிலும் ஸ்கூல் இருந்ததால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது. அதுவும் சித்ராலயா ஆபிஸில் தெரிந்தவர் மூலமாக சொல்லி ஞாயிற்றுக்கிழமை காலைக் காட்சிதான் கிடைத்தது.
ஆயிரம் படம் வரலாம். பிரம்மாண்டமான கூட்டம் என சொல்லலாம். ஆனால் 1969 நவம்பர் 9ம் சரி சிவந்த மண்ணும் சரி பாரத் நடிகர் திலகமும் சரி சரித்திரத்தில் சாதனையாளராக என்றும் நிலைப்பார்கள். எதுவும் எவரும் நெருங்க முடியாத தூரத்தில்.
படம் வெளியானபோது தமிழகமெங்கும் ஒட்டப்பட்ட ஒரிஜினல் போஸ்டர் உங்கள் பார்வைக்கு (நன்றி ராகவேந்தர் சார்). அத்துடன் நாளை முதல் விளம்பரமும் உங்கள் பார்வைக்கு.
மீண்டும் அந்த இனிமையான நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த நவம்பர் 9-ற்கு நன்றி.
அன்புடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s320x320/23316361_10208233905323748_7557635649764492006_n.j pg?oh=fc3bd5f0e3e80dc2e888e2ef097d08f6&oe=5A9C6D3C
(https://www.facebook.com/photo.php?fbid=10208233905323748&set=pcb.555609228123491&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/23319133_10208233905803760_388603476221825933_n.jp g?oh=9b18a9b9e7ba03ad6d920e6aabbe7460&oe=5AA211F5
(https://www.facebook.com/photo.php?fbid=10208233905803760&set=pcb.555609228123491&type=3&ifg=1)

sivaa
10th November 2017, 02:22 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23466994_1831037400521811_8630202539857923890_o.jp g?oh=ce20d01189f80e08b5b07ef030a7117d&oe=5A9A5B67

sivaa
10th November 2017, 02:33 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

191 வது வெற்றிச்சித்திரம்

அண்ணன் ஒரு கோயில் வெளியான நாள் இன்று

அண்ணன் ஒரு கோயில் 10 நவம்பர் 1977
http://royalisai.com/download/albums/Annan%20Oru%20Kovil.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj1u_WKsbLXAhWizIMKHbNRCCEQjRwIBw&url=http%3A%2F%2Froyalisai.com%2FTamil%2FA_To_Z_Mo vies%2FA%2FAnnan_Oru_Kovil.html&psig=AOvVaw1Fernf_59S7q9w77mpzURs&ust=1510347476933119)
https://upload.wikimedia.org/wikipedia/en/c/c8/Annan_Oru_Koyil.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjPj5D8sLLXAhWI0YMKHdauBLYQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FAnnan_ Oru_Koyil&psig=AOvVaw1Fernf_59S7q9w77mpzURs&ust=1510347476933119)

sivaa
10th November 2017, 03:24 AM
Natarajen Pachaiappan ·


1962-ல் சீனப் படையெடுப்பின் போது நடிகர்திலகம் ரூ.40,000/- நிதியளித்தார்.
1965-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது ரூ.1,15,000/- மற்றும் 600 பவுன் தங்கம் அளித்தது மட்டுமல்லாமல் ரூ 17 இலட்சம் வசூல் செய்து கொடுத்தார்.
1999-ல் கார்கில் போரின் போது ரூ.1,00,000/-, யுத்த நிதியாக தாய்நாட்டிற்கு வழங்கியுள்ளார்.
1965-ல், இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது, போரில் காயமுற்ற நமது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிவாஜி அவர்கள், தமிழகத்தின் பல முன்னணிக் கலைஞர்களை போர்முனைக்கே அழைத்துச் சென்று, பல கலைநிகழ்ச்சிகள் நடத்தி, வீரர்களை மகிழ்வித்தார்.
1965 நவம்பர் மாதம். சிவாஜி கணேசன் தலைமையில் தமிழக நட்சத்திரங்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்து. பாகிஸ்தான் போரில் எல்லையில் படுகாயமுற்ற ராணுவ வீரர்களின் மத்தியில் ஆறுதலாக ஆடிப்பாடி, உற்சாகப்படுத்திவிட்டு வந்தவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு.
'யாராவது ஏதாவது பாடுங்களேன்...’ என்றார் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். சிவாஜி, 'ஆர்மோனியம் இல்லாம முடியாதே...’ எனவும், ஜனாதிபதிக்குச் சுடச்சுட கோபம் வந்துவிட்டது.
‘பத்தாயிரம் பேருக்கு மேல் இங்கே வேலை செய்கிறீர்கள். ஒருவருக்குக்கூட சங்கீத ஞானமில்லையோ...’
அறிவார்ந்த அரிமாவின் அதட்டலில் கலைஞர்கள் கலங்கினர். ஏ.எல்.ராகவன், 'ஆர்மோனியம் இல்லாமலே பாடறேன் சார்...' என்று சிந்து நதியின் இசை நிலவினிலே என முந்திக்கொண்டார். பி.சுசீலா, 'அத்தை மடி மெத்தையடி' பாட, கச்சேரி களை கட்டியது. 1965-ன் சிறந்த புதுமுகம் ஜெயலலிதா. ஜனாதிபதி முன்பாக ஆடினார். பி.எஸ்.வீரப்பா கணக்காக, மேதகு ஜனாதிபதி, கலைச் செல்விக்கு சபாஷ் போட்டார்.
நடிகர் திலகம் - நடிகையர் திலகம் இருவரும் இணைந்து நவராத்திரியில் ஆடிய சத்யவான் - சாவித்ரி தெருக்கூத்தை அரங்கேற்றினர். ஜனாதிபதி தன்னுடைய ஸ்பெஷல் பாராட்டை சிவாஜிக்குத் தெரிவித்தார். சாவித்ரியிடம் திரும்பி, 'புதிதாகப் பிறந்த குழந்தை சவுக்கியமாக இருக்கிறதா... பார்த்தாயா உன் வளர்ச்சியை நான் எப்படி கவனித்துக்கொண்டு வருகிறேன்!’
நடிகையர் திலகம் சாவித்ரி
By நவீனன், August 10, 2016 in வண்ணத் திரை
மற்றும் இணையத்தின் பதிவுகளின் தொகுப்பு.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23376363_712145522308504_6468558475627077994_n.jpg ?oh=b583fb8f7b6232776a14e6714c1a8897&oe=5AA0F584https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23316751_712145585641831_3391260429640020532_n.jpg ?oh=d22bcf0ea2e19cf8539d935f26b6fba3&oe=5A97E76Fhttps://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22851722_712145545641835_3970700288410866573_n.jpg ?oh=5ee64f1525bc28a0486b62d193fae5cb&oe=5A9C9082https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23319400_712145605641829_7596956500122508832_n.jpg ?oh=65650bbc50d9c8bebe32413217257bd7&oe=5A99A3FC


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23376289_712145705641819_1339434572048818712_n.jpg ?oh=be3a266ece5655a83c3c82de91f33726&oe=5A643BE9https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23316635_712145728975150_6638417499286045384_n.jpg ?oh=ca9571a9b880dcf4deba31f9a5aaf87a&oe=5A96E787

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23376171_712145875641802_2801539980285126076_n.jpg ?oh=8589dfba944904b89785a4eeeecf6132&oe=5A66D329

sivaa
10th November 2017, 03:25 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23244258_296730150842364_2531283576171073689_n.jpg ?oh=fa155af1e6b9ada845f189e881a8c5c6&oe=5AA491E2

sivaa
11th November 2017, 03:12 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

8 வது வெற்றிச்சித்திரம்

பெம்புடு கொடுகு (தெலுங்கு) வெளியான நாள் இன்று

பெம்புடு கொடுகு (தெலுங்கு) 11 நவம்பர் 1953
https://c.saavncdn.com/664/Pempudu-Koduku-Telugu-1953-500x500.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiFtY-v-7TXAhVI5IMKHZZ6DGAQjRwIBw&url=https%3A%2F%2Fwww.saavn.com%2Fs%2Falbum%2Ftelu gu%2FPempudu-Koduku-1953%2F4oOLkKigC60_&psig=AOvVaw1jQcNEUD9UrOrUQWMZieUa&ust=1510435998410893)






பெம்புடு கொடுகு

sivaa
11th November 2017, 03:20 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

109 வது வெற்றிச்சித்திரம்

செல்வம் வெளியான நாள் இன்று
செல்வம் 11 நவம்பர் 1966
http://media-images.mio.to/various_artists/S/Selvam%20%281966%29/Art-350.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi98LGO_rTXAhXI1IMKHRKGDBQQjRwIBw&url=http%3A%2F%2Fmio.to%2Falbum%2FSelvam%2B%252819 66%2529&psig=AOvVaw2XbGflwJlw6F1krN8IslOf&ust=1510436870732873)
https://i.ytimg.com/vi/hCwOGMM1q30/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi98LGO_rTXAhXI1IMKHRKGDBQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DhC wOGMM1q30&psig=AOvVaw2XbGflwJlw6F1krN8IslOf&ust=1510436870732873)

https://www.moovrika.com/ext/makeimg.php?tbl=movies&id=255922&img=1&type=image&fs=150 (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjTgo3p_bTXAhXpxYMKHV_iAtkQjRwIBw&url=https%3A%2F%2Fwww.moovrika.com%2Fa%2F84766&psig=AOvVaw1jQcNEUD9UrOrUQWMZieUa&ust=1510435998410893)

sivaa
11th November 2017, 03:51 AM
Murali Srinivas



அண்ணன் ஒரு கோவில் ரிலீஸ் நினைவலைகள்

10.11.1977 அன்று வெளியாகி இன்றைக்கு 40 வருடங்களை நிறைவு செய்யும் அண்ணன் ஒரு கோவில் ரிலீஸ் நேரத்து நினைவலைகள். மன்னிக்கவும், இந்த பதிவிலும் பட விமர்சனம் இருக்காது.
எங்கள் மதுரையில் நியூசினிமாவில் படம் வெளியானது. மதுரை ரசிகர்களும் இளைய தலைமுறை மற்றும் நாம் பிறந்த மண் சரியாக போகாத காரணத்தால் சற்று டல்லாக இருந்த நேரம். அதற்கேற்றார் போல் படத்திற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த எங்க வீட்டு தங்க லட்சுமி பெயரும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை கிளப்பியிருந்த நேரம் [சொந்த படத்துக்கு பெயரை பார்த்தியா].ஆனால் பெயர் மாறிய உடன் ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்கள்.

படம் வெளி வந்த நேரம் தமிழகத்தில் அரசியல் மற்றும் சமூக சூழல் normal-ஆக இல்லை. 1975-ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை விலக்கி கொள்ளப்பட்டு 1977 மார்ச் மாதம் பொது தேர்தல் நடத்தப்பட்டு இந்திரா காந்தி அம்மையார் ஆட்சியை இழந்து ஜனதா ஆட்சி ஏற்பட்டு மொரார்ஜி தலைமையில் மத்திய ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரம். தமிழகத்திலும் ஒன்றரை வருட குடியரசு தலைவர் ஆட்சிக்கு பின் 1977 ஜூன்-ல் சட்டசபை தேர்தல் நடைப்பெற்று அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நேரம்.
இரண்டு வருட அவசர நிலையின் போது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்ததால் அமைதியாக இருந்த இந்தியா மீண்டும் ஒரு போராட்ட சூழலை சந்தித்தது.பல தொழிற் சங்கங்களும் மாணவர்களும் ஒன்றின் பின் ஒன்றாக போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் மட்டும் அதற்கு விதி விலக்காக முடியுமா என்ன?
இங்கேயும் பல போராட்டங்கள். சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கலவரம் ஒரு புறம் என்றால் மதுரையில் 1977 அக்டோபர் 6 அன்று மதுரை கல்லூரி [Madura College] வளாகத்திலும் அமெரிக்கன் கல்லூரி வளாகத்திலும் நடைபெற்ற மாணவர் போலீசார் மோதல்கள் இந்தியாவெங்கும் கவனம் ஈர்த்தன. கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
தோல்வியடைந்தவுடன் எங்கும் போகாமல் நான்கு மாதங்கள் டெல்லியிலே இருந்த இந்திரா 1977 ஜூலை மாதம் இறுதியில் மராட்டிய மாநிலம் பூனாவிற்கு சென்றார். பூதான இயக்கம் நடத்தி வநத ஆச்சாரியா வினோபாவே அவர்களை சந்திக்க என்று சொல்லப்பட்டாலும் பூனே விமான நிலையத்திலும் மற்றும் பல இடங்களிலும் அவரை வரவேற்க மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். இது ஆட்சியாளர்களுக்கு குறிப்பாக சரண் சிங் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்று அவர் பேச்சிலேயே தெரிந்தது. மத்தியில் ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட ஷா கமிஷன் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போது வேறொரு வழக்கில் (இந்திய ராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் ஊழல் என்று வழக்கு) இந்திரா காந்தி அம்மையார் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆரம்ப முகாந்திரம் [Prima Facia] இருக்கிறது என்று சொல்லி விட அந்த காரணத்தை வைத்து அக்டோபர் மாதம் 3-ந் தேதி இந்திரா காந்தி அம்மையார் கைது செய்யப்பட இது நாடெங்கும் பெரிய அதிர்வுகளை உருவாக்கியது. பல இடங்களில் கலவரம் மூண்டது. மறு நாளே அதாவது அக்டோபர் 4-ந் தேதி இந்திரா அம்மையார் ஜாமீனில் விடுதலையானார். உடனே இந்தியாவெங்கும் சுற்றுபயணம் செய்ய போவதாக அறிவித்தார். எப்போதும் தென்னகம் தன பக்கம் என்பதை உணர்ந்த அவர் அக்டோபர் 29 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்திற்கு விஜயம் செய்வதாக முடிவானது.
தமிழகத்திற்கு வருகை தரும் இந்திராவிற்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டத்தை தி.மு.க.அறிவிக்க மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டது. பலரும் அச்சப்பட்டது போலவே அக்டோபர் 29 அன்று மதுரை வந்த அன்னை இந்திரா அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் வன்முறை வெடிக்க அவர் தாக்கப்பட்டார். திறந்த காரில் ஊர்வலம் வந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களை நெடுமாறன் அவர்களும் என்.எஸ் வி சித்தன் அவர்களும் இரு புறமும் அரணாக நின்று காக்க அவர் உயிர் தப்பினார்.மதுரை திருச்சி மற்றும் சென்னை என்று இந்திரா அம்மையார் சென்ற அனைத்து ஊர்களிலும் பெரிய கலவரம் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட அது மேலும் வன்முறைக்கு வழி கோலியது.
இந்த பிரச்சனைகள் போதாதென்று அந்த நேரத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து மிக சக்தி வாய்ந்த புயலாக மாறியது.அது தமிழகத்தை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற நிலையில் அது திசை மாறி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் என்னும் நகரத்தை அக்டோபர் 31 அன்று தாக்கி கரையை கடந்தது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் இந்தியாவை தாக்கிய இயற்கை சீற்றங்களில் இது பேரழிவை ஏற்படுத்திய ஒன்றாகும். புயல் ஆந்திராவை தாக்கினாலும் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஏராளமான உயிர் சேதம் மற்றும் பொருட் சேதமும் ஏற்பட்டது. இந்த புயல் நிவாரண நிதிக்காக தமிழக அரசே பல ஊர்களிலும் நட்சத்திர கலை விழாவை நடத்த, அந்த விழாவில்தான் நடிகர் திலகம் சாம்ராட் அசோகனாக மீண்டும் மேடை கண்டார்.
அண்ணன் ஒரு கோவில் வெளியான நேரத்தில்தான் [நவம்பர் 10] மேற் சொன்ன நிகழ்வுகள் எல்லாம் நிகழ்ந்தன. ஒரு புறம் மாணவர் மற்றும் தொழிற்சங்கத்தினர் போராட்டம், மறு புறம் அரசியல் வன்முறைகள் இவை போதாதென்று இயற்கையின் சீற்றம். ஆக அமைதி இல்லாத இப்படிப்பட்ட ஒரு அரசியல் சமூக சூழலில், ஒரு எதிர்மறையான சூழல் நிலவிய நேரத்தில் வெளியான படம் அண்ணன் ஒரு கோவில். நடிகர் திலகத்தை பொறுத்தவரை எந்த சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர். இதையும் எதிர்கொண்டார்.
இப்போது ஆரம்பித்த இடத்திற்கு வருகிறேன். படத்தின் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும். ஆனால் எங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு சின்ன தயக்கம். அந்த வருடத்தில் அதற்கு முன்பு வெளிவந்த இளைய தலைமுறை மற்றும் நான் பிறந்த மண் ஓபனிங் ஷோ போயிருந்தோம். ஆனால் அவை சரியான வெற்றி பெறவில்லை.அதே நேரத்தில் நாங்கள் ஓபனிங் ஷோ போக முடியாமல் miss பண்ணிய தீபம் சூப்பர் வெற்றியை பெற்றது. ஆகவே மாலைக் காட்சி போகலாம் என்று முடிவு செய்தார்கள்.ஒப்புக் கொள்ள கஷ்டமாக இருந்தது. ஆனால் படத்தின் வெற்றிக்காக விட்டுக் கொடுத்து விட்டோம்.
ஒரு சில நண்பர்கள் காலையில் அவரவர்கள் வீட்டில் பூஜையில் கலந்து கொள்ள அனைத்து சடங்குகளும் காலையிலே முடிந்து விட்டதால் நாங்கள் இரண்டு நண்பர்கள் காலை 10.30 மணி காட்சிக்கு சென்ட்ரல் சினிமாவில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார், ஸ்ரீகாந்த், Y.விஜயா நடித்த பெண்ணை சொல்லி குற்றமில்லை படத்திற்கு போனோம். உடல் சென்ட்ரலில் இருந்தாலும் மனம் நியூசினிமாவில்தான் இருந்தது. இந்த படம் முடிந்து வெளியே வரும்போது நமது படம் சூப்பர் என்ற ரிப்போர்ட் வந்து விட்டது.
மாலை காட்சிக்கு அப்படி ஒரு கூட்டம். நியூசினிமா அமைந்திருப்பது அகலம் குறைந்த ஒரு சின்ன தெருவில்.அங்கே நடிகர் திலகத்தின் படங்களுக்கு எப்போதும் கூட்டம் அலை மோதும். அதிலும் முதல் வாரம் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நீந்தி சென்று அரங்கில் நுழைந்தோம். ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும். முதலில் நடிகர் திலகம் போலீஸிடமிருந்து தப்பித்து ஓடி வரும் அந்த ஓட்டத்திற்கே அலப்பறை ஆரம்பித்து விட்டது. ரயில் நிலையத்தில் ஸ்வர்ணா ஆவி போல் பாடும்போது நடிகர் திலகம் உள்ளே வெய்டிங் அறையில் அமர்ந்திருந்து சிகரெட் அடிப்பார். வெகு நாட்களுக்கு பிறகு அவரின் சிகரெட் ஸ்டைல் அதிலும் வளையம் வளையமாக புகை விடும் காட்சியில் தியேட்டர் அதிர்ந்தது. பிறகு வந்த அனைத்து காட்சிகளுக்கும் அதே response-தான். ஜெய்கணேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தங்கையை யாருக்கும் தெரியாமல் பார்க்க வந்து அவர் ஆற்றாமையில் புலம்பும் அந்த காட்சிக்கு தியேட்டர் இரண்டுபட்டது.
அதன் பின் தொடர்ச்சியாக வந்த நமது வெற்றிகளுக்கு அடித்தளமிட்டது தீபம் மற்றும் அண்ணன் ஒரு கோவில்தான். அவை ஏற்படுத்திய சாதனைகள் பற்றி குறிப்பாக மதுரையில் நிகழ்ந்த சாதனைகளைப் பற்றி இதோ
மதுரையைப் பொறுத்த வரை அந்தக் காலகட்டத்தில் இது எப்படிப்பட்ட சாதனை என்று பார்ப்போம். 1977 நவம்பர் 10 தீபாவளியன்று நியூசினிமாவில் வெளியான அண்ணன் ஒரு கோவில் மதுரையில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடியது. அதாவது முதல் 30 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல். படம் 77 நாட்களை கடந்த போது 1978 ஜனவரி 26 அன்று சினிப்ரியா அரங்கில் அந்தமான் காதலி வெளியானது. அந்தமான் காதலி தொடர்ந்து 130 காட்சிகள் ஹவுஸ் புல். அதாவது முதல் 39 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல். அந்த நேரத்திலும் அண்ணன் ஒரு கோவில் வெற்றிகரமாக ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களை பிப்ரவரி 17 அன்று கடக்கிறது.
அந்தமான் காதலி முதல் 39 நாட்களின் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல் என்று சொன்னோம். படம் 37 நாட்களை கடந்த போதே மார்ச் 4 அன்று தியாகம் மதுரை சிந்தாமணியில் ரிலீஸ் ஆகி விட்டது. அதற்கு பிறகும் அந்தமான் காதலி ஹவுஸ் புல். தியாகம் வெளியாகி 14 நாட்களில் என்னைப் போல் ஒருவன் தங்கத்தில் ரிலீஸ்.
குறிப்பிட வேண்டிய விஷயம் படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்தது பற்றி. அதுவரை தங்கம் திரையரங்கில் முதல் வார வசூலில் சாதனை புரிந்திருந்த எங்க மாமா மற்றும் நீதி படங்களின் வசூலை வெகு எளிதாக கடந்த என்னைப் போல் ஒருவன் மதுரை தங்கத்தில்
முதல் 7 நாட்களில் பெற்ற வசூல் - Rs 80 ,140 .69 p.
தங்கத்தின் சரித்திரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமையும் 5 காட்சிகள் திரையிடப்பட்ட என்னைப் போல் ஒருவன் மதுரையில் முதல் பத்தே நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையையும் புரிந்தது.
என்னைப் போல் ஒருவன் முதல் பத்து நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்யும் போது தியாகம் 24 நாட்களை கடந்திருந்தது. அந்த 24 நாட்களில் நடைபெற்ற 80 காட்சிகளும் ஹவுஸ் புல். அதே நாளில் அந்தமான் காதலி வெற்றிகரமாக 61 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
1978 மே 5 அன்று அந்தமான் காதலி சினிப்ரியாவில் 100 நாட்களை வெற்றிகரமாக கொண்டாடும்போது சிந்தாமணியில் தியாகம் 63 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த 63 நாட்களில் நடைபெற்ற 207 காட்சிகளும் ஹவுஸ்புல். அதே நாளில் என்னைப் போல் ஒருவன் 49 நாட்களை கடந்து 50 -வது நாளில் அடியெடுத்து வைக்கிறது.
இது போதாதென்று நடிகர் திலகம் தெலுங்கில் நடித்த ஜீவன தீரலு என்ற படம் வாழ்க்கை அலைகள் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யபட்டு 1978 ஏப்ரல் 14 அன்று மதுரை மீனாட்சியில் வெளியாகி அதுவும் ஓடிக் கொண்டிருக்கிறது,
இது போன்ற ஒரு சாதனை அதற்கு முன்பும் செய்யப்பட்டதில்லை. அதற்கு பின்னும் முறியடிக்கப்படவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் யார் யாரோ என்னவெல்லாம் சொன்னாலும் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் மதுரையில் அவரது தியேட்டர் சாதனைகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து வர வேண்டும் என்பதும் காலத்தின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட சரித்திரம்.
அன்புடன்



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23316633_10208238936129515_1802373691659841863_n.j pg?oh=82d52fc3f726a0c9b990639b346c6d80&oe=5AA80C2C
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/23379870_10208238937209542_6357118531837060479_n.j pg?oh=8b124c4a3c3913089187a5de7153a0f7&oe=5A668959
(https://www.facebook.com/photo.php?fbid=10208238937209542&set=pcb.1585665574849060&type=3&ifg=1)




Like (https://www.facebook.com/groups/168532959895669/permalink/1585665574849060/#)Show More Reactions
Comment (https://www.facebook.com/groups/168532959895669/permalink/1585665574849060/#)

sivaa
11th November 2017, 03:59 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

256 வது வெற்றிச்சித்திரம்

படிக்காதவன் வெளியான நாள் இன்று

படிக்காதவன் 11 நவம்பர் 1985

https://upload.wikimedia.org/wikipedia/ta/d/d8/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%A E%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D. jpeg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiypuqLh7XXAhVM7IMKHXs0AxkQjRwIBw&url=https%3A%2F%2Fta.wikipedia.org%2Fwiki%2F%25E0% 25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE% 2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE% 25E0%25AE%25A4%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0% 25AF%258D_(1985_%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E 0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25A F%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AE%25A E%25E0%25AF%258D)&psig=AOvVaw1yfhlnsQZ8xmfWWbQeJbrm&ust=1510439258935167)
https://i.ytimg.com/vi/QO7pn-7aRHI/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiypuqLh7XXAhVM7IMKHXs0AxkQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DQO 7pn-7aRHI&psig=AOvVaw1yfhlnsQZ8xmfWWbQeJbrm&ust=1510439258935167)


http://hdencoders.com/wp-content/uploads/2017/07/Padikathavan_1985.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjn3_j4hrXXAhUB4IMKHYKaAcgQjRwIBw&url=http%3A%2F%2Fhdencoders.com%2Fhd-tv-rip-padikkadavan-1985-oora-therinchikitten-video-song-1080p-mkv%2F&psig=AOvVaw1yfhlnsQZ8xmfWWbQeJbrm&ust=1510439258935167)

RAGHAVENDRA
15th November 2017, 07:01 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23472714_1608818879168778_2585149617424604488_n.jp g?oh=dc88058597908be0254c8a367baf0e99&oe=5AABA90D

sivaa
15th November 2017, 08:00 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

25 வது வெற்றிச்சித்திரம்

கள்வனின் காதலி வெளியான நாள்

13 நவம்பர் 1955
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/d6/Kalvanin_Kadhali_%281955%29.jpg/220px-Kalvanin_Kadhali_%281955%29.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjfwbaSz7_XAhWKaxQKHRYxDGMQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FKalvan in_Kadhali_(1955_film)&psig=AOvVaw0fKvEHJIywlW37M2XgGvjo&ust=1510802216743467)

https://i.ytimg.com/vi/7f3x5CPsPeY/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj-k5CAz7_XAhXIxxQKHWooCk4QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D7f 3x5CPsPeY&psig=AOvVaw0fKvEHJIywlW37M2XgGvjo&ust=1510802216743467)

sivaa
15th November 2017, 08:06 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

173 வது வெற்றிச்சித்திரம்

அன்பைத்தேடி வெளியான நாள்

13 நவம்பர் 1974
https://i.ytimg.com/vi/DAf4xFxVSsU/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjFwe7fxb_XAhVE4oMKHfcYB1kQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DDA f4xFxVSsU&psig=AOvVaw3_MXtG1taaBYGy4ycz5q6v&ust=1510799561276257)
https://upload.wikimedia.org/wikipedia/en/8/87/Anbai_Thedi.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj1i76Pxb_XAhVn5oMKHZ8aAt8QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FAnbai_ Thedi&psig=AOvVaw3_MXtG1taaBYGy4ycz5q6v&ust=1510799561276257)

sivaa
15th November 2017, 08:10 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

229 வது வெற்றிச்சித்திரம்

பரிட்சைக்கு நேரமாச்சு வெளியான நாள்

14 நவம்பர் 1982

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23473113_1848304365482151_3740293926300084787_n.jp g?oh=8732b920df0deb0e7559bed23f51d1b2&oe=5A9387DF
https://upload.wikimedia.org/wikipedia/en/b/be/Paritchaikku_Neramaachu.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi_pbSIy7_XAhVH7BQKHRRBBUoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FParitc haikku_Neramaachu&psig=AOvVaw00z4ki66PnrOHsz3z-7W2a&ust=1510801148526686)

sivaa
15th November 2017, 08:18 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

230 வது வெற்றிச்சித்திரம்

ஊரும் உறவும் வெளியான நாள் இன்று

14 நவம்பர் 1982
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23471971_1848304455482142_7108555580958373894_n.jp g?oh=249c26fa7f0db85e88d662fb1bf71c24&oe=5A64BB7A
https://i.ytimg.com/vi/w5_n09UP02U/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiZ49_4y7_XAhWFVRQKHc44CBsQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dw5 _n09UP02U&psig=AOvVaw07tp1Y9uypCIC-rYdkp3DY&ust=1510801393909289)

sivaa
15th November 2017, 08:20 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23517587_1982909621998345_3842971837823439989_n.jp g?oh=8cb562a1faf40a5ae006d9674e445947&oe=5AA85902

sivaa
15th November 2017, 08:30 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

93 வது வெற்றிச்சித்திரம்

அன்னை இல்லம் வெளியான நாள் இன்று

அன்னை இல்லம் 15 நவம்பர் 1963
https://upload.wikimedia.org/wikipedia/en/f/f2/Annai_Illam_Poster_.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwif287Kxr_XAhUo8IMKHRe-AikQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FAnnai_ Illam&psig=AOvVaw2JuH_KrQVcrnsqL6ktn2zt&ust=1510799933799025)
https://i.ytimg.com/vi/hw8i4JRXmlo/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiI2PPBxr_XAhUW0IMKHbKOBlEQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dhw 8i4JRXmlo&psig=AOvVaw2JuH_KrQVcrnsqL6ktn2zt&ust=1510799933799025)

https://i.ytimg.com/vi/oY-KbeTlOZI/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjHnoXWxr_XAhWM3YMKHcXQD6sQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DoY-KbeTlOZI&psig=AOvVaw2JuH_KrQVcrnsqL6ktn2zt&ust=1510799933799025)

sivaa
15th November 2017, 08:34 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

124 வது வெற்றிச்சித்திரம்

லட்சுமி கல்யாணம் வெளியான நாள் இன்று

லட்சுமி கல்யாணம் 15 நவம்பர் 1968
https://i.ytimg.com/vi/q4y_aZxpax0/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiq84LCyL_XAhUL1RQKHeSKAZ8QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dq4 y_aZxpax0&psig=AOvVaw3T_3914mpBGFhGMtGzKNTh&ust=1510800240622735)
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/ca/Lakshmi_Kalyanam_1968.jpg/220px-Lakshmi_Kalyanam_1968.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&ved=0ahUKEwjfn-zbx7_XAhWd3oMKHURGAgAQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FLakshm i_Kalyanam_(1968_film)&psig=AOvVaw3T_3914mpBGFhGMtGzKNTh&ust=1510800240622735)
https://c.saavncdn.com/897/Lakshmi-Kalyanam-Tamil-1968-500x500.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjQvuDSx7_XAhVl7IMKHc7-AKoQjRwIBw&url=https%3A%2F%2Fwww.saavn.com%2Fs%2Falbum%2Ftami l%2FLakshmi-Kalyanam-1968%2FCAG4CgwQAO4_&psig=AOvVaw3T_3914mpBGFhGMtGzKNTh&ust=1510800240622735)

sivaa
15th November 2017, 08:50 AM
கணணி கை கொடுக்க மறுத்துவிட்டதால் 2 நாட்களாக இங்கு வந்து பதிவுகள்
இட முடியாமல் போய்விட்டது

sivaa
15th November 2017, 09:05 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23517685_1607690445948288_5706004294364376723_n.jp g?oh=0664a50fd07606892f789684735d91eb&oe=5AA413BA

sivaa
16th November 2017, 03:15 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23511509_1833607406931477_2824349286569897915_o.jp g?oh=645032e97ec4378f80af1da8f8019007&oe=5AAE29C6

sivaa
16th November 2017, 03:16 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23658723_162408007829706_4980533662616209951_n.jpg ?oh=2b791d72b73e5629916420073acbdc03&oe=5A9707E0

sivaa
16th November 2017, 03:24 AM
Sundar Raja

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/23517639_1505433999541199_2498963873584634967_n.jp g?oh=bc4f3a136defaa4c4e809a5d6d403369&oe=5A62DDAC
(https://www.facebook.com/photo.php?fbid=1505433999541199&set=a.222089247875687.55258.100002238405105&type=3&ifg=1)


Sundar Rajan.

அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
கலைக்கோவிலாம், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் மணிமண்டபத்திற்கு பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் வருகை தருகின்றனர...்.
ஆனால் இந்த செய்தியை எந்த பத்திரிக்கைகளும் சரி தொலைக்காட்சிகளும் சரி மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.
முகநுால் வாயிலாக தான் தெரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் சில இளைய நடிகர்கள் வருவது முகநுாலில் கூட யாரும் பதிவிடுவதில்லை.
அன்பு இதயங்களே,
உங்களுக்கு தெரிந்து விஐபிக்கள் யாராவது மணிமண்டபம் விஜயம் செய்வது தெரிந்தாலோ அல்லது புகைப்படம் பார்க்க நேர்ந்தாலோ உடனே முகநுாலில் பதிவிட்டு உலகறியச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதோ சிவகார்த்திகேயன் அவர்கள் மணிமண்டபம் சென்று நமது கலைக்கடவுள் சிவாஜி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிய புகைப்படம்.
நடிகர்கள் அனைவருக்கும் சிவாஜியே கலைக்கடவுள் அவரது மணிமண்டபமே கோவில்.

sivaa
16th November 2017, 03:27 AM
Sukumar Shan ·

நடிகர் திலகமும் தேவிகாவும் !

1961 மே 27. பத்மினியின் திருமணம் நடைபெற்றது.

அவர் சினிமாவிலிருந்து விலகிச் சென்றார். சிவாஜியும்-- தேவிகாவும் முதன் முதலாக இணை சேர்ந்த பாவமன்னிப்பு வெள்ளிவிழா கொண்டாடியது.
பத்மினி மீண்டும் சிவாஜியுடன் சினிமாவில் டூயட் பாட சில வருடங்கள் பிடித்தது. இடைப்பட்ட ஐந்து ஆண்டுகள் நடிகர் திலகத்துக்குப் பொருத்தமான ஜோடியாக வெற்றிகரமாக வலம் வரும் அதிர்ஷ்டம் தேவிகாவுக்கு அமைந்தது.
மாபெரும் பிரம்மப் பிரயத்தனங்களுக்குப் பிறகே பத்மினியால் சிவாஜி- தேவிகா ஜோடியைப் பிரிக்க முடிந்தது. அந்த அளவுக்குத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் ஆகிய மூன்று தரப்பினராலும் சிவாஜி- தேவிகா ஜோடிக்கு அற்புத வரவேற்பு கிட்டியது.
1961 முதல் 1965 வரை எம்.ஜி.ஆர்.-சரோ, சிவாஜி -தேவிகா, ஜெமினி -சாவித்ரி இணைகள் தமிழ் டாக்கியை ஆண்டன.பலே பாண்டியா...1962..பந்துலு படம்...பாடல்கள் எல்லாம் அதி அற்புதம்....ஆனந்தம்...பாடல் வரிகள் கண்ணதாசன்..இசை...வெறும் இசை என்று எழுத கை மறுக்கிறது....தேனிசை....ஒவ்வொரு பாடல் ஒவ்வொரு ரகம்.....நாதமயம்....விஸ்வநாதமயம்.....இரட்டையர்களின ் மாயம்....நடிகர் திலகம்,தேவிகா எம். ஆர் . ராதா ....மறக்கவே இயலாத படம்...ராதா 2 வேடம்...நடிகர் திலகம் ரௌடி ராதாவால் அனுப்பப்படுகிறார் தேவிகா வீட்டிற்கு....அங்கு தேவிகாவின் தந்தை இன்னொரு ராதா .......சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் நகைச்சுவை...அழகெல்லாம் திறண்டு மொத்த உருவமாக தேவிகா.....வெகுளியாகக் குண்டுக் கன்னமும்...குளிர் சிரிப்பும்,குதூகலம் கொப்பளிக்கும் நடிகர் திலகம்......காதலிக்கும் அவளிடம் அவன் என்னவோ சொல்ல அவள் சிணுங்க இங்கு ஒரு பாடல்...இனிமையான மாலைப் பொழுதை பறைசாற்றும் மணிக்கூண்டு அது ஒலிக்கும் மணி ஐந்தே பாடலின் துவக்கம்...ஆரம்ப இசை இப்போது கேட்டாலும் புலன்களை எல்லாம் கட்டிப்போடும் இனிய மெல்லிசை..நாணி சிணுங்கி நிற்கும் தேவிகா கறுப்பு வெள்ளையில் ஒரு வண்ணக்கோலம்....முகமெல்லாம் பூரிப்பு...பார்த்துக் கொண்டெ இருக்கலாம் போல...காதலன் பாடும் பாடல்.......நடிகர்திலகம் காட்சி முழுவதும் துள்ளிக் குதித்து பச்சைப் பிள்ளை போல் கையையும் காலையும் அசைத்து,ஓடி......இதையெல்லாம் ஏழிசை வேந்தன் குரலிலேயே ஜாலம் செய்திருக்கும்
சிவாஜியுடன் தேவிகா இணைந்து நடித்த ஆண்டவன் கட்டளை, பி.எஸ். வீரப்பாவின் தயாரிப்பு.
தேவிகா நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்த படங்களில் ஆண்டவன் கட்டளைக்குத் தனி மகுடம் சூட்டலாம்.
விவேகானந்தர் போல் பரம புருஷராக வாழத் துடிக்கும் பேராசிரியர் கிருஷ்ணனை, வலியச் சென்று காதலிக்க வைக்கும் துணிச்சல் மிக்க கல்லூரி மாணவி ராதாவாக தேவிகா வாழ்ந்து காட்டியிருந்தார்.
‘அழகே வா அருகே வா‘ பாடலில் கவர்ச்சிக்கும் விரசத்துக்குமான மெல்லிய வேற்றுமையை- ஒற்றைக் குழல் ஈர முகத்தில் விழும் எழிலிலும், நீரில் நனைந்த வாளிப்பான தோற்றத்திலும், மிக நுண்ணிய சிருங்கார பாவனைகளிலும் தேவிகா அற்புதமாக வெளிப்படுத்தினார்.
தேவிகாவின் பெர்ஃபாமன்ஸை ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட முன்னணி வார இதழ்கள் மனமாரப் பாராட்டின.
‘குறை சொல்ல முடியாமல் நடித்திருக்கிறார் தேவிகா. அதுவும் கடைசியில் பழைய நினைவுகளை மறந்த நிலையில் கண்களை உருட்டி, மிரட்சியுடன், நீ யாரு? நீ என்ன சொல்றே’ என்று நடிகர் திலகத்திடம் கேட்கும் இடங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. ' என்று போற்றி எழுதியது ஆனந்த விகடன்.'
தேவிகாவின் பிசிறு இல்லாத நடிப்பு நிறைவு. புன்னகை செய்தே பேராசிரியரைக் கவரும் பாணியும், பழைய நினைவு மறந்த அரைப் பைத்தியமாக உலவும் முறையும் நிறைவைத் தருகின்றன. ' என்றது குமுதம்.
நீலவானம் பட விமர்சனத்தில் ஆனந்த விகடன் தேவிகாவை கை கொடுத்த தெய்வம் சாவித்ரி ரேஞ்சுக்கு உயர்த்தி எழுதியது. .
அன்புக் கரங்கள்- அன்னம் கதாபாத்திரமும், நீலவானமும் கௌரி கேரக்டரும் 1965ல் பேசும் படம் இதழால் தேவிகாவின் சிறந்த நடிப்புக்காகப் பெரிதும் பாரட்டப்பட்டன.
சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பைக் கற்றுக் கொண்ட அனுபவம் குறித்து தேவிகா !
‘நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, தன்னோடு நடிப்பவர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிற பண்பிலும் அவர் திலகம்!
பாவமன்னிப்பு படத்தில் ரஹீமாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் சிவாஜியுடன் நாயகியாக நடித்த முதல் சீனை என்னால் என்றும் மறக்கவே முடியாது. காரணம் அது ரஹீமை நான் ஜெயிலில் சந்திக்கும் சோகமயமான கட்டம்.
உள்ளேயிருந்து சிவாஜி கதற, வெளியே நிற்கும் நான் புலம்ப... அதனை க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்துடன், அதிக அக்கறையோடு முதலில் படமாக்கினார் டைரக்டர் ஏ. பீம்சிங்.
சிறைக் கம்பிகளைப் பிடித்தவாறு அதில் முகம் புதைத்து நான் அழ வேண்டும். புதிதாக பெயிண்ட் அடித்திருப்பார்கள் போல. அது என் கைகளில் ஒட்டிக்கொண்டு விட்டது.
சிவாஜிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் ஏற்பட்டது. என் படபடப்பு மேலும் கூடியது.
‘ கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலம் கொண்ட மட்டும் அதை ஆட்டி விட்டால் போதுமா...? கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பு வந்து விடுமா உனக்கு? இந்தக் கம்பிகள் போலியானவை. நிஜக்கம்பிகள் போல் இவற்றை உலுக்கினால் இவை என்ன ஆகும்? எப்பவும் சுய நினைவோடு நடிக்கணும்.
அப்பத்தான் நீ நடிப்பில் உச்சம் தொட முடியும். இப்ப நான் மேரியாக நடிப்பதை நீ பார்... ' என்ற சிவாஜி,
கம்பிகளுக்குப் பூசப்பட்ட புது சாயம் கொஞ்சமும் கைகளில் படாமல், உணர்ச்சி வசப்பட்டு அழகாக நடித்துக் காட்டினார்.
அன்புக்கரங்கள் படத்தில் நான் மணிமாலாவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டம். விளையாட்டுக் கோபம் காட்ட வேண்டிய இடத்தில், அதை உணராமல் நான் நிஜமாகவே கோபித்துக் கொள்வது போல நடித்தேன்.
அதைப் பார்த்த சிவாஜி, ‘இந்த சீன்ல இப்பிடித்தான் நடிப்பீங்களா..? கொஞ்சம் தள்ளுங்க நான் நடிச்சிக் காட்டறேன்.
நடிக்கறதே பொய்யான சமாசாரம். நீ போலியா கோவிச்சிக்கிட்டுப் பாசாங்கு பண்ணணும். அதை விட்டுட்டு முகத்துல இவ்வளவு கடுப்பைக் காமிச்சா காட்சி எப்படி சரியா வரும்?
நீ அவளுக்கு புத்தி சொல்றதுல உள்ளூற அன்பும் பாசமும் எதிரொலிக்கணும். அது உன் ஆதங்கமா வெளிப்படணுமே தவிர ஆத்திரமா மாறிப்போயிடக் கூடாது.
டூரிங் டாக்கீஸுல படம் பார்க்கறவனுக்கும் நீ பொய்யாத்தான் கோவிச்சிக்கிறன்னு புரியறாப்பல நடிக்கணும். என்ன நான் சொல்றது விளங்குதான்னு’ கேட்டுட்டு நான் எப்படிப்பட்ட பாவத்தோடு பேசணும்னு நடிச்சிக் காமிச்சார்.
போலியான கோபத்தில் கூட இவ்வளவு நுணுக்கங்களா...! என்று வியந்தேன்.
அவரோட நடிச்சதாலதான் நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா நிக்கிறேன்னு கூடச் சொல்லலாம். செட்ல எனக்கு சீன் இல்லாத நேரத்துல லைட் பாய் கிட்ட பேசிட்டிருப்பேன். உடனே சிவாஜி என்னிடம்,
‘ஹீரோ கிட்டப் பேசறது தேவையில்லன்னு நினைக்கிற’ என்று நையாண்டியாகக் கேட்டிருக்கிறார். எனக்கு பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஒரு வித அச்சத்தினால் பெரியவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.
ஷாட்ல எப்படி நடிக்கணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு கம்மியா பண்ணுவார். கூட நடிக்கிறவங்களுக்கும் பேர் வரணும்னு நினைப்பார்... அவர் தான் சிவாஜி.
அதுக்குச் சரியான எடுத்துக்காட்டு வேணும்னா ‘நீல வானம்’ படத்தைச் சொல்லலாம். ‘அதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கிற கேரக்டர். ஹீரோவுக்கு அதிக வேலை கிடையாது.’
அந்த விஷயம் சிவாஜிக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் பிடிவாதமா நடித்தார். என் கேரக்டர் ஓங்கி நிற்க வேண்டிய கட்டங்கள் அத்தனையிலும் எனக்காக விட்டுக் கொடுத்து நடிச்சிருக்கார்.
நான் எந்த சீன்லயாவது நடிப்பை கோட்டை விட்டுட்டேன்னா, ‘மண்டு மண்டு’ ன்னுச் செல்லமா கோவிச்சுக்குவார். அப்புறம் அந்தக் காட்சியில் என் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.
நான் கர்ப்பிணியா நடிக்க வேண்டிய காட்சி. தாய்மை அடைந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் செய்து காட்டி என் நடிப்பை மேம்படுத்தினார்.
அந்த மாதிரி யார் நன்றாக நடித்தாலும் காட்சி முடிந்த பிறகு பாராட்டி விடுவார். அது அவருக்கு மட்டுமே உரிய பெருந்தண்மைக் குணம்!
(தேவிகாவின் கூற்று அத்தனையும் நிஜம். 1970களில் தனது சினிமாக்களைப் பற்றி சுய விமர்சனம் செய்த நடிகர் திலகம், நீல வானம் பற்றிக் குறிப்பிடுகையில்,
‘திருமதி தேவிகாவின் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்! ' என்று வெளிப்படையாகவே தேவிகாவுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார்.
சிவாஜி படப்பட்டியலில் நாயகிகள் குறித்த கணேசனின் பாராட்டு மிக மிக அபூர்வம்!)
‘சிவாஜி எப்பப் பார்த்தாலும், ‘சவுக்கியமா... நல்லா இருக்கியா? 'ன்னு ரெண்டே வார்த்தைகள் தான் கேட்பார். அதில் ஓர் ஆழமான அன்பு ஒளிந்திருக்கும். எனக்கு ஆதரவாக இருந்த அவரது அன்பில் நான் ஒரு போதும் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டது கிடையாது.
என் மகள் கனகாவுக்கு அப்ப 4 வயது. சிவாஜி தச்சோளி அம்பு மலையாள சினிமாவில் நடிக்கும் போது கை உடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
அவரைப் பார்த்து நலம் விசாரிக்கப் போயிருந்தேன். கனகாவும் என்னுடன் அழைத்துச் சென்றேன். வலியைச் சற்றே மறந்து ஜாலியாக உரையாடியவர், கனகாவைப் பார்த்து ‘உன் பேர் என்னடா’...ன்னு கேட்டார்.
கனகா பதில் பேசாமல் நின்றாள். சிவாஜி மறுபடியும் செல்லமாக அதையே வினவினார். கனகா வாயை இறுக்க மூடிக்கிட்டா. பேசவே இல்லை.
சிவாஜி என்னைப் பார்த்தார்.
‘என்ன பிள்ளை வளர்த்துருக்கே. ' என்றார் இலேசான கோபத்துடன்.
‘என் பொண்ணு என்ன மாதிரியே வளர்ந்திருக்கா... ' என்று சொல்லி சமாளித்தேன். அது நிஜமே. நானும் ஆரம்பத்தில் அறிமுகம் இல்லாதவங்க கிட்டே பேசவே மாட்டேன். ' தேவிகா.
சிவாஜி கணேசனும்-தேவிகாவும் உச்ச நட்சத்திர ஜோடிகளாக ஜொலித்த 1964. தேவிகா பற்றி நடிகர்திலகம் கூறியவை-
‘நல்ல பெண். திறமை உள்ளவர். மேலும் முன்னுக்கு வரக் கூடியவர். சொன்னதைச் சட்டென்று புரிந்து கொள்வதுடன் அப்படியே சிரமப்பட்டு நடிப்பில் கொண்டு வந்து விடுவார்.
ஷூட்டிங்குக்கு வருவதில் ரொம்ப கரெக்ட். சின்ன உதாரணம்- ‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பு.
‘அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா... ’
பாடல் காட்சியில் தேவிகாவை அலை அடித்துக் கொண்டு போய் விட்டது. அந்த விபத்தில் தேவிகா பிழைத்ததே பகவான் புண்ணியம். உயிர் பயத்தால் தொடர்ந்து அவர் நடிக்க வரமாட்டார் என்று எண்ணினேன்.
மறு நாளே அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்து எங்களைத் திகைக்க வைத்தார்.
தொழிலில் எத்தனை ஈடுபாடோ அதே சமயம் விளையாட்டுப் பேச்சிலும் சமர்த்து. ஷூட்டிங் சமயத்தில் நிருபர்கள் யாராவது வந்தால் போச்சு. தேவிகாவுக்கு நேரம் போவதே தெரியாது. ’
சிவாஜியும் தேவிகாவும் ஜோடி சேர்ந்த படங்களில் சிகரம் ‘கர்ணன்’ அதைப் பற்றி எழுதாமல் தேவிகாவின் திரையுலக அனுபவங்களைப் பூர்த்தி செய்திட முடியாது.
தமிழில் அதிசயிக்கத் தக்க வகையில் நாற்பது லட்சம் பொருட்செலவில் ஈஸ்ட்மென் கலரில் உருவான முதல் பிரம்மாண்ட புராணச் சித்திரம்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்ற முதல் இதிகாசப் படம்!
காற்றுள்ளவரை காதுகளில் தேனைப் பாய்ச்சும் கந்தர்வ கானங்கள் கர்ணன் படப் பாடல்கள். பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் கண்ணதாசனால் மூன்றே நாள்களில் முழுமையாக எழுதப்பட்டவை.
1962-1963ல் தயாராகி 1964 தைத் திருநாளில் வெளியானது கர்ணன். தேவிகா கர்ணனின் மனைவி சுபாங்கி.
பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்து ஒவ்வொரு அரங்கமும் போடப்பட்டது. சுபாங்கியின் வளைகாப்பு மஹாலுக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து, விஜயா ஸ்டுடியோவில் மாபெரும் செட் அமைக்கப் பட்டது.
துரியோதனன் மனைவி பானுமதியாக நடித்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. அவர் சுபாங்கியைத் தாய் வீட்டுக்கு வழி அனுப்பிப் பாடுவதாக வந்த, ‘மஞ்சள் பூசி மலர்கள் தூவி’ என்று தொடங்கும் வளைகாப்புப் பாடலில் தேவிகாவை வாழ்த்தி 45 நடனப் பெண்கள் ஆடினார்கள்.
ஒவ்வொரு காட்சியிலும் தேவிகாவின் அழகிய தோற்றமும், தலை அலங்காரமும், உடலெங்கும் ஜொலி ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஆடை அணிகலன்களும் பிரமிக்க வைக்கும்
கர்ணன் படத்தில் சுபாங்கி கதாபாத்திரம் உன்னதமாக அமைந்தது. தேவிகாவின் ஸ்டார் இமேஜ் மேலும் உயர்ந்தது.
யூ ட்யூபில் பதிவேற்றப்பட்டு பார் முழுவதும் நிற மொழி பேதங்களைக் கடந்து அனிருத்தின் கொலவெறி பாடல் பரவி புயலைக் கிளப்பிய 2012. மார்ச் மாதம்- 16 ஆம் தேதி நவீன தொழில் நுட்பத்தில் கர்ணன் மீண்டும் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.
எல்லாரும் ‘கொல வெறி’யில் லயித்திருக்க யாரும் எதிர்பாராத வகையில், எளிதாக இருபத்தைந்து வாரங்களைக் கடந்தது கர்ணன்.
அதே மார்ச் 30ல் மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான தனுஷின் 3 உள்ளிட்டப் புதிய சினிமாக்களை விட, கோடிக்கணக்கில் வசூலித்து அரிய சாதனை படைத்தது கர்ணன். தினமணி நாளிதழில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் .


