PDA

View Full Version : Makkal Thilagam MGR - PART 17



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
16th October 2015, 01:50 AM
http://i59.tinypic.com/14tsho9.jpg

Russelldvt
16th October 2015, 01:51 AM
http://i62.tinypic.com/xg3d5.jpg

Russelldvt
16th October 2015, 01:53 AM
http://i57.tinypic.com/fazb0z.jpg

Russelldvt
16th October 2015, 01:54 AM
http://i57.tinypic.com/2l9pr7m.jpg

Russelldvt
16th October 2015, 01:55 AM
http://i59.tinypic.com/28h33he.jpg

Russelldvt
16th October 2015, 01:56 AM
http://i60.tinypic.com/15o858l.jpg

Russelldvt
16th October 2015, 01:56 AM
http://i62.tinypic.com/nqd6j8.jpg

Russelldvt
16th October 2015, 01:58 AM
http://i60.tinypic.com/o5syyt.jpg

http://i61.tinypic.com/23t5qth.jpg

Russelldvt
16th October 2015, 01:59 AM
http://i57.tinypic.com/2wnod8k.jpg

Russelldvt
16th October 2015, 01:59 AM
http://i61.tinypic.com/nl4lxx.jpg

Russelldvt
16th October 2015, 02:01 AM
http://i59.tinypic.com/op4k5i.jpg

Russelldvt
16th October 2015, 02:02 AM
http://i59.tinypic.com/6iz9xl.jpg

Russelldvt
16th October 2015, 02:02 AM
http://i57.tinypic.com/23uzz0h.jpg

Russelldvt
16th October 2015, 02:03 AM
http://i60.tinypic.com/21jagb8.jpg

Russelldvt
16th October 2015, 02:04 AM
http://i59.tinypic.com/2ewnr6o.jpg

Russelldvt
16th October 2015, 02:05 AM
http://i58.tinypic.com/2j4w07b.jpg

Russelldvt
16th October 2015, 02:05 AM
http://i57.tinypic.com/rkv79t.jpg

Russelldvt
16th October 2015, 02:06 AM
http://i62.tinypic.com/15q6gzp.jpg

Russelldvt
16th October 2015, 02:07 AM
http://i58.tinypic.com/t0qbeg.jpg

Russelldvt
16th October 2015, 02:08 AM
http://i61.tinypic.com/1z738qq.jpg

Russelldvt
16th October 2015, 02:08 AM
http://i58.tinypic.com/s4w21z.jpg

mgrbaskaran
16th October 2015, 02:09 AM
http://i57.tinypic.com/2wnod8k.jpg

நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
ஹா ஹா ஹா ஹா ...
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !

வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச் சுட வெளுத்து
வளரும் ஜாதியடா
வந்தால் தெரியும் சேதியடா


நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா!

சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா


நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !

ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து ...
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா
காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா
எதிர்த்தால் வாலை நறுக்குமடா


நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிச்சவன்டா
நான் செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !

Richardsof
16th October 2015, 05:12 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''power '' என்ன என்பதை நன்கு அறிந்தவர் பேரறிஞர் அண்ணா .
1966 சென்னை விருகம்பாக்கம் திமுக மாநாட்டில் அண்ணா அவர்கள் ''தம்பி உன் முகத்தை காட்டு .எனக்கு வாக்குகள் கிடைக்கும்'' என்று மனம் திறந்து பாராட்டினார் .1967 தேர்தலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் குண்டடி பட்ட பின் எடுத்த அவரின் நிழற்படம் 234 தொகுதிகளிலும் ஒட்டப்பட்டது . வெற்றி கனியும் பறிக்கப்பட்டது .

Richardsof
16th October 2015, 05:21 AM
1969ல் மக்கள் திலகத்தின் அரசியல் சக்தியை உணர்ந்தவர்கள் 1972ல் உணர முடியாமல் போனதில் ஒரு விதத்தில்
எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , தமிழகத்திற்கும் கிடைத்த பெரும் பாக்கியம். உணராமல் போனதின் விளைவு நம் புரட்சி நடிகர் எம்ஜிஆர் ''புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற நிலைக்கு உயர்த் தபட்டார் .தமிழக முதல்வராக தொடர்ந்து 11 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தார் . உலக அரங்கில் இன்றளவும் மக்கள் மனங்களில் தினமும் அவருடைய பெயரை உச்சரிக்கும் பெருமையும் பெற்றார் .''பாரத ரத்னா'' புகழும் , பாரத் பட்டமும் நம் மக்கள் திலகத்திற்கு கிடைத்தாலும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திர சொல் மகிமை இன்னும் நூறாண்டு காலம் மேல் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

Richardsof
16th October 2015, 05:41 AM
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
மக்கள் திலகத்திற்கு இந்த புகழ் வரிகள் சாத்தியமாயிற்று
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்

பாடினார் . பாடியதை நிறைவேற்றி காட்டினார் எம்ஜிஆர் .

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

அன்றும் இன்றும் என்றும் .. ,,,,
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே

orodizli
16th October 2015, 03:08 PM
Excellent mr. Vinoth sir, your writings about makkalthilagam MGR., - Absolutely Fact...

orodizli
16th October 2015, 03:13 PM
Welcome mr. Saravanan, puducherry--- Kindly write about a lot of messages- history about Our Makkalthilagam MGR... Only Emperor of Universe- Cinema Fields...

orodizli
16th October 2015, 03:23 PM
Our Makkalthilagam thread hubbers... kindly register rare photos & documents of ponmanachemmal- regarding a lot... kindly consider dear friends (puratchinadigar followers, wellwishers )

Richardsof
16th October 2015, 06:56 PM
மக்கள் திலகத்தின் ''நீரும் நெருப்பும் '' 45 வது ஆண்டு துவக்கம் . 18.10.2015.

மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரட்டை வேடங்களில் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்த படம் ..மக்கள திலகம் vs மக்கள் திலகம் பிரமாண்டமான சண்டை காட்சி , மக்கள் திலகம் -அசோகன் -மோதும் சண்டை காட்சிகள் மிகவும் அற்புதம். இன்று படம் பார்த்தாலும் புத்தம் புது படம் போல் ரசித்து , மகிழ்ந்து பார்க்கும் படம் நீரும் நெருப்பும் .

Richardsof
16th October 2015, 07:02 PM
மக்கள் திலகத்தின் ;;நீரும்நெருப்பும் '' - 18.10.1971
நீரும் நெருப்பும் படத்தின் மூலப்படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கதாநாயகனாக நடித்த திரு எம் கே ராதா
அவர்களின் ''நீரும் நெருப்பும் '' படத்தின் விமர்சனம் .

பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.

முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.

இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.

‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது.

தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.

திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!

மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.
மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.
பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!

Richardsof
16th October 2015, 07:05 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இரண்டு வேடங்களில் தூள் கிளப்பிய நீரும் நெருப்பும் -மறக்க முடியாத திரைப்படம் .தொழில் நுட்பம் வளராத காலத்தில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் சண்டைகாட்சியில் ஒளிப்பதிவும் , மெல்லிசை மன்னரின் இசையும் பிரமிக்க வைத்தது .
மக்கள் திலகத்தை [மணி வண்ணன் ]அசோகன் சாட்டையால் அடிக்கும் போது கரிகாலன் வலி தாங்காமல் துடி துடித்து சிறிது கொண்டேஅழுகின்ற காட்சியிலும் , மருத்துவர் டி .கே .பகவதியிடம் தனக்கு உண்டானஉணர்சிகளின் தாக்கத்தை எடுத்து கூறி நடிக்கும் காட்சியிலும் , காதல் உணர்வால் ஜெயலலிதாவிடம்கரிகாலன் பேசும் காட்சியிலும் , மரணத்தருவாயில் தன்னுடைய அண்ணன் மணிவண்ணன் அசோகனிடம் மோதும் காட்சியை ரசித்து பார்க்கும் காட்சியிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிரமாதமாக நடித்திருந்தார்.இறுதி காட்சியில் மக்கள் திலகத்தின் முடிவை ரசிகர்கள் ஏற்று கொள்ள வில்லை .ஒரு வேளை முடிவை வேறு மாதிரியாக அமைத்திருந்தால் படம் இன்னொரு ''குடியிருந்த கோயில் '' படமாக மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து .

அட.. நம் மணிவண்ணனை பற்றி சொல்ல மறந்து விட்டேனே

என்ன ஒரு அழகு .கவர்ச்சி .சுறுசுறுப்பு ,...தனது தம்பியை முதன் முதலில் சந்திக்கும் காட்சியில்
என்ன ஒரு தேஜஸ் பார்வை ... இந்த நேரத்தில் வினோத் சார் பதிவிட்ட வீடியோ காட்சிக்கு நன்றி
சிரித்து கொண்டே எதிரிகளிடம் போடும் வாள் சண்டைகள் ...[ஏன் தன்னுடய தம்பி கரிகாலனுடன்
கூட ....] அபாரம் .உலகளவில் சிரித்து கொண்டே சண்டை போட்ட ஜாக்கி சான் அவர்களுக்கு முன்னோடி நம் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது ]

காதல் காட்சிகளில் மக்கள் திலகம் வெளுத்து கட்டியுள்ளார் .
கன்னி ஒருத்தி மடியில் ..பாடல் இனிமை ..இளமை ..புதுமை .
மாலை நேர தென்றல் ..கனவு பாடல் ..கண்ணுக்கு விருந்து .
மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு .
படம் முழுவதும் பிரமாண்டம் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான இசை .
சிறப்பான ஒளிப்பதிவு .
ப. நீலகண்டனின் சிறப்பான இயக்கம் .

