PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

joe
16th June 2016, 07:38 AM
"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "அன்பே வா", நான் நடித்த "எங்கிருந்தோ வந்தாள்", "தர்மம் எங்கே", "எங்க மாமா" மற்றும் "தெய்வ மகன்" போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நான் நடித்த "தெய்வமகன்" ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்ற சிறப்பினை பெற்றது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-mourning-legendary-director-ac-thirulogachande-256107.html

- புரட்சித்தலைவி அம்மா

Gopal.s
16th June 2016, 07:42 AM
அன்பளிப்பு.- 1969.

A Tribute to our dear Director A.C.Thirulokchandar.

வரும் புத்தாண்டில் 48 வருட முடிவை எய்த போகும் அன்பளிப்பு ,வந்த நாட்களில் ஒரு தீவிர சமுதாய பிரச்சினையை பொழுது போக்குடன் கலந்து பேசிய படம்.

முதல் பாராட்டு ஏ.சி.திருலோக சந்தர். இவர் ஒரு நவீன ராஜா கால பொழுது போக்கு (வீர திருமகன்), குடும்ப செண்டிமெண்ட் (நானும் ஒரு பெண்)Romantic musical (அன்பே வா),thriller (அதே கண்கள்) ,Anti -hero பொழுதுபோக்கு (தங்கை) என்று வித விதமாக variety கொடுத்து தன்னை சிறை படுத்தி கொள்ளாத executive வகை இயக்குனர்.(திரைக் கதை நுட்பங்களும் அறிந்த படிப்பாளி)இவர் கிராமிய மணத்துடன்,கிராமிய பிரச்சினை என்று சுருக்காமல் மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக சவால் விட்டு கொண்டிருக்கும் இன்றைய பிரச்சினையை அன்றே சொன்னார்.ஓரளவு nativity கொண்ட நல்ல பொழுது போக்கு படம்.

பசுமை விவசாயம், விவசாய விளை நிலங்கள் பிளாட்டுகளாக,தொழிற்சாலைகளாக(சில நேரம் ஆபத்தான ரசாயன-அணு நிலையங்களாகவும்) மாறி கிராமங்களையும் ,உணவு உற்பத்தியையும் சிதைக்கும் அபாய விளைவுகளை ,முக்கிய கருவாக கொண்ட படம்.

ஒரு பூர்ஷ்வா செல்வ நிலை கொண்ட ஒருவனும், அவன் குடும்பம் சார்ந்து நிற்கும் விவசாய சுயம் கொண்ட ஏழை தொழிலாளி ஒருவனும் சகோதரர் போல மன இணைப்பு கொண்டாலும், அந்த கிராமத்தை தொழில்-சார் நகர முகமாக மாற்ற நினைக்கும் படித்த பணக்காரனுக்கும்,விவசாயம் சார்ந்த மண் பற்று கொண்ட அடிப்படை ஏழை மனிதனுக்கும் நிகழும் போராட்ட நிலையில் தொடரும் பிரச்சினைகள்.இடை-நிலை சுயநலமிகளால் தீ மூட்ட பட்டு ,தீயுடனே முடியும் இறுதி காட்சி.

நடிகர்திலகம் இந்த படத்தில் அற்புதமான உடல் கட்டு (கிருஷ்ணாவின் சொற்களில் தேக்கு மர தேகம் ),திராவிட மன்மத எழில் தோற்றம்,இளமை சுடர் விடும் துறு துறுப்பு கொண்டு அவ்வளவு ,இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவு handsome உச்சத்தில் இருப்பார்.(அதுவும் தம்பியாக நடிக்கும் ,வயது மிக குறைந்த அன்றைய வளரும் இன்னொரு நடிகரின் அருகில் பாதி வயதாக தெரிவார்)

பிரச்சாரமாக தெரியாமல் தன் தொழில்-சார் மண் நேசத்தை இயல்பாக உணர்த்தும் ,பாத்திரத்தை ஒட்டிய நடிப்பு.ஒரு raw என்ற நிலையில் ஜாலி நடன காட்சிகள், எல்லை மீறா காதல் குறும்புகள்,மிதமான நட்பு-பாச வெளியீடுகள்,விறு விறுப்பான சிலம்ப சண்டை,என்று இயல்பான நகைசுவையும் தெளிப்பார். ரவி சந்திரனை இரண்டாவது நாயகனாக்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு.

விஸ்வநாதன் இசையமைப்பில் தேரு வந்தது , வள்ளி மலை மான்குட்டி பாடல்கள் என்னை இன்று வரை மயக்கும் பாடல்கள்.அது தவிர வேஷ பொருத்தம்,கோபாலன் எங்கே உண்டோ,எனக்கு தெரியும் என்ற நல்ல பாடல்கள்.

படத்திற்கு திருஷ்டி சரோஜா தேவி. சோர்வு தெரியும்,தளர்ச்சி கொண்ட வயதான தோற்றத்தில் சிவாஜிக்கு அம்மா போல தோற்றமளிப்பார்.படத்தில் காதல் காட்சிகள் குட்டிசுவரானது இவரால்தான்.ஒட்டாமல் போகும். அதை விட கொடுமை விஜய நிர்மலா.கதாயகியர் இருவரும் கொடூரம்.(ஆனால் இதற்கு பின் வந்த அஞ்சல் பெட்டியில் சரோஜாதேவி ப்ரெஷ் ஆக இளமையாக இருந்தார்)

எல்லோருடைய நல்ல பங்களிப்பு ,அளவான நல்ல திரைகதை-வசனங்கள், உறுத்தாத இயக்கம், பொழுதுபோக்கு, தீவிர பிரச்சினையின் நுணுக்கமான கையாளல்,நடிகர்களின் நிறைவான பங்களிப்பு இருந்தும் ,எதிர்பார்த்த வெற்றி கோட்டை இந்த படம் தொடாதது இது வரை புதிராகவே உள்ளது.

நடிகர்திலகம் , ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு பணிவது அவசியம் என்றாலும்,இந்தளவிர்க்கா ?என்று கேட்டிருந்தார். எம்.ஆர்.சந்தானம்-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?

joe
16th June 2016, 07:43 AM
அதாவது அன்பே வா புரட்சித்தலைவர் நடித்தது .. "எங்கிருந்தோ வந்தாள்", "தர்மம் எங்கே", "எங்க மாமா" மற்றும் "தெய்வ மகன்" இதெல்லாம் புரட்சித்தலைவி கூட சிவாஜி-ன்னு ஒரு துக்கடா நடிகர் சைட் கேரக்டர்ல நடித்தது .. தெய்வமகன்ல கூட இந்தம்மாவோட இமாலய நடிப்புக்குத்தான் ஆஸ்காருக்கு அனுப்புனாங்க .

Gopal.s
16th June 2016, 07:59 AM
அதாவது அன்பே வா புரட்சித்தலைவர் நடித்தது .. "எங்கிருந்தோ வந்தாள்", "தர்மம் எங்கே", "எங்க மாமா" மற்றும் "தெய்வ மகன்" இதெல்லாம் புரட்சித்தலைவி கூட சிவாஜி-ன்னு ஒரு துக்கடா நடிகர் சைட் கேரக்டர்ல நடித்தது .. தெய்வமகன்ல கூட இந்தம்மாவோட இமாலய நடிப்புக்குத்தான் ஆஸ்காருக்கு அனுப்புனாங்க .

ஜோ,

எனக்கும் அந்த துக்கடா செய்தியை படித்து செம கடுப்பு.கடுப்பு.one Tamil சங்கர்,மற்றும் அதன் தலைமை செய்தியாளர் , ஹிந்து பத்திரிகையின் ஸ்ரீதர் என்கிற கலை வேந்தன் இவர்களெல்லாம் சரித்திரம், செய்திகளை திரிக்க வேறு செய்கின்றனர். அந்த தொழிலையே அவமதிக்கின்றனர்.

தமிழனுக்கு தன் மண்ணின் அபார திறமை கொண்ட அசல் வித்துக்களான சிவாஜி,கமல் போன்றோரை உரிய முறையில் கவுரவிக்கும் மாண்பு இல்லை.கன்னட ராஜ் குமார்,மலையாள சத்யன்,வங்காள உத்தம் குமார், ஹிந்தியில் திலிப்,போன்ற சராசரிகள் மண்ணின் மைந்தர்களாக கொண்டாட படும் போது ,தன இனம் அழிவதை தானே பார்க்கும் cannibal போன்று தமிழன் வாழ்கிறான்.

ஒரு நிறுவனமான தி.மு.கவை விடுத்து மற்றவற்றை ஆதரித்த தமிழன் அவதி படவே போகிறான்.

Gopal.s
16th June 2016, 08:39 AM
Dear Mr.Siva,

Load and Load of Thanks for your valuable Postings.We are indebted to you.

Gopal.s
16th June 2016, 08:44 AM
தெய்வ மகன்.(1969).(An Oscar Achievement by Nadigarthilagam and A.C.Thirulokchandar.)

மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).

பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.

நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.

இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?

எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.


எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.

தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.

சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.

ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.

அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.

விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....



இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."

நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )

டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.

கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?


சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )

முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.

விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.

டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .

கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.

காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.

ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?


விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.

விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.

கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.

நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).

தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?

தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).

அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)

கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.

எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.

eehaiupehazij
16th June 2016, 05:33 PM
Tributes to Director AC Thirulokchandher,who had long helm of screen association with NT ,,delivering such unforgettable classics like Deiva Magan

https://www.youtube.com/watch?v=7_h74wf_UOk

sivaa
16th June 2016, 07:46 PM
சினிமா என்றால் அதன் அர்த்தம்
" சிவாஜி"
நடிகர்திலகத்தின் திரைப்பிரவேசத்திற்கு பிறகே தமிழ் மற்றும் இந்திய சினிமாவைப் பற்றிய தகவல்களை உலகளாவிய மக்கள் அறிய ஆர்வம் கொண்டனர்
நடிப்பிற்காக.உலக அரங்கில் விருதை வென்ற முதல் இந்திய நடிகர்(1960 ஆம் ஆண்டு)
... நடிப்பிற்காக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் படம் தெய்வமகன் (1969)
இதுபோன்ற ஏராளமான சாதனைகளை கொண்டவரானதால் " சினிமாவின் குறியீடு ஆகவே திகழ்கிறார் நம் நடிகர்திலகம்
நடிகர்திலகத்தின் " பாசமலர்" அதனை சினிமா குறியீடாக சித்தரிக்கும் புத்தகம்,
அதன் ஆசிரியர் முனைவர் பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி!

http://oi65.tinypic.com/2uzdtn7.jpg



(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)

sivaa
16th June 2016, 07:49 PM
வீரபாண்டிய கட்டபொம்மன், படத்தை முதன்முதலாக எனது 7வயதில் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் துணையோடு ஊரிலிருந்து 5 km தொலைவில் இருந்த டூரிங் கொட்டகையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது வருடம் 1983
நானும் என்னுடைய நண்பர்களும்
மெய் சிலிர்த்துபோனோம்
மெய்ச்லிர்ப்பு என்பதன் தன்மை என்னவென்று தெரிந்தது, படத்தில் நடிகர்திலகம் தோன்றும் போது கைதட்டல் அடங்காது, இதனால் எங்களால் வசனங்களை. உள் வாஙக முடியாமல் ...போனது , ஆனால் படம் பார்ப்பவர்கள் ஒவ்வொரு காட்சி க்கும் கூரிய விளக்கம், இதுவே ராஜா, அவர் இப்படித் தான் நடப்பார், கண்ணால் மட்டுமே எதிரியை மிரட்டுவார்,போர்வாள் எடுக்கும் விதம் அதை மீண்டும் சொருகும் விதம், கடவுளை வணங்கும் முறை, குழந்தை யோடு கொஞ்சுவதாகட்டும்,இப்படியே எல்லா காட்ஷிகலுக்கும் எத்தனையோ விளக்கம், ஒரு மாதம் வரை எங்களால் அதன் தாக்கத்திலிருந்து விடுபடாமல் கதைவசன புத்தகம் வாங்கி நடிகர்திலகத்தின் அத்தனை வசனங்களை யும் மனப்பாடம் செய்து வகுப்பிலே ஒரு மேடை நாடகம் நடத்திவிடுவோம், ஆசிரியர்கள் அதனை பாராட்டினார்கள், படித்த காலத்தில் பள்ளியின் மூலமாக திரைப்படம் காண்பித்தது என்றால் நடிகர்திலகத்தின் படங்கள் மட்டுமே
கப்பலோட்டிய தமிழன், கர்னன்,ராஜ ராஜ சோழன், ஹரிச்சந்திரா, மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், திருவருட்செல்வர், என பட்டியல் நீண்டுகொண்டே போகும்
பின்னாளில் படத்தினை கணக்கில் இல்லாத அளவிற்கு பார்த்தும் நடிகர்த்திலகத்தின் நடிப்பு ஏனோ தெவிட்டாத தேநமுதாகவே இருக்கிறது

http://oi63.tinypic.com/2uorx4j.jpg



(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)

sivaa
16th June 2016, 07:50 PM
http://oi63.tinypic.com/2h3dl3m.jpg

sivaa
16th June 2016, 07:53 PM
http://oi67.tinypic.com/30bzex2.jpghttp://oi66.tinypic.com/14mdds.jpghttp://oi64.tinypic.com/2qjhimf.jpghttp://oi68.tinypic.com/1zwp5ys.jpghttp://oi64.tinypic.com/vh9mh3.jpg

sivaa
16th June 2016, 07:53 PM
http://oi63.tinypic.com/30j7jet.jpg

sivaa
16th June 2016, 09:50 PM
பைலட் பிரேம்நாத் பத்திரிகைகளின் தொகுப்பு தொடர்கிறது.....

http://oi68.tinypic.com/2uqbst2.jpg

sivaa
16th June 2016, 09:50 PM
http://oi67.tinypic.com/121eatw.jpg

sivaa
16th June 2016, 09:51 PM
http://oi64.tinypic.com/290ugsx.jpg

sivaa
16th June 2016, 09:51 PM
http://oi66.tinypic.com/2n21t3q.jpg

sivaa
16th June 2016, 09:52 PM
http://oi63.tinypic.com/98r6a9.jpg

sivaa
16th June 2016, 09:52 PM
http://oi63.tinypic.com/zlcpd.jpg

sivaa
16th June 2016, 09:53 PM
http://oi65.tinypic.com/ws1jyc.jpg

sivaa
16th June 2016, 09:53 PM
http://oi65.tinypic.com/sqk3ko.jpg

sivaa
16th June 2016, 09:56 PM
http://oi63.tinypic.com/20hri88.jpghttp://oi68.tinypic.com/jg1tme.jpg

sivaa
16th June 2016, 09:57 PM
http://oi66.tinypic.com/1zlvmfs.jpg

sivaa
16th June 2016, 09:58 PM
http://oi64.tinypic.com/2dlvx9k.jpg

sivaa
16th June 2016, 09:59 PM
http://oi67.tinypic.com/2di3ya0.jpghttp://oi65.tinypic.com/21jdcpl.jpg

sivaa
16th June 2016, 09:59 PM
http://oi68.tinypic.com/2lnfuzd.jpg

sivaa
16th June 2016, 10:00 PM
http://oi66.tinypic.com/16lbaxh.jpg

sivaa
16th June 2016, 10:01 PM
http://oi64.tinypic.com/2zzqir4.jpg

sivaa
16th June 2016, 10:03 PM
http://oi66.tinypic.com/11v422u.jpg

sivaa
16th June 2016, 10:04 PM
http://oi66.tinypic.com/m1oo6.jpg

sivaa
16th June 2016, 10:05 PM
http://oi65.tinypic.com/fncqab.jpg

sivaa
16th June 2016, 10:05 PM
http://oi66.tinypic.com/212aipc.jpg

sivaa
16th June 2016, 10:08 PM
http://oi65.tinypic.com/2cfulgn.jpg

sivaa
16th June 2016, 10:11 PM
http://oi68.tinypic.com/6ztpmu.jpg

sivaa
16th June 2016, 10:13 PM
http://oi67.tinypic.com/4uxie8.jpg

sivaa
16th June 2016, 10:14 PM
http://oi67.tinypic.com/14xckkg.jpg

sivaa
16th June 2016, 10:40 PM
கண்ணா, படம் ரிலீசான அன்னைக்கே தியேட்டர்ல ஆளில்லாம தியேட்டரே காலியா கிடக்க இது மத்தவங்க படம் இல்லே, எத்தனை வருசம் ஆனாலும் படம் போட்டா தியேட்டரே நோக்கி மக்களை வரவைக்கிற சிவாஜி டா...............
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிவகாமியின் செல்வன் 12வது வாரத்தை நோக்கி சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில்.
உழைத்த அன்பு இதயங்களுக்கும், ஊக்கமளித்து வரும் பொதுமக்களுக்கும் நன்றியைக் காணிக்கையாக்குகிறது அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம்.


http://oi68.tinypic.com/npnpkp.jpg



(திரு சுந்தரராஜன் அவர்களின் முக நூலலில் இருந்து)

vasudevan31355
17th June 2016, 08:33 AM
விகடன் பண்ணும் விபரீத விளையாட்டு

http://img.vikatan.com/cinema/2016/06/16/images/thirulok6.jpg

மீண்டும் மீண்டும் தவறு. விகடன் (THURSDAY, JUNE 16, 2016) திருலோகசந்தர் நினைவலைகளுக்காக வெளியிட்டுள்ள கட்டுரையில் சிறுபிள்ளைத்தனமாக உளறிக் கொட்டி இருக்கிறது. இங்கே நாம் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆதாரங்களுடன் நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்க, ஒரு powerful மீடியாவான விகடன் இம்மாலயத் தவறை செய்கிறது.

'சிவாஜி பத்மினி நடித்து வெளியான 'இருமலர்கள்' பெரிய அளவில் வெற்றி பெறவில்லையென்றாலும் மூன்று கதாபாத்திரங்களால் ரசிகர்களை நெக்குருக வைத்திருப்பார்.'

இதுதான் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிற விஷயம்.

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4925-1-1.jpg

'ஆனந்தவிகட' அறிவுஜீவிக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று 'இருமலர்க'ளின் பகிரங்கமான வெற்றிச் செய்தியை இப்படி வெற்றிபெறவில்லை என்று எழுதுவானேன்? இருமலர்களும், ஊட்டிவரை உறவும் ஒரே தீபாவளி நாளில் (01-11-1967) வெளியாகி நூறு நாட்களைத் தாண்டி இமாலய வெற்றி பெற்றன என்பது இத்தனை காலம் பத்திரிகை நடத்திவரும் விகடனுக்குத் தெரியாதா? அல்லது வேண்டுமென்றே மற்றவர்களைப் போல நடிகர் திலகத்தின் புகழை விகடனும் மறைக்கத் துடிக்கிறதா?

மற்றவர்களைப் போல விகடனும் தன் நிலையைத் தானே தரம் தாழ்த்திக் கொள்ளத் தலைப்பட்டு விட்டதா?

நடிகர் திலகம் என்ன இவர்கள் வீட்டுச் சோற்றில் மண்ணை அள்ளிப் போட்டாரா?

பிரம்மாண்டமாக எடுத்து சுமாரான வெற்றியைப் பெற்ற வண்ணப் படங்களை விகடன் உச்சியில் வைத்து எழுதும் போது கருப்பு வெள்ளையில் வெளிவந்து அதுவும் ஒரே தின தீபாவளியில் ஒன்று வண்ணமும், ஒன்று கருப்பு வெள்ளையுமாய் நம் எண்ணத்தில் இன்றுவரை கலந்து வெற்றிக்கனியை இலகுவாகப் பறித்து, இன்றளவும் முறியடிக்கமுடியாத சாதனையாய் நம்மையெல்லாம் பெருமைப்பட வைக்கிறதே! இந்த வெற்றியை இல்லை என்று சொன்னால், அந்த வெற்றியை சந்தேகித்தால் இவர்கள் எல்லாம் நல்ல கதிக்குப் போவார்களா?

இரண்டாவது அந்தக் கட்டுரைக்காகப் பதிப்பித்திருக்கும் புகைப்படங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் ஒன்று கூட இல்லை. வீரத்திருமகனும், அதே கண்களும், அன்பேவாவும் படங்களாகக் காட்சி தருகையில் திருலோக்சந்தரை ஹாலிவுட் வரை கொண்டு சென்ற நம் 'தெய்வ மக'னின் புகைப்படம் ஒன்று கூடவா விகடனுக்குக் கிடைக்கவில்லை?

இதிலிருந்தே நடிகர் திலகத்தின் புகழை இன்றளவும் மறைக்க விகடனும் கங்கணம் கட்டி இறங்கிக் கொண்டு வேலை செய்வது தெரியவில்லையா? இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விகடன் சர்குலேஷனை விட குங்குமம் பத்திரிக்கையின் சர்குலேஷன் அதிகம் என்று சொன்னால் விகடன் ஒத்துக் கொள்ளுமா?

இன்னும் எழுதுங்களேன்...'தெய்வ மகன் என்று சிவாஜி நடித்து ஒரு படம் வந்தது...வந்ததும் தெரியாது...போனதும் தெரியாது...மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது' என்று.

நிஜ சாதனைகள் செய்த ஒரு நிஜத் தமிழனுக்கு தமிழ்நாட்டிலே இந்த நிலைமை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. சிவாஜி என்ற இமயமலையை சோற்றில் மறைக்க முயற்சி செய்து தோற்றுக் கொண்டே இருக்கும் சோற்றுப் பிண்டங்களே! நீங்கள் திருந்தாவிட்டால் என்ன? அந்த மாபெரும் சாதனையாளர் செய்த சாதனையை நாடறியும்...நாங்கள் அறிவோம்..மக்கள் அறிவார்கள். நீங்கள் என்ன?

இதோ அந்த கட்டுரைக்கான லிங்க்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/65252-actirulokchandar-memorial-article.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=3604

இரு மலர்கள் - சிறப்புச் செய்திகள் (நன்றி ராகவேந்திரன் சார்)

1. ஒரே நாளில் அதற்கு முன்னரும் நடிகர் திலகம் இரு படங்களை வெளியிட்டிருக்கிறார். கூண்டுக்கிளி-தூக்குத்தூக்கி, கள்வனின் காதலி- கோடீஸ்வரன், அடுத்தடுத்த நாட்களில் அவள் யார்-பாகப்பிரிவினை, மீண்டும் ஒரே நாளில் பாவை விளக்கு-பெற்ற மனம், என படங்கள் வெளியாகியுள்ளன. அதே போல் ஊட்டி வரை உறவு-இருமலர்கள் இரண்டும் ஒரே நாளில் அதாவது 01.11.1967 அன்று வெளியாகி இரண்டும் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது தமிழ்த் திரையுலக வரலாற்றில் நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனை. இது மீண்டும் 1970ம் ஆண்டிலும் அவரால் நிகழ்த்தப்பட்டது. 100 ஆண்டு திரையுலக வரலாற்றில் முறியடிக்கப்படாத சாதனையாகும். மேலும் அந்த நாளில் - அதாவது 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று வெளியான இதர படங்களான நான். காதலித்தால் போதுமா, விவசாயி ஆகியவையும் போட்டி போட்டன. கிரௌன் புவனேஸ்வரி இரு திரையரங்குகளும் விவசாயி படங்களைத் திரையிட்டதால், பிராட்வே மற்றும் சயானி திரையரங்குகளில் ஊட்டி வரை உறவு வெளியானது. இதில் சயானி திரையரங்கிற்கு இரு மலர்கள் படமும் போட்டி போட்டது. ரேஸில் ஊட்டி வரை உறவு வென்றது. இரு மலர்கள் ராக்ஸி திரையரங்கிற்கு சென்றது என கேள்விப்பட்டுள்ளோம். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், அருகருகே இருந்த இரு திரையரங்குகளில் - பிராட்வேயில் ஊட்டி வரை உறவு மற்றும் பிரபாத்தில் இருமலர்கள் வெளியாகி இரண்டும் அரங்கு நிறைவுகளோடு வெற்றி நடை போட்டதும் நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கற்களாகும்.

JamesFague
17th June 2016, 09:57 AM
Courtesy: Tamil.webdunia

சிவாஜியை சிவாஜியுடன் மோதவிட்ட ஏ.சி.திருலோகச்சந்தர்

ஏ.சி.திருலோகசந்தரின் மறைவு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு. வெறும் வார்த்தையல்ல. அவரது படைப்புகளின் வரிசையைப் பார்த்தால் அவர் எத்தனை மகத்தான படைப்பாளியாக இருந்தார் என்பது தெரியும்.




வீரத்திருமகன் படத்தை இயக்கி தமிழ் திரையில் இயக்குனராக முத்திரை பதித்தார் ஏசிடி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளில் சுழன்றடித்தார். அன்பே வா, தெய்வமகன், தங்கை, இருமலர்கள், எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள், அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா... என்று அவர் இயக்கிய படங்கள் எல்லாமே தரமானவை. கமர்ஷியலாக வெற்றி பெற்றவை.

திரைத்துறையில் ஏசிடி நிகழ்த்தி சாகசங்கள் சுவாரஸியமானவை. அதில் சிவாஜியை சிவாஜியுடன் மூன்றுமுறை மோதவிட்டு மூன்றுமுறையும் வெற்றி பெற்ற கதை முக்கியமானது.

இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானாலே இன்று திரையரங்குகளும், திரைத்துறையும் திணறிப்போகும். வசூல் பாதிக்கும் என்று தயாரிப்பாளரிலிருந்து பாப்கார்ன் விற்பவர்வரை கூப்பாடு போடுவார்கள். திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த அந்தக்காலத்தில் அப்படியெல்லாம் இல்லை. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியான கதையெல்லாம் உண்டு.

1967 -இல் ஏசிடி சிவாஜியை வைத்து இரு மலர்கள் படத்தை இயக்கினார். அவர் இயக்கிய படங்களில் இரு மலர்களே ஆகச்சிறந்த படம் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இரு மலர்கள் வெளியாவதாக இருந்த அதே தினத்தில் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ஊட்டி வரை உறவு படமும் வெளியீட்டுக்கு தயாரானது. ஒரேநாளில் ஒரு நடிகரின் இரு படங்களா என்று பஞ்சாயத்து எல்லாம் பேசாமல் இரு மலர்களையும், ஊட்டி வரை உறவையும் ஒரேநாளில் வெளியிட்டனர். இரு படங்களும் 100 நாள்களை கடந்து ஓடின.

1970 -இல் மீண்டும் அதுபோன்ற ஒரு சூழல். ஏசிடி சிவாஜியை வைத்து எங்கிருந்தோ வந்தாள் படத்தை எடுக்கிறார். டி.ஆர்.ராமண்ணா சிவாஜியை வைத்து சொர்க்கம் படத்தை எடுக்கிறார். இரண்டுக்கும் ஒரே ரிலீஸ் தேதி. இரண்டும் ஒரே நாளில் வெளியாகிறது. இரண்டுமே ஹிட். 100 நாள்களை தாண்டுகின்றன.

1975 -இல் சிவாஜியை வைத்து டாக்டர் சிவா படத்தை இயக்கிய போதும், இயக்குனர் ஸ்ரீதர் போட்டியாக வருகிறார். ஸ்ரீதர் சிவாஜியை வைத்து வைர நெஞ்சம் படத்தை இயக்கியிருந்தார். இரண்டுக்கும் ஒரே ரிலீஸ் தேதி. இரண்டுமே 100 நாளை கடந்து வெற்றி பெறுகின்றன.

சிவாஜியை சிவாஜியுடன் மூன்றுமுறை மோதவிட்டு மூன்று முறையும் வெற்றிபெற வைத்ததுள்ளார் ஏசி திருலோகசந்தர். அவர் எப்பேர்ப்பட்ட ஜாம்பவான் என்பதற்கு இது சின்ன உதாரணம்.

vasudevan31355
17th June 2016, 11:10 AM
//1975 -இல் சிவாஜியை வைத்து டாக்டர் சிவா படத்தை இயக்கிய போதும், இயக்குனர் ஸ்ரீதர் போட்டியாக வருகிறார். ஸ்ரீதர் சிவாஜியை வைத்து வைர நெஞ்சம் படத்தை இயக்கியிருந்தார். இரண்டுக்கும் ஒரே ரிலீஸ் தேதி. இரண்டுமே 100 நாளை கடந்து வெற்றி பெறுகின்றன.//

நன்றி வாசுதேவன் சார்.

webdunia செய்தியிலும் தவறு இருக்கிறது. டாக்டர் சிவா, வைர நெஞ்சம் இரண்டும் நூறு நாட்கள் படங்கள் அல்ல. உண்மையைச் சொல்ல தயக்கமில்லை. ஒத்துக் கொள்ளவும் தயக்கமில்லை. வைர நெஞ்சம் சுமாரான வெற்றியை அடைந்தது. வரவேண்டிய நேரத்தில் வந்திருந்தால் அதன் வெற்றி வேறுவிதமாக அமைந்திருக்கும். நிறைய சொதப்பல்களால் 'ராஜா' மாதிரி வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம் காலதாமதத்தால் நல்ல வெற்றி வாய்ப்பை இழந்தது. 'டாக்டர் சிவா' நிரம்ப ஏமாற்றத்தை அளித்ததால் (எனக்கல்ல) தோல்வியைத் தழுவ நேரிட்டது.