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p417x417/23472392_1927162784214478_170670580089707441_n.jpg ?oh=c971195ce173a54e7eb982752b4e0686&oe=5AA3157F
(https://www.facebook.com/photo.php?fbid=1927162784214478&set=a.1441633122767449.1073741828.100007623242757&type=3&ifg=1)

sivaa
16th November 2017, 03:31 AM
Vee Yaar








From today's DTNext (a Daily Thanthi Publication)


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23473052_1609117365805596_6162816485412248770_n.jp g?oh=49a54566d00cf242e9e059df5562323f&oe=5A643E9F

sivaa
16th November 2017, 03:34 AM
Sukumar Shan

சிவாஜி ஏன் உசத்தி? நாட்டிய பேரொளி பத்மினியின் பதில் !

சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?
இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.
‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.
1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.

காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.
சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.
அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர். கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.
‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.
சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.
இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்றுகொண்டிருந்தார்.
‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!
சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார்.
நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?
சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக் அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும் .

சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.
கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.
‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.
சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.
சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.
ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.
அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன். ஆனால், சிவாஜிக்கு எனது பிறந்த நாள்கூடத் தெரியாது.’ - பத்மினி.
*
கணேசனின் முதல் காமெடி சித்திரம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…
முதல் பட விநியோகம், அமரதீபம்…
முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…
இரட்டை வேட நடிப்பு, உத்தமபுத்திரன்…
தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம், வீரபாண்டிய கட்டபொம்மன்.
ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது, வீரபாண்டிய கட்டபொம்மன்…
சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு...
என, சிவாஜியின் பல முதல்களில் பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. சிவாஜியின் மிக ராசியான நட்சத்திரம் அவர்.
‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றிச் சொல்லாமல், பத்மினியின் சினிமா வாழ்வு பூர்த்தி பெறாது.
ஏறக்குறைய, இளமையைத் தொலைத்துவிட்ட நிலையில், தில்லானா மோகனாம்பாள், பத்மினியின் திரை உலகப் பயணத்தில் மாபெரும் பாக்கியம். என்றைக்கும் பத்மினியை இளைய தலைமுறை மறந்துவிடாமல் இருக்க, கலைத்தாய் சூட்டிய மகுடம்! கொத்தமங்கலம் சுப்புவின் காலத்தை வென்ற படைப்பான மோகனாம்பாள், பத்மினிக்குக் கிடைக்கக் காரணமானவர் ஏ.பி.நாகராஜன் .

ஏ.பி.நாகராஜன் நீண்ட வருடங்களாக, அக்கதையைப் படம் எடுக்க வேண்டும் என்று வாசனிடம் கேட்டு வந்தார். வாசன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மோகனாம்பாளாக வைஜெயந்திமாலா நடிக்க, ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் தானே தயாரிக்கப்போவதாக வாசன் சொல்லி அனுப்பிவிடுவார்.
1965-ல், ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய ‘திருவிளையாடல்’, வாசனைக் கவர்ந்தது. மீண்டும் நாகராஜன் வந்து கேட்டபோது, தில்லானா மோகனாம்பாள் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.
‘எனக்கு மணமான பிறகு நான் நடித்த படங்களில் முக்கியமானது தில்லானா மோகனாம்பாள். என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவம்! நாட்டியமாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் அது. அதன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அனுபவித்து நடித்தேன்.
‘தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினதுமே, நீதாம்மா மோகனா. சிவாஜி சிக்கல் ஷண்முகசுந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒருத்தர் நடிக்கலைன்னாலும் படத்தை எடுக்கிறதா இல்லை என்றார் ஏ.பி.என். எப்பேர்ப்பட்ட வார்த்தை! சிலிர்த்துப் போனேன்.
நான் அன்று அடைந்த சந்தோஷம், எவ்வளவுன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே, இந்தக் கதை படமானால் மோகனாம்பாள் கேரக்டர் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். கதையோடு பத்திரிகையில் கோபுலு வரைந்த சித்திரங்கள் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது. கோபுலுவின் ஓவியங்களைப் போலவே, எங்களுக்கான மேக் அப்பும் காஸ்ட்யூமும் அமைந்தன.
18 வயசுப் பெண் ரோல் அது. எனக்கு அப்போ 38. என் மகன் பிரேம், சிறுவனாக இருந்த நேரம். மோகனாம்பாளின் யவ்வன பருவத்தை நினைத்துக்கொண்டு நடிக்கவேண்டி இருந்தது. உடம்பை ஒல்லியாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த மாதிரி சமயத்தில், நமக்கு நம்ம வாழ்வே சொந்தமில்லே. சினிமா தொழிலுக்கும் ஜனங்களுக்கும்தான் அது சொந்தம்.
எனக்கும் சிவாஜிக்கும் கதைக்கு ஏற்ற மாதிரி நிஜமான போட்டி உணர்வு ஏற்படணும்னு நாகராஜன், சாரதா ஸ்டுடியோல இரண்டு தனித்தனி காட்டேஜ் அமைச்சார். சிவாஜி க்ரூப் ஒரு காட்டேஜ். என் குழுவினர் ஒரு காட்டேஜ். யாரை யார் மிஞ்சறாங்க பார்க்கலாம் என்கிற போட்டியை உருவாக்கினார். அதனால்தான் மோகனாம்பாள் வெற்றிப் படமாச்சு.
வாத்தியக் கோஷ்டியுடன் நான் ஜரூராக ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன். சிக்கலாரின் செட்டில் தவில் வாசிப்பவர், நாயணக்காரர், ஒத்து ஊதுபவர், தாளம் போடுபவர் என்று அங்கேயும் தீவிரமான ரிகர்ஸல் நடக்கும். அவர்கள் மிஞ்சிவிடுவார்கள்போல... என்று எனக்கு இங்கே தகவல் வரும். நாங்கள் இன்னும் மும்முரம் காட்டுவோம்.
பப்பி முந்திக்கொண்டுவிடுவார் என சிவாஜிக்கு செய்தி போகும். கணேஷ் பார்ட்டியின் வேகம் கூடும். ஏ.பி.என்., இரண்டு தரப்பினரையும் வந்து பார்த்து உற்சாகப்படுத்திவிட்டுப் போவார். இரண்டு கோஷ்டியை வைத்தும் ஃபைனல் பார்ப்பார். இந்தக் காட்சி சிறப்பா அமையணும்னா, எல்லாரும் உடம்பு பலவீனம் இல்லாம நடிக்கணும்னுவார்.
என் முகத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும், ‘உடம்பு சரியில்லயாம்மா... ஷூட்டிங்கை கேன்சல் செய்துடவா’ என்று அக்கறையுடன் கேட்பார்.
கடைசியில் இந்தப் போட்டிக் காட்சி பிரமாதமாகவே அமைந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டோம்’ - பத்மினி.
*
தில்லானா மோகனாம்பாளுக்காக, பத்மினியை 1968-ம் ஆண்டின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தது தமிழக அரசு. விருது வழங்கியவர், அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. நவீனன் அவர்களுக்கு நன்றி .


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/23621475_1927579857506104_245795178848193773_n.jpg ?oh=7227f55e61136a9ef8428eea57e8f1f5&oe=5A8F3211


(முகநூல் பதிவு)

sivaa
16th November 2017, 03:36 AM
Sukumar Shan.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சரோ-,

‘எம்.ஜி.ஆர். என் உடன் பிறவா சகோதரர் என்றால், என் கலை உலக ஆசான் சிவாஜி ஆவார். சிவாஜிக்கு மூச்சே நடிப்புதான். நடிகர் திலகத்தின் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப இயலாது. அவரே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்! நடிப்பைத் தவிர என் குருவுக்கு வேறு உலகம் தெரியாது. நடிக்க வந்து விட்டால் செட்டுக்குள்ளயே இருப்பார். டைரக்டர் பிரேக் சொன்ன பிறகுதான் வெளியே போவார். பெங்களூருவில் பள்ளியில் படித்து வந்த காலம். ‘மனோகரா’ நாடகம் நடைபெற்றது. தோழிகள் சிலர் ‘சிவாஜி மனோகரனாக நடிக்கிறார். நேருக்கு நேர் அவரது அற்புத நடிப்பைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீயும் அவசியம் வரவேண்டும்’ என்று என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள்.
சிவாஜி கணேசன் நடிப்பில் மகத்தானப் புகழ் பெற்றவர். மிகப் பெரிய இந்தி நட்சத்திரங்கள் கூட அவரை வியந்து பாராட்டுகிறார்கள். சிவாஜி நம் ஊரில் நடிக்கிறார் என்றால் மக்கள் வழக்கத்தை விட அதிகமாகவே கூடுவார்கள். அவரை நேரில் காணும் ஆசை எல்லாருக்கும் சகஜமாக இருக்கும். எனக்கோ கூட்டம் என்றாலே பிடிக்காது. அதனால் என் சிநேகிதிகளிடம்,
‘நீங்கள் போங்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்’ என்றேன். நான் அப்போது விளையாட்டாகச் சொன்னது, பிற்காலத்தில் பலிக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்த்தவள் கிடையாது.
தங்கமலை ரகசியம் படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு சின்ன வசனம் மட்டுமே எனக்கு இருந்தது. சும்மா இரண்டே வார்த்தைகள். ‘வாழ்க்கைக்கு எது மிகவும் முக்கியம், இளமையா... அழகா...? ’ என்று நான், சிவாஜி அண்ணனைப் பார்த்துக் கேட்க வேண்டும்.மிகப் பெரிய கலைஞரான அவர் முன்பு அதைப் பேச முடியாமல் கூச்சத்தில் தவித்தேன். கையும் காலும் தந்தி அடித்தன. இரண்டு சொற்கள் என் வாயிலிருந்து வெளியே வரவில்லை.‘தைரியமாகப் பேசும்மா’ என்று சிவாஜி கணேசன் ஊக்கம் தந்த பிறகு, சமாளித்துக் கொண்டு பேசினேன். சபாஷ் மீனாவில் நாங்கள் இருவரும் நடித்திருந்தாலும் அவருடன் பழகச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பாகப் பிரிவினைக்குப் பிறகே நடிகர் திலகத்தின் அன்பையும் ஆசியையும் ஆதரவையும் பெற்றேன்
விடிவெள்ளி படத்துக்குக் கால்ஷீட் கொடுப்பதில் எனக்குப் பட அதிபருடன் சிறு சிறு பிரச்சனைகள் எழுந்தன. சிவாஜியின் மிக நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம். அவரோட தயாரிப்பு விடிவெள்ளி. அண்ணன் சிவாஜியோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியே இருந்தார்.‘சொந்த விருப்பு வெறுப்புகளை மனத்தில் வைத்துக் கொண்டு, அதைப் படத் தொழிலில் உடன் நடிப்பவர்களிடம் சிவாஜி அண்ணன் எப்போதும் காட்டியது கிடையாது. மனத்தில் எதையும் துளி கூட வஞ்சம் வைக்காத உயர்ந்த மனிதர்! அவரை அரசியல் மேடைகளில் தூற்றியவர்களும், அண்ணனைப் பத்தி குறை கூறிப் பேசியவர்களும் சிவாஜியோட படங்களில் நடிச்சிருக்காங்க. அது பொது ஜனங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.நானாக மனம் நொந்து போய் யாரைப் பற்றியாவது அண்ணனிடம் புகார் செய்தால்,‘போனால் போகட்டும் போ’ சினிமா உலகமே அப்படித்தான் என்று தொடங்கி, சிரித்துச் சிரித்துப் பேசி அனுப்பி விடுவார். யாருடனும் பகையை வளர்க்க விரும்ப மாட்டார்.
பாகப் பிரிவினை தொடங்கி நான் அவருடன் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு நடிப்புக் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பாகும்.. 'நடிகர் திலகம் சிவாஜிகணேசன், எப்போதும் தனது காட்சி முடிந்த உடன் அந்த இடத்தைவிட்டு போய் விடமாட்டார். அருகிலேயே நின்று, மற்ற நடிகர்களின் நடிப்பை பார்த்து அவர்களின் நடிப்பில், ஏதாவது குறைகள் இருந்தால் அதுபற்றி எடுத்து கூறுவார்' என்றும் சரோஜா தேவி கூறி இருக்கிறார். 'மனோகரா'வுக்குப் பிறகு கருணாநிதி, சிவாஜிகணேசன், டைரக்டர் எல்.வி.பிரசாத் ஆகிய மூவரும் இப்படத்தில் ஒன்று சேர்ந்தனர்.
கதாநாயகி சரோஜாதேவி.கலைஞர் கருணாநிதி எழுதிய வசனங்களை, முதல் தடவையாக சரோஜாதேவி பேசி நடித்தார். 'எனக்கு என்ன அழகில்லையா, படிப்பில்லையா, பணம் இல்லையா? என்னை ஏன் திருமணம் செய்ய சம்மதிக்க மறுக்கிறாய்?' என்று சிவாஜி கேட்கும் கேள்விக்கு 'படிப்பில் நீமேதையாக இருக்கலாம். பணத்தில் நீ குபேரனாக இருக்கலாம், அழகில் நீ மன்மதனாக இருக்கலாம் ஆனால் என்னை மணக்கும் கண்ணியம் உன்னிடம் இல்லை!' என்று சரோஜாதேவி பதில் வசனம் பேசவேண்டும். ஆனால் ஒரே தடவையில் இந்த வசனத்தைப் பேச முடியவில்லை.உடனே, அவர் தயக்கத்தை போக்க சிவாஜி ஒரு யுக்தி செய்தார். சுற்றிலும் கூடியிருந்தவர்களை விலகிப்போகச் சொன்னார். 'தைரியமாகப் பேசு' என்றுஎன்னை உற்சாகப்படுத்தினார்.
அதன்பின், ஒரே 'டேக்'கில் அந்தக் காட்சி 'ஓகே' ஆயிற்று. புதிய பறவை படம் பற்றி சொல்லவே வேண்டாம் . அவரின் சொந்த படம் .இன்று இந்தப் படத்தைப் புதிதாகப் பார்க்கும் இளைய தலைமுறை ரசிகர்களைக் கூட நிமிர்ந்து உட்கார வைக்கக்கூடிய படம். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ…’, ‘எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி’ சிட்டுகுருவி முத்தம் கொடுத்து , ஆஹா மெல்ல நட , உன்னை ஒன்று கேட்பேன் உள்ளிட்ட பாடல்களாலும் கதை சொன்ன படம் ‘புதிய பறவை’.
.
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால், சினிமாவில் நான் நடப்பது முதல் நடிப்பது வரை எனக்குச் சொல்லிக் கொடுத்த வழி காட்டி சிவாஜி அண்ணன்! சிவாஜியின் கூட்டுக் குடும்பம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எந்த வீட்டிலும் இல்லாத அம்சம்! ஞாயிற்றுக்கிழமையானால் அவங்க வீட்டு டைனிங் டேபிளில் அறுபது பேர் அமர்ந்திருப்பார்கள். அத்தனை பேர்களுக்கும் மருமகள்களே பரிமாறுவார்கள். ரொம்ப காலத்துக்குப் பிறகு ‘ஒன்ஸ் மோர்’ படத்துல நானும் சிவாஜியும் நடித்தோம். ‘அண்ணனோட மறுபடியும் நடிக்கிறோம்’னதும் சந்தோஷமா இருந்தது. பழைய நினைவுகள் மொத்தமா மனசுல வந்து அலை மோதுது. காலை ஏழு மணிக்குக் கால்ஷீட் கொடுத்திருந்தார்னா ஆறே முக்கால் மணிக்கெல்லாம் மேக் அப்போட செட்ல உட்காந்திருப்பார். நாங்க பெண்கள் மேக் அப் போட்டு முடிய எப்பவுமே கால தாமதம் ஆகும். அதுல கொஞ்சம் கூடுதலா லேட்டாயிடுச்சுனா முறைக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார். அதனாலயே சிவாஜி செட்டுக்கு வந்திட்டாருன்னா, நாங்க மேக் அப்காரரை சீக்கிரம் சீக்கிரம்னு அவசரப்படுத்தி இருக்கோம்.
சிவாஜி கிட்டே என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறேன். பல சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லி இருக்கிறார்.அவர் மட்டும் அல்ல, அவரோட மனைவி கமலாம்மா, பொண்ணுங்க உட்பட ஒட்டு மொத்தக் குடும்பமும் என் மேல் தனிப்பாசம் வெச்சிருந்தாங்க. அண்ணன் காலத்துக்குப் பிறகும் அது மாறாம தொடருது. சில நேரம் நாங்க லேடீஸ் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். அந்த சமயம் சிவாஜி வந்துட்டாருண்ணா , ‘என்ன மாதர் மன்றமா எல்லாரும் ஒண்ணு சேந்துட்டீங்களா..., அப்ப நான் போயிடறேன்னு...’ கிண்டல் பண்ணுவார்.என் வாழ்க்கை திறந்த புத்தகம். அதில் ரகசியம் எதுவும் கிடையாது. 1986ல் என் கணவர் என்னைத் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார். என்னை விதவை கோலத்தில் காண சிவாஜி விரும்பவில்லை.
‘நான் சரோஜாவைப் பார்க்க மாட்டேன். அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. ’ என்று சில ஆண்டுகள் என்னைப் பார்க்காமலே தவிர்த்தார். நானாக மனத்தைத் தேற்றிக் கொண்டு அவரைச் சென்று பார்த்தேன். கடைசிக் காலம் வரையில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். ‘ஒன்ஸ் மோர்’ ஷூட்டிங். முதல் நாள் லன்ச் பிரேக்ல சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நம்ம வீட்லருந்து சாப்பாடு வந்துருக்கு. நீயும் இப்ப என் கூட சாப்பிடறே...’ என்றார்.
‘இல்லண்ணே... எனக்குத் தனியா மீல்ஸ் வரும்’ என்றேன்.நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. சிவாஜி வீட்டுச் சாப்பாட்டை, அவருடன் எத்தனை நாள் சாப்பிட்டிருக்கிறேன். இன்னிக்குப் புதுசா என்ன வந்ததுச்சு..?ஒரு வேளை... கால இடைவெளி, என்னை இந்த வார்த்தையைப் பேச வைத்து விட்டதோ..! அப்போது சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நமக்கு வேண்டியவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா போயிட்டே இருக்காங்க பார்த்தியா... பாலையாண்ணன், சகஸ்ரநாமம், ராதா அண்ணன்லருந்து இப்ப எம்.ஜி.ஆர். அண்ணன் வரை போயாச்சு...நம்மள்ள கூட இப்ப நான், பப்பி, நீன்னு கொஞ்சம் பேர்தான் இருக்கோம். நம்மள்ள யார் முந்தறோம்னு நமக்குத் தெரியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா அனுசரணையா இருப்போம்’ன்னாரு.
சிவாஜி அப்படி சோகம் பொங்க வருத்தமாச் சொன்னதும் எனக்குக் கண் கலங்கிற்று. அவராலயும் மேற்கொண்டு ஏதும் பேச முடியாம நாக்கு தழுதழுத்துச்சு. எனக்காக சிவாஜியோட சாப்பாடு கேரியர் பிரிக்காமயே இருந்தது. கொஞ்சம் கழிச்சு அண்ணன் மறுபடியும் என்னைத் தன்னோட சாப்பிட வற்புறுத்தினார். சரோஜா உனக்கு லன்ச் எப்ப வரும்? ’ ‘உங்களோடயே சாப்பிடறேன் அண்ணே. ’என்று சொல்லி அவருடனேயே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ள உட்கார்ந்தேன். இழப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டாலும், தனது நண்பர்களின் இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.அதற்குப் பிறகு ஒன்ஸ் மோர் ஷூட்டிங்கில் சிவாஜி வீட்டுச் சாப்பாடுதான் தினமும் எனக்கு!


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/23621418_1928020860795337_4023823183975279915_n.jp g?oh=05a6821627894936e943d92989825a5a&oe=5AA7949F


(முகநூல் பதிவு)

sivaa
16th November 2017, 03:41 AM
vaannila vijayakumaran

கம்பீரம்

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23376596_391271701309131_9061920657084848982_n.jpg ?oh=b51b26ad0a5ca248f1f62b6e01b957e5&oe=5A92984A



(முகநூல் பதிவு)

sivaa
16th November 2017, 03:43 AM
Nanjil Inba Mgs





https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/23621340_1553848488018168_4490561102633312119_n.jp g?oh=058d93834514c7fb8c3f85587b0e784b&oe=5A98E7A2
(https://www.facebook.com/photo.php?fbid=1553848488018168&set=pcb.1553848758018141&type=3&ifg=1)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/23519391_1553848484684835_416388307964341952_n.jpg ?oh=589a3eb106ffe2011509575cb11d6664&oe=5A64C347
(https://www.facebook.com/photo.php?fbid=1553848484684835&set=pcb.1553848758018141&type=3&ifg=1)


Nanjil Inba Mgs (https://www.facebook.com/nanjilinba?fref=gs&hc_ref=ARSmLAkVwd-qbG4V7Ww6F73TUH2nReYz4780SR-S96RF2prm3HAyxu-eMj9vUBvqAiY&hc_location=group) added 2 new photos (https://www.facebook.com/nanjilinba/posts/1553848758018141). · Yesterday at 12:26

அன்பான தோழர்களே
வணக்கத்தை உங்களுக்காக
18-11-20!7 சனிக்கிழமை மாலை
6 மணியளவில் எஸ்.ஆர்.எம்.கலையரங்கத்தில் வைத்து நக்கீர் தமிழ் சங்கத்தின் சார்பில் அய்யன் சிவாஜிக்...கு தமிழ் இலக்கிய
அறிஞர்கள் நடந்தும் இலக்கிய பரி வட்டம்
பந்தள பதிப்பகம் சார்பில் நான் எழுதிய கலை மகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை என்ற நூல்களை குறித்து திறனாய்வு நடைபெறுகிறது...
இளைய சமுதாயத்தினரோடு தமிழ் ஆளுமைகள் கைகோர்க்கும் இலக்கிய விழா சிவாஜி நேசிப்பு குழுமத்திற்கு புதுமையான நிகழ்வு...
சிவாஜி ரசிகனே..
இதனை அழைப்பாக நினைத்து கூடுகை செய்ய வா...
அய்யன் சிவாஜிக்கு முதன்முதலாக கட்டப்படும் இலக்கிய பூந்தூவலுக்கு உன் கரமும் இருக்கட்டும்...
காமராஜ் காலத்தில் ஜெயகாந்தன் நடத்திய இலக்கிய வீச்சு இன்று அய்யனுக்காக....
வேற்றுமை மறந்து கூடுவோம் சிவாஜிக்காக
இன்பா....

sivaa
16th November 2017, 04:39 AM
kanchjpuram thyagarajan

மலேசியாவில் சிவாஜி நிகழ்ச்சி நடைபெறப் போகிறது. ?? யாரெல்லாம் வருகிறீர்கள்? ?



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23561407_1033758723429458_5337253323035882414_n.jp g?oh=2b01d3ecaa978a12d0d05f2efc8d9530&oe=5AAC5BBA

sivaa
16th November 2017, 05:00 AM
Vaannila Vijayakumaran

உங்களுக்குத் தெரியுமா?

1960 களின் மத்தியில் சென்னை நகரில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை 49
1964-ல் தமிழில் வெளியான நேரடிப் படங்கள் 35 மட்டுமே. அதில், நடிகர்திலகம் நடித்து வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 7. அதாவது, ஐந்தில் ஒரு பங்கு நடிகர்திலகம் நடித்தவை என்பது குறிப்பிடத்தக்ககது.
கர்ணன், பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, முரடன் முத்து, நவராத்திரி ஆகிய 7 படங்களில் 5 படங்கள் 100 நாட்களைக் கடந்தவை....
ஆண்டவன் கட்டளை வசூல் ரீதியில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பினும், அடுத்தடுத்து வெளியான படங்களின் விதியால் 100 நாட்களை எட்டமுடியாமல் போய்விட்டது.
நவராத்திரியுடன் இணைந்து தீபாவளிக்கு வெளியான முரடன் முத்து கிராமப் புறங்களில் வசூலில் வாகை சூடிய படமாகும்.
சரி...விசயத்திற்கு வருவோம்.
மேற்கண்ட 7 படங்களும், சென்னையிலிருந்த 49 அரங்குகளில், 15 வெவ்வேறான அரங்குகளில் திரையிடப்பட்டன.அதாவது, ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு. அந்த 15 அரங்குகளில் திரையிடப்பட்ட 7 படங்களில், ஐந்து படங்கள் 11 அரங்குகளிலும் தினசரி 3 காட்சிகளில் 100 நாட்களைக் கடந்தன.
இந்த சாதனை இன்றுவரை ஒரே ஆண்டில் வெளியான எந்தநடிகரின் படங்களும் ரெகுலர் காட்சிகளில், 11 அரங்குகளில் ஓடி முறியடிக்கவில்லை என்பது வரலாற்று உண்மை.
மற்ற நான்கு அரங்குகளும் தன் பங்குக்கு எட்டு முதல் 12 வாரங்கள் ஐயனின் படங்களை ஓடவிட்டு அவரின் புகழுக்கு புகழ் சேர்த்தன.
சென்னையைப் போலவே பிற ஊர்களிலும், அந்தந்த பகுதிக்கேற்ப இவ்வேழு படங்களும் வெற்றி நாட்களை எட்டின.
சென்னை நகர வெற்றிப் பட்டியல் உங்கள் பார்வைக்காக ....
1. சாந்தி கர்ணன் 100 நாட்கள்
2. பிரபாத் கர்ணன் 100 நாட்கள்
கைகொடுத்த தெய்வம் 100 நாள்
3. சயானி கர்ணன் 100 நாட்கள்
4. வெலிங்டன் பச்சை விளக்கு 105 நாட்கள்
5. மகாராணி பச்சை விளக்கு 105 நாட்கள்
நவராத்திரி 108 நாட்கள்
6. ராக்ஸி பச்சை விளக்கு 105 நாட்கள்
7. மிட்லண்ட் நவராத்திரி 101 நாட்கள்
கைகொடுத்த தெய்வம் 105 நாள்
8. சரஸ்வதி கைகொடுத்த தெய்வம் 100நாள்
9. ராம் கைகொடுத்த தெய்வம் 100 நாட்கள்
நவராத்திரி 108 நாட்கள்
10. பாரகன் புதிய பறவை 133 நாட்கள்
11. உமா நவராத்திரி 108 நாட்கள்
ஆக, அன்றைக்கு தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரம் யாரென்றும், வசூல்மன்னன் யாரென்றும் நீங்களே விளங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி, அன்றைய திரையுலகமும், அரங்குகளும், கலைஞர்களும் ஐயன் ஒருவரையே சுற்றி சுழன்று கொண்டிருந்தது என்பது கண்கூடு.
ஆனால், அந்த ஒப்பற்றக் கலைஞனின் காலத்திலும், அதன் பின்பும் இந்தத் திரையுலகம் அவருக்கு நன்றியுடன் நடந்து கொண்டதா என்பது கேள்விக்குறி ..?
வரலாறு இன்னும் புரட்டப்படும்.





https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/23559958_392524641183837_8420134990940986810_n.jpg ?oh=95f1eef7e5b3cc4884ebf31f7a2197e2&oe=5A911E26
(https://www.facebook.com/photo.php?fbid=392524641183837&set=gm.558662617818152&type=3&ifg=1)

sivaa
18th November 2017, 01:55 AM
Sekar Parasuram









அன்றைய இந்திய ஜனாதிபதி திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் அருகில் அமர்ந்து இருக்கும் நடிகர் திலகம்,
நடனமாடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா,
வரலாற்று நிகழ்வுகளை மறந்து விடுபவர்களுக்காக!

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23561308_1520769804706571_6586786472212609532_n.jp g?oh=22533c030650e0af497a8a672d839cdd&oe=5A8D1136

sivaa
18th November 2017, 07:08 AM
Natarajen Pachaiappan





சிவாஜியின் "பட்டிகாடா பட்டணமா"
sivajisivajisivajisivajisivajisivajisivajisivaji
வில்லியம் ஷேக்ஸ்பியரின் "டாமிங் ஆஃப் ஸ்ரீவ்"
(The Taming of the Shrew) நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக வைத்து பாலமுருகன் தமிழில் எழுத பி.மாதவன் இயக்கத்தில் நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்த "பட்டிக்காடா பட்டணமா" 1972 மே,6ஆம் நாள் கருப்பு-வெள்ளை படமாக வந்து கலக்கிய படம்.
"கேட்டுக்கோடி உருமிமேளம்" பாட்டிற்கு இந்தளவு பாவனையுடன சிவாஜி ஆடிய ஆட்டம் எந்த நடிகர்களாளும் ஆடமுடியாது.
அவருடைய ஆட்டம் மிரட்சியான சந்தோஷத்தை கொடுத்து நம்மையும் ஆடவைக்கும். அந்த வருடத்தில் அதிக வசூலுடன் 189 நாட்கள் ஓடி சாதனை செய்தது. வெள்ளிவிழா கொண்டாடிய் கடைசி கருப்பு- வெள்ளை படம். "அடி என்னடி ராக்கம்மா" பட்டி தொட்டி எங்கும் பரவியது.
1973ல் தேசிய விருது பெற்ற சிறந்த படம்.
1973ல் சிறந்த தமிழ் படத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது.
இந்த படத்தை காமராஜருக்கு தனியாக திரையிட்டு காட்டப்பட்டது. "நம்முடைய நாட்டின் பாராம்பரியத்தையும் கலாச்சாரத்தையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உண்ணத கருத்தையும் மக்கள் எப்படி வாழவேண்டுமென உயரீய கருத்தையும் தெரிவிக்கின்ற சிறந்தப்படமென்று காமராஜர் பாராட்டினார்."
நடிகர்திலகத்தின் நாட்டுப்புறத்தை சார்ந்த
கதையமைப்பில் முதல் வியாபார ரீதியில் பெரும்பாலும் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றியை தந்தது.
இந்த படத்தை பற்றி திரு தனஜெயன் அவர்கள் எழுதியது, இந்த படத்தின் அடிப்படை கரு நமது நாட்டின் பாராம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பதும் பரவலான மக்களுக்கு கொண்டு சேர்பதாகும். இந்த படம் சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பெனும் ஆதாரத்தால்தான் இந்த படமே நின்றது. அவர் இரண்டுவிதமான வித்தியாசமான பாத்திரங்களையும் மக்களுக்கு திருப்திதரும்படி சித்தரித்து காட்டினார்.
1972 ஜூன்,28 ஆனந்த விகடன் விமர்சனத்தில்
"இந்த படத்தின் சிவாஜியின் ஆற்றல் மிகுந்த நடிப்புத்தான் முன்னிலை வகிக்கிறது. மிக அழகான வெளிப்புற படபிடிப்பு இல்லையென்றால், எப்போதையும்போல 'புதிய மொந்தையில் பழைய கள்’ என்ற கதைபோல் ஆகியிருக்கும்.
மனோரமா, அவருடைய பாத்திரம் படத்தின் ஆரம்பத்தில் அருமையாக மதுரை வசனத்தை சரளமாக மிக அழகாக பேசுவது ரசிகர்களை கவரும்படியாக இருந்ததென 'தி ஹிந்து' பாராட்டியது.
பெலுடூரி பாவா (Palletoori Bava) ( நாட்டுப்புற மருமகன்) 1973ல் தெலுங்கு மொழியில் மறுதயாரிப்பில் அக்கினேனி நாகேஷ்வரராவ், லட்சுமி நடித்தப்படம்.
புட்டன்ஜா (Putnanja) (Kannada: ಪುಟ್ನಂಜ) கன்னட மொழியில் வீ.ரவிசந்திரன் மீனா நடித்து மறுதயாரிப்பில் வண்ணப்படமாக வெளிவந்தது.
பனாரசி பாபு (Banarasi Babu) 1997ல் கோவிந்தா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஹிந்தி நகைச்சுவை படமாக வெளிவந்தது.
இத்தனை மொழிகளில் வந்தாலும் யாரும் சிவாஜி அவர்களுக்கு இணையாக வைத்து பார்க்க முடியவில்லை.ஆரம்ப காட்சியிலேயே அம்பிகையே ஈஸ்வரியே என்ற பாடலுடன் நெருப்புச்சட்டியை கையில் ஏந்தி மூக்கையைனாக வரும் சிவாஜி ரசிகர்களின் கரவோசையையும் கற்பூர தீப ஆராதனையும் அள்ளிச்செல்லுவார். ஜெயலலிதா வந்த பிறகு சூடுபிடிக்கு ஆட்டம் சிலம்பாட்ட சண்டையில் தூள் கிளப்புவார், கவிஞர் கண்ணதாசனின் பாடல்களின் கருத்துக்களை சொல்லவும் வேண்டுமோ... "கேட்டுக்கோடி உருமி மேளம் ஆட்டம்" இன்றும் மறக்கமுடியாது "நல்வாழ்த்து நான் சொல்வேன்" எனும் பாடலுக்கு பட்டணத்து இளைஞனாக வந்து கலக்குவார். மொத்தத்தில் பார்த்தவர்களை திரும்ப திரும்ப பார்க்கவைத்த ஓர் ஜனரஞ்சக படம். இன்றைக்கும் இதுபோன்ற படங்கள் எத்தனையோ வந்தாலும் சிவாஜி அய்யாவின் நடிப்பை யாரும் தொடமுடியாது போனது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும்.
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23621697_715365478653175_3814272116507498919_n.jpg ?oh=4b6393d44a2af9f8e5e1459e8a175b97&oe=5AA6782D

.................................................. ....................................

(முகநூல் பதிவு)

sivaa
18th November 2017, 07:40 AM
Natarajen Pachaiappan · 13 November at 14:10 ·


கை ரிக்ஷாவும் சைக்கிள் ரிக்ஷாவும்
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
ரிக்*ஷாக்காரன்
வெளியீடு மே 30, 1971
1972-ஆம் ஆண்டிற்கான எம். ஜி. இராமச்சந்திரன்
அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான 'பாரத்' இந்திய தேசிய திரைப்பட விருது கிடைத்தது. (சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்)
பாபு
வெளியீடு அக்டோபர் 18, 1971
மறு தயாரிப்பு என்ற காரணத்தினால் மிக சிறந்த நடிப்பு இருந்தும் விருதுபெற தகுதி இல்லாமல் போனவர். நடிக்கின்ற காலம் வரை சிறந்த நடிகருக்கான அங்கிகாரம் அளிக்காமல், இந்தியா தவறவிட்ட தலைசிறந்த நடிகர்?
Gopal Sankar
Face book November 13,2017
ரிக்ஷாகாரன் திரைப்படத்திற்கு விருது கொடுத்த சமயம் துக்ளக் இதழில் ஒரு கேலிச்சித்திரம் வெளியானது சூரியனிலிருந்து அருவி விழும்
ஒருவர் கூறுவார் இது என்ன அதிசயம் ரிக்ஷாக்காரன் திரைப்படத்திற்கு விருது
கிடைத்துள்ளது அதைவிடவா இது அதிசயம்.
விருதை திருப்பித் தந்த எம்.ஜி.ஆர்!
(அரசியல் பின்னனி என்ன?)
Published Date: 3 NOVEMBER 2015 6:12PM
கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை இந்தியா முழுவதும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மத்திய அரசை குற்றஞ்சாட்டி எழுத்தாளர்கள் பலர், தாங்கள் மத்திய அரசிடமிருந்து பெற்ற விருதுகளை திருப்பித் தந்து பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக கோபம் என்பது உணர்ச்சியை உடனே காட்டிவிடத் துடிக்கும் ஒரு உணர்வு. தேசத்தின் மீதான கோபம் எழும் போதெல்லாம், காந்தி மேற்கொள்கிற விஷயம் உண்ணாவிரதம். அடிப்படையில் அது அஹிம்சை வடிவம் என்றாலும், அதுதான் காந்தியின் உச்சக்கட்ட கோபம். இதை பின்பற்றித்தான் எழுத்தாளர்களும் தங்களுக்கு பெருமையளித்த விருதுகளை திருப்பித்தருவதும்.
ஆனால் இவ்வாறு விருதுகளை திருப்பி அளிப்பதற்கு எதிரான விமர்சனங்களும் எழுகின்றன.
இந்த நிலையில், சற்றேறக்குறைய 42 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பிரபலமாக விளங்கிய நடிகர் ஒருவர், உள்ளுர் அரசியலில் உருவான ஒரு உஷ்ணமான சூழ்நிலையில், 'சிறந்த நடிகர்' என தனக்கு அளிக்கப்பட்ட பாரத் விருதை திருப்பியளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த நடிகர் எம்.ஜி.ஆர்.
அதுசரி பாரத் பட்டத்தை திருப்பியளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரை உஷ்ணத்திற்குள்ளாக்கிய விஷயம் என்ன...
இதோ... எம்.ஜி.ஆரே பாரத் பட்டத்தை திருப்பியளித்து, அப்போதைய மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சருக்கு எழுதிய கடிதம் எல்லாவற்றையும் விளக்குகிறது.
திரு. ஐ.கே.குஜ்ரால், மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், புதுடில்லி, 21.3.73.
மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,
கடந்த 1972-ஆம் ஆண்டுக்கான “பாரத்” விருதைப் பெற்றவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் பெருவிழிப்பை நீங்கள் அறிவீர்கள் என்றும், இந்த உணர்ச்சி வெள்ளத்தின் நீரோட்டத்திற்கு ஆட்பட்டுவிட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் நம்புகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், ஆளும் தி.மு.க.கழகத்திற்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் மாநிலகல்வி அமைச்சரான திரு நெடுஞ்செழியன் பின்கண்ட பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.
“பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதை அறிந்த நமது முதல்வர் கலைஞர், திரு ஏ. எல். சீனிவாசனை அழைத்து, எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கிடைக்க முயற்சி செய்யுமாறு கூறினார். இதற்காக திரு ஏ.எல். சீனிவாசன் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். சாதகமான கருத்து கூறுவதற்காக பலரை தன்பக்கம் மாற்றினார். ஆனால், தேர்வுக்குழு தலைவரான திரு. வி.கே. நாராயணமேனன் எளிதில் இணங்கவில்லை. நமது முதல்வரான கலைஞர், இதனை அடைய வைக்க பல வழிகளைக் கையாண்டார். இந்த முயற்சிகள் எல்லாம் எதற்காக? மற்ற நடிகருக்கு கிடைப்பதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு விருது கிட்டவேண்டும் என்பதற்காகதானே? அந்த இன்னொரு நடிகர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை”
இந்த அறிவிப்பு 8.2.1973 தேதியிட்ட ஒரு வார ஏட்டில் வெளிவந்தது. மிக அதிகமாக விற்பனை ஆகும் தமிழ் வார ஏடு அது. இந்த செய்தி, அந்த இதழின் வாசகர் ஒருவரின் கிண்டலான விமர்சனத்திற்கு இரையானது. அந்த வாசகரின் கடிதம் 15.2.73 தேதியிட்ட இதழில் பிரிக்கப்பட்டிருந்தது. அதை இங்கு மீண்டும் தருகிறேன்.
“எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது பெற்றுத் தருவதற்காக தேர்வுக்குழு தலைவரான திரு நாராயண மேனன் விஷயத்தில் பலவழிகளை முதல்வர் கலைஞர் கையாண்டதாக நெடுஞ்செழியன் கூறியுள்ளார். இந்த செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது, இந்த காரியத்திற்காக ஒருவரை இணங்க வைப்பது குற்றமல்லவா? அதுவும் ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?
இந்த.... அதை ஒரு மாநில அமைச்சர் பெருமையாக கூறிக்கொள்வது வேடிக்கையாக இல்லையா?”- இவ்வாறு அந்த வாசகனின் கடிதம் இருந்தது.
இத்தகைய கருத்துக்கள் வெளிவந்த பின்னரும் முதல்வரிடமிருந்தோ, தேர்வுக்குழு அதிகாரிகளி டமிருந்தோ இதனை மறுத்து மறுப்புரை வரவில்லை. முதல்வர் ஓர் கூர்மையான அரசியல்வாதி என்பதால் அவர் மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்வுக்குழு அதிகாரிகளின் மவுனம் எனக்கு வியப்பைவிட கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய அளவில் நுண்கலைத்திறனை தேர்வு செய்வதற்காக அமர்த்திடும் குழுவின் நடுநிலைத் தன்மையின் மீது எனக்கு மெத்த மதிப்பும், மரியாதையும் உண்டு. நீதியின் அடிப்படையிலும், பேதமற்ற நிலையிலும்தான் அந்தக்குழு செயல்படுகிறது என்பதே எனது நிச்சயமான அபிப்பிராயமாகும்.
இப்போது அந்தக் குழுவின் மீதும் அதன் தலைவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிற உள்நோக்கம், முறைகேடான நடைமுறைகள் இவற்றை மென்மையாகக் குறிப்பிடவேண்டுமானால், 'நான் அதிர்ச்சியடைந்தேன்' என்றுதான் கூறுவேன். எனது உண்மையான உழைப்பின் காரணமாக இந்த விருது பெறும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கவுரவம் என்றும் நான் மதிக்கிறேன். ஆனால், நடுநிலை தவறாத தீர்ப்புக் காரணமாக இந்த விருது கிடைத்தால் மட்டுமே நான் பெருமிதம் கொள்ளமுடியும். தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியும் ஊழல் அற்றதாக விளங்கவேண்டும் என்று நான் கூறி வருகின்ற காரணத்தால், தமிழக அரசியலில் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றேன்.
ஆனால், முறையற்ற வழிகளால் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை. இந்தச் சம்பவங்கள் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
இந்த விருதின் தன்மைகள் பாதிக்காத வகையில், தகுதியை தீர்மானிக்க கையாளப்பட்ட வழி முறைகளைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு பார்க்கும்போது இனியும் இந்த விருது என்வசம் வைத்திருப்பது நியாயமில்லை என்று நான் கருதுகிறேன்.
எனவே இந்த விருதினை திருப்பி அனுப்புகிற நேரத்தில் எனது செயலை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது முடிவின் பின்னால் உள்ள உணர்வை பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் பிரதான பாத்திரம் வகிக்கும் ஒரு நியாயமற்ற சர்ச்சையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். தேர்வுக்குழு போன்ற உயர் இலக்கிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களை அரசியல் தலைவர்களின் தந்திரோபாயங்களுக்கு ஆட்படவிடாமல் காத்து வருவதுடன், நீதி வழுவாமுறையில் கலைஞர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படவும், உரியமுறையில் அவர்கள் உற்சாகம் பெறவும் வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் அன்பன் எம்.ஜி.ராமச்சந்திரன்
-எஸ்.கிருபாகரன்
1972 அக்டோபர். எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பமானது.

.................................................. ...............

(முகநூல் பதிவு)

sivaa
18th November 2017, 09:13 AM
Jahir Hussain

· 3 mins · Puduchattiram, India






நண்பர்களுக்கு போட்டி வைத்து பல நாட்கள் ஆகி விட்டது..

. ஒரு சிறிய காம்ப்படிஷன்..

. இந்தக்காலத்திலே படங்கள் வருவதும் தெரியலே... போவதும் தெரியல...

ஆனால் அப்போதெல்லாம பட ரிலீஸ்... ரீ ரிலீஸ்... அடுத்தடுத்த புதிய பிரிண்ட் போட்டு பொலிவுடன் புதுப் படங்கள் போல ரிலீஸ்..

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புதுப் படங்கள் கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது வசந்த மாளிகை, தங்கப்பதக்கம், சிவந்த மண், திரிசூலம் போன்ற எண்ணற்ற திரைப்படங்கள்...

கிராமங்களில் பண்டிகைக் காலங்களில் தியேட்டர்களில் பழைய படங்க...ளை போட்டு குறைந்த முதலீட்டில் நாலைந்து நாட்கள் ஹவுஸ்ஃபுல் ஆக படங்கள் ஓடி பணம் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது..

. தியேட்டர் முதலாளிகள், விநியோகஸ்தர்கள் என்று டாப் டூ பாட்டம் வரைக்கும் "வைரமுட்டைகள் இடுகிற பொற்கோழிகளாக" இருந்தன அந்தக்கால சினிமாக்கள்... மிக முக்கியமாக சிவாஜி சினிமாக்கள்..