மொத்தத்தில் நீரும் நெருப்பும் - மக்கள் திலகத்தின் மகுடத்தில் ஒரு வைர கிரீடம் .

courtesy - கலைவேந்தன்

Richardsof
16th October 2015, 07:08 PM
நுட்பமான நடிப்பு

அரச கட்டளை படத்தில் பெருங்கோபத்துடன் தன்னைத் தாக்க வரும் நம்பியாரிடம் சண்டை போடுவதற்கு முன் தனக்கே உரிய நம்பிக்கைப் புன்னகையுடன் அலட்டிக்கொள்லாமல் எம்.ஜி.ஆர். பேசும் விதம் அவரது நிதானமான, அழுத்தமான நடிப்பைப் பறைசாற்றும். நம்பியாரின் வாள் எம்.ஜி.ஆரின் மார்புக்கு அருகே நீண்டிருக்கும். “உன் உயிரைப் பறிப்பேன்” என்று கண்களை உருட்டி நம்பியார் மிரட்டுவார். அப்போதும் அதே புன்னகையுடன் “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்...” என்று சொல்லிச் சிறிய இடைவெளி விடுவார். புன்னகை மறையும். முகம் சற்றே தீவிரம் கொள்ளும். “... நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். அப்போது கை உடைவாளைப் பற்றியிருக்கும். அதன் பிறகு வாய்ப்பேச்சுக்கு வேலை இருக்காது. ‘மகாதேவி’ படத்தில் தன் தளபதி வீரப்பாவின் நிஜ முகம் தெரியும் கணத்தில் எம்.ஜி.ஆர். தன் கண்களின் சலனத்தில் அந்த பிரக்ஞையை வெளிப்படுத்துவார். எம்.ஜி.ஆரின் நுட்பமான நடிப்பு வெளிப்படும் இடங்கள் இவை.

வில்லன்களைவிடக் குறைந்த பணபலம் கொண்டவர் என்றாலும் மக்களின் அன்பும், விதவைத் தாயின் ஆசீர்வாதமும் தனது பலம் என்று துணிச்சலாகச் செயல்படும் பாத்திரங்கள் பெரும்பாலும் அவருக்கு அமைந்தன. அந்தத் துணிச்சலுடன் பதற்றம் எதுவுமில்லாமல் வில்லன்களிடம் நம்பிக்கைப் புன்னகையுடன் அவர் பேசும் வசனங்கள் அவரது அரசியல் செல்வாக்குக்கே அடித்தளமாக அமைந்தன. அந்தக் காட்சிகளில் அவர் தனது எல்லையைத் தாண்டி ஆர்ப்பாட்டமாகப் பேசமாட்டார். “நாகப்பா..நல்லா கேட்டுக்க! உன் அக்கிரமங்கள நா ஒரு நாளும் பொறுத்துக்க மாட்டேன்” என்பதுதான் வில்லன்களுக்கான அவரது அதிகபட்ச எச்சரிக்கை. அதன் பின்னர் அவர் வீணாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார். வீர வசனங்களை அவரது கைதான் பேசும். சண்டைக் காட்சிகளில் வேகமும் கோபமும் அற்புதமாக வெளிப்பட்டுவிடும்.

Article from the hindu

Richardsof
16th October 2015, 07:12 PM
மன்னாதி மன்னன் படத்தில் தலைவரின் நுணுக்கமான நடிப்புக்கு ஒரே ஒரு சான்று கூறுகிறேன். நாம் சில நேரங்களில் கேட்கும் பாடல்கள் நம் மனதை ஈர்ப்பதன் காரணமாக, நாள் முழுவதும் அந்தப் பாடல் வரிகளை நம்மையறியாமல் நமது வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு நம் செவியில் நுழைந்த பாடல் சிந்தையை நிறைத்திருக்கும். இதை ஆங்கிலத்தில் earworm என்று சொல்வார்கள்.

‘ஆடாத மனமும் உண்டோ’ பாடல் காட்சி முடிந்ததும் அடுத்து வரும் காட்சியின் போது, தலைவர், ஆடாத மனமும் உண்டோ என்று சன்னமான குரலில் பாடியபடியே வருவார். இதன் மூலம் அந்தப் பாடல் அந்த கதாபாத்திரத்தை எப்படி ஈர்த்துள்ளது என்பதை மனோதத்துவ ரீதியாக அருமையாக காட்டியிருப்பார் தலைவர்.
இனி மீள்பதிவு:

‘ஆடாத மனமும் உண்டோ?’

நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.

கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.

‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.

கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Image0001_zps303fb987.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Image0001_zps303fb987.jpg.html)
கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.

அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.

அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.
சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.

எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?

மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்...

courtesy கலைவேந்தன்.

Richardsof
16th October 2015, 07:17 PM
https://youtu.be/e6LsxtXK_60

Richardsof
16th October 2015, 07:20 PM
https://youtu.be/DMTP5kYexLM

Richardsof
16th October 2015, 07:42 PM
நீரும் நெருப்பும் படம் பற்றி ரவிபிரகாஷ் கூறுகிறார்….net...

’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.

படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.


அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார்.

oygateedat
16th October 2015, 09:45 PM
http://s29.postimg.org/nkbbt93gn/vdfff.jpg (http://postimage.org/)

Russellbfv
16th October 2015, 09:45 PM
http://i60.tinypic.com/11a8mxj.jpg

Russellbfv
16th October 2015, 09:48 PM
http://i62.tinypic.com/2e2fled.jpg

Russellbfv
16th October 2015, 09:49 PM
http://i62.tinypic.com/ajwa3s.jpg

Russellbfv
16th October 2015, 09:50 PM
http://i57.tinypic.com/2euhe9j.jpg

Russellbfv
16th October 2015, 09:51 PM
http://i59.tinypic.com/37gw9.jpg

Russellbfv
16th October 2015, 09:53 PM
http://i57.tinypic.com/975dz4.jpg

Russellbfv
16th October 2015, 09:54 PM
http://i60.tinypic.com/308fsq9.jpg

Russellbfv
16th October 2015, 09:55 PM
http://i62.tinypic.com/akfqm1.jpg

Russellbfv
16th October 2015, 09:58 PM
http://i61.tinypic.com/2eqc841.jpg

Russellbfv
16th October 2015, 09:59 PM
http://i62.tinypic.com/4rdb1d.jpg

oygateedat
16th October 2015, 10:08 PM
திரு கோவிந்தராஜ் அவர்களுக்கு

தாங்கள் பதிவிட்டுள்ள மக்கள் திலகத்தின் புகைப்படங்களும்

அவரைப்பற்றிய அற்புத செய்திகளும் மிக மிக அருமை.

பாராட்டுக்கள்.

அன்புடன்...


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

orodizli
16th October 2015, 10:42 PM
http://i57.tinypic.com/975dz4.jpg

மக்கள்திலகம் மணிவண்ணனாகவும், கரிகாலனாகவும் மக்கள், ரசிகர்கள் மனதில் வாழ்ந்த " நீரும் நெருப்பும் " காவியம் கவர்ந்து...முதல் வெளியீடு மட்டுமன்றி மறு, மறு வெளியீடுகளிலும் வசூலை அமோகமாக அறுவடை கண்டது... 1982- 1983 ஆண்டுகளில் மறுபடியும் புத்தம் புதிய ப்ரிண்டுகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா. இலங்கை - என பல இடங்களிலும் வெற்றி மழை பொழிந்த பொழுது மெகா சைஸ் போஸ்டர்களில் "பாமரர்களின் பரம பிதா" எம்.ஜி.ஆர்., என்று போடபட்டிருந்தது ... அந்நாட்களில் பொங்கல், தீபாவளி மற்றும் சாதா நாட்களிலும் திரும்ப, திரும்ப திரையிட பட்டு வந்தது பொற்காலமாகும்... அந்த நாட்கள் மீண்டும் வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி...

orodizli
16th October 2015, 10:50 PM
http://s29.postimg.org/nkbbt93gn/vdfff.jpg (http://postimage.org/)

மறு, மறு வெளியீடுகளில் சாதனை, சரித்திரம், சகாப்தம் - என்பது இதுதான்... மக்கள்திலகம் majestic " Power " இது என்பதை உணர்ந்தவர்கள்... உணர்வர்... நன்றி திரு ரவிச்சந்திரன் சார்...

