PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

Russellxor
27th January 2017, 04:14 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/e8148617cbf59140afd70c3696580872.jpg

Russellxor
27th January 2017, 04:15 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/f4e257f26aa2fd534adc8dbf33fd6134.jpg

Russellxor
27th January 2017, 04:16 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/38eff661aa666702ff75d02b947a373a.jpg

Russellxor
27th January 2017, 04:20 PM
[emoji91] தியாகி[emoji91]


https://uploads.tapatalk-cdn.com/20170127/41ba2f25f521d7d9de1e64f9024e2fce.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170127/fd72331ce077ae24d5b6bc33769634e7.jpg

Russellxor
27th January 2017, 04:22 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/89f4677bbba9bbbb8bc08ee25b390f46.jpg

Russellxor
27th January 2017, 04:23 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/bacec0a102d2f60c82c07cf4e3f99e8a.jpg

Russellxor
27th January 2017, 04:24 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/8ee6742adff69fd33281fd55eacb48f7.jpg

Russellxor
27th January 2017, 04:24 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/6f97baac5307eb2b7c4bb6ec3d38f258.jpg

Russellxor
27th January 2017, 04:26 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/b10c6f3adbc999f5fd4e20ac5336616a.jpg

Russellxor
27th January 2017, 04:44 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/537851132b032a562f98c0b7e13e9e81.jpg

Russellxor
27th January 2017, 04:45 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/0e040b353899b5f781ebbf3f3c695734.jpg

Russellxor
27th January 2017, 04:48 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/ac02c622d308ec3f14036de2396faedf.jpg

Russellxor
27th January 2017, 04:51 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/2b7946e0f33439029b92c9d644194384.jpg

Russellxor
27th January 2017, 04:53 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/b5b6f4a9c0bde557f7b410479aa0b0b7.jpg

Russellxor
27th January 2017, 04:54 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/164b46d6f6bd560ed2d0cca7d3c0d7e3.jpg



https://uploads.tapatalk-cdn.com/20170127/2fa1ebe3e16a10d207cc6d6451b803b8.jpg

Russellxor
27th January 2017, 07:43 PM
[emoji617] ஜெனரல் சக்கரவர்த்தி[emoji575]


https://uploads.tapatalk-cdn.com/20170127/9091e5178b4794f1a1af6d1f94f0b32e.jpg

Russellxor
27th January 2017, 07:44 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/bd6e3449102ba9df59a5ae68a1e56373.jpg

Russellxor
27th January 2017, 07:51 PM
ஒரே வாரத்தில் 150 ஹவுஸ்புல் காட்சிகள். அண்டை மாநிலத்திலும் சாதனை புரிந்துள்ளார் தமிழின் சாதனை மன்னன்.

https://uploads.tapatalk-cdn.com/20170127/624b0e8cafe3c7d1520fac374fab097d.jpg

Russellxor
27th January 2017, 07:55 PM
கருடா [emoji94]
[emoji216] [emoji216] [emoji216] சௌக்கியமா?


https://uploads.tapatalk-cdn.com/20170127/32c608a4c158671d36754bacb2053ef5.jpg

Russellxor
27th January 2017, 07:56 PM
https://uploads.tapatalk-cdn.com/20170127/7664c33a22211289cd18703d32a3c66b.jpg

Russellxor
27th January 2017, 07:59 PM
[emoji303] [emoji303] [emoji303]இமயம் [emoji303] [emoji303] [emoji303]



https://uploads.tapatalk-cdn.com/20170127/838aa8f0498bc35efeb82e8295148f3e.jpg

vasudevan31355
27th January 2017, 08:53 PM
எங்களின் செல்லப்பிள்ளை இளவல் செந்தில்வேல்!

ஜமாய்த்து விட்டாய் ராஜா. அமர்க்களமான அமர்க்களம். இருநூறுகளுக்குப் பின் நடிகர் திலகத்தின் வெளியே தெரியா சாதனைகளை புறம் சொல்லி தூற்றியவர்கள் முகத்தில் அற்புதமான பேப்பர் கட்டிங்குகளை வைத்து அவர்கள் முகத்தில் கரி பூசி விட்டாய். இந்த ஆதாரங்கள் ஒன்று போதும். காலாகாலத்துக்கும் பேசும். தியாகி, பரீட்சைக்கு நேரமாச்சு, மாடி வீட்டு ஏழை, ஜெனரல் சக்கரவர்த்தி, எமனுக்கு எமன், பேயாட்டம் ஆடிய திரிசூலம் என்று தலைவரின் சாதனைகள் வியக்க வைக்கின்றன. சந்தைக்கு உங்கள் மூலம் வெளிவந்தவுடன் மணம் பரப்பும் நடிகர் திலகத்தின் புது பூக்கள்.

யம்ம்மாடி! என்ன மாதிரி விளம்பரங்கள்! அனைத்தும் நான் பார்த்து ரசித்தது. வெளிவராத படங்களின் எண்ணிக்கை தலைவர் என்றுமே திரையுலகில் எவரும் நெருங்கமுடியாத ராஜா என்றும் பறை சாற்றுகின்றன. 'புண்ணிய பூமி' படத்தில் தலைவர் முரட்டுத்தனமாக கோடரி பிடித்திருக்கும் அந்த விளம்பரம் தினத்தந்தியில் முழுப்பக்கம் வந்து அன்றைய என் தூக்கத்தைக் கெடுத்தது. அந்த பேப்பரை எட்டாக மடித்து கடலூர் நூல்நிலையத்தில் இருந்து சுட்டதும் நினைவுக்கு வருகிறது.

எப்படி இருநூறுக்கு முன் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அதே போல இருநூறுக்குப் பின் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக 'திரிசூலம்' படம் வந்த போது இளைஞர்களாயும், மாணவர்களாயும் இருந்தவர்கள்.

என்னிடம் கோல்ட் ஸ்டார், நீங்கள், நம் அன்புக்குரிய திருச்சி பாஸ்கர், மற்றும் பல நண்பர்கள் போனில் உரையாடும் போது இருநூறுக்குப் பிறகு வந்த தலைவரின் பல படங்கள் எங்களுக்குப் பிடித்தமானவை...அவைகளை பற்றி எழுதுங்கள் என்று கேட்பார்கள். இப்போது அவற்றில் சிறந்தவற்றை எடுத்து எழுத ஆசை. குறிப்பாக சிம்ம சொப்பனம்.

நீங்கள் அளித்த ஒவ்வொரு பேப்பர் கட்டிங் பதிவுகளும் என்னுள்ளே பல நினைவுகளை கிளர்ந்து எழ செய்கின்றன. நாங்கள் இளைஞர்கள் கடலூரில் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு படத்திற்கும் செய்த அமர்க்களங்கள் கொஞ்சமா நஞ்சமா? 'கீழ்வானம் சிவக்கும்' படத்திற்கு கடலூர் வேல்முருகன் திரையரங்கில் முதல் நான்கு வாரங்களுக்கு பெண்களுக்கு மட்டும் டிக்கெட் தந்த சாதனைகள் நினைவில் இனிமையாக நிழலாடுகின்றன.

'தியாகி' ஒரு மாதங்கள் ஓடி வசூலில் பின்னியது.

'நல்லதொரு குடும்பம்' 45 நாட்களுக்கு மேல் கடலூர் ரமேஷ் திரை அரங்கில் ஓடி களேபரம் பண்ணியது.

'எமனுக்கு எமன்' படம் கடலூர் கமலத்தில் எப்போதுமே கூட்ட நெரிசலுடன் ஓடி வாகை சூடியது. அதே தியேட்டரில் 'வாழ்க்கை' சொல்ல முடியாத சாதனைகளை நிகழ்த்தி 50 ஆவது நாள் ஷீல்டுடன் அலங்காரமாய் மின்னியது.

'சத்திய சுந்தரம்' படத்திற்கும் பெண்களுக்கு மட்டுமே முதல் இரண்டு வாரங்களுக்கு தரப்பட்டது. யாருமே எதிர்பாரான வகையில் 'அதிசயத் தம்பதிகள்' என்ற இந்த 'சத்திய சுந்தரம்' கடலூரில் 'திரிசூலம்' படத்தின் வசூலை எட்டியது. மகாமகத் திருவிழா போன்று அப்படி ஒரு கூட்டம் இப்படத்திற்கு. நம் அருமை நண்பர் கல்நாயக் இதை அறிந்திருப்பார் என்று நம்புகிறேன்.

இதில் ஏமாற்றிய படங்கள் 'வசந்தத்தில் ஒரு நாள்' மற்றும் 'பரிட்சைக்கு நேரமாச்சு'. இரண்டும் வேல்முருகன் திரையரங்களில் சுமாராகத்தான் ஓடின. 'லாரி டிரைவர்' அருமையாக கல்லா கட்டினார். வேல்முருகன் திரை அரங்கில் தலைவரின் முதல் படம். இருபத்து எட்டு நாட்கள் வசூல் சாதனை நிகழ்த்தியது. அதே போல பாடலியில் 'கவரிமானு'ம் அருமையாக ஓடியது. 'திரிசூல'த்தின் பிரம்மாண்டத்தில் இந்த சாதனை வெளியே தெரியாமல் போய் விட்டது.

'வெள்ளை ரோஜா' பற்றி சொல்லவே தேவையில்லை. உடன் வெளியான அத்தனை படங்களையும் முறியடித்து வசூலில் பிரம்மாண்ட சாதனையை கடலூர் நியூசினிமாவில் நிகழ்த்திக் காட்டியது.

'திருப்பம்' கடலூர் கமலத்தில் அபார வெற்றி பெற்று கலக்கியது. இந்தப் படத்தின் ரசிகர் ஷோவுக்கு நடந்த அமர்க்களம் போல வேறு இந்தப் படத்திற்கும் நடந்திருக்காது. தியேட்டரில் அள்ளிய லாட்டரி டிக்கெட் கவுண்டர் பைல்கள் மலை போல குவிந்து கிடந்தன. தலைவர் சவப்பெட்டி இழுத்து வரும் அறிமுகக் காட்சியில் இடி விழுந்தது போனற ஆரவாரம்.

அதே போல 'சாதனை' அமர்க்களமாக ஓடி சாதனை செய்தது. இத்தனைக்கும் இரண்டாவது ரிலீஸ்.

நெஞ்சங்கள், இமைகள், இரு மேதைகள், எழுதாத சட்டங்கள், சிரஞ்சீவி, நேர்மை, குடும்பம் ஒரு கோவில் இவையெல்லாம் நம்மை ஏமாற்றிய படங்கள்.

'மாடி வீட்டு ஏழை' ஒரு மாதம் கமலத்தில் நன்றாகக் போனது.

'விஸ்வரூபம்' பெயரைப் போலவே விஸ்வரூப வெற்றி ஈட்டியது. இது பாடலியில்.

நீண்ட நாட்களுக்குப் பின் கடலூர் முத்தையா புதுப்பிக்கப்பட்டு 'சந்திப்பு' பேயாட்டம் ஆடியது. 50 நாட்களும் மாசி மகாமகத் திருவிழா போல அப்படி ஒரு கூட்டம். தியேட்டர் சிப்பந்திகள் பலர் பிளாக்கில் டிக்கெட் விற்றே ஒவ்வொருவரும் 5 பவுனுக்கு மேல் மோதிரம் போட்டுக் கொண்டதை அவர்களே சொல்லி கேட்டிருக்கிறோம்.

'இமயம்' பாடலியில் நான்கு வாரங்கள் போனது.

'சரித்திர நாயகன்' அதே முத்தையாவில். ஆனால் சரியாகப் போகவில்லை.

'வெற்றிக்கு ஒருவன்' பாடலியில் சுமாராக போனது.

'தீர்ப்பு', 'நீதிபதி' இரண்டும் வேல்முருகன் திரையரங்கில் அமர்க்களமாக 50 நாட்கள் தாண்டி ஓடி வசூலில் புது சாதனை நிகழ்த்தின.

'பந்தம்' நியூசினிமாவில் பக்கா வசூலுடன் ஒரு மாதம் ஓடியது.

சில படங்கள் ஓடாமல் இருக்கலாம். அது படத்தின் தரத்தைப் பொறுத்தது. புற்றீசல் போல வந்த படங்களுக்கிடையில் நல்ல படங்கள் சில அடி வாங்கியது. ஆனால் அவரது படங்களே பலமாகப் போட்டியிட கருடா சௌக்கியமா, துணை இரண்டும் கடலூரில் பெரிய வெற்றியைப் பெற்றன. அது மட்டுமல்ல...தொடர்ச்சியாக இரண்டு மெயின் தியேட்டர்களில் கடலூர் கமர் மற்றும் ரமேஷ் இந்த இரண்டு படங்களும் ஓடி நல்ல வசூல் பெற்றன. வா கண்ணா வா கடலூர் கமரில் அபார வெற்றி. ஆனால் கமலத்தில் 'ஊருக்கு ஒரு பிள்ளை' சுமாராகத்தான் போனது.

எல்லா கால கட்டங்களிலும் சில படங்கள் ஓடும்...சில படங்கள் ஓடாது... இது அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும். நடிகர் திலகத்திற்கும் அப்படித்தான். ஆனால் 'திரிசூலம்' படத்திற்கு பிறகும் அவரது சாதனைகள் தொடர்ந்ததை தங்களின் விளம்பரப் பதிவுகள் அருமையாக உணர்த்துகின்றன. இந்த உண்மையை மறைக்க எவராலும் இனி இயலாது. உங்கள் ஆதாரப் பதிவுகள் ஒன்றே போதும்.

இதில் இன்னொரு ஆச்சர்யம் என்ன தெரியுமா? நமக்கே பிடிக்காத 'தர்மராஜா' படம் கடலூரில் இருபத்தைந்து நாட்கள் ரமேஷ் திரையரங்கில் பலமாக ஓடியது. எங்களாலேயே நம்ப முடியவில்லை.

அன்றும் இன்றும் என்றும் வருடம் பதினைந்து படங்கள் தந்தாலும் வசூல் மன்னர் நம் தலைவரே என்று அருமையான ஆதாரங்கள் மூலம் நிரூபித்துக் காட்டிய உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்
செந்தில்.

என்றுமே வசூலில் அவர் நிரந்தர தனிக்காட்டு 'ராஜா'தான்.

அதே போல 'திரிசூல'த்திற்கு பிறகு வந்த படங்களைப் பற்றிய நினைவலைகளை மீண்டும் நினைத்துப் பார்க்க வைத்ததற்கு கூடுதல் நன்றி செந்தில்.

Russellsmd
27th January 2017, 09:38 PM
திரிசூல தினம்.

http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170127204722786_zpsir0z ldja.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170127204722786_zpsir0z ldja.jpg.html)

sivaa
27th January 2017, 10:28 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16265849_1223961467720741_5745315689518410219_n.jp g?oh=b874c5a2f731c70ffaa03c88e9e41304&oe=5949C5B5


1979 ஆண்டு வாக்கில் தமிழகத்தின் மக்கள் தொகை 4 கோடியே 40 லட்சம், அதே ஆண்டில் வெளியான நடிகர்திலகத்தின் 200 வது படமான "திரிசூலம் " படத்தினை கண்டு மகிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சமாகும்
( details from Thirisulam Wikipedia at Google search)

(முகநூலில் இருந்து)

sivaa
27th January 2017, 10:31 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/16178789_393760974303061_5101206375204092685_o.jpg ?oh=281c8f9d70159b9a41f12dccbc72f444&oe=591C5DF4

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/16178789_393760974303061_5101206375204092685_o.jpg ?oh=281c8f9d70159b9a41f12dccbc72f444&oe=591C5DF4

நன்றி : தினகரன் நாளிதழ். வெள்ளி மலர்

sivaa
27th January 2017, 11:02 PM
எங்களின் செல்லப்பிள்ளை இளவல் செந்தில்வேல்!

ஜமாய்த்து விட்டாய் ராஜா. அமர்க்களமான அமர்க்களம். இருநூறுகளுக்குப் பின் நடிகர் திலகத்தின் வெளியே தெரியா சாதனைகளை புறம் சொல்லி தூற்றியவர்கள் முகத்தில் அற்புதமான பேப்பர் கட்டிங்குகளை வைத்து அவர்கள் முகத்தில் கரி பூசி விட்டாய். இந்த ஆதாரங்கள் ஒன்று போதும். காலாகாலத்துக்கும் பேசும். தியாகி, பரீட்சைக்கு நேரமாச்சு, மாடி வீட்டு ஏழை, ஜெனரல் சக்கரவர்த்தி, எமனுக்கு எமன், பேயாட்டம் ஆடிய திரிசூலம் என்று தலைவரின் சாதனைகள் வியக்க வைக்கின்றன. சந்தைக்கு உங்கள் மூலம் வெளிவந்தவுடன் மணம் பரப்பும் நடிகர் திலகத்தின் புது பூக்கள்.

வாசு சார்
ஒரு விடயம் என்னஎவன்றால்

நடிகர் திலகம் செய்த உதவிகள், பல நல்லகாரியங்கள்,
கொடுத்த கொடைகள்,மற்றும் அவரது படங்கள்
செய்த சாதனைகள்,ஓடிய நாட்கள், பெற்ற வசூல்கள்
இவை அனைத்தும் வெளியே தெரியவராமல்
இருந்த காரணத்தால், எதிரிகள் நடிகர் திலகம் பற்றி
இட்டுக்கட்டி கதை பரப்பவும் , பொய் செய்திகளை
உலவவிடவும் காரணமாகிவிட்டது.

அவரது சாதனைகள் , அவர் செய்த உதவிகள்,
கொடுத்த கொடைகள் செய்திகளாக வெளியே
தெரியவரவில்லை என்பதனால் அவை அனைத்தும்
இல்லையென்று ஆகிவிடாதல்லவா?

ஆனால் நடிகர் திலகத்தின் எதிரிகள் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கறார்கள்.காரணம்
அப்படி வளர்க்கப்பட்டுவிட்டார்கள் .
பாவம் அவர்கள்.

RAGHAVENDRA
27th January 2017, 11:23 PM
வாசு சார்.அருமை..சூப்பர்.. எப்படிப் பாராட்டுவதென்பதே தெரியவில்லை. என் மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே copy செய்து இங்கே paste பண்ணி விட்டீர்கள். இது மெமரியில் நிரந்தரமாக குடிகொண்டு விடும். செந்தில்தங்கள் பணிக்கு நாங்கள் எத்தனை முறை பாராட்டும் நன்றியும் தெரிவித்தாலும் போதாது. இருந்தாலும் உளமார்ந்த நன்றி.நடிகர் திலகத்தின் ஆசிகள் உங்களுக்கு பரிபூரணமாக உண்டு.வாழ்க

Murali Srinivas
27th January 2017, 11:28 PM
செந்தில்,

மீண்டும் நேற்று சொன்ன வரிகளையே பதிவிடுகிறேன்.

உங்களது இடைவிடாத ஆவண தேடல்களுக்கும் அபார உழைப்பிற்கும் சிரந்தாழ்ந்த நன்றி.

வாசு,

உங்களது உணர்வுபூர்வமான பதிவிற்கு ஒரு சல்யூட்!

அன்புடன்

vasudevan31355
28th January 2017, 08:17 AM
முரளி சார்,

நாம் மையத்தில் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பின்னும் மறவாமல் சிபிஐ ராஜனை, அவர் பெருமைகளை வாசித்து இங்கே பகிர்ந்து கொண்டதற்கு தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

தாங்கள் குறிப்பிட்டது போல சென்னை மகாலஷ்மியில் 'ராஜா' சமீபத்தில் திரையிடப்பட்டபோது என் மனது இங்கேயே இல்லை. எவ்வளவோ வர முயற்சி செய்தும் ஆபிசில் வேலைப்பளுவினால் இயலாமல் போயிற்று. நாம் ஒன்றிணைந்து பார்த்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அணுஅணுவாக ரசித்து இருக்கலாமே!

இருந்தாலும் நானும், கோபால் சாரும் இரண்டு தினங்களுக்கு முன் 'ராஜா' பற்றி அலைபேசியில் மணிக்கணக்கில் பேசி மீண்டும் ஆசையைத் தீர்த்துக் கொண்டோம்.

மதுரையில் 'ராஜா' ரீரிலீஸ் பற்றி தாங்கள் சுருக்கமாக எழுதியிருந்தது மிகவும் சுவையாக இருந்தது. 22 நாட்கள் சிந்தாமணியில் மீண்டும் ராஜா ஓடியது புல்லரிக்க வைக்கிறது.

இதே எங்கள் கடலூரில் 1984-ல் ஒரு தடவை திடீரென்று தீபாவளிக்கு முன் யாருமே எதிர்பாராவண்ணம் பாடலி திரையரங்கில் 4 நாட்கள் மட்டும் கேப்பிற்காக 'ராஜா' திரையிடப்பட்டது. டெக்ரேஷன் பண்ணக் கூட நேரமில்லை. ஆனால் அந்த நான்கு நாட்களும் புதுப்பட ரிலீஸ் போல தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. அதுவும் செகண்ட் ஷோ எனப்படும் இரவுக்கு காட்சிக்கு பாடலி தியேட்டரின் கவுண்ட்டர்கள் உடைந்தன. ரிலீசில் கடலூர் நியூசினிமாவில் கவுண்டர்கள் உடைந்தன என்று 'ராஜா' ரிலீஸ் பற்றி முன்னம் எழுதியிருக்கிறன். 'ராஜா' என்றாலே கவுண்டர்கள் உடையும் போல. கியூவில் நிற்கும் போது எங்கள் தலை மேலெல்லாம் ஆட்கள். அந்த நான்கு நாட்களும் இரவுக் காட்சிக்கு டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. தியேட்டர் நிர்வாகம் இப்படி ஒரு கும்பலை எதிர்பார்க்கவே இல்லை. இரவுக்கு காட்சிக்கு வந்த சைக்கிள்கள் என்ட்ரன்ஸ் கேட்டையும் தாண்டி நின்றது. உள்ளே கேட்கணுமா? ரந்தாவுடனான பைட்டிற்கு தியேட்டர் கிழிந்தது.

இது ஒருபுறம் இருக்க 1981- ம் வருடம் பாண்டி ராஜா திரையரங்கில் 'ராஜா'வை மீண்டும் திரையிட்டார்கள். ராஜாவில் ராஜா. கண்மூடித் திறப்பதற்குள் மாலைக் காட்சி ஹவுஸ்புல். எங்களுக்கு முதல் வகுப்பு டிக்கெட் கிடைத்தது. உள்ளே பாண்டி ரசிகர்கள் ஒரே அமர்க்களம். ஆனந்தமாக பார்த்து விட்டு வந்தோம்.

தலைவர் படத்தில் 'ராஜா' ரீ ரிலீஸில் பல சாதனைகளை நிகழ்த்தியதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இதை 'திவ்யா' பிலிம்ஸ் சொக்கலிங்கம் சார் ரீஸ்டோர் செய்து டிஜிட்டலில் எடுத்தால் வெற்றி நிச்சயம்.

முரளி சார்,

உங்களால் நிச்சயம் முடியும். 'ராஜா' மீண்டும் டிஜிட்டலில் வெளிவர ஆவண செய்யுங்கள். எங்களால் முடிந்த அத்தனை ஒத்துழைப்பையும் அளிக்கிறோம். இன்றைய இளம் தலைமுறை நம் தலைவரின் ஸ்டைலைக் கண்டு மிரண்டே போகும். நன்றி முரளி சார்.

vasudevan31355
28th January 2017, 08:18 AM
சிவா சார்,

நீங்கள் கூறியது போல மல்லிகையின் மணத்தை மறைத்து வைக்க இயலுமா? நடிகர் திலகத்தின் சாதனைகள் வெளிவந்தபடியேதான் இருக்கும். செந்தில், மற்றும் உங்களைப் போன்றவர்களால் அவர் சாதனைகளும் சரித்திரங்களும் மென்மேலும் பரவும்.

ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி. 'குட்மார்னிங்'குகள் அட்டகாசம்.

RAGHAVENDRA
28th January 2017, 10:06 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16195114_1337276332989702_8820060669601751625_n.jp g?oh=d7dd4f2b34c91c71aa71abb62f821dad&oe=5947F9B5

Russellxor
28th January 2017, 11:20 AM
முதற்கண் என் நன்றிகளை திரி நண்பர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
(ராகவேந்திரா சார்
முரளி சீனிவாஸ் சார்
வாசு சார்
கோபால் சார்
சிவா சார்
ஆதிராம் சார் .
ஆதவன் ரவி சார் )

வாசு சார்
80 களின் சரித்திரத்தையே சில மணிகளில் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்.இது அனைவருக்கும் சந்தோசத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும். தொடர்ந்து இது போல் வருகை தாருங்கள்.

அலைபேசியில் அழைத்து வாழ்த்திய முரளி சீனிவாஸ் அவர்களின் ஒரு புதிய பதிவை அனைவரும் எதிர்பார்க்கிறோம்..

adiram
28th January 2017, 01:47 PM
அன்புள்ள செந்தில்வேல் சார்,

என்ன சொல்வது, எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு ஆவணப் பதிவுகளால் திணறடித்து வருகிறீர்கள். எப்படி பாராட்டுவது எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

1976 - 1985 காலகட்டங்களில் வந்த விளம்பர பதிவுகள் அனைத்தும் அருமையோ அருமை. இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவை மங்காத பொலிவுடன் திரியில் வலம் வருவது மிகுந்த மகிழ்சசியளிக்கிறது.

ஒரு ஆவணம் நூறு பதிவுகளுக்கு சமம் என்பார்கள். நீங்களோ நூற்றுக் கணக்கான ஆவணங்களை தந்து அசத்தி வருகிறீர்கள்.

சாதனைக் காவியம் திரிசூலத்தின் முழுமையான ஆவண வரிசை இப்போதுதான் கிடைத்திருக்கிறது. அத்துடன் திரியில் இதுவரை இடம்பெறாத ரிஷிமூலம், கவரிமான், மாடிவீட்டு ஏழை, நாம் பிறந்த மண், ஜெனரல் சக்கரவர்த்தி, சத்திய சுந்தரம், தியாகி உட்பட பல திரைக் காவியங்களின் விளம்பர ஆவண வரிசை அற்புதம், அட்டகாசம் இன்னும் அதுக்கும் மேலே.

தங்கள் தொய்வில்லாத உழைப்புக்கு எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

adiram
28th January 2017, 02:16 PM
அன்புள்ள வாசு சார்,

நண்பர் செந்தில்வேல் அவர்களின் ஆவண வரிசையைத் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் கடலூர் நகரில் நடிகர்திலகத்தின் படங்கள் ஓடிய விவரங்களை சுவையாக தொகுத்துள்ளீர்கள். சரியாக போகாத படங்களையும் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளீர்கள். அதுதானே நம் ரசிகர்களின் கண்ணியம். அதனால்தானே சிவாஜி ரசிகன் எதை சொன்னாலும் அது சரியாகவே இருக்கும் என்று உலகம் ஏற்கிறது.

கோபால் அவர்களின் ராஜா மீள்பதிவை தொடர்ந்து உங்கள் அசைபோடல்கள் செம்மை. உங்களைத்தான் கொஞ்சம் தூண்டி விட்டால் போதுமே சதிராட்டம் ஆடிவிடுவீர்களே.

'கல்யாண பொண்ணு' பாடலுக்கு தலைவர் ஆட்டம் தூள். ஆனால் அதைத் தொடரவிடாமல் இரண்டாவது சரணத்தில் படகில் ஏற்றிவிட்டு அவர்து ஆட்டத்தை கட்டுப்படுத்தி விட்டார் சி.வி.ஆர். இதுபோல ரொம்ப சின்ன சின்ன குறைகளும் உண்டு. உதாரணமாக ஆரம்பத்தில் சிறையிலிருந்து தப்பித்த பின் விஸ்வத்தை ராஜா சந்திக்கவில்லை. கமிஷனர் பிரசாத் லைட்டர் கேமராவை ராஜாவிடம் கொடுத்தபின் கிளைமாக்சில்தான் ராஜா விஸ்வத்தை பார்ப்பார். ஆனால் லைட்டர் கேமராவில் எடுத்ததாக பிரசாத்திடம் ராஜா கொடுக்கும் போட்டோக்களில் விஸ்வம் போட்டோவும் இருக்கும். (இதெல்லாம் 'ராஜாவை நாங்க எவ்வளவு துல்லியமா பார்த்திருக்கோம்' என்று பெருமைப் பட்டுக்கொள்வதற்காக்கும்.. ஹி.. ஹி )

ஜமாய்ங்க தலைவரே.
உங்கள் ஆதி.

Russellsmd
28th January 2017, 09:56 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161212224909194_20161212225633681_zpsfn6r s55v.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161212224909194_20161212225633681_zpsfn6r s55v.jpg.html)

ரசிக்கத்தக்க நல்ல பாடல்கள், அழகான குழந்தைகளைப் போல.

எந்தக் குழந்தையும் "என்னைக் கொஞ்சு" என்று
விளம்பரப் பலகை வைத்துக் கொண்டு கெஞ்சுவதில்லை.

கொஞ்சத் தூண்டும் அதன் அழகே, 'வேறு வழியில்லை.. கொஞ்சியே ஆக வேண்டும்' என்கிற அந்த அழகின் கர்வமிகு நிலைப்பே நாம்
கொஞ்சுவதற்கான அழைப்பாகிறது.

இந்தப் பாடலும் ஓர் அழகான குழந்தை. நம் நினைவு வாசல்களில் ஆர்ப்பரித்து விளையாடும்
குழந்தை. குறும்பு மாறாத, துள்ளலும், வேகமும் மிகுந்த குழந்தை.

"கொஞ்சாமல் போய் விடு.. பார்ப்போம்" என்று
செல்லமாய் மிரட்டும் குழந்தை.
*****

"தன் நிழலையும்
தள்ளாட வைக்கிறான்...
குடிகாரன்"
- முன்பு நானெழுதிய கவிதை.

பெரிசாய் தாடி வளர்த்துக் கொண்டு, எந்நேரமும்
சோகித்துக் கொண்டு, எதையோ பறிகொடுத்தாற்
போல் எப்போதும் விட்டம் வெறித்துக் கொண்டு
இருப்பதற்காகத்தான் குடிக்கிறார்கள் என்று நான்
நினைத்திருந்தது இந்தப் பாடல் பார்த்து மாறியது.

உறவென்று யாருமற்ற வேதனையை, நல்லதெது,
கெட்டதெது என்று எடுத்துச் சொல்ல ஆளில்லாமல்
வளர்ந்த கொடுமையை, மதுப் புட்டி, லாரி, இரவு
ராணிக்காக தியாகித்த இரவுகள் என்று தன்னைச்
சுற்றி ஒரே மாதிரியாகச் சுழலும் உலகத்தினின்றும் தன்னைத் துண்டித்துக் கொள்ளவும், அதற்காக இனிமையாகத் தன்னை தண்டித்துக் கொள்ளவும் கூட குடிப்பார்கள் என்பது
இந்தப் படம் பார்த்து புரிந்தது.
*****

"ஒரு இளைஞன் குடித்திருக்கிறான். அத்துடன்
விடாமல் விலைமாது வீட்டுக்குப் போகிறான் .. ஆட்டம் போடுகிறான்" என்றொரு பாட்டுச் சூழலை
ஒரு இயக்குநர் சொல்லி, பெண்கள் மிகுதியாகப்
பார்க்கும் தன் படத்தில் அதை இடம் பெறச் செய்ய
ஒத்துக் கொண்டு, கொஞ்சமும் விரசமின்றி அதை
வெற்றியாக்கிச் சாதிக்க நடிகர் திலகமன்றி யார்
இங்கே?
*****

இசைக்கேற்றாற் போல் ஆடுவதும், பாடல் வரிகளுக்குச் சரியாக வாயசைப்பதும் மட்டுமே
போதும் என்று நாயகன் இருந்திருந்தால் இந்தப் பாடல் ஜெயித்திருக்காது.

அந்த அழகியோடு அங்கே பாடி, ஆடுவது சும்மா
ஒரு பொம்மையல்ல. உணர்வுகள் மிகுந்த ஒரு
உயிர்ப்பான மனிதன். தன்னுடைய வாழ்வின்
வெம்மைக்காக கவலை கொண்டு சோர்ந்து
போகாத, தன்னை நோக்கி வரும் இன்ப நிமிஷங்களை வீணாக்கப் பிரியமில்லாத புத்திசாலி. வாழ்வின் கோர முகங்களையும் சந்தித்து வந்த அனுபவசாலி. இரவில் விழித்து
ஆர்ப்பரிக்கும் ஒரு வீட்டுக்குள்ளிருந்து இந்த
அவல உலகை விமர்சிக்கும் தைரியசாலி.

சும்மா ஆடுகிற, பாடுகிற கதாநாயகன் இங்கே
தேவைப்படமாட்டான்.

அந்தப் பாடலில் நடிக்க ஒரு வேகம் வேண்டும்.

வாழ்க்கை மீதும், சக மனிதர்கள் மீதும் பெரிய
மரியாதை ஏதும் வைத்திராத ஒரு அலட்சியம்
அந்த முகத்தில் தெரிய வேண்டும்.

குடியும், காமமும் அப்படியொன்றும் தப்பில்லை
என்று சொல்ல வருகிற துணிச்சலைக் காட்ட வேண்டும்.

தனக்குப் பழக்கமான அவலமான வாழ்வை கிண்டலாகவும், கர்வமாகவும் ஆராயும் திறமை
காட்ட வேண்டும்.

ஒரு தேர்ந்த கஜல் பாடகனின் கையசைப்பு பாவனைகள்..

வாழ்வின் மீது எவ்வித மரியாதையும் இல்லாததை
உணர்த்தும் அந்தக் கர்வக் கண்கள்...

தன்னுடைய தீய பழக்கங்கள் குறித்து கவலைப்படாததைக் காட்டும் அந்த முகத்தின்
அலட்சியங்கள்...

துள்ளலான அந்த ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தின் முழுமைத்
தன்மை ...

இவற்றை வைத்துக் கொண்டு நம்மை இந்தப்
பாடல் வழி வசீகரிக்க ஒரே ஒரு நடிகர் திலகம்
இருக்கிறாரே..?