. அதுமட்டுமல்ல... பாடல்கள் பெரிய ஹிட் அடித்து கேசட்டுகளாகவும் ரெக்கார்டு பிளேயர்களாகவும் சி.டி வடிவங்களாகவும் பணத்தை வாரி குவித்தது வரலாறு... "வாராய தோழி வாராயோ" பாடலும் "நிகழும் பார்த்திபனாண்டு ஆவணித்திங்கள் 20ம் நாள்" என்று தொடங்கி தங்கள் நல்வரவை அன்புடன் நாடும் ரகுராமன்... என்ற வசன நடை பாடலாகட்டும் இசைத்தட்டுகளாய் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை... இப்படி ஒருபுறம் இருந்தாலும் "ஓடினாள் ஓடினாள்"... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்... "பொறுத்தது போதும் பொங்கி எழு"... "என் காதல் தேவதைக்கு நான் கட்டிய இந்த ஆலயத்தைப் பார்"... என்ற வனசங்களை கதையுடன் காட்சி விளக்கங்களுடன் அச்சிட்டு புத்தகங்களாக வெளியிட்டு வருமானம் வெளுத்து வாங்கிய காலமெல்லாம் உண்டு... இதையனைத்தையும் கடந்து சென்னை, கோவை இன்னும் தமிழகத்து வானொலி நிலையங்கள்... குறிப்பாக இலங்கை வானொலி நிலையம்... ஒலிச் சித்திரங்களாக பலநூறு படங்களை ஒலிபரப்பி வெற்றி கொண்டாடியது... அதில் பெரும் படங்கள் நம் ஐயனின் படங்கள்... இதெல்லாம் எமது நண்பர்களுக்கு அத்துபடி... போட்டி என்னவென்றால் ஒலிச்சித்திரத்தில் நீங்கள் மிகவும் ரசித்துக் கேட்ட சிவாஜி சினிமாக்கள் பற்றி கமெண்ட் அடியுங்கள்... இது போன்ற ஒலிச் சித்திரங்கள் கான்செப்ட் ஆக வைத்துதான் பிற்காலங்களில் வானொலி நிலையங்கள் தன் சொந்த நாடக ஒலி சித்திரங்ளைாக தயாரித்து ஒலி பரப்பினார்கள்... எத்தனையோ சிவாஜி சினிமாக்கள் ஒலி சித்திரங்களாக மின்னியது ... "பட்டிக்காடா பட்டணமா" படத்தின் ஒலி சித்திரத்தை குறிப்பிட்டு விவாத மேடையை ஓப்பன் செய்கிறேன்... மற்றதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்...


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23561646_1987502741490314_5657862669453182055_n.jp g?oh=3aa827125a5cb43c7c646a6647e3a359&oe=5A9879B0
(https://www.facebook.com/photo.php?fbid=1987502741490314&set=gm.559963867688027&type=3&ifg=1)

RAGHAVENDRA
19th November 2017, 08:34 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23722242_1612528295464503_3790443966743768186_n.jp g?oh=502f53f43e029083579a74f74ce2b14d&oe=5A96C6DF

sivaa
20th November 2017, 08:18 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

273 வது வெற்றிச்சித்திரம்

தாம்பத்யம் வெளியான நாள் இன்று

தாம்பத்யம் 20 நவம்பர் 1987



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23622042_1850589831920271_4164448046497335870_n.jp g?oh=9b7f6e8312d1daf5a22a7be542e54b2c&oe=5AA52A21


https://i.ytimg.com/vi/16awFyAS1Ak/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj2r-DBkczXAhXqrlQKHT_0CY8QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D16 awFyAS1Ak&psig=AOvVaw3feNbr-W1e6XhfDLkeX2OH&ust=1511232257291324)

sivaa
20th November 2017, 08:50 AM
http://oi65.tinypic.com/1zl9fg9.jpg

sivaa
20th November 2017, 08:51 AM
http://oi66.tinypic.com/1z645qx.jpg

sivaa
20th November 2017, 09:14 AM
Vasu Devan ·

கருடா சௌக்கியமா ஆய்வுக்கட்டுரை . பாகம்-1.

25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

'பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது.

இப்படம் ஓர் அற்புதக் காவியம்.

இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும், 'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், 'மெல்லிசை மாமன்னரி'ன் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர் திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.


சரி! கதைக்கு வருவோம்.

அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால் வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.

முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.
தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.

தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.

ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.

தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துகிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள்.

ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.
தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.


சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும், கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர, துடிதுடித்து, மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.
இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்பப் பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.


தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.
இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள்.

கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப்படுத்துகிறார்.

எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.

குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.

மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.


தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.


இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.

வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.
பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.

இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.
மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.
தாதாவாக உலா வரும்போது.....

வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!
உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!

வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!
வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!

கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!

கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!

அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோலகல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.

அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.

'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.

இனி இரண்டாம் பாகம்.

நடிக வேந்தனின் நடிப்பு முத்திரைகள்.

படம் ஆரம்பித்த உடனேயே நடிகர் திலகத்தின் ஆர்ப்பரிக்க வைக்கும் நடிப்பு வித்தைகள் விளையாடத் தொடங்கி விடும்.

சிறுவன் முத்துக் கிருஷ்ணன் பள்ளிகூடத்திற்குக் கட்ட பணமில்லை என்று தீனா (N.T) விடம் பொய் சொல்லி அழ, N.T யும் அதை நம்பி அவனுக்குப் பணம் கிடைப்பதற்காக அவனை ரோட்டில் வரும் காரின் முன்பு விழச் சொல்லுவார். சிறுவன் முத்துக் கிருஷ்ணனும் விழுந்து அடிபட்டது போல நடிப்பான். கார் நின்றவுடன் காரின் சொந்தக்காரரிடம் பணம் வாங்கி சிறுவனிடம் N.T. கொடுப்பார். பையனோ .,"வாத்தியாரே! இதே போல செட்-அப்ப அடுத்த வாரம் மைலாப்பூர்ல வச்சுக்கலாமா?..கிடைக்கும் பணத்துல ஆளுக்கு 50...50...என்ன சொல்ற?'.. என்று N.T.க்கு அதிர்ச்சி கொடுப்பான்.

உடன் N.T.,"நமக்கெல்லாம் 20 வயசுக்கு மேல தான் புத்தி வந்துது...இந்தக் காலத்து பசங்க பொறக்கும் போதே பிரசவம் பாக்குற நர்ஸோட மோதிரத்த புடுங்கிகிறானுங்க... என்று இரு கைகளையும் சற்று அகல விரித்தபடியே audience- ஆன நம்மைப் பார்த்து கேலியாக நகைச்சுவை ததும்பச் சொல்ல அரங்கமே அதிரும். ஆரம்பமே அமர்க்களம் தான்.

தன்னை சிறுவயதில் வளர்த்த மேரியம்மாவின் (பண்டரிபாய்) பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்த வருவார் N.T. பண்டரிபாய் N.T.யிடம்,"தீனா...நீ போற போக்கே சரியில்ல..எப்படியோ போ"... என்று கோபித்துக் கொள்வார். அதற்கு N.T.
"ஆங்...அப்படியெல்லாம் நீ என்ன விட்டுக் கொடுத்திடுவியா?... மேரியம்மா...நீ சொல்லுறபடி வாழுறதா இருந்தா ஒண்ணு முற்றும் துறந்த ரமண மகரிஷியா இருக்கணும். என்னால அப்படியெல்லாம் வாழ முடியாது... என் பொறப்புக்கு நான் இப்படிதான் இருக்க முடியும்... என் பொறப்பப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே"...

என்ற வித்தியாசமான dialogue delivery-யைக் கொடுப்பார். இது வரை நடிகர் திலகத்திடம் நாம் கேட்டிராத டயலாக் டெலிவிரி அது. (இந்தப் படத்தில் அவர் வசனங்களை உச்சரிக்கும் பாணியே தனி. வசனங்களை சற்றே நீட்டி முழக்கி வார்த்தைகளை சிறிது கடித்தாற் போன்று வல்லின அழுத்தங்களை அதிகம் கலந்து கொடுத்து, அழுத்தம் திருத்தமாக அவர் உச்சரிக்கும் விதமே அலாதியாய் இருக்கும். N.T யின் வேறு எந்தப் படங்களிலும் அவர் கையாளாத புதிய முறை பாணி அது. அந்தப் புதுமை ஒன்றிற்காகவே இந்தப் படம் அவருடைய மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது).

நடிகர் திலகத்திற்கு இந்தப் படம் வெளியாகும் போது கிட்டத்தட்ட 54 வயது. அவருடைய அனுபவம் என்ன! நடிப்பின் முதிர்ச்சி என்ன!..அந்த வயதிலேயும் தன்னை,தன் பாணியை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற நடிப்பின் மேல் உள்ள அவருக்கிருந்த ஈடுபாடும், புதிதாய் வந்த நடிகரைப் போல் அவருக்கிருந்த ஆர்வமும் நம்மை மலைக்க வைக்கிறது. காலங்களை வென்ற காவிய புருஷரல்லவா அவர்!

தன்னை கடத்தல் தொழிலில் ஈடுபட வைக்க முயற்சி செய்யும் கயவர்களை N.T.பந்தாடிவிட்டு,"நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளை உங்களுக்கே சொல்லிக் கொடுக்கிறேன்டா ..உங்களுக்கு மட்டுமில்லே... இந்த உலகத்துக்கே கத்துக் கொடுக்கிறேன்டா" ... என்று கர்ஜிப்பார். அப்போது சிறுவன் முத்துக்கிருஷ்ணன் அங்கு வருவான். N.T. அவனிடம்,"நீ பள்ளிக்கூடம் போகலையா?..என்பார்.

அதற்கு சிறுவன் N.T.யிடம்,"நீங்கதான் என் பள்ளிக்கூடம்..நீங்க தான் என் வாத்தியார்... நீங்கதான் நான் படிக்க வேண்டிய புத்தகமே"... என்று பதில் சொல்வான். (படத்தில் வரும் இந்த வசனம் நிஜத்தில் எவ்வளவு உண்மை! 'நடிப்பு' என்ற பள்ளிக் கூடத்திற்கு N.T.யைத் தவிர சிறந்த 'வாத்தியார்' எவர் இருக்க முடியும்?. அந்தக்கால நடிகர்கள் முதல் இந்தக் கால நடிகர்கள் ஏன் வருங்கால நடிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய 'நடிப்புப் புத்தகம்' அல்லவா அவர்!).வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு ஒரு 'ஷொட்டு'.

டைட்டிலுக்குப் பிறகு வயதான கெட்டப்பில் நடிகர் திலகம். நடு வகிடு எடுக்கப்பட்ட, முன்னால் இரண்டு புறமும் மேலருந்து கீழாக கொக்கி போல் வளைந்த அடர்த்தியான முடி..கையின் விரல்களுக்கிடையே விளையாடிக் கொண்டிருக்கும் சிகரெட்...உள்ளே தெளிவாகத் தெரியும் கட்-பனியன்... மெலிதான முழுக்கை ஜிப்பா...மடித்துக் கட்டப்பட்ட வேட்டி...இடுப்பில் அணிந்துள்ள பட்டையான பச்சை நிற பெல்ட்..ஜிப்பாவின் மேலாக கையில் கட்டப்படுள்ள வாட்ச். தீனதயாளு தாதாவாக அற்புதமான,வித்தியாசமான மேக்-அப்பில் வலம் வருவார் N.T.

ஏழைகளான டீ எஸ்டேட் தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்க மாட்டார் எஸ்டேட் முதலாளி சண்முக சுந்தரம். தொழிலாளிகள் ஸ்டிரைக் செய்வார்கள். தீன தயாளுவான N.T.யிடம் உதவி கேட்டு வருவார் சண்முக சுந்தரம். N.T.யிடம் அவர்

"திடீர்னு கை கழுவிட்டாங்க... பேச்சு வார்த்தைக்குக் கூட வரமாட்டேன்கிறாங்க ... நீங்க சொன்னாதான் ஸ்டிரைக்க வாபஸ் வாங்குவோம்னு சொல்றாங்க...நாங்க ஒன்னுமே செய்யலீங்க..
என்பார்.

அதற்கு N.T.
"நீங்க ஒன்னுமே செய்யலீயா?... எனக்குத் தெரியும்யா ..பக்கத்து எஸ்டேட்ல டீ இலைய திருடிட்டு வாங்கன்னு உங்க தொழிலாளிக்கு நீங்க பணம் கொடுத்து அனுப்பல?..
ஏழைகளுக்குத் திண்டாட்டம்...பணக்கரானுக்குக் கொண்டாட்டம்..

ஏழைகள என்னைக்குமே கோழைகளா நெனச்சுடாதீங்க..


தொழிலாளி முதுகு வளைஞ்சி வேலை செய்யணும்னா அவன் வயிறு நிமிரணும்",

என்று மடித்துக் கட்டிய வேட்டியுடன் வலது கையை இடுப்பில் ஊன்றி, சற்றே குனிந்தபடி, முதுகை முன்னால் ஒரு வளை வளைத்து பின் உடனே வயிறறுப் பகுதியை ஒரு நிமிர்த்து நிமிர்த்துவார் பாருங்கள்... அடடா..என்ன ஒரு உடல் மொழி அது!....அற்புதத்திலும் அற்புதம் இந்தக் குறிப்பிட்ட காட்சி.

அதே போல தன் வக்கீல் குமாஸ்தா தேங்காய் சீனிவாசனிடம் N.T,பேசுவதாக வரும் சில வசனங்களும், அவருடைய வசன modulation களும் மிக அருமையாக இருக்கும்.
தேங்காய்: யார் யாரை ஏமாத்தினா உங்களுக்கு என்ன? சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு... கோர்ட்டுக்கு போய்க்கிறாங்க...

N.T: மடையா! இந்த விஷயமெல்லாம் கோர்ட்டுக்கு போனா என்னாகும்?...வாதிக்கு நஷ்டம்...பிரதிவாதிக்குக் கஷ்டம்...வக்கீலுக்கு அதிர்ஷ்டம்...ஜட்ஜுக்கு அவரு இஷ்டம்...
என்று அவர் பாணியில் உச்சரிக்கும் போது தியேட்டரே அல்லோலகல்லோலப்படும்.

தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?

N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...
என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.


"இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,

"நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...
காந்தி நாலணா..

நேருஜி நாலணா..
.
காமராஜி நாலணா..ன்னான்...

அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...
என்று கலாய்க்கும் போது,

கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.(எப்பேர்ப்பட்ட வசனங்கள்! கால சூழ்நிலைகளுக்குத் தக்கபடி, எக்காலங்களுக்கும் ஏற்ற வசனங்கள். மகான்களும், மாபெரும் தலைவர்களும் N.T. அவர்கள் கூறுவது போல் நாலணா ஏன் காலணாவுக்குக் கூட இப்போதெல்லாம் மதிக்கப் படுவதில்லை).

அதே போல் தன்னை வளர்த்த பண்டரிபாயைப் பார்க்க வருவார் N.T. பண்டரிபாயின் கன்னங்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து கண்கள் மேலிறங்க,கீழிறங்க பாசத்துடனும்,வாஞ்சையுடனும் ,சற்று வருத்தப் பட்ட வேதனையுடனும் அவர் முகத்தைப் பார்ப்பார் பாருங்கள்...ஒரு வினாடியே ஆனாலும் அந்தக் காட்சியில் அவர் காட்டும் முக பாவம் இருக்கிறதே..தனக்காக, தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த வளர்ப்புத்தாய் வயது முதிர்ந்த கோலத்தில் இப்படி உருக்குலைந்து காட்சி தருகிறாளே.. என்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவார். உடன் பண்டரிபாயிடம்,


"அய்யோ மேரியம்மா! எனக்காக கஷ்டப்பட்டே நீ பழுத்துப் போயிட்ட.. வாழ்க்கையில அடிபட்டே நான் பழுத்துப் போயிட்டேன், "என்று வேதனையாகக் கூறுவார். உடனே பண்டரிபாய்,"நல்லா இருக்கியாப்பா ? என்று நலன் விசாரித்தவுடன்,
"நல்லா இருக்கேன்... நல்லா இருக்கேன்", என்று இரு முறை அவர் ஸ்டைலில் அசத்துவது அருமை.

"இன்னைக்கு ஒண்ணாந்தேதி இல்லையா?..எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டே வந்தேன்..உனக்குக் கொடுக்குற பாக்கியத்தைத்தான் நீ எனக்குக் கொடுக்கல..அதனால உன்கிட்ட வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்", என்று சொன்னவுடன் பண்டரிபாய் "என்னப்பா?",என்று கேட்பார். அதற்கு நம்மவர் சற்று உரத்த குரலில்,
"ஆசீர்வாதந்தான்...ஆசீர்வாதந்தான்,"...என்று ஏற்ற இறக்கமுடன் கூறுவது அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று...
மற்றொரு சூப்பரான காட்சி...

நடிகர் திலகத்தின் ஏழை பால்ய நண்பனாக வரும் V.S.ராகவன் தன் மகளின் திருமணத்திற்காக உதவி கேட்டு நடிகர் திலகத்தைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்திப்பது போன்ற காட்சி அது. V.S.ராகவன் வந்தவுடன் வீட்டில் அமர்ந்திருக்கும் N.T. அவர்கள் ,
"ஏய் படுவா...பலராமா...வாடா...வாடா,"
என்று எழுந்து வந்து கட்டித் தழுவி பின்,

"ஒன்னப் பாத்து ரொம்ப நாளாச்சு...நான் ரெண்டாங் கிளாசாவது பள்ளிக்கூடத்திலே படிச்சேன்கிறதுக்கு சாட்சியே இந்த உலகத்தில நீ ஒருத்தன் தான். (நடிகர் திலகம் தான் சிறுவயதில் உண்மையிலேயே இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததை நினைவு கூர்வதைப் போல் அமைந்திருக்கும் இந்தக் காட்சி). நல்லா இருக்கியா?.. குடும்பமெல்லாம் நல்லா இருக்கா?"

என்று நலம் விசாரித்து விட்டு V.S.ராகவனின் நரைத்த தலையைப் பிடித்து சற்றே கீழே அழுத்தி,"என்னடா கெழவன் மாதிரி ஆயிட்டே...என்ன சமாச்சாரம்?", என்று நட்பை வெளிப்படுத்துவது படு இயல்பு.
மனைவி சுஜாதாவுடன் கோவிலுக்குப் போகும்போது தன் மனைவியின் மாமனும், அடியாளுமான கபாலி எதிர்பாராமல் அங்கு வந்து விட, சுஜாதா கண்களை மூடிக்கொண்டு சாமி கும்பிடும் அந்த இடைவெளி நேரத்தில், தனக்கு கபாலியிடம் இருக்கும் தொடர்பு தன் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவனை அவசர அவசரமாக பேசி அனுப்பி வைக்கும் அந்த தருணத்தில், சுஜாதா சட்டென்று அதைக் கவனித்துவிட,அதை சமாளிக்கும் விதமாக தன் உடலை 'ஜகா' வாங்குவது போல ஒரு இழுப்பு இழுத்து, பின் ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு நடையைக் கட்டுவது நம்மை பரவசப் படுத்தும் நடிப்புக் காட்சி.

பின் வீட்டில் சுஜாதா தன் கணவர் N.T.க்கு தன் மாமன் கபாலியுடன் என்ன தொடர்பு?..என்று கோபிக்க, அதற்கு N.T. வேண்டுமென்றே சுஜாதாவை வெறுப்பேற்ற மைலாப்பூர் கடவுள் கபாலீஸ்வரரைப் போற்றுவது போல, அருகில் இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம்,
கபாலி 'உயர்ந்த மனிதன்'
கபாலி 'கை கொடுத்த தெய்வம்'
கபாலி 'தெய்வப் பிறவி'
என்று ஜாலியாக கோஷம் போடுவது அவருக்கே கை வந்த கலை. (இந்தக் காட்சியில் நடிகர் திலகம் அவர்கள் திருவாயாலேயே அவர் நடித்த படங்களின் பெயர்கள் உச்ச்சரிகப்படுவதை நாம் கேட்கும் போது நம் காதுகளில் தேனும் பாலும் கலந்து வந்து பாய்வது போல அவ்வளவு இனிமை).

சமீப காலமாக 'சாந்தி' தியேட்டரில் நம் இதய தெய்வத்தின் காவியங்கள் வெளியீடுகளின் போது நம் ரசிகக் கண்மணிகள் பெரும்பாலும் மேலே நடிகர் திலகம் கூறிய படங்களின் பெயர்களையே அவருக்கு புகழாரமாய் சூட்டி,
'உயர்ந்த மனிதன்' சிவாஜி
'கை கொடுத்த தெய்வம்' சிவாஜி
'தெய்வப் பிறவி' சிவாஜி
என்று விண்ணை எட்டிய கோஷங்களை எழுப்பியது நினைவுக்கு வந்து கண்களைப் பனிக்கச் செய்தது.
(நடிப்பு முத்திரைகள் மூன்றாம் பாகத்தில் தொடரும்).



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/23621180_1523682221059405_5991343651272279368_n.jp g?oh=b672c3749ab20f076562db73ac733d38&oe=5A9E7992
(https://www.facebook.com/photo.php?fbid=1523682221059405&set=gm.1594023484013269&type=3&ifg=1)

sivaa
20th November 2017, 09:16 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23658802_1986845518196933_2981646669606353832_n.jp g?oh=2a3a44f9cb5337247a5d6c0f99adacda&oe=5A968E90

sivaa
20th November 2017, 09:18 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23622342_325868811227355_6143927576019927370_n.jpg ?oh=2d624f8c94a1701731ccc873c2d0ebc6&oe=5A90B41A

sivaa
20th November 2017, 09:30 AM
vasudevan .s

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23658414_1986232221666085_1400619056733105489_n.jp g?oh=29b34156d4b17ce2b56be882b53c6c8a&oe=5A9916D6

( from face book)

sivaa
20th November 2017, 09:32 AM
vasudevan .s

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23722457_1986232244999416_6201611509538139744_n.jp g?oh=006018714d9701688cfd0331985cffc1&oe=5A9742D4


( from face book)

sivaa
20th November 2017, 09:36 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23319243_158761511527689_182783357195201476_n.jpg? oh=0d4db9956d44675da81871b3d698aa5d&oe=5A9DE39F

(nadigarthilagam fan)

sivaa
20th November 2017, 09:36 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23380230_158761541527686_4591000679114282346_n.jpg ?oh=e1e16d3f544da529bf20885bc01dfe14&oe=5AAF1140

(nadigarthilagam fan)

sivaa
20th November 2017, 09:37 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23434853_158761594861014_1045422955984777857_n.jpg ?oh=f46188f23ff092b1015d399d1acbc0ff&oe=5A9D9DE2

(nadigarthilagam fan)

sivaa
20th November 2017, 09:37 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23244381_158761631527677_1912246679934795164_n.jpg ?oh=c5602da81326b1a261d56d222e908566&oe=5AA2E7DB



(nadigarthilagam fan)

sivaa
20th November 2017, 09:38 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23244075_158761671527673_2915053784681043438_n.jpg ?oh=b89749279f6563474357a1a0a2c3283e&oe=5A90DF0D

(nadigarthilagam fan)

sivaa
20th November 2017, 09:39 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23316474_158761698194337_4232800522685696746_n.jpg ?oh=a1dfe08d88fe912f9fa72f2f687e95da&oe=5AA4D3FE


(nadigarthilagam fan)

sivaa
20th November 2017, 09:40 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23434971_158761731527667_7444687184046079024_n.jpg ?oh=63ec46d3dc4b1c787b8cec8bfcac0314&oe=5A9EEEA0

(nadigarthilagam fan)

sivaa
20th November 2017, 09:41 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23231434_158761758194331_6552877145494359788_n.jpg ?oh=979496d973fd9443dc009712ad06c32d&oe=5AA48E27


(nadigarthilagam fan)

sivaa
20th November 2017, 03:11 PM
‎Sekar Parasuram

* என் மகன்






இன்று இரவு 7:30 க்கு முரசு தொலைக்காட்சியில்




https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/23795920_1523550584428493_8483516229810328734_n.jp g?oh=cd41d5c7013b1621946b473ae69e942c&oe=5AA5549C
(https://www.facebook.com/photo.php?fbid=1523550584428493&set=gm.561248854226195&type=3)

sivaa
20th November 2017, 03:14 PM
madurai sivaji peravai

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23622229_1954461728154323_5352307374047001309_n.jp g?oh=98524a2f5ce96fc235ba65ea733a8ee8&oe=5AA9A090


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23755191_1954462421487587_7690829599107537304_n.jp g?oh=c9eaafb743ffaba77164d9d26072bc5e&oe=5AD7D3CD


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23632657_1954462828154213_2398000049753156558_o.jp g?oh=23af323ecdab9c7e4b1b0e552ce6f9c0&oe=5A8B9D42

sivaa
20th November 2017, 03:18 PM
suresh kumar

Nadigar thilagam received best actor award from CM of Madras on 1964.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23622381_2018406991781044_8775929801639610870_n.jp g?oh=6488707294b78465a5b62628c7a73d05&oe=5AAA25AE

sivaa
20th November 2017, 03:21 PM
palniappan subbu

ஞானஒளி வெற்றி விழாவில் கேடயம் வழங்குகிறார் ஜி.உமாபதி.

ஞானஒளி வெற்றி விழாவில் கேடயம் வழங்குகிறார் ஜி.உமாபதி.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23755068_1835639076728310_7797947362932957952_n.jp g?oh=e3b54108a15566d8c0e832e22f986c91&oe=5A8FB488

sivaa
20th November 2017, 10:03 PM
palanikumar

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23754874_355944951497305_4208656619674391959_n.jpg ?oh=dae6f09879ace9008bcc5ec3903253dc&oe=5A9106ED


(from face book)

sivaa
20th November 2017, 10:07 PM
k v senthil nathan

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23659152_192183128022234_4301731099821723752_n.jpg ?oh=8697c804f20eb7bad321676537c3a891&oe=5AA8684D

(from face book)

sivaa
20th November 2017, 10:19 PM
vetri vel murugan




தற்பொழுது முரசு TV சேனலில் என் மகன் திரைப்படம்


https://upload.wikimedia.org/wikipedia/en/8/89/En_Magan_1974.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjj2oH5zc3XAhUo3IMKHSwiDsoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FEn_Mag an_(1974_film)&psig=AOvVaw0ILj7L8bIuM4JRWZ4voLTa&ust=1511282966661794)

sivaa
20th November 2017, 10:48 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18952978_280052829127610_9015899939949310210_n.jpg ?oh=e0728754cfe3f8f14ce9527bc3a2287e&oe=5A93DAA0https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18951047_280052939127599_6931658988199228908_n.jpg ?oh=1e9d648c596c3f0c4df35fd5b7d82b0b&oe=5A8961D7https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18950938_280052825794277_8482435861552648655_n.jpg ?oh=cdfccfef9285c9fef72d692bc82becce&oe=5A93D64Dhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18951186_222514908257553_6738032679450475631_n.jpg ?oh=6c369c21402b2e1df6246cfd66d01446&oe=5A8B285Chttps://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18952894_280052779127615_7371315872699309421_n.jpg ?oh=5debeccdfc4a4198b3238597654a5d45&oe=5AA7E292https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18950998_10212936644916748_515027663768103807_n.jp g?oh=b5d52e58199f4dcabda177c8585b2461&oe=5A8F3D23https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18920308_277104992755727_5594960017122288033_n.jpg ?oh=ef558b288b6bacb0bbbd64be755f2f12&oe=5A9E934D

sivaa
22nd November 2017, 12:06 AM
Sekar Parasuram ·





தற்போது ராஜ் டிவியில்

ராஜ ராஜ சோழன்

தொடர்ந்து 11:55 முதல் ஜெயா டிவியில் தங்கப் பதக்கம்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/23736050_1525013907615494_4305781061583961805_o.jp g?oh=f0450a9bbbe031af683b34390f93672a&oe=5AA87DE6

sivaa
23rd November 2017, 10:50 AM
‎Sekar Parasuram
இன்று பிற்பகல் 2:00 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்











https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23794947_1526402520809966_518437703672446852_n.jpg ?oh=dd30eba288a56fc43239003f85e8f8ad&oe=5AA85163
(https://www.facebook.com/photo.php?fbid=1526402520809966&set=gm.562755660742181&type=3)

sivaa
23rd November 2017, 10:53 AM
Goothandaraman


Raj டிஜிட்டல் +,ல் 8pm savale �சவாலே சமாளி

https://upload.wikimedia.org/wikipedia/en/4/4a/Savale_samali.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj1voWF-tPXAhXJ4IMKHRMyBE0QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FSavaal e_Samali&psig=AOvVaw2PeUkynCxGNCTkCD1BNASJ&ust=1511500953768485)

https://i.ytimg.com/vi/vVZqvhf06mA/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjW78eV-tPXAhXs7IMKHXQ6Aw4QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DvV Zqvhf06mA&psig=AOvVaw2PeUkynCxGNCTkCD1BNASJ&ust=1511500953768485)

sivaa
23rd November 2017, 11:00 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

83 வது வெற்றிச்சித்திரம்

ஆலயமணி வெளியான நாள் இன்று

ஆலயமணி 23 நவம்பர் 1962

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23737766_1852170611762193_4307494128580108233_o.jp g?oh=d89086c14ce7c40ce26c65f514af01b3&oe=5A945830

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23847561_1852170645095523_4328677755086266707_o.jp g?oh=be0d4ec34bff71923be1b997a52ce390&oe=5A8C3983

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23668749_1852170695095518_6165067705120575581_o.jp g?oh=460f66d99eb32434868bfaf9ef7b6c84&oe=5AA3B324

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23754847_1852170728428848_3829548073222768436_n.jp g?oh=023d48ebd18fe082af8c06543d8109c5&oe=5A980980

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23843162_1852170791762175_7108713919062549869_n.jp g?oh=3004f93a48f7854cc2c4b119c5cf3589&oe=5A9D9A82

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23826063_1852170838428837_5008168687512397239_o.jp g?oh=e9b47632b54e4a446229cf8a376ab703&oe=5AA84625

sivaa
23rd November 2017, 11:02 AM
vee yaar

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/23843650_1616319968418669_4630244175112652496_n.jp g?oh=23103a6c43b8d123216dd50f4c81eb2f&oe=5A9D447E

sivaa
23rd November 2017, 11:16 AM
Natarajen Pachaiappan





"நடிகர்திலகத்தை பற்றி எழுத்தாளர் சுஜாதா"
++++++++++++++++++++++++++++++++++++++++
சிவாஜி அவர்களை பற்றி எத்தனையோ பேர் சொல்லி அறிந்திருக்கிறோம். சுஜாதா என்ன சொன்னார்? என்பதை அறியுமுன்னர், சுஜாதாவை பற்றி சின்னதான தகவலை தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் 'அப்துல் கலாம்' சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு - திரைப்படம்) ,காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும்,
ஆனந்த தாண்டவம், சைத்தான்(திரைப்படம்)
பணியாற்றிய திரைப்படங்கள்:
ரோஜா, இந்தியன், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், முதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், உயிரே, விசில்,
கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி, த பாஸ்,
எந்திரன், வரலாறு, செல்லமே.
எழுத்தாளர் சுஜாதா இப்படி சொல்லியிருந்தார்... "எனக்கு பிடித்த சிவாஜியின் படங்கள் அவருடைய `அன்னையின் ஆணை.’ அதுபோல `அந்த நாள்’ ஒரு பாட்டில்லாத த்ரில்லர். சிவாஜியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்குள் இருக்கும் மனிதரை கண்டுபிடிக்க எனக்கு அவகாசம் போதவில்லை. சிவாஜியை மார்லன் பிராண்டோ, ரெக்ஸ் ஹாரிசன், அல்பசினோ, ராபர்ட் டி நீரோ போன்ற நடிகர்களுக்கு ஈடாகச் சொல்லலாம். அவருடைய இறுதி ஊர்வலத்தில் அழுதவர்கள் கண்ணீரில் உண்மை இருந்தது" என்றார்.
ஆம் தமிழகத்தில் அண்ணா, காமராஜர்,அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் மறைந்த போது இருந்த கூட்டத்திற்கும் எந்த விதத்திலும் குறைவில்லாத கூட்டந்தான். அவர்கள் ஆண்டவர்கள் அவர்களுக்கென ஒரு பின்புலம் இருந்தது. இவருக்கு எந்த பின்புலமும் இல்லாமலே இவ்வளவு கூட்டம். என்ன ஒன்று அவர்களுக்கெல்லாம் அரசு விடுமுறை அளித்தது. அன்று ஆண்ட முதல்வர் அம்மையார் அது நடவாமல் போனது. ஆழிப் பேரலைகளாக ஜனசமுத்திரம் அழுதுக்கொண்டு போனதை சன் தொலைகாட்சி நேரலையாக ஒளிபரப்பியது. அதன் பிறகு ஊடகங்கள் புகைப்பட பதிவுகளையும் காணொளியையும் இருட்டடிப்பு செய்ததோ என்னவோ... இறுதி ஊர்வலத்தின் பதிவை இணையதளத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை.
இன்னும்மொரு சின்ன தகவல். சிவாஜி மறைந்த செய்தி குல்மனாலியில் எட்ட அன்றிரவு 11.00 மணியானது அன்று "பூவெல்லாம் உன் வாசம்"
படப்பிடிப்பில் தல அஜீத் இருந்தார். கேள்விப்பட்டவுடன் கிளம்ப வாகன வசதி ஏதுமில்லை. ஒரு பஸ்கூட இல்லை. அவரே தன்னுடைய காரை டில்லி விமானம் நிலையம் ஓட்டிவந்து சென்னை வந்து சேர்ந்து அவருடைய மனைவி ஷாலினியுடன் சிவாஜி அய்யனுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இது அவர் சிவாஜி என்றவருக்கு அவர் அளித்த சாதாரண மரியாதையல்ல. இந்திய நாட்டின் இணையில்லா உலக பெருநடிகருக்கு செலுத்திய உண்ணத மரியாதை. அதன்பின் மறுநாளே குல்மனாலியில் இருந்தார்.
அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். இத்திரைப்படம் அகிர குரோசவாவின் "ரசோமன்" என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது. ஜாவர் சீதாராமன் திரைக்கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான மனிதர்கள், மெத்த படித்தவர்கள், உலகத்தின் ஞானம் விஞ்ஞான ரீதியாக உணர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், இந்தியாவில் வெகு சிலரே... அதில் சுஜாதாவும் ஒருவர்.
இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. இந்த படத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பு ஹாலிவுட் நாயகர்களுக்கு இணையானதாக இருக்கும். இந்த படத்திற்கு தனிபதிவு நம்மில் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
1958ல் வெளியான "அன்னையின் ஆணை" படத்தில் ஒருகாட்சியில் சாவித்திரியின் காணமல் போன தன் தந்தையின் உடைகளை தன்வீட்டிலிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைகிறார். தன் கணவர் சிவாஜிதான் தன் தந்தையை ரங்காராவை எங்கோ மறைத்துவைத்துவிட்டார் அல்லது கொன்றுவிட்டிருக்க கூடும் சிவாஜியின் மேல் கோவப்பட்டு சட்டையை பிடித்து உலுக்குவதாக காட்சி. ஆனால் காட்சியில் உண்மையாகவே உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியின் பனியனை பிடித்து உலுக்கும்போது சாவித்திரியின் கைவிரல்களின் நகங்கள் சிவாஜி மார்பையும் பிராண்டி இரத்தம் அதிகமாக பீறிட்டது. அப்போதும் சிவாஜி நடித்துக்கொண்டே டவலினால் சாவத்திரியை அடித்த பின்னர்தான் உணர்வசப்பட்டதிலிருந்து மீண்டார்கள். இப்படியெல்லாம் நடித்திருக்கிறார்கள். இதில் யதார்த்தம் இல்லையா? அதனால்தான் என்னவோ இந்த படத்தையும் சிவாஜியையும் சுஜாதா விரும்பினாரோ என்னவோ...
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23755629_716897641833292_7084708881641423045_n.jpg ?oh=7724c5e7b8713f2b90b45edf5fcffcb2&oe=5AA511E6


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23659642_716897608499962_7492509609712902134_n.jpg ?oh=80b935b6564e05448a4f058eaca3e180&oe=5A932877

sivaa
23rd November 2017, 07:40 PM
Sekar Parasuram
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
* நவராத்திரி

https://s4.scoopwhoop.com/anj/bollywood_jodis/128898746.jpg (http://www.scoopwhoop.com/25-Firsts-Of-Indian-Cinema/)https://upload.wikimedia.org/wikipedia/en/f/f6/Navarathri-1964.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiWyvLT79TXAhWe0YMKHZCrDWYQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FFile%3 ANavarathri-1964.jpg&psig=AOvVaw2Zx4YVt18Q8YRKLfTA3eK4&ust=1511532530412463)

http://3.bp.blogspot.com/-XxF5xe81sxA/U1SybWL4YNI/AAAAAAAAAac/YK_TreLrOjg/s1600/220px-Navarathri-1964.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiWyvLT79TXAhWe0YMKHZCrDWYQjRwIBw&url=http%3A%2F%2Fsivagiganesanbiodata.blogspot.com %2Fp%2Fsivagi-ganesan-films.html&psig=AOvVaw2Zx4YVt18Q8YRKLfTA3eK4&ust=1511532530412463)

sivaa
23rd November 2017, 10:35 PM
Vasu Devan

"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்).தொடர்கிறது...


நடிகர் திலகத்தின் நடிப்பு முத்திரைகள்.


தன்னை அன்புடன் வளர்த்த மேரியம்மாவின் மீது (பண்டரிபாய்) தொழிலதிபர் சத்தியநாதன் ('சங்கிலி' முருகன்) ரோட்டில் குடிபோதையில் காரை ஏற்றி விட, குற்றுயிரும்,கொலையுயிருமாக தன் தாய் மரணப்படுக்கையில் கிடக்க, பதைபதைத்து பதறி ஓடி வருவார் N.T. அவர் கண்ணெதிரிலேயே மேரியம்மா உயிரை விட, அவளை மடியில் சாய்த்துக் கொண்டு கதறும்போது டாக்டர்கள் சற்று தாமதமாக அங்கு வர, தன் தாயைக் கட்டிலில் கிடத்திவிட்டு, இருகைகளையும் தலையின் பின்பக்கமாக சேர்த்து கோர்த்து வைத்துக் கொண்டு உடலை லேசாக வளைத்து நின்றபடி டாக்டர்களிடம் "too late"என்று மூக்கை உறிஞ்சுவது போல உதடுகளைக் குவித்து மூச்சை வாயால் உறிஞ்சுவது(!) லேசுப்பட்ட உடல்மொழி அல்ல. அப்படி ஒரு உன்னதமான N.T. யின் போஸுக்கு சொந்தம் கொண்டாடிவிட்ட பெருமை இந்த அற்புதப் படத்திற்கு மட்டுமே உண்டு.

"மேரியம்மா! உன் கண்ணுக்குள்ளேயே என்ன வச்சுக் காப்பாத்துன... இப்ப நான் உன்ன மண்ணுக்குள்ள வச்சு எப்படிப் புதைப்பேன்?"
என்று தன் தாய் அநியாயமாக சாகடிக்கப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம், கோபம், தாயை இழந்த சோகம், தாங்க முடியாத வேதனை, வஞ்சம், தன் தாய் இறக்கக் காரணமானவனை பழிவாங்கத் துடிக்கும் வெறி என்ற அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேரக் கொட்டி கண்களை மேல்நோக்கிய வெறியோடு அந்த ஒரு சில நிமிடங்களில் ஓராயிரம் வித்தைகளை உணர்ச்சிப்பிழம்பாய் அள்ளி வழங்கியிருப்பார் N.T.
தன் அன்புத் தாய் கொலை செய்யப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம்

தாயின் மரணத்திற்கு காரணமாய் இருந்த சத்தியநாதன் அதற்கு ஈடாக ரூபாய் பத்தாயிரத்தை முத்துக் கிருஷ்ணனிடம் (தியாகராஜன்) கொடுத்தனுப்ப, அவனும் அதை வாங்கிக்கொண்டுவந்து N.T. யிடம் கொடுக்க, கோபத்தின் ஆரம்பத்தில் இருக்கும் நடிகர் திலகம்,

"என் மேரியம்மவுடைய வில கேவலம் பத்தாயிரம் ரூபாயா? மேரியம்மா யார் தெரியுமில்ல... என்னோட தெய்வம்... எவனோ பெத்துப் போட்ட என்ன எடுத்து வளர்த்து தன்னுடைய வாழ்க்கையை பாழாக்கிகிட்டவ ... அவளுடைய உயிருக்கு பத்தாயிரம் ரூபா விலையா?... இதெல்லாம் உனக்குத் தெரியாதா?... தெரிஞ்சிருந்தும் ஏன் வாங்கிகிட்டு வந்த?...கொண்டு போய் அவன் மூஞ்சில விட்டெறி"...
என்று கூற அதற்கு முத்துகிருஷ்ணன்

"இந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டா மட்டும் செத்துப் போன மேரி மம்மி திரும்பி வந்துடப் போறாங்களா"
என்று எதிர்வாதம் பேச தன்னை நம்பி தன் கழுத்தில் சுற்றிகொண்டிருக்கும் பாம்பே தனக்கு எதிராகத் திரும்ப ஆரம்பிப்பதைக் கண்டு சற்று திகைத்து, பின் சடாலென வலது காலை வேகமாக தரையில் ஒரு உதை உதைத்து,வேட்டியை மடித்துக் கட்டி சற்றே காட்டமாக

"முத்துக்கிருஷ்ணா! ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா? இது என்னுடைய பெர்சனல் மேட்டர். இத எப்படி டீல் பண்ணனும்கிறது எனக்குத் தெரியும்.நீ போ" என்று தெனாவட்டாகக் கூறியபடி சிகரெட்டை வாயில் வைத்து போடுவாரே ஒரு சொடுக்கு! அந்த சொடுக்கில் சொக்கிப் போகும் நம் அனைவரின் மனங்களும்.
..
சொன்னது போலவே நேரிடையாக சங்கிலி முருகனைப் பழிவாங்கக் களத்தில் இறங்குவார் N.T. சங்கிலி முருகனின் பார்ட்னரை அவர்மீது நம்பிக்கை இல்லாமல் தன் பாகத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்கச் செய்தும், சங்கிலி முருகனுடைய கம்பெனியில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்தச் செய்தும்,சங்கிலி முருகனின் கார் டிரைவரை வேலையே விட்டு விலகச் செய்தும் இப்படி பல இன்னல்களை அவருக்குத் தெரியாமலேயே தன் தாதா செல்வாக்கால் உருவாக்கி தன்னிடமே நேரிடையாக உதவி கேட்டு வரும் நிலைக்கு சங்கிலி முருகனை ஆளாக்கி விடுவார் N.T. இவ்வளவு இன்னல்களுக்கும் காரணம் N.T தான் என்று தெரியாமல் அவரிடமே பிரச்சனைகளுக்கு உதவ வழி கேட்டு வருவார் சங்கிலி முருகன்.ஒவ்வொரு பிரச்னையாக சங்கிலி முருகன் சொல்லிக் கொண்டே வர, N.T யும் பிரச்னைகளைத் தீர்ப்பதாக ஒத்துக் கொண்டு சங்கிலி முருகனின் வீட்டிற்கு செல்வார் .செல்வதற்கு முன் N.T..யை வரவேற்பதற்காக மாலையுடன் காத்திருக்கும் சங்கிலி முருகன் தன் உதவியாளரிடம் ,"என்ன மேனேஜர்! இன்னும் அவரு வரலியே"என்பார். அதற்கு அந்த மேனேஜர்,"பெரியவர் சொன்னா சொன்ன டயத்துக்கு வந்துடுவாருங்க....கடிகாரம் தப்பினாலும் தப்பும்...அவரு மாத்திரம் கரெக்டா டயத்துக்கு வந்துடுவாரு...என்று புகழாரம் சூட்டுவது நடிகர்திலகத்தின் நேரந்தவறாமையையும்,காலந்தவறாமையையும் குறிப்பிடுவதற்கென்றே எழுதப்பட்ட சத்தியமான வசனம். (சபாஷ்! வியட்நாம் சார்...)

பின் N.T சங்கிலி முருகன் வீட்டிற்கே வந்து மறைமுகமாக தன் பழிவாங்கும் படலத்தைத் தொடங்குவார். சங்கிலி முருகன் வீட்டிலேயே அவர் மனைவியிடமும்,மகளிடமும் அவரை வசமாக மாட்டி வைக்கும் காட்சிகள் படுசுவாரஸ்யமானவை. சங்கிலி முருகன் மனைவி முன்னாலேயே "சத்தியநாதா, இது எத்தனையாவது wife?" என்று அவரை அவர் மனைவியிடம் மாட்டிவிட்டு மிரள வைப்பதும், சங்கிலி முருகன் மகளிடம்,"உன் வயசென்ன டார்லிங்?" என்று N.T கேட்க அதற்கு அந்தப் பெண் "பதினாறு"என்று பதில் கூற, "சகுந்தலாவுக்கும் அதே வயசுதான்" என்று கலாய்த்து சங்கிலி முருகனின் லீலைகளை மறைமுகமாக உணர்த்தி அலற வைப்பதும், இதையெல்லாம் சமாளிக்க சங்கிலி முருகன் N.T யிடம்,"வாங்க டிபன் சாப்பிட்டுகிட்டே பேசலாம்"என்று பேச்சை திசைதிருப்ப முயற்சிக்க, நடிகர் திலகம் அதற்கு,"ஆங்...(இந்த இடத்தில் ஒரு ஜகா வாங்குவார் பாருங்கள்)...நான் உன் கையால் டிபன் சாப்பிட மாட்டேன்ப்பா...நீதானே சொன்ன...சொத்துக்காக மாமனாரை உப்புமாவுல விஷம் வச்சுக் கொன்னேன்னு" என்று அவர் மனைவி முன்னேயே அவரை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும், சங்கிலி முருகனின் ஆபீஸ் மெம்பர்ஸ் மீட்டிங் நடக்கும் போது அவருடைய பார்ட்னரைக் காட்டி அத்தனை பேர் முன்னிலையில்,"ஒ...இவனதான் நீ கொலை பண்ணச் சொன்னியா?"என்று காலை வாருவதுமாக பழிவாங்கும் படலத்தைப் பக்காவாக நகைச்சுவையுடன் பண்ணியிருப்பார் N.T.

(தொடரும் நாளை)

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23843227_1528206907273603_9167243474336541326_n.jp g?oh=e5c473336dac887695b4c24ca9029ac7&oe=5A8A50B7
(https://www.facebook.com/photo.php?fbid=1528206907273603&set=gm.563007974050283&type=3&ifg=1)

Gopal.s
25th November 2017, 07:05 PM
ஆலய மணி- 1962

மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம் கண்டது. மன நலம் குன்றியவர் குறித்து சமூகத்தின் பார்வையும் மாறியது. அதற்கு முன் அவர்களுக்கு சமூகத்தால் சிகிச்சை என்ற பெயரிலும் (அரைகுறை வைத்தியர்,பூசாரி),வேண்டாத பிரஜைகள் என்ற முறையிலும் பட்ட கொடுமைகளை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். இதிலாவது,தன உலகத்தில் வாழும் ,வெளியுலகம் அறியா முழு மனம் குன்றியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விளிம்பு நிலை மனிதர்களோ தன் உலகம்,சமூக உலகம் இரண்டிலும் ஊசலாடி, இரு நிலை பாதிப்பினால் சொல்லொணா துயரம் எய்தினர். இந்த வகை மன நிலை பிறழ்வுகளை வைத்து , 1950 களிலும், 1960 களிலும், வெகு சில ஹாலிவுட் படங்களே வெளியாயின. அவையும் பெரும்பாலும் thriller வகைதான். ஆனால் இந்திய சினிமா சரித்திர வரலாற்றிலேயே ,முதன் முறையாய், விளிம்பு நிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாநாயகனை, முன்னிறுத்தி , வடிவம்,உள்ளடக்கம் எல்லாவற்றிலும் ,மாறுபட்ட படமாய்(ஒரு அந்நிய பட inspiration ) ஒரு தமிழ் படம், சிவாஜி, ஜி.பாலசுப்ரமணியம்,ஜாவர் சீதாராமன்,கே.சங்கர், பீ.எஸ்.வீரப்பா கூட்டு முயற்சியில் வெளியானதும் இன்றி, எல்லாதரிப்பினராலும் ஆதரிக்க பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிறகு தெலுங்கு,ஹிந்தி எல்லா மொழிகளிலும் தழுவ பட்டது. சினிமா சரித்திரமே, அதற்கு முன்னும்,பின்னும் ,அந்த ரசவாத அதிசயத்தை கண்டதில்லை.காணவில்லை. காதல்,நட்பு,விசுவாசம்,பொறாமை, possessiveness , மனித-மிருக மனநிலை போராட்டம்,எல்லாம் சம நிலையில் தேக்கிய ஒரு positive approach கொண்ட மிக நல்ல காவிய சித்திரம்தான் ஆலய மணி.