Russellbfv
16th October 2015, 10:52 PM
நமது பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி . புரட்சித் தலைவர் கண்டெடுத்த மக்கள் இயக்கமான அ இ அ தி மு க தனது 43 ஆண்டுகள் வெற்றி பயணத்தை 44 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்நாளில் மேலும் பல பதிவுகளை பதிவிடுவதில் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்.
ஆர்.கோவிந்தராஜ்

Russellbfv
16th October 2015, 11:20 PM
1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ம் நாள் புரட்சித் தலைவரை தி மு க விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள் -
14 ம் தேதியன்று நிரந்தரமாகவே {டிஸ்மிஸ் } நீக்கினார்கள் ; புரட்சித் தலைவர் 16 ம் தேதியன்று தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்தார் ;
17 ம் தேதியன்று அது பற்றி அறிவித்தார் ; 18 ம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டது;
நவம்பர் மாதம் 3 ம் தேதிக்குள் அதாவது எண்ணி பதினைந்தே நாட்களுக்குள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து
6000 கிளைகள் தொடங்கப் பட்டன.--10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டனர்--
15 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த சாதனையை உலகில் எந்த ஒரு அரசியல் அதற்கு முன்னர் சாதித்ததேயில்லை ;-
1949 ல் தொடங்கப் பட்ட தி மு க விற்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் --அதாவது 1972 ல் தான் -18000 கிளைகளும் , 15 லட்சம் உறுப்பினர்களும்
இருப்பதாக தி மு க தலைவர் கருணாநிதி அவர்களே அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டார் -
அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 15 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்களையும் 6000 கிளைகளையும் உருவாக்கியது எவ்வளவு பெரிய
சாதனை என்பதை புரிந்து கொள்ளலாம்-
சரித்திர நாயகர் புரட்சித் தலைவரின் சாதனை இது என்றே கூற வேண்டும் -
அதுபோல் ரசிகர் மன்ற தோழர்களின் உறுதியான உழைப்புடன் ஆட்சி பிடித்த சாதனைக்கு சொந்தக்காரரும் புரட்சித் தலைவர் ஒருவரே.

mgrbaskaran
17th October 2015, 12:34 AM
1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ம் நாள் புரட்சித் தலைவரை தி மு க விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள் -
14 ம் தேதியன்று நிரந்தரமாகவே {டிஸ்மிஸ் } நீக்கினார்கள் ; புரட்சித் தலைவர் 16 ம் தேதியன்று தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்தார் ;
17 ம் தேதியன்று அது பற்றி அறிவித்தார் ; 18 ம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டது;
நவம்பர் மாதம் 3 ம் தேதிக்குள் அதாவது எண்ணி பதினைந்தே நாட்களுக்குள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து
6000 கிளைகள் தொடங்கப் பட்டன.--10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டனர்--
15 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த சாதனையை உலகில் எந்த ஒரு அரசியல் அதற்கு முன்னர் சாதித்ததேயில்லை ;-
1949 ல் தொடங்கப் பட்ட தி மு க விற்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் --அதாவது 1972 ல் தான் -18000 கிளைகளும் , 15 லட்சம் உறுப்பினர்களும்
இருப்பதாக தி மு க தலைவர் கருணாநிதி அவர்களே அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டார் -
அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 15 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்களையும் 6000 கிளைகளையும் உருவாக்கியது எவ்வளவு பெரிய
சாதனை என்பதை புரிந்து கொள்ளலாம்-
சரித்திர நாயகர் புரட்சித் தலைவரின் சாதனை இது என்றே கூற வேண்டும் -
அதுபோல் ரசிகர் மன்ற தோழர்களின் உறுதியான உழைப்புடன் ஆட்சி பிடித்த சாதனைக்கு சொந்தக்காரரும் புரட்சித் தலைவர் ஒருவரே.

super ....

Russelldvt
17th October 2015, 03:02 AM
Today 7.00am Watch Jmovie

http://i59.tinypic.com/a4poox.jpg

Russelldvt
17th October 2015, 03:04 AM
Today 1.00pm Watch Jmovie

http://i59.tinypic.com/2r6pncy.jpg

Russelldvt
17th October 2015, 03:06 AM
Today 1.30pm Watch Jaya Tv

http://i57.tinypic.com/fdfw48.jpg

Russelldvt
17th October 2015, 03:12 AM
தலைவரின் அ இ அ தி மு க 44 ஆண்டின் துவக்கத்திற்கு வாழ்த்துக்கள்..

http://i62.tinypic.com/2zp1lj4.jpg

http://i58.tinypic.com/2hgutjl.jpg

Richardsof
17th October 2015, 04:27 AM
கோவை நகரில் மக்கள் திலகத்தின் இதயவீனை 2வத வாரமாக நடைபெறுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி . தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் .
அதிமுக இயக்கம் தோன்றிய உடன் நிகழ்ந்த வரலாற்று செய்திகளையும் , அருமையான மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் மற்றும் கட்டுரைகளை பதிவிட்ட திரு கோவிந்தராஜன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .

Richardsof
17th October 2015, 04:33 AM
அரசியல் மக்கள் திலகம் மிகக் கடுமையாக எதிர்நீச்சல் போட வேண்டியதாயிற்று. 1977ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொது தேர்தல் நடக்க இருந்தது. இதில் அண்ணா திமுக கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு புரட்சித் தலைவர் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதில் மக்கள் மத்தியில் இரட்டை இலையா? உதயசூரியனா? என்று வைக்கப்பட்டது. தேர்தல் முடிவில் இரட்டை இலையை மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். பெரும்பான்மையில் மக்கள், மக்கள் திலகம் அவர்களை அரசு ஆட்சியில் அமர்த்தினார்கள். 1957ல் நாடோ டி மன்னன் புரட்சி நடிகரின் புரட்சி படைப்பு நாடோ டியா? மன்னனா என்ற கேள்விக்கு மக்கள் அதில் மக்கள் திலகம் அவர்களை மன்னனாக்கினார்கள். மன்னன் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? என்ற சொல்லின்படி பத்து ஆண்டுகளாக மக்கள் ஆட்சி நடத்தினார். நெருப்பிலே நடந்து நீரிலே நீந்தி சாதனைகள் புரிந்த மக்கள் திலகம் அவர்களுக்கு 1984ல் ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது, உடல் நலக்குறைவு அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்க்கும் அளவிற்கு நான் செத்துப் பிழைத்தவன்டா எமனைப் பார்த்து சிரித்தவன்டா என்று சொல்லிக் கொண்டே 1987ல் இறைவனடி சென்று விட்டார்.

மக்கள் திலகம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் 1947ல் இருந்து 1953வரை காங்கிரஸில் இருந்து காமராஜரை குருவாக ஏற்று கதர் வேட்டி, கதர் ஜிப்பா அணிந்தவர். பிறகு, 1954ல் அண்ணாவினுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவின் அன்பைப் பெற்றார். அவருடைய வழியில் அரசியலில் முன்னேற்றம் அடைந்தார். திமுக அரசியல் பொதுக் கூட்ட மேடைகளில் மாநாடு மேடைகளில் பேச்சாளர் ஆனார். பிறகு, கட்சியின் தலைமைப் பொருளாளராக பொறுப்பு வகித்தார். இதே போல் சிறுசேமிப்புத் தலைவர். பிறகு, 1972ல் திமுக வில் இருந்து விலகி அண்ணா அவர்களுடைய பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். கட்சியின் கொடியில் அண்ணாவின் உருவம் பதித்த கொடியை அமைத்தார். அவர் தனிகட்சி ஆரம்பித்த பிறகு 1977ல் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார். வருடத்திற்கு வருடம் அரசியலில் வெற்றி வாகை சூடிவந்த மக்கள் திலகம் அவர்களுக்கு 1980ல் பெரிய சோதனை ஏற்பட்டது. 1980ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்த சமயம் மக்கள் திலகம் அவர்கள் தமிழக முதல் அமைச்சராய் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக கட்சி ஆட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. எதிர்தரப்பில் திமுகவும் இந்திரா காங்கிரசும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிற 39 எம்.பிக்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் அதிமுகவிற்கு இரண்டு இடம் தான் கிடைத்தது. இதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு காங்கிரசம், திமுகவும் வள்ளல் எம்.ஜி.ஆர். அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே அந்த அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்ட மன்றத்திற்கு புதியதாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து 1980ல் மக்கள் திலகம் அவர்களுடைய ஆட்சியை கலைத்து விட்டார்கள். அரசாங்கத்தை எந்த வித குறைகளும் இல்லாமல் நேர்மையோடு நடத்தி வந்த நம்மை கலைத்து விட்டார்களே என்ற கவலை இருந்தது. ஆயினும் எதையும் தாங்கும் இதயம் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தேர்தல் வரட்டும் மக்களை சந்திப்போம் என்ற விஷயத்தை தன் கட்சியில் உள்ள (பொறுப்பில்) அத்தனை பேர்களையும் அழைத்து பேசினார். தோல்வியே காணாத மக்கள் திலகம் அவர்கள் சற்றும் சோர்வு இல்லாமல் மிகவும் சுறுசுறுப்போடு, மனதிடத்தோடு தேர்தலை பற்றி பேசினார். கட்சியில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். ஆட்சியைக் கலைத்த மூன்றாவது மாதத்திலேயே தேர்தலை வைத்து விட்டார்கள். இந்த எம்.எல்.ஏ. தேர்தலில் பிரச்சாரம் நடந்தது. இதில் திமுக, இந்திரா காங்கிரசும், இணைந்து போட்டியிட்டது. அதிமுக தனித்து போட்டியிட்டது மற்ற சில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக கலந்து கொண்டனர். மக்கள் திலகம் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை பார்த்து நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என் ஆட்சியை கலைத்தார்கள்? என்று நியாயம் கேட்டார். தேர்தல் முடிவில் பொதுமக்களின் நியாயம் புரட்சித் தலைவர் பக்கம் நின்றது. மீண்டும் மக்கள் திலகம் ஆட்சியில் அமர்ந்தார்கள்.