அந்த நாயகனின் ரசிகரென்கிற பெருமை நம் ஆயுசுக்கும் வேண்டும்.


http://youtu.be/tmnhS1KSK9k

Russellxor
28th January 2017, 11:00 PM
https://uploads.tapatalk-cdn.com/20170128/9d70022b79338025335769c7834854d2.jpg

Russellxor
28th January 2017, 11:02 PM
https://uploads.tapatalk-cdn.com/20170128/7cc380225c10205e2fbe204572276137.jpg

Russellxor
28th January 2017, 11:07 PM
[emoji597] லாரி [emoji598] டிரைவர் ராஜாக்கண்ணு

https://uploads.tapatalk-cdn.com/20170128/16e2535be852b186365ecd8a311dde08.jpg

Russellxor
28th January 2017, 11:09 PM
https://uploads.tapatalk-cdn.com/20170128/bcb52a6c66c3ea6e334343c34e06b4b0.jpg

Russellxor
28th January 2017, 11:10 PM
https://uploads.tapatalk-cdn.com/20170128/8f36a13a75048374333982319d37d98a.jpg

Russellxor
28th January 2017, 11:15 PM
https://uploads.tapatalk-cdn.com/20170128/8e2bd4ce1430ac5ba68bd06d9c7c3cc6.jpg

Russellxor
28th January 2017, 11:16 PM
https://uploads.tapatalk-cdn.com/20170128/38e88585f4e1abab3f79f4a7839a2395.jpg

Russellxor
28th January 2017, 11:24 PM
https://uploads.tapatalk-cdn.com/20170128/f90e560f2a689195b32597b4a417429a.jpg

Russellxor
28th January 2017, 11:26 PM
https://uploads.tapatalk-cdn.com/20170128/44e130bc7d6aa905c0c6039022e9b82e.jpg

Russellxor
28th January 2017, 11:29 PM
https://uploads.tapatalk-cdn.com/20170128/cbe3c7a19c4067eb10076dd4cf3c7987.jpg

Russellxor
28th January 2017, 11:33 PM
https://uploads.tapatalk-cdn.com/20170128/a12a887878fbca0256701365ef1c5ce6.jpg

sivaa
29th January 2017, 12:29 AM
அன்பு இதயங்களே,
புதுப்படங்கள் வெளிவந்து ஒரு நாளாவது அல்லது ஒரு காட்சியாவது ஓடுமா என்று விநியோகஸ்தர்கள் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டு இரண்டு படங்களும் மக்களின் பேராதரவுடன் வெற்றிநடை போடுகிறது. ஆம், அன்பு இதயங்களே, வேறு யார் இந்த சாதனையை நிகழ்த்த முடியும், நமது நடிகர்திலகம் தான்.
அந்த இரண்டு படங்கள்
ராஜா - அகஸ்தியா (சென்னை)
எங்கிருந்தோ வந்தாள் - மகாலெட்...சுமி (சென்னை)
இரண்டு படங்களுக்குமே ஒரு காட்சிக்கு 200 முதல் 350 நபர்கள் வரை படம் பார்க்கின்றனர்.
புதுப்படங்களுக்கு 20 அல்லது 30 பேர் வந்தாலே மாபெரும் வெற்றி என்று கொக்கரிக்கும் பேதைகளே, கொஞ்சம் நடிகர்திலகம் படம் ஓடும் தியேட்டர் பக்கம் வந்து பார்த்து விட்டு போங்கள்.
என்றும்
மக்கள்தலைவர் சிவாஜி புகழ் மட்டும் பாடும்
கா.சுந்தராஜன்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/16252052_1226751897409412_1835917905864821271_o.jp g?oh=d92e72a64c011c025b957729fbde1c50&oe=590B160C



(முகநூலில் இருந்து)

sivaa
29th January 2017, 12:31 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/16300453_1225188187565783_7774965758131717507_o.jp g?oh=115848c8805d91b4aad981921e15015c&oe=591507C6

Russellxor
29th January 2017, 08:39 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/431f6620b4c548fb5b31ad6c0eddf0a6.jpg

Russellxor
29th January 2017, 08:40 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/056e1d6e08babd7a5184f983d494f061.jpg

Russellxor
29th January 2017, 08:41 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/ffa0dca8acd8b93a90a8ee6cc683c802.jpg

Russellxor
29th January 2017, 08:42 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/d167bcbc22d50457805c67734627cdb0.jpg

Russellxor
29th January 2017, 08:44 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/7ba6af863d0c53930054aa47a216f033.jpg

Russellxor
29th January 2017, 08:46 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/063b68e55da91b616ac2bce15a85585f.jpg

Russellxor
29th January 2017, 08:47 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/ce6fe78f07b444c2f08c65620cbe370c.jpg

Russellxor
29th January 2017, 08:49 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/d7595d618b8c511c9a9cb9816561c100.jpg

Russellxor
29th January 2017, 08:50 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/4a9bd0f772892732a05f9ac78df9366c.jpg

Russellxor
29th January 2017, 08:51 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/c0959bf72b80b821694ff539a3aa0b60.jpg

Russellxor
29th January 2017, 08:52 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/b70a654e9cfb065eeebd773adf82e8d5.jpg

Russellxor
29th January 2017, 08:53 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/82bc7c08596b79f4b3c0cd1fbe14b758.jpg

Russellxor
29th January 2017, 08:55 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/1a9938d0b0bae94653faec6bb6a70910.jpg

Russellxor
29th January 2017, 08:56 AM
https://uploads.tapatalk-cdn.com/20170129/62c7583491a6d315c325c55dcddc5052.jpg

RAGHAVENDRA
29th January 2017, 09:02 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16299553_1338023166248352_5968786194589073547_n.jp g?oh=e6f849642ab29d7498a458235a1673a2&oe=59098BB0

Russellsmd
29th January 2017, 09:45 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170129083506006_zpsqge2 esik.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170129083506006_zpsqge2 esik.jpg.html)

Russellxor
29th January 2017, 12:35 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/acf37268214e20b115845814ca66011f.jpg

Russellxor
29th January 2017, 12:36 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/6faf21c621eb9fe91cd8dab490bbed9c.jpg

Russellxor
29th January 2017, 12:37 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/dd7f161df4a51ac7c1c616f1d6b5c6b3.jpg

Russellxor
29th January 2017, 12:38 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/e0bf466c73f3598c9ddaf9716a2dd970.jpg

Russellxor
29th January 2017, 12:38 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/ad157f625ba44532683f0b9d0776e3e8.jpg

Russellxor
29th January 2017, 12:41 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/75affade983b68bf466368bae3c11455.jpg

Russellxor
29th January 2017, 12:42 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/fcad421cff35790979299e6e37290ff1.jpg

Russellxor
29th January 2017, 12:43 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/8e5fb6c9424675767e3d3a8fc59ca203.jpg

Russellxor
29th January 2017, 12:44 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/e8f2837718858078b1d935ca6c43a454.jpg

Russellxor
29th January 2017, 12:44 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/2b98e2bde0048a7a133c3adec56d4072.jpg

Russellxor
29th January 2017, 12:50 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/e651cae47988e2687ee87d2a97e0bfce.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170129/eb2ee8c90f71363f28688ad41a2789bf.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170129/df679658622535960d89c732be62b681.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170129/8743e2f9243381259f7fe252aa92b8e4.jpg

Russellxor
29th January 2017, 12:51 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/c11516f26b3b8476e5de15771313a61b.jpg

Russellxor
29th January 2017, 12:52 PM
ரிஷிமூலம் வெற்றிவிழா


https://uploads.tapatalk-cdn.com/20170129/968555bdea197881bd89298201ad4662.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170129/dcd0db6b5700591905ae322779d8f0af.jpg

Russellxor
29th January 2017, 12:55 PM
சத்தியசுந்தரம் வெற்றிவிழா


https://uploads.tapatalk-cdn.com/20170129/43447a54a922eeddfea17f8dc3d36b3d.jpg

Russellsmd
29th January 2017, 12:57 PM
நினைப்போம். மகிழ்வோம் - 135

"எங்கிருந்தோ வந்தாள்".

பெருங்கவிஞர்கள் போல நடித்துக் காட்டும் காட்சி.

மனநிலை பிறழ்ந்தவனுக்கு 'இதுதான் இவர்' என்று சரியாக அடையாளப்படுத்தத் தெரியாதுதானே?

அதை நிரூபிக்கும் வகையில் பாரதியின் படத்தைக் காட்டி "பாரதிதாசன்" என்பார். தன்னுடைய படத்தைக் காட்டி "பாரதியார்" என்பார்.

Russellxor
29th January 2017, 12:57 PM
கீழ்வானம் சிவக்கும்
வெற்றிவிழா

https://uploads.tapatalk-cdn.com/20170129/b2d026bdc3537d69f94c796a14fd8d3c.jpg

Russellxor
29th January 2017, 12:58 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/7acef3813539029571eddd6100736523.jpg

Russellsmd
29th January 2017, 12:58 PM
நினைப்போம். மகிழ்வோம் - 136

"சுமதி என் சுந்தரி".

வாழ்வின் மகிழ்வான தருணங்களில் இருக்கும்
மனிதனின் செய்கைகளில் இலக்கற்ற ஒரு அழகு
இருக்கும்.

"பொட்டு வைத்த முகமோ" பாடலில் துள்ளலாய்
நடந்து வரும் போது பக்கவாட்டில் செடியிலிருந்து
இலைகளைக் கிள்ளி எறிகையில் அந்த அழகு
தெரியும்.

Russellxor
29th January 2017, 12:58 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/dfa23907797fc35852ed61e547a11f57.jpg

Russellxor
29th January 2017, 12:59 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/8ae992aa714f11f221be10f17536e6f6.jpg

Russellxor
29th January 2017, 01:01 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/80fe9f43fb958e0eda7314d62a5a18b8.jpg

Russellxor
29th January 2017, 01:01 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/3c3e00a7639af4b0224bde20bb3ab863.jpg

Russellsmd
29th January 2017, 01:02 PM
நினைப்போம். மகிழ்வோம் - 137

"கௌரவம்".

வேகமான "ரஜினிகாந்த் பாத்திரத்துக்கும், சாந்தமான "கண்ணன்" கதாபாத்திரத்திற்குமான
வித்தியாசம் உணர்த்தும் ஆரம்பக் காட்சி.

அந்த "கண்ணன்" பாத்திரத்தில் அவர் சும்மா சில பாவனைகள் மேலோட்டமாகக் காட்டியிருந்தால் கூட நாம் அசந்து போகிறவர்கள்தான்.

அமைதியாக அமர்ந்து கொண்டு சிரத்தையாக
அவர் ஸந்தியாவந்தனம் செய்யும் அழகு காண
நமக்குக் கோடிக் கண்கள் இருந்தாலும் குறைவுதான்.

Russellxor
29th January 2017, 01:02 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/b5f2dd00d523ed96d6f836a3e57de522.jpg

RAGHAVENDRA
29th January 2017, 01:08 PM
http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/https://uploads.tapatalk-cdn.com/20170129/8ae992aa714f11f221be10f17536e6f6.jpgஅபூர்வமான ஆவணம். மிக்க நன்றி செந்தில். இந்தக் கூட்டத்துக்கு நான் போயிருந்தேன். அவர் இதை சொன்னபோது கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் நீளத்திற்கு அந்தத் தெருவில் கூடியிருந்த மக்களின் ஒருமித்த கரகோஷம் அந்தப் பகுதியையே அதிர வைத்தது என்றால் மிகையில்லை. கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம். எள் போட்டால் எண்ணெய் விழும் என்பார்கள். அந்த அளவிற்கு மிகப் பெரும் அளவில் மக்கள் திரளாக வந்திருந்தனர். இன்னும் கொஞ்ச நேரம் பேசக் கூடாதா என்று நாங்கள் ஏங்கியது உண்மை. எப்போதும் போல் சுருக்கமாக ஆனால் ஆணித்தரமாகப் பேசி மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டார் தலைவர்.

RAGHAVENDRA
29th January 2017, 01:09 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16265166_1338142862903049_7794765655661470578_n.jp g?oh=56655f49f05e98af1cea27641b231fde&oe=5906ED83

Russellxor
29th January 2017, 01:11 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/4b8d1fde03aa9c21679ae80a9a78e6de.jpg

Russellsmd
29th January 2017, 01:23 PM
அருமை... செந்தில்வேல் சார்.

"என் தமிழ் என் மக்கள்" விளம்பரம் பார்த்ததும்
கண்கள் பனித்தன.

"நாளைய தேர்தலில் உங்கள் நிழலும் இருப்பதில்லை"- நிழல்களை நீடிக்க விட்டு, அறத்தை அவமரியாதை செய்த பொறுப்பற்ற
தமிழர்கள் இன்னும் அனுபவிக்க வேண்டியது
நிறைய இருக்கிறது.

தங்களது ஆவண அணிவகுப்பில் வியந்த எனது
வாழ்த்துகளை முந்திக் கொள்கின்றன.. எனது
நெகிழ்வான நன்றிகள்.

Russellxor
29th January 2017, 07:15 PM
https://uploads.tapatalk-cdn.com/20170129/0f984c4db8a9b3cd3314f1a288f6a38d.jpg

Russellsmd
29th January 2017, 08:05 PM
நினைப்போம். மகிழ்வோம் -138

" எங்க மாமா".

பாலாஜிக்கு ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தும்
காட்சி. வேறொரு பெண்ணோடு வந்திருக்கும்
பாலாஜி, " உங்களோட வந்திருக்கிற பெண்ணைப்
பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று நடிகர் திலகத்திடம் கேட்க, "உங்க கோட்ல ஏற்கனவே
ஒரு ரோஜா இருக்கே" என்று சொல்லவும், பாலாஜி
குனிந்து தன் கோட்டில் செருகியிருக்கிற ரோஜாவைப் பார்க்க, "இது இல்லை.. அது" என்று
பாலாஜியுடன் வந்த பெண்ணைக் காட்டி கண்களாலேயே பேசுவாரே.. அது!

Russellsmd
29th January 2017, 08:06 PM
நினைப்போம். மகிழ்வோம் - 139

"தங்கைக்காக".

"எதையும் தாங்குவேன் தங்கைக்காக" பாடல்.

"சுட்டால்தானே தெரிகின்றது" என்று பாடியபடியே
எரியும் விளக்கைத் தொடுவார். பாடலைத் தொடர்ந்தபடியே அவர் காட்டும் சூடு தாங்காத
"சுருக்" நமக்கும் "சுருக்" என்று தொற்றும்.

Russellsmd
29th January 2017, 08:07 PM
நினைப்போம். மகிழ்வோம் - 140

"ஆலயமணி".

உத்தமனாய் வாழும், வாழ விரும்புபவனை உள்ளே
மிருக வெறியோடு இருக்கும் மனசாட்சி தடுத்து
உசுப்பேற்றி உரையாடும் காட்சி.

அந்தக் கதாநாயகத் தோற்றத்திலிருந்து எந்த
மாற்றமுமில்லாத ஒப்பனையில் இருந்தாலும்
"மனசாட்சி" யை சில முரட்டு பாவனைகளால், வார்த்தை உச்சரிப்புகளால் வித்தியாசப்படுத்தி
இருப்பார்.

குறிப்பாக.. "என்னிடமிருந்து நீ தப்பித்து விட
முடியாது" என்கிற ரீதியில் பேசுபவர் அழுத்தம்
திருத்தமாகச் சொல்லும் " முடியாது".

Harrietlgy
29th January 2017, 08:57 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 161– சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/16028040281485426930420175230maxresdefault.jpg


1968ம் வருடம் வந்த இன்னொரு படம் பாலாஜி தயாரித்த `என் தம்பி.’ இந்த படம் சென்னை மிட்லண்ட் தியேட்டரில் வெளிவந்தது! மிகப்பெரிய வெற்றிப் படம் இது! விஸ்வநாதனின் இசையில் அத்தனை பாடல்களும் மிகப் பிரபலம்!
சிவாஜிக்கு மிகவும் வித்தியாசமான பாத்திரம் இந்த படத்தில்! அதே வருடம் வந்த இன்னொரு படம்தான் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்த `தில்லானா மோகனாம்பாள்’ படம். ஆனந்த விகடனில் கலைமணி என்கிற பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவல்தான் `தில்லானா மோகனாம்பாள்.’
இந்த நாவலை தானே எடுப்பதாகத்தான் இருந்தார் ஆனந்த விகடனின் ஆசிரியரும், ஜெமினி அதிபருமான எஸ்.எஸ். வாசன்!
ஆனால் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இந்த படத்தை எடுக்க உரிமையை வாங்க நினைத்தபோது, வாசன் உடனடியாக உரிமையை வழங்கினார்.
காரணம், ஏ.பி. நாகராஜன் மீது எஸ்.எஸ். வாசனுக்கு இருந்த அபரிமிதமான நம்பிக்கை!
அதே போல் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கி தமிழ் சினிமா சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு படமாக அதை உருவாக்கிக் காட்டினார் ஏ.பி. நாகராஜன்!
நாகராஜன் உருவாக்கிய `திருவிளையாடல்’ புராணப் படம் என்றாலும், அதை நவீன முறையில் வழங்கினார். அதே போல் அவர் வழங்கிய சமூகப்படங்களில் மிகச்சிறந்த படம்தான் 'தில்லானா மோகனாம்பாள்!'
நாதசுர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜியும், நடன மங்கை மோகனாம்பாளாக பத்மினியும் திரையில் வாழ்ந்து காட்டினார்கள்.
இந்த படத்தில் கதாபாத்திர தேர்வே இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது.
ஏவி.எம். ராஜன்,பாலாஜி, டி.எஸ். பாலையா, டி.ஆர். ராமச்சந்திரன், நாகேஷ், சாரங்கபாணி, எம்.என். நம்பியார் என்று அருமையான நட்சத்திர தேர்வு!
கே.வி. மகாதேவன் இசையமைப்பில் `மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?,’ ` நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா?’ மனோரமாவிற்காக `தில்லாம் டோமடி டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன்’ பாடல்கள் மிகப்பிரலமாகின!
இந்த படத்தில் இன்னொரு விசேஷம் ஆண் குரலுக்கு பாடலே கிடையாது! அதாவது இந்த படத்தில் சிவாஜிக்கு பாடலே கிடையாது! சாதாரண டைரக்டராக இருந்திருந்தால் ஒரு கனவுக் காட்சியைப் புகுத்தி சிவாஜிக்கு ஒரு பாடல் வைத்திருப்பார்!
ஆனால், ஏ.பி. நாகராஜன் அதைச் செய்யவில்லை. காரணம் கதாநாயகன் ஒரு நாதஸ்வரக் கலைஞன். அவனைப் பாட வைப்பது சரியாக இருக்காது என்று அவர் நினைத்ததுதான்!
1969ல் சிவாஜியின் எட்டுப் படங்கள் வெளிவந்தன!
'அஞ்சல் பெட்டி 520', 'அன்பளிப்பு', 'காவல் தெய்வம்', 'குருதட்சணை', 'சிவந்த மண்', 'தங்கச்சுரங்கம்', 'திருடன்', 'நிறைகுடம்'.
இந்த படங்களில் வெற்றி படம் என்றால் 'தங்கச்சுரங்கம்', 'திருடன்', 'நிறைகுடம்' படங்களைச் சொல்லலாம்!
மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஸ்ரீதரின் 'சிவந்த மண்'. அந்நிய நாட்டில் எடுக்கப்பட்ட படம்! சிவாஜி ஒரு புரட்சிக்காரனாக வருவார்! படத்தின் அத்தனை பாடல்களும் மிக அருமை!
அதுவும் `ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது.
`பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ எல்.ஆர். ஈஸ்வரி குரலில் ஒலித்தபோது இந்தியாவே அந்தக் குரலை கேட்டு மிரண்டது.
இப்படி யாராலும் பாடமுடியாது என்று உலகப்புகழ் பெற்ற லதா மங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேயும் கூட ஒப்புக்கொண்டார்கள்!
சென்னை குளோப் தியட்டரில் வெளிவந்த அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த வருடத்தில் வந்த படம்தான், `அன்பளிப்பு’. ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த படம் இது. படத்தின் வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார்.
படத்திற்கு இசை, எம்.எஸ். விஸ்வநாதன்.
இந்த படத்தில்தான் முதல் முதலாக தென்னகத்து ஜேம்ஸ்பாண்டான ஜெய்சங்கரும், சிவாஜியும் இணைந்து நடித்த முதல் படம்!
இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி சரோஜாதேவி!
அதே போல் இந்த வருடம் வந்த 'அஞ்சல் பெட்டி 520' படத்திலும் சிவாஜிக்கு ஜோடி சரோஜாதேவி!
பாலாஜி தயாரித்த படம்தான் `திருடன்.’ இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி கே.ஆர். விஜயா! இந்த படத்திற்கும் இசை, எம்.எஸ். விஸ்வநாதன்!
ஏ.பி. நாகராஜன் இயக்கிய இன்னொரு சமூகப்படம் `குருதட்சணை.’ இந்த படத்தில் சிவாஜி, ஜெயலலிதா, பத்மினி நடித்திருந்தார்கள்! படம் எடுபடவில்லை!
இந்த வருடம் சிவாஜிக்கு கிடைத்த மிக வித்தியாசமான கதாபாத்திரம் 'தங்கச் சுரங்கம்’ படத்தில்தான்.
அவரது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் இது! ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் சிவாஜிக்கு!
ஓர் உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரம் அவருக்கு! இந்த படத்தை டி.ஆர். ராமண்ணா தயாரித்து இயக்கியிருந்தார். சிவாஜி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்த படம் இது!
எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு மர்மக் கதை கொண்ட படம்தான் இது! இதில் சிவாஜியின் நடை, உடை , பாவனை எல்லாமே மாறுபாட்டிருந்தன! இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி, பாரதி! படத்தின் இசை, டி.கே. ராமமூர்த்தி! அத்தனை பாடல்களுமே அருமையாக அமைந்த படம் இது!
சென்னை சாந்தி தியேட்டரில் வெளியாகி வெற்றி கண்ட படம் இது! `நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது’ என்று நாகரீக உடையில் சிவாஜி தன் கிராமத்துக்கு பாடிக்கொண்டு வரும்போதே கொட்டகையில் விசில் சத்தம் பிளக்கும்!
ராமண்ணாவுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு! ஒரு சின்ன இடத்திற்குள் ஒரு டூயட் பாடலை அமைப்பார்! இந்த சென்டிமென்ட் அவருக்கு எம்.ஜி.ஆர். நடித்த `பணத்தோட்டம்’ படத்திலிருந்து ஆரம்பமானது! `தங்கச்சுரங்கம்’ படத்தில் கிணற்றுக்குள் ஒரு டூயட் அமைத்திருப்பார்!
`சந்தனக் குடத்துக்குள்ளே வண்டுகள் புகுந்து கொண்டு விளையாடுது’ பாடல் அப்போது படுபிரபலம்!
சிவாஜியின் தந்தை ஓ.ஏ.கே. தேவர்தான் படத்தின் வில்லன்!
தந்தையையே கைது செய்ய வேண்டிய உளவுத்துறை அதிகாரி வேடம் சிவாஜிக்கு!
தாயார் வேடத்தில் எஸ். வரலட்சுமி கலக்கியிருப்பார்!
அடுத்து வந்த மிகப்பெரிய வெற்றிப்படம்தான் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த `தெய்வ மகன்’ படம்!
சிவாஜிக்கு மூன்று வேடங்கள்!
மூன்று பாத்திரங்களையும் வித்தியாசப்படுத்தி காட்டி கலக்கியிருப்பார் சிவாஜி. ஒரு வங்காளக் கதையின் தமிழாக்கம்தான் இந்த படம்! சிவாஜியின் திரைவாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்!
அப்பா சிவாஜிக்கு ஒரு பணக்கார மிடுக்கு! தந்தையைப் போல் அவலட்சணமான முகம் கொண்டதால் புறக்கணித்து ஒரு அனாதை விடுதியில் விடப்பட்ட மகன் சிவாஜி!
பணக்கார தந்தையின் மிகச் செல்ல பிள்ளையான இன்னொரு சிவாஜி! சிவாஜி ரசிகர்களுக்கு சரியான விருந்து இந்த படம்!
(தொடரும்)

RAGHAVENDRA
30th January 2017, 08:50 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p280x280/16427735_1338876582829677_1821906850725941035_n.jp g?oh=a9e049d588d1611dac4c89fc3ee70925&oe=5947339A

adiram
30th January 2017, 04:06 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 161– சுதாங்கன்.


மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஸ்ரீதரின் 'சிவந்த மண்'. அந்நிய நாட்டில் எடுக்கப்பட்ட படம்! சிவாஜி ஒரு புரட்சிக்காரனாக வருவார்!
சென்னை குளோப் தியட்டரில் வெளிவந்த அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சுதங்கா,

நீயெல்லாம் நடிகர்திலகத்தின் திரை வரலாற்றை எழுதலைன்னு இங்கு யார் அழுதா?. சரியான விவரம் தெரியலைன்னா மூடிக்கிட்டு இரு.

adiram
30th January 2017, 04:11 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 161– சுதாங்கன்.

ராமண்ணாவுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு! ஒரு சின்ன இடத்திற்குள் ஒரு டூயட் பாடலை அமைப்பார்! இந்த சென்டிமென்ட் அவருக்கு எம்.ஜி.ஆர். நடித்த `பணத்தோட்டம்’ படத்திலிருந்து ஆரம்பமானது!

கிரகமே,

பணத்தோட்டம் ஜி.என்.வேலுமணியால் தயாரிக்கப்பட்டு கே.சங்கர் டைரக்டு செய்த படம்.

ராமண்ணாவுக்கும் அந்த படத்துக்கும் ஸ்னான பிராப்தியே கிடையாது. இதிலிருந்தே தெரியுதே உன் வரலாற்று அறிவு லட்சணம்.

Russellxor
30th January 2017, 05:28 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/39a98017b33d7bedaf81b6576557205d.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170130/0402c07ffad83a19bdfd766401a30926.jpg

Russellxor
30th January 2017, 05:39 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/244b0471b632df6752abc632155dcff4.jpg

Russellxor
30th January 2017, 05:39 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/fa6689c80717e59a44d2f10113723e9b.jpg

Russellxor
30th January 2017, 05:42 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/3a60ef36f3d3d26505d10e127f27b576.jpg

Russellxor
30th January 2017, 05:54 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/3949dde4820f2739bc4a85c735cd5713.jpg

Russellxor
30th January 2017, 05:55 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/de5e8437ab3ec3191fa21c233303f8b0.jpg

Russellxor
30th January 2017, 05:56 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/35089c494cf94e290de48a0a181a6eff.jpg

Russellxor
30th January 2017, 05:57 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/86ba6f5399e599af62694b3fc91a05a3.jpg

Russellxor
30th January 2017, 05:58 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/5cf5138a5a118c50d7dacba7a3dabcff.jpg

Russellxor
30th January 2017, 05:59 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/39860ad3524c595daecb0abd159ad046.jpg

Russellxor
30th January 2017, 06:00 PM
https://uploads.tapatalk-cdn.com/20170130/2eb5bbff7f421713a9b14ca0c15f2421.jpg

Richardsof
30th January 2017, 08:23 PM
31.1.2017

திரு.முரளி சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

sivaa
31st January 2017, 05:53 AM
http://oi64.tinypic.com/j6udu9.jpg

RAGHAVENDRA
31st January 2017, 06:21 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16427748_1339696896080979_5964867440102358584_n.jp g?oh=327e194000940f7b31182150044af8dd&oe=591B54B0

RAGHAVENDRA
31st January 2017, 06:27 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/l/t1.0-9/16425775_1339700129413989_8647200265467558121_n.jp g?oh=dc858ef8c90fa75c9ad16943491342cd&oe=58FD7673

Russellsmd
31st January 2017, 08:26 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017013 1081402657_zps0g2dfcbw.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017013 1081402657_zps0g2dfcbw.jpg.html)

vasudevan31355
31st January 2017, 11:00 AM
அன்பு முரளி சார்,

https://media.tenor.co/images/72014b68174dcc2a98775fe4fbdc2f12/tenor.gifhttps://pbs.twimg.com/media/CtqP_7BUkAAV3Zp.jpg

நடிகர் திலகத்தை எந்நாளும் சுவாசிக்கும், நேசிக்கும் உங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Russellxor
31st January 2017, 11:34 AM
முரளி சீனிவாஸ் அவர்களுக்கு என்
இதயபூர்வமான இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!

adiram
31st January 2017, 12:48 PM
நடிகர்திலகத்தின் அதி தீவிர ரசிகர், எங்கள் ஆருயிர் நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

குணத்தில் அமைதி, பேச்சில் கண்ணியம், செயலில் தீவிரம், அனைவரிடமும் சாந்தம், விரல்நுனியில் புள்ளிவிவரங்களை கையாளும் பாங்கு, அபார நினைவாற்றல் இப்படி பல்வேறு நற்குணங்களுக்கு சொந்தக்காரராக திகழும் எங்கள் முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் பல்லாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.

HARISH2619
31st January 2017, 01:30 PM
Dear murali sir,
many many happy returns of the day

Russellsmd
31st January 2017, 09:34 PM
பசித்தவனிடம் நீட்டப்பட்ட உணவுத் தட்டு -
ஞாயிறன்று பாசமலர் பார்க்க எனக்குக் கிடைத்த அனுமதிச்சீட்டு.

பூரித்துத் திரண்ட பெருங்கூட்டம். மேளதாளம், வெடிச்சத்தம்...

மற்றுமொரு ஆலயமாயிற்று மதுரையின் 'அலங்கார்'.

தமிழ்த் திரையுலகையும் எங்களையும் ஆண்டவன் - அங்கே ஆண்டவன்.

ஆண்டவனுக்குரிய இடத்தில் நிம்மதிக்கேது பஞ்சம்?
நிலைக்கும் கலை அருளி அவன் நிறைத்தான் எம் நெஞ்சம்.

சராசரி திருப்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சரித்திர நாயகரின் சாதனைப் படைப்பை ஓட்டிக் காட்டியது..
அய்யா நடிகர் திலகத்தின் உள்ளத்தின் நிறம் கொண்ட வெள்ளைத் திரை.

அவசர, அவசரமாய் ஆலைக்குக் கிளம்பும் அறிமுகக் காட்சியில் துவங்கி அழுது, அழ வைத்து அமரராகும் இறுதிக்காட்சி வரை அய்யாவை விட்டு வேறு புறம் பார்வை நகர்த்தாத ரசிகர்களின் அன்பு போதுமே..

'பாசமலர்' - வேற்றுக் கிரகத்திலும் வெள்ளி விழாக் காணாதோ?

'பாசமலர்' - ஓய்வை உல்லாசப் படுத்தும் தமிழ் சினிமா மரபுடைத்து ஓய்வை அர்த்தப்படுத்தியது.

கறையேறிப் போன நம் இதயப் பாத்திரங்களை கண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தியது.

முயன்று, முடியாமல் மூன்று மணி நேரமும் அழுது விட்டு..
அழாதவர் போல் நடிப்பதில் அய்யாவை ஜெயிக்கப் பார்க்கிறோம் முட்டாள்தனமாக.

எந்தக் காலமும் வியக்கும் 'பாசமலர்' எனும் அந்தக் கால அதிசயத்தை மீண்டுமெங்கள் கண்களுக்குத் தந்த அத்தனை பேருக்கும் ஒருத்தர் விடாமல் நன்றி.

காட்சி முடிந்து வெளியேறுகையில் காத்திருக்கிறது ஒரு கூட்டம், பெருங்கூட்டம். அடுத்த காட்சியைப் பார்ப்பதற்கு.

எனக்குத் தெரியும். அந்தக் காட்சி முடிந்து வெளியேறுகையில் அந்தக் கூட்டமும் சந்திக்கும்..
அதை விடப் பெரிய கூட்டத்தை.
---------------------------------------------------------------------------------

-மதுரை அலங்கார் திரையரங்கில் டிஜிட்டலில் வந்த "பாசமலர்" பார்த்து விட்டு 21.8.2013 அன்று
முகநூலில் நான் இட்ட பதிவு இது.

இதை ரசித்து "அருமை" என்று பாராட்டி விட்டு,
"நீங்கள் மதுரையைச் சேர்ந்தவரா?" என்று பதிவின் கீழ் கேட்டிருந்தார்.

அவரையும், என்னையும் இணைத்த பெருமைக்குரிய இந்த பதிவை, பிறந்த நாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன்.. அவருக்கு.

அவர் - மரியாதைக்குரிய முரளி சார்.

Murali Srinivas
1st February 2017, 12:16 AM
வருடம் தவறாமல் என் பிறந்த நாளன்று வாழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ள வினோத் சார், உங்கள் பெருந்தன்மைக்கு என் சிரந்தாழ்ந்த நன்றி!

சிவா சார், அற்புதமான புகைப்படத்திற்கும் அருமையான வாழ்த்துகளுக்கும் என் மனங்கனிந்த நன்றி!

வாசு, அட்டகாசமான ஸ்டில் மற்றும் அன்பான வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி!

இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுதப்பட்ட அன்பு வாழ்த்துக்களுக்கு மனங்கனிந்த நன்றி ஆதிராம் சார்!

பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி செந்தில்வேல்

பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி செந்தில்!

பாசமலர் என்னும் வாடா மலரால் உறவை பிணைத்த ஆதவன் ரவி, உங்களுக்கு மனமார்ந்த நன்றி!

அழகான புகைப்படத்தோடு என்னை வாழ்த்திய ராகவேந்தர் சாருக்கு நன்றிகள் பல!

அன்புடன்

RAGHAVENDRA
1st February 2017, 06:13 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16298430_1340720939311908_4759409643368839023_n.jp g?oh=7f0633e79e2ad49bae9330a4c1612fb3&oe=5900128A

Gopal.s
1st February 2017, 08:44 AM
ராகவேந்திரா சார்,

உங்களுக்கு ஆயுசு நூறு.நேற்றுதான் என்னை போல் ஒருவன் திருப்பி பார்த்தேன். இன்று உங்கள் காலை செய்தி என்னை போல் ஒருவன்.

ராமண்ணா ,நடிகர்திலகத்தை பிரதான நாயகனாக வைத்து ஆறு படங்கள் இயக்கி உள்ளார்.