ஆலய மணியின் கதையை பார்ப்போம்.

பெரும் பணக்காரன் தியாக ராஜன் ,உறவினர் யாருமின்றி வாழும் தனியன். சிறு வயதில் அதீத possessive குணத்தினால்,நண்பன் ஒருவன் மரணத்திற்கு காரணமாகி (மீனா என்று பெயரிட பட்ட பொம்மைக்காக ) , சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டு , deep seated trauma வின் பாற்பட்டு குற்ற உணர்வில் இருந்து மீள துடிப்பவன்.அதீத கருணை, மனித நேயம், வள்ளன்மை,பெருந்தன்மை ஆகிய குணங்களை வளர்த்து மிருக குணங்களை பொசுக்கி வாழ நினைத்தாலும் அவ்வப்பொழுது தலை தூக்கும் போட்டி,பொறாமை குணங்களால் உந்த படுபவன். தற்செயலாய், சேகர் என்ற டாக்டருக்கு படிக்கும் ஒருவனின் நற்பண்புகளால் கவர பட்டு ,ஏழையான அவனை,சம-நிலை நண்பனாய் பாவித்து ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.சேகருக்கு வானம்பாடி என்ற புனை பெயர் காதலி. சேகருடன் சேர்ந்து படிக்கும் பிரேமா சேகரை ஒரு தலையாய் விரும்புகிறாள். பிரேமாவின் அப்பா ஆட்கொண்டான் பிள்ளையோ பண பேய். பெண்ணை தியாகுவிற்கு மணமுடிக்க விரும்புகிறார். தற்செயலாய் எஸ்டேட் கணக்கு பிள்ளை முத்தையாவின் இளைய மகள் மீனாவை சந்தித்து விரும்ப ஆரம்பிக்கிறான் தியாகு. சந்தர்ப்ப வசமாய் முத்தையாவின் மூத்த பெண் ,ஆட்கொண்டானால் வஞ்சிக்க படும் போது தலையிட்டு ,அந்த பெண்ணை விரும்பியவனே மணக்க காரணமான தியாகு,தன் நண்பன் சேகர் மூலம் தான் மீனாவை மணக்க விரும்புவதை தெரிவிக்கிறான். ஆனால் அந்த மீனாதான் ,தான் விரும்பிய வானம்பாடி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் சேகர்,தன் நண்பனின் விருப்பத்தை மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.மீனாவிடம் உண்மையை தியாகுவிடம் இருந்து மறைக்க சொல்கிறான்.

இதனால் பொறாமையடையும் ஆட்கொண்டான், மீனாவை பழிவாங்க, காரின் brake ஐ பிடுங்க,காப்பாற்ற முனையும் தியாகு,brain concoction மற்றும் multiple -fracture இனால் கால்களின் செயல் பாட்டை இழக்கிறான். திருமண நிச்சயம் செய்ய பட்ட மீனா ,தியாகுவிடம் ,தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவு காட்டுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்,மீனா -சேகரின் மேல் சந்தேகம் கொண்டு,சேகரை கொலை செய்ய மரண பாறைக்கு அழைத்து செல்கிறான் தியாகு . கொலை முயற்சியில் தப்பிக்கும் சேகர், உண்மையை சொல்ல,குற்ற உணர்ச்சியில் தியாகு தானே ,மரண பாறையில் இருந்து குதித்து விடுகிறான். பிறகு ,காப்பாற்ற பட்டு, கால்களை பெற்று, பிரேமா-சேகர், மீனா -தியாகு ,ஒன்று சேர சுபம்.

இந்த படத்தில் நடிகர் திலகம் ,பாத்திரத்தை மிக புரிந்து அசத்துவார். தாயன்பு அறியாத,தந்தையால் உதாசீன படுத்த பட்ட ,தனிமை பட்ட, தன்னை தூயவனாய் மாற்றி கொள்ள விழையும் பாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து ,கண் முன் நிறுத்துவார். (வழக்கொழிந்து கொண்டிருந்த தூய தமிழ் வசனங்கள் உறுத்தினாலும்).நண்பனுடன், என்னிடம் இல்லாத உயர்ந்த பண்பு உன்னிடம் உள்ளது என்று குறிப்பிட்டு, தானே ஒரு possessive type என்ற போதிலும்,நண்பன் ,ஒரு வாக்குவாதத்தில்(யார் காதலி உயர்ந்தவர்?) சட்டையை பிடித்து விட,ஒரே நொடியில் சுதாரிப்பார்.சம நிலை அடைவார். ஒரு explicit demonstrative பாணியில் நடிப்பார். நல்ல தன்மையை வளர்த்து கொள்ள விழையும் ஒருவனின் துடிப்பு அதில் நன்கு தெரியும். சரோஜா தேவியை முதல் முறை பார்த்து, ஒரு ஆச்சர்யம் கலந்த ஆசை பார்வை வீசும் போதும்,பிறகு ,உங்கள் பெண்ணின் வாழ்வு மலரட்டும் என்று சரோஜா தேவியிடம் திரும்பி ,ஒரு நொடி அர்த்தமுள்ள வாஞ்சையுடன் பண்ணும் gesture , deep seated trauma with shock and despair என்பதை காட்டும் சிறு வயது சம்பந்த பட்ட காட்சிகள், கால்கள் இழந்ததை உணரும் தருணம்,தனித்திருக்க விரும்பவதை வறட்சியுடன் சொல்வது எல்லாம் அற்புதம். நடிகர் திலகம் ,விஸ்வரூபம் எடுக்கும் இடங்கள்,, சந்தேகம் சூழ்ந்து மிருக உணர்ச்சி தலை தூக்கும் இடங்கள்.ஆசையுடன் ,தன் நிச்சயிக்க பட்ட பெண்ணை வெறிக்கும் எஸ்.எஸ்.ஆரை பார்த்து ஆத்திரப்பட்டு கத்தும் இடம், feeling of inadequacy யினால், விபரீத கற்பனையில் மூழ்கி(mind picture gives rise to restive passion and subsequent revenge attitude ),மிருக குணத்தில் தன்னை அமிழ்த்தும் இடங்களில்,அடடா முழு படமும் மிருகமாகவே இருந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கும் நடிப்பு.

இந்த படத்தை உயரத்தில் தூக்கி நிறுத்துவது, கதை,திரைக்கதை , எடிட்டிங், இயக்கம்,பாடல்கள்,இசை,சக நடிக-நடிகையரின் அபார பங்களிப்பு ஆகியவை. சிறிது சறுக்க வைப்பது out -dated தூய தமிழ். அதுவும் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே தூய தமிழ் பேசும். நல்ல வசனங்களை கொண்டிருந்த ஆலய மணி,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இந்த வகை வசனங்கள் பெரும் குறையாக படும்.

மிக மிக குறிப்பிட பட வேண்டியது எஸ்.எஸ்.ஆரின் அபார நடிப்பும்,சரோஜா தேவியின் நல்ல பங்களிப்பும்.(பாலும் பழமும்,இருவர் உள்ளம் போல்)

விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கேட்கவே வேண்டாம். full form இருந்த போது வந்த படம்.கண்ணதாசன் - இரட்டையர் இசையில், கண்ணான கண்ணனுக்கு,தூக்கம் உன் கண்களை ,மானாட்டம்,பொன்னை விரும்பும், கல்லெல்லாம் மாணிக்க, சட்டி சுட்டதடா,எல்லாமே பயங்கர ஹிட் பாடல்கள்.படத்திலும் மிக நல்ல முறையில் படமாக்க பட்டிருக்கும்.

பட துவக்கமே ,அன்றைய ரசிகர்களுக்கு shock value கொண்டதாக பட்டிருக்கும். கதாநாயகிகள் கற்புக்கரசிகளாய் வலம் வந்த இந்திய திரையில் infatuation பற்றி பேசியது சாதா விஷயமல்ல. அன்றைய முதல் இடத்தில் இருந்த ஸ்டார் நடிகரின் படத்தில் இரண்டாம் ஹீரோ கதாநாயகியுடன் டூயட் பாடியது, கதாநாயகனை விட ,நண்பனை உயர் குணத்துடன் சித்தரித்தது எல்லாவற்றையும் பார்த்தால், நடிகர் திலகம் என்பவர் எப்படி நல்ல படங்களுக்காக ஒத்துழைத்தார் என்பது இமேஜ் இமேஜ் என்று ஓவர்-மார்க்கெட் செய்யும் இளைய தலை முறைக்கு பாடம்.


ஆலய மணியில் எடிட்டர் ,இயக்குனர் கே.சங்கரின் பங்களிப்பு அபாரமானது. கத்தி மேல் நடப்பது போன்ற கதையமைப்பில் ,சிறிதும் சறுக்காமல், அனைத்தையும் லாஜிக் உடன் justify பண்ணும் இயக்கம்.ரசிகர்கள் விரும்பும் அம்சங்களையும் அழகாக கலந்து, காமெடி அது-இது என்ற கதையை தொய்ய வைக்காத அற்புத இயக்குனர். trauma சம்பந்த பட்ட காட்சி, பின்னால் சிவாஜியின் மன போராட்ட காட்சி(ஆண்டவன் கட்டளையிலும் அற்புதமாய் வந்திருக்கும்-தேவிகாவினால் அலைக்கழிக்க படும் காட்சிகளில்) என்று, எடிட்டிங்,நடிப்பு,இசை,இயக்கம் எல்லாம் கை கோர்த்து படத்தையே உயர்த்தும்.


இந்த படத்தை பொறுத்த வரை முதல் ஹீரோ கதைதான். ஜி.பாலசுப்ரமணியம் ஒரு மூல கதை மேதையாகவே போற்ற பட்டார்.(கே.எஸ்.ஜி, சோலைமலை,செல்வராஜ் போல்) சிக்கலான அமைப்பை கொண்ட கதைக்கு, மிக சிறந்த திரைகதையை கொடுத்த ஜாவர் பாராட்டுக்குரியவர்.

கோப காரன்,பொறாமைக்காரன், பாதி மனிதன்-பாதி மிருகம்,அழித்து விடும்(nihilistic ) உணர்வு மிகும் possessive உணர்வு கொண்ட மனிதன்,personality disorder இனால் வரும் நம்பிக்கை குலைவு(Feeling of inadequecy accentuates it), அதனால் எழும் பின்னலான மனித மன உணர்வுகள், மனித உணர்வுகளில் கறுபபு கறை படிந்து , அதன் நிழலில் மனசாட்சியின் குரலை நசித்து, மிருக வசப்படும் உணர்வை, மிகையில்லாமல், melo -drama குறைத்து , positive ஆக சொன்ன மிக மிக சிறந்த படைப்பு ஆலய மணி என்று அடித்து சொல்லலாம்.

sivaa
26th November 2017, 07:31 AM
Natarajen Pachaiappan


ஜாஹிர் உசேன் அய்யா மாஸ்டர் பீஸ்... வரிசை எண.9... பார்ட் 3 வரை பதிவிட்ட பின்பு இதே போன்று இன்னொரு பதிவா? என நினைக்கலாம். சில நேரங்களில் ஒருவர் சிந்திக்கும் நேரத்தில் அதையையே இன்னொருவர் சிந்திப்பதும் ஒன்றாகிவிடுகிறது. அய்யா அவர்கள் அத்தனையும் அலசி ஆராய்ந்த சொல்லிவிட்டார். புதிதாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
நடிகர்திலகம் அவர்கள் எத்தனையோ தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும், தொழில் நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும்
உருவாக்கிவிட்டவர் என்பது நமக்கு தெரியும்.

வீட்டில் வேலை நேரம் போக சிவாஜி என்ற மாபெரும் கலைஞனை சிந்திப்பதே தொழிலாக போன நமக்கு... இணையத்திலிருந்து படித்ததை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
.................................................. .................................................. ....


சிவாஜி இல்லையென்றால்... - இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் பேட்டி!

பதிவு செய்த நாள்: ஜன 01,1970 05:30

சிவாஜியுடன் நீண்ட காலம் நெருங்கிப் பழகியவரும், சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்திரி, ராஜா, சந்திப்பு உள்பட, 14 வெற்றிப் படங்களை இயக்கியவருமான, இயக்குனர் சி.வி.ராஜேந்திரன், நடிகர் திலகம் பற்றிய சுவையான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் என்னுடைய சொந்த அண்ணன். ஸ்ரீதர் போன்ற மிகச் சிறந்த டைரக்டரிடம் உதவியாளராக, பிறகு அசோசியேட் டைரக்டராக நிறைய விஷயங்கள் கற்று, பின்னர் டைரக்டரானதற்கு, பெருமைப்படுகிறேன். உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜியோடு, அதிக படங்கள் டைரக்ட் செய்தது, நான் செய்த பெரிய புண்ணியம்!

கடந்த, 1957ல், "கேளீர் விக்ரமாதித்தியரே' என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை, குமுதம் பத்திரிகையில் வெளிவந்தது, இதை படித்த ஸ்ரீதர், "பரவாயில்லையே... உனக்கு நல்ல ஸ்டோரி சென்ஸ் இருக்கே...' என்று பாராட்டினார். 1960ம் ஆண்டிலிருந்து, 1967ம் ஆண்டு வரை, மீண்ட சொர்க்கம், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற பல படங்களில், அவரிடம் உதவியாளராக இருந்து, பின், "காதலிக்க நேரமில்லை' படத்தில், அசோசியேட் டைரக்டரானேன்.

நான் இயக்கிய முதல் படம், "அனுபவம் புதுமை!' அந்தப் படத்தில், சிவாஜி நடிக்கவில்லை என்றாலும், சிவாஜிக்கும், அந்தப் படத்திற்கும் சம்பந்தம் உண்டு. அருணாச்சலம் ஸ்டுடியோ அதிபர் வேலன் தயாரித்த, அனுபவம் புதுமை படத்தில், முத்துராமன், ராஜஸ்ரீ நடித்தனர். அப்படத்தில் இடம் பெற்ற, "கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்...' என்ற, பாடல் காட்சிகளை என் சகோதரர் ஸ்ரீதருக்கும், நடிகர் திலகத்திற்கும் திரையிட்டுக் காண்பித்தேன்.

"ரொம்ப நல்லா எடுத்திருக்கேடா...' என்று சிவாஜி, என்னை கட்டி அணைத்து பாராட்டினார். ஸ்ரீதரும், பாராட்டினார். சிவாஜியிடம் நான் பெற்ற முதல் பாராட்டு அது.

இயக்குனர் ஸ்ரீதரும், அவரது நெருங்கிய நண்பரும், கதாசிரியருமான கோபுவும் இணைந்து, போர் நிதிக்காக, சினிமா நட்சத்திரங்களின் கலை விழாவிற்கு ஒரு நாடகம் எழுதினர். நாடகத்தின் பெயர், "கலாட்டா கல்யாணம்!' மேடையில் சிவாஜி, ஜெமினி, வி.கே.ராமசாமி, நாகேஷ், முத்துராமன், சவுகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, அவர் அம்மா சந்தியா உள்பட, ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்தது; சூப்பர் ஹிட்டானது.

சில ஆண்டுகள் கழித்து, அந்த நாடகத்தை, திரைப்படமாக தயாரிக்க, சிவாஜியின் ஆடிட்டர்களான, சம்பத்குமார் மற்றும் நாக.சுப்பிரமணி இருவரும் விரும்பினர். சிவாஜியின் மூத்த மகன் பெயரில், "ராம்குமார் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. படத்திற்கு யாரை டைரக்டராக போடுவது என்ற விவாதம் வந்த போது, சிவாஜியின் இளைய சகோதரரும், அவரது நிர்வாகம் முழுவதும் கவனித்து வரும் ஷண்முகம், ஒரு சில டைரக்டர்கள் பெயர்களை சொன்னார்; ஆனால், சிவாஜியோ, "ராஜி பண்ணட்டும்...' என்றார். சிவாஜியும், சில நெருக்க மானவர்களும், என்னை ராஜி என்றே அழைப்பர்.
ராம்குமார் பிலிம்சின் முதல் தயாரிப்பான, "கலாட்டா கல்யாணம்' திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு, சிவாஜி அளித்த உத்தரவாதத்தால், எனக்கு கிடைத்தது.

இந்தப் படத்திற்கு பல சிறப்புகள் உண்டு. சிவாஜி, ஏ.வி.எம்.ராஜன், நாகேஷ், கோபி, சோ, ஜெயலலிதா, ஜோதிலட்சுமி, சச்சு, மனோரமா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்தது.
ஒரு வருடம், டயட்டில் இருந்து, உடல் எடை குறைத்து, ஸ்லிம்மாக, ஸ்டைலிஷ்ஷாக, இப்படத்தில் சிவாஜி இருப்பார்.
சிவாஜி, ஜெயலலிதா இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது.

அப்போது நடந்து முடிந்த சர்வதேச கண்காட்சியை ஓட்டி, அண்ணா நகரில் ஒரு டவர் கட்டினர். அந்த டவரில், முதலில் படப்பிடிப்பு நடந்ததும், அந்த டவரை சினிமாவில் முதல் முறையாக காட்டியதும் நாங்கள் தான்.

சிவாஜி நடித்த காமெடி படங்களில், அவருக்கு பிடித்த படம், "கலாட்டா கல்யாணம்!' இப்படம் சூப்பர் ஹிட்டானது. பல சென்டர்களில், நூறு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது.
அடுத்து, "சுமதி என் சுந்தரி!' சிவாஜி - ஜெயலலிதா மீண்டும் இருவரும் இணைந்து நடித்த காமெடி படம். அதிலும், பல புதுமைகள். கேரளாவில், தேக்கடியில், 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய முதல் தமிழ் கலர் படம். பசுமையான அவுட்டோர் படப்பிடிப்பு. எனக்கு பெருமை சேர்த்த இன்னொரு படம் இது.

பிறமொழிப் படங்களை தமிழில், ரீ-மேக் செய்து, வெற்றிப் படங்களாக தருவதில், நிகரற்றவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாலாஜி. அவரை,"ரீ மேக் கிங்' என்றே சொல்வர். அவர், ரீ-மேக் செய்த படங்களில் அதிகமாக நடித்திருப்பவர் சிவாஜி தான்.

அவருக்கு முதலில் ரீ-மேக் படங்களை தொடர்ந்து இயக்கிக் கொடுத்தவர், பிரபல இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். "ஜானி மேரா நாம்' என்ற இந்தி சூப்பர் ஹிட் படத்தை, தமிழில் ரீ-மேக் செய்ய ஆரம்பித்த போது, ஏதோ சொந்த காரணங்களால், திருலோகசந்தர், அந்தப் பணியை ஏற்க விரும்பவில்லை. தயாரிப்பாளர், சிவாஜியிடம் மூன்று டைரக்டர்கள் பெயர்களை குறிப்பிட்டு, யாரை போடலாம் என்று கேட்டார்.
"சி.வி.ராஜேந்திரன் பண்ணட்டும்...' என்று சொன்னார் சிவாஜி. ராஜா படத்தில் மீண்டும் சிவாஜி, ஜெயலலிதா இணைந்து நடித்தனர். ராஜா படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து மீண்டும் சிவாஜி, ஜெயலலிதா நடித்த, மற்றொரு ரீ-மேக் படம், நீதி. அதுவும் சூப்பர் ஹிட்டானது. சிவாஜி - மஞ்சுளா நடித்த, "என் மகன்' படமும் வெற்றிகரமாக ஓடியது
.
சிவாஜி - ஜெமினி இருவரும் சேர்ந்து நடித்த ரீ-மேக் படம், உனக்காக நான். இந்தியில் சூப்பர் ஹிட்டான, ஆராதனா (ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் நடித்தது) படத்தை, சிவகாமியின் செல்வன் என்று ரீ-மேக் செய்தோம்; .

சென்னையில் ஒரு வருடமும், தமிழகத்தில் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிய இந்தி படத்தை, ரீ-மேக் செய்ய எடுத்த முடிவு சரியானதல்ல என்று உணர்ந்தோம்.
சிவாஜி- ஸ்ரீதேவி, பிரபு -ராதா நடித்த, "சந்திப்பு' என்ற படத்தை சிவாஜி பிலிம்சுக்காக இயக்கினேன். படம் சூப்பர் ஹிட்டாக, 25 வாரங்கள் ஓடியது.

பிரபுவை சங்கிலி படத்தில் அறிமுகப்படுத்திய பெருமை, எனக்கு கிடைத்தது. இந்தி படத்தில், பிரபல வில்லன் டேனி டென்சோகப்பர் நடித்த பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு அந்த ரோலுக்கு பிரபு பொருத்தமாக இருப்பார் என்று பட்டது. "டேய்... பிரபுவை போலீஸ் ஆபீசராக ஆக்கணும்ன்னு நான் பிளான் போட்டிருக்கேன். நடிப்புன்னா சரியாக வருமா?' என்று சந்தேகப்பட்டார் சிவாஜி.

"பிரபு பெரிய நடிகனாக வர முடியும் என்று எனக்கு மனதில் படுகிறது...' என்றேன்.
சிவாஜி நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, கவுரவம். "அண்ணே... இந்தப் படத்திலே ரொம்ப சூப்பராக பண்ணியிருக்கீங்க... ஆறு மாதம், எட்டு மாதம் எந்தப் படமும் பண்ணாதீங்க... ஜனங்க இந்தப் படத்தை மறக்க மாட்டாங்க...' என்று சொன்னேன்.

சினிமாவில் எல்லா துறைகளிலும் சாதனை புரிந்த சிவாஜி, அரசியலில் மட்டும் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்பது, எனக்கு புரியாத புதிராக இன்றும் இருக்கிறது.
"சிவாஜி மீது எனக்கு அபரிமிதமான பக்தி. என் வாழ்வில் எனக்கு கிடைத்த வெற்றி, திருப்பு முனைகள் எல்லாமே, அவரால் தான் கிடைத்தது. அவர் இல்லையென்றால், சி.வி.ராஜேந்திரன் திரைப்பட வாழ்க்கை இல்லை...' என்றார் சி.வி.ராஜேந்திரன்.
***
* சிவாஜியை வைத்து அதிகமான படங்கள் டைரக்ட் செய்திருக்கும் இயக்குனர்கள் நான்கு பேர். ஏ.பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர் இருவரும் தலா, 18 படங்கள்; பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் இருவரும் தலா, 14 படங்கள் இயக்கி உள்ளனர்.
* நாவலாசிரியர், நா.பார்த்தசாரதி எழுதிய பிரபலமான, "குறிஞ்சி மலர்' நாவலை, தூர்தர்ஷனுக்காக, 13 வாரங் கள், "டிவி' நாடகமாக சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். ஹீரோ அரவிந்த் ஆக நடித்தது, மு.க.ஸ்டாலின்.
*சிறிய நடிகரோ, பெரிய நடிகரோ, நடிகையோ, யார் நன்றாக நடித்தாலும், அவர்களை மனதார பாராட்டுவார் சிவாஜி.
*பல இயக்குனர்கள் கேட்டும், படங்களில் சொந்தக் குரலில் பாடு வதற்கு சிவாஜி ஒப்புக் கொள்ளவில்லை.
* 1954 முதல், 1970 வரை விடுமுறை நாட்கள் தவிர, படப்பிடிப்பு நடக்கும் நாட்களில், சிவாஜியைப் போல வேறு யாரும் வேலை செய்திருக்க முடியாது. காலை, 7:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, மதியம், 2:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, இரவு, 10:00 மணி முதல், நள்ளிரவு, 2:00 மணி வரை படப்பிடிப்பில் ஈடுபடுவார். ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட்கள். விடியற்காலை, 3:00 மணிக்கு வீட்டில் சூடாக இட்லி சாப்பிட்டு, சோபாவிலே உட்கார்ந்து, ஒரு மணி நேரம் தூங்குவார். கோழி தூக்கம் என்று சொல்வரே, அதுபோல். 5:00 மணிக்கு எழுந்து, குளித்து, 6:30 மணிக்கு, மீண்டும் செட்டில் ரெடியாக இருப்பார்; அசுர சாதனை!
* பிற மொழிகளிலிருந்து, தமிழில் ரீ-மேக் ஆகும் பல படங்களில் சிவாஜி நடித்து, நூறு நாட்கள் வெற்றிப் படங்களாக ஓடி இருக்கின்றன. ரீ-மேக் படங்களில் நடிக்கும் போது, அந்த ஒரிஜினல் படங்களை, சிவாஜி பார்க்கவே மாட்டார். பிற நடிகர்களுடைய சாயல், பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை இதற்குக் காரணம்.
***
எஸ். ரஜத்
.................................................. .........................
1
கலாட்டா கல்யாணம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மறுதயாரிப்பாக 1978ல் மலையாளத்தில் "ஸ்நேகிக்கான் சமயமில்லா"
படமாக வெளிவந்தது.
1979ல் "அலியா தேவரு" ஸ்ரீநாத், கன்னநட மஞ்சுளா நடித்த கன்னட படமாக மறுபடியும் C V ராஜேந்திரன் அவர்களே இயக்கினார்.
2
சுமதி என் சுந்தரி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படம் 1968 ல் "நாய்க்க சங்பாத்" என்ற வங்காளப் படமாக உத்தம்குமார், அஞ்சனாபவ்மிக் நடிப்பில் வெளிவந்த படம்
3
ராஜா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
1970ல் ஜானி மேரா நாம் தேவ் ஆனந்த், ஹேமாமாலினி நடித்தப்படம்.
1975ல் தெலுங்கில் "எதுருலேனி மனுஷி" படத்தில் NT ராமாராவ், வாணிஸ்ரீ நடித்தது.
1984ல் கன்னடத்தில் "அபூர்வ சங்கமா" ராஜ்குமார்,அம்பிகா நடித்தப்படம்.
4
நீதி 1972ல் சுஜாதா சினியார்ட்ஸ் தயாரிப்பில் சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சௌகார், சித்தூர் நாகையா, நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஹிந்தியில் 1971ல் ராஜேஷ்கண்ணா,மும்தாஜ் நடித்த துஷ்மன் என்ற படமாகும்.
5
பொன்னூஞ்சல் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
6
மனிதரில் மாணிக்கம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
7
சிவகாமியின் செல்வன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
1969 ல் ராஜேஷ்கண்ணா, ஷர்மிளா டாகூர் நடித்த ஹிந்திப்படம். இது வங்காள மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. ஃபிலிம் ஃபேர் விருது படத்திற்கும், சிறந்த நடிகைக்கான விருது ஷர்மிளா டாகூருக்கும் பெற்றுத்தந்தது.
1974 "கண்ணவாரி கலலு" தெலுங்கு படத்தில் ஷோபன்பாபு, வாணிஸ்ரீ நடித்தார்கள்
8
1974 ல் வந்த "வாணி ராணி" இந்தக் கதை நாயகிக்கானது. வாணிஸ்ரீக்கு இரட்டை வேடங்கள் ஒரு நாயகன் முத்துராமன் இன்னொரு நாயகன் நம்மவர். இது போன்ற கதையமைப்பில் நடிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். தன் திறமைமேல் நம்பிக்கை அசாத்திய நம்பிக்கை கொண்டவர் எந்த பாத்திரத்தையும் ஏற்க தயங்கியதில்லை. இது நிறைய படங்கள் படம் வெற்றிபெறத்தான் நம்மவரை தேர்தெடுத்தார்கள். கழக்கூத்தாடியாக வருவார் ஜாலியான பாத்திரம் "பாத்துப்போ பாத்துப்போ" பாடலிலும் வருகின்ற காட்சிகளிலும் பின்னியிருப்பார்.
1972ல் வெளிவந்த "சீதா ஆவுர் கீதா" ஹேமாமாலினி(வாணிஸ்ரீ), தர்மேந்திரா(சிவாஜி), சஞ்சீவ்குமார்(முத்துராமன்)
1973ல் "கங்கா மங்கா" தெலுங்கு படத்திலும் வாணிஸ்ரீ நடித்தார்கள் கிருஷ்ணா(சிவாஜி), சோபன்பாபு(முத்துராமன்) நடித்திருப்பார்கள்.
9
"என் மகன்" நடிகர்திலகம் இரண்டு வேடங்களில்
மஞ்சுளாவுடன் நடித்த படம். "நீங்கள் அத்தனை பேரும் உத்மர்தானா சொல்லுங்கள்" பாடலில் அன்றைய அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் இன்றைய அரசியல்வாதிகளின் தோலை உரித்த படம். மினிஸ்டர் காட்டன் போட்டு மறைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.
இந்தப்படம் 1972ல் மனோஜ்குமார், ராக்கி, பிரான் ஆகியோர் நடித்த "பி-இமான்" (Be-Imaan)
என்ற ஹிந்தி படத்தின் மறு தயாரிப்பு.
10
உனக்காக நான் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்தப்படம் 1974 "நமக்கரராம்" (Namak Haraam)
ராஜேஷ் கண்ணா , அமிதாப் பட்சன் நடித்த படம்.
இதன் மறுதயாரிப்பு உனக்காக நான்.
11
சங்கிலி என்பது 1982 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பிரபு, ஸ்ரீபிரியா, நம்பியார் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சி. வி. ராஜேந்திரன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படம் இளையதிலகம் பிரபுவின் முதல் படம்.
இத்திரைப்படம் 1976ல் வந்த "காலிசரண்"என்ற ஹிந்திபடத்தின் மறு தயாரிப்பு. இந்த படத்தில் சத்ருக்கன் சின்ஹா(சிவாஜி) ரீனாராய், டானி(பிரபு) நடித்திருந்தினர்.
1985ல் பதமுதயம் (Pathamudayam) என்ற மலையாள படமாக மறுதயாரிப்பில் மோஹன்லால் நடிப்பில் வந்தது.
12
"தியாகி" 1982ல் நடிகர்திலகம், சுஜாதா நடித்த படம். இந்தப்படம் 1981ல் அம்பரீஸ், லஷ்மி நடித்த வந்த "அந்தா" என்ற கன்னட படத்தின் மறுதயாரிப்பு.
13
"சந்திப்பு" 1983ல் நடிகர்திலகம், பிரபு,ஸ்ரீதேவி,சுஜாதா நடித்து மிகப்பெரிய வெற்றியை தந்தப்பபடம் இந்தப்படம் 1981ல்
அமிதாப்,ஹேமாமாலினி,ரிஷிகபூர்,சத்ருக்கன் சின்ஹா, பிரான் நடிப்பில் "நஸீப்" (Naseeb) என்ற இந்தி படமாக வந்தது. இதன் மறு தயாரிப்புத்தான் சந்திப்பு.
14
வாழ்க்கை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படம் 1983ல் ராஜேஷ்கண்ணா, ஷப்னா ஆஸ்மீ நடித்த "அவ்தார்" என்ற ஹிந்தி படத்தின் மறுதயாரிப்பு.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/23795697_718490171674039_3272593968259581737_n.jpg ?oh=03efc250e236b79361d158b92c2e10ab&oe=5AD5B97F
(https://www.facebook.com/photo.php?fbid=718490171674039&set=pcb.718493158340407&type=3)
(https://www.facebook.com/photo.php?fbid=718490245007365&set=pcb.718493158340407&type=3)

sivaa
26th November 2017, 07:34 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23795266_193777381196142_3633772776922790450_n.jpg ?oh=097ef59971ad8731b4ebca967c8273e4&oe=5ACFF601

sivaa
26th November 2017, 03:20 PM
Sekar Parasuram





இன்று பிற்பகல் 1:30 க்கு வானவில் தொலைக்காட்சியில்
" எங்கிருந்தோ வந்தாள்"

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/23795612_1529496077167277_6995194674038297425_n.jp g?oh=4d557ee96d13846054c50b3f285e18b1&oe=5AA54B44

sivaa
26th November 2017, 09:20 PM
vasu devan


"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (நான்காம் பாகம்).



(கொடுத்திருக்கும் இமேஜ்களில் திலகத்தின் தெனாவட்டை கவனியுங்கள்)


N.T. ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னைப் பழிவாங்கத் துடிப்பதைப் புரிந்து கொள்ளும் சங்கிலி முருகன் N.T.யைக் கொல்ல ஒரு அடியாளை ஏற்பாடு செய்வார். வீட்டில் N.T யிடம் நைசாகப் பேசிக்கொண்டே சங்கிலி முருகன் N.T யின் பின்னல் ஒளிந்து நிற்கும் அந்த அடியாளிடம் N.T.யைக் கொலை செய்யச் சொல்லி சைகை செய்ய, N.T விஷயம் தெரியாதவாறு வேறொரு பக்கம் பார்த்தபடி நின்று கொண்டிருப்பார். அந்த அடியாள் பின்னாலிருந்து N.T. யை அடிக்க நெருங்குகையில் N.T. சற்றும் எதிர்பாரவிதமாக அந்த அடியாளைப் பார்க்காமலேயே
"டேய்! கபாலிக் கய்தே! வந்து அடியேண்டா...எவ்வளவு நாழி காத்துகிட்டு இருக்கிறது?"

என்பாரே பார்க்கலாம்! அந்த அடியாள் N.T யின் அடியாள் கபாலிதான் என்பது தெரியாமல் அவனையே N.T. யைக் கொலை செய்யக் கூட்டி வந்து பேந்தப் பேந்த முழிக்கும் சங்கிலி முருகனைப் பார்த்து,
"ஹஹ்ஹா"....என்ற கேலியோடு கூடிய வெறித்தன சிரிப்பை சிதற விட்டுவிட்டு N.T
"என் ஆளை வச்சே என்னை மடக்கப் பார்த்தியா?

நீ என்ன பெரிய புத்திசாலின்னு நெனப்பா?

நான் யாரு தெரியுமா? உங்க தாத்தா" என்று எகத்தாளம் புரிவது எக்ஸலன்ட்.
பின் தொடர்ந்து சங்கிலி முருகனிடம்,

"உன்னை income tax-இல் காட்டி கொடுத்ததும் நான்தான்...
உன் கம்பெனியெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணச் சொன்னது நான்தான்...

உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னது நான்தான்...(இந்த இடத்தில் கீழே தரையில் இருக்கும் சின்னஞ்சிறு வட்டத் திண்டு ஒன்றின் மேல் திமிர்த்தனமான வெறியோடு வலது காலைத் தூக்கி வைப்பார்)
உன் மேனேஜரை விட்டே என்னை இங்கு கூட்டிட்டு வரச் சொன்னதும் நான்தான்"...

என்று படிப்படியாகத் பழி உணர்வைத் தன் குரலில் உயர்த்தி,
"சகலமும் நானே! காரியமும் நானே! எப்படி என்னுடய கீதாபதேசம்" என்றபடி கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை படு ஸ்டைலாக சுண்டிவிட்டு,பார்வையில் அனல் கக்க வைத்து விஸ்வரூபம் எடுத்த கிருஷ்ண பரமாத்வாக சங்கிலி முருகனை கதிகலங்க வைப்பார். (நம்மையுந்தான்)

"எப்படி என்னுடய கீதாபதேசம்" சிகரெட்டை ஸ்டைலாக சுண்டிவிடும் காட்சி
உடன் சங்கிலி முருகன் N.T யின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க, N.T அவரைத் தூக்கி நிறுத்தி,

"இப்ப கால்ல விழுந்தா உன்னை நான் மன்னிச்சிடுவேன்னு நெனச்சியா?...அன்னைக்கு உன் கார்ல அடிபட்டு குத்துயிரும், கொலையுயிருமா கிடந்தாளே மேரியம்மா...அவள என்னா ஏதுன்னு கூடப் பார்க்கம நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுப் போட்டுட்டு குடிவெறியில காருல பறந்துட்ட இல்ல...அவ யார் தெரியுமா... என் தாய்...என் தாயாருங்கிறதுக்காக மட்டும் நான் சொல்லல..எதிரியாய் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும்... நீ செய்தியா?...இல்ல...ஏன்?"

என்று சங்கிலி முருகனின் தோள்களைத் திருப்பி அவர் நெஞ்சில் வலது கைவிரல்களை மடக்கி முஷ்டியால் மூன்று முறை குத்தியபடியே,
"பணக்காரன்ற திமிர்...நீ செஞ்ச குத்தத்த மறைக்கணும்கிறதுக்காக கேவலம் பிச்சக் காசு பத்தாயிரம் கொடுத்தனுப்பிச்சே இல்லே...
எங்க அம்மாவோட விலை கேவலம் பத்தாயிரம் ரூபா இல்ல...
உன் கேசுல நானே பெர்சனலா ஏன் interfere ஆகி இருக்கேன் தெரியுமா?
என் ஆட்களை அனுப்ச்சா உன்னை ஒரேயடியா"
என்று நிறுத்தி

தன் கரத்தை பக்கவாட்டில் வலதும் இடதுமாக அசைத்து தீர்த்துக் கட்டுவது போன்ற பாவனையில் "விஷ்" என்று சற்று நிறுத்திவிட்டு (கையால் வெட்டுவது போன்ற படு அலட்சியமான ஒரு மூவ்மென்ட்டைக் கொடுப்பார். இந்த குறிப்பிட்ட ஒரு செய்கைக்காகவே இந்தப் படத்தை ஓராயிரம் முறை பார்க்கலாம்)

"குளோஸ் பண்ணிடுவாங்க"...என்று தொடருவார்.(இந்த மூன்று நிமிடக் காட்சியில் நடிகர் திலகத்தின் அற்புதமான டயலாக் டெலிவரியுடன் கூடிய அனாயாசமான அந்த சூறாவளி நடிப்புப் பரிமாணம் மற்ற அவர் படங்களிலிருந்து இந்தப் படத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும்)
பின் தொடர்ந்து,

"நீ அப்படி சாகக் கூடாது...உன் உயிர் இருக்கிற வரைக்கும் அணு அணுவா... (நிறுத்தி திரும்ப ஒருமுறை உச்சரிப்பார்) அணு அணுவா...துடிச்சி சாகணும்... (இந்த இடத்தில் வலது கை விரல்களை ஒன்று சேர்த்துக் குவித்து, விரித்து பின் மறுபடியும் குவித்து விரித்து அணு அணுவாக என்ற வார்த்தைக்கேற்ப அற்புதமான அசைவை அசால்ட்டாக பிரதிபலிப்பார்) நான் சொல்றது உனக்கு மட்டுமில்லே!... பணத்த வச்சுகிட்டு செஞ்ச குற்றத்த மறைக்கப் பார்க்குறானுங்களே...அத்தனை பணக்காரப் பசங்களுக்கும் இந்த தீனதயாள் விடுற எச்சரிக்கைடா டாய்"
என்றபடி தன் வலது பக்க மீசையை அத்தனை விரல்களாலும் தடவியபடியே கம்பீரமான எச்சரிக்கை விடுவது தமிழ் சினிமாவிற்கு புது இலக்கணம். பின் அவரது பாணியில் "bastard" என்று மிரட்டிவிட்டு செய்வாரே ஒரு அமர்க்களம்...

கீழே விழுந்து கிடக்கும் அவரது துண்டை சங்கிலி முருகனிடம் எடுக்கச் சொல்லும் அந்தத் திமிரும் தெனாவட்டும் இருக்கிறதே! அடேயப்பா...அதுதான் ஹைலைட்..
"எட்றா துண்டை" என்று மிரட்டும் பயங்கரம்,

அந்த வார்த்தையை உச்சரிக்கும் தொனி,

துண்டை சங்கிலி முருகன் எடுத்துக் கொடுத்தவுடன் அதை ஸ்டைலாக கழுத்தில் போட்டுக் கொள்ளும் லாவகம்,

"be careful" என்று எச்சரித்துவிட்டு ஒரு ஸ்டெப் முன்னால் சென்று மறுபடி அதே ஸ்டெப்பை திரும்ப பின்னால் வைத்து "ம்" என்று ஆங்காரத்துடன் முறைத்துவிட்டுப் போகும் பயங்கரம்... (அந்த மனிதரைத் தவிர யாராவது இனியொருவர் பிறக்க முடியுமா?) சும்மா நெத்தியடி..

போதை மருந்து கடத்தச் சொல்லி N.T யிடம் பணம் தந்து பேரம் பேசுவார்கள் சிலர். அதை மறுத்து ஒதுக்கிவிட்டு,மாறாக அவர்களை அந்தத் தொழிலைச் செய்யக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைப்பார் N.T. ஏற்கனவே பணத்துக்கு ஆசைப்பட்ட தியாகராஜன் N.T. பணம் வாங்க மறுத்ததைக் கண்டு பணம் தர வந்த கும்பலிடம் தன்னிடம் பணத்தைத் தருமாறும், தான் N.T யிடம் சொல்லி போதை மருந்து கடத்த சம்மதம் வாங்கித் தருவதாக N.T. முன்னிலையிலேயே சொல்ல,அதைக் கேட்டு ஆத்திரமுறுவார் N.T. தியாகராஜன் N.T யிடம்,"உட்கார்ந்த எடத்துல பணம் வந்தா நோகுதா?...உங்களால முடியலைனா பேசாம ஒரு மூலையில் போய் உட்காருங்க...நான் பாத்துக்கிறேன்" என்று கூற, தான் வளர்த்த கடா தன் பேச்சுக்குக் கட்டுப்படாமல் தன் மீதே பாய்கிறதே என்று கோபத்தில் கொதித்து வெகுண்டெழுவார் N.T.

தன் தன்மானத்துக்கு கேடு விளைவித்ததோடு மட்டுமில்லாமல், தன் தாதா பதவிக்கே ஆசைப்பட்டுவிட்டானே என்று கண்மண் தெரியாமல் தியாகராஜனை போட்டிப் புரட்டி எடுத்து விடுவார் N.T. இந்த இடத்தில் இன்னொரு பிரளயத்தை நடத்திக் காட்டுவார் N.T. தியாகராஜனை விளாசிவிட்டு தரையில் அமர்ந்து கொண்டு சிகரெட்டைப் பற்றவைப்பார்.

"சே! சொறிநாயை விடகேவலமா போயிட்டடா நீ! நானும் பாத்துகிட்டே வரேன்...அன்னைக்கு என்னாடான்னா மம்மி செத்ததுக்கு பணம் கொண்டாந்து கொடுத்தே!...இன்னைக்கு என்னாடான்னா பணம் கொடுங்க! செய்வாருன்னு சொல்ற...இங்க ரெண்டு opinion க்கு இடம் கிடையாது...ஒரே opinion தான்... (இந்த இடத்தில் சிகரெட் புகையை ஒரு இழு இழுத்துவிட்டு நிறுத்தி பின்) அதுவும் அய்யாவோட opinion தான்... என் மூஞ்சியிலேயே முழிக்காதே"...என்ற ஆத்திரம் கலந்த வேதனையை வெளிப்படுத்துவார்.

பின்னால் அடிபட்டு நிலைகுலைந்து கீழே விழுந்து கிடக்கும் தியாகராஜன் தட்டுத் தடுமாறி எழுந்திருக்க முயல உடனே N.T தியாகராஜனைப் பார்க்காமலேயே கன்னத்தில் ஒரு கையை வைத்தபடி, "அப்படியே போடான்னா அப்படியே போகணும்" என அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிட, எழ முயற்சித்த தியாகராஜன் படுத்த வாக்கில் குழந்தை போல தவழ்ந்து செல்லும் போது தியேட்டரில் கரகோஷம் காதுகளை கிழித்தது இன்னும் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. தான் வளர்த்தவனே தனக்கு எதிராகத் திரும்பி விட்டானே என்ற வேதனை ஒருபுறம்... சிறுவயது முதற்கொண்டே பாசத்துடன் வளர்த்தவனை முதன் முதலாக அடித்துத் துவைத்து விட்டோமே என்ற சோகம் ஒருபுறம் என இருவேறுபட்ட உணர்வுகளையும் கண்களின் மூலமாகவே மாறி மாறிப் பிரதிபலித்து பிய்த்து உதறி விடுவார் நம்மவர்.

(ஆடம்பர செட்டுகள் இல்லை...படாடோப உடைகள் இல்லை...வெளிநாட்டு படப் பிடிப்புகள் இல்லை...கவர்ச்சி அம்சங்கள் எதுவும் இல்லை...டிஷ்யூம் டிஷ்யூம் என்று காது கிழியும் சமாச்சாரங்களும் இல்லை. கார் சேசிங்குகள் இல்லை... மசாலாத் தூவல்கள் இல்லை...கண்களைப் பிசைய வைக்கும் சோகக் காட்சிகள் கூட இல்லை...'வியட்நாம் வீடு' சுந்தரத்தின் அறிவார்ந்த வசனங்கள் துணையோடு ஜாலியான,புத்திசாலித்தனமான, குறும்பு கொப்பளிக்கும், எதைக் கண்டும் அஞ்சாத, எதையும் வெற்றி கொண்டு பவனி வரும் தீனதயாளு தாதாவாக அட்டகாசமாய் ஒன்லி இதுவரை காணாத நம் இதய தெய்வம் நடிகர் திலகம்.... நடிகர் திலகம்... நடிகர் திலகம் மட்டுமே இப்படத்தில்)

(தீனதயாளுவின் அட்டகாசங்கள் தொடரும்).... .

அன்புடன்,
வாசுதேவன்.




https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s370x247/23843472_1531193126974981_7482456272565895788_n.jp g?oh=3d48126c5b35cad50e9b21c3f4c00909&oe=5A8C5A51
(https://www.facebook.com/photo.php?fbid=1531193126974981&set=pcb.564348383916242&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/24058757_1531193093641651_6536572018415654579_n.jp g?oh=0abb90dfa96604674101012f3bf8a1d4&oe=5AD39BEB
(https://www.facebook.com/photo.php?fbid=1531193093641651&set=pcb.564348383916242&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/23915876_1531193186974975_5887360750736582114_n.jp g?oh=f68c90d74085a41e360a74dbab03781b&oe=5AD4E4C1
(https://www.facebook.com/photo.php?fbid=1531193186974975&set=pcb.564348383916242&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p173x172/23843289_1531193230308304_5967439826828625293_n.jp g?oh=63ad8fd3a4a39f6e5a40bee8a620b7c6&oe=5A9C16E8




https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23795918_1531193256974968_2087109402032109816_n.jp g?oh=090bc1fd416f7c6424308f2a7c21d39f&oe=5A8A2988

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24067911_1531193290308298_8954375327631294783_n.jp g?oh=34f1fba7b821c36be536f8a3ac322b02&oe=5AD1FB81


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23843554_1531193130308314_312463796269390965_n.jpg ?oh=a9843e8bc8d130f37c16823ec6cf7aa2&oe=5AD7B467

sivaa
27th November 2017, 08:54 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

143 வது வெற்றிச்சித்திரம்

பாதுகாப்பு வெளியான நாள் இன்று

பாதுகாப்பு 27 நவம்பர் 1970

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23905540_1620027098047956_3594102160872835735_n.jp g?oh=d0c87ba141007131d3a5fb50dc3fdc66&oe=5A98D0D8

sivaa
27th November 2017, 08:58 AM
vee yaar


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23843339_1620027644714568_5184957323083356309_n.jp g?oh=3597203d7b3985445f5c80bd0a2121dc&oe=5A942BC3

sivaa
27th November 2017, 10:30 AM
Jahir Hussain



எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் ( இன்று வரை கக்கன் போல் ஒரு சிறந்த அமைச்சர் தமிழகம் பார்க்கவில்லை என்பது அரசியல் ஆய்வா...ளர்கள் கருத்து ) அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.
நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.
நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.
நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
நன்றி.. திரு. ரா. ராஜகோபாலன்..







https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23905645_1991315047775750_2851141029518235116_n.jp g?oh=24a094d8f3d085cbdd654803705fe617&oe=5AD485A2



.................................................. ........................


kannappan vellingiri

இதுவரை நான் அறிந்திராத நெகிழ்ச்சியான செய்தி... திலகம் அவர்கள் எண்ணற்ற நற்காரியங்கள் ஆற்றியுள்ளதாகவும், ஆனால் எதையும் விளம்பரப் படுத்தியதில்லை எனஅறிந்தவர்கள் கூறுவர். இந்நிகழ்வை பதிவிட்டதற்கு ஜாகிர் சாருக்கு நன்றி.