ஓடினால் ஓடியது என்று சொல்லப் போகிறோம். இல்லையென்றால் இல்லையென்று சொல்வோம். இதிலென்ன குறைந்து விடப் போகிறோம்? வெற்றி தோல்விகள் யாருக்கும் நிலையானது அல்லவே! ஆனால் வரலாற்று வெற்றியைப் பெற்ற படங்களை ஓடவில்லை என்று அதுவும் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், ஊடகங்கள் கூறும்போதுதான் எரிச்சல் வருகிறது. இது பொறாமை உணர்வையும், உண்மையை மூடி மறைக்கும் கேவலத்தையும் அல்லவா காட்டுகிறது? இதனால் என்ன லாபத்தையும், சந்தோஷத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்து விடப்போகிறார்கள்?

உண்மையை ஒத்துக் கொள்ள நடிகர் திலகத்தின் ரசிகன் எந்தக் காலத்திலேயும் தயங்கியதே இல்லை. கோபால் கூட 'அன்பளிப்பு பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் சுமாரான வெற்றியைப் பெற்றது' என்று உண்மையை மறைக்காமல் இங்கே தெளிவாகக் குறிப்பிட்டது ஒன்றே இதற்கு சான்று.

என் அபிமானப் படங்களான கருடா சௌக்கியமா, தாம்பத்யம் போனற படங்கள் தோல்விப் படங்களே என்று அந்தப் படங்களுக்கான என் பதிவுகளில் நானே அதை குறிப்பிட்டிருக்கிறேன்.

joe
17th June 2016, 02:48 PM
பழம்பெரும் இயக்குனரும், பல வெற்றிப் படங்களை இயக்கியவரும், தனிப்பட்ட முறையில் என்னிடம் பற்றும் பாசமும் கொண்டவருமான அருமை நண்பர் ஏ.சி. திருலோகசந்தர் மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன். சுமார் 60க்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பதும், அவர் நடிகர் திலகம் நடித்த 25க்கு மேற்பட்ட திரைப்படங்களை, குறிப்பாக "ஆஸ்கர்" விருது தேர்வுக்குச் சென்ற முதல் தமிழ்த் திரைப்படமான "தெய்வ மகன்" படத்தை இவர் இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-leader-karunanidhi-condolence-a-c-thirulogachander-death-256171.html

- சிவாஜி மீது காழ்ப்புணர்வு கொண்டவராக சித்தரிக்கப்படும் கருணாநிதி .

eehaiupehazij
17th June 2016, 05:36 PM
The world is small...the earthly life too! Enjoy the sweetness of life even as controversies are not uncommon...that too when the nostalgia gets a shake with fake and pampered interludes like this....NT-ACT combo!

Enjoy the foot tapping dance steps, yodeling and whistling interludes....

இனிதான இவ்வுலகில் நாளை பொழுது யாருக்கென்று கேள்வி கேட்டு பதில் தேடு !

https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA

RAGHAVENDRA
17th June 2016, 06:14 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13445719_1136675326383138_800146325121913391_n.jpg ?oh=38f492a0321581bb4a8e9e33b817db67&oe=57CC60DD

Russellxor
18th June 2016, 05:29 PM
courtesy
whatsup images
Thanks to Bangalore Guna
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160618-WA0018_zpssuvxbdru.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160618-WA0018_zpssuvxbdru.jpg.html)

Russellxor
18th June 2016, 05:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160618-WA0019_zpsewbjjwvc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160618-WA0019_zpsewbjjwvc.jpg.html)

Russellxor
18th June 2016, 05:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160618-WA0020_zpskg2wahdq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160618-WA0020_zpskg2wahdq.jpg.html)

Russellxor
18th June 2016, 05:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160618-WA0021_zpsex9hasdw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160618-WA0021_zpsex9hasdw.jpg.html)

Russellxor
18th June 2016, 05:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160618-WA0026_zps8ybe6pwe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160618-WA0026_zps8ybe6pwe.jpg.html)

Russellxor
18th June 2016, 05:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160618-WA0028_zpsdiox5l6a.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160618-WA0028_zpsdiox5l6a.jpg.html)

Russellxor
18th June 2016, 05:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160618-WA0030_zpsivcmvdpb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160618-WA0030_zpsivcmvdpb.jpg.html)

Russellxor
18th June 2016, 05:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160618-WA0032_zpssrtcwf6d.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160618-WA0032_zpssrtcwf6d.jpg.html)

Russellxor
18th June 2016, 05:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160618-WA0041_zpshyahit0x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160618-WA0041_zpshyahit0x.jpg.html)

Russellxor
18th June 2016, 05:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0014_zpsd1xoyowa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0014_zpsd1xoyowa.jpg.html)

Russellxor
18th June 2016, 05:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0016_zps2nxjvr3g.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0016_zps2nxjvr3g.jpg.html)

Russellxor
18th June 2016, 05:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0018_zpsrg29wp84.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0018_zpsrg29wp84.jpg.html)

Russellxor
18th June 2016, 05:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0019_zpsjw83dpk7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0019_zpsjw83dpk7.jpg.html)

Russellxor
18th June 2016, 05:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0021_zpsqbnah7cz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0021_zpsqbnah7cz.jpg.html)

Russellxor
18th June 2016, 05:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0023_zpsiip61nod.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0023_zpsiip61nod.jpg.html)

Russellxor
18th June 2016, 05:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0024_zpsqyleqmhz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0024_zpsqyleqmhz.jpg.html)

Russellxor
18th June 2016, 05:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0027_zpsfhz7nmib.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0027_zpsfhz7nmib.jpg.html)

Russellxor
18th June 2016, 05:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0029_zpsxaicwmxc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0029_zpsxaicwmxc.jpg.html)

Russellxor
18th June 2016, 05:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0031_zpsvjraj8ih.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0031_zpsvjraj8ih.jpg.html)

Russellxss
18th June 2016, 06:24 PM
சரித்திரம் படைக்கும் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன். சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கம் துவங்கி 54 வருடங்கள் ஆகி விட்டன. ஆனால், இது வரை எந்தப் படமும் 70 நாளைத் தாண்டியதில்லை. தற்போது நமது மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படம் 12வது வாரம் காண்கின்றது. ஜூலை 10 அன்று 100வது நாளைக் கொண்டாவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்வோம். கலையுலகில் என்றும் சாதனைச் சக்கரவர்த்தி சிவாஜி ஒருவர் தான் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்வோம். படத்தின் வெற்றிக்கு உழைத்திட்ட திரு.ஜெயக்குமார், திரு.ராமஜெயம் மற்றும் அனைத்து மக்கள்தலைவரின் ரசிகர்களுக்கும் சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.

http://www.sivajiganesan.in/Images/180616_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
18th June 2016, 06:26 PM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, 24.06.16 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மாபெரும் வசூல் புரட்சி ஏற்படுத்திய மாபெரும் வெற்றிக்காவியம் திரிசூலம் வெளியாகிறது.
தயாராவோம் படத்தைக் காண, திக்குமுக்காடச் செய்வோம் சென்ட்ரல் திரையரங்கை.
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் புதிய படங்களுக்கு இணையாக வைக்கப்படும் திரிசூலம் காவியத்தின் போட்டோ கார்டு.
மேலும் சூப்பர் போட்டோ கார்டு காண மக்கள்தலைவரின் புகழ்காக்கும் உங்கள் www.sivajiganesan.in பாருங்கள்

http://www.sivajiganesan.in/Images/180616_3.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellsmd
19th June 2016, 08:41 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160619003004480_zpsjeb5mzv2.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160619003004480_zpsjeb5mzv2.jpg.html)

vasudevan31355
19th June 2016, 10:19 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355093/eee.jpg

'நீலவான'த்தில் கள்ளமில்லாமல் சிரித்து வட்டமிட்டு பறக்கும் தேவிகா சிட்டு. மகன் வயிற்றில் வளருகிறான் என்ற பொய் சேதி அறியா உண்மை சந்தோஷத்தில் உறவினர், உற்றார் மத்தியில் தோழிகளின் கிண்டல்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மத்தியில் தேவிகாவின் அந்த முகத்தில்தான் கைகள் மூடிய, எத்தனை நாணம் கலந்த மகிழ்ச்சி! சும்மாவா சொன்னார் நடிகர் திலகம் 'நீலவானம்' படம் பற்றி. 'தேவிகாவின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்' என்று. 'நடிப்பின் இமய'மே பாராட்டு படித்து விட்டதே தேவிகாவைப் பற்றி.

பொய் வளைகாப்பு நடப்பதைப் பார்த்து கமுக்கமாகக் கண்ணீர் விடும் சீதாலஷ்மி, சஹஸ்ரநாமம் பரிதாபம்.

குமாரி பத்மினியும், ராஜஸ்ரீயும் சுசீலா, ராட்சஸி குரலில் இந்த அற்புதமான பாடலைப் பாட சுவையோ சுவை. சுசீலா, ஈஸ்வரியில் யாருக்கு மார்க் போடுவது என்றே தெரியவில்லை. போட்டா போட்டி இருவருக்கு. வெற்றி நமக்கு. பாடலின் பரிதாபமான சிச்சுவேஷனை ஆரம்ப ஷெனாயின் லேசான சோகமே காட்டிக் கொடுத்து விடும்.

'மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் வந்து கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தினில் வெண்பிறை நெற்றியில் வேர்வை வழிந்தோட'

என்ன தமிழ்! என்ன தமிழ்!

'சங்கொலி பொங்கிட பஞ்சணையில் ஒரு சம்பவம் உண்டாக'

வரிகள் சுசீலா குரலில் மிளிரும் அழகை எப்படி வர்ணிக்க? அப்படியே தெள்ளத் தெளிவான வெண்கலக் குரல் பஞ்சர் பஞ்சராக்கிவிடும் நம்மை. 'ஆஹா! சுசீலாதான் டாப்' என்று மனதுக்குள் சர்டிபிகேட் தந்து கொண்டிருக்கும்போதே 'இதோ நான் இருக்கிறேன்... அதற்குள் முடிவெடுத்து விடாதே' என்று என் ராட்சஸி அடுத்த வரிகளை கேப்ச்சர் பண்ணி அமர்க்களப்படுத்தும் போது மனம் படும் பாட்டை சொல்லிவிட முடியாது.

'தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகைச் செண்டாக....மல்லிகைச் செண்டாக' என்று முடிவில் ராட்சஸி அதிர்வுகள் கொடுக்கும் போது 'ஈஸ்வரிதான் டாப்' என்று எழுந்து நின்று கத்தத் தோணும்.

ரெண்டு பேரும் சேர்ந்து வேர்வையை நீண்டு வழிந்தோடச் செய்யும் அழகு.

'வேர்வை வழிந்தோ......ட'

குழந்தை வளரும் கர்ப்பப்பையை 'தாமரைக் கோவில்' என்று கற்பனை செய்து பார்த்த கவிஞனின் திறமைதான் என்ன!

குமாரி பத்மினி குடும்பக் குத்துவிளக்கு என்றால் ராஜஸ்ரீ சற்றே கவர்ச்சி விளக்கு. ரெண்டுமே அழகுதான்.

ஒன்றை நிச்சயம் கவனியுங்கள்.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக் கூடிய அந்த சில வினாடிக் காட்சி. தூக்கிச் சாப்பிடுபவர் யார்? வேறு யார்? நடிகர் திலகம் அல்லாமல் வேறு யார்?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355092/nadai.jpg

பொய் வளைகாப்பு அங்கே தேவிகாவுக்கு நடந்து கொண்டிருக்க, இங்கே டெல்லியில் அகில உலக டாக்டர்கள் மகாநாடு புற்றுநோய் மருத்துவத்திற்காக நடந்து கொண்டிருக்க, தேவிகாவின் புற்றுநோய் குணத்திற்காக டாக்டர்கள் ஒன்று கூடியிருக்கும் கான்பிரன்ஸ் ஹாலின் வெளியே தவிப்புடன் புகை பிடித்தபடி ஒரு ஸ்டைல் வாக் கொடுக்கும் நடிகர் திலகம் அந்த ஒரு நிமிடத்தில் நான் முன்பு சொன்ன அத்தனை ஜாம்பவான்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார். அதாவது முதல் சரணத்திற்கு முன்பாக ஒலிக்கும் இடையிசையில் கான்பிரன்ஸ் ஹாலின் கதவுப்பக்கம் திரும்பி நிற்பவர் அப்படியே திரும்பி சற்றே லாங்க்ஷாட்டிலிருந்து படிக்கட்டுகளின் கீழ் இருக்கும் காமிராவை நோக்கி வருவார். காமெரா கீழிருந்து நடிகர் திலகத்தை ஃபோகஸ் செய்தபடி இருக்கும். சிகரெட்டை வாயில் வைத்து ஒரே ஒரு 'பப்' இழுத்தபடி அவர் ஸ்டைலாக அந்த சோக நிலையிலும் நடக்கும் அந்த வாக். அடடா! கைகளோடு கரெக்ட்டாக பிட்டாகியிருக்கும் அந்த கனகச்சிதமான கருப்பு கலர் ஷர்ட் அவரை இன்னும் அழகாக காண்பிக்கும். 'தம்'மை வாயிலிருந்து கைகளால் எடுத்து சிகரெட்டைப் பிடித்திருக்கும் அந்த அழகு நம்மை நிலைகுலைய வைத்துவிடும். சோகத்திலும் சுகம் அளிக்கக் கூடிய மூன்றே வினாடி ஜோரான காட்சி இது.

ஒரு விநாடிக் காட்சியை ரசிக்க வைத்து ஓராயிரம் பக்கங்களுக்கு அதை எழுத வைக்க நடிகர் திலகத்தை விட்டால் யாருண்டு?

தவிப்புடன் 'தம்'மடித்து, தன்னிலை கொள்ளாமல் நடை பயிலும் நடிகர் திலகத்தின் அந்த நடைக்கு ஈடு இணை எதுவும் சொல்ல முடியுமா?

இரண்டாவது சரணம் தொடங்குமுன் வரும் இடையிசையிலும் அவர் டாக்டர்கள் கைவிட்ட நிலையில் அவர்களிடம் அண்ணியாருக்காக வருத்தமாகக் கெஞ்சுவதும், விரக்தியாக முகபாவங்கள் காட்டுவதும் ஏ.ஒன்.

அற்புதமான பாடல். லிட்டில் பிளவரும், 'ஓடும் எண்ணங்'களும் 'ஹோ'...'ஓஹோஹோ' என்று இன்றுவரை பிரம்மாண்டம் படைக்க, இந்த வளைகாப்பு பாடல் சற்று பின்தங்கியிருந்தாலும் சற்றும் குறைவில்லாத பாடல்.

'நீலவான'த்தின் மூன்று பாடல்கள் எப்படி ஆரம்பிக்கின்றன என்று பாருங்கள்.

'ஓ லஷ்மி...ஓ ஷீலா'

'ஹோ...லிட்டில் பிளவர்'

'ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே!'

எல்லாமே 'ஓஹோஹோ'தானே!

'சொல்லடா வாய் திறந்து' சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ்.

'மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் வந்து கைகள் கலந்தாட'


https://youtu.be/OsjT3YkKlGc

Russellxor
19th June 2016, 12:01 PM
http://uploads.tapatalk-cdn.com/20160619/a9e46ad408670e65781c4d32842bc7fb.jpg

vasudevan31355
19th June 2016, 12:09 PM
செந்தில்வேல்,

கலக்கல் ஆவணங்கள். தலைவர் தமிழக முன்னேற்ற முன்னணி கண்டு அப்போதைய அத்தனை கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது அனைத்தும் நினைவுக்கு வருகிறது. அத்தனை கூட்டமும், பெருவாரியான உழைப்பும் விழலுக்கிறைத்த நீராய்ப் போன நினைவுகளும் நெஞ்சத்தைத் தாக்குகிறது. ஊரூராய் சென்று தமிழக முன்னேற்ற முன்னணி கொடிகளை ஏற்றியதும், ரசிகர்களின் சொல்லவொண்ணாத ஆர்வமும், உழைப்பும் இப்போதும் பசுமையாய் நெஞ்சிலே நிழலாடுகிறது. பழைய நினைவுகள் நெஞ்சில் கிளர்ந்தெழுகின்றன. அற்புதமான ஆவணங்களைத் தந்து அசத்துவதற்கு நன்றி!

Russellxor
19th June 2016, 01:23 PM
இலங்கையில் கலைக்குரிசில்சிவாஜி அப்பா செய்த சாதனைகளில் சில.
87 ஆம் வருடம் பல மலர்களில் வந்த சாதனைகளின் கையெழுத்தில் பதிவு செய்ததொகுப்பு இவை.http://uploads.tapatalk-cdn.com/20160619/d3a4516643c43103e701400aa21f6e32.jpg

Russellxor
19th June 2016, 01:24 PM
http://uploads.tapatalk-cdn.com/20160619/c1255f43d9e6718f8dd7c61d64bd2dcc.jpg

Russellxor
19th June 2016, 01:25 PM
http://uploads.tapatalk-cdn.com/20160619/3dc9a9866d2bb2d2378c4aef1efb1161.jpg

Russellxor
19th June 2016, 01:26 PM
BANGALORE HITS
http://uploads.tapatalk-cdn.com/20160619/a1b6856639fc8e3aad2c33bc2a81e52e.jpg

Russellxor
19th June 2016, 01:27 PM
http://uploads.tapatalk-cdn.com/20160619/07037f7ec780dd836b52a6d8a129332d.jpg

Russellxor
19th June 2016, 01:29 PM
http://uploads.tapatalk-cdn.com/20160619/1a28b61a60fca1a2bd9abf78ab1f6235.jpg

Russellxor
19th June 2016, 01:30 PM
http://uploads.tapatalk-cdn.com/20160619/e30b51c7fa89ad190054a74e8cc05191.jpg

Russellbpw
19th June 2016, 05:00 PM
இனிய நண்பர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிவிக்கும் வணக்கங்கள்

திரியினை செவ்வனே பங்களிப்பினை தரும் திரு நெய்வேலி வாசுதேவன் சார், கோபால் சார், ஆதவன் சார், ஆவணங்களை அள்ளி தரும் செந்தில்வேல் சார் மற்றும் இலங்கையின் இளங்குயில் என புகழ் பாடும் குயில் திரு சிவா சார், பரணி சார், மருத்துவர் திரு சிவாஜி செந்தில் சார், திரு ராகவேந்தர் சார், திரு முரளி சார், திரு கார்த்திக் அதிராம் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள்.

புதிய கம்பெனியில் விற்பனை முகவராக சேர்ந்துள்ளதால் அதிகம் வேலை பல ஊர்களுக்கு செல்லும்படியாக இருக்கும்பட்சத்தில் திரியில் முன்பு போல பதிவுகள் பதிக்க முடிவதில்லை. ஆகவே ஒரு ஹலோ சொல்லி, ஒரு சில எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவே வந்துள்ளேன்.

கூடிய விரைவில் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன் !

இயக்குனர் திரு act அவர்களுக்கு அஞ்சலி.

தமிழக முதல்வர் அவர்கள் மிக சிறப்பாக நடித்த ???? தெய்வமகன் திரைப்படம் oscar விருதுக்கு பரிந்துரைத்ததை அவர் இரங்கல் தகவலில் தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக அதே சமயம் மிகவும் ஹாஸ்யமாக உள்ளது.

காரணம் மூன்று வேடங்களில் மிக சிறந்த நடிப்பை இவர் வெளிபடுத்தியதால் மட்டுமே இந்த தெய்வ மகன் திரைப்படம் oscar விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது என்பது கூடுதல் செய்தி !

விரைவில் எண்ணங்களுடன் சந்திப்போம்.

Rks

eehaiupehazij
19th June 2016, 06:35 PM
தந்தை என்னும் ஆலவிருட்சம் தாங்கிட்ட விழுதுகள் ////////Fathers' Day reminiscence!

https://www.youtube.com/watch?v=StrkDVr1tg4

https://www.youtube.com/watch?v=h8kfABvuJBk

https://www.youtube.com/watch?v=VHIRPF_7gK4

eehaiupehazij
19th June 2016, 07:00 PM
ம்ம்ம்ம் .....இப்படியும் ஒரு கற்பனை .....ஒரு பரோடி என்ற அளவில் ரசிக்கலாம் ....!

https://www.youtube.com/watch?v=6hZ6Qxw9iQU

sivaa
20th June 2016, 07:01 AM
இனிய நண்பர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிவிக்கும் வணக்கங்கள்

திரியினை செவ்வனே பங்களிப்பினை தரும் திரு நெய்வேலி வாசுதேவன் சார், கோபால் சார், ஆதவன் சார், ஆவணங்களை அள்ளி தரும் செந்தில்வேல் சார் மற்றும் இலங்கையின் இளங்குயில் என புகழ் பாடும் குயில் திரு சிவா சார், பரணி சார், மருத்துவர் திரு சிவாஜி செந்தில் சார், திரு ராகவேந்தர் சார், திரு முரளி சார், திரு கார்த்திக் அதிராம் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள்.

புதிய கம்பெனியில் விற்பனை முகவராக சேர்ந்துள்ளதால் அதிகம் வேலை பல ஊர்களுக்கு செல்லும்படியாக இருக்கும்பட்சத்தில் திரியில் முன்பு போல பதிவுகள் பதிக்க முடிவதில்லை. ஆகவே ஒரு ஹலோ சொல்லி, ஒரு சில எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவே வந்துள்ளேன்.

கூடிய விரைவில் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன் !

இயக்குனர் திரு act அவர்களுக்கு அஞ்சலி.

தமிழக முதல்வர் அவர்கள் மிக சிறப்பாக நடித்த ???? தெய்வமகன் திரைப்படம் oscar விருதுக்கு பரிந்துரைத்ததை அவர் இரங்கல் தகவலில் தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக அதே சமயம் மிகவும் ஹாஸ்யமாக உள்ளது.

காரணம் மூன்று வேடங்களில் மிக சிறந்த நடிப்பை இவர் வெளிபடுத்தியதால் மட்டுமே இந்த தெய்வ மகன் திரைப்படம் oscar விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது என்பது கூடுதல் செய்தி !

விரைவில் எண்ணங்களுடன் சந்திப்போம்.

Rks

தங்களின் மீள் வருகைக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் திரு ரவிகிரண்சூரியா
தங்களை அடிக்கடிநினைத்துக்கொள்வேன் தொடர்ந்து வாருங்கள்
எழுதுங்கள் .

sivaa
20th June 2016, 07:05 AM
இலங்கையில் கலைக்குரிசில்சிவாஜி அப்பா செய்த சாதனைகளில் சில.
87 ஆம் வருடம் பல மலர்களில் வந்த சாதனைகளின் கையெழுத்தில் பதிவு செய்ததொகுப்பு இவை.http://uploads.tapatalk-cdn.com/20160619/d3a4516643c43103e701400aa21f6e32.jpg

இவைகள் பெங்களூர் ஜெயகுமாரின் கைவண்ணமா?

sivaa
20th June 2016, 07:09 AM
தமிழ்த்திரை உலக வரலாற்றில் முதல்முறையாக
மறு மறு வெளியீட்டடில் மாபெரும் சாதனை படைத்த
இணைந்த
75 வது நாள்


http://oi68.tinypic.com/34yrxhj.jpghttp://oi68.tinypic.com/2wn5pie.jpg

Gopal.s
20th June 2016, 08:10 AM
வாசு,

உனக்கு தெரியுமோ ,தெரியாதோ, எனக்கு இரு பெண்கள் பாடும் பாட்டுக்களில் அப்படி ஒரு மயக்கம். அதுவும் சுசிலா ஈஸ்வரி என்றால் கேட்கவே வேண்டாம்.(உனது மலர் கொடியிலே உச்சம்)

தமிழில் பல பாடல்கள். தோழியர் இல்லையென்றால் வளைகாப்பு, இல்லையென்றால் ஒரு நாயகனுக்காக இரு நாயகியர் என்று கணக்கு வழக்கில்ல்லாமல்.

நீலவானத்தில் இந்த பாடலை பலரிடம் சொல்லியிருக்கிறேன். எனக்கு படிக்கும் காலத்தில் நண்பன் அருள் என்று ஒருவன். நானும் அவனும் இந்த பாடலில் தோய்வோம் .

நாம் இந்த பாடலை பற்றி பேசியிருக்கிறோமா என்று நினைவில்லை.
என் மனம் புரிந்தது போல ,அற்புத எழுத்தில் என்னை குளிர்வித்திருக்கிறாய்.

இன்னும் ஒரு வருட காலம் என் சாபம், விமரிசன, குட்டுக்கள் ,திட்டுக்கள்,ஆகியவற்றிலிருந்து உனக்கு விலக்கு அளிக்க படுகிறது.
உனக்கு மட்டுமல்ல ,என் மனம் கவர் பதிவுகளை யார் போட்டாலும் இந்த சலுகை உண்டு(ராகவேந்தர் .உட்பட) அது ஒரு மாதமா, மூன்று மாதமா,ஓரிரு வருடங்களா என்பது,எவ்வளவு கவர்கிறது என்பதை பொறுத்தது.

என் எழுத்துக்களை போல் ,வந்தால் ஆயுட்கால தள்ளுபடியும் பரிசீலிக்க படும்.

JamesFague
20th June 2016, 10:06 AM
Courtesy: Dinamani

‘நட்சத்திர இயக்குநர்’ திருலோகசந்தர்!


சென்ற நூற்றாண்டு தமிழ் சினிமா படைப்பாளிகளில் ‘ஸ்டார் டைரக்டர்’ என்கிற அசாத்தியப் புகழுக்குரியவர் ஏ. சி. திருலோகசந்தர்.

தனது இயல்பான உயரம் மாதிரியே சாதனைகளின் உச்சம் தொட்ட ஏ. சி., ஜூன் 15 புதன் கிழமை அமரர் ஆனார்.

எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் நானும் ஒரு பெண், எம்.ஜி.ஆருடன் அன்பே வா, ஜெமினி கணேசனுடன் ராமு, சிவாஜியுடன் எண்ணற்ற வெற்றிச் சித்திரங்கள் என நேற்றைய கோடம்பாக்கத்தின் நான்கு தூண்களுடனும் கை கோர்த்து வாகை சூடிய ஒரே சாதனையாளர்!

கிருஷ்ணன் -பஞ்சு, பி.ஆர். பந்தலு, ஏ.பீம்சிங், கே.சங்கர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர்கள் எவராலும் நெருங்க இயலாத இலக்கை முதலும் கடைசியுமாக அடைந்தவர் திருலோகசந்தர் மாத்திரமே!

ஏவி.எம். தயாரிப்பான வீரத்திருமகன், திருலோக் இயக்கிய முதல் படம். 1962ல் வெளியானது. குமாரி என்கிற அத்தனை அறியப்படாத எம்.ஜி.ஆர். படத்தில் டைரக்டர் பத்மனாபன் என்பவரது உதவியாளராக திருலோகசந்தர் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். விஜயபுரி வீரன், பார்த்தால் பசி தீரும் ஆகியன அவரது கதைகள்.

ஆற்காட்டைச் சேர்ந்த வளமான குடும்பப் பிண்ணனியில் பிறந்தவர் திருலோகசந்தர். சுற்றத்தார் அனைவரும் திருலோக் ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் திருலோகசந்தர் பால பருவம் தொடங்கி ஒரு புத்தகப்புழுவாக, தீராத வாசிப்பாளனாக உருவானவர்.

கமர்ஷியல் டைரக்டர் என்கிற முத்திரை குத்தப்பட்டவர் என்றாலும், திருலோக் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்.

1963ல் நிற வேற்றுமையின் பாதகம், மற்றும் பெண் கல்வியை வலியுறுத்தி ஏவி.எம். நிறுவனத்துக்கு ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் கிடைக்கக் காரணமாக நின்ற நானும் ஒரு பெண்…

மாற்றுத் திறனாளிகளை அனுதாபத்துக்குரியவர்களாகவே எப்போதும் காட்டும் பயாஸ்கோப். அவ்வாறு இல்லாமல் ஊனமுற்ற இளம் பெண்ணின் குற்றம் குறைகளையும் முதன் முதலில் யதார்த்தமாக வெளிப்படுத்திய 1965ன் காக்கும் கரங்கள்...