கூண்டு கிளி, காத்தவராயன்,ஸ்ரீவள்ளி,தங்கசுரங்கம்,சொர்க்கம், என்னை போல் ஒருவன்.

என்னுடைய தர வரிசையில் சிறந்தவை என்னை போல் ஒருவன்,காத்தவராயன்,தங்க சுரங்கம். என்னை போல் ஒருவன் ,ஏழு வருடங்கள் (1971 முதல் 1978 வரை)தயாரிப்பு தாமதம், ராமண்ணாவின் அகல கால் வைத்த பொருளாதார நெருக்கடி இவற்றால் தாமதமாக வந்தாலும் பிரமாத வெற்றி பெற்ற படம்.இன்றளவும் ரசிகர்களால் போற்ற படும் இப்படம் ,அற்புதமான செண்டிமெண்ட்-நகைச் சுவை-பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படம்.வரவேண்டிய நேரத்தில் வந்திருந்தால் வெள்ளிவிழாதான்.

இதன் மிக சிறந்த அம்சங்கள்.

1)நடிகர்திலகம்-இந்த படத்தின் தன்மை,நீக்கு போக்கு அறிந்து ,இரட்டை வேடத்தில் மிக குறைந்த அளவே வித்தியாச படுத்துவார். நடை உடை பாவனை உருவம் ஒத்து போவதாக கதையமைப்பு. சிறிதே குண திரிபும், குண நலனும் உடைய இரு பாத்திரங்கள். திராவிட மன்மத மேதையின் சித்திரிப்பில் ஜொலிக்கும்.முதலில் ராஜசேகரின் குண சித்திரம் மூன்று காட்சிகளில்.அடுத்த காட்சி இருவரின் சந்திப்பு. அடுத்தடுத்த காட்சிகள் சுந்தரமூர்த்தி,சேகராக நடிக்க வேண்டிய கட்டாய காட்சிகள். இவற்றில் அபார நகைச் சுவை timing ஓடு situation comedy ரகம். விவரங்கள் தெரியாமல், எச்சரிக்கையோடு, சங்கடம் தவிர்த்து,மற்றோர்க்கு இதமாக,உறவின் எல்லை மீறாமல் கத்தி மேல் நடக்கும் சூழ்நிலை.
ரசிகர்களின் நாடி பிடித்து அசத்துவார். உதாரணம் தான் மயங்கி கிடப்பதாக எண்ணி வாசுவும்,ஆலமும் உரையாடும் காட்சியில் தாளமிடும் கை .மிகவும் கம்பி மேல் நடக்கும் பாத்திரங்கள். உதாரணம் சேகர் தன் அம்மாவுக்கு மருந்து வாங்க அலுத்து கொள்ளும் பணமுடை.

2) செறிவான,அலுக்காத திரைக்கதை. இன்றைய படங்கள் போல எந்த உணர்ச்சியும் எல்லை மீறாமல் ,ஆனால் மனதில் பதியும் விந்தை. சக்தி கிருஷ்ணசாமி, சரித்திர படங்கள் அளவு, குடும்ப-பொழுது போக்கு சித்திரங்களிலும் தனது வசன திறமையை காட்டுவார்.பொழுதுபோக்கு மன்னன் ராமண்ணா கேட்கவே வேண்டாம். அவரது சிறந்த படங்களில் ஒன்று. நான் முதல், இது இரண்டாவது.

3)ரஹ்மான் கேமரா, சுந்தரம் நடனம், வெங்கடேசன் சண்டை, விஸ்வநாதன் இசை அனைத்தும் படத்தோடு ஒன்றும். தனித்து தெரியாமல்.

4)ஆலம் -சிவாஜி இணை அழகோ அழகு. நெருக்கம். இதில் கதாநாயகிகள் உஷாநந்தினி,சாரதாவிற்கு டூயட் கிடையாது. ஆலத்திற்கு இரண்டு.

5)அத்தனை பாத்திரங்களும் பேசும் முறை, நடிப்பு இயல்போ இயல்பு. சாரதா,ருக்மிணி,வாசு,மனோகர் அனைவரும். உஷாநந்தினி உறுத்தல்.

6)உட்கார்ந்தால் எழுவது தெரியாமல் ஆறிலிருந்து அறுபது வரை கவரும் அற்புத பொழுது போக்கு.

Gopal.s
1st February 2017, 08:46 AM
Adhavan Ravi,

I never miss a word in your post. Highly aesthetic with keen observation with right kind of Word Smithy and craftiness. Kudos.

Russellsmd
1st February 2017, 10:55 AM
அந்த மோதிரக் கையால் குட்டுப்பட்டாலே குஷியாகி விடுகிறவன் ஆதவன் ரவி.

மோதிரக் கை தட்டிக் கொடுத்துப் பாராட்டுகிறது.
கேட்க வேண்டுமா? கிடந்து குதிக்கிறான்.

கோபால் சாருக்கு நன்றி சொல்கிறான்.

Murali Srinivas
1st February 2017, 02:41 PM
வாசு, ராஜா டிஜிட்டலில் மாற்றி ரீலீஸ் செய்வது பற்றி எழுதியிருந்ததை படித்தேன். அதற்கு முன்னரே அதைப் பற்றி விசாரித்தோம். இப்போது வெளியிட்டவர்களின் உரிமை உடனே முடிவுக்கு வருகிறது என்றும் வேறு ஒரு நபர் தமிழக உரிமையை (மதுரை தவிர்த்து) வாங்கி விட்டதாகவும் செய்தி. ஆனால் வாங்கியவர் பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை. விரைவில் அதை தெரிந்துக் கொண்டு அவர்களின் பிளான் என்ன என்பதையும் தெரிந்துக் கொண்டு சொல்கிறேன். நன்றி

அன்புடன்

Russellsmd
1st February 2017, 10:08 PM
நினைப்போம். மகிழ்வோம் -141

"எங்கிருந்தோ வந்தாள்".

தன்னை வாழ்விக்க வந்தவள் தன்னை விட்டுப்
பிரிந்து செல்வது பொறுக்காமல், "நான் உன்னை
அழைக்கவில்லை" பாடியும் தீராமல், கிளம்பிப்
போனவளே திரும்ப வந்து தேற்றியும் அடங்காமல்
மடங்கி அமர்ந்து கொண்டு கேவிக் கேவி அழும்
அழுகை.

( அவர் அழும் போது, அழாமல் பார்த்ததாக வரலாறே இல்லை.)

Russellsmd
1st February 2017, 10:10 PM
நினைப்போம். மகிழ்வோம் -142

"எங்க மாமா".

தங்கள் இடத்திற்குப் புதிதாக வந்திருக்கும் பெண்ணுக்கு, தன் பராமரிப்பிலிருக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு பெயர் வைத்ததை
விளக்கும் காட்சி.

ஒரு பையனின் பெயர் "காந்தி" என்று சொல்வார்.
கனிவும், சாந்தமுமாய் அதிர்வற்ற அந்த உச்சரிப்பில் காந்தியே வந்து போவார்.

Russellsmd
1st February 2017, 10:13 PM
நினைப்போம். மகிழ்வோம் -143

"கௌரவம்".

சின்னவர் பேருந்து நிறுத்தத்தில் கையில் சந்தைச்
சுமையோடு நிற்பார்.

காதலியின் தோழியர் கூட்டம் ஆர்ப்பாட்டமாய் அவரிடம் வந்து அறிமுகம் ஆகி கை நீட்ட " கை குடுக்க முடியாது. கையில கறிகாய் இருக்கு"
என்பார்.. அந்தப் பெண்கள் கூட்டம் பேசிய அதே
தொனியில்.

RAGHAVENDRA
2nd February 2017, 12:21 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16473141_1341530552564280_7314654068089098273_n.jp g?oh=acae080eaa1e6fd86c18bdd1bb2dcb82&oe=590D14D3

RAGHAVENDRA
2nd February 2017, 07:36 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16473448_1341890349194967_6830918372764394206_n.jp g?oh=be3bd0cb2543cfd7a2ceca4e7f01e443&oe=5917E5FA

Russellsmd
2nd February 2017, 10:41 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017020 2092615551_zpsv8sfzr8g.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017020 2092615551_zpsv8sfzr8g.jpg.html)

Russellsmd
2nd February 2017, 10:43 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017020 2103027759_zpsvw0qkuoy.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017020 2103027759_zpsvw0qkuoy.jpg.html)

Russellsmd
2nd February 2017, 02:00 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170202134703533_zps00dt fsqi.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170202134703533_zps00dt fsqi.jpg.html)

Russellsmd
2nd February 2017, 04:26 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017020 2161536127_zpsfpthi5st.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017020 2161536127_zpsfpthi5st.jpg.html)

RAGHAVENDRA
3rd February 2017, 06:36 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16427209_1343028239081178_6482836816396556376_n.jp g?oh=3de6a2c9b017f201a69d70850a8c26b2&oe=590F5BE6பார்க்கப் பார்க்க சலிக்காது. எப்படிப் போட்டாலும் அழகு கூடும்

Gopal.s
3rd February 2017, 08:45 AM
முத்துக்களோ கண்கள்... பாருங்கள்... "சிவாஜி கணேசனாக" மாறி நிற்கும் கட்ஜுவைப் பாருங்கள்! சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த படத்தின் பாடல் ஒன்றை தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். By: Sutha முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜுவின் தமிழ்ப் பற்றும், தமிழ்க் காதலும் வர வர கூடிக் கொண்டே போகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகு அவர் முழுமையான தமிழ்க் காதலராக மாறி விட்டார். முகநூல் பக்கத்தில் தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழர்களின் போராட்டங்களுக்கும் ஆதரவாக போஸ்ட் போட்டு வருகிறார் கட்ஜு. தமிழகத்தில் நடந்த இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம் அவரை வெகுவாக கவர்ந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர் புகழாத நாள் இல்லை. This is the favourite Tamil song of Markandeya Katju Popular Videos

இந்த நிலையில் தனக்குப் பிடித்த தமிழ்ப் பாட்டு ஒன்றை அவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1967-68ல் இருந்தபோது தான் இந்தப் பாட்டை விரும்பிக் கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞனாக இருந்தபோது அர்த்தமே புரியாத நிலையிலும் இப்பாடலை தான் கேட்டு ரசித்ததாக அவர் கூறியுள்ளார். அது சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த முத்துக்களோ கண்கள் என்ற காதல் பாடலாகும். பாடலைக் குறிப்பிட்டதோடு விடாமல் அதன் யூடியூப் இணைப்பையும் சேர்த்துப் போட்டு அசத்தியுள்ளார் கட்ஜு. இதற்கு செம ரெஸ்பான்ஸ். பலரும் கட்ஜுவை புகழ்ந்தும், வாழ்த்தியும், ஆச்சரியப்பட்டும் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதில் ஒரு கமெண்ட்டுக்குப் பதிலளித்த கட்ஜு, நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன், என்னால் டூயட் பாடவும் முடியும். தயாரிப்பாளர்களிடம் சொல்லுங்கள் என்று அன்புக் கோரிக்கையும் வைததுள்ளார் கட்ஜு.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/this-is-the-favourite-tamil-song-markandeya-katju-273194.html

RAGHAVENDRA
4th February 2017, 06:41 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16406874_1343909208993081_7531848584008373818_n.jp g?oh=41a81b83734dfe651dfa355d8585a15e&oe=5941854F

Russellxor
4th February 2017, 01:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20170204134333_zps6iufvkxq.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20170204134333_zps6iufvkxq.gif.html)


வியட்நாம் வீடு சுந்தரம்
2.10.73

அன்பு ரசிகர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம்.அனைவருக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.இனிப்பான நாளில் உங்களை சந்திக்கிறார் பாரிஸ்டர் ரஜினிகாந்த்."கௌரவம் "என்ற சொல்லின் இலக்கணமேஅவர்தான்.தன் தொழில் மீது அசைக்க முடியாத தன்னம்பிக்கையும், மதிப்பும் கொண்டவர்.அவர் வளர்ப்பு மகன்
கண்ணன் பாரதி பாடிய கண்ணனாக பாரிஸ்டரின் இதயமாக இருப்பவன்.தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் உலகமாக இருப்பவர்கள்.பாரிஸ்டர் மனைவி "செல்லா "சிறு வயது முதல் கண்ணனை தர்மம், நீதி, நியாயம் என்று கீதை சொல்லி வளர்த்தவள்.தவறை தவறு என்று சொல்லத் தயங்காத தர்மதேவதை கண்ணன்.அந்த வீட்டிலுள்ள பிடுங்கி தின்னும் பேய்களுக்கு கண்ணனை கண்டால் பிடிக்காது.கண்ணனின் காதலி ராதா.கண்ணன், காதலியை விட பெரியப்பா ரஜினியிடம் அன்பும், மரியாதையும் கொண்டவன்.
"பாரிஸ்டர் " ரஜினிகாந்த் வாழ்வில் ஒரே லட்சியம் ஜஸ்டிஸ் போஸ்ட். அவர் திறமையால் அவருக்கு கிடைத்த பேரிலும், புகழிலும் ஊரே பெருமைப்பட்டது.

ஓர் நாள்...

விதி மோகன்தாஸ் கொலைகுற்றவாளி என்ற உருவில் வந்து நுழைந்தது.மனைவியை கொன்றவனை தன் தொழில் வேகத்தில் காப்பாற்றி விட்டார் ரஜினி.அவனே இரண்டாவது தடவை செய்யாத கொலையில் சிக்கி வந்து நின்றபோது -
ரஜினி எதிரே கண்ணன் வந்தான்.எதிர்த்தான்...

கௌரவம். அதை எதிர்த்து தர்மம்.
தந்தையும் , மகனும் தர்மயுத்தத்தில் நீதி மன்றத்தில் நிற்கின்றனர்.

கதையின் கருவூலம் :
தன்நிலை தாழாமையும்
அந்நிலை தாழ்ந்தக்கால்
உயிர் வாழாமையும்
மானம் எனப்படும்.
என் வரிகள்தான்..

தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் ..உணர்ச்சி மிகு சம்பவங்களை என் தந்தை நடிகர்திலகத்தின் "நடிப்புக்கலை "க்கு காணிக்கையாக்கி அவரது லட்சோப லட்சம் ரசிக இதயங்களில் சமர்ப்பிக்கிறேன்

வணக்கம்
அன்பன்
வியட்நாம் வீடு சுந்தரம்.

Russellxor
4th February 2017, 04:43 PM
https://uploads.tapatalk-cdn.com/20170204/0835b4e3dfca40643e1a37f332d7178c.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170204/6891d51f5645181af7a9349de670afd2.jpg

Russellxor
4th February 2017, 04:49 PM
https://uploads.tapatalk-cdn.com/20170204/d1dea86ee85d5c9309c4e737a9e6d2d0.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170204/64f990472e573d96118c4209182628ce.jpg

RAGHAVENDRA
5th February 2017, 08:33 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16406819_1344976125553056_6828339756108642903_n.jp g?oh=07facead67ee815530e874d57fbd7a86&oe=590597EE

Russellxor
5th February 2017, 11:36 AM
Courtesy :facebook


" ஜல்லிக்கட்டு "
உலகையே சென்னையை உற்று நோக்க வைத்தது ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்,
கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்ததனால் வேறு வழியின்றி மத்திய அரசும் மாநில அரசும் தீர்வை உருவாக்கின,
இப்படி வெற்றி பெற்று இருந்தாலும் கூட இந்த போராட்டம் குறித்து கருத்து கூறும் அறிவு சார்ந்த சான்றோர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் இந்த தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் மதுவை எதிர்த்து ஏன் போராடவில்லை?
விவசாயத்தையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி போராட முன் வராமல் போனது ஏன்?
போன்ற கேள்விகள் எழுப்புகின்றனர்,
அந்த கேள்விகள் நியாயம் தானே!
இது போன்ற கேள்விகள் வரும் போது
நமக்கு 1970 களில் அகில இந்திய சிவாஜி நற்பணி மன்றங்கள் அப்போதைய ஆளும் அரசை எதிர்த்து நடத்திய துனிவான போராட்டங்கள் நினைவுக்கு வருகிறது,
இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் என்றால் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதும் அதை பெரிய அளவில் விளம்பரம் செய்வது அதற்காக ரசிகர்களை உசுப்பும் நிகழ்வுகளை மட்டுமே கான முடிகிறது, ஆனால் நடிகர்திலகம் நடிப்பதோடு நின்று விடாமல் ஆளும் அரசு செய்யும் தவறுகளையும், அட்டூழியத்தையும் எதிர்த்து பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து போராடி வந்திருக்கிறார்.
அப்படி அகில இந்திய சிவாஜி நற்பணி மன்றங்கள் நடத்திய விவசாயத்தை காப்பாற்றவும் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கிட வலியுறுத்தியும் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று நடத்திய அறப்போராட்டம் அன்றைய திமுக அரசை திக்கு முக்காட வைத்தது,
சுமார் 120000 க்கும் அதிகமான அகில இந்திய சிவாஜி மன்ற உறுப்பினர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் கள்,
நிலைமையை உணர்ந்து கொண்ட அரசு விவசாயிகளுக்கு தேவையான நல திட்டங்களை அறிவித்தது, கைதான சிவாஜி நற்பணி மன்ற உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இதேபோல 1980 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாத்தில் ஈடுபட்ட நடிகர் திலகம் அப்போதைய முதல்வரான எம்ஜிஆர் ன் மது ஆதரவு கொள்கையை எதிர்த்தும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் நிறுத்தி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ததனால் அந்தத் தேர்தலில் எம்ஜிஆர் அவர்கள் 40 ல் 2 என்ற மோசமான தோல்வியை தழுவினார்.
நடிகர்திலகத்தை வெறும் நடிகர் என்று மட்டுமே சித்தரிக்கும் ஊடகங்கள், அவருடைய பொதுத் தொண்டுகளை மறந்து அரசியல் பேசுவோர் உண்மையான வரலாறு தெரியாதவர்கள் என்பது தான் உண்மை.

Russellxor
5th February 2017, 11:37 AM
https://uploads.tapatalk-cdn.com/20170205/06b4a346fa680b47f86760e69a72b032.jpg

vasudevan31355
5th February 2017, 07:13 PM
கோபால் சார்,

சமீபத்தில் தங்கள் விருப்பத்திற்காக நான் 'you tube' ல் தரவேற்றிய தலைவரும், வைஜயந்தி மாலாவும் காதல் ஊடலில் தூள் பரத்தும் 'இரும்புத்திரை' காவியத்தின் காதல் காட்சியை Ermalai Arun என்ற அன்பர் அகம் மகிழ்ந்து பாராட்டியுள்ளார். அவரது பதிவிலிருந்து அவர் எப்படிப்பட்ட மேம்பட்ட ரசிகர் என்பது புரிகிறது. நடிகர் திலகம் அவர் மனதில் எந்த அளவு ஊடுருவி உள்ளார் என்பதும் தெரிகிறது. அவருடைய, அந்தக் காட்சிக்கான கமெண்ட் கீழே. அவருக்கு என் உளமார்ந்த நன்றி.

this is height of versatility, brilliance, what a performance by SG and VJ. SG you are an incomparable inimitable actor - billion times talented than Kamal - that gives the current moron where they stand. single shot, multitude of expressions, and VJ is giving lovely cute expressions and counter reactions. I dont have words to express my feeling - I cried - this is not an emotional scene, - cute love scene.

Harrietlgy
5th February 2017, 10:31 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 162– சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/125652125114860308571569874242Uyarndha_Manidhan.jp g


1968ம்வருடம்தான் சிவாஜியின் 'எங்க ஊர் ராஜா', 'லட்சுமி கல்யாணம்', 'உயர்ந்த மனிதன்' படங்கள் வெளிவந்தன.
'எங்க ஊர் ராஜா' படத்தை இயக்குநர் பி. மாதவனின் அருண்பிரசாத் மூவீஸ் தயாரித்திருந்தது.
படத்தை மாதவனே இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் கதையை பாலமுருகன் எழுதியிருந்தார். இதில் தந்தை மகன் வேடம் சிவாஜிக்கு!
`யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ பாட்டு இந்த படத்தில் மிகவும் பிரபலம்.
இந்த படம் சென்னை சித்ரா தியேட்டரில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தயாரித்த படம் ` லட்சுமி கல்யாணம்’. என்ன காரணத்தினாலோ இந்த படத்தை எடுப்பதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டார்கள்.
`ராமன் எத்தனை ராமனடி,’` பிருந்தாவனத்திற்கு வருகின்றேன்,’ `யாரடா மனிதன் அங்கே கூட்டி வா அவனை இங்கே’ போன்ற பாடல்கள் பிரபலமாக இருந்தும் படம் சரியாக போகவில்லை.
சிவாஜியின் 125வது படமாக ஏவி.எம். தயாரித்த `உயர்ந்த மனிதன்’ வெளிவந்தது.
அந்த சிறப்புக்கு ஏற்ற முறையில் அமைந்திருந்தது.
இந்த படத்தை பற்றி அதன் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த ஏவி.எம்.சரவணன் கூறும்போது, `நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எங்கள் பேனரில் வெகு நாட்களாக படம் பண்ணாமல் இருந்தார். ஒரு சிறிய மிஸ்–அண்டர்ஸ்டாண்டிங் காரணமாக இடைவெளி விழுந்திருந்தது.
எங்கள் கல்கத்தா (கோல்கட்டா) பங்குதாரர் வி.ஏ.பி. அய்யர் ` உத்தர் புருஷ்’ என்ற வங்காள மொழிப் படம் பற்றி குறிப்பிட்டு ` நல்லா போகுது’ என்று சொன்னார்.
அந்தப் படத்தைப் பார்த்து, ஜாவர் சீதாராமனை வைத்து அழகாக ஒரு திரைக்கதையை உருவாக்கினோம். பின்னர் அந்த கதையை பெங்களூருவில் வைத்து விவாதித்தோம். யார் ஹீரோவாக நடித்தால் அந்தக் கதைக்குப் பொருந்தி வரும் என்று பேச்சு வந்தபோது நான் சிவாஜி பெயரை வலியுறுத்தினேன்.
`பழைய மனக்கசப்பை மறந்து விடுவோம். நீங்க போய் சிவாஜியிடம் பேசுங்க’ என்றார் ஏவி.எம். செட்டியார்.
நான், என் சகோதரர்கள் குமரன்முருகன் ஆகியோர் சிவாஜியின் வீடான 'அன்னை இல்லம்’ போனோம்.
உடல் நலமின்றி இருந்ததால் அப்போது வீட்டில் ஓய்வில் இருந்தார் நடிகர் திலகம்.
நாங்கள் அவரிடம் பேசி எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம்.
`அதற்கென்ன? நடிக்கிறேன்' என்று ஒப்புக்கொண்டார். `யார் டைரக்*ஷன்?’ என்று கேட்டார்.
`கிருஷ்ணன் – பஞ்சு.’
`பஞ்சு அண்ணன் டைரக்*ஷன்ல நான் ஆக்ட் பண்ண மாட்டேன். எனக்கும் அவருக்கும் சரிப்பட்டு வராது’ என்றார். இத்தனைக்கும் கிருஷ்ணன் – பஞ்சுதான் சிவாஜியின் முதல் படமான `பராசக்தி’ படத்தின் இயக்குநர்கள்.இரண்டு பேருக்குமிடையே ஏதோ மனத்தாங்கல் அப்போது வளர்ந்திருந்தது.
`ஒரு நாள் நடிச்சீங்கன்னா எல்லாம் சரியாகப் போயிடும்’ என்று நான் நடிகர் திலகத்தை கன்வின்ஸ் செய்தேன். ` சரி’ என்றார்.
சிவாஜிக்கு உடல்நிலை சரியானதும் `உத்தர்புருஷ்’ படத்தை போட்டுக்காட்டினோம்.
`இதில் எனக்கு சரியான ரோல் இல்லையே… அப்பா ரோல் போட்டா `படிக்காத மேதை’யில் ரங்காராவ் போட்ட ரோல் மாதிரி ஆயிடும். அந்த டாக்டர் ரோல் பண்ணலாம். சின்ன ரோல்தான். நான் வேணும்னா கெஸ்ட் ஆர்டிஸ்ட்டா அந்த படத்திலே நடிச்சுத் தர்றேனே’ என்றார் சிவாஜி.
`இல்லே சார். நீங்க ஹீரோவா பண்ணினாத்தான் நல்லா வரும்’ என்று நான் என்னுடைய கருத்தைச் சொன்னேன்.
`எனக்கு உடன்பாடு இல்லே சரவணன். ஆனால் உங்களுக்காக வேணும்னா ஆக்ட் பண்றேன்.’
அந்த டாக்டர் ரோலை பண்ண வேண்டும் என்ற ஆசை அவருக்குள்ளிருந்ததை நான் உணர்ந்தேன். ஆனால் அதை அசோகன் பண்ணவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்.
`டாக்டர் ரோலை அசோகன் பண்றார்’ என்ற தகவலை சிவாஜியிடம் சொன்னபோது, அதை அவர் பெரிதாக ரசிக்கவில்லை. அப்போது அவர்கள் இருவருக்கும் `டெர்ம்ஸ்’ சரியாக இல்லை. அசோகன், எம்.ஜி.ஆர். கேம்பை சேர்ந்தவர் என்ற எண்ணம் சிவாஜியிடம் வளர்ந்திருந்தது. சிவாஜி மீது அசோகனுக்கும் சற்று வெறுப்பு இருந்தது.
ஆனால் நடிகர் திலகமும் சரி, அசோகனும் சரி, இந்த உணர்வுகளையெல்லாம் நடிக்கும்போது வெளிப்படை யாக காட்டிக்கொண்டதில்லை என்பதையும், அது இருவரின் பெருந்தன்மை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இருந்தாலும் ரகசியமாக என்னிடம் ஒருவர் பற்றி இன்னொருவர் முணுமுணுப்பார்கள்.
படத்தில் ஒரு காட்சியில் அசோகன் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போவார்.
அப்போது எப்படி நடிக்க வேண்டும், முகபாவங்களை எப்படிக் காட்டவேண்டும் என்று அசோகனுக்கு சிவாஜி கற்றுக் கொடுத்தார்.
சிவகுமார், சிவாஜியின் மகன் என்ற உண்மையை சிவாஜியிடம் சொல்ல அசோகன் வரும்போது அவரால் முடியாமல் இருதய வலி வந்து செத்துப் போவதாக காட்சி.
இடைவேளையின் போது சிவாஜி தனக்கு கற்றுக் கொடுத்தது பற்றி என்னிடம் மெதுவான குரலில் அசோகன் கேட்டார், ` ஏண்ணே, இந்த ஆள் (சிவாஜி) என்னைக் கவுத்திடலியே?’
`அடப்பாவி மனுஷா! அவர் எவ்வளவு அக்கறையா கத்துக் கொடுக்கிறார்! ஏன் அப்படி நினைக்கிறீங்க?’ என்றேன் நான்.
இன்னொரு பக்கம் சிவாஜி ` எனக்கு அவன் (அசோகன்) துரோகி. அவனுக்கு நான் ஆக்*ஷன் கத்துக் கொடுக்க வேண்டியிருக்கு பார். படம் நல்ல வரணும்ங்கறதுக்காக நான் சொல்லித் தர்றேன்' என்று என் காதில் கமெண்ட் அடித்தார்.
அதே போல இன்னொரு சம்பவமும் இப்போது நினைவிற்கு வருகிறது. ஒரு நாள் ` அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ பாடல் காட்சி ஷூட்டிங்கின்போது சிவாஜி நடித்துக் கொண்டிருந்தார்.
சற்று தொலைவில் அசோகன், அவரைச் சுற்றி கூட்டம் கூடியிருந்தது. எம்.ஜி.ஆரை எம்.ஆர் ராதா எப்படி சுட்டார் என்ற விவரத்தை அங்கே அந்த கூட்டத்திற்கு அசோகன் மோனோ ஆக்டிங் செய்து காட்டிக்கொண்டிருந்தார்.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும், அசோகன் இருந்த இடத்திற்கும் இடையே தூரம் நிறைய இருந்த போதும் சிவாஜி
என்னைக் கூப்பிட்டு, `அவனை மொதல்ல போகச் சொல்லும்’ என்றார்.
`அசோகன் தூரத்தில்தானே இருக்கிறார்?’ என்று சொல்லிப் பார்த்தேன்.
`என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான். ஒண்ணு அவனை பாக் – ஆப் பண்ணு. இல்ல நான் பாக்– அப் பண்ணிக்கிறேன்’ என்றார் சிவாஜி.
பிறகு அசோகனிடம் நான் சென்றேன். அசோகனுக்கு நான் சொன்ன
விஷயம் பிடிக்கவில்லை. இருந்தாலும்………..
(தொடரும்)

RAGHAVENDRA
7th February 2017, 08:27 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16473027_1346944268689575_1054269081014543809_n.jp g?oh=97eb1345639e6e015892ed48093f81b8&oe=59074C85

RAGHAVENDRA
8th February 2017, 07:56 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16473636_1348100738573928_741886090190354001_n.jpg ?oh=ec9d1e6301f1dc1450aae1e407633cec&oe=593F157E

Russellxor
8th February 2017, 05:43 PM
வாக்கப்பட்டு வந்த பொஞ்சாதி வக்கனையா ஆக்கிப் போட தெரியாதவளா இருந்தாலும் சரி, நல்ல பேச்சு நாலு பேசத் தெரியாதவளா இருந்தாலும் சரி, நாலு பேருக்கு கிள்ளிப் போடாதவளா இருந்தாலுஞ் சரி கட்டிக்கிட்ட புருசன் மனச கல்லாக்கிக்கிட்டு காலத்தைஏதோ ஓட்டிடலாம்.ஆனா மானத்தை தொலச்சவள கட்டிக்கிட்ட புருஷன் தான், வெளியவும் சொல்ல முடியாம உள்ளவே புழுங்கிக்கிட்டு நடைப்பிணமாத்தான் வாழ்ந்துகிட்டு இருப்பான்.இது நல்ல மனுசனுக்குண்டான குணம்.
ஊருக்கே பெரிய மனுசனா இருந்தாலும், குடும்பம்னு ஒண்ணு இருந்தா அவரு பேச்சை கேட்கிற மாதிரி பொண்டாட்டியும் , புள்ள குட்டிகளும் இருந்தாத்தேன் மனுசனுக்கு படுக்கையிலே தூக்கம் வரும்.இல்லேன்னா அந்த படுக்கை கூட சுமையாத்தான் தெரியும்.ஊருக்குள்ள போயிட்டும், வந்துட்டும் இருக்கும் போது கௌரவத்திற்கு சிரிச்சு தொலச்சு செத்த பொணமா வாழ்க்கைய நடத்தனும்ங்கறமாதிரிதான் அவுக பொழப்பு இருக்கும்.
இங்க மலைச்சாமியோட கதயும் இதப் போலத்தேன்.மத்த மனுசங்களோட குணத்தோட இந்த மனுசனோட குணத்த இணைச்சுப் பேச முடியாது.அந்த மனுசனோட குணம் பூமிக்குள்ள புதஞ்சிருக்கிற வைரம் மாதிரி.அந்த வைரத்தோட குணம் பொஞ்சாதிக்குத்தான் தெரியாம போச்சு.ஆனா ஊருக்கு நல்லாவே தெரியும்.
அவுரு பொஞ்சாதியோட கத தான் என்ன?
கண்ணாலத்துக்கு முன்னயே வேற ஒருத்தனோட உறவாண்டுகிட்டு கர்ப்பமும் ஆகிப்போனா.விதச்சவனோ விதியேன்னு ஓடிப் போயிட்டான்.
மகளோட சேதி தெரிஞ்ச அப்பனுக்குத்தான் வேற வழி தெரியல.அவனோ மானம், மருவாத கெட்டா தூக்குல தொங்கற ஆளு. அந்த கணம் சாமி மாதிரி தெரிஞ்ச ஒரே ஆளு மலைச்சாமி தான்.மலைச்சாமி கால்ல விழுந்து, நாசமாப் போன மகள நீ தான் கட்டிக்கிடனும். இல்லலேன்னா என் உசுறு என் உடம்புல தங்காதுன்னு கெஞ்சறான்.என் உடம்பு உன் காலுல, என் மானம் உங் கையிலன்னு அழுகறான். பெரிய மனுசன் கால்ல விழும்போது அந்த " சாமி " க்கு எதிர் வார்த்த சொல்ல வரல.
ஒத்துக்கிறாரு.
கண்ணாலம் முடிஞ்சாலும் அவ புத்தி மாறல.அது நாய் புத்தி.மலைச்சாமி ஊருக்கு பொண்டாட்டியா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள அவள ஏத்துக்கல.
ஆனாலும் அவுளுக்கு பொறந்த மகள தன் மக மாதிரிதான் பாசம் காட்டி வளர்க்கிறாரு.

மலைச்சாமிக்கு பாதி நிம்மதி கிடைக்கறது வீட்டுல இருக்குற குயிலு, காட்டுல பாடுற பாட்டு, வயலு, வரப்புதான்.இப்புடியே பொழப்பும் ஓடிட்டிருக்கு.

மரியாதைன்னா என்னா?அது கடுகளவு கூட தெரியாது அவுளுக்கு.
ஒரு நா, எச்சப் பாத்திரத்த கழுவறா.கழுவுற எச்சத் தண்ணிய வீசறா.அது மலைச்சாமி மேல வந்து விழுகுது.அதுக்காக அவ வருத்தமா பட்டா? கேக்குறா கேள்வி. எச்சத் தண்ணி வீசறது தெரியாம குறுக்கு வர்றதுக்கு அறிவா கெட்டுப் போச்சு? மத்த புருஷனா இருந்தா அப்பவே அவ கன்னம் வீங்கியிருக்குமே! ஆனா இது ஊருக்கே சாமியாச்சே.
அந்த ஈரத்தோட வீதில இறங்கி நடந்து வர்றாரு.எதுக்கால வர்றா ஒருத்தி.ஈரம் பாத்து, என்னான்னு கேக்குறா?
மலைச்சாமி சொல்றாரு.
" உங்க்கக்கா மஞ்சத்தண்ணி விளையாண்டுட்டா புள்ள ".


மலைச்சாமிக்குள் இருக்கும் நகைச்சுவை அங்கே தலையெடுக்கிறது.ஒரு சோகம் அங்கே சந்தோசமாய் மாறியது. அந்தப்பேச்சு மலைச்சாமியை பார்த்து வியக்க வைக்கிறது.