.................................................. ................................
Arun bhaskar

இது போல பல நிகழ்ச்சிகள் நடிகர்திலகம் விளம்பரமின்றி வாரி வழங்கியிருக்கிறார்,,,,,

ஆனால் சில கருங்காலிகள் அந்தகால கட்டத்தில் அவர் கஞ்சன் என்பது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை திட்டமிட்டே நடத்தினார்கள். இப்போதுபோல தகவல்நுட்ப வசதியில்லாத காலத்தில் பொய்ப் பிரச்சாரத்தை குறிப்பிட்ட நபர்கள் நம்பியதுதான் வேதனை,,,,

.................................................. ............


Rajaprasadh

இதே போலதான் மறைந்த கம்யூ தலைவர் ஜீவானந்தம் வறுமையில் தொண்டறம் செய்து மறைந்தபோது அவரது குடும்பத்திற்காக நாடகங்கள் நடத்தி ஒரு பெரும் தொகையை கர்மவீரர் வழியே சேர்த்தார் அந்த தொகையினால் வந்த வீட்டில்தான் அவரது குடும்பம் இருந்தது என்று ஐயனின் தீவிர ரசிகரான என் அப்பா பல முறை சொன்னதுண்டு..காங்கிரஸ் காரரான சிவாஜிதான் கம்யூ தலைவரின் நிர்கதியான குடும்பத்தை வாழ வைத்தாரப்பா என்று கம்யூகளுடன் அரசியல் வாதாடும் போது சொல்வதை பலமுறை நான் சிறுவனாக இருக்கிற போது கேட்டுள்ளேன்

.................................................. .............


Rajendran Palaniapillai

எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும் போதும் "தங்க பதக்கம்."
நாடகம் போட்டு வசுலை தந்தார்.
முதல்வர் தங்க செயின் பரிசளித்தார்.
அதையும் ஏலம் விட்டு அதையும்
முதல்வரிடம் வழங்கினார்.
செயினை சாண்டோ சின்னப்பா தேவர் ஏலம் எடுத்து பேபி இந்திராவுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வுக்கு அப்புறம் எம்.ஜி.ஆர். சிவாஜி யை தன்
நெருக்கத்திலேயே வைத்துக் கொண்டார்.
என்பதும் ஒரு வரலாறு.

...............................................

sivaa
27th November 2017, 11:12 PM
Murali Srinivas

நேற்று மாலை நமது NT Fans அமைப்பின் சார்பாக ஊட்டி வரை உறவின் 50வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையோ இணைத்துளேன். விழா பற்றிய பதிவு விரைவில்.
அன்புடன்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23844660_10208332878358012_8430709647843034228_n.j pg?oh=c73078010eab1838d94c7b1137f0c427&oe=5A8C8B8F

sivaa
27th November 2017, 11:13 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23843642_10208332906398713_1424040254128435687_n.j pg?oh=3d1a4e089d363c8f9e98948501577093&oe=5AA3E8FD

sivaa
27th November 2017, 11:13 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24131467_10208332907318736_7653955649075077772_n.j pg?oh=5ba13fe9602ce6b0ce8f1f91ab120f78&oe=5AD40651

sivaa
27th November 2017, 11:14 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23915598_10208332908158757_3013639549204635531_n.j pg?oh=0e9157400fff9c56470928bdb25f786d&oe=5A8A4C86

sivaa
27th November 2017, 11:14 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24131398_10208332909118781_8846962644399179531_n.j pg?oh=958a67e99cb230b2101894e71dae0967&oe=5A91B3E5

sivaa
27th November 2017, 11:15 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23905686_10208332910558817_4878942876646892231_n.j pg?oh=1b476af54765fcfb129dd81f85da6190&oe=5AD7437B

sivaa
27th November 2017, 11:49 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p320x320/23915638_1588492671216105_5974991907566813931_n.jp g?oh=0867e5295c01709f28d8ac0f49c0a66f&oe=5AA29FA2



Ramiah narayanan



எங்கள் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிகர் திலகமும், நடிகர் அசோகனும் இணைந்து நடித்தார்கள். ஒரு காட்சியில் நடிப்பதற்கு அசோகன் பல டேக்குகள் ...வாங்கினார். அங்கிருந்த சிவாஜி அவரை இப்படி நடிக்கச் சொல்லுங்கள் என்று எங்களுக்கு நடித்துக் காட்டினார். அதில் பத்து பர்சன்ட்தான் அசோகனால் நடிக்க முடிந்தது. அந்த 10% நடிப்பிற்கே அவ்வளவு பாராட்டுக்கள் வந்து குவிந்தது. 10 பர்சன்டுக்கே இவ்வளவு பாராட்டுக்கள்... அவர் சொல்லிக் கொடுத்தபடி 100 சதவீதம் நடித்திருந்தால்...? நாங்கள் வியந்துபோனாம்.

- ஏவிஎம் சரவணன்.

sivaa
28th November 2017, 10:39 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23905349_1990271027854382_4789750750254430297_n.jp g?oh=3f16007f09dd408b98dc26af77259f54&oe=5A8D0249

sivaa
28th November 2017, 10:56 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24058974_1989163861298432_8358766386820817936_n.jp g?oh=228404de10c7447f0260bf34495c83af&oe=5ACF93A9

sivaa
28th November 2017, 10:57 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23795026_1989086671306151_8849439891051253059_n.jp g?oh=0b5cea3579c91b46d6a127c8ad2d9e61&oe=5A91151C

sivaa
28th November 2017, 10:58 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23754933_1987791718102313_2317800533081875272_n.jp g?oh=8a306ad44b2ad654a96c66943666df4a&oe=5A9C8231

sivaa
28th November 2017, 10:58 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23659446_1987676704780481_6290689855406401585_n.jp g?oh=09870137cca0ba5377ef73a1a3f4ed16&oe=5A8F0EB7

sivaa
28th November 2017, 10:59 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23509090_1983203898561095_5162284832218603149_o.jp g?oh=ea45f0c1611bc9db34170b2b7b7dcb51&oe=5A8F95BD

sivaa
28th November 2017, 11:00 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23511231_1983635171851301_4913107583060689515_o.jp g?oh=2b6c39c0c5220ec086caeb5158e80674&oe=5A938C15

RAGHAVENDRA
29th November 2017, 06:36 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/24068135_1622297921154207_4610889664316676487_n.jp g?oh=bd83e73d75bcbb3b99f119b368e7c3e0&oe=5A9BF91B

sivaa
29th November 2017, 11:35 AM
vee yaar

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24130496_1622378471146152_3377526752532228831_o.jp g?oh=300205840f6678f399cd11498d3ca328&oe=5AD68EA0

sivaa
29th November 2017, 11:39 AM
vee yaar

image is of a fan of Thalaivar who met him at Ceyon when NT was invited for the award of the title "Kalaikurisil"

courtesy: https://tvaraj.com/2017/04/29/i-met-sivaji-ganesan-at-the-mount-lavinia-hotel/


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24129688_1620339448016721_2811241856604158730_n.jp g?oh=c226918dace3119ffcf23c0f6f0c163c&oe=5A88F89D

sivaa
29th November 2017, 11:41 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23915703_194801557760391_1892769153047252875_n.jpg ?oh=879f0f960da97206324464309aef9a44&oe=5AA2B170

sivaa
29th November 2017, 11:55 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

125 வது வெற்றிச்சித்திரம்

உயர்ந்த மனிதன் வெளியான நாள் இன்று

உயர்ந்த மனிதன் 29 நவம்பர் 1968

https://resizing.flixster.com/9IUAJo5WMJVKt_qR-7UL5CU6XpQ=/206x305/v1.bTsxMDg1NzY0NztqOzE3NTg1OzEyMDA7MTEwOzE1MA (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjIxOX2kuPXAhWM0YMKHWhYBE8QjRwIBw&url=https%3A%2F%2Fwww.rottentomatoes.com%2Fm%2Fuya rntha-manithan%2F&psig=AOvVaw3FOajCvQE5_xkVrn9u1Pu7&ust=1512023008669856)

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/a/ab/Uyarndha_Manidhan.jpg/220px-Uyarndha_Manidhan.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwicscLkkuPXAhUC8YMKHTTvAHAQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FUyarnd ha_Manithan&psig=AOvVaw3FOajCvQE5_xkVrn9u1Pu7&ust=1512023008669856)

https://i.ytimg.com/vi/MTy25m6Xpi0/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjd77qGk-PXAhWF5IMKHYzcDa0QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DMT y25m6Xpi0&psig=AOvVaw3FOajCvQE5_xkVrn9u1Pu7&ust=1512023008669856)

sivaa
29th November 2017, 12:14 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24174522_168388093898364_8277596020909628808_n.jpg ?oh=44bb6741e6b8855d60869749db929c67&oe=5AD1658B

courtesy .nadigarthjlagam fans

sivaa
29th November 2017, 12:17 PM
Murali Srinivas



ஊட்டி வரை உறவு பொன்விழா
1967ம் ஆண்டு நவம்பர் 1ந் தேதி. தமிழ் சினிமா சரித்திரத்திலேயே முதன் முறையாக ஒரே நாளில் வெளியான ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனை நிகழ்த்திய படங்கள் வெளியான நாள். அந்த இரண்டு படங்களும் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா கொண்டாடும் இந்த வேளையில் இவ்விரண்டு படங்களின் பொன்விழா கொண்டாட்டம் நமது NT Fans அமைப்பின் சார்பாக கொண்டாடப்பட்டது. சென்ற அக்டோபர் மாதம் 22ந் தேதி இரு மலர்கள் படத்தின் பொன்விழா நடைபெற்றது. ஊட்டி வரை உறவு படத்தின் பொன்விழா நிகழ்வை இரண்டு நாட்களுக்கு முன் நவம்பர் 26 அன்று ரஷியன் கலாச்சார மையத்தில் நடத்தினோம்.
இது வரை நாம் திரையிட்ட பெரும்பாலான படங்களை விட ஊட்டி வரை உறவு படத்தில் பணியாற்றியவர்கள் பங்கு பெற்றவர்கள் அதிகமாக நம்மிடையே இருப்பது ஒரு சந்தோசம் என்றே சொல்ல வேண்டும். இந்த விழாவின் ஆரம்ப வித்தே இந்த வருடம் ஜனவரி மாதமே விழுந்து விட்டது. 2017 ஜனவரியில் நமது டார்லிங் இயக்குனர் திரு சிவிஆர் அவர்களுக்கு அவரின் 50 ஆண்டு கலைத்துறை சேவையை பாராட்டி ஒரு விழா எடுத்தோம். அதில் மனம் நெகிழ்ந்த சிவிஆர் நான் இந்த அமைப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று கேட்க நாம் இந்த ஊட்டி வரை உறவு படத்தின் பொன்விழா வருகிறது. அதை நாம் கொண்டாட நீங்கள் உறுதுணையாக இருங்கள் என கேட்டுக் கொண்டோம். அந்த படத்தில் அஸோஸியேட் டைரக்டர் சிவிஆர்தான். ஆக அப்போதே இதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டன. நாம் முதலில் தொடர்பு கொண்டது சச்சு அவர்களைத்தான். அவர் உடனே ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் அவரே போன் செய்து சொல்லிவிட்டார். அதிலும் குறிப்பாக சென்னையில் வசிக்கும் திருமதி எல்.விஜயலட்சுமியின் சகோதரர் தொலைபேசி எண்ணை நமக்கு கொடுத்தார். அவர்களை தொடர்பு கொண்டு எல்.விஜயலட்சுமியின் அமெரிக்கா தொடர்பு எண் வாங்கி அவர்களிடம் தொடர்பு கொண்டோம். இதற்கு அமெரிக்காவில் வசிக்கும் நமது நண்பர் ராஜேஷ் உதவி செய்தார். எல்விஜி அவர்கள் தான் அக்டோபர் மாதமே இந்தியா வருவதாக நம்மிடம் தகவல் சொன்னார். அவரது கணவரின் குடும்பத்தினர் கல்கத்தாவில் வசிப்பதாகவும் அங்கே ஒரு மாதம் தங்க போவதாகவும் சொன்னவர் நிகழ்ச்சிக்கு வருவதாக முயற்சி செய்வதாக சொன்னார். அதன் பிறகு நவம்பர் 25,26 தேதிகளில் கல்கத்தாவில் ஒரு முக்கியமான வேலை இருப்பதால் அவரால் வர இயலாத சூழலை வருத்தத்துடன் தெரிவித்த அவர் சென்னை வரும்போது நிச்சயம் சந்திப்பதாக சொன்னார்.
புன்னகை அரசி இந்த மாதம் முழுக்க திருவனந்தபுரத்தில் மலையாள சீரியல் படப்பிடிப்பில் இருப்பதாகவும் 24-ந் தேதி சென்னை வந்துவிடுவதாகவும் சொன்னார். அது போல் சுசீலாம்மாவும் வருவதாக சொன்னார். கோபு அவர்கள் மிகுந்த மகிழ்வோடு வருவதாக ஒப்புக் கொண்டார். திருமதி தேவசேனா ஸ்ரீதர் அவர்களையும் திரு ஸ்ரீதர் அவர்களின் மகன் திரு சஞ்சய் ஸ்ரீதர் அவர்களையும் அவரது வீட்டில் சென்று சந்தித்து அழைத்தோம். திரு ஜூனியர் பாலையா, திரு ஆனந்த் பாபு அவர்களை தொடர்பு கொள்ள சச்சு அவர்கள் பெரிய அளவில் உதவி செய்தார்கள். திருமதி சுந்தரிபாயின் மகன் திரு முரளிகிருஷ்ணன் அவர்களை அழைக்க நமது உறுப்பினரும் திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் புதல்வியாருமான திருமதி லலிதா சபாபதி உதவி செய்தார். திரு எம்எஸ்வி கோபி அவர்களையும், திரு டிஎம்எஸ் பால்ராஜ் அவர்களையும், திரு பிபிஎஸ் Phannindar அவர்களையும் அழைத்தோம். திரு கார்த்திக் அவர்களையும் தொடர்புகொண்டு விஷயத்தை சொன்னோம். இதை தவிர ஸ்டில்ஸ் திருச்சி ஆனாரூனா அவர்களின் குமாரர் திரு ரமேஷ்குமார் அவர்களையும் அழைத்திருந்தோம். படத்தின் தயாரிப்பாளர் திரு கோவை செழியன் அவர்களின் இளைய மகன் திரு கபிலன் செழியன் அவர்களையும் நேரில் சென்று அழைத்தோம்.
விழாவிற்கு முந்தைய ஒரு வாரம் வரை ஏன் முதல் தினம் வரை வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. விழாவன்று அதிகாலை முதல் மழை. விழாவைப் பற்றிய சிறு குறிப்பு தினசரி பத்திரிக்கைகளில் வந்தால் விழாவைப் பற்றிய செய்தி பரவலாக மக்களை சென்றடைய உதவியாக இருக்கும் என்பதனால் நமக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக Hindu, Times of India, Indian Express மற்றும் DT Next ஆகிய இதழ்களில் செய்தி போடுவதற்கு சொல்லியிருந்தோம். ஆனால் நம்முடைய துரதிர்ஷ்டம், ஞாயிறு பதிப்புகளில் இடமில்லாத காரணத்தினால் எந்த பத்திரிக்கையிலும் செய்தி வரவில்லை. வரும் என்று நினைத்திருந்தோமே வரவில்லையே என்ற வருத்தமும் மழை ஏற்படுத்திய கவலையும் மனதில் சற்றே கேள்விக்குறிகளை விதைக்க, ஆங்கிலத்தில் keeping the fingers crossed என்பார்களே அது போல் மாலை நிகழ்வு பற்றிய எதிர்பார்ப்புகளோடு காத்திருக்க ------
(தொடரும்)
அன்புடன்


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23915881_10208338983990649_1414816837219060534_n.j pg?oh=b9164a45f92f860ead84dbb1a30f36da&oe=5AD1FC83

sivaa
29th November 2017, 12:18 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23915634_10208338984790669_290257653276815273_n.jp g?oh=ede1480c5c67d434e2a536432787cae6&oe=5A8B1A2F

sivaa
29th November 2017, 12:18 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24068058_10208338985310682_2953273324166144942_n.j pg?oh=2415bbadf754bdafcd0e37e801101e37&oe=5A915ED1

sivaa
30th November 2017, 10:42 PM
Jahir hussain‎

காமராஜர் மீது சிவாஜி அவர்கள் அளவுகடந்த மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார். அதற்கு உதாரணமாக ஒரு சிறிய சம்பவம்..இருவருக்கும் அப்பா மகன் உறவு போல அப்படி ஒரு பிணைப்பு. எப்போதெல்லாம் ஒய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் காமராஜரைத் தேடி சிவாஜி சென்று நலம் விசாரிப்பார்.
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு முறை சிவாஜி, “நான் நடித்த படங்களைக் கூட காண வருவதில்லையே? என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா?.என்று ஆதங்கத்துடன் கேட்டாராம்.
... அதற்கு சிரித்தபடியே காமராஜர் சொன்னாராம்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் கணேசா.. ஏனென்றால் உனக்கு வெளியில் நடிக்கத் தெரியாது ஆனால் பெரும்பாலும் நடிகர்கள் சினிமாவுலேயும் நடிக்கிறார்கள் வெளியிலேயும் நடிக்கிறார்கள் யாரை நம்புவது என்று தெரியவில்லை. "கதை எழுதுகிறவங்களும் நடிக் கிறாங்க..”
“சினிமா கொட்டகைக்கு போயி ரொம்ப வருஷம் ஆச்சு.. ஹரிச்சந்திரா நாடகம் பார்த்ததோட சரி..! கொட்டகைல உட்கார்ந்து சினிமா பார்க்கிற நேரத்துல நாலு பைல் பார்த்தால் மக்களுக்கு பிரயோஜனப்படும். நீ நடிகனாக இருந்தாலும் இல்லை என்றாலும் எனக்கு உன்னைப் பிடிக்கும் கவலைப்படாதே போ.. என்று கூறி வழியனுப்பி வைத்தாராம். தான் ஏற்றுக் கொண்ட தலைவர் தன்னை எந்த அளவுக்கு மனதில் வைத்திருக்கிறார் என்கிற ஆதங்கம் நம்மவர் மனதில் இருந்து இருந்தால் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருப்பார்... நாடே போற்றும் நெ1. திரைப்பட நடிகர் என்கிற எண்ணம் துளியும் இன்றி கோவிலில் உள்ள தெய்வத்திடம் சாதாரண மனிதன் ஒருவன் வேண்டுகோள் வைப்பதைப் போல் அல்லவா இருந்தது... பெருந்தலைவருக்கும் அவர்தம் பெருந் தொண்டருக்கும் இடையில் உள்ள உறவு நெகிழ்ச்சியான உறவு அல்லவா? இது...






https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24176848_1992633634310558_8804611652405565946_n.jp g?oh=9980285d769084e003b90b737a8392b6&oe=5A939BC3
(https://www.facebook.com/photo.php?fbid=1992633634310558&set=gm.1604850086263942&type=3)

sivaa
30th November 2017, 10:44 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24177080_1568316139923289_396383392838724181_n.jpg ?oh=53ce8a4a5263a9db754f39ee6daae637&oe=5A91CBDE

(https://www.facebook.com/photo.php?fbid=1992633634310558&set=gm.1604850086263942&type=3)

sivaa
30th November 2017, 10:45 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24174362_367498120375620_5274158887435353896_n.jpg ?oh=1336ee88dc3339d3d4e6d0064f8d40b7&oe=5AA06848

sivaa
30th November 2017, 10:46 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24129586_367498730375559_6422652634726724669_n.jpg ?oh=09cfd997891e565a49aa6fed6cf8da23&oe=5A8EAB4D

sivaa
2nd December 2017, 12:44 AM
அற்புத நடிகரின்டிசம்பர் மாதவெளியீடுகள்

1) மனிதனும் மிருகமும் 4 டிசம்பர் 1953

2) பாட்டும் பரதமும் 6 டிசம்பர் 1975

3) நீதி 7 டிசம்பர் 1972

4) மனிதரில் மாணிக்கம் 7 டிசம்பர் 1973

5) வெற்றிக்கு ஒருவன் 8 டிசம்பர் 1979

6) எதிர்பாராதது 9 டிசம்பர் 1954

7) நீலவானம் 10 டிசம்பர் 1965

8) நெஞ்சங்கள் 10 டிசம்பர் 1979

9) மண்ணுக்குள் வைரம் 12 டிசம்பர் 1986

10) புதியவானம் 12 டிசம்பர் 1988

11) ஜஸ்டிஸ் கோபிநாத் 16 டிசம்பர் 1978

12) ராஜபார்ட் ரங்கதுரை 22 டிசம்பர் 1973

13) ரோஜாவின் ராஜா 25 டிசம்பர் 1976

14) பணம் 27 டிசம்பர் 1952

15) பாக்கியவதி 27 டிசம்பர் 1957

) 16) விடிவெள்ளி 31 டிசம்பர் 1960

sivaa
3rd December 2017, 09:27 AM
Murali Srinivas
ஊட்டி வரை உறவு பொன்விழா - Part II


விழாவன்று காலையில் பெய்த மழை பத்து மணிக்கு மேல் ஓய, வானம் மேகமூட்டமாக இருந்தபோதிலும் விழா ஆரம்பித்து இரண்டு மணி நேரம் வரைக்கும் மழை பெய்யாமல் இருந்தது ஒரு மிக பெரிய சந்தோஷமாக இருந்தது. எப்படி ஊட்டி வரை உறவு படப்பிடிப்பிற்கு வருண பகவான் பல முறை தடங்கலாக இருந்து பின் உதவி செய்தாரோ அதே போல் அந்த படத்தின் பொன்விழா கொண்டாட்டத்திற்கும் உதவி செய்தார் என்றே எடுத்துக் கொண்டோம்.


விழாவிற்கு முதலில் வந்தவர் திரு கோபு அவர்கள். தன் மகன் ஸ்ரீராமோடு (சித்ராலயா ஸ்ரீராம் என்ற பெயரில் நாடகங்கள் எழுதுபவர்) வந்தார். தொடர்ந்து சிவிஆர் வந்தார். அவர் பின்னாலேயே திருமதி தேவசேனா ஸ்ரீதர் அவர் மகன் சஞ்சய் ஆகியோர் வந்தனர். பிறகு திரு ஆனந்த்பாபு, ஜூனியர் பாலையா, குமாரி சச்சு ஆகியோர் வருகை புரிய இதற்கிடையே நமது உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருமளவில் வர ஆரம்பித்தனர். நாம் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்திருந்த திரு ரமேஷ்கண்ணா, திரு சித்ரா லட்சுமணன் ஆகியோரும் வந்து சேர்ந்தனர். திருமதி கே.ஆர்.விஜயா அவர்கள் வந்து கொண்டேயிருப்பதாக அலைபேசியில் தகவல் சொன்னார். அப்போது சுசீலாம்மா வீட்டில் இருந்து அழைப்பு. விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திரா சென்றிருந்த சுசீலாம்மா அங்கே கலந்து கொண்ட ஒரு விழாவில் கால் சற்றே பிசகியதால் வலியால் அவதிப்படுவதாகவும் தகவல் சொன்னார்கள்.

சற்றே ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும் அவர் உடல் நலம் பெற வாழ்த்தினோம். (அவரது தோழியார் மறுநாள் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்) இதற்கிடையே திருமதி சுந்தரிபாயின் புதல்வர் திரு முரளிகிருஷ்ணனும் வந்து விட்டார். விழா ஆரம்பிக்கும் நேரம் விஜயாவும் வந்து விட்டார். நமது விழாக்களுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் திருமதி AL S ஜெயந்தி கண்ணப்பன் அவர்களும் வந்தார். அவருடன் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் திரு விக்ரமன் அவர்களின் மனைவியார் திருமதி ஜெயப்ரியாவும் கலந்து கொண்டார். நாம் விருந்தினர்களை வரவேற்க வாசலில் காத்து நின்றபோது நம்முடைய அமைப்பின் துணைத்தலைவர்கள் திரு மோகன்ராம் அவர்களும் திரு ஆடிட்டர் ஸ்ரீதர் அவர்களும் விழா அரங்கில் வந்திருந்த விருந்தினர்களுடன் அளவளாவி அவர்களை comfortable ஆக இருக்க வைத்தனர்.

முதலில் வரவேற்புரையை நான் துவக்கினேன்.
இந்த விழா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கினேன்.
பல கலைஞர்கள் வந்ததால் மட்டும் இந்த விழா சிறப்பு பெறவில்லை. இந்த திரைப்படம் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே ஒரு சாதனை புரிந்த படம் என்பதை குறிப்பிட்டேன்.

ஒரே நாளில் ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் வெளியாவது எனபதை நடிகர் திலகம் மட்டுமே செய்திருக்கிறார். 1954 ஏப்ரல் 13 அன்று வெளியான அந்த நாள் மற்றும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி முதல் 1987 ஆகஸ்ட் 28 அன்று வெளியான ஜல்லிக்கட்டு மற்றும் கிருஷ்ணன் வந்தான் வரை 34 வருடங்களில் 17 முறை இது நடைபெற்றிருக்கிறது. 34 படங்களில் 15 படங்கள் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியிருக்கின்றன. அவற்றுக்கு சிகரம் வைத்தாற் போல் 1967 நவம்பர் 1 தீபாவளியன்று வெளியான இரு மலர்களும் ஊட்டி வரை உறவும் 100 நாட்கள் ஓடி தமிழ் சினிமா சரித்திரத்திலேயே ஒரு முதன் முதல் சாதனை படைத்தது என்பதை அவையோருக்கு சொன்ன நான், கேஸீ பிலிம்ஸ் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவை செழியன் முதன் முதலாக தயாரித்த படம் எனபதையும் முதலில் வயது 18 ஜாக்கிரதை என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின் காலமெல்லாம் காத்திருப்பேன் என்று பெயர் மாறியதையும் அதன் பின் ஊட்டி வரை உறவு ஆன கதையையும் சுருக்கமாக கூறினேன். படத்தின் வெற்றிக்கு மெல்லிசை மன்னர் அவர்களின் இசையும், டிஎம்எஸ், சுசீலா, பிபிஎஸ் மற்றும் ஈஸ்வரி அவர்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டேன்.


பின் விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடையேறினர்.

முதலில் சச்சு அவர்கள் பேச வந்தார். இந்த விழாவிற்கு வந்ததில் மிகுந்த சந்தோசம் என்று குறிப்பிட்ட அவர் ஒரு பழைய படத்தின் விழாவிற்கு அரங்கு நிறைந்திருப்பதை பார்ப்பது இதுதான் முதல் முறை என்றார்.


படத்தில் நடித்தது ஒரு குடும்பமாக பழகியது போல என்றும் நகைச்சுவை காட்சிகள் இரண்டு மூன்று டேக் வாங்கியது என்றும் அதற்கு காரணம் ஸ்ரீதர் அவர்களே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விடுவார் என்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு மற்றும் சிவந்த மண் போன்ற ஸ்ரீதர் படங்களில் தான் பங்கு பெற்றது மறக்க முடியாது என்றார். நடிகர் திலகம்,பாலையா நாகேஷ் மற்றும் விஜயா அவர்களுடன் நடித்ததை மறக்கவே முடியாது என்றார். இறுதியாக இந்த விழாவை பார்க்கும்போது இது படம் வெளியாகி 50 வருடம் ஆன விழா போல் தெரியவில்லை என்றும் ஏதோ படத்தின் 100வது நாள் விழா போல் இருக்கிறது என்றும் கூறி விடை பெற்றார்.


ஜூனியர் பாலையா பேச வந்தார். சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். மாபெரும் கலைஞர்கள் ஒன்று கூடி உருவாக்கிய ஒரு மாபெரும் திரைப்படத்தை அது பொன்விழா கொண்டாடும் நேரத்தில் அதில் கலந்து கொள்ளும் பாக்கியம் தனக்கு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது என்றார். அன்றைய படங்கள்தான் படங்கள் என்பதை குறிப்பிட்ட அவர் இப்போதும் தன் தந்தை மற்றும் நடிகர் திலகம் போன்ற நடிகர்கள் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டார். காதலிக்க நேரமில்லை ஊட்டி வரை உறவு போன்ற படங்கள் ஸ்ரீதர் புகழை என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்றார். தன்னை அழைத்ததற்கு நன்றி கூறி விடை பெற்றார்.


அடுத்து ஆனந்த்பாபு. மிக தெளிவாக பேசினார். நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் தன் தந்தை நாகேஷ் என்றும் அந்த பெருமையை தனக்கு வாங்கி தந்த அவரை வணங்குகிறேன் என்றார். இந்த படத்தின் பாடல்களை மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டவர் பூமாலையில் ஓர் மல்லிகை பாடலின் ஆரம்ப ஹம்மிங்கை அசத்தலாக பாடினார். சிவாஜி சார் ஸ்டைல், அவர் நடிப்பு எல்லாம் பிரமாதமாக இருக்கும் என்றார். ஸ்ரீதர் போன்ற ஒரு டைரக்டரை மறக்கவே முடியாது என்றும் சொன்னார். தன்னை அழைத்ததற்கு நன்றி கூறி விடை பெற்றார்.


திருமதி சுந்தரிபாயின் புதல்வர் திரு முரளிகிருஷ்ணன் பேச வந்தார். இந்த படத்தை பற்றி தன் தாயார் தன்னிடம் நிறைய சொல்லியிருப்பதாக சொன்னவர் இந்த படத்தை 18 முறை பார்த்திருப்பதாகவும் பெரும்பாலான வசனங்கள் மனப்பாடமாக தெரியும் என்றார். இந்த படமும் அந்த வசனங்களும் என்றும் சலிப்பதில்லை என்று சொன்னவர் இது போன்ற விழாவில் தன்னை அழைத்து மரியாதை செலுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு விடை பெற்றார்.


பின் வந்தார் சித்ரா லட்சுமணன். ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்தார். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் எதையோ ஒன்றை எதிர்பார்த்துதான் அவன் ரசிகனாக இருக்கின்றான். ஆனால் எந்த வித எதிர்பார்ப்புமின்றி ரசிகர்கள் அன்று முதல் இன்று வரை இருக்கிறார்கள் என்று சொன்னால் அது சிவாஜிக்கு மட்டும்தான் என்றபோது அரங்கமே ஆர்ப்பரித்தது. திரு முரளிகிருஷ்ணன் சொன்ன 18 முறை பார்த்தேன் என்ற விஷயத்தை குறிப்பிட்டு அதெல்லாம் ஒண்ணுமேயில்லை. 100, 150 முறை சர்வ சாதாரணமாக பார்த்தவனெல்லாம் இருக்கான். ஒரு சிலர் எல்லாம் எத்தனை முறை பார்த்தங்கற கணக்கே வச்சுக்கறேதேயில்லை என்றார். அன்றைய ஆர்ட்டிஸ்ட் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் போன்று இன்று யாருமில்லை என்றும் இன்றைய சினிமாவின் நிலைமை சரியில்லை என்றும் சொன்னார். இது போன்ற விழாக்கள் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தான் கலந்து கொண்டதில் மிகுந்த சந்தோசம் அடைவதாகவும் சொல்லி நிறைவு செய்தார்.


அடுத்து ரமேஷ்கண்ணா. இந்த விழாவில் தன்னை பார்ப்பவர்களுக்கு இவர் எதற்கு வந்தார் என்று தோன்றும் என்றும் நம்மையெல்லாம் இணைத்தது நடிகர் திலகம்தான் என்றும் ஒரு ரசிகனாக கலந்து கொள்வதில் பெருமைபடுகிறேன் என்றார். நான் அவரை ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழாவிற்கு அழைப்பதையும் இந்த விழாவிற்குத்தான் வர முடிந்ததையும் சொல்லி அதற்கு நன்றி சொன்னார்.அவரும் திரு முரளி குறிப்பிட்ட 18 முறை பார்த்ததை சொல்லி தான் எத்தனை முறை பார்த்தேன் என்ற கணக்கே கிடையாது என்றும் நிச்சயமாக 100 தடவைக்கு மேல் இருக்கும் என்றவர் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அனைத்து வசனங்களும் மனப்பாடம் என்றார்.

கோபு போன்ற ஒரு நகைச்சுவை எழுத்தாளரை தமிழ் சினிமா பார்த்ததில்லை என்றும் தான் உட்பட பலரும் கோபுவின் வசனங்களைத்தான் அப்படி இப்படி மாற்றி போட்டு கைதட்டல் வாங்குகிறோம் என்றார். உதாரணத்திற்கு ஊட்டி வரை உறவு படத்தில் செந்தாமரையை நாகேஷ் அவன் என்று சச்சுவிடம் சொல்லும் காட்சியை குறிப்பிட்டு செந்தாமரை முறைத்தவுடன் அவர் என்று மாற்றும் வசனத்தை குறிப்பிட்டு இப்போது தான் எழுதிக் கொண்டிருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் இதே டெக்னிகை தான் follow செய்திருப்பதாகவும் அதை சொல்வதில் தனக்கு வெட்கமில்லை என்றும் சொன்னார்.

தனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் ஸ்ரீதர் என்ற ரமேஷ்கண்ணா தன் குருநாதர் இயக்குனர் விக்ரமன் அவர்களிடம் எப்போதும் ஸ்ரீதர் பற்றியும் அவரது படங்கள் பற்றியுமே பேசிக் கொண்டிருப்பேன் என்று குறிப்பிடவர் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த திருமதி ஜெயப்ரியா விக்ரமன் அவர்களை பார்த்து அவருக்கே இது பற்றி நன்றாக தெரியும் என்று குறிப்பிட்டார். திரைப்படத்துறைக்கு வரும் முன் புன்னகை அரசி அவர்களை ஒரு முறையேனும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய காலம் இருந்தது. இன்று மேடையில் அவர் அருகிலே அமரும் பாக்கியம் கிடைத்தது என்றும் நெகிழ்ந்தார். படம் பார்க்க மற்றவர்களை போலவே ஆவலாக இருப்பதாகவும் ஆகவே பேச்சை இத்துடன் முடித்துக் கொள்வதாக சொல்லி விடை பெற்றார்.

படத்தில் பங்கு பெற்றவர்கள் மற்றும் வாரிசுகளுக்கு படத்தின் 50ம் ஆண்டு பொன்விழா நினைவு பரிசு வழங்கப்பட்டது. சித்ரா லட்சுமணன் மற்றும் ரமேஷ்கண்ணா அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
கேஆர் விஜயா, கோபு மற்றும் சிவிஆர் பேச்சு ---

(தொடரும்)

அன்புடன்



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/24174548_10208345384670662_5836838591883107376_n.j pg?oh=e918e1a4ea3e8e5839964b3f0f8c9b22&oe=5AD67CB0
(https://www.facebook.com/photo.php?fbid=10208345384670662&set=pcb.565910997093314&type=3&ifg=1)https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/24067815_10208345385430681_7685861551513144630_n.j pg?oh=c12a3319cb41ca7a21b9f47001e23eb2&oe=5A891754
(https://www.facebook.com/photo.php?fbid=10208345385430681&set=pcb.565910997093314&type=3&ifg=1)

sivaa
3rd December 2017, 09:34 AM
Vasu Devan


'பொட்டு வைத்த முகமோ' (ஒரு முழு ஆய்வு)


'சுமதி என் சுந்தரி'


தமிழ்த் திரையுலக பாடல்கள் வரலாற்றையே புரட்டிப் போட்ட பாடல். திரு எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெமனி, சிவக்குமார் என்று SPB பலருக்கும் பாடிக் கொண்டிருந்த சமயத்தில் 1971-ல் இளைஞர்களின் கனவுப் படமாக வந்து இளமை விதையைத் தூவி அனைவர் நெஞ்சிலும் புதுமைக் காதல் பயிர் வளர புது வழி காட்டிய புத்துணர்வுப் படமான 'சுமதி என் சுந்தரி' படத்தில் முதன் முதலாக நடிகர் திலகத்திற்குப் SPB பாடி, தான் பாடிய அத்தனைப் பாடல்களையும் தானே முந்திச் சென்று 'பொட்டு வைத்த முகமோ' மூலம் எவருமே முந்த முடியாத முதல் இடத்தைப் பெற்றார்.

இதற்கு SPB மட்டுமே காரணமல்ல. இதுவரை பாலா பாடிய பாடல்களின் மகத்துவமான வெற்றிக்கு அவரே முழுக் காரணம். ஆனால் 'பொட்டு வைத்த முகமோ' வெற்றிக்கு அவரால் அப்படி முழுக் காரணமாக முடியவில்லை. காரணம் 'நடிகர் திலகம்' என்ற ஜெயின்ட். அதை மீறி யாருமே ஒன்றுமே செய்ய முடியாது. டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரலிலேயே நடிகர் திலகத்தைப் பார்த்துப் பழகிப் போன நமக்கு டோட்டலாக மாறுதலுடன் இளமை பொங்கும் SPB வாய்ஸுடன் அவர் இப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக நடித்திருப்பதை இன்று பார்க்கும் போதும் மிரட்சி அடங்கியபாடில்லை. நடிகனுக்காக பாடகனா? இல்லை பாடகனுக்காக நடிகனா? நடிகனுக்காக பாடகன் என்றால் பலர் இருக்கிறார்கள். ஜெமினிக்கு பி.பி.எஸ், எ.எம்.ராஜா. அத்தனை ஹீரோக்களுக்கும் பொதுவாக பாடகர் திலகம், தங்கவேலுவுக்கு எஸ்.சி.கிருஷ்ணன், நாகேஷுக்கு ஏ.எல்.ராகவன் இப்படி. பாடகனுக்காக நடிகனா என்றால் அதுவும் என்னால் முடியும் இதுவும் என்னால் முடியும் என்று சூளுரைக்க சூரக்கோட்டையாரைத் தவிர வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியாது.


1971-லோ நடிகர் திலகம் உடல் வனப்பில் உச்சம் தொட்டிருந்தார். வாளிப்பான உடல். 43 வயது. தோற்றமோ இருபது வயது வாலிபன் போல. கல்லூரிக் கட்டிளங் காளை போல. இத்தனைக்கும் மேக்-அப் ஹெவி எல்லாம் கிடையாது. அதனால் SPB க்கு மிக மிக வாட்டமாகப் போயிற்று. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி, மோத்தி, பி.பி.எஸ், சௌந்தர்ராஜன் என்று பாத்திர வார்ப்புகளுக்கு ஏற்ப பலர் நடிகர் திலகத்திற்கு பாடினாலும் பாடகர் திலகமே பின்னால் நடிகர் திலகத்தின் குரலாக பாடல்களில் முழு ஆக்கிரமிப்பு செய்து விட்டார்.


இப்போது அப்படியே ஒரு சேன்ஜ். இளமை பொங்கும் கலைக்குரிசிலும், கலைச்செல்வியும் ஜோடி. இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைக் காடுகளின், மலைகளின் சரிவுப் பாதைகள் நடுவே ரசமான பாடல். அடித்தது யோகம் SPB க்கு. எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தாகி விட்டது. மற்ற துண்டு துக்கடாக்களுக்கும் பாடி ஓகே ஆகி விட்டது. இப்போது நடிப்பின் இமயத்திற்கு பாடி அதுவரை 'தொட்டபெட்டா' தொட்டிருந்தவர் 'எவரெஸ்ட்'டில் ஏறி அமர்ந்து விட்டார். அமர்ந்தவர் அமர்ந்தவர்தான். கீழே இறங்கவே இல்லை.


சரி வருமா, குரல் பொருந்துமா என்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் SPB உட்பட. திலகத்திற்கோ தன் திறமை மேல் எப்போதுமே திடமான நம்பிக்கை. பயத்தில் SPB புலம்ப 'பாலு...நீ பாடு... மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சர்வ அலட்சியமாக நடிப்பின் சர்வாதிகாரி சொல்ல, தைரியம் வரவழைத்து அற்புதமாக பாடி முடித்து விட்டார் பாலா. இப்போது ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்.


இப்போது நடிகர் திலகத்தின் டர்ன். பாட்டை முழுவதும் கேட்டு உள்வாங்கியாகி விட்டது. கொஞ்சம் வழக்கத்தை விட கவனமாக. தான் நடிகர் திலகம் இல்லை.. 'சுமதி என் சுந்தரி' படத்தின் சுந்தர ஹீரோ...இளம் நாயகன். உடன் அழகு நாயகி. அது மட்டுமே. பாடகர் திலகத்தின் குரலுக்கு வாயசைத்து அசைத்து பழகி ஆகி விட்டது. இப்போது வேறு ஒரு இளைஞன் பாடுகிறான். அதற்கேற்ற மாதிரி வாயசைக்க வேண்டும்.அவ்வளவுதானே ! ஜூஜுபி.ஊதித் தள்ளி நடித்தாகி விட்டது. பாடலை பார் புகழ ஹிட் ஆக்கியும் கொடுத்தாகி விட்டது.


ரிசல்ட் என்ன! பாலா எவருமே தொட முடியாத புகழை இந்த ஒரு பாடல் மூலம் பெற்று விட்டார் நடிகர் திலகத்தின் வாயசைப்பு மூலமாக. அது போல தன்னுடைய அசாத்திய திறமை மூலமும். நடிப்பின் சமுத்திரமும், பாடல் கடலும் ஒன்று சேர்ந்து ஒரு இசைப் பிரளயத்தையே நடத்தி முடித்து விட்டன எம்.எஸ்.வி என்ற இன்னொரு இசைக் கடல் இணைவின் மூலம்.
மிக உற்சாகமாக ஆரம்பிக்கும் இசை. புள்ளி மானைப் போல மலைப் பாதைகளுக்கு இடையில் கலைச்செல்வி துள்ளி ஓடி வர, வெகு இயல்பாக 'நடிகர் திலகம்' நடந்து வந்து செடியிலிருந்து இலை கிள்ளிப் போட, அந்த நான்கு நிமிடப் பாடல் நான்கு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாதது. ஒரு காலை மடக்கி ஸைடில் நிற்கும் போஸாகட்டும்...அல்லது பேன்ட்டின் முன்னிரண்டு பக்க பாக்கெட்டுகளில் கட்டை விரல் கொடுத்து கொக்கி போட்டு, இடுப்பொடித்து நிற்கும் அழகாகட்டும்... வலதுகாலை டைட் செய்து, இடது கால் மடக்கி உயரே செல்வி இருக்க, சரிவில் நின்றபடி 'பொட்டு வைத்த முகமோ' பாடல் தொடங்கும் போதே தியேட்டர் ஓனர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து முடித்திருப்பார். வெளிர் நீல டைட் பேண்ட்டும், ஜவுளிக் கடைகளின் வெளியே அப்போதெல்லாம் விளம்பரத்திற்கு வைக்கப்பட்டு 'சுமதி என் சுந்தரி ஷர்ட்' என்று அமோக விற்பனை ஆன அந்தப் பெரிய செக்டு ஷர்ட்டும் அணிந்து ஏதோ பத்தாம் வகுப்பு பையனைப் போல ஆச்சர்யம் வரவழைக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார்?


'தரையோடு வானம்' என்று கலைச்செல்வியின் ஒரு கை பிடித்து, இன்னொரு கையை வானம் நோக்கி உயர்த்தையிலே திரையரங்குகளின் கூரைகள் நொறுங்குமல்லவா? படத்தின் போஸ்டர்கள் இந்தப் போஸைத்தானே தாங்கி நிற்கும்! கை தூக்கி இடையொடித்து செல்வி நிற்கையிலே அவர் இடையின்மீது ஒரு கை வைத்து ('இடையோடு பார்த்தேன்.... விலையாகக் கேட்டேன்') இன்னொரு கையை தன் இடுப்பின் மீது நடிகர் திலகம் வைத்து ஸ்டைலாக நிற்கும் அடுத்த போஸ் அதற்குள் வந்து முன் போஸை ரசித்து முடிப்பதற்குள் நம்மைப் பாடாய்ப் படுத்துமே! அடுத்த சில வினாடிகளில் அதே விலையில்லா வரிகளுக்கு ஜெயா முன் நடக்க, அப்படியே பின்னால் தொடர்ந்து சற்று கழுத்தைச் சாய்த்து புற்களுக்கு மத்தியில் கால்களைத் தூக்கி வைத்து நடக்கும் அந்த ஸ்டெப்ஸ். (போலீஸ் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் பண்ணும் ரசிகர்களை அடக்க முயன்று தோற்றுப் போகும்) என்ன நடக்கிறது என்றே தெரியாது. வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்று எண்ணுமளவிற்கு ரசிகர்களின் ஆரவார சப்தம் ஒலிக்கும். 'செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள் என்றபடி கால் மடக்கி, படுத்து நாயகி கரம் பிடித்து, விருட்டென்று 'புரிந்தாள்' என்று முடித்தவுடன் கையை விசிறி விலக்குவது விசில் சப்தங்களை வீறிட வைக்கும். திரும்ப அதே வரி வரும் போது தாழ்நிலையில் பாய்வது போல் நிற்க, ஒரு நொடி குளோஸ்-அப் காட்டி பின் காமெரா தூர விலகி விடும். ஜெயாவின் கைபிடித்து ஒவ்வொரு முறையும் பின்னால் நடந்து வரும் ஸ்டைல் விதவிதமாக இருக்கும். 'குழலோ.. ஓ.. ஓ' என்று பாலா பாடும் போது அதற்குத் தகுந்தாற்போல் 'நடிகர் திலகம்' அந்த 'ஓ' வுக்கு தலையை சாய்த்து மிக அழகாக வாயசைக்கும் போது யாருக்குத்தான் 'ஓ' போடத் தோன்றாது?



'அந்தி மஞ்சள் நிறமோ' என்று வெகு அழகாக நெஞ்சு நிமிர்த்தி அவர் ஓர் முழு ஆண்மகனுக்குரிய தகுதியை உடல் மொழியாகக் காட்டுவார் பாருங்கள். (அதாவது முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது) காட்டிவிட்டு மீண்டும் உடனே உடல் தளர்த்துவார்)


அடுத்த சரணத்தில் ஜெயாவின் பின் நின்று, அவரது இரு கைகளையும் பின்பக்கம் இழுத்தவாறு பிடித்து ஊஞ்சல் ஆட்டுவது போல 'பொன்னூஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்' என்று பாடுவது கிளாஸ். என்னுடன் கலந்தாள்' இரண்டாம் தரம் ஒலிக்கையில் குளோஸ்-அப்பில் மிக அழகாக சிரிப்பார் கலைச் செல்வியைக் கட்டி அணைத்தபடி. வசந்தா குரலில் 'லலலா லலலா லலலா லால்லா' என்று ஜெயா இவர் அணைப்பிலிருந்து விலகி பின்புறம் சாய்ந்து ஹம்மிங் தரும் போது நடிகர் திலகம் தலையை முன் நீட்டி சைட் போஸில் சிரிப்பது செம ரகளை.


மூன்றாவது சரணமான 'மலைத் தோட்டப் பூவில்' வரிகளில் நிற்கும் உடல் மொழி அசர வைத்து விடும் நம்மை. தலையை ஒரு வெட்டு வெட்டி இந்த லைனை ஆரம்பிப்பார். வலது கை கட்டை விரல் பேன்ட் பாக்கெட்டில் கொக்கியாய் மாட்டியிருக்க, இடது கை நீட்டி 'மணமில்லையென்று' பாடிக் கொண்டிருப்பவர் சடேலென்று கையை வீச்சருவாள் வெட்டுவது போல விசிறி ஒரு ஆக்ஷன் செய்து கையை பின்னால் கொண்டு செல்வாரே பார்க்கலாம். இதற்கு நடுவில் தலை ஸ்டைலாக ஷேக் ஆவதையும், உடம்புப் பகுதிகள் வளைந்து நெளிவதையும் நாம் கவனிக்கத் தவறி விடக் கூடாது. இரு வினாடிகளில் இடைவிடாத அதிசய அசைவுகளைக் கா(கொ)ட்டி விடுவார். அப்படியே வரிகள் மீண்டும் தொடரும் போது படு அலட்சியமாக ஜெயாவைப் பின் தொடர்ந்து நடை போட்டு செல்வார். அப்படியே நின்று இடது காலை சற்று மடக்கி வலது கையை உயர்த்துவார்.