பிறகு 1984ல் நடந்த பொதுத் தேர்தலில், "நான் செத்துப் பிழைத்தவன்டா. மக்கள் மனதில் குடி இருப்பவன்டா" என்பது போல் அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து கொண்டே 1985ல் மூன்றாவது முறையாக முதல்வரானார். அண்ணாவுடைய தம்பிகள் ஐந்து பேர் 1963ல் மதுரையில் திமுக மாநாடு நடந்தது. மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக மக்கள் திலகம், வளையாபதி, முத்து கிருஷ்ணன், எஸ்.எஸ்.ஆர். கே.ஆர்.ஆர், டி.வி. நாராயணசாமி இவர்கள் அத்தனை பேர்களும் பிரபல சினிமா நடிகர்கள். இவர்கள் அப்போது திமுக வில் சிறப்பு பேச்சாளர்களாக இருந்து வந்தார்கள். கட்சியில் இவர்களுக்கு எந்த பதவியும் எதுவும் இல்லை. இந்த ஐந்து பேர்களும் கட்சித் தலைவர் அண்ணா அவர்களுடைய விசுவாசிகளாகவும், பக்தர்களாகவும் இருந்தவர்கள். இவர்களை அண்ணா தன் இதயத்திற்குள் வைத்துக் கொண்டார். பிறகு, ஒரு சமயத்தில் அண்ணா அவர்கள் நாராயணசாமி, ராமசாமி, வளையாபதி, முத்துகிருஷ்ணன். இவர்கள் அண்ணா அவர்கள் கதை, வசனம் எழுதிய சினிமா, நாடகங்களில் நடித்தவர்கள். இவர்களை தன்னுடைய வலது, இடது கரமாக வைத்து இருந்தார். ஆனால், வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களை தன் இதயத்திலேயே வைத்துக் கொண்டார். மேலும் எம்.ஜி.ஆரை இதயக்கனி என்றும் சொன்னார். 1963ல் மதுரைக்கு மாநாட்டுக்கு சென்று இருந்த இந்த ஐந்து பேர்களும், மாநாட்டுப் பந்தலுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். பஞ்ச பாண்டவர்கள், அண்ணன் தம்பிகள் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டது போல் இருந்தது. இந்த நேரத்தில் திடீரென்று வளையாபதி முத்து அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அது என்றுமே, எங்கேயும் இப்படி ஒரே இடத்தில் சந்தித்தது அல்ல. இப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டு மாநாட்டு விழாவை போட்டோ எடுக்க வந்திருந்த போட்டோ கிராபரை வளையாபதி அழைத்து வந்து விட்டார். இதை அறிந்த மற்ற நால்வரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே இந்த ஐந்து பேரும் வரிசையாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இந்த ஐந்து பேர்களும் நாடகத் துறை, சினிமா துறையில் அப்போதைய முன்னணி நடிகர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா இதயத்தில் "இதயக்கனி" ஆக இருப்பவர் மற்ற நால்வரும் அண்ணாவின் அன்பை பெற்றவர்கள் என்பது குறிப்பிட்டதக்க விஷயம்.

courtesy - M.G. R MUTHU .

oygateedat
17th October 2015, 04:53 AM
ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை ராயல் திரைஅரங்கில் அன்பே வா திரைக்காவியம் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Russelldvt
17th October 2015, 07:20 AM
Today 2.00pm Watch Vasanth Tv

http://i62.tinypic.com/3127goj.jpg

Russelldvt
17th October 2015, 07:22 AM
Today 8.00pm Watch Raj Digital Plus

http://i62.tinypic.com/21l7v4z.jpg

Russellwzf
17th October 2015, 09:12 AM
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் !!

http://i59.tinypic.com/33nvp0h.jpg

oygateedat
17th October 2015, 06:30 PM
இந்த இனிய நாள் மக்கள் திலகத்தின் பக்தர்கள்

மறக்க முடியாத பொன்னாள்.

திரைவானில் சாதனை சரித்திரம் படைத்த

பொன்மன செம்மல் அரசியல் இயக்கம்

கண்ட நன்னாள்.

இந்த நாளில் பதிவுகள் வழங்கிய அன்பர்களுக்கு

நன்றி

அன்புடன்



எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
17th October 2015, 06:33 PM
சென்ற வாரம் கோவை ராயல் திரை அரங்கில்

நல்ல நேரம் திரையிட்டபோது ஒட்டப்பட்ட

அழகிய சுவரொட்டி.


நன்றி : திரு ஹரிதாஸ் - கோவை

--
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

http://s22.postimg.org/i9schcka9/unnamed.jpg (http://postimage.org/)

oygateedat
17th October 2015, 06:41 PM
http://s24.postimg.org/umrcvp3ol/m5_copy.jpg (http://postimage.org/)
நான் நேரில் சென்றபோது எடுத்த படம்

oygateedat
17th October 2015, 06:44 PM
http://s22.postimg.org/kg50uth9t/Copy_of_mt_with_nt.jpg (http://postimage.org/)

Stynagt
17th October 2015, 06:49 PM
அக்டோபர் 17, 1972 - இன்றைய தினம் - ஊழல் என்னும் அரக்கனின் பிடியில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற புறப்பட்ட மாவீரனின் வீர வரலாற்றின் நினைவு நாள். என்ன செய்வதென்று அறியாமல், கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு, நமக்கு ஒரு விடிவு வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த வேளையில், இதோ நான் இருக்கிறேன் என்று அறைகூவல் விடுத்த ஒரு சிங்கநிகர் தலைவனின் கர்ச்சனையின் பொன்னான நாள் இன்று. இந்த தனிப்பட்ட ஒரு தலைவனின் அறைகூவலாக இருக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் அறைகூவலாகவே மக்கள் கருதினார்கள். இந்த புனிதப்போரில் மக்கள் தாங்களாகவே முன்வந்து பங்கெடுத்தார்கள். அரக்கனைக் கொன்று தீபாவளி கொண்டாடாடும் நன்னாளை எதிர்பார்த்திருந்தார்கள்.

mgrbaskaran
17th October 2015, 08:29 PM
M G Ramachandran receiving the Filmfare Award for Best Tamil film for 1969 from I K Gujral at the Filmfare Award function held in Bombay on April 1, 1970http://www.timescontent.com/tss/photos/preview/129552/M%20G%20Ramachandran-I%20K%20Gujral.jpg

mgrbaskaran
17th October 2015, 08:32 PM
http://www.timescontent.com/tss/photos/preview/129557/M%20G%20Ramachandran.jpg


M G Ramachandran

A portrait of well-known star of Tamil cinema, M G Ramachandran and floated a new party named Anna Dravida Munnetra Kazhagam (ADMK) in 1972.

source :time group

mgrbaskaran
17th October 2015, 08:35 PM
http://www.timescontent.com/tss/photos/preview/138852/Marudur%20Gopalamenon%20Ramachandran-M%20G%20Ramachandran-.jpg

source :time group

mgrbaskaran
17th October 2015, 08:37 PM
http://www.timescontent.com/tss/photos/preview/138854/Marudur%20Gopalamenon%20Ramachandran-MG%20Ramachandran.jpg

mgrbaskaran
17th October 2015, 08:39 PM
M G Ramachandran

Biggest star of Tamil cinema, M G Ramachandran in bandages after he had been shot at by fellow actor M R Radha, in Tamil Nadu on January 1, 1967

(source times of india group)

http://www.timescontent.com/tss/photos/preview/129554/M%20G%20Ramachandran.jpg

mgrbaskaran
17th October 2015, 08:41 PM
http://www.timescontent.com/tss/photos/preview/129551/M%20G%20Ramachandran.jpg


M G Ramachandran

Well-known star of Tamil cinema, M G Ramachandran addressing a mammoth gathering on Mount Road in Madras soon after assuming office as Chief Minister of Tamil Nadu on June 10, 1980.