"முதல் மரியாதை "
-----------------------------------------------------------------------பிடித்தால் தொடரும்.

RAGHAVENDRA
9th February 2017, 07:20 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16649392_1348984258485576_686677807992344613_n.jpg ?oh=95f9f5e25253168040df731455628917&oe=5904C78E

Russellxor
9th February 2017, 07:44 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/9ee1cd119960bc4580d6b3cb2e86cc08.jpg

Russellxor
9th February 2017, 07:45 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/6099c6b431220a094241679a576e15a9.jpg

Russellxor
9th February 2017, 07:46 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/b8d8ba5a9dcf24dee3c55cea9f6b1b4d.jpg

Russellxor
9th February 2017, 07:47 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/b5e9224d60136302c56e38b05c488499.jpg

Russellxor
9th February 2017, 07:48 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/5934c32788cc63a6ff4600069b015acb.jpg

Russellxor
9th February 2017, 07:50 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/15d1ff1f5055d0b0c699e71e9f812a25.jpg

Russellxor
9th February 2017, 07:53 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/f06932fefd13d8ba18387842a510ce43.jpg

Russellxor
9th February 2017, 07:54 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/bbb8a4812e2b6effceb94ca6e6f98372.jpg

Russellxor
9th February 2017, 07:57 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/4b720c89be2325727a1cbdc707c71002.jpg

Russellxor
9th February 2017, 07:59 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/692ca5d888b16cdb618c7581fc4a7c0b.jpg

Russellxor
9th February 2017, 08:04 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/c7c4ef0f230aac0c8cf4ed5cbc7133d1.jpg

Russellxor
9th February 2017, 08:07 PM
https://uploads.tapatalk-cdn.com/20170209/46a856164ddb755fab3f556c51caea0e.jpg

Gopal.s
10th February 2017, 08:56 AM
தொடருங்கள் செந்தில் (சக்தி)வேல். அருமை.

HARISH2619
10th February 2017, 01:21 PM
Senthil sir superb,all rare images ,many of them never seen before

Russellsmd
10th February 2017, 01:25 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0001_20170116080120669_20170202125247091_2017021 0131159119_zpsxsm56iuj.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0001_20170116080120669_20170202125247091_2017021 0131159119_zpsxsm56iuj.jpg.html)

Russellsmd
10th February 2017, 01:57 PM
செந்தில்வேல் சார்...

ஏதோ அவசரத்தில்தான் செந்தில்வேலை, சக்திவேல் என்று கோபால் சார் மாற்றி அழைத்து
விட்டார் என்று நினைத்திருந்தேன்.

அய்யனின் சிறப்பை ஏற்க மறுப்போரைத் துளைக்கும் விதமாய் ஆவண வேல்களை அடுத்தடுத்து எரியும் நீங்கள் "சக்திவேல்" தான்.

இதயத்திலிருந்து வாழ்த்துகள். நன்றிகள்.

Gopal.s
10th February 2017, 02:16 PM
I talked about Mudhal Mariyadhai ,Senthilvel.

Russellxor
10th February 2017, 02:52 PM
Thanks for all

Russellxor
10th February 2017, 05:06 PM
வெள்ள வேட்டி.சாதா சட்ட.துண்டெடுத்து ஒரு உருமா கட்டு.கையில அருவா. வீட்டுக்குள்ள பாக்குற பெரிசு வேற.வீதில இறங்கிட்டா அது வேற.பெரிசுக்கு வீடு கொடுக்காத சுகத்த வெட்ட வெளி கொடுக்குது.இதுக கூட உறவுகதானே சந்தோசப்பட்டுக்கற மனசு அது.மலைச்சாமி சாந்தமான மனுசந்தான்.அவுரு கிட்டயும் பெரிய வீரம் ஓளிஞ்சுகிட்டுதா இருக்கு.அந்த வீரத்த அவுரு புடிச்சிருக்கிற அந்த அருவாவ கேட்டா கூட சொல்லும்.அருவா கைப்புடிய புடிச்சு அத பின்ன மடக்கின மாதிரி நடப்பாரு பாருங்க அதுல தெரியும் அவுரு கெத்து.
மனுசன் செருப்பு போட்டு பாத்திருக்காது அந்த ஊரு.வெறுங்காலு தான். அதுக்கு கூட ஒரு காரணம் இருக்கு.எந்த காலுல விழுந்து மாமன் தன் பொண்ண கட்டிக்கோன்னு கெஞ்சுனானோ அந்த கால்ல போட்ட செருப்பா பொஞ்சாதிய நினச்சதாலதான், அந்த சாமி செருப்பே போடர்றதில்ல.

குதிரையில் ஏறி அய்யனார் போற மாதிரி நடந்து போறாரு மனுசன்.
நடந்து போற மனுசன் மேல பூமில இருக்கற முள்ளுக்கு என்ன கோபமோ அவரு கால முள்ளு தச்சுருச்சு.
முள்ளு தச்ச இடம் செங்கோடன் வீட்டு வாசல்ல.செங்கோடன் அந்த ஊருக்கு செருப்பு தைக்கிறவன்.
"டேய் செங்கோடா "
பெருசு கூப்பிடுது.
தூக்கத்துல கேட்டாலும் இந்த குரலுக்கு உருவம் ஒண்ணுதான்.அது செங்கோடன் மனசுல பதிஞ்சது.
"அய்யா " .இது செங்கோடன்.
" கால்ல முள்ளு தச்சுருச்சு ."
கிடுக்கியோடு முள்ளெடுக்கறான் செங்கோடன்.
பெருசு பேச்சு பெரும்பாலும் ஒத்த பேச்சுதான்.ஆனா அது பெரும்பேச்சு.
அப்பிடித்தான் அது அப்ப சொல்லுது.
"உன் வீட்டுகிட்ட தான் என் கால்ல முள்ளு தைக்கனுமா"
அவன் கேக்குறான்
"ஊருக்கே செருப்பு தக்கிறேன்.உங்க கால்லுக்கு ஒரு செருப்பு தச்சு போட முடியலயே "
பெருசு போகுது ஒண்ணும்சொல்லாம.
கட்டுன பொஞ்சாதிகளுக்கு கூட தெரியாத சில சங்கதி அந்த ஊரு வண்ணானுக்கும், நாசுவனுக்கும் தெரியும்பாங்க.செங்கோடன் கூட அத போலத் தானே.அவனுக்குத் தெரியுமே பெருசோட கத.
***

ஆண்டவன் படச்சானா இல்ல, அதாவே அமஞ்சதா இயற்கை.அது ஆருக்கும் தெரியாது.
பாரப்பட்டி கிராமந்தான் மலைச்சாமியோட ஊரு.மலைச்சாமியோட சந்தோசங்கள்ள ஒண்ணு தான் இசப் பாட்டு படிக்கிறது.வித போடறது, நாத்து நடறது, களை எடுக்கறதுன்னு அது பாட்டுக்கு அந்த வேலைக நடக்கும் .கூடவே பாட்டுப் படிக்கறதும் நடக்கும்.விவசாயம் வயத்துக்குன்னா பாட்டு மனசுக்கு.இது எல்லா ஊர்லயும் உண்டுதான்.

பெருசும் சில சமயம் குசும்பு வேலையெல்லாம் செய்யறதுண்டு.
"ஆம்பளக்கு ஒரு வேல
பொம்பளக்கு நூறு வேல"
அப்படிம்பாங்க.
குடும்பத்துல என்ன சண்டயோ, வயல் வேலக்கு வந்தவங்க, சில சமயம் பாடாம தேமேன்னு வேல செய்வாங்க.அதப் பாக்கற பெரிசுக்கு, இவிகள எப்படியாச்சு பாட வச்சாகணும்ற காரியமா தொட்டில்ல போட்ட குழந்தய கிள்ளி விட்டிருவாரு.அழுக சத்தம் கேட்டு வர்ற ஆத்தா ஆராராரோ பாடி தொட்டில ஆட்டுவா.
இப்ப எப்படி பாட்டு வந்துச்சுன்னு வெளிய வரும் பெரிசு.
***

முதல் மரியாதை...

Russellsmd
11th February 2017, 11:56 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_1_20170 211082340556_1_20170211113606715_zpshwndrdcg.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_1_20170 211082340556_1_20170211113606715_zpshwndrdcg.jpg.h tml)

vasudevan31355
11th February 2017, 01:15 PM
From FB

https://scontent.fdel1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16683968_170744543418398_4000535321148493346_n.jpg ?oh=4b856294e76d9efaac6990f2ade0220a&oe=590BCE7D

vasudevan31355
11th February 2017, 01:17 PM
https://scontent.fdel1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16603091_1240028179447403_2122908823785932431_n.jp g?oh=37cc6214ab136b5f53394ed60b63e3ad&oe=58FF5F10

Deva Chandran
Deva Chandran சாம்ராட் அசோகர் நேரில் வந்து எம் தலைவரை பார்த்திருந்தால் மிகவும் பிரமித்து போய் இருப்பார் - உண்மையான அசோகர் அவரா அல்லது நடிப்புலகின் சக்ரவர்த்தியா என்று மிரண்டிருப்பார் - சிங்கம்லே
Like · Reply · 2 · 18 hrs
Sundar Rajan
Sundar Rajan இந்த கம்பிரம் யாருக்கு வரும் தலைவரை தவிர
Like · Reply · 2 · 17 hrs
Srinivasa Narasimhan
Srinivasa Narasimhan அசோக சக்ரவர்த்தியே, இதுபோல் கம்பீரமாக நிற்கமுடியுமா ? சந்தேகமே ! இதுபோன்று நின்றால் ..... சண்டையே கிடையாது ஒன்லி சரண்டர்தான் !
Like · Reply · 1 · 14 hrs
Mohamed Farook
Mohamed Farook புருவங்களை நெரிப்பாரே..யாராலும் முடியாது..
Like · Reply · 1 · 14 hrs

Russellsmd
11th February 2017, 01:50 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_1_20170 211133954209_zps8g3fr5gk.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_1_20170 211133954209_zps8g3fr5gk.jpg.html)

Russellsmd
11th February 2017, 06:12 PM
வாழ்த்துகள்.. செந்தில்வேல் சார்.

"முதல் மரியாதை" தொடர் அற்புதம்.

எளிய, இனிய கிராமிய நடையிலேயே வர்ணனையை நகர்த்திச் செல்லுவது மிகப் பொருத்தம்.

ஒரு சந்தேகம்... இதில் அய்யாவின் பெயர் "மலைச்சாமி" இல்லை?

Russellxor
11th February 2017, 08:44 PM
வாழ்த்துகள்.. செந்தில்வேல் சார்.

"முதல் மரியாதை" தொடர் அற்புதம்.

எளிய, இனிய கிராமிய நடையிலேயே வர்ணனையை நகர்த்திச் செல்லுவது மிகப் பொருத்தம்.

ஒரு சந்தேகம்... இதில் அய்யாவின் பெயர் "மலைச்சாமி" இல்லை?
ஆதவன்,
நன்றி.
தவறு திருத்தப்பட்டது.

Harrietlgy
12th February 2017, 10:40 AM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 163– சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/15103040341486645243347424674uyarndha%20manithan%2 0sivakumar.jpg


வெகு நேரம் சமாதானப்படுத்திய பின் அசோகன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
சரவணன் மேலும் தொடர்ந்தார், `இன்று அசோகன், சிவாஜி இருவரும் இல்லை. இவர்களைப்பற்றிச் சொல்வது நாகரிகமில்லையென்றாலும், இந்த சம்பவத்தை நான் பகிர்ந்து கொள்வதற்குக் காரணம், கலைஞர்களிடையே ஏற்படும் சிலவகை மனக்கசப்புகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.
அதிலும் தமிழ் திரையுலகில் இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் எல்லா காலங்களிலும் இருந்து வந்திருக்கின்றன. இதில் எந்த ரகசியமும் இல்லை. நடிகர்திலகம், அசோகன் இருவருமே அந்தப் படத்தில் மிக நன்றாக நடித்தார்கள் என்பது உண்மை.
சொல்லப்போனால், சிவாஜி சொல்லிக் கொடுத்ததில் ஒரு சதவீதம்தான் அசோகன் நடித்தார் என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து. அதுவே பெரிய ஹிட்.
படம் நூற்றியிருபத்தைந்து நாட்கள் ஓடி பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படம்தான் 'உயர்ந்த மனிதன்'.
படத்தில் நடிக்க முதலில் சிவாஜி எப்படி சம்மதிக்கவில்லையோ அப்படியே இயக்குநர் பஞ்சு சாரும் சம்மதிக்கவில்லை. அவரையும் `கன்வின்ஸ்’ செய்தோம்.
படத்தில் சிவாஜி நடிப்பது உறுதியானதுமே அவரிடம் சம்பளம் பற்றிக் கேட்டோம்.
`சண்முகம் வந்து உங்களிடம் பேசுவார்’ என்றார் சிவாஜி. அப்படியே சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகம் வந்தார்.
`நீங்க என்ன கொடுத்தாலும் வாங்கிக்கலாம்னு அண்ணன் சொல்லச் சொன்னார்’ என்றார்.
எங்களுக்கு அது சரியென்று படவில்லை. அந்த மாபெரும் நடிகர் அப்போது என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாரோ அதைத் தருவதுதான் நியாயம் என்று முடிவெடுத்தோம்.
`ஏவி.எம். நிறுவனம் என்ன சம்பளம் தந்தாலும் ஓ.கே. என்று சிவாஜி தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. சண்முகத்திடம் பேசிப்பேசி கடைசியில் சிவாஜியின் அப்போதைய சம்பளம் என்ன என்ற விவரம் கிடைத்தது. கடைசியாக ஏ.பி. நாகராஜன் படத்துக்கு அண்ணன் வாங்கிய சம்பளம் இரண்டு லட்சம் ரூபாய்! எங்களுக்கு அதில் ஒரே பாயிண்ட்டுதான். ஏ.பி.என். படம் வண்ணப்படம். `உயர்ந்த மனித'னோ கறுப்பு வெள்ளை. மேலும் ஏ.பி.என். படத்தில் காஸ்ட்டியூம்கள் ஹெவியாக இருந்தன. கனமான அணிகலன்களையும் அணிய வேண்டும். அதே போல படப்பிடிப்பு நாட்களும் அதிகம்.
`உயர்ந்த மனிதன்’ படத்தில் அந்த சிரமங்கள் எதுவும் இல்லை. ஷூட்டிங் நாட்களும் அங்கே அதிகம். எனவே, சிவாஜிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் சரியாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. இதை சண்முகத்திடம் தெரிவித்தோம். மறுபேச்சின்றி ஒப்புக்கொண்ட அவர், `ஆனால் ஒரு கண்டிஷன்’ என்றார்.
`இப்போ காலணா தரக்கூடாது. படம் முடிஞ்சு சென்ஸார்ல ஓ.கே. ஆனதும் ஒரே பேமண்ட்ல மொத்தமா கொடுக்கணும்.’
ஆனால் `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பில் சிறு தடங்கல் ஏற்பட்டது.
நாங்கள் `குழந்தையும் தெய்வமும்’ படத்தை இந்தியில் `தோ கலியான்’ என்று எடுத்தபோது அதை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது `பாரண்ட் ட்ராப்’ என்ற கதையின் அடிப்படையிலேயே `வாபஸ்’ என்ற பெயரில் வடக்கில் வேறொரு கம்பெனி ஒரு படத்தை எடுத்து
வந்தது.
`பாரண்ட் ட்ராப்’ கதையைத் தழுவித்தான் ` குழந்தையும் தெய்வமும்’ எடுத்தோம். எனவே `வாபஸ்’ வெளியாவதற்குள் நாங்கள் `தோ கலியான்’ படத்தை ரிலீஸ் செய்தாக வேண்டும்.
அதற்காக நடுவில் கொஞ்ச காலம் ` உயர்ந்த மனித’னை நிறுத்தி வைத்துவிட்டு 'தோ கலியா'னில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். சுமார் எட்டுமாத காலம் பிரேக் விழுந்துவிட்டது.
இந்த இடைவெளி சிவாஜிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
`ஒரு வேளை ஏவி.எம். `உயர்ந்த மனிதனை’ டிராப் செய்துவிட்டார்களோ’ என்ற சந்தேகம். சண்முகம் வந்து கேட்கவும் செய்தார்.
இது தெரியவந்ததும், `முதல்ல ஒரு ஐம்பதாயிரம் கொண்டு போய் சண்முகம் ஆபீஸ்ல அட்வான்ஸை கொடுத்துவிட்டு வாங்கப்பா’ என்றார் அப்பச்சி!
அதே போல கொண்டு போய் பணத்தைக் கட்டாயப்படுத்திக் கொடுத்துவிட்டு வந்தோம்.
`உயர்ந்த மனிதன்’ படத்தை பற்றி சொல்லும்போது எங்களுக்கு மகிழ்ச்சி தந்த விஷயம் சிவகுமாருக்கு அதில் கிடைத்த நல்ல ரோல்.
`காக்கும் கரங்கள்’ படத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிவகுமார் நடித்த காட்சிகளைப் பெருமளவு வெட்ட வேண்டி வந்ததால் சிவகுமார் மிகவும் மனமுடைந்து போனதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
`உயர்ந்த மனிதன்’ படத்தில் அவருக்கு நல்ல ரோல் தந்தோம்.
அது மட்டுமல்ல, அதற்குப் பிறகு ஏ.பி.நாகராஜன் எடுத்த ஒரு படத்தில் முருகர் வேடத்துக்கு சிவகுமாருக்கு தெரியாமலேயே அவரது பெயரை அப்பச்சி சிபாரிசு செய்தார்.
சிவகுமாரின் நீண்ட திரையுலக வாழ்க்கைக்கும், வேகமான முன்னேற்றத்திற்கும் ஏவி.எம். நிறுவனமும் ஓரளவு காரணமாக இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி!
'உயர்ந்த மனித'னில் சிவகுமாருக்கு `கேள்விக்கென்ன பதில்’ என்று ஒரு பாடல் வைத்திருந்தோம். முதலில் பாட்டை ஒலிப்பதிவு செய்துவிட்டோம். பாடல் காட்சியை வெளிப்புறப் படப்பிடிப்பில் முடித்துக் கொண்டும் வந்தாயிற்று.
ஆனால் அப்பச்சிக்கு அந்தக் காட்சி பிடிக்கவில்லை.
ஏனென்றால், கதையின்படி சிவகுமார் ஒரு படிக்காத பையன். காதலியோ காலேஜில் படித்த பெண் மாதிரி ஒரு கிரேஸ்புல் கேரக்டர். அந்த காதல் காட்சியில் இருவரும் ஒருவரையொருவர் தொடாமல் நடித்தால் அழகாக இருக்கும் என்று அபிப்ராயப்பட்டார் அப்பச்சி!
ஆகவே மீண்டும் பாடலை கொஞ்சம் மாற்றி இசையமைத்து அதே மாதிரி காட்சியையும் ரீ-ஷூட் செய்தோம். இப்போது கூட கவனித்துப் பார்த்தால், அந்தப் பாடலில் இசைத்தட்டில் இருப்பதற்கும், படத்தில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கும்.
`உயர்ந்த மனிதனில் பாட்டின் நடுவில் வசனங்களோடு `அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்ற பாடல் அப்போது புதுமை.
இந்த புதுமைக்கும் என் சகோதரர் குமரன்தான் காரணமாக இருந்தார்.
அச்சமயம் சென்னையில் பிரபலமாக இருந்த ஒரு ஆங்கிலப்படத்தை எம்.எஸ். விஸ்வநாதனைப் பார்க்கும்படி சொல்லி, அதில் ஒரு காட்சியில் வந்தது போல, அந்த இன்ஸ்பிரேஷனை வைத்து பாட்டையும் வசனத்தையும் இணைக்குமாறு ஐடியா கொடுத்தார் குமரன்.
அதே போல பி.சுசீலா பாடிய `நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா ‘ என்ற அருமையான பாடல் அவருக்கு அந்த ஆண்டு தேசிய விருதினைப் பெற்றுத்தந்தது. அதற்காக அவரைப் பாராட்டி நாங்கள் எடுத்த சிறப்பான விழாவில் ஒரு அகில இந்திய ஏன் உலகில் இருக்கும் இந்தி பேசும் மக்களிடமெல்லாம் மிகவும் புகழ்பெற்றிருந்த ஒருவர் தலைமை தாங்க வந்திருந்தார்.
(தொடரும்)

Russellsmd
12th February 2017, 08:06 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_1_20170 212195142278_zpsf5s3ebzv.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_1_20170 212195142278_zpsf5s3ebzv.jpg.html)

Russellsmd
13th February 2017, 11:36 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170213111920856_zpszege wyhy.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170213111920856_zpszege wyhy.jpg.html)

Russellxor
15th February 2017, 11:47 AM
பூமிய நம்பி வாழறவனுக்கு மழ தான் சாமி.அது ஒண்ணுக்கு ஊத்தற மாதிரி ஊத்துனாலும் ஏதோ ஒரு சாண்
வயிறுனாச்சும் நெறையும். மழைங்கிறதே மாயமாகிப் போச்சு, அப்பிடிங்கிற நெலம வந்தா ஊர் சனம் என்ன செய்யும்? பஞ்சந்தா தல விரிச்சு ஆடயில பாவி மக்க எங்கிட்டு போவாங்க? கூலி வேல தான் நாதின்னு இருக்கிற கூட்டம் கூழ கும்பிடு போட்டுகிட்டு பஞ்சம் தேடி மறு தேசம் போவாங்க.
கஞ்சியோ, கூழோ ஏதோ ஒண்ணு கிடச்சாத்தானே வயிறு கேக்கும்.அதுக்கு கூட வக்கில்லாம குடல எத்தன நா(ள்) சாகடிக்கிறது.
இந்த நிலமையில தான் பாரபட்டிக்கு வராங்க குயிலும், அவங்கப்பனும்.

அவுக எந்த சாமிய நெனச்சு அந்த பூமிக்கு வந்தாங்களோ தெரியாது, ஆனாஅவுகளமுதலா
பாக்குறதுதென்னமோ மலைச்சாமிதான்.
வந்தவங்க வாழ்ந்த ஊரு பேரு "அரைக்குடித்தனம் பட்டி ".ஒரு வயசாள ஆளு, ஒரு கொமரிபுள்ள, அவங்களுக்கு ஒத்தாசையா ஒருத்தன்.வயலுக்கு அரணா போட்ட வேலிப்படல மிதிச்சுகிட்டு உள்ள வராங்க.பெரிசு பாத்துட்டு சத்தம் போடுது.
"எவண்டாவன், வேலிய மிதிச்சுகிட்டுஉள்ள வர்றது "
வயசான ஆளு சொல்றான்,
" அஞ்சாதிங்க சாமி , பஞ்சம் பொழைக்க வந்திருக்கோம் "னு.
பெரிசு கேக்குது,
" இங்கயே பஞ்சம் அவுத்துப் போட்டு அம்மணத்தோட ஆடுது.நீங்க வேற பஞ்சம் பொழைக்க வந்துட்டீங்களா ".
சித்த நேரம் யோசிக்கிறாரு.
பாக்கவும் பாவமா இருக்குது.இல்லாதவங்கள விரட்டியடிக்கவும் மனசில்ல.ஒரு மனசா, அவங்கள ஒரு ஓரமா குடிசையப் போட்டு தங்கிக்கவும் சொல்லுது பெரிசு.
அந்த "மழைச்சாமி "கை விட்டாலும், இந்த
"மலைச்சாமி "யால
பஞ்சம் பொழைக்க வந்தவங்களுக்கு ஒரு வழி பொறக்குது.

வந்தவங்கள்ள ஒரு கொமரி இருக்கா ல்ல.அவ பேரு குயிலு.அவளுக்கு பேருக்கேத்த குரலுதா.மனசுல ஒண்ணும் வச்சிக்கத் தெரியாது.ஆளு கருப்பு.மனசு வெள்ள.
அம்பா வந்தாலும், வம்பா வந்தாலும், வர்ற வார்த்தைக்கு சளைக்கமா பட்டுன்னு சொல்லிருவா பதில.
களங்கமில்லாத அவ பேச்சு பழக்கம் எல்லாம் பெரியசாமிக்கு புடிச்சுப் போச்சு.
அதே சமயம் அவர அப்பப்போ சீண்டி விட்டு விளையாட்டும் பண்றது அவளுக்கு பழக்கமாவும் போச்சு.
அப்பிடித்தான் ஒரு நா,

பேச்சு வாக்குல பெரிச கிழவன்னுட்டுர்றா.பெருசுக்கு பொத்துகிச்சே கோபம். என்னய்யா கிழவங்கற.உன்ன மாதிரி கொமரிக என் கையில ஊஞ்ச கட்டி ஆடலாம்னு தன் வீரத்த சலிக்க,
அதுக்கு அவ
பெரிய பாறாங்கல்ல தூக்க முடியுமா உன்னாலன்னு ஒரு கேள்விய கேட்டுப்புட்டா.கேட்டுப்புட்டு ஓடிப்புட்டா.வீரத்தப்பத்தி பொம்பள பழிச்சா பொட்டையனுக்கும் ரோஷம் வருமே.பெருசுக்கு சொல்லவா வேணும்.அவ கேட்டதுல நிலை கொள்ளல.வேட்டிய மடிச்சுக் கட்டிட்டு கல்லதூக்கிப் பார்க்கிறாரு..தூக்கறாரு. தூக்கறாரு..ம்கூம்.அரையடி தூக்குறதுக்குள்ள மூச்சு வாங்குது.இது சரிப்பட்டு வராதுன்னு அப்ப நடய கட்டுறாரு.இத அவளும் தூரத்திலிருந்து பாத்துகிட்டுதா இருக்கா.
பெருசு அந்த கல்லு வழியா தா அப்பப்போ வரும்.போகும்.கல்ல பாக்கையில அவ கேள்விதா மனசுல குடயும்.அப்பப்போ தூக்கிப் பாக்கும்.கொஞ்சம் தூக்குறதும் பின்ன வக்கிறதும் பல நா பொழப்பாப் போச்சு.

இது ஒரு சாதாரண விஷயந்தானே? பெரிசுக்கு ஏன் வயசுக்கு ஒப்பாத காரியம்.
என்ன ஆச்சு பெரிசுக்கு?
******
முதல் மரியாதை...

vasudevan31355
16th February 2017, 06:56 PM
மெய் சிலிர்க்க வைத்த மெய்யான நடிகர். (10 ம் பாகத்தின் மீள்பதிவு)

தந்தை என்பது தெரியாமல் தங்கம் கடத்தும் தொழிலின் தலைவர் ஸ்பையைப் பிடிக்கப் போராடுகிறான் சிபிஐ அதிகாரி ராஜன். ஒவ்வொரு முறையும் ஸ்பையைப் பிடிக்க முயலும் போதெல்லாம் ராஜனின் திட்டங்கள் தோல்வியுறுகின்றன. ஸ்பை சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் ராஜனிடமிருந்து தப்பித்து விடுகிறான். யாரோ ராஜனுடைய திட்டங்களை ஸ்பைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி விடுகிறார்கள். யார் அது?! குழம்புகிறான் ராஜன். அப்படி யாரும் இருப்பதாக அவன் நினைவுக்கு எட்டிய வரையில் வரவில்லை. ஆனால் அவன் தன்னுடைய தொழில் ரகசியங்களை தான் தாயிடம் மட்டுமே கூறுவான். இறுதியாக ஸ்பையை பிடிக்க இருக்கும் திட்டத்தை ராஜன் தன் தாயிடம் தெரியப்படுத்தி இருந்தான். இதிலும் ஸ்பை எஸ்கேப். இப்போது வருகிறது சந்தேகம் ராஜனுக்கு.

தாயிடம் கோபமும் வருத்தமும் கலந்த நிலையில் வருகிறான் ராஜன். அவன் முகத்தைக் கண்டே அவன் தாய் அவன் உள்ளத்தைப் புரிந்து கொண்டு விடுகிறாள். தன் கணவனான ஸ்பையைக் காப்பாற்ற ராஜனின் திட்டங்களை ஸ்பையிடம் சொல்லி ஸ்பையை தப்பிக்க வைப்பவளே அவள்தானே! மேலும் தன் கணவனைப் பற்றி ராஜனிடம் அவள் மூச்' விட்டதில்லை. அப்படி சொன்னால் ராஜன் தன் தந்தையை அரெஸ்ட் செய்து விடுவானே!

மகனின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள் தாய். போன காரியம் வெற்றியடையாமல் திரும்பி வந்ததை மகனின் முகம் காட்டுகிறது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றியடந்ததா என்று மேலுக்குக் கேட்கிறாள். ராஜன் வெற்றியடைந்து விட்டதாக ஜாடை செய்கிறான் வேண்டுமென்றே! பதறுகிறாள் தாய். தன் கணவன் தன் மகனிடம் பிடிபட்டு விட்டானோ என்று ஒருகணம் ஸ்தம்பித்துப் போகிறாள். அந்தக் கணமே தன் தாயின் முக பிரதிபலிப்புகளின் மூலம் தன் திட்டங்களுடைய தோல்விகளுக்கெல்லாம் அவள்தான் காரணம் என்று கண்டுபிடித்து விடுகிறான் ராஜன்.

எரிமலையாய் வெடிக்கிறான் ராஜன். தன் தாய் யாரோ ஒருவனைக் காப்பாற்ற தன்னை ஏன் பலிகடா ஆக்கினாள் என்று குமுறுகிறான். வார்த்தைகளால் அவளைக் கொல்கிறான். தன் தாய் இரண்டாவதொரு வாழ்க்கை வேறொருவனிடம் வாழ்கிறாள் என்று அவளிடமே கேட்டு அவளைத் துடிக்க வைக்கிறான். அப்போதுதான் அந்தத் தாய் மகன் தேடும் அந்த ஸ்பைதான் அவனின் தந்தை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறாள். அதிர்ச்சியில் சிலையாய் உறைகிறான் ராஜன். தன் தாய் குற்றமற்றவள் என உணருகிறான். அதே சமயம் ஒரு பயங்கரக் குற்றவாளியைத் தப்பிக்க வைத்த குற்றவாளியாய் தன் தாயைப் பார்க்கிறான். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாச பந்தங்களை அறுத்து, தாயென்றும் பாராமல் அவளைக் கைது செய்கிறான். வேதனையின் விளிம்புக்கே செல்கிறான்.

தாயாக எஸ்.வரலஷ்மி. தந்தையாக o.a.k.தேவர்.

சிபிஐ அதிகாரி ராஜனாக நம் நடிகர் திலகம்.

கேட்கவும் வேண்டுமோ! அற்புதமான சில நிமிடக் காட்சிகள்.

ஸ்பையைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று, தன் தாயின் மேல் சந்தேகப்பட்டு வீட்டுக்கு வரும் நடிகர் திலகம் எதுவுமே பேசாமல் தடுமாறும் தன் தாயைப் பார்க்கும் அந்தப் பார்வை...தன் தோல்விகளுக்கு அவள்தான் காரணமோ என்ற சந்தேகப் பார்வை... தன் தாய் குற்றவாளியா இல்லையா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளத் துடிக்கும் அந்தக் கண்கள்... தன்னிடம் காபி கொடுக்கும் அவளின் கை நடுங்குவதைக் கவனித்து தீர்க்கமாக அவளையே ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் அழுத்தமான அமைதிப் பார்வை...

"போன காரியம் வெற்றியா முடிஞ்சுதாப்பா?" என்று கேட்கும் வரலஷ்மியிடம் மெளனமாக "முடிந்தது" என்பது போல தலையாட்டும் பாவம்..."அவுங்களைப் புடிச்சிட்டியா?" என்று தாய் கேட்க "ஆமாம்" என்பதற்கான ஆழமான தலையசைவு... "அவுங்க இப்ப ஜெயில்லதான் இருக்காங்களா" என்பவளிடம் அதற்கும் "ஆமாம்" என்று வசனமில்லாமலேயே பொய்யாக உணர்த்தும் அற்புதம்...

தன் கணவன் தன் பிள்ளையிடம் மாட்டிக் கொண்டானே என்று அவள் அழும் போது வெடிக்க ஆரம்பிப்பார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு அவள்தான் காரணம் என்று கதறுவார். "அந்த ஸ்பைக்கும் உங்களுக்கும் என்ன உறவு?" என்று கேட்டு "இரண்டாவது வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கீங்களா அம்மா?" என்று அவமானத்தால் கூனிக் குறுகிப் போவார். பின் அந்த ஸ்பைதான் ராஜனின் அப்பா என்று விளக்கியவுடன் அப்படியே சிலையாகி விடுவார். பின் அவள் தன்னுடைய பிளாஷ்பேக்கை சொல்லி தன் கணவனும் ராஜனின் தந்தையுமான ஸ்பை எப்படி தேசத்துரோகி ஆனான் என்று விளக்கும் போது சோபாவில் அண்ணாந்து சாய்ந்தபடியே வெறித்து நோக்கியபடி இருப்பார். எதையும் பேசவே மாட்டார்.

தாயைக் கைது செய்யுமுன் அவளைப் பார்க்க முடியாமல் கண்கலங்கும் காட்சி

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000108606.jpg

பின் மேலதிகாரியிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்து தாயை அரெஸ்ட் செய்வார். காவல் அதிகாரிகள் தன் கண்முன்னமேயே தன் தாயை அரெஸ்ட் செய்யும் போது கண்களில் குளமாய் தண்ணீர் தேங்கி நிற்கும். கோட் தோள்களில் சுமக்கப்பட்டிருக்கும். நேராக நிற்க மாட்டார். கதவில் சாய்ந்தபடி நிற்பார். நிற்பதில் ஒரு தொய்வு தெரியும். தன் தாய் கள்ளமற்றவள் என்ற திருப்தியைத் தாண்டி தன் தாய் ஒரு தேசத் துரோகியை தப்பிக்க வைத்தவள் என்ற ஆத்திரம் மேலோங்கி இருக்கும். அவமானத்தால் அசிங்கப்பட்டு நிற்பது போல நிற்பார். அதே சமயம் தன் தாயைத் தவிர யாருமில்லாத தான் எப்படி இனித் தனியாக வாழ முடியும்? என்ற ஏக்கம் அந்த நிற்கும் பாவனையில் பிரதிபலிக்கும். தன் தாய் தன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் தாயைப் பார்க்க முடியாமல் (பிடிக்காமல்) வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்வார். காவலர்கள் தன் தாயை கைது செய்து அழைத்துச் சென்றவுடன் தன் தாயை நானே கைது செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் கோபமும், வேதனையும் கொப்பளிக்க, உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமாய்ப் பொங்க, யாரிடமும் சொல்லித் தேறுதல் படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் சோபாவில் அமர்ந்து கண்களைக் கைகளால் மூடியபடியே, கால்களைத் துடிக்க வைத்தபடியே துவள்வார். மௌனமும், ஆர்ப்பாட்டமுமாய் நெஞ்சு விம்ம அழுவார். அது அமைதியான அழுகையா... ஆர்ப்பாட்டமான அழுகையா என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. அப்படி ஒரு அற்புதம் கலந்த அழுகைக் கலவை அது.