'நிழல் போல் மறைந்தாள்' என்னும் போது தியேட்டர் ரெண்டு பட்டு விடும். வலதுகையை மார்புக்கு நேராக நீட்டி ஓடும் ஜெயாவை சுட்டு விரலால் சுட்டிக் காட்டுவார். அய்யோ! அமர்க்களம் சாமி! அடுத்து வரும் போது வேறு வித போஸ்.



இப்படி பாடல் முழுதிற்கும் வினாடிக்கு வினாடி போஸ் முத்திரைகள், நினைத்துப் பார்க்க முடியாத விந்தை அசைவுகள், ஸ்டைல், நடை என்று தூள் பரத்துவார்.
பாலா குரலை அப்படியே தன்னுள் உள்வாங்கி, அதே போன்ற வாயசைப்போடு தன்னுடைய முத்திரைகளை மறக்காமல் அளித்து, அனைத்து ரசிகர்களையும் பரவசப்படுத்தி, பார்ப்போரை வியப்பிலாழ்த்தி நடிகர் திலகம் இந்தப் பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்.



கலைச்செல்வியும் நல்ல கம்பெனி. எளிமையான கண்களை உறுத்தாத சிம்பிள் மேக்-அப். உடையும் அது போலவே ரொம்ப எளிமை. வெளிர் வயலட் நிற சேலை மிகப் பொருத்தம். அழகில் அள்ளுகிறார். பி.வசந்தாவின் குரல் அப்படியே மேடம் பாடுவது போல அவ்வளவு பொருத்தம். இன்னும் கொஞ்சம் அந்த 'லலலா லலலா லலலா லால்லா' ஹம்மிங் வராதா என்று ஏங்குமளவிற்கு அற்புதம்.


பாடல் முழுதுமே இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் படமாக்கப்பட்டது. எத்தனயோ இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் பல பாடல்கள் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல் அவற்றையெல்லாம் மீறிய தனிச் சிறப்பு கொண்ட காந்தத் தன்மை மிக்கது. அழகான காதலியை ரசித்து அவளைப் பின்பற்றியபடியே தொடரும் அவளைவிட அழகான இளைஞனின் காவிய ரசனைப் பாடல் இது.


'மெல்லிசை மன்னரி'ன் ஒவ்வொரு இசைக்கருவிகளும் இப்பாடலின் ஒவ்வொரு எழுத்தோடு இசைந்து இன்பம் தரும். சிதார், ஷெனாய், சந்தூர், கிளாரினெட், சாக்ஸ் , தபேலா, டோலக் என்று மனிதர் விளையாடி இருப்பார். நடிகர் திலகமும், கலைச்செல்வியும் தங்களை மெய்மறந்த நிலையில் அந்த பூங்காவின் பெஞ்சில் தழுவி கட்டுண்டு கிடக்க, பின்னால் ஒலிக்கும் அந்த கோரஸ் தொடர்ந்து வர இருக்கும் இந்த அற்புதப் பாடலுக்குக் கட்டியம் கூறி விடும். 'லாலா ஹாஹா ஹாஹா' என்று பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து கோரஸாக ஒலிக்கும் போது ஒவ்வொரு இளைஞனும் புளகாங்கிதம் அடைந்து விடுவான். மனதுக்குள் இனம்புரியாத கிலேசம் தோன்றி அனைவரையும் இன்பச் சித்ரவதை செய்துவிடும்.


படத்தின் துவக்க இசையே நம்மை உற்சாகத் துள்ளல் போட வைத்து விடும்.
SPB நாம் யாருக்குப் பாடுகிறோம் என்பதை உணர்ந்து வெகு அழகாக பாடியிருப்பார். நடிகர் திலகத்திற்கே உரித்த கம்பீரமும் குறைந்து போகாமல், அதே சமயம் காதல் பாடலென்பதால் தன்னுடைய பாணி குழைவுகளையும் விட்டுக் கொடுக்காமல் வார்த்தைகளை தெள்ளத் தெளிவாக உச்சரித்து பாலா புகுந்து விளையாடியிருப்பார். தினைமாவுடன் சேர்ந்த தேனாக வசந்தாவின் ஹம்மிங் உலகம் உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.
இறப்பே இல்லாத சாகாவரம் பெற்ற பாடல்.


பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
ஆஆஆஆஆஆஆஅ………
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைபோடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
என்னுடன் கலந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
ஆஆஆஆஆஆஆஆ……. ஹ ஹா ஹா
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
நிழல் போல் மறைந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
பொட்டு வைத்த முகமோ
ஓஓஓஓஓ….
கட்டி வைத்த குழலோ
ஓ...ஓஓஒ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
லலலா லலலா லலலா லால்லா
அந்தி மஞ்சள் நிறமோ
லலலா லலலா லலலா லால்லா

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/q87/s480x480/24294005_1538241642936796_3280204544030714670_n.jp g?oh=ae5da907772cd17e46b4831351de858d&oe=5AD59C29
(https://www.facebook.com/photo.php?fbid=1538241642936796&set=pcb.567330213618059&type=3&ifg=1)

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24296313_1538241536270140_8467121604689411622_n.jp g?oh=287c4476dadefe4a2b94ad101eb41ed8&oe=5AD2B87E



(nadigar thilagam sivaji visirigal)



(https://www.facebook.com/photo.php?fbid=1538241536270140&set=pcb.567330213618059&type=3&ifg=1)

sivaa
3rd December 2017, 10:12 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24302166_1901734023476952_7601936834821008050_o.jp g?oh=63243f3cba523c1e037eb7ec693d0240&oe=5A8B907F

sivaa
4th December 2017, 03:03 AM
vee yaar

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24294344_1626959520688047_5207972033645738375_n.jp g?oh=6bb8aebe294c6a6845b091f546c52d56&oe=5A97E842

sivaa
4th December 2017, 03:23 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24132043_585999348458316_2108778928428745118_o.jpg ?oh=7fa16a85050524d1ab4e111853ba57c5&oe=5AD79093

sivaa
4th December 2017, 05:19 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24174216_1840908702868014_2237620089010771573_n.jp g?oh=0df965ffe0fe25656ff9040287de3fd7&oe=5A9364CF

sivaa
4th December 2017, 05:33 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

9 வது வெற்றிச்சித்திரம்

மனிதனும் மிருகமும் வெளியான நாள் இன்று

மனிதனும் மிருகமும் 4 டிசம்பர் 1953
https://i.ytimg.com/vi/jyxqEz4Noy0/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj62tiOhu_XAhUo4YMKHTm4ARAQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Djy xqEz4Noy0&psig=AOvVaw3wF6BzWT1VNV0h2S1Jsfng&ust=1512431895302036)

https://upload.wikimedia.org/wikipedia/en/8/8a/Manidhanum_Mirugamum.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiH-ISChu_XAhUs8IMKHbD-DGIQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FManidh anum_Mirugamum&psig=AOvVaw3wF6BzWT1VNV0h2S1Jsfng&ust=1512431895302036)

sivaa
4th December 2017, 06:04 AM
Natarajen Pachaiappan




சிவாஜியா ? வசனமா ?


https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ffb/1/16/1f5e3.png

சில விஷயங்கள் இலைமறை காயாகத்தான் எக்காலத்திலும் பேச வேண்டியுள்ளது. அதில் நானும் விதி விலக்கல்ல. அதை அப்படியே எடுத்துக்கொள்வதும் அதின் உண்மை நிலையை உரைத்தலும் உங்களை போன்றோரிடந்தான் உள்ளது. நெருப்பை துணி கொண்டு எத்தனை நாள் மூடுவது ?
...

'திராவிடநாடு அலுவலகம்' அங்குதான் 'கணேசன்' தங்கியிருக்கிறார்... 'எம்.ஜி.ஆரால்' முடியாது என்ற சிவாஜி பாத்தித்தை "கணேசா
உன்னால் முடியும் தம்பி" என நம்பி... அண்ணா, கணேசனிடம் 90 பக்க வசனங்கள் கொண்ட "சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்" சிவாஜியின் பாத்திரத்திற்கான பகுதியை (portion) பிற்பகல் 3.00 மணியளவில் கொடுத்துவிட்டு இரவு 10.00மணிக்கு வருவதாக சொல்லி வருத்தத்தோடு கிம்புகிறார்.
...

சொன்னது போலவே வந்துவிட்டார். "என்ன கணேசா... படித்துவிட்டாயா?
கணேசன் சிரித்தவாறு அவரை இருக்கையில் அவரை அமரவைத்து விட்டு ஏற்ற இறக்கங்களுடன் வசனங்களை பேசி நடித்தும் காட்டிவிட்டார்.
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ffb/1/16/1f5e3.png
அண்ணா அப்படியே கணேசனை கட்டி அணைத்துக்கொண்டு.. "என்ன கணேசா உன் மனப்பாட சக்தி...3மணி நேர நாடகத்தை
7மணி நேரத்தில் படித்துவிட்டாயே...?"
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fff/1/16/1f3a5.png

867அடி... 1000அடி ஒரு ரீல் 2000அடி 2ஷாட் 2கட்... ஓக்கே என்றார் "இயக்குநர் பீம்சிங்"
அது கலைஞரின் ஓரங்க நாடகம் "சேரன்செங்குட்டுவன்" பாத்திரம் சிவாஜிக்கு
படம் "ராஜா ராணி" ஒரே மூச்சில் பேசி முடித்தார். நல்லபடியாக முடிந்ததற்கு சிவாஜி அவர்களை அனைவரும் புகழ்ந்தனர்.

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ffb/1/16/1f5e3.png

'ரஷ்-ரப்' பிரிண்ட் காப்பியை பார்க்கும் போது சவுண்ட் இன்ஜினியருக்கு தெரியவந்தது. ஒரே வருத்தம். காரணம் அதில் வசனம் பதிவாகவில்லை. எவ்வளவு கஷ்டப்பட்டு சிவாஜி நடித்தார். பீம்சிங்கிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இதை எப்படி சிவாஜி அவர்களிடம் சொல்வது? என்று யோசித்தனர். எப்படியோ அறிந்துக்கொண்ட சிவாஜி, அவர்களை நொந்துக்கொள்ளாமல் சர்வ சாதாரணமாக "நான் வசனத்தை மைக்ல பேசிர்றேன்... பாப்போம் என்றார். '867அடி' மிக துள்ளியமாக படத்தை பார்க்காமலே ஏற்ற தாழ்வுடன் துள்ளியமான நேர இடைவெளிகளை மனதில்கொண்டு பேசினார். டப்பிங்குக்கு, சிவாஜி அவர்கள் மைக்கில் பேசிய வசனம் படத்தில் அவருடைய நடிப்பிற்கும் உதட்டசைவிற்கும் மிக கண கச்சிதமாக பொருந்தியது. பீம்சிங் சிவாஜி அவர்களை நேரில் பார்த்து கட்டித் தழுவிக்கொண்டார்.

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ffb/1/16/1f5e3.png

சிவாஜி நினைவு நாள் விழாவில் கலந்துக்கொண்டு பேசிய 'பீம்சிங்'அவர்களின் மகன் தேசியவிருது பெற்ற 'எடிட்டர் பீ.லெனின்' அவர்கள், விழாவிற்கு வருகைதந்திருந்த நடிகர்களை பார்த்து "நீங்களெல்லாம் படத்தை பார்த்துத்தான் டப்பிங் பேசறீங்க ஆனால் படத்தை பாக்காமலே டப்பிங் பேசியவர் சிவாஜி ஒருத்தர்தான்" என்று அன்றைய 'சேரன் செங்குட்டுவனை' ஞாபகபடுத்தினார்.

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ffb/1/16/1f5e3.png


இப்போது சொல்லுங்கள் வசனத்தால் சிவாஜி பெயர் பெற்றாரா ? சிவாஜியால் வசனம் பெயர் பெற்றதா ?

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ffb/1/16/1f5e3.png

அன்புடன்...

சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24231788_721561541366902_6201728690794408124_n.jpg ?oh=523ebffbcdb02479adf22baf3d8ea6a1&oe=5AD666D7


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24301004_721561601366896_1561523926676974751_n.jpg ?oh=369e10a159a307b82b2861d802337cb7&oe=5AD077E6

sivaa
4th December 2017, 06:07 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24232488_196371744270039_7640004954769597184_n.jpg ?oh=ae52d63a216f5bf8a1c8027db02e254b&oe=5A91A92F

sivaa
4th December 2017, 09:28 AM
vee yaar



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24301038_1627508073966525_7240229859792282631_n.jp g?oh=e3f052b426e98b3134876506b437ae00&oe=5ACEB331

sivaa
4th December 2017, 03:22 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24131379_1997902810492538_1805979514770417492_n.jp g?oh=7033bfb858cfef944da3abf5b7c02106&oe=5A9D3CA7

sivaa
4th December 2017, 03:26 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24232169_1841302919495259_5044860360541802644_n.jp g?oh=0c8ebfebea6d19fb76afd9df233d3fbc&oe=5AC61AE1

sivaa
5th December 2017, 06:16 AM
Sundar Rajan


மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
சென்னையில் 100 நாள் விழா கண்ட மாபெரும் காதல் காவியம்,
மதுரையை மீண்டும் கலக்கிட வருகிறார் சிவகாமியின் செல்வன்.
... 8.12.2017 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக கலக்க வருகிறார் சிவகாமியின் செல்வன்.
அன்பு இதயங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்க வருகிறார் சிவகாமியின் செல்வன்.
சமீபத்தில் எந்த படமும் சரியான வசூலை கொடுக்காத சூழல் உருவாகி உள்ளது.
அதை பொய்யென நிரூபிக்க நடிகர்திலகத்தின் படங்களாலும், நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களால் மட்டுமே முடியும்.
இன்றே தயாராவோம்,

ஆனந்தையும், அசோக்கையும் வரவேற்க...


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24296512_1523874541030478_4204004241201396100_n.jp g?oh=92b933fc4504b39c07e2f9df640fdbf7&oe=5A986164

sivaa
5th December 2017, 06:18 AM
S.Annadurai

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24296301_150284032365663_6715308022348623929_n.jpg ?oh=99b63702644c1ea08a4620f54e571d69&oe=5ACA4D06

sivaa
5th December 2017, 06:22 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24796562_1993157327565752_8916852421204216922_n.jp g?oh=fe92c70a217e976701ace6db8eea715f&oe=5AD19894

sivaa
5th December 2017, 06:48 AM
vee yaar

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24302153_1628254460558553_1771363043291595806_o.jp g?oh=2a964ec37b439ca2f946362a9eb4ed14&oe=5ACBFE63

sivaa
5th December 2017, 07:01 AM
vee yaar

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24294394_1628503487200317_9118633395169853981_n.jp g?oh=03e61133203500b052d33b3404b37856&oe=5AC9AEDC

sivaa
5th December 2017, 08:43 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24852400_1628533400530659_8868693412946983766_n.jp g?oh=cb63c5d11067f3c3c9e16ed42203f0f1&oe=5AD0C503

sivaa
5th December 2017, 09:19 PM
Natarajen Pachaiappan


உண்மை "தெய்வமகன்"
....

ஆமாமா... பொறாமையாதான் இருக்கு, உங்களை பிடிக்காதவங்களுக்கு...
.....

எங்களுக்கு பெருமையாக இருக்கு...
....

என்னய்யா நடிப்பு இது ?
எப்படியய்யா முடிஞ்சுது ?
....

இப்போ இருக்கிறா மாதிரி அப்போ...
எந்த தொழில் நுட்பமும் இல்லாத காலத்துல... ஒரே இடத்துல மூன்று பேர்?!
ஏதோ வந்தோமா, போனோமான்னு இல்லாம...
இதான் இயல்பான நடிப்புன்னு சொல்லாம...
ஒவ்வொரும் உச்ச ஸ்தானத்துல நிப்பீங்களே... அதாய்யா நடிப்பு...
பார்த்த எங்களுக்கு இன்னும் தீரவில்லையய்யா அந்த பிரமிப்பு...
எப்படியய்யா சாத்தியமாச்சி ?
சத்தியமா வாய்ப்பே இல்லை.
....

ஒரு பாத்திரத்தை ஞாபகம் வைப்பதே
பெரும்பாடு?
இப்படி விளையாடி இருக்கீங்களே... நியாயமா? மூன்று நடிப்புல எது சிறப்புன்னு கேட்டா?
எதை சொல்றது ?
....

அப்பப்பா... அப்பாவின் நடிப்பு !
பணக்காரர்களுக்கே உள்ள கம்பீரம், மிடுக்கு, மின்னல் சிரிப்பு... நொடி பொழுதில் மாறும் நடிப்பு...
பெரிய பிள்ளையிடம் குற்ற உணர்வுடன், கண்கள் கலங்க பார்க்கும் கரிசணம். மன்னிச்சுடுடா... என்று சொல்லாம சொல்லும் கண்களின் கண்ணீர்...
ஒவ்வொரு ரசிகரின் கண்களிலும் கண்ணீர்
அருவியாய் கொட்டுமே...
....

அந்த வளைஞ்சி குழையர பிள்ளையின் நடிப்பு... எப்படி கற்பனை செய்தாயோ?
யாரை முன்மாதிரியாய் எடுத்தாயோ ? அம்மாவின் பின்னால் மறைந்துக்கொண்டு அப்பாவிடம் பேசும் பாவனை, கொஞ்சம் ஓவர் என்பார், செல்லத்தில் வளரும் பிள்ளைகளை பார்த்தறியாதவர்கள்.
இந்த நடிப்பைதான் ஹாலிவுட் நாயகன் 'ஜானி டீப்' பிரதி எடுத்தான்.
நகம் கடிக்கும் ஸ்டைல் மட்டும் இயக்குநர் 'ஸ்ரீதர்' அவர்களின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்ததிலிருந்து வந்தது.
உலகத்தில் ஒவ்வொருவரின் நடவடிக்கையும் உற்றுப்பார்த்த உருயேற்றியவர் சிவாஜி! ஆச்சரிமாய் இருக்குது... ஏன் உன்மேல் பொறாமை இருந்திருக்காது ?
....

ஒரு பதிவில் படித்தது. "1969ல் வெளியானது 'தெய்வமகன்' திரைப்படம். அதில் இரண்டாவதாக மகனாக வரும் மூன்றாவது சிவாஜியின் பாவங்கள்; விடலைத்தனமான சேஷ்டைகள் செயற்கையாக இருக்கிறது' என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.
எனக்கும் முதல்முறை பார்க்கும்போது
கோமாளித்தனமாகத்தான் தோன்றியது.
2007ல் வெளியான 'Pirates of the Caribbean: At World's End என்ற ஹாலிவுட் படத்தில், 'Johnny Deep' ன் நடை, பாவனை, நகம் கடித்தல், உடல் மொழி, வசனம் பேசுகின்ற முறை எல்லாமே அப்படியே தெய்வமகனில் 3வது இளைய சிவாஜியின் நடிப்பை முற்றிலும் தழுவியதாக இருந்தது.
'Johnny Deep' ன் நடிப்பு, மிகச்சிறப்பாக இருக்கிறது என்று உலகம் கொண்டாடப்பட்டது. தெய்வமகன் வெளியானபோது Johnny Deep ன் வயது 6. ஒருவேளை தெய்வமகனை பார்த்திருப்பாரோ Johnny Deep? இதை மிகப்படுத்தப்பட்ட கேள்வியாக தோன்றலாம். ஆனாலும் தவிர்க்க முடியவில்லை. தெய்வமகன்' ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்பது ஒரு கூடுதல் தகவல்."
....

அமைதியாக, ஆக்ரோஷமாக அடிக்கடி மாறினாயே... ஆச்சரியமான நடிப்பு!
"அன்னையை பார்த்தப்பின் என்ன வேண்டும் தெய்வமே... இன்று நான் பிள்ளைபோலே மாறவேண்டும் கொஞ்சமே" அந்த ஏக்கம் கண்களில்... அப்படியே நம்மை என்னமோ செய்து உருகவைக்கும். உலகத்தைவிட்டு போகும்போது, உயிராய் உலவவிட்ட தாயவளின் மடியில் படுக்காத அந்த உயிர், தெய்வமகனாகி மடியில் சாய்ந்திருந்து அம்மாவென்று சொல்லும் போது ஆண்களையும் பெண்களாக்கி அழவைக்கும் சாதுர்யம்... நிச்சயமாக உனக்கு மட்டும் உரித்தானது.
உண்மையிலேயே நீ !
"தெய்வமகன்"தானய்யா...
....

வேறு ஒரு மொழி படத்தை தமிழில் பிரதி எடுக்கும் போது அந்த நடிகரின் நடிப்பை பிரதி எடுக்கமாட்டார். ஏனென்றால் அந்த படத்தை அவர் பார்க்கமாட்டார். அவரின் சொந்த நடையிலே, இயக்குநர் தன்னிடம் என்ன எதிர்பார்க்கின்றாறோ அதைதான் செய்வார்.
அத்துடன் தன் ரசிகர்களின் மனவோட்டத்தை
அறிந்த மாபெரும் கலைஞன்.
இதில் மிகையான நடிப்பு (Over acting) நடுதரமான நடிப்பு (Medium acting) மிதமான நடிப்பு(under acting) தீர்மானிப்பதெல்லாம் இயக்குநரே,
அவரை பொறுத்தவரை அனைத்து நடிப்பும், அதிலிருக்கும் அத்தனை ரகங்களும் தெரியும். ஆனால் அதை தீர்மானிப்பது இயக்குநரின் பொறுப்பு.
....

'தெய்வ மகன்' படம் பிரபல வங்காள நாவலாசிரியர் டாக்டர் நிஹர் ரஞ்ஞன் குப்தா அவர்களின்'உல்கா' (Ulka) என்ற மேடை நாடகத்தை அடிப்படையாக கொண்டு 1965ல் ஜி.வி.அய்யர் இயக்கத்தில் கல்யாணகுமார், முத்துராமன் நடிப்பில் 'தாயின் கருணை' என்ற படமாக வெளிவந்தது. ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
......
அதன்பிறகு ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ஆரூர்தாஸ் வசனத்தில் 1969 செப்டம்பர், 5ல் "தெய்வகன்" வெளிவந்து வெற்றிப்படமாகி சிவாஜியின் புகழை விண்ணைத் தொடவைத்தது.
....

தெய்வமகன் தெலுங்கில் 'கோடீஸ்வரலு' என்ற படமாக டப் செய்யப்பட்டு நன்றாக ஓடியது.
....

கவிஞர் கண்ணதாசன் அர்த்தம்தரும் பாடல்களுக்கு இசையூட்டிய 'மெல்லிசை மன்னரையும்' பாடிய டி.எம்.எஸ் அய்யாவையும் மறக்கமுடியாது.
.....

'பலே பாண்டியா' படத்திற்கு பிறகு நடிகர்திலகம்
மூன்று விதமான பாத்திரங்களை ஏற்று நடித்தப் படம்.
....

நடிகர்திலகத்திற்கு அந்தவிதமான முகத்திற்கு
ஒப்பனை செய்த கலைஞர்கள் ஆர். ரங்கசாமி மற்றும் அவருடைய மகன் ஜெயந்த்குமார் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அவலட்சன முகங்களாக சித்தரித்து காட்டியிருப்பார்கள். உண்மையில் சொன்னால், அதுகூட அவர் முத்திற்கு அழகாகவே இருந்தது.
.....

வெளிநாட்டு படங்களுக்கான 'ஆஸ்கர் விருது'க்காக தமிழ்நாட்டின் முதல் படமாக இந்தியாவிலிருந்து போட்டிக்கு அனுப்பப்பட்டது. நடிகர்திலகத்தை நடிப்பின் பெருமைகளை எடுத்துச்சொல்ல நல்லவர் ஒருவர் ஆஸ்கர் கமிட்டியில் இருந்திருந்தால். அன்றே அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கும். பாவம், ஆஸ்கர் விருதுக்கு கொடுத்து வைக்கவில்லை போலும். இந்தியாவின் ஒவ்வொரு ஆண்டிற்கான சிறந்த விருது தருவதற்கே, ஆயிரத்தெட்டு சிபாரிசுகள், லாபிகள் நடப்பது போன்று ஆஸ்கர் விருதிலும் விதி விலக்கில்லை.
....

1985ல் தெய்வமகன் கன்னடத்தில் 'தாயி மமதே'
(Thayi Mamathe), என்ற படமாக மறுதயாரிப்பாக வெளிவந்தது. இதில் டைகர் பிரபாகரன் அவர்கள் நடித்திருப்பார். ஆனால் நடிகர்திலகத்தின் ஒரு மூலையை தொடவில்லை. எந்த தைரியத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாரென தெரியவில்லை, காமெடியாக இருக்கும்.
...

ஹிந்தியில் மறுதயாரிப்புக்கு உட்படுத்தவில்லை. காரணம் அங்கிருக்கும் ஜாம்பவான்கள் நடிகர்திலகம் நடிப்பை பார்த்த பின்னே தயங்கியதுதான் காரணம். 1976ல்
திலீப்குமார் அவர்கள் மூன்று வேடங்களில் நடித்த நடித்த பைராக்(Bairaag) என்ற ஹிந்திப்படம் தெய்வமகன் போன்ற கதைதான் ஆனால் தந்தையும் ஒரு மகனும் கண்தெரியாத பாத்திரமாய் மாற்றி இருப்பார்கள். இதுவும் ஒரு வெற்றிப்படம் தான் .
...

ஆனந்தவிகடன் விமர்சனத்தில் வந்தது:
நடிகர்திலகம் அவர்கள் பல பாத்திரங்களை ஏற்றபோதும், எந்தவித குழப்பங்களும் இல்லாமல் நடித்திருப்பது அவரின் நடிப்பிற்கு ஒரு மைல் கல்லாகும். சிவாஜிகணேசன் என்கின்ற ஒரே தூணை வைத்து ஒரு மாளிகையை கட்ட இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.
...

தெய்வமகன் படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம், நீங்களும் சொல்லலாம்...
...

அன்புடன்...

சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24312831_722421944614195_2700570588852406791_n.jpg ?oh=cf2185658fe7697b0c88682e308583a0&oe=5AC4AD85

sivaa
5th December 2017, 11:45 PM
Madurai SivajiPeravai

நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 90 -வது பிறந்தநாள் விழாவையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, நடிப்புத் திறன் போட்டி ஆகியவை, கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி புதுக்கோட்டை மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஏராளமான பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு,
வரும் 17 -12 -2017 , ஞாயிறு மாலை 4 மணிக்கு, புதுக்கோட்டை நகர்மன்ற அரங்கில் நடைபெறும் நடிகர்திலகம் சிவாஜி 90 -வது பிறந்த நாள் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த விழாவில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24862295_1960794100854419_3235924444681791937_n.jp g?oh=f4925b3491b20a35a5566ed69f972246&oe=5A9132F6

sivaa
5th December 2017, 11:46 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24799532_1960794097521086_5323338123975060753_o.jp g?oh=bcd0cbc5c2aa03be8d86b17dd176de7e&oe=5A9A6DD2

sivaa
5th December 2017, 11:47 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24313165_1960794094187753_360035461648656045_o.jpg ?oh=c1c2d212b97b674cbe3ca4577bdda30f&oe=5AC3A613

sivaa
5th December 2017, 11:48 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24837643_1960794150854414_5682996058906862542_o.jp g?oh=b5a9c54e5e7646ef8b2cc87b6c0cfdbb&oe=5A9A7DDD

sivaa
5th December 2017, 11:48 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24210304_1960794154187747_7398538499499805283_o.jp g?oh=eb9c877b9fb3775020003b06ede11b40&oe=5A89D577

sivaa
5th December 2017, 11:50 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24799598_1960794164187746_908835007686189189_o.jpg ?oh=4bb614d4e509156e89c510a44edcaf3a&oe=5A8B71BD

sivaa
5th December 2017, 11:51 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24296852_1960794240854405_200936973920915865_n.jpg ?oh=aff69fa047d44afcbe30bb16afd392f6&oe=5A977CB3

sivaa
5th December 2017, 11:51 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24301205_1960802214186941_6630597292962681140_n.jp g?oh=94f5b88d65ebe76e19658cb908037609&oe=5AD7B565

sivaa
5th December 2017, 11:56 PM
Padma Balu

சமீபத்தில், பட்டிக்காடா..பட்டணமா…திரைப்படத்தினை மீண்டும் பார்க்க நேர்ந்தது…படம் வெளியாகி கிட்டத்தட்ட 45 வருடங்கள் ஆனபோதும்…இப்போது பார்த்தாலும்…ரசிக்க வைக்கும் ஒரு அற்புதமான படம்.
சோழவந்தான் எனும் கிராமத்தில் வாழும் கண்ணியமான மிராசுதார் மூக்கையன், அவனது முறைப்பெண் கல்பனா, லண்டனுக்கு படிக்க சென்று மேல்நாட்டு நாகரீகத்தில் மூழ்கி திளைப்பவள் . கல்பனாவின் தந்தைக்கு மூக்கையனின் மேல் நல்ல அபிப்ராயமும் மரியாதை யும் கொண்டவர். கல்பனாவின் தாயாருக்கு மூக்கையனை கண்டால் வேப்பங்காய். சந்தர்ப்பம் மூக்கையன் கல்பனாவை கணவன் மனைவி ஆக்குகிறது. பிறகு கல்பனாவின் மேல்நாட்டு நாகரீகத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் விளைவாக இருவருக்குள் பிரிவு ஏற்படுகிறது..எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றி எரிய வைப்பது கல்பனாவின் தாயார். இந்த சூழல் மாறி, எப்படி மீண்டும் இருவரும் இணைகின்றனர் என்பதே…கதை..
நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பினை வெளிப்படுத்த வாய்ப்பளித்த அற்புதமான கதையமைப்புடன் வந்த முத்தான பல படங்களில் இதுவும் ஒன்று.. என்ன.. ஒரு அழகான விறுவிறுப்பான கதை அமைப்பு, அற்புதமான நகைச்சுவை, ஆச்சி மனோரமாவுக்கு லட்டு மாதிரி கேரக்டர்…மைனர் ஆக வரும் M.R.R. வாசு.. காமெடியில்..சரவெடிதான்…(என்ன வெள்ளையம்மா….இந்த மாமனுக்கு என்னைக்கு கோழி அடிச்சு கொழம்பு வெச்சு சோறு போட போறே…)
திமிரடித்தனம் என்றால் இதுதான் என காட்டும்….அதே சமயத்தில் கிளைமாக்சில் சரண்டர் ஆகும் அழகிய கதா…பாத்திரம்…கதாநாயகி ஜெயலலிதாவுக்கு. ..வீ.கே. ராமசாமிக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி ஒரு பாத்திரம்… மனிதர் ஊதி தள்ளி விடுகிறார்…சுகுமாரி படம் பார்ப்பவர்களின் கோபத்தை ஏற்ற…பெரிதும் உதவுகிறார்…பாடல்கள்..அத்தனையும் தேன் சொட்டுகள் , தேனில் நனைத்த பலா சுளைகள்..எனலாம்…அனைத்துக்கும் மேலாக நடிகர் திலகத்துககாகவே அமைக்க பட்டதோ…எனப்படும்…திரைக்கதை, வசனம்… (வசனம் பாலமுருகன்…ஆகா…நறுக்கு தெறித்தது போல…காட்சிக்கு காட்சி…மிக பொருத்தமான வசனங்கள்..)
நடிகர் திலகம் …நடிப்பதற்காகவே…பிறந்த அவதாரம் ஆயிற்றே…மனிதர் பின்னி எடுத்து விடுகிறார் ….வெகு இயல்பாக…அருமையான பொருத்தமான நடிப்பு..இப்போதும்…திரும்ப திரும்ப…பார்க்க வைக்கும் நடிப்பாற்றல்…அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம்…
அசல் கிராமத்து பண்ணையாராக கம்பீரமான பொறுப்புள்ள குடுமி வைத்த விவசாயியாக வருவதாகட்டும்…ஒரு பொறுப்புள்ள பஞ்சாயத்து தலைவராக நடந்து கொள்வதிலாகட்டும், எனன மாப்பிளே.. ஊருலே…கோழியெல்லாம் ஊருலே நெறைய காணாம போகுதாமே…என…கூப்பிட்டு ஒரு MRR வாசுவை மிரட்டி ஒடுக்குவதில் ஆகட்டும்,
ஒரு சந்தர்ப்பத்தில்…மேல்நாட்டு ஹிப்பி பாடகன் போல வேடமிட்டு என் பேர் “முக்கேஷ்” நான் லண்டன்லேர்ந்து வந்திருக்கேண்டி..என் …ஜிஞ்சினாக்குடி…என்று…நடனத்தில் கலக்குவதாகட்டும்…ஆங்கிலத்தில் அநாகரீகமாக திட்டும் மனைவியின் வாயடைக்கும் வண்ணம்..ஆங்கிலத்திலேயே…பேசி மடக்கி, நானும் படிச்சவன்தான்…படிக்கிறது அறிவ வளர்த்துக்கரதுக்கு,
இந்த மாதிரி ஆட்டம் போடுறதுக்கு இல்லே..என கூறும் லாவகமாகட்டும், மனைவியை பிரிந்து…துடிப்பதாகட்டும்…
பஞ்சாயத்தில் கணவன் மனைவியை சேர்ந்து வாழுவதுதான் புத்திசாலித்தனம் என சமாதான படுத்த முயல…” ஒங்க..பொஞ்சாதி எங்கே…பஞ்சாயத்து பண்ண ஒங்களுக்கு எனன யோக்கியதை இருக்கு” என ஒருவன் கேட்க…
வீட்டுக்கு வந்து… அப்பத்தா…சோழவந்தான் சுந்தர மகாலிங்க தேவன் மகன் மூக்கையா தேவனுக்கு இன்னைக்கு பஞ்சாயத்துலே கெடச்ச வரவேற்ப்ப நீ.. பாத்திருந்தேன்னா… அப்புடியே…பூரிச்சு போயிருப்ப…
அடாடா..நான் வராம போயிட்டேனே…
நான் வந்துருக்கேனே உயிரோட…
நாக்கு மேலே பல்லு போட்டு எவண்டா ஒன்ன கேள்வி கேட்பான்…
கேட்டான் அப்பத்தா…பொண்டாட்டியோட சேர்ந்து வாழ வக்கில்லாதவன் நீ என்னடா…பஞ்சாயத்து பண்ணுறதுன்னு கேட்டானே..ஒரு கேள்வி….
என்று வசனம் பேசி குமுறும் இடம்… நடிப்பின் உச்சக்கட்ட காட்சிகளுள் ஒன்று..
தாராளமாக புது பிரிண்ட் ஆக….ரீ ரிலீஸ் பண்ண வேண்டிய ஒரு படம்…
தேனினும் சுவையான பாடல் காட்சிகளும் நம்மை கட்டிப்போட்டது…முக்கியமாக இத்தனை வருடம் கழிந்தும்…நம்மை கேட்க தூண்டும்..பாடல்கள்…
அம்பிகையே..ஈஸ்வரியே..பாடலில் துவங்கி, முத்து சோலை தங்க கிளிகள், கேட்டுக்கோடி உறுமி மேளம்…போட்டுக்கோடி கோகோ தாளம், என்னடி ராக்கம்மா…(சந்தோஷம், சோகம்) நல்வாழ்த்து நான் சொல்லுவேன்…வாவ்…என்ன ஒரு அருமையான அழகான இசை…கோர்ப்பு…மனோரமா…கோழி சோறு…போடுகிறேன்..என வாசுவை விட்டு வெளுக்கும் வெளுப்பில்…அடுத்த முறை..என்ன மைனரே..கோழி சோறு வேணுமா…அய்யய்யோ…எங்கேயோ…அவசரமா போற மாதிரி இருக்கு…போகட்டும்…போகட்டும்..என அவர் பம்முவதும்…சிவாஜியை கூலிப்படை தாக்க கடத்தி சென்று..ஊரை சுற்றி காண்பிக்க அவர் திருப்பி கொடுக்கும்போது…ஏண்டா..சாந்தி தியேட்டரை …என்கிட்டே..காட்டுறியா..என கேட்டு வெளுப்பதும்…சரியான ருசியான காட்சிகள்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24294444_520673774975386_3321909840413516885_n.jpg ?oh=c6334232ab205131e71a72ac7f465b75&oe=5ACE47F9
(https://www.facebook.com/photo.php?fbid=520673774975386&set=gm.1609884389093845&type=3&ifg=1)

sivaa
6th December 2017, 12:44 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24296550_179525299295760_117355873701942953_n.jpg? oh=3425e2ec54ca16ce403346a26dfc57fe&oe=5AC30844

sivaa
6th December 2017, 12:45 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24301395_179525382629085_3487400775522189244_n.jpg ?oh=3a9b6536cf4cafd9be9e3dc427f390cd&oe=5A8DE71C

sivaa
6th December 2017, 12:45 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24796556_179525449295745_2554703769583810766_n.jpg ?oh=0047900be7cb3c315e2d1f5824f5c36b&oe=5A97CC78

sivaa
6th December 2017, 12:47 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24296637_179525515962405_3987907256081301298_n.jpg ?oh=6515effb08b84cbd10d7ce8eb038cc51&oe=5ACD1CFA

sivaa
6th December 2017, 12:48 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24312462_179525892629034_7611063029662425180_n.jpg ?oh=55d5b3173e94fea25e1985fb49efb9e4&oe=5A8DBF51

sivaa
6th December 2017, 12:49 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24232104_179525942629029_6939173219435648342_n.jpg ?oh=5a00503e61dc8ea8da5035ce36700cb8&oe=5AC81272

sivaa
6th December 2017, 12:50 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24796316_179525989295691_449233195620347108_n.jpg? oh=0351e984f964f36f9897c0f45b28890b&oe=5A89AC36

sivaa
6th December 2017, 01:12 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

180 வது வெற்றிச்சித்திரம்

பாட்டும் பரதமும் வெளியான நாள் இன்று

பாட்டும் பரதமும் 6 டிசம்பர் 1975
https://i.ytimg.com/vi/PbTe22p2f6M/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjMuui80PPXAhXFVhoKHU6bBNwQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DPb Te22p2f6M&psig=AOvVaw3aLNMP1sgDgf0E1_HpuOTu&ust=1512589263003721)
https://upload.wikimedia.org/wikipedia/en/e/e6/Paattum_Bharathamum.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiohZyl0PPXAhXDcBoKHSvbAdUQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FPaattu m_Bharathamum&psig=AOvVaw3aLNMP1sgDgf0E1_HpuOTu&ust=1512589263003721)

sivaa
7th December 2017, 06:00 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24067980_131071850907048_2688645921335544266_n.jpg ?oh=aeb8cf1f25635eb1f7fcdbab6a083979&oe=5ACAB4B4

sivaa
7th December 2017, 06:10 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

160 வது வெற்றிச்சித்திரம்

நீதி வெளியான நாள் இன்று

நீதி 7 டிசம்பர் 1972

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24301287_1857974591181795_2026311314588055351_n.jp g?oh=b235619a384a2400224eb3dfb395c339&oe=5AC7E432https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24775001_1857974627848458_1433283283822734818_n.jp g?oh=db5cef863b877c9ba501500433548bbd&oe=5A972711

sivaa
7th December 2017, 06:18 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

166 வது வெற்றிச்சித்திரம்

மனிதரில் மாணிக்கம் வெளியான நாள் இன்று

மனிதரில் மாணிக்கம் 7 டிசம்பர் 1973

http://s1.dmcdn.net/AAlke.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjQ-4XP1fbXAhXm8YMKHdOrAFkQjRwIBw&url=http%3A%2F%2Fwww.dailymotion.com%2Fvideo%2Fxh5 rr5&psig=AOvVaw0--TpFq2maghQfSx1krp_O&ust=1512693783662709)

http://oi64.tinypic.com/334oilk.jpg

sivaa
8th December 2017, 09:39 PM
Vasudevan Srirangarajan

ரஹீமின் ராஜாங்கம் தற்போது ராஜ் டிஜிட்டல் ப்ளஸில்

பாவமன்னிப்பு



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/24796280_1997397037216270_3206378316088568595_n.jp g?oh=7a702b2631c5f8adac14f37af89438a2&oe=5A9270A6
(https://www.facebook.com/photo.php?fbid=1997397037216270&set=pcb.1613070888775195&type=3&ifg=1)https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/24993269_1997397073882933_4741871470059227198_n.jp g?oh=e0b371feb9a6524dc9f591c05024a5a1&oe=5ACAB45A
(https://www.facebook.com/photo.php?fbid=1997397073882933&set=pcb.1613070888775195&type=3&ifg=1)




Like (https://www.facebook.com/groups/168532959895669/?multi_permalinks=1613060775442873%2C1613036552111 962%2C1612953728786911%2C1612555212160096%2C161254 5992161018&notif_id=1512694797760079&notif_t=group_activity#)

sivaa
9th December 2017, 12:21 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

206 வது வெற்றிச்சித்திரம்

வெற்றிக்கு ஒருவன் வெளியான நாள்

வெற்றிக்கு ஒருவன் 8 டிசம்பர் 1979

https://i.ytimg.com/vi/5ogXzEtFTrs/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiRrtnEifvXAhVI6oMKHR2MBXMQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D5o gXzEtFTrs&psig=AOvVaw1jsjisvR82kFHeRrbHCKtL&ust=1512845159849825)

sivaa
9th December 2017, 12:24 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

19 வது வெற்றிச்சித்திரம்

எதிர்பாராதது வெளியான நாள் இன்று

எதிர்பாராதது 9 டிசம்பர் 1954

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24862266_1858891111090143_5800886495027427683_n.jp g?oh=1ab0ab6bdc11a7701a77cafd03d51712&oe=5A911489

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24900022_1858891134423474_4658401337284778801_n.jp g?oh=40de252dc59845b49919e27bec0f5116&oe=5A90F133

sivaa
9th December 2017, 10:29 AM
இன்று காலை 11 மணிக்கு சன்லைஃபில்

நவராத்திரி

https://upload.wikimedia.org/wikipedia/en/f/f6/Navarathri-1964.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwihwtTCkvzXAhVL0YMKHaYuD4sQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FNavara thri_(1964_film)&psig=AOvVaw2n_Zt8szibrorqiJzzH1zK&ust=1512881913808455)

sivaa
9th December 2017, 06:08 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24312388_2519936188232425_3187712421390001713_n.jp g?oh=5504ad25ba59283e8426b8c5da886002&oe=5AD396CF


(face book - Ganes moorthy)

sivaa
9th December 2017, 06:10 PM
Sundar Rajan






மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,

மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வெள்ளி முதல் வெளியான நடிகர்திலகம் இருவேடங்களில் நடித்த,
சென்னையில் மறு வெளியீட்டில் 100 நாள் கண்ட,
... ஒரு வருடத்திற்கு முன் மதுரை மீனாட்சி தியேட்டரில் வெளியாகி இரண்டு வாரங்கள் ஓடிய

சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
10.12.2017 ஞாயிறு மாலை நடைபெறும் ரசிகர்கள் சிறப்புக் காட்சிக்கு அன்பு இதயங்கள் அனைவரும் ஆர்ப்பரித்து வருகை தந்து, அரங்கு நிறையச் செய்திட வேண்டும்.


சாதனை என்றால் சிவாஜி,
சிவாஜி என்றால் சாதனை
என்பதனை நிரூபிப்போம்.






https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p320x320/24991429_1528753870542545_2910351560613296183_n.jp g?oh=759acaa6d52c68f6a36faab14203ba8a&oe=5A89B260
(https://www.facebook.com/photo.php?fbid=1528753870542545&set=a.222089247875687.55258.100002238405105&type=3)

sivaa
10th December 2017, 02:11 AM
sivaji palanikumar


இன்றும்அன்னை
இல்லத்தில்
நற்பணிகள்.
குருகுலம்சார்.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24991167_371368313321934_7499369009669335739_n.jpg ?oh=1706aaf4a167060a024a48ac625db156&oe=5A8CF0E8

(முகநூல் பதிவு)

sivaa
10th December 2017, 02:14 AM
Abdul razack

நாளை 10/12/2017. எங்கள் புதுக்கோட்டை மாவட்ட அகில இந்திய சிவாஜிமன்றம் சார்பாக. நடைபெறும் நடிகர்திலகத்தின் 89.வது பிறந்தநாள் விழாவின் பிளக்ஸ்.. அனைவரும் வருக வரவேற்பது மாவட்ட அகிலஇந்திய சிவாஜி மன்றம் புதுக்கோட்டை.
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24879903_510913732602315_5159317359571848793_o.jpg ?oh=211ef07e89212b59981f8934187e55ae&oe=5AD47AC6

sivaa
10th December 2017, 02:19 AM
Lakshmankumar Rajunaidu


1960 களில் பிரபல சினிமா இதழ் குண்டூசியின் ஆசிரியர் பி.ஆர்.எஸ் கோபால் உடன் நடிகர் திலகம்.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24909830_173760380027802_4989703731899912287_n.jpg ?oh=0f8053869ab8f42d58ef360e4338422d&oe=5A8CABDB

sivaa
10th December 2017, 05:04 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

105 வது வெற்றிச்சித்திரம்

நீலவானம் வெளியான நாள் இன்று

நீலவானம் 10 டிசம்பர் 1965

https://upload.wikimedia.org/wikipedia/en/f/f6/Neela_Vaanam.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi6hZqwi_7XAhUi6IMKHYoWA5sQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FNeela_ Vanam&psig=AOvVaw2io2WeYKxf37rVOqQqnT1u&ust=1512948683785153)

https://i.ytimg.com/vi/J-_mK8AoQQs/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjI3u-Yi_7XAhVr3IMKHVetDMsQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DJ-_mK8AoQQs&psig=AOvVaw2io2WeYKxf37rVOqQqnT1u&ust=1512948683785153)

sivaa
10th December 2017, 05:11 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

231 வது வெற்றிச்சித்திரம்

நெஞ்சங்கள் வெளியான நாள் இன்று

நெஞ்சங்கள் 10 டிசம்பர் 1982
https://spicyonion.com/images/profile/movie/1982/nenjangal.jpg (https://spicyonion.com/movie/nenjangal/)


https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/73/Nenjangal.jpg/220px-Nenjangal.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi045_5jP7XAhVp64MKHagwCa0QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FNenjan gal&psig=AOvVaw2dRKwKLMD6vuUdKfJ5kNHI&ust=1512949145345709)

sivaa
10th December 2017, 05:16 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24862388_1995516243996527_1736564510972325559_n.jp g?oh=6009cfa40ce749faa65784d493a9b5c0&oe=5A8A893B

sivaa
10th December 2017, 05:17 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24852257_1994835767397908_3674609588842603514_n.jp g?oh=64ad54061e4814f81fab54e4707b787e&oe=5AC36C17

sivaa
10th December 2017, 05:18 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24312817_1993974990817319_1327760660864897117_n.jp g?oh=650488224a54f993d21a0248cfd92bb6&oe=5A8EA612

sivaa
10th December 2017, 04:05 PM
sekar parasuram

இன்று (December 10 2017) மாலை 4:00 மணிக்கு ஜெயா மூவி தொலைக்காட்சியில்

புதியபறவை

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/24991509_1544215062362045_9118392040166226048_n.jp g?oh=5952c7ccd6986b467a38abf2310a9683&oe=5A8F2907

sivaa
10th December 2017, 04:10 PM
சபா






இன்றைய தினமலர் வாரமலரில் திரு சந்திரபாபு பற்றிய கட்டுரையில் '

சிவாஜி கணேசணின் மகனும் பிரபு வின் அண்ணணுமான தளபதி ராம்குமார் மீது சந்திரபாபுவுக்கு தனி பிரியம் உண்டு. பெங்களுரில் படித்துக் கொண்டிருந்த தளபதி விடுமுறைக்கு வரும் பொழுது எல்லாம் சந்திரபாபு உடன் தான் பெரும்பாலும் பொழுதை கழிப்பார்.தளபதியின் கல்லூரி அட்மிஷனுக்காகவும் ஒரு கல்லூரி முதல்வரிடம் பேசினார் பாபு. ஆனால் இடம் கிடைக்கவில்லை இதையடுத்த...ு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்தார் தளபதி. இவ்விஷயம் பற்றி சந்திர பாபு கூறும் போது விளம்பரம் இல்லாமல் எவ்வளவோ நன்கொடை கள் செய்திருப்பதுடன், நிதி உதவிக்காக பல நாடகங்களை சிபாரிசு செய்திருக்கிறார். சிவாஜி கணேசன்.ஆனால் அவர் மகனுக்கு கல்லூரியில் இடம் இல்லை. இப்படி எழுதித்தான் நான் என் மனக்குறையைப் போக்கிக் கொள்ள முடிகிறது ...!"என்று கூறி உள்ளார்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24900241_280220702500453_3337055760740472993_n.jpg ?oh=52aee4463bb5224485bc830c10b548e1&oe=5A8FCAF2

sivaa
10th December 2017, 04:39 PM
Sekar Parasuram








இருட்டடிப்பு,

இதற்கான முழு விளக்கம் என்பது நடிகர் திலகத்தின் புகழையும் பெருமைகளையும் தொடர்ந்து மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டு வரும் பத்திரிகை துறையின் மறுபெயர்,
அது அன்றைய தினத் தந்தி தொடர்ந்து இன்றைய டிவி நியூஸ் சேனல்கள் வரை தொடர்கிறது,

அதற்கு உதாரணமாக நேற்று இரவு நியூஸ் 7 சேனலில் ஒளிபரப்பப்பட்ட மறைந்த துக்ளக் ஆசிரியர் திரு சோ ராமசாமி அவர்களின் நினைவு நாள் சிறப்பு ஒளி பரப்பில் இடம் பெற்ற செய்திகள்,
நியூஸ் 7 சேனலை பொறுத்த அளவில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள...் மற்றும் நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை பிரமாதமாக ஒளி பரப்பு செய்தது செய்து வருகிறது, ஆனால் அது முழுக்க நடிகர் திலகம் கலைச் சேவையினை தொடர்புடையதாக மட்டுமே இருந்து வருகிறது, நடிகர் திலகத்தின் பொதுச் சேவையைப் பற்றிய செய்திகள் இடம் பெறுவதில்லை,
சரி "சோ' வைப் பற்றி இவர்கள் செய்தி குறிப்பில் என்ன சொன்னார்கள் என்றால் சோ அறிமுகம் ஆன திரைப்படம் முதல் அவரது பத்திரிகை ஆசிரியர் பணி மற்றும் அன்றைய நாட்களில் தொடர்பான அனைத்து செய்திகளுமே உண்மைக்கு மாறாகவே இருந்தது.

