PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

sivaa
30th July 2016, 09:55 AM
http://oi64.tinypic.com/2uikuhx.jpg

sivaa
30th July 2016, 09:57 AM
http://oi63.tinypic.com/5vdope.jpg

sivaa
30th July 2016, 09:58 AM
http://oi67.tinypic.com/11s12yp.jpg

sivaa
30th July 2016, 09:58 AM
http://oi66.tinypic.com/scrsy9.jpg

RAGHAVENDRA
30th July 2016, 04:34 PM
கடந்த சில நாட்களாக நமது மய்யம் திரியின் இணைப்புக் கிடைக்கப் பெறாமல் இந்தியாவிலுள்ள நண்பர்கள் பார்வையிடவும் பதிவிடவும் இயலாமல் இருந்தது. இன்று நண்பர் வினோத் அவர்கள் திரு நவ் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர் மூலம் புதிய இணைப்பினைத் தந்துள்ளார். இனி வழக்கம் போல் நாம் பங்கு பெறலாம். இந்த இணைப்பினை நமது வாட்ஸ்அப் குழு மற்றும் முகநூல் பக்கங்களிலும் பகிர்ந்து கொண்டுள்ளேன். அனைவரும் தொடர்ந்து பங்கு பெறலாம். திரு நவ் அவர்களுக்கும் திரு வினோத் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
30th July 2016, 04:35 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13680566_1164434866940517_7757910400522168720_n.jp g?oh=77fa99ed945eeae64bc8e688bec5e553&oe=58248D68

RAGHAVENDRA
30th July 2016, 04:36 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13645100_1164439016940102_2305064876639709424_n.jp g?oh=3cdf2b77f603c3490184eb4939cc27aa&oe=5831D5B7

sivaa
30th July 2016, 09:09 PM
http://oi68.tinypic.com/v6q6c4.jpg

sivaa
30th July 2016, 09:10 PM
http://oi66.tinypic.com/2pr8w3n.jpg

sivaa
30th July 2016, 09:10 PM
http://oi66.tinypic.com/2cdepuv.jpg

sivaa
30th July 2016, 09:12 PM
http://oi68.tinypic.com/2cmvux0.jpg

joe
1st August 2016, 08:38 PM
5328

https://www.facebook.com/teakkadai/posts/1052523314843105

Gopal.s
2nd August 2016, 12:31 PM
5328

https://www.facebook.com/teakkadai/posts/1052523314843105

Joe,Millions of Thanks to you.You are a one man army in Internet and social medias for Sivaji worshippers. Here some people do not realise the value of what we are doing. I am fighting everytime with Oneindia,Sify ,Behindwoods and Tamil Hindu now. Shankar,Sridhar are some of the unethical journalist who are doing this mischief. All our fans should complain to one india Sriram, and Tamil Hindu AShokan. Both are open minded .

RAGHAVENDRA
3rd August 2016, 08:11 PM
Senthilvel,

We are having separate thread for contemporary Tamil films and artistes in the Tamil Film Section and there is already a separate thread for Prabhu under the heading: "Prabhu Ganesan - Charismatic, Affable and Underrated." at the following link. you may please continue this for discussions on Prabhu Ganesan. This thread is exclusively for Nadigar Thilagam only and of course we greet Prabhu Sir on important days in our regular discussions in NT threads. Therefore no separate thread is necessary for Prabhu, I feel. Particularly not in our NT thread.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.mayyam.com/talk/showthread.php?6859-Prabhu-Ganesan-Charismatic-Affable-and-Underrated&PHPSESSID=93cdfb9f0ab7f56e54beff23eced9a64

Thank you.

RAGHAVENDRA
4th August 2016, 12:04 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/12472485_1167517203298950_50721595819847331_n.jpg? oh=fcb4d423cffb5bc907970a87e79d6ef0&oe=5823B0B9

Due to unavoidable reason, the Programme of Tribute to NT-MSV by our NTFANS has been rescheduled to be held on Monday 15th August 2016 at 6.00 p.m. at the same venue.

Russellxss
5th August 2016, 09:38 PM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 15வது ஆண்டு நினைவுநாளையொட்டி நமது தலைவரின் மீது தீவிர பக்தி கொண்ட சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் பொதுசெயலாளருமான திரு.ரமேஷ்பாபு அவர்கள் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் சிவாஜி என்றொரு சரித்திரம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பி இருந்தார். அனைத்துப் பத்திரிக்கைகளும் அதனை வெளியிட்டனர், ஆனால் அதை அனுப்பியது யார் என்ற விபரத்தை தெரிவிக்காமல் தாங்கள் எழுதியது போல் வெளியிட்டனர். அதை வெளியிட்டு நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு பெருமை சேர்த்ததே நமக்குப் பெருமை.

அந்தக் கட்டுரை தற்போது சினிமாச்சாரல் ஆகஸ்டு மாத இதழில் வெளிவந்துள்ளது. அதுமட்டுமன்றி அதை எழுதி அனுப்பியவர்களின் புகைப்படத்தையும் பெயரையும் வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளனர். கட்டுரையை வெளியிட்ட சினிமாச்சாரல் இதழின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவுக்கும், இக்கட்டுரை வெளிவர முயற்சி மேற்கொண்ட எங்கள் அன்பு நண்பர் அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் செயல்தலைவர் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா அவர்களுக்கும் நன்றி.

http://www.sivajiganesan.in/Images/040816_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
5th August 2016, 09:39 PM
http://www.sivajiganesan.in/Images/040816_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
5th August 2016, 09:39 PM
http://www.sivajiganesan.in/Images/040816_3.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
5th August 2016, 09:42 PM
மதுரை-சென்ட்ரல் திரையரங்கில் சுதந்திரதினத்தை முன்னிட்டு மக்கள்தலைவரின் 125வது வெற்றிக்காவியமான உயர்ந்த மனிதன்
திரைப்படம் ஆகஸ்டு 12 முதல் வெளிவருகிறது. ஏற்கெனவே வெளிவந்த வசந்தமாளிகையில் வசூலை இதுவரை எந்தப் படமும் நெருங்கவில்லை, வசந்தமாளிகையில் வசூலை முறியடிக்கும் வண்ணம் உயர்ந்த மனிதன் திரைப்படத்தின் வசூல் இருக்கவேண்டும். நமது மக்கள்தலைவரின் பட வசூலை, நமது மக்கள்தலைவரின் படத்தின் வசூலே மிஞ்ச வேண்டும்.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, இன்றே தயாராவோம். இந்த ஆண்டு சுதந்திரதின விழா மதுரை சிவாஜி அவர்களின் ரசிகர்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையட்டும்.

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/13901541_1061894253895178_7667696678212568925_n.jp g?oh=79351c1934ad781d30548fe8d393494c&oe=585A04AB


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
5th August 2016, 09:43 PM
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் மதுரை நகர் தலைவர் திரு.எம்.சோமசுந்தரம் அவர்கள் தனது 50வது பிறந்தநாள் இயக்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் பொதுசெயலாளர் ரமேஷ்பாபு அவர்கள், அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் துணைத்தலைவர் கா.சுந்தராஜன் அவர்கள், நிர்வாகிகள் தல என்கின்ற பாலகிருஷ்ணன், கிச்சு, சண்முகநம்புராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் கேக் வெட்டி திரு.சோமசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
சோமசுந்தரம் அவர்களும் அவருடைய குடும்பத்தினரும் அய்யன் சிவாஜி அவர்களின் ஆசியுடன் எல்லாவளமும் பெற்று நீடூழி வாழ உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் இறைவனை வேண்டுகிறோம்.

http://www.sivajiganesan.in/Images/050816_6.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
5th August 2016, 09:43 PM
http://www.sivajiganesan.in/Images/050816_7.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
5th August 2016, 09:44 PM
http://www.sivajiganesan.in/Images/050816_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
5th August 2016, 09:45 PM
http://www.sivajiganesan.in/Images/050816_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
6th August 2016, 07:35 AM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் மீது தீராத பாசம் கொண்ட வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். நமது நடிகர்திலகத்தின் உயிரோட்டமான காவியமான வியட்நாம்வீடு, ஞானப்பறவை ஆகிய படங்களை இயக்கியவர். மேலும் நமது தலைவரின் பல வெற்றிப் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். சுந்தரம் என்ற பெயர் வியட்நாம் வீடு வெற்றிக்குப் பிறகு வியட்நாம்வீடு சுந்தரம் என்று அழைக்கப்பட்டது. தான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியானாலும் கலையுலகில் தன் வளர்ச்சிக்குக் காரணம் நடிகர்திலகம் அவர்கள் தான் என்பதை நினைவுபடுத்துவார்.
நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் வியட்நாம் வீடு, ஞான ஒளி, சத்யம், கிரகப்பிரவேசம், ஜஸ்டிஸ் கோபிநாத், அண்ணன் ஒரு கோவில், ஜல்லிக்கட்டு, ராஜமரியாதை போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் இளையதிலகம் பிரபு அவர்களின் ஆனந்த் படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.
வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் இறைவனை வேண்டுகிறோம்.

http://www.sivajiganesan.in/Images/95.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxor
6th August 2016, 09:23 AM
அஞ்சலி

வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

[

KCSHEKAR
6th August 2016, 11:23 AM
இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் மறைவிற்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொகிறோம்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Prestige%20PadmanabhanStandingPose_zpswj44uknz.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Prestige%20PadmanabhanStandingPose_zpswj44uknz.jpg .html) http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/VietnamveeduSundaram_zps8ywrq3zw.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/VietnamveeduSundaram_zps8ywrq3zw.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Pg1_zpspfik0uvv.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Pg1_zpspfik0uvv.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Pg2_zpsjymxcnwn.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Pg2_zpsjymxcnwn.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1b4f84f9-39e5-4d9a-9610-e0c3db761d56_zpsmibwrsoq.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1b4f84f9-39e5-4d9a-9610-e0c3db761d56_zpsmibwrsoq.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/4a8a30ea-1eef-427b-b3da-93d38a9a5b1b_zpsoktbw95k.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/4a8a30ea-1eef-427b-b3da-93d38a9a5b1b_zpsoktbw95k.jpg.html)

Russellxor
6th August 2016, 04:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20160806164643_zpsrvxi5q0r.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20160806164643_zpsrvxi5q0r.gif.html)

Russellxor
6th August 2016, 04:51 PM
http://uploads.tapatalk-cdn.com/20160806/3c9176912e44381e57be886b3309ad73.jpg

joe
6th August 2016, 05:25 PM
http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-condolence-massage-viyatnaam-veedu-sundaram-death-259664.html

சிவாஜியின் பெயரை குறிப்பிடக்கூடாது என்றே கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு இரங்கல் ..என்னமோ எம்.ஜி.ஆர் பட வசனகர்த்தாவாம் .

இந்த அம்மாவுக்கு சொம்பு தூக்க , சிவாஜி பெயரை சொல்லு ஓட்டு கேட்க இங்கு ஒரு கூட்டம் ..தூ .

Gopal.s
6th August 2016, 06:21 PM
நடிகர்திலகத்தின் பிரியத்துக்குரிய ,அவராலேயே வளர்த்தெடுக்க பட்டு,அவர் பால் இறுதி வரை நன்றி பாராட்டிய திரு சுந்தரம் அவர்கள் இயற்கை எய்தியதற்கு, அவர் தான் விரும்பிய நமது நடிப்பு தெய்வத்திடம் சென்று சேர பிரார்த்திப்போமாக.

Gopal.s
6th August 2016, 06:26 PM
வியட்நாம் வீடு - 1970

எனது சிறு வயது முழுக்க நெய்வேலியில் கழிந்தது எனது எஸ்.எஸ்.எல்.சி வரை. இரு வேறு பட்ட நம்பிக்கைகளில் உழன்று வந்தேன். ஒரு புறம் பெரியாரின் ஈர்ப்பு. மறுபுறம் மார்க்சிடம். வீட்டில் பூணல் போட மறுத்து விட்டேன்.( எனது அம்மா ,அப்பா இருவருமே சற்று முற்போக்கு) எனது பேச்சுக்கள் வன்னியர் பேச்சு வழக்கு போலவே இருக்கும்.(கல்யாணமான புதிதில் என் மனைவி ஆச்சர்ய பட்டு கேட்ட கேள்வி- நீங்க பேசறது பிராமண பாஷையாகவே இல்லையே?)கடவுளிடம் முரண் படாமலும்,நம்பிக்கை கொள்ளாமலும்(Agnostic ) உள்ளவன். அதனால் எனக்கு என் உறவினர்களால் ப்ராமின்களை பற்றியும்,நண்பர்கள்,சூழ்நிலை,தேர்ந்த படிக்கும் வழக்கம்,கொள்கைகளின் பால் மற்றையோரையும் நன்கு அறிந்ததால் , இரு துருவங்களையும் நன்கு அறிந்தவன். அப்போது இரண்டே இரண்டு வேறு பட்ட கருத்துக்கள்தான் உலவி வந்தன. பிராமணர்கள் வேற்று கிரக வாசிகள் போலவும்,எல்லோரையும் அடிமை கொண்டு,பிரித்தாண்டு, சூழ்ச்சியிலேயே வாழும் கொடியவர் என்ற திராவிட ஹிட்லர் டைப் பிரச்சாரங்கள் ஒரு புறம். நம்பளாவெல்லாம் மூளையுள்ளவா. என்ன இருந்தாலும் ஒஸ்திதான் என்ற அசட்டு நம்பிக்கை மறுபுறம். பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில்.

அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும். சராசரியான தமிழர்களை (வீட்டில் தமிழ் தவிர எதுவும் பேச மாட்டார்கள். மாறாக சில திராவிட தமிழ் ரத்தங்கள் வீட்டில் தெலுங்க,கன்னட பேச்சுக்களை ரசிக்கலாம்) இந்த மாதிரி ஒதுக்க என்ன காரணம் என்று யோசித்தால் மூளை வரளும்.

இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது. ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.

வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?

இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.

இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)

நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)

மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.

சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.

இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)

ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.

இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.

இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.

காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?

Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?

சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு தனித்து வேறுபட்ட கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.

வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )

அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.

இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise .

இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).

மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.

கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர்.

இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.

வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)

Gopal.s
6th August 2016, 06:29 PM
ஞான ஒளி-1972

நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.

பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.

ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.

ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.

Typical Behaviours of an orphan-

1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.


மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.

இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.

நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.

அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.

நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.

பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.

இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....

மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.

இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.

Gopal.s
6th August 2016, 06:37 PM
கெளரவம்-1973

கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .

ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?

நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?

தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?

தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?

திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?

ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.

இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.

ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.

ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.

மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.

மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.

நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.

குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.

இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.

கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.

An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!

நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.

ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.

ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.

கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.

இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.

ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....

கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?

ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.

நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.

sivaa
7th August 2016, 03:38 AM
சாவித்திரி (19)



http://img.dinamalar.com/data/uploads/E_1470375411.jpeg

பதிவு செய்த நாள்

07 ஆக
2016
00:00


ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

ஜெமினி, சாவித்திரியின் வீட்டை விட்டு வெளியேறியதும், சாவித்திரிக்கு அடக்க முடியாத அழுகை வந்தது. 'என் ஜீவனை நானே காயப்படுத்தி விட்டேனே...' என்று அவரது மனது அழுது துடித்தது; ஆனால், ஜெமினியிடம் தூது செல்ல யாருமில்லை.
'சாவித்திரி வீட்டிலிருந்து ஜெமினி விரட்டப்பட்டார்...' என்ற செய்தி, பத்திரிகைகளுக்கு சென்று சேரும்படி, கச்சிதமாக செய்து முடித்தனர், சிலர்.

சில வார இதழ்கள், புலனாய்வு செய்தது போன்று, பிரச்னையை திருப்பி, 'பிராப்தம் பட விவகாரத்தினால் ஜெமினியை விட்டு பிரிந்தார் சாவித்திரி...' என்ற பொய் மூட்டையை அவிழ்த்து விட்டன.

சில நாளிதழ்கள்,

'தெய்வீகக் காதலர்கள் பிரிந்தனர்...' என, கண்ணியத்தோடு வெளியிட்டன.

எவ்வளவு இக்கட்டுகள் வந்தாலும், தன் முயற்சியை எப்போதும் கைவிட்டதில்லை சாவித்திரி; அதை, பிராப்தம் பட விவகாரத்திலும் கடைப்பிடித்தார்.


பிராப்தம் திரைப்படம் பல இக்கட்டுகளைத் தாண்டி, ஏப்., 14, 1971ல் வெளியானது.

இதேநாளில், தெலுங்கில், சாவித்திரி இயக்கி தயாரித்த, விந்த சம்சாரம் படம், ஆந்திரா எங்கும் வெளியானது.


சென்னையில் மிட்லண்ட், சரஸ்வதி மற்றும் பிரபாத் ஆகிய திரையரங்குகளில் வெளியாகி, ஏழு வாரங்களைத் தாண்டி ஓடிய, பிராப்தம் படம், தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும், 25 நாட்களை தாண்டி, ஓடியது.
மதுரை சிந்தாமணி திரையரங்கில், அதிகபட்சமாக, 67 நாட்களை தாண்டியது.

இப்படம் தயாரிக்க, செலவழிக்கப்பட்ட தொகை, 6 லட்சத்து,
40 ஆயிரம் ரூபாய்;

படம் வெளியாகி, வசூலித்த தொகை, 15 லட்சம் ரூபாயை தாண்டியது.


சாவித்திரி, தன் நிர்வாக கணக்கு வழக்குகளை, நம்பிக்கையானவர்கள் கைகளில் கொடுத்து இருந்தால், பிராப்தம் படம் மேலும் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியிருக்கும்.


சாவித்திரியை திட்டமிட்டு ஏமாற்றி, வசூல் கணக்கை பொய்யாகக் காட்டிய கறுப்பு ஆடு ஒருவரால், பிராப்தம் படம், நஷ்ட கணக்கை காட்டியது.



பிராப்தம் படம், சாவித்திரியின் குடும்ப வாழ்க்கையில், பிரிவினையை ஏற்படுத்தியது. 'இப்படம் தயாரிப்பில் இருந்த போது தான், ஜெமினியை பிரிந்தார்...' என்று, இன்று வரை பத்திரிகைகள் சொல்லி வருகின்றன. ஆனால், குழந்தை உள்ளம் படத் தயாரிப்பு காலகட்டத்திலேயே, ஜெமினியோடு அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது.




குழந்தை உள்ளம் படத்தில், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஒல்லியான ஒருவர், பிரபல 'மேக் - அப்' மேனின் தம்பி; கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தான், குழந்தை உள்ளம் படம் தயாரிப்பில் இருந்த காலகட்டத்தில், சாவித்திரியின் மன ஓட்டங்களை, தவறான பாதைக்கு திருப்பி விட்டவர்.
குழந்தை உள்ளம் பட விளம்பரத்தில் கூட, சாவித்திரியின் பெயருக்கு அடுத்தபடியாக, இந்த ஒளிப்பதிவாளருக்குத் தான் கொடுக்கப்பட்டது. ஜெமினிக்கு இது பிடிக்கவில்லை; இங்கு தான், முதல் பிணக்கு உருவானது. அதன்பின், அந்த ஒளிப்பதிவாளரின் கை, சாவித்திரியின் வீட்டு விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. பிராப்தம் படம் தயாரிப்பில் இருந்த போது, படக் குழுவில் உள்ளவர்களுக்கு பணம் வழங்குவது என, எல்லாமே அவர் தான்.



சாவித்திரியின் வங்கிக் கணக்குகளை எல்லாம் பராமரிக்கும் அளவிற்கு உயர்ந்த அந்நபர், சாவித்திரியின் குடும்ப உறவுகளை, அவரிடமிருந்து பிரிக்கத் துவங்கினார்.
வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் சாவித்திரியை, நம்ப வைத்து கழுத்தறுக்கும் வேலையை செவ்வனே செய்தார், அந்த ஒளிப்பதிவாளர். பிராப்தம் படம் வெளியான காலகட்டத்தில், சாவித்திரி நடித்த மலையாளப் படம் ஒன்று வெளியானது.


சாவித்திரியை ஏமாற்றி, அந்த ஒளிப்பதிவாளர் நடிக்க வைத்த படம் அது! இப்படத்தில், தம்புராட்டியாக நடித்திருந்த சாவித்திரியை, சில காட்சிகளில், அவருக்கே தெரியாமல், அவரை வேறு கோணத்தில் படம் எடுத்திருந்தனர்.



இப்படம் வெளியான போது எழுந்த விமர்சனத்தை கேள்விப்பட்டு, சாவித்திரியின் மருமகன் கோவிந்தராவ், ஒளிப்பதிவாளரிடம் கடுமையாகச் சண்டை போட்டதாக செய்திகள் உண்டு.
சாவித்திரியின் வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களின் சாவியை தன் வசம் வைத்திருந்த அந்த ஒளிப்பதிவாளர், சாவித்திரியின் நகைகளோடு கேரளாவிற்கு பறந்து விட்டார்.
நகைகள் எல்லாம் வங்கிப் பெட்டகத்தில் இருக்கிறது என்று நம்பிய சாவித்திரிக்கு, நம்பிக்கை மட்டும் தான் பதிலாக இருந்தது; பொருட்கள் எல்லாம் இடம் மாறியிருந்தன!
முற்பிறவியில், காதல் நிறைவேறாமல் போகும் இளைஞன், மறுபிறவியில், கோதாவரி ஆற்றில், படகோட்டி பிழைக்கும் ஏழையாகவும், அவன் காதலியாக இருந்தவள், ஜமீன்தார் வீட்டுப் பெண்ணாகவும் பிறக்கிறாள். அந்த இளைஞனின் படகில் அவள் பயணம் செய்வது வழக்கம். ஆரம்பத்தில், படகோட்டியை, 'வாடா... போடா...' என்று அழைத்தாலும், நாட்கள் செல்லச் செல்ல, அவனிடம், தன் மனதை பறி கொடுக்கிறாள், கதாநாயகி. இந்த முற்பிறவி காதல் கதை தான்,

பிராப்தம் படமாக வெளியானது.



சாவித்திரி, போராடி, பெறவிருந்த வெற்றி, உறவாடி வந்த ஒரு சிலரால் கிடைக்காமல் போனது.


'என்ன நேர்ந்தாலும் சரி, மனதில் எடுத்த முடிவை நிறைவேற்றியே தீருவேன்...' என, பிடிவாதமாக வாழ்பவர்கள், பல சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த விதிக்கு, சாவித்திரி மட்டும் எப்படி விலக்காக முடியும்!


பிராப்தம் பட விஷயங்களில் ஏற்பட்ட பண இழப்பிற்கு, ஏமாற்றியவர்கள் முழு காரணம்


என்றாலும், படம் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதமும், சாவித்திரி நடிப்பில் இயல்புத் தன்மை இல்லாதததும் மற்றும் படத்திற்காக வாங்கிய வட்டிக் கடனும் உப காரணங்களாக இருந்தன.
'எல்லா நெருக்கடிகளும், தனக்கு எதிராக இருக்கிறது என்பதை அறிந்தும், ஜெமினி, தன்னை கண்டு கொள்ளவில்லையே...' என்ற வருத்தம் தான், சாவித்திரிக்கு அதிகமாக இருந்தது.
ஆரூர்தாசிடம் ஒருமுறை பேசும் போது, இதைக் குறிப்பிட்டு அழுதார், சாவித்திரி.
தோல்விகள், தன் வருங்காலத்தை பாதித்து விடுமோ என்று பயந்த சாவித்திரி, தன் மகள் விஜய சாமுண்டீஸ்வரிக்கு, 16 வயதிலேயே திருமணத்தை நடத்தி வைத்தார்.


(தினமலர் வாரமலர்)

ஆர் எஸ் கே தாங்கள் முன்னர் பிராப்தம் பட விவகாரம்பற்றி எழுதியது உண்மை என்பது
இதன்மூலம் நிருபணமாகியுள்ளது .

RAGHAVENDRA
7th August 2016, 09:24 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13872727_1170006316383372_2363118277357561755_n.jp g?oh=bc9ead58ed6fa566658dc60399b55662&oe=585D5899

Gopal.s
9th August 2016, 09:08 AM
1950களில் நடிகர்திலகத்தின் பாடும் குரலாக இருந்தவர்களில் குறிப்பிட தக்கவர்கள் சிதம்பரம் ஜெயராமன்,சீர்காழி கோவிந்தராஜன் ,ஏ.எம்.ராஜா, டி.எம்.சௌந்தரராஜன். அது தவிர, கண்டசாலா,கிருஷ்ணன், சுந்தரம்,பீ.பீ.ஸ்ரீனிவாஸ் ,சந்திரபாபு,டி.ஏ. மோதி போன்ற பலரும் பாடி வந்தனர். நடிகர்திலகமும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் எல்லோரையும் ஆதரித்து வந்தார்.

ஆனால் 59இல் இருந்து நிலைமை தலை கீழ். டி.எம்.எஸ் குரல் நடிகர்திலகத்தின் அங்கீகரிக்க பட்ட குரலாக மாறி ,வெற்றி கூட்டணி ஆகி விட்ட படியால் ,நடிகர்திலகத்தால் எந்த சோதனைக்கும் இடம் கொடுக்க முடியாமல் போனது.

இரண்டு சுவாரஸ்யங்கள்.

பாலும் பழமும் படத்துக்கு பாடல் பதிவு முடிந்து படப்பிடிப்பு தொடங்க வேண்டிய தருணத்தில் டி.எம்.எஸ் க்கு கடும் ஜலதோஷம். பட குழுவினர் வேறு பாடகரை வைத்து முடிக்கலாம் என்று முடிவெடுத்த போது ,நடிகர்திலகம் சொன்னது. ஜலதோஷம் என்றாலும் டி.எம்.எஸ் பாடட்டும். டி.எம்.எஸ் பாடி கொடுத்தார் மென்மையான nasal tone இல்.(என்னை யாரென்று,நான் பேச ,பாலும் பழமும்) இதை கேட்ட சிவாஜி துள்ளி குதித்து தன் பேசும் குரலை முடிவு செய்து கொண்டார். விஞ்ஞானி மருத்துவருக்கு தூக்கி வாரிய இள நரை முடியுடன் ,மென்மையான மூக்கின் குரலே கதாபாத்திரத்துக்கு அமெரிக்கையான மெருகு அளிக்க முடியும் என்று. குறையே ,கூடுதல் நிறையானது நடிகர்திலகத்தின் மேதைமையால்.

குங்குமம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ண பறவை பாடல் ,ஹிந்துஸ்தானி பாணியும் ,சுர பிர்காக்களும் நிறைந்த தனித்துவ பாடல். சீர்காழியின் பிர்கா சாரீரமே இதற்கு உகந்தது என்று முடிவு செய்து பாடல் பதிவு செய்தாயிற்று. ஆனால் நடிகர்திலகம் சொன்னது. அபசுரம் பாடினாலும் சௌந்தர்ராஜனே பாடட்டும்.(அந்த பாட்டில் டி.எம்.எஸ் திணறி தண்ணீர் குடித்திருப்பார். ஜானகியும் சுவற்றில் ஆணி போல கீறுவார்) அற்புதமான composition . காலத்தை வென்று நின்றாலும் பாடகர்களின் தேர்வு கேள்விக்குரியதே.கோபமாக இருந்த சீர்காழியை ,அவர் இசை நிகழ்ச்சியொன்றில் நடனமாடி நடிகர்திலகம் குஷி படுத்தி வழிக்கு கொண்டு வந்து விட்டார் என்பது வேறு விஷயம்.

Gopal.s
9th August 2016, 11:05 AM
மறைந்த முன்னாள் கவர்ச்சி புயல் ஜோதிலட்சுமி அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அநுதாபங்கள் .

எங்கள் ஆஸ்தான கவர்ச்சி நடிகைகளான சகுந்தலா,விஜயலலிதாவை விட எங்களுக்கு பிரியமானவர்கள் ஜோதிலட்சுமி, ஆலம் ,விஜயஸ்ரீ,ஜெயக்குமாரி,ஜெயமாலினி ஆகியோரே. இங்கு ஜோதிலக்ஷ்மியை கவுரவிக்கும் வகையில் ஒரு எதிரொலி பாடல்.மற்றோருக்கும் ஒவ்வொரு பாடல் என் பிடித்தம்.

https://www.youtube.com/watch?v=N-YIQUgc0HQ

ஆலம் ,காஞ்சனா.

https://www.youtube.com/watch?v=osl4PNU_-lg

விஜயஸ்ரீ

https://www.youtube.com/watch?v=H8VkUxkMu8c

ஆலம்

https://www.youtube.com/watch?v=HKmHCXrEzlQ

ஜெய்குமாரி

https://www.youtube.com/watch?v=gyd4KUUjE70

ஜெயமாலினி

https://www.youtube.com/watch?v=gUqH2UkZNfc

RAGHAVENDRA
9th August 2016, 12:59 PM
மறைந்த நடிகை ஜோதிலட்சுமிக்கு நமது இதயபூர்வமான அஞ்சலி. அவர் நாட்டியத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் தேர்ந்தவர். அவரது மறைவினால் தமிழ்த்திரையுலகத்தின் நடனக் கலைக்கு நிச்சயமாக பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான ஊடகங்கள் கூறுவது போல அவர் 1963ல் அறிமுகமாகவில்லை. அதற்கு முன்பாகவே மக்கள் தலைவரின் மாபெரும் வெற்றிப்படமான காத்தவராயனில் 1958ம் ஆண்டிலேயே திரையுலகில் தடம் பதித்து விட்டார்.

காத்தவராயன் திரைப்படத்தில் அவருடைய பெயர் பேபி ஜோதி என இடம் பெற்றிருக்கும்.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/12472489_1171623222888348_1062380427150385389_n.jp g?oh=441209111a80c832a90b787819efbfa5&oe=58232EF4

காத்தவராயன் திரைப்படத்தில் ஜோதிலட்சுமி இளம் வயது சாவித்திரியாக நடித்திருப்பார். இதோ அந்தத் தோற்றம்.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13912591_1171623219555015_7973097325291670460_n.jp g?oh=3fcda49a3c9828a3acc8daa1b9235d2b&oe=58581695

Gopal.s
10th August 2016, 10:23 AM
பஞ்சு அருணாச்சலம் , மறைவு நமக்கு அதிர்ச்சி தரும் ஒன்று. இளையராஜா என்ற பொக்கிஷம் நமக்கு கிடைக்க காரணகர்த்தா., 1976இல் அன்னக்கிளி என்ற திருப்பு முனை படம் (16 வயதினிலே படத்திற்கு முன்பே வந்த trend setter )கிராமிய மணத்துடன், வெளிப்புற படப்பிடிப்பு எல்லாவற்றிலும் புதுமை விருந்தானது . மருத்துவச்சி என்ற செல்வராஜ் (முதல் மரியாதை) கதையே அன்னக்கிளி ஆனது.

கண்ணதாசனுக்கு உறவினர். பல்முனை வித்தகர். ரஜினி,கமல் இவர்களை வியாபார ரீதியாக வளர படிக்கல்லாக இருந்தவர்.

நடிகர்திலகத்தின் ரத்த திலகம் தயாரிப்பாளராக இவர் பெயர் இடம் பெற்ற நினைவு. அவன்தான் மனிதன்,கவரிமான் வெற்றிக்கு ஒருவன்,வாழ்க்கை என்ற படங்களுக்கு வசனகர்த்தா.

இவருடைய படங்களில் என்னை பெரிதும் கவர்ந்த படம் "அவர் எனக்கே சொந்தம்". இதில் வரும் ஒரு வீடு இரு உள்ளம் எனக்கு பிடித்த பாடலும் கூட.

பல கதைகளை உரு தெரியாமல் சிதைத்து திரைக்கதை அமைத்தாலும் (மகா கொடுமை காயத்ரி,இது எப்படி இருக்கு ,பிரியா,) வெற்றி பெற வைத்தவர்.

https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ

https://www.youtube.com/watch?v=kDLjdJ2we5c

Gopal.s
11th August 2016, 11:37 AM
தங்கை.

நடிகர்திலகத்தின் திருப்புமுனை படம். அவரை C centre superstar ஆக்கிய படம்.

புதிய பறவை போல Duets கிடையாது. எல்லாமே solo பாடல்கள்தான்.

ஆனால் பாடல்களுக்கான leads பிரமாதமாக இருக்கும்.(Hats off டு திரிலோக் team )

கேட்டவரெல்லாம்- பாட சொல்லி எல்லோரையும் கேட்ட பிறகு ,ஒன்றிலிருந்து பத்து idea சொல்லி அவர் NT பேரிலே வந்து.....

https://www.youtube.com/watch?v=qiHOx9uIhlQ

இனியது- காரில் ரேடியோ திருப்ப அது உப்பு ,புளி ,மிளகாய் விலைகளை பட்டியலிட ,சூழ்நிலை இறுக்கத்தை மறந்து சிரிப்பை கட்டுபடுத்தி ,மேஜர் உடன் உரையாடல் தொடர்வார் பாருங்கள் ,ஏன் இவரை தினமும் துதிக்கிறோம் என்று புரியும்.கட்டாயமாக
காரிலிருந்து இறக்கி விட பட்டதும் இந்த பாடல்....


https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA

சுகம் சுகம்- கே.ஆர்.வீ , NT இடம் அவர் நிலையை கேட்க,வாக்குவாதம் முற்றி அவர் அறைந்து விட்டு நடக்க ஆரம்பிக்க இந்த பாடல்.(சிவாஜி-கே.ஆர்.வீ pair நன்றாக இருக்கும்)

https://www.youtube.com/watch?v=LR3Rl5P1Zro

நினைத்தேன் உன்னை- வில்லன்களின் பிளான். காஞ்சனாவின் சிவாஜி காதலினால் அவரை தப்பிக்க வைக்க என்று இறுக்கமான சூழல். சிவாஜி படு rugged handsome ஆக தெரிவார்.

வீடியோ காணோம்.

sivaa
12th August 2016, 10:15 AM
http://oi67.tinypic.com/adp6ch.jpg

sivaa
12th August 2016, 10:16 AM
http://oi64.tinypic.com/ztpah.jpg

sivaa
12th August 2016, 10:17 AM
http://oi64.tinypic.com/2ikegbs.jpg

sivaa
12th August 2016, 10:39 AM
உலக திரைப்பட வரலாற்றில் எந்தமொழி நடிகர்களது
திரைப்படமும் நிகழ்த்தாத நிகழ்த்தமுடியாத
இமாலய சாதனை

10-06-1977ல் யாழநகர் ஶ்ரீதர் திரை அரங்கில்
வெளிவந்த சாதனைச்சக்கரவர்த்தி நடிகர் திலகம் அவர்களின் வைரநெஞ்சம்

முதல்நாள் முதல்காட்சி நள்ளிரவு 12 மணி 05 நிமிடங்களுக்கு ஆரம்பித்தது

முதல்நாளில் மட்டும் தனி ஒரு அரங்கில் 8 காட்சிகள் நடைபெற்று சாதனை நிலைநாட்டியது

இன்றுவரை இச்சாதனை நிலைத்துநிற்கிறது
எந்த நடிகரது படங்ளும் இச்சாதனையை நெருங்கமுடியவில்லை

http://oi63.tinypic.com/4ugowh.jpghttp://oi63.tinypic.com/2mg4air.jpg

sivaa
12th August 2016, 10:41 AM
http://oi68.tinypic.com/dqkdmr.jpg (http://oi68.tinypic.com/dqkdmr.jpg)

sivaa
12th August 2016, 10:41 AM
http://oi65.tinypic.com/2aha5a8.jpg

sivaa
12th August 2016, 10:43 AM
http://oi66.tinypic.com/14lk9zd.jpg

sivaa
12th August 2016, 10:43 AM
http://oi64.tinypic.com/aeqhkm.jpg

sivaa
12th August 2016, 10:44 AM
http://oi63.tinypic.com/2emzr4g.jpg

sivaa
12th August 2016, 10:44 AM
http://oi66.tinypic.com/11so9hv.jpg

sivaa
12th August 2016, 10:45 AM
http://oi63.tinypic.com/20pwpci.jpg

sivaa
13th August 2016, 04:31 AM
http://oi64.tinypic.com/2ikegbs.jpg

sivaa
13th August 2016, 04:33 AM
http://oi68.tinypic.com/mbsnk8.jpg

(நன்றி www,sivajiganesan.in)

sivaa
13th August 2016, 04:34 AM
http://oi64.tinypic.com/k2lmo9.jpg




(நன்றி www,sivajiganesan.in)

sivaa
13th August 2016, 04:35 AM
http://oi63.tinypic.com/2u4oaq0.jpg



(நன்றி www,sivajiganesan.in)

sivaa
13th August 2016, 04:36 AM
http://oi66.tinypic.com/2dkgtmr.jpg


(நன்றி www,sivajiganesan.in)

sivaa
13th August 2016, 04:37 AM
http://oi63.tinypic.com/bhep38.jpg

(நன்றி www,sivajiganesan.in)

sivaa
13th August 2016, 04:37 AM
http://oi63.tinypic.com/rkaalv.jpg
(நன்றி www,sivajiganesan.in)

sivaa
13th August 2016, 04:38 AM
http://oi64.tinypic.com/w9cm6g.jpg


(நன்றி www,sivajiganesan.in)

sivaa
13th August 2016, 04:39 AM
http://oi67.tinypic.com/xkqir7.jpg


(நன்றி www,sivajiganesan.in)

sivaa
13th August 2016, 04:39 AM
http://oi64.tinypic.com/rh3kpj.jpg


(நன்றி www,sivajiganesan.in)

sivaa
14th August 2016, 12:21 AM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, 12.08.16 அன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியான உலகத்திலே ஒருவன் என்று உயர்ந்து நிற்கும் மக்கள்தலைவரின் உயர்ந்த மனிதன் வெற்றக்காவியம் ரசிகர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. எத்தனை யுகங்கள் ஆனாலும் நமது நடிகர்திலகத்தின் படங்களுக்கு என்றும் மக்கள் ஆதரவு இருக்கும் என்பது கலையுலகம் கண்ட உண்மை. என்று கலையுலக ராஜா நமது நடிகர்திலகம் தான் என்ப...தை நிரூபித்த மக்களுக்கு நன்றி நன்றி.
அன்புள்ள இதயங்களே, 14.08.16 ஞாயிறு மாலை ரசிகர்கள் அனைவரும் கூடும் சிறப்புக் காட்சி நடைபெறுகிறது. மதுரை மற்றும் மதுரைக்கு அருகில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் நாளை மாலை சென்ட்ரல் திரையரங்கில் கூடிடுவோம் உயர்ந்த மனிதனைக் காண...
எந்த வேலை இருந்தாலும் இரண்டு மணி நேரம் ஒதுக்கி நமது ரசிகர் அனைவரும் திரண்டு அரங்கு நிறையச் செய்வோம்.
என்றும் மக்கள்தலைவர் புகழ் பரப்பும் பணியில்
கா.சுந்தராஜன்.
http://oi68.tinypic.com/xp6jdj.jpg

(முகநூலில் இருந்து)

sivaa
14th August 2016, 12:22 AM
http://oi63.tinypic.com/rcip3p.jpg

sivaa
14th August 2016, 12:22 AM
http://oi68.tinypic.com/2ivzoyg.jpg

Russellxor
14th August 2016, 01:36 PM
http://uploads.tapatalk-cdn.com/20160814/d882f3e4ef03305ce80a54aeb79a12dc.jpg

RAGHAVENDRA
14th August 2016, 02:35 PM
http://galleries.celebs.movies.2.pluz.in/albums/abirami/uploads/Kollywood/2012/Oct/01/Ammavin_Kaippesi_Movie_Audio_Launch_/Ammavin_Kaippesi_Movie_Audio_Launch_a80c1432c4b686 6beb9f0407b1f8974c.jpg

பட்டுக்கோட்டையாரைப் போல சிறிய வயதிலேயே மிகப் பெரிய அளவில் புகழ் பெற்று அதே போல சிறிய வயதிலேயே தன் மறைவின் மூலம் மிகப் பெரிய இழப்பை தமிழ்த்திரையுலகிற்கு உண்டாக்கி விட்டார் திரு நா. முத்துக்குமார். அவருடைய ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுவோம்.