1966ல் குஷியான காதலை இனிமையான பாடல்களோடு வண்ணத்தில் இதமாக வார்த்துத் தந்த அன்பே வா…

ஓர் ஊமைச் சிறுவனின் சோகத்தை உரத்துக் கூறி, மீண்டும் மற்றொரு வெள்ளிப்பதக்கத்தை தமிழ் சினிமாவுக்குத் தட்டி வந்த ராமு, முழு நீள திகில் மர்மப் படமாக வண்ணத்தில் அச்சுறுத்திய 1967ன் அதே கண்கள்…

ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப 1969ல் தேர்வான முதல் படம் தெய்வமகன், வளர்ப்பு மகளுக்காகவே வாழ்ந்து மடிந்த 1971ன் தன்னலமற்ற ரிக்ஷாக்கார பாபு, பிரிவினை பிரசாரங்கள் மீண்டும் தலை தூக்கிய 1973ல் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாரத விலாஸ், தாம்பத்ய வாழ்வின் தெய்வீகத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாகப் பறை சாற்றிய 1974ன் தீர்க்க சுமங்கலி, மற்றும் மகரிஷியின் கற்பனையை வெள்ளி விழா கொண்டாட வைத்த 1976ன் பத்ரகாளி என திருலோகசந்தரது கடுமையான உழைப்பில் விளைந்த அத்தனை வெற்றிப்படங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து திருலோக்கைப் போல் வெள்ளிவிழா கொண்டாடிய வெற்றிச் சித்திரங்களையும், ஆண்டு தவறாமல் நூறு நாள் படங்களையும் வழங்கிய இயக்குநர் இன்று வரை வெகு சொற்பம்.

தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கிலும் என்.டி.ராமாராவ் நடித்த ராமு படம் மூலம் வெள்ளி விழா இயக்குநராக வலம் வந்தவர்.

அந்நாளில் எம்.ஏ. பட்டத்துடன் தமிழ்த்திரையில் பங்காற்றிய ஒரே இயக்குநர்.

போதிய பள்ளிக் கல்வி அனுபவங்களின்றி நாடகம் மூலம் பட உலகுக்கு வந்த எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.ஆர். ராதா, எஸ். வி. சுப்பையா போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் முதுகலைப் பட்டதாரி இளைஞர் ஒருவர், தன் கொடியை உயர்த்திப் பிடித்தது அத்தனை சுலபமான காரியம் அல்ல என்பது இன்றைய கலையுலகினர் வரை எல்லாருக்கும் புரிந்த ஒன்று!

கமல் ஒருவர் தவிர அவரது காலத்தின் அத்தனை ஹீரோக்களும் ரஜினி உள்பட திருலோக்கினால் இயக்கப்பட்டிருக்கிறார்கள். நடிகைகளில் பானுமதி, வாணிஸ்ரீ போன்ற சிலரை மாத்திரம் திருலோக் டைரக்ட் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

கலைஞர்கள் மட்டுமல்லாது ஏவி. மெய்யப்பன் போன்ற ஸ்டுடியோ முதலாளிகளையும் தன் நியாயமான வாதத் திறமைகளால் மனமொத்துப் பணியாற்றச் செய்த பெருமை மிக்கவர் திருலோக்.

தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் திறமை மிக்க முன்னணி இயக்குநராக மிக நீண்ட காலம் ஜொலி ஜொலித்தவர் திருலோகசந்தர்.

பேசும் படம் சினிமா இதழ், தமிழ் சினிமா ரசிகர்கள் சங்கம் முதலிய அமைப்புகள் வருடம் தோறும் வெளியிட்ட மிகச் சிறந்த கலைஞர்களுக்கான தேர்வுப் பட்டியலில் கண்டிப்பாக திருலோகசந்தரின் இயக்கத்தில் நடித்தவர்கள் அதிகம் இடம் பெற்றிருப்பார்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை - எம்.ஜி.ஆர், திருவிளையாடல் - சிவாஜி இருவரில் ஒருவர் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று, பேசும் படம் வாசகர்கள் நினைத்திருந்தனர்.

பேசும் படம் மாற்றி யோசித்தது. காக்கும் கரங்கள் படத்தில் மிக வித்தியாசமாக டாக்டர் வேடத்தில் அருமையாக நடித்தார் என்று எஸ்.எஸ். ராஜேந்திரனை 1965ன் சிறந்த கலைஞராக அறிவித்தது.

காக்கும் கரங்கள் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டத் தரமான படம்.

சிவாஜிக்கு இணையாக தீர்க்க சுமங்கலி படத்தில் முத்துராமனுக்கும் நடிப்பில் புகழ் தேடித் தந்தவர். தனது இயக்கத்தில் சிவகுமாரையும் பத்ரகாளி படத்தில் சிறப்பாகப் பயன் படுத்தி வெள்ளி விழா நாயகனாக்கி மிகப் பெரிய பிரேக் தந்தவர்.

நானும் ஒரு பெண் - விஜயகுமாரி, ராமு- இரு மலர்கள்- தீர்க்க சுமங்கலி படங்களில் கே. ஆர். விஜயா, எங்கிருந்தோ வந்தாள்- அவன் தான் மனிதன் போன்ற சினிமாக்களில் ஜெயலலிதா, பாபு- அவள் ஆகியவற்றில் வெண்ணிற ஆடை நிர்மலா என்று பலருக்கும் தன் அசாத்திய உழைப்பால் சிறந்த நடிகை விருதும், மிகப் பெரிய திருப்புமுனையையும் தேடித் தந்தவர் திருலோகசந்தர்.

நாயக நாயகிகள் மட்டுமல்லாது நாகேஷ், வி.கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர். வாசு, மனோரமா உள்ளிட்ட நகைச்சுவை கலைஞர்களையும் முதன் முதலில் அழ வைத்து குணச்சித்திர வேடங்களில் பரிமளிக்கச் செய்தவர். டாக்டர் சிவா படத்தில் மனோரமாவை வில்லியாகவும் நடிக்க வைத்திருக்கிறார்!

‘நானும் ஒரு பெண் படத்தில் நாகேஷின் சோக நடிப்பைப் பார்த்து விட்டு அவருக்காக சர்வர் சுந்தரம் கதையை எழுதினேன்’ என்று கே. பாலசந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.

*

1996ல் சுதேசமித்திரன் நாளிதழின் வார பங்களிப்பான இளையமித்திரன் பத்திரிகைக்காகவும், 2005ல் ஜூன் 21ல் எனது ‘சிவாஜி’- நடிகர் முதல் திலகம் வரை நூலுக்காகவும் இரு முறை திருலோகசந்தரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.

23 வாரங்களைக் கடந்து ஓடிய அன்பே வா படத்தின் 100வது நாள் விழா. மேடையில் பேசிய எம்.ஜி.ஆர்.

‘அன்பே வா வெற்றிக்கு முழு காரணம் ஏ.சி. திருலோகசந்தர். இது ஒரு டைரக்டரின் படம்’ என்றார் மனம் திறந்து.

மக்கள் திலகத்தை அதிகமாக இயக்கிய ப. நீலகண்டனையோ, எம்.ஏ. திருமுகத்தையோ,கே. சங்கரையோ கூட அவர் அப்படிப் பாராட்டி இருக்கிறாரா என்பது தெரியாது.

திருலோகசந்தரையும் தனது காம்பவுண்டுக்குள் வற்புறுத்தி அழைத்தார் எம்.ஜி.ஆர். ஆனால் திருலோக் பராசக்தி காலத்திலிருந்து சிவாஜியின் பரம ரசிகனாக வளர்ந்தவர். கடைசி வரையில் கவனம் சிதறாமல் சிவாஜி யூனிட்டிலேயே தங்கி விட்டார்.

நடிகர் திலகத்தின் மிக அதிகமான படங்களை இயக்கும் வாய்ப்பு திருலோகசந்தருக்குக் கிடைத்தது. அவற்றின் மொத்த எண்ணிக்கை இருபது. அதில் பெரும் பாலானவை வசூல் சித்திரங்கள். நடிப்பின் இமயமான சிவாஜியை இயக்குவது சிரமமான வேலையா என்று உங்களில் யாருக்காவது கேள்வி எழும்.

நிஜத்தில் வி.சி. கணேசன் எப்படிப்பட்டவர்? சிவாஜி காம்பினேஷனில் திருலோக் இயக்கிய படங்களை இன்றைய தலைமுறையினர் விரும்புவார்களா...? ஆகிய வினாக்களுக்கான விடைகள்...

மற்றும் நடிகர் திலகத்துடன் பணியாற்றும் போது நிகழ்ந்த சம்பவங்கள், சிவாஜிக்கும் திருலோக்குமான பூரிப்பு, இதர வருத்தம் கலந்த தோழமையின் அத்தியாயங்கள் உங்களுக்காக:

‘தமிழ்நாட்டின் பெருமைகளில் எனது நண்பர் சிவாஜியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். பாரதி, தாகூர் மாதிரி நடிப்புக்கலைக்கு சிவாஜி!

சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி மாதிரி மெகா ஸ்டார்ஸ் நடிக்க என்னோட கதை படமாகுது. பார்த்தால் பசி தீரும். முதல் நாள் பூஜையில நான் இல்லை.

ஒருநாள் கும்பலோட கும்பலா நின்னு அந்த சினிமா ஷூட்டிங்கைப் பார்த்தேன். அப்ப நான் ஏவி.எம்மோட வீரத்திருமகன் படத்தை இயக்கிக்கொண்டு இருந்தேன்.

சிவாஜிக்கு என்னை அறிமுகப்படுத்தற வாய்ப்பு ஆரம்பத்துல அமையல. இதுல யாரைக் குத்தம் சொல்றது? இப்ப யோசிச்சா என்னோட தவறாவும் இருக்கலாம்னு தோணுது.

‘திருலோக்கை வெச்சி சினிமா எடுக்கிறதா இருந்தா உங்களுக்கு ஃபைனான்ஸ் பண்றேன்னு வேலாயுதம் நாயர் (கே.ஆர். விஜயாவின் கணவர்) சொன்னதா கே.பாலாஜி எங்கிட்ட தெரிவிச்சார். கே.பாலாஜி என்னோட பால்ய நண்பர்.

ஏவி.எம். காம்பவுண்ட்ல அதுவரைக்கும் இருந்த நான், கே. பாலாஜிக்காக வெளியே வந்தேன்.

சிவாஜியை நான் இயக்கிய முதல் படம் கே. பாலாஜியின் தயாரிப்பான தங்கை. அது ஒரு பழைய இந்தி சினிமா. இதுல நான் நடிக்கணுமான்னு கேட்டார் சிவாஜி.

சிவாஜி கணேசனுக்கு அது செகண்ட் ரவுண்ட்னு கூட சொல்லலாம். குடும்பக்கதைகளைக் கடந்து ஏ.பி. நாகராஜனோட பக்தி சினிமாக்கள்ள பிஸியா இருந்த நேரம்.

தங்கை இந்திப் படத்தின் மூலக்கதையை மட்டும் வெச்சிக்கிட்டு புதுசா ஒரு திரைக்கதை எழுதினேன். சிவாஜி வீட்டுக்குக் கதை சொல்லப் போனோம். அன்னிக்கே நாங்க இணைஞ்சிட்டோம்.

நடிகர் திலகம் சிகரெட்டை ஒவ்வொண்ணா பத்த வெச்சிக்கிட்டே நான் கதை சொல்றதை கேட்டுக்கிட்டு இருந்தார்.

‘நீங்க சிகரெட் பிடிக்கறதைப் பார்க்கப் பார்க்க எனக்கும் அதனோட தாக்கம் ஜாஸ்தியாயிட்டு வருது. நானும் சிகரெட் பிடிக்கணும் போலிருக்கு. தப்பா எடுத்துக்காதீங்க. இந்த வீட்ல உங்க முன்னால சிகரெட் பிடிக்கத் தயக்கமா இருக்கு. நீங்க அனுமதிச்சா நான் கொஞ்சம் வெளியிலே நின்னு புகைச்சிட்டு வரேன்னு’ சொன்னேன்.

‘ஸாரி... எனக்குத் தெரியாது திருலோக். நீங்களும் சிகரெட் பிடிப்பீங்கண்ணு. தெரிஞ்சிருந்தா நானே கொடுத்திருப்பேனே... நீங்க இங்கேயே என் எதிர்லயே சிகரெட் பிடிக்கலாம்.’னார் சிவாஜி.

நடிகர் திலகம் எதிரில் யாரும் சிகரெட் பிடிக்காத காலம். நான் கதை சொன்ன விதம் பிடிச்சிப் போய் என்னையே நடிச்சிக் காட்டணும்னு வற்புறுத்தினார்.

‘உனக்குப் புதுசு புதுசா ஏதாவது தோணலாம். நான் அதைக் கெட்டியா பிடிச்சிக்கலாம் இல்லையா’ன்னார்.

ரசிகர்கள் திரையில் அதுவரையில் பார்த்திராத மாறுபட்ட தோற்றத்துல, சிவாஜி கூடுதல் இளமையோட தங்கை படத்துல ஒரு ஆக்ஷன் ஹீரோவா முதன் முதலா ஜொலிச்சார்.

தங்கை, நடிகர் திலகத்தோட படங்கள்ல ஒரு ட்ரெண்ட் செட்டரா அமைஞ்சது. தங்கையோட வெற்றிகரமான ஓட்டத்தையும் வசூலையும் பார்த்துட்டு, தங்கச்சுரங்கம் சினிமால அவரை ஜேம்ஸ்பாண்ட் ஆகவும் நடிக்க வெச்சார் டைரக்டர் ராமண்ணா.

என் தம்பி, திருடன்னு தொடர்ந்து சக்ஸஸ் கொடுத்தோம். சிவாஜியோட சினிமாவுக்கு ’திருடன்’ங்கிற ற டைட்டிலான்னு எதிர்ப்பு கிளம்புச்சு.

கதைக்குப் பொருத்தமா இருந்ததால் அந்த பேர் வெச்சேன். நான் பண்றது கரெக்ட்டுன்னா பயம் வராது எனக்கு. எங்கிருந்தோ வந்தாள் படத்துக்குக் கூட ஆரம்பத்துல பைத்தியக்காரன்ற டைட்டிலை வெச்சோம். சிவாஜி ஜாஸ்தி செண்டிமெண்ட் பார்க்கமாட்டார்.

நல்ல படமா அமைஞ்சும் எங்க மாமா மகத்தான வெற்றியை அடையல. காரணம் சிவாஜிங்கிற இமயத்துக்குரிய அழுத்தம், கதையிலயும் கேரக்டர்லயும் இன்னும் தேவைன்னு ரசிகர்கள் நினைச்சாங்க.

சிவாஜியை நான் சார்னும் அண்ணான்னும் கூப்பிடுவேன். அவர் என்னை திருலோக்னுவார். எங்களுக்குள்ள பர்ஸ்ட் கிளாஸ் இண்டிமஸி இருந்தது.

தெய்வமகன்ல சிவாஜி எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டார். ரொம்பவும் சிரமமான வேஷம். அதோடு கூட மூணு ரோல் வேறே. ஒவ்வொன்னிலும் ஒவ்வொரு மாதிரி மேக் அப்.

இருவரும் ஒரு சேலஞ்சா அதை எடுத்துக்கிட்டோம். தன்னோட சிறப்பான வசனங்களால ஓவர் ஸ்ட்ரெயின் கொடுப்பார் டயலாக் ரைட்டர் ஆரூர் தாஸ். நானும் சிவாஜியை கசக்கிப் பிழிஞ்சி வேலை வாங்கினேன்னும் சொல்லலாம்.

சிவாஜியோட ஒரு பக்க கன்னத்துல மட்டும் கோரமான மேக் அப் போடச் சொன்னேன். ரெண்டு சைடுலயும் அப்படி மேக் அப் பண்ணினா, அண்ணாவோட மறு பக்கக் கன்னம் எமோஷனல் சீன்ஸ்ல அற்புதமா துடி துடிக்கிறதைக் காட்ட முடியாதேன்ற செல்ஃபிஷ்னெஸ்... சிவாஜி ரசிகனா என்னோட பேராசைன்னும் எடுத்துக்கலாம்.

இப்ப மாதிரி டெக்னிகல் வேல்யூஸ் எதுவுமே இல்லாத காலம். முகத்தோட பயங்கரம் வெளிப்பட, செலுலாயிடு, முட்டை ரெண்டையும் உருக்கி அந்த பேஸ்டை கன்னத்துல பூசிக்கிட்டார் சிவாஜி.

சீன் எடுத்து முடிஞ்சதும் அந்த எக் பேஸ்டை சுடு தண்ணில கழுவி, கொஞ்ச நேரம் ஆன பின்னாலதான் சின்ன சிவாஜி ரெடியாக முடியும்.

இல்லன்னா முகத்துல ஏற்கனவே கவ்விக்கிட்டிருந்த முட்டைப்பத்தோட நாத்தமும் போகாது. ஒரு சைடு முகம் சுருக்கமாவே காமிரால தெரியும்.

சிவாஜிக்கு தெய்வமகன் படம் மட்டும் தானா? ஒரே நாள்ள மூணு நாலு படம் கூட ஆக்ட் பண்ணுவார். எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிக்கிட்டு தெய்வமகன்ல கூடுதலா அக்கறை காட்டி நடிச்சார்.

படத்துல ரொம்ப முக்கியமானது மூணு சிவாஜியும் ஒரே நேரத்துல ஒண்ணா ஸ்கிரீன்ல தெரியற சீன்.

அந்தக் கட்டத்துக்காக கண்ணனாக வரும் பாதிக்கப்பட்ட சிவாஜி, தன் அப்பா சிவாஜியிடம் நியாயம் கேட்கிற மாதிரி ஏகப்பட்ட டயலாக்ஸ் எழுதினார் ஆரூர்தாஸ்.

அத்தனையும் அமிர்தம்னு சொல்லலாம்.

‘குட்டி அழகா இல்லேங்கிறதால மான் அதை விட்டுட்டுப் போனதாகவோ, மலர் அழகா இல்லேங்குறதுக்காக கொடி அதை உதிர்த்து விட்டதாகவோ நான் கதைகள்ள கூட படிச்சதில்லயே’ன்னு

ரெண்டு சிவாஜியும் மாறி மாறி ஏக் தம்ல நிறைய பேச வேண்டியிருந்துச்சு.

அண்ணா ரொம்பவே டென்ஷனாயிட்டார்.

‘ஏன் என்னை ஸ்ட்ரைன் பண்ண வைக்கிறீங்கன்னு...’ கோபமா கேட்டார்.

காட்சியோட முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னதும் ஒரே டேக்ல அவ்வளவு வசனத்தையும் பேசி வழக்கம் போல் கைத்தட்டல் வாங்கினார்.

முதன் முதலா சிவாஜிக்கு நிகரா மேஜருக்கும் ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கொடுத்தேன். நான் அடிச்சிக் காமிக்கிறேன் பாருன்னார் சிவாஜி. ரெண்டு பேரும் மீட் பண்ற காட்சிகள்ல பலத்த நடிப்புப் போட்டி இருந்துச்சு.

தெய்வமகன் வங்காள மூலக்கதையை அடிப்படையாக் கொண்ட படம். தமிழ் தவிர மத்த இந்தி, கன்னட மொழிகள்ல எடுத்தபோது தெய்வமகன் தோல்வி அடைஞ்சது.

தமிழில் மட்டும் பிரமாதமான வெற்றி அடைய ஒரே காரணம் சிவாஜி!

சிவாஜியும் சில சமயம் சோதிப்பார். சீண்டிப் பார்த்தா எப்படி இருக்காங்கன்னு பார்க்கறேன்னுவார். வெளியில கெட்டவன் வேஷம் போடுவார்.ஆரம்பத்துல பழகும் போது கடுமை இருக்கும். அது ஒரு போர்வை.

சிவாஜி ஒரு பலாப்பழம். தொடக்கத்துல முள் இறுகின தோல். அடுத்து அதுக்குள்ள வழுக்குறத் தன்மையுள்ள பலாச்சுளை இருக்கும். சிவாஜியும் அதே மாதிரி மனுஷர். பழகப் பழகத்தான் இனிப்பாரு. படாத பாடு பட்டு சினிமால முன்னுக்கு வந்ததால எப்பவும் எச்சரிக்கையா இருப்பார்.

எங்கிருந்தோ வந்தாள் படத்துல ஆரம்பத்துல சிவாஜியோட பத்மினி நடிச்சாங்க. அவங்க அமெரிக்கா போக வேண்டி இருந்ததால் தொடர்ந்து நடிக்க முடியல.

இவங்களதான் தனக்கு ஹீரோயினா நடிக்க வைக்கணும்னு சிவாஜி சொல்லவே மாட்டார். என் மேலே ரொம்ப நம்பிக்கை உண்டு அவருக்கு.

பத்மினி இடத்துல அப்பறம் யார் கதாநாயகின்னு குழப்பம் வந்தது. அப்ப டான்ஸ்ல புகழ் பெற்ற ஒரே இளம் ஹீரோயின் ஜெயலலிதா. ரொம்பவும் பிசியா இருந்த ஜெயலலிதாவோட கால்ஷீட்டை கஷ்டப்பட்டு கே. பாலாஜி வாங்கினார்.

க்ளைமாக்ஸ் முழுக்க முழுக்க ஜெயலலிதாவோட பெர்பாமன்ஸை நம்பி திரைக்கதை எழுதினேன். சிவாஜியும் அதை என்கரேஜ் பண்ணார். ரொம்ப அற்புதமா நடிச்சாங்க ஜெயலலிதா. எப்பவும் எனக்குப் பேர் சொல்ற படமா எங்கிருந்தோ வந்தாள் அமைஞ்சது.

சிவாஜி காம்பினேஷன்ல நான் வொர்க் பண்ணிய படங்கள்ள எனக்கு ரொம்பப் பிடிச்ச படம் பாபு. அதில் சிவாஜி நடிப்பும் பாத்திரப்படைப்பும் எப்பவும் பிடிக்கும்.

பாபு சப்ஜெக்ட் முடிவானதுமே என்னோட சினி பாரத் பேனர்ல முதல் படமா அதை எடுக்கத் தீர்மானிச்சேன். கதையைக் கேட்டவங்க அழுகைப் படம், ஓடுமான்னு பயமுறுத்தினாங்க.

பாபுவா சிவாஜியைத் தவிர வேற யாரையும் நான் சிந்திக்கவே இல்ல. பாபுவா நடிக்கப் பலர் கிடைக்கலாம். பாபுவா வாழ்ந்து காட்ட நடிகர் திலகம் ஒருத்தரால் மட்டுமே முடியும்னு மனசார நம்பினேன். என் கணிப்பு சரின்னு ஆனந்த விகடன் விமரிசனம் சொல்லுச்சு.

முதல் பாரால ‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்னு சொல்றது கூட சிவாஜியோட அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டா இருக்க முடியாது. அப்படியோர் அருமையான நடிப்பு!’ ன்னு முதல் பாராலயே ஆச்சரியக்குறி போட்டுச்சு. கடைசி வரியில, பாபுல சிவாஜியின் நடிப்பு தங்க விளக்குன்னு குறிப்பிட்டுச்சு.

நான் அழுது கொண்டே சிரித்தேன். சிவாஜியின் நடிப்பு என்னை அழ வைத்தது. படத்தின் வெற்றி என்னைச் சிரிக்க வைத்தது.

மிகப் பெரிய மாஸ் ஹீரோவான சிவாஜிக்கு அதுல ஜோடியே கிடையாது. டான்ஸ், டூயட் எதுவும் இல்ல. நாயகிக்குப் பதிலா சவுகார் ஜானகிக்கு முக்கிய வேஷம் கொடுத்தேன்.

என் படங்கள்ள சவுகார் அதிகம் நடிச்சதில்ல. பாபுல மட்டும்தான் ஆக்ட் பண்ணாங்கன்னு நினைக்கிறேன்.

‘வழக்கமான விதவை ரோல்னு நான் உங்களை தப்பா எடை போட்டுட்டேன். எப்பேர்ப்பட்ட கேரக்டர் எனக்குக் கொடுத்திருக்கீங்க’ன்னு பாபு படம் பார்த்துட்டு சவுகார் என்னைப் பாராட்டி பேசினாங்க.

ஜெமினி எஸ்.எஸ். வாசன் சார் கிட்டே ஒரு கதையை அன்பே வா சமயத்துல சொன்னேன்.

‘இந்த நேரத்துக்கு மிக மிக அவசியமான கதை. பெரிய விஷயத்தைச் சொல்லப் போகிறீர்கள். இதைப் படமாக்க நான் உதவுகிறேன். வழக்கம் போல் மெகா ஸ்டார்களைப் போட்டு விடாதீர்கள். சிறிய கலைஞர்களைப் போட்டு எடுங்கள்’ என்றார்.

சில ஆண்டுகளில் அவர் அமரர் ஆகி விட்டார். நான் வாசன் அவர்களிடம் சொன்ன சப்ஜெக்ட், பாரத விலாஸ்.

பாபு தந்த உற்சாகத்தில் உடனே அதைப் படமாக்கினேன். அருமையான கேரக்டர்களில் பெரிய நடிகர்களையும், வாரிசுகளாக இளம் நடிகர்கள் சிவகுமார், சசிகுமார், ஜெயசித்ரா, ஜெய்சுதா ஆகியோரைப் பயன்படுத்திக்கொண்டேன்.

தேசிய ஒருமைப்பாட்டை முதன் முதலில் கலரில் சொல்லும் படமாக பாரத விலாஸ் அமைந்தது. அதைப் பாமர மக்களுக்கும் உணர்த்தற மாதிரி சஞ்சீவ் குமார், ஏ. நாகேஸ்வர ராவ், மது என மற்ற மொழி ஸ்டார்ஸையும் கெளரவ வேடத்தில் நடிக்கவைத்தேன்.

வாணிஸ்ரீயும் அப்ப சிவாஜிக்கு ஈடு கொடுத்து பிரமாதமா நடிச்சுட்டு வந்தாங்க. அவங்க ரெண்டு பேரையும் வெச்சு பம்பாய் பாபுன்னு ஒரு படம் ஆரம்பிச்சோம். நின்னு போச்சு. வாணிஸ்ரீயை டைரக்ட் பண்ற வாய்ப்பு இல்லாம போயிடுச்சு.

சிவாஜி-ஜெயலலிதா காம்பினேஷன்ல நான் வேலை செஞ்ச கடைசி படம் அவன் தான் மனிதன். சிவாஜியோட 175வது சினிமாவா வந்தது. இருபது வாரம் போச்சு. சிவாஜி அண்ணா திருப்தியா நடிச்ச படம். அதுல அருமையான ரோல் அவருக்கு.

‘அந்த ஏழு ஜென்மங்கள்’னு சிவாஜிக்காக ஒரு கதை தயார் பண்ணோம். ஒவ்வொரு ஜென்மத்துலயும் சிவாஜி என்னவா இருந்தார்னு டீரிட்மென்ட் எழுதினோம். சிவாஜி ரொம்ப பிசியா இருந்ததால படமாக்க முடியல.

நான் சிவாஜி அண்ணாவோட அதிகப் படங்களை இயக்கி இருக்கேன்கிற பெருமை கிடைச்சிருக்கு. நீங்க நம்ப முடியாத ஒரு விஷயத்தை இப்பச் சொல்றேன். அவை எதுக்குமே அவர் எனக்காக சிபாரிசு பண்ணதே இல்ல. இன்னமும் நம்ப முடியலியா?

சிவாஜி புரொடக்ஷன்ஸ் எத்தனையோ படங்களை இதுவரைக்கும் சக்ஸஸ்புஃல்லா எடுத்துருக்காங்க. அவங்க கம்பெனி தயாரிச்ச எந்த சினிமாவையும் நான் இயக்கியதில்லை. போதுமா!

எனக்கும் சிவாஜிக்குமான நட்பு எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது.

சிவாஜின்னா ஓவர் ஆக்டிங். இன்னிக்கு உள்ள ஆடியன்ஸ் அண்ணனை விரும்ப மாட்டாங்கன்னு தப்பான அபிப்ராயம் இருக்கு.

அவரும் நானும் கொடுத்த படங்கள் இப்பவும் பார்க்கறதுக்குப் புதுசாவும் சிறப்பாவும் இருக்கு. அப்படியில்லன்னா பிரைவேட் சேனல்கள்ல தெய்வ மகனையே ரிபீட் பண்ணுவாங்களா...?