தாயை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே துடிக்கும் அற்புத சீன்

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000201899.jpg

மிக மிக வித்தியாசமான காட்சி. அற்புதத்திலும் அற்புதம். என் மனதை விட்டு இமைப் பொழுதும் நீங்காத காட்சி. ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் அற்புதமான அண்ணனின் அற்புத நடிப்பில் நான் மெய் மறந்த, மெய் சிலிர்த்த காட்சி. நிலை மறந்த காட்சி.

படம்: தங்கச் சுரங்கம்.

Russellsmd
16th February 2017, 07:44 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Screenshot_2017-02-15-23-53-01_1_zps4wdzv8fa.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Screenshot_2017-02-15-23-53-01_1_zps4wdzv8fa.jpg.html)

Russellsmd
16th February 2017, 07:46 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Screenshot_2017-02-15-23-52-16_1_zpsioddiycd.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Screenshot_2017-02-15-23-52-16_1_zpsioddiycd.jpg.html)

Russellsmd
16th February 2017, 07:49 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Screenshot_2017-02-16-00-12-46_zpsdkgieh7p.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Screenshot_2017-02-16-00-12-46_zpsdkgieh7p.jpg.html)

Russellsmd
16th February 2017, 07:50 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0001_20170116080120669_20170202125247091_2017021 6184554307_zpsno7flntp.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0001_20170116080120669_20170202125247091_2017021 6184554307_zpsno7flntp.jpg.html)

Russellsmd
17th February 2017, 10:06 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017021 7072329032_zpsp4h9qt7z.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017021 7072329032_zpsp4h9qt7z.jpg.html)

Russellsmd
17th February 2017, 12:10 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0001_20170116080120669_20170202125247091_2017021 7112513724_20170217120205226_zps2boxiqxc.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0001_20170116080120669_20170202125247091_2017021 7112513724_20170217120205226_zps2boxiqxc.jpg.html)

vasudevan31355
17th February 2017, 12:39 PM
From FB

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16730483_378426349189412_3043635581875857883_n.jpg ?oh=fd68d9b0effb446c6c413d9ff400adeb&oe=5947DD01

adiram
18th February 2017, 12:53 PM
From FB

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/16730483_378426349189412_3043635581875857883_n.jpg ?oh=fd68d9b0effb446c6c413d9ff400adeb&oe=5947DD01

அன்பு வாசு சார்,

அருமையான நிழற்படம் தந்துள்ளீர்கள். நன்றி.

இது ஆல் இந்தியா ரேடியோவில் அண்ணன் ஒரு சுதந்திர தினத்தன்று வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியின்போது எடுத்த ஸ்டில். தன்னுடைய பொது நிகழ்ச்சி உடையாக சந்தன கலர் குர்தா உடையை தேர்ந்தெடுக்கும் முன் 1967 முதல் 70 வரை பொது நிகழ்ச்சிகளுக்கு (இதில் அணிந்திருக்கும்) வெள்ளை அரைக்கை சட்டை, வெள்ளை பேண்ட் அல்லது வெள்ளை அரைக்கை சட்டை வெள்ளை வேஷ்டி அணிந்து வருவார். அப்போது கலந்துகொண்ட நிகழ்ச்சிதான் இது.

பின்னர் அவரது பொது நிகழ்ச்சி உடையாக சந்தன கலர் குர்தா பல ஆண்டுகள் (கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்) தொடர்ந்தது. பின்னர் திரிசூலம் மதுரை விழாவின்போது தன்னுடைய உடையை மாற்றி, மெரூன் கலர் ஜிப்பா, மெரூன் கலர் வேஷ்டி அணிந்தார்.ஆனால் சிறிது காலமே. (நட்சத்திரம் படத்தின் இறுதிக்கு காட்ச்சியில் ஸ்ரீபிரியா உடலுக்கு அஞ்சலி செலுத்த காரிலிருந்து இறங்கி வரும்போது அணிந்திருப்பார்). அதன்பின் மீண்டும் சந்தன கலர் குர்தாவுக்கு மாறினார்.

adiram
18th February 2017, 01:10 PM
காவலர்கள் தன் தாயை கைது செய்து அழைத்துச் சென்றவுடன் தன் தாயை நானே கைது செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் கோபமும், வேதனையும் கொப்பளிக்க, உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமாய்ப் பொங்க, யாரிடமும் சொல்லித் தேறுதல் படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் சோபாவில் அமர்ந்து கண்களைக் கைகளால் மூடியபடியே, கால்களைத் துடிக்க வைத்தபடியே துவள்வார். மௌனமும், ஆர்ப்பாட்டமுமாய் நெஞ்சு விம்ம அழுவார். அது அமைதியான அழுகையா... ஆர்ப்பாட்டமான அழுகையா என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. அப்படி ஒரு அற்புதம் கலந்த அழுகைக் கலவை அது.
தாயை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே துடிக்கும் அற்புத சீன்



மிக மிக வித்தியாசமான காட்சி. அற்புதத்திலும் அற்புதம். என் மனதை விட்டு இமைப் பொழுதும் நீங்காத காட்சி. ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் அற்புதமான அண்ணனின் அற்புத நடிப்பில் நான் மெய் மறந்த, மெய் சிலிர்த்த காட்சி. நிலை மறந்த காட்சி.

படம்: தங்கச் சுரங்கம்.
இந்த இடத்தில டி.எம்.எஸ். குரலில் ஒரு சோலோ சாங் ஒலிக்கவிட்டு காட்சியை கெடுத்து குட்டிசுவராக்காமல் மௌன போராட்டமாக விட்ட இயக்குனர் ராமண்ணா அவர்களுக்கு 10,000 நன்றிகள்.

Russellxor
18th February 2017, 04:28 PM
பெரிசுக்கு என்ன ஆச்சு?

அந்த வருஷம் நல்ல வெள்ளாம.மழை மண்ணுன்னு விளச்சலுக்கு பல விஷயம் இருந்தாலும் மனுஷனோட உழைப்பு நல்ல படியா இருந்தாத்தேன் அதிக போகம் பாக்க முடியும்.அந்த விளச்சலுக்கு காரணமானவங்க கூலிக்காரங்க.அவங்க உழைப்புக்கு
மரியாத செய்ய வேண்டி,
விளஞ்ச நெல்லுல கொஞ்சத்த கூலிக்கு மேல நீங்க அளந்து வச்சிக்கங்கன்னு மலச்சாமி சொல்ல, கூலிக்காரங்களும் சந்தோசமா நெல்ல பங்கு போட்டுக்கிட்டு இருக்காக.அங்க வரா பொன்னாத்தா .என்னன்னு கேட்டு விஷயம் தெரிஞ்சுக்கறா.
அந்தாளு எனக்கு வாக்கப்பட்டு வந்ததே நாலு வெள்ளாட்டோட மட்டுந்தா, வேட்டி கட்டி இருக்கிறதே எங்கப்பன் காசுலதே, யாரோட காச யாரு தூக்கி கொடுக்கிறதுங்கற அர்த்தத்துல கேவலப்படுத்துறா.
ஊருக்கே நாட்டாம, பெரியமனுஷன்னு பாக்காம கூலிக்காரங்க அம்புட்டு பேரு முன்னாலே அவ ஏசியத யாரால தாங்கிக்க முடியும்? கோபம் தள்ளுது.ரெண்டு சாத்து சாத்தலாம்னு பொங்குது மனசு.மாமனோட கெஞ்சல் மனசுல வந்து நிக்குது.ச்சீ போ ன்னு மன பாரத்தோட போறாரு.
வேற ஏதாவது கஷ்டம்னா நாலு பேருகிட்ட பேசி ஆறுதல் தேடிக்கலாம். இவ கேவலத்த யாரு கிட்ட சொல்ல முடியும்? அது குடும்ப கௌரவத்துக்கே கேவலமாகிப் போயிடுமே. இப்படியே தா அந்த மனுஷனுக்கு பாறாங்கல்லு மாதிரி மன பாரம் அசயாம தங்கிட்டே இருக்கு.
மனசுல இருக்கற பாரத்த அப்பப்போ பாட்டுப்பாடி ஆறுதல் படுத்திக்குவாரு.
அவுரு தன் சோகத்த தாங்க தாய்மடி ஏதாவது கிடைக்குமாங்குற அர்த்தத்துல பாடறாரு.அந்தக் கொடியும் படர ஏதாவது தேரு கிடைக்குமான்னு அலையுது.
"ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே
கனவுலகம் தாங்காதே "ன்னு
அப்படின்னு அப்பத்தேன் ஒரு குரலு காத்துல வருது.
தண்ணியில்லாம தவிச்ச செடிக்கு மழத்தூறலா தண்ணி கிடச்சா எப்படி இருக்கும்.சோகமான மனசு கொஞ்சம் சொக்குது.
"உள்ள அழுகறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் "ன்னு
அடுத்த அடி போட,
"இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
உன்ன மீறவும் ஊருக்குள்
ஆளில்ல "ல்னு
ஞாயத்த, பதில் குரல் சொல்ல,
இது மாதிரியான ஆறுதலத்தான இத்தன நாளா தேடுனேன் ?ன்னு
ஆச்சரியமும் சந்தோசமுமா சுத்தி முத்தி ஆள தேடி தேடி யாரையும் காணோமேன்னு
"பூங்குயில் யாரது "ன்னு பெருசு
கேள்வி கேக்குறாப்புல ' பாடுது.
இனியும் இந்த மனுசனுக்கு தன் முகத்த காட்டாம இருக்க முடியாதுன்னு சொல்லி ஒருத்தி வந்து நிக்குறா.
பிரமிச்சு நிக்குது பெருசு.
அது
குயிலு.
உனக்குள்ளயா இவ்வளவு சங்கதி ன்னு விழி விரிஞ்சு பாக்குறாரு மனுசன்.
கவலய எல்லாம் காத்துல பறக்க விடு, மன பாரத்த தூக்கி எறிங்கற மாதிரி அவ பேச்சு பெருசுக்கு ஆச்சர்யமாச்சு.
அவள எட போட்டது தப்பாப் போச்சேங்கறது அவரு முகத்தில தெரியுது.
"பேச்சு விவரமாத்தான் இருக்கு, பெரிய அஞ்ஞானமெல்லாம் பேசுறியே " அப்படிங்குது பெரிசு.
"அப்படி பேசுலேன்னா அல்லல குத்தி விளயாடும் இந்தக் கால இளவட்டம்"அப்படிங்கறா குயிலு.
இளவட்டம்ங்கற வார்த்த பெரிசுக்கு ஆர்வமாச்சு.
உடனே,
"இளவட்டம்ங்கற மரியாதய எனக்குத் தர்றியா "ன்னு கேட்கறாரு.
அவளுக்கு இது கொஞ்சம் ஆச்சர்யத்த கொடுத்திருக்கும் போல.
"விட்டா கட்டிக்கிறதுக்கு தாலியோட வந்துருவீங்க போலிருக்கு "ன்னு அவ கேட்க,
"வந்தா என்ன? "ன்னு இவரு கேட்க
அப்பத்தா அவ,
ஆச கிழவனுக்குன்னு ஒரு வார்த்தய விட்டுப்புட்டா.

அறுபது வயசு மனுசந்தேன்.அது அந்த வயசுக்கு அதுக்கேத்த மாதிரி வாழலியே.மனசுல அதுக்கு என்ன வெல்லாம் ஆச இருந்திருக்கும். அது நொறுங்கி பல வருஷம் ஆச்சே.நாளாக நாளாக அந்த மன பாரம் நீங்க அதுவும் ஒரு வடிகால் தேடுமில்லையா.அந்த நேரத்தில அவ குணமும் பேச்சும் கொஞ்சம் சந்தோசம்னு நினக்கையிலே பாவி புள்ள கிழவன்னுட்டாளேங்கற கோபம் உடனே என்னையா கிழவங்கற, உன் குடிசய எல்லாம் காலிபண்ணி புடுவேன்னு தன் அதிகாரத்த காட்டுது.அதிகாரத்தோட பலவீனம் இந்த மாதிரி சமயங்களில்தா(ன்) தெரிஞ்சுக்க முடியுது.
அந்த வார்த்த அவள குத்திருது.
அதிகாரத்த சாய்க்கனும்னா பலமான வார்த்தைய சொல்லியாகனும்.அதனால,
"நீ குமரன்னு நான் ஒத்துக்கனும்னா இந்தக்கல்ல தூக்குய்யா பாக்கலாம்.அப்பிடி நீ தூக்கிப்பிட்டின்னா உன்ன குமரன்னா ஒத்துக்கிடர்றேன் "னு சவால் விடுறா.
அதுக்கு பெரிசு, "நீ குமரன்னு ஒத்துகிட்டா பத்தாது. என்ன கட்டிக்கிடறயா, தூக்கறேன் "ன்னு ஒரு கொக்கிய வீசுது.
அதுல எல்லாமே அடங்கிப் போயிருமேங்கற சாமார்த்தியந்தான் அந்தக் கேள்வி.
தனக்குத்தா ஜெயிப்புன்னு நினச்சுத்தா மனுசங்க பந்தயத்தில இறங்கறாங்க.அதுக்கு அவளும் விலக்கல்ல. ஒத்துக்கிடறா, அப்ப விட்டாப் போதும்னு ஒரு சமாதானத்துக்கு.
இந்தக் கூத்துதான் பெரிசு அந்த பாறய தூக்கிப் பாக்றதும் , முடியாம வக்கிறதுக்கும் உண்டான காரணம்.
*******
முதல் மரியாதை

Russellsmd
19th February 2017, 06:32 AM
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களுக்கு இனிப்பூட்டும் மகிழ்ச்சியான செய்தி, பிப்ரவரி 17, 2017 முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியம் ஆண்டவன் கட்டளை திரைப்படம் தினசரி 4 காட்சிகளாக வெளிவருகிறது.

அனைத்து ரசிகர்களும் படம் வெற்றியடைய அவசியம் படத்தை காண சென்ட்ரல் திரையரங்கிற்கு வருகை தர அன்புடன் அழைக்கிறது நமது சிவாஜிகணேசன்.இன்.
19.02.2017 அன்று மாலை ரசிகர்கள் சிறப்புக் காட்சி நடைபெறும் அனைத்து ரசிகர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆண்டவன் கட்டளை திரைப்படத்திற்கு மதுரை சென்ட்ரல் திரையங்கில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு மற்றும் போஸ்டர் டிசைன், தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள பேனர் காண
WWW.SIVAJIGANESAN.IN பாருங்கள்......


http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/170217_6_zpsnqzee2oi.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/170217_6_zpsnqzee2oi.jpg.html)

( நன்றி : திரு.சுந்தர்ராஜன்.)

Russellsmd
19th February 2017, 06:36 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20170216-WA0013_zpsaynj989h.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20170216-WA0013_zpsaynj989h.jpg.html)

vasudevan31355
19th February 2017, 06:38 AM
From FB

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/16649297_477511319303117_7260730631911419846_n.jpg ?oh=6c0360e53b5d1a2c7cea5cc183371e9c&oe=59452813

vasudevan31355
19th February 2017, 06:39 AM
https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/16807246_477511669303082_2872381793993844687_n.jpg ?oh=1cacd9436215978276b12da8b87a4bd0&oe=593E02D4

vasudevan31355
19th February 2017, 06:42 AM
https://fb-s-b-a.akamaihd.net/h-ak-xft1/v/t1.0-0/p296x100/16711900_1246402635476624_4925393928159712719_n.jp g?oh=d2355dc9c55cb89fd8b3733e693aacb9&oe=5948C0F8&__gda__=1493227709_3b5e26676482efd7dc565af8cd483a5 f

Russellsmd
19th February 2017, 06:43 AM
அழகழகாய் எதிரொலிக்கும் ஆண்டவன் கட்டளை..

http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/170217_2_zpskuvr5iuy.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/170217_2_zpskuvr5iuy.jpg.html)


http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/170217_3_zpsf7nvjfda.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/170217_3_zpsf7nvjfda.jpg.html)

vasudevan31355
19th February 2017, 06:44 AM
https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/16729409_1246402658809955_6049281392438978180_n.jp g?oh=5c776d1b10a2217a6b391a9d0b942e83&oe=58FDA989

Russellsmd
19th February 2017, 06:48 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017021 8210813831_20170218215105619_zpsdaurjzb7.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170124075214522_2017021 8210813831_20170218215105619_zpsdaurjzb7.jpg.html)

vasudevan31355
19th February 2017, 07:32 AM
அன்பு வாசு சார்,

அருமையான நிழற்படம் தந்துள்ளீர்கள். நன்றி.

இது ஆல் இந்தியா ரேடியோவில் அண்ணன் ஒரு சுதந்திர தினத்தன்று வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியின்போது எடுத்த ஸ்டில். தன்னுடைய பொது நிகழ்ச்சி உடையாக சந்தன கலர் குர்தா உடையை தேர்ந்தெடுக்கும் முன் 1967 முதல் 70 வரை பொது நிகழ்ச்சிகளுக்கு (இதில் அணிந்திருக்கும்) வெள்ளை அரைக்கை சட்டை, வெள்ளை பேண்ட் அல்லது வெள்ளை அரைக்கை சட்டை வெள்ளை வேஷ்டி அணிந்து வருவார். அப்போது கலந்துகொண்ட நிகழ்ச்சிதான் இது.

பின்னர் அவரது பொது நிகழ்ச்சி உடையாக சந்தன கலர் குர்தா பல ஆண்டுகள் (கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்) தொடர்ந்தது. பின்னர் திரிசூலம் மதுரை விழாவின்போது தன்னுடைய உடையை மாற்றி, மெரூன் கலர் ஜிப்பா, மெரூன் கலர் வேஷ்டி அணிந்தார்.ஆனால் சிறிது காலமே. (நட்சத்திரம் படத்தின் இறுதிக்கு காட்ச்சியில் ஸ்ரீபிரியா உடலுக்கு அஞ்சலி செலுத்த காரிலிருந்து இறங்கி வரும்போது அணிந்திருப்பார்). அதன்பின் மீண்டும் சந்தன கலர் குர்தாவுக்கு மாறினார்.

நன்றி ஆதிராம் சார்.

நம்மவர் சொந்த வாழ்வில் ரசித்து அணிந்த புகழ் பெற்ற ஆடைகளின் விவரத்தை அருமையாக சொல்லியிருந்தீர்கள். சில காட்சிகளே வந்தாலும் 'நட்சத்திரம்' படத்தில் நடிகர் திலகம் அணிந்து வந்த ஆடையைப் பற்றி நினைவு வைத்திருந்து இங்கே பதித்தற்கு நன்றி. அப்படியே தங்கள் நினைவாற்றலுக்கு ஒரு சபாஷ்.

இதோ நீங்கள் கூறியிருந்த 'நட்சத்திரம்' படத்தில் தலைவர் ஸ்ரீப்ரியா மரணத்தின் போது அணிந்து வரும் மெருன் கலர் உடை.

ஒன்று கவனித்தீர்களா!

அந்த மரணத்திற்கு ரஜினி, அசோகன், பாலாஜி ஆகியோர்கள் ஒரிஜினல் நடிகர்களாகவே வருவார்கள். தலைவரும் அப்படித்தான். ஆனால் மற்றவர்கள் சாவுக்கு வருவதற்கும், தலைவர் வருவதற்கும்தான் என்ன ஒரு வித்தியாசம்! காரிலிருந்து மாலை சுமந்து வரும் உதவியாளருடன் 'விறுவிறு'வென வேகமாக நடந்து வந்து, வரும் போதே உடலில் போர்த்திருக்கும் சால்வையால் துக்கத்துடன் வாயை பொத்திக் கொண்டு, கண்கள் கலங்க ஸ்ரீபிரியாவின் உடல் அருகே 'நீ சாதாரண நட்சத்திரம் இல்லை...துருவ நட்சத்திரம்' என்று சோகத்துடன் சொல்வாரே!

ஒரு துக்க வீட்டிற்கு ஒரு விஐபி எப்படி வரவேண்டுமோ அப்படியே அச்சு அசலாக அவரது வருகை அனைவரிடமிருந்து வித்தியாசப்பட்டு பரிமளிக்கும். அதனால்தான் எவரும் அவரை நெருங்க முடியாத அளவிற்கு அடி முடி தொட முடியா வண்ணம் விஸ்வரூபமாய் வியாபித்து நிற்கிறார்.

அந்த சில வினாடிகளில் கூட நடிப்பில் அவர் காட்டும் திறமை உலக நடிகர்கள் அனைவருக்கும் ஒரு வேத பாடம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/55.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/56.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/57_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/60.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/59_1.jpg

Russellxor
19th February 2017, 02:13 PM
வாசு சார் ஆதிராம் சாரின் நினைவுகளுடன் கலந்த என்
நினைவுகள்


1980 கால வாக்கில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரத்திற்காக பேசியதை கேட்டிருக்கிறேன்.அந்த நாளுக்கு முன்பாக சூளூரில் நடைபெற்ற பொதுக்கூடட் த்தில் பேசியபோது எவனோ ஒருவன் இரும்பு போல்ட் ஒன்றை வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.தலைக்கு கட்டு போட்டு


பிங்க் கலர் பைஜாமா வேட்டியில்
***************************************


அவர் பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது."நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் "என்று கம்பீரமாக பேசியதை தான் மறக்க முடியுமா?
தலைவன் அடிபட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது.அந்த நாளிலேதான் சிவாஜியின்மறவர்படை பீளமேட்டிலிருந்து சூளுர் வரை எதிர்முகாமை சேர்ந்தவர்களின் போர்டுகள் மன்றங்கள் ஒன்று விடாமல் சூறையாடப்பட்டன என்பது எங்களுக்கு கிடைத்த செய்தி.மிகப்பெரிய பரபப்பை உண்டு செய்த சம்பவம் அது.
https://uploads.tapatalk-cdn.com/20170219/f06515bc7b14e151445ae2ba5de8f1f6.jpg

Russellxor
19th February 2017, 08:07 PM
.Facebook ல்
வந்த சில சுவராஸ்யமான பதிவுகள்

https://uploads.tapatalk-cdn.com/20170219/cf9c0af37aaff5bebcf33df9c06bb30a.jpg

சமீபத்தில் நண்பர் திரு Singaravelu Balasubramaniyan அவர்கள் முகநூலில் பதிவிட்ட நடிகர்திலகத்தின் அறிய புகைப்படம்,
தங்கப் பதக்கம் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு இடையில் எடுக்கப்பட்டது,
இதில் நாம் உணர வேண்டியது
நடிகர்திலகம் அவரது கதாப் பாத்திரம் SP, ஆகும்
திரு இயக்குநர் விஜயன் அவர்களது கதாப்பாத்திரம் DGP , படத்தில் சேர்க்கப்படாத சாதாரணமாக
எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கூட ஒரு DGP யின் தன்மை குறைந்து விடக்கூடாது என்பதற்காக SP அந்தஸ்தில் இருக்கும் நடிகர்திலகம் தள்ளி ஓரத்தில் நின்று கொண்டு தனது கரங்களை பின் புறம் கொண்டு ஒரு SP உயரதிகாரி முன் காட்டும் பணிவுடனும் DGP யாக இருப்பவர் புகைப்படமாக இருந்தாலும் கூட அவர் தான் முக்கியத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற மேன்மையான சிந்தனை பொருந்திய வெளிப்பாடு இந்தப் புகைப்படம்
அதனால் தான் நடிகர்திலகம் "கலைத்தாயின் மூத்த மகன் ",
இத்தனை ஈடுபாட்டுடன் நடித்து வெளியானதால் தான். " தங்கப்பதக்கம் " காவியமாகி முக்கிய பெரு நகரங்களில் வெள்ளி விழாவையும் இதர முக்கிய நகரங்களில் 100 நாட்களுக்கு மேலும் சிறிய ஊர்களில் கூட 50 நாட்களையும் கடந்து ஓடி சரித்திரம் படைத்ததோடு காவல் துறைக்கு ஒரு மக்களிடையே பெரும் நன் மதிப்பை பெற்றுக் கொடுத்தது.

Russellxor
19th February 2017, 08:14 PM
Facebook ல் சேகர்பரசுராம் வித்தியாசமான நல்ல பதிவுகளை இட்டு வருகிறார்.
பெரியவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


https://uploads.tapatalk-cdn.com/20170219/66c3298afd8cfbcafdabeea3024bb3d6.jpg

Russellxor
19th February 2017, 08:23 PM
https://uploads.tapatalk-cdn.com/20170219/f4754e61c97e7e74c78895d06f57ccce.jpg

Russellxor
19th February 2017, 08:23 PM
https://uploads.tapatalk-cdn.com/20170219/0229e7df5f4bee4df604ba8e7f9df769.jpg

Russellxor
19th February 2017, 08:24 PM
https://uploads.tapatalk-cdn.com/20170219/c9ab4d1dc705917e6100720faf485dbe.jpg

Russellxor
19th February 2017, 08:25 PM
https://uploads.tapatalk-cdn.com/20170219/e8ac01e5fdd9ae765928eba485848861.jpg

Russellxor
19th February 2017, 08:31 PM
https://uploads.tapatalk-cdn.com/20170219/c93e395a2adfe03db81567bcd74092a1.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170219/768b5103af5192ef199d136ea4343cbe.jpg

Harrietlgy
19th February 2017, 10:03 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 164– சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/79803707014872487302100429144Kaval%20Deivam.jpg

அகில உலகிலும் புகழ் பெற்ற அந்த பிரபலமான இந்தி வி.ஐ.பி. யார் ?
அவர்தான் இந்தியின் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்!
வழக்கமாக லதா மங்கேஷ்கர் மற்ற பாடகிகளின் குரலை ஊக்குவிக்க மாட்டார் என்று சொல்வார்கள்.
`குட்டி’ என்கிற இந்திப்படத்தில்தான் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் அறிமுகமானார். அவர் பாடிய `போலுரே பப்பி’ என்ற பாடல் இந்தியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
அவருடைய குரல் வட இந்திய மக்களை வெகுவாக கவர்ந்தது.
ஆனால் `வாணி ஜெயராமை பாட வைத்தால், அந்த சினிமா நிறுவனத்திற்கு நான் பாடமாட்டேன்’ என்று லதா மங்கேஷ்கர் சொன்னதாக அப்போது வட இந்திய பத்திரிகைகளில் செய்தி வந்தது. அப்படிப்பட்ட லதா மங்கேஷ்கர்தான் பி. சுசீலாவை பாராட்ட சென்னைக்கு வந்தார். ஆனால், உண்மையிலேயே சுசீலாவின் குரல் லதா மங்கேஷ்கருக்கு மிகவும் பிடிக்கும் என்பதுதான் உண்மை.
`பாவமன்னிப்பு’ படத்தில் சுசீலா பாடிய `அத்தான் என்னத்தான்’ பாடலை லதா மங்கேஷ்கர் மிகவும் ரசித்ததாக அப்போதே செய்திகள் வந்தன. அடுத்து லதா மங்கேஷ்கர் இந்த விழாவிற்கு வந்ததற்கு இன்னொரு காரணம், ஏவி.எம்.நிறுவனம்.
அதைவிட முக்கியமானது, லதா மங்கேஷ்கர் சிவாஜி குடும்பத்தின் மிகவும் நெருக்கமான நண்பர். சிவாஜி கணேசனும், லதா மங்கேஷ்கரை தன் சகோதரி என்றுதான் எப்போதும் குறிப்பிடுவார்.
அந்த லதா மங்கேஷ்கர்தான் 'உயர்ந்த மனித'னில் சுசீலா பாடிய பாடலை பாராட்ட சென்னை வந்திருந்தார். அதே சமயம் `உயர்ந்த மனிதன்’ படம் வெளியாகி 125 நாட்கள் ஓடியபிறகுதான் ஏவி.எம். நிறுவனம் 100வது நாள் விழாவை கொண்டாடியது.
இந்த நூறாவது நாள் விழா ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அறிஞர் அண்ணா கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டிப் பேசி பரிசுகளை வழங்கினார்.
`உயர்ந்த மனிதன்’ தயாரிப்பில் இருந்தபோது இன்னொரு சுவையான சம்பவமும் நடந்தது. நடிகர்
எஸ்.வி. சுப்பையா அப்போது `காவல் தெய்வம்’ என்றொரு படத்தை எடுத்துக்கொண்டிருந்தார்.
ஏவி.எம். சரவணனோடு மிகவும் உரிமை எடுத்துக் கொண்டு பழகும் இரண்டு கலைஞர்கள் எஸ்.ஏ. அசோகனும், எஸ்.வி. சுப்பையாவும்தான். தனது
`காவல் தெய்வம்’ படத்திற்கு சுப்பையாவுக்கு சிவாஜியின் கால்ஷீட் நான்கைந்து நாட்கள் தேவைப்பட்டது.
`நான் எவ்வளவு கேட்டும் சிவாஜி தரமாடேன்ங்கிறார். நீங்க கேட்டு வாங்கித் தரணும்’ என்று ஏவி.எம். சரவணனிடம் எஸ்.வி. சுப்பையா கேட்டுக்கொண்டார்.
அவருக்கு எப்படியும் அந்த படத்தை விரைவாக முடித்து திரையிட்டாக வேண்டும். ஏனென்றால், தயாரிப்புச் செலவுகள் ஏகமாகிக் கொண்டிருந்த நிலையில் எந்த தாமதமும் அவருக்கு வட்டிச் சுமையை மேலும் அதிகமாக்கும்.
அப்போது சிவாஜிக்கும், எஸ்.வி. சுப்பையாவுக்குமிடையே கருத்து வேறுபாடு. சிவாஜி கால்ஷீட் தராமல் இருந்தது அதுவும் ஒரு காரணம்.
சரவணன் சிவாஜியிடம் போய் கேட்டார்.`சுப்பையா கம்பெனியின் புரொடக்*ஷன் மானேஜர் நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் ஹெல்ப் பண்ணினால் நல்லாயிருக்கும்.’
`என்ன செய்யறது? எனக்கு, கொடுக்க டேட்ஸ் இல்லியே? எப்படி கால்ஷீட் கொடுக்கிறது?’’ என்றார் சிவாஜி.
அப்போது `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
``சரி! ஒண்ணு செய்யுங்க. `உயர்ந்த மனிதன்’ படத்துக்கு எங்களுக்கு டேட் கொடுத்திருக்கீங்க இல்லே…. அதில் நாலைஞ்சு நாட்கள் இந்த ஷெட்யூல்ல சுப்பையாவுக்கு கொடுங்க. அப்புறம் அடுத்த ஷெட்யூல்ல நீங்க எங்களுக்கு அதை சேர்த்துக் கொடுத்திட்டா ஓ.கே.’’ என்றேன்.
சற்று நேரம் யோசித்த சிவாஜி, ``அப்படிக் கொடுத்தா பரவாயில்லையா?’ என்று கேட்டார்.
"சுப்பையா என்கிற நண்பருக்காக நான் இந்த தியாகத்தைச் செய்ய தயாராக இருக்கேன்’’ என்று சரவணன் சிரித்துக்கொண்டே சொன்னார்.
ஐந்து நாட்கள் சுப்பையாவுக்கு சிவாஜி நடித்துக்கொடுத்தார். அந்த ஐந்தே நாட்களில் அந்த ரோலை அற்புதமாக செய்து கொடுத்தார். அந்த படத்தில் ஒரு மரமேறியாக சிவாஜி வருவார். படம் முழுக்க வரும் ரோல் அது. அந்த சில நாட்களில், தனது போர்ஷன் முழுவதையும் கச்சிதமாக முடித்து கொடுத்துவிட்டார் நடிகர் திலகம்.
அதன் பின்னர் ஒரு நாள் ஒரு டிபன் கேரியரை சிவாஜிக்கு கொடுத்தனுப்பினார் எஸ்.வி. சுப்பையா. அதில் சிவாஜி சாப்பிட டிபன் அனுப்பியிருப்பதாகச் சொல்லியிருந்தார்.
சிவாஜி டிபன் பாக்ஸை திறந்தார். முதல் அடுக்கில் உண்மையிலேயே டிபன் இருந்தது. கீழே இருந்த கிண்ணத்தில் பதினையாயிரம் ரூபாய் இருந்தது. சிவாஜிக்கு கோபம் வந்து ஏவி.எம். சரவணனை கூப்பிட்டனுப்பினார்.
சரவணனைப் பார்த்ததும், `உங்க ஆச்சாரி செய்த வேலையைப் பாத்தீங்களா?’ என்று வெடித்தார் சிவாஜி. சுப்பையாவை சிவாஜி எப்போதும் ஆச்சாரி என்றுதான் அழைப்பார். அந்த இடத்துக்கு சுப்பையா வரவழைக்கப்பட்டார். சரவணன் விசாரித்தார். `காவல் தெய்வம்’ படத்தில் நடித்ததற்காக சிவாஜிக்கு நான் அனுப்பிய சம்பளம்’ என்றார் சுப்பையா.
`எனக்கு நீங்க சம்பளம் தர்றதாயிருந்தா எவ்வளவு தரணும் தெரியுமா? சரவணனைக் கேளுங்க. 'உயர்ந்த மனிதன்' படத்துக்கு எனக்கு தர்ற லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தரணும்’
சுப்பையாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
`நான் உங்களுக்கு தந்த கால்ஷீட் உங்களுக்காக தரலே. சரவணனுக்காகத்தான் கொடுத்தேன்’ என்றார் சிவாஜி.
சற்று நேரம் இப்படியே போயிற்று. பிறகு தன்னுடைய செயலுக்கு சுப்பையா வருத்தம் தெரிவித்தார். சிவாஜியும் பிறகு சகஜமாகிவிட்டார். அந்தப் பணத்தை சிவாஜி கடைசி வரையில் வாங்கிக் கொள்ளவேயில்லை.அதை சுப்பையாவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். சுப்பையா சரவணனிடம் கொண்டிருந்த அன்புக்கு அளவே இல்லை. அதே போல் சரவணனும், அவரிடம் அன்பு கொண்டிருந்தார். சுப்பையாவை பற்றி இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லியாக வேண்டும்.
சிவாஜியுடன் நடித்தவர்களில் மிக முக்கியமான நடிகர்களில் சுப்பையாவும் ஒருவர். அவர் அப்போது ரெட்ஹில்ஸ் பகுதியை அடுத்த காரனோடையில் பண்ணை வீடு ஒன்று கட்டியிருந்தார். அங்குதான் வசித்தார்.படப்பிடிப்புக்கு அங்கிருந்துதான் வருவார்.
அருமையான இயற்கைச் சூழல் வாய்ந்த இடம் இது.
காஞ்சி மகா பெரியவர் சுப்பையாவின் இடத்துக்கு வந்து தங்கியிருக்கிறார் என்றால் அந்த இடத்தை பற்றி வேறென்ன சொல்லவேண்டும்?
`என் வீட்டுக்கு வரவேண்டும் ‘ என்று சுப்பையா ஒரு நாள் சரவணனை அழைத்தார்.
அவரும் போனார். உள்ளே நுழைந்ததும் `டேய் சரவணா …. உனக்கு அறிவிருக்கா? புத்தியிருக்காடா? ஏண்டா இப்படி பண்றே? என்றார்.
சுப்பையா ஏன் அப்படி சொன்னார் ?
(தொடரும்)

Russellxor
20th February 2017, 06:15 PM
https://uploads.tapatalk-cdn.com/20170220/6adb6664f7481705a9ca4b787733d724.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170220/f435644686db49d6b6aa658d55b69ef5.jpg

vasudevan31355
20th February 2017, 09:08 PM
Sekar Parasuram. From Fb

https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16807284_1248578505259037_2974190974073943153_n.jp g?oh=5b089e1c199126de576676c797329857&oe=59481A63

vasudevan31355
20th February 2017, 09:13 PM
Rajan Ponnusamy. From Fb

https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t31.0-8/16797942_252424421871262_8258292384763902233_o.jpg ?oh=bf1dc6c263643c7aa1f12b9d584200cf&oe=592C6F59

vasudevan31355
21st February 2017, 08:22 PM
Trichy Srinivasan

https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16830777_256871768088782_5131148258726601176_n.jpg ?oh=1d7e4e414fd9fab393953fee89e2bc47&oe=59396535

vasudevan31355
21st February 2017, 08:24 PM
From Fb

https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16807742_1250968735020014_288538498131367181_n.jpg ?oh=13aa798b02ff2fa4e1765bfcf1a2fa77&oe=58FEF3AA

vasudevan31355
21st February 2017, 08:25 PM
From Fb

https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-9/12744573_925689377547953_2657410702497116562_n.jpg ?oh=1d4810ebb7ff9835f1375975501bec2a&oe=592C2BB8

vasudevan31355
21st February 2017, 08:30 PM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/16830773_767322106760446_4740003427656688818_n.jpg ?oh=80934955a8119daf883d700efd236e49&oe=5934076B

vasudevan31355
22nd February 2017, 09:07 AM
புதிய பதிவு

Nivuru Gappina Nippu (1982) (தெலுங்கு)

'மிஸ்டர் மகேந்திரா'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/mr.jpg

தெலுங்கில் பராசக்தி, மனோகரா, பக்த ராமதாஸ், பக்த துக்காராம், பொம்மல பெல்லி (பொம்மைக் கல்யாணம்) பரதேசி (பூங்கோதை) பெம்புடு கொடுகு, பெஜவாடா பொப்பிலி (சட்டம் ஒரு சக்கரம்....இப்படத்திற்கு 'மிஸ்டர் ரவீந்திரா' என்றொரு டிவிடி பெயரும் உண்டு. 'சட்டம் ஒரு சக்கரம்' என்ற பெயர் தெரியாமல் வீடியோ தகட்டில் இப்பெயரை சூட்டி இருப்பார்கள்), ஜீவன தீராலு (வாழ்க்கை அலைகள்), சாணக்யா சந்த்ரகுப்தா, பில்லலு தெச்சின தெல்லலு ராஜ்யம் (குழந்தைகள் கண்ட குடியரசு), அக்னி புத்ருடு என்று நடிகர் திலகம் நடித்த நேரடி சுந்தர தெலுங்குப் படங்கள் உண்டு.