Harrietlgy
14th August 2016, 10:33 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 137 – சுதாங்கன்

http://www.dinamalarnellai.com/site/news_image/22/28329Tamil_News_Nellai.jpg


இத்தனை வாரம் இந்த தொடரை படித்து வந்த சிவாஜியின் தீவிர ரசிகர்களுக்கு ஒரு கோபம் இருக்கலாம்! சிவாஜியை பற்றி இத்தனை சிலாகிக்கும் இவன், அவரது `பா’ வரிசை படங்களைப் பற்றிச் சொல்லவில்லையே என்கிற ஓர் அங்கலாய்ப்பு இருந்திருக்கலாம்!

ஆனால், அந்த படங்களைப் பற்றி தனியாக சொல்ல வேண்டு மென்பதற்காகவே அதை வருடவாரியாக வரிசைப்படுத்தவில்லை. சிவாஜியின் சாதனைகளில் முக்கியமானது அவரது `பா’ வரிசைப் படங்கள்தான்! தமிழ் சினிமா சரித்திரத்தில் அவரது `பா’ வரிசை படங்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு!

கதை, கதாபாத்திரங்கள், நடிகர்கள், பாடல்கள், அந்த பாடல்களிலிருந்த கற்பனை வளம், அருமையான இசை என்று எல்லாமே சேர்ந்து தமிழ் சினிமா சரித்திர மகுடத்தில் அந்த படங்கள் இன்றும் வைரக்கற்களாக ஜொலிக்கின்ற*ன! `பாத காணிக்கை படத்தை தவிர, பல பா வரிசை படங்கள் சிவாஜி நடித்தது! `பாதகாணிக்கை’ மட்டும்தான் கே. சங்கர் இயக்கத்தில் வந்த படம். மற்ற எல்லாப் படங்களுமே பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்தவை!.

அவர் சிவாஜியை வைத்து இயக்கிய கடைசி ‘பா’ வரிசைப் படம் ‘பாலாடை!’ ஒரு முறை பீம்சிங்கின் புதல்வர் எடிட்டர் லெனினோடு பேசிக்கொண்டிருந்த போது சொன்னார், ` இந்த ‘பா’ என்பது சென்ட்*டிமெண்ட்*டா*க வைத்தாரா என்பது தெரியாது.

ஆனால் அந்த தலைப்புக்கள் எல்லாமே படத்தின் கதையோடு பொருந்தி இருந்தன. உதாரணமாக, `பாசமலர்’ படத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். அந்த தலைப்பு படத்தின் கதையோடு பொருந்துகிறதா இல்லையா? இன்னும் சொல்லப்போனால், அந்த தலைப்பை கொடுத்ததே கண்ணதாசன்தான்! அதே போல் `பாகப்பிரிவினை.’ அதுவும் கதையோடு பொருந்தியதா இல்லையா?’ என்றார்.

சிவாஜிக்கு ‘பா’ வரிசை படங்கள் எல்லாமே நன்றாக ஓடின! இந்தப் படங்களில் சிவாஜி, இயக்குநர் பீம்சிங், கவிஞர் கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவானவை இந்த படங்கள்.

மேலும், அந்தக் காலத்திலிருந்த மிகச்சிறந்த நடிக, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே நல்ல திரைப்படங்களை தமிழுக்கு தந்தார்கள். அப்போதெல்லாம் சினிமாவில் ஒரு டீம் ஒர்க் மேலோங்கியிருக்*கும் எந்த கதாபாத்திரமும் சோடை போகாது! உதாரணமாக, `பாகப்பிரிவினை’ படம்! இதில் டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா, எம்.ஆர். ராதா, எம்.என் நம்பியார், எம்.வி. ராஜம்மா, சரோஜாதேவி எல்லோரும் சிவாஜியுடன் நடித்திருப்பார்கள்.

இந்த படத்தில் சிவாஜிக்கு கை, கால் ஊனமான ஒரு பட்டிக்காட்டான் வேடம். இந்த படத்தில் எந்த இடத்திலேயும் சிவாஜியின் அந்த ஊனமற்ற கையின் நிலை மாறாமலேயே இருக்கும்! இத்தனைக்கும் இந்த படத்தில் அவருக்கு நடனமாடவேண்டிய ஒரு கிராமியப் பாடல்.

`ஏரோடும் எங்கள் சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்’ பாட்டில் வலது கையில் வேப்பிலை கொத்தை வைத்துக்கொண்டு ஆடுவார். அந்த ஆட்டத்தின் போது கூட அந்த ஊனமுற்ற கை அதே நிலையில்தான் இருக்கும்.

இந்த படத்தில் பாசப்பிணைப்புள்ள அண்ணனாக டி.எஸ். பாலையாவும், அவரது தம்பியாக எஸ்.வி. சுப்பையாவும் நடித்திருப்பார்கள். குடும்பத்தை பிரிக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார் எம்.ஆர். ராதா!

இந்த படங்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்ததற்கு இன்னொரு காரணம் இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள்தான்! `பாகப்பிரிவினை’ படத்தில் எல்லா பாடல்களுமே சிறப்பாக இருந்தாலுமே அதில் முக்கியமாக இன்றும் மக்களால் விரும்பி கேட்கப்படும் பாடல் ஒன்று உண்டு!

ஊனமுற்ற கணவனுக்கு முதலிரவில் மனைவி ஆறுதல் சொல்வதைப் போல் அமைந்த பாடல் அது! அந்த பாடலை இன்று கேட்டாலும், கதைக்காக எழுதப்பட்ட பாடலா, அல்லது அந்த பாடலிலிருந்து படத்தின் கதை உருவானதா என்கிற அளவுக்கு அதன் வரிகள் அமைந்திருக்கும். அந்த பாடல் இதுதான்! கணவனுக்கோ கை ஊனம்! அவனை மனைவி ஊக்கப்படுத்த வேண்டும்! கண்ணதாசன் எழுதியிருப்பார்!

‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ!

உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?

சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே மாற்றம் காண்பதுண்டோ?

கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா?

கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா?

காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன்!

உயிர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் வாழ்வின் சுவை கூறுவேன்!’

இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருந்தாலும், வருங்கால தலைமுறைக்கு இந்த வரிகளின் ஆழம் புரிய வேண்டுமென்பதற்காக இந்த பாடலை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த பாடலில் வரிகளை கவனித்தால், அதில் கணவனை உற்சாகமூட்டும் வரிகளும் இருக்கும். அதே சமயம் தான் எப்படிப்பட்ட பெண் என்பதையும் அந்த மனைவி சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்திருந்த பாடல் இது! அதே போல் சிவாஜிக்கு வெற்றிகரமாக அமைந்த படம் என்பது `பாவமன்னிப்பு.’

இதில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஒற்றுமையை போற்றுவதாக படம் அமைந்திருக்கும். இந்த படங்கள் வெற்றி பெற்றதற்கு இன்னொரு முக்கிய காரணம், கதாபாத்திரங்களை தேர்வு செய்த முறை!

`பாசமலர்’ படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் ஜோடியாக நடித்தாலே ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனாலேயே அதற்கடுத்து வந்த படங்களில் அவர்கள் ஜோடியாகவே நடிக்கவில்லை. `பாவமன்னிப்பு’ படத்தில் சாவித்திரிக்கு ஜோடி ஜெமினி கணேசன். `பார்த்தால் பசி தீரும்’ படத்தில் சாவித்திரியும் ஜெமினியும் தான் காதலர்கள்.

`படித்தால் மட்டும் போதுமா’ படத்தில் சாவித்திரிக்கு ஜோடி பாலாஜி. மேலும் இந்த ‘பா’ வரிசை படங்களில் நடிக்கும் போது சிவாஜி தனக்கு என்ன கதாபாத்திரம் என்பதைத்தான் பார்த்தார். அதில் தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களாக இருந்தாலுமே அவர் நடிக்க தயங்கியதேயில்லை. `பார் மகளே பார்’ படத்தில் பாதி படத்திற்கு மேல் அவருக்கு முதிர்ந்த வேடம்தான். அதுவும் நடிகை விஜயகுமாரி, புஷ்பலதா ஆகியோரின் தந்தையாக நடித்திருப்பார்.

இந்த படங்கள் வெற்றியடைந்ததற்கு இன்னொரு காரணத்தையும் சிவாஜி சொல்லுவார். ` இந்த காலகட்டத்தில் இயக்குநர், கதாசிரியர், கவிஞர், இசையமைப்பாளர்கள், முக்கிய நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து கதையமைப்பு, கதாபாத்திரங்கள், பாட்டுக்கள் பற்றியெல்லாம் கலந்து பேசி முடிவு செய்வோம். அந்த படத்தைப் பற்றிய சிந்தனையாகவே இருப்போம்’ என்றார் சிவாஜி.

Harrietlgy
14th August 2016, 10:34 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 138 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_image/22/10814Tamil_News_Nellai.jpg

சிவாஜியின் மறக்க முடியாத `பா’ வரிசை படங்களில் முக்கியமான படம் `பாசமலர்’. இந்த படம் சிவாஜியின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் மனதிலும் நீங்காத இடம் பெற்றது. ஒவ்வொரு குடும்பத்திலும் அந்த படத்தின் தாக்கம் இருந்தது. அதுவும் அண்ணன், தங்கை இருக்கும் வீடுகளில் இந்த படத்தின் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்தது.

ஒவ்வொரு அண்ணனும் தன்னை சிவாஜியாகவும், ஒவ்வொரு தங்கையும் தன்னை சாவித்திரியாகவும் நினைக்கும் அளவிற்கு அந்த படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அன்பு, சகோதர பாசம், உறவு, கடமை போன்ற கருத்துக்களை ஒரு குடும்ப கதையாக்கி `பாசமலர்’ மூலமாக மக்களுக்குச் சொன்னார்கள்.

இந்த படத்தை ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் சிவாஜி, சாவித்திரி, ஜெமினி, தங்கவேலு, எம்.என். ராஜம் என எல்லோரும் ஒரு டீமாக வேலை பார்த்திருப்பார்கள்.

தமிழில் இந்த படம் பெற்ற வெற்றியை கொண்டு இந்த படத்தை இந்தியிலும் சிவாஜி பிலிம்ஸ் எடுத்தது.சிவாஜியின் தம்பி சண்முகம் இந்த படத்தை தயாரித்திருந்தார். சிவாஜியின் தம்பிதான் சிவாஜி நாடக மன்றத்தையும் துவக்கினார். பிறகு அவரே சிவாஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு சினிமா கம்பெனியையும் ஆரம்பித்தார்.

‘பாசமலர்’ படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். ஒரு சமூக படத்தின் வசனத்தை ‘கட்டபொம்மன்’ ‘திருவிளையாடல்’ வசனத்திற்கு பிறகு கோயில் விழாக்களில் ஒலிபரப்பு செய்தார்கள்.

அப்படியென்ன அந்த வசனத்தின் சிறப்பு? சிவாஜியின் தங்கை சாவித்திரியை ஜெமினி காதலிப்பார். ஆரம்பத்தில் சிவாஜிக்கு இந்த காதலில் விருப்பமில்லை. இந்த காதல் தெரிந்ததும் சிவாஜிக்கும், ஜெமினிக்குமிடையே கைகலப்பே நடக்கும். அதை தொடர்ந்து பெரிய முதலாளியான சிவாஜி, தன் தொழிற்சாலையில் வேலை பார்த்த சிலரை வேலை நீக்கம் செய்வார்!!

அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஜெமினி, சிவாஜியிடம் போய் நியாயம் கேட்பார். இந்த காட்சியின் வசனங்களில் அனல் பறக்கும். இதில் சிவாஜியும் ஜெமினியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்.

இந்த படத்தில் சிவாஜியின் பெயர் ராஜு.

சிவாஜியின் அறைக்குள் நுழைவார் ஜெமினி.

தன்னுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களையும் அழைத்துப் போவார் ஜெமினி.

ஜெமினியின் பெயர் ஆனந்தன்!

ராஜு: என்ன?

ஆனந்தன்: இவர்களை வேலையிலிருந்து நிறுத்திவிட்டாயாமே ?

ராஜு : ம்.

ஆன: எதற்காக?

ராஜு: அதை கேட்க நீ யார்?

ஆன: நான் ஒரு தொழிலாளி. நாங்களெல்லாம் ஒரே சமுதாயம். இதில் ஒருவன் பாதிக்கப்பட்டால், அதைப் பற்றிக் கேட்க மற்றவர்களுக்கு உரிமை உண்டு. அந்த உரிமையின் பெயரால் கேட்கிறேன். இவர்கள் நிறுத்தப்பட்டதற்கு நீ சரியான காரணம் சொல்ல வேண்டும்.

ராஜு: அவசியம் சொல்லத்தான் வேண்டுமோ?

ஆன: ஆமாம்! எதற்கும் காரணம் சொல்ல வேண்டிய காலம் இது!

ராஜு: அதிகம் வேலையில்லாத காரணத்தால், ஆள் குறைப்புச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆன: அந்த அவசியத்திற்கு குறிப்பிட்ட இவர்களை மட்டும்தான் பலி கொடுக்க வேண்டுமா?

ராஜு! இதில் எந்த குறிப்புமில்லை. கணக்குப்படி வேலை செய்யாமல் கவுரவ சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்கள்தான் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்..அதுவும் தற்காலிகமாக.

ஆன: எனக்காகச் சொல்லும் நொண்டி சாக்கு இது! இதை நான் நம்புவதற்கில்லை.

ராஜு: ஐ டோண்ட் கேர்!

ஆன: ம். எனக்குத் தெரியும் இது பிறந்த நாள் நிகழ்ச்சியின் பிரதிபலிப்பு. சொந்த விரோதத்தை வைத்துக்கொண்டு எனக்கு நண்பர்களாயிருக்கிற நலிந்தோரையும், மெலிந்தோரையும் உன் காலடியில் போட்டு நசுக்கப் பார்க்கிறாய். முறைப்படி உன் பலத்தை காட்ட வேண்டியது என்னிடமே தவிர, முதுகெலும்பில்லாத பேசும் பிரேதங்கள் மீதல்ல.

ராஜு: ம். உன் சொந்த பழியைத் தீர்த்துக் கொள்வதற்காக, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு என் மீது படையெடுத்து வந்திருக்கிறான். உங்களுக்காகப் பரிந்து பேச வந்திருக்கிறான் என்று நினைக்காதீர்கள்.

ஆன: இல்லை, இவர்களுக்காகத்தான் பரிந்து பேச வந்திருக்கிறேன். அன்றொரு நாள் உன் தங்கையைப் பார்க்கச் சென்றதற்காக நீ வேலையிலிருந்து விலக்கப்பட்ட போது இதே இடத்தில் உனக்காகவும் நான் பரிந்து பேசியிருக்கிறேன் என்பதை மறந்து விடாதே.

ராஜு: அதெல்லாம் பழங்கதை.

ஆன: இடைக்காலத்தில் கிடைத்த இந்த நாற்காலிக்கு மதிப்புக் கொடுப்பதற்காக இவர்களின் நட்பை இழந்துவிடாதே.

ராஜு: வஞ்சகர்களையும் நண்பர்களாகக் கருதி என் குடும்ப கவுரவத்தை இழப்பதை விட உன் கூட்டத்தை இழப்பது மேல்.

ஆன: சொந்த விஷயத்திற்குப் போகாதே. நான் வந்தது நம்மைப் பற்றி பேசுவதற்கல்ல. நாளெல்லாம் பாடுபட்டு நீ இந்த நிலையில் இருப்பதற்கு காரணமான இவர்களைப் பற்றித்தான் பேச வந்திருக்கிறேன்.

ராஜு: உன்னைப் போன்ற சுயநலவாதிகளின் பேச்சைக் கேட்டு பாவம் ஒன்றும் அறியாத இந்த தொழிலாளர்கள் தங்களுடைய இன்பத்தையெல்லாம் இழப்பதைக் கண்டு உண்மையிலேயே நான் அனுதாபப்படுகிறேன்.

ஆன: யார் சுயநலவாதி? ஒருவனுடைய சுகத்திற்காக பலர் பாடுபட வேண்டுமென்கிற ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட நீ சுயநலவாதியா அல்லது பலருடைய நன்மைக்காக ஒருவன் வாழ வேண்டுமென்கிற பொது நலம் பித்தனான நான் சுயநலவாதியா?

ராஜு: ம்.. பொதுநலம். பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா? புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தை குளிர வைக்கவா? காட்டுக்குள்ளே குழி பறிப்பது யானை ஓய்வு பெறுவதற்காகவா? கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா? இல்லை, இதெல்லாம் பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டுமென்ற பேய்வெறி. அந்த வெறிதான் உனக்கு.இதற்கு பெயர் பொதுநலம்.

ஆன: புரியாமல் பேசாதே. மெழுகுவர்த்தி எரிந்து ஒளியைக் கொடுப்பதோடு, தன் மேனியையும் உருக்கிக்கொள்கிறது..ஊதுவத்தி நறுமணத்தைக் கொடுத்த பிறகு, உருவமற்று சாம்பலாகிறது. தேய்ந்து தேய்ந்து மணத்தைக் கொடுக்கும் சந்தனக்கட்டையைப் போல்தான் தியாகிகளும், பொதுநலவாதிகளும் என்பதைப் புரிந்து கொள்.

ராஜு: இப்படியெல்லாம் பேசி பேதங்கள் உண்டாக்கு வதற்குத்தான் அன்று என்னிடம் பிடிவாதமாக வேலை கேட்டாய் நீ.

ஆன: இல்லை. உன்னிடம் வேலை பார்க்க ஆசைப்பட்டேன். ஏன்? ஒரு தொழிலாளி முதலாளியாக மாறியிருக்கிறானே என்று. இப்போது ஆத்திரப்படுகிறேன். இந்த முதலாளி, தான் ஒரு மாஜி தொழிலாளி என்பதை மறந்துவிட்டானே என்று.

ராஜு: இல்லை.. இல்லை. இவனும் நம்மோடு சேர்ந்தவன்தானே? ஆனால் இன்றோ ……

Harrietlgy
14th August 2016, 10:35 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 139 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_image/22/702446300Tamil_News_Nellai.jpg

ராஜு: பல பேரை வைத்து வேலை வாங்குகிற அளவுக்கு இவனுடைய நிலை உயர்ந்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் உனக்கு.

ஆன: தனக்குத் தண்ணீர் இல்லாததால் ஒரு செடி கருகுமே தவிர, வேறொரு செடிக்குக் கிடைக்கிறதே என்று ஏக்கத்தால் எந்தச் செடியும் எரிவதில்லை. இந்த தத்துவத்தில் வளர்ந்து கவலையில்லாத வாழ்க்கை நடத்துகிற என்னை விட்டுவிட்டு எவனாவது கையாலாகாதவனிடம் உன் வயிற்றெரிச்சல் கதையைச் சொல்.

ராஜு: மிஸ்டர் ஆனந்தன்! ஐ ஆம் தி ஸோல் புரொப்ரைட்டர் ஆப் திஸ் கன்சர்ன். ஐ கேன் டூ வாட்டெவர் ஐ லைக்!

ஆன: தோஸ் டேஸ் வேர் கான் மிஸ்டர் ராஜு. நவ், ஈச் பார் ஆல் அண்டு ஆல் பார் ஈச்.

ராஜு: ஷட் அப் ஐ ஸே!

ஆன: இந்த ஆணவத்தால் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் அழிந்து போயிருந்ததை உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

ராஜு: இந்த ஆர்ப்பாட்டத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திண்டாடுவதை நான் உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

ஆன: ராஜு! இனி நாம் பேசிக்கொண்டே போனால், அதன் முடிவு என்ன ஆகும் என்று நம் இருவருக்குமே தெரியாது. இறுதியாக உன்னை எச்சரிக்கிறேன். இவர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்.

ராஜு: நோ! ஐ சே நோ!

ஆன: அப்படியா ! மறுபடியும் எச்சரிக்கிறேன். கூட்டுறவு பண்டக சாலை மூடப்பட்டதை எதிர்த்து அன்று எழும்பிய அதே போராட்டக் குரல் நாளை இந்த சுவற்றிலும் எதிரொலிக்கும்.

ராஜு: ம். லிஸன் மை பாய், லிஸன்… இம்முறை உன் போராட்டத்தால் இத்தொழிற்சாலை கதவுகள் பூட்டப்படாது. உன் கைகள் பூட்டப்படும்.

ஆன: அதோடு உன் கர்வமும் ஓட்டப்படும்.

ராஜு: நில். ஆனந்தன், நீ உன்னுடைய ஆட்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு இங்கே எரியும் மின்சார பல்புகளை எல்லாம் அணைத்துவிட்டாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், இதே இடத்தில் எப்போதும் ஒரு சின்னஞ்சிறு அகல் விளக்கு சுடர் விட்டு கொண்டிருக்கும் அந்த சொற்ப வெளிச்சத்தின் கீழே அற்பர்களின் துணையின்றி ஒரே ஒரு உருவம் மட்டும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கும். அதுதான் நீ குறிப்பிட்ட அந்தத் தொழிலாளி ராஜு. அதை மனதில் வைத்துக் கொண்டு உன் போராட்டத்தை தொடங்கு. முழங்கு, முரசு கொட்டு, மூலைக்கு மூலை நின்று திட்டு.. கெட் அவுட்!

(போய் விடுகிறான் ஆனந்தன்!)

இந்த காட்சி முடியும் போது, அடுத்த காட்சிக்கான வசனங்கள் காதில் விழாது. அந்த அளவுக்கு இருவரின் நடிப்புக்கு கைத்தட்டல் கிடைக்கும்.

சிவாஜி, ஜெமினி இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.

தன் படங்களில் தன் சக நடிகர்களும் தங்கள் திறனை காட்ட வேண்டும் என்று நினைப்பார் சிவாஜி!

ஆனால் இந்த இருவரையும் விட `பாசமலர்’ படத்தில் வெற்றி பெற்றது சாவித்திரி என்றே சொல்ல வேண்டும்.

இது பற்றி ஒரு முறை நான் சிவாஜியுடனேயே பேசியிருக்கிறேன்.

`ஆமா, அவதானே ஜெயிக்கணும்? படத்தில் தலைப்பு என்ன? `பாசமலர்’தானே? மலர் என்றாலே பெண்ணைத்தானே குறிக்கிறது? மேலும் சாவித்திரி நல்லா நடிச்சதனாலேதான் அந்த படமே அந்த அளவுக்கு வெற்றி பெற்றது’ என்றார் சிவாஜி!

இந்த படத்தை நான் பார்த்த போது அது எட்டாவது முறையோ என்னவோ ரிலீஸ் ஆகியிருந்த நேரம்.

அந்த காலகட்டத்தில் இந்த படம் எத்தனை முறை ரிலீஸ் ஆனாலும் பெண்கள் கூட்டம் அலைமோதும்!

அவர்கள் ஏற்கனவே பார்த்த படம்தான். ஆனாலும் எத்தனை முறை பார்த்திருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் கொட்டகையிலேயே பெண்களின் அழுகுரல் கேட்கும்.

இந்த படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் ஜோடியாக நடிக்கவே முடியவில்லை.

சில வருடங்கள் கழித்து அவர்களை ஜோடியாக வெற்றி கண்டவர் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்!

அந்த படம் `கை கொடுத்த தெய்வம்.’

அந்த படத்தில் கூட சிவாஜியும், சாவித்திரியும் இரண்டே காட்சிகளில்தான் சந்திப்பார்கள்.

அதுவும் இரண்டாவது அதாவது கிளைமாக்ஸில் சாவித்திரி தூக்க மாத்திரை சாப்பிட்டு இறந்து போயிருப்பார்.

அவரை சிவாஜி தன் மடியில் கிடத்தி கழுத்தில் தாலி கட்டுவார்.

அந்த படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது!

அடுத்து வந்த ‘பா’ வரிசை படம் ஏ.வி.எம் நிறுவனத்தின் `பார்த்தால் பசி தீரும்.’

இந்த படத்திலும் சிவாஜியின் உடன்பிறவாத தங்கையாக, குருட்டுப் பெண்ணாக வருவார் சாவித்திரி!

இந்த படத்தின் கதையை ஏ.சி திருலோகசந்தர் எழுதியிருந்தார். இயக்கியது ஏ.பீம்சிங்!

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசனுக்கு இரட்டை வேடம்!

இந்த படம் 14.1.1962ம் ஆண்டு வெளியானது!

இந்த படம் உருவானதைப்பற்றி ஏ.வி.எம் சரவணன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

`என்னுடன் நெருங்கி பழகி எப்பொழுது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வந்து என்னுடன் பேசிவிட்டு, சாப்பிட்டுவிட்டு போகும் உரிமையை எடுத்துக் கொண்ட இரண்டு கலைஞர்கள் உண்டு. ஒருவர்– நடிகர் எஸ்.ஏ. அசோகன், இன்னொருவர்– எஸ்.வி.சுப்பையா.

அடிக்கடி யாரையாவது அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் அறிமுகப்படுத்தி வைப்பது அசோகனின் வழக்கம். அப்படி என்னிடம் அவர் அறிமுகப்படுத்தி வைத்தவர்களில், ஏ.சி. திருலோகசந்தர் குறிப்பிடத்தக்கவர்.

`இவர் நிறைய கதைகள் வச்சிருக்கார். ரொம்ப அழகாக சொல்லுவார். நீங்க ஒரு நாள் கேக்கணும்’ என்றார்.

சரியென்று ஒரு நாள் கதை கேட்டேன். நான், அசோகன், திருலோகசந்தர் மூவரும் என் அறையில்.

திருலோக் கதை சொல்லத் தொடங்கினார். பாதியில் திடீரென ஏதோ நினைத்துக்கொண்டார் போல அசோகன்! அவர் திருலோக்கைப் பார்த்து `அண்ணே! நீங்க அந்த ஸ்வார்ட் பைட் கதையை சொல்லலியா?’ என்று கேட்டார். அதற்குள் நான் ஒரு நான்கைந்து பென்சில்களை சீவி முடித்துவிட்டேன். திருலோகசந்தர் ரொம்பவும் நொந்துவிட்டார்.

`அவரு என்னன்னா, ஸ்வார்ட் பைட் கதை சொல்லலியான்னு திடீர்னு கேக்கறாரு. நீங்க என்னடான்னா பென்சில் சீவிக்கிட்டு இருக்கீங்க? யாரும் கதை கேக்கற மாதிரி தெரியலியே?’ என்று என்னிடம் வருத்தப்பட்டார்.

`நான் உங்க முகத்தை பார்க்கலையே தவிர, கதையை நீங்க சொன்ன வரைக்கும் கவனமாகவே கேட்டேன். நான் வேணும்னா சொல்றேன். கேளுங்கள்’ என்று அவர் சொன்ன கதையை அப்படியே `ரிபீட்’ செய்தேன்.

பிறகு …..

(தொடரும்)

Gopal.s
15th August 2016, 08:15 AM
My Independance Day wishes for all participants and Readers of Mayyam .(15th Aug)

Gopal.s
15th August 2016, 08:16 AM
There is a screening of Patriatic Films on this occasion of Independance Day arranged by Ministry of Defence&Directorate of Film Festivals arranged from 12th to 18th Aug'2016 at Sirifort Auditoriam,New Delhi. Veerapandiya Kattabomman is chosen to be Screened on 14th Aug'2016 .


கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.

கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.

கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.

இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?

எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.

அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.

listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.

நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?



எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.

இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.

அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.

ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .

Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.

ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.

ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.

வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.

வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.


வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.

ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.

மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.

இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.

என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.

அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.

நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .


நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?

நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.

தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .

இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.

1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.

2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.

3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.

4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)

5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.

6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .

7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.

8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.

எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.


வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.

மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .

ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.

என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.

தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.

கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.

Gopal.s
15th August 2016, 08:30 AM
I strongly feel Kappalottiya Thamizhan also should have been chosen to be screened on this occasion.. Centre has not done anything except Tax Exemption given during 1977 for Kappalottiya Thamizhan. Atleast BJP Government should have broken this Jinx.

இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.

இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.

நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.

இவ்வளவு அற்புதமான advantage இருக்கும் போது ,உண்மைக்கு மிக மிக அருகில் வந்த அற்புதமான திரைக்கதையும் தயாரான போது ,ஒரு கலைஞனின் அறிவும்,மனமும் ,உணர்வும் அதில் தோயும் பொது ,அதில் தோய்பவன் உலகத்திலேயே மிக சிறந்த நடிகனாக இருக்கும் போது, அந்த magic நிகழத் தானே வேண்டும்?

கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .

இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.

இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).

அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.

இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.

மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase
படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.

ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.

ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .

முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.

Gopal.s
15th August 2016, 08:41 AM
வழக்கம் போலவே நமது உயர்ந்த மனிதன் மதுரை மாநகரில் உயர்ந்த சாதனையை நிகழ்த்தி உன்னத வசூலை பெற்று பீடு நடை போடுகிறான். நமது சாதனை நாயகனின் ஆத்மாவும் ,உன்னத தேச பக்தியுடன் இன்று நம்மிடையே வந்து நம்மை ஆசீர்வதித்து செல்லும்.

Gopal.s
15th August 2016, 08:41 AM
நா.முத்துக்குமாரின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். நம்முடைய இன்றைய கலை இலக்கிய சூழ்நிலை ,நம்மிடையே இன்னொரு கம்பன்,பாரதி,கண்ணதாசன்,வைரமுத்து தோன்ற அனுமதிக்காதெனினும் , தாயை சிறு வயதில் இழந்து,தந்தையின் நூலகத்தில் தவழ்ந்து,ஓரளவு இலக்கிய பரிச்சயத்துடன், தன் முனைப்பில் முன்னேறிய முத்துக்குமார் ,தன்னுடைய தவறான பழக்க வழக்கங்களால் அற்ப ஆயுளில் தன்னுடைய தொழிலில் மேலும் உன்னதம் தொடும் வாய்ப்பை இழந்துள்ளார். ஓரளவு நல்ல கவிதைகளுக்கு முயன்றுள்ளார்.

ஆழ்ந்த வருத்தங்கள்.

KCSHEKAR
15th August 2016, 02:44 PM
NEWS

இந்தியாவின் 70வது சுதந்திரதினம், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் 15-08-2016, திங்கள் காலை 8.30 மணிக்கு, திருவொற்றியூர்-ல் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்,
நொய்டாவிலுள்ள அவ்வை தமிழ்ச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புத்தகப் பையை, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K. சந்திரசேகரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை நிர்வாகிகள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், குபேரன், ராணி, விஜயா, வினோத்குமார், மகேஸ்வரன், பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG_20160815_083943_zpsybezq1oh.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG_20160815_083943_zpsybezq1oh.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG_20160815_091602_zps40jmfl5o.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG_20160815_091602_zps40jmfl5o.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/V50DC_20160815_101421_zpssvvls6m9.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/V50DC_20160815_101421_zpssvvls6m9.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/V50DC_20160815_101549_zpsv0xmuid0.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/V50DC_20160815_101549_zpsv0xmuid0.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/V50DC_20160815_102108%201_zpspwrjldeh.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/V50DC_20160815_102108%201_zpspwrjldeh.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG_20160815_084737%201_zpsati5xkll.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG_20160815_084737%201_zpsati5xkll.jpg.html)

Gopal.s
16th August 2016, 09:11 AM
நடிகர்திலகம் , மிக மிக அழகான பொலிவான ,துறுதுறுப்பான ,உண்மை இளமையான,எந்த பாத்திரத்துக்கும் பொருந்தும் தோற்றம், சுறுசுறுப்பான நடிப்பு இவையெல்லாம் இருந்தும் , 1952 இல் இருந்து 1959 வரை, வித்யாசமான பாத்திரப்படைப்பு,கதைக்களன்,இவற்றில் கவனம் செலுத்தி , வெற்று டூயட் பாடல்கள், நம்ப முடியாத போர் அடிக்கும் சண்டை காட்சிகள் இவற்றை தவிர்த்து வந்தார்.

உறங்க கூட நேரமில்லாமல், படப்பிடிப்புகளில், பாத்திர படைப்புகளில் கவனம் செலுத்தி (சில பழக்கங்களும்) உணவு பிரியர் ஆன அவர் உடலை பராமரிக்காமல், 1960 இலிருந்து 1966 வரை மிக மிக பெருத்து விட்டார். குறித்து கொள்ளுங்கள். உலகத்தில் எந்த ஒரு நடிகனும் (இன்றைய சூப்பர்ஸ்டார் உட்பட) அந்த உடலை வைத்து கதாநாயகனாக தோன்றுவதே சிரமம். அங்கேதான் நடிகர்திலகத்தின் stardom ,நடிப்பு திறன்,பாத்திரங்களை தேர்வு செய்யும் முறை இவற்றால் வெள்ளிவிழா படங்களையும், நூறு நாள் படங்களையும் வாரி வழங்கி ,தமிழ் திரையுலகில் அவரே சக்ரவர்த்தியாக உன்னதம் தொட்டார். அவருடைய மறக்க முடியாத காவியங்கள், சாதனைகள்,ஆசிய ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது, அமெரிக்க அழைப்பு,நயாகரா மேயர் கவுரவம்,பத்மஸ்ரீ பட்டம் எல்லாமே அவரை தேடி வந்தன.

இருந்தும் ,படிப்பறிவில்லாத,ரசனை குறைந்த மக்கள் கூட்டம் நிறைந்த அந்த நாட்களின் கீற்று கொட்டகைகளில் , அந்த மக்களுக்கென்று அவர் படங்கள் நடிக்கவில்லை. ஆனாலும் கீற்று கொட்டகைகளில் நூறு நாட்கள் கண்ட பாவ மன்னிப்பு போன்ற படங்களால் அங்கும் நாயகனாகவே இருந்த போதிலும், C Centre மக்களை அவர் பொருட்படுத்தி படங்கள் செய்ய நினைக்கவில்லை.மாறாக அவர்கள் ரசனையை உயர்த்தும் விதமாக சரித்திர,சமூக,புராண,குடும்ப அனைத்து வித படங்களையும் செய்து வந்தார். வித வித விதமான ஒன்றுக்கொன்று சவால் விடும் பாத்திரங்கள்.இன்று கூட பாலாபிஷேகம் செய்யும் படித்த பகுத்தறிவாளர்கள் நிறைந்த தமிழ் நாட்டின் 50 வருட முந்தைய படிப்பறிவில்லா கூட்டத்தை நினைத்து பாருங்கள். இவர்கள் ரசனையை உயர்த்தவா முடியும்?

அங்கேதான் நிற்கிறார் நடிகர்திலகம். பூ என்று ஊதி விட கூடிய காதல் காட்சிகளில்,சண்டை காட்சிகளில், நடன காட்சிகளில் எல்லோரையும் விட தன்னால் ஸ்டைலிஷ் ,grace ,இளைமை துரு துருப்பினால் சி centre ரசிகர்களையும் கட்டி போட்டு வசூல் சாதனை புரிய முடியும் என்பதை 1967 இலிருந்து 1980 வரை காட்டினார். தன்னுடைய உன்னத நடிப்பு படங்களுக்கு ,திருவருட்செல்வர்,தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,தெய்வமகன், வியட்நாம் வீடு,பாபு, ஞான ஒளி ,கவுரவம் ,தங்கப்பதக்கம் ,அவன்தான் மனிதன் என்று ஒரு புறம் வழங்கினாலும், தன்னுடைய பாணியில் விலகி ,anti hero வாக தங்கையில்,நகைச்சுவை காதல் மன்னனாக கலாட்டா கல்யாணம் மற்றும் சுமதி என் சுந்தரி,,ஜனரஞ்சக என் தம்பி மற்றும் திருடன், தங்கசுரங்கம்,ராஜா என்று jamesbond , ஜாலியான நிறைகுடம்,சிவகாமியின் செல்வன்,வாணிராணி,கிராமிய பட்டிக்காடா பட்டணமா,முழுக்க முழுக்க ரொமான்டிக் வசந்தமாளிகை,முழுக்க முழுக்க action சிவந்த மண் என்று சி சென்டர் சக்ரவர்த்தியாக கணக்கற்ற வெற்றி படங்கள்.கலக்கோ கலக்கு என்று கலக்கினார். எந்த அரசியலும் ,ஒரு நடிகராக அவர் சாதித்த உன்னத வெற்றி சாதனையை மறைத்து விட முடியாது.

இங்குதான் அப்போது வந்த சில இயக்குனர்களின் பங்கு குறிப்பிட தக்கது. ஒரு பந்துலு, ஸ்ரீதர் ,ஏ.பீ.நாகராஜன் அளவு உயர்ந்த இயக்குனர்கள் இல்லாமல் ,அப்போது மக்களின் நாடியை புரிந்த மாதவன்,ஏ,சி.திருலோகசந்தர்,சி.வீ.ராஜேந்திரன்,ராமண்ண ா,முக்தா இவர்களின் பங்கு கணிசமானது.
குடும்ப படங்களை எடுத்தாலும் அவர் பிம்பத்தை முறித்த தங்கை படத்தை எடுத்த ஏ.சி.டி,பாலாஜி, பட்டிக்காடா பட்டணமா எடுத்த மாதவன்,கலாட்டா கல்யாணம்,சுமதி என் சுந்தரி,ராஜா என்று சி.வீ.ராஜேந்திரன், தங்கசுரங்கம்,சொர்க்கம் என்று ராமண்ணா நிறைகுடம் முக்தா என்று கணிசமான பங்களிப்பு. அவரை குழந்தைகளிடம்,இளைஞர்களிடம்,இளைஞிகளிடம்,பாமர மனிதர்களிடம் மிக மிக மிக ரசிக்க படும் நாயகனாக்கியது.