சினிமா என்பது அசாதாரணமான ஒண்ணு. ரெண்டரை மணி நேரம் ஓடற படத்துல நம்மை பாதிக்கிற விஷயம் ஏதாச்சும் இருந்தா மட்டுமே ஜனங்க மூவி பார்ப்பாங்க. படமும் நூறு நாள் ஓடும்.

பைலட் பிரேம்நாத், இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பு. தமிழ்நாட்டை விடவும் சிலோன்ல வருஷக்கணக்குல தொடர்ந்து ஓடினதா ரசிகர்களோட புள்ளி விவரம் சொல்லுது.

‘மெழுகு பொம்மைகள்’ என்கிற பேர்ல சச்சுவும்- ஏ.ஆர். எஸ்ஸூம் நடிச்சு ஓஹோன்னு நடந்த டிராமாவோட மூலக் கற்பனை பைலட் பிரேம்நாத்.

அதுல சிவாஜியும் ஸ்ரீதேவியும் அப்பா - மகளா நடிச்சாங்க. தன் குழந்தைகள்ல ஏதோ ஒண்ணு மட்டும் தனக்குப் பொறந்தது இல்லன்னு சிவாஜிக்குத் தெரிய வரும்போது ஏற்படற விளைவுதான் திரைக்கதை.

‘ஊட்டமான கதையை டிராமாட்டிக்காகச் செய்வதில் திருலோகசந்தர் எக்ஸ்பர்ட். சுவையான முடிவு. எப்போதோ ஒரு முறை மட்டுமே சந்திக்க முடிகிற சாதனை!’

அப்படின்னு குமுதம் பைலட் பிரேம்நாத் விமரிசனத்துல என்னைப் பாராட்டி எழுதுச்சு. முதன் முதலா 1978 தீபாவளிக்கு ஒரு டஜனுக்கும் மேலான படங்கள் ரிலீஸ் ஆச்சு. பலத்த போட்டிக்கு நடுவுல நானும் சிவாஜியும் எப்பவும் போல ஜெயிச்சுக் காட்டினோம்.

இரு மலர்கள், எங்கிருந்தோ வந்தாள், பாபு, விஸ்வ ரூபம்னு நானும் சிவாஜியும் சேர்ந்து பண்ணது தீபாவளி ரேசுல நூறு நாள் ஓடியிருக்கு.

சிவாஜியை நான் கடைசியா டைரக்ட் பண்ண படம், அன்புள்ள அப்பா. 1987 மே-ல வந்தது. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான இயல்பான பாசத்தை அதுல காட்டினோம். நதியா அப்ப ரொம்ப பாப்புலர். அவங்க பேர்ல அன்னிக்கு விக்காத பொருளே கிடையாது.சிவாஜி மகளா நதியா நல்லா நடிச்சுது.

கறந்த பால் மாதிரி கற்பனையே கலக்காம எனக்கும் என்னோட ஒரே பொண்ணுக்குமான அன்றாட அன்னியோன்யமே அன்புள்ள அப்பா. தினமும் என் வீட்ல நடந்த கதை. ஏவி.எம்.தயாரிச்சும் ஓஹோன்னு போகல. யதார்த்தத்துல நடக்கறது ஸ்கிரீன்ல ஓடாது. இயல்பை மீறிய ஒரு விஷயத்தைத்தான் ஜனங்க எதிர்பார்க்கிறாங்க.

திருலோக் படங்கள்ள பெரும்பாலானவை ரீமேக்குன்னு சொல்றாங்க. ரீமேக் தப்புன்னு யார் சொன்னது? இன்னிக்கு வரை தமிழகக் காப்பியங்கள், இலக்கியங்கள்ள இரவல் இல்லையா?

இங்கிலீஷ் லிட்டரேச்சரோட பாதிப்பு நம்ம ஊரு ரைட்டர்ஸ் கிட்டே அடியோட கிடையாதா?

என்னைச் சிறிது கூட உறுத்தாத எந்த ரீமேக் சப்ஜெக்ட்களையும் நான் டைரக்ட் பண்ண ஒத்துக்க மாட்டேன். நான் அக்செப்ட் பண்ண ஃபிலிம்களை விடவும் வேணாம்னு தள்ளினது ஜாஸ்தி.’ - ஏ.சி. திருலோகசந்தர்.

திருலோகசந்தர் காலத்தில் சினிமா செட்டுக்குக் கொண்டு வந்து நூல்களைத் தொடர்ந்து வாசித்து, திருலோக்குடன் படித்த புத்தகங்கள் குறித்து விவாதித்து, ஒத்த ரசனையோடு வலம் வந்த நட்சத்திரத்தின் பெயர் ஜெயலலிதா!

டைரக்டர்களில் திருலோக், நடிகைகளில் ஜெயலலிதா போல் உலகின் எண்ணற்றத் தலை சிறந்த நூல்களை வாசித்த சினிமாகாரர்கள் அப்போது எவரும் கிடையாது.

1969 -தெய்வமகன், 1970 -எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள் 1972 - தர்மம் எங்கே? 1975- அவன் தான் மனிதன் என சிவாஜி- திருலோக் கூட்டணியில் அதிக பட்சமாக ஐந்து படங்களில் பங்கேற்ற ஒரே ஹீரோயின் ஜெயலலிதா!

விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே. வி. மகாதேவன், ஆர். சுதர்சனம் வேதா, சங்கர் கணேஷ், இளையராஜா எனத் தன்னுடன் பணியாற்றிய ஒவ்வொரு இசை அமைப்பாளரிடமிருந்தும் இனிய சூப்பர் ஹிட் பாடல்களைக் கேட்டு வாங்கும் வல்லமை திருலோகசந்தருக்கு உரியது.

கவிஞர் வாலியின் பேனா முனையைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தி வந்தவர் ஏ. சி. திருலோகசந்தர். எம்.ஜி.ஆரால் அவ்வப்போது கை விடப்பட்டு, வாலி சரிகிற போதெல்லாம் திரைப்பாட்டில் அவரைச் சரித்திரம் படைக்க வைத்தவர் திருலோகசந்தர்.

திருலோக் - வாலி வெற்றிக் கூட்டணியில் ஞாயிறு என்பது கண்ணாக, இதோ எந்தன் தெய்வம், மல்லிகை என் மன்னன் மயங்கும், மலரே குறிஞ்சி மலரே, கண்ணன் என் கைக்குழந்தை தவிர அன்பே வா, இரு மலர்கள், உள்ளிட்ட ஏராளமான படங்களில் வாலியின் முழுமையான பங்களிப்பு அவர்களது நேசத்தைச் சொல்லும்.

கலையுலக மார்க்கண்டேயர் என அழைக்கப்படுகிற சிவகுமார், காக்கும் கரங்கள் படம் மூலம் ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் உருவானவர். திருடன் சினிமா மூலம் சசிகுமாரை அறிமுகப்படுத்தினார் திருலோக். அவள் வெற்றிச்சித்திரத்தில் அவரை ஹீரோவாகவும் ஆக்கினார்.

நானும் ஒரு பெண்- ஏவி.எம். ராஜன் நாயகனாக வலம் வரவும், அவள் படம் ஸ்ரீகாந்த்தை வில்லன் நடிகராக வெற்றி பெறச் செய்யவும் திருலோக்கின் உழைப்பு உதவியது.

டாக்டர் சிவா படத்தில் முதன் முதலாக திருலோக், தங்கை வேடத்தில் தோன்றச் செய்த ஜெயமாலினி பின்னாளில் கவர்ச்சியில் ஜொலித்து ‘ஜெகன் மோகினி’ ஆனார்.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ள ஒரே தமிழ்ப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம். திருலோக்கின் வெற்றிப் படைப்பான ‘தீர்க்க சுமங்கலி’-யில் மல்லிகையாக மணம் பரப்பி உதயமானவர்.

Russellxor
20th June 2016, 01:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0004_zpsnhgielh5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0004_zpsnhgielh5.jpg.html)



வேட்டி கட்டுவதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக வேட்டி கட்டுவார்கள்.
வேட்டி கட்டுதலில் ஒரு கம்பீரம் மிளிரும்.எல்லோருடைய வேட்டி கட்டலிலும் கம்பீரத்தை காண முடியாது.உதாரணத்திற்கு கிராமங்களில் வயல்களில் தோப்புகளில் வேலை செய்வோரைப் பார்த்திருக்கலாம்.அழுக்கா இருக்கும்வேட்டி கட்டலில் ஒரு பக்கம் தூக்கி கட்டி மறுபக்கம் இறக்கி கட்டி முக்கா காலுக்கு என்று விதவிதமாக வேட்டி கட்டியிருப்போரை பார்த்திருக்கலாம்.ஆனாலும் அவர்களின் வேட்டி கட்டலில் கம்பீரம் இருக்கும்.
சில வசதி படைத்த மனிதர்கள் தங்களுடைய வசதியை தங்களுடைய வேட்டிகளில் காண்பிப்பார்கள்.ஆனாலும் அதில் மிடுக்கு இருக்காது.


அரசியல் கறை வேட்டி கட்டியிருப்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும். அரசியல் கட்சிகள் மீது அபிமானம் இருக்க வேண்டியதுதான் அதறாக அவர்களின் கட்சிக்கொடியை வேஷ்டியில் காட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை.


வேட்டி கட்டுவது சிரமமானாலும் .. அது ஒரு தனி சுகம்தான் ... எப்போது உடுத்தினாலும் .. ஒரு பயத்தோடு தான் இருக்க வேண்டும் ..

வேட்டி கட்டுவது ஒரு புறமிருக்கட்டும்.அதை தூக்கி நடந்து செல்லும் போதுதான் சில அசௌகரியங்கள் தெரியும்.அது கட்டி நடந்து செல்பவர்களை விட அதை பார்ப்பவர்களுக்குத்தான் அதிகம் புரியும்.
வேட்டி ஒரு பக்கம் ஒதுங்கும்.அடிக்கடி தூக்கி தூக்கி கட்ட வேண்டும்.இடுப்பை சரி செய்துகொண்டே இருக்க வேண்டும்.

ஆனாலும்
இதை யெல்லாம் மீறி இங்கு
பெரியதேவர் வேட்டியை தூக்கக்கொண்டும்.,சரி செய்து கொண்டும் நடந்து செல்லும் அழகு இருக்கின்றதே. அதை என்னென்று சொல்வது.
1992 ஆம் வருடம் தீபாவளி அன்று காலை 7மணிக்கு சென்னை தொலைக்காட்சியில் பார்த்த நிமிடத்திலிருந்து இந்த நிமிடம் வரை இந்த காட்சி ஒவ்வொருமுறையும் ரசிப்பை அதிகமாக்கிக்கொண்டேதானே இருக்கின்றது.

வேட்டியை இறக்கியபடிநடந்து வருபவர்
தரையில் உட் கார்ந்துசாப்பிடுபவர்களின் இலைகளை உரசி விடக்கூடாது என்பதிலும் ,அது ஒரு அனிச்சைச் செயல்
போலவும் சர்வ சாதாரணமாகத்தான் அந்த வேட்டியை தூக்கி கட்டியபடி நடந்துவருவார்.அது தான் எவ்வளவு அழகு.கம்பீரம்.

Russellxor
20th June 2016, 01:19 PM
இவைகள் பெங்களூர் ஜெயகுமாரின் கைவண்ணமா?
என் அண்ணன் திரு சிவாஜி வெற்றிவேல் (கோவை புறநகர் மாவட்ட சிவாஜி மன்ற தலைவர்)அவர்களின் பல நாள் உழைப்பு. பல்வேறு மலர்களில் வந்த சாதனைகளின் தொகுப்பு அவை.

Russellbpw
20th June 2016, 01:29 PM
Response in the form of Clarification to Mr. Akbar


இனிய நண்பர் திரு அக்பர்

முதற்க்கண் பத்திரிகை செய்தியை controversy இருப்பின் அதனை தணிக்கை செய்யாமல் பதிவு செய்திருக்ககூடாது என்பதில் நானும் உடன்படுகிறேன். எப்படி அதற்க்கு நான் support செய்யவில்லையோ அதைப்போலவே உங்களுடய பதிவும் பதிவில் நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்து எந்த காலத்திலும் ஏற்புடையதல்ல !

நடிகர் திலகம் அவர்கள் எந்த திரைப்படமாக இருந்தாலும் அதில் நாயகர் அவரே என்பது உலகறிந்த உண்மை. நாயகர் என்பது திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்தின் தன்மையை கொண்டதே அல்லாமல் வயதினை ....கதாநாயகியுடன் டூயட் பாடுவதாலோ... பல வில்லன்களுடன் சண்டைபோடுவதாலோ மட்டுமே ஒத்த விஷயமோ... பாவம் உங்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை!

10.07.1953....திரும்பிப்பார் திரைப்படத்தில் நரசிம்ம பாரதி படம் முழுதும் வருவார் என்பதற்காக அவர் கதாநாயகரா ? கதாபாத்திரத்தின் தன்மையை பார்க்கும்பொழுது அதில் எதிர்மறை கதாபாத்திரம் புனைந்து வரும் நடிகர் திலகமே நாயகர் 13-04-1954 இல் வெளியான நடிகர் திலகத்தின் 12வது திரைப்படம் அந்தநாள். திரைப்படம் முழுதும் வருபவர்தான் கதாநாயகர் என்றால் ஜாவர் சீதாராமன் அவர்கள் திரைப்படம் முழுதும் வருவார். கதாபாத்திரத்தின் தன்மைப்படி அதில் நாயகர் நடிகர் திலகமே ! .....அவர் திரையுலகில் நுழைந்த காலம் தொட்டு மறைந்த காலம் வரை அவர் தான் நாயகர் ! கதையின் தன்மையும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மட்டுமே யார் நாயகன் என்பதை நிர்ணயம் செய்பவை. துளிவிஷம், சம்பூர்ண ராமாயணம், குழந்தைகள் கண்ட குடியரசு , பெண்ணின் பெருமை, மற்றும் பல உதாரணங்களை கூற முடியும்..!


மசாலா படங்களை மிக அதிகமாக பார்க்கும் பலரும் இதை தான் நம்புகின்றனர் ! காரணம், மசாலா படங்கள் பொருத்தவரை கதாநாயகியருடன் யார் டூயட் பாடுகிறாரோ அவர்தான் நாயகர்...வில்லனுடன் யார் சண்டை போடுகிறாரோ அவர்தான் நாயகர் ! அந்த மசாலா திரைப்படங்களில் இருந்து நல்ல பாடல்கள், சண்டைகாட்சிகள், வில்லன் இவர்களை நீக்கி நாயகர்களை நடிக்கசொல்லுங்கள் பாப்போம் ! Field out ஆகிவிடுவார்கள் !

திரை உலகை பொருத்தவரை மசாலா படம் மட்டும் படம் அல்ல ! அது ஒரு genre !!! அவ்வளவுதான்...!!!

நடிகர் திலகம் 1952 முதல் பூவுலகம் விட்டு மறையும் வரை கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து அதனை விரும்பி ஏற்றுகொள்பவர். தமது திறமையை காட்ட, கடினமான கதாபாத்திரம் என்றாலும் அதனை சவாலாக எடுத்து செய்து காட்டி என்றுமே வெற்றிகண்டவர்.

4 டூயட் பாடல்கள் ..2 தத்துவ கொள்கை பாடல்கள்..4 சண்டை காட்சிகள்.நல்ல காமெடி..கவர்ச்சியான நாயகியர் இப்படி எல்லா பொழுதுபோக்கு அம்சத்தை அடக்கிகொண்டுள்ள, அரைத்த மாவையே அரைத்துகொண்டிருக்கும் படங்களில் ஒரு safezone இல் மட்டுமே நடிப்பவர் அல்ல !

பல கதாபாத்திரங்களில் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்துகொள்ள , அதனை திரையில் அவதரிக்க ஒரு தனி திறமை வேண்டும். அப்படி பட்ட நடிகர்களால் மட்டுமே எல்லா கதாபாத்திரத்திலும் நடித்து, நடித்ததோடு மட்டும் அல்லாமல் திறமையை மற்றவர் பாராட்டும்வண்ணம் நடந்துகொண்டு அந்த திரைப்படத்தை அவருக்காக மட்டுமே வெற்றி பெற்றது என்கின்ற நிலையில் கொண்டுவந்தது நடிகர் திலகம் மட்டுமே செய்த தனிப்பெரும் சாதனை !

வேறு எவரும் இதனை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது !

பாடல் இல்லாத படங்கள் கூட நடிகர் திலகம் நடிப்பால் பெருவெற்றி பெற்றுள்ளது ! டூயட் இல்லாத படங்கள் கூட தனது நடிப்பால் பிரம்மாண்ட வெற்றிகண்டவர் நடிகர் திலகம் ஒருவரே.....படம் முழுதும் சோகமாக இருந்தாலும்...ஒரு சண்டை காட்சிகூட இல்லாமல் இருந்தாலும் ...ஜனரஞ்சகம் கடுகளவு இல்லாமல் இருந்தாலும் தனது நடிப்பு என்ற ஒரு விஷயத்தை மட்டுமே கொண்டு மதோன்னத வெற்றி தொடர்ச்சியாக கண்டவர் நடிகர் திலகம் மட்டுமே ...!!!

கோபத்தால் நீங்கள் என்ன எழுதினாலும் .....அது உண்மை அல்ல என்பதை அனைவரும் அறிவர் ...ஏன் நீங்களே அறிவீர்கள் !

நீங்கள் உதாரணம் சொன்ன படங்கள் ....அதில் நாயகத்தன்மை கொண்ட கதாபாத்திரம் நடிகர் திலகம் ஏற்ற கதாபாத்திரங்கள் !

தேவர் மகன்....திரு கமல் அவர்கள் நடிகர் திலகம் இதில் நடிக்கவில்லை என்றால் இந்த படமே எடுக்கபோவதில்லை என்று அழுத்தமாக கூறியதால் நடிகர் திலகம் உடல் சரியில்லாத நிலையில் திரு கமலுக்காக செய்துகொடுத்த படம். கதையின் கரு...கதாபாத்திரம் ....தேவர் இல்லை என்றால்..தேவருக்கு நிகழும் நிகழ்வு நிகழவில்லை என்றால்.. மகனுக்கு வேலை இல்லை என்பது அனைவரும் ஒத்துகொள்வர்..நீங்கள் நீங்கலாக !

படிக்காதவன் திரு ரஜினிகாந்துடன் ! - வெளிவந்த ஆண்டு 1985 - இந்த ஆண்டில் நடிகர் திலகம் அவர்கள் நடித்த படங்கள் மொத்தம் 8 திரைப்படங்கள் ..அதாவது சராசரி 45 நாட்களுக்கு ஒரு நடிகர் திலகத்தின் புதிய திரைப்படம் வெளிவந்துள்ளது !
படிக்காதவன் - தொடக்கம் ...இடைவேளை ....க்ளைமாக்ஸ் மூன்று முக்கியகட்டங்களிலும் நடிகர் திலகம் அவர்கள் கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்ட நாயகர் வேடம் ! புதிய நடிகர்கள்....இளைய நடிகர்கள் ...புதிய மாற்றங்கள் என்ன தமிழ் உலகை ஆக்ரமித்தாலும், நடிகர் திலகம் அவர்களுடைய market 1952 முதல் perfectly intact என்பது இதில் இருந்து நிரூபணம் இந்த வருடமும் !

படையப்பா....கமலுடன் தேவர் மகன் செய்தவுடன்...திரு ரஜினிக்கும் நடிகர் திலகம் வைத்து படம் செய்யவேண்டும் என்று தோன்றியதன் பலன்...படையப்பா ! படையப்பா படம் பாருங்கள்....நடிகர் திலகம் மறையும் காட்சி யின் கரு கிட்டத்தட்ட தேவர் மகன் சாயலில் இருக்கும் ! படையப்பா படத்தின் முடிச்சு நடிகர் திலகம் கதாபாத்திரம் ! பிறகு நடக்கும் சம்பவங்கள் பழிவாங்கும் படலங்கள்.....படையப்பாவில் பிரபலமான தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகர் திலகம் அவர்கள் அதில் வாங்கிய சம்பளமாக எழுதப்பட்ட தொகை ருபாய் ஒரு கோடி ! எந்த துணை நடிகருக்கு உலக திரைஉலகில் ஒரு கோடி சம்பளம் கொடுத்தார்கள் என்று முடிந்தால் விசாரித்து சொல்லுங்கள் !

தேவர் மகன் மற்றும் படையப்பா - வயது என்ற வரம்பில் நாயகன் என்று நினைபவர்கள், இந்த கதையில் தம்முடைய நாயகதன்மையை காட்டுவது நடிகர் திலகம் அவர்களுடைய காட்சிகளுக்கு பின்பே !

அடுத்து சத்யராஜ் புதியவானம் - rv உதயகுமார் மற்றும் rm வீரப்பன் நடிகர் திலகம் தான் இந்த கதாபாத்திரத்தை செய்யவேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், அப்போதும்...நடிகர் திலகம் உதயகுமாரிடம் , ராம வீரப்பன் அவர்கள் என்னை வைத்து படம் எடுக்கமாடாரே அவருக்கு தெரியுமா அவரிடம் அனுமதி கேடீர்களா என்று கேள்வி எழுப்பியபோது அவர்தான் முதலில் உங்கள் பெயரை உரைத்தவர் என்று கூறி சம்மதம் பெற்றவர் உதயகுமார் !

சத்யா மூவீஸ் நிறுவனம் தான் நடிகர் திலகம் அவர்களை அணுகியதே தவிர நடிகர் திலகம் எந்தகாலத்திலும் எந்த பட கம்பனிகளையும் அணுகியதில்லை !

ஜல்லிக்கட்டு - அனைவருக்குமே தெரியும் இதில் நாயகர் நடிகர் திலகம் தான் என்று ...கதாபாத்திரத்தின் தன்மையில் சத்யராஜ் கதாபாத்திரம் ஒரு executionist ! அவ்வளவுதான் !

ராஜா மரியாதை - 1987 - 1985 இல் 8 படங்களில் நாயகராக வலம் வந்த நடிகர் திலகம் 1987 இல் 10 படங்களில் நாயகராக வலம் வந்தது ஊர் மற்றும் உலகம் அறிந்த விஷயம். சராசரி 36 நாட்களுக்கு நடிகர் திலகத்தின் ஒரு புதிய படம் வெளிவந்த நிலையில் ....1957, 1967, 1977, 1987 இலும் நடிகர் திலகம் மட்டுமே தயாரிப்பாளர்களின் முதல் தேர்வு என்பதை தெள்ளம் தெளிவாக விளங்குகிறது...பாவம் உங்களிடம் இந்த தகவல் இல்லை போலிருகிறது ..ஆகையால் நீங்கள் குருட்டாம்போக்கில் ஏதோ சொல்லவேண்டுமே என்று கூறிவிட்டீர்கள் !

மோகனுடன் - கிருஷ்ணன் வந்தான் - திரைப்பட வியாபாரத்திற்கு நடிகர் திலகம் வேண்டும் என்று தேங்காய் ஸ்ரீனிவாசன் அடம் பிடித்ததன் விளைவு.....ஐந்து பைசா கூட வாங்காமல் ஓசியில் நடித்து கொடுத்தது நடிகர் திலகம் அவர்கள் பெருந்தன்மை. படத்தின் கதையில் நடிகர் திலகம் கதாபாதிரத்திர்க்கு நிகழும் tragedy இல்லையென்றால் நீங்கள் கூறும் மோகனுக்கு திரைப்படத்தில் வேலையே இல்லை ! ஆக இதிலும் நடிகர் திலகமே central character !!!

மேலும்.....70 வயதை கடந்த ஒருவர் உங்களுடைய விருப்பப்படி கதாநாயகியருடன் மரத்தை சுற்றி டூயட்...10 முதல் 15 ஆட்களை அடித்து நொறுக்குவது ......இப்படியெல்லாம் நடிப்பது ஒருசிலரின் வாக்கின்படி "இயற்க்கை நடிப்பு" என்று பெருமை பேச தகுந்ததா ?
அதையும் கொஞ்சம் யோசியுங்கள் !

மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் பேசும்படம் அல்லது பொம்மை பேட்டியிலோ உரைத்ததைபோல "தங்கத்தின் விலை கூடலாம் குறையலாம்...ஆனால் தரத்தில் என்றும் தங்கம் தங்கமே ! "

rks

Russellxor
20th June 2016, 06:21 PM
http://uploads.tapatalk-cdn.com/20160620/318368f1a88fbd63d8f862dad6b0e189.jpg

Russellxor
20th June 2016, 06:23 PM
http://uploads.tapatalk-cdn.com/20160620/f76ad7ceb2bff65236f6ddfd669d2f43.jpg

Russellxor
20th June 2016, 06:26 PM
http://uploads.tapatalk-cdn.com/20160620/6677937ac5583de72239265b5caf7a9c.jpg

Russellxor
20th June 2016, 06:26 PM
http://uploads.tapatalk-cdn.com/20160620/40614877302a07c7c44f45765cf56ddc.jpg

Russellxor
20th June 2016, 06:28 PM
http://uploads.tapatalk-cdn.com/20160620/0f077a9acb3e7a4e73b4ebd299bb1a3f.jpg

Russellxor
20th June 2016, 06:29 PM
http://uploads.tapatalk-cdn.com/20160620/4136efab57aca3452205dc5a32356d22.jpg