(source times of india group)

mgrbaskaran
17th October 2015, 08:42 PM
M G Ramachandran

M G Ramachandran, Tamil Nadu Chief minister and founder of the AIADMK is welcomed by admirers at Dharavi in Bombay on November 4, 1978.

http://www.timescontent.com/tss/photos/preview/129562/M%20G%20Ramachandran.jpg


(source times of india group)

mgrbaskaran
17th October 2015, 08:44 PM
http://www.timescontent.com/tss/photos/preview/129553/M%20G%20Ramachandran-S%20Krishnaswamy.jpg


M G Ramachandran

Well-known star of Tamil cinema, M G Ramachandran (left) addressing during a reception accorded to him by the Tamil Sangham as S Krishnaswamy (2nd from right), president of the Sanghamin looks on, in Bombay on April 20, 1970.

mgrbaskaran
17th October 2015, 08:46 PM
M G Ramachandran

A file photo of biggest star of Tamil cinema M G Ramachandran (left) conferring with his political mentor former Chief Minister of Tamil Nadu C N Annadurai.


http://www.timescontent.com/tss/photos/preview/129555/C%20N%20Annadurai-M%20G%20Ramachandran.jpg


(source times of india group)

mgrbaskaran
17th October 2015, 08:47 PM
http://www.timescontent.com/tss/photos/preview/129547/M%20G%20Ramachandran.jpg

mgrbaskaran
17th October 2015, 08:49 PM
http://www.timescontent.com/tss/photos/preview/129550/M%20G%20Ramachandran-R%20V%20Lakshmanan-Latha.jpg


M G Ramachandran

Matinee idol-turned-Tamil Nadu chief minister M G Ramachandran delivers lecture after he was accorded a warm welcome on his return from Soviet Union tour at Tamil Sangham Hall in Bombay on August 18, 1973. Also seen R V Lakshmanan (2nd from left), president of Sangham and cine actress Latha (left).

mgrbaskaran
17th October 2015, 08:50 PM
http://www.timescontent.com/tss/photos/preview/12068/N%20T%20Rama%20Rao-M%20G%20Ramachandran.jpg

mgrbaskaran
17th October 2015, 08:50 PM
http://www.timescontent.com/tss/photos/preview/129563/M%20G%20Ramachandran-V%20R%20Nedunchezhian.jpg

mgrbaskaran
17th October 2015, 08:57 PM
http://www.timescontent.com/tss/photos/preview/382770/m%20g%20ramachandran.jpg

mgrbaskaran
17th October 2015, 08:58 PM
http://www.timescontent.com/tss/photos/preview/382785/m%20g%20ramachandran.jpg

mgrbaskaran
17th October 2015, 08:59 PM
http://www.timescontent.com/tss/photos/preview/382781/m%20g%20ramachandran.jpg

mgrbaskaran
17th October 2015, 09:00 PM
http://www.timescontent.com/tss/photos/preview/382775/m%20g%20ramachandran.jpg

mgrbaskaran
17th October 2015, 09:01 PM
http://www.timescontent.com/tss/photos/preview/382753/m%20g%20ramachandran.jpg


thanks for the photos -- times group of india

mgrbaskaran
17th October 2015, 09:06 PM
http://www.timescontent.com/tss/photos/preview/7493/Marudur%20Gopalamenon%20Ramachandran-MGR.jpg

mgrbaskaran
17th October 2015, 09:07 PM
http://www.timescontent.com/tss/photos/preview/7511/Marudur%20Gopalamenon%20Ramachandran-MGR.jpg


MGR, listens to people's grievances during his recent sojourn to Bombay.

mgrbaskaran
17th October 2015, 09:09 PM
http://www.timescontent.com/tss/photos/preview/7509/Marudur%20Gopalamenon%20Ramachandran-MGR.jpg


gets clicked while going through some official papers, in Tamil Nadu.

mgrbaskaran
17th October 2015, 09:11 PM
http://www.timescontent.com/tss/photos/preview/6685/Amitabh%20Bachchan-Shabana%20Azmi-M%20G%20Ramachandran.jpg



Bollywood Actor, Amitabh Bachchan and Actress Shabana Azmi, won the Best Actor and Best Actress award with M G Ramachandran and others at Filmfare Award function held in Bombay on June 1, 1978.

Russellbfv
17th October 2015, 09:18 PM
புரட்சித் தலைவர் கண்ட மக்கள் நல இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 44ம் ஆண்டு துவக்க நாளான இன்று புரட்சித் தலைவரின் பல்வேறு சிறப்புக்களை நினைவு கொள்வதில் பெரு மகிழ்வு கொள்வோம்.
புரட்சித் தலைவரின் சிறப்புக்கள் எண்ணிலடங்காதவை.இருப்பினும் அதில் சிலவற்றை தமிழகத்தில் சுமார் 80 வருடங்களாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் கலை இலக்கிய குடும்ப மாத இதழான கலைமகளில் அவர் தான் எம்ஜிஆர் எனும் கட்டுரையில் நாம் கூறியுள்ளதை இங்கு பதிவு செய்கிறோம் - அதை தொடர்ந்து மேலும் சில பதிவுகள்.

Russellbfv
17th October 2015, 09:24 PM
http://i59.tinypic.com/2j299ba.jpg

Russellbfv
17th October 2015, 09:27 PM
http://i62.tinypic.com/2vset5y.jpg

Russellbfv
17th October 2015, 09:28 PM
http://i62.tinypic.com/jj0hlc.jpg

Russellbfv
17th October 2015, 09:30 PM
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி துவங்க மக்களிடம் அனுமதி கேட்க புறப்பட்ட சூறாவளி சுற்று பயணத்தில் எந்த அரசியல் தலைவருக்கு ஏற்படாத ஒரு வித்தியாசமான நிகழ்வு இது. முதல்நாள் புறப்பாடு-- புரட்சித் தலைவருடன் ஆலந்தூர் மோகனரங்கம், அனகாபுத்தூர் ராமலிங்கம், எம்எம்.காதர் ,செங்கல்பட்டு எஸ்எம்.துரைராஜ்,கேஏ.கிருஷ்ணசாமி, சத்திய ஸ்டுடியோ பத்மநாபன், கலைஇயக்குனர்அங்கமுத்து பாதுகாவலர்கள் கேபி.ராமகிருஷ்ணன், எம் கே.தர்மலிங்கம் முத்து, நார்த்தார்சிங்,என்.சங்கர் போன்றோர் பயணம் செய்கின்றனர். ஆலந்தூரில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மீனம்பாக்கம் ,பட்ரோடு வழியாக சென்று காஞ்சி மாநகரில் பொதுகூட்டம் என ஏற்பாடு. -நடந்தது என்னவென்றால் பட்ரோடு சந்திப்பிலேய ஊர்வலம் அசைந்து தான் செல்ல முடிந்தது. அப்படி புரட்சித்தலைவரே எதிபார்க்காதவாறு லட்சக்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டனர். எங்கு நோக்கினும் மக்கள்வெள்ளம். பட்ரோடு சந்திப்பிலேயே மக்கள் தங்கள் உற்சாகத்தை கட்டுப் படுத்த இயலாமல் ஊழலை ஒழித்துக் கட்டுங்கள்,உடனே கட்சி ஆரம்பியுங்கள் உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என முழக்கமிடத் தொடங்கினர். உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தை கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப்பட்டார்.பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கி தடுமாறினார். மதியம் மூன்று மணியளவில் பட் ரோடு சந்திப்பில் துவங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப்பயணம் காஞ்சி மாநகருக்கு சென்றபோது நள்ளிரவு 1 மணி. அந்த நள்ளிரவு நேரத்தில் புரட்சித் தலைவர் உட்பட அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி. காரணம் அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி மாநகரம் அண்ணாவின் இதயக்கனியான புரட்சித்தலைவரை வரவேற்பதற்காக கண்விழித்து காத்திருந்தது.எங்கு நோக்கினும் ஆயிரக்கணக்கான மக்கள் கண் விழித்து புரட்சித் தலைவரை காண மகிழ்ச்சி பொங்கும் உற்சாகத்துடன் காத்திருந்தனர். நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன.வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது .தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க தங்கள் இனிய தலைவரை வரவேற்று அழைத்து சென்றனர். அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பொது கூட்டத்திற்கு புரட்சித் தலைவர் சென்றபோது மேடையை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் அவரை காண அமர்ந்திருந்ததால் அவரால் மேடைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நள்ளிரவு வேளையிலும் மக்களின் இந்த உற்சாக எதிர்பார்ப்பு என்பது உலக அரசியல் அரங்கில் எங்கும் நடைபெறாத ஒன்று என்பதை நாம் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும். என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தபோது பொதுகூட்ட ஏற்பாட்டாளர்களான காஞ்சி பாலாஜி உட்பட சிலர் துரிதகதியில் ஒரு வேலை செய்தனர். அதாவது மேடைக்கு பின்புறமிருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்து அவ் வழியாக புரட்சித் தலைவரை அழைத்து சென்று மேடையேற்றினர். மேடையேறிய புரட்சித் தலைவர் பொது மக்களை பார்த்து இரண்டு கைகளை கூப்பி வணக்கம் செய்தபோது எழுந்த மகிழ்ச்சியான உற்சாக ஆராவாரம் இருக்கிறதே விண்ணதிரும்படியாக இருந்தது இன்றும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது- நாங்கள் மட்டுமல்ல புரட்சி தலைவரே இந்நிகழ்வை கண்டு ஆச்சரியப் பட்டுதான் போனார் அந்தநாள் என்றென்றும் எங்களால் மறக்க முடியாத நாள் இது வேறு எந்த அரசியல் தலைவருக்கும் கிட்டாத சிறப்பு என்று கூறுகிறார் புரட்சித் தலைவரின் பாதுகாவலர்களில் ஒருவரான கேபி.ராமகிருஷ்ணன்.