ஆரம்பம் முதலே, பல முதல்களான வசூல்களுக்கு சொந்தக்காரர் நடிகர்திலகம்.(முதல் வெளியீட்டில்)

1)முதல் முதல் 15 லட்சம் வசூலை கடந்த தமிழ் படம் பராசக்தி.(1952)

2)முதல் முதல் 25 லட்சம் வசூலை கடந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.(1959)

3)முதல் முதல் 50 லட்சம் வசூலை கடந்த படங்களில் ஒன்று திருவிளையாடல்.(அதே வருடம் இன்னொரு படமும் தொட்டது)(1965)

4)முதல் முதல் கருப்பு வெள்ளை கோடீஸ்வரன் பட்டிக்காடா பட்டணமா மூக்கையா.(1972)

5)முதல் முதல் தமிழில் 1.5 கோடி கடந்த படம் வசந்த மாளிகை.(1972)

6)முதல் முதல் தமிழில் இரண்டு கோடி கடந்த படம் திரிசூலம்.

அது மட்டுமல்ல. ஒரு திரைப்பட ஆய்வாளரிடம் உரையாடியதில் கிடைத்த செய்தி.

1952 முதல் 1960 வரை- தமிழ் திரைப்படங்களின் மொத்த வியாபாரம் 7 கோடியில் கிட்டத்தட்ட 4 கோடி நடிகர்திலகம் படங்கள் மட்டும் செய்தன.

1961 முதல் 1970 வரை கிட்டத்தட்ட 15 கோடியில் 9 கோடி நடிகர்திலகம் படங்கள் மட்டுமே செய்தன.

ஒவ்வொரு வருடமும் நடிகர்திலகத்தின் படங்கள் 60 முதல் 65% பங்களிப்பு. மிச்சம் மற்ற நடிகர்கள் அனைவரும் சேர்ந்து அளித்தவை.

Gopal.s
16th August 2016, 09:47 AM
திரு சந்திரசேகர்,

உங்கள் அயராத முயற்சி,சுயநலம் அண்டா உழைப்பு,அர்ப்பணிப்பு இவற்றிற்கு எனது தலை வணக்கம். பிரச்சினைகளுக்கு போராடும் உங்கள் போராட்ட குணம், பத்திரிகைகளுக்கு நமது ரசிகர்களின் உயிர்ப்பை,அரசியலை மீறிய அர்ப்பணிப்பை உணர்த்தி ,நமது மேன்மையை சொல்லி கொண்டிருப்பது நீங்களே. நான் என்றுமே மனதளவில் உங்களின் பேரவை ஆள்.

ஒரே ஒரு ஆலோசனை. தேர்தல் நேரங்களில் ,எந்த அரசியல் கட்சிக்கும் நாம் ஆதரவளிக்க தேவையில்லை. அதன் தீர்மானத்தை கோடி கணக்கான நமது விஷய ஞானமுள்ள, பண்பட்ட ரசிகர்களின் தேர்வுக்கு விட்டு விடுவோம். அவர்களுக்கு தெரியும் ,புரியும். வேண்டாம் நமக்கு இந்த அரசியல் சாயம்.

Gopal.s
16th August 2016, 01:54 PM
என்னுடனே சேர்ந்து ஜனித்த காத்தவராயனை 1968 க்கு(திருபுவனம் சாந்தி) பிறகு ,நேற்றுதான் பார்த்தேன். P _ R ,வாசு போன்றோர் விழுந்து விழுந்து ரசித்த படம். நானும் மிக ரசித்தேன். இந்த magical realism நிறைந்த படம் தொட்டிருக்க வேண்டிய உயரங்கள் வேறு. ராமண்ணா துரதிர்ஷ்டசாலி. கூண்டுக்கிளி, காத்தவராயன்,பாசம்,பறக்கும் பாவை போன்ற அவரது படங்கள் மிக சிறந்த வெற்றியை கண்டிருக்க வேண்டும். மிக சிரமங்களுக்கிடையே காலம் தவறி வந்தாலும் வெற்றி பெற்ற என்னை போல் ஒருவன், 1972 இலோ 1973 இலோ வந்திருந்தால் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.

முதலில் பார்த்த போது காத்தவராயன் அருமை எனக்கு தெரியவில்லை. இப்போது பார்க்கும் போது அடடா.... எத்தனை அருமையான படைப்பு என்று தோன்றுகிறது. கைதட்டுவோம் நடிகர்திலகம்,ராமண்ணா,துறையூர் மூர்த்தி ஆகியோருக்கு.

படத்தின் முக்கியமான அம்சங்கள் நான் ரசித்தவை.

1)படம் முழுக்க செய்திகள் .ஆனால் வெளிப்படையாக போர் அடிக்காமல். கலையில் போட்டி இருக்கலாம் பொறாமை கூடாது, குழந்தைகளே ஆனாலும் பெரியோர் விஷயத்தில் மூக்கு நுழைக்க கூடாது, உன்னதம் தொடும் முன் உலகம் காண வேண்டும்,திறமைகளை ஏமாற்றி பிழைக்க உபயோகிக்க கூடாது,யாரையும் அடிமை கொள்ள கூடாது, தேவையற்ற மோகத்தீயில் இளமையை பொசுக்கினால் பெற்ற வரங்களும் பயனின்றி போகும்,தாயின் ஆசியில்லாமல் எதுவும் வெற்றி பெறாது, ஒருவன் சுக துக்கங்களுக்காக ஊரையும் அப்பாவி மக்களையும் துன்புத்தல் ஆகாது, ஜாதி -அந்தஸ்து பேதம் கூடாது என்று படம் நெடுக .

2)சிவாஜி அழகோ அழகு. கொள்ளை அழகு. சிவாஜி-சாவித்திரி இணை கண் படும் அழகு. இவர்கள் ஆரம்ப சந்திப்பு காட்சி வசனமில்லா கவிதை.இருவரின் அழகான நடிப்பு.

3)குறைந்த ,செறிவான வசனங்கள் படம் முழுக்கவே.(இறுதி காட்சி விதிவிலக்கு)

4)திரைக்கதையின் இயல்பான விரிவு. மாயத்தை இணைத்தும் ,நடைமுறையை மாயம் மயக்கவில்லை.

5)சிவாஜி பல காட்சிகளில் கண்கள்,உடல்மொழியால் மட்டுமே பாத்திரத்தை மிக மிக புரிந்து நடித்திருப்பார்.கடைசி காட்சியின் உக்கிரம், எந்த action ஹீரோவும் கனவு கூட காண முடியாதது.ஆரம்ப மல்யுத்த காட்சி சிவாஜியின் இயல்பான நடிப்பில் அவ்வளவு மெருகு. அற்புத காட்சி.

6)பல பாடல்கள் இருந்தும் அலுப்பு தட்டாது.

7)தங்கவேலுவின் இயல்பான,அளவான ,கற்பனை வளம் மிகுந்த நகைசுவை. இக்கால படங்களையொத்த மெருகு,timing .

8)அற்புதமான எடிட்டிங் ,கேமரா ,லைட்டிங் .தந்திர காட்சிகள்.

9)ஆரம்ப சிவா-பார்வதி நடனம், கோழி நடனம் இவையெல்லாம் மிக ரசனைக்குரியது.

10)காத்தவராயன் உலகம் காணும் montage .நடிகர்திலகத்தின் வியப்பு.

11)ஓவியர் மணியனின் உடை வடிவமைப்பு. அரங்க நிர்மாணம்.

இவ்வளவு நிறைகள் படத்தை எங்கேயோ கொண்டு சென்றிருக்க வேண்டாமா? இனி குறைகள்.

1)திரைக்கதை சுவாரஸ்யமற்ற பகுதிகளில் ரொம்ப புகுந்து புறப்படும்.

2)ஜீ.ராமநாதனின் இசை பெரிய குறை. தூக்கு தூக்கி அளவு கை கொடுக்கவில்லை. வேடுவ ஆதிவாசிகள் காட்சி சரியாக அமையாமல், எடுத்த உடனே யானையில் அடாணா ராகம் பாடும் ஆதிவாசி நாயகன். பாமர மக்களின் இசையின் சாயலே இல்லை. (ஹும், கே.வீ.எம் மாமாவை போட்டிருக்கலாம்.)

3)சண்டை காட்சிகள் ரொம்ப சுமார்.(ஆரம்ப மல்யுத்த காட்சி தவிர)

4)காதல் காவியமான இதில்,காதலின் அழுத்தம்,வேகம் சொல்ல படவே இல்லை.

5)இறுதி காட்சி கண்ணாம்பா -சிவாஜி இணைவில் மனோகரனை ரொம்ப நினைவு படுத்தும்.

6)சூழ்நிலைதான் வில்லன் என்றாலும், அவ்வளவு பராக்கிரமசாலி காத்தவராயனுக்கு ,வீரப்பா அளவு,நம்பியார் அளவு சொல்லும் படியான எதிரி வேண்டாமா? தங்கவேல் மாதிரி காமெடி எதிரி என்றால் சுவாரஸ்யமே கெடுகிறதே?

KCSHEKAR
17th August 2016, 02:31 PM
திரு சந்திரசேகர்,

உங்கள் அயராத முயற்சி,சுயநலம் அண்டா உழைப்பு,அர்ப்பணிப்பு இவற்றிற்கு எனது தலை வணக்கம். பிரச்சினைகளுக்கு போராடும் உங்கள் போராட்ட குணம், பத்திரிகைகளுக்கு நமது ரசிகர்களின் உயிர்ப்பை,அரசியலை மீறிய அர்ப்பணிப்பை உணர்த்தி ,நமது மேன்மையை சொல்லி கொண்டிருப்பது நீங்களே. நான் என்றுமே மனதளவில் உங்களின் பேரவை ஆள்.

ஒரே ஒரு ஆலோசனை. தேர்தல் நேரங்களில் ,எந்த அரசியல் கட்சிக்கும் நாம் ஆதரவளிக்க தேவையில்லை. அதன் தீர்மானத்தை கோடி கணக்கான நமது விஷய ஞானமுள்ள, பண்பட்ட ரசிகர்களின் தேர்வுக்கு விட்டு விடுவோம். அவர்களுக்கு தெரியும் ,புரியும். வேண்டாம் நமக்கு இந்த அரசியல் சாயம்.
திரு.கோபால் சார்,

என்னுடைய மூத்த சகோதரரில் ஒருவராக மதிக்கும் தங்களின் வாழ்த்து மற்றும் ஆலோசனைக்கு கோடி நன்றிகள்.

தாங்கள் கூறுவது எனக்கும் புரிகிறது, தெரிகிறது. ஆனால் சில சூழ்நிலைகள் அப்படி நேர்ந்துவிடுகிறது. (அது பணம், பொருள் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்). கெளரவத்தில் நம் நடிகர்திலகம் கூறியிருப்பது போல "இங்கு எல்லாமே recommendation with politics " ஆகத்தான் இருக்கிறது.

கர்நாடகாவில், மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு அரசே முன்வந்து மணிமண்டபம் கட்டியது. எல்லாக் கட்சிகளும் அதனை ஆதரித்தன. யாரும் எதிர்க்குரல் எழுப்பவில்லை. ஆனால், இங்கே சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பும்போதே அவருக்கு எதற்கு அரசு சார்பில் மணிமண்டபம் என்ற எதிர்க்குரல் வேறு எழுகிறது. சில நேரங்களில் இவற்றை சமாளிக்க நாம் தனியே போராடுவது என்பது, கடல் அலை நடுவே நின்று கர்னாடக சங்கீதம் இசைப்பது போலாகிவிடுகிறது. எனவே சில அரசியல் கட்சிகளை, நமது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளை ஆதரித்து அவர்களையும் இணைத்துக்கொண்டு போராடினால் நன்றாக இருக்கும் என எண்ணியதால், எண்ணுவதால் அத்தகைய முடிவுகளை எடுக்க நேர்கிறது.

எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் செயல்பட தங்கள் வாழ்த்து, ஆலோசனை உதவிடும் என்ற நம்பிக்கையுடன், நன்றி.

RAGHAVENDRA
18th August 2016, 12:22 AM
Na. Muthukumar’s Last Song is the Remix Version of Sivaji Ganesan Chartbuster

http://www.iluvcinema.in/tamil/wp-content/uploads/2016/08/a.-Muthukumars-last-song-is-the-remix-version-of-Sivaji-Ganesan-Chartbuster.jpg



.....

Now GV Prakash switched that to Sivaji Ganesan now, the song ‘Iravinil Aattam, Pagalinil Thookkam’. Which is a record-breaking Navarathri’s album will be featured in his upcoming film. This song is penned by the poet Kannadasan, For GVP upcoming film Kadavul Irukan Kumaru, Rajesh has directed this film, he said that the first two lines remained the same, whereas rest of the song carries different lyrics, which was written by Na. Muthukumar who passed away recently.

Nikki Galrani, Anandhi, and Thambi Ramaiah, etc., are featuring in this film. We hope this song will turn out as a wonderful memory of Na Muthukumar, as well as yesteryear chartbuster.


Reproduced from and courtesy: http://www.iluvcinema.in/tamil/na-muthukumars-last-song-is-the-remix-version-of-sivaji-ganesan-chartbuster/

Gopal.s
18th August 2016, 08:38 AM
கலி முற்றி தலை விரித்து ஆடுகிறது. இந்த சராசரிகளுக்கும், தற்பெருமைகளுக்கும், படித்தவர்களின் அறிவு -மனம் விரிவடையாமல் சிறுவயது மாயைகளில் உழன்று, பாலபிஷேகம் அமெரிக்கா வரை விரிவடைந்ததுதான் ஒரே பலன். இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில், வலை தளங்களில் வேண்டாதவை முக்கிய விவாதம் பெறுவதுடன்,வரலாறுகள் தப்பும் தவறுமாக திரிக்க படுகின்றன. பத்திரிகை துறையில் ,எழுத்து திறனோ ,பகுக்கும் திறனோ,இல்லாத கீழ்நிலை மக்கள் பிழைப்புக்காக ,பத்திரிகை தர்மம் புரியாமல் செயல் படுகின்றனர். புத்திசாலிகள்,படிப்பாளிகள்,பகுத்தறிவாளர்கள் வேறு துறைகளை நாடி சென்று விட , முக்கியமான துறைகள்,சராசரிக்கும் கீழானவர்களால் நிர்வகிக்க படுகின்றன.

நா.முத்துக்குமார் சமீபத்தில் வந்த நல்ல கவிஞர் என்பதை ஒப்பு கொள்வோம். அவர் சில வேண்டாத பழக்கங்களால் கஷ்டத்தை தருவித்து கொண்டு, தனது பொருளாதாரத்தை வளப்படுத்தி, குடும்பத்துக்கு திட்டமிடாததை, தேசிய பிரச்சினை போல பேசுவது மடமை. அவருக்கு சுருக்கமான இரங்கல் தெரிவித்து முடிக்க வேண்டியதை ,இவ்வளவு வளர்த்துவானேன் என்று சினிமா,பத்திரிகை மீது அருவருப்பே தோன்றுகிறது.

சமீபத்தில் விருதுகள் விரிவடைந்து,எல்லோருக்கும் ஒரு விருது நிச்சயம் என்ற நிலைமை. (வைக்க இடமில்லாமல் திருப்பி கொடுக்கும் நிலைமை)

இந்தியாவிலேயே உன்னதம் தொட்ட சிவாஜி,கண்ணதாசன்,விஸ்வநாதன் போன்றோருக்கு எந்த விருதும் தர வக்கில்லாத அரசு,இன்று எல்லோருக்கும் ஜனநாயக முறையில் வாரி வழங்கி அதன் மதிப்பை குறைத்து வருகிறது. மொத்தம் 28 நிறுவனங்கள் விருதுகளை வழங்கி ,குத்து பாட்டுக்கள் ஆடி தீர்க்கின்றன. இதில் துபாய்,மலேஷியா,அமெரிக்கா,கனடா என்று நிறைய அனாமதேயங்கள்.

தமிழர்கள் பிளவு பட்டு, ரசனை கெட்டு ,பாழ்பட்டு நிற்பது, நமது மண்ணுக்கு உரிய பெருமையை, உரிமையை மீட்டு கொடுப்பதாய் இல்லை.

படித்தவர்கள் நிறைந்த பூமி என்றால் ,ஏன் அன்பே சிவம், விருமாண்டி, நான் கடவுள்,அஞ்சாதே, குற்றம் கடிதல்,விசாரணை போன்ற படங்கள் உலக சாதனை புரியாமல் நிற்கின்றன?

என்றுமே, ரசனை கேடுகள் தலை விரித்து ஆடும் ,நாம்தான் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் போல.

Gopal.s
19th August 2016, 08:04 AM
1985 இல் எனது மனைவியுடன் திருமணமான புதிதில் எனது சுதந்திர தினத்தை , இனிதாக்கிய (கோவை அர்ச்சனா) முதல் மரியாதை. நடிகர்திலகத்துக்கு எதிராக ஜெயா பச்சன் (m p விஷயம்)சதிசெய்து சிறந்த நடிகர் என்று தேர்ந்தெடுத்த பிறகு மாற்றினார். (ஆதாரம்- இதில் தேர்வு உறுப்பினராக இருந்த கோமல் ஸ்வாமிநாதன் சுபமங்களாவில் எழுதியது)

முதல் மரியாதை- 1985-

திரையில் விரியும் ஆழமும்,அழுத்தமும் கொண்ட கவிதை,மிதமான ஆனால் அபாரமான sensitivity யோடு ,மற்ற வழக்கமான கிராம கதைகளின் பழி வாங்கல்,வன்முறை அம்சங்களே இல்லாமல், அருவியின் ஓசை ,குருவிகளின் இசை, நதியின் சலனம் இவற்றினோடு, அந்த கிராம மனிதர்களின் சிரிப்பு,மகிழ்ச்சி,வலி,மனகிலேசம்,வைராக்கியம், தியாக உணர்வு அனைத்தையும் , நம் மனதை பிசையும் வகையில்,ஒரு அப்பாவி தனம் தொனிக்கும் deceptive simplicity யோடு,சாதாரண நிகழ்வுகளை கொண்டே ஒரு iconic moments அளவு பிரமிப்பை தந்த காவியம் முதல் மரியாதை.

நடிகர்திலகம்,பாரதிராஜா,செல்வராஜ்,கண்ணன்,வைரமு த்து, இளையராஜா,ராஜகோபால் இணைவில் , rhythmic என சொல்லப்படும் ஒத்திசைவோடு,எண்ண எழுச்சி,கிராம அழகியல்,Rustic sensitivity யோடு,மனித மனங்களை ஊடு பாவாகி நெய்த அழகிய அதிசயம்.

நடிகர் திலகத்தின் நடிப்பின் வீச்சை,வீரியத்தை,புதுமையை ,பசுமையை அன்றைய(இன்றைய) இளைய தலைமுறையினர்க்கு கல்வெட்டாய் உணர்த்திய படம்.

மலைச்சாமி(தேவர்) என்ற கிராமத்து பெரியவர்,ஒரு நதியோர குடிசையில் தன் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருப்பதிலும்,(நெஞ்சு குழிக்குள்ளே ஏதோ ஏக்கம்),காத்திருக்கும் சுற்றத்தார் நண்பர்கள் உரையாடலில் தொடங்கும் கதை பின்னோக்கி பயணிக்கிறது.

மலைச்சாமி ,ஊருக்கு நாட்டாமையாய் மதிப்போடு வாழும் பெருந்தன நடுத்தர வயது காரர். (கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆன)ஆனால் வீட்டிலே மனைவியால் அவமரியாதையாய் (துரட்டு கம்பு,இருபது ஆடுகளுடன் பஞ்சம் பிழைக்க வந்து,தன்னை மணந்ததால் அந்தஸ்து பெற்றவர் என்று குறிப்பிட்டு ) ,இடித்து பழித்து கொண்டு ,சுருதி-பேதமாய் உறவு நிலை பேதலித்து கிடக்கிறது.நாடோடியாய்,ஊருக்கு பஞ்சம் பிழைக்க வரும் குயில் என்ற இளம் பெண்ணிடம்,வேடிக்கையாய் தொடங்கும் உறவு,பிறகு ஆதரவு தரும் நிலையாகி,ஈர்ப்பு,உணர்ச்சி (உணவும்தான்)பரிமாறும் நிலைக்கு உயர்ந்து, ஊராரால் கவனிப்பு பெரும் நிலைக்கு உயர்கிறது.இதற்கிடையில்,மலைசாமியின் தங்கை மகன்(அத்தையால் அதே முறையில் கேவலமாய் நடத்த படும் இன்னொரு துறட்டு கம்பு,ஆடு கேஸ்)செல்ல கண்ணு,அந்த ஊரில் வாழும் செங்கோடன் என்ற செருப்பு தைப்பவர் மகள் செவளியை காதலிக்க, முதலில் எதிர்க்கும் மலைச்சாமி,குயிலின் ஆவேச வேண்டுகோளுக்கு செவி சாய்த்து,காதலர்களை சேர்த்து வைக்கிறார்.ஆனால் விதிவசமாய்,நகைக்கு ஆசைப்பட்டு ஒருவன் செவளியை கொன்று விட,தடயங்களை வைத்து,தனது மகள் ராசம்மாளின் கணவனே (ஊதாரி,குற்ற செயல்களுக்கு அஞ்சாத பெண் பித்தன்,பொய்யன்,)என்றறிந்து,காவலர்களுடன் பிடித்து கொடுக்கிறார்.செல்லகண்ணுவும் செவளியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.வீட்டில் வாய் பேச்சு முற்றும் போது ,பொன்னாத்தா ஒருவனோடு ஓரிரவு படுத்து,வயிற்றில் பிள்ளை சுமந்த நிலையில்,தன் மாமனின் மனம் திறந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பொன்னாத்தாளை மணந்ததையும்,அவளோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு படாததையும் குறிப்பிட்டு,ராசம்மா தனக்கு பிறந்தவள் இல்லையென்றாலும்,ஏழேழு ஜென்மத்திற்கும் அவள்தான் தனது மகள் என்று நெகிழ்கிறார்.
ஊரிலுள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிலாளி,தற்செயலாய் குயிலுடன் மலைச்சாமி சந்தையில் எடுத்து கொண்ட photo ஐ பொன்னாத்தாளிடன் காட்ட,பஞ்சாயத்து கூட்ட பட்டு,கேள்வி(கேலி?)களால் துளைக்க படும் மலைச்சாமி,ஆமா,அவளை நான் வச்சிருக்கேன்,என்ன முடியுமோ செஞ்சிக்கங்க என்று சொல்லி,குற்றவுணர்வுடன்(நிறைவுடன்?)குயில் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு தன மனம் திறக்கும் குயிலுடன் கோபித்து வீட்டிற்கு வருபவர்,பொன்னாத்தாள் தாய் வழி உறவுகளை துணைக்கழைத்து ,குயிலை விரட்ட(கொல்ல ?) திட்டமிட,அவர்களிடம் கோபித்து,சவால் விட்டு குயில் குடிசைக்கு வரும் மலைச்சாமி,அவள் அங்கு இல்லாததை கண்டு திகைக்கிறார்.

பின் ஒரு கொலை குற்றத்திற்காக சிறை செல்லும் குயில்,தான் கொன்றது பொன்னாத்தாளிடன் ஓரிரவு தகாத உறவு கொண்ட,குழப்பம் விளைவிக்க ஊருக்கும் வரும் ,மயில் வாகனன் என்ற மிருகத்தையே என்றும்,மலைச்சாமி குடும்ப மானம் காக்கவே அவ்வாறு செய்ததாக சொல்லி,இதை கோர்ட் இல்,வெளியிட கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள்.மலைச்சாமி,தன மனிதில் இருப்பவள் குயில் ஒருவளே என்று மனம் திறக்கிறார்.
முதல் காட்சியின் ,தொடர்பாக, போலீஸ் காவலில் வரும் குயிலை கண்டதும், சிலிர்த்து மலைச்சாமி உயிர்துறக்க, குயிலும் செல்லும் வழியில் உயிர் துறக்கிறாள்.

பற்பல யூகங்களுக்கு இடமளித்து,பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்திற்கு தீனி போட்ட திரைக்கதைகள்,அகில இந்திய ரீதியில் அலசினாலும்,சொற்பமே மிஞ்சும்.அவற்றுள் ,முக்கியமான ஒன்று செல்வராஜும்,பாரதி ராஜாவும் இணைந்து
அளித்த இந்த அற்புதம்.ஆண் -பெண் உறவுகளின் எதிர்பார்ப்புகளை,ஆசைகளை,முரண்களை,நிராகரிப்புக ளை,சி தைவுகளை , இதை விட அழகாய் சொன்ன படங்கள் வெகு சிலவே.

Carl Jung psycho -analysis முறையில், உணர்வுகள்,எண்ண நீட்சிகள்,அனைத்திலும், தன்னுணர்வற்ற(sub conscious )உள் நினைவுகளிலும், தன நிலை,இருப்பு இவைகளில் பாதுகாப்பின்மை ,தாழ்மையுணர்வு,உளவழுத்த நெருக்கடி,அதனால் விளையும் உறவின் சீர்கேடு ,இவற்றை நன்கு உள்வாங்கி, பூடக (suggestive )முறையில் அமைந்த திரைகதை வசனம் , Film -institute இல் பாடமாகவே வைக்கலாம்.பெண்களுக்கு அவர்களின் பெண்மையை உதாசீனம் செய்து மதிக்காதோரிடம் ,எந்த நிலையிலும் காதல் உணர்வு வராது என்பது உண்மையோ,அதைப்போல,ஆண்களுக்கு,visual arousal and provider 's pride என்பது காதல் உணர்வுக்கு அவசியம்.

மலைசாமியோ, தன் நிலை பற்றிய தாழ்மையுர்வை சுமந்து திரிபவன் .தன் மாமன் சுய நலம் கருதி காலில் விழுந்ததற்கே ஆயுளுக்கும் செருப்பு போடாமல் திரிபவன்.தன் நிலைக்கு தான் என்றுமே அடைய முடியாத மாமன் மகளை, அவள் சமூக அறத்திற்கு புறம்பாக நடந்து பிடியும் பட்டதால்,அடைந்து விட்டாலும் ,அவளை ஆண்டு அனுபவிக்காமல்(சொத்து அந்தஸ்தை அனுபவிக்க தவறவில்லை)அதற்கு தன் தாழ்மையுணற்சியே காரணம் என்ற உண்மையை வசதியாக மறந்து(மறைத்து),மனைவியின் பழைய தவறை சொல்லாமல் சொல்லி தினமும் அவள் பெண்மையை அவமதித்து,செருப்புக்கு சமமாகவே நடத்துகிறார்.(செருப்பையும் அணியவில்லை.இந்த செருப்பையும் அணையவில்லை)
படம் முழுவதும் ,கணவன் என்ற உரிமையை நிலை நாட்டாமல் ,தானும் தன சொந்தங்களும்(தங்கை மகனையே இழி பட விடுபவன் என்ன தலைவன்?)இழிவு படுத்த படும் போது வாய் திறக்காமல் சகித்து,கெட்டு போன வரலாற்றை சொல்லி உதைக்கும் அளவு செல்வது,பல கோடி மௌன கதைகள் பேசவில்லையா?மனைவிடமும் இச்சையை தீர்த்து கொள்ளாமல்,தன் sexual frustration ஐ ,தன் நிலைக்கு தாழ்வான வறிய பெண்களிடம்வேவ்வேறு நிலைகளில் வெளி காண்பிக்கிறார்.(வார்த்தைகளில்,கிண்டலாய்,வம்பு க்கிழ த்து தொட கூடாத இடங்களில் தொடுவது உட்பட)அவருடைய interraction முழுக்கவே ,நிலை தாழ்ந்தவர்களிடன் மட்டுமே(திருமணத்திற்கு பின் இவர் நிலை உயர்ந்து விட்ட போதிலும்).பஞ்சாயத்து காட்சியில் அந்த நிலை தாழ்ந்தவர்களே ,இவர் அற வீழ்ச்சியால் உயர் நிலை அடையும் போது அவர்களை எதிர் கொள்ளவே துணிவில்லை இந்த தலைமை நாட்டாமைக்கு?தன் சொந்த மனைவியிடமும், மற்ற பெண்களிடமும் நிரூபிக்க இயலா ஆண்மையை, கல்லை தூக்கி குயிலிடம் பௌருஷத்தை காட்டும் பரிதாப பாத்திரம் இந்த மலைச்சாமி.

தன்னை சார்ந்தே இயங்கும்,தன்னையே உலகமாக்கி வாழும்(அப்பா கூட weak ஆன ஒப்புக்கு சப்பாணி)குயிலிடம் ஈர்க்க படுவதில் என்ன அதிசயம்?குயில் அவருடைய இடத்தை அவருக்கு அளிக்கிறாள். கேலி கிண்டலால் அவரின் தகைமையை ,இளமையை திருப்புகிறாள்.அவரை விட தாழ்ந்தவள் என்று ஒவ்வொரு கணமும் மலைசாமியின் weak ஆன ego விற்கு தீனி கொடுக்கிறாள். தன் சம்மதம் கேட்க கூட அவசியமின்றி வெச்சிருக்கேன் என்று சொல்லும் உரிமையை, dominance வழங்கும் இந்த உறவு மலைசாமிக்கு இனிக்காதா பின்னே?குயில் வாழ்க்கை நிலையாமையில் உழலுவதால் ,வலிமையான துணையின்றி (தகப்பனும் பலவீனன்) ஏற்படும் electra complex , மலைசாமியின் நிலையறிந்து ,அடைவதும் சாத்தியம் என்ற கைகெட்டும் தூரத்தில் பழுத்த காதலை,அதனால் ஏற்படும் குற்ற உணர்வை,தியாகத்தால் மெழுகுகிறாள் .

பொன்னாத்தா ,தன் தகுதிக்கு குறைந்த அத்தை மகனை மணந்தாலும்,அவன் உதாசீனத்தால்(பெண்மை, மனைவி என்ற ஸ்தானம் மதிப்பு) அவளின் அற வீழ்ச்சியை வைத்து நகையாடி கொண்டிருக்கும் கணவனை, தன் பண செருக்கையும்,provider role கூட செய்ய முடியாத கணவனை ,எதிர் கொண்டு ,மூர்க்கத்தால் தற்காலிக வெற்றிகளை சுவைத்து,பெரும்துக்கங்களை கரைக்கிறாள்.(பின் என்ன sexual frustration ஐ மலைச்சாமி போல் ,இந்த பெண் ஜன்மத்தால் demonstrate செய்ய முடியாதே?).தன்னை மதியாத கணவன் முன் அழகாகவும்,சுத்தமாகவும் இருந்துதான் என்ன பயன்?ஆனாலும்,கணவனின் அற செருக்கில் பெருமையும்(ஜனகராஜிடம் வெளியிடுவார்),அவன் வேறொரு பெண்ணிடம் காட்டும் ஈடுபாட்டை அறிந்ததும் சீறும் possessiveness உம் ,அவளுக்கு மலைசாமியுடன் உள்ள மிச்சமிருக்கும் காதலை உணர்த்துகிறதே?(மலைசாமியிடம் மருந்துக்கும் காண படுவதில்லை).உலகத்தின் பார்வையில் தன் ஒழுக்கங்கெட்ட முத்திரையை மறைக்க இந்த பத்ரகாளி வேஷம் அவசியமா?(மயில் வாகனன் விவரிக்கும் பொன்னாத்தாள் அவ்வளவு பிடாரியல்லவே!!)தன் கணவனின் குற்றத்தை பஞ்சாயத்திடமும்,உறவுகளிடமும் தம்பட்டம் அடிப்பதில்,தன் பழைய களங்கத்தை கரைக்கிறாளா?

இந்த முக்கோண ஆண் -பெண் விவரிப்பில்,அழகான திரைகதை,மௌன காட்சி(சாட்சி?),ஒன்றிரண்டு வசன குறிப்புகள்,பார்வையாளர்களின் இட்டு நிரப்பும் பயிற்சிக்கு சவால் விடுகிறது.


கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதாபாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன? அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.

தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூட கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பறி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சா த்திய படாது)

வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.

இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.
வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.
பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)

கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜ னரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோக முள் கதை போல)

பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.

Gopal.s
19th August 2016, 08:30 AM
தேசியவாதியாக நடிகர்திலகம் நேசிக்கும் சுதந்திர திருநாளில் வெளியான நடிகர்திலகத்தின் மற்ற காவியங்கள்.( முதல் மரியாதை தவிர)

சாரங்கதாரா.

ராமன் எத்தனை ராமனடி.

எழுதாத சட்டங்கள்.

ஒரு யாத்ரா மொழி.

RAGHAVENDRA
21st August 2016, 09:18 AM
http://www.easybusinesscardmaker.com/wp-content/uploads/2014/07/Achievement.jpg

Great Achievement..

That too in Mayyam website.

Eleven Lakhs viewers and still going strong ... Nadigar Thilagam Sivaji Ganesan ... Part 9 ....

Harrietlgy
21st August 2016, 05:43 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 140 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_image/22/14717013811807053571Tamil_News_Nellai.jpg

ஏவி.எம். சரவணன், புதிய கதாசிரியர் ஏ.சி. திருலோகசந்தர் சொன்ன கதையை அப்படியே அவரிடம் திருப்பி சொன்னார். அதற்குப் பிறகுதான் திருலோகசந்தருக்கு திருப்தி ஏற்பட்டது. அவர் சொன்ன கதையின் தலைப்பு `அவள் தந்த வாழ்வு.’ கதை ஏவி.எம். சரவணனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தன் தந்தையிடம் போனார்.
`அப்படியா!’ என்று கேட்டுவிட்டு அந்த கதை பைலை வாங்கி தன்னிடம் வைத்துக்கொண்டார். சில நாட்கள் கழிந்தன. ஏவி.எம்.மின் தொழில் நண்பர் பசவராஜ் ஏவி.எம்.செட்டியாரை சந்திக்க வந்தார். ஏவி.எம்முடன் சேர்ந்து `பேடர் கண்ணப்பா’ படத்தை எடுத்தவர் பசவராஜ்.
இந்த படத்தின் மூலமாகத்தான் கன்னடத்தின் மிகப்பெரிய நடிகரான ராஜ்குமார் திரையுலகிற்கு அறிமுகமானார்.
`பேடர் கண்ணப்பா’ படத்தில் ஏவி. எம்முடன் இணைந்த பசவராஜ், அப்போது இன்னொரு படம் எடுக்கவே ஏவி.எம்.செட்டியாரை சந்திக்க வந்தார்.
திருலோகசந்தர் சொன்ன `அவள் தந்த வாழ்வு’ கதையை அவரிடம் கொடுத்தார் செட்டியார். அந்தக் கதை பசவராஜுக்கும், இயக்குநர் பீம்சிங்கிற்கும் மிகவும் பிடித்துப் போனது. அவர் சரவணனை சந்தித்து `அவள் தந்த வாழ்வு’ கதையை செட்டியார் சொன்னதால் தான் எடுக்கப்போவதாகச் சொன்னார். ஆனால், சரவணனுக்கு அதில் உடன்பாடில்லை. பங்குதாரர்களாக ஏவி.எம். இருந்தாலும், அப்படி எடுக்கும் படங்களில் ஏவி.எம். பேனரின் பெயர்கள் வராது. அதனாலேயே சரவணனுக்கு பிடிக்கவில்லை. தந்தையிடம் வாதாடியதால் `அவள் தந்த வாழ்வு’ ஏவி.எம். பேனரில் ‘பார்த்தால் பசி தீரும்’ படமாக வந்தது!
உண்மையில் அந்த படத்தை ஏ.சி. திருலோகசந்தர் இயக்க வேண்டுமென்பதுதான் சரவணனின் விருப்பம். ஆனால் பங்குதாரரின் விருப்பப்படி பீம்சிங் அந்த படத்தை இயக்கினார். பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம் அது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சவுகார் ஜானகி, சரோஜாதேவி என்று அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் நடித்த படம் இது! படம் முடிந்து டைட்டில் போடும்போது யார் பெயரை முதலில் போடுவது என்பதில் பிரச்னை வந்தது!
`என் பேர்தானே மொதல்ல வரணும்?’ என்று கேட்பார் சரோஜாதேவி.
`நான்தானே சீனியர்? என் பெயர்தானே முதலில் வரவேண்டும்?’ என்பார் சாவித்திரி.
எல்லோருக்கும் சீனியர் நடிகை சவுகார் ஜானகி.
`எல்லோருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் நான் டைட்டில் போடுகிறேன்’ என்று சொல்லி பிரச்னையை தீர்த்து வைத்தவர் பீம்சிங்!
`என்ன செய்யப்போகிறார்?’ என்று எல்லோரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். இறுதியில் இயக்குநர் பீம்சிங் ஓர் அருமையான ஐடியா செய்தார்.
`உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று போட்டு எல்லோர் படத்தையும் ஒட்டிவிட்டார். `பார்த்தால் பசி தீரும்’ படத்தை பொறுத்தவரையில் சரவணனுக்கு ஒரு மனக்குறை இருந்தது. திருலோகசந்தர் மிக அருமையாக திரைக்கதை எழுதியிருந்தார். ஆனால், அந்த கதையை படமாக்கிய போது சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த மாற்றங்கள் சரியாக இல்லை. அதனால் சரவணனுக்கு அது பிடிக்கவில்லை. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் அந்தப் படம் ஓரளவு ஓடியது. இந்த தகவல்களை ஏவி.எம். சரவணன் தன்னுடைய `ஏவி.எம். 60’ என்ற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதே போல் அடுத்து வந்த `பாவமன்னிப்பு’ படத்தை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1960ம் வருடம் ஜனவரி மாதம் 20ம்தேதி `பாவமன்னிப்பு’ படத்திற்கு பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தை ஏவி.எம். நிறுவனம், பீம்சிங்கோடு சேர்ந்து தயாரித்தது. கோல்டன் ஸ்டூடியோவில் பீம்சிங் சந்திரபாபுவை வைத்து `அப்துல்லா’ என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி வரை படம் வளர்ந்திருந்தது. ஒரு நாள் பீம்சிங், ஏவி.எம். சரவணனை அழைத்து எடுத்த வரையில் படத்தை போட்டுக்காட்டினார். அந்தக் கதை சந்திரபாபு எழுதிய கதை. ஒருவன் இந்துவாக பிறந்து, ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டு, ஒரு கிறித்தவ பெண்ணை திருமணம் செய்து கொள்வது போல் கதை அமைந்திருந்தது.
`எவ்வளவு பண்ணியும் படம் சரியாக அமையலே. முழுவதையும் மறுபடியும் ரீ-டேக் பண்ணனும் போலிருக்கு’ என்று சற்று சலிப்பாகப் பேசினார் பீம்சிங்!
அந்தக் கதை ஏவி.எம். சரவணனுக்கு பிடித்திருந்தது.
`இந்த கதை புது விஷயமா இருக்கு. நாம பார்ட்னர்ஷிப்பில் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது’ என்று தன் தந்தையிடம் சொன்னார் சரவணன்.
`சரி! பீம்சிங்கை அழைத்து வா’ என்றார் அவருடைய தந்தையான செட்டியார். எல்லோரும் கலந்தாலோசித்தார்கள்.
` எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார் செட்டியார்.
`நாலரை லட்சம் ஆகும்’ என்றார் பீம்சிங்.
`சரி! நான் பைனான்ஸ் பண்றேன். வர்ற லாபத்தை பாதியா பிரிச்சுக்குவோம்’ என்றார் செட்டியார். ஒப்பந்தம் கையெழுத்தானது.
திரைக்கதை அமைக்கும் முயற்சியில் பீம்சிங் தீவிரமாக ஈடுபட்டார். எப்போதும் அவர் தன்னுடன் ஓர் எழுத்தாளர் குழுவையே வைத்திருப்பார். இறைமுடிமணி அரங்கண்ணல், வலம்புரி சோமநாதன் போன்றவர்கள் அவருடன் இருப்பார்கள்.
திரைக்கதையை அவரவர் பாணியில் ஒவ்வொருவரும் அலசுவார்கள்.
மொத்தக் கருத்தையும் திருமலை என்பவர் ஒரு ஷேப்புக்கு கொண்டு வருவார்.
இப்படி பலரது முயற்சிகள் திரைக்கதை, வசனம் எழுதி அது ` வசனம்– சோலமலை’ என்ற பெயரில் வெளிவரும்.
இதுதான் பீம்சிங்கின் வேலை பாணி!
‘அப்துல்லா’ கதையும் அப்படித்தான் விவாதிக்கப்பட்டது.
அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தம்பி சண்முகம் திருமணம் சென்னை ஆபட்ஸ்பரியில் நடந்தது (இந்த இடம் சென்னை அறிவாலயத்திற்கு பக்கத்தில் தற்போது இருக்கும் ஹயாத் ரெசிடென்சி ஓட்டல்).
அந்த திருமணத்திற்கு பீம்சிங்கும் வந்திருந்தார்.
`அப்துல்லா’ படத்தின் கதை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?’ என்று அந்த திருமணத்தில் பீம்சிங்கை சந்தித்த சரவணன் கேட்டார்.
`ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. ஹீரோ காரெக்டர் பிரமாதமாக ஷேப் ஆகியிருக்கு. ஆனால் அதை சந்திரபாபு தாங்கமாட்டார். நாம் சிவாஜி பாயைத்தான் வெச்சு எடுக்கணும்’ என்றார் பீம்சிங்.
அவர் எப்போதும் நடிகர் திலகத்தை ‘சிவாஜி பாய்’ என்றுதான் அழைப்பார்.
அதே போல் சிவாஜி இவரை `பீம்பாய்’ என்றுதான் அழைப்பார்.
`அதைப் பத்தி ஒண்ணுமில்லே!ஆனா கதை சந்திரபாபுவுடையது என்று சொன்னீங்க. ஆனால் அதிலே அவர் நடிக்கப்போறதில்லேங்கிற விஷயத்தை அவர் கிட்ட சொல்லணுமில்லே?’ என்று கேட்டார் சரவணன்.
`நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்’ என்றார் பீம்சிங்! ‘ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது’ என்றார் பீம்சிங்!
அது என்ன சிக்கல்?
(தொடரும்)

Harrietlgy
21st August 2016, 06:15 PM
நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவாலிய விருதை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக இந்து விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

RAGHAVENDRA
22nd August 2016, 08:04 AM
https://pbs.twimg.com/media/CKKP5fTUEAEkbos.jpg:large

Congratulations Kamal Hassan. Follow the footsteps of our Thalaivar NT and you are bound to reach more heights.