1982 ல் தெலுங்கில் நடிகர் திலகம் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் 'நிவுரு கப்பின நிப்பு'

தமிழில் 'மிஸ்டர் மகேந்திரா' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த இந்தப் படம் நிஜமாகவே 'ஜம்'மென்றுதான் இருக்கிறது.

நடிகர் திலகத்தின்பால் மிக்க அபிமானம் கொண்ட தெலுங்குத் திரைவானின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணா பெயருக்கு ஹீரோவாக இருந்தாலும் படத்தை ஆளும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி வழக்கம் போல நடிகர் திலகமே. பாப்பையா இயக்கத்தில் சக்கரவர்த்தி இசையமைத்த இந்தப்படத்தில் தலைவரின் ஜோடியாக 'சௌகார்' நடித்திருந்தார். கிருஷ்ணா ஜோடியாக சாமுத்ரிகா லட்சண நாயகி ஜெயப்பிரதா நடிக்க, உடன் நாகேஷ், பிரபாகர் ரெட்டி, கிரிபாபு, 'படாபட்'ஜெயலஷ்மி, சங்கீதா, காந்தாராவ் என்று பிரபல நட்சத்திரக் கூட்டம்.

கே.ஏ.வி.கோவிந்தன் வசனம் எழுத, நடிகர் திலகம் போர்ஷனுக்கு நம் வியட்நாம் வீடு சுந்தரம் 'பளிச்' வசனங்கள் தந்திருப்பார். கதை பி.எச். ராதாகிருஷ்ணா. ஒளிப்பதிவு வெங்கட், தயாரிப்பு லஷ்மி சர்மா.

கதை:

மிகப் பெரிய எஸ்டேட்டின் ஜமீனான மகேந்திரன் (நடிகர் திலகம்) ஏழைகளுக்கு வள்ளல். அந்தக் காட்டுப் பகுதியின் மக்கள் அவரைக் கடவுளாக நினைக்கின்றனர். மகேந்திரன் தனக்கிருக்கும் செல்வத்தை அந்த மக்களின் முன்னேற்றத்திற்காக வாரி வாரி வழங்குகிறார். அவர் மனைவி லஷ்மி. ('சௌகார்') இவர்களுக்கு ரவி (கிரிபாபு) என்றொரு மகன். ஆனால் தந்தைக்கேற்ற மகனல்ல. தந்தையின் முன் அடக்கமான தமையனாக நடித்து ஏமாற்றும் கலையில் கைதேர்ந்தவர். காமுகன். கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளவன்.

மகேந்திரா தன் பிறந்த நாளில் கோபி(கிருஷ்ணா), ரேகா (ஜெயப்பிரதா) இருவரையும் கவுரவிக்கிறார். இருவரையும் காட்டைச் சுற்றிக் காட்டக் கூட்டிச் செல்லும் ரவி ஒரு தனியான சந்தர்ப்பத்தில் தன் காமாந்தக வேலையை ரேகாவிடம் காட்டி கற்பழிக்க முயல, தக்க சமயத்தில் கோபி அங்கு வந்து ரேகாவை அவளிடமிருந்து காப்பாற்றுகிறான். 'ஊரார் போற்றும் மகேந்திராவுக்கு இப்படி ஒரு தறுதலை பிள்ளையா?' என்று கோபியும், ரேகாவும் மனம் வருந்துகிறார்கள். இதுபற்றி மகேந்திராவிடம் தெரிவிக்க வேண்டும் என்ற ரேகாவின் கோபத்தை 'தன் மகன் மீது மகேந்திரா வைத்த்திருக்கும் நம்பிக்கை நம்மால் குலைந்துவிட வேண்டாம்' என்று கோபி தடுத்து விடுகிறான். ரேகாவும், கோபியும் காதலர்கள் என்று நான் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. கோபிக்கு ஒரு தங்கை.

கோபியுடனான தன் காதலை தந்தையிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்கிறாள் ரேகா. ஆனால் ரேகாவின் தந்தை (காந்தாராவ்) தீர்மானமாக அதை மறுத்து விடுகிறார். காரணம்?.....

இவர்கள் காதல் பற்றி அறியாமல் ரேகாவை தன் மகனுக்கு மணமுடித்து வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார் மகேந்திரா.

கோபியின் தங்கை உஷா ('படாபட்'ஜெயலஷ்மி) வாயிலாக கோபியும், ரேகாவும் காதலர்கள் என்று கேள்விப்பட்ட மகேந்திரா தன் மகன் ரவிக்கு ரேகாவை மணமுடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுவதோடு கோபி, ரேகா காதல் பற்றி அறிந்து சந்தோஷமும் அடைகிறார். ரேகாவின் தந்தை இவர்கள் காதலுக்குத் தடையாய் இருப்பதை அறிந்து ரேகாவின் பணக்கரைத் தந்தையை சந்திக்கிறார் மகேந்திரா. காதல் மறுப்புக்கு காரணமும் கேட்கிறார்.

கோபியின் பிறப்பு பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அவன் அநாதை என்ற நிலையில், அவன் தாய், தந்தை யாரென்று தெரியாத நிலையில் எப்படி தன் மகளை அவனுக்கு மணமுடித்து என்று ரேகாவின் தந்தை கேட்க மகேந்திரனுக்கு கோபம் வருகிறது.

இப்போது மகேந்திரன் ரேகாவின் தந்தையிடம் யாருக்கும் இதுவரை சொல்லாத உண்மையை சொல்கிறார். இதுதான் அந்த பிளாஷ் பேக்.

மகேந்திரன் இப்போது மணமான புதிதில். மகன் ரவி கைக்குழந்தை. மகேந்திரனுக்கு சாந்தி (சங்கீதா) என்றொரு தங்கை. அவள் ஏழை ராஜூவைக் (பிரபாகர் ரெட்டி) காதலிக்கிறாள். அந்தஸ்து காரணமாக, பரம்பரை கெளரவம் காரணமாக மகேந்திரன் சாந்திக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து ராஜுவிடம் அவள் கொண்டிருக்கும் காதலைக் கண்டிக்கிறார். அண்ணன் மாற மாட்டார் என்று புரிந்த சாந்தி மகேந்திரனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டைவிட்டு ராஜுவுடன் ஓடிப் போகிறாள். கடிதத்தைப் பார்த்து கோபமுறும் மகேந்திரன் வேகமுற குதிரை வண்டியில் பறந்து செல்லும் காதலர்களை தன் குதிரையில் துரத்த, வண்டி விபத்து ஏற்பட்டு ராஜு மலையிலிருந்து கீழே விழ, தங்கை சாந்தியை மட்டும் காப்பாற்றி வீட்டுக்கு கூப்பிட்டு வருகிறார் மகேந்திரா. இப்போது அவருக்கு இன்னொரு அதிர்ச்சி. தங்கை சாந்தி கர்ப்பமாயிருக்கிறாள்.

மகேந்திரா காதலர்களை பிரித்ததற்காக இப்போது வருந்துகிறார். குற்ற உணர்வு அவரைப் பிடுங்கித் தின்கிறது. ஆனால் சாந்திக்கு அண்ணன் மீதான கோபம் மாறவில்லை. மகேந்திராவின் மனைவி சாந்தியை தன் தந்தை வீட்டில் வைத்து குழந்தை பெற வைக்கிறாள். குழந்தையை லஷ்மியிடம் ஒப்படைத்துவிட்டு சாந்தி காலமாகிறாள். இந்த விஷயம் ஊருக்குத் தெரிந்தால் தன் கவுரவம் பாழாகிவிடும் என்று பயப்படும் மகேந்திரா குழந்தையை ஒரு ஆசிரியரிடம் ஒப்படைத்தது வளர்க்க சொல்கிறார். அந்தக் குழந்தைதான் கோபி. அந்த ஆசிரியருக்குப் பிறந்த மகள்தான் கோபியின் உடன்பிறவாத தங்கை உஷா.

இதுதான் அந்த பிளாஷ்பேக். இப்போது புரிகிறதா கோபி மகேந்திராவின் தங்கை மகன் என்று?

மகேந்திராவின் மகனின் வெளியே தெரியாத அட்டுழியங்கள் ஓய்ந்தபாடில்லை. ரேகா, கோபி காதலைப் பற்றி மகேந்திரன் ரவியிடம் சொல்ல ரொம்ப நல்லபிள்ளை போல ரவி வீட்டுக் கொடுப்பதாக தந்தையிடம் நடித்து அவரிடம் மேலும் நன்மதிப்பை பெறுகிறான். மகன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து ஏமாளி ஆகிறார் மகேந்திரா.

இப்போது அந்த காட்டு இலாகா அதிகாரியாக கோபி பதவியேற்கிறான். அவனைப் பாராட்ட வரும் மகேந்திரா அங்கிருக்கும் ஒரு நபரைப் பார்த்து பேரதிர்ச்சி அடைகிறார். விதியின் விளையாடல். எந்தத் தங்கையை ராஜுவிடமிருந்து பிரித்தாரோ இறந்து விட்டதாக நினைத்த அதே ராஜு விபத்திலிருந்து தப்பி இப்போது ஒரு கண்ணிழந்த நிலையில், கையிழந்த நிலையில் நொண்டியாக, குதிரை வண்டி ஓட்டுபவனாய் தன் மகன் கோபியிடமே வேலை பார்க்கும் கொடுமை. இறந்த தன் மனைவிக்காக ஒரு சிறிய நினைவு மண்டபம் கட்டி அதை பூஜித்து வருகிறான் ராஜு. மகேந்திரன் ஒடிந்து போகிறார். இதை மனைவி லஷ்மியிடமும் சொல்லி வருத்தப்படுகிறார்.

கடத்தல் சம்பந்தமாக ரவிக்கும், கோபிக்குமான மோதல்கள் தொடர்கின்றன.

ராஜு சாந்திக்காக கட்டியுள்ள நினைவுச் சின்னத்தைப் பார்வையிட மகேந்திரனும், லஷ்மியும் வருகையில் அங்கு ரவி ஒரு காட்டுவாசிப் பெண்ணின் கற்பை வழக்கம் போல சூறையாட, எதிர்பாராமல் அங்கு வந்து அதை பார்த்து விடும் லஷ்மி அதிர்ச்சியில் உறைந்து, நிலைகுலைந்து போகிறாள். தங்கையின் நினைவு மண்டபத்தில் கண்ணீர் சிந்தி நிற்கும் மகேந்திராவை கூப்பாடு போட்டு அழைக்கிறாள் லஷ்மி. பதற்றத்தில் கால் தடுமாறி மலையிலிருந்து உருண்டு கீழே விழுந்து கணவனிடம் உண்மையை சொல்ல எத்தனித்து முடியாமல் பரிதாபமாக உயிர் துறக்கிறாள். மகேந்திராவுக்கு அடிமேல் அடி சம்மட்டியாக விழுகிறது. மனைவியை இழந்து தவிக்கும் மகேந்திராவுக்கு ஆறுதல் சொல்கிறாள் கோபியின் தங்கை உஷா.

ராஜு மகேந்திராவை சந்தித்து தன் மகன் பற்றி கேட்க அதை பற்றி அவனுக்கு எல்லாவற்றையும் தெரிவித்து கோபிதான் அவன் மகன் என்று தெரியப்படுத்துகிறார். சமயம் வரும்போது இது பற்றி கோபியிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் கோபி மகேந்திராவையும் கள்ளக்கடத்தலில் ஈடுபடுவதாக சந்தேகப்படுகிறான். தந்தை என்ற உண்மை தெரியாமல் ராஜுவும் அதற்கு உடந்தை என்று குற்றம் சுமத்துகிறான். எல்லாம் மகேந்திராவின் மகன் ரவியின் லீலை.

ஒரு கட்டத்தில் ரவியின் அக்கிரமம் உச்சத்தை அடைகிறது. கோபியின் தங்கை உஷாவையும் அவன் கற்பழித்து சாகடித்து விடுகிறான். தன் கற்பை பறிகொடுக்கும் அந்த சூழலிலும் உஷா அவனுடைய லாக்கெட்டைப் பிடுங்கி கையோடு இறுக்கிக் கொண்டு இறந்து போகிறாள் அவனுக்குத் தெரியாமலேயே ஆதாரத்துக்காக.

தங்கையைத் தேடி வரும் கோபி கற்பிழந்த நிலையில் கையில் ரவியின் லாக்கெட்டுடன் இருக்கும் தங்கை பிணத்துடன் மகேந்திரா வீட்டுக்கு கோபத்துடன் செல்கிறான். மகேந்திராவிடம் லாக்கெட்டைக் காட்டி 'அவளைக் கற்பழித்தது உங்கள் மகன்' என்று மகேந்திராவிடம் குற்றம் சுமத்துகிறான். மகேந்திரன் பதறி மகன் மேல் உள்ள கண்மூடித்தனமான பாசத்தில் அதை மறுக்கிறார். சொந்தப் பகை காரணமாக தன் மகனை குற்றவாளி ஆக்குவதாக கோபியிடம் கொந்தளிக்கிறார். அதற்கேற்றாற் போன்று ரவியும் அந்த டாலர் எப்போதோ தொலைந்து விட்டதாக தந்தையிடம் நாடகமாடி அவரிடம் நற்பெயரோடவே இருக்கிறான்.

கோபி கள்ளக்கடத்தல்காரர்களுடன் ரவியை ராஜுவின் துணை கொண்டு கையும் களவுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறான். மகேந்திரன் குமுறும் எரிமலை ஆகிறார். அவருடைய கோபமெல்லாம் கோபியின் மீது திரும்புகிறது. தக்க ஆதாரங்கள் கிடைப்பதால் ரவிக்கு மரண தண்டனை வேறு விதிக்கப்பட்டு விடுகிறது. சிறைக்கம்பிகளுக்கு இடையிலும் மகன் தந்தையிடம் இன்னும் நல்லவனாக நடித்து தன்னை நம்ப வைக்கிறான் ரவி. மகனின் விடுதலைக்காக மகேந்திரன் முழுதாக போராடுகிறார். ஜனாதிபதிக்கு அளித்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ரவி தூக்கிலிடப்பட, ஆத்திரம் கண்ணை மறைக்க கோபியை சுட்டுத்தள்ள மகேந்திரா ஆவேசத்துடன் கிளம்புகிறார். கோபி எவ்வளவு நியாயம் சொல்லியும் அவர் கேட்டபாடில்லை. இறுதியில் போலீஸ் அதிகாரி ரவி சாகும் தருவாயில் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்றை கொண்டு வந்து காட்ட, அதில் ரவி தன் குற்றங்களையெல்லாம் ஒப்புக் கொண்டு 'கோபி நல்லவன்' என்றும் எழுதி வைத்து இருந்திருக்கிறான்.

உண்மைகளை உணர்ந்து கொண்ட மகேந்திரா தன் மகனின் தவறுகளை எண்ணி வருந்துகிறார். 'கட்டிக் காத்த குடும்ப கெளரவம் மகனால் தவிடுபொடியானதே' என்று அழுது அப்போதே தீர்மானமாக மானம் காக்க ஒரு முடிவெடுக்கிறார்

ஆமாம்! பரம்பரை கெளரவம், அந்தஸ்துடன் வாழ்ந்த அந்த மகேந்திரா சிங்கம் தங்கையை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து, சொந்தங்களை இழந்து இப்போது தன கையில் வைத்திருக்கும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு பரிதாபமாக சாகிறது.

தொடரும்.....

Russellsmd
22nd February 2017, 04:38 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0001_20170116080120669_20170202125247091_2017022 0102637442_zpsilyjmuap.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0001_20170116080120669_20170202125247091_2017022 0102637442_zpsilyjmuap.jpg.html)

"இருப்பா..! அத்தை தண்ணி குடிச்சிட்டு ஓடி வந்துடறேன்.."

- ஓடி வருவதாகச் சொல்லிப் போன அத்தை சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் குடித்தாளா.. தெரியாது. சாயங்காலம் வரை வரவேயில்லை.

என்னைப் பள்ளியில் சேர்த்து விட்ட தினத்தன்று
நானடைந்த ஏமாற்றமும், அந்த ஏமாற்றம் தந்த கண்ணீரும் மிகச் சில தினங்களிலேயே மாறி விட்டன.

பள்ளியும், பள்ளிக்குப் போவதென்பதும் மிகவும் பிடித்துப் போனது.

அந்த தினங்களில் துவங்கிய பாடங்கள், அரைக்கால் சட்டை முழுக்கால் சட்டையாக மாறும்
வரைக்கும் தொடர்ந்து விரட்டி முடிந்தன.

"முடிந்தன" என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் மெலிதாய் சிவப்பு பரவிய "சிபியா கலர்"
என்று குறிக்கப்பட்ட ஒரு பழுப்பு வண்ண பிரிண்டில், மதுரை சென்ட்ரலில் ஞாயிறன்று
"ஆண்டவன் கட்டளை" பார்த்த போது என்னை
மாணவனாக மீண்டும் உணர்ந்தேன். நாடு மெச்சும் நடிகர்திலகமெனும் நல்லாசிரியர், என்னைப் போன்ற கோடிக்கணக்கான மாணவர்களுக்குக் கலையால் போதிக்கும் பாடங்கள் முடியவில்லை என்பதையும் உணர்ந்தேன்.
*****

நடு வகிடெடுத்து தலை வாரிக் கொண்டு, கையில்
பிடித்திருக்கும் குடையைப் போலவே ஒழுக்கத்தையும் "கிச்" எனப் பிடித்துக் கொண்டு,
அய்யன் "கடமையே வெற்றிக்கு வழி" என மெலிதாகவும் அதே சமயம் உறுதிபடவும் சொல்லும் போது...

ஜூலியட் சீஸருக்குரிய " வந்தான்.. பார்த்தான்..
வென்றான்" வார்த்தைகளை ஆன்டனியோடு தவறாகப் பொருத்தி வியாசம் எழுதியிருக்கும் மாணவியை நிறுத்தி நிதானமாய், அழகாய்க் கண்டிக்கும் போது...

கூத்தும், கும்மாளமுமாய் வகுப்பறையில் வீணாகும் மாணவனைச் சலித்து, அவர்களின் எதிர்காலம் பாழாகும் என்று அறிவுறுத்தும் போது...

பூக்கள் சூழ்ந்த பேரழகாய் காதலி சின்ன நீர்நிலையில் இருக்க, தானும் அதனுள் விழுந்து
காதல் பேசும் போது...

"தாயின் பாதங்களில் சொர்க்கம் இருக்கிறது" என்கிற நபிகள் நாயகத்தின் பொன்மொழி நிஜத்தை கனிவோடு சொல்லும் போது...

அய்யனுடமிருந்து கற்றுக் கொள்கிறோம் " தமிழ்ப் பாடம்".
*****

"கடமையே வெற்றிக்கு வழி" என்று தான் கொண்டிருக்கிற தமிழ் நம்பிக்கைக்குப் பக்க பலமாக, "The Path of Duty is the way to Glory " என்று அழகு உச்சரிப்பைத் துணைக்கழைத்துக்
கொள்கிற போது...

சக மாணவியரின் அழகுக்கு மதிப்பெண்கள் போட்டுக் கிண்டலடிக்கும் மாணவர்களைத் திருத்த, புத்தக ஓவியங்களுக்கு அவர்கள் போலவே மதிப்பெண் போடும் போது...

வறுமை நிலையிலும் கல்வி கற்க ஆவலாயிருக்கும் ஒரு இளைஞனின் அறிவு தாகத்தை "Splendid" என வியக்கும் போது...

"காதலைப் புகழ்றது தப்பா சார்?" என்று கேட்கும் மாணவிக்கு, உச்சரிக்கும் விதத்திலேயே "நிச்சயமாக" என்பதைக் குறிக்கிறதாய் "Definitely"
என்று கூறும் போது...

ஆடிக் கொண்டே வந்து தன் மேல் மோதுகிற மாணவியை பேச்சாக இல்லை.. இரைச்சலாகவே
கண்டிக்கிற போது...

ஒரு நிறைவோடு வகுப்பைப் பூர்த்தி செய்கையில்
"That's all for the day" சொல்லும் போது...

"என்னைத் திட்டலாம் சார். காதலத் திட்டியிருக்கக்
கூடாது" என்று கடிந்து கொள்ளும் மாணவனை
எரிச்சலுடன், சலிப்புடன் "..You.." என்று பாதியாய்த்
திட்டும் போது...

அய்யனிடமிருந்து கற்றுக் கொள்கிறோம் "ஆங்கிலப் பாடம்".
*****

எழுத்துப் போடும் போது துவங்கி, கடமையிலிருந்து காதலுக்கு மாறுகிற நிமிஷம்
வரைக்கும் முதுகின் பின் கைகோர்த்துக் கொண்டு, கோர்த்த கைகளில் ஒன்றை " கிடுகிடு"வென ஆட்டிக் கொண்டு அய்யன் ஒரு நடை நடப்பார்.

காதலில் விழுந்த பின் வகிடெடுத்த சிகை மாறும்.
அந்தப் பழைய நடை மாறும். ஒயிலாய், அழகாய்
ஒரு நடை சேரும்.

கடமையா..? காதலா..? என்கிற குழப்ப மிகையில்
வீட்டுக்குள் நுழைகையில் ஒரு புறம் தோள் தொங்க தளர்வாய் வேறொரு நடை நடப்பார்.

"ஆறு மனமே ஆறு" பாடலில் பற்றறுத்த யோகியாய், கற்றறிந்த ஞானியாய் பல்வேறு நடை நடப்பார்.

நினைவுகள் மீண்ட பழைய காதலியிடமிருந்து
கண்ணியமாய் விலகி கம்பீரமாய் ஒரு வேக நடை
பின்னர் நடப்பார்.

எந்த நடையை எப்போது நடந்தால் ரசிகன் ஆனந்தக் கூத்தாடுவான் என்கிற கணக்குத் தெரிந்த அய்யனிடமிருந்து கற்றுக் கொள்கிறோம்.. "கணக்குப் பாடம்."
*****

சற்றே கவனம் பிசகி, வழக்கமான பாதை விடுத்து
வேறொரு பாதையில் போய் விட்டாலே பதை பதைத்துப் போகிறோமே..?

கடமைப் பாதை விட்டு விலகி, காதல் பாதை தேர்ந்து, அசிங்கமுற்று, அவமானப்பட்டு, அன்னையைக் காவு கொடுத்து, அலைந்து, அல்லலுற்று, ஆண்டவனைத் தேடி, எந்நிலையிலும் ஒழுக்கம் விலகாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து, காதலையும், காதலியையும் மீட்டு, மீண்டும் கண்ணியத்துக்குரிய பழைய பாதைக்குத்
திரும்பும் நாயகன் எத்தனை அனுபவித்திருப்பான்?

சின்னச் சின்ன உடல் மொழிகள் மாற்றம், கூடும்,குறையும் அதிர்வுகளோடு கூடிய குரல், தொழில் பக்தியில் ஊறித் திளைத்த அபார திறமை...இவற்றைத் துணைக்கு வைத்துக் கொண்டு கடினமான நடிப்புப் பாதையில் ராஜநடை போட்டு அய்யன் வெற்றிக் கோட்டையை
எட்டித் தொடும் அழகே அழகு.

தனது மிகக் கண்ணியமான பிரம்மச்சரியம் தனது
அழகான மாணவியின் பொருட்டு சோதனைக்கு
உள்ளாக்கப்படும் போதெல்லாம் தவிக்கிற தவிப்பு...

தனக்கு வெகு அருகில் மணக்கும் மல்லிகை மணம், தனது கோட்டுப் பையிலிருந்துதான்
வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க அழகான
முகர்தலோடு அந்த இடம் நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாய் முகம் தாழ்த்தும் பாவனைகள்...

நேற்று வரை ஆசானாயிருந்து பார்த்த மாணவியை, இன்று காதலியாய்ப் பார்க்க நேர்ந்த
தர்மசங்கடத்தில் வார்த்தைகளுக்குத் தவிக்கும்
அழகு...

தன் மனக் குழப்பத்தைப் போக்கிடலாகாதாவென
விவேகானந்தரிடத்தும், வள்ளலாரிடத்தும் படம், படமாய் ஓடிப் புலம்பும் புலம்பல்...

"ஆசையை ஒழி" என்ற அந்த மகான்கள் தத்துவம்
மனசோடு எதிரொலிக்க.. அந்த அழகு முகம் காட்டும் புரிதல் மிக்க விடுதலை உணர்வுகள்...

மீண்டும் மனத் திரையில் அழகுப் பெண்ணின் உருவம் ஓட.. அதே நிம்மதி முகம் சுமக்கும் குழப்ப பாவனைகள்...

எந்தப் பிடிப்புமற்று விரக்தியில் குற்றவாளிக் கூண்டில் நிற்கையில் சோகம் கவ்விய முகத்தின்
உச்சியில் மிளிரும் கண்களில் மனிதர்களைச்
சந்திக்கக் கூசும் கூசல்...

சிறைக்கு வந்து தன்னை வார்த்தைகளால் தண்டிக்கும் அன்னையிடம் மறுத்துச் சொல்ல ஒரு
வார்த்தையின்றிக் காட்டும் முக வேதனைகள்...

தன் அக்காள் மகளையும், தன் பிரியமான மாணவனையும் ஒன்றிணைத்த நிறைவு...

நேசித்தவளே பித்து நிலையில் 'நீ பைத்தியமா?"
என்று கேட்டதும் வெடித்தெழுப்பும் சிரிப்பழுகை...

இவையெல்லாம் வெறும் நடிப்பம்சங்களல்ல..
சிந்தனையின் தெளிவோடு கலையை ஆராய்ந்து
பொருத்தும் அய்யனின் அறிவியல்.

அந்த வகையில் அய்யனிடம் கற்கிறோம்... "அறிவியல் பாடம்".
*****

ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு
திரைப்படத்தில் நடித்துக் கொடுத்து ரசிக்க வைத்ததோடு தன் கடமை முடிந்து விட்டதென்று
கருதாமல்.. இன்னும் ஒரு நூறு தலைமுறைகள்
போற்றிக் கொண்டாடத் தக்க பெருமைக்குரிய கலையெல்லாம் தனதென்று தலை நிமிர்ந்து
நிற்கிறானே.. நடிகர் திலகமெனும் ஒப்பற்ற
கலைஞன்..? அவன் இந்த "புவி" கூர்ந்து கற்க
வேண்டிய " வரலாற்றுப் பாடம்".
*****

பாடங்கள் முடியவில்லை..!

vasudevan31355
23rd February 2017, 08:23 AM
கண்ணனின் கலக்கல் கண்கள். வலது கண்ணில் மட்டும் கண்ணீர் கலங்கி நிற்கும். இடது கண் பெரிதாகவும், வலது கண் இடது கண்ணிலிருந்து மாறுபட்டு புருவங்கள் மேலேறி நிற்கும். முகம் ஆனந்தம், அதிர்ச்சி, மகிழ்ச்சி, திகைப்பு, சோகம் அத்தனையையும் பிரதிபலிக்கும். வாயை வைத்திருக்கும் அழகைப் பாருங்கள். வேறு எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

இந்த ஒரு போஸ் போதும் காலம் முழுதும் நாங்கள் உனக்கு அடிமைகளாய் இருக்க.

'தெய்வ மகனி'ன் ரசிகர்கள் நாங்கள் என்ற அந்த ஒரு பெருமை போதும் எங்களுக்கு. அதைவிடப் பெருமை இந்த உலகத்தில் எவருக்கும் இல்லை.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8.jpg

vasudevan31355
23rd February 2017, 08:45 AM
உடலையும், கழுத்தையும் பின்வாங்கி, ஆதரவற்ற அனாதை மகன் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குற்றவாளியாய் குனிந்து நிற்கும் நிமிர்ந்த நடிப்பு. நடிப்புப் போட்டியில் இந்தக் காட்சியில் வென்றது தந்தையா?... இல்லை மகனா?..

இதுவரை எந்த நீதிபதியும் தீர்ப்பு சொல்ல முடியாத அவராலேயே அவருக்குண்டான நடிப்புப் போட்டி

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/131513360311401.jpg

vasudevan31355
23rd February 2017, 08:46 AM
உலகத் திரைப்பட வரலாற்றில் அனைவரையும் வியக்க வைத்த நண்பர்கள் இருவரும் சந்திக்கும் ஈடு இணையில்லா ஒப்பற்ற காட்சி. மேஜர் படிக்கட்டுகளில் இறங்கி வரும் போது கண்களாலேயே மேஜர் இறங்குவதை நடிகர் திலகம் காட்டும் பாவம்.