Harrietlgy
20th June 2016, 06:42 PM
Written by Mr. Sudhangan,

http://www.dinamalarnellai.com/site/news_image/22/28064Tamil_News_Nellai.jpg


சிவாஜி 20 மணி நேரம் வேலை செய்துவிட்டு 4 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுக்கும் வகையில் அவ்வளவு கடுமையாக உழைப்பார்!
தொழிலிலேயே ஊறிப்போய் கிடந்தார் என்று சொல்லலாம்! அந்த காலத்தில் தொழில் கிடைப்பதே கஷ்டம்! கிடைத்தாலும் ஆசைகளுக்கு ஆட்பட்டு அழிந்தவர்களே அதிகம்!
அத்தகைய காலத்தில் அகலக் கால் விரிக்காமல் சீராக நடந்து வெற்றி பெற்றவர் சிவாஜி! சகல பாக்கியங்களும் பெற்ற ஒரே நடிகர் அவராகத்தான் இருக்க முடியும்! பற்பல ஆண்டுகளாக கதாநாயகனாக நடிக்கும் ஒரே ஆள் உலக சரித்திரத்திலேயே சிவாஜியாகத்தான் இருக்க முடியும்”! இப்படிச் சொன்னார் வி.கே. ராமசாமி! இவருடைய நடிப்புத்திறமைக்கே ஒரு தொடர் எழுதலாம்!
அதைவிட எம்.ஜி.ஆர். நடித்த சுமார் 140 படங்களில் அதிக படங்களில் நடித்தவர் சரோஜாதேவி! அதற்கடுத்து, ஜெயலலிதா! ஆனால், இவர்களையெல்லாம் மிஞ்சியவர் எம்.என். நம்பியார்! சுமார் 80 படங்களில் எம்.ஜி.ஆர். படத்தில் இவர்தான் வில்லன்! ஆனால் வாழ்க்கையில் ராமன்! ராமாயண ராமன்! ஏகபத்தினி விரதன்! தூய்மையான நடத்தைக்கு எடுத்துக்காட்டு!
இவர் சிவாஜி பற்றி என்ன சொல்கிறார்?
“நடிப்பதற்காகவே பிறந்தவர் நடிகர் திலகம்! வசனங்களைப் பேசாமல் நடிப்பின் மூலமே தாம் நினைப்பதை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் அவர் ஒருவர்தான்! நமது முன்னோராலும், மூதாதையர்களாலும், அறிஞர்களாலும் நூற்றுக்கணக்கான வருடங்களாக கூறப்பட்ட கருத்துக்களைத்தான் கவிஞர் கண்ணதாசன் சொன்னார்!
அதாவது கவிஞர் சொன்னது எளிமையாகவும், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையிலும் இருந்ததால் நம்மால் கண்ணதாசனை மறக்க முடியவில்லை! நமது நடிகர் திலகத்தின் அணுகுமுறையும் அதே போலத்தான்! ஓர் அசைவால், பார்வையால் எவ்வளவோ நமக்கு உணர்த்தக்கூடியவர்! நடிப்புக் களஞ்சியமான அவர் ‘நடிப்பை இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்வது வியப்பாக இல்லை!
நல்லது எதுவானாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர் அவர்! நடிப்பிற்கு எல்லையில்லை என்பது அவர் கருத்து! அவருடன் நான் நடித்த வேடங்களை நான் நினைவுகூர்ந்து பார்க்கிறேன்!
‘பாகப்பிரிவினை’யில் தம்பியாக, ‘பாதுகாப்பு’வில் அண்ணனாக, ‘பாசமல’ரிலும் ‘மக்களைப் பெற்ற மகராசி’யிலும் மைத்துனனாக, ‘உத்தம புத்திர’னில் மாமாவாக, சில படங்களில் தோழனாக, பல படங்களில் எப்போதும் போல் எதிரியாக, அவருடன் நடித்த நாட்கள், நினைத்தாலே இனிக்கும் நல்ல நாட்கள். முப்பத்தி நான்கு ஆண்டுகள் தொடர்ந்தாற்போல், படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்திற்கு வரும் ஒரே நடிகர் நடிகர் திலகம்தான்! அவரது இந்தப் பழக்கத்தை மற்றவர்கள் பின்பற்றினால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சங்கள் வீணாகாது!”
இப்படி பொம்மை சினிமா இதழுக்கு 1986ம் வருடம் நம்பியார் பேட்டியளித்தார்! அதே சமயம் சிவாஜிக்கு மூத்தவரான நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் என்ன சொன்னார்? அவர் சொல்வதில் முக்கியத்துவம் உண்டு! அவருடைய நாடகக் குழுவில் நடித்தவர் சிவாஜி! அவருடைய நாடகக் குழுவிற்கு பெயர் சேவா ஸ்டேஜ்!
“சிவாஜி கணேசன் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை கம்பெனியில் இருக்கும் போதிலிருந்து எனக்கு பரிச்சயமானவர்! ‘மனோகரா’ படத்தில் வீர முழக்கம் செய்த சிவாஜி மேடையில் செய்த வேடம் என்ன தெரியுமா? மனோகரனின் தாயார் பத்மாவதி வேடம்!
எத்தனை சிறப்பான நடிப்பு!
எத்தனை படங்களில் நடித்தாலும் நாடகத்தில் நடிப்பதில்தான் அவருக்கு விருப்பம் அதிகம்!
எங்களுடைய சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் ‘கண்கள்’, ‘வானவில்’, ‘இருளும் ஒளியும்’, ‘பம்பாய் மெயில்’ போன்ற நாடகங்களில் நடித்தார்! 1956க்குப் பிறகு அவருக்கு படங்கள் அதிகமாகிவிட்டன! அதனால் எங்கள் சேவா ஸ்டேஜ் நாடகத்தில் அவரால் நடிக்க முடியவில்லை! அடுத்து அவரே சிவாஜி நாடக மன்றத்தினைத் துவக்கினார்! அவரது நாடகங்களைப் பார்க்க சொல்லியனுப்புவார்! நான் போய் பார்ப்பேன்!
கட்டபொம்மன் நாடகத்தை ஏராளமான பொருட்செலவில் மேடையேற்றிய பெருமை அவருக்கே உண்டு! நாடகத்தன்று 2 மணி வரையில் படப்பிடிப்பில் இருப்பார்! பிறகு நாடகத்திற்கு தயாராகிவிடுவார். அவருடன் ‘படித்தால் மட்டும் போதுமா’? ‘நீலவானம்’, ‘பொன்னூஞ்சல்’ இன்னும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளேன்.
தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்!” இப்படிச் சொன்னார் எஸ்.வி. சகஸ்ரநாமம்! டி.கே. சண்முகம் பல திரைப்படக்காரர்களின் காட்பாதர்! கமல்ஹாசன் சின்ன வயதிலே இவர் நாடக அரங்கில்தான் பயின்றார்!
கே.பி. சுந்தராம்பாளுக்கு முன்பாக ஓர் ஆணாக இருந்தும் அவ்வை வேடம் போட்டவர் டி.கே. சண்முகம்! அதனாலேயே அவர் அவ்வை டி.கே. சண்முகம் என்றழைக்கப்பட்டார்! அவரால் பயிற்சி கொடுத்து வளர்க்கப்பட்ட கமல்ஹாசன் அதனாலேயே தன் ஒரு படத்திற்கு ‘அவ்வை சண்முகி’ என்று தலைப்பு வைத்தார்! அப்படிப்பட்ட டி.கே. சண்முகம் சிவாஜி பற்றி என்ன சொல்கிறார்? “நடிகர் திலகம் சிவாஜி பாரத தவப்புதல்வர்களில் ஒருவர்! அவர் தமிழராக பிறந்தது தமிழகத்தின் நற்பேறு! பாரதத்தின் கலைத்தூதராக அமெரிக்கா அவரை தேர்ந்தெடுத்தது பாராட்டுதலுக்குரியது!” இப்படி சொன்னார் டி.கே. சண்முகம்!
“நெற்றியின் ஏற்ற இறக்கத்திலே நடிப்பு! புருவத்தின் தெறிப்பிலே நடிப்பு! கண்களின் சுழற்சியிலே நடிப்பு! இமைகளின் படபடப்பிலே நடிப்பு! உதடுகளின் துடிப்பிலே நடிப்பு! கன்னத்தின் அசைவிலே நடிப்பு! புயங்களின் புடைப்பிலே நடிப்பு! தோளின் விம்மலிலே நடிப்பு! கைகளை உயர்த்துவதிலே நடிப்பு! சாதாரணமாக நடப்பதில் கூட நடிப்பு! என்று அங்கத்தின் ஒவ்வொரு அசைவிலும் நடிப்பைக் காட்டி அசத்தியவர் நம் நடிகர் திலகம்! சுருங்கச் சொல்ல வேண்டுமானால் நடிப்பின் கருவூலமே சிவாஜிதான்! அமெரிக்கா கண்ட இந்தியாவின் கிளார்க் கேபிள்! சிறந்த ஒரு நடிகரை நம் நாட்டு விருந்தினராக அழைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் நினைத்தபோது– கன்னியாகுமரிக்கும், காஷ்மீரத்திற்கும், கத்தியாவாருக்கும், வங்காளத்திற்கும் என்று பல மாநிலங்களிலே அமெரிக்கா தம் பார்வையைச் செலுத்தியது!
நகர்ந்து கொண்டே சென்ற அதன் பார்வை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் குத்திட்டு நின்றது!
நடிகர் திலத்தை கண்ட பின் அதன் பார்வை வேறு பக்கம் திரும்பவில்லை! உடனே அனுப்பியது விமானத்தை! அழைத்துச் சென்றது நம் நடிகர் திலகத்தை! உலக அரங்கில் அவர் கவுரவிக்கப்பட்டார்! அது இந்தியாவிற்கே கிடைத்த கவுரவம்!” இப்படிச் சொன்னார் நடிகர் எஸ்.ஏ. அசோகன்!
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அற்புதமான பொக்கிஷன் நடிகர் முத்துராமன்! ஆங்கிலத்தில் ‘SUBTLE ACTING’ என்பார்கள்! அதற்கு ஓர் உதாரண புருஷன்! இன்றைய தலைமுறைக்கு சொல்ல வேண்டுமானால் நடிகர் கார்த்திக்! நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி அல்ல! அந்த முத்துராமன் சிவாஜியைப் பற்றி என்ன சொன்னார்?
(தொடரும்)

Russellxor
20th June 2016, 07:26 PM
http://uploads.tapatalk-cdn.com/20160620/a0818ce77331b0a1067861e210d1ebeb.jpg

RAGHAVENDRA
20th June 2016, 11:15 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/june2016progfbdesign_zpsntw8gmkx.jpg

Russellbzy
20th June 2016, 11:27 PM
அன்பு நண்பர் ரவிகிரண் சார்

வணக்கம்!

எல்லா சிவாஜி ரசிக நண்பர்களும் நலமா? அனைவருக்கும் என் வணக்கங்கள்!

நடிகர்திலகம் என்றும் performance actor ஆக இருக்கவேண்டுமென்று தான் விரும்பினாரே தவிர ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று நடித்ததில்லை!

எல்லா நடிகர்களுடனும் நடித்தாலும் தன் நடிப்பு திறமையினால் எவரையும் வென்றுவிடலாம் என்ற அசாத்திய தன் நம்பிக்கை அவருக்கு இருந்தது!

அவர் உடல்வாகு எப்படி இருந்தாலும் மக்கள் அவரை மிகவும் ரசித்தார்கள்! அந்த கொடுப்பினை அவருக்கு மட்டுமே உரியது!

நன்றி ! வணக்கம்!

JamesFague
21st June 2016, 09:18 AM
Nethiyadi

KCSHEKAR
21st June 2016, 11:17 AM
அருமைச் சகோதரர் திரு.சுந்தரராஜன் (மதுரை) அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (21-06-2016)

Russellxor
21st June 2016, 12:14 PM
திரு சுந்தரராஜ் அவர்களே
வாழிய பல்லாண்டு
http://uploads.tapatalk-cdn.com/20160621/01c5fc558dec68767cd740794761abf7.jpg

JamesFague
21st June 2016, 02:36 PM
Mr Vaigai Sundar,


Many More happy returns of the day.

Russellsmd
21st June 2016, 02:42 PM
செந்தில்வேல் சார்...
வேட்டிக்குப் போட்டி.


நாமெல்லாம் கட்டிக் கொண்டு
படுத்தால், நள்ளிரவில் நமீதா
போல் ஆக்கி விடுகிற அபாயம்
தருகிற வேட்டி, நடிகர் திலகத்திற்கு எப்படிக் கட்டினாலும் பொருந்தி விடுவது மகா ஆச்சரியம்.

"வியட்நாம் வீடு" படத்தில்
"சாவித்ரீ" என்று இரவில்
அழைக்கும் போது வயிறு வரைக்கும் கட்டியிருக்கும்
வேட்டிக் கட்டல்...

சவாலே சமாளியில் அழகுக்
கட்டல்...

பொன்னூஞ்சலில் தழையத்
தழைய கண்ணியக் கட்டல்...

ஆனந்தம் விளையாடும் வீடு-
சந்திப்பு பாடலில் நிஜமாகவே
நிறையப் பேரை கையெடுத்துக்
கும்பிட வைக்கும் வேட்டிக்
கட்டல்...

பழநியின் விவசாயிக் கட்டல்...

தில்லானாவில் வித்வான்
கட்டல்...

கல்தூணின் கோபக் கட்டல்...

முதல் மரியாதைக்குரிய
நேர்த்திக் கட்டல்...

வேட்டியைக் கட்டிக் கட்டியே
நம்மைக் கட்டிப் போட்டவர்.

Russellsmd
21st June 2016, 02:44 PM
இன்னும் நிறைய இருக்கிறது.

நிச்சயதாம்பூலம்- பாவாடை
தாவணியில் பாடலில் காதல்
கட்டல்...

கலை வாழ கை கொடுத்த
தெய்வத்தின் ஆயிரத்தில்
ஒருத்தியம்மா பாடலில்
மடித்துக் கட்டல்...

கருடா சௌக்கியமாவின்
தீனதயாளுவின் ரௌடிக் கட்டல்...

ஆண்டவன் கட்டளையின்
ஆறு மனமே ஆறு பாடலில்
மகான்களாக மாறும் போது
வேட்டிக் கட்டல்கள்...

படிக்காத பண்ணையாரின்
பாங்கான வேட்டிக் கட்டல்...

லட்சுமி வந்தாச்சு பெரியவரின்
ஒழுங்குக் கட்டல்...

முரடன் முத்துவின் முக்கால்
கால் கட்டல்...

நாம் இருவரில் "பளிச்" கட்டல்...
நிறைய... நிறைய...

Russellsmd
21st June 2016, 02:47 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160621094843411_20160621111037624_zpsudsj4rtm. jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160621094843411_20160621111037624_zpsudsj4rtm. jpg.html)

Russellbpw
21st June 2016, 04:47 PM
மதுரையின் மைந்தன் ! நடிகர் திலகத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் எங்கள் நண்பர் ஜல்லிக்கட்டு காளை சுந்தர்ராஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல வாழ்த்துக்கள் !

நடிகர் திலகம் ஆசியால் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு சகல செழிப்புடன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனையும் இறைவனுடன் கலந்துவிட்ட சிவாஜி அப்பாவையும் பிரார்த்திக்கின்றேன் !

rks

RAGHAVENDRA
21st June 2016, 07:07 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13512061_1139305516120119_1090489575821395147_n.jp g?oh=e1f17fa5eb67046aa782a2a44b3e7c95&oe=57D6A314

Russelldwp
21st June 2016, 07:26 PM
பிறந்த நாள் காணும் என் இனிய நண்பர் திரு வைகை சுந்தர் அவர்களே தாங்கள் எல்லா வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

spchowthryram

Russellbzy
21st June 2016, 10:16 PM
சிவாஜியின் அன்பு இதயங்கள் திரு சுந்தராஜன் திரு வைகை sundar இருவருக்கும் என் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்!

Russellxor
21st June 2016, 10:47 PM
Whatsup images
Thanks to Bangalore. Guna
http://uploads.tapatalk-cdn.com/20160621/f4deceeaa46dee725abff5ef7571436a.jpg

Russellxor
21st June 2016, 10:48 PM
http://uploads.tapatalk-cdn.com/20160621/c0db5f08ae30b989f4e430b262584f2a.jpg

Russellxor
21st June 2016, 10:48 PM
http://uploads.tapatalk-cdn.com/20160621/d1ad2b8f18b2b0919056d554f997724f.jpg

Russellxor
21st June 2016, 10:50 PM
http://uploads.tapatalk-cdn.com/20160621/d528ecbf37873d605c9f451ae3510c95.jpg

Russellxor
21st June 2016, 10:51 PM
http://uploads.tapatalk-cdn.com/20160621/f4ead1f815824b9567b12dcae781b176.jpg

Russellxor
21st June 2016, 10:52 PM
http://uploads.tapatalk-cdn.com/20160621/86560aca6d3db6c50d832ecb6b8648a8.jpg

Gopal.s
22nd June 2016, 02:13 AM
நடிகர்திலகம் தம்பி சண்முகம் லண்டனில் வியாபாரம் படித்தவர். 1955 யிலேயே பட கம்பெனி துவங்கி ஹிந்தி படங்கள் தயாரிக்க ஆரம்பித்தனர்.(தேவ் ஆனந்த் ,சுனில் தத்,சஞ்சீவ் குமார் இவர்கள் நடித்த படங்கள்)அவர் சிவாஜிக்கு சொன்ன ஆலோசனையின் பேரில், குறைந்த முதலீட்டில் படம் தயாரிக்க வரும் நிறைய தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க, நடிகர்திலகம் படங்களின் வியாபார வீச்சை உணர்ந்து, சம்பளமாக மொத்தத்தையும் வாங்கி கொள்ளாமல்,பங்குதாரர் போல, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான விநியோக உரிமை பெரும் முறையை அறிமுகபடுத்தி, சம்பளத்தை விட பெருமளவு பெரும் லாபம் கண்டதோடு வேலுமணி, நாகராஜன், மாதவன் போன்றோரை பட முதலாளி ஆக்கினார்.

அவருடைய படங்களே மொத்த தமிழகத்தின் 60% வசூலை ஒவ்வொரு வருடமும் குவித்தன. இதை பற்றி பம்மலார்,முரளி, கார்த்திக் போன்றோர் நிறைய எழுதி விட்டனர்.

அரசியல் ஏற்ற இறக்கங்கள், சினிமாவில் முடிசூடா மன்னனாக கோலோச்சிய நடிகர்திலகத்தின் வீச்சை எந்த பாதிப்புக்கும் உள்ளாக்கியதில்லை.

Gopal.s
22nd June 2016, 02:17 AM
Many Many Happy Returns of the day to Mr.Sunderrajan and vaigai Sundar.My wishes to you both Brothers.

Russellxor
22nd June 2016, 12:19 PM
http://uploads.tapatalk-cdn.com/20160622/5517c51fbb23023e83950fe08ec035a1.jpg

Russellxor
22nd June 2016, 12:19 PM
http://uploads.tapatalk-cdn.com/20160622/2d44042884cb3a5e84bc5641070d7ead.jpg

Russellxor
22nd June 2016, 12:20 PM
Bangalore
http://uploads.tapatalk-cdn.com/20160622/be3a4d4e6fa6bce884d7057d102ddfe3.jpg

Murali Srinivas
22nd June 2016, 05:34 PM
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். கடந்த சில நாட்களாக வெளியூர் பயணம் மேற்கொண்டதினால் திரியை பார்வையிட முடியவில்லை. மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் உருவாகி வாத பிரதிவாதங்கள் இரண்டு பக்கமும் நடந்து தேவையற்ற வார்த்தை பிரயோகங்களினால் திரியின் பயணம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

யார் தவறு செய்தார்கள் என்பதை ஆராய்வதை விட்டு விட்டு அவர்கள் மனம் புண்பட்டது என்று சொல்லும்போது ஒரு நல்லெண்ண சைகையாக இலங்கை நாளிதழில் வந்த அந்த இரண்டு பக்கங்களையும் நீக்கியிருக்கிறேன்.

நண்பர் சிவா அவர்களே,

நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நடிகர் திலகத்தின் சாதனைகளை மட்டும் தரவேற்றுங்கள் அதையும் ஒரு முறைக்கு இரு முறை பார்த்து செய்யவும். அது போன்றே மாற்று முகாம் திரியின் நெறியாளரை அவர் பாரபட்சமாக இருப்பது போல் எழுதியதும் வருந்தத்தக்கது. அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்பது என் எண்ணம்.

கோபால் மற்றும் பாஸ்கர் சார்,

உங்கள் பதிவுகளும் [நீங்கள் விவாதத்தை தொடங்கவில்லை என்ற போதிலும்] ஒரு goodwill gesture என்ற முறையில் நீக்கப்பட்டிருக்கிறது. ஒன்று முழுமையாக மற்றொன்று சில பகுதிகள் மட்டும். நீங்களும் சரி மற்றுள்ள அனைத்து நண்பர்களும் வார்த்தைகளை கவனமாக கையாளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ,

தொடர்ந்து திரி சுமுக சூழலில் பயணிக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நாடும்

அன்புடன்

eehaiupehazij
22nd June 2016, 07:51 PM
Many more happy returns of the day Mr Sunderajan the prophet of NT in disseminating his name and fame!!
senthil

Russellisf
22nd June 2016, 08:08 PM
DONE GOOD JOB HATS OFF SIR


:clap::clap::clap::clap::clap::clap::clap


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். கடந்த சில நாட்களாக வெளியூர் பயணம் மேற்கொண்டதினால் திரியை பார்வையிட முடியவில்லை. மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் உருவாகி வாத பிரதிவாதங்கள் இரண்டு பக்கமும் நடந்து தேவையற்ற வார்த்தை பிரயோகங்களினால் திரியின் பயணம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

யார் தவறு செய்தார்கள் என்பதை ஆராய்வதை விட்டு விட்டு அவர்கள் மனம் புண்பட்டது என்று சொல்லும்போது ஒரு நல்லெண்ண சைகையாக இலங்கை நாளிதழில் வந்த அந்த இரண்டு பக்கங்களையும் நீக்கியிருக்கிறேன்.

நண்பர் சிவா அவர்களே,

நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நடிகர் திலகத்தின் சாதனைகளை மட்டும் தரவேற்றுங்கள் அதையும் ஒரு முறைக்கு இரு முறை பார்த்து செய்யவும். அது போன்றே மாற்று முகாம் திரியின் நெறியாளரை அவர் பாரபட்சமாக இருப்பது போல் எழுதியதும் வருந்தத்தக்கது. அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்பது என் எண்ணம்.

கோபால் மற்றும் பாஸ்கர் சார்,

உங்கள் பதிவுகளும் [நீங்கள் விவாதத்தை தொடங்கவில்லை என்ற போதிலும்] ஒரு goodwill gesture என்ற முறையில் நீக்கப்பட்டிருக்கிறது. ஒன்று முழுமையாக மற்றொன்று சில பகுதிகள் மட்டும். நீங்களும் சரி மற்றுள்ள அனைத்து நண்பர்களும் வார்த்தைகளை கவனமாக கையாளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ,

தொடர்ந்து திரி சுமுக சூழலில் பயணிக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நாடும்

அன்புடன்

Russellxor
22nd June 2016, 08:10 PM
முத்தின கத்திரிக்கா படத்தில் இடம் பெற்ற தலைவரின் பட போஸ்டர்
http://uploads.tapatalk-cdn.com/20160622/afc2725d9104a3adc143d231bf25b5cd.jpg

RAGHAVENDRA
23rd June 2016, 06:33 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13466205_10206458115718365_463794959802635997_n.jp g?oh=6029868495508ab0444eb697c4b611c1&oe=57EF3462

Image courtesy: Kudanthai Srinivasa Gopalan

Russellxor
23rd June 2016, 11:47 AM
http://uploads.tapatalk-cdn.com/20160623/0bdd5f26fc6606ab15b5843515ea2c5d.jpg

Russellxor
23rd June 2016, 11:48 AM
http://uploads.tapatalk-cdn.com/20160623/694ac9ded9e8a4563d0e9a56171e3808.jpg

Russellxor
23rd June 2016, 11:48 AM
http://uploads.tapatalk-cdn.com/20160623/71f87025deab46b1a5117fcea1a1cdf0.jpg
Courtesy. Guna

Russellxor
23rd June 2016, 11:50 AM
http://uploads.tapatalk-cdn.com/20160623/06d4a759887182438e26832e8ace0c29.jpg

sivaa
23rd June 2016, 02:47 PM
நீதி செத்துவிட்டது

அநீதி தலைவிரித்தாடி கைகொட்டி சிரிக்கிறது

பெருத்த அவமானம்

நன்றி

Gopal.s
23rd June 2016, 02:52 PM
நீதி செத்துவிட்டது

அநீதி தலைவிரித்தாடி கைகொட்டி சிரிக்கிறது

பெருத்த அவமானம்

நன்றி

இந்த அவமானம் எனக்கும் தான் சிவா. பொய்யர்களுக்காக உண்மையை தியாகம் செய்கிறோம்.உண்மை தமிழர்களுக்கு தலைகுனிவே மிஞ்சுகிறது.

JamesFague
23rd June 2016, 05:08 PM
The Moderator,


It is very unfair to remove the postings of our friends and it started from the other side for which our friends were given a

fitting reply. It is happening each & every time for our friends only. Certainly we never expect this type of justice from

your end for this one.

Russellxor
23rd June 2016, 08:16 PM
http://uploads.tapatalk-cdn.com/20160623/b5e334cb745cae05647c040db353190f.jpg

Russellxor
23rd June 2016, 08:18 PM
http://uploads.tapatalk-cdn.com/20160623/e8cc3a5025f606e20db0eaa4f2b2ece0.jpg

Russellxor
23rd June 2016, 08:19 PM
http://uploads.tapatalk-cdn.com/20160623/5f8dd5ca29029ebb7eab3dee2318c839.jpg

Russellxor
23rd June 2016, 08:23 PM
http://uploads.tapatalk-cdn.com/20160623/cf5f2d67c0943472f5905fd1b2f7f683.jpg

Russellxor
23rd June 2016, 08:23 PM
http://uploads.tapatalk-cdn.com/20160623/74763045829cef2690a29ed8e2be0e21.jpg

Russellxor
23rd June 2016, 08:24 PM
http://uploads.tapatalk-cdn.com/20160623/e6803d2f0522187488931501d9126b83.jpg

Russellxor
23rd June 2016, 08:25 PM
http://uploads.tapatalk-cdn.com/20160623/422329a1612a08ddcd9300662b5b4d1e.jpg

Russellxor
23rd June 2016, 08:25 PM
http://uploads.tapatalk-cdn.com/20160623/da99b849689b3a0f8c8bfe9e5cf28e0b.jpg

Russellxor
23rd June 2016, 08:26 PM
http://uploads.tapatalk-cdn.com/20160623/36557564e646a6547769cfd39ee5982d.jpg

Russellxor
23rd June 2016, 08:27 PM
25வருடங்களுக்கு முன் ஜூனியர்விகடனில் வந்த செய்திhttp://uploads.tapatalk-cdn.com/20160623/6c5998fb8fdcdd67b7e6e2c3f239f43b.jpg

Russellxor
23rd June 2016, 08:29 PM
http://uploads.tapatalk-cdn.com/20160623/c8227e94f660f6935e6ee3aeb07d559d.jpg

Russellxor
23rd June 2016, 08:51 PM
Face book

தமிழக அரசியல் வரலாற்றில் இன்றுவரை அரசியலில் நேரமையும் எளிமையும் என்பதற்கு ஒரு பெருந்தலைவர் காமராஜ் அவர்களையும், ஒரு கக்கன் அவர்களையுமே அடையாளம் காண்பிக்க முடிகிறது. அந்த அளவுக்கு பெரும் பதவிகளில் இருந்தும் சுத்தமான கைகளுடன் வாழ்ந்தவர்கள். ஒன்பதாண்டுகள் முதலமைச்சராகவும், இறக்கும் வரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் இருந்த பெருந்தலைவர் காமராஜ் மறைந்தபோது அவர் வீட்டு பீரோவில் 126 ரூபாயும், அவரது வங்கிக்கணக்கில் 4,200 ரூபாயும் இருந்ததாகச் சொன்னார்கள் (கவனிக்கவும், 4,200 கோடி அல்ல).


எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.



அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.



(தங்கப்பதக்கம் நாடக இடைவேளையில், நாடகம் பார்க்க வந்திருந்த கானக்குயில் 'பாரதரத்னா' லதா மங்கேஷ்கருடன் நடிகர்திலகம்)

நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.

நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.

Russellsmd
23rd June 2016, 11:09 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160623190839017_20160623225158159_zpsjskruvjf. jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160623190839017_20160623225158159_zpsjskruvjf. jpg.html)

Gopal.s
24th June 2016, 10:29 AM
எனக்கு தமிழ் படங்களின் காதல் காட்சிகளில் முதலிடத்தில் வருவது வசந்த மாளிகை பிளம் காட்சி . அடுத்து சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு,அடுத்து மடி மீது தலை வைத்து அன்னை இல்லம்,அடுத்து வைஜயந்தி-சிவாஜி இரும்புத்திரை,அடுத்து பத்மினி-சிவாஜி தில்லானா மோகனாம்பாள்,தெய்வப்பிறவி,புதையல்,அடுத்து நாலு பக்கம் அண்ணன் ஒரு கோயில்.

ஜீப்பில் அண்ணனும் அண்ணியும் ஏறி செல்லும் போதே அண்ணனின் விஷம பார்வை வார்த்தைகள்.ஆரம்பமாகி விடும்.(பறக்கறதை தடுக்க கூடாது ) அண்ணி ,அனாயசமாக ,ஓடற ஜீப்பிலே நெருப்பு பத்த வைப்பாங்க. அண்ணியை பாத்தாலே பத்திக்குமே, அந்த பச்சை வண்ண புடவையில் .(அதனாலேயே அண்ணனோட வார்த்தை ,செயல்கள் கொஞ்சம் பச்சையாகவே இருக்கும்) ஜெர்க்கின்னில் அண்ணன் அழகுன்னா அழகு .ஜோடி பார்த்தாலே ராசா- ராணிக்கு ஆதிவாசிகளை போல் நாமும் திருஷ்டி கழிப்போம்.

பிறகு ஆதிவாசிகளின் மோதிர சடங்கு. நடனம். அண்ணன் ,ஆரம்பத்தில் மிதமான பிகு பண்ணி ஆரம்பிப்பார்.அதகளம். சுறுசுறுப்பு, அழகுணர்ச்சி, பாங்கு ,தாள இசைவு அனைத்தும் கொண்ட முழுமை. ஒரு இடத்தில் அண்ணியுடன் ஆடிக்கொண்டே கண்ணை சுழற்றுவார் பாருங்கள் ,அண்ணனால் மட்டுமே முடியும். ஆதிவாசிகள் வரிசையில் குதித்து மித ஓட்டத்துடன் கைகளை புறத்தே வீசி ஒரு ஸ்டெப் பண்ணுவார் பாருங்கள் ,அடடா??? மாமாவின் பின்னணி காட்சியை எங்கோ கொண்டு வைக்கும் (அடியம்மா ராசாத்தி இந்த காட்சிக்கா?)

மழை வந்த பிறகு மனசு நனைய ஆரம்பிக்கும். ஆனால் உடனே அதை தணலாக்கும் அண்ணன். புதிய பறவையிலும் இப்படி ஒரு காட்சியில் கண்ணியமான சிட்டு குருவியாவார் அண்ணன். இந்த படத்தில் முழுசாக கெட்டு திருந்திய கேஸாச்சே?காதலுடன் காமமும் தகிக்க வேண்டாமா தனிமையில்?