Gopal.s
24th August 2016, 08:09 AM
நான் ஏற்கெனெவே பலமுறை எழுதியது. கமலும் பலமுறை பல்வேறு சூழ்நிலைகளில் சொன்னது. இன்றைய முன்னணி கதாநாயகர்கள் இருவரும் பாலச்சந்தரால் அறிமுகம் செய்விக்க பட்டாலும் ,நடிகர்திலகத்தை குருவாக பாவித்து ,அவருடைய நடிப்பின் நிழலை தொடருபவர்கள்.நடிகர்திலகமும் ,தன சிஷ்யர்களுடன் இணைந்து நடித்து அவர்களை ஆரம்ப நிலையிலிருந்து ஊக்குவித்துள்ளார்.

நடிகர்திலகத்திடமிருந்து திரை ஆளுமை,ஆண்மை ,ஸ்டைல்,இவற்றை ரஜினி கவர, படத்துக்கு படம் வித்தியாச கதைக்களன்,பாத்திரங்கள்,ஒப்பனை மாற்றம்,சோதனை முயற்சி இவற்றை கமல் கவர, இருவரும் நமது ஒரே கடவுளின் இரு வடிவாக திகழ்கிறார்கள்.

கமல் ஒரு பன்முக திறமையாளர்.. புதுமை விரும்பி. அவருக்கு, நடிகர்திலத்தின் வழியில் chevaliar கிடைத்ததில் மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.

வாழ்த்தின் ஒரு பகுதியாக, P_R எழுதிய தேவர் மகன்.குரு சிவாஜி என்ற நடிகருக்கும், சிஷ்யன் கமல் என்ற creator இவர்களுக்கு அற்புதமான tribute .

Gopal.s
24th August 2016, 08:11 AM
தேவர் மகன்- 1992 (By P_R)

மேதை என்ற சொல்லை நாம் தண்ணியைப் போல செலவிடுகிறோம். பட்டங்களும் ஸ்துதிகளும் நிறைந்த நம் தமிழ் சினிமாவால் கோடம்பாக்கத்தில் ஒரே மேதை நெரிசல். துதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் பிழைத்தோம். வெறும் துதிகளை வைத்து மதிப்பீடுகளை உருவாக்க முனையும்போது படுதோல்வி தான். சக்ரவர்த்தியின் புத்தாடைகள் ஜொலிப்பதைக் காணும் ஆரவாரம் தான்.

இச்சூழலில் உண்மையான மேதமைக்கு மதிப்பு குறைந்து போவது இயற்கை. அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழும் சூழல். இத்தகைய சூழலில் பிரமிக்கவைக்கும் திறமையாளன் நிகழ்த்துவது என்னவென்றால் அவன் மீது ஏற்படுத்தும் மதிப்பு மட்டுமல்ல, அவன் துறை மீதே ஏற்படுத்தும் ஒரு மதிப்பு நம்பிக்கை. கிட்டத்தட்ட உண்மை மீதே நம்பிக்கை வரவழைப்பதைப் போல.

இத்தகைய ஒரு அதிசய நடிப்பு தான் சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்தியது. ஓடாய் தேய்ந்து போய் ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மட்டுமே காண்பிக்கப்படும் தமிழ் படங்களைக்கூட பரவலாகப் பார்த்தவன் என்ற முறையில் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்கிறேன்: "நான் பார்த்ததிலேயே சிறந்த நடிப்பு" என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.

இது என் விருப்பத்தில் மிகையான வெளிப்பாடு மட்டும் அல்ல.
இது ஒரு 'அப்ஜெக்டிவ்' (இதற்கு தமிழ் என்ன ?) உண்மை என்று பின்வரும் பதிவுகளில் நிருவ முயல்வேன்.


நடிப்பு என்பது என்ன ?

ஐரிஷ் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் கலையின் தன்மையைப் பற்றிய தனது குறுங்கட்டுரையில் சொல்கிறார்:

'உணர்ச்சி' என்பதை பொறுத்தவரை நடிகனின் வித்தையே , கலைகளுக்கு முன்மாதிரி: From the point of view of feeling, the actor's craft is the type (of all art).

இது வைல்டின் குறும்பு. ஏன் ? நடிகனின் வித்தையின் மகிமையே அவன் நிகழ்த்திக்காட்டும் உணர்ச்சிகள் எல்லாமே பொய் என்பது தானே. இங்குதான் 20ம் நூற்றாண்டின் நடிப்பியல் வரலாற்றில் முக்கியமான இரு வாதங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.

ஒன்று: பாத்திரத்தோடு முழுவதுமாக இணைவது. இதை ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறை (மெதட் ஆக்டிங்) என்று சொல்வார்கள். பாத்திரத்தின் உந்துதல்கள், மனநிலை, பேசும் முறை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பாத்திரமாகவே மாறிவிடுவது - தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அர்த்தம் நீங்க அடித்துத் துவைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் இது

இதற்குமேல் இங்கு நிகழ்வது நடிப்பு என்று கூறுவதே கடினம். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாத்திரம் எவ்வாறு பேசும், பிரதி-வினைக்கும் (ரியாக்டுக்கு மோசமான மொழிபெயர்ப்பு - மேலான சொல் இருந்தால் கூறவும்) என்பதை அவ்வாறு வாழ்வது தான் நிகழ்கிறது.

இதிலிருந்து பிரிந்த கிளை நடிப்பியல்களின் (உம். லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்ற நிபுணரின் முறைகள்) மாணவர்கள்/விர்ப்பன்னர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த நடிகர்களான பிராண்டோ, டி நீரோ, ஹாஃப்மன் யாவரும்.

இன்னொரு முறை: பாத்திரத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை ஆழ்ந்து கவனித்து நடிப்பது. இதில் நடிப்பது என்பது மிகுந்த பிரக்ஞையுடன் நிகழ்வது. சொடக்கிட்ட நொடியில் நிஜ உலகுத்துக்கும் நடிப்புலகத்துக்கும் பாய முடிய வேண்டும். வேறு பெயர்கள் இல்லாதலால் இதற்கும் வைல்ட் பெயரையே வைத்துக்கொள்ளலாம் ("என் மேதமையை என் வாழ்க்கையில் செலவிடுகிறேன், என் படைப்புகளில் என் திறமையை மட்டுமே பயன்படுத்துகிறேன்"...I reserve my genius for my life, I only use my talents in my works )

இது பெரும்பாலும் லாரென்ஸ் ஒலிவியெ போன்ற பிரட்டிஷ் நடிகர்கள் கையாண்ட உத்தி. இரு சாராரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் உண்டு.

காட்டாக: மாரதான் மான் என்ற அமெரிக்கப் படம். ஒலிவியேவும் (வைல்ட் பள்ளி) டஸ்டின் ஹாஃப்மனும் (ஸ்ட்ராஸ்பெர்க் பள்ளி) இணைந்து நடிக்கும் ஒரு காட்சி. அதில், மூன்று நாட்களாக தனியறையில் அடைக்கப்பட்ட ஹாஃபமனைக் காண வில்லன் ஒலிவியெ வருகிறார்.

அக்காட்சிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக ஹாஃப்மன் மூன்று நாட்கள் உண்ணாமல் இளைத்து கண்ணின் கீழ் கருவளையங்கள் வந்து சோர்ந்து கிடந்தாராம். படப்பிடிப்புக்கு வந்த ஒலிவியெ ஹாஃமனைப் பார்த்தார். அவர் உடல்நலத்தைப் பற்றி இயக்குனர் ஜான் ஷ்லெசிங்கரிடம் விசாரித்தபோது, ஹாஃப்மனின் "உடல்வருத்த முயற்சிகளைப்" பற்றி அவர் (சற்று பெருமையாக) சொல்லியிருக்கிறார். ஒலிவியெவின் பதில் " ஓ...அந்த தம்பி "நடிப்பு" என்பதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?" (Hasn't the young boy heard of acting)

கலைஞன் கலைக்காக செய்யும் முயற்சிகளை ஒதுக்கிவிட்டு, படைப்பை மட்டுமே ரசிக்க முடிந்துவிட்டால் (ஊடகங்களின் செய்திப்பொழிவால் இது கடினமாகிக்க்கொண்டே வருகிறது), மாமேதமையின் அடையாளம் வைல்ட் பள்ளியிலேயே என்று தோன்றுகிறது. பல வகை நடிப்புக்குச் சொந்தக்காரர்களாக, ஒரே சமயத்தில் ஒரே சூழ்நிலைக்கு நினைத்த மாத்திரத்தில் பலவகை பாணிகளை நிகழ்த்திக்காட்டவல்லவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.

எனக்கு புரிந்தவரை சிவாஜி இவ்வகை தான். ஆழமான கவனிப்பும், அபாரமான உள்வாங்குதலும், அதிசயமான திறமையும் இணைந்த ஒரு நடிப்பே பெரிய தேவரை உருவாக்கியது.

தேவர் மகன் கமல்ஹாசன் எழுதிய காட்ஃபாதர்.

நியூயார்க்கின் இத்தாலிய மாஃபியா குடும்பங்களில் ஒன்றான கொர்லியோன் குடும்பத்தின் தலைவன் விடோ கொர்ர்லியோன்.
தன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சான்டினோ , ஃப்ரெடோ என்ற தனது இரு மகன்களையும்விட தன் இளைய மகனான மைக்கேல் மீதே அவருக்கு நம்பிக்கை, பிரேமை. ஆனால் மைக்கேலோ எதிர் தரப்பு அடையாளங்களைத் தேடுகிறான். ராணுவத்தில் சேர்கிறேன், ப்ரோடஸ்டன்ட் பெண்ணைக் காதலிக்கிறான் (இத்தாலிய-அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளையும், கத்தோலிக்க மதத்தையும் பெரிதும் மதிப்பவர்கள்), குடும்பத் தொழிலிலிருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ செல்ல முயல்கிறான். சூழ்நிலைகளின் மாற்றங்கள் எவ்வாறு அவனை தன் இயல்பான அடையாளங்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுகின்றன என்பதுதான் கதை. காட்ஃபாதர் என்ற பட்டம் மைக்கேலை(யும்) குறிக்கக்கூடும் சாத்தியங்களைப் படம் வளர வளர வலுப்படுத்துகிறது.

தேவர் மகன், இந்த எலும்புக்கூட்டை எடுத்துக்கொண்டு வரையப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகக் கச்சிதமாக ஏழுதப்பட்ட திரைக்கதைகளில் தேவர் மகன் முன்னணி வகிக்கிறது. நம் அடையாளங்களை நாம் மறுக்க முடியுமா ? கல்வி, அன்னிய (உயர் ?) கலாசார பரிச்சயத்தால் நம் சூழலிலிருந்து விடுவித்து கொள்ள முடியுமா ? இல்லை நம் கலாசார அடையாளங்களை, அவற்றின் அழுக்குகளோடு ஏற்றுக்கொண்டு உள்ளிருந்து மட்டுமே மாற்ற முயல முடியுமா ? கடைசியில், மிக முக்கியமாக: நமது அடையாளங்கள் நமது இயல்புகளில் பிரிக்கமுடியாதவாறு பிணைந்திருக்கின்றனவா ? (தேவர் மகன் தேவரா ?) இத்தகைய கேள்விகளை அழகாக எழுப்பும் படம். இந்தியச் சூழலில் இவை எல்லாம் மிக முக்கியமான சமூகக் கேள்விகள். காட்ஃபாதருக்கு இப்படி ஒரு (இந்திய) சமகோடு யோசித்ததே சாதனை தான்.

சூழ்நிலைகள் ஒப்பிடத்தக்கவை என்றாலும் விடோ கொர்லியோனும் பெரிய தேவரும் முற்றிலும் வேறுபட்ட மனிதர்கள். நியாய தர்மம் பற்றியா விவாதங்கள், கடமை/பொறுப்பு ஆகியவற்றை பற்றிய உரையாடல் எல்லாம் டான் விடொ செய்ய மாட்டார். மைக்கேலிடம்: " உன்னைத் தானே நம்பணும்..வேற யாரு இருக்கா நம்புறதுக்கு ?" என்ற உருக்கமான கேள்வியை கேட்க மாட்டார்.தேவர் மகனில் அந்த மையக் காட்சி தான் பெரிய தேவரின் முழு சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. இருந்தாலும்...அகர வரிசையில் வருவோம்.

படத்துவக்கத்தில் மகன் சக்தியை பற்றிய எதிர்பார்ப்பு, ஆனால் இளைக்காத தற்பெருமை ("எல்லாம் பழைய முறுக்குத்தேண்டி"). மகனைக் கண்டதும் அவர் காட்டும் பெருமிதம். அதன் பின் சக்தி காரை நோக்குவதால் 'அங்கு என்ன இருக்கிறது' என்ற ஆர்வப்பார்வை. பானுவைப் பார்த்ததும் வரும் இயல்பான தயக்கம் (கிட்டத்தட்ட வெறுப்பு). இதுவரை அந்தக் காட்சியில் வசனம் இல்லை என்பதே பார்ப்பவர்கள் உணர வாய்ப்பில்லை. "ஆரு இவுக ?" என்ற கேள்வியின் தொனியும் "வாங்க" என்பதில் உள்ள வரவேற்பின்மையுமே கதைகள் சொல்லும். நடிகனின் குரல் செய்ய வேண்டியவற்றை இதற்கு இணையாக சுறுக்கமாக காட்ட இயலாது.

பானுவைப் பற்றிய ஆவலை, மிடுக்கு குறையாமல் கேட்பது அடுத்த காட்சி.

"சீராலா""என்ன.......ளா ?" என்பதில் அந்த எள்ளலின் ஆரம்பம்.

வட்டார வழக்கையும், பேச்சு வழக்கங்களையும் பரிபூரணமாக உள்வாங்கிக்கொண்டு பேசப்பட்டது: "ங்கொண்ணேன் ஸ்டேஷ்னுக்கு வந்தாரா ?"
தனது ஃப்ரெடோ குடிகாரனாக இருப்பதைப் பற்றிய வருத்தத்தை இக்காட்சியிலேயே பதிவு செய்கிறார். சிரிப்பில் !
இதைப் பற்றிய கோபம் இரண்டு இடங்களில் வருகிறது, ஒரு இடத்தில் கிண்டலாக, ஒரு இடத்தில் உக்கிரமாக :

"ச்சாப்டர ஓட்டலா ....அட போடா....அம்மூர்ல எவன்டா ஓட்டல்ட ச்சப்டுவியான்.....ங்கொண்ணென் மாதிரி எவனாச்சும் இருந்தா அவன் ச்சப்டுவியான்"

"என்ன ஐயா, கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள வேலியை போட்டுப்புட்டாய்ங்க"
"நீங்க ஏன் கண்ணை மூடுறீய ? திறந்துகிட்டே இருக்கணும்......நாம தான் கண்ணை திறந்திட்டிருக்க நேரம் ரொம்ப குறைச்சல் ஆச்சே"

இதுபோன்ற கலைஞர்களுக்காக நாம் கண்னை திறந்திருக்கும் நேரம் குறைச்சல் தான்

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முக்கியமான பாத்திரங்க்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்திவிடவேண்டும் என்பது ஒரு திரைக்கதை நியதி. நாவலாசிரியரைப்போல "அவர் கொஞ்சம் பழமைவாதி, ஆனால் பாசக்காரர், சர்காஸ்டிக்,..." என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு விரல் சொடக்கிக்கொண்டுவிடும் வசதி திரையெழுத்தாளனுக்கு இல்லை. காட்சிகளில் நீட்டிக் காட்டவேண்டும். சம்பவங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் அவை உதாரணங்களாகவே இருக்கும். ஒரே காட்சியில் அதிக பரிமாணங்களைக் காட்டுவது கஷ்டம்.அவற்றைத் தெளிவாக பார்வையாளனைக் குழப்பாமல் கொண்டுபோய் சேர்ப்பதும் எளிதல்ல.

'போற்றிப் பாடடி' பாடலில் காட்சித்தொகுப்புகளில் பல அழகான இடங்கள். வசனங்கள் எல்லாம் யாருக்குத் தேவை என்பது போல. மனநிறைவுடன் திருமணம் நடத்தி வைப்பது, தான் கடந்து போகும்போது எழுந்துகொள்ளும் சாப்பிட்டுக்கொண்டிருப்பவார்களை கையசைத்து அமரச் சொல்வது, கம்பீரமாக உட்கார்ந்து துதிப்பாடலைக் கேட்பது இவையெல்லாம் சிவாஜி தூக்கத்தில் கூட செய்வார்.

படிக்கக் கொடுத்துவிட்டு குறுக்கே பேசிக்கொண்டிருக்கும் மகனை "படிக்க விடு" என்று சைகை செய்வார். சந்தோஷமாக துணி வழங்கிக்கொண்டிருப்பரை பானு படம்பிடிக்க "என்ன இது" என்பதைப்போல் பானுவையும் "வேண்டாம் என்று சொல்" என்று சக்தியையும் சொல்வார். அதன் பிறகு முகத்தில் ஒரு இறுக்கம் குடிகொள்ளும். இவையெல்லாம் 2-3 நொடிகளில், வசனமில்லாமல். பாடல் முடிந்ததும் இந்த மனிதரை நமக்கு பல நாட்களாக தெரிந்தது போன்ற பிரமையை எழுத்தாளரும் நடிகரும் சேர்ந்து உருவாக்கிவிடுகிறார்கள்.

புரிந்துகொள்ளப்படுவது ஒரு சொகுசு (It is a luxury to be understood) என்று அமெரிக்க கவிஞர் எமர்ஸன் சொல்கிறார்.நமக்கு பிரியமானவர்கள் நம்மை புரிந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு ஆதாரமான எதிர்பார்ப்பு. அவர்களிடம் தன்னை 'நிரூபித்து'க் கொள்ள வேண்டிய நிலைமை, சொல்லிப் புரியவைக்கப்படவேண்டிய நிலைமையே வருத்தமனாது. பெரிய தேவர் தன் மகனால் கூட புரிந்துகொள்ளப்படவில்லை என்ற வருத்தத்தைத் தெளிவாக்கும் காட்சி அந்த உணவருந்தும் காட்சி.

பானுவின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை பெரிய தேவர் பதிவுசெய்வதாக காட்சி ஆரம்பிக்கும்.

ஐயயே.... உங்களைப் பொம்பளையாவே நினைக்கலீங்களே......இந்த வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியாத்தான் நினைக்கிறேன்.
அரைச் சிரிப்புடன் சொல்லும் அழுத்தமான வார்த்தைகள்.

தன் மகன் இவ்வூரில் (இவ்வுருக்கு) எதுவும் செய்வதாக இல்லை, செய்ய முனையும் வியாபாரம் எல்லாம் வெளியூரில் என்பதே அதிர்ச்சியாக இறங்குகிறது. ஆனால் ஆச்சர்யமாக வெளிப்படுகிறது:

"நீ எப்பிடி செய்வே ?"

"....பானுவோட அப்பா ஹொடேலியர்....அவருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும்.."

"ஓ...அவருக்கு எல்லாம் தெரியுமோ.....இந்தப் பொண்ணு இங்க உன் கூட வந்திருக்கிறதும் தெரியுமோ ?"
இந்த கடைசி வரியில் சிவாஜி காட்டும் விஷமமும், கிண்டலும், அதிருப்தியும் விவரணைக்கு உட்பட்டவை அல்ல.

தான் தேர்ந்தெடுத்த பெண்ணை தந்தையின் கண்களில் உயர்த்த சக்தி அவர்கள் குடும்பத்தைப் பற்றி பேசுவான். இதில் தான் அவன் தன் தந்தையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்று புலப்படும். ஜாதி, செல்வ அந்தஸ்து போன்ற விஷயங்களுக்காகவே பானுவை அவர் நிராகிரப்பதாக நினைக்கிறான்.

"...பெரிய பணக்காரங்க...அங்க ராஜூன்னு சொல்வாங்க....நம்ம தேவர்-க்கு இணையான கேஸ்ட் தான் யா"
பணத்தைப் பற்றி கமல் சொன்னதும், சிவாஜி புருவத்தை உயர்த்தி "அடேங்கப்பா" என்பதுபோல பாசாங்கு செய்வார்.

ஜாதி பற்றி கேட்டதும் முகத்தை சுளிப்பார்.இதை கமல் பேசும்போது படக்கட்டத்தில் (frame) முன்னால் இருக்கும் சிவாஜி ஃபோகஸில் இருக்க மாட்டார். ஆனால் அவர் முகபாவனைகள் தெளிவாகப் புரியும்படி இருக்கும்.

தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !

Gopal.s
24th August 2016, 08:14 AM
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி

என் குழந்தைகளிடத்தில் எனக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர்களுக்கு நான் அதிகமாக செல்லம் கொடுப்பதைத் தான் பார்க்கிறீர்களே....செவிசாய்க்க வேண்டிய நேரத்தில் அவர்கள் பேசுகிறார்கள். (I have a sentimental weakness for my children, and I spoil them as you can see; they talk when they should listen. )

இது காட்ஃபாதரில் பெரியவர், விடோ கொர்லியோன், பேசும் மிக அழகான வசனம். தவறு செய்த மகன் சான்டினோவை வெளியாட்கள் முன்னிலையில் கடிந்து கொள்ளும் இடத்தில் வரும் வசனம். அம்மனிதரின் கோபம் அவர் ஸ்டைலை இழக்கச் செய்யவில்லை. வெளி மனிதர்கள் சென்றபின் "உன் மூளை பழுதாகிவிட்டதா ?" என்றே திட்டுவார். ஆனாலும் மிதமாகவே.

பெரிய தேவர் அப்படி அல்ல. பெரிய தேவருக்கு சக்தி வந்ததிலிருந்தே ஏமாற்றம் தான். தெலுங்குப் பெண்தோழி, நகரத்துக்கு புலம்பெயர்ந்துவிட அவன் திட்டம் என்று. ஆனால் ஊரில் சக்தியால் பிரச்சனை கிளம்புகிறபோது கோபம்-ஏமாற்றத்துடன் சேர்ந்துகொள்கிறது.

அழைக்கப்பட்ட சக்தி அவருக்கு முன் நிற்காமல் பக்கவாட்டில் நின்று, அப்பாவிக்கு பின் நிற்கும். கணக்குப்பிள்ளையிடம் "எதற்காக அழைத்திருக்கிறார்" என்று சைகையில் கேட்டுக்கொண்டிருப்பான். பெரிய தேவர் ஒரு சாய்வு நாற்காலியில் சாயாமல் அமர்ந்திருப்பார். கைபனியனுக்குமேல் துண்டு போர்த்தி. "முன்னால் வா" என்று வலது கையால் சைகை செய்வார், எதன் மீதும் குறிப்பாக பார்வையை செலுத்தாமல்.

அவர் ஏன் கூப்பிட்டார் ? கோபமாக இருக்கிறா ? ஏன் ? இதுவரை நடந்தவற்றில் ஏதாவது அவரை கோபப்படுத்தியதா ? இவை சக்தி மனதில் மட்டும் இருக்கும் கேள்விகள் அல்ல. பார்வையாளர்கள் மனத்திலும். இந்த காட்சியில் ஓரிரு காமிரா கோணங்கள் இதை உணர்த்தும் வகையில் சக்தியின் நோக்கில் இருக்கும் (point of view shots)

அதனால் பெரிய தேவர் மீதே முழுக்கவனமும். இங்கு அவர் கதைமாந்தர் மட்டுமல்ல கிட்டத்தட்ட கதைசொல்லி.

"ஏன் போனீய ?" என்று கேட்கும்போது பார்வை நேராக யாருமில்லாத இடத்தில் பாயும்.

"கோவில் கும்பிடத்தானேய்யா" என்று பொறுப்பில்லத பதில் வந்த மாத்திரத்தில் ("ஐயோ" என்பதுபோல வாயை தட்டிக் கொள்ளும் கணக்குப்பிள்ளை) பெரிய தேவர் முதல் முறையாக மகனைப் பார்த்து "தர்க்கம் பண்றீய ?" என்பார்.

பானுவை காரணம் சொல்ல முயன்று, அது தவறை விட மோசமான காரணம் என்று சக்தி உணர்வதற்குள்
"பானு....பானு கோவில் பாக்கணும்னா பூட்டை உடைக்கணுமா ?" என்று கேட்டுவிட்டு மகனை கூர்மையாகப் பார்ப்பார். அவன் கூறும் பதிலை அளந்துகொண்டு. ஒரு தலைவனுக்கான பொறுப்பின் சுவடே இல்லாமல் அவன் இசக்கியை பழி சொல்ல.....

"ஓஹோ அப்பொ உங்க தலைமையில இசக்கி பூட்டை உடைச்சிறுக்கார். அப்பிடித்தானே ?" என்ற கேள்வியில் கடுங்கோபத்திலும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கும் கிண்டல். சுட்டெரிக்கும் பார்வையில் தெளிவாகத் தெரியும் ஏமாற்றம். கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டதுபோலக் கூட இருக்கும்.

சக்தி:"என் தப்புத்தேன் யா"
கவனிக்கப்படவேண்டிய வசனம், பின்னர் ஒரு முறை படத்தில் வரும். அப்போது தான் சக்தி அதை மனமுணர்ந்து சொல்வான். அப்போது தான் அவன் தலைவன் ஆனது - சொக்காய் மாற்றிக்கொண்ட போது அல்ல.

இம்முறை இது இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லப்படும் வாய்வார்த்தை. அதை நன்கு உணர்ந்த பெரிய தேவர்:
"அப்பா ...ஒத்துக்கிட்டாகப்பா....உங்க தப்பில்லையா...என் தப்பு..
.....எலேய் அந்தப் பயகள எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கச் சொல்லு.........பஞ்சாயத்தில வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கிர்றேன்...என்ன பண்ண முடியும்"

முதல் பாதியில் உத்தரவு பிறப்பிக்கும் தலைவனின் தொனி. இரண்டாவது பாதியில், வரவிருக்கும் அவமானத்தை இப்போதே அநுபவிப்பதுபோல கூனிக்குறுகும் தொனியும் உடல்மொழியும் (''என்ன செய்ய முடியும்' என்பது கையே பேசிவிடும்).

"எசக்கி மன்னிப்பு கேட்கட்டும் ? எங்கே எசக்கி ?" என்று , நமக்குத் தெரிந்த அளவே தெரிந்த சக்தி கேட்க,

"எலே....ஒண்ணும் தெரியாம திர்ரவென் !" என்று வெடிப்பார்.

பானுவின் வருகையால் ஒரு பொய்யான இடைப்பட்ட அமைதி நிலவும். சக்தி கணக்குப்பிள்ளை பூசினாற்போல சொல்லும் அறிவுரையை எதிர்த்து வாதிட "அவுக சொல்றாஹல்ல ?.....கேட்டா கௌரவம் குறைஞ்சிரும் உங்களுக்கு..." என்றுவிட்டு...."போங்க" என்பார்.

பானு வந்த நொடி அமைதிக்குப் பிறகும் அவள் குரல் சன்னமாகவே ஒலிக்கும். மறுமுறை சொல்லும்படி ஆகும். இம்முறை காலில் விழும்போதும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரி தொனிக்கும் நிராகரிப்பு.

உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ஆதங்கத்தையும், கடுஞ்சினத்தையும், நெஞ்சறுக்கும் ஏமாற்றத்தையும் உணர்வடிவத்தில் (palpable) ஒரு நடிப்பு நான் பார்த்ததில்லை.


பெரிய தேவர் ஒரே ஒரு முறை தான் மூக்குக்கண்ணாடி அணிந்து காணப்படுகிறார். 'போற்றிப் பாடடி' பாடலில். அவ்ர் இறந்தபின் அந்த கண்ணாடி காண்பிக்கப்படும். சக்தி உடைமாற்றிக்கொண்டு வரும் இடைவேளிக் காட்சியில். பெரியாருடன் பெரிய தேவர் இருக்கும் புகைப்படத்திற்கு முன் ஒரு பகவத் கீதை (!). அதன் மேல் அவர் கண்ணாடி. ஒரே படக்கட்டதுள் அவர் பார்வையைப் பற்றி சொல்கிறார்கள்.

வெத வெதச்சதும் பழம் ச்சாப்டரணும்னு நெனைக்க முடியுமோ....இன்னிக்கு நான் வெதைக்கிறேன்.....நாளைக்கு நீ சாப்டுவ....அப்புறம் உன் மயென் ச்சப்டுவியான்....அப்புறம் அவன் மயென் ச்சப்டுவியான்.....இதெல்லாம் இருந்து பார்க்க நான் இருக்கமாட்டேய்ன்....ஆனா வெத நான் போட்டது....இதெல்லாம் என்ன பெருமையா..ஹான் ? கடமை.....ஒவ்வொருத்தன் கடமை.

கீதையை மிக மேலோட்டமாக (என்னைப்போல!) படித்தவர்களுக்குக் கூட மேற்சொன்ன வார்த்தைகளின் மூலம் கீதையில் உயர்த்திச் சொல்லப்படும் 'பலனை எதிர்பாராத கடமையாற்றல்' என்று புலப்படும். இதை சமூக சிந்தனையுடன் எளிமையாக சொல்ல முடிந்ததுதான் பெரியாரின் தாக்கமோ என்றெல்லாம் யோசிக்கவைத்த அந்த ஒரு படக்கட்டம் எழுத்தாளர்-இயக்குனருக்கு வெற்றி.

உபதேசம் சினிமாவின் மொழிக்கு அப்பார்ப்பட்டது. ஆனால் உபதேசக் காட்சிகள் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றான. உணர்ச்சியும், அறிவும் ஒன்றுபட இயங்கும் காட்சி பெரிய தேவரும் -சக்தியும் மழைக்கு இடையில் பேசும் காட்சி.

பிராண்டோ வசனத்தை முணுமுணுப்பவர் என்று சொன்னபோது, 'நிஜத்தில் யாரும் முழு சொற்றொடர்களை, ஒரே தொனியிலோ, அதன் பொருளுக்கு ஏற்ற ஏற்ற-இறக்கத்துடன் பேசுவதில்லை' என்றாராம். மேடையில் தான் முழங்கவேண்டிய நிர்பந்தங்கள். சினிமா முணுமுணுப்பையும் உணர வல்லது.

கோவில் கும்புடத்தான்னு பேசுநீயளே...இப்பொ இந்த ஊரோட நிலைமை உங்களுக்குப் புரிஞ்சதா ?

இதைச் சொல்லும் போது அந்த நாற்காலியில் புரண்டு படுப்பார் பெரியதேவர். அந்த அசைவிற்குத் தோதாக வசன உச்சரிப்பின் தொனி மாறும். இதை நேரொலியில் பதிவுசெய்திருந்தார்கள் என்றால் (live-recording) இது மிக நுணுக்கமான கவனிப்பின் வெளிப்பாடு எனலாம். ஒருவேளை இது பின்னணியில் தனியாக பேசப்பட்டது (dubbing) என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது.

சக்தி ஊரை விட்டுப் போகிறேன் என்றதும் சாய்வில் இருந்து உடனே முன்னால் வருவார். அதிர்ச்சியை மறைக்க ஒரு பொய்ச்சிரிப்பு. பொறுப்பு என்பது தான் இல்லை, பொறுப்பிற்கு அடித்தளமாக இருக்கும் வீரம் இருக்கிறதா என்பதை கிளரும் வகையில், சக்தியை கோழை என்பார். வீரத்தின் அடிக்கோல்கள் பிழையாக இருக்கிறதாக, வெளிநாட்டில் படித்த சக்தி சற்று காட்டமாகவே சொல்வான்.

"...இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல் ங்கொப்பனும் ஒருத்தந்தேய்ங்கறத மறந்துறாத" என்று சொல்வார் நெற்றியைத் தடவியபடி.

படத்தின் சாரமான வசனம் அதன்பிறகு தான்: "அப்படிப்பார்த்தா நானும் ஒருத்தந்தான்யா......ஆனா அத நெனச்சுப் பெருமப்பட முடியல". இதைத் தொடர்ந்தே உபதேசம் துவங்குகிறது. மரணத்தை வழக்கமாக வயசாளிகள் போல அல்லாமல், மிக யதார்த்தமாக எதிர்நோக்குவார் (போ....செத்துப்போ.....எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு போக வேண்டியது தேன்). கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டோமோ என்பதுபோல அடுத்த வரி சிறுபிள்ளையுடன் பேசுவதுபோன்ற எளிமையோடும், கனிவான தொனியிலும் வ்வரும் (வாழறது முக்கியந்தான்....இல்லைங்கல...).

கனிவும், பகுத்தறியும் பேச்சும் சக்தியின் முரட்டுத்தனமான முன்தீர்மானத்துடன் மோதி மோதி தோற்பதைக் கண்டு சட்டையை கொத்தாக பிடித்து முறைக்கும் நிலை வரும். அது அத்துமீறலா, இதுவரை மரியாதையுடன் நடத்தியதால் அப்படித் தோன்றுகிறதா என்ற குழப்பமும்-கோபமும் கலந்த பிரமாதமான பாவனை கமல் முகத்தில்.

அத்துமீறல்,உரிமை என்பது இவ்வுறவில் வயது சார்ந்தது என்பது ஒரு வலி கலந்த உண்மை. அந்தக் கணத்தில் அதை உணர்ந்துவிட்டதால் : "தாடியும், மீசையும் வச்சுகிட்டு...ஐயாவை நெஞ்சுநிமித்தி பேசுற வயசுல்ல" என்று காட்சியில் முதல்முறை தளர்வார் பெரிய தேவர்.

உணர்ச்சி கூட சக்தியிடம் தோற்க கணக்குப்பிள்ளையை பொறுமையில்லாமல் கத்திக் கூப்பிடுவார்: "ஏய்...யார்ராவென்....எங்க கணக்குப்புள்ள"

"டிக்கெட்ட ஒரு பத்து நாள் சென்டு எடுக்கட்டுங்களா ?"சக்தி, "ஏனய்யா இக்கட்டில் மாட்டி விடுகிறீர்" என்று சமிக்ஞை செய்வதை பார்த்துவிடும் பெரிய தேவர் "ஏம்ப்பு பத்து நாள் இருக்க மாட்டீயளா ?" என்று இருக்கமாக கேட்டுவிட்டு, தானே பதிலாக கையசைத்து கணக்குப்பிள்ளையை அனுப்புவார்.

அனுப்பிவிட்டு சக்தியை அருகில் அழைத்து தன் மகனை அருகில் வைத்துப் பார்க்க விழைவதை நெகிழ்வாகச் சொல்வார். வெளியாள் முன்னிலையில் உக்ரமாக மகனை திட்ட மறுக்கும் டான் விடோ போல அல்லாமல், கணக்குப்பிள்ளையிடமிருந்து தேவர் மறைக்க நினைப்பது தன் மென்மையைத் தான்.

"உங்களைத் தானே நம்பணும்....வேற யாரு இருக்கா இங்க நம்புறதுக்கு" என்கிறபோது முழுமையாக உடைந்து போன ஒரு பெரிய மனிதனை அவன் உள்பயங்களும் மனதை உருக்குவதைப் போல தெரியும்.

என் ஞாபகத்தில் இந்தக் காட்சியில் பாத்திரக் கோண படக்கட்டங்கள் மிகக் குறைவு, அல்லது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. குழுவாகப் பாடும் 'ஆ' காரத்தை ஒரு இசைக்கருவி போல் பயன்படுத்தும் மேல்நாட்டு இசை உத்தியை இளையராஜா இந்தப் படத்தில் சில இடங்களில் கையாண்டிருப்பார். இந்தக் காட்சியில் குழு வயலின்களும், கம்பீரமாக ஒலிக்கும் அடிக்கட்டை பேஸ் வாத்தியங்களும் மிகச்சரியான இடங்களில் ஒலித்து (உம். ஊரை விட்டு வெளியே வர பெரிய தேவர் மறுக்கும்போது) காட்சியை மெருகேற்றும்.