Russellbfv
17th October 2015, 09:31 PM
ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரை புதிதாக கட்சி ஆரம்பிக்கும்படி பொதுமக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதுபோல் ஓர் அரசியல்வாதி புதிதாக கட்சி ஒன்றை தொடங்கலாமா ? என சுற்றுப் பயணம் செய்து பொது மக்களின் கருத்தை கேட்டதும் வரலாறு காணாத விஷயம் மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்து விட்டு அதற்கு ஆதரவு கோரி மக்களிடம் செல்வார்கள்.அதுதான் வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த வாடிக்கையை புரட்சித் தலைவர் மாற்றினார். இந்த சாதனைக்கு சொந்தக்காரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒருவரே. ஆம் தி மு க விலிருந்து புரட்சித் தலைவர் நீக்கப் பட்ட பின் இனி நிம்மதியாக தனது கலைப் பணி வாயிலாகவே மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ளலாம் என நினைத்தாரேயன்றி உடனே கட்சி ஆரம்பித்து உடனடி முதல்வராகலாம் என்று துளியும் எண்ணமில்லாத நிலையிலேயே இருந்தார். ஆனால் இயற்கையின் முடிவை யார் மாற்ற இயலும் ? மக்கள்நல பணிக்காகவே நீ படைக்கப் பட்டுள்ளாய் ஆகவே தமிழகத்தின் முதல்வராகி இறுதிவரை மக்களுக்காகவே உன்னை நீ அர்பணித்துக் கொண்டு வரலாற்று சாதனை புரிய வேண்டும் என்று இயற்கை முடிவெடுத்து விட்டதால் அதை மாற்ற புரட்சித் தலைவரால் எப்படி முடியும் ?.ஆம் நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்களே அதுபோலவே ஆகிப் போனது புரட்சித்தலைவரின் நிலை. இயற்கை தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியது. புரட்சித் தலைவரை கட்சியிலிருந்து நீக்கியதால் நாடே அல்லோகலப் பட்டது. எங்கு நோக்கினும் ஒரே பதட்டம் இனம் புரியாத வெறி மக்கள் மத்தியில் தி மு க மேல் ஏற்பட்டது. குறிப்பாக புரட்சித் தலைவரின் கோட்டைகளுள் முதன்மையான மதுரையில் தி மு க கொடி கம்பங்கள் வெட்டி சாய்க்கப் பட்டன, தி மு க கொடிகள் கொளுத்தப் பட்டன திரையரங்குகளில் காண்பிக்கப் பட்ட தமிழக அரசின் செய்திப் படங்கள் தடுக்கப் பட்டன இப்படியான பல்வேறு மக்கள் போராட்டங்கள் மதுரையை தொடர்ந்து நெல்லை,திருச்சி தஞ்சை கோவை சேலம் போன்ற நகரங்களுக்கும் பரவியது- குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களும் தொழிலாளர்களும் இப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர் இறுதியாக புரட்சித் தலைவர் மீது அதீத பற்று பாசம் நேசம் கொண்ட எண்ணற்ற இளைஞர்கள் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை மாய்க்கத் தொடங்கினர். இது புரட்சித் தலைவரை வெகுவாகவே பாதித்தது. இந்த தீக்குளிப்பில் மாண்ட இளைஞர்களுள் குறிப்பிடத் தக்கவர் இஸ்மாயில். அவர் காலையில் ஒரு டின் மண்ணெணையை எடுத்துக் கொண்டு உடுமலைபேட்டை தாலுக்கா அலுவலகத்திற்கு முன்பு சென்றார் டின்னில் இருந்த மண்ணெணையை தம் உடம்பில் ஊற்றி தீக்குச்சியை கிழித்து தம் மீது வைத்து கொண்டார் எம்ஜிஆர் வாழ்க" எம்ஜிஆர் வாழ்க'' எனும் முழக்கம் மட்டுமே அவரிடம் பலமாக எழுந்தது. மற்றவர்கள் நெருங்கிச் சென்று தடுப்பதற்குள் தீ பிழம்புகள் தனது உக்கிரத்தை காட்டியது. உட்கார்ந்த நிலையிலேயே இஸ்மாயில் தீக்கோளமானார். சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இத் தீக்குளிப்பு மறுதினம் தமிழகம் முழுவதும் பரவியது இந்த சம்பவம் மேலும் புரட்சித் தலைவரை பாதித்தது ஏற்கெனவே முசிறிப்புத்தன் அவர்கள் தி மு க வினரால் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளானபோதே ஒரு முடிவுக்கு வந்துவிட்ட புரட்சித் தலைவர் இனியும் தாமதித்தால் தன்னை உயிரினும் மேலாக நேசிக்கும் பல உயிர்களுக்கும் பாதிப்பும் இழப்பும் ஏற்பட்டுவிடும் என்று எண்ணி மக்களின் கருத்தையறிய ஒரு சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு வந்து புரட்சித் தலைவருக்கு மாபெரும் உற்சாக வரவேற்பை அளித்தனர். எங்கு நோக்கினும் மக்களின் எழுச்சி அதிக அளவில் காணப் பட்டது. புரட்சித் தலைவர் உடனடியாக கட்சி தொடங்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழ் மக்களின் குரலாக ஒலித்தது. அப்படியாக மக்கள் அனுமதி அளித்த பின்னரே புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். இது ஒரு வரலாற்று சாதனை. தமிழக அரசியல் களத்தில் இப்படியாக ஒரு சம்பவம் இதற்கு முன் நடைபெறவும் இல்லை இனி நடக்கப் போவதுமில்லை.-- அது தான் புரட்சித் தலைவர்.

Russellbfv
17th October 2015, 09:37 PM
http://i61.tinypic.com/2lvhdp5.jpg

Russellbfv
17th October 2015, 09:39 PM
http://i58.tinypic.com/2s9uihi.jpg

Russellbfv
17th October 2015, 09:42 PM
http://i58.tinypic.com/25km0k3.jpg

Russellbfv
17th October 2015, 09:43 PM
http://i61.tinypic.com/15odptt.jpg

Russellbfv
17th October 2015, 09:45 PM
http://i59.tinypic.com/2eoijcy.jpg

Russellbfv
17th October 2015, 09:47 PM
http://i60.tinypic.com/2lj5pvd.jpg

siqutacelufuw
17th October 2015, 09:48 PM
இதய தெய்வம் நம் புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கி 43 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 44வது ஆண்டு காணும் இந்த நாளை மறக்க முடியுமா ?

பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலுக்கு புகழாரம் சூட்டும் அவரது சிறப்புக்களை, இந்த பொன்னாளில் பதிவிடுவதில், பெருமிதம் கொள்கிறேன் :

1. மக்களின் மனதில் நிலையான இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர்
2. பொதுச்செயலாளர் பதவிக்கு மற்றவர்களை அமர வைத்து அழகு பார்த்தவர்
3. சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை மட்டுமே கண்டவர்
4. பக்தியுடன் கூடிய மரியாதை வைத்திருந்த தொண்டர்கள் கொண்டிருந்தவர்
5. தொண்டர்களை அரவணைத்தவர். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டவர்.
6. மக்களின் நலன் மட்டுமே பெரிது எனக் கருதி குளு குளு வாச ஸ்தலம் செல்லாதவர்
7. தனது காலத்தில் புதுவையில் ஆட்சி கண்ட புதுமைப்பித்தன். {அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதல் முதல்வர் என்ற பெருமையை புதுவை ராமசாமி அவர்களுக்கு வழங்கி பெருமை சேர்த்தவர். -
தான் நினைத்திருந்தால், 1974ல் கூட்டணி ஆட்சிக்கு வழி வகுத்து, அந்த கூட்டணி கட்சியின் சார்பில் முதல்வரை தேர்ந்தெடுக்க வைத்து அதன் மூலம்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வர் என்ற பெருமையை தான் அடைந்திருப்பார் }.
8. கட்சியின் மூத்த தலைவர்களை மதித்தவர் அமைச்சர்களை அவர்களது அலுவலக நாற்காலியில் அமரவைத்து தான் நின்று கொண்டு, அவர்களை வாழ்த்திய
பொன்மனம் கொண்டவர்.

http://i58.tinypic.com/24m9mq1.jpg

9. : பொய் என்பதையே அறியாதவர்
10. : மந்திரிசபையில் மந்திரிகளை மாற்றியது கிடையாது.
11. : இவரது ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்தவர் கிரிமினல் குற்றத்துக்காக கைது செய்யப்படவில்லை.
12. : தொடர்ந்து முதல்வாராக, அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர்.
13. : தனது பலத்தை மட்டுமே நம்பி மாபெரும் வெற்றி கண்டவர்.
14. : சட்டமன்ற தேர்தல்களில் தொகுதிக்கு செல்லாமலேயே படுத்துக்கொண்டே ஜெயித்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு
15. : மக்களை எல்லா காலங்களிலும் சந்திப்பதில் பெரும் ஆர்வம் காட்டியவர்.
16. : அரசு விழாக்களில் சளைக்காது கலந்து கொண்டவர். நாட்டு மக்களுக்கு நற்பயனளிக்கும் திட்டங்களை துவக்கி வைப்பதில் பேரின்பம் கண்டவர்.
17. : ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், நேர்மையான நெறியாளராக ஆட்சி புரிந்தவர்.