ஆடும் கதவை மூடும் அண்ணன் ,பார்வையில் படும் படியா அண்ணி முந்தானையை பிழிவது? அண்ணனின் பார்வையில் அப்படியே காமம் தகிக்கும்.passion கலந்த ஒரு erotic பார்வை.இப்படி ஒரு காந்த பார்வை உலகத்தில் எவனுக்கய்யா வாய்க்கும்?(குடிமகனே பாடலின் இரண்டாவது சரணம் interlude வரும் போது அந்த ஒரு வினாடி பார்வை ஈர்ப்பு, கலைமகள் பாடலில் ஒரு விகசிப்புடன் கூறிய குழப்ப பார்வை, போங்கப்பா) பிறகு நின்று கொண்டு பசி தீர்க்கும் பிளம் கடிப்பார் பாருங்கள், கடிக்க ,சுவைக்க நினைத்ததை அவர் செய்திருந்தால் கூட நமக்கு அப்படி ஒரு கிக் ஏறுமா என்று தெரியாது. அப்படி.... அப்படி ....

பிறகுதான் அண்ணன் யாருமே எதிர்பார்க்காத ஒன்றை செய்வார். கொள்ளிக்கட்டை எடுத்து சிகரெட் பற்ற வைப்பது.பிறகு ஒதுங்கி போகும் அண்ணியை ஸ்ஸ் ...ஸ்ஸ்ஸ் என்று அழைக்கும் கிக்கான அழைப்பு. இங்கே வா என்ற பார்வை அழைப்பு. தூது விட்டு தன் மனதை அவிழ்ப்பது. (பாலமுருகன் வசனம் அருமை)அண்ணிக்கு இது புரிந்ததால் சங்கடம்,நாணம்,விழைவு, மெல்லிய காதல் உணர்வு, குழப்பம்,சம்மதம்(மயக்கமும்,மௌனமும்) என்று கலப்புணர்வுகளை அண்ணி ,அண்ணனின் காம காதலுக்கு தோதாக அனுசரித்து வெளியிடுவார் பாருங்கள்,ஜோடின்னா இதுதான்யா ஜோடி என கூவ தோன்றும்.

இதற்கு பின்னணி இசையில் மாமா செய்யும் ஜாலம் ,காட்சியை எங்கோ தூக்கி நிறுத்தும்.

இந்த காட்சி நம் மனதை ரசவாத வித்தை செய்து ,நமக்கும் இருக்கும் காதலுணர்வை தட்டி எழுப்பி தவிக்க விடும்.

KCSHEKAR
24th June 2016, 12:10 PM
இந்த காட்சி நம் மனதை ரசவாத வித்தை செய்து ,நமக்கும் இருக்கும் காதலுணர்வை தட்டி எழுப்பி தவிக்க விடும்.
Certified as U/A - அருமையான வர்ணனை....

vasudevan31355
24th June 2016, 01:14 PM
http://chennaionline.com/images/gallery/2012/November/20121124101502/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_Photos_29.jpg

vasudevan31355
24th June 2016, 01:16 PM
http://padamhosting.com/out.php/i44919_vlcsnap48713.png

RAGHAVENDRA
24th June 2016, 04:38 PM
Sivaji Ganesan - Definition of Style 31

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு - இரண்டாவது version Repeat

M.S.V. KANNADASAN BIRTH DAY SPECIAL

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13509074_1141204902596847_7054460276083631814_n.jp g?oh=227761a482ad6bca5c6a608084a8d6f5&oe=57F3E1FA


பொதுவாக ஒரு பாடல் இரண்டாம் முறை ஒரு படத்தில் இடம் பெறும் போது மேம்போக்காக நாம் சோக வடிவம் என்று குத்து மதிப்பாக சொல்லி விடுகிறோம்.

ஆனால் உண்மையில் மெல்லிசை மன்னரின் இசையில் வெளிவந்த படங்களில் இவ்வாறு மறுமுறை இடம் பெறுவதை சோகம் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது.

சந்தோஷமான பாடல்களும் மறு முறையிலும் அதே உணர்வோடு வேறு சூழ்நிலைகளிலும் இடம் பெற்றதுண்டு.

கண்ணா நலமா படத்தில் நான் கேட்டேன் அவன் தந்தான் பாடல் படத்தில் இரண்டல்ல, மூன்று அல்லது நான்கு முறை வரும். ஒவ்வொரு முறையும் அது வெவ்வேறு உணர்வுகளை சித்தரிக்கும்.
இது போன்று பல்வேறு உதாரணங்களை மெல்லிசை மன்னரின் இசையில் காட்ட முடியும்.
{ இந்த இடத்தில் மெல்லிசை மன்னரின் குருவான திரு எஸ்.எம்.எஸ். அவர்களையும் மேற்கோள் காட்டவேண்டும். மன்னிப்பு படத்தில் நீ எங்கே பாடலை மூன்று விதமான மெட்டுக்களில் அமைத்திருப்பார்}
அப்படி வித்தியாசமான சூழ்நிலைகளில் ஒரே பாடலை வெவ்வேறு வடிவங்களில் கொடுத்து, கேட்கும் போதே அதன் சூழ்நிலையை நாம் உணரும் வண்ணம் செய்வதில் மன்னர் ஏகபோக சக்கரவர்த்தியாக விளங்குகிறார். இவற்றில் பெரும்பாலான பாடல்கள். நாம் படத்தையோ பாடலையோ காட்சியாக பார்க்காவிட்டாலும் கூட, தனியாக கேட்கும் போதே அதை உணர்ந்து அறியலாம்.

ஆனால் இன்றைய தேர்வு சற்றே வித்தியாசமானது. இந்தப் பாடலைக் கேட்கும் போதே நம்மையும் அறியாமல் அந்தக் காட்சி நம் கண் முன் விரிகிறது. அந்த நாயகனையும் மனம் லயித்து ரசிக்கிறது.

ஒரு சின்ன கிடார் கார்டுடன் பாடல் துவங்குகிறது.
சற்றே இடைவெளி. அடுத்த கிடார். சற்றே அழுத்தமாக.

இந்த இரண்டிற்குமிடையிலான நேரத்தில் நாயகனின் நடை.
அந்த இசையில்லா இடைவெளியில் அந்த பாத்திரத்தை அந்த நடையில் சித்தரித்து விடுகிறார் நடிகர் திலகம். சரியாக எத்தனை மாத்திரை இடைவெளியோ அத்தனை ஸ்டெப் வைக்கிறார் நாயகன்.

இந்த இடத்தில் மௌனத்தை இசையாக்கிய மெல்லிசை மன்னரைப் பாராட்டுவதா, அல்லது அந்த மௌனத்தை இசையாக பாவித்து நடை போடும் நடிகர் திலகத்தைப் பாராட்டுவதா..
துவக்கமே அட்டகாசமாகி விட்டதே.
இரண்டே கிடார் கார்டுகள்.. அதற்குள் எத்தனை விஷயங்கள்..

அம்மாடி... என்று பாடல் துவங்குகிறது..
பொண்ணுக்கு தங்க மனசு... ஒலிக்க இரு முறை எதிரொலிக்கிறது...

ஆளரவமில்லா வனாந்தரத்தில் இரவு நேரத்தில் அந்த எதிரொலி நம்மை அந்த சூழ்நிலைக்கு உடனே அழைத்துச் சென்று விடுகிறது...
பாடலைக் கேட்கும் போதே நாம் இப்படிப்பட்ட பகுதியை உணர்கிறோம்..என்றால் அதன் காட்சியமைப்பின் சிறப்பையும் நாம் பாராட்ட வேண்டும்.

பல்லவியின் இந்த வரி ஒலிக்கும் போது, அப்பாவி கிராமத்தானாக தான் பாடி ஆடிய நாளை நினைக்கத் துவங்குகிறான் நாயகன். இப்போது அவன் பார் போற்றும் நடிகர் திலகம் (கதையிலேயே அவர் நடிகர் திலகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்). எல்லா வசதிகளும் அவனுக்கு உள்ளன.

ஆனால்,, அவனை திருமணம் செய்து கொள்வதாக கூறிய காதலி ஏமாற்றி விடுகிறாள். வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு விடுகிறாள்.

இந்த ஏமாற்றமும் விரக்தியுமே இப்பாடலின் களம்.

இந்த அடிப்படையில் இப்பாடல் படமாக்கப் பட்டிருக்கிறது.

அதிக வசதிகளற்ற அந்தக் காலத்தில் ஸ்டூடியோவிலேயே த்த்ரூபமாக செட் அமைத்து படமாக்கியுள்ள விதம் பிரமிப்பை ஊட்டுகிறது. அரங்க அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அனைவருமே பாராட்டிற்குரியவர்கள்.

மெல்லிசை மன்னரின் பாடலை அந்த ஜீவனுடன் அப்படியே படமாக்கியிருப்பது அவருக்கு இந்தக் கலைஞர்கள் அளித்த மரியாதை என நாம் கருதலாம்.

மீண்டும் பாட்டிற்கு வருவோம்.

பல்லவியின் முதல் வரி ஒலிக்கிறது.. நாயகன் சற்றே திரும்பிப் பார்க்கிறான். நினைவுகள் பழையவற்றை அசை போடுகின்றன.

சாதாரணமாக ஆரோகண அவரோகணங்கள் மூன்று ஐந்து என ஒற்றை அடிப்படையில் அமையும் என கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே கிடாரும் புல்லாங்குவலும் சேர்ந்து பத்து முறை மெல்லிசை மன்னர் இசைக்கிறார். இதெல்லாம் வேறு யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

இந்த பத்து கார்டுகளில் - அனைத்துமே cut notes - என்ற அடிப்படையில் அமைத்திருக்கிறார் என்று தெரிகிறது.. - அந்த பழைய நினைவுகளை கொண்டு வரும் வித்த்தில் அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். அந்த கார்டுகள் ஒலித்து முடித்த பின்னர் மீண்டும் ஒரு PAUSE.

இந்த பாஸ்... இதுவும் ஒரு மௌனமான இசை..

இந்த PAUSE - தமிழ் சினிமா சரித்திரத்திலேயே ஈடு இணையற்ற மஹா கலைஞன் என்று மீண்டும் ஆணித்தரமாக நிரூபித்த PAUSE....

இந்த PAUSE - திரையரங்குகளில் இடிஇடிக்கும் அளவிற்கு கரகோஷங்களால் அதிர வைக்கும் PAUSE ...

மௌனத்தினால் அமைதியை குலைத்து ஆரவாரத்தை எழுப்ப முடியும் என்று சினிமாவில் நிரூபித்த PAUSE.

ஏமாற்றமும் விரக்தியும் சூழ்ந்தாலும் அந்த நேரத்திலும் அந்த பழைய நினைவுகள் அவனுக்குள் விரக்தி கலந்த புன்னகையை வரவழைக்கின்றன. அப்படியே அதை நம் கண்முன் கொண்டு வரும் வகையில், லேசாக சிரித்தவாறே தன் இடது கையால் தலையை நடிகர் திலகம் கோதி விடும் காட்சி இருக்கிறதே...மயங்காத மனம் யாவும் மயங்கும்...

இப்போது மீண்டும் பல்லவி ஒலிக்கிறது. அதே எதிரொலிகளுடன்...

ஒவ்வொரு எதிரொலிக்கும் நாயகன் தன் உணர்வுகளை பிரதிபலிக்கிறான்.

ஆடவில்லை ஓடவில்லை.. நிற்கிறான்., நின்று நினைக்கிறான். நினைத்தவாறே மனதிற்குள் அழுகிறான்...

இப்போது அதே கிடார் மற்றும் புல்லாங்குழலில் எட்டு கார்டுகள்.. முடிக்கும் போது அக்கார்டின்...

இப்போது அவன் மறுபடியும் நிஜத்திற்கு வருகிறான்.

இது வரை ஒலிக்காத ரிதம் இப்போது துவங்குகிறது...

தோம்தோம் திகிதிகி திகிதிகி தோம்நம் என்று பாங்கோஸ் ரிதம் ஒலிக்க

பல்லவி ஒலிக்கிறது.. அதே மெட்டு... ஆனால் தாளம் வேறு. வரிகளில் மாற்றம்..
பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது இந்த மனசு...
கண்ணுக்கு ரெண்டு மனசு
சொல்லுக்கு என்ன வயசு...

கண்ணுக்கு எங்காவது மனசு இருக்குமா... கேள்வி எழுவது இயற்கை..

இதற்கான விளக்கத்தை கவிஞர் இப்படித்தான் மனதில் வைத்திருக்க்க் கூடும் என்கிற யூகத்தின் அடிப்படையில்..

பெண்களின் மனது கண்களில் தெரியும் என்று கவிஞர் யூகித்திருக்கலாம். அல்லது மனதில் ஒரு எண்ணமும் பார்வையில் வேறு எண்ணமும் பிரதிபலிக்கும் யுக்தி பெண்களுக்கே உரித்தானது என கவிஞர் நினைத்து இப்படி எழுதியிருக்கலாம். இவையெல்லாம் அந்த நாயகனின் மனோநிலையை அடிப்படையாக வைத்து அவர் எழுதியிருக்கக் கூடி வரிகளாய்த் தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படி மனம் என்ன நினைக்கிறதோ அதை மறைத்து கண்களில் வேறு விதமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் வித்தை பெண்களுக்கே உரித்தானது என கவியரசர் கூறுகிறார். இதை மனதில் வைத்துத் தான் வாழ்க்கைப் படகு படத்தில் கூட பெண்களை நேரடியாக குற்றம் சொல்லாமல் அவர்களுடைய கண்களை குற்றம் சொல்லும் வித்த்தில், கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் எனக் கூறுகிறார். கண்களை கவிஞர் நம்பவில்லை என்பதற்கான அடையாளமாக இந்த வரிகள் அமைந்துள்ளது எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது மீண்டும் நினைவுகளைக் கிளறும் வகையில் பின்னணி இசை ஒலிக்கிறது. இப்போது மீண்டும் ரிதம் மைனஸ்... வெறும் இசை மட்டுமே...
அந்த நினைவுகளைத் திரும்ப அழைக்க வயலின் பிரயோகப் படுத்தப்படுகிறது. கூடவே மெல்லியதாக கிடாரும் அக்கார்டியனும் ஒலிக்க, அப்படியே நினைவலைகளிலிருந்து நாயகன் நிஜத்திற்கு வருகிறான்.

இப்போது சரணம்..
இப்போது மீண்டும் ரிதம் துணைவருகிறது.

எண்ணையில் எரியும் விளக்கு. அவள் என்னையே அழைத்த சிரிப்பு...
அழைத்த என்ற வார்த்தையின் மூலம் இது கடந்த காலத்தைப் பற்றியது என நினைவு என்பதை கவிஞர் கூறுகிறார்.

இந்த என்னையே அழைத்த சிரிப்பு என்ற வரியின் போது கண் இமையை மூடித் திறக்கும் அந்த நடிகர் திலகம்...
ஆஹா.. உடம்பெல்லாம் புல்லரிக்கும் அந்த இமைகளின் அசைவு...
இந்தப் படைப்பிற்கு எந்த அளவிற்கு ஜீவனளிக்க வேண்டும் என ஆழ்ந்து சிந்தித்து நடித்திருக்கிறார் என்பதற்கு ஒரு சோறு பதமாய் சான்று.

என்னமோ நடந்த்து நடப்பு அதில் ஏதோ நினைவிலும் இருக்கு..

ஒவ்வொரு வரியிலும் அந்த உணர்வை அப்படியே கொண்டு வரும் டி.எம்.எஸ். அவர்களின் குரல் இந்த ஏதோ நினைவிலும் இருக்கு என்பதைப் பாடும் போது முழு பரிமாணத்தையும் கொண்டு வந்து அந்த விரக்தியும் அலட்சியும் கலந்த உணர்வைக் கொண்டு வந்து விடுகிறார்.

http://tamildada.com/wp-content/uploads/2012/03/300x300xT.M.-Soundararajan.jpg.pagespeed.ic.-Ud2Tsq9sh.webp

பாடகர் திலகம் என்கிற பட்டத்திற்கு முழு சொந்தக்கார்ர் டி.எம்.எஸ். ஒருவரே என்பதற்கு இந்தப் பாட்டும் ஒரு சான்று.

இப்போது இந்த வரி காட்சியில் எப்படி..
சொல்லவா வேண்டும். டி.எம்.எஸ்.எந்த உணர்வில் பாடினாரோ அது அப்படியே பிரதிபலிக்கிறதே நடிகர் திலகத்தின் நடிப்பில்..
கம்பீரமத்தை விட்டுக்கொடுக்காமல் நிற்கிறான் நாயகன். என் மேல் தவறில்லை... நான் காதலை மறக்க வில்லை. தவறு உன்மீது தான் நீ தான் ஏமாற்றி விட்டாய். தவறு செய்யாத நான் ஏன் மனம் வருந்த வேண்டும் என்கிற மனப்பான்மையுடன் நாயகன் பாடுகிறான். அதை அப்படியே தன் அலட்சியமான பார்வையாலும் கம்பீரமாக நிற்கும் போஸிலும் வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம். ஏதோ நினைவிலும் இருக்கு என்ற வரிக்கு, தன் கையில் இருக்கும் வாக்கிங் ஸ்டிக்கினால் தன் தலையின் பக்கவாட்டில் சற்றே இதமாக இடித்துக் காட்டுகிறார்.

யாருக்கு இந்தக் கதை தெரியும்,
சாமிக்கு மட்டும் இது புரியும்...

ஆம்.. இவருடைய காதலில் இவர் சந்தித்த சுவையான சம்பவங்கள் வேறு யாருக்கும் தெரியாது. அதற்கு இறைவன் மட்டுமே சாட்சி என்பதை வலியுறுத்திப் பாடுகிறார்.

இப்போது தான் உச்சக்கட்ட நடிப்பு...

ஏழைக்கு அன்று வந்த நினைவு
செல்வத்தில் வந்த பின்பு கனவு..

உணர்வு பூர்வமான குரல் நம் நெஞ்சைத் தொடும் போது கேட்கும் போதே வசப்படும் மனது காட்சியில் நடிகர் திலகத்தைப் பார்க்கும் போது எங்கோ பறந்து வேறு உலகத்திற்கே சென்று விடுகிறது..

சாமிக்கு மட்டும் இது புரியும் என மேல் நோக்கி கையைக் காட்டுகிறார். உடனே ஏழைக்கு அன்று வந்த நினைவு வரியின் போது அப்படியே அந்த பிரம்பை நெஞ்சின் அருகில் கொண்டு வந்து தான் ஏழை என்ப்தை மறக்கவில்லை என உணர்த்துகிறார்.
செல்வ்த்தில் வந்த பின்பு கனவு என்ற வரியின் மூலம் அந்த ஆசை நிராசையாகி விட்டது, கனவாய்ப் போய் விட்டதே என மனம் குமுறுகிறார். அதை அப்படியே பக்கவாட்டில் தலையை அசைத்து நமக்கு தெரிவிக்கிறார்.

இப்போது மீண்டும் மௌனம் துவங்குகிறது.

அம்மாடீ....... சங்கதியோடு குரல் ஒலிக்கிறது....
பின்னணி இசையில்லை...

மீண்டும் பொண்ணுக்கு தங்க மனசு ...ஒலிக்கிறது..
ரிதம் இணைகிறது..
அவ சொல்லுக்கு என்ன வயசு பாடும் போது கையை மேலே உயர்த்திக் காட்டி பிரம்பினால் கேள்வி கேட்கிறார். இப்போது இந்தக் கேள்வி இறைவனை நோக்கி...

ஒவ்வொரு ரித்த்திற்கும் பிரம்பினால் ஒவ்வொரு அலட்சிய விளாசல்..
மனக்குமுறல் ஒவ்வொரு விளாசலிலும் வெளிப்படுகிறது..

அம்மாடி அப்படியே இருமுறை ஒலிக்க அப்படியே பாடல் கண்களிலிருந்தும் காதுகளிலிருந்தும் Fade Out ஆகிறது..

ஆனால் மனதிலிருந்து இது எப்போதுமே FADE OUT ஆகாது...

காலத்தால் அழியாத கலைஞர்களின் கூட்டணி ... நடிகர் திலகம் - மெல்லிசை மன்னர் - கவியரசர் - பாடகர் திலகம் கூட்டணியாயிற்றே..
இது நிரந்தரமான வெற்றிக் கூட்டணியல்லவா..

இந்தக் கூட்டணியின் அகராதியில் .FADE என்ற வார்த்தையே கிடையாதே...
...
இப்போது நம் மனது என்ன செய்யும்...
மீண்டும் இந்தப் பாடலைப் பார்க்கத் தூண்டும் கேட்கத் தூண்டும் ..மெல்லிசை மன்னரின் இசையை ரசிக்கத் தூண்டும்..கவியரசரின் வரிகளைப் படிக்கத் தூண்டும்...பாடகர் திலகத்தின் குரலைக் கேட்கத் தூண்டும்..
தமிழகம் கண்ட தவப்புதல்வனின் நடிப்பை அசை போட்டுக் கொண்டே இருக்கத் தூண்டும்...
...
அதைத் தான் நீங்கள் செய்வீர்கள்.. எனக்குத் தெரியும்.
சற்று நீண்ட பதிவு... பொறுத்தருள்க..

https://www.youtube.com/watch?v=jzd1Em-5Z9U

Russellxor
24th June 2016, 07:59 PM
Courtesy Facebook
http://uploads.tapatalk-cdn.com/20160624/c60c5fb87683d47751c63b0fb00e1808.jpg

Russellxor
24th June 2016, 08:00 PM
http://uploads.tapatalk-cdn.com/20160624/1d843dae8595a625a337060d789bd3d2.jpg

Russellxor
24th June 2016, 08:01 PM
http://uploads.tapatalk-cdn.com/20160624/604a6f183c77fca0a52f056f04bfbcd6.jpg

Russellxor
24th June 2016, 08:01 PM
http://uploads.tapatalk-cdn.com/20160624/3952790d16ad68801ee2f0000eb40b19.jpg

eehaiupehazij
24th June 2016, 08:26 PM
அப்பாவி கோலிவுட்! அடப்பாவி ஹாலிவுட்!!

Part 3 : Pasamalar Vs Dr No!

1961ல் நடிகர்திலகத்தின் வாழ்நாள் பெருமைப்படமான பாசமலர் வெளிவந்தது. நடிகர்திலகத்தின் நடிப்பு வைரப்பட்டைகளே பிரதானம் எனினும் சாவித்திரி ஜெமினியின் பாந்தமான நடிப்புப்பக்கங்களும் மறக்க முடியாதவையே! தகுதிக்கு மீறி தங்கை மீதுகாதல்கொண்ட மன்னரை ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பில் ஷூட் பண்ணும் வெறியுடன் பாய்ந்து வரும் நடிகர்திலகம் 'அண்ணன் ஒரு கோயில் தங்கை வெறும் தீபம்' என்றெல்லாம் பின்னாளில் வெளிவரப்போகும் நடிகர்திலகத்தின் பட டைட்டில்களை ஜெமினியிடம் முன்கூட்டியே யூகித்து சாவித்திரி வசனமழை பொழியும்போது துக்கம் தாங்க முடியாமல் கண்களில் அருவியாகப் பொங்கும் கண்ணீரைத் துப்பாக்கித் தோட்டா வெடித்துவிடும் என்ற பயமில்லாமல் துப்பாக்கி நுனியால் துடைக்கும் காட்சியில் ரசிகக் கண்மணிகளின் அலப்பறை தியேட்டர்களை அதிரவைக்கும்....இன்றுவரை!!
அந்தக்கணம் முதலே மன்னருக்கு துப்பாக்கி அலர்ஜி வந்து பின்னாளில் எந்தப்படத்திலும் துப்பாக்கியைத்தொட்டதேயில்லையாம்!!


https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0

1962ல் வெளிவந்த Dr No அகில உலக முதல் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் போஸ்டர்களில் நடிகர்திலகத்தின் அதேமாதிரி கோட் சூட்டில் தொப்பி கறுப்புக்கண்ணாடி சகிதம் ஷான் கானரி களமிறங்கி அதே போஸில் துப்பாக்கி நுனியால் கன்னத்தைத் துடைத்துக்கொண்டிருப்பதை என்னத்தை சொல்ல!!

https://www.youtube.com/watch?v=BobR6M8FYE4

eehaiupehazij
24th June 2016, 11:38 PM
காயமே இது பொய்யடா....காற்றடைத்த பையடா.....!

Inflated Balloon Vs Deflated Body!

காற்று நிரப்பப்பட்ட பலூன் தரையிலிருந்து மேலெழும்பி ஆகாயம் நோக்கி மேலே செல்லும்....ஆனால்....உயிர்மூச்சுக் காற்று அடைபட்டிருக்கும் வரையே நமது சரீரபலூன் தரையிலிருக்கும்....காற்று நீங்கினாலோ....ஆகாயம் சென்ற பலூன் பூமிக்குக் கீழிறங்கும்....சரீர ஆத்மாவோ தரையிலிருந்து விண்ணுக்குத் தாவும்...வினோதமே!

என்னதான் மாப்பிள்ளை மச்சினன் உறவு மெச்சப்பட்டாலும்....ஜெமினிக்கும் சிவாஜிக்கும் அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட வித்தியாசமும் உண்டு....
நடிப்புக்காற்று நிரப்பப் பட்டபலூன் போல நடிகர்திலகம் ஆகாயம் வரைகூட பயணித்து நடிப்புப் பூமியின் அற்புத அழகை ரசிக்க எண்ணுவார்....

https://www.youtube.com/watch?v=rfMUil39Kwc

காதல்மூச்சு நிரம்பிய மன்னரோ பூமியிலேயே கால் பதித்து காதலியோடு ஆகாய நிலவு நட்சத்திர மேக சூரியன்களை ரசிப்பதில் திருப்தியடைவார்...ஆகாய மார்க்க ரிஸ்கெல்லாம் நமக்கேன் ஸ்வாமீ...

https://www.youtube.com/watch?v=XChwaujC198

Murali Srinivas
24th June 2016, 11:47 PM
நமக்கு பிடித்தவர்களுக்கெல்லாம் இன்று பிறந்த நாள்!

நடிகர் திலகத்திற்கு பிடித்த நமக்கும் பிடித்த கவியரசருக்கு இன்று பிறந்த நாள

நடிகர் திலகத்திற்கு பிடித்த நமக்கும் பிடித்த மெல்லிசை மன்னருக்கு இன்று பிறந்த நாள்!

நடிகர் திலகத்திற்கு பிடித்த நமக்கும் பிடித்த நடிகர் தயாரிப்பாளர் பாலாஜிக்கு இன்று பிறந்த நாள்!

மூவரின் புகழும் என்றென்றும் வளரட்டும்!

அன்புடன்

Russellxor
25th June 2016, 12:01 PM
http://uploads.tapatalk-cdn.com/20160625/dfcda8423550a2e688b14ce21e6cabc8.jpghttp://uploads.tapatalk-cdn.com/20160625/3db9487c6de1e700217bec1c27c39bf9.jpg

Russellxor
25th June 2016, 08:18 PM
அய்யா நினைவாஞ்சலிபோஸ்டர்
http://uploads.tapatalk-cdn.com/20160625/aaedeee186497ff4253ee746bf686b6a.jpg

Russellxor
25th June 2016, 08:19 PM
http://uploads.tapatalk-cdn.com/20160625/82ce533f47f276b5c72705d56b2e7ab6.jpg

Russellxss
25th June 2016, 11:34 PM
100 நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள்தலைவர் இருவேடங்களில் நடித்த சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் 13வது வார போஸ்டர்.

http://www.sivajiganesan.in/Images/250616_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
25th June 2016, 11:35 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் மூன்று வேடங்களில் நடித்த 200வது காவியம் திரிசூலம் திரைப்படத்திற்கு நமது தலைவரின் ரசிகர்கள் தியேட்டரில் திரிசூலத்தின் சாதனைப் பட்டியல் மற்றும் ரசிகர்களை வரவேற்று தியேட்டர் சுவர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
மதுரை நகர் சிவாஜி மன்றத் தலைவர் ஜோதிபாஸ்கரன் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் சார்பில் திரிசூலம் திரைப்படத்திற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பிரமாண்டத்திற்கும் பிரமாண்டமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது வரை மதுரை சினிமா ரசிகர்களின் வரலாற்றில் இவ்வளவு பெரிய போஸ்டர் யாரும் ஒட்டியதில்லை. ரஜினி, கமல், அஜித், விஜய் ரசிகர்கள் தினமும் 50க்கும் குறையாதவர்கள் போஸ்டரை போட்டோ எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். மேலும் மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அனைத்து ரசிகர்களும் போஸ்டர் பார்ப்பதற்கென்றே தியேட்டருக்கு வந்து செல்கின்றனர் என்பது மேலும் சிறப்பு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த போஸ்டர் உங்கள் பார்வைக்கு......

http://www.sivajiganesan.in/Images/250616_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
25th June 2016, 11:37 PM
மதுரை நகர் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் ஒட்டப்பட்டுள்ள மற்றொரு பிரமாண்டமான போஸ்டர் உங்கள் பார்வைக்கு.....

http://www.sivajiganesan.in/Images/250616_4.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
25th June 2016, 11:37 PM
இமாலய வசூல் சாதனை படைத்திட்ட மக்கள்தலைவரின் திரிசூலம் திரைக் காவியத்தின் வசூல் மற்றும் ஓடிய நாட்கள் பற்றி விபரங்களை இன்றைய ரசிகர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் வெங்கடேஷ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள மற்றொரு பிரமாண்ட போஸ்டர் உங்கள் பார்வைக்கு...

http://www.sivajiganesan.in/Images/250616_3.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
25th June 2016, 11:39 PM
என்றும் கலையுலகின் சக்கரவர்த்தி சிவாஜி ஒருவரே. இது வரை இவரை வெல்ல யாரும் பிறந்ததில்லை, இனி பிறக்கப் போவதுமில்லை. மண்ணை விட்டு மறைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன.
இன்றும் தமிழகத்தில் நமது மக்கள்தலைவரின் திரைக்காவியங்களை மக்கள் மற்றும் இன்றைய இளைஞர்களும் விரும்பி பார்க்கின்றனர் என்றால், அது நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் படங்கள் தான்.
எத்தனை ஆண்டுகளானாலும் நமது மக்கள்தலைவரின் திரைக்காவியங்கள் மக்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/13528669_1034567573294513_3368347935081363153_n.jp g?oh=0fd5b9c0219e59ade4bc12fcbc28b263&oe=57FEA952&__gda__=1475408378_0250d9095e5318c251697ddeb45602e e


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

eehaiupehazij
26th June 2016, 03:10 AM
Towards the 15th Heavenly Abode of NT....Nostalgic Anniversary glimpses!