இதற்கு மேல், கிட்டத்தட்ட, பெரிய தேவரை புரிந்துகொள்ளுவதற்கு புதுத் தகவல்கள் படத்தில் இல்லை எனலாம். பாசம், கோபம், (மிகையான) மான/அவமான மதிப்பீடுகள், தலைமை குணங்கள் என்று எல்லாமே இக்காட்சியில் அடக்கம். இதற்குப் பிறகு நடப்பதெல்லாம் நமக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவருக்கு நடப்பவை. கதையின் போக்குக்கும், பார்வையாளர்கள் பெரியவரின் உள்பயங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் இந்தத் தன்னிலை-விளக்கக் காட்சி மிக முக்கியமானது.

பல உணர்ச்சி நிலைகளும், நிலைத்தடுமாற்றங்களும் காண்பிக்கப்படும் மிகக் கடினமானக் காட்சி. நன்கு எழுதப்பட்டிருந்தாலும் வெகு சுலபமாக நம் சினிமாவின் வழக்கமான உணர்ச்சிச் சுழலில் சிக்கி ஒரு சாதாரண மிகையுணர்ச்சி/உபதேசக் காட்சியாக மாறிய்யிருக்கும்.மிக இயல்பாக வெளிவந்து மக்களை கவர்ந்திழுத்தற்கு பெருங்காரணம் சிவாஜியின் அசாத்தியத் திறமை தான்.

Gopal.s
24th August 2016, 08:15 AM
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி

இசக்கிக்கு நடந்ததற்குப் பழி வாங்கும் விதமாக எதிரிகளின் குடிசைகளுக்கு தீ இடப்படுகிறது. தீயின் கனல் கதையில் தகித்துக்கொண்டிருக்கையில் மழை வருகிறது. மருத்துவமனையில் இசக்கியை காணப்போகும்போதே மழை தான். கண்மாய் வெடிவைத்துத் தகர்க்கப்படும் வரை மழை ஓயாமல் பெய்கிறது. மழையின் ஈரம் காயாத ஒரு இடத்தில் தான் கோவில் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அதிகாரி வரும் காட்சி.

ஊர் பிரச்சனைகளை பேச மகனை ஊக்குவிக்கிறார், அதிகாரிகளின் பொறுப்பின்மையை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறார் (பஞ்சாயத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலை வரவில்லை அல்லவா), வீட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறார் ("காப்பிகீப்பி "). நல்லது செய்து முடித்த தலைவன். அதற்கு அடுத்து அவர் தோன்றும் காட்சியிலும் ஒரு தலைவன். தன் மக்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியும், சோகமும் கவிய பார்க்கிறார். சொற்கள் இல்லை.

கொடுஞ்செயல் செய்தவனைப் பிடித்துக் கொடுத்த மகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கினான். (அதற்குக் காரணம் பொறுப்பின் சுவடுகளே இல்லாத மூத்த மகன்). சுற்றி, அவதியிலிருந்து சற்று ஆசுவாசம் பெரும் ஊர்மக்கள். மகனருகே சென்று அவனை தொடும்போது முகத்தில் ஒரு பெருமிதம். இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த ஒரு நாளில், பெருமிதம் போன்ற நல்லுணர்ச்சிகளுக்கு இடம் உண்டா ? முரண் தான். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

மகன் சாப்பிடவில்லை.

பசிக்கலையா ?
பிடிக்கலை
ஒரு கண நேரம் அந்த பெருமிதம் மறைந்து அவ்ர் முகத்தில் ஒரு தொய்வு ஏற்படும். 'அவசரப்பட்டு பெருமிதம் கொண்டுவிட்டோமா ? மகன் இந்தக் (காட்டுமிராண்டிப்பய) வாழ்க்கைச்சுழலை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிற்றதே' என்று.

ஒரு தாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி, ஒரு குழந்தையைப் பறிகொடுத்த அவள், தன் இரண்டாவது குழந்தைக்காக சாப்பிடுவதை சொல்வார். "மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா முதல்ல நாம் திராணியோட இருக்கணும்" (திராணியோடு என்பதை சொல்லும் போது மீசை முறுக்கு சரி செய்து கொள்ளப்படும்!). அவர் சொல்வதுக்கும் மேலே புரிந்துகொண்டதுபோல சக்தி கணக்குப்பிள்ளையைக் கூப்பிடுவான்.

ஒரு குழந்தை இழந்துவிட்ட, இரண்டாம் குழந்தைக்கு வாழ்வையும் , எல்லாவற்றைய்யும் தருவதற்காகவே போராடும் அவளைக் கண்டதும், ஒருவேளை சக்திக்கு தன் தந்தையின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தானே என்று தோன்றியிருக்காலாம். இது தான் தோன்றியது என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல திரைக்கதைகளில் இந்த அனுமானங்களுக்கு இடம் உண்டு. தேவரின் பேச்சுக்குப் பதிலாக சக்தி உதிர்க்கும் அர்த்தம் பொதிந்த சிரிப்பைக் கண்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.

பயணச்சீட்டை தள்ளிப்போட வேண்டும் என்று சக்தி பூசினாற்போல சொல்ல, இப்போது விட்டுவிட்டால் கிடைப்பது கஷ்டம் என்று கணக்குப்பிள்ளை சொல்வார். "கூடி வரும் நேரத்தில் கெடுக்காதே" என்பது போல தேவர் சமிக்ஞை செய்வதில் ஒரு வித்தியாசமான முக்கோணம் முடிவடைக்கிறது. சக்தி-கணக்கு-பெரியவர் மூன்று பேருக்கும் உள்ள தனித்தனி நெருக்கங்களை காண்பிக்கப்படுகின்றன.

முதல் விசாரணையில் "எதற்கு அழைக்கப்பட்டோம்" என்று ஐயாவுக்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையைக் கேட்பான். அடுத்து ஒரு காட்சியில், கணக்குப்பிள்ளையிடம் இருந்து தன் மென்மையான இயல்பை மறைப்பார் பெரியவர். இம்முறை தன் பாசத்தின் தீவிரத்தை கணக்குப்பிள்ளையிடம் மட்டும் காண்பிப்பார்.

இணைகோடாக: விடொ கொர்லியோனுக்கு வலது கையாக (consigliori) இருப்பது டாம் ஹேகன். அநேக சமயங்களில் தன் மகன்களைவிட இந்த வளர்ப்பு மகன் டாம்'ஐ டான் விடோ நம்புவார்.

சக்தி, தந்தையின் செய்கையைப் பார்த்துவிட்டு வெளிப்படையாக, அந்த பயணச்சீட்டை 'கேன்சல்' செய்யச் செல்வான். "சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்" என்று தாழ்திறந்து பாசம் வெடிட்த்தோடும். புல்லாங்குழல் கரு-இசையை அழகாக ஒலிக்க, சக்தியின் கையைப் பற்றி தன் நெஞ்சருகே வைத்துக் கொள்வார். பெருமிதம் மட்டுமே தெரிந்த முக்கத்தில் முத்ன்முதலாக ஒரு நிறைவு தெரியும். சாந்தமான பெருமூச்சே தேவையானவற்றைப் பேசிவிடும்.

நெருப்புக்கு பதில் நீரால் அடித்தாகிவிட்டது. எதிராளிகளின் அடுத்த இடைஞ்சல் நிலத்தின் வழியாக. வேலியிட்டுப் பிரிக்கப்படுகிறது நிலம். மக்கள் முறையிடுகிறார்கள். கேட்கச்செல்லும் பெரிய தேவர் துணையுடன் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணக்குப்பிள்ளை கூட அதை தயங்கி தான் சொல்கிறார். சக்தியை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறார் - அவருக்கு தேவையான போதுமான துணை.

நிலத்துக்கு சொந்தக்காரர்கள் நிலத்தை அடைத்து வேலிபோடுவதாக வக்கீல் சொல்லிக் கேட்டவுடன்.

"யார்ராவென்...நெலத்துக்கு சொந்தக்காரன்...இது எங்க நெலம்...நாங்க எலவசமா கொடுத்தது"

இதை சொல்லும்போதே சட்டத்தின் பலவீனமான பக்கத்தில் அவர் இருப்பது நமக்குத் தெரிகிறது. கௌரவம் மேல்நிலை வேண்டும் என்று அடம் பிடித்தாலும், சட்டம் கொடுக்கவிருப்பது ஒரு விதத்தில் கீழ்நிலை தான். இது அடுத்த காட்சியில் அவர் நிலையை புரிந்துகொள்வாதற்கு மிக அவசியமானது.

"இங்க செல்லையா ஒருத்தனுக்கு தான் சொந்தமா நெலம் இருக்கு....எலாய்....இந்த வேலிய நீ போடச்சொன்னியா ?"

"ம்ஹான்....கருக்கலோட கருக்கலா வந்து ஆவுகளே போட்றாஹய்யா" என்று சொல்லும் பெண்ணை அடக்குவார் செல்லையா.

"....கேனப்பய.....பாவம் அவன் என்ன செய்வான்... ஆட்டிவச்சபடி ஆடுறான்" என்று சக்தியிடம் சொல்வார். அதை உரக்கச் சொல்வதே அந்த வசனம் கேட்கும் எல்லோருக்கும் என்பதற்காக. அந்த பாவனை சக்தி முகத்தில் தெரியும்.

"ஏய் வக்கீய்ல்....இந்த வேலிய பிடுங்கி எறிய எம்புட்டு நேரமாகும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்பார். மரியாதை கெட்ட பதில் வரும். இதற்கு உடனடியாக வரும் எதிர்வினை ஒரு வட்டார வசவு. முழுவதுமாக சொல்லமாட்டார். தொண்டையிலிருந்து பாதி ஒலிக்கும். பொதுவில் கண்ணியம் காப்பது என்பது இயற்கையாக அவருக்கு வருகிறது. இது வேறொருவர் யோசித்திருந்தாலும் கூட கனக்கச்சிதமாக நிகழ்த்திக்காட்டுவது மிகக் கடினம். என் அபிப்ராயத்தில் இது திட்டமிடுதல் இல்லாமல் களத்தில் நிகழ்ந்ததாக தான் இருக்கவேண்டும். நேரொலியில்லாமல் இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஒரு பாத்திரத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு இதை விட சிறப்பான உதாரணங்கள் நான் பார்த்தவரை இல்லை.

பஞ்சாயத்தில் எதிரிகள் காலதாமதமாக வருவதை மகன் சுட்டிக்காட்ட, "அட போடா ...கவலைப்படவேண்டிய கடைசி அசௌகர்யம் இது..." என்பதுபோல கையை தட்டி விடுவார். அவர்கள் வந்ததும் தன் எதிர்பார்ப்பை மகனிடம் கண்கலால் தெரிவிக்க, சக்தி சின்னத்தேவரைக் கும்பிடுவான்.

"வைத்தியனுக்கு சீக்கு வந்தா இன்னொரு வைத்தியன் கிட்ட தான் பார்க்கணும்......இன்னிக்கு நீதி சொல்ற நெலமையில நான் இல்லையப்பு.....கேட்டுக்கிற இடத்துல இருக்கேன்"
என்ற ஒரு வரியில் பல தொனி-பாவனை மாற்றங்கள். தீர்ப்பு சொல்லும் நிலைமையான முதன்மை நிலையில் இல்லை என்பதைப் பற்றி ஒரு தயக்கம். தன்னை விட்டால் இவர்களில் யார் தீர்ப்பு என்று ஒன்றை சொல்லமுடியும் என்கிற இளக்காரம் எல்லாம் அந்த பாவனையிலும் அவர் தொனியில் இருக்கும் அசௌகரியத்திலும் தெரியும்.

ஊர்ப்பெரியவர் ஒருவர் மிகுந்த மரியாதையுடன் அவரை பேசச்சொல்ல எழுவார். கீழே அமர்ந்திருக்கும் எல்லோரும் எழ அவர்களை உட்காரச்சொல்லும்போது மிக உரிமையானவரை கடிந்துகொள்ளும் பாங்கும் பொறுமையின்மையும் தெரியும்.

ஒரு தேர்ந்த வழக்கறிஞன் வழக்கிற்கு வரும் முன் எவ்வாறு எதிர்தரப்பினரை தீர்ப்பு கூறுபவர்கள் கண்ணில் இறக்கிக் காட்டவே முயல்வர். அதை மிகக் கச்சிதமாக செய்வார். "எங்க பெரியதேவர் செத்து...கொள்ளிக்குடம் உடைக்கிறதுக்கு முன்னாடியே பாகப்பிரிவினை கேட்டவுக சின்னச்சாமி ஐயா....அப்புறம் என்னை வெட்டப் பார்த்தாக.. வெசம் வெச்சுக் கொல்லப்பார்த்தாக...ஹஹும் ஒண்ணும் நடக்கலை"

இதை சொல்லும்போது ஒரு இளைஞனின் வீம்பும், சண்டித்தனமும் தெரியும். அதை மறுத்துப் பேச முயலும் தம்பி மகனை "ஏலாய்....அப்பொல்லாம் நீ சின்னப்பய...உனக்கொண்ணும் தெரியாது வாயம்மூடிட்டு பேயாம இருக்கணும் தேரியும்ல" என்று அதட்டுவார் (முன்னே வரும் சக்தியை ஒரு கையால் தடுத்துவிட்டு).

தான் சொல்லவந்ததை சொல்லியாகிவிட்டதில் பிரச்சனைக்கு வருவார். "இப்பொ பிரச்சனை என்னன்னா...அந்த வேலிய புடுங்கி அங்குட்டு எரியணும்..அது பதிலா வேற எடம் வேண்ணாலும் நான் கொடுக்கறேம்பா..பணம் காசு வேண்ணாலும் கொடுக்கறேன் உம்..."
பிரச்சனையைத் தீர்க்கும் அணுகுமுறை மருந்துக்குக் கூட இல்லை. ஒரு கீழ்நோக்குப் பார்வை, எள்ளல் இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறார். மனிதர் அப்படிப்பட்டவர். அரசனின் கர்வம். இவனோடெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறதே என்ற அலுப்பு, கோபம். இதைத் தான் 'மானம்' என்று கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்ட மனோபாவம். இவை அவரை எங்கு இட்டுச் செல்கின்றன ?

நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதெ
மானமிழந்தாலே வாழத் தெரியாதே

பின் வருவதை முன் சொல்லும் விதமாக ஒரு பாடல் வரி. இதை ஏதோ வீரமரணம் போல சித்தரிக்கப்படுகிறது. இதில் 'மானம்' என்பது ஒவ்வொருவர் மதிப்பு சார்ந்தது. கடமை தவறியதால் தன் குலத்துக்கும், பதவிக்கும் இழுக்கு வந்துவிட்டதாக எண்ணி "கெடுக என் ஆயுள்" என்று சொல்லி வீழும் மன்னனன ஓரளவு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெரிய தேவருக்கு நிகழ்வது அவர் மண்ணின் பொது மதிப்பீடு. ஒரு வகையில் காட்டுமிராண்டி மதிப்பீடு தான். பலம் படைத்தவன் பெரியவன். அடி கொடுத்துவிடுவது வெற்றி - வாங்கிக்கொள்வது தோல்வி என்று. இதன் நீட்சியே சொல்லடிக்கும் இருக்கும் அதே மதிப்பு. இதைத் தான் இந்தப் படம் சாடுகிறது. ஆனால் இந்த மரணத்துக்கு ஒரு கௌரவம் சேர்த்து.

தம்பி மகன் இவரை சரியான இடத்தில் மடக்க "ங்கொப்பனை விட நல்லாத்தேம்பு பேசற" என்று கோபத்துக்கும்-தோல்விக்கும் இடையிலும் லேசாக மிஞ்சியிருக்கும் ரசனையோடு சொல்வார். ஒரு இடத்தில் சக்தி துள்ளியெழ மிகுந்த சாந்தத்துடன் கட்டுப்படுத்துவார்: "பேயாம இரு...அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?".

கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் நீ என்று நினைத்துக்கொண்டாயே மகனே' என்பது அந்த அமைதியில் தெரியும்.

ஆனால் அடுத்ததாக தம்பி மகன் மரியாதை கெட்டத்தனமாக பேசிவிட்டதால் ஆடிப்போகிறார் பெரியதேவர். என் முன்னிலையில் அப்படி அவன் பேசலாயிற்று என்பது அதிர்ச்சி, கடுங்கோபம், பெருத்த அவமானம். இதுபோன்ற வீம்பான மதிப்பீடுகளை சாடும் விதமாக முன் பேசிய சக்தியும் அந்த கணத்தில் ஒரு 'காட்டுமிராண்டி'யைப் போல் வெடிக்கிறான். படிப்பும், 'பண்பட்ட' கலாசார பரிச்சயமும் அவன் மேல்தோல் கொஞ்சம் சுரண்டிவிட்டால் விலகிவிடுகின்றன. உள்ளிருக்கும் இயல்பு வெளிவருகிறது. பெரிய தேவர் எழுந்தவேகத்தில் நாற்காலியை விசிறியடிக்கிறார்.


பொறிபறக்க விழிகளிரண்டும்
புருவமாங்கே துடிக்க சினத்தின்
வெறி தலைக்க....

என்று பாஞ்சாலி சபதத்தில் சில வரிகள் வரும். அந்த உக்ரத்தை திரையில் காண வேண்டும் என்றால் இந்தக்கணம் தான் அதற்கு சரியான கணம்.

கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுக்குள் வைத்து கடைசி முறையாகக் எதிரியிடம் மறுமுறை கேட்க,
வரும் பதிலில் கூட்டமே பொங்கி எழும். "பஞ்சாயத்தாடா இது....பஞ்சாயத்தே கிடையாதுறா....இந்த கூட்டத்துல எனக்கு மரியாதையும் கிடையாது" என்றுவிட்டு வெளியேறுவார். அங்கிருந்து வீடுவரை நடந்து செல்லும்போது அவமானம், அங்கலாய்ப்பு,கோபம், பாசத்துடன் வரும் கோபம் என்று சகலத்தை ஓரிரு நிமிடங்களில் காட்டுவார். அவற்றை வார்த்தையில் அடக்க முயல்வதே வீண். ஒரு சூராவளி அடித்துச் சென்றார் போன்ற அனுபவம். tour-de-force.

"என்னப்பு பைத்தியக்காரனா இருக்கே...எனக்கெப்படி கோபம் வரும்...வெக்கம் மானம் ரோசம் இருந்தாத்தேன் கோபம் வரும்....அதல்லாந்தான் அந்த சின்னப்பய வாங்கிப்டானே" என்று சொல்லும் போது குரல் நடுங்கும், கண்ணீல் நீர் கோத்திருக்கும். அரை நொடியில் தலைவன் தன்னிலைக்கு வந்து மகனிடம், "பசங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பு", என்று விவேகமான தொனியில் சொல்லிவிட்டு "எலாய்" என்று கண்ணை விரித்துக் காட்டி ஒரு வழிகாட்டியின் தோரணையில் மிரட்டிவிட்டுப் போவார்.

வலியை முதல்முதலில் வெளிப்படுத்தும் போது ஒரு வித மூச்சுத்திணரல் போலவே ஒலிக்கும். மாரடைப்புக்கு முதல் அறிகுறியே இதுபோன்ற ஒரு கைவலி தான். பேத்திகள் சூழ, "அம்ம பாட்டு" கேட்டபடி தன் வலி மிகுந்த கடைசி கணங்களை கழிப்பார்.

ரத்தம் கக்கி வசனம் பேசி, கத்திக்குத்துடன் பாட்டு பாடி, மரணப்படுக்கையில் நாயக நாயகியரை சேர்த்து வைத்து, அல்லது இக்கட்டான சத்தியங்கள் வாங்கி, கதாநாயகன் திருக்கரங்களால் தலை திருகப்பட்டு என்று பல வகைகளை தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து மரணம் என்பது மரத்துப்போய்விட்ட நிலையில், இன்றளவும் நம் ஞாபகத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட உருக்கமான மரணங்களில் ஒன்று பெரிய தேவரின் மரணம். அதன் வெறுமையை நாமும் உணர்கிறோம்.

இன்று அதைப் பார்க்கையில் திரைக்கு அப்பாலும் அந்த வெறுமை இன்னும் பெரிதாகத் தெரிகிறது.

ஈக்வானிமஸ் சொன்னதை வழிமொழிகிறேன். சிவாஜியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு இது என்று சொல்வது முழு உண்மை அல்ல. இது சிவாஜியின் ப்ரத்யேக அடையாளங்கள் உள்ள வெளிப்பாடு தான். ஆழ்ந்த, பிரமிப்பூட்டும் கவனிப்பு, முயற்சியின் சுவடுகளே தெரியாத அனாயாசமான நடிப்பு, இதையெல்லாம் நிகழ்த்த முடிந்த அதிசயமான திறமை.
இதை மிகச்சரியாக வெளிக்கொணரக் கடைத்த களம் இந்தப் படம். இது பரவலாக கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னும் ஆழமாக கவனிக்கப்படவேண்டியது.

அதை இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன். முன்னொருமுறை சொன்னதுபோல நடிப்பு போன்ற நிகழ்த்தப்படும் கலைகளைப் பற்றி எழுதுவது வெறும் குறியீடாகத் தான் இருக்க முடியும். அதற்கு மேல் அதை கண்டு அதில் திளைப்பதற்கு ஊக்கியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எழுதுபவனுக்கு.

Murali Srinivas
25th August 2016, 12:03 AM
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

சென்ற ஜூலை மாதம் 22-ந் தேதி முதல் நமது மய்யம் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலோனாரால் மய்யத்தை பார்வையிடவோ அல்லது பதிவுகள் இடவோ முடியாமல் போனது. அவர்களில் நானும் ஒருவன். சில தினங்கள் கழித்து Proxy Server மூலமாக இணையதளத்தை பார்வையிட முடிந்தபோதும் பதிவுகள் மேற்கொள்ளவோ அல்லது தரவேற்றப்பட்ட வீடியோ காட்சிகளை பார்க்க முடியாமல் போனது.

இத்தகைய சூழலில் திரியின் பயணத்தில் தொய்வு விழாத வண்ணம் அவ்வப்போது பதிவுகள் மேற்கொண்டு திரியை முன்னெடுத்து சென்ற கோபால் அவர்களுக்கும் சிவா அவர்களுக்கும் மனங்கனிந்த நன்றிகள்! இதற்கு உதவி செய்யும் வண்ணம் ஒரு சில பதிவுகள் இட்ட திரு சந்திரசேகர் அவர்களுக்கும் பரணி அவர்களுக்கும் நன்றிகள்!

விரைவில் தடை நீங்கி மீண்டும் மய்யம் இணையதளம் பழைய பொலிவோடு செயல்படும் நாளை விரைவில் எதிர்பார்க்கும்

அன்புடன்

Murali Srinivas
25th August 2016, 12:07 AM
அன்றும் இன்றும் என்றென்றும் நடிகர் திலகத்திற்கும் அவரது படங்களுக்கும் மாபெரும் ஆதரவு கொடுக்கும் மதுரை சிவாஜி அடியார்களுக்கு அடுத்த விருந்து படைக்க 20,000 acres of fertile land + மில் ஓனர் ராஜசேகர் அடுத்த மாதம் விஜயம் செய்கிறார்.

அனைத்து துறைகளிலும் உயர்ந்த மனிதனாக விளங்கிய நடிகர் திலகம் underplay நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த உயர்ந்த மனிதன் திரைக்காவியம் ஆகஸ்ட் 12 முதல் தினசரி 4 காட்சிகளாக மதுரை சென்ட்ரலில்!

மேலே காணப்படுவது சென்ற மாதம் நான் இட்ட பதிவு. இந்த மாதம் 12-ந் தேதி வெளியான உயர்ந்த மனிதன் ராஜசேகர் மதுரை சென்ட்ரலில் ஒரு புதிய சாதனை புரிந்திருக்கிறார். 4,5 புதிய படங்கள் அதே நாளில் வெளியானபோதும், கடைசி ஆடி வெள்ளி என்பதனால் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றபோதும் அதன் காரணமாகவே தாய்மார்கள் கூட்டம் அன்றைய தினம் திரையரங்கிற்கு வராமல் இருந்தபோதும் ஒரு வார மொத்த வசூல் Rs 93,000/- ஐ [ரூபாய் 93 ஆயிரத்தை] தொட்டிருக்கிறது.

இதன் சிறப்பு என்னவென்றால் நடைபெறும் இந்த 2016-ம் ஆண்டில் சென்ட்ரலில் வெளியான வேறு எந்த கருப்பு வெள்ளைப் படமும் Rs 90,000/- த்தை கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை எனும்போது mass மசாலா items எதுவும் இல்லாத high class படமான உயர்ந்த மனிதன் இப்படிப்பட்ட சாதனை வசூலை பெற்றிருக்கிறது என்று சொன்னால் அது ஒரு வரலாற்று நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும்.

இதே போல் சென்ற 2015-ம் வருடத்தில் அதிக வசூல் பெற்ற கருப்பு வெள்ளை படம் நமது நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு என்பதை வாசகர்கள் நினைவு வைத்திருக்க கூடும். அது மட்டுமல்ல இந்த 2016-ம் ஆண்டில் சென்ட்ரலில் வெளியான படங்களிலே ஒரு லட்சத்திற்கு மேல் வசூல் செய்த ஒரே படம் நமது வசந்த மாளிகை மட்டுமே!

என்றென்றும் நமது சாதனைகளுக்கு உறுதுணையாக விளங்கும் மதுரைக்கும் மதுரை வாழ் மக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!

அன்புடன்

PS: இந்த வருடம் சென்ட்ரலில் வெளியான அனைத்து படங்களின் வசூல் விவரங்களை பெற்று அவற்றை அரங்க மேலாளர் திரு பாலமுருகன் அவர்களிடம் சரி பார்த்து இந்த தகவலை இங்கே பதிவு செய்கிறோம்

Gopal.s
25th August 2016, 07:47 AM
ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கமல், தான் சிவாஜி பாதி, நாகேஷ் பாதி கலந்து செய்த கலவை என்றும் ,மரபணு ஆராய்ச்சி செய்தால் ,சிவாஜியின் மரபணு தன்னில் இருப்பதை காண முடியும் என்று கூறியுள்ளார்.

சத்யஜித்ரே ,சிவாஜி வரிசையில் தனக்கும் கிடைத்த கௌரவத்தை பெருமையோடு ஏற்பதாக கூறியுள்ளார்.

RAGHAVENDRA
25th August 2016, 08:27 AM
Chanakya Chandragupta movie was released on 25.08.1977 and enters 40th year on 25.08.2016 starring NT with A Nageswara Rao & N T Rama Rao.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14034921_1184486264935377_5345774891874297467_n.jp g?oh=1dae5043d4d778d32de45224f58b38d0&oe=58416F4E

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14051667_1184486008268736_7910554784256428021_n.jp g?oh=6f3dff2b12fc9adf8557fa680001dd20&oe=583FDC5A

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14064055_1184486004935403_4528238115626165952_n.jp g?oh=fda9abca89a8f8f452bd36302f9a3345&oe=5856680B

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14067495_1184485978268739_9082322253491704676_n.jp g?oh=5e42aeb6560be995fe37401efb3962dd&oe=585788DB

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14102589_1184486044935399_7667313776029284675_n.jp g?oh=762458fd1e8b6c89e8292a7ca5bb423e&oe=585D83CC

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14079718_1184486124935391_2614559121193474407_n.jp g?oh=9f295b61432833aa8d158de931fca8c8&oe=5841FEA8

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14022153_1184486141602056_5270115513709572831_n.jp g?oh=f7c8343eda56168c707d73d86d26ecb2&oe=584FFAC1

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14034691_1184486161602054_324378047334730947_n.jpg ?oh=31566a0c546bee618710ce7d658459cb&oe=584FE65A

Gopal.s
25th August 2016, 09:09 AM
திரி நண்பர்களுக்கு கிருஷ்ணன் ஜெயந்தி வாழ்த்துக்கள்.

https://www.youtube.com/watch?v=tDU7NB440bs

https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ

Russellxor
27th August 2016, 01:57 PM
http://uploads.tapatalk-cdn.com/20160827/5ef96cedd23178bedae3f0219bf78d75.jpg

Russellxor
27th August 2016, 01:58 PM
http://uploads.tapatalk-cdn.com/20160827/3ada6007b22715fd77b350f913552cae.jpg

Russellxor
27th August 2016, 08:04 PM
http://uploads.tapatalk-cdn.com/20160827/39c0a6d9e68e197b7092f8ac7ffe2835.jpg

Harrietlgy
28th August 2016, 06:44 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 141 – சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_image/22/1472123139332030312Tamil_News_Nellai.jpg


பீம்சிங், ஒரு சிக்கல் என்று ஏவி.எம். சரவணனிடம் சொன்னார்.

அது என்ன சிக்கல்?

`நான் ஏற்கனவே இந்த படத்தில் நாலரை லட்சம் என்று உங்கள் தந்தையாரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது பெரிய நடிகர்கள் நடிப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமாகும். நாம் போட்ட பட்ஜெட்டை ரீ – ஒர்க் பண்ணணும்’ என்றார் பீம்சிங்.

நாலரை லட்சமாக இருந்தது, இப்போது பத்தரை லட்சமானது.

ஏவி.எம். செட்டியாரும் அதை ஏற்றுக்கொண்டார்.

சிவாஜியை போட்டு எடுப்பதால் செலவில் நியாயமிருந்ததை அவர் உணர்ந்து கொண்டார்.

திட்டப்படி 1960 அக்டோபர் 26ம்தேதி ‘பாவ மன்னிப்பு’ ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும்.

ஆனால், படம் முடியும் வேளையில் படத்தில் தாயார் வேடத்தில் நடித்த கண்ணாம்பா இறந்துவிட்டார்.

மறுபடியும் எம்.வி. ராஜம்மாவை வைத்து படத்தை முடித்தோம்.

படத்தின் இசையமைப்பாளர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் திறமையை கண்டு ஏவி.எம். சரவணன் வியந்தே போனார்.

அவர்களும், கண்ணதாசனும் இணைந்தால் அங்கே வரிகளுக்கும் ஸ்வரங்களுக்கும் பஞ்சமே இருக்காது.

விஸ்வநாதன், கண்ணதாசன் இருவரையும் எப்போதுமே சரவணன் `மேதைக் குழந்தைகள்’ என்பார்.

இப்போதும் கூட ஏவி.எம். சரவணன், பல வருடங்கள் கழிந்தும் ஏவி.எம். ஸ்டூடியோவில் இருக்கும் ஆறாம் நம்பர் அறையைக் கடக்கும் போது, கண்ணதாசனும், விஸ்வநாதனும் அங்கே பேசிக்கொண்டிருப்பது மாதிரியான ஒரு பிரமை அவருக்கு ஏற்படுமாம்.

அவர்கள் இருவரும் ஓர் அற்புத காம்பினேஷன்!

பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவானதும், `மாதிரி இசைத்தட்டு’ வரும். அதை ` வொயிட் ரிகார்ட்’ என்பார்கள்.

`பாவமன்னிப்பு’ படத்தின் `வொயிட் ரிகார்ட்’ தயாரானவுடன், சரவணன், அதை அன்றைய ரேடியோ பிரபலம் எல்.ஆர். நாரயணன் மூலமாக இலங்கை வானொலியில் இருந்த மயில்வாகனனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நாட்களில் வர்த்தக ஒலிபரப்பெல்லாம் கிடையாது.

மயில்வாகனன் `பாவமன்னிப்பு’ பாடல்களை இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டே வந்தார்.

படம் வெளியாவதற்கு முன்பே எல்லா பாடல்களுமே பிரபலமாகிவிட்டன.

`இப்படி பாடல்கள் முன்கூட்டியே நிறைய தடவை நேயர்கள் கேட்டுவிட்டால், அப்புறம் படம் வெளியாகும்போது அவை `ஸ்டேல்’ ஆகிவிடுமே! எனவே போதும், பாடல் ஒலிபரப்பு இனி வேண்டாம் என்று சொல்லி விடுவோமே’ என்றார் இயக்குநர் பீம்சிங்!

`அப்படி எந்த அபாயமும் இல்லை. நாம் ஒலிபரப்பை நிறுத்தச் சொல்ல வேண்டியதில்லை. அப்படியே போகட்டும்’ என்று உறுதியாக சொன்னார் ஏவி.எம். சரவணன்.

அதற்கு ஓர் உதாரணத்தையும் சொன்னார் சரவணன்.

அந்த காலத்தில் நவுஷத் இசையமைத்த ‘கோஹினூர்’ போன்ற படப் பாடல்களை வருடக்கணக்கில் முன்கூட்டியே நேயர்கள் பலமுறை கேட்டும் அவர்களுக்கு சலித்ததில்லை என்றார்.

இவருடைய உறுதியில் அவருடைய தந்தைக்கும் உடன்பாடு இருந்தது.

படம் வெளியானதும் தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார்கள்.

படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் நல்ல வரவேற்பு.

குறிப்பாக பாடல் காட்சியின்போது ரசிகர்களின் கையொலியும், சந்தோஷக் குரல்களும் உச்சத்தில் இருந்தன.

பல மாதங்களாக அந்த பாடல்களை ரேடியோவில் பல முறை கேட்டிருந்தும் ரசிகர்களின் காதுகளுக்கு அவை பழசாகிப் போய்விடவில்லை.

அப்படி அந்தப் பாடல்களில் கண்ணதாசனும், விஸ்வநாதனும் தேன் கலந்திருந்தார்கள்.

`பாவமன்னிப்பு’ படத்தை சித்ரா தியேட்டரில்தான் வெளியிடவேண்டும் என்று பீம்சிங்கும் மற்றவர்களும் கருதினார்கள்.

அப்போது சிவாஜி படங்கள் சித்ரா, சயானி, கிரவுன் தியேட்டர்களில்தான் ரிலீசாகும்.

ஆனால், இந்த படத்தை சாந்தி தியேட்டரில்தான் ரிலீஸ் செய்யவேண்டுமென்று செட்டியாருக்கு விருப்பமாக இருந்தது.

பெரிய தியேட்டரில் சிவாஜி படத்தை வெளியிட வேண்டும் என்பது மட்டுமல்ல.

அப்போது சாந்தி தியேட்டர் பால்கனிதான் தியேட்டர்களிலேயே பெரியதாக இருந்தது.

பால்கனியில் மட்டும் 421 சீட்டுகள் இருந்தன!

அதையும் சேர்த்து மொத்தம் 1212 சீட்டுகள்.

அதைவிட பெரிய சீட்டுகள் கொண்ட தியேட்டர் அதுதான்.

அதுவரையில் சாந்தி தியேட்டர் கட்டிய பிறகு அதில் எந்தவொரு படமும் பெரிதாக வெற்றியை பெறவில்லை.

`பாவமன்னிப்பு’ படத்தின் மீது செட்டியாருக்கும் மிகுந்த நம்பிக்கை இருந்தது.

அதனால் படத்தை சாந்தி தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அவர் நினைத்தார்.

சிவாஜியின் தம்பி சண்முகம் கூட படத்தை சின்ன தியேட்டரில் வெளியிடலாமே என்று சொல்லிப் பார்த்தார்!

`சித்ரா’வில் வெளியிட்டால் நூறு நாட்கள் நிச்சயம்’ என்று சிலர் சொல்லிப் பார்த்தார்கள்.

ஆனால் அதையெல்லாம் மீறி சாந்தி தியேட்டரில் `பாவமன்னிப்பு’ படம் வெளியானது.

அதற்காக விசேஷமான விளம்பரம் செய்யவும் முடிவு செய்தது ஏவி.எம். நிறுவனம்.

ஜப்பானிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ‘மெகா’ சைஸ் பலுானை சாந்தி தியேட்டரின் மேலே பறக்க விட்டு, அந்தப் படத்திற்கான விளம்பரத்தில் ஒரு புதுமையை அறிமுகப்படுத்தினார்கள்.

அந்த பலூனில் ` ஏவி.எம்.’ என்ற எழுத்துக்கள் ஆங்கிலத்தில் பெரிதாகவும், வாலில் ` பாவமன்னிப்பு’ என்ற எழுத்துக்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக தமிழிலும் அமைக்கப்பட்டிருந்தன.

அன்றைய மவுண்ட் ரோட்டில் அந்தப் பலூனை அண்ணாந்து பார்த்து அதிசயிக்காதவர்கள் இல்லை.

சென்னை மாநகர மக்களுக்கு அந்த பலூன் ஒரு வித்தியாசமான அனுபவம்.

ஆனால், அந்த விளம்பரம் மக்களை ஈர்த்த அதே நேரம்–

மக்கள் தினமும் வந்து அதிசயமாக பார்த்து போன போதும்,

அதனாலும் தியேட்டருக்கு மக்கள் படம் பார்க்க வந்தபோதும்–

ஏவி.எம்.முக்கு அந்த விளம்பரத்தின் மூலமாக வேறொரு அனுபவம் கிடைத்தது!

(தொடரும்)

sivaa
30th August 2016, 10:01 AM
அண்மையில் ஏற்பட்ட எனது மிக நெருங்கிய உறவு ஒன்றின் மறைவால்
இத்திரிக்கு அதிகம் வரமுடியாமல் போய்விட்டது

மய்யம் இணையமும் இந்தியாவில் முடக்கத்தில் இருப்பதை
நண்பர் முரளியின் பதிவின்மூலம் அறியமுடிகிறது
இதன் காரணமாக தமிழ்நாட்டு நண்பர்களால் பதிவுகள் இடமுடியாமல்
நமது திரி தேக்கம் அடைந்திருப்பது தெரிகிறது

முடக்கத்தில் இருந்து மீண்டுவர மய்யம் நிர்வாகிகள்
மிகவிரைவாக நடவடிக்கை எடுப்பார்கள்என நினைக்கின்றேன்.

Gopal.s
31st August 2016, 08:52 AM
The best of Nadigarthilagam movie released in Sept (5th Sept 1969) which is a show piece of Acting Talent of NT, Commercially a Great Success and first ever south Indian movie to be chosen for Oscar .

தெய்வ மகன்.(1969).

மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).

பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.

நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.

இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?

எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.

எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.

தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.

சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.

ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.

அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.

விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....

இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."

நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )

டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.

கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?

சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )

முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.

விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.

டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .

கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.

காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.

ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?

விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.

விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.

கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.

நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).

தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?

தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).

அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)

கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.

எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.