Russellbfv
17th October 2015, 09:50 PM
http://i58.tinypic.com/112779s.jpg

Russellbfv
17th October 2015, 09:58 PM
http://i62.tinypic.com/14t6ao2.jpg

Russellbfv
17th October 2015, 10:19 PM
http://i57.tinypic.com/ezl4t0.jpg

Russellbfv
17th October 2015, 10:20 PM
http://i59.tinypic.com/23kw7x1.jpg

Russellbfv
17th October 2015, 10:23 PM
http://i58.tinypic.com/1zqv91w.jpg

Russellbfv
17th October 2015, 10:24 PM
http://i60.tinypic.com/mlk1t0.jpg

Russellbfv
17th October 2015, 10:26 PM
http://i57.tinypic.com/se6494.jpg

Russellbfv
17th October 2015, 10:35 PM
புரட்சித் தலைவரின் சிறப்புக்கள் அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரம் போன்றவை- எண்ண எண்ண நமக்கு எழுச்சியுட்டுபவை,அவைகளை ஒரு எல்லைக்குள் கொண்டு வர இயலாது. பொதுவாக கடலின் ஆழத்தை கூட அளந்து விடலாம் ஆனால் ஒரு மங்கையின் மனதின் ஆழத்தை அளக்க முடியாது என்பார்கள்- அனால் உண்மை என்னவெனில் ஒரு மங்கையின் மனதின் ஆழத்தை கூட அளந்து விடலாம்- புரட்சித் தலைவரின் சிறப்புக்களின் ஆழத்தை அளக்கவே முடியாது -வானத்திற்கு எப்படி எல்லை இல்லையோ அப்படியே புரட்சித் தலைவரின் சிறப்புக்களுக்கும் எல்லையே இல்லை என்பதை புரட்சித் தலைவரின் மக்கள் நல இயக்க 44 ம் ஆண்டு துவக்க நாளில் கூறி நாம் அனைவரும் பெருமை கொள்வோம் -
ஆர்.கோவிந்தராஜ்

orodizli
17th October 2015, 10:40 PM
http://www.timescontent.com/tss/photos/preview/382770/m%20g%20ramachandran.jpg

இந்த இனிய பொன்னாளில் புரட்சி தலைவர், மக்கள்திலகம் அவர்கள் இந்த பிரபஞ்சத்திலேயே முதன்-முதலாக திரையுலகிலிருந்து அரசியல் கட்சியை ரசிகர்கள், பெரும்பான்மையான ஆண்கள், பெண்கள் அடங்கிய பொதுமக்கள் - பேராதரவோடு தொடங்கப்பட்டு மிக அபரிமிதமான செல்வாக்கோடு துவங்கிய நிலையிலேயே பீடு நடை போட ஆரம்பித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பிறந்த நாளான இன்று உங்கள் அனைவருக்கும் உளமார நல்வாழ்த்துக்களை தெரிவித்து அண்ணல் மக்கள்திலகம் வழியே மக்கள் பணியாற்றி மகேசன் தொண்டினையாற்றுவோம்...

orodizli
17th October 2015, 10:56 PM
http://i57.tinypic.com/se6494.jpg

திருவாளர்கள் வினோத் சார், பேராசிரியர் செல்வகுமார் சார், kp கோவிந்தராஜ் சார், கலியபெருமாள் விநாயகம் சார் ஆகியோரின் மக்கள்திலகம் கண்ட, காணும் A I A D M K ... தொடக்க திருநாள் அற்புத நினைவலைகளையும், உளம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் அளித்த தோழர்களுக்கு நன்றி ...

orodizli
17th October 2015, 11:05 PM
மக்கள்திலகம் - திரையுலகை நல்வழிபடுத்தி அந்த துறையையே மதிப்பும், ஏக மரியாதையையும் பெற்று தந்ததற்கும், பின்பு எல்லா நிர்வாகங்கள் அடங்கிய அரசியல் துறையையும் தன குணத்தாலும்,பண்பினாலும் பொதுமக்களுக்கு அநேக நன்மைகளையும் ஒரு சேர அமைத்து காத்த மக்கள்திலகம் அவர்களுக்கு தமிழக மக்கள் தங்கள் மனதில் நீங்கaatha இடம் கொடுத்து கொண்டிருபதற்கு முழுமையான நன்றியை காணிக்கையாக்குவோம்...

mgrbaskaran
18th October 2015, 12:24 AM
இதய தெய்வம் நம் புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கி 43 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 44வது ஆண்டு காணும் இந்த நாளை மறக்க முடியுமா ?

பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலுக்கு புகழாரம் சூட்டும் அவரது சிறப்புக்களை, இந்த பொன்னாளில் பதிவிடுவதில், பெருமிதம் கொள்கிறேன் :

1. மக்களின் மனதில் நிலையான இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர்
2. பொதுச்செயலாளர் பதவிக்கு மற்றவர்களை அமர வைத்து அழகு பார்த்தவர்
3. சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை மட்டுமே கண்டவர்
4. பக்தியுடன் கூடிய மரியாதை வைத்திருந்த தொண்டர்கள் கொண்டிருந்தவர்
5. தொண்டர்களை அரவணைத்தவர். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டவர்.
6. மக்களின் நலன் மட்டுமே பெரிது எனக் கருதி குளு குளு வாச ஸ்தலம் செல்லாதவர்
7. தனது காலத்தில் புதுவையில் ஆட்சி கண்ட புதுமைப்பித்தன். {அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதல் முதல்வர் என்ற பெருமையை புதுவை ராமசாமி அவர்களுக்கு வழங்கி பெருமை சேர்த்தவர். -
தான் நினைத்திருந்தால், 1974ல் கூட்டணி ஆட்சிக்கு வழி வகுத்து, அந்த கூட்டணி கட்சியின் சார்பில் முதல்வரை தேர்ந்தெடுக்க வைத்து அதன் மூலம்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வர் என்ற பெருமையை தான் அடைந்திருப்பார் }.
8. கட்சியின் மூத்த தலைவர்களை மதித்தவர் அமைச்சர்களை அவர்களது அலுவலக நாற்காலியில் அமரவைத்து தான் நின்று கொண்டு, அவர்களை வாழ்த்திய
பொன்மனம் கொண்டவர்.

http://i58.tinypic.com/24m9mq1.jpg

9. : பொய் என்பதையே அறியாதவர்
10. : மந்திரிசபையில் மந்திரிகளை மாற்றியது கிடையாது.
11. : இவரது ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்தவர் கிரிமினல் குற்றத்துக்காக கைது செய்யப்படவில்லை.
12. : தொடர்ந்து முதல்வாராக, அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர்.
13. : தனது பலத்தை மட்டுமே நம்பி மாபெரும் வெற்றி கண்டவர்.
14. : சட்டமன்ற தேர்தல்களில் தொகுதிக்கு செல்லாமலேயே படுத்துக்கொண்டே ஜெயித்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு
15. : மக்களை எல்லா காலங்களிலும் சந்திப்பதில் பெரும் ஆர்வம் காட்டியவர்.
16. : அரசு விழாக்களில் சளைக்காது கலந்து கொண்டவர். நாட்டு மக்களுக்கு நற்பயனளிக்கும் திட்டங்களை துவக்கி வைப்பதில் பேரின்பம் கண்டவர்.
17. : ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், நேர்மையான நெறியாளராக ஆட்சி புரிந்தவர்.






புரட்சி மாமன்னராக கண்ட மாபெரும் இயக்கம்


நல்வழியில் மேலும் மேலும் வளர


எல்லாம் வல்ல எம் இறைவானாகி



அருள் புரிவாராக

mgrbaskaran
18th October 2015, 12:31 AM
புரட்சித் தலைவரின் சிறப்புக்கள் அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரம் போன்றவை- எண்ண எண்ண நமக்கு எழுச்சியுட்டுபவை,அவைகளை ஒரு எல்லைக்குள் கொண்டு வர இயலாது. பொதுவாக கடலின் ஆழத்தை கூட அளந்து விடலாம் ஆனால் ஒரு மங்கையின் மனதின் ஆழத்தை அளக்க முடியாது என்பார்கள்- அனால் உண்மை என்னவெனில் ஒரு மங்கையின் மனதின் ஆழத்தை கூட அளந்து விடலாம்- புரட்சித் தலைவரின் சிறப்புக்களின் ஆழத்தை அளக்கவே முடியாது -வானத்திற்கு எப்படி எல்லை இல்லையோ அப்படியே புரட்சித் தலைவரின் சிறப்புக்களுக்கும் எல்லையே இல்லை என்பதை புரட்சித் தலைவரின் மக்கள் நல இயக்க 44 ம் ஆண்டு துவக்க நாளில் கூறி நாம் அனைவரும் பெருமை கொள்வோம் -
ஆர்.கோவிந்தராஜ்

அருமையான பதிவுகள்

தொடரட்டும் உங்கள் பணி

mgrbaskaran
18th October 2015, 12:43 AM
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 44-ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேதி : 17.10.2015

17.10.2015 சனிக் கிழமை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 44-ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு இன்று (17.10.2015 – சனிக் கிழமை), சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு, கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்களும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.

mgrbaskaran
18th October 2015, 12:51 AM
நானே போடப்போறேன்

சட்டம்


பொதுவில் நன்மை புரிந்திடும்


திட்டம்


நாடு நலம் பெறும்


திட்டம்

நன்மை புரிந்திடும் திட்டம்


நாடு நலம் பெறும் திட்டம்






http://i61.tinypic.com/be7j9i.jpg

mgrbaskaran
18th October 2015, 12:54 AM
மக்களுக்காக


மக்களில்

ஒருவனாகி


வாழ்ந்த


தலைவன்

mgrbaskaran
18th October 2015, 02:12 AM
மானம் ஒன்றே
பெரிதெனக் கொண்டு
வாழ்வது
நமது சமுதாயம்!