Pin-hole Licensee and Pin-drop Silencer : Shot-cuts from NT's Start-Cut World !!

நடிப்பின் நாடித்துடிப்பின் 15வது நினைவஞ்சலி மீள்பார்வை!

(படப்பிடிப்பின்) ஊசித்துவாரம் கண்டு ரசித்த (நடிப்பின்) நாசித்துவாரம் (NT)!


நடிப்பின் குத்தகைதாரரின் பாத்திரப்படைப்பில் மூழ்கி ஸ்டார்ட் சொல்லி கட் சொல்ல மறந்த தருணங்கள் வரலாற்றுப் பதிவுகள்!

பராசக்தியின் கோரட் சீன்,மனோகராவின் சங்கிலிப் பிணைப்பின் துடிப்பு, தெய்வமகனின் முப்பரிமாண விஸ்வரூபம், கர்ணனின் மரணாவஸ்தை, பாசமலரின் கைவீசம்மா, நவராத்திரியில் நவரசம், தில்லானாவின் நாதஸ்வர முகபாவங்கள், விக்கிரமனின் உக்கிரம், புதியபறவையாக நிம்மதி தேடியவரின் மன ரணங்கள், .........நினைவலைகள் என்றுமே ஓய்வதில்லை!

ஷாட்-கட் 1 : பார்த்தால் பசி தீரும்!....பாத்திரப்படைப்பின் தன்மை புரிந்த நடையலங்காரம்!

குண்டடிபட்டு பாதிக்கப்பட்ட ராணுவவீரரின் நடையின் வெளிப்பாட்டை அதன் தொடர்ச்சி விடாமல் பாடல் முழுவதும் விந்தி நாமும் கண்ணிமைக்க மறுக்கிறோம்!
கட் சொல்ல மறந்து காமிராவும் விந்துகிறது!

https://www.youtube.com/watch?v=e1bidmRMFbU

Harrietlgy
26th June 2016, 06:19 PM
Written by Mr. Sudhangan,

http://www.dinamalarnellai.com/site/news_image/22/29905Tamil_News_Nellai.jpg


நடிகர் முத்துராமனுக்கு சிவாஜி மீது எப்போதுமே மிகுந்த பாசமும் மரியாதையும் உண்டு!
தன்னுடன் எந்தந்த பாத்திரங்களில் முத்துராமன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை சிவாஜி உணர்ந்தேயிருந்தார்!
கர்ணன் என்றால் அர்ஜூனன் வேடத்திற்கு முத்துராமனே பொருத்தமாக இருப்பார் என்பது சிவாஜிக்கு தெரியும்!
பார் மகளே பார் சிவாஜிக்கு இணையாக பி.பி.எஸ் குரலில் முத்துராமனுக்கும் பாட்டு! அந்த பாட்டுத்தான் அவள் பறந்து போனாளே!
பழநி படம் என்றால் அதில் நான்கு சகோதரர்களில் ஒரு தம்பி முத்துராமன் என்பதில் உறுதியாக இருந்தார்!
நெஞ்சிருக்கு வரை படத்தில் தான் காதலித்த பெண் தன் நண்பனை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் தானே அந்த பெண்ணுக்கும், தன் நண்பனுக்கு திருமணம் ஒரு சகோதரனைப் போல் திருமணம் செய்து வைப்பார்!
அப்போதுதான் ஒரு திருமண அழைப்பிதழையே விஸ்வநாதன் பாடலாகப் போட்டிருப்பார்!
அந்த பாடல் தான் ` பூ முடிப்பாள் இந்த பூங்குழலி’ பாடல்!
அந்த நண்பன் வேடத்திலும் முத்துராமன்!
அதே போல் தான் ராமன் எத்தனை ராமனடியிலும் முத்துராமனுக்கு நல்ல வேட!
எங்கிருந்தோ வந்தாள் படத்தில் சின்ன வேடமாக இருந்தாலும் அதில் முத்துராமனுக்குத்தான் கதையின் திருப்புமுனையாக கதாபாத்திரம்!
இப்படி முத்துராமன் மீது சிவாஜி மிகுந்த மரியாதை உண்டு!
இந்த முத்துராமன் சிவாஜியைப் பற்றி என்ன சொல்கிறார்
`என்னதான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? திரு சிவாஜி கணேசனோடு நான் நடிக்கிறேன் என்றால் மலைக்கும் மடுக்குவுமுள்ள பெரிய வித்யாசத்தைக் காண்கிறேன். அவர் உலகப் புகழ் பெற்ற உன்னதமான கலை தெய்வம்.. ஆமாம்! தெய்வப்பிறவியே தான் அவர்! அவருடைய அன்பும் ஆசியும் என்று எனக்கிருந்து வருகிறது. அவர் ஒரு ஆலமரம் போல் இருந்து கலையுலகுக்கு நிழல் தருகிறார். நமது தமிழ்நாடு, அவரின் திறமைமிக்க நடிப்பால் கலையில் உலகப்புகழ் பெற்றுவிட்டது. அதையெண்ணி என் மனம் மிகுந்த பூரிப்படைகின்றது’ இதை அவர் அவன் தான் மனிதன் பட வெற்றி விழா மலரில் பதிவு செய்திருக்கிறார் முத்துராமன்!
1969ம் ஆண்டு சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள் அஞ்சல் பெட்டி 520, அன்பளிப்பு, காவல் தெய்வம், குருதட்சணை, சிவந்த மண், தங்கச் சுரங்கம், திருடன், தெய்வமகன், நிறைகுடம்,
இந்த ஒன்பது படங்களும் வித்யாசமானவை!
அஞ்சல் பெட்டி 520 படம் சுமாராகத்தான் ஒடியது!
இந்தப் படத்திற்கு சுதர்ஸனம் இசையமைத்து இருந்தார்!
அன்பளிப்பு இந்த படத்தை ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கியிருந்தார்
இந்த படம்தான் சிவாஜியும், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்றழைக்கப்பட்ட ஜெய்சங்கர் சிவாஜியுடன் இணைந்து நடித்த முதல் படம்!
ஒரு முறை ஜெய்சங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இந்த அனுபவத்தை பற்றி சொல்லும் போது, ` எல்லா நடிகர்களுக்கும் சிவாஜியுடன் நடிப்பது என்றால் ஒரு வித பதட்டம் இருக்கும். ஆனால் எனக்கு பதட்டமே இல்லை. காரணம் நான் என்னை மிக சரீயஸான நடிகனாக கருதியதேயில்லை. அதனால் இதை சிவாஜியிடமே சொன்னேன்! நீங்க நடியுங்க! நான் உங்க கூட படம் முழுவதும் வந்துவிட்டு போகிறேன்’ என்றேன்1
ஆனால் படம் சரியான வெற்றியை பெறாவிட்டாலும் ஜெய்சங்கரும் இந்த படத்தில் நன்றாகவே நடித்திருப்பார்!
அந்த வருட வந்த காவல் தெய்வம் படத்தின் சிவாஜிக்கு ஒரு கெளரவ வேடம் தான்!
இது ஜெயகாந்தனின் கை விலங்கு கதையை வைத்து எடுக்கப்பட்ட படம்!
இந்தப் படத்தை நடிகர் எஸ்.வி. சுப்பையா தயாரித்திருந்தார்!
சிவாஜிக்கு ஒரு மரமேறி வேடம்!
அதே போல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வந்த படம் தான் குருதட்சணை!
இதில் சிவாஜி, பத்மினி, ஜெயலலிதா நடித்திருந்தார்கள்!
ஆனால் ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை இந்த படம் ஏற்படுத்தவில்லை.
அந்த வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய சிவந்த மண் படம் தான்!
இந்த படம் தயாரிப்பில் இருக்கும் போதே இயக்குனர் ஸ்ரீதர் ஆனந்த விகடன் இதழில் ஒரு 12 வாரம் `அந்நிய மண்ணில் சிவந்த மண்’ என்கிற தொடரை எழுதினார்.
மேலும் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது!
மேலும் படம் பொருட்செலவில் பிரும்மாண்டமாக தயாரிக்கப்படுகிறது என்பதாலும் படத்தின் மீது மிகுந்து எதிர்பார்ப்பு!
சிவாஜி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு படம் வெளியாவதற்கு காத்திருந்தார்கள்.
படத்தின் பாடல்கள் அதற்கு முன்பே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது!
எங்கும் திரும்பினாலும் அந்த படத்தின் ` ஒரு ராஜா ராணியிடம்’ பாடல் தான் கேட்கும்1
அது நீண்ட பாடல்1
வானொலியில் நேயர் விருப்பம் என்றால் இந்த பாடலுக்குத்தான் அதிக கடிதங்கள் குவியும்!
படம் அண்ணா சாலையின் குளோப் தியேட்டரில் ரீலிசானது!
முன் பதிவே கூட பல நாட்களுக்கு ஆனது!
சிவாஜ் ரசிகர்களை குதிரைப் போலீஸார் விரட்டினார்கள்1
ஆனால் இத்தனை பெரிய ஆரம்பம் இருந்தும் படம் எதிர்ப்பாத்த வெற்றியை தரவில்லை!
மன்னராட்சியையும் நிகழ்கால படித்த இளைஞனையும் பின்னி கதை இருந்ததால், படம் எடுபடாமல் போனதா என்பது தெரியவில்லை!
இந்த படத்தில் வந்த ` பட்டத்து ராணி’ பாடல் வந்த போதும் ஊரெங்கும் பின்னனிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி பற்றியே பேச்சு!
இதே படத்தை ஸ்ரீதர் இந்தியிலும் தயாரித்தார் படத்தின் பெயர் தர்த்தி!
தமிழ் படத்தில் முத்துராமன் நடித்த வேடத்தில் இந்தியில் சிவாஜி நடித்தார்!
அப்போது இந்தியில் பட்டத்து ராணி பாடலை பாட இந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லே தடுமாறிப்போனார்1
அவரால் ஈஸ்வரியைப் போல பாட முடியவில்லை!
அதே போல் இந்த படத்தின் போது தனக்கு ஏற்பட்ட ஒரு அபாயகரமான அனுபவத்தை பற்றி எங்கள் ஆனந்த விகடன் எம்.டியும், அப்போது ஜெமினி கலர் லேப் அதிபருமான திரு எஸ். பாலசுப்ரமணியன். `சிவந்த மண் படத்தை எங்கள் லேபில் தான் ப்ராஸஸ செய்தோம். தொழிலாளர்களின் கவனக்குறைவினால் பிலிம்கள் பாழாகிவிட்டது என்று ஒரு நாள் இரவு எனக்குச் சொன்னார்கள். அதிர்ச்சி அடைந்தேன்! மற்ற படங்களாக இருந்தால் இங்கே படப்பிடிப்பு மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதுவோ வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம்! மறுபடியும் படக்குழுவினரையெல்லாம் அழைத்துக்கொண்டு எப்படி போக முடியும்’ பிறகு என்ன நடந்தது ?
(தொடரும்)

vasudevan31355
27th June 2016, 10:40 AM
//ஆனால் இத்தனை பெரிய ஆரம்பம் இருந்தும் படம் எதிர்ப்பாத்த வெற்றியை தரவில்லை!
மன்னராட்சியையும் நிகழ்கால படித்த இளைஞனையும் பின்னி கதை இருந்ததால், படம் எடுபடாமல் போனதா என்பது தெரியவில்லை!//

மறுபடி மறுபடி தவறு. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

சிவந்த மண் தோல்விப்படமா?

சிவந்த மண் தோல்விப்படமா?

சிவந்த மண் தோல்விப்படமா?

சிவந்த மண் தோல்விப்படமா?

சிவந்த மண் தோல்விப்படமா?

சிவந்த மண் தோல்விப்படமா?

சிவந்த மண் தோல்விப்படமா?

vasudevan31355
27th June 2016, 10:53 AM
சாரதா மேடம்.

'சிவந்த மண்' நினைவுகள்.......

காவியப்படமான 'சிவந்த மண்' பற்றி நான் எற்கெனவே எழுதிய பதிவின் மீள்பதிவு இது. பலர் படித்திருக்கக்கூடும். சிலர் படிக்காதிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் மீள்பதிவு செய்திருக்கிறேன். ஏற்கெனவே பதித்ததன் 'லிங்க்' பக்கம் தெரியாததால், முழுப்பதிவையும் (சிவந்த மண் வெளியீட்டு நாளை முன்னிட்டு) இங்கு தந்துள்ளேன்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக் குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார்.

ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் "சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் camera angles செட் செய்த இயக்குனர் sreedhar க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்

சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.

உதாரணத்துக்கு சில:

1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.

2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.

3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.

4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.

5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.

6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.

7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.

8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.

9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.

10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')

11) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.

12) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).

13) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.

14) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".

இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....

"....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.

"......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".

"பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (இந்த இடத்தில் அவரது அந்த நாட்டிய முத்திரை).

"ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)

"இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)

இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.

இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும்.

15) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).

16) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.

17) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச் செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!).

'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
என அந்த சூழலே களை கட்டுகிறது.

('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)

இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).

எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் அவருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.

1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. முரளி அவர்கள் சொன்னது போல, வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.

சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.

அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.

குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.

அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்.

vasudevan31355
27th June 2016, 10:58 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan119-1-2.jpg

vasudevan31355
27th June 2016, 11:01 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5091-1.jpg

vasudevan31355
27th June 2016, 11:01 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC3804-1.jpg

vasudevan31355
27th June 2016, 11:02 AM
இது தோல்விப்படமா?

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5093-1.jpg

vasudevan31355
27th June 2016, 11:04 AM
இது தோல்விப்படமா?

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5094-1.jpg

vasudevan31355
27th June 2016, 11:10 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000578112.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000778782.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000785722.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000650149.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001355708.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_084548997.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000177001.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000309701.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_001853614.jpg

vasudevan31355
27th June 2016, 11:13 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-57604.png?t=1320729141

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_5VOB_000849962.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-57263-1.png?t=1321149919

vasudevan31355
27th June 2016, 11:15 AM
மீள்பதிவு


'அன்னை இல்லம்' திரைக்காவியத்தில் அதியற்புதமான நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிரும் காவியக் காட்சி.

தன் தாயிடம் தன் தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை வேதனையை வெளியே சொல்லமுடியாமல் மென்று விழுங்கி வசனமே இல்லாமல் அமைதியாக சில நிமிடங்கள் அசத்துவார் என்றால், அடுத்த காட்சியில் முன் நடித்த காட்சிக்கு எதிர்மறையாக தன் காதலி (தேவிகா) யிடம் தன் தந்தை (S.V.ரங்காராவ்) தன்னிடம் எப்படியெல்லாம் அன்பாக இருந்தார், எப்படியெல்லாம் தனக்கு பணிவிடைகள் செய்தார், எப்படியெல்லாம் தன்னை வளர்த்தார் என்று தந்தையின் அன்பை நினைத்து நினைத்து புலம்பித் தீர்த்து விடுவார்.

தன் தந்தையை தூக்கு தண்டனையில் இருந்து ஒரு மகனாகத் தன்னால் காப்பாற்ற முடிய வில்லையே என்ற இயலாமை, ஆற்றாமை,வேதனை, சோகம்,துக்கம் என்று அனைத்துவித உணர்ச்சிகளையும் ஒரு சேர மாறி மாறி பிரதிபலித்து, (குறிப்பாக தன் தந்தையின் தூக்குதண்டனை நிறுத்தத்திற்காக அளிக்கப் பட்ட கருணை மனு நிராகரிப்பை பற்றி தேவிகாவிடம் கூறும்போது," கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்க கீதா" என்று வேதனையோடு உரக்க சிரித்துக் கொண்டே சொல்வார்...பின் மீண்டும் ஒரு முறை சிரித்த படியே சொல்லி அப்படியே அதை அழுகையாய் அரை நொடியில் மாற்றுவார் பாருங்கள்... (அற்புதப் பிறவியே! எங்களைத் தவிக்க விட்டு விட்டு ஏன் அய்யா பிரிந்தீர்கள்)... அப்படியே அள்ளிக் கொண்டு போகும்.)

தாயிடம் அமைதி...

தாரமாகப் போகிறவளிடம் ஆர்ப்பாட்டப் புலம்பல்.

இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட அவரை விட்டால் வேறு யார்?...

அதே சீனில் இன்னொரு முத்திரை...தன் தந்தையின் அன்பைப் பற்றி தேவிகாவிடம் கூறுவார். "தாயில்லாதக் குறைய நான் உணரக் கூடாதுங்கறத்துக்காக அவர் (தன் தந்தை)எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்... என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்தார்" என்று புலம்பிவிட்டு 'அடாடாடாடா'....என சிலாகித்து தன் தந்தையைப் பற்றி நினைவு கூர்வார். அந்த 'அடாடாடாடா' என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் அடடா...இவரல்லவோ நடிகர் என்று நம்மக் கூக்குரலிட வைக்கும் .

இந்த குறிப்பிட்ட சீனில் அவர் செய்யும் அட்டகாசங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....

முகத்தில் பெருமை பொங்க தேவிகாவிடம்,"கீதா! எங்க வீட்டு வேலைக்காரன் இல்லே! கண்ணன்! (இந்த இடத்தில் ஒருவேலைக்காரன் தன் முதலாளி முன் எவ்வாறு கையைக் கட்டிக் கொண்டு நிற்பானோ அப்படிக் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்) அவன் ஒரு நாளாவது எனக்கு காப்பி போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?..

ஒரு நாளாவது சாப்பாடு போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?....

ஒரு நாளாவது எனக்கு படுக்கை விரிச்சுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?"....
என்று சொல்லிவிட்டு

"இல்ல கீதா! அவ்வளவு பணிவிடையும் எனக்கு எங்க அப்பாதான் கீதா...எங்க அப்பாதான்" என்று சொல்லியவாறே தன் தந்தையை நினைத்து பொங்கிக்கொண்டு அழ ஆரம்பிப்பது அவருடைய அசுரத் திறமை!

"உங்களுக்கு ஏன்ப்பா இவ்வளவு கஷ்டம்?...நான் என்ன குழந்தையான்னு கேப்பேன். அதுக்கு எங்கப்பா என்ன சொல்லுவார் தெரியுமா? என்று சொல்லிய படியே பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு தன் தந்தை கூறுவது போல மகா தோரணையுடன் ,"ஏய்! நீ என்ன மனசுல பெரிய மனுஷன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா?... ஒனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தை உன்ன அப்பான்னு கூப்பிட்டாலும் நீ எனக்குக் குழந்தை தாண்டா..ன்னு சொல்லுவார்"....என்று நடிகர் திலகம் ரசித்து ஒரு அட்டகாசச் சிரிப்பை தந்தையின் பாச நினைவாக உதிர்த்து நினைவலைகளில் மூழ்கியபடி தலையை சிலுப்பிக் கொள்வது அதியற்புதம்.

இப்படிப்பட்ட தந்தையை தனக்கு கொடுத்ததற்காக கடவுளிடம் தான் தன் ஆயுசு முழுதும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பதைப் பற்றிக் கூறும் போது, "எத்தனை ஆயிரம் தடவை" (நன்றியை) என்று அந்த வீட்டின் சிறு தூணைப் பிடித்தபடி கூறி நிறுத்திவிட்டு தலையை மேல்நோக்கித் தூக்கியவாறு மறுபடியும் இரண்டாவது முறை "எத்தனை ஆயிரம் தடவைசொல்லியிருப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவது மெய்சிலிர்க்க வைத்துவிடும்.

ம்..... சொல்லிகொண்டே போகலாம். ஆனால் ஆயுசுதான் போதாது அவர் அசாத்தியத் திறமைகளைப் பற்றி எழுத...

அந்த மெய்சிலிர்க்க வைக்கும் அன்புத் தெய்வத்தின் அற்புத நடிப்புக் காட்சியை ராகவேந்திரன் சாருடன் நாமும் கண்டு களிக்கலாம்.

'அன்னை இல்லம்' திரைக்காவியத்தில் அதியற்புதமான நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிரும் காவியக் காட்சி.


https://youtu.be/zNE0LicphLM

Russellmai
27th June 2016, 02:11 PM
ஆவணச் சான்றுகளுடன் சரியான பதிலடி வாசு சார்.

Subramaniam Ramajayam
27th June 2016, 02:58 PM
இது தோல்விப்படமா?

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5094-1.jpg

Mamy many thanks mr vasudevan for sivanthamann 100days cuttings
sivanthamann 100 days celebrations widely celebrated in NKT auditoriam triplicane in a grand manner for information.

JamesFague
27th June 2016, 03:20 PM
Mr Sudhangan should have verified facts before expressing his views.

RAGHAVENDRA
27th June 2016, 06:18 PM
Well done Vasu Sir.

Immense thanks to Pammalar

Russellxor
27th June 2016, 08:43 PM
http://uploads.tapatalk-cdn.com/20160627/375dbab40f8972756d709ee30db2d707.jpg

Russellxor
27th June 2016, 08:44 PM
http://uploads.tapatalk-cdn.com/20160627/41a1f1decc256317bf1b34485f509607.jpg

Russellxor
27th June 2016, 08:47 PM
கலையுலக உத்தமரின்கருத்து
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1449296165133_zpssmpehzol.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1449296165133_zpssmpehzol.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445153865203_zpsrbhhbe2i.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445153865203_zpsrbhhbe2i.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607099453_zpsiaxu0rfo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607099453_zpsiaxu0rfo.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607106691_zpsw06zbzog.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607106691_zpsw06zbzog.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905745036_zpsanadnmkt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905745036_zpsanadnmkt.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905741982_zpsgkqkkouu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905741982_zpsgkqkkouu.jpg.html)

Russellxor
27th June 2016, 08:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905726662_zps5bvrgg1e.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905726662_zps5bvrgg1e.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905705378_zps3bgpnkuf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905705378_zps3bgpnkuf.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905717240_zpsfsdjrxuv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905717240_zpsfsdjrxuv.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905708207_zpsputv2oua.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905708207_zpsputv2oua.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905720439_zpspqy3sngk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905720439_zpspqy3sngk.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905689253_zpsspxpovgo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905689253_zpsspxpovgo.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905686223_zpsqdqbz2lv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905686223_zpsqdqbz2lv.jpg.html)

Russellxor
27th June 2016, 08:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656838729_zps2h1fmm6w.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656838729_zps2h1fmm6w.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656842795_zpsawsws8va.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656842795_zpsawsws8va.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445153856888_zpsng9ijfjg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445153856888_zpsng9ijfjg.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607103432_zpsrw7qju9c.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607103432_zpsrw7qju9c.jpg.html)

Russellxor
27th June 2016, 08:55 PM
http://uploads.tapatalk-cdn.com/20160627/81c473a9aaa171c811f08109b335bbf7.jpg

goldstar
28th June 2016, 07:02 AM
இது தோல்விப்படமா?

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5094-1.jpg

If this is failure movie, then all the movies released in Tamil industry till 1978 are failure movies and run by government paid money....

vasudevan31355
28th June 2016, 07:07 AM
சாதனைகளுக்கென்றே பிறந்த எங்கள் சாதனை மன்னரின் இதுவரை எவராலும் முறியடிக்கப்பட முடியாத எவரெஸ்ட் வசூல் சாதனை. அத்தனை சாதனைகளும் எங்கள் திரிசூலத்துக்குப் பின்னால்தான்.

From FB

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355094/FB_IMG_1465885362668.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355094/FB_IMG_1465885362668.jpg.html)

vasudevan31355
28th June 2016, 07:14 AM
From FB

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355095/FB_IMG_1465885124145.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355095/FB_IMG_1465885124145.jpg.html)

vasudevan31355
28th June 2016, 07:21 AM
www.cinebee.in.

https://movie-upload.appspot.com/images/datastore?id=6585626900037632

Sivandha Mann (Red Soil), also spelt as Sivantha Mann, is a 1969 Indian Tamil language film with communistic theme directed by C.V. Sridhar that stars Sivaji Ganesan, Kanchana and M. N. Nambiar in the lead roles, while other actors like R. Muthuraman, Nagesh and S. V. Ranga Rao play supporting roles. It is notably the first Tamil film to be shot extensively in locations (outside India),[3] and later Tamil and Telugu films "fell to the French charm" after this.[4] The film was a success, but the producers incurred heavy losses. A Hindi remake titled Dharti starred Rajendra Kumar and Waheeda Rehman in the lead, along with Sivaji Ganesan in a cameo role.[5][6]

The Portuguese want to set up an army base in Vasanthapuri, a zameen in Tamil Nadu, India. They approach Diwan (M.N. Nambiar), a corrupt citizen of the area and decide to make him the king if he agrees to carry out the plan. He subsequently agrees, but none of the local people are happy and protest against this. Hence he starts killing them in large numbers. One of the civilians Anand (R. Muthuraman), who lost his father in the shootout, swears that he will have revenge for the outrage when his close friend Bharath (Sivaji Ganesan), son of a General (S. V. Ranga Rao) returns from abroad. Meanwhile Chitralekha (Kanchana), the princess of Vasanthapuri is living in Zurich, and is completely unaware that her zameen is in danger. She sees Bharath's photo in a local daily, and finds out that he is also from Vasanthapuri. She reads that he came first in the University of Bern, and develops interest in meeting him. That night, Chitralekha meets him at a club and congratulates him for his performance, while introducing herself as "Vasanthi" to hide her true identity. Quickly, they both fall for each other.

They both enjoy as they start touring all over Europe, but suddenly Chitralekha's life takes a drastic turn: She hears about the danger in her zameen, and hence she has to return. Bharath also agrees to come, as he is also determined to save Vasanthapuri. During the flight, one of the flight attendants (Thengai Srinivasan) announces that Diwan wants to marry the princess and will hence receive her at the airport. Chitralekha is not happy and commands that the flight take a different turn, but the attendant stops her from trying to escape. Bharath however supports Chitralekha and fights the attendant, causing the flight to continuously spin and in the process, the flight drowns in the sea. Bharath and Chitralekha are presumed dead, and this results in the dismay of their parents. The two are however washed ashore onto an island and are unconscious. They are cured by two local doctors who befriend them, and arrange a special raft for their return. Bharath realises that Vasanthi is actually princess Chitralekha, but she advices him just to see her as his lover and not as the princess.

They both arrive at Anand's house, and he is surprised to see Bharath alive. However, Chitralekha takes the guise of a normal girl because she does not want anyone to know that the princess is still alive, and to aide Bharath. Her true identity remains a secret to everyone except Bharath. The next day, people again protest at Diwan who starts killing them all, but Anand dies in the shoot out, saying that his death will be honoured as a sacrifice and that the zameen would be avenged by Bharath. Meanwhile, Anand's mother also dies in the shock of her son's death, making Bharath and his friends more determined to save their zameen. They kill a few of Diwan's men, and seek shelter in a bar owned by Nagesh, who also becomes their ally. One by one, Bharath, Chitralekha and the rest of their gang secretly deal with Diwan and his army.