உதாரணமாக சோ அறிமுகம் ஆன பார் மகளே பார் படத்தின் பெயரை மாற்றி வேறு ஒரு படத்தின் பெயரும், சோ அவர்கள் திரைப்படங்களில் நடிக்க எம்ஜிஆர் உதவினார் என்றும் அவிழ்த்து விட்டார்கள்,
எனக்கு நினைவு தெரிந்த செய்திகள்,

தமிழ்வாணன் அவர்கள் தான் நடிகர் திலகம் என்ற பட்டம் சிவாஜிக்கு பெரும் பொருத்தமாக அமைந்து புகழை சேர்க்கிறது என்பதனால் எம்ஜிஆர் க்கு மக்கள் திலகம் என்று சூட்டி கொண்டாடினார், ஆனால் அந்த தமிழ்வானனையே உலகம் சுற்றும் வாலிபன் சூட்டிங்கின் பொது எம்ஜிஆர் அடித்து உதைக்கப் போவதாக மிரட்டல் விட்டதனால் பயந்து போன தமிழ்வாணன் உடனே தமிழகம் வந்து சிவாஜி ரசிகர்கள் உதவியை நாடினார், அதன்மூலம் தன்னை எம்ஜிஆர் ரசிகர்களிடம். இருந்து தற்காத்துக் கொள்ள முடிந்தது.

அதே போல தான் 'சோ' அவர்கள் 70 களின் போது திமுகவையும கலைஞரையும் பின்னர் எம்ஜிஆர் ஐயும் எதிர்த்து கருத்து சொல்வதற்கான துணிவைக் கொடுத்தது சிவாஜி ரசிகர்கள் ஆகும்.
சோ அவர்களுக்கு நடிகர் திலகம் பல வழிகளில் உதவிகளை செய்ததோடு பாதுகாப்பு கொடுத்த காரணம் மட்டுமே இன்று வரை சோ அவர்களை பற்றி செய்திகள் பேசப்படுவதற்கான ஆனி வேர் ஆகும்.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24899683_1541735352610016_7547163418046262904_n.jp g?oh=78ecdb5beae2979a38c485331d8e4a4f&oe=5ACE1216

sivaa
10th December 2017, 07:05 PM
Abdul razack

வண்ணவிளக்குகள் சிறிது நேரத்தில் பிரகாசித்து நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழா தொடங்குகிறது

(அருப்புகோட்டையில் நடிகர் திலகத்தின் 90 வது பிறந்தநாள் விழா

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/24883522_511471999213155_8732347555900676461_o.jpg ?oh=88b232c6b6306564f236a4626c65b596&oe=5AC44CA3

sivaa
10th December 2017, 07:06 PM
Abdul razack

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25289439_511495642544124_7133330624188897411_n.jpg ?oh=a125dbfaa951c3b30cfc5478057c19be&oe=5ABE7B40

sivaa
10th December 2017, 07:07 PM
bdul razack

அரங்கம் நிரம்பி வழிகிறது,+


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24862576_511495809210774_8402505366947251928_n.jpg ?oh=8296f8b28044276602a0368b14eb20f4&oe=5ACE14E3

sivaa
10th December 2017, 07:08 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24993251_511495959210759_6253652024825729010_n.jpg ?oh=e3e3c6f6b18810d4f8c59a14b2ae0e48&oe=5A9330FE

sivaa
10th December 2017, 07:08 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24900264_511496012544087_601486362625313479_n.jpg? oh=64a2cbf4be91774d72236d49ef480561&oe=5ABD97A7

sivaa
10th December 2017, 11:58 PM
Sundar Rajan


அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,

மதுரை சென்ட்ரல் சினிமாவில் இன்று 10.12.2017 ஞாயிறு சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் ரசிகர்கள் சிறப்புக் காட்சி அமர்க்களப்படுத்தியது.
தியேட்டர் வாயிலில் பேண்டு வாத்தியம் முழங்க, வான வேடிக்கைகள் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை,
... ரசிகர்களை மட்டுமல்ல, அந்த வழியே மீனாட்சி அம்மனை கோவிலில் தரிசிக்க சென்ற பக்தர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என அனைவரும் வியந்து பார்த்து சென்றனர். அதிலும் வெளிநாட்டினரோ நின்று நமது இதயங்களின் ஆரவாரங்களை பார்த்து விட்டுத் தான் சென்றனர்.

பார்வையாளர்கள் என்ற பெயரில் வந்து மற்ற நடிகர்களின் ரசிகர்களோ வியப்பில் ஆழ்ந்தனர்.
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் கியூப் மாற்றத்திற்கு பிறகு, வெளியான ஷிப்டிங்கில் வெளியான புதுப்படங்களாகட்டும், மற்ற படங்களாகட்டும், இது வரை ஞாயிறு மாலைக் காட்சிக்கு வசூலான தொகையை விட அதிக வசூலை பெற்றது மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன்.

ஞாயிறு மொத்த வசூலில் சிவகாமியின் செல்வன் முதலிடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இரவுக் காட்சி வசூல் தெரிந்தவுடன் அதையும் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்.
அனைவரது மனதையும் கவர்ந்தது. 5 அல்லது 6 வயது பாலகன் நடிகர்திலகத்தை திரையில் பார்த்து கைதட்டி ரசித்தான். எவருக்கு கிடைப்பார்கள் இப்படிப்பட்ட இதயங்கள்.
இனிவருங்காலம் மட்டுமல்ல எத்தனை யுகங்கள் ஆனாலும் நமது நடிகர்திலகத்தின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த சிறுவனின் ரசனையே எடுத்துக்காட்டு.

சிவாஜி என்று சொல்லடா....
நெஞ்சம் நிமிர்த்தி செல்லடா....
மேலும் படங்கள் முழு செய்திகள்

நாளை சிவாஜிகணேசன்.இன் ல்...




https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/s720x720/24958947_1529941553757110_876883339296126968_o.jpg ?oh=5b0a0dd21bc5e55fe5f4c7de96ded4e0&oe=5A8B4771

sivaa
11th December 2017, 12:00 AM
Sivaji Palanikumar


அமர்களசிவகாமியின்செல்வன்.
சிவாஜின்னா
சிவாஜிதான்.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24900224_371723849953047_3778053102254368435_n.jpg ?oh=4071d18e15b849b82465131eeedb6720&oe=5ACA3CF6

sivaa
11th December 2017, 12:01 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25299232_371723903286375_2868864527896222987_n.jpg ?oh=76e5ee11b825b1f4eaee3c721e67ddd3&oe=5AC91D28

sivaa
11th December 2017, 12:02 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24852487_371723926619706_8983407415434662005_n.jpg ?oh=147974dcfb71071b2127312ba6091b77&oe=5ACE2D49

sivaa
11th December 2017, 12:02 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24900052_371723966619702_4088708853982771023_n.jpg ?oh=64750c919145d7fe96576f8420da613d&oe=5ACAF5CE

sivaa
11th December 2017, 12:03 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24900088_371723996619699_7206687943846349941_n.jpg ?oh=79c48c928a1476c8c74228131286863e&oe=5AD4D0E5

sivaa
11th December 2017, 12:03 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25289635_371724013286364_2428559333611426986_n.jpg ?oh=7d83e83f19ae2eaf16803b3e9d1f882b&oe=5AD64370

sivaa
11th December 2017, 12:04 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25299007_371724066619692_3890231437217396761_n.jpg ?oh=6a809c1098fed2f7272e2decfeec2dfa&oe=5AC71255

sivaa
11th December 2017, 12:06 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24900055_371724236619675_3682505442840820559_n.jpg ?oh=940f2cfc5b83f25ee4e5e580ddc7dbd7&oe=5AC6557D

sivaa
11th December 2017, 12:24 AM
mahesh mahendran

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24909901_1905303349786686_6027096073937163020_n.jp g?oh=e529b5fda3c7c4a646e8d0f4f8cff519&oe=5AC3E860

sivaa
12th December 2017, 08:20 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

263 வது வெற்றிச்சித்திரம்

மண்ணுக்குள் வைரம் வெளியான நாள் இன்று

மண்ணுக்குள் வைரம் 12 டிசம்பர் 1986
http://media-images.mio.to/various_artists/M/Mannukkul%20Vairam%20%281986%29/Art-350.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjh5sO1u4PYAhVMbRQKHZaqAisQjRwIBw&url=http%3A%2F%2Fmio.to%2Falbum%2FMannukkul%2BVair am%2B%25281986%2529&psig=AOvVaw1MvJGolQqHauVnNCuwQaXX&ust=1513133382206983)
https://upload.wikimedia.org/wikipedia/en/2/2c/Mannukkul_Vairam.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjfmvafu4PYAhVMQBQKHTt_AJ8QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FMannuk kul_Vairam&psig=AOvVaw1MvJGolQqHauVnNCuwQaXX&ust=1513133382206983)

sivaa
12th December 2017, 09:01 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24993512_425098034626752_5284744862711094103_n.jpg ?oh=0518ef091c132807a82bba467c125924&oe=5ACE0D7C

sivaa
13th December 2017, 06:16 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24909965_1580292115392358_6477970288189584712_n.jp g?oh=0e4ba9fa70db4e84f320c11764bc3517&oe=5A91A213

sivaa
13th December 2017, 06:17 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25353711_1580292112059025_8381513136576914353_n.jp g?oh=434e9ce6e185a498a76a08db29e73415&oe=5AD66560

sivaa
13th December 2017, 06:17 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24991122_1580292172059019_6319165602810163847_n.jp g?oh=889641286f00dfb67a7f8c2b4f4d0084&oe=5ABC783B

sivaa
13th December 2017, 06:18 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24991247_1580292195392350_3479993528823664551_n.jp g?oh=8216cdb5135c0e0b96ab4e73166d828b&oe=5ABB0D4E

sivaa
13th December 2017, 06:18 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24991199_1580292168725686_4567100819067469196_n.jp g?oh=7884b1a9de3406004e7fe2c2945f791c&oe=5AC225D7

sivaa
13th December 2017, 06:19 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25289567_1580292255392344_6597462308262497223_n.jp g?oh=3c176296984fdb60905058f184117118&oe=5ACA29E7

sivaa
13th December 2017, 06:19 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25298973_1580292295392340_2045200648639108517_n.jp g?oh=8f78654d672511c7b0f84cb9a7a0ff87&oe=5AC8FBC5

sivaa
13th December 2017, 07:06 AM
Vasu Devan

நான் ரசித்த திலகத்தின் 'திருப்ப'க் காட்சி.

ராஜசேகரும், ராதாவும் காதலர்கள். ஆனால் விதி ராதாவின் மாமா ரூபத்தில் கொடுமையாக சதி செய்ய, ராதா தன்னை மோசம் செய்து விட்டாள் என்று தவறாக நம்பி ('குலமகள் ராதை' போல) ராஜசேகருக்கு ராதாவின் மேல் இருந்த காதல் கோபமாக மாறி, மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறது .

15 வருட காலங்கள் உருண்டோட, ராஜசேகர் இப்போது ஒரு உயர் போலீஸ் அதிகாரி. போலீஸ் சிங்கம்.
ராஜசேகர் என்றாலே அது நம் தலைவருக்கே மட்டுமே பொருந்தக் கூடிய, நம் அனைவரையும் கவர்ந்த, நமக்கே சொந்தமான ரம்மியப் பெயர் அல்லவா!
நடிகர் திலகம் ராஜசேகராக. அவர் காதலி ராதாவாக சுஜாதா.

சுஜாதாவை அவர் மாமன் கே. கண்ணன் குடிகார சுதர்சனுக்குக் கட்டிக் கொடுத்து விட, ராதா வாழ்வைத் தொலைத்து, மேடைகளில் பாடி, கண்டவர்களுடன் கை கோர்த்து ஆடி, விதியே என்று வாழ்க்கையை ஓட்டுகிறாள். அவள் இப்போது நடுத்தர வயது மங்கை. மானத்தோடு வாழ்ந்தால் கூட, சமுதாய வீதியில் அவள் கேவலமான ஒரு பெண். சிவப்பு விளக்கு.

நடிகர் திலகத்தை தனது 25-ஆவது திருமண நாள் விழாவிற்கு அழைக்க வருகிறார் அவரின் கல்லூரி கால நண்பர் வில்லன் ஜெய்சங்கர்.
நடிகர் திலகமும் சம்மதித்து பார்ட்டிக்குப் போக, அங்கே அவர் எதிர்பாராவிதமாக அதிர்ச்சியடையும் அளவிற்கு பழைய காதலி சுஜாதா மேடையில் பாடுகிறார் கையில் மைக்குடன். சுஜாதாவும் நடிகர் திலகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைய, இருவர் நெஞ்சிலும் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். பழைய நினைவுகள் இருவர் நெஞ்சங்களையும் கிளற, பாடலின் அர்த்த பரிமாற்றத்தில் உள்ளுக்குள்ளே இருவரும் சொல்லொணா வேதனை அடைகிறார்கள்.

இன்னும் நடிகர் திலகத்தின் மேல் தான் கொண்ட காதலையும், தான் தன் மாமனால் வஞ்சிக்கப்பட்டதையும், பிணமாய் தான் வாழ்ந்து கொண்டிருப்பதையும் தான் பாடும் பாடலில் ஜாடையாய் உணர்த்துகிறார் சுஜாதா.

'ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
தேனாற்றிலே ஓடங்கள் கூடின
ஜோடியாய்ச் சேர்ந்தன
காதலில் நீந்தின
ஏன் பிரிந்தன?
வெள்ளங்கள் மீறின
ஓடங்கள் ஆடின
பாதைகள் மாறின
இன்றுதான் சேர்ந்தன
உண்மை எவ்விதம் நான் சொல்ல?
கதை அல்ல'

(சரியான வரிகள். சுசீலா அம்மாவின் குரலில் அருமையான பாடல்.)
சுஜாதா பாடப் பாட, நடிகர் திலகம் அதிர்ச்சியில் உறைந்திருப்பார்.
'நீ பார்த்தது பெண்மையின் பாதியை
நேரிலே சொல்கிறேன் உண்மையின் நீதியை
காதலன் கண்களில் இன்று
என்னையே நான் கண்டேன்
சுகம் கொண்டேன்'

என்று சுஜாதா பாடியதும் சுரத்தே இல்லாமல் வெறுப்பின் உச்ச நிலையில் 'தம்' அடித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் 'காதலன் கண்களில் இன்று என்னையே நான் கண்டேன்' வரிகளில் தன்னைத்தான் அவள் குறிப்பிடுகிறாள் என்று ஒரு வினாடி சுயநினைவுக்கு வந்து, 'டக்'கென்று தம்மை வாயிலிருந்து எடுத்து, தலை சாய்த்து, கண்கள் கலங்க தவிப்பது அவருக்கே உரித்தானது. மேலே உள்ள திலகத்தின் இமேஜ்கள் அதை உணர்த்தும்.

அடுத்த நாள் ஒரு போன் வரும். அட்டெண்ட் பண்ணினால் எதிர் முனையில் சுஜாதா.
'நேத்து பங்க்ஷனுக்கு வந்தீங்களே...நானும் பார்த்தேனே!'
என்று சுஜாதா போனில் கூற, அதற்கு இவர் படுநக்கலாய்...

'நானும் உன்னைப் பார்த்தேனே' என்று சாடுவது இன்னும் அட்டகாசம். ('உன் அலங்கோலத்தைப் பார்த்தேனே' என்று அர்த்தம்)
சுஜாதா சொல்வதையெல்லாம் 'ம்...ம்'.. என்று கேட்டுக் கொண்டிருப்பார்.
'கேக்கிறீங்களா?' என்று சுஜாதா கேட்டவுடன்,

'இது என்ன வாக்குமூலமா'? என்று வெறுப்பை உமிழ்வார். காதலி ஏமாற்றியதாய் நினைத்திருக்கும் கோபம் மாறாமல் இருக்கும். சுஜாதா பேசப் பேச ஒன்றும் பேசாமல் தலையைத் தடவியபடி கேட்டுக் கொண்டிருப்பார். காதலி எதிர்முனையில் அழும்போது மனசும் கேட்காது. கண்கள் தானாகக் கலங்கி, கைகள் தானாக அதைத் துடைக்கும். சுஜாதா இவரை வீட்டுக்கு வரச் சொல்லி கேட்பார்.
நடிகர் திலகம் போலீஸ் அதிகாரி உடுப்பிலேயே சுஜாதா வீட்டுக்குச் செல்வார். இருவர் மட்டும் தனியே நேருக்கு நேர் சந்திப்பார்கள். இரவு நேரப் பின்னணி. பின்னால் 'எனை மறந்து பாடுவேன்' பாடலின் பின்னணி இசை ஒலித்துக் கொண்டிருக்கும். சுஜாதாவின் பார்வையில் பழைய காதலும், பாசமும், அன்பும், சந்தோஷமும் தெரிய, நடிகர் திலகம் கோபப் பார்வையிலேயே இருப்பார். சுஜாதா உள்ளே அழைப்பார். பூட்ஸ் போட்டிருப்பதாக நடிகர் திலகம் சொல்ல, சுஜாதா 'வாங்க..இப்போ இது கோவில் இல்ல' எனும் போது டச்சிங்காகவே இருக்கும்.

பிரமாதமாக கம்பீரத்துடன் நடந்து வந்து, பாக்கெட்டில் கை நுழைத்து, வீட்டை ஒரு தடவை நன்றாக சுற்றி நோட்டமிடுவார். அங்கு பல ஆண்களுடன் சுஜாதா இருப்பது போன்ற புகைப்படங்கள் இருக்கும். வெறுப்பாக அதைப் பார்ப்பவர்,

"என்ன இதெல்லாம்? உன்னுடைய தொழிலுக்குக் கிடைத்த சர்டிபிகேட்ஸா?'
என்று குத்திக் காட்டுவார்.

'கோபமா இருக்கீங்களா?' என்று சுஜாதா கேட்டவுடன்,
அப்படியே எரிமலையாய் மாற ஆரம்பிப்பார். வார்த்தைகள் நெருப்பாய் வந்து விழும்.

'கோபமா? உன் மேலயா? எனக்கா? ஓ... ஓ..டேமிட்' என்று இடுப்பில் கைவைத்து சிங்கம் போல கர்ஜனை செய்வார். (தலைவர்னா தலைவர்தான். எந்தக் காலத்திலேயும் கொஞ்சம் கூட நம்மை ஏமாற்றவே மாட்டார். மாறாக இன்னும் வாரி வழங்குவார்.)

'15 வருஷத்துக்கு முன்னால உனக்கும் எனக்கும் ஏதோ உறவு ஒட்டிகிட்டு இருக்கும்னு நெனச்சனே... அப்ப வந்திருக்கணும் கோபம்'...
'எல்லோரையும் போல நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியோட, குழந்தை குட்டியோட, ஏகபோகமா, சொர்க்க வாழ்வு வாழணும்னு நெனச்சுகிட்டு இருந்தேனே... ஓ... அப்ப வந்திருக்கணும் கோபம்'...
'ஒரு உறவு... ஒரு உரிமை... ஒரு குடும்பம்... ஒரு பெருமை... இதெல்லாம் உண்டாகும்னு மனசுக்குள்ளேயே கோட்டை கட்டி, கோட்டை கட்டி சிம்மாசன மகராஜா மாதிரி ஒரு டம்மி ராஜாவா உட்கார்ந்துகிட்டு இருந்தேனே... ஓ... அப்ப வந்திருக்கணும் இந்தக் கோபம்'...

('டம்மி ராஜா' சொல்லும் போது வலது கையை மார்புக்குக் குறுக்கே விசிறி வீசிக் காட்டுவார் பாருங்கள். பார்க்க கண்கள் ஆயிரம் வேண்டும்.)
'என்னவோ கங்கை... பாவத்தை தீர்த்துக்கப் போறேன்னு சொன்னியே... அந்த அழுகைகாகத்தான் இங்க வந்திருக்கேன்'
என்று ரொம்ப ஆத்திரப்பட்டு விடுவார்.

சுஜாதா எதுவும் பேசாமல் தலை கவிழ்ந்து நிற்க, 'கொஞ்சம் அதிகமாகத்தான் பேசி விட்டோமோ' என்று அப்படியே ஆத்திரத்தைக் கொஞ்சம் தணித்து, சுஜாதாவை சுட்டிக் காட்டி,
'ஏய்! லுக் ஹியர்! எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னும் பதினஞ்சே நிமிஷத்திலே உன்னுடைய பாவ மன்னிப்பு சடங்கை முடிச்சிடு' (இந்த மாதிரி கோப கேலி, கிண்டல்கள் நம்ம தலைவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி)

என்று சொல்லும் போது அமர்க்களப்படுத்தி விடுவார். கோபம் குறைந்தபாடில்லாமல், பரிதாபப்படாமலும் இருக்க முடியாமல் தடுமாற்றத்தை கம்பீரத்துடன் நிலை நிறுத்துவார். ஆத்திரம் தொண்டை அடைக்கும். கண்களும் கலங்கிய நிலையில் இருக்கும் காதலியின் பரிதாப நிலை பார்த்து.
"15 வருஷ கதையை 15 நிமிஷத்துல எப்படிங்க முடிக்கிறது?' என்று சுஜாதா அழ,
கேட்பார் ஒரு கேள்வி நறுக்காக.

'எப்படியா?... 15 வருஷ சிநேகிதத்தை பத்தே நிமிஷத்துல முறிக்கல?!... அதே மாதிரி'...

பழி தீர்ப்பார். இத்தனை வருடம் தனிமரமாய் கஷ்டப்பட்டதற்கு காரணமானவள் எதிரேதானே இருக்கிறாள் என்று வாங்கு வாங்கு என்று வாங்குவார்.
பின் சுஜாதா இவர் தன்னைப் பெண் கேட்க வந்த போது மாமா தன்னைக் கட்டிப் போட்டு விட்டு சந்திக்க முடியாமல் போன கதையைச் சொல்லி, தான் நிரபராதி என்று நிரூபித்து, தான் வலுக்கட்டாயமாக சுதர்சனுக்குக் கட்டி வைக்கப்பட்ட கதையைச் சொல்லி, தினம் அவனிடம் அடி, உதை படுவதாக சொல்லி அழுது, ஒரு குழந்தைக்குத் தாயாக இருக்கும் நிலையையும் சொல்லி கலங்க,
அத்தனையும் பொறுமையாய்க் கேட்டு,

'இட்ஸ் ஆல் ரைட்! ஃபர்கெட் இட்' என்று மன்னித்து மனம் நொந்தவராய் நிற்பது பரிதாபம்.
இப்போது வரும் வினை. குடித்துவிட்டு சுஜாதாவின் கணவர் சுதர்சன் என்ட்டர். காலிங்பெல் அடித்தவுடன் சுஜாதா பதறி,
'அவர் ஒரு மாதிரி! குடித்து விட்டு வந்திருக்கார்... ஏதாவது தப்பாக நினைப்பார்... நீங்க பின் பக்கம் போயிடுங்க' என்று நடிகர் திலகத்திடம் சொல்ல,
பேண்டின் இரு பாக்கெட்டுகளிலும் கம்பீரமாக கைகளை நுழைத்தபடி நிற்கும் நடிகர் திலகம்,

'நான்சென்ஸ்! அவன் குடிகாரனா இருக்கலாம்... ஆனா நான் திருடன் இல்ல பின் வழியா போறதுக்கு' என்பார்.
'நான் என்ன தப்பு செய்தேன்?' என்ற கள்ளமற்ற நேர்மை முகத்தில் தெரியும்.

'லெட் ஹிம் கம்... கதவைத் திறந்துவிடு' என்று அங்கேயே நின்றபடி ஆணையிட்டு கர்ஜிப்பார்.

உள்ளே சுதர்சன் நுழைந்து சுஜாதாவை 'அடி அடி'யென்று அடித்து தன்னையும், சுஜாதாவையும் இணைத்துப் பேச, புழுவாய்த் துடிப்பார் நடிகர் திலகம். 'அவள் கணவன் அவளை அடிக்கிறான்... நாம் என்ன செய்ய முடியும்?' என்று அதிகாரம் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாதவராய் தவிப்பார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அதிகமாகிப் போய்விட, சுதர்சனைத் தட்டிக் கேட்பார். அது கைகலப்பில் முடிந்து எதிர்பாராவிதமாக மாடியில் இருந்து விழுந்து இறந்து விடுவார் சுதர்சன்.

அதைப் பார்த்து 'ஒ..மை காட்!' என்று அதிர்ச்சியடைந்து, 'ஹீ இஸ் டெட்...நோ...நோ...நோ.. என்று கைகளை மூடி நெற்றியில் வைத்துக் கொள்வார்.
15 வருடங்களுக்குப் பின் பிரிந்த காதலியை சந்தித்து அவள் மீதுள்ள கோபம் தணியாமல், காதலும் குறையாமல், பின் அவள் கதை கேட்டு, அவள் மீது பரிதாபப்பட்டு, பின் கண்கூடாகவும் அவள் கணவனிடம் படும் சித்ரவதைகளையும் பார்த்து நொந்து போய், அவள் கணவனைக் கொலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகி, உயர் போலீஸ் அதிகாரி என்ற கம்பீரத்தையும் குறைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் அற்புதமாகக் காட்டி தனது உன்னத நடிப்பால் இந்த 'திருப்பம்' படத்திற்கே இந்தக் காட்சியின் மூலம் 'திருப்பம்' தருகிறார் நம் நடிகர் திலகம்.

நான் மிக மிக ரசித்த காட்சி இது. 'திருப்பம்' படத்தின் ஆர்ப்பாட்டமான காட்சிகளுக்கு நடுவே கவிதையாய் ஒரு காட்சி இது.

'வெள்ளை ரோஜா' வெற்றியின் தொடர்ச்சி இந்தப் படம். 100 நாட்கள் வெற்றி கண்ட படம். 14.01.1984 பொங்கலுக்கு படம் ரிலீஸ். ஆனால் நாங்கள் கடலூரில் முந்தின நாள் 13-ம் தேதி இரவே 10 மணிக்கெல்லாம் படம் பார்த்து விட்ட பெருமையைப் பெற்று விட்டோம். கடலூர் கமலம் தியேட்டரில் ரிலீஸ். மிக நன்றாக ஓடியது. அந்த இரவுக் காட்சி மறக்க முடியாத ஒன்று. 'வெள்ளை ரோஜா'வின் வெற்றி வாசனையை அனுபவித்த நம் ரசிகர்கள் 74 நாட்கள் கேப்பில் மீண்டும் 'திருப்ப'த்தின் மூலம் திரும்ப வெற்றிக் கனியைச் சுவைத்தார்கள். நன் குறிப்பிட்ட அந்த ரசிகர் காட்சியில் ஆட்டோ ஆட்டோவாக லாட்டரி சீட்டு கவுண்ட்டர் பைல்கள், பூக்கூடைகள் வந்து இறங்கி தலைவர் சவப் பெட்டி இழுத்து அறிமுகமாகும் அந்த முரட்டுக் காட்சியில் அத்தனை கவுண்ட்டர் பைல்கள், உதிரிப் பூக்கள் என்று தலைவர் முகமே தெரியாத அளவிற்கு வாரி இறைக்கப்பட்டன. அவ்வளவு அமர்க்களம். பிரபு ரசிகர்கள் வேறு. கேக்கணுமா? எத்தனை பூக்கூடைகள்! எவ்வளவு சரவெடிகள்!

1980-ல் வெளிவந்த 'பே-ரஹம்' என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இந்தியில் சஞ்சீவ்குமார் செய்த ரோலை தலைவரும், சத்ருகன் சின்ஹா செய்த ரோலை பிரபுவும், சுஜாதா பாத்திரத்தை மாலா சின்ஹாவும், அம்பிகா பாத்திரத்தை ரீனாராயும் செய்திருந்தனர். நடிகர் திலகத்துக்கு போலீஸ் அதிகாரி பாத்திரம் அவர் செய்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து வேறுபட்டது. செம வித்தியாசம் காட்டியிருப்பார். இதற்கே முந்தின படத்தில் கூட ஃபாதர் ஜேம்ஸின் அண்ணன் போலீஸ் அதிகாரி ஜே.ஜே.அருள் என்னும் ஜான் ஜேகப் அருள்தான். அது வேறு, இது வேறு என்று வித்தியாசம் காட்ட இந்த தெய்வத்தை விட்டால் வேறு யார்?

சுசீலா பாடும் 'ராகங்கள்... என் ஜீவிதங்கள்' பாடல் கேட்க கேட்க அவ்வளவு இனிமை. பிரபு அம்பிகா ஆட்டம் போட்ட 'தங்க மகள்... துள்ளி வந்தாள்... புத்தாண்டு வாழ்த்துக்கள்' பாடல் சூப்பர் ஹிட். ஆடலும்தான். 'பாடகர் திலகம்' பாடும் 'எனை மறந்து பாடுவேன்' பாடலும் நல்ல பாடலே.
'எத்தனை ஸ்டார்கள் வந்தாலென்ன? என்றுமே நான் தான் தமிழ் சினிமாவின் திருப்பமே! அன்றிலிருந்து இன்றுவரை... அது நடிப்பிலும் சரி! வசூலிலும் சரி!' என்று வழக்கம் போல் தலைவர் மார் தட்டி நம்மை மார் நிமிர்ந்து நடக்க வைத்த இன்னொரு வசூல் படம். ஆரவாரப் படமும் கூட.



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/24993317_1547793325314961_8352570918549763246_n.jp g?oh=ec518a36f53463c77ac1382bb9a213b3&oe=5ABA1222
(https://www.facebook.com/photo.php?fbid=1547793325314961&set=pcb.571911946493219&type=3&ifg=1)https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/q85/p240x240/25158421_1547793301981630_1786742143460509171_n.jp g?oh=a5033ad760821adc1deb84382690a58b&oe=5AD41CB8
(https://www.facebook.com/photo.php?fbid=1547793301981630&set=pcb.571911946493219&type=3&ifg=1)https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/25158346_1547793295314964_2627731005042995338_n.jp g?oh=674c65f55ce39ce0e1246bc6758473bd&oe=5AD0680D
(https://www.facebook.com/photo.php?fbid=1547793295314964&set=pcb.571911946493219&type=3&ifg=1)https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/25353927_1547793368648290_3184800039833834297_n.jp g?oh=319e41cfa44906fb98e646b13aa875c3&oe=5AD16431
(https://www.facebook.com/photo.php?fbid=1547793368648290&set=pcb.571911946493219&type=3&ifg=1)https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/24991384_1547793398648287_4066963575061401429_n.jp g?oh=217e2d5acebdde2fe88f1be0b8f313a9&oe=5ABD261B
(https://www.facebook.com/photo.php?fbid=1547793398648287&set=pcb.571911946493219&type=3&ifg=1)

sivaa
14th December 2017, 05:28 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/25075234_2152101705027848_8875613558603915288_o.jp g?oh=056d7b95fd44310da568f08180d77b93&oe=5AC947BF

sivaa
16th December 2017, 01:58 AM
Sundar Rajan.


அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
மதுரை சென்ட்ரலில்
மக்கள்தலைவரின்
சிவகாமியின் செல்வனின் ...
வெற்றியைத் தொடர்ந்து
2018 ஜனவரியில்,
நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியம் பாவமன்னிப்பு வெளியாகிறது.
மதுரை சென்ட்ரல் தியேட்டரில்
ஞாயிறு மாலைக் காட்சி வசூலில் 18 வருடத்திற்கு பிறகு மாபெரும் வசூல் சாதனை புரிந்த மாபெரும் காவியம்.
மீண்டும் சாதனை படைக்க வருகிறார் நடிகர்திலகம்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/25440164_1534646419953290_6875923531864931736_o.jp g?oh=e09c122a55539509f567293389a8d5dc&oe=5AD24ABA

sivaa
16th December 2017, 02:02 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

199 வது வெற்றிச்சித்திரம்

ஜஸ்டிஸ் கோபிநாத் வெளியான நாள் இன்று

ஜஸ்டிஸ் கோபிநாத் 16 டிசம்பர் 1978

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25348595_1862009784111609_4878834226184767673_n.jp g?oh=0e8a6894e5d27f9ef91862f96d29afc3&oe=5AB9F5DA

sivaa
16th December 2017, 10:39 PM
Sivaji Ganesan Cultural Society, Malaysia




Nadigar Thilagam Sivaji Ganesan is an Avathar for Indian Cinema.Join us for his 89th Birthday Function. It will be Celebrated Graciously with a Musical Night,a Good number of songs from his Films, a Scene from Thiruvarutchelvar, a Video clip of him. Questions and Answers from his Films and Prizes will be given to Winners. Sivaji Ganesan Award to a Senior Artiste, and to a Young Promising Artiste of Malaysia together with Cash will be given to them. Entrance is FREE, Pls do come with Family and Friends & Enjoy the Evening on 28/12/2017, Thursday, at Tansri KR.Soma Auditorium.



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/25396211_390361838087942_6178853540873704734_n.jpg ?oh=9d5120d0e778dda18bb3702c52e0f1b3&oe=5AD0D4F0
(https://www.facebook.com/sgcsm/photos/a.366901030434023.1073741829.195830424207752/390361838087942/?type=3)

sivaa
19th December 2017, 09:22 PM
Rajan and 3 others (https://www.facebook.com/#) commented on this.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.50.50/p50x50/24909672_2024057937915366_7029835744646898710_n.jp g?oh=18f50b7d8326ba8c5cb76d556ba6e851&oe=5AD365D5
(https://www.facebook.com/vetrivelvetri.vetri.7?fref=nf)

‎Vetrivel Vetri








நடிகர் திலகம் திருவானைக்கா கோவிலுக்கு யாணை ஒன்று பரிசளித்தார் என்பது எல்லோருமா அறிந்த செய்தி. எல்லோரும் என்றால் சிவாஜி பக்தர்கள் மட்டும்.
அறியாத செய்தி
யாணை கொடுத்தால் போதுமா அதற்கு உணவளிக்க என்ன வருமானம்
அதற்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார். புதுக்கோட்டை முக நூல் நண்பர்கள் சந்திப்பில் சிவாஜி சமுகநல பேரவை நண்பர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சொன்ன தகவல் சரி அதோடு விட்டாரா யானையை பராமரிக்க பாகன் வேண்டுமே அவன் தங்குவதற்காக ஒரு வீடு கட்டி கொடுத்துள்ளார் இப்படி சகல விஷயங்களையும் யோசித்து தான தர்மங்கள் செய்த மாபெரும் தலைவனை கஞ்சன் என்று சில அயோக்கியர்களை நம்பிய தமிழக முட்டாள்களும் இருந்திருக்கின்றனரே




https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/25399086_2028637837457376_6494199175762484315_n.jp g?oh=48afa4cacc50016fb627761fcef7e124&oe=5AC20E02
(https://www.facebook.com/photo.php?fbid=2028637837457376&set=pcb.575333229484424&type=3)https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/25446322_2028637840790709_8101491480943571453_n.jp g?oh=4ef2879fc2b49dc72f26d7948ee60ae3&oe=5AC37C9F
(https://www.facebook.com/photo.php?fbid=2028637840790709&set=pcb.575333229484424&type=3)

sivaa
19th December 2017, 09:23 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25395903_1999775470237271_2513333289172199892_n.jp g?oh=aefb3dd88a27764bee3584ac2e7389e4&oe=5ABD1680

sivaa
19th December 2017, 09:34 PM
K. S Narasimha

தற்பொழுது சன்லைஃபில் புண்ணிய பூமி

https://i.ytimg.com/vi/eFRQujxIMCE/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi2y5_kuZbYAhWK5oMKHUdlCMYQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DeF RQujxIMCE&psig=AOvVaw1Xyklf9IhELHBj83h0ptKI&ust=1513785695250320)https://i.ytimg.com/vi/d1DBKP4xudY/mqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwis6_emuZbYAhVj7IMKHdiwAdYQjRwIBw&url=https%3A%2F%2Fwww.lollywoodbollywood.de%2Fwatc h.php%3Fvid%3Dea1a3a163&psig=AOvVaw1Xyklf9IhELHBj83h0ptKI&ust=1513785695250320)

sivaa
19th December 2017, 09:47 PM
‎Aathavan Ravi






புதுக்கோட்டை சந்திப்பு நிகழ்வில் வெளியிடப்பட்ட
" தமிழின் அமுதம்" மலரில் இடம் பெற்ற நான்
எழுதிய அய்யன் அவதாரத் திருநாள் கவிதை.
எளியவன் எனக்கும், என் தமிழுக்கும் மரியாதை...
செய்த பண்பாளர், பெரியவர் அய்யா திரு. வானமாமலை அவர்களுக்கு வணங்குதலுடன்
நன்றிகள்.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25443103_936318566527465_1851637591727634123_n.jpg ?oh=54dcd4a128f1de9d831b18f76f25be1a&oe=5AD0BE98

sivaa
22nd December 2017, 10:58 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

167 வது வெற்றிச்சித்திரம்

ராஜபார்ட் ரங்கதுரை வெளியான நாள் இன்று

ராஜபார்ட் ரங்கதுரை 22 டிசம்பர் 1973
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25498393_555258808152449_6881731702183834750_n.jpg ?oh=c978c0c11fda9b961ff9ed6127c379fb&oe=5AD0D894


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23172704_125161571489389_6573852246669222310_n.jpg ?oh=9043c2974c35bdcd34eb73db9fbc68f8&oe=5AC6C229

sivaa
22nd December 2017, 11:05 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25507757_298241137351353_618776782067637770_n.jpg? oh=c3f6ac3e91d2a0f38352bb8082cf1563&oe=5AB3346C

sivaa
22nd December 2017, 11:06 AM
Vee Yaar




https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/25498347_1644791898904809_7473417294435197814_n.jp g?oh=dbaa0689647f0abcb5e0d70cb6a562de&oe=5AD20634
(https://www.facebook.com/photo.php?fbid=1644791898904809&set=a.152343841482963.47033.100001220441116&type=3)

sivaa
22nd December 2017, 06:56 PM
Vasudevan Srirangarajan







உண்மையான வள்ளல் நம் திலகம்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25591900_2004567849832522_1340407098726757162_n.jp g?oh=7c5be73651b2edff2c23d803676086ea&oe=5ACDBCAD

sivaa
23rd December 2017, 07:52 AM
Sekar Parasuram


Holiday Special,


இன்று(23/12/17) தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக இருக்கும் நடிகர் திலகம் திரைப்படங்கள்,

காலை 10 மணிக்கு ஜெயா மூவியில்-- கிரஹப்பிரவேசம்,
... பிற்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் -- கை கொடுத்த தெய்வம்,

இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில் -- இரு மேதைகள்,

இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -- சிவகாமியின் செல்வன்,

இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்-- - *ஆலயமணி,

இரவு 10:30 க்கு ராஜ் டிவியில்-- கிருஷ்ணன் வந்தான்,

sivaa
23rd December 2017, 10:18 AM
Sivaji Ganesan Cultural Society, Malaysia ·




ALL ARE WELCOME, Nadigar Thilagam Sivaji Ganesan is an Avathar for Indian Cinema.Join us for his 89th Birthday Function. It will be Celebrated Graciously with a Musical Night, a Good number of songs from his Films, a Scene from Thiruvarutchelvar, a Video clip of him. Questions and Answers from his Films and Prizes will be given to Winners. This year's Sivaji Ganesan Award for Senior Artiste goes to D.Theresa, 89 years Old. The Evergreen Voice from Radio Malaya, 1954, Stage and TV Actress, Young Promising Artiste Award goes to Bala Ganapathy William, he is proving his Talents, as an Actor, Host, Producer and Director. Entrance is FREE, Pls do come with Family and Friends to witness and Enjoy the Evening on 28/12/2017, Thursday, at Tansri KR.Soma Auditorium.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25550097_393312611126198_5856322177861241823_n.jpg ?oh=f8a3cc124641c7234640bce9a265a627&oe=5ACA9D7E


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25507920_393312621126197_187264218571908946_n.jpg? oh=dc54c5a03112c71138eda7587f887f4c&oe=5ACE7FFE

sivaa
23rd December 2017, 10:26 AM
Samy Kumaran




"நடிகர் திலகம்" "செவாலியே" "பத்மஸ்ரீ" "பத்மபூஷன்" சிவாஜி கணேசன் -
THE ONLY WONDER OF WORLD CINEMA AND THE BOX OFFICE SAMRAAT SINCE 1952 !
உலக நடிகர்களிலேயே வல்லரசு எனப்படும் அமெரிக்காவின் அதிபராம் திரு JOHN F KENNEDY கலாசாரா தூதுவராக கௌரவித்த ஒரே இந்திய நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
நான்குகண்டங்களின் அரசாங்கத்தாலும் பட்டமும் பதவியும் கொடுத்து கௌரவிக்கப்பட்ட ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25551911_390791731378547_2300827448015550931_n.jpg ?oh=d3d1b4d125d47cf6f61fb7f998843bbf&oe=5ACC0BAE

sivaa
24th December 2017, 12:43 AM
Jahir Hussain

செவாலியே சிவாஜி... செய்தித் துளிகள் 2...

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் முதல் வசனக் காட்சியைப் படமாக்கிக் கொண்டு இருந்தார்கள்...

ஏ.கருணாநிதி, ‘வெள்ளைக்காரர்களிடம் எட்டப்பன் நம்மைக் காட்டிக்கொடுக்கிறான்’ என்று வசனம் பேச...

அதற்கு நடிகர் திலகம் ‘அமுதமும் விஷமும் ஒரே இடத்தில்தான் விளைகிறது". கட்டபொம்மனும் எட்டப்பனும் ஒரே மண்ணில்தான் பிறந்தார்கள்’ என்று வசனம் பேசிவிட்டு, போர்… போர்… என முழக்கமிடுவார்.
நடிகர் திலகத்தை ‘சபாஷ் மீனா’, ’தங்கமலை ரகசியம்’ போன்ற பல படங்களில் பார்த்துக் கூடவே இருந்து பழகியவன் நான். அதுவரையில் நான் பார்த்த சிவாஜி வேறு.

உணர்ச்சிகரமாக வசனம் பேசி போர் முழக்கமிட்டபோது நான் ஆடிப்போய்விட்டேன். ஏ.கருணாநிதி, பிரளயம் வந்ததுபோல் உணர்ந்தார். செட்டில் பரிபூரண அமைதி. நிஜமாகவே போர் முரசு கொட்டி, கோல்டன் ஸ்டுடியோவுக்குள்ளேயே சண்டை துவங்கிவிட்டது போன்ற பிரமை. என்கிறார்... பந்துலு அவர்களின் உதவியாளர் சிங்க முத்து...

அப்படிக்கூட ஒரு மனிதரால் நடிக்கமுடியுமா…!’

பரணி ஸ்டுடியோவில் கட்டபொம்மனின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. சிவாஜி தூக்கிலிடப்படும் காட்சி. அப்போதும் கம்பீரமாக சிவாஜி நடந்துவந்ததைக் கண்டு, துணை நடிகர்கள் வாய் விட்டு அழுதார்கள்.

பி.ஆர்.பந்துலு எப்போதும் தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை முன்னமே அறிவித்துவிடுவார். கட்டபொம்மனுக்கும் அப்படியே நடந்தது. ஆனால், இந்தியாவில் கலர் ஃபிலிம் ஸ்டாக் இல்லை என்றார்கள். பந்துலு உடனே தனது பங்குதாரரான சித்ரா கிருஷ்ணசாமியை லண்டனுக்கு அனுப்பி, கட்டபொம்மனுக்கு பிரிண்ட் போட்டு, சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டார்.

‘முழு நீள கேவா கலரில் தயாரித்து, டெக்னிக் கலராக ஆக்கப்பட்டிருக்கிறது’ என்ற வாசகத்தை, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பட ரிலீஸ் விளம்பரங்களில் காணலாம்.
மேக் அப் ரூமிலேயே முழு கேரக்டராக வெளிப்பட்டு, செட்டுக்கு போகும் உன்னதமான கலைஞன், சிவாஜி. சிவாஜியோடு இதிகாச, வரலாற்றுப் படங்களின் சகாப்தம் முற்றுப் பெற்றது என்றே சொல்லலாம்.
பி.ஆர்.பந்துலு, நேருக்கு நேர் நின்று பார்த்து மெய் சிலிர்த்த அனுபவம் இதோ –

கட்டபொம்மு குதிரை மீது ஏறி, வெள்ளையர்களை எதிர்த்து போர் புரியும் தன் வீரர்களுக்கு உற்சாகமளித்து, உடன் போரிடும் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தோம்.
ஒரு வெள்ளைக் குதிரை மீது நடிகர் திலகம் உட்கார்ந்திருந்தார். காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, உண்மையிலேயே சில வெடிகளை வெடிக்கச் செய்ய இருந்தோம். எனவே, ‘சண்டை நடக்கும் மையமான இடத்துக்குப் போய்விடாதீர்கள். ரொம்ப ஆபத்து அது’ என்று அவரிடம் கூறினோம்.

என்ன காரணமோ தெரியவில்லை. சிவாஜி ஏறிவந்தஉ குதிரை, நிஜமாகவே நாலு கால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார் சிவாஜி. அந்தச் சமயத்தில், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும்தான் தாமதம், குதிரை தலை கால் புரியாமல், நாங்கள் எங்கு போக வேண்டாம் என்று எச்சரித்திருந்தோமோ அங்கேயே சிவாஜியைக் கொண்டு நிறுத்திவிட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவாஜி சிக்கிக்கொண்டாரே என்று என் மனம் பட்ட வேதனையைச் சொல்லி முடியாது. எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. குதிரையிலிருந்து அவர் உருண்டு விழுந்துவிட்டார் என்றே நினைத்தோம். நானும் மற்றவர்களும் சிவாஜி இருந்த இடத்தை நோக்கி ஓடினோம்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, கை கால்கள் எல்லாம் ரத்தம் வழிய வழிய, ‘ஷாட் நன்றாக வந்ததா’ என்று கேட்டார் நடிகர் திலகம்.