மிடுக்கு, தோரணை, கவுரவம், கம்பீரம், எதிர்பார்ப்பு, வியப்பு, கோபம், நட்பு, உரிமை, சொந்தம், பிரிவு என்று அத்தனை பாவங்களும் ஒன்றுபடச் சேர்ந்து ஆஸ்காரை நோக்கி குறி வைத்த மாபெரும் நடிப்பு. ஆஸ்கார் விருதுக்கும் மேலான நடிப்பு.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/13151323.jpg

vasudevan31355
23rd February 2017, 08:48 AM
குழந்தையின் அழகைவிட எங்கள் 'விஜய்'யின் அழகு டாப்.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4.jpg

vasudevan31355
23rd February 2017, 08:50 AM
அந்த முகம் பிரதிபலிக்கும் உணர்ச்சிகளை எவரேனும் வார்த்தைகளிலோ, எழுத்துக்களிலோ வடித்துவிட இயலுமா? இனி ஒருவர் இப்படிப் பிறக்க முடியுமா? அவரே பிறந்து வந்தாலும் கூட முடியாது.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5.jpg

vasudevan31355
24th February 2017, 08:38 AM
From FB

https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16939473_416312725380392_6708974097368240582_n.jpg ?oh=1ff580939925d2134dc70f59b8fb317e&oe=592CFF74

தமிழ் தாய் தந்த தவநடிகன் நமது தெய்வம் சிவாஜி கணேசன் அவர்களின் கோவில் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த ஆந்திர மாநிலம் நெகிரியின் தெய்வத்தின் பக்தர்களுக்கு அனைத்து உலகநமது தெய்வத்தின் பக்தர்கள் சார்பில் கோடன கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மற்றும் இவ்விழாவிற்கு வந்து தெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெற்றுச் செல்ல அன்பு டன் அழைக்கிறோம்

vasudevan31355
24th February 2017, 08:41 AM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/16804416_257716168004342_6252498471966177241_o.jpg ?oh=4793f5a441975a55416f0e40c21c5f9b&oe=592E50BC

vasudevan31355
24th February 2017, 08:42 AM
Selfie எடுத்துக் கொண்ட இளைஞர்கள்

https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t31.0-0/q81/p480x480/16836235_1252717371511817_556268428206291359_o.jpg ?oh=c1a621e18d51d4ae4e7d533acdc4b31c&oe=5948CEEC

vasudevan31355
24th February 2017, 08:43 AM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/12742344_1572672396358314_1145785164626388606_n.jp g?oh=68f46533a568a1e3d475dc5b3ddd8097&oe=592BEFBD

vasudevan31355
24th February 2017, 08:44 AM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-0/q82/p370x247/16864942_257679391341353_6178162364913768840_n.jpg ?oh=daacd54036f59b1f51cbd9e01c065817&oe=59260BCF

vasudevan31355
24th February 2017, 08:45 AM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16864631_593852154140670_2673921459909950804_n.jpg ?oh=27750fa8ddebf489436f2b19e0b9b336&oe=59400135

vasudevan31355
24th February 2017, 08:47 AM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16938495_257715511337741_6443527705270721660_n.jpg ?oh=3cb14fd18f9f58333c3d01f6a6598b84&oe=592911FD

vasudevan31355
24th February 2017, 08:48 AM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-9/10993085_1441049146187307_220897522949706799_n.jpg ?oh=0a4eafe9332f5d1317b5332f637265a9&oe=593FA80B

vasudevan31355
24th February 2017, 08:55 AM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/10390525_391257407702470_2256172871094681831_n.jpg ?oh=e933d30382a01a5e35e0ad52697449a8&oe=593331AA

vasudevan31355
24th February 2017, 10:47 AM
https://scontent.xx.fbcdn.net/v/t1.0-9/16996175_1813668388897277_3701562049818470814_n.jp g?oh=6627961c46f82bd72e5f5cc041747977&oe=59334881

Russellxor
24th February 2017, 08:37 PM
ஒரு கிராமத்தோட வணிகம் அந்த ஊரு சந்தைய சார்ந்தது. எல்லாமே விக்கறதும் வாங்கறதும் அங்க நடக்கும்.பஞ்சம் பொழக்க வந்தாச்சு அந்த ஊருக்கு.அப்பிடியே இருந்தா பொழப்பு எப்பிடி நடக்கும்? அதான் ஒரு பரிசல அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓட்டி வர்ற வருமானத்துல பொழப்பு நடத்துறா குயிலு.அந்த வருமானம் பத்த மாட்டேங்குது.அதனால இன்னொரு பரிசல வாங்கி ஓட்டுனா ஓரளவுக்கு சமாளிச்சரலாமேன்னுயோசன வருது.இன்னொரு பரிசலுக்கு என்ன வழி? இருக்கிற ரெண்டு ஆட்ட வித்து பரிசல் வாங்கிக்கலாம்னு சந்தக்கு ஆடுகள கொண்டாறா.ஆனா யாபாரத்துல அவ்வளவு நெளிவு சுளிவு அவளுக்கு தெரியல.பேச்சுக்கேத்த வினயம் இல்ல.மலைச்சாமியும்அந்த சந்தைக்கு வராரு.இவளயும் பாக்குறாரு.என்ன விஷயம்னு கேட்டும் தெரிஞ்சுக்கிடறாரு.அவளோட சாமார்த்தியம் யாபாரத்துக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு போச்சு பெருசுக்கு.சரி, விவரம் தெரியாத பொண்ணு, நாமளே வித்துக் கொடுத்துடலாம்னு விவரமா பேசி ஆட்டுகள நல்ல விலைக்கு வித்துக் கொடுக்கார் மனுஷன்.அவளுக்கு ரொம்ப சந்தோசம். காச வாங்கிட்டு
சந்தைய சுத்தி வரா.அப்பத்தான் ஒரு போட்டோ கடய பாக்குறா குயிலு.போட்டோ எடுக்கணும்னு ஆச வந்துருது அவளுக்கு.போட்டோ கடக்காரன் எச்சா பணம் கேக்குறான்னு சண்ட போட்டுகிட்டு நிக்கிறா குயிலு.இதயும் பாக்குறாரு பெருசு.அங்கயும் ஒரு பஞ்சாயத்து.அவ கொடுக்க நினச்ச காசு போக மிச்ச காச தான் கொடுக்கிறதா சொல்ல பிரச்சன முடிஞ்சது.
போட்டோவுக்கு நிக்கிறா குயிலு. திடீர்னு பெரிசையும் கூப்பிட்டு தன் பக்கம் நிக்கச் சொல்லிடறா.பெருசுக்கு கொஞ்சம் சங்கடம் தா(ன்) .வெகுளியா இருக்கா, வலுவுக்கு கூப்பிடாறாளேன்னு போட்டோ எடுத்துக்கிடறாரு.அந்தக் கத அப்ப முடிஞ்சிருச்சு.
***
நம்ம குடும்பம் நல்லா இருக்கோ இல்லியோ அடுத்தவன் வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிறதலதான் சில பேருக்கு பொழப்பே.அடுத்தவன் பண்ற நல்லது கண்ணுக்குத் தெரியுதோ இல்லையோ அவன் எப்ப இடறுவான்னு தெரிஞ்சுக்கிறதலதா இந்த மாதிரி மனுஷங்க கண் கொத்தி பாம்பா இருப்பானுங்க.அப்பிடி ஒருத்தன் இருக்கான் பாரபட்டில.அவன் உண்மையான தொழிலே கயிறு திரிக்கிறதேன்.
மலைச்சாமியும் குயிலும் சேந்து போட்டோஎடுத்துக்கிட்டத பாத்து தொலச்சிடறான் .சமயம் பாத்து கிடக்கான்.

அன்னக்கி பொன்னாத்தா தனியா இருக்கா.அதான் சரியான நேரமுன்னு இல்லாத விஷயத்த பொல்லாத விஷயமா ஊதி ஊதி பேசி குயிலுக்கும் மலைச்சாமிக்கும் உறவு இருக்கிறதா சொல்லி சாட்சிக்கு அந்த போட்டோவைக் காட்டி வில்லங்கத்த
ஆரம்பிச்சு வச்சிடறான்.
புருஷன மதிக்காம பொன்னாத்தா குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தாலும் புருஷன ராமனா தான் நினச்சிக்கிட்டு இருக்கா அவ.ஆனா அந்தப் போட்டோ தான் அவ மனச கலைச்சிருச்சு.
எடுக்கிறா சீமாத்த.
விளாசறா குயில.
தெரு சனமே பேச்சத்துப் போயிடுது.
ஊருக்குள்ள வேற பேச்சு இல்ல.
இத ஒண்ணத் தவிர.

இது வரைக்கும் குயிலு மனசுல என்ன இருந்துச்சோ, தெரியல.பொன்னாத்தா கேட்டாளே ஒரு கேள்வி.
"ஏன்டி என் புருஷன வச்சிருக்கியா? "ன்னு.அது அவள காயப்படுத்துன மாதிரி தெரியலே.
ஒத்தயில இருக்கா அவ.விசனப்பட்ட மனசு , உண்மையா இல்லாதிருந்தா பொங்கியழும்.புலம்பித் தள்ளும்.அவளோ மவுனமா இருக்கா.பொன்னாத்தா சொன்னத நினச்சு பூமாரி பொழியறதா நினச்சுக்கறா.
இது இப்ப அவ நிலம.

ரெண்டு நா வெளியூரு போயிட்டு அப்ப தா வருது பெருசு.குயிலு வீட்டுக்கு போகுது.அவிக உறவு அவங்களுக்கே தெரியாத நிலயில அது கொச்சையா ஊரு பூரா காத்துல பறந்த விஷயம் பெருசுக்கு தெரியல போலேன்னு குயிலும் ஒண்ணுஞ் சொல்லாம வீட்டுக்கு போன்னு சொல்லறா.

அப்புறமென்ன?

பஞ்சாயத்து.
பெரிச எதுத்து எவனும் பேசுனதில்ல.அந்தமாதிரி எந்த எடக்கு மடக்கும் பெரிசும் செஞ்சதில்ல.அது உண்மையோ பொய்யோ, இது தான் சமயம்னு அவனவன் பங்குக்கு கேள்வி கேட்கறாங்க.
உங்களுக்கும் அவளுக்கும் தொடுப்புன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே அது உண்மையான்னு ஒருத்தன் கடைசி வார்த்தய துப்ப முடியல அதுக்குள்ள தலயக் கவுத்துக்கிட்டான்.அதுக்கு பெரிசு பாத்த பார்வைதான் காரணம்.
கிளி அப்பவே சொல்லிச் "சு "ன்னு ஒருத்தன் சொல்லி முடிக்கல.அவனும் பெரிசோட பார்வையில குனிஞ்சிட்டான்.இன்னொருத்தன்,
ஊருக்கே தலக்கட்டு குடும்பம், அந்த வீட்டுக்குள்ளயே குழப்பம் வந்துடுச்சேன்னு முடிக்க முடியல.
...வந்தவன் போனவன் எல்லாம் கேள்வி கேட்கறான்.என்னப் பத்தி கேள்வி கேட்க எவனுக்கு யோக்யதை இருக்குது ஊருக்குள்ள? .தான் யாரு தன் தன்மானம் என்னன்னு இன்னும் கூட புரிஞ்சுக்காத பாவி மக்களா இருக்கானுகளே? இப்படி அதும் மனசுக்குள்ள ஓடிட்டிருக்கோ என்னமோ? யாருக்குதெரியும்?
கடசியா ஊரு சனத்த பாக்குது பெரிசு. எல்லாரும் பேசியாச்சில்லங்கற மாதிரி ஒரு பார்வை..இப்ப வாயத் தொறக்குது.

"எல்லாரும் கேட்டுக்கங்க.
ஆமா!
அவள நான் வச்சிருக்கேன் ".

அல அடிச்சி ஓஞ்சாச்சி
புயல் வீசி அடங்கிருச்சி.

இப்ப கூட்டம் கலைஞ்சிருச்சு.குயிலோட நினைப்பா ஒத்தையிலே அந்த மகராசன்.
***
ஆயிரந்தா இருந்தாலும் பொன்னாத்தா விட்டுறுவாளா?
ஊர்க்காரங்கள கூப்பிட்டு விருந்து வக்கிறா.கிடா வெட்டி.கூடவே சாராயமும்.விஷயம் இதுக்குத்தான்.பரிசல்காரிய ஊரை விட்டு தொரத்தனும்.அதுக்குத்தான் தடபுடலா பொன்னாத்தா வீட்டுலயே விருந்துக்கு ஏற்பாடுகள் நடக்குது.கறிச்சோறு திங்கவே ஒரு கூட்டம் அலயும்.அந்தக் கூட்டம்தா பொன்னாத்தா வீட்டுல உட்காந்திருக்கு.
அங்கன வராரு பெருசு.
பாக்காரு.வீச்சரிவாவ கையில் எடுத்துக்கிறாரு.அப்ப சொல்றாரு.
"உங்க அத்தன பேருக்கும் சொல்றேன். வீடு பூரா வெட்டரிவாவும், வேல்கம்பும் வச்சிருக்கேன்.நீங்கஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா எடுத்துகிட்டு வாங்க.எவனுக்காவது தைரியமிருந்தா அவள தொட்டுப் பாருங்கடா.சாச்சுப்புடறேன் சாச்சு.
நா இப்ப ஆத்தங்கரைக்கிதா போறேன்."


குயில தேடி போகுது பெரிசு.குயில அங்க காணோம்.ஊரே பரபரத்து ஓடுது ஆத்தங்கரைக்கி.
வெறிச்சு நின்னுகிட்டு இருக்கா குயிலு.அவளச் சுத்தி நாலு போலீசும், நல்லா இருந்த ஊரும்.தரயில ஒரு பொணம்.பெரிசுக்கு ஒண்ணும் புரிபடல.யாருக்கும் எதும் தெரியல.கொல செஞ்ச குத்தத்துக்காக போலீசோட போறா குயிலு.
***
ஜெயில் :

நீ ஏன் இப்படிஞ் செஞ்ச. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தானே வக்கீலு வெக்க முடியும்.
-இது மலைச்சாமி.

நீ வக்கீலு வெக்க மாட்டேன்னு சொல்லு,உண்மையச் சொல்லுறேன்.
-இது குயிலு.

மலைச்சாமிக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல.காரணம் இல்லாம அவளும் இப்படி பேச மாட்டாளேன்னும் யோசிக்காம இல்ல. வேற வழி? சரின்னு ஒப்புக்கிறாரு.
இப்ப சொல்றா குயிலு...

எந்த அசிங்கத்த மறச்சு குல கவுரவத்துக்காக மானத்த பெரிசா நினச்சு எல்லாஅவமானங்களயும் ஏத்துகிட்டு அந்த மனுஷன் வாழ்ந்துட்டு வந்தாரோ, அந்த
கோட்டைய சாய்க்கத்தான் அவன் வந்தான்.இருபது வருஷத்துக்கு முந்தி பொன்னாத்தா சீரழிஞ்சு போயிட்டா ஒருத்தனால மாமன் கால்ல விழுந்து கெஞ்சி மானத்தக் காப்பாத்துடா மருமகனேன்னு சொன்னாரே, அதுக்காக பொத்தி பொத்தி மறச்ச அந்த அசிங்கமான உண்மய உடைக்கத்தான் அவன் வந்தான்.ஏன்னா அந்த அசிங்கத்துக்கு காரணமே அவந்தானே.வந்தவன ஊருக்குள்ள விட்டா என்னாகும்? பல நா கோட்ட ஒரு நா இடில சாஞ்சிருமே? மலச்சாமி வேதன குயிலுக்கு தெரியுமே. மலச்சாமி மேல அவ வச்சிருக்கிறது பாசமா? மரியாதையா? கஞ்சிக்கு வழி செஞ்ச வள்ளலா? இது அதுக்கு மேலே தானே.அது மனசொடிஞ்சா இவளாலே தாங்க முடியாதே?
அதான்...
பரிசல் ஓட்டிட்டு வந்தவகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடறான்.இவன ஊருக்குள்ள விட்டாத்தானே அத்தினி பிரச்சினையும்.துடுப்பாலேயே அடிச்சுக் கொன்னுட்டேன்னு சொல்றா.

கேட்டா கொடுக்குமுன்னுதான் சாமிய வேண்டிக்கிறோம்.கேட்காமயே நம்மள காப்பாத்துன சாமியா மலைச்சாமிக்கு தெரியறா குயிலு
அதயே அவகிட்டவும் சொல்றாரு.
இப்பத்தான் அவ கண்ணுல சந்தோசம் தெரியுது.இப்ப கேட்கிறா.
"ஏய்யா என்ன நீ நெனக்கல? உன் மனசுல எனக்கு இடமில்லையா?" உண்மயச் சொல்லு.
குயிலு!
நீ மட்டும் தான் என் மனசுல இருக்கே!
நீ எத்தினி வருஷம் கழிச்சு வந்தாலும் உனக்காக காத்துகிட்டு இருப்பேன்னு வாக்கு கொடுக்கார்.

***

பல வருஷ தண்டன குயிலுக்கு.அவ வராம தன் உசிரு போகாதுன்னு
அவ இருந்த குடிசையிலேயே தங்கிக்காரு பெருசு.அவ எப்ப வருவான்னு ஆத்தங்கரையையே பாத்து பாத்து அவரோட வாழ்க்கையும் பல வருஷம் ஓடிருது.நினச்சு நினச்சு விசனப்பட்டே வருஷங்களும் கரையுது.மனுஷன் படுத்த படுக்கையா கிடக்கார்.இப்பவோ அப்பவோன்னு உசிரும் இழுத்துகிட்டுஇருக்கு.ஊர் சனமும் இதுக்கு மேல தாங்காதுன்னு குயிலுக்கு சொல்லி அனுப்புறாங்க.
***
பெரிசு படுத்துருக்கு.மூச்சு மட்டும் வந்தும் போயிகிட்டும் இருக்குது.
குடிசைக்குள்ள காலடி வக்கிறா குயிலு.அவ மூச்சுக்காத்தும் வாசனையும் அந்த உடம்புக்கு தெரியாதாங்கற மாதிரி சின்ன உதறல் பெரிசு கிட்ட இருந்து.
"மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவாபெண்ணே "
பெரிசோட நினப்பு குயிலுக்கு தெரியாதா .
அவ கண்ணீரு பெரிச அசைக்குது.பெரிசுக்கு லேசா முழிப்பு வருது.அவளப் பாத்த சந்தோசம் கண்ணுல தெரியுது.இதுக்குத்தானே இத்தினி வருஷம் காத்திருந்தேன்னு சந்தோசமா கண்ண மூடுது.

கொள்ளி வச்சு முடிஞ்சதும் ரயிலேறிப் போகிற குயிலு உடம்புக்குள்ள மட்டும் உசுறு தங்குமா?
குயில் பாட்டு நின்னுடுச்சு.

*********************************************
ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல் வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறது.
-வைரமுத்து.

முதல் மரியாதை..
முற்றும்.

sivaa
24th February 2017, 11:24 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/16819249_1253449108105310_478819937786010138_o.jpg ?oh=bd68360325d9eded6201eafaa85007cd&oe=5943F765

Russellxor
25th February 2017, 12:24 PM
" சத்ரியன் இசை வெளியீட்டு விழாவில் அமீர் பேசிய பேச்சு."
இதற்கு பதில் இவ்வார பத்திரிக்கையில்.
நல்ல பதிலை அளித்தவருக்கு நம் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

https://uploads.tapatalk-cdn.com/20170225/fb4b9c6ecfcfec73bc58e05c0f7248aa.jpg

Russellxor
25th February 2017, 05:10 PM
நெஞ்சை அள்ளும்
உடலை உலுக்கும்
நடன அசைவுகளில்
நடிகர்திலகம்
மெய்சிலிர்க்கும்
இந்த வீடியோ பதிவுகள்
சத்யம் படத்திலிருந்து..
YouTube. ல் இன்று நான் தரவேற்றியது...


Sivaji 's sathyam: http://youtu.be/TwwG48p8oYw


Sathyam-song: http://youtu.be/EROIWkJZu3g

sivaa
26th February 2017, 07:37 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16832079_579553385571121_8660863185811938212_n.jpg ?oh=467ea0997d01200b8fd2f95f118b9b2b&oe=59377679

sivaa
26th February 2017, 11:37 PM
http://oi65.tinypic.com/10y28fo.jpg

sivaa
26th February 2017, 11:37 PM
http://oi67.tinypic.com/birp60.jpg

sivaa
26th February 2017, 11:38 PM
http://oi67.tinypic.com/s1m248.jpg

sivaa
26th February 2017, 11:38 PM
http://oi65.tinypic.com/2aaes87.jpg

Gopal.s
27th February 2017, 08:52 AM
திராவிட இயக்கங்கள் (முக்கியமாக தி.க.,தி.மு.க )சமூக நீதி கொள்கையில் சாதித்தாலும், பொதுவாக பகுத்தறிவு கொள்கையில் சமூகத்தை பின் தங்க வைத்து தனி நபர் துதிக்கு தள்ளி விட்டது. பேச்சு திறமை ஒன்றை மட்டும் முன்னிறுத்தி அதன் செயல்தன்மையை,உண்மை தன்மையை நிலை நிறுத்தாமல், ஆராய தலைப்படாமல், தலைவர்களின் சிலைகளை,சமாதிகளை சந்நிதிகளாக்கி ,பக்கதர்களுக்கு இருக்கும் பகுத்தறிவும்,விஞ்ஞானமும் கூட இந்த பகுத்தறிவாளர்களை அண்டாமல் காத்து பலனடைகிறது.

மாற்று முகாமை குறி வைத்து பொய்களை பரப்புதல் (முக்கிய குறி காமராஜ்,சிவாஜி போன்ற திறமை வாய்ந்த நேர்மையாளர்கள், சொன்னதை செய்து செய்வதை சொல்பவர்கள்), தங்கள் தலைவர்களை பற்றி இல்லாத கட்டுக்கதைகளை பரப்பி மக்களை போதையில் வைத்திருத்தல் இப்படியாகவே செயல்பாடுகள்.

உண்மைகளை சொல்லட்டும் .நமக்கு கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் மிகையான , லாஜிக் மீறிய பொய்கள்?

உதாரணம். சமீபத்தில். இதில் குறிப்பிட படும் நபர் மறைந்து 29 வருடங்கள் முடிந்து விட்டதால் பெயரை தவிர்க்கிறோம். ஒரு கட்சியின் நிறுவனர். ஆனாலும் குறிப்புகளை வைத்து யூகிக்கலாம்.

சமீபத்தில் பாக்யராஜின் புதல்வர் சாந்தனுவின் பட விழா (அல்லது பார்த்திபனின் படவிழா) வில் பேசிய எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து கருத்தை அள்ளி அள்ளி வீசும் பகுத்தறிவு இளம் சிங்கம் கரு.பழனியப்பனின் அற்புதமான கதை-வசனம்.அடிப்படை சரித்திர அறிவு,பொது அறிவு,தன் துறை சம்பத்த பட்ட விஷயங்களிலேயும் லாஜிக் இடறல்.ஆனாலும் யாருடைய இமேஜையோ காக்கும் அவசர பொய்.

ஒரு ஏழை தந்தைக்கு ஒரு மகன் மலைக்கள்ளன் பார்க்கும் போது பிறந்ததால் மலைக்கள்ளன் என்று பெயரிட்டாராம்.(சுமார் 54,55 என்றே வைப்போம்.கிராமத்தில் ஒரு வருடம் கழித்தே பார்த்திருக்க வாய்ப்பு) இவர் இவர் தலைவராக எண்ணி யார் பெயரை வைத்தாரோ அவரை பார்த்து மெடிக்கல் சீட் கேட்க வந்தாராம். தமிழகத்தில் சீட் பஞ்சம் ஆதலால் அப்போது சி.எம். ஆக இருந்த n .t .r அவர்களிடம் சொல்லி மலைக்கள்ளனை ஆந்திராவில் சேர்க்க வைத்தாராம் .இந்த தலைவர் அமெரிக்காவில் நலிவுற்று சிகிச்சை பெரும் போது சிகிச்சை கொடுக்க வந்தவரு அதே மலைக்கள்ளனாம்.

மலைக்கள்ளன் பிறந்தது- 1955.

மருத்துவ படிப்பு சீட் தேடியது-1983(என்.டி..ஆர் ஆந்திர முதல்வரான வருடம்)

மலைக்கள்ளன் அமேரிக்காவில் தன் தலைவருக்கு மருத்துவம் பார்த்தது -1987 (அவருக்கு சீட் வாங்கி கொடுத்தவர் மறைந்தது.)

சராசரி மாணவர்கள் மருத்துவ படிப்பு சேரும் வயது- 18.

சராசரி மாணவர் மருத்துவம் படிக்க ஆகும் வருடம் - m .b .b .s - 5 1/2 வருடங்கள். ஹவுஸ் சர்ஜன் -1 வருடம். Md /ms -2 வருடங்கள்.

கலை வேந்தன் கொடுத்த டிப்ஸ் போல.

உண்மையே உன் விலை என்ன?

Russellxor
27th February 2017, 12:23 PM
முதல் மரியாதை
முழுப்பதிவு.

வாக்கப்பட்டு வந்த பொஞ்சாதி வக்கனையா ஆக்கிப் போட தெரியாதவளா இருந்தாலும் சரி, நல்ல பேச்சு நாலு பேசத் தெரியாதவளா இருந்தாலும் சரி, நாலு பேருக்கு கிள்ளிப் போடாதவளா இருந்தாலுஞ் சரி கட்டிக்கிட்ட புருசன் மனச கல்லாக்கிக்கிட்டு காலத்தைஏதோ ஓட்டிடலாம்.ஆனா மானத்தை தொலச்சவள கட்டிக்கிட்ட புருஷன் தான், வெளியவும் சொல்ல முடியாம உள்ளவே புழுங்கிக்கிட்டு நடைப்பிணமாத்தான் வாழ்ந்துகிட்டு இருப்பான்.இது நல்ல மனுசனுக்குண்டான குணம்.
ஊருக்கே பெரிய மனுசனா இருந்தாலும், குடும்பம்னு ஒண்ணு இருந்தா அவரு பேச்சை கேட்கிற மாதிரி பொண்டாட்டியும் , புள்ள குட்டிகளும் இருந்தாத்தேன் மனுசனுக்கு படுக்கையிலே தூக்கம் வரும்.இல்லேன்னா அந்த படுக்கை கூட சுமையாத்தான் தெரியும்.ஊருக்குள்ள போயிட்டும், வந்துட்டும் இருக்கும் போது கௌரவத்திற்கு சிரிச்சு தொலச்சு செத்த பொணமா வாழ்க்கைய நடத்தனும்ங்கறமாதிரிதான் அவுக பொழப்பு இருக்கும்.
இங்க மலைச்சாமியோட கதயும் இதப் போலத்தேன்.மத்த மனுசங்களோட குணத்தோட இந்த மனுசனோட குணத்த இணைச்சுப் பேச முடியாது.அந்த மனுசனோட குணம் பூமிக்குள்ள புதஞ்சிருக்கிற வைரம் மாதிரி.அந்த வைரத்தோட குணம் பொஞ்சாதிக்குத்தான் தெரியாம போச்சு.ஆனா ஊருக்கு நல்லாவே தெரியும்.
அவுரு பொஞ்சாதியோட கத தான் என்ன?
கண்ணாலத்துக்கு முன்னயே வேற ஒருத்தனோட உறவாண்டுகிட்டு கர்ப்பமும் ஆகிப்போனா.விதச்சவனோ விதியேன்னு ஓடிப் போயிட்டான்.
மகளோட சேதி தெரிஞ்ச அப்பனுக்குத்தான் வேற வழி தெரியல.அவனோ மானம், மருவாத கெட்டா தூக்குல தொங்கற ஆளு. அந்த கணம் சாமி மாதிரி தெரிஞ்ச ஒரே ஆளு மலைச்சாமி தான்.மலைச்சாமி கால்ல விழுந்து, நாசமாப் போன மகள நீ தான் கட்டிக்கிடனும். இல்லலேன்னா என் உசுறு என் உடம்புல தங்காதுன்னு கெஞ்சறான்.என் உடம்பு உன் காலுல, என் மானம் உங் கையிலன்னு அழுகறான். பெரிய மனுசன் கால்ல விழும்போது அந்த " சாமி " க்கு எதிர் வார்த்த சொல்ல வரல.
ஒத்துக்கிறாரு.
கண்ணாலம் முடிஞ்சாலும் அவ புத்தி மாறல.அது நாய் புத்தி.மலைச்சாமி ஊருக்கு பொண்டாட்டியா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள அவள ஏத்துக்கல.
ஆனாலும் அவுளுக்கு பொறந்த மகள தன் மக மாதிரிதான் பாசம் காட்டி வளர்க்கிறாரு.

மலைச்சாமிக்கு பாதி நிம்மதி கிடைக்கறது வீட்டுல இருக்குற குயிலு, காட்டுல பாடுற பாட்டு, வயலு, வரப்புதான்.இப்புடியே பொழப்பும் ஓடிட்டிருக்கு.

மரியாதைன்னா என்னா?அது கடுகளவு கூட தெரியாது அவுளுக்கு.
ஒரு நா, எச்சப் பாத்திரத்த கழுவறா.கழுவுற எச்சத் தண்ணிய வீசறா.அது மலைச்சாமி மேல வந்து விழுகுது.அதுக்காக அவ வருத்தமா பட்டா? கேக்குறா கேள்வி. எச்சத் தண்ணி வீசறது தெரியாம குறுக்கு வர்றதுக்கு அறிவா கெட்டுப் போச்சு? மத்த புருஷனா இருந்தா அப்பவே அவ கன்னம் வீங்கியிருக்குமே! ஆனா இது ஊருக்கே சாமியாச்சே.
அந்த ஈரத்தோட வீதில இறங்கி நடந்து வர்றாரு.எதுக்கால வர்றா ஒருத்தி.ஈரம் பாத்து, என்னான்னு கேக்குறா?
மலைச்சாமி சொல்றாரு.
" உங்க்கக்கா மஞ்சத்தண்ணி விளையாண்டுட்டா புள்ள ".
**
மலைச்சாமிக்குள் இருக்கும் நகைச்சுவை அங்கே தலையெடுக்கிறது.ஒரு சோகம் அங்கே சந்தோசமாய் மாறியது. அந்தப்பேச்சு மலைச்சாமியை பார்த்து வியக்க வைக்கிறது.
**

வெள்ள வேட்டி.சாதா சட்ட.துண்டெடுத்து ஒரு உருமா கட்டு.கையில அருவா. வீட்டுக்குள்ள பாக்குற பெரிசு வேற.வீதில இறங்கிட்டா அது வேற.பெரிசுக்கு வீடு கொடுக்காத சுகத்த வெட்ட வெளி கொடுக்குது.இதுக கூட உறவுகதானே சந்தோசப்பட்டுக்கற மனசு அது.மலைச்சாமி சாந்தமான மனுசந்தான்.அவுரு கிட்டயும் பெரிய வீரம் ஓளிஞ்சுகிட்டுதா இருக்கு.அந்த வீரத்த அவுரு புடிச்சிருக்கிற அந்த அருவாவ கேட்டா கூட சொல்லும்.அருவா கைப்புடிய புடிச்சு அத பின்ன மடக்கின மாதிரி நடப்பாரு பாருங்க அதுல தெரியும் அவுரு கெத்து.
மனுசன் செருப்பு போட்டு பாத்திருக்காது அந்த ஊரு.வெறுங்காலு தான். அதுக்கு கூட ஒரு காரணம் இருக்கு.எந்த காலுல விழுந்து மாமன் தன் பொண்ண கட்டிக்கோன்னு கெஞ்சுனானோ அந்த கால்ல போட்ட செருப்பா பொஞ்சாதிய நினச்சதாலதான், அந்த சாமி செருப்பே போடர்றதில்ல.

குதிரையில் ஏறி அய்யனார் போற மாதிரி நடந்து போறாரு மனுசன்.
நடந்து போற மனுசன் மேல பூமில இருக்கற முள்ளுக்கு என்ன கோபமோ அவரு கால முள்ளு தச்சுருச்சு.
முள்ளு தச்ச இடம் செங்கோடன் வீட்டு வாசல்ல.செங்கோடன் அந்த ஊருக்கு செருப்பு தைக்கிறவன்.
"டேய் செங்கோடா "
பெருசு கூப்பிடுது.
தூக்கத்துல கேட்டாலும் இந்த குரலுக்கு உருவம் ஒண்ணுதான்.அது செங்கோடன் மனசுல பதிஞ்சது.
"அய்யா " .இது செங்கோடன்.
" கால்ல முள்ளு தச்சுருச்சு ."
கிடுக்கியோடு முள்ளெடுக்கறான் செங்கோடன்.
பெருசு பேச்சு பெரும்பாலும் ஒத்த பேச்சுதான்.ஆனா அது பெரும்பேச்சு.
அப்பிடித்தான் அது அப்ப சொல்லுது.
"உன் வீட்டுகிட்ட தான் என் கால்ல முள்ளு தைக்கனுமா"
அவன் கேக்குறான்
"ஊருக்கே செருப்பு தக்கிறேன்.உங்க கால்லுக்கு ஒரு செருப்பு தச்சு போட முடியலயே "
பெருசு போகுது ஒண்ணும்சொல்லாம.
கட்டுன பொஞ்சாதிகளுக்கு கூட தெரியாத சில சங்கதி அந்த ஊரு வண்ணானுக்கும், நாசுவனுக்கும் தெரியும்பாங்க.செங்கோடன் கூட அத போலத் தானே.அவனுக்குத் தெரியுமே பெருசோட கத.
***

ஆண்டவன் படச்சானா இல்ல, அதாவே அமஞ்சதா இயற்கை.அது ஆருக்கும் தெரியாது.
பாரப்பட்டி கிராமந்தான் மலைச்சாமியோட ஊரு.மலைச்சாமியோட சந்தோசங்கள்ள ஒண்ணு தான் இசப் பாட்டு படிக்கிறது.வித போடறது, நாத்து நடறது, களை எடுக்கறதுன்னு அது பாட்டுக்கு அந்த வேலைக நடக்கும் .கூடவே பாட்டுப் படிக்கறதும் நடக்கும்.விவசாயம் வயத்துக்குன்னா பாட்டு மனசுக்கு.இது எல்லா ஊர்லயும் உண்டுதான்.

பெருசும் சில சமயம் குசும்பு வேலையெல்லாம் செய்யறதுண்டு.
"ஆம்பளக்கு ஒரு வேல
பொம்பளக்கு நூறு வேல"
அப்படிம்பாங்க.
குடும்பத்துல என்ன சண்டயோ, வயல் வேலக்கு வந்தவங்க, சில சமயம் பாடாம தேமேன்னு வேல செய்வாங்க.அதப் பாக்கற பெரிசுக்கு, இவிகள எப்படியாச்சு பாட வச்சாகணும்ற காரியமா தொட்டில்ல போட்ட குழந்தய கிள்ளி விட்டிருவாரு.அழுக சத்தம் கேட்டு வர்ற ஆத்தா ஆராராரோ பாடி தொட்டில ஆட்டுவா.
இப்ப எப்படி பாட்டு வந்துச்சுன்னு வெளிய வரும் பெரிசு.
***

பூமிய நம்பி வாழறவனுக்கு மழ தான் சாமி.அது ஒண்ணுக்கு ஊத்தற மாதிரி ஊத்துனாலும் ஏதோ ஒரு சாண்
வயிறுனாச்சும் நெறையும். மழைங்கிறதே மாயமாகிப் போச்சு, அப்பிடிங்கிற நெலம வந்தா ஊர் சனம் என்ன செய்யும்? பஞ்சந்தா தல விரிச்சு ஆடயில பாவி மக்க எங்கிட்டு போவாங்க? கூலி வேல தான் நாதின்னு இருக்கிற கூட்டம் கூழ கும்பிடு போட்டுகிட்டு பஞ்சம் தேடி மறு தேசம் போவாங்க.
கஞ்சியோ, கூழோ ஏதோ ஒண்ணு கிடச்சாத்தானே வயிறு கேக்கும்.அதுக்கு கூட வக்கில்லாம குடல எத்தன நா(ள்) சாகடிக்கிறது.
இந்த நிலமையில தான் பாரபட்டிக்கு வராங்க குயிலும், அவங்கப்பனும்.