Later at Diwan's castle, "Vasanthi" finally reveals herself as princess Chitralekha, and shocks everyone. Diwan immediately kidnaps her and boards a hot air balloon. But Bharath manages to reach him and after an intense fight, Diwan is killed. Peace returns to Vasanthapuri, so Bharath and Chitralekha are married.

According to C. V. Sridhar's autobiography, Sivandha Mann had evolved from Andru Sinthiya Rattam, a script originally written for actor M. G. Ramachandran.[7] It was the first Tamil film to be shot extensively in foreign locations – a "great novelty in those days".[8] Reportedly made on a budget of 790000 (US$12,000),[2] filming took place largely in Europe in countries like Switzerland, France, Italy, Germany and the Alps. The rest of the film was shot back in India.[3][9][10] After the film's success, many Tamil and Telugu films were also inspired to shoot in France.[4]

Music is composed by M. S. Viswanathan, with lyrics by Kannadasan.[11]

https://s1-ssl.dmcdn.net/AH4Oe/1280x720-nZR.jpg

'Sivandha Mann was successful, and hindi version was also released simaltaneously it faced losses due to the advance marketing in hindi release.[12] Reportedly, the film ran for over 100 days in theatres.[13] It was subsequently labelled as one of Sridhar's "most popular" films.[14]

vasudevan31355
28th June 2016, 07:36 AM
https://i.ytimg.com/vi/4uqU4z9dZrI/hqdefault.jpghttps://i.ytimg.com/vi/5KDoeEuSFmk/hqdefault.jpg
https://incap.files.wordpress.com/2009/11/835.jpghttp://s1.dmcdn.net/AeG7P/526x297-GNC.jpg

vasudevan31355
28th June 2016, 07:43 AM
tamilstar.com

Full Biography of Director Sridhar

https://pbs.twimg.com/media/BtjYDhuCAAEPkYy.jpg

C Sridhar (22 July 1933 – 20 October 2008) was a South Indian screenwriter and film director. Sridhar hailed from Chitthamur, a village near Madurantakam, Tamil Nadu. He studied at St. Joseph's Higher Secondary School (Chengalpattu), where he began writing and staging plays while he was in Grade 7. He entered films as a dialogue writer when his play Ratha Pasam was adapted as a film. He made his debut as a director with Kalyanaparisu. He started his own production company Chitralaya in 1961 and made a series of commercially successful films like Nenjil Ore Alayam and Then Nilavu. The latter which has Gemini Ganesan and Vyjayanthimala in the lead was the first Tamil film to be shot in Jammu and Kashmir.In all his films he used a combination of stars, melodrama and melodious songs. He has directed films in Tamil, Hindi, Telugu and Kannada.
Kaadhalikka Neramillai was one of the greatest blockbusters of Tamil film history made by Sridhar. It was later remade in Hindi with actor Kishore Kumar and Shashi Kapoor. Sridhar helped launch the career of some of the celebrities in Tamil cinema namely R. Muthuraman and Devika in Nenjil Oru Aalayam, Sreekanth, J. Jayalalithaa, Nirmala and Venniradai Moorthy in Vennira Adai , Ravichandran, Kanchana and Rajshri in Kaadhalikka Neramillai, Jayashree in Thendralae Ennai Thodu and Vikram in Thanthu Vitten Ennai.
His notable Bollywood film include Nazrana (1961), Dil Ek Mandir (1963), Pyar Kiye Jaa (1966) and Gehri Chaal (1973). Nazrana, starring by Raj Kapoor, Vyjayanthimala, Usha Kiran and Gemini Ganesan in guest appearance, earned him Filmfare Award for Best Story.His notable hit and good movies with sivajiganesan are Ootyvarai uravu, Nenjiirukkum varai, Sivantha Mann. Sivanthaman (1969) was the first color movie in tamil shooted at foreign locations. Dharti hindi version was realsed in 1970 both the movies were super hit. Distributors really enjoyed good box office collections. Hindi version Dharti was sold for all areas on the first day of pooja itself without estimating the expenses. Thats why the producer was disappointed but this fact was suppressed and people talked in a different way.
In 1997 when Sridhar was in poor health, Rajinikanth offered financial help to tide him over, but Sridhar refused the charity. He gave the same reply to director P. Vasu, who was his disciple. Sridhar, whose career spanned four decades, is credited with understanding the pulse of the public and creating movies in tune with the times. He wrote in a variety of styles, from the comical (Kadhalika Neramillai) to the serious (Nenjam Oru Aalayam). The latter was remade in Hindi with Rajendra Kumar and Meena Kumari as Dil Ek Mandir which earn him two nomination at Filmfare Awards, Best Director and Best Story nomination.He brought out the best in comedians T. R. Ramachandran, K. A. Thangavelu, and Nagesh, and helped introduce Murthy to a wider audience in Vennira Adai. Murthy, now a TV and movie comedian par excellence, is still sometimes referred to as "Venniradai Moorthy" after the fame he received from his performance in the movie.

vasudevan31355
28th June 2016, 09:31 AM
மறைந்த பிரபல எழுத்தாளர் தமிழ்வாணன் தான் எழுதிய 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்னும் நூலில் 'சிவந்த மண்'ணின் பிரம்மாண்ட வெற்றியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355096/IMG.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355096/IMG.jpg.html)

vasudevan31355
28th June 2016, 09:46 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355097/IMG_0001.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355097/IMG_0001.jpg.html)

vasudevan31355
28th June 2016, 09:57 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355098/IMG_0002.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355098/IMG_0002.jpg.html)

vasudevan31355
28th June 2016, 12:53 PM
மிக்க நன்றி வினோத் சார்.

தங்கள் திரியில், இணையத்திலிருந்து தந்த தங்கள் பதிவில், நடிகர் திலகம் பற்றிய சில வேண்டப்படாத வரிகளை என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க பெருந்தன்மையுடன் நீக்கியதற்கு என் மனமார்ந்த நன்றி தங்களுக்கு. 'கவனியாமல் இந்த நிகழ்வு நேர்ந்து விட்டது' என்று பெருந்தன்மை காட்டியதற்கு மிக்க நன்றி.

Russellxor
29th June 2016, 11:05 AM
http://uploads.tapatalk-cdn.com/20160629/45292fec7d39ff4b2c86129b251930d2.jpg

abkhlabhi
1st July 2016, 05:13 PM
http://tamil.filmibeat.com/specials/nenjam-marappathillai-4-040859.html

sivaa
1st July 2016, 07:58 PM
http://oi63.tinypic.com/21doro3.jpg

sivaa
1st July 2016, 07:59 PM
http://oi63.tinypic.com/11j9duf.jpg

sivaa
1st July 2016, 07:59 PM
http://oi68.tinypic.com/o5udt5.jpg

sivaa
1st July 2016, 08:00 PM
http://oi66.tinypic.com/314fi1x.jpg

sivaa
2nd July 2016, 01:38 AM
http://oi68.tinypic.com/30m7gr7.jpg

sivaa
2nd July 2016, 01:39 AM
http://oi66.tinypic.com/kbt0sk.jpg

sivaa
2nd July 2016, 01:40 AM
http://oi63.tinypic.com/a4c2o2.jpg

sivaa
2nd July 2016, 01:41 AM
http://oi65.tinypic.com/2hxv86x.jpg

sivaa
2nd July 2016, 01:42 AM
http://oi64.tinypic.com/24w4lmf.jpg

sivaa
2nd July 2016, 01:43 AM
http://oi65.tinypic.com/ae9u38.jpg

sivaa
2nd July 2016, 01:43 AM
http://oi64.tinypic.com/23wr9lx.jpg

sivaa
2nd July 2016, 01:44 AM
http://oi67.tinypic.com/2941duv.jpg

sivaa
2nd July 2016, 01:44 AM
http://oi64.tinypic.com/1dy5vd.jpg

sivaa
2nd July 2016, 01:45 AM
http://oi66.tinypic.com/b71koy.jpg

sivaa
2nd July 2016, 01:45 AM
http://oi65.tinypic.com/3163h3c.jpg

sivaa
2nd July 2016, 01:46 AM
http://oi68.tinypic.com/357m689.jpg

sivaa
2nd July 2016, 01:47 AM
http://oi65.tinypic.com/vx0kko.jpg

sivaa
2nd July 2016, 01:49 AM
http://oi65.tinypic.com/5nkiux.jpg

sivaa
2nd July 2016, 01:50 AM
http://oi64.tinypic.com/2lnubc.jpg

sivaa
2nd July 2016, 01:51 AM
http://oi65.tinypic.com/2ahdydg.jpg

sivaa
2nd July 2016, 01:51 AM
http://oi67.tinypic.com/347b1ia.jpg

sivaa
2nd July 2016, 01:53 AM
http://oi68.tinypic.com/54bxp1.jpg

sivaa
2nd July 2016, 01:53 AM
http://oi68.tinypic.com/9geem8.jpg

sivaa
2nd July 2016, 01:55 AM
http://oi68.tinypic.com/16bnj38.jpghttp://oi67.tinypic.com/21mw3lk.jpg

sivaa
2nd July 2016, 01:57 AM
http://oi66.tinypic.com/dxfvib.jpg

sivaa
2nd July 2016, 01:57 AM
http://oi65.tinypic.com/a2fbwo.jpg

sivaa
2nd July 2016, 01:58 AM
http://oi66.tinypic.com/b83jib.jpg

sivaa
2nd July 2016, 02:03 AM
http://oi65.tinypic.com/2zp6yhe.jpg

sivaa
2nd July 2016, 02:03 AM
http://oi67.tinypic.com/30tl4z8.jpg

sivaa
2nd July 2016, 02:04 AM
http://oi67.tinypic.com/jt1kp4.jpg

sivaa
2nd July 2016, 02:05 AM
http://oi63.tinypic.com/ehlp5.jpg

sivaa
2nd July 2016, 02:05 AM
http://oi63.tinypic.com/fm2wjs.jpg

sivaa
2nd July 2016, 02:06 AM
http://oi66.tinypic.com/ekm3w1.jpg

sivaa
2nd July 2016, 02:07 AM
http://oi68.tinypic.com/m7esci.jpg

sivaa
2nd July 2016, 02:07 AM
http://oi64.tinypic.com/fxfre8.jpg

sivaa
2nd July 2016, 02:08 AM
http://oi68.tinypic.com/1zczq6t.jpg

sivaa
2nd July 2016, 02:08 AM
http://oi68.tinypic.com/2isk00y.jpg

sivaa
2nd July 2016, 02:09 AM
http://oi67.tinypic.com/j5ij9d.jpg

sivaa
2nd July 2016, 02:11 AM
யாழ்நகர் ராஜா திரை அரங்கில்
எங்கள் தங்க ராஜா

http://oi63.tinypic.com/eik00m.jpg

sivaa
2nd July 2016, 02:11 AM
http://oi63.tinypic.com/29w24wk.jpg

sivaa
2nd July 2016, 02:12 AM
http://oi67.tinypic.com/28u5oc4.jpg

sivaa
2nd July 2016, 02:13 AM
http://oi66.tinypic.com/f06a0k.jpg

sivaa
2nd July 2016, 02:14 AM
http://oi66.tinypic.com/amps44.jpg

sivaa
2nd July 2016, 02:15 AM
http://oi63.tinypic.com/2itr7kn.jpg

sivaa
2nd July 2016, 02:15 AM
http://oi64.tinypic.com/zkhi87.jpg

sivaa
2nd July 2016, 02:16 AM
http://oi67.tinypic.com/op4mkx.jpg

sivaa
2nd July 2016, 02:17 AM
http://oi64.tinypic.com/wl2nbs.jpg

sivaa
2nd July 2016, 02:20 AM
அனைத்து பதிவுகளுக்கான புகைப்படங்களை
தந்து உதவிய நண்பர் திரு சீனிவாசகோபாலன்
அவர்களுக்கு நன்றி

Russellbpw
2nd July 2016, 08:24 AM
http://oi66.tinypic.com/2q8yc2a.jpg

இனிய நண்பர் திரு சிவ அவர்களுக்கு

வணக்கங்கள். இந்த பதிவை நான் பதிவு செய்வதற்கு முதற்கண் எனது வருத்தங்கள்.

திரியில் தங்கள் பதிவு செய்யும் நடிகர் திலகம் அவர்களுடைய சரித்திர சஹாப்த அசுர சாதனை பற்றிய ஆவணங்களை நன்றி. ஆனால் அதில் மறைத்திரு எம் ஜி ஆர் அவர்களுடைய பெயர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருக்கிறதா என்று சற்று கூர்ந்து கவனித்து பதிவு செய்ய தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

காரணம் மக்கள் திலகம் அவர்களின் ஆராதகர்கள் மனம் வருத்தப்பட எந்த காலத்திலும் நாம் ஆளாக கூடாது. திரு எம் ஜி ஆர் - திரு சிவாஜி அவர்களின் உறவு என்பது மற்ற இதர நடிகர்களின் உறவு போல செயற்கையானது அல்ல. கிட்டத்தட்ட சகோதரத்துவம் வாய்ந்த உறவு அவர்கள் இருவருக்கும் கடைசி வரை இருந்ததை நாம் சற்று சிந்தித்தால் புரிந்துகொள்ளலாம். இருவரின் தாயார் இடமும் இருவரும் அதீத அன்பும் பாசமும் பற்றும் கொண்டவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் கால் வலி கண்டபோது அந்த தாயாருக்கு தைலம் தடவி விட்டவர் மக்கள் திலகம் அவர்கள். அதுபோல மக்கள் திலகத்திற்கு பசி எடுத்து உணவு கொடுங்கள் என்று அன்னை சத்யவிடம் கேட்டபோது...சற்று பொறு...கணேசன் வரட்டும் இருவரும் உண்ணலாம் என்று கூறியவர் அன்னை சத்திய அவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் திரு உருவ சிலையை திறக்க நடிகர் திலகம் வேறு யாரையும் அழைக்கவில்லை. மக்கள் திலகம் அவர்களைத்தான் அழைத்தார். இது போல மேலும் பல இனிய சம்பவங்கள் நமக்கும் தெரியும். அப்படி இருக்க ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவால் இந்த நல்ல விஷயங்கள் OVER SHADOW செய்யப்படக்கூடாது.

உத்யோகத்தில் போட்டி இருந்திருக்கலாம். அதுவும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளால் தான் அந்த போட்டி கூட இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நடிகர் திலகம் அவர்கள் அரசியலில் கூட, திரு எம் ஜி ஆர் அவர்களுக்காக அவரது கட்சிக்காக பிரச்சாரம் பல முறை மேற்கொண்டவர். அவருடைய துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருக்கு ஒரு சகோதரனாக உற்ற துணையாக மற்ற அனைவரும் மக்கள் திலகம் மறைந்தவுடன் கைவிட்ட நிலையில், அரசியல் களத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முதல் முதலாக கட்சி ஆரம்பித்து அதனை சாதகமாக பயன்படுத்தாமல் (நேற்று கட்சி ஆரம்பித்த பொடியார்கள் கூட முதல் அமைச்சர் கனவுடன் தனித்து போட்டியிடும் நிலையில்), அவருக்காக, அவருடன் இருந்த பாசப்பிணைப்பின் காரணமாக, திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்தவர் நடிகர் திலகம் என்றால் இருவரின் பாசத்திற்கும் எந்த பாசாங்கும் இல்லை என்பது உங்களுக்கு விளங்கும் ! இதில் இருந்தே அவர்களுக்குள்ள பரஸ்பர அன்பு தங்களுக்கு விளங்கும்.

இப்படி இருக்க நாமாக ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவு செய்து அவர்கள் மனதை கஷ்டப்பட வைக்க கூடாது என்பதை தாழமையுடன் தெரிவித்து கொள்கிறேன். தங்களுடைய இது போன்ற நோட்டீஸ் எதையேனும் இருப்பின் அதனை நீக்கிவிட அனைவரின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

நமது சாதனைகளை அவர்கள் அறிவார்கள் ....அவர்களின் சாதனைகளை நாமும் அறிவோம்....இதில் எதற்கு ஒரு பிரச்னையை கிளப்பும் ஒரு ஒப்பீடுகள் நமது பாகத்தில் இருந்து ? எனது மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் இங்கு பதிவு செய்கிறேன். தவறு ஏதேனும் இருப்பின் என்னை மணித்துக்கொள்ளுங்கள்.

Am extremely sorry if my open view had hurt you. Let us move cordially at all time unless and until there is invite that invites discrepancy.

Murali Sir...am sorry for expressing my views here.

நன்றி

RKS

sivaa
2nd July 2016, 06:12 PM
வணக்கம் சூரியா
நீங்கள் எழுதியதை தவறாக எடுக்கவில்லை
ஆனால் வருத்தம் இருக்கின்றது

நீங்கள் கேட்டுக்கொண்டதற்காக நீங்கள்
கேட்டுக்கொண்ட பதிவுகளை நீக்கத்தயார்
ஆனால் அவர்களது வேலூர் பதிவுகளில்
வசூல் ஒப்பீடுகள் இருக்கின்றன அதற்கு
நாங்கள் ஒன்றும் சொன்னதில்லை.


அவர்கள் கேட்டுக்கொண்டால் என்பதிவுகளை
நான் நீக்கிவிடுகின்றேன்.
ஆனால் அவர்கள் கேட்கும் பட்சத்தில்
அவர்களுடைய ஒப்பீட்டு வசூல் விபரம் உள்ள
பதிவுகளை அவர்கள் நீக்க வேண்டும்
அவர்கள் நீக்குவார்களா?

siqutacelufuw
2nd July 2016, 11:12 PM
இனிய நண்பர் திரு சிவ அவர்களுக்கு

வணக்கங்கள். இந்த பதிவை நான் பதிவு செய்வதற்கு முதற்கண் எனது வருத்தங்கள்.

திரியில் தங்கள் பதிவு செய்யும் நடிகர் திலகம் அவர்களுடைய சரித்திர சஹாப்த அசுர சாதனை பற்றிய ஆவணங்களை நன்றி. ஆனால் அதில் மறைத்திரு எம் ஜி ஆர் அவர்களுடைய பெயர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருக்கிறதா என்று சற்று கூர்ந்து கவனித்து பதிவு செய்ய தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

காரணம் மக்கள் திலகம் அவர்களின் ஆராதகர்கள் மனம் வருத்தப்பட எந்த காலத்திலும் நாம் ஆளாக கூடாது. திரு எம் ஜி ஆர் - திரு சிவாஜி அவர்களின் உறவு என்பது மற்ற இதர நடிகர்களின் உறவு போல செயற்கையானது அல்ல. கிட்டத்தட்ட சகோதரத்துவம் வாய்ந்த உறவு அவர்கள் இருவருக்கும் கடைசி வரை இருந்ததை நாம் சற்று சிந்தித்தால் புரிந்துகொள்ளலாம். இருவரின் தாயார் இடமும் இருவரும் அதீத அன்பும் பாசமும் பற்றும் கொண்டவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் கால் வலி கண்டபோது அந்த தாயாருக்கு தைலம் தடவி விட்டவர் மக்கள் திலகம் அவர்கள். அதுபோல மக்கள் திலகத்திற்கு பசி எடுத்து உணவு கொடுங்கள் என்று அன்னை சத்யவிடம் கேட்டபோது...சற்று பொறு...கணேசன் வரட்டும் இருவரும் உண்ணலாம் என்று கூறியவர் அன்னை சத்திய அவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் திரு உருவ சிலையை திறக்க நடிகர் திலகம் வேறு யாரையும் அழைக்கவில்லை. மக்கள் திலகம் அவர்களைத்தான் அழைத்தார். இது போல மேலும் பல இனிய சம்பவங்கள் நமக்கும் தெரியும். அப்படி இருக்க ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவால் இந்த நல்ல விஷயங்கள் OVER SHADOW செய்யப்படக்கூடாது.

உத்யோகத்தில் போட்டி இருந்திருக்கலாம். அதுவும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளால் தான் அந்த போட்டி கூட இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நடிகர் திலகம் அவர்கள் அரசியலில் கூட, திரு எம் ஜி ஆர் அவர்களுக்காக அவரது கட்சிக்காக பிரச்சாரம் பல முறை மேற்கொண்டவர். அவருடைய துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருக்கு ஒரு சகோதரனாக உற்ற துணையாக மற்ற அனைவரும் மக்கள் திலகம் மறைந்தவுடன் கைவிட்ட நிலையில், அரசியல் களத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முதல் முதலாக கட்சி ஆரம்பித்து அதனை சாதகமாக பயன்படுத்தாமல் (நேற்று கட்சி ஆரம்பித்த பொடியார்கள் கூட முதல் அமைச்சர் கனவுடன் தனித்து போட்டியிடும் நிலையில்), அவருக்காக, அவருடன் இருந்த பாசப்பிணைப்பின் காரணமாக, திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்தவர் நடிகர் திலகம் என்றால் இருவரின் பாசத்திற்கும் எந்த பாசாங்கும் இல்லை என்பது உங்களுக்கு விளங்கும் ! இதில் இருந்தே அவர்களுக்குள்ள பரஸ்பர அன்பு தங்களுக்கு விளங்கும்.

இப்படி இருக்க நாமாக ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவு செய்து அவர்கள் மனதை கஷ்டப்பட வைக்க கூடாது என்பதை தாழமையுடன் தெரிவித்து கொள்கிறேன். தங்களுடைய இது போன்ற நோட்டீஸ் எதையேனும் இருப்பின் அதனை நீக்கிவிட அனைவரின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

நமது சாதனைகளை அவர்கள் அறிவார்கள் ....அவர்களின் சாதனைகளை நாமும் அறிவோம்....இதில் எதற்கு ஒரு பிரச்னையை கிளப்பும் ஒரு ஒப்பீடுகள் நமது பாகத்தில் இருந்து ? எனது மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் இங்கு பதிவு செய்கிறேன். தவறு ஏதேனும் இருப்பின் என்னை மணித்துக்கொள்ளுங்கள்.

Am extremely sorry if my open view had hurt you. Let us move cordially at all time unless and until there is invite that invites discrepancy.

Murali Sir...am sorry for expressing my views here.

நன்றி

RKS

வணக்கங்கள் பல !

அருமையான வார்த்தைகளுடன் கூடிய விளக்கம் தந்த என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய உடன் பிறவா சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு நன்றிகள் பல. நண்பர் திரு. சிவா அவரகள் பதிவிடும் பொழுதெல்லாம் சர்ச்சைகள் ஏற்படுகிறது. தங்களின் யோசனைகளுடன் கூடிய அறிவுரையை அவர் ஏற்பாரா என்பது சநதேகமே ! அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரை புகழ்ந்து கொள்வதில் தவறில்லை.
மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்பதினால், இன்னொருவரை தாக்கி தங்கள் அபிமான நடிகரை புகழும் ரகத்தை சார்ந்தவர் திரு. சிவா எனபதில் மாற்று கருத்து கிடையாது என்பது அவரது முந்தைய பதிவுகளை பார்த்தால் புரியும்.

மக்கள் திலகத்தை கடவுளாக ஏற்று, அவரை பூஜிக்கும் நான், அன்னை ஜானகியின் கையால் உணவு உண்ட பலர் அரசியலில் அவருக்கு துரோகம் செய்த பொழுது, எந்த வித பிரதிபலனையும் பாராமல், 1988ம் வருடம், அரசியலில், தாமாக முன்வந்து, அன்னை ஜானகிக்கு உற்ற நேரத்தில். உதவிய நடிகர் திலகத்தின் பண்பினை வியந்து நான் பாராட்டியது என்னுடன் அந்த காலத்தில் இணைந்து பணியாற்றிய புரட்சித்தலைவர் காலத்து அரசியல்வாதிதிகளுக்கு தெரியும். இந்த காரணத்தினாலேயே, நான் இன்றும் அவர் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன்.

மேலும், புரட்சித்தலைவர் அவர்கள் மறைந்த பொழுது, " இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாழ்ந்தால் என் அன்பு ஆருயிர் அண்ணன் (எம்.ஜி. ஆர். என்று பெயர் கூட குறிப்பிட வில்லை என்று ஞாபகம்) போல் வாழ்ந்திட வேண்டும் " என்று நடிகர் திலகம் மறை-திரு சிவாஜி கணேசன் அவர்கள் கூறிய வார்த்தைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று !

நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது திரு. சிவா மற்றும் திரு. கோபால் போன்றவர்களின் நேரடி தாக்குதலால் நான் மனம் குலைந்து போன நிகழ்வுகள் பல உண்டு. நானும் ஆக்ரோஷமான, உணர்ச்சிப்பூர்வமான பதில்களை பதிவு செய்துள்ளேன். இது நடிகர் திலகம் திரி அன்பர்கள் பலருக்கும் தெரியும். ஆனாலும், அவர்கள் என் மீது ஆத்திரப்பட வில்லை. என் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு மவுனமாகி விட்டனர்.

என்றுமே, நானாக வலிய வந்து நடிகர் திலகத்தை தாக்கி பதிவுகள் மேற்கொண்டதே இல்லை. இதுவும் அவர்களுக்கு தெரியும்.

எனவே, வயதில் சற்று மூத்தவனாகிய என் அனுபவத்தில் சொல்கிறேன் - என் அன்பு - அருமை சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் கூறியது போல, சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்த்து, இந்த மய்யம் இணைய தளத்தையும், மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் திரிகளை சுமுகமாக கொண்டு செல்ல திரு. சிவா மற்றும் திரு கோபால் போன்றவர்கள் முன் வர வேண்டும்.

நன்றி !

sivaa
3rd July 2016, 03:17 AM
வணக்கம் திரு செல்வகுமார் சார்

நான் பதிவுகள் இடும்பொழுது நீங்கள் பார்க்கும் பார்வையும்
எடுத்துக்கொள்ளும் விதமும்தான் சர்ச்சையை ஏற்படுத்துகிறது


உங்கள் திரியில் பழைய நோட்டீஸ்களை வேலூர் பதிவுகள்
என்றபெயரில் வெளியீட்டு இலக்கங்களுடன் நண்பர் ஒருவர்
பதிவிட்டு வந்தாரே அதேபோன்றுதான் நானும் எங்கள் திரியில்
பழைய பத்திரிகை நோட்டீஸ் போன்றவற்றை பதிவிட்டேன்
உங்கள் பழைய நோட்டீசில் நடிகர் திலகத்தின் படங்களை
ஒப்பிட்டு விபரங்கள் இருந்தன அதற்கு நாங்கள் ஒன்றும் சொன்னது
கிடையாது. பழைய நோட்டீஸ் முன்னர் பார்க்கத்தவறியவர்களுக்காக
பதிவிடுகிறார்கள் என பெருந்தன்மையுடன் விட்டுவிட்டோம்


ஆனால் அதேபோன்று நான் பதிவிட்டால்மட்டும்
ஏன் குய்யோ முறையோ என உங்கள் பக்கம் குமுறுகிறீர்கள்.
தாக்கி எழுதுகிறீர்கள்.
உங்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா?


எவர் தூண்டினாலும் நடிகர் திலகத்தின் மீது உண்மையான பற்று இருந்தால்
நிச்சயமாக உங்களால் நடிகர் திலகத்தை தாக்கி எழுத முடியாது
ஆனால் நீங்கள்??????? நான் சொல்லத் தேவையில்லை
உங்கள் பழைய பதிவுகளே சொல்லும்.


உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதால்தான் எங்கள் பக்க
நண்பர்கள் பேசாமல் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் .............


மற்றவர்கள் ரசி......... என்ற உங்கள் கண்டுபிடிப்புக்கு
நிச்சயமாக நோபல் பரிசுதான் சார்.
என்னுடைய பதிவுக்கு கோபாலை ஏன் இழுக்கிறீர்கள் சார்.

RAGHAVENDRA
3rd July 2016, 09:34 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13592630_1146545895396081_2980459611028398525_n.jp g?oh=848229a841487dd4a5d48cb51754eccd&oe=57F84FDD

இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். இறைவன் அருளாலும் மக்கள் தலைவரின் நல்லாசியாலும் அவர் நீடூழி வாழ்ந்து எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

RAGHAVENDRA
3rd July 2016, 09:43 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13438917_1145835925467078_2699731821498153955_n.jp g?oh=dad8b757c6f6f01fc2caa6912d78a3c7&oe=57F85487

நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் அடுத்த நிகழ்ச்சி...

சிவகாமியின் செல்வன் திரைப்படம் திரையிடப்படுகிறது. விவரம் விரைவில்..