‘இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் காட்சி; என் ஒருவனால் ஷாட் வீணாகக்கூடாது; மறுபடியும் எடுப்பதென்றால் எவ்வளவு சிரமம்?’ என்றார்.’

கோட்டைகளும் மிகப்பெரிய மாளிகைகளும் நிறைந்த ஜெய்ப்பூரில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஷூட்டிங் நடந்தது. ஹோட்டலாக மாறிவிட்ட ஜெய்ப்பூர் சமஸ்தான ‘ராம்வாக்’ மாளிகையில், பொதுமக்களுக்குக் கட்டபொம்மன் பேட்டி அளிப்பதையும், ஜாக்ஸன் துரையைப் பார்க்கக் கிளம்புவதையும் படமாக்கினார்கள்.

கட்டபொம்மன் படத்துக்கு லண்டன் – பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் விசேஷக் காட்சி நடைபெற்றது. அதில் அப்போதைய இந்தியத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25551953_2002669146640340_860537505243125899_n.jpg ?oh=587c05b0a497016f3989665d2bb7f0c8&oe=5AB6440C
(https://www.facebook.com/photo.php?fbid=2002669146640340&set=gm.577352532615827&type=3&ifg=1)

sivaa
24th December 2017, 12:44 AM
Sundar Rajan


அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
2017ல்

நமது மக்கள்தலைவரின் புகழ் காக்க கூடிய பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிலை திறப்பு விழா, மணிமண்டபம் திறப்பு விழா,

மேலும் நற்பணி நிகழ்ச்சிகள், அன்னதானம், பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், சீருடை வழங்குதல்,

பட்டி மன்றம், சிவாஜி விருது வழங்கும் விழா என நுாற்றாண்டு விழா போல் அமர்க்களப்படுத்தி விட்டனர் அன்பு இதயங்கள்.

முத்தாய்ப்பாக முகநுால் நண்பர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு அமைந்தது.
... 2018 ல் இதை விட சிறப்பாக அமைய

விண்ணுலக வேந்தன் சிவாஜி அவர்கள்
அருள் புரியட்டும்.

தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் உலகெங்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழ் பரப்பிய அனைவரையும் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது உங்கள் சிவாஜிகணேசன்.இன்.




https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/25659811_1541478575936741_6828046354164609362_n.jp g?oh=b8de2a0b0b990bbd7f5f4ceab79afb7c&oe=5AB1C829
(https://www.facebook.com/photo.php?fbid=1541478575936741&set=a.222089247875687.55258.100002238405105&type=3)

sivaa
24th December 2017, 10:21 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/25626456_286331835222673_3000668603504145437_o.jpg ?oh=81f70d4733d8011cafb31afcec5f3fef&oe=5AC520E0

தினமலர் வாரமலரில்

sivaa
25th December 2017, 04:10 AM
sekar parasuram



கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!
மெகா டிவியில் பிற்பகல் 12 மணிக்கு
* சிவந்த மண்*
·


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/26047128_1558301494286735_7212426693430983464_n.jp g?oh=2f3b0256c519c26b99be16c4efc88f4e&oe=5AC3EB51
(https://www.facebook.com/photo.php?fbid=1558301494286735&set=a.824059351044290.1073741828.100003206981317&type=3)

sivaa
25th December 2017, 04:11 AM
·sekar parasuram

அனைவருக்கும் கிறிஸ்த்மஸ் திருநாள் நல்வாழ்த்துகள்,
காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்
* ஞான ஒளி*



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25659922_1558281937622024_9159987109555465171_n.jp g?oh=f2961720679c2178cd8c1d9a0a56d8a1&oe=5AB2E372
(https://www.facebook.com/photo.php?fbid=1558281937622024&set=pcb.1558282130955338&type=3)https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/25659265_1558281980955353_6891251741061232572_n.jp g?oh=0adb426c3530e14bdb065047d0143b10&oe=5ACF39DF
(https://www.facebook.com/photo.php?fbid=1558281980955353&set=pcb.1558282130955338&type=3)https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/25659552_1558282057622012_6533454360034376779_n.jp g?oh=e1a8fac6c6d529ea5d26773f4197cbae&oe=5AC23009
(https://www.facebook.com/photo.php?fbid=1558282057622012&set=pcb.1558282130955338&type=3)

sivaa
25th December 2017, 08:08 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

186 வது வெற்றிச்சித்திரம்

ரோஜாவின் ராஜா வெளியான நாள் இன்று

ரோஜாவின் ராஜா 25 டிசம்பர் 1976
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25594025_1865996697046251_7892849522383178527_n.jp g?oh=32599a89a747ba207d1de36c6ce3cbd5&oe=5AB09868

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25659247_1865996843712903_4335583785177744871_n.jp g?oh=4fc6ed6796d98bd4e99b1550cc6fc4c3&oe=5AFA7601

sivaa
27th December 2017, 08:26 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

43 வது வெற்றிச்சித்திரம்

பாக்கியவதி வெளியான நாள் இன்று

பாக்கியவதி 27 டிசம்பர் 1957

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25659517_1866460470333207_8028296900129166498_n.jp g?oh=9538603111c7bd037fb0c34fffe8d52a&oe=5ABDE29D

sivaa
27th December 2017, 08:28 AM
Vasudevan Srirangarajan

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25592105_2005663106389663_5322387940504353254_n.jp g?oh=18d87841cb96ad83e5a7bf9aadb6f360&oe=5AF825DB

sivaa
29th December 2017, 07:11 AM
abdul kadar abdul salam


https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26055697_1595705870517649_2324364996724557682_n.jp g?oh=979211361dc060f924f55e8d2773397f&oe=5ABA12CA

sivaa
29th December 2017, 07:11 AM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26114149_1595705877184315_6619916453890890965_n.jp g?oh=6cdd718f41a73a359f0e60f5c83e4379&oe=5ACB0BF0

sivaa
29th December 2017, 07:12 AM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26113904_1595705873850982_3992336698733211383_n.jp g?oh=8b7014bd1a1af194ee0fd805448727ac&oe=5AFEFCB8

sivaa
29th December 2017, 07:12 AM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26001108_1595705987184304_5296440229939453602_n.jp g?oh=5ea6638f65e966997b622f1f0ed0f7bc&oe=5ABDA028

sivaa
29th December 2017, 07:24 AM
Nagarajan Velliangiri









ஐயனின் நினைவுகள் , தினமலர் சிறுவர் மலரையும் விட்டு வைக்கவில்லை.
அருமையான நிகழ்வைப் பகிர்ந்து கொண்ட அந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சகோதரிக்கு மனமார்ந்த நன்றி.



https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t31.0-8/26173009_2036893189927986_2005889965697142328_o.jp g?oh=62d99dc9d314cf5f18b2cdc46fa4f572&oe=5ABEE1DA

sivaa
30th December 2017, 01:43 AM
Sundar Rajan


மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நாளை முதல்
நடிகர்திலகம் இருவேடங்களில் நடித்து மறுவெளியீட்டில் 100 நாள் கண்ட
மாபெரும் வெற்றிக் காவியம் ...
சிவகாமியின் செல்வன்
துாத்துக்குடி சத்யா திரையரங்கிற்கு வருகிறார்.
சென்ற மாதம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியிட்டு மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து இதயங்களும் வருகை தந்து என்றும் துாத்துக்குடி சிவாஜியின் கோட்டை என்பதை நிரூபிப்போம்.
இதன் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து நடிகர்திலகத்தின் பல காவியங்கள் திரையிடப்படும்.
சிங்கத்தமிழனின் சிங்கநிகர் படையே,
திரள்வோம் துாத்துக்குடி சத்யா திரையரங்கில்....
படத்தினை வெளியிட பெரிதும் உதவிய மக்கள்தலைவரின் அன்பு இதயம் துாத்துக்குடி வடிவேல் அவர்களுக்கு நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.


https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t31.0-8/26173525_1547460065338592_8123771973485937946_o.jp g?oh=47e58bc54505cc0880af56475c02a248&oe=5ABD64AE

RAGHAVENDRA
30th December 2017, 02:46 PM
Wish you all a Happy and Prosperous New Year.

Calendar 2018 (web version)

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/26166529_1652216468162352_3848375716819232658_n.jp g?oh=131d461b4258ae2a4ce74073d9b01e0b&oe=5AFC1444

sivaa
31st December 2017, 03:31 AM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t31.0-8/26197698_2011222715812228_6669455251196618582_o.jp g?oh=e79fc1eee52753e83e7779a03f24d375&oe=5AC0F3A0

sivaa
31st December 2017, 03:35 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

66 வது வெற்றிச்சித்திரம்

விடிவெள்ளி வெளியான நாள் இன்று

விடிவெள்ளி 31 டிசம்பர் 1960
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26113901_1868233070155947_2237697897688787139_n.jp g?oh=330552ed9799ac5d51b74d8c12d21ef6&oe=5AC1C470

https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26113914_1868233136822607_8442424174710970813_n.jp g?oh=ca5f63a36e1871d402f2568c1ae98e5c&oe=5AC9038B

https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26166215_1868233166822604_1407548835469604135_n.jp g?oh=0a124399685e1568bd433a3885d0ea5e&oe=5AB7F77F

sivaa
1st January 2018, 10:11 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26166021_2005622622985889_6883987305740868906_n.jp g?oh=58da0f2a07e796b5eacef19627173c4a&oe=5AF6A183

sivaa
1st January 2018, 10:15 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26047414_159745808086152_7810278675094567892_n.jpg ?oh=554f675fd761d8dfb9e95039d4a13d69&oe=5AC273E7

sivaa
1st January 2018, 10:16 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26167308_159741671419899_8424502185282408110_n.jpg ?oh=3a72bf0e8cd6599898ebdbcf988f50ab&oe=5ABBA382

sivaa
1st January 2018, 10:26 AM
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26165453_10215573999045813_1777943396680962445_n.j pg?oh=33495b8c186d56b0468c86d67826bfcb&oe=5AB9E8B6

sivaa
1st January 2018, 11:41 AM
நடிகர் திலகத்தின் ஜனவரி மாத வெளியீடுகள்

1) அன்பளிப்பு 1 /01 / 1969

2) தங்கப்பபதுமை 10/01/ 1959


3) சாதனை 10/ 01 /1986



4) பராசக்தி (தெலுங்கு) 11/01/1957


5) பொம்மல பெள்ளி ( தெலுங்கு) 11/01/1958


6) மனிதனும் தெய்வமாகலாம் 11/01/1975


7) ஞானப்பறவை 11/01/1991


8) காவேரி 13 /01/1955


9) பரதேசி (தெலுங்கு) 14/01/1953


10) நான் பெற்ற செல்வம் 14 /01 /1956


11 ) நல்லவீடு 14/01 /1956


12) இரும்புத்திரை 14 /01/1960


13) பார்த்ததால் பசி தீரும் 14 /01/1962


14) கர்ணன் 14 /01/ 1964


15) பழநி 14/01/1965


16) கந்தன் கருணை 14/01/1967


17 ) எங்கமாமா 14/01/1970


18) இரு துருவம 14/01/1971


19) அவன் ஒரு சரித்திரம் 14/01/1977


20) மோகனப் புன்னகை 14/01/1981


21) பெஜவாடா பெப்புலி (தெலுங்கு) 14/01/1983


22) திருப்பம் 14/01/ 1984


23) ராஜமரியாதை 14/01/1987


24) மன்னவரு சின்னவரு 15/01/1999


25) நானே ராஜா 25/01/1956


26) மோட்டார் சுந்தரம் பிள்ளை 26/01/1966


27) ராஜா 26/01 /1972



28) சிவகாமியின் செல்வன் 26/01/1974


29) தீபம் 26/01/1977

30) அந்தமான் காதலி 26/01/1978


31) ரிஷிமூலம் 26/01/1980


32) ஹிட்லர் உமாநாத் 26 /01/1982


33) குடும்பம் ஒரு கோயில் 26/01/1987


34)திரிசூலம் 27/01/1979


35) பூங்கோதை 31/01 1953

sivaa
2nd January 2018, 08:18 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

126 வது வெற்றிச்சித்திரம்

அன்பளிப்பு வெளியான நாள்

அன்பளிப்பு 1 ஜனவரி 1969
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26112191_1868905103422077_6830224303813892804_n.jp g?oh=1529bb5e03ac9911d68da52f7693831d&oe=5AF0DCB7

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26047121_1868905073422080_390783777088368563_n.jpg ?oh=e397a2749e196af57531c39613cc4990&oe=5AF8B022

sivaa
3rd January 2018, 06:27 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26169775_187502078498082_5274916026502003006_n.jpg ?oh=beec308285564443e115a79edca07a66&oe=5AB92CA6




(nadigarthilagam visirikal)

sivaa
3rd January 2018, 08:51 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26114150_2006269606254524_909413635240834138_n.jpg ?oh=0378cc4783b60d2a636d8b96c46713d1&oe=5AF55794

sivaa
4th January 2018, 02:26 AM
paravasam nayagnr

பொம்மை சினிமா பத்திரிக்கை விருது வழங்கும் நிகழ்ச்சியில்...

எம்ஜிஆா்,
சிவாஜி கணேசன்
&
சாவித்திரி

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26219258_187776931803930_1531963715278060821_n.jpg ?oh=791c15961cb2aea12565752018f624dd&oe=5ABE1D3A

RAGHAVENDRA
4th January 2018, 12:46 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/26167936_1657128767671122_3577285389778710730_n.jp g?oh=f65b3edb1b767ee3711d5c5986e39b74&oe=5AEBDCC6

sivaa
6th January 2018, 03:49 AM
Edwin Prabhakaran Eddie

பால்கனி, பெஞ்சு டிக்கட் என்ற இரு பிரிவையும் கவர்ந்த சிவாஜிக்கு சாதி மதங்களை கடந்த ரசிகர்களே அதிகம்....சிவாஜிக்கு எந்த வர்க்க பின்னணியோ ,சாதி பின்னணியோ கிடையாது,அவரை சாதி மதம் கடந்து தமிழர்கள் நேசித்தார்கள்,(அரசியல் காரணமாக வெறுத்தவர்கள் தவிர)
தீந்தமிழை வளர்த்தவர்கள், பரப்பியவர்கள் என்ற வகையில் சான்றோர் பலரை நம்மால் சுட்டிக்காட்ட இயலும். ஆனால் அமிழ்தினும் இனிதான தமிழை, தமிழ் மக்களுக்கு உச்சரிக்க கற்றுத் தந்தவர் என்றால் அந்தப் பெருமை சிவாஜி கணேசன் ஒருவரையே சாரும். கலைஞர் க...ருணாநிதியின் கன்னல் தமிழ் வசனங்களை தனது சிம்மக் குரலால் சாஸ்வதமாக்கியவர் சிவாஜி. சராசரி தமிழனின் உயரம்தான் சிவாஜிக்கும். ஆனால் தனது அற்புதமான பாடி லாங்க்வேஜ் மூலம் 6 அடிக்கும் அதிகமாக விஸ்வரூபம் எடுக்கும் திறன் அவருக்கு இருந்தது. ..அதற்கு சிறந்த உதாரணம் .கவுரவம் படத்தில், கண்ணன் என்ற கதாபாத்திரம் நார்மலாக வடிவமைக்கப்பட்டது மாதிரி இருக்கும்.. .ஆனால் பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆகவரும் சிவாஜியின் கதாபாத்திரம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்.....நடக்கும் நடையும் . அசைவும் , திமிரும் பார்வையும் ..நிமிர்ந்து நிற்கும் கம்பீரமும் .ஆறடியை தாண்டியதாக உணர்வோம் நாம் , திரையில் பார்க்கும்போது .
அதே போல்
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததற்காக ஆசிய- ஆப்ரிக்க திரைப்பட விழாவில் இரண்டு கண்டங்களிலும் சிறந்த நடிகர் விருதுக்கு சிவாஜி தேர்வு செய்யப்பட்டார். விருதை வாங்க சிவாஜி மேடைக்குச் சென்றபோது, தேர்வுக்குழுவினர் ஆச்சர்யப்பட்டனர்.....இந்த உடலா இத்தனை உணர்ச்சிகளை ஆற்று வெள்ளமென வெளியே கொண்டுவந்தது என்று .அதுதான் நடிப்பின் இமயம்
தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய அமைப்பு சிவாஜிக்கு வாய்த்தது. அவர் பராசக்தியில் அறிமுகமாகியபோது கோலிவுட்டில் கதாநாயகர்கள் பஞ்சம். அதை சிவாஜியும், அவரை திரையுலகினரும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
ஆக்ஷன் படம் என்றால் எம்ஜிஆர், காதல் படம் என்றால் ஜெமினி என்று இருந்த நிலையில், தன் மீது எந்த முத்திரையும் விழாமல் பார்த்துக் கொண்டார் சிவாஜி. அதன் காரணமாக சரித்திரம், புராணம், நகைச்சுவை, வில்லன், காதல், குடும்பம் என்று சகலவிதமான ரோல்களில் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அதனுடன் சேர்ந்த ஸ்டைல் அது சிவாஜி அவர்களுக்கே சொந்தம் சூரியன் போல் நடிகர் திலகம் எப்போதும் பிரகாசிப்பார் .






https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/26168073_650034488721010_4282507418712956816_n.jpg ?oh=839b7906a2c91951ef8bbdc02aa3bd93&oe=5AEB0EA9
(https://www.facebook.com/photo.php?fbid=650034488721010&set=gm.1639563259459291&type=3&ifg=1)

sivaa
6th January 2018, 03:51 AM
Vasu Devan




நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சி
படம்: தங்கச் சுரங்கம்
வெளிவந்த ஆண்டு: 1969
... தயாரிப்பு: E.V.ராஜன் ('தங்கச்சுரங்கம்' காவியத்தில் கதாநாயகர் நடிகர் திலகத்தின் பெயரும் படத் தயாரிப்பாளர் பெயர் 'ராஜன்'தான்)
சண்டைப் பயிற்சி: திருவாரூர் M.S.தாஸ்
இயக்கம்: ராமண்ணா
சும்மா பொறி பறக்கும் சண்டைக்காட்சி. படு ஸ்லிம்மாக காலேஜ் மாணவன் போல் நடிகர் திலகம். பாரதியை விசாரணை செய்யும் இடத்தில் பேச்சுக் கொடுத்தபடியே ஒளிந்திருக்கும் எதிரிகளை கண்டு பிடித்து கொடுக்கும் "அட்டாக்"... ஸ்டைலாகவும், லாவகமாகவும் புகுந்து விளையாடும் நம் தங்க ராஜாவின் 'கும் கும்' குத்துக்கள்... சும்மா சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் நிறைந்த நெத்தியடி பைட். ஜேம்ஸ்பாண்டுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வு... புத்திசாலித்தன பிரதிபலிப்பு... வேகம்... விவேகம் என ஒருசேரக்கலந்து கலைக்குரிசில் கலக்கும் கலக்கல் பைட்.
என்ன ஒரு ஸ்டைலான கலக்கல் டிரஸ்! எதிரிகளை துவம்சம் புரிந்து விட்டு பாரதியிடம் வந்து "மேடம், இதெல்லாம் உங்க ஏற்பாடா?... இவங்கல்லாம் உங்க ஆட்களா?...எப்படி நம்ம விளையாட்டு! (இந்த இடத்தில் அவரது முகத்தில் பொங்கி வழியும் அந்தப் பெருமையைப் பார்க்க வேண்டுமே!) இப்பவாவது உண்மையை சொல்லுங்க,"... என்று கைகளில் உள்ள கிளவுசைக் கழற்றிய படியே ஷர்ட் பாக்கெட்டிலிருந்து 'தம்' மை எடுத்து, படு ஸ்டைலாக வாயில் வைத்து, மேட்ச் பாக்ஸை எடுத்து, பாரதி அணிந்துள்ள மேலாடையின் பின்புறமுள்ள கொக்கியில் வத்திக்குச்சியை உரசி சிகரெட்டை பற்ற வைக்கும் அந்த அட்டகாச அமர்க்கள ஸ்டைலை என்னவென்று சொல்வது! ஸ்டைலில் எல்லோருக்கும் 'அப்பன்' அல்லவா அவர்! அனைத்து நடிகர்களுக்கும், ஏன் அனைத்து மனிதர்களுக்கும் 'ரோல் மாடல்' நடிகர் திலகம் தானே!
இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக இதோ





https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/26168389_1572333132860980_528797056537842482_n.jpg ?oh=6967cdbd8eb9b7376d38303ef700213b&oe=5AF95774

sivaa
6th January 2018, 03:53 AM
Selva Kumar




கேட்டவரெல்லாம் பாடலாம்...என்
பாட்டுக்குத்தாளம் போடலாம்...!!!
கே.பாலாஜி அவர்களின் தங்கை படத்துக்காக பாடல் எழுத அம்ர்ந்திருந்தார்கள் கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர் இவர்களுடன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும்.
திருலோக் சிச்சுவேஷனைச் சொன்னார். கதாநாயகி கே.ஆர்.விஜயாவின் பர்த்டே பார்ட்டியில் சிவாஜி பாடுவதாக சீன் என்று சொல்ல, இதற்கு பாட்டு எழுதி ட்யூன் போடுவதை விட முதலில் ட்யூன் பண்ணிக் கொண்டு பாடல் எழுதுவது நன்றாக இருக்கும் என்று பெரும்பாலோர் சொல்ல, அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் ஒன்று இரண்டு என நான்கு ட்யூன்களைப்போட்டு விட்டார். அப்போது வந்தது குழப்பம். நான்குமே நன்றக இருக்கிறதே இதில் எதை செலக்ட் பண்ணுவது என்பதுதான் குழப்பம்.
முதல் ட்யூன் கண்ணதாசனுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ட்யூன் மெல்லிசை மன்னருக்கு பிடித்துள்ளது. மூன்றாவது இயக்குனர் திருலோகசந்தருக்கு பிடித்துப்போக, நாலாவதுதான் பாலாஜிக்குப் பிடிக்கிறது. ஒவ்வொருவருமே தாங்கள் செலக்ட் பண்ணிய ட்யூன்தான் பாடலாக்கப்பட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.
அப்போது கண்ணதாசன் கோபத்துடன் “விசு உன்னை யார் நாலு ட்யூன் போடச்சொன்னாங்க. ஒரேயொரு ட்யூன் போட்டுக் காட்டி இதுதான்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே” என்று சொல்ல எம்எஸ்வி முதலில் போட்டியிலிருந்து பின் வாங்கினார்.
“சரிண்ணே நான் முதலில் விலகிக்கிறேன், நீங்க மூன்று பேரும் ஒரு முடிவுக்கு வாங்க” என்று உட்கார்ந்துவிட்டார். ஆனால் மற்ற மூவரும் விடுவதாக இல்லை.
அப்போது வாசலில் “சார்..போஸ்ட்” என்று குரல் கேட்டது. உடனே கவிஞர், ஆஃபீஸ் பாயை அழைத்து “யப்பா அந்த போஸ்ட்மேனை உள்ளே கூப்பிடு” என்றார். “அவனை எதுக்கு கூப்பிடுறீங்க?” என்று பாலாஜி கேட்க “பாலு, நீ கொஞ்சம் சும்மா இரு. நாம எல்லோரும் சினிமாவில் இருப்பவர்கள். இந்த துறைக்கு சம்மந்தமில்லாத போஸ்ட் மேனை செலக்ட் பண்ணச் சொல்வோம்” என்றார்.
போஸ்ட்மேனும் வந்தார். அவரிடம் “தம்பி எங்களுக்காக நீ ஒரு அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா?” என்று கேட்க “சரி, சொல்லுங்க சார்” என்றார்.
“இது ஒரு பர்த்டே பார்ட்டியில் பாடும் பாட்டு. இப்போ நாங்க நாலு மெட்டு போட்டுக் காட்டுவோம். அதுல உனக்கு எது பிடிக்கிறதுன்னு நீ சொல்லணும்” என்று சொல்லி விட்டு “விசு அந்த நாலு ட்யூன்களையும் வாசித்துக் காட்டு” என்று சொல்ல எம்எஸ்வியும் வாசித்தார். கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அந்த போஸ்ட்மேன் “சார், அந்த மூணாவது மெட்டு அருமையா இருக்கு சார்” என்று சொல்ல இயக்குனர் திருலோக் முகத்தில் வெற்றிப்புன்னகை. ஆம் அது அவர் தேர்ந்தெடுத்த மெட்டு.
“ரொம்ப நன்றிப்பா” என்று போஸ்ட்மேனை அனுப்பி வைத்தனர்.
புன்னகையுடன் பாலாஜியைப் பார்த்தார் இயக்குனர். “பாலு, உங்களையெல்லாம் விட மக்கள் ரசனையை நன்கு அறிந்தவன் நான் என்று அந்த போஸ்ட்மேன் தெளிவுபடுத்தி விட்டான்” என்றார்.
அப்போது கண்ணதாசன் “விசு, அந்த போஸ்ட்மேன் செலக்ட் பண்ணிய ட்யூனை வாசி. டேய் பஞ்சு (வேறு யார், பஞ்சு அருணாச்சலம்தான்) நான் சொல்ல சொல்ல எழுதிக்கிட்டே வா” என்று வழக்கம் போல வரிகளைக் கொட்டத் துவங்கினார்.
கேட்டவரெல்லாம் பாடலாம்
என்பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே சுவையிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும் முகமும் மலரும்
ஓ….ஓ….ஓ….ஓ…ஓஓஓஓஓஓஓஓ
பாடல் அருமையாக அமைந்ததுடன், 1967 ல் டாப் டென் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.
ஒரு பொதுஜனப் பிரதிநிதி தேர்ந்தெடுத்த மெட்டு இது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இது போல நாலைந்து ட்யூன்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, எம்எஸ்வி அவர்களைப்பார்த்து கவிஞர் கண்ணதாசன் “விசு, வாசல்லே யாராவது போஸ்ட்மேன் வர்ரானா பார்” என்று கிண்டலடிப்பார்.



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s851x315/26167268_1740606975979060_1746503452524053123_n.jp g?oh=b1774c5b6402370636e1a3031883d94c&oe=5AF22EBB
(https://www.facebook.com/photo.php?fbid=1740606975979060&set=pcb.1639311582817792&type=3&ifg=1)
(https://www.facebook.com/photo.php?fbid=1740607042645720&set=pcb.1639311582817792&type=3&ifg=1)

sivaa
6th January 2018, 04:05 AM
Balasubramanian bk

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/26173933_1597705240310225_5333670976086697682_o.jp g?oh=98f7b2f8b9771eeb266e545237551fcc&oe=5AEF3D32

sivaa
6th January 2018, 04:12 AM
Paravasam nayagan

நடிகர் திலகமும், அவரது நாடகக்கலை ஆசான் சக்தி கிருஷ்ண சாமியும் கோயில்பட்டியில் ஒரு நாடகம் முடித்துக்கொண்டு திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருக்கிறாா்கள். வழியில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு ஊா் வருகிறது.
சிவாஜியின் நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கி போகிறது.
திருச்சியில் சிறுவயதில் தான் பாா்த்த கட்டபொம்மு தெருக்கூத்து. எந்த கூத்தை பாா்த்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு நாடக உலகத்துக்குள் நுழைந்தோமோ அந்த கட்ட பொம்மனின் வரலாற்றை நாடகமாக செய்தால் என்ன எனும் எண்ணம் கொ...ப்பளிக்க தொடங்கியது.
தன் ஆசையை ஆசானிடம் சொன்னாா்.
சக்தியும் ஒப்புகொண்டாா்
ஒரே மாதத்தில் நாடக திரைக்கதையை தயாரித்து சிவாஜியிடம் ஒப்படைத்தாா்.
நாடகத்தில் இருந்த புதுமையான திரைக்கதை அமைப்பும், தரம் வாய்ந்த வசனங்களும் சிவாஜியை வெகுவாக கவா்ந்தன.
உடனடியாக சிவாஜி நாடக மன்றத்தை உருவாக்கினாா்.
மொத்தமாக ரூ.50,000 செலவானது.
1957ம் ஆண்டு ஆகஸ்டு 28ம்தேதி, சேலத்தில் பொருட்காட்சியில் வீர பாண்டிய கட்ட பொம்மன் நாடகம் அரங்கேறியது.
நாடகம் மாபெரும் வெற்றி.
அடுத்தடுத்து நாடகம் பல ஊா்களிலும் அரங்கேறியது.
நான்கே வருடங்களில் நூறுமுறை அரங்கேறும் அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றது.
100 அரங்கேற்றங்கள் முடிந்த பின்பு வசூலித்த தொகையை கணக்கிட்டு பாா்த்த சிவாஜிக்கு நம்பவே முடியவில்லை.
மொத்த வசூல் ரூ.32 லட்சங்கள். மிகுந்த மகிழ்ச்சியடைந்தாா்.
அந்த முழுத்தொகையையும் தமிழகம் முழுவதிலுமுள்ள பல பள்ளிகளுக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டாா்.
வரி கட்ட மறுத்த கட்டபொம்மன்
வாரி வழங்கும் நடிகர் திலகமாக மாறினாா்....!





https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26219163_188396141742009_693002775205881521_n.jpg? oh=0a7c92e8b374062fafbce7d79cea41de&oe=5ABD7E01

sivaa
6th January 2018, 08:52 AM
Sekar Parasuram


விடுமுறை நாள் கொண்டாட்டம்,

HOLIDAY SPECIAL

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுவதில் வேறு எந்த ஒரு நடிகரின் திரைப்படங்களும் இத்தனை இடம் பிடிக்க முடியாத ஒன்று,

நடிகர் திலகத்தின் சரித்திர சாதனை நிகழ்த்திய காவியங்கள் இன்று

தங்கப் பதக்கம்,

திரிசூலம்,

கௌரவம்,

அவன் ஒரு சரித்திரம்,

புண்ணிய பூமி...

என நம்மை திகப்பில் மூழ்கடிக்கிறது!!

பிற்பகல் 1:30 க்கு கேப்டன் டிவியில்- புண்ணிய பூமி,

பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்-- அவன் ஒரு சரித்திரம்,

பிற்பகல் 2:00 மணிக்கு ஜெயா டிவியில்-- தங்கப் பதக்கம்,

இரவு 7:00 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்-- திரிசூலம்,

இரவு 10:00 மணிக்கு ஜெயா மூவியில்-- கௌரவம்,





https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/26173447_1570236436426574_8476499575847259100_o.jp g?oh=a26c7c9874163b1925071af28d501cf5&oe=5AEAA727

sivaa
8th January 2018, 04:59 AM
Sundar rajan


மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
தேசியம், தேசத்திற்காக, தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டவர்களை நம் முன் நிறுத்தி இன்றளவும் அவர்களின் பெருமையை இன்றைய தலைமுறையினரும் உணர வைத்துக் கொண்டிருப்பவர் நமது நடிகர்திலகம் அவர்கள்,
சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றைக் கொண்டாட தகுதி பெற்றவர்கள் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள், மற்ற இயக்கத்தினர் இந்த நாட்களைக் கொண்டாட மறந்தாலும், நம் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும், சுதந்திரதினம் மற்றும் குடியரசுத...ினத்தன்று நிகழ்ச்சி நடத்திக் கொண்டாடுவார்கள்.
இந்தக் குடியரசுதின விழா மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அன்பு இதயங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
ஆம், அன்பு இதயங்களே
வரும் 26.01.2018,வெள்ளி முதல் குடியரசுதினத்தை முன்னிட்டு, மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியம் பாவமன்னிப்பு வெளியாகிறது.
இந்த ஆண்டின் மதுரையில் வெளியாகும் நடிகர்திலகத்தின் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெறுகிறது பாவமன்னிப்பு,
அன்பு இதயங்களே, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு தயாராவீர்.......

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26230467_1556728531078412_3249056749803026844_n.jp g?oh=6a4d9e6f85bfff3cfa7db5481325ef8d&oe=5AE9EE01

sivaa
8th January 2018, 05:04 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26169839_2008586889356129_49626675025288787_n.jpg? oh=85dd802e4a3e3976ce750a487fc11234&oe=5AB1494A

sivaa
10th January 2018, 07:46 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

53 வது வெற்றிச்சித்திரம்

தங்கப்பதுமை வெளியான நாள் இன்று

தங்கப்பதுமை 10 ஜனவரி 1959

https://upload.wikimedia.org/wikipedia/en/7/7f/Thanga_Padhumai_poster.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiM5eLXqczYAhVOyYMKHRAWD7AQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FThanga _Padhumai&psig=AOvVaw0Zk9PzdiNtnJ1urmMRP1XR&ust=1515636900013176)

https://i.ytimg.com/vi/F2cIi1Q1CPg/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi14-bzqczYAhWjz4MKHX22D34QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DF2 cIi1Q1CPg&psig=AOvVaw0Zk9PzdiNtnJ1urmMRP1XR&ust=1515636900013176)


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26230239_1663426390374693_7279058659531299972_n.jp g?oh=0803154731624408aeb8bb0233939b53&oe=5AFDE59B

sivaa
10th January 2018, 07:55 AM
நடராஜன்.P

தி இந்து
நடிப்புக்கு சிவாஜி!
பூ. கொ. சரவணன்


சிவாஜி கணேசன் - சந்தேகமே இல்லாமல் ஒரு மகத்தான கலைஞன். தமிழ்நாட்டின் தமிழ் அவர் வருவதற்கு முன் சினிமாவில் எப்படி இருந்தது என்று நீங்கள் அன்றைய படங்களை பார்த்து இருந்தால் நொந்து போவீர்கள். அந்த சிம்மக்குரல் அதை புரட்டிப்போட்டது. உச்சரிப்பு என்பதையும்,வெளிப்படுத்தல் என்பதிலும் பலரும் அவரைத்தான் திருட்டுத்தனமாக பிரதி எடுத்தார்கள்.
பானர்மன் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி நடந்தார் என்று விவரித்து இருந்தாரோ அப்படியே இருந்தது சிவாஜியின் நடை . சிவாஜியிடம் அதை தாங்கள் படித்து இருக்கிறீர்களா என்று பிற்காலத்தில் கேட்ட பொழுது ,"நானெங்கே அதெல்லாம் படிச்சேன். ஒரு வீரன் அப்படினா அப்படித்தான் நடப்பான் !" என்றாராம் கம்பீரமாக
அண்ணாவின் ‘சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் இவரின் நடிப்பை பார்த்து மெச்சிய பெரியார், ‘ சிவாஜி’ என்று பட்டம் தர வி.சி.கணேசன் ‘சிவாஜி’ கணேசன் ஆனார்.
திமுகவை விட்டு சிவாஜி விலகியதும்,"நம்மால் அடையாளம் காட்டப்பட்டவர் அவர்!" என்று கட்சியினர் சொல்ல ,"என்ன பேசறீங்க? அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டித்தான் அதுக்கு பெருமை அப்படிங்கற மாதிரி இருக்கே இது. " என்று அண்ணா வேகமாக மறுத்திருக்கிறார். சிவாஜி அவர்களுக்கு பெரியாராக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இறுதிக்காலம் வரை இருந்தது. நிறைவேறத்தான் இல்லை.
என்றைக்கும் அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக போக மாட்டார். ஒருமுறை மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் இவர் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் அதிகாலை மூன்று மணிக்கு சூட்டிங் என்றார்கள், இவர் மேக்கப் உடன் வந்து நின்றிருந்தார். யாரும் வந்திருக்கவில்லை. லேட்டாக வந்து தலை சொரிந்தவர்களை பார்த்து “நாளைக்கு மூன்று மணிக்கு சூட்டிங் வைத்துக்கொள்ளலாம்" என்றாராம் கூலாக.
ஒரு வசனத்தை ஒரு முறை அல்லது இருமுறை படித்து காட்டினால் போதும் அப்படியே சொல்லி நடித்து விடுவார் "நீயும் நானுமா.. கண்ணா நீயும் நானுமா ? " பாடலை டி.எம்.எஸ் அவர்களை பலமுறை பாடச்சொல்லி நடித்திருக்கிறார். "ஏன் ?" என்று கேட்டதற்கு "ஒவ்வொரு சரணத்துக்கும் ஒவ்வொரு உணர்ச்சி காட்டியிருக்கார் டி.எம்.எஸ். அவர் பாடின பாட்டுக்கு நான் நியாயம் பண்ணனும் இல்லையா ?" என்று கேட்டாராம்.
யாருக்கும் வாழ்த்து சொல்ல போகாத காமராஜர் கொட்டும் மழையில் இவரைத்தேடி வந்து மாலை போட்டுவிட்டு போகிற அளவுக்கு இருவரும் நெருக்கம். நயாகரா நகரத்தந்தையாக பண்டித நேருவுக்கு பின்னர் பொறுப்பேற்க வைக்கப்பட்ட இந்தியர் இவர் தான்.
திலீப் குமார் ஹிந்தி திரைப்பட விழாவில் சிவாஜியை அவரின் மகனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். "உங்க அளவுக்கு பெரிய நடிகரா ?" என்று அவரின் மகன் கேட்க அவர் அவசர அவசரமாக தலையசைத்து மறுத்து ,"எங்களுக்கெல்லாம் பல மடங்கு மேலே !" என்று சொல்லி கைகளை மேலே உயர்த்தி காண்பித்து இருக்கிறார்.
சிறந்த நடிகருக்கான விருது எப்பொழுதும் அவருக்கு வழங்கப்பட்டதில்லை. ‘தேவர் மகன்’ படத்துக்கு ஸ்பெஷல் ஜூரியின் விருது தரப்பட்ட பொழுது கம்பீரமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ‘செவாலியே’ விருதுக்கு பிறகு, தமிழகத்துக்கான முதல் தாதா சாகேப் பால்கே விருது இந்த மகத்தான கலைஞனுக்கு வழங்கப்பட்டது. அறுபதில் கெய்ரோ நகருக்கு சிவாஜி ஆசிய ஆப்ரிக்க நடிகர்களின் விழாவுக்கு போயிருந்தார். இவரை ஏதோ தொழில்நுட்ப கலைஞர் என்று அனைவரும் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். சிறந்த நடிகருக்கான விருது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காக சிவாஜி கணேசனுக்கு என்று அறிவிக்கப்பட்ட பொழுது உணர்ச்சிவேகத்தில் விழப்போன இவரை நடிகை பத்மினி தான் தாங்கிப்பிடித்தார்.
நடிப்பின் பால நூல்களில் ஒன்றான ஸ்டெனிஸ் லாவோஸ்கி தியரி நூலில் ‘அறுபத்தி நான்கு முகபாவங்களை காட்டும் கலைஞர்’ என்று குறிப்பிடப்படுவது சிவாஜி தான்.
"நடிப்பு என்பது புலி வேட்டைக்கு போகிற மாதிரி,நெத்தியில் குறி பார்த்து சுடணும். இல்லைனா புலி உன்னை சாப்பிட்டுடும். அந்த பயம் இந்த நாற்பது வருசமும் என் அடி வயித்தில் இருக்கு. அதான் இன்னமும் முன்னாடி ஒத்திகை பார்த்துட்டு போறேன். " என்ற அவரின் வரிகளை அவர் எப்படி தன் கலையை மதித்தார் என்பதற்கு சாட்சி.
சிவாஜியின் மரண ஊர்வலம் . மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகர் ஆவேசத்துடன் " இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!" என்று கதறினார்.
நடிகர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். நிறைய நடிகர்கள் சிவாஜிக்கு ரசிகர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதே சிவாஜி என்னும் மகாக் கலைஞனின் பெருமைக்குச் சான்று.



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/26731235_736377753218614_380016876441832962_n.jpg? oh=6d677fada4845db597bb9e61d0b17f83&oe=5AF53F75
(https://www.facebook.com/photo.php?fbid=736377753218614&set=gm.1643129665769317&type=3&ifg=1)

sivaa
10th January 2018, 07:58 AM
Sundar Rajan

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/26230146_1557852460966019_834152527271582627_n.jpg ?oh=7d21a50298e31d4bd65d92530d23ce49&oe=5AB097FE




அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
பராசக்தியிலிருந்து
பூப்பறிக்கவருகிறோம் வரை
அனைத்துப் படங்களிலும்,
... நடிகர்திலகத்தின் ஸ்டைலான போஸ் இருக்கும். அதிலும் சில படங்களில் அவர் கொடுக்கும் ஸ்டைலான போஸ், இனி யாரும் அப்படிப்பட்ட போஸ் கொடுக்க முடியாது.
ஆனால் படத்தின் சுவரொட்டிகளில் பார்த்தோமென்றால் அந்த ஸ்டைலான போஸ் இடம் பெறாது. ஏன் என்று தெரியவில்லை.
ஆனால்,
இன்று நமது இதயங்கள் வெளியிடும் போட்டோவில் தலைவரின் ஸ்டைலைப் பார்க்கும் போது, நமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வியப்பளிக்கிறது,
இதோ இந்தப் போட்டோ,
இன்பா அவர்கள் எழுதிய கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை என்ற நுாலிலிருந்து,
சிறிய மாற்றத்துடன்,

sivaa
10th January 2018, 08:10 AM
Vasudevan

இன்று ரொம்ப ஸ்பெஷலான ஸ்டில்.
. இந்த ஸ்டில்லை பார்த்துப் பார்த்து வியந்து கொண்டே பதிகிறேன். ஆச்சரியம் தீர்ந்தபாடில்லை. குறைந்தபாடில்லை. என்ன ஒரு ஸ்டைல்! பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு, லேசாக தலை சாய்த்து ,படுஸ்டைலாக ஸைட் லுக் விட்டுக் கொண்டு, அம்சமான உடையில் இந்த 'ஸ்டைல் சக்கரவர்த்தி' நடக்கும் அழகை எவரேனும் வர்ணித்துவிட முடியுமா? திரு ரஜினிகாந்த் அவர்கள் இந்தக் காட்சியை பலமுறை கண்டிப்பாகப் பார்த்திருக்க வேண்டும். அவர் அப்படியே நம் தலைவரைப் பின்பற்...றி இந்த நடையை பல படங்களில் நடப்பார்.
இந்த புதிர் முடிவில் அந்த நடையை மட்டும் வீடியோ காட்சியாக அளிக்க முயல்கிறேன். இப்படி ஒரு ஸ்டைலை அப்போதே செய்து காட்டிய நம் இதய தெய்வத்தின் மகிமையை என்னெவென்று புகழ்வது?
எப்படித்தான் இதையெல்லாம் செய்தார்? எங்குதான் கற்றுக் கொண்டார்? இல்லை ..இல்லை...இறைவன் எதையும் கற்பதில்லை. எல்லோருக்கும் கற்றுக் கொடுப்பான் தானே! அந்த இறைவனுக்கும் கற்றுக் கொடுப்பவர் நம் இறைவன் ஆயிற்றே!
. இந்த ஸ்டைலில் மயங்கி வீழ்ந்தவன்தான். இன்னும் மூர்ச்சை தெளியவில்லை.




https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/26195350_1576898979071062_4484605968092581366_n.jp g?oh=3e0f1d89ee45b8e0d6be9da5594b9e18&oe=5AFBB056
(https://www.facebook.com/photo.php?fbid=1576898979071062&set=gm.585217648495982&type=3&ifg=1)

sivaa
10th January 2018, 03:16 PM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

257 வது வெற்றிச்சித்திரம்

சாதனை வெளியான நாள் இன்று

சாதனை 10 ஜனவரி 1986
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26230919_1873376739641580_5550641893038160395_n.jp g?oh=15261847e83ca09b15bb4fb580db3fc1&oe=5AF7A644

நடிகர்திலகம்அவர்கள் நடித்த
257வது படம் -சாதனை -வெளியான நாள்=10/1/1986.

சாதனை படமானது தேவி பாரடைஸில் பகல் காட்சி 133 நாட்கள் ஓடியது. நாகேஷ் திரையரங்கில் 112 நாட்கள் ஓடிய ஓரே திரைப்படம்.32ஆண்டுகளுக்கு முன்பாக அன்றய காலத்திலேயே தயாரிப்பாளர் A S பிரகாசம் அவர்களுக்கு பத்து இலட்சம் இலாபம் கொடுத்த படம் என்று தினமனி கதிரில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.(தகவல் net)

sivaa
11th January 2018, 04:45 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

35 வது வெற்றிச்சித்திரம்

பராசக்தி (தெலுங்கு) வெளியான நாள் இன்று

https://i.ytimg.com/vi/SdnOlP94x2g/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjI__L8ws7YAhUT84MKHYgrBZgQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DSd nOlP94x2g&psig=AOvVaw0zRN4-Aq3eznX-_Mi7fNvI&ust=1515712363352608)

பராசக்தி (தெலுங்கு) 11 ஜனவரி 1957

sivaa
11th January 2018, 04:57 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

44 வது வெற்றிச்சித்திரம்

பொம்மல பெள்ளி ( தெலுங்கு) வெளியான நாள் இன்று

பொம்மல பெள்ளி ( தெலுங்கு) 11 ஜனவரி 1958

https://i.ytimg.com/vi/WfaEBGyze5Y/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj_rtnbxc7YAhUK24MKHZKmDxsQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DWf aEBGyze5Y&psig=AOvVaw0S6u00lEMmssbPdSgc2_qH&ust=1515712881550544)

sivaa
11th January 2018, 05:05 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

174 வது வெற்றிச்சித்திரம்

மனிதனும் தெய்வமாகலாம் வெளியான நாள் இன்று

மனிதனும் தெய்வமாகலாம் 11 ஜனவரி 1975

http://3.bp.blogspot.com/-CeRCUSrJdCY/UOZ5HBQ48eI/AAAAAAAAGVI/ZPkxLMtRVSU/s1600/Manithanum+Deivamagalam1.JPG (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi_ob-Hx87YAhVH5oMKHc-lAagQjRwIBw&url=http%3A%2F%2Fwww.thiruttuvcd.me%2Fcategory%2Fc astcrew%2Fsivaji-ganesan-movies%2F&psig=AOvVaw0Wcq6AuqeRTg7d3HkQiV_1&ust=1515713453639562)

sivaa
11th January 2018, 05:09 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

276 வது வெற்றிச்சித்திரம்

ஞானப்பறவை வெளியான நாள் இன்று

ஞானப்பறவை 11 ஜனவரி 1991


https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/7e/Gnana_Paravai_DVD_cover.jpg/220px-Gnana_Paravai_DVD_cover.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjdtO3AyM7YAhVI8IMKHcEKBpoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FGnana_ Paravai&psig=AOvVaw3euIqq4hoX3pMOjmo2SIze&ust=1515713897309746)

sivaa
11th January 2018, 07:11 AM
vetrivel vetri

அமெரிக்கா அரசு முறை சுற்று பயணத்தின் ஒரு கட்டமாக பிரபல அமெரிக்க நடிகர் மார்லன் பிராண்டோ அவர்களிடம் நடிகர்திலகம் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சத்யஜித் ரே அவரின் படங்களை குறிப்பிட்டு இந்தியா முழுவதும் பஞ்சை பராரிகள் என்ற பொருள் பட பேசினார் பிராண்டோ.
கொதித்து போன நடிகர் திலகம் மிஷ்டர் பிராண்டோ நீங்கள் அணிந்துள்ள உடைக்கும் என்னுடைய உடைக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா ரே அவர்கள் படமெடுத்தது உங்களுக்கல்ல எங்கள் நாட்டு அரசியல் வாதிகளுக்கு ஏழ்மைபட்ட மக்களை அடையாளம் காட்ட அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபட வேண்டவே என்று பதிலழிக்க பிராண்டோ வெலவெலத்து விட்டாராம்
எந்த சூழ்நிஸையிலும் தாய்நாட்டை விட்டு கொடுக்காத தேசபக்தனல்லவா



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/26229559_2041147779539715_2404415727968038444_n.jp g?oh=5c128db65c046033681867f3105dcb25&oe=5AFF4466
(https://www.facebook.com/photo.php?fbid=2041147779539715&set=pcb.585738688443878&type=3)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/26238805_2041147792873047_5557847734333339950_n.jp g?oh=e36a87daf4b4fa7e0799c5e5aab96164&oe=5AFAFAB5
(https://www.facebook.com/photo.php?fbid=2041147792873047&set=pcb.585738688443878&type=3)