-

Russellxor
31st August 2016, 10:49 PM
http://uploads.tapatalk-cdn.com/20160831/041da409ead138d8aa5b1605d3d7d99e.jpg

Russellxor
31st August 2016, 10:50 PM
http://uploads.tapatalk-cdn.com/20160831/dcead71808bd3af20ab97018db2035e9.jpg

Russellxor
31st August 2016, 10:51 PM
http://uploads.tapatalk-cdn.com/20160831/7f7a39982d39a6414e5c982485f31563.jpg

Russellxor
31st August 2016, 10:52 PM
http://uploads.tapatalk-cdn.com/20160831/9d0698c8b66d581e3cf98531ffe858f8.jpg

Russellxor
31st August 2016, 10:53 PM
http://uploads.tapatalk-cdn.com/20160831/c5f38470e85430ded5ac2a5160cae31e.jpg

Russellxor
31st August 2016, 10:53 PM
http://uploads.tapatalk-cdn.com/20160831/26afa66d917b356b066bab09de3b04ca.jpg

Russellxor
31st August 2016, 10:54 PM
http://uploads.tapatalk-cdn.com/20160831/f341b34e6d0b8d909bb569a5a94a3be0.jpg

Russellxor
31st August 2016, 10:55 PM
http://uploads.tapatalk-cdn.com/20160831/8b8730fbab155e0cc829e52ab266f738.jpg

Russellxor
31st August 2016, 10:55 PM
http://uploads.tapatalk-cdn.com/20160831/1e67ab7e237258df9c09f8e1579f3193.jpg

Russellxor
31st August 2016, 10:56 PM
http://uploads.tapatalk-cdn.com/20160831/45d4fe2181e52b2d39f9c83e065e4e24.jpg

Gopal.s
1st September 2016, 08:56 AM
Ganesh Pooja around - He was primely responsible for triggering Tamil God into rage of Fury ,thus revelaling Thiruvilayadal, showing prowess of our Acting God,setting Benchmark for Lord Shiva.

திருவிளையாடல்- 1965.

சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.

1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.

திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)

முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).

இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)

இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.

உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.

"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).

இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )

நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.

இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.

முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.


அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.

அடுத்த episode love teasing பிரச்சினை.

அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.

இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.

இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )

முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.

என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.


சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.

சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)

குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).

மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.

அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.

கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.

நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?

ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.


இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.

sivaa
6th September 2016, 10:55 AM
இங்குள்ள பிரச்சினைதான் என்ன?

Harrietlgy
6th September 2016, 06:46 PM
http://www.dinamalarnellai.com/site/news_image/22/14727306281003583380Tamil_News_Nellai.jpg

ஏவி.எம்முக்கு பலூன் விளம்பரம் மூலமாக கிடைத்த அனுபவம் என்ன?

சென்னையில் உயரத்தில் எந்த விளம்பரம் செய்வதாக இருந்தாலும் விமான நிலைய நிர்வாகத்திடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. அப்படி இருப்பது ஏவி.எம். நிறுவனத்திற்கு தெரியாது.

அதே போல ஹைட்ரஜன் சிலிண்டரின் உதவியால் பறக்கும் அந்த பலூனுக்காக சிலிண்டர் வைக்கவும் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஏவி.எம். இரண்டையும் செய்யவில்லை.

விமான நிலைய அதிகாரிகளிடமிருந்தும், `இன்ஸ்பெக்டர் ஆப் எக்ஸ்புளோஸிவ்ஸ்’ அலுவலகங்களிலிருந்தும் தனித்தனியாக ஏவி.எம்முக்கு நோட்டிஸ்கள் போயின.

அதை ஒரு வழியாக தீர்த்தார்கள்.

`பாவமன்னிப்பு’ வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது.

பாடல்களுக்கு இருந்த வரவேற்பை பார்த்த ஏவி.எம். செட்டியார் ஒரு புதிய உத்தியை கையாண்டார்.

அதன்படி `பாவமன்னிப்பு’ பாடல்கள் போட்டி ஒன்றை நடத்தினார்.

படத்தின் பாடல்களை நேயர்கள் தங்கள் ரசனைப்படி வரிசைப்படுத்தி எழுத வேண்டும், பின்னர் நீதிபதிகள் வரிசைபடுத்தியிருப்பதற்கு எது ஒத்திருக்கிறதோ அதற்குப் பரிசு. பெருமளவில் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.

பெரிய நோட்டுப் புத்தகங்கள், லெட்ஜர்களிலெல்லாம் பல்வேறு காம்பினேஷன்களில் பாடல்களை வரிசைப்படுத்தி அவர்கள் எழுதியனுப்பியவை ஏவி.எம்மில் ஓர் அறை முழுவதும் குவிந்தது. யாரும், எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். இதனால் ரசிகர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டார்கள்.

கவிதாயினி சவுந்தரா கைலாசம் (முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மாமியார், மறைந்த நீதிபதி கைலாசத்தின் மனைவி) உள்ளிட்ட பெருமக்கள் நீதிபதிகளாக இருந்தார்கள்.

ஸ்டூடியோ வளாகத்தில் திறந்தவெளியில் ஒரு (கரும்பலகையில் `தீர்மானிக்கப்பட்ட பாடல் வரிசை’ காலம் பல கடந்த – அத்தான் – என்னத்தான், வந்த நாள்முதல் – காலங்களில் அவள் வசந்தம் – பாலிருக்கும் பழமிருக்கும் – ஓவியம் கலைந்ததென்று – எல்லோரும் கொண்டாடுவோம் – சாயவேட்டி) சாக்பீஸில் எழுதிப் போட்டு எங்கள் ஊழியர்களிடம் நேயர்களின் கடிதங்களை பிரித்துத் தந்து சரிபார்க்கச் சொன்னோம். ஏதோ பெரிய தேர்வு ஒன்றில் கலந்து கொள்வது போல எங்கள் ஊழியர்கள் அமர்ந்து ஈடுபட்டார்கள். ஒரு திரைப்படத்தின் பாடல்களையும், ரசிகர்களையும் சம்பந்தபடுத்தி ஒரு போட்டி நடத்தப்பட்டது, அதுதான் தமிழில் முதல் தடவை என்று அனைவரும் ஏவி.எம். நிறுவனத்தை பாராட்டினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், வெற்றி பெற்றவர்கள் பரிசு தொகையான பத்தாயிரம் ரூபாயை பகிர்ந்து கொண்ட போது தபாலுக்குச் செய்த செலவு கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர்களுக்கு ஒரு `த்ரில்’ இருந்தது.

`பாவமன்னிப்பு படத்தைப் பார்த்தார் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். அவர் நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகை. அதேபோல் சிவாஜியும் லதாவின் ரசிகர்.

படத்தை பார்த்த லதா மங்கேஷ்கர் `எனக்கு இந்தப் படத்தில் 16 எம்.எம். பிரிண்ட் ஒன்று வேண்டும்’ என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.

அந்த அளவுக்கு அவர் `பாவமன்னிப்பு’ படத்தை ரசித்தார்.

அவர் அப்படிக் கேட்டபோது ஏவி.எம். பெருமை கொண்டது.

சிவாஜியின் `பா’ வரிசையில் வந்த அடுத்த படம் ‘பச்சை விளக்கு’.

ராம. அரங்கண்ணல் மற்றும் இரு நண்பர்களோடு சேர்ந்து ஏவி.எம். எடுத்த இந்த படம் 3.4.1964 அன்று வெளியானது.

இந்த படத்தில் சிவாஜி ஒரு இன்ஜின் டிரைவர். நாகேஷ் அவரது நண்பர்.

இந்த அடிப்படையை வைத்து ஒரு கதையை உருவாக்கினார்கள்.

படம் பாதியளவு வளர்ந்துவிட்டது. ஆனால், படத்துக்கு பெயர் முடிவாகாமலேயே இருந்தது.

ஏவி.எம். சரவணன் வழக்கமாக ஸ்டூடியோவுக்கு காரில் போகும் போது தி.நகரில் கிருஷ்ண கான சபா அருகே திரும்பினால் சிறிய ரயில்வே கேட் இருக்கும். அதைத் தாண்டித்தான் அவர் போக வேண்டும்.

ஒரு நாள் திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

“இன்ஜின் டிரைவரை மையமாக வைத்து எடுக்கப்போகும் படத்துக்கு என்ன பெயர் வைப்பது என்பது முடிவாகாமல் இருந்த நிலையில், ரசிகர்களுக்கு ஒரு யூகமாக அந்தப் படத்தை பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தேன்”.

அப்போது தனக்கு சட்டென்று தோன்றிய யோசனையை செயல்படுத்தினார் சரவணன்.

ரயில்வே கேட் அருகில் மூன்று ` பேனல்’ களை வாடகைக்கு எடுத்து அவற்றில்` சிவாஜி நடிக்கும்’ என்று போட்டு வெறுமனே ஒரு பச்சை விளக்கின் படத்தை – சிக்னலில் பச்சை விழுமே அல்லது கார்டு கையில் வைத்திருப்பாரே அது போன்ற படத்தை வரைந்து அதன் கீழ் `வருகிறது’ என்ற வார்த்தைகளுடன் விளம்பரப்படுத்தினார்கள்.

படத்தின் பெயர் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டபோது பல பெயர்கள் அலசப்பட்டன.

ஆனால் இயக்குநர் பீம்சிங் போன்றவர்கள் `இதில் விவாதிக்க என்ன இருக்கிறது? அதுதான் நீங்கள் `பச்சை விளக்கைப் போட்டு வருகிறது வருகிறது என்று பேச வைத்துவிட்டீர்களே!

படத்தின் பெயர் ‘பச்சை விளக்கு’த்தான் வேறென்ன ?’ என்று முடிவுக்கு வர, `பச்சை விளக்கு’ என்ற பெயர் அப்படித்தான் அந்த படத்திற்கு வந்தது.

இந்த படத்திலும் கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஜோடி கலக்கியிருந்தார்கள்.

‘பாவமன்னிப்பு’ படத்தை போலவே இந்த படத்திற்கும் ஏவி.எம். நிறுவனம் போட்டி வைத்திருக்கலாம்.

அந்த அளவுக்கு பாடலில் புகுந்து விளையாடியிருந்தார்கள்.

இன்றைக்கு ‘பச்சை விளக்கு’ படம் என்றால் மக்களுக்கு அதன் பாடல்கள் தான் நினைவுக்கு வரும்.

`ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது,’ `கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று’ ‘குத்து விளக்கு எரிய’ ‘தூது சொல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தோழி’ இன்றைக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல்கள்.

இந்த படத்தில் நாகேஷின் நடிப்பு மிக அருமை.

அதுவும் அந்த படத்தில் மிகவும் பிரபலமான ` கேள்வி பிறந்தது அன்று’ பாடலை பாடிக்கொண்டே சிவாஜி ரயில்வே டிராக்கில் நடந்து கொண்டே வருவார்.

அவர் கூட நாகேஷ் நடந்து வருவார்.

பாடலை காதால் கேட்ட ரசிகர்கள், சிவாஜியை விட நாகேஷின் அங்க அசைவுகளுக்காக கைதட்டினார்கள்.

இந்த படமும் ஒரு வகையில் அண்ணன்– தங்கை பாசப்பிணைப்பு கதைதான். ஆனால் தன்னை வளர்த்தவரின் அனாதையான மகளை தன் தங்கையாக சிவாஜி ஏற்றுக்கொள்வார்.

பாடலும், கதையும் படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது.

ஆனால் இந்த படத்திற்கும் ஒரு சிக்கல் வந்தது!

(தொடரும்)

Harrietlgy
6th September 2016, 06:48 PM
What happened before it was Page no. 214, now it is page no. 212.

Russellxor
6th September 2016, 10:27 PM
http://uploads.tapatalk-cdn.com/20160906/0e82cd89991e4966813d0b5ae1a5f468.jpg

Gopal.s
7th September 2016, 07:21 AM
சிவாஜியின் நகைச் சுவை நடிப்புக்கு, எல்லோரும் சபாஷ் மீனா,பலே பாண்டியா,கலாட்டா கல்யாணம் ,ஊட்டி வரை உறவு இவற்றையே உதாரணம் காட்டுவர். அவர் முழு நீள நகைசுவை பட பட்டியல் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)தொடங்கி அன்பே ஆருயிரே (1975) வரை நீளும். நடிகர்திலகம், விரும்பி பண்ணியவை நகைச் சுவை
பாத்திரங்களே.

ஆனால் என்னுடைய பார்வையில் ,அவர் நகைச்சுவையின் முழு வீச்சு சூழ்நிலை காமெடி(situational ) என்ற சூழலில் ,பகுதி நகைச்சுவையாக வந்த படங்களில் அமைந்தவை. வசன காமெடி,ஸ்லாப்ஸ்டிக் என படும் கொனஷ்டைகள் ,அதற்கேற்ப உடல் வாகு,குரல் வாகு கொண்டவர்களுக்கே மிக பொருத்தம். (சந்திரபாபு,நாகேஷ்,சுருளி,வடிவேலு) ஓரளவு ஸ்லாப்ஸ்டிக் செய்வார்.(புன்னகை மன்னன்,பேசும் படம்)சிவாஜியின் தோரணை மிகுந்த ஆண்மைக்கு ,சூழ்நிலை நகைசுவை காட்சிகளே பிரதான தீனி போட்டன.இதிலும் நான் தேர்ந்தெடுக்கும் படங்கள் உங்களுக்கு அவ்வளவாக பரிச்சயம் உள்ளவையா(நகைச்சுவைக்கு) யானறியேன்.

1)நீல வானம்.
2)இருவர் உள்ளம்.
3)தெய்வ மகன்.
4)செல்வம்.
5)சபாஷ் மீனா.
6)சுமதி என் சுந்தரி.
7)கை கொடுத்த தெய்வம்.
8)நவராத்திரி.
9)ராஜா
10)பாரத விலாஸ்

இதில் எனக்கு பிடித்த காட்சிகளை,நடிகர்திலகத்தின் உன்னத நகைச்சுவை வெளியீட்டை அலச போகிறேன்.

Harrietlgy
7th September 2016, 07:11 PM
Kamal Hassan about NT family,




https://www.youtube.com/watch?v=juyqCSHKvyA&list=PLApbIIxjqg7kujMvybNeWg6xr-UIytiqb&index=74

Harrietlgy
7th September 2016, 07:34 PM
Nadigar Thilagam Award Function 2014



https://www.youtube.com/watch?v=va-xh1smQ7I&list=PLApbIIxjqg7kujMvybNeWg6xr-UIytiqb&index=95

Harrietlgy
7th September 2016, 07:49 PM
Nadai mannan Nadigarthilagam


https://www.youtube.com/watch?v=4vxjQgPzYA8

Murali Srinivas
7th September 2016, 10:49 PM
Server crash - 5 Sep 2016

Hello Hubbers,

We had a major server issue on Monday morning and subsequently the Hub went down for more than a day. We tried hard but in the end we had to resort to retrieving data from backups. However, the latest backup we could successfully retrieve was the one dated Sep 3. (The other backups didn't work as expected, unfortunately). So we lost posts from late Saturday and until Sunday. If you find some recent posts missing, it could be because of this. Sorry about that! We will try to avoid such incidents in future.

The above message is by RR, the administrator of our Hub.

Gopal.s
8th September 2016, 08:18 AM
நடிகர்திலகம் விருது பெறப்போகும் வாணிஸ்ரீ,ஒய் .ஜீ .மகேந்திரா ,விஸ்வநாதராய்,சங்கர்-கணேஷ் மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு வாழ்த்துக்கள்.

1)வாணிஸ்ரீ- எந்த சிவாஜி ரசிகரை கேட்டாலும் சிவாஜிக்கு பொருத்தமான மூவரை சொல்லுங்கள் என்றால் கண்ணை மூடி கொண்டு வரும் பதில் பத்மினி ,தேவிகா,வாணிஸ்ரீ.இதில் வாணிஸ்ரீ மிக அதிர்ஷ்டசாலி. அவருடைய மிக சிறந்த காதலி என்று அழைக்க படும் வசந்தமாளிகை லதாவாகும் வாய்ப்பு பெற்றவர். நடிகர்திலத்துடன் உயர்ந்த மனிதன்,நிறைகுடம்,குலமா குணமா ,வசந்தமாளிகை ,சிவகாமியின் செல்வன்,வாணிராணி,வாழ்க்கை அலைகள்,ரோஜாவின் ராஜா,புண்ணியபூமி,இளையதலைமுறை,நல்லதொரு குடும்பம் என்று 11 படங்களில் 1968 தொடங்கி 1979 வரை 11 வருடம் நடித்தவர்,சிவாஜியின் மிக சிறந்த ரசிகை என்று பலமுறை வெளி படுத்தி உள்ளார்.

2)ஒய் .ஜீ .மகேந்திரா ,கெளரவம் (1973) தொடங்கி சுமார் 35 படங்களில் நடிகர்திலகத்துடன் பணி புரிந்தவர். குடும்ப நண்பர். நடிகர்திலகத்தின் மிக சிறந்த பக்தர்களில் ஒருவர். எங்கே நடிகர்திலகத்துக்கு விழா நடந்தாலும் இவர் ஆஜர். இவர்களின் u .a .a .நாடகங்களை அடிப்படையாக்கி நடிகர்திலகத்துக்கு கிடைத்த முத்துக்கள் பார் மகளே பார் (பெற்றால்தான் பிள்ளையா),கெளரவம் (கண்ணன் வந்தான் ),பரீட்சைக்கு நேரமாச்சு(பரீட்சைக்கு நேரமாச்சு). நடிகர்திலகத்தின் மிக சிறந்த நாடகங்களை மீள் உருவாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டுபவர்.(வியட்நாம் வீடு). மிக குறிப்பிட வேண்டிய படம் பரீட்சைக்கு நேரமாச்சு.

3)விஸ்வநாத ராய்- இவர் நடிகர்திலகத்தின் 14 படங்களுக்கு கேமரா இயக்கம் செய்தவர். முக்கியமாக ஏ.சி.திருலோகச்சந்தர் படங்களில். பாபு (1971)தொடங்கி,பாரதவிலாஸ் ,அவன்தான் மனிதன்,அன்பே ஆருயிரே,டாக்டர் சிவா,ஜெனரல் சக்ரவர்த்தி,ஜஸ்டிஸ் கோபிநாத்,நான் வாழவைப்பேன்,தர்மராஜா,விஸ்வரூபம்,வசந்தத்தில் ஓர் நாள்,குடும்பம் ஒரு கோயில்,அன்புள்ள அப்பா ,தாம்பத்யம்(1987) 14 படங்கள். 16 வருடங்கள்.அவன்தான் மனிதன் குறிப்பிடத்தக்க படம். இவரின் அற்புதமான திறமையை ஆட்டுவித்தால் யாரொருவர் பாடலில் காணலாம்.

4)சங்கர் கணேஷ்- இவர் நடிகர்திலகத்தின் 70 படங்களுக்கு மேல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் விஸ்வநாதனுக்கு உதவியாக பணி புரிந்திருந்தாலும் ,துணை (1982),ஊரும் உறவும்,நெஞ்சங்கள்,பந்தம்,நீதியின் நிழல்,ஆனந்தக்கண்ணீர்,ராஜமரியாதை,வீரபாண்டியன்,அன்பு ள்ள அப்பா(1987) போன்ற 9 படங்களில் இசையமைப்பாளராக (இவற்றில் 2 சிவாஜி பிலிம்ஸ் படங்கள்)பணி புரிந்தவர்.சிவாஜியால் முன்னேறிய ஜீ.என்.வேலுமணி மருமகன்.

5)வெண்ணிற ஆடை நிர்மலா- நடிகர்திலகத்துடன் லட்சுமி கல்யாணம், தங்கசுரங்கம்,எங்கமாமா,தங்கைக்காக,பாபு, உனக்காக நான் போன்ற படங்களில் பங்கேற்றவர். தாமதத்தால் ,சிவகாமியின் செல்வனை லதாவிற்கு தாரை வார்த்தவர்.ஜோடியாக ஒரே படம் தங்கைக்காக. (உன்னை தேடி வரும் எதிர்காலம்)

முதல் மூவருக்கு நிஜமான மனம் கனிந்த வாழ்த்துக்கள். கடைசி இருவருக்கு வாழ்த்துக்கள்.

KCSHEKAR
8th September 2016, 11:04 AM
நடிகர்திலகம் விருது பெறப்போகும் வாணிஸ்ரீ,ஒய் .ஜீ .மகேந்திரா ,விஸ்வநாதராய்,சங்கர்-கணேஷ் மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு வாழ்த்துக்கள்.
விருது பெறப்போகிறவர்களைப் பற்றி மிகவும் அருமையாக, அதேநேரத்தில் அனைத்து விபரங்களும் அடங்கியிருந்தாலும், ரத்தினச் சுருக்கமாக ஒரு முன்னோட்டம். அருமை கோபால் சார்.

sivaa
10th September 2016, 10:30 PM
இங்குள்ள பிரச்சினைதான் என்ன?


Server crash - 5 Sep 2016

Hello Hubbers,

We had a major server issue on Monday morning and subsequently the Hub went down for more than a day. We tried hard but in the end we had to resort to retrieving data from backups. However, the latest backup we could successfully retrieve was the one dated Sep 3. (The other backups didn't work as expected, unfortunately). So we lost posts from late Saturday and until Sunday. If you find some recent posts missing, it could be because of this. Sorry about that! We will try to avoid such incidents in future.

The above message is by RR, the administrator of our Hub.

தகவுலுக்கு நன்றி முரளி சார்
என்னுடைய பதிவுகள் பல காணாமல் போயிருந்தன
விபரம் புரியாமல் இருந்தேன் .
தங்கள் தகவல்மூலம் விபரம் தெரிந்துகொண்டேன் நன்றி.

sivaa
10th September 2016, 10:42 PM
http://oi63.tinypic.com/25tgcow.jpg

முகநூல் ஒன்றிலிருந்து இப்படத்தை கொப்பி எடுத்தேன்.
அதில் இப்படத்தைபற்றிய விளக்கம் இருக்கவில்லை.
சிவாஜி கணேசன் ,எம் ஜீ ஆர் இருவரையும் அடையாளம் காணமுடிகிறது,
ஏனையவர்கள்பற்றிய விபரம் தெரியவில்லை.
எலலோர் முகத்திலும் ஒருவித சோகத்துடன்,
எதைப்பற்றியோ தீவிரமாக ஆலோசிப்பதுபோல் தெரிகிறது.
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்.

sivaa
11th September 2016, 08:59 AM
திரிசூலம் திரைப்படம்
2 கோடி வசூல் பெற்றதற்கான
பத்திரிகை ஆதாரம்

http://oi68.tinypic.com/ae7ipg.jpg

sivaa
11th September 2016, 09:05 AM
பாகிஸ்தான் யுத்த நிதிக்காக ஸ்ரீதரும் சிவாஜியும் தமிழகத்தின் ஆறு முக்கிய நகரங்களில் இணைந்து நட்சத்திர இரவுகள் நடத்தினர். அதில் நவீன துஷ்யந்தன் - சகுந்தலை நாடகம் முக்கியமானது. ஜெமினியும் சாவித்ரியும் ஜோடியாக நடித்தார்கள். மேடையில் அவர்கள் இணைந்து அரிதாரம் பூசியது அதுவே முதலும் கடைசியும். கிட்டத்தட்ட 12 லட்சங்களுக்கும் மேல் வசூலானது. அதைப் பெற்றுக் கொள்வதற்காகவே சென்னை வந்தார் பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.

http://media.dinamani.com/2015/07/10/savitri-giving-jewels.jpg/article2912942.ece/binary/original/savitri%20giving%20jewels.jpg
அதுவும் போதாமல் சிவாஜி, சாவித்ரி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் தாங்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும் சாஸ்திரியிடம் கொடுத்தார்கள். பிரதமருக்கு முன்பாக சாவித்ரி தன் காதுகளிலிருந்து கம்மலைக் கழற்றும் புகைப்படம் புகழ் பெற்றது.

sivaa
11th September 2016, 09:09 AM
61ல் தமிழில் சிவாஜி கணேசன் நடித்த மூன்று படங்கள் டில்லிக்குச் சென்றன. மூன்றுமே பரிசு பெற்றுத் திரும்பின. பாவமன்னிப்பு ‘தங்கப்பதக்கம்’ பெற வேண்டியது. ஏ.பீம்சிங் அதற்காக மெனக்கெட விரும்பாததால் சில ஓட்டுகளில் அதை இழந்தது. அதற்கு இந்தியாவிலேயே சிறந்த இரண்டாவது படம் என்கிற விருதும், கப்பலோட்டிய தமிழனுக்கு வெள்ளிப் பதக்கமும், பாசமலருக்கு சிறந்த படம் என்கிற தரச் சான்றிதழும் கிடைத்தது.

sivaa
11th September 2016, 09:21 AM
பாசமலரில் ஜெமினியின் வளர்ப்புத் தாயாக ஒரு அம்மா நடித்திருப்பார், அபாரம்...! சிவாஜி ஒரு பென்சிலைச் சீவிக்கொண்டு ஜெமினியிடம் " ஆனந் நீயும் உனது கூட்டமும் பக்டரியை இழுத்து மூடினாலும், ஒரு அகல்விளக்கின் சிறு ஒளியில் ஒரு ஜீவன் அங்கும் இங்கும் ஓடி வேலை செய்துகொண்டு இருக்கும் அதுதான் தொழிலாளி ராஜு " என்று பேசும் வசனம் அன்று எமது பஞ்ச் டயலாக்....!

(வாசகர் ஒருவரது பதிவு)

sivaa
11th September 2016, 09:23 AM
http://oi65.tinypic.com/j9tqn6.jpg

sivaa
11th September 2016, 09:23 AM
http://oi65.tinypic.com/2zrq1vq.jpg

sivaa
11th September 2016, 09:36 AM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by sivaa http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1261252#post1261252) முகநூலில் இருந்து


1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி






http://www.mayyam.com/talk/newreply.php?do=postreply&t=12043
http://oi65.tinypic.com/117foy0.jpg

sivaa
11th September 2016, 09:38 AM
http://oi64.tinypic.com/2wp8bye.jpg

sivaa
11th September 2016, 09:38 AM
http://oi68.tinypic.com/25tcb4n.jpg

sivaa
11th September 2016, 09:39 AM
http://oi68.tinypic.com/2w1tg07.jpg

sivaa
11th September 2016, 09:40 AM
http://oi66.tinypic.com/qp0vie.jpg

Harrietlgy
11th September 2016, 10:26 AM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 143 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_image/22/147333265341771280Tamil_News_Nellai.jpg

பச்சை விளக்கு’ வளர்ந்து கொண்டே வந்தது! படம் எட்டாயிரம் அடி வரை வந்துவிட்டது. அப்போதுதான் அந்த சிக்கல் வந்தது. படத்தை ஏவி.எம். செட்டியார் பார்த்தார். படம் பார்க்கும்போதே முகத்தை சுளித்தார். படம் பார்த்து முடிந்தபின் அவருக்கு திருப்தி இல்லை.

`எடுத்த வரையில் ஸ்க்ராப் பண்ணிடுங்கப்பா. இதே பேக்கிரவுண்டில் வேறு கதை தயார் பண்ணிடுங்க’ என உறுதியாக சொல்லிவிட்டார்.

அப்படியே வேறொரு கதையை தயார் செய்து எடுத்தார்கள். அதில் ஏவி.எம். ராஜன் – புஷ்பலதா காட்சிகளை டெவலப் செய்து மீண்டும் எடுத்தார்கள். அத்தனை பாடல்களும் செம ஹிட்! மறுபடியும் கண்ணதாசன் – விஸ்வநாதன் காம்பினேஷன் கொடி கட்டி பறந்தது. இந்த தொடரைப் பற்றி நான் ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கிறேன். அதாவது நான் சிவாஜி படங்களை வருட வரிசையில் எழுதவில்லை.

அதிக சுவாரஸ்யம் கொண்ட சம்பவங்களை அடக்கிய பின்னணி தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தான் எழுதி வருகிறேன்.

அதனால் இப்போது `பச்சை விளக்*கு’ படத்திற்கு முன்னால் வந்த படத்தை பார்ப்போம். பிரபல கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸின் அருமையான வசனங்களை நாம் `பாசமலர்’ படத்தில் பார்த்தோம். அந்தப் படம் முடியும் தறுவாய்! ஒரு நாள் காலை சிவாஜியின் மேக்–-அப் அறைக்குள் நுழைந்தார் ஆரூர்தாஸ்!

கண்ணாடி வழியாக இவர் வருவதை கவனித்த சிவாஜி, `….. வா, ஆரூரான்’, அப்படித்தான் சிவாஜி ஆரூர்தாஸை அழைப்பார். ‘காலங்காத்தாலே உனக்கு ஒரு சந்தோஷமான சேதி சொல்றேன்.. நம்ம ` காஸ்டி*யூமர்’ ராமகிருஷ்ணனுக்கு சிவாஜி பிலிம்ஸ் ஆதரவோடு ஒரு படம் பண்ணிக் கொடுக்கப்போகிறோம்.

இதே ` பாசமலர்’ யூனிட்டுதான் ஒர்க் பண்றாங்க.` பீம்பாய்’ டைரக்*ஷன். நான், ஜெமினி கணேசன், சாவித்தி*ரி, ராதா அண்ணன் எல்லாம் நடிக்கிறோம். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை. கண்ணதாசன் பாட்டு. வசனம் எழுதுறதுக்கு நான் உன்னைத்தான் சொல்லியிருக்கேன். நீ சண்முகத்துக்கிட்டே பேசி, அட்வான்ஸ் வாங்கிட்டு எழுத ஆரம்பி. நம்ம சிவாஜி பிலிம்ஸ் ரிலீஸ்தான்.

அத்தனை விரைவாக மீண்டும் சிவாஜி படம் வரும் என்று ஆரூர்தாஸ் நினைக்கவில்லை. (இதையெல்லாம் ஆரூர்தாஸே அவருடைய ‘சிவாஜி கண்ட சினிமா ராஜ்ஜி*யம் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்

அதே சமயத்தில் ஆரூர்தாஸ் நினைக்காத ஒரு சம்பவம் நடந்தது. இரண்டாவது படத்தின் கதையைக் கேட்ட ஜெமினி, சிவாஜியின் அண்ணன் பாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

சிவாஜி, பீம்சிங், சாவித்திரி எல்லோருமே எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.

ஜெமினி இசையவில்லை. ஆரூர்தாஸும் ஜெமினியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் ஆரூர்தாஸ் சொன்னால், ஜெமினி கேட்பார் என்று அவரை அனுப்பினார்கள்.

இவரும் போய் ஜெமினியிடம் விளக்கமாகச் சொன்னார்.

`வாத்யாரே! (அப்படித்தான் ஜெமினி ஆரூர்தாஸை அழைப்பார்) நான் சொல்றதை நல்லா கவனி. சாவித்திரி, வாழ்க்கையில் என் மனைவி. கதைப்படி சிவாஜிக்காக அவளை பெண் பாக்கப் போற நான், அவ மேலே ஆசைப்பட்டு சூழ்ச்சி பண்ணி, என் தம்பியான சிவாஜியை ஏமாத்தி அவளை கட்டிக்கிடறேன். அவ தனக்கு மனைவியா வராததனால தம்பி சிவாஜி வாழ்க்கையில் நிம்மதியில்லாம கஷ்டப்படறான். நான் சாவித்திரியோடு சந்தோஷமாக வாழ்வதாக கதை போகிறது. படத்தில் `பக்கா’ வில்லன் ஆகி, ரசிகர்களோட வெறுப்புக்கு ஆளாக வேணாம். வேண்டாம், இந்த விஷப்பரீட்சை, என்னை விட்டுடு’.

`அண்ணே நீங்க சொல்றது சரிதான். ஆனால் என்னை இங்கே கொண்டு வந்து அறிமுகப்படுத்தினது நீங்கதான். இதே யூனிட்ல இன்னொரு படம் வரும்னு நான் எதிர்பார்க்கலே. அதுல நீங்க ஒருத்தர் இல்லாமப் போனா என் மனசுக்கு வேதனையா இருக்கும். அதனாலதான் சொல்றேன்’ என்றார் ஆரூர்தாஸ்.

`அவ்வளவுதானே… கவலைப்படாதே வெகு சீக்கிரத்துல இதே யூனிட்டோட இன்னொரு படத்துக்கு உனக்கு அழைப்பு வரப்போகுது. அதுல நான் உன்னோடு இருப்பேன்’ என்றார் ஜெமினி.

ஜெமினி நடிக்காத அந்த வேடத்தில் பாலாஜி நடித்தார். அந்த படம் 14.4.1962ம் ஆண்டு வெளிவந்தது. அந்த படம் நூறு நாட்கள் ஓடியது. அந்த படம்தான் ‘டித்தால் மட்டும் போதுமா’.

இப்போது படத்தைப் பார்த்தாலும் ஜெமினி சொன்னது எத்தனை உண்மை என்பது புரியும். காதல் மன்னனாக சிவாஜியின் நண்பராக பார்த்த ஜெமினியை வில்லனாக பார்க்க ரசிகர்கள் விரும்பியிருக்க மாட்டார்கள்.

பாலாஜி அந்த வேடத்திற்கு மிகவும் சரியாக பொருந்தியிருப்பார்.

`படித்தால் மட்டும் போதுமா’ ஒரு வித்தி*யாசமான கதைக்களம்.

இதிலும் கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஜோடி கொடி கட்டி பறந்தது.

எப்போதும் போலவே இந்த படத்தின் பாடல்களும் படம் வெளிவருவதற்கு முன்பே இலங்கை வானொலியில் பட்டையை கிளப்பியது.

அதிலும் முதலில் எல்லோரையும் ஈர்த்தது, டி.எம்.எஸ். பி.பி.எஸ். சேர்ந்து பாடிய `பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை. படத்தின் கதையையே கோடி, காட்டியிருப்பார் கண்ணதாசன்.

இந்த படத்தில் `தன்னிலவு தேனிறைக்க வாழைமரம் நீர் தெளிக்க’ ஒரே பாடலை மட்டும் மாயவநாதன் எழுதியிருப்பார்.

இந்த படம் வெளியான போது எனக்கு நான்கு வயது. பின்னாளில் மீண்டும் திரையிடப்பட்ட போது, இந்த படத்தில் வரும் `நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ பாட்டுக்கு சிவாஜி நின்று கொண்டே ஆடும் ஆட்டத்திற்கும், அவருடை*ய கை அசைப்பிற்கும் தியேட்டரில் எப்போது பார்த்தாலும் விசில் பறந்து கொண்டிருந்தது.

அது சரி!

இதே யூனிட்டில் அடுத்து ஒரு படம் ஆரூர்தாஸுக்கு வரும். அதில் நானும் நடிப்பேன் என்று ஜெமினி சொன்னாரே!

அது என்ன படம்?

ஆரூர்தாஸும் கேட்கவில்லை, ஜெமினியும் சொல்லவில்லை!

`வரவேண்டிய நேரத்தில், வரவேண்டிய ஒன்று, வேண்டியவர் மூலமாக வரவேண்டியவருக்கு வந்தே தீரும்’.

அதுவும் எப்படி வந்தது?

ஒரே சமயத்தில் இரண்டாவது, மூன்றாவது படங்களுக்கும் எழுத வேண்டிய வாய்ப்பு ஆரூர்தாஸுக்கு வந்தது. ஒரு குடுகுடுப்பைக்காரர் சொன்னதைப் போல் ஜெமினி ஆரூடம் சொன்னார். அவர் சொன்னதைப் போலவே நடந்தது.

அந்த மூன்றாவது படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம்.

சிவாஜி. ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, குழந்தை கமலுக்கு இரட்டை வேடம் !

இந்த இரண்டு படங்களுமே மூன்று மாத இடைவெளியில் வந்து சக்கை போடு போட்டன.

ஆனால் மூன்றாவது படம் இரண்டாவது படத்திற்கு முன்பே வெளியானது.

காரணம் மூன்றாவது படத்தை தயாரித்தது ஏவி.எம். நிறுவனம்

அவர்கள் எப்போதுமே சரியாக திட்டமிட்டு படத்தை வெளியிடுவார்கள்.

அந்த படம்தான் `பார்த்தால் பசி தீரும்’.

(தொடரும்)

KCSHEKAR
15th September 2016, 11:55 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/JuniorVikatan18Sep2016_zpssz07znle.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/JuniorVikatan18Sep2016_zpssz07znle.jpg.html)

Russellxor
17th September 2016, 01:37 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/654c22f103d27a25c661275e35395559.jpg

Russellxor
17th September 2016, 01:38 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/caa460157ceb9cbad119d464aa018943.jpg

Russellxor
17th September 2016, 01:39 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/81cec93c96c88db56be4ab97f5acdb03.jpg

Russellxor
17th September 2016, 01:39 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/d5c56a66e8e79b4e698b0d318aed9565.jpg

Russellxor
17th September 2016, 01:40 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/e0c35b106fc8be64a7cf2f94704ba400.jpghttp://uploads.tapatalk-cdn.com/20160917/e0b1f0906387b064edf7ec401af34cf2.jpg

Russellxor
17th September 2016, 01:41 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/30ae3be8e5774269d421748971e843f9.jpg

Russellxor
17th September 2016, 01:42 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/3a0afd2114ffad564becb1cd7b700ed9.jpg

Russellxor
17th September 2016, 01:43 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/c555e0ffc188c95a15ea9aca586bd835.jpg

Russellxor
17th September 2016, 01:44 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/efd980d10fb26d1127f4c28150ea1746.jpg

Russellxor
17th September 2016, 01:46 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/5b708769387a0206f3f111613e7c1d7f.jpg

Russellxor
17th September 2016, 01:47 PM
http://uploads.tapatalk-cdn.com/20160917/b2f790300ca8c683d28180409630b9e6.jpg

Russellxor
17th September 2016, 06:24 PM
1980 'களில் ரசிகர்மன்ற செயல்பாடுகளில் ஒரு பிரதான அம்சமாக விளங்கியது தியேட்டர்களில் காட்டப்படும் ரசிகர்மன்றஸ்லைடுகள்.படம் ஆரம்பிக்கும் முன்காட்டப்படும் ரசிகர் மன்ற ஸ்லைடுகள் ரசிகர்களிடையே பெரிய ஆரவாரத்தை உண்டாக்கும்.சாதாரண டூரீங் தியேட்டர்களிலேயே மீண்டும் திரையிடப்படும் பழைய படங்களுக்கே பல ரசிகர்மன்ற ஸ்லைடுகள்காண்பிக்கப்படும்.
அப்படியிருக்க நகரங்களில் புதிய படங்களுக்கு கேட்கவே வேண்டாம்.அவற்றிலும் ரசிகர்மன்றங்களிடையே பலத்த போட்டியும் இருக்கும்.ஒரு ரசிகர்மன்றமே பல ஸ்லைடுகளை தியேட்டரில் கொடுத்தும் போட வைக்கும்.அந்த ஸ்லைடுகளை காண்பதற்காகவே ரசிகர் மன்றங்கள் படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வேகமாய் தியேட்டருக்குள்முந்திக் கொண்டு வரும்.அப்போது அவர்கள் செய்யும் அலப்பரையில் தியேட்டரே அலறும்.
http://uploads.tapatalk-cdn.com/20160917/d6ada145d946b30cd17047f41201cfa6.jpg
சுமார் 28 வருடங்களுக்கு முந்தைய ஸ்லைடு இது.பொள்ளாச்சி தியேட்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்லைடுகளில் இதுவும் ஒன்று.

Russellxor
17th September 2016, 06:30 PM
கருடா சௌக்கியமா?
சில முக்கிய 'நறுக்'வசனங்கள் ஒலிச்சித்திரமாக உங்களின் பார்வைக்கு...