அவுக எந்த சாமிய நெனச்சு அந்த பூமிக்கு வந்தாங்களோ தெரியாது, ஆனாஅவுகளமுதலா
பாக்குறதுதென்னமோ மலைச்சாமிதான்.
வந்தவங்க வாழ்ந்த ஊரு பேரு "அரைக்படித்தனம் பட்டி ".ஒரு வயசாள ஆளு, ஒரு கொமரிபுள்ள, அவங்களுக்கு ஒத்தாசையா ஒருத்தன்.வயலுக்கு அரணா போட்ட வேலிப்படல மிதிச்சுகிட்டு உள்ள வராங்க.பெரிசு பாத்துட்டு சத்தம் போடுது.
"எவண்டாவன், வேலிய மிதிச்சுகிட்டுஉள்ள வர்றது "
வயசான ஆளு சொல்றான்,
" அஞ்சாதிங்க சாமி , பஞ்சம் பொழைக்க வந்திருக்கோம் "னு.
பெரிசு கெக்குது,
" இங்கயே பஞ்சம் அவுத்துப் போட்டு அம்மணத்தோட ஆடுது.நீங்க வேற பஞ்சம் பொழைக்க வந்துட்டீங்களா "
பாக்கவும் பாவமா இருக்குது.இல்லாதவங்கள விரட்டியடிக்கவும் மனசில்ல.ஒரு மனசா அவங்கள ஒரு ஓரமா குடிசையப் போட்டு தங்கிக்கவும் சொல்லுது பெரிசு.
அந்த "மழைச்சாமி "கை விட்டாலும், இந்த "மலைச்சாமி "யால
பஞ்சம் பொழைக்க வந்தவங்களுக்கு ஒரு வழி பொறக்குது.

***

வந்தவங்கள்ள ஒரு கொமரி இருக்கா ல்ல.அவ பேரு குயிலு.அவளுக்கு பேருக்கேத்த குரலுதா.மனசுல ஒண்ணும் வச்சிக்கத் தெரியாது.ஆளு கருப்பு.மனசு வெள்ள.
அம்பா வந்தாலும், வம்பா வந்தாலும், வர்ற வார்த்தைக்கு சளைக்கமா பட்டுன்னு சொல்லிருவா பதில.
களங்கமில்லாத அவ பேச்சு பழக்கம் எல்லாம் மலைச்சாமிக்கு புடிச்சுப்போச்சு.
***
அவிக சிநேகிதம் அப்பிடியே வளந்துட்டு வருது.
பெருச அப்பப்போ சீண்டி விட்டு விளையாட்டு பண்றது அவளுக்கு பழக்கமாவும் போச்சு.
அப்பிடித்தான் ஒரு நா,
பேச்சு வாக்குல பெரிச கிழவன்னுட்டுர்றா.பெருசுக்கு பொத்துகிச்சே கோபம். என்னய்யா கிழவங்கற.உன்ன மாதிரி கொமரிக என் கையில ஊஞ்ச கட்டி ஆடலாம்னு தன் வீரத்த சலிக்க,
அதுக்கு அவ
பெரிய பாறாங்கல்ல தூக்க முடியுமா உன்னாலன்னு ஒரு கேள்விய கேட்டுப்புட்டா.கேட்டுப்புட்டு ஓடிப்புட்டா.வீரத்தப்பத்தி பொம்பள பழிச்சா பொட்டையனுக்கும் ரோஷம் வருமே.பெருசுக்கு சொல்லவா வேணும்.அவ கேட்டதுல நிலை கொள்ளல.வேட்டிய மடிச்சுக் கட்டிட்டு கல்லதூக்கிப் பார்க்கிறாரு..தூக்கறாரு. தூக்கறாரு..ம்கூம்.அரையடி தூக்குறதுக்குள்ள மூச்சு வாங்குது.இது சரிப்பட்டு வராதுன்னு அப்ப நடய கட்டுறாரு.இத அவளும் தூரத்திலிருந்து பாத்துகிட்டுதா இருக்கா.
பெருசு அந்த கல்லு வழியா தா அப்பப்போ வரும்.போகும்.கல்ல பாக்கையில அவ கேள்விதா மனசுல குடயும்.அப்பப்போ தூக்கிப் பாக்கும்.கொஞ்சம் தூக்குறதும் பின்ன வக்கிறதும் பல நா பொழப்பாப் போச்சு.

இது ஒரு சாதாரண விஷயந்தானே? பெரிசுக்கு ஏன் வயசுக்கு ஒப்பாத காரியம்.
என்ன ஆச்சு பெரிசுக்கு?
******

பெரிசுக்கு என்ன ஆச்சு?

அந்த வருஷம் நல்ல வெள்ளாம.மழை மண்ணுன்னு விளச்சலுக்கு பல விஷயம் இருந்தாலும் மனுஷனோட உழைப்பு நல்ல படியா இருந்தாத்தேன் அதிக போகம் பாக்க முடியும்.அந்த விளச்சலுக்கு காரணமானவங்க கூலிக்காரங்க.அவங்க உழைப்புக்கு
மரியாத செய்ய வேண்டி,
விளஞ்ச நெல்லுல கொஞ்சத்த கூலிக்கு மேல நீங்க அளந்து வச்சிக்கங்கன்னு மலச்சாமி சொல்ல, கூலிக்காரங்களும் சந்தோசமா நெல்ல பங்கு போட்டுக்கிட்டு இருக்காக.அங்க வரா பொன்னாத்தா .என்னன்னு கேட்டு விஷயம் தெரிஞ்சுக்கறா.
அந்தாளு எனக்கு வாக்கப்பட்டு வந்ததே நாலு வெள்ளாட்டோட மட்டுந்தா, வேட்டி கட்டி இருக்கிறதே எங்கப்பன் காசுலதே, யாரோட காச யாரு தூக்கி கொடுக்கிறதுங்கற அர்த்தத்துல கேவலப்படுத்துறா.
ஊருக்கே நாட்டாம, பெரியமனுஷன்னு பாக்காம கூலிக்காரங்க அம்புட்டு பேரு முன்னாலே அவ ஏசியத யாரால தாங்கிக்க முடியும்? கோபம் தள்ளுது.ரெண்டு சாத்து சாத்தலாம்னு பொங்குது மனசு.மாமனோட கெஞ்சல் மனசுல வந்து நிக்குது.ச்சீ போ ன்னு மன பாரத்தோட போறாரு.
வேற ஏதாவது கஷ்டம்னா நாலு பேருகிட்ட பேசி ஆறுதல் தேடிக்கலாம். இவ கேவலத்த யாரு கிட்ட சொல்ல முடியும்? அது குடும்ப கௌரவத்துக்கே கேவலமாகிப் போயிடுமே. இப்படியே தா அந்த மனுஷனுக்கு பாறாங்கல்லு மாதிரி மன பாரம் அசயாம தங்கிட்டே இருக்கு.
மனசுல இருக்கற பாரத்த அப்பப்போ பாட்டுப்பாடி ஆறுதல் படுத்திக்குவாரு.
அவுரு தன் சோகத்த தாங்க தாய்மடி ஏதாவது கிடைக்குமாங்குற அர்த்தத்துல பாடறாரு.அந்தக் கொடியும் படர ஏதாவது தேரு கிடைக்குமான்னு அலையுது.
"ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே
கனவுலகம் தாங்காதே "ன்னு
அப்படின்னு அப்பத்தேன் ஒரு குரலு காத்துல வருது.
தண்ணியில்லாம தவிச்ச செடிக்கு மழத்தூறலா தண்ணி கிடச்சா எப்படி இருக்கும்.சோகமான மனசு கொஞ்சம் சொக்குது.
"உள்ள அழுகறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் "ன்னு
அடுத்த அடி போட,
"இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
உன்ன மீறவும் ஊருக்குள்
ஆளில்ல "ல்னு
ஞாயத்த, பதில் குரல் சொல்ல,
இது மாதிரியான ஆறுதலத்தான இத்தன நாளா தேடுனேன் ?ன்னு
ஆச்சரியமும் சந்தோசமுமா சுத்தி முத்தி ஆள தேடி தேடி யாரையும் காணோமேன்னு
"பூங்குயில் யாரது "ன்னு பெருசு
கேள்வி கேக்குறாப்புல ' பாடுது.
இனியும் இந்த மனுசனுக்கு தன் முகத்த காட்டாம இருக்க முடியாதுன்னு சொல்லி ஒருத்தி வந்து நிக்குறா.
பிரமிச்சு நிக்குது பெருசு.
அது
குயிலு.
உனக்குள்ளயா இவ்வளவு சங்கதி ன்னு விழி விரிஞ்சு பாக்குறாரு மனுசன்.
கவலய எல்லாம் காத்துல பறக்க விடு, மன பாரத்த தூக்கி எறிங்கற மாதிரி அவ பேச்சு பெருசுக்கு ஆச்சர்யமாச்சு.
அவள எட போட்டது தப்பாப் போச்சேங்கறது அவரு முகத்தில தெரியுது.
"பேச்சு விவரமாத்தான் இருக்கு, பெரிய அஞ்ஞானமெல்லாம் பேசுறியே " அப்படிங்குது பெரிசு.
"அப்படி பேசுலேன்னா அல்லல குத்தி விளயாடும் இந்தக் கால இளவட்டம்"அப்படிங்கறா குயிலு.
இளவட்டம்ங்கற வார்த்த பெரிசுக்கு ஆர்வமாச்சு.
உடனே,
"இளவட்டம்ங்கற மரியாதய எனக்குத் தர்றியா "ன்னு கேட்கறாரு.
அவளுக்கு இது கொஞ்சம் ஆச்சர்யத்த கொடுத்திருக்கும் போல.
"விட்டா கட்டிக்கிறதுக்கு தாலியோட வந்துருவீங்க போலிருக்கு "ன்னு அவ கேட்க,
"வந்தா என்ன? "ன்னு இவரு கேட்க
அப்பத்தா அவ,
ஆச கிழவனுக்குன்னு ஒரு வார்த்தய விட்டுப்புட்டா.

அறுபது வயசு மனுசந்தேன்.அது அந்த வயசுக்கு அதுக்கேத்த மாதிரி வாழலியே.மனசுல அதுக்கு என்ன வெல்லாம் ஆச இருந்திருக்கும். அது நொறுங்கி பல வருஷம் ஆச்சே.நாளாக நாளாக அந்த மன பாரம் நீங்க அதுவும் ஒரு வடிகால் தேடுமில்லையா.அந்த நேரத்தில அவ குணமும் பேச்சும் கொஞ்சம் சந்தோசம்னு நினக்கையிலே பாவி புள்ள கிழவன்னுட்டாளேங்கற கோபம் உடனே என்னையா கிழவங்கற, உன் குடிசய எல்லாம் காலிபண்ணி புடுவேன்னு தன் அதிகாரத்த காட்டுது.அதிகாரத்தோட பலவீனம் இந்த மாதிரி சமயங்களில்தா தெரிஞ்சுக்க முடியுது.
அந்த வார்த்தா அவள குத்திருது.
அதிகாரத்த சாய்க்கனும்னா பலமான வார்த்தைய சொல்லியாகனும்.அதனால,
"நீ குமரன்னு நான் ஒத்துக்கனும்னா இந்தக்கல்ல தூக்குய்யா பாக்கலாம்.அப்பிடி நீ தூக்கிப்பிட்டின்னா உன்ன குமரன்னா ஒத்துக்கிடர்றேன் "னு சவால் விடுறா.
அதுக்கு பெரிசு, "நீ குமரன்னு ஒத்துகிட்டா பத்தாது. என்ன கட்டிக்கிடறயா, தூக்கறேன் "ன்னு ஒரு கொக்கிய வீசுது.
அதுல எல்லாமே அடங்கிப் போயிருமேங்கற சாமார்த்தியந்தான் அந்தக் கேள்வி.
தனக்குத்தா ஜெயிப்புன்னு நினச்சுத்தா மனுசங்க பந்தயத்தில இறங்கறாங்க.அதுக்கு அவளும் விலக்கல்ல. ஒத்துக்கிடறா, அப்ப விட்டாப் போதும்னு ஒரு சமாதானத்துக்கு.
இந்தக் கூத்துதான் பெரிசு அந்த பாறய தூக்கிப் பாக்றதும் , முடியாம வக்கிறதுக்கும் உண்டான காரணம்.

****
ஒரு கிராமத்தோட வணிகம் அந்த ஊரு சந்தைய சார்ந்தது. எல்லாமே அங்க விக்கறதும் வாங்கறதும் நடக்கும்.பஞ்சம் பொழக்க வந்தாச்சு அந்த ஊருக்கு.அப்பிடியே இருந்தா பொழப்பு எப்பிடி நடக்கும்? அதான் ஒரு பரிசல அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓட்டி வர்ற வருமானத்துல பொழப்பு நடத்துறா குயிலு.அந்த வருமானம் பத்த மாட்டேங்குது.அதனால இன்னொரு பரிசல வாங்கி ஓட்டுனா ஓரளவுக்கு சமாளிச்சரலாமேன்னுயோசன வருது.இன்னொரு பரிசலுக்கு என்ன வழி? இருக்கிற ரெண்டு ஆட்ட வித்து பரிசல் வாங்கிக்கலாம்னு சந்தக்கு ஆடுகள கொண்டாறா.ஆனா யாபாரத்துல அவ்வளவு நெளிவு சுளிவு அவளுக்கு தெரியல.பேச்சுக்கேத்த வினயம் இல்ல.மலைச்சாமியும்அந்த சந்தைக்கு வராரு.இவளயும் பாக்குறாரு.என்ன விஷயம்னு கேட்டும் தெரிஞ்சுக்கிடறாரு.அவளோட சாமார்த்தியம் யாபாரத்துக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு போச்சு பெருசுக்கு.சரி, விவரம் தெரியாத பொண்ணு, நாமளே வித்துக் கொடுத்துடலாம்னு விவரமா பேசி ஆட்டுகள நல்ல விலைக்கு வித்துக் கொடுக்கார் மனுஷன்.அவளுக்கு ரொம்ப சந்தோசம். காச வாங்கிட்டு
சந்தைய சுத்தி வரா.அப்பத்தான் ஒரு போட்டோ கடய பாக்குறா குயிலு.போட்டோ எடுக்கணும்னு ஆச வந்துருது அவளுக்கு.போட்டோ கடக்காரன் எச்சா பணம் கேக்குறான்னு சண்ட போட்டுகிட்டு நிக்கிறா குயிலு.இதயும் பாக்குறாரு பெருசு.அங்கயும் ஒரு பஞ்சாயத்து.அவ கொடுக்க நினச்ச காசு போக மிச்ச காச தான் கொடுக்கிறதா சொல்ல பிரச்சன முடிஞ்சது.
போட்டோவுக்கு நிக்கிறா குயிலு. திடீர்னு பெரிசையும் கூப்பிட்டு தன் பக்கம் நிக்கச் சொல்லிடறா.பெருசுக்கு கொஞ்சம் சங்கடம் தா(ன்) .வெகுளியா இருக்கா, வலுவுக்கு கூப்பிடாறாளேன்னு போட்டோ எடுத்துக்கிடறாரு.அந்தக் கத அப்ப முடிஞ்சிருச்சு.
***
நம்ம குடும்பம் நல்லா இருக்கோ இல்லியோ அடுத்தவன் வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிறதலதான் சில பேருக்கு பொழப்பே.அடுத்தவன் பண்ற நல்லது கண்ணுக்குத் தெரியுதோ இல்லையோ அவன் எப்ப இடறுவான்னு தெரிஞ்சுக்கிறதலதா இந்த மாதிரி மனுஷங்க கண் கொத்தி பாம்பா இருப்பானுங்க.அப்பிடி ஒருத்தன் இருக்கான் பாரபட்டில.அவன் உண்மையான தொழிலே கயிறு திரிக்கிறதேன்.
மலைச்சாமியும் குயிலும் சேந்து போட்டோஎடுத்துக்கிட்டத பாத்து தொலச்சிடறான் .சமயம் பாத்து கிடக்கான்.

அன்னக்கி பொன்னாத்தா தனியா இருக்கா.அதான் சரியான நேரமுன்னு இல்லாத விஷயத்த பொல்லாத விஷயமா ஊதி ஊதி பேசி குயிலுக்கும் மலைச்சாமிக்கும் உறவு இருக்கிறதா சொல்லி சாட்சிக்கு அந்த போட்டோவைக் காட்டி வில்லங்கத்த
ஆரம்பிச்சு வச்சிடறான்.
புருஷன மதிக்காம பொன்னாத்தா குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தாலும் புருஷன ராமனா தான் நினச்சிக்கிட்டு இருக்கா அவ.ஆனா அந்தப் போட்டோ தான் அவ மனச கலைச்சிருச்சு.
எடுக்கிறா சீமாத்த.
விளாசறா குயில.
தெரு சனமே பேச்சத்துப் போயிடுது.
ஊருக்குள்ள வேற பேச்சு இல்ல.
இத ஒண்ணத் தவிர.

இது வரைக்கும் குயில மனசுல என்ன இருந்துச்சோ. தெரியல.பொன்னாத்தா கேட்டாளே ஒரு கேள்வி.
"ஏன்டி என் புருஷன வச்சிருக்கியா? "ன்னு.அது அவள காயப்படுத்துன மாதிரி தெரியலே.
ஒத்தயில இருக்கா அவ.விசனப்பட்ட மனசு , உண்மையா இல்லாதிருந்தா பொங்கியழும்.புலம்பித் தள்ளும்.அவளோ மவுனமா இருக்கா.பொன்னாத்தா சொன்னத நினச்சு பூமாரி பொழியறதா நினச்சுக்கறா.
இது இப்ப அவ நிலம.

ரெண்டு நா வெளியூரு போயிட்டு அப்ப தா வருது பெருசு.குயிலு வீட்டுக்கு போகுது.அவிக உறவு அவங்களுக்கே தெரியாத நிலயில அது கொச்சையா ஊரு பூரா காத்துல பறந்த விஷயம் பெருசுக்கு தெரியல போலேன்னு குயிலும் ஒண்ணுஞ் சொல்லாம வீட்டுக்கு போன்னு சொல்லறா.

அப்புறமென்ன?

பஞ்சாயத்து.
பெரிச எதுத்து எவனும் பேசுனதில்ல.அந்தமாதிரி எந்த எடக்கு மடக்கும் பெரிசும் செஞ்சதில்ல.அது உண்மையோ பொய்யோ, இது தான் சமயம்னு அவனவன் பங்குக்கு கேள்வி கேட்கறாங்க.
உங்களுக்கும் அவளுக்கும் தொடுப்புன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே அது உண்மையான்னு ஒருத்தன் கடைசி வார்த்தய துப்ப முடியல அதுக்குள்ள தலயக் கவுத்துக்கிட்டான்.அதுக்கு பெரிசு பாத்த பார்வைதான் காரணம்.
கிளி அப்பவே சொல்லிச் "சு "ன்னு ஒருத்தன் சொல்லி முடிக்கல.அவனும் பெரிசோட பார்வையில குனிஞ்சிட்டான்.இன்னொருத்தன்,
ஊருக்கே தலக்கட்டு குடும்பம், அந்த வீட்டுக்குள்ளயே குழப்பம் வந்துடுச்சேன்னு முடிக்க முடியல.
...வந்தவன் போனவன் எல்லாம் கேள்வி கேட்கறான்.என்னப் பத்தி கேள்வி கேட்க எவனுக்கு யோக்யதை இருக்குது ஊருக்குள்ள? .தான் யாரு தன் தன்மானம் என்னன்னு இன்னும் கூட புரிஞ்சுக்காத பாவி மக்களா இருக்கானுகளே? இப்படி அதும் மனசுக்குள்ள ஓடிட்டிருக்கோ என்னமோ? யாருக்குதெரியும்?
கடசியா ஊரு சனத்த பாக்குது பெரிசு. எல்லாரும் பேசியாச்சில்லங்கற மாதிரி ஒரு பார்வை..இப்ப வாயத் தொறக்குது.

"எல்லாரும் கேட்டுக்கங்க.
ஆமா!
அவள நான் வச்சிருக்கேன் ".

அல அடிச்சி ஓஞ்சாச்சி
புயல் வீசி அடங்கிருச்சி.

இப்ப கூட்டம் கலைஞ்சிருச்சு.குயிலோட நினைப்பா ஒத்தையிலே அந்த மகராசன்.
***
ஆயிரந்தா இருந்தாலும் பொன்னாத்தா விட்டுறுவாளா?
ஊர்க்காரங்கள கூப்பிட்டு விருந்து வக்கிறா.கிடா வெட்டி.கூடவே சாராயமும்.விஷயம் இதுக்குத்தான்.பரிசல்காரிய ஊரை விட்டு தொரத்தனும்.அதுக்குத்தான் தடபுடலா பொன்னாத்தா வீட்டுலயே விருந்துக்கு ஏற்பாடுகள் நடக்குது.கறிச்சோறு திங்கவே ஒரு கூட்டம் அலயும்.அந்தக் கூட்டம்தா பொன்னாத்தா வீட்டுல உட்காந்திருக்கு.
அங்கன வராரு பெருசு.
பாக்காரு.வீச்சரிவாவ கையில் எடுத்துக்கிறாரு.அப்ப சொல்றாரு.
"உங்க அத்தன பேருக்கும் சொல்றேன். வீடு பூரா வெட்டரிவாவும், வேல்கம்பும் வச்சிருக்கேன்.நீங்கஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா எடுத்துகிட்டு வாங்க.எவனுக்காவது தைரியமிருந்தா அவள தொட்டுப் பாருங்கடா.சாச்சுப்புடறேன் சாச்சு.
நா இப்ப ஆத்தங்கரைக்கிதா போறேன்."


குயில தேடி போகுது பெரிசு.குயில அங்க காணோம்.ஊரே பரபரத்து ஓடுது ஆத்தங்கரைக்கி.
வெறிச்சு நின்னுகிட்டு இருக்கா குயிலு.அவளச் சுத்தி நாலு போலீசும், நல்லா இருந்த ஊரும்.தரயில ஒரு பொணம்.பெரிசுக்கு ஒண்ணும் புரிபடல.யாருக்கும் எதும் தெரியல.கொல செஞ்ச குத்தத்துக்காக போலீசோட போறா குயிலு.
***
ஜெயில் :

நீ ஏன் இப்படிஞ் செஞ்ச. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தானே வக்கீலு வெக்க முடியும்.
-இது மலைச்சாமி.

நீ வக்கீலு வெக்க மாட்டேன்னு சொல்லு,உண்மையச் சொல்லுறேன்.
-இது குயிலு.

மலைச்சாமிக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல.காரணம் இல்லாம அவளும் இப்படி பேச மாட்டாளேன்னும் யோசிக்காம இல்ல. வேற வழி? சரின்னு ஒப்புக்கிறாரு.
இப்ப சொல்றா குயிலு...

எந்த அசிங்கத்த மறச்சு குல கவுரவத்துக்காக மானத்த பெரிசா நினச்சு எல்லாஅவமானங்களயும் ஏத்துகிட்டு அந்த மனுஷன் வாழ்ந்துட்டு வந்தாரோ, அந்த
கோட்டைய சாய்க்கத்தான் அவன் வந்தான்.இருபது வருஷத்துக்கு முந்தி பொன்னாத்தா சீரழிஞ்சு போயிட்டா ஒருத்தனால மாமன் கால்ல விழுந்து கெஞ்சி மானத்தக் காப்பாத்துடா மருமகனேன்னு சொன்னாரே, அதுக்காக பொத்தி பொத்தி மறச்ச அந்த அசிங்கமான உண்மய உடைக்கத்தான் அவன் வந்தான்.ஏன்னா அந்த அசிங்கத்துக்கு காரணமே அவந்தானே.வந்தவன ஊருக்குள்ள விட்டா என்னாகும்? பல நா கோட்ட ஒரு நா இடில சாஞ்சிருமே? மலச்சாமி வேதன குயிலுக்கு தெரியுமே. மலச்சாமி மேல அவ வச்சிருக்கிறது பாசமா? மரியாதையா? கஞ்சிக்கு வழி செஞ்ச வள்ளலா? இது அதுக்கு மேலே தானே.அது மனசொடிஞ்சா இவளாலே தாங்க முடியாதே?
அதான்...
பரிசல் ஓட்டிட்டு வந்தவகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடறான்.இவன ஊருக்குள்ள விட்டாத்தானே அத்தினி பிரச்சினையும்.துடுப்பாலேயே அடிச்சுக் கொன்னுட்டேன்னு சொல்றா.

கேட்டா கொடுக்குமுன்னுதான் சாமிய வேண்டிக்கிறோம்.கேட்காமயே நம்மள காப்பாத்துன சாமியா மலைச்சாமிக்கு தெரியறா குயிலு
அதயே அவகிட்டவும் சொல்றாரு.
இப்பத்தான் அவ கண்ணுல சந்தோசம் தெரியுது.இப்ப கேட்கிறா.
"ஏய்யா என்ன நீ நெனக்கல? உன் மனசுல எனக்கு இடமில்லையா?" உண்மயச் சொல்லு.
குயிலு!
நீ மட்டும் தான் என் மனசுல இருக்கே!
நீ எத்தினி வருஷம் கழிச்சு வந்தாலும் உனக்காக காத்துகிட்டு இருப்பேன்னு வாக்கு கொடுக்கார்.

***

பல வருஷ தண்டன குயிலுக்கு.அவ வராம தன் உசிரு போகாதுன்னு
அவ இருந்த குடிசையிலேயே தங்கிக்காரு பெருசு.அவ எப்ப வருவான்னு ஆத்தங்கரையையே பாத்து பாத்து அவரோட வாழ்க்கையும் பல வருஷம் ஓடிருது.நினச்சு நினச்சு விசனப்பட்டே வருஷங்களும் கரையுது.மனுஷன் படுத்த படுக்கையா கிடக்கார்.இப்பவோ அப்பவோன்னு உசிரும் இழுத்துகிட்டுஇருக்கு.ஊர் சனமும் இதுக்கு மேல தாங்காதுன்னு குயிலுக்கு சொல்லி அனுப்புறாங்க.
***
பெரிசு படுத்துருக்கு.மூச்சு மட்டும் வந்தும் போயிகிட்டும் இருக்குது.
குடிசைக்குள்ள காலடி வக்கிறா குயிலு.அவ மூச்சுக்காத்தும் வாசனையும் அந்த உடம்புக்கு தெரியாதாங்கற மாதிரி சின்ன உதறல் பெரிசு கிட்ட இருந்து.
"மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவாபெண்ணே "
பெரிசோட நினப்பு குயிலுக்கு தெரியாதா .
அவ கண்ணீரு பெரிச அசைக்குது.பெரிசுக்கு லேசா முழிப்பு வருது.அவளப் பாத்த சந்தோசம் கண்ணுல தெரியுது.இதுக்குத்தானே இத்தினி வருஷம் காத்திருந்தேன்னு சந்தோசமா கண்ண மூடுது.

கொள்ளி வச்சு முடிஞ்சதும் ரயிலேறிப் போகிற குயிலு உடம்புக்குள்ள மட்டும் உசுறு தங்குமா?
குயில் பாட்டு நின்னுடுச்சு.

*********************************************
ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல் வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறது.
-வைரமுத்து.

முதல் மரியாதை..
முற்றும்.

adiram
27th February 2017, 05:38 PM
சமீபத்தில் பாக்யராஜின் புதல்வர் சாந்தனுவின் பட விழா (அல்லது பார்த்திபனின் படவிழா) வில் பேசிய எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து கருத்தை அள்ளி அள்ளி வீசும் பகுத்தறிவு இளம் சிங்கம் கரு.பழனியப்பனின் அற்புதமான கதை-வசனம்.அடிப்படை சரித்திர அறிவு,பொது அறிவு,தன் துறை சம்பத்த பட்ட விஷயங்களிலேயும் லாஜிக் இடறல்.ஆனாலும் யாருடைய இமேஜையோ காக்கும் அவசர பொய்.

ஒரு ஏழை தந்தைக்கு ஒரு மகன் மலைக்கள்ளன் பார்க்கும் போது பிறந்ததால் மலைக்கள்ளன் என்று பெயரிட்டாராம்.(சுமார் 54,55 என்றே வைப்போம்.கிராமத்தில் ஒரு வருடம் கழித்தே பார்த்திருக்க வாய்ப்பு) இவர் இவர் தலைவராக எண்ணி யார் பெயரை வைத்தாரோ அவரை பார்த்து மெடிக்கல் சீட் கேட்க வந்தாராம். தமிழகத்தில் சீட் பஞ்சம் ஆதலால் அப்போது சி.எம். ஆக இருந்த n .t .r அவர்களிடம் சொல்லி மலைக்கள்ளனை ஆந்திராவில் சேர்க்க வைத்தாராம் .இந்த தலைவர் அமெரிக்காவில் நலிவுற்று சிகிச்சை பெரும் போது சிகிச்சை கொடுக்க வந்தவரு அதே மலைக்கள்ளனாம்.

மலைக்கள்ளன் பிறந்தது- 1955.

மருத்துவ படிப்பு சீட் தேடியது-1983(என்.டி..ஆர் ஆந்திர முதல்வரான வருடம்)

மலைக்கள்ளன் அமேரிக்காவில் தன் தலைவருக்கு மருத்துவம் பார்த்தது -1987 (அவருக்கு சீட் வாங்கி கொடுத்தவர் மறைந்தது.)

சராசரி மாணவர்கள் மருத்துவ படிப்பு சேரும் வயது- 18.

சராசரி மாணவர் மருத்துவம் படிக்க ஆகும் வருடம் - m .b .b .s - 5 1/2 வருடங்கள். ஹவுஸ் சர்ஜன் -1 வருடம். Md /ms -2 வருடங்கள்.
உண்மையே உன் விலை என்ன?
கோபால் சார் நன்றாக ஆராய்ந்துள்ளீர்கள்

என்.டி.ஆர். பதவியேற்றது 1983 -ல்.
பதவியேற்ற மறுநாளே மருத்துவ சீட் கொடுத்திருந்தாலும் மலைக்கள்ளன் மருத்துவர் ஆகியிருப்பது 1983 +5 +1 +2 = 1991 -ல்
மருத்துவர் ஆன மறுநாளே அமெரிக்கா போயிருந்தால் கூட 1991 -ல் தான் போயிருக்க முடியும்.
சீட் வாங்கி கொடுத்தவர் அமெரிக்காவில் சிகிக்சை பெற்றது 1984 (அசைக்க முடியாத ஆதாரம் 84 தேர்தல்)

கரு பழனியப்பன் கொஞ்சம் கால்குலேட் பண்ணி கதை விடுதல் நல்லது.

sivaa
28th February 2017, 03:35 AM
நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இன்றைய தொலைக்காட்சி சேனல்களில்,
காலை 11 மணிக்கு சன் லைப்பில்
*நிச்சய தாம்பூலம்'
பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
" ஊரும் உறவும் "...
மாலை 3 மணிக்கு மெகா டிவியில்
" கந்தன் கருணை "
இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்
* உத்தம புத்திரன்
இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
" ஜெனரல் சக்ரவர்த்தி "
இரவு 11:55 மணிக்கு ஜெயா டிவியில்
* ஆலயமணி
அப்போது திரையரங்குகளில்,
இப்போது சின்னத்திரைகளில்
எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் *நடிகர் திலகம* மயமே இப்புவிதனில்

" ஊரும் உறவும் "...
மாலை 3 மணிக்கு மெகா டிவியில்
" கந்தன் கருணை "
இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்
* உத்தம புத்திரன்
இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
" ஜெனரல் சக்ரவர்த்தி "
இரவு 11:55 மணிக்கு ஜெயா டிவியில்
* ஆலயமணி
அப்போது திரையரங்குகளில்,
இப்போது சின்னத்திரைகளில்
எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் *நடிகர் திலகம* மயமே இப்புவிதனில்

See more (https://www.facebook.com/sekar.parasuram/posts/1256596004457287)
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/16999093_1256593114457576_4224320688560900961_n.jp g?oh=afb350d0086dd8da316e2b8526589da5&oe=593AFE05

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16730517_1256592691124285_4430863895031411829_n.jp g?oh=e2bafe8bbab833b69e7a3872237bbf83&oe=593EA8E3

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16999142_1256592824457605_3205011737266899578_n.jp g?oh=45f5ab99d9da93504f19d586c6c50607&oe=596D6FBF


(https://www.facebook.com/photo.php?fbid=1256592691124285&set=pcb.1256596004457287&type=3)







(முகநூல் நண்பர் சேகர் பரசுராம் )

sivaa
28th February 2017, 03:48 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16999031_272270869863544_7457720615139270758_n.jpg ?oh=b690abc208dd8d5a2ff795b654079c94&oe=59379264

(முகநூலில் இருந்து)

sivaa
28th February 2017, 03:49 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16997701_272270716530226_8490688525861246353_n.jpg ?oh=b06bbb554e1584eb7cf8b80c0bc2e0eb&oe=596DB077


(முகநூலில் இருந்து)

sivaa
28th February 2017, 03:50 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/16903596_272083923215572_2788170297956840478_o.jpg ?oh=486bde89f333317cde993d7a913e196b&oe=593B03C3

sivaa
28th February 2017, 03:50 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/16904638_272083826548915_8439324269516466939_o.jpg ?oh=4e04a912e74f4beac354cd3e1cde3cc2&oe=5970F458