Karuda sowkiyama: https://youtu.be/CMtHkzcCJeY

Russellxor
18th September 2016, 06:33 PM
திரைக்கதம்பம்...

http://uploads.tapatalk-
cdn.com/20160918/6a8fa8da1ce1b265ecb94f0a28e09233.jpg

Russellxor
18th September 2016, 06:34 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/e93938d4c7bac1efc3b280dc563f9229.jpg

Russellxor
18th September 2016, 06:34 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/5ffc821fe2e7394d051269946151385c.jpg

Russellxor
18th September 2016, 06:35 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/c3bde2dabad4034749617335482532e7.jpg

Russellxor
18th September 2016, 06:36 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/15c668955066a38bd4509853d4af058b.jpg

Russellxor
18th September 2016, 06:37 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/d1084118c0c600da40c0d333f7bdd9c9.jpg

Russellxor
18th September 2016, 06:38 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/e9607826ed6fafcb5ab39a5045ed3a21.jpg

Russellxor
18th September 2016, 06:39 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/5d3cd30a8a9fc512c5f61ac0e644f218.jpg

Russellxor
18th September 2016, 06:40 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/7d6be3a2268281e6311882ad1dfb9be4.jpg

http://uploads.tapatalk-cdn.com/20160918/58e1755c5157fb38437b31c46474c77d.jpg

Russellxor
18th September 2016, 06:41 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/9a6bec928cf75745aa1d3a2436fab464.jpg

Russellxor
18th September 2016, 06:42 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/c2c3acc39214c3aaf639ceda424a76f5.jpg

Russellxor
18th September 2016, 06:49 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/1a9798ddc8b2f6a5033bec56712cd27d.jpg

http://uploads.tapatalk-cdn.com/20160918/9e0052ada175498f2ecf335d5ce563e7.jpg
http://uploads.tapatalk-cdn.com/20160918/f7237da7aec249a1f7eb3afb582dc1c9.jpg

Russellxor
18th September 2016, 06:49 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/7bedcc526c89267ca435d8a2e3c4d14e.jpg

Russellxor
18th September 2016, 06:50 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/979c0745f0d188d228620c76b6869516.jpg

Russellxor
18th September 2016, 06:51 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/321e8c24dadc6c605464b570a92014c7.jpg

Russellxor
18th September 2016, 06:53 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/5ee7dd36200346f9c3f0d7826fa31c6b.jpg

Russellxor
18th September 2016, 06:53 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/3a1013e913c278fe8ac474a895f532e8.jpg

Russellxor
18th September 2016, 06:57 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/7fb20f92f49eea21656d38a324642ecb.jpg

Russellxor
18th September 2016, 06:58 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/70fe40efda5ac150f1352082aa47c802.jpg

http://uploads.tapatalk-cdn.com/20160918/a5ab1f311878fb86dfdbd81288c7449b.jpg

Russellxor
18th September 2016, 07:01 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/6f15e195f4cb0571a391a7b7ed0a1c1e.jpg

Russellxor
18th September 2016, 07:02 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/fa67487d0143a8d6e067fb6b62afd29a.jpg

Russellxor
18th September 2016, 07:04 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/0fdd4b3884f8c8704c14c322218598d4.jpg

http://uploads.tapatalk-cdn.com/20160918/812f36ad0daa5ff11c3e266fd71a917b.jpg

Russellxor
18th September 2016, 07:05 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/4eb877c44aa824f41488f5d1ce10637f.jpg

Russellxor
18th September 2016, 07:06 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/9cd3845c1103c87622aa40de993f535b.jpg


http://uploads.tapatalk-cdn.com/20160918/631719f781f0727dc9036592b411517d.jpg

Russellxor
18th September 2016, 07:07 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/7f152a94ccc2517c5f670a0c6249b356.jpg

Russellxor
18th September 2016, 07:08 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/6aef3aff49c2ec026e8a9ae1eeb2e96b.jpg

Russellxor
18th September 2016, 07:10 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/3bdd54da0695b975bc6b145ed1503ddf.jpg

Russellxor
18th September 2016, 07:10 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/9cfbf0e62a748cd12428163d541b0b1f.jpg

Russellxor
18th September 2016, 07:11 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/7e364185ab91ee0a94bd95b9f4ffe92e.jpg

Russellxor
18th September 2016, 07:12 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/23e48e5fe33f9ccb8507e4542286047d.jpg

Russellxor
18th September 2016, 07:12 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/d97f288f0094ba385b67e53a1f6b901e.jpg

Russellxor
18th September 2016, 07:13 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/d71f7c1984e4368a0003d5f3bcf4cb45.jpg

Russellxor
18th September 2016, 07:15 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/ad54c821ec56365b7ad3e4f162a43aa7.jpg

http://uploads.tapatalk-cdn.com/20160918/f707bd7b0f9437d6153be7d0c6acce4b.jpg

Russellxor
18th September 2016, 07:17 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/7c13462eacd9b4c3cb5108f0cbb1fa99.jpg
http://uploads.tapatalk-cdn.com/20160918/e9fb62dd53046fb9316618c60e6d21c7.jpg

Russellxor
18th September 2016, 07:17 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/7d8906b6f2a5ae2901b75cc9968e7f1c.jpg

Russellxor
18th September 2016, 07:18 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/b3a0789c14a3cd90bfc47b51d3cfdeee.jpg

Harrietlgy
18th September 2016, 07:20 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 144 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_image/22/14739359981415043221Tamil_News_Nellai.jpg


இந்த அத்தியாயத்தை நான் கதை – வசனகர்த்தா ஆரூர்தாஸுக்குத்தான் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

காரணம் அவர் தனது `சிவாஜி கண்ட சினிமா ராஜ்ஜியம்’ புத்தகத்தில் சிவாஜி – எம்.ஜி.ஆர் பற்றிய சில அரிய தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.

அதில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு ` நாடறியாத உண்மை.’

அதில் என்ன சொல்கிறார்?

சிவாஜியிடம் சிறந்த நடிப்பாற்றலுடன் சீரிய நற்பண்புகளும் குடிகொண்டிருந்தன என்பது, அவருடன் நெருங்கிப் பழகி அவரை நன்கு புரிந்து கொண்டிருப்பவர்களுத்தான் தெரியும்.

மனதார எவருக்கும் எந்தக் கெடுதலும் செய்யமாட்டார். தன்னால் ஒரு படமோ அந்தப் படத்தின் படப்பிடிப்போ பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்.

அவர் நடிக்கும் படங்களில், மனதளவுக்கு அவருக்கு ஒவ்வாத சக நடிகர்கள் இருப்பதை சிறிதும் பொருட்படுத்தமாட்டார். `இவர் வேண்டாம் – அவரைப் போடு’ என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து வந்து நான் கேட்டதேயில்லை.

எம்.ஜி.ஆருடன் பல படங்களில் இணைந்து நடித்து அந்நாட்களில் அவரோடு ஒரு சிறந்த `காம்பினேஷன் மவுஸ்’ ஏற்படுத்திக்கொண்டிருந்த சரோஜாதேவியை சிவாஜி பிலிம்ஸின் சொந்தப் படம் `புதிய பறவை’ படத்தில் கதாநாயகியாகப் போட்டுக்கொள்ளலாம் என்று தன் தம்பி சண்முகம் கூறியதற்கு சிவாஜி மறுப்புத் தெரிவிக்கவில்லை.

தான் நடிக்கும் படங்களில் `பாலிடிக்ஸ்’ பற்றி எந்த விவரத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல், தான் உண்டு, தன் நடிப்பு உண்டு என்று இருந்துவிடுவார்.

தனக்கு இந்த படத்தில் இவ்வளவு சம்பளம் என்பதே அவருக்கு நினைவிருக்காது. முன்பணத்தையும், படம் முடிந்ததும் தரப்ப்படும் முழுப்பணத்தையும் அவர் தன் கையால் தொட்டதே இல்லை.

சிவாஜி பிலிம்ஸில் இருந்து அவ்வப்போது கடிதங்கள் வரும். அவற்றில் கையெழுத்துப் போடுவார். அந்தச் சமயங்களில் அவர் அருகில் அமர்ந்திருக்கும் என்னிடம் குறும்பாகக் கூறுவார்.

`சிவாஜி பிலிம்ஸ் என்னைக் குத்தகைக்கு எடுத்திருக்கு. அந்தக் குத்தகைப் பத்திரத்தில்தான் இப்போ நான் கையெழுத்து போடறேன்.’

இதை நான் சிரித்துக்கொண்டே கேட்பேன், ` அண்ணே! இப்போ ஒரு லட்ச ரூபாயை ஒங்க கையில் கொடுத்தா நீங்க என்ன செய்வீங்க?’

`உடனே உன் கையில் கொடுத்திடுவேன்.’

`எதுக்கு?’

`சரியா இருக்கான்னு எண்ணிப் பாக்கறதுக்கு’

`ஏன் நீங்க எண்ணிப் பாக்கமாட்டீங்களா ?’

`ஊஹூம், எண்ணத் தெரிஞ்சாதானே? ஆமா.. ஒரு லட்சத்தில் எத்தனை ஆயிரம் இருக்கும்?’

`நூறு ஆயிரம் இருக்கும்’ என்று நான் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்துடன், `அடேங்கப்பா! நூறு ஆயிரமா? ஆயிரமே ரொம்ப பெரிசாச்சே!’ சரி ஆருரான், நான் இப்படி கேட்டதை வெளியில யாருக்கும் சொல்லிடாதே.’

`ஏன்?’

`எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நெனச்சிடுவானுங்கன’

`உண்மைதானே! நடிப்பு ஒண்ணைத்தவிர, வேறு எதுவுமே உங்களுக்குத் தெரியாதுங்கிறது நாடறிஞ்சதுதானே! நீங்க என்னைக் கேக்குறீங்க, ஏன் சினிமாவுக்கு வந்தேன்னு?’

`ஆமா! தம் அடிக்க மாட்டேன்ங்கறே, தண்ணி அடிக்க மாட்டேன்ங்கறே, சீட்டாடத் தெரியாது. பெண்ணுங்க சகவாசம் கிடையாது. இப்படிப்பட்ட உன்னை எவன் சினிமாவுக்கு வரச்சொன்னான்?’

`தெரியாத்தனமா வந்து விழுந்துட்டேன். மன்னிச்சிடுங்க. இனிமே வரமாட்டேன்.’

`இனிமே என்னத்த வராம இருக்கிறது? அதான் வந்து என் உயிரை வாங்கிக்கிட்டிருக்கியே, அப்புறம் என்ன?’

`உயிரை வாங்கிக்கிட்டிருக்கியே’ என்று அவர் சொன்னது – வசனம் பேசுவது சம்பந்தமாக சில நேரங்களில் சிவாஜிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் எங்களுக்குள் உண்டாகும் வாய்ச்சண்டையை குறிக்கும் பொருட்டு.

அதே புத்தகத்தில் இன்னொரு அத்தியாயத்தில் ஆரூர்தாஸ் இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்கிறார்.

அன்றைக்கு பட உலகில் இருந்த சம்பள நிலவரத்தைப் பற்றிய இன்னொரு சுவையான தகவல்களை சொல்கிறேன்.

1952ல் `பராசக்தி’ படத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு கொடுக்கப்பட்ட மாதத் சம்பளம் 250 ரூபாய்!

அதே சிவாஜி 16 ஆண்டுகளாக 124 படங்களில் நடித்த பிறகு, 125 படமாக, 1968ல் வெளியான ஏவி.எம்.மின் ` உயர்ந்த மனிதன்’ படத்துக்கு வாங்கிய சம்பளம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்!

அப்போது இயக்குநர் ஏ.பி. நாகராஜன் சிவாஜியை வைத்து `திருவிளையாடல்’ `திருவருட் செல்வர்’ ,`சரஸ்வதி சபதம்’, ` திருமால் பெருமை’, ` தில்லானா மோகனாம்பாள்’ போன்ற வெற்றிப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.

`அவர் இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறார். அதே சம்பளம் `உயர்ந்த மனிதன்’ படத்துக்கும் வேண்டும் என்று சிவாஜியின் தம்பி சண்முகம் கேட்டதற்கு ஏவி.மெய்யப்ப செட்டியார் மறுத்துவிட்டார்.

`அவை எல்லாம் கலரில், அதிக செலவில் எடுக்கப்பட்ட படங்கள். இது கறுப்பு வெள்ளையில் எடுக்கப்படும் சாதாரண குடும்பப்படம். இதற்கு இவ்வளவுதான் சம்பளம். இதற்கு மேல் கொடுப்பதற்கில்லை’ என்று கூறிவிட்டார்.

`சரி’ என்று சொன்ன சண்முகம், முன்பணம் எதுவும் வேண்டாம். முடிந்ததும் மொத்தமாக வாங்கிக் கொள்வதாக சொல்லிவிட்டார்.

கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, சில நாட்கள் நடைபெற்ற பிறகு, மேற்கொண்டு தொடராமல் நிறுத்தப்பட்டு விட்டது.

அதற்குக் காரணம் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற `குழந்தையும் தெய்வமும்’ தமிழ் படத்தை `தோ கலியான்’ (இரு மொட்டுக்கள்) என்ற பெயரில் இந்தியில் அதே இயக்குநர்கள் இயக்க ஏவி.எம். தயாரித்தது. அந்த சமயத்தில் `குழந்தையும் தெய்வமும்’ கதையில் ஆங்கில மூலப்படமான PARENT TRAP ஐ ` வாபஸ்’ என்ற தலைப்பில் வேறொரு மும்பை கம்பெனி படமாக தயாரித்துக்கொண்டிருந்தது.

அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தனது ` தோ கலியான்’ படத்தை ரிலீஸ் செய்துவிட முடிவு செய்த செட்டியார் அதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இயக்குநர்களையும் முடுக்கிவிட்டார்.

அதனால் எட்டு மாதங்களாகியும் `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பு எதுவும் நடைபெறாததால் சந்தேகம் கொண்ட சிவாஜியும் அவரது தம்பி சண்முகமும், அதை சிவாஜி பிலிம்ஸ் சார்பில் சொந்தமாக தயாரிக்கலாம் என்று திட்டமிட்டனர்.

`உயர்ந்த மனிதன்’ கதை – வசனத்தை எழுத ஜாவர் சீதாராமன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். கதையை மட்டும் வைத்துக்கொண்டு வசனத்தை என்னை எழுதும்படி சிவாஜி சொன்னார்.

சண்முகம், ஏவி.எம்.மைச் சந்தித்து, `உயர்ந்த மனிதன்’ பற்றி கேட்டதற்கு, அவர் அதற்கான காரணத்தைச் சொன்னார். விரைவில் அந்த படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் சொன்னார். அதோடு நில்லாமல் அவர்களின் சந்தேகத்தைப் போக்குவதற்காக ஒரு காரியத்தை செய்தார் ஏவி.மெய்யப்ப செட்டியார்.

(தொடரும்)

Russellxor
18th September 2016, 07:25 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/bed591baccbbd218b28970b0c50e3c67.jpg

Russellxor
18th September 2016, 07:26 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/d9dec9049a7ad64d9f53f7a978ab8d02.jpg

Russellxor
18th September 2016, 07:31 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/07d193525f73a7aa9eb6dcb7b2302cbd.jpg

Russellxor
18th September 2016, 07:40 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/519e6d9ed220b3535efded5ce2ce45ac.jpg

Russellxor
18th September 2016, 07:41 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/4786be8f4f6068e2d5b6778f2b74fe80.jpg

Russellxor
18th September 2016, 07:43 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/b5f45f66d11e11e50d846db9c5a1e732.jpg

Russellxor
18th September 2016, 07:44 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/ee349bfad0cfce87959bf6cfe29ab176.jpg

Russellxor
18th September 2016, 07:45 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/e236c2579a4d456695a77d29bd7f8bc4.jpg

Russellxor
18th September 2016, 07:46 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/487cab9322f654a1b6741088c9313329.jpg

Russellxor
18th September 2016, 07:47 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/5e804b9125cc412f9bcf8546d67fb6f5.jpg

Russellxor
18th September 2016, 07:48 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/529de3c360f704af9eef02e6df7285d9.jpg

Russellxor
18th September 2016, 07:50 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/f2e760c32a7d232f37ba52c853ab27c8.jpg

Russellxor
18th September 2016, 08:01 PM
http://uploads.tapatalk-cdn.com/20160918/11f34526c1a5f165928feb18cdd8962e.jpg
தொடரும்...

Murali Srinivas
18th September 2016, 11:06 PM
செந்தில்வேல்,

வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு பதிவுக் குவியலுடன் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! இதில் என்ன சிறப்பு என்றால் பல்வேறு பத்திரிக்கை பதிவுகள் பல்வேறு காலகட்டத்தை உள்ளடக்கி வந்திருக்கின்றன. 1960-களில் தொடங்கி 1990கள் வரை உள்ள காலகட்டத்தின் கண்ணாடியாக அவை விளங்குகின்றன. இதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு ஜெயித்துக் காட்டுகிறேன் படத்தின் விளம்பரம்,

1977-ல் தொடங்கி நடிகர் திலகத்தின் படங்கள் விண்ணை முட்டும் சாதனைகள் படைத்துக் கொண்டிருந்த நேரம். 1978 தொடக்கம் முதல் அதிலும் குறிப்பாக 1978 மார்ச் என்று சொல்ல வேண்டும், தினசரி நடிகர் திலகம் நடிக்கும் ஒரு புதிய படத்தின் முழுப்பக்க விளம்பரம் தினத்தந்தியில் வைத்துக் கொண்டிருந்தது. காலையில் பேப்பரை பிரித்தவுடன் இன்று என்ன படத்தின் விளம்பரம் வந்திருக்கிறது என்று தேடுவோம்.

அந்த நேரத்தில் தொடங்கப்பட்டு வெகு வேகமாக வளர்ந்து வந்த படம்தான் ஜெயித்துக் காட்டுகிறேன். இந்த படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் அன்றைய காலத்தில் மிக பிரபலமாகிக் கொண்டிருந்த ஸ்டெப் கட் [Step Cut] தலைமுடி ஸ்டைலை அது போன்ற ஒரு விக் தயாரித்து அதை நடிகர் திலகம் அணிந்திருப்பார். மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் திலகம் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர் அலெக்ஸ். ஆம், ஞான ஒளிக்கு பிறகு அவர் ஏற்று நடித்த கிறிஸ்துவ கதாபாத்திரம் இந்த படத்தில்தான் அமைந்தது. படம் வெகு வேகமாக வளர்ந்து வந்தது.

ஏற்கனவே 1972-ல் ராஜபார்ட் படப்பிடிப்பில் இருக்கும்போதே நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடிக்கும் அன்னை பூமி என்ற படத்தை தயாரிப்பதாக குகநாதன் அறிவிப்பு செய்திருந்தார். அந்த விளம்பரமும் [நீங்கள் அதை இங்கே திரியில் பதிவிட்டிருந்தீர்கள்] மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ அது நடைபெற இயலாமல் போனது. ஆகவே 1978-ல் ஜெயித்துக் காட்டுகிறேன் படம் பெரிய எதிர்பார்ப்புகளை கிளறி விட்டிருந்தது. நண்பர்கள் பலருடனும் இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் மற்றும் படமாக்கப்பட்ட காட்சிகளை பற்றி [பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வைத்து] விவாதித்தது இன்றும் பசுமையாக நினைவு இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில்தான், சரியாக சொல்ல வேண்டுமென்றால் 1978 மே 5 அன்று தச்சோளி அம்பு படத்திற்காக சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதை சரி செய்வதற்காக ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இடது முழங்கைக்கு கீழே plate-கள் பொருத்தப்பட்டு அதன் காரணமாகவே 2 மாதங்களுக்கும் மேலாக நடிகர் திலகம் ஓய்வெடுக்க நேர்ந்தது. அதனால் பல படப்பிடிப்பு schedule- களும் மாற்றி அமைக்கப்படவேண்டிய சூழல். அப்போது தள்ளி போடப்பட்ட இந்த படம் அப்படியே drop ஆனது. அறிவிக்கப்பட்ட தொடங்கப்பட்ட படங்களில் ஒரு சில நமது ஆர்வத்தை தூண்டி விடும். அது போன்ற ஒரு ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்திய சில நடிகர் திலகத்தின் படங்கள் ஏதோ ஒரு காரணத்தினால் வெள்ளித்திரையில் காட்சியளிக்க இயலாமல் போனபோது மனது வேதனைப்பட்டது உண்டு. அந்த வகையில் மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப் பொறுத்தவரை இந்த படம் வெளிவராதது ஏமாற்றமே! அந்த விளம்பரத்தை மீண்டும் இங்கே பதிவு செய்து அந்த நினைவலைகளில் நீந்த வைத்த உங்களுக்கு என தனிப்பட்ட நன்றி.

உங்களது அபாரமான உழைப்பிற்கு என் சிரந்தாழ்ந்த நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
19th September 2016, 07:06 AM
http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://uploads.tapatalk-cdn.com/20160917/3a0afd2114ffad564becb1cd7b700ed9.jpg

செந்தில்,
தங்களுடைய அயராத உழைப்பிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களைப் போன்ற அடுத்த தலைமுறை ரசிகர்கள் அதற்கும் அடுத்த தலைமுறை ரசிகர்கள் என நடிகர் திலகத்தின் ஆளுமை பரவிக் கொண்டே போகும் போது இன்னும் நூறு தலைமுறைகளுக்கு அவர் புகழ் பரவும் என்பதில் ஐயமில்லை.

முரளி சார் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டாம். ஜெயித்துக் காட்டுகிறேன் விளம்பரம் தமிழகம் முழுமைக்குமே பரபரப்பை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பலமாக உண்டாக்கியது. அதுவும் விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகம் அப்படத்திற்காக பதியப்பட்ட பாடலின் பல்லவி என நினைக்கிறேன். இசை கூட சந்திரபோஸ் அமைத்ததாக ஞாபகம். சரியாக நினைவில்லை. அவசர அவசரமாக பேப்பர் வாங்கி வந்து யாரும் படிப்பதற்கு முன்பே கத்தரித்து வைத்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. துரதிருஷ்டவசமாக பல அபூர்வமான விளம்பரங்களை சேகரிக்க முடியாமல் போயிற்று. அது இன்று வரைக்கும் வருத்தமே. என்றாலும் தங்கள் மூலமாக அவற்றைப் பார்க்கக் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றி

sivaa
19th September 2016, 07:48 AM
நண்பர் செந்தில்வேல்
தங்கள் தொடர் பதிவுகளை பார்க்கும்பொழுது
தாங்கள் பொள்ளாச்சி சென்று பொக்கிஷப் புதையலை
எடுத்துவந்துவிட்டீர்கள் என்று தெரிகிறது
அசத்துங்கள்.

sivaa
19th September 2016, 08:07 AM
[
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by senthilvel http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1273527#post1273527) ஏங்க வைக்கும் விளம்பரம்
இந்தப்படமும் திரைக்கு வந்திருந்தால்...
அது உந்தன் சாதனையின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாகவல்லவா இடம் பெற்றிருக்கும். http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449753700422_zpssd9ydehs.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449753700422_zpssd9ydehs.jpg.html)

செந்தில்வேல் சார்
நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் விளம்பர அணிவகுப்பு
மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.

70வதுகளில் அன்னை புமி விளம்பரம் நண்பர்கள்மூலம் கிடைத்தது
நடிகர்திலகம் மிக ஸ்டைலில் நிற்கும் முழுஉருவ படத்துடன் பஞ்
வசனத்துடன் அவ்விளம்பரம் அமைந்திருந்தது
சித்திராலயா பத்திரிகை என நினைக்கின்றேன்
அவ்விளம்பரம் தங்களிடம் இருந்தால் பதிவிடுங்கள் நன்றி






=senthilvel;1307700]http://uploads.tapatalk-cdn.com/20160917/3a0afd2114ffad564becb1cd7b700ed9.jpg[/QUOTE]

"நானா வம்புக்கு வரமாட்டேன்
அதுதான் பண்பாடு-அது
தானாக வந்தா விடமாட்டேன்
அப்புறம் உன் பாடு"


இந்த பட விளம்பரத்தைப்பற்றித்தான்
நான் முன்னர் கேட்டிருந்தேன்
படத்தின் பெயர்தான் மாறுபட்டுவிட்டது
எனினும் தங்கள் கைக்கு அது கிடைத்திருக்கிறது
அதன்மூலம் எங்களுக்கும் மீண்டும்
அதனை பார்க்கும் வரம் கிடைத்துள்ளது
நன்றி நன்றி நன்றி

Russellxor
19th September 2016, 11:52 AM
ஜெயித்துக்காட்டுகிறேன் படம் நின்று போனதற்கு என்ன காரணம் என்பதை தெளிவாக விளக்கிய திரு முரளி சீனிவாஸ்அவர்களுக்கும்
திரு.ராகவேந்திரா சார்,திரு சிவா சார் அவர்களின் கருத்துகளுக்கும்,விளக்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Gopal.s
21st September 2016, 07:36 AM
அறிவித்து நின்று போன படங்கள் அல்லது பாதியில் நின்ற படங்கள்.
(நினைவுக்கு எட்டிய வரை)

1)ஜீவ பூமி (கே.சோமு-ஏ.பீ.என்)

2)அன்புள்ள அத்தான் (சிவாஜி-ராகினி)

3)சாணக்யா (பந்துலு)

4)ஞாயிறும் திங்களும் (தேவிகா ஜோடி)

5)பைத்தியக்காரன்.(பத்மினி ஜோடி)

6)ஒரு பிடி மண்.(ஸ்ரீதர்)

7)உமாபதியின் பெயரிட படாத படம்(மதுரை திருமாறன் இயக்கம்)

8)குகநாதன் பெயரிட படாத படம்.(சிவாஜி-கே.ஆர்.விஜயா)

9)பம்பாய் பாபு.(வீ.கே.ஆர்)

10)உடல் பொருள் ஆனந்தி.(ராம்குமார் பிலிம்ஸ்)

11)மௌனம் எனது தாய்மொழி (கோஷிஷ் தழுவல்).

12)துள்ளி வருகுது வேல்.(கலைஞர்)

13)ஜெயித்து காட்டுகிறேன்.(குகநாதன்)

14)அன்னை பூமி.(குகநாதன்)

15)வயசு அப்படி. (கலாகேந்திரா )

16)தேஷ் பிரீமி (மன்மோகன் தேசாய்-அமிதாப்-உத்தம் குமார்)-ஹிந்தி

17)தமிழன் (மணிரத்னம்-சுஹாசினி-ஜீ.வீ.)

18)பாலு மகேந்திரா பெயரிட படாத படம்)

19)திப்பு சுல்தான் (பலமுறை )

20)தேவன் கோயில் மணியோசை (பீ.ஆர்.சோமு)

21)பூப்போல மனசு (பீ.என்.சுந்தரம் இயக்கம்)

22)லட்சியவாதி

Russellxor
21st September 2016, 12:23 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/dc4448380f019e956711fdd5afd7c95b.jpg

Russellxor
21st September 2016, 12:25 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/864239c22d2e997ad1219fb56c5e3314.jpg

Russellxor
21st September 2016, 12:27 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/1556b3b80d3e0decea29769ea4ad2dfb.jpg

Russellxor
21st September 2016, 12:28 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/b787ba4823a0547a09d72ee589d91535.jpg

Russellxor
21st September 2016, 12:30 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/c2be7a525b5d9785f86a77559a1057d3.jpg

Russellxor
21st September 2016, 12:32 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/347dbda9c51ee1f4f260e2493c643e57.jpg

Russellxor
21st September 2016, 12:32 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/f1c73c7a2f02df5394ff28e6b15afef6.jpg

Russellxor
21st September 2016, 12:34 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/363bd004871d3d90418a4cd5a43e6bce.jpg

Russellxor
21st September 2016, 12:35 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/0d8e6bde48bc06d0dce28c79f4a95288.jpg

Russellxor
21st September 2016, 01:54 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/96f78285fc6d6f1b09f7d88dd088b165.jpg

Russellxor
21st September 2016, 01:58 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/be120967b637ad971ba752344e82526f.jpg

Russellxor
21st September 2016, 01:59 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/f4ca83bdb2425a4286b16a43fce7d866.jpg

Russellxor
21st September 2016, 02:00 PM
http://uploads.tapatalk-cdn.com/20160921/476f2b8135afea6577540290aab341ad.jpg

Gopal.s
22nd September 2016, 12:05 PM
1967

நடிகர் திலகத்திற்கு இது ஒரு திருப்புமுனையான ஆண்டு. ஆகவே அதை பற்றி நான் எழுத வேண்டும் என்று ராகவேந்தர் சார் சொல்லியிருக்கிறார். என்னை எழுத சொன்னதற்கு நன்றி.

1967 உண்மையிலே திருப்புமுனையான ஆண்டுதான், பல்வேறு தளங்களிலும். இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் தலையெழுத்து முற்றிலுமாக மாறிய ஆண்டு. மாற்றங்கள் தவிக்க முடியாதது என்றாலும் தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது பற்றி whether it was for good or not என்று 47 வருடங்களுக்கு பிறகு கேள்வி எழுப்பினால் நமக்கு எதிர்மறையான பதிலே கிடைக்கிறது. அதே நேரத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் அல்லது இமேஜ் makeover பற்றிய கேள்விக்கு நமக்கு positive ஆன பதிலே பெருவாரியான மக்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.

1952-ல் தொடங்கி இடைவெளியில்லாமல் நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் 1967- முதல் தான் நடிக்கும் படங்களின் genre -ல் ஒரு மாற்றத்தை கொடுத்தார். ஆழமான கதையம்சம் அழுத்தமான பாத்திரப் படைப்புகள் உணர்ச்சிக் குவியலான திரைக்கதை என்ற பாதையில் பயணம் செய்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் அதை தாண்டி நகைச்சுவை மிளிரும் பொழுது போக்கு படங்களுக்கும் மற்றும் action oriented பொழுது போக்கு படங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்தார்.

அதற்கு முன் அவர் நகைச்சுவை படங்கள் செய்திருக்கிறாரே என்ற கேள்வி எழும். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா மற்றும் பலே பாண்டியா ஆகியவற்றை மறந்து விட்டு பேசவில்லை. ஆனால் அவை few and far in between என்ற வகையிலேயே அமைந்திருந்தது. முறையே அவை வெளியான வருடங்களை பார்த்தோமென்றால் [1954,1958,1962] நான் சொல்வதன் அர்த்தம் புரியும். அது போன்றே murder mysteries ஆன புதிய பறவை, கல்யாணியின் கணவன் போன்ற படங்களிலும் கூட சண்டைக் காட்சிகள் கிடையாது. அல்லது மிக மிக அரிதாகவே அமைந்திருந்தது.

இப்படி ஒரு மாற்றத்தை அவர் 1967- ல் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று கேட்டால் தமிழ் சினிமா வரலாற்றில் சற்றே பின்னோக்கி செல்ல வேண்டும்.

60-களின் மத்தியில் தமிழ் சினிமாவில் மாற்றங்கள் வீச ஆரம்பித்த காலம் என குறிப்பிடலாம். அதுவும் தவிர அதே காலகட்டத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு நம்முடைய பாட்டுடைத் தலைவனான நடிகர் திலகத்தின் வாழ்வில் நடந்தது.

தமிழ் சினிமாவில் 60-களின் மத்தியில் புதிய வரவுகளாக பலர் அறிமுகமானார்கள். நடிகர்களை எடுத்துக் கொண்டோமென்றால் ஏவிஎம் ராஜன், சிவகுமார், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் போன்றவர்க-ள் அறிமுகமாகி அதிலும் ரவி மற்றும் ஜெய் கதாநாயகனாகவே நிலை பெற்றார்கள். கேஆர்.விஜயா, ஜெயலலிதா வெண்ணிற ஆடை நிர்மலா, வாணிஸ்ரீ போன்றவர்களின் திரையுலக பிரவேசமும் அந்த காலகட்டத்தில்தான் நிகழ்ந்தது. இவர்களின் வரவோடு அன்றைய இந்தி திரையுலக தாக்கமும் சேர்ந்துக் கொண்டது. இந்தி பட தாக்கம் என்று குறிப்பிடுவது பெரும்பாலும் நாயகன் நாயகி வெளிப்புற பாடல்காட்சிகள், அவற்றில் முன் காலங்களில் இல்லாத அளவிற்கு ஆடலுக்கு முக்கியத்துவம் பின் இளைஞர்களை கவர்ந்திழுக்க சண்டைக் காட்சிகள், மற்றும் கிளப் டான்ஸ் போன்றவை இடம் பெற ஆரம்பித்தன.

அந்த காலகட்டத்தில் நகைச்சுவைக்கு காதலிக்க நேரமில்லை, தேன் மழை, suspense வகைக்கு அதே கண்கள், ஜேம்ஸ் பாண்ட் பாணியில் வல்லவன் ஒருவன், இசை கலந்த காதலுக்கு இதய கமலம், பொழுதுபோக்கை விரும்புபவர்களுக்கு குமரிப் பெண் என்று வெரைட்டியாக படங்கள வந்த நேரம்.அதிலும் ரவிசந்திரன் ,அடுத்தடுத்த வெள்ளிவிழா வர்ண படங்களை வழங்கி விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

இந்த மாற்றத்தினால் அன்றைய முன்னணி நாயக நாயகியரும் பாதிக்கப்பட்டனர். நாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெமினி எஸ்எஸ்ஆர் போன்றவர்களுக்கு பாதிப்பு அதிகம். எஸ்எஸ்ஆர் ஒரு முதல் நிலை கதாநாயகன் என்ற நிலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார். ஜெமினிக்கும் இறங்குமுகம்தான். ஆனால் அவ்வப்போது சில படங்கள் வந்து ஜெமினியை காப்பாற்றிக் கொண்டிருந்தது. ராமு, பணமா பாசமா போன்ற படங்களை சொல்ல வேண்டும். ஆனால் பணமா பாசமா முதற்கொண்டே அவர் heroine oriented subject படங்களான பூவா தலையா, தாமரை நெஞ்சம், இரு கோடுகள், காவிய தலைவி போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்க வேண்டிய நிலைமை.

இந்த புது வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொண்டவர்கள் சிவாஜி -எம் ஜி ஆர் இருவரும். ராஜகுமாரி மந்திரி குமாரி காலம் முதல், வருடத்தில் ஒரு படமேனும் ராஜா ராணி பாத்திரங்களையுடைய சரித்திர கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை 1963 வரை செய்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் படவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை புரிந்துக் கொண்டு பழைய பாணியிலிருந்து மாறுபட்டு 1964 முதல் முழுக்க சமூக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன் பாணியிலிருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்டிருந்த come september ஆங்கிலப் படத்திலிருந்து inspiration உட்கொண்டு உருவான அன்பே வா படத்தில் அவர் நடித்ததை இங்கு உதாரணமாக கூற வேண்டும்.

நமது நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவரும் சற்றே light hearted subjects செய்யலாமா என்ற யோசனையில் இருக்கும் நேரம். இதே சமயத்தில் அவர் ஒரு முக்கியமான முடிவு எடுத்தார். 50-களின் மத்தியில் திராவிட இயக்கத்தினரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர் [அவர் எந்த திராவிட இயக்கத்திலும் உறுப்பினராக இருந்ததேயில்லை] காங்கிரஸ் பேரியக்கத்தின் அனுதாபியாகவும் பெருந்தலைவரின் தொண்டராகவும் அறியப்பட்டுக் கொண்டிருந்தார். 1965-ல் அன்றைய தமிழக இந்திய அரசுகள் சந்தித்துக் கொண்டிருந்த கடுமையான சோதனைகளை பார்த்த அவர் தன்னாலான உதவியை செய்வதற்காக காங்கிரஸ் பேரியக்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். நமது எல்லையில் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினால் ஏற்பட்ட சோதனைகளை இந்திய அரசாங்கம் எதிர் கொள்ள இங்கோ மொழிப் போராட்டம் தூண்டி விடப்பட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருந்தவர்கள், போரினால் ஏற்பட்ட உணவு தானிய பற்றாக்குறை போன்றவற்றை வைத்து அரசியல் செய்தவர்கள் பெருகிவிட, இந்த சூழலில் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதை தன் கடமையாக நினைத்த நடிகர் திலகம் அதை முறைப்படி செய்தார்.

இந்த அரசியல் நிகழ்வை இங்கே குறிப்பிட காரணம் அதற்கு முன்னரே சிவாஜி- எம்ஜிஆர் இருவரிடையே அல்லது அவர்கள் ரசிகர்களிடையே நிலவிய போட்டி இந்த நிகழ்வினால் மேலும் வலுவடைந்தது. அதனாலும் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் கதைகளின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

நடிகர் திலகத்திற்கு 1966 ஜனவரி 26 அன்று பதமஸ்ரீ விருது கிடைத்தது. அன்றுதான் அவர் நடித்த 106-வது படமான மோட்டார் சுந்தரம் பிள்ளையும் வெளியானது. பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு பல்வேறு ஊர்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஓய்வு ஒழிச்சல் இல்லாத அவரது வேலைப் பளு காரணமாக டைபாயிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடுமையான முறையில் பாதிக்கப்பட்ட அவர் இரண்டு மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார். ஆனால் blessing in disguise என்று சொல்வார்களே அது போல் இந்த சுகவீனம் ஏற்கனவே இளைத்துக் கொண்டிருந்த அவர் உடலை மேலும் இளைக்க வைத்தது. அதன் காரணமாக அவரது உடல் ஸ்லிமாகி அன்றைய 20-25 வயது இளைஞர்களுக்கு சவால் விடும் வண்ணம் படு சிக்காக ஸ்மார்டாக படப்பிடிப்புகளுக்கு திரும்பினார். .

இந்த நேரத்தில் நடிகர் பாலாஜியை பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது. ஜெமினியின் ஔவையார் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி பின் துணை நாயகன், இணை நாயகன் ஆக உயர்ந்து ஒரு சில படங்களில் நாயகனாகவும் இடம் பிடித்து வரும் நேரத்தில்தான் இந்த புது வெள்ள பிரவாகம். அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பாலாஜியும் ஒருவராகப் போனார். ஆனால் அதனால் நிலைகுலைந்து விடாமல் தனக்கு தெரிந்த ஒரே தொழிலான சினிமா தொழிலில் வேறு என்ன செய்ய முடியும் என்று ஆக்கப்பூர்வமாக யோசித்து அவர் எடுத்த முடிவுதான் தயாரிப்பாளர் ஆவது. தன் மூத்த மகளான சுஜாதாவின் பெயரில் [இரண்டாவது மகள் சுசித்ரா - மோகன்லாலின் மனைவி, மகன் சுரேஷ் பாலாஜி] சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்த காரணமாக இருந்தவரான ஜெமினியை நாயகனாக்கி அண்ணாவின் ஆசை என்ற படத்தை தயாரித்து 1966-ல் வெளியிட்டார். படம் வர்த்தக ரீதியில் சரியாகப் போகவில்லை என்றாலும் கூட தைரியமாக ரிஸ்க் எடுத்து பிசினஸ் செய்யக் கூடியவர் என்பதை அவர் பிரபல இந்தி நடிகர் அசோக்குமார் அவர்களை தன் முதல் படத்திலேயே நடிக்க வைத்ததன் மூலம் நிரூபித்தார்.

அண்ணாவின் ஆசை சரியாக போகவில்லை என்றதும் பாலாஜியும் அவருக்கு பொருளாதார பின்புலமாக இருந்த சுதர்சன் சிட்பண்ட் வேலாயுதன் நாயரும் [கேஆர்விஜயாவின் கணவர்தான்] ஆலோசனையில் ஈடுபட அவர்களுக்கு தோன்றிய ஐடியாதான் நடிகர் திலகத்தை நாயகனாக்கி படம் எடுப்பது என்பது.

பாலாஜி சென்று நடிகர் திலகத்தைப் பார்க்க, பாலாஜியை ஒரு இளைய சகோதரன் போலவே கருதியிருந்த நடிகர் திலகம் சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டார். விசி.சண்முகத்திற்கும் சம்மதம். ஆனால் பாலாஜி ஒரு கண்டிஷன் போட்டார். அதுநாள் வரையில் எந்த தயாரிப்பளாரும் நடிகர் திலகத்தை காட்டாத ஒரு கோணத்தில் நடிகர் திலகத்தை காட்டப் போகிறேன். அதற்கு நீங்கள் மறுப்பு சொல்லக் கூடாது என்றார். சரி என்று சொல்லப்பட்டாலும் கூட எந்த மாதிரியான subject என்பது முடிவாகாமலே இருந்தது.

பாலாஜியைப் பொறுத்தவரை அன்றைய சூழலில் மக்களின் குறிப்பாக இளைஞர்களின் விருப்பமாக இருந்த action oriented film வகையை சார்ந்த படமாக தயாரிக்க விரும்பினார். அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் என்னவென்றால் அதுவரை action genre -ல் படங்கள் செய்யாத நடிகர் திலகம் அப்படி ஒரு படம் செய்யும்போது அவருக்கும் comfortable -ஆக இருக்க வேண்டும், audience -ற்கும் convincing ஆக இருக்க வேண்டும். பாலாஜி எதிர்கொண்ட மற்றொரு சவால் என்னவென்றால் நடிகர் திலகம் நடிக்கும் படம் என்றால் அதை பெரிதும் எதிர்பார்த்து வருவது அவரின் core constituency ஆன தாய்குலங்களும் நல்ல நடிப்பை எதிர்பார்த்து வரும் ரசிகர் கூட்டமும்தான். ஆகவே என்னதான் action படம் எடுத்தாலும் மேற்சொன்னவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அப்படி இருந்தால்தான் படம் வணிகரீதியாக வெற்றி அடையும். இல்லையென்றால் வணிகரீதியில் நஷ்டம் அடைவதுடன், நடிகர் திலகத்திற்கும் அவப்பெயர் வந்து சேரும். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பாலாஜிக்கு தோன்றிய ஐடியாதான் வெற்றிகரமாக ஓடிய பிறமொழிப் படத்தை ரீமேக் செய்வது.

இப்படி பல parameters -ஐ அலசி ஆராய்ந்து அதற்கேற்றபடி பாலாஜி தெரிவு செய்த படம்தான் தேவ் ஆனந்த ஹீரோவாக நடித்த இந்திப் படமான Baazi . ஆனால் அது 1951-ல் வெளிவந்த படம். அதை 1967-க்கு ஏற்றவாறு மாற்றும் பொறுப்பு இயக்குனர் A .C திருலோகசந்தர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

பார்த்தால் பசி தீரும் படத்தின் கதை ACT யின் கதை என்றாலும் அது ஏவிஎம் படமாகவே தயாரானது. அதன் பிறகும் ஏவிஎம் வளாகத்துக்குள்ளேயே இயக்குனராக வலம் வந்துக் கொண்டிருந்த ACT-யை வெளியே இழுத்துக் கொண்டு வந்தார் பாலாஜி. இந்தி Baazi யை தமிழக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்த ACT அதை நடிகர் திலகத்திடம் திரைக்கதையாக சொல்ல நடிகர் திலகம் impress ஆனார். தங்கை படம் கருக் கொண்டது. படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது. அதே வேகத்தில் நிறைவு பெற்று வெளியானது. action mood வகையை சார்ந்த தங்கை படத்தை ரசிகர்களும் பொதுமக்களும் இரு கரம் நீட்டி வரவேற்றனர். வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட அரங்க உரிமையாளர்களுக்கும் லாபத்தையும் தாண்டிய வசூலை வாரி வழங்கினாள் தங்கை.

Action படங்களில் நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்தது மட்டும்தானா 1967-ல் ஏற்பட்ட மாற்றம் என்று கேட்டால் அது மட்டும் இல்லை என்றே சொல்ல வேண்டும். தங்கை வருவதற்கு முன்னரே மேக்அப்பே இல்லாமல் நடித்த நெஞ்சிருக்கும் வரை படத்தை வெளியிட்டார்[ஒரு முன்னணி கதாநாயகன் ஜோடியும் இல்லாமல் மேக்கப் இல்லாமல் அதுவும் பொது தேர்தல் சமயத்தில் வெளியிடுவதற்கு அகில இந்தியாவிலேயே நமது நடிகர் திலகத்தை தவிர வேறு யாராவது இருக்கிறார்களா என்ன?].

Action படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும் உணர்ச்சிப்பூர்வமான கதைகளையும் அவர் விடவில்லை. அதனால்தான் ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், அஞ்சல் பெட்டி 520, சுமதி என் சுந்தரி போன்ற நகைச்சுவை படங்களிலும், என் தம்பி, தங்க சுரங்கம், திருடன், சிவந்த மண் போன்ற Action படங்களிலும் நடிக்கும்போதும் கூட திருவருட்செல்வர், இரு மலர்கள், உயர்ந்த மனிதன், தெய்வ மகன், வியட்நாம் வீடு போன்ற அவர் மட்டுமே செய்யக்கூடிய படங்களிலும் அவர் நடித்தார்.

இந்தப் பதிவு ஒரு நீண்ட பதிவாக போய்விட்டது. காரணம் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் 1967-ல் ஏற்பட்ட மாற்றம் என்பது ஒரு சில வரிகளில் சொல்லி முடிக்கக்கூடிய ஒன்றல்ல. அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ரசிகர்களும் பொது மக்களும் அதை ஒப்புக் கொண்டதன் பின்னில் உள்ள சமூக உளவியல் காரணங்கள் ஆழமாக உட்செல்பவை. ஆராயப்பட வேண்டியவை. அதை பற்றி பேசுகிறோம் எனும்போது பல்வேறு சமூக அரசியல் தளங்களில் நாம் சஞ்சரிக்க வேண்டியிருக்கிறது.

உலகத்தில் வெகு சில நடிகர்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் ஸ்டார் என்ற வகையிலும் ஆக்டர் என்ற வகையிலும் அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட வெகு சிலரில் முதன்மையானவர் நமது நடிகர் திலகம், அந்த அங்கீகாரம் உறுதிப்படுத்தப்பட்டதும் தொடர்ந்து இறுதி வரை நிலைத்து நின்றதற்கும் காரணமான முத்திரை பதித்த ஆண்டு 1967.

நடிகர் திலகத்தை திரையில் எப்படி பார்க்க வேண்டும் என்று ஒரு சாதாரண ரசிகன் நினைப்பானோ அது திரையில் வெளிப்பட்ட ஆண்டு 1967. இன்றைக்கும் கூட அவர் மறைந்து ஏறத்தாழ 14 ஆண்டுகள் ஆகப் போகின்ற சூழலிலும் கட்சி, அரசியல், ஆட்சி, அதிகாரம், பணப்புழக்கம் போன்ற எந்தவித லாபநோக்கங்களும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற மனிதனுக்காக மட்டுமே இன்றைக்கும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு அடித்தளமிட்ட ஆண்டு 1967.

இப்படி ஒரு பதிவிற்கு வாய்ப்பளித்த ராகவேந்தர் சாருக்கும் இந்த நீண்ட நெடிய(!) பதிவை பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி!

Thanks Murali.

Russellxor
22nd September 2016, 02:28 PM
கோபால் சார்
இது நீண்ட பதிவல்ல.இன்னும் நீளாதோ என்னும் எனும்படியான பதிவு.

Gopal.s
22nd September 2016, 03:04 PM
வசந்த மாளிகை-1972(Completing 44 years )

எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.

மதனுடன் ரதி இணையின் இன்பம் இத்தரணி க்கல்லவோ
அதனுடன் விடுக்க பட்ட விரக பாணங்கள் வீசிய காதற்புயல்

ஆனந்தன் தன் கண்ணான லதாவை காணு முன்பு கிண்ணத்தை ஏந்திய எண்ணங்களில்
ஞானந்தனை முறித்து மது மாது ஆனந்தங்களில் தன்னை தொலைத்தவன்

கெட்டு போனவனே அன்றி கெட்டவனுமல்ல கெடுத்தவனுமல்ல
விட்டு விட்ட மனசாட்சியை தேடியலையும் தூய துணையரியா வீட்டு அனாதை

தொட்டு பார்த்து தூசு தட்டி கலைமகள் கைபொருளை சீராட்ட வந்தாள் ஒரு வாணி
விட்டு பட்ட வீட்டு சொந்தங்களோ தங்களுக்குள் விலங்கிட சுயநல சூழல் வளர்க்க

குடிலில் இணைந்தாலே குதூகல இணைப்பு மாளிகையில் வசந்தமாக தரும் மயக்கமென்ன
முடிவில் வசந்த மாளிகையில் யாருக்காக என உலகே உணர்ந்து ஊருக்கும் உணர்த்தியது

தாயிருந்தும் செவிலி மடியில் உறங்கிய சேய் இரவல் தாயை கௌரவ கொலை கொள்ளும்
பேயிடமிருந்து ஞாயமற்ற காயங்களில் மனதை தொலைக்க சுயம் தொலைத்தவன்

வசந்த மாளிகை வடித்து தன்னை மீட்டியவளால் தான் தன்னை மீட்ட அதிசயம்
கசந்த மாளிகையானதோ காயம் தரும் இங்கிதமற்ற ஒரே கேள்வியால்

மருந்தானவளே காயம் தருகிறாள் தன் சுயம் காக்க மீட்ட வீணையின் தந்தியருக்கிறாள்
அருமையான ஆத்மாவை மீட்க ஆட்கொண்ட தேவதையின் சிரத்தில் செய்த சத்தியம்

மருத்துவரோ மதுவை மருந்தாக்க நாடிய மாதுவுக்கு நாடேன் மதுவை என்ற
இருமனம் கேட்கும் வாலிப சேயை நாடாதே என சொந்தமின்றி சொல்லி விட

திருமணம் முடிக்க செல்லும் திருமகளை தீர வாழ்த்தி நஞ்சுதனை
விரும்பி நாடி ஓலமிடும் ஊமை காதலனின் உரத்த ஓசையின் உளமறிந்து

அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.

மானிட ஜாதியை விளித்து துவங்கும் நடிப்பு தேவன்
வானிடை உலவும் வனிதா தேவதையின் கை கோர்க்கும்

வைபவம் காண வசந்த மாளிகைகளின் கொட்டகை வாசல்களில்
எய்பவன் எங்கோ இருக்க எங்கள் மீதெல்லாம் மன்மத அம்புகள்

கிண்ணத்தை ஏந்தி களிநடம் புரிபவன் விசையுறு பந்தாக
எண்ணத்தை எல்லாம் வண்ண ஜாலமாய் வாரியிறைப்பதை

கண்ணதாசன் பாடலுக்கு என்னத்தை சொல்ல இதய கண்ணனின்
விண்ணதிரும் சிருங்கார ஜால வித்தை விண்ணவரும் காணா விந்தை

கன்னியருடன் கன்னமிடும் இக்கள்வனா எல்லோரின்
இன்னுயிரை கவ்வி சென்ற ஆலம் விழுதுகள் போல் வந்த

ஆயிரம் உறவுகளுடன் கண்ணீர் கடலில் குளிக்க செய்தவன்
பாயிர பாடல்களில் ஆலத்துடனே ஆடி களிக்கிறான்

வண்ண காஞ்சனாவுடன் சிவந்து மண்ணில் ஒருநாள் கண்டு
கன்னமிட்டவன் இந்த சின்ன காஞ்சனாவையும் கொஞ்சி சுவைக்கிறான்.

அப்பராக அப்பர் மக்களை அதி உன்னத அமைதியால் அசத்தியவன்
தப்பராக தோன்றி லோயர் தளத்தையும் துதி பாட துள்ளுகிறான்

வானத்து தேவதையோ வரவேற்பறையில் வரவேற்க வாலிப வண்ணங்கள்
கானத்தின் கணத்தில் காமுகன் கண்களுக்கு கன்னல் கரும்பாக

வாலிப வண்ண எண்ண விடலை கனவுகளில் கடலை கடக்கும் காற்றாக
ஜாலி பண்ண ஜோலி பார்க்கும் வெறி வேங்கையின் வெற்றிகாணா

இந்த நேரம் இன்னும் கூடாதா என் கனவு கன்னியின் தனங்கள் தரிசனம்
வந்த வாலிப மதனோ காக்கும் கரங்களாய் கனவை கலைக்க

உந்தலுடன் உன்மத்தினிடம் வேண்டாமெனில் விடு விரும்பினால் தொடு
கந்தலை மேலுடையால் போர்த்தி கன்னியை கனிய காண்பான்

குடிமகனை களிக்க வரும் கணிகையை காம கண்களால் களித்து
கடித்து முடிக்கும் கள்வெறியுடன் காந்த கவர் கண்களின் கவர்ச்சி

உதைத்து தள்ளி உன்மத்தம் ஊட்டி பதைத்து எழுப்பி பஞ்சணையில்
கதைத்து நெஞ்சணைத்து உடையென்ற திரை உடைக்கும் ஆனந்தனின் ஆனந்தம்

வீணை மீட்டும் வாணியை வீண் பொருளாய் வாட்டிஎடுத்து வெகுண்டவன்
இணை தேடும் இன்ப பரப்பின் பரபரப்பின் பார்வையில் கனிந்த நோக்கு

காந்தமென்ற சொல்லுக்கு கண்ணழகன் கண்களே காணு பொருளாய் கண்டோம்
சாந்தம் வென்ற சந்தத்தில் சாந்தியை பெற்றவன் சாந்தி பெரும் சாரம்

பறப்பதை தடுக்க விரும்பா திருந்திய குறும்பனின் விருதா விருப்பம்
திறப்பதை திறந்த திருமகளை தீர தீண்டுமன கரும்பனான விரும்பன்

ஆதி மனிதன் ஆடும் நடனம் வருணனையே வானம் திறக்க செய்யும்
பாதியில் நின்று ராசாவுடன் ராணி இணைவு காண குடிலில் மன்மத

பாணத்துடன் பருவ தாக போக பார்வையுடன் பழத்தை சுவைக்கும்
நாணத்துடன் நல்கி நாடும் நல்லிதயம் விளித்து கொள்ளியால் புகை நாடும்

இளமானுடன் இளமானுடன் இதம் காணும் இளமையுடன் தனிமை
வளமான வாலிபனுக்கு வருமோ உளம்நாடும் உள்ளத்துணிவு

குடிலிலே இணைவு காணும் இணைக்கு இல்லம் காண மாளிகை
மடியிலே மகிழ்ந்து கன்னத்தில் முத்தமிட்டு கள்வெறி கொள்வதும்

கழுத்திலே முத்தமிட்டு காண்போரையல்லாம் கனவு கடலில் கவிழ்த்து
எழுத்திலே வடிக்கவொன்னா ஏந்திழையாளுடன் மெல்லிசைவு அசைவு நடமாடி

பிரிவு துயருக்கு பெருங்காப்பியமே படித்து துவண்டு துடித்து
பரிவு துயர் ஊட்டி இருமனம் வேண்டிய பெருமன வேள்வி வடித்து

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
பாருக்காக இது ஊருக்காக என்று உலகே வியந்து ஊரறியா வெற்றி தந்து

முடியா மாளிகையாய் காதல் காவியங்களுக்கு கதை மாளிகையாய்
அடிமுடியறியா நடிப்பு சுரங்கத்தின் விடிவெள்ளி வடிவு வண்ணம்

கண்டங்கள் கண்டு வென்ற நடிப்பினை கண்டெங்கள் இதயம்
வண்டென நாடி நல்கும் வண்ண மலர் வாணிக்கும் வாழ்த்து சொல்லி வணங்கும்

Harrietlgy
23rd September 2016, 07:31 PM
கோபால் சார்
இது நீண்ட பதிவல்ல.இன்னும் நீளாதோ என்னும் எனும்படியான பதிவு.

Same feeling, That is Gopal sir.

sivaa
25th September 2016, 11:22 AM
Advertisement


http://img.dinamalar.com/data/uploads/E_1474612579.jpeg




அக்.1 - நடிகர் சிவாஜி பிறந்தநாள்

சிவாஜி குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகியவரும், சிவாஜி புரொடக் ஷன்ஸ் நிறுனத்திற்காக, வெற்றி விழா மற்றும் மை டியர் மார்த்தாண்டம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவரும், சிவாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, சூப்பர் ஹிட்டான, ஒரு யாத்ரா மொழி என்ற மலையாள படத்தை இயக்கியவருமான நடிகர் பிரதாப் போத்தன், சிவாஜி பற்றி கூறிய சில சுவையான தகவல்கள்:
நடிகர் சிவாஜி கணேசனை போல, சினிமாவை நேசித்தவர்கள், சினிமா கலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் யாருமே இருக்க முடியாது.
சிவாஜி புரொடக் ஷன்ஸ்க்காக நான் இயக்கிய முதல் படம், வெற்றி விழா; சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் நடிகர் கமல் இருவரும் தான் இப்படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தனர். பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படத்தில், அம்னீஷியா எனப்படும் ஞாபக மறதி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் கமல். இதில் இடம் பெற்ற, எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்!
படத்திற்கு இசையமைத்த இளைய ராஜாவுக்கு, இசையின் வெற்றியை கவுரவிக்கும் வகையில், 'பிளாட்டினம் டிஸ்க்' வழங்கப்பட்டது. முதன் முதலாக இசையமைப்பாளருக்கு, 'பிளாட்டினம் டிஸ்க்'வழங்கப்பட்டது இப்படத்திற்கு தான். படத்தை பார்த்து, மனதார பாராட்டினார், சிவாஜி.
அடுத்து, சிவாஜி புரொடக் ஷன்ஸ்க்கு, மை டியர் மார்த்தாண்டம் படத்தை இயக்கினேன். பிரபு, குஷ்பு இருவரும் நடித்த, மாறுபட்ட கதை அமைப்பு கொண்ட படம் இது!
இப்படத்திற்கு, ஐந்து மணி நேரத்தில் டியூன் போட்டு, சாதனை படைத்தார், இளையராஜா. படத்தில் இடம் பெற்ற, 11 பாடல்களுமே பெரிய ஹிட். வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படம் இது. படத்தை பார்த்த சிவாஜி, என்னையும், பிரபுவையும் பாராட்டினார்.
சிவாஜியை வைத்து, ஒரு யாத்ரா மொழி என்ற மலையாள படத்தை இயக்கியது, வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம் என்றே கூற வேண்டும். சிவாஜியும், மோகன்லாலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர். இதில் ஒரு புதுமை என்னவென்றால், படம் முழுவதும், தமிழில் பேசுவார், சிவாஜி. மற்ற எல்லா கதாபாத்திரங்களும், மலையாளத்தில் பேசுவர். இப்படத்திற்கு கதை எழுதியவர், இயக்குனர் ப்ரியன். திரைக்கதை, வசனம் எழுதியவர், ஜான்பால்; தயாரிப்பாளர், வி.பி.கே.மேனன். இப்படத்தில், இடம் பெற்ற நான்கு பாடல்களுக்கு இசையமைத்தவர், இளையராஜா.
ஒரு யாத்ரா மொழி படப்பிடிப்பில், என்னை, 'இயக்குனர் சார்...' என்றே, மற்றவர்கள் முன் கூப்பிடுவார் சிவாஜி; எனக்கு கூச்சமாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்ததும், உரிமையோடு, 'வாடா போடா...' என்று பேசுவார்; அப்போது தான், நிம்மதியாக இருக்கும்.
சிவாஜியின் நடிப்புத் திறமை, நேரம் தவறாமை இவை இரண்டும் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், அவற்றை நேரில் பார்க்கும் போது, திரில்லிங்காக இருந்தது.
ஒருசமயம், வெளிப்புறப் படப்பிடிப்பின் போது, நாங்கள் எல்லாரும் படப்பிடிப்பு தளத்திற்கு அருகே இருந்த ஓட்டலில் தங்கினோம். சிவாஜி மட்டும் சற்று தொலைவில் இருந்த நண்பர் வீட்டில் தங்கினார். காலை, 7:00 மணிக்கு ஷூட்டிங் என்றால், மேக் - அப் போட்டு சரியாக, 6:50க்கு வந்திருப்பார். சில சமயம், நாங்கள் தாமதமாக வருவோம்.
'அப்பா... ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துடுறீங்க...' என்று கேட்டால், 'நீ தானே, 7:00 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கணும்ன்னு சொன்னே... முதல் ஷாட்டை என்னை வைத்து எடுப்பதற்கு, 'பிளான்' செய்திருந்தால், நான் லேட்டாக வந்து உங்களை காத்திருக்க வைத்தால் நன்றாகவா இருக்கும்...' என்பார். அத்துடன், 'பிரதாப்... எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும்; வேறே எதுவும் தெரியாது. நான் நடித்துக் கொடுக்கிறேன்; எது வேண்டுமோ நீ எடுத்துக்கோ...' என்பார்.
அவரை, 'குளோசப்'பில் எடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். படத்தில் அவருக்கு நிறைய, 'குளோசப்' காட்சிகள் இருக்கும். அவர் மாதிரி, முகத்தில் பல்வேறு உணர்ச்சி பாவங்களை, வேறு யாராலும் காட்ட முடியாது.
இப்படத்தில், சிவாஜிக்கு, மணல் சப்ளை செய்யும் கான்ட்ராக்டர் கதாபாத்திரம்; மோகன்லால் ஒரு ரவுடி. தன் அப்பாவை பார்த்தால், கொன்று விட துடிக்கும் கதாபாத்திரம். இவர்கள் அப்பா - மகன் என்பது அவர்களுக்கே தெரியாது. மலையாள நடிகர் திலகன் நடித்த கதாபாத்திரத்துக்கு மட்டும் தான் இந்த உண்மை தெரியும்.
படத்தில், திலகன் - சிவாஜி இருவருக்கும் பெரிய, 'ஷாட்' இருந்தது. அந்த, 'ஷாட்' முடிந்ததும், 'யாருடா இவன்; ரொம்ப நல்லா நடிக்கிறான்...' என்று திலகனை பாராட்டினார் சிவாஜி. அவர் பாராட்டியதை கேட்டு, நெகிழ்ந்து போனார் திலகன். மலையாளத்தில் திலகன் பெரிய குணசித்திர நடிகர்.
அடுத்து, திலகன் சொன்னது தான், சிவாஜி உட்பட அனைவரையும், ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
'பல ஆண்டுகளாக, உங்கள் படத்தை வீட்டில் வைத்து, ஆராதித்து வருகிறேன்...' என்றார் திலகன். உடனே, அவரை கட்டித் தழுவினார், சிவாஜி.
இப்படம் படமாக்கப்பட்ட போது, சிவாஜிக்கு இதய ஆபரேஷன் நடந்து, 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டிருந்தது. எனவே, சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை, மிகவும் கவனமாக படமாக்கினேன்.
என்ன காரணத்தினாலோ, ஒரு யாத்ரா மொழி படத் தயாரிப்பாளர்கள், இப்படத்தை விருதுக்கு அனுப்பவில்லை. அப்படி அனுப்பியிருந்தால், கண்டிப்பாக சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதோ, சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதோ கிடைத்திருக்கும்.
என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பி செல்லும் சினிமா சம்பந்தப்பட்ட ஒரே வீடு, சிவாஜியின் அன்னை இல்லம் தான். பலமுறை அங்கு அவர்களது விருந்தோம்பலை அனுபவித்துள்ளேன்.
அநேகமாக சிவாஜி நடித்திருக்கும் எல்லா முக்கிய படங்களையும் பார்த்து, ரசித்துள்ளேன். அதிலும், வியட்நாம் வீடு, எங்க மாமா, தெய்வமகன், தேவர் மகன் மற்றும் முதல் மரியாதை போன்ற படங்களை, எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கே இல்லை என்றார், பிரதாப்.

நடிகர் திலகம் பெற்றுள்ள விருதுகள் மற்றும் கவுரவங்களில் முக்கியமானவை:
கடந்த, 1962ல் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன், 1966ல் பத்மஸ்ரீ மற்றும் 1984ல் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றார், சிவாஜி. மேலும், 1995ல் பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதும், 1997ல் திரைப்படத்திற்கு ஆற்றிய அளப்பெரிய சேவைக்காக, மத்திய அரசின், தாதா பால்கே சாஹிப் விருதும் பெற்றார்.
கடந்த, 1972ல் வெளியான, ஞானஒளி, 1973ல் வெளியான, கவுரவம் மற்றும் 1985ல் வெளியான, முதல் மரியாதை போன்ற படங்களுக்காக, சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதுகள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது, பிரபல மும்பை பத்திரிகை.
கடந்த, 1986ல், சிவாஜிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மேலும், மஹாராஷ்டிரா மாநில அரசு, சிவாஜி பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி வருகிறது.
சிவாஜி, மூன்று வேடங்களில் நடித்த, தெய்வமகன் திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில், 2006ல் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டது. அங்கு சிலை நிறுவப்பெற்ற ஒரே நடிகர், சிவாஜி கணேசன்!
பிரதாப் வீட்டிலிருந்து, அவருக்காக ஸ்பெஷலாக தயாரித்து அனுப்பிய வாத்துக்கறி, மீன் குழம்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார், சிவாஜி. அதே போன்று, பிரதாப் வீட்டு எலுமிச்சை ஊறுகாய் சிவாஜியின் மனைவி கமலா அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும்.

எஸ். ரஜத்
dinamalar

sivaa
25th September 2016, 11:25 AM
http://oi68.tinypic.com/1zm1lbb.jpg

sivaa
25th September 2016, 11:26 AM
http://oi68.tinypic.com/2e67azn.jpg
(முகநூலில் இருந்து)

sivaa
25th September 2016, 11:27 AM
http://oi68.tinypic.com/4t8w11.jpg

sivaa
25th September 2016, 11:28 AM
http://oi67.tinypic.com/259l7xt.jpg

Harrietlgy
25th September 2016, 05:36 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 145 – சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_image/22/14745397691125994794Tamil_News_Nellai.jpg


சந்தேகத்தைப் போக்க என்ன செய்தார் ஏவி.எம். செட்டியார்?
`உயர்ந்த மனிதன்’ படத்திற்கு சிவாஜியின் சம்பளமாக அவருடைய தம்பி சண்முகம் அட்வான்ஸ் வாங்கவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இப்போது செட்டியார், தன் மகன் சரவணன் மூலமாக ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை சிவாஜி பிலிம்ஸூக்கு அனுப்பி வைத்தார்.
இதை சண்முகம் எதிர்பார்க்கவில்லை!
` ஏன் வாங்கினாய் என்று அண்ணன் என்னை கோபித்துக்கொள்வார்’ என்று கூறி அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.
கொடுக்காமல் வந்தால் `அப்பச்சி’ கோபித்துக்கொள்வார் என்று கூறி கட்டாயப்படுத்தி சரவணன், சண்முகத்திடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.
செட்டியார் திட்டப்படி ` குழந்தையும் தெய்வமும்’ இந்தியில் முன்னதாக ரிலீஸாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பு ஆரம்பமாகி முடிந்து வெளிவந்து வெற்றி பெற்றது.
இந்த தகவல்களையெல்லாம் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் ஆரூர்தாஸுக்கு அடுத்து ஒரு சோதனை வந்தது.
அது என்ன?
அப்போது ஏவி.எம்.மின் `காக்கும் கரங்கள்,’ பிரசாத் புரொடக்*ஷன்ஸ் `இதய கமலம்,’ வாகிணி ஸ்டூடியோவின் `ஜகதலப்பிரதாபன்,’ எம்.ஜி.ஆர். நடித்த ` தாலி பாக்கியம்,’ `தாழம்பூ,’ ` ஆசைமுகம்’ ஆகிய படங்கள் ஆரூர்தாஸின் கைவசம் இருந்தன.
தேவர் மிக வேகமாகத் தயாரித்துக் கொண்டிருந்த ` வேட்டைக்காரன்’ படத்துக்கும் இரவு பகலாக எழுதி கொண்டிருந்தார்.
அப்போதுதான் சிவாஜி பிலிம்ஸின் ` புதிய பறவை’ பறந்து வந்து அவர் தலையில் அமர்ந்து கொத்தியது.
`புதிய பறவை’க்கு எழுத முடியாது என்று ஆரூர்தாஸ் சொன்ன தகவல் சிவாஜியின் காதுகளுக்கு எட்டியது.
உடனே சிவாஜி, படத்தயாரிப்பு நிர்வாகி துரையிடம், ‘ஆரூர்தாஸ் சாரை நான் உடனே பாக்கணும். சார் என்கிட்ட வர்றாரா அல்லது நான் சார் கிட்ட வரட்டுமா? இப்ப நான் சொன்ன இதே வார்த்தையை அப்படியே ஆரூரான் கிட்ட போய் சொல்லு’ என்றார்.
துரை அதை அப்படியே போய் ஆரூர்தாஸிடம் சொன்னார்.
உடனே அவர் வந்த காரிலேயே ஏறி அவரை சந்திக்க சிவாஜி வீட்டுக்கே சென்றார்.
மாடிக்கூடத்தில் சிவாஜி, கமலா அம்மாள் இருவரும் இருந்தனர். ஆரூர்தாஸை பார்த்ததும் சிவாஜி ஒரு ஆசிரியரைக் கண்ட பள்ளி மாணவர் போல எழுந்து நின்று கைகுவித்து வணங்கியவாறு ( இதெல்லாம் பழைய நாடக நடிகர்களுக்கே உரித்தான குசும்பு) `வாங்க சார்! வணக்கம், ஒக்காருங்க… கமலா! சாருக்கு வணக்கம் சொல்லிக்க.’
சிவாஜி : ` புதிய பறவை’ க்கு எழுத முடியாதுன்னு சொல்லிட்டீங்களாமே?
ஆரூர்தாஸ்: முடியாதுன்னு சொல்லலே. நேரமில்லேன்னுதான் சொன்னேன்.’
சிவாஜி: மத்த படங்களுக்கு எப்படி எழுதுறீங்க?’
ஆரூர்தாஸ்: கஷ்டமாகத்தான் இருக்கு.
சிவாஜி: அந்த கஷ்டத்தோடு இதையும் சேத்துக்க வேண்டியதுதானே?’
ஆரூர்தாஸ்: ( மவுனம்)
இப்போது சிவாஜியின் பேச்சின் தொனி மாறியது.
சிவாஜி : ஏண்டா? ஒனக்கு என்ன தைரியம் இருந்தா என் படத்துக்கு எழுதமாட்டேன்னு சொல்லுவே? டேய், இது சிவாஜி பிலிம்ஸோட `பிரஸ்டீஜ்’ படம்பா. FIRST COLOUR FILM. நீ ரொம்ப பிஸியா இருக்கேன்னு உன்னை இத்தனை நாளா விட்டுவெச்சான் சண்முகம். இல்லேன்னா முதல்லயே உனக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணியிருப்பான்.
ஏவி.எம்.முக்கு எழுத நேரம் இருக்கு. தேவருக்கு எழுத நேரம் இருக்கு. எம்.ஜி.ஆருக்கு எழுத நேரம் இருக்கு. எனக்கு எழுத மட்டும் உனக்கு நேரம் இல்லையா? முடியாதுன்னு சொன்னியாமே?’
ஆரூர்தாஸ்: மன்னிக்கணும், வார்த்தை மாறுது. முடியாதுன்னு நான் சொல்லலே. முடியலேன்னுதான் சொன்னேன். முடியாதுன்னு சொல்றதுக்கும் முடியலேன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு.
சிவாஜி: (சற்று கோபத்துடன்) என்கிட்டயே டயலாக் பேசி காட்டுறியா நீ?’
ஆரூர்தாஸ்: (நிதானமாக) `நான் டயலாக் பேசிக் காட்டுறதுக்கு ஒங்களை விட்டா எனக்கு வேறு யார் இருக்காங்க?’
இப்படி ஆரூர்தாஸ் சொன்னதும் ஒரு சிறு ஊமைப்புன்னகை சிவாஜியின் உதடுகளின் நடுவில் நெளிந்து ஒளிந்தது. ஒப்பனை இட்டுக் கொண்டு படப்பிடிப்புத்தளத்தில் நடிக்கும் போதும் நடிக்காத மற்ற நேரங்களிலும் அவருடைய முகபாவங்கள் அனைத்தும் ஆரூர்தாஸிற்கு அத்துப்படி.
அடித்த வேகத்தில் உயரே எழும்பிய அந்தப் பந்து, சற்றைக்கெல்லாம் கீழே விழுந்து அடங்கிவிட்டதை ஆரூர்தாஸ் புரிந்து கொண்டார்.
அவருக்கு சிரிப்பு வந்தது – சிரித்தார்.
சிவாஜி: என்ன சிரிக்கிறே?’
ஆரூர்தாஸ்: ஒண்ணும் இல்லே. இதே சிவாஜி அண்ணனை அஞ்சாறு வருஷங்களுக்கு முந்தி நண்பர் ஜெமினி கணேசன் முதன் முதல்ல எனக்கு அறிமுகப்படுத்தி ` பாசமலர்’ படத்துக்கு என்னை வசனம் எழுத வச்சு, அந்த பழைய காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அதோடு சேர்ந்து சிரிப்பும் வந்தது.
சிவாஜி : என்ன கிண்டல் பண்றியா? நீ ரொம்ப `பிஸி’யா இருக்கேன்னு எனக்குத் தெரியும். அதுக்குத் தகுந்தபடி காசை வாங்கிக்கிட்டுப்போ. நீ ஒண்ணும் சலுகை காட்ட வேண்டாம்.
இதோ பார். இந்தப் படத்தை பொறுத்தவரையில் சிவாஜி பிலிம்ஸூக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லே. எனக்கும் உனக்கும்தான் பேச்சு (பக்கத்தில் இருந்த கமலாம்மாளிடம்) கமலா ! ஐயாயிரம் ரூபா பணம் கொண்டா ( அவர் உள்ளே போனார்).’
ஆரூர்தாஸ்: அண்ணே ! காசை எதிர்பார்த்து நான் இங்கே வரலே !
சிவாஜி : என் படத்துக்கு எழுத மறுப்பேன்னு நானும் எதிர்பார்க்கலே !
(இதற்குள் கமலாம்மாள் கையில் கரன்ஸி நோட்டுகளுடன் வந்தார்)
சிவாஜி : இத ஒங்கையால அதை அவன்கிட்ட கொடு.’
கமலா அம்மாள் என்ற `பாக்கியலட்சுமி’ யின் கரத்திலிருந்து பணம் என்கிற ` தனலட்சுமி’ தானாக வந்தாள். தட்டாமல் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார் ஆரூர்தாஸ்.
அந்த நாட்களில் முன்னணிக் கதை– வசனகர்த்தாக்களுக்கு முன் பணமாக ஆயிரத்து ஒன்றுதான் கொடுப்பார்கள். இயக்குநர்களுக்குத்தான் ஐந்தாயிரம் தருவார்கள். ஆரூர்தாஸுக்கு சிவாஜி கொடுத்த அந்த ஐந்தாயிரம் மிகவும் அதிகம். அது கணக்குப் பிரகாரம் கொடுத்தது அல்ல. ஆரூர்தாஸின் எழுத்துக்கள் மீது சிவாஜி கொண்டிருந்த காதலுக்காகக் கொடுத்தது என்பதை அறிவேன்.
சிவாஜி “இதோ பார். இது அட்வான்ஸூதான். ஒனக்கு எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிக்க. என்கிட்டே கேக்க வேண்டாம். ஒனக்கு எப்போ எவ்வளவு தேவைப்படுதோ அம்மாகிட்ட கேளு.
பிறகு............
(தொடரும்)

Russellxor
25th September 2016, 06:29 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/e45308fd16dce8ec2388c5487b7a5f6a.jpg

Russellxor
25th September 2016, 06:37 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/9260d904362c927febb13ffd6bc38ec4.jpg

http://uploads.tapatalk-cdn.com/20160925/b8d00169615ccc31d900245458f594ab.jpg

Russellxor
25th September 2016, 06:42 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/dbad9cb7258bef101a18cc16a18350b9.jpg

http://uploads.tapatalk-cdn.com/20160925/cfa2b3fcff58e58255675b839ecb85ff.jpg

http://uploads.tapatalk-cdn.com/20160925/b430f51a53dead3405ce184ab79cbaa2.jpg

Russellxor
25th September 2016, 06:44 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/fbea65f4cedfc0fff13af2de12ab46da.jpg

Russellxor
25th September 2016, 06:45 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/e4232cc249dce8231c89605d38199d02.jpg

Russellxor
25th September 2016, 06:46 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/26b93921449e862ae36203c5b0cc08f3.jpg

Russellxor
25th September 2016, 06:47 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/d6016000ff271b05c47802010700bfc4.jpg

Russellxor
25th September 2016, 06:50 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/1130f150540964c4135dc5b86dc7b61c.jpg

Russellxor
25th September 2016, 06:53 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/f7cd66757ef587265ae354f7602d9368.jpg

Russellxor
25th September 2016, 06:55 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/75a974d65769834adc844463d4b0f42d.jpg

Russellxor
25th September 2016, 06:59 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/d42b761adbde9855075739febdba6a71.jpg

Russellxor
25th September 2016, 07:03 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/34db6bbf1ca5989a6f20d76aaaf03222.jpg

Russellxor
25th September 2016, 07:05 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/ffef4353d9fafbb3e84da1db9c97c29d.jpg

Russellxor
25th September 2016, 07:10 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/a305811974c62365de9f6adacd417594.jpg

http://uploads.tapatalk-cdn.com/20160925/870c32163472912289cbd3af3b1f9825.jpg

Russellxor
25th September 2016, 07:14 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/b2819d87e1e898de096b6ae0135e7e24.jpg

Russellxor
25th September 2016, 07:17 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/65a74856b240acf63c241a0d1496daf8.jpg

Russellxor
25th September 2016, 07:22 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/681ba4139bd98b90d62c89076b8e091a.jpg

Russellxor
25th September 2016, 07:39 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/1b9240643cb95813959ea507bbf53389.jpg

Russellxor
25th September 2016, 07:54 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/4e9c99b921ee8a7f7403c6d79cd29bff.jpg