மரண பயங்கரம்
சூழ்ந்து வந்தாலும்
மாறிவிடாது
ஒரு நாளும்!”

புரட்சி மாமன்னர் பொன் மொழிகள்

Russelldvt
18th October 2015, 02:38 AM
http://i58.tinypic.com/2daj9es.jpg

Russelldvt
18th October 2015, 02:42 AM
http://i60.tinypic.com/oprdqo.jpg

Russelldvt
18th October 2015, 02:43 AM
http://i59.tinypic.com/2445zc6.jpg

Russelldvt
18th October 2015, 02:43 AM
http://i58.tinypic.com/28083g8.jpg

Russelldvt
18th October 2015, 02:44 AM
http://i58.tinypic.com/15hdf69.jpg

Russelldvt
18th October 2015, 02:45 AM
http://i60.tinypic.com/6iwpqa.jpg

Russelldvt
18th October 2015, 02:46 AM
http://i57.tinypic.com/vpybrt.jpg

Russelldvt
18th October 2015, 02:46 AM
http://i62.tinypic.com/vpujiq.jpg

Russelldvt
18th October 2015, 02:47 AM
http://i62.tinypic.com/10dxun8.jpg

Russelldvt
18th October 2015, 02:48 AM
http://i62.tinypic.com/2a9vg4n.jpg

Russelldvt
18th October 2015, 02:48 AM
http://i62.tinypic.com/2hwits.jpg

Russelldvt
18th October 2015, 02:49 AM
http://i60.tinypic.com/2vv7slk.jpg

Russelldvt
18th October 2015, 02:50 AM
http://i57.tinypic.com/2i0ghvp.jpg

Russelldvt
18th October 2015, 02:50 AM
http://i60.tinypic.com/dfg66u.jpg

Russelldvt
18th October 2015, 02:51 AM
http://i61.tinypic.com/2upem35.jpg

Russelldvt
18th October 2015, 02:51 AM
http://i60.tinypic.com/1679lp2.jpg

Russelldvt
18th October 2015, 02:52 AM
http://i60.tinypic.com/11spifq.jpg

Russelldvt
18th October 2015, 02:53 AM
http://i57.tinypic.com/2ebd8og.jpg

Russelldvt
18th October 2015, 02:53 AM
http://i62.tinypic.com/23myc4.jpg

Russelldvt
18th October 2015, 02:54 AM
http://i57.tinypic.com/ebbekn.jpg

Russelldvt
18th October 2015, 02:55 AM
http://i61.tinypic.com/15s7qqc.jpg

Russelldvt
18th October 2015, 02:55 AM
http://i60.tinypic.com/xp6jr9.jpg

Russelldvt
18th October 2015, 02:56 AM
http://i61.tinypic.com/8ytkx2.jpg

Russelldvt
18th October 2015, 02:57 AM
http://i59.tinypic.com/20kbxg4.jpg

Russelldvt
18th October 2015, 02:58 AM
http://i61.tinypic.com/2nbvyuq.jpg

Russelldvt
18th October 2015, 02:58 AM
http://i62.tinypic.com/258nx8m.jpg

Russelldvt
18th October 2015, 02:59 AM
http://i60.tinypic.com/2emhonr.jpg

Russelldvt
18th October 2015, 03:00 AM
http://i60.tinypic.com/28hkaj5.jpg

Russelldvt
18th October 2015, 03:00 AM
http://i58.tinypic.com/2qcp7xl.jpg

Russelldvt
18th October 2015, 03:01 AM
http://i61.tinypic.com/6gm0xl.jpg

Russelldvt
18th October 2015, 03:02 AM
http://i59.tinypic.com/2co25uh.jpg

Russelldvt
18th October 2015, 03:02 AM
http://i58.tinypic.com/23tp36f.jpg

Russelldvt
18th October 2015, 03:03 AM
http://i58.tinypic.com/2qtyf0l.jpg

Russelldvt
18th October 2015, 03:04 AM
http://i61.tinypic.com/2qispbn.jpg

Russelldvt
18th October 2015, 03:05 AM
http://i61.tinypic.com/30net0w.jpg

Russelldvt
18th October 2015, 03:06 AM
http://i62.tinypic.com/30arlz5.jpg

Russelldvt
18th October 2015, 03:06 AM
http://i58.tinypic.com/30vgfvn.jpg

Russelldvt
18th October 2015, 03:07 AM
http://i57.tinypic.com/2823sx2.jpg

Russelldvt
18th October 2015, 03:08 AM
http://i61.tinypic.com/14sk286.jpg

Russelldvt
18th October 2015, 03:08 AM
http://i62.tinypic.com/25jib82.jpg

Russelldvt
18th October 2015, 03:09 AM
http://i57.tinypic.com/2zgdxzs.jpg

Russelldvt
18th October 2015, 03:10 AM
http://i61.tinypic.com/30hmonm.jpg

Russelldvt
18th October 2015, 03:11 AM
http://i58.tinypic.com/258wg3b.jpg

Russelldvt
18th October 2015, 03:11 AM
http://i62.tinypic.com/2qw2zpz.jpg

Russelldvt
18th October 2015, 03:12 AM
http://i58.tinypic.com/2wpmaol.jpg

Russelldvt
18th October 2015, 03:13 AM
http://i59.tinypic.com/ng1vle.jpg

Russelldvt
18th October 2015, 03:14 AM
http://i60.tinypic.com/2yv880o.jpg

Russelldvt
18th October 2015, 03:14 AM
http://i59.tinypic.com/w9uzdc.jpg

Russelldvt
18th October 2015, 03:15 AM
http://i57.tinypic.com/oqvq5l.jpg

Russelldvt
18th October 2015, 03:16 AM
http://i61.tinypic.com/b6djba.jpg

Russelldvt
18th October 2015, 03:17 AM
http://i60.tinypic.com/sxfa7s.jpg

Russelldvt
18th October 2015, 03:18 AM
http://i62.tinypic.com/125mm39.jpg

Russelldvt
18th October 2015, 03:19 AM
http://i61.tinypic.com/2r2mb9x.jpg

Russelldvt
18th October 2015, 03:20 AM
http://i57.tinypic.com/2wh2u51.jpg

vasudevan31355
18th October 2015, 04:52 PM
ரிலாக்ஸ் பாடல்.

ரொம்ப நாளைக்கு அப்புறம்.

சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.

கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.

http://padamhosting.me/out.php/i58872_RTS1.jpg

பாடலும் படார் படார்தான்.
இசையும் படார் படார்தான்
நடிப்பும் படார் படார்தான்
குரல்களும் படார் படார்தான்

ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.

எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...

நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.

http://i.ytimg.com/vi/B86Gk92C7MM/maxresdefault.jpg

கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.

விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.

'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,

ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.

இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.

'படார் படார் படார்
படார் படார் படார்
படார் படார் படார்'

'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'

அடேயப்பா! என்ன வரிகள்!

அடுத்த வரி டாப்.

தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,

'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)

மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.

அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,

எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,

'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு:)... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்':)

என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.

எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,

'படார் படார் படார்
படார் படார் படார்'

என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,

எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,

'பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு

படார் படார் படார்
படார் படார் படார்'

என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.

'படார் படார் படார்
படார் படார் படார்

எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...

(டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)

இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'

என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,

'நிப்பாட்டு'

என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.:)

'அடி சூர்ப்பனகை ராணி
மூக்கறுந்த மூலி
நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.

நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)

http://padamhosting.me/out.php/i58871_RTS2.jpg

தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.

'முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்':)

எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!

நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.

'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.

'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்:)
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'

இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.

'என்முன் வளைந்து இளம் தென்றலில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
வளையலின் டியூன் கேட்கலாம்'

மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,

இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,

இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.

ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.

'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'

என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!

'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'

எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.

'லவ்லி பியூட்டி கமான் சார்!'

எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்

'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'

என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)

அப்படியே இசை மாறும்.

ஈஸ்வரி,

'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'

எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)

பதிலுக்கு எம்.ஜி.ஆர்,

'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'

இப்போது மேடம் டர்ன்.

'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'

(அப்படிப் போடு அருவாள!):)

எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.

'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'

ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.

'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'

(இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)

இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.

'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'

மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.

'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

பலே பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலே

வெட்டாத கண்ணைக் கொண்டு
முட்டாத நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதலுண்டு
திட்டாதே என்னைக் கண்டு

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.

அப்பாடா!

பாடல் முடிவடையும்.

எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.

பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.

எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.

எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.

பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.

'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார்.:) 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!

நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.

நீங்க எப்படி? பார்த்துட்டு சொல்லுங்கோ!


https://youtu.be/B86Gk92C7MM

mgrbaskaran
18th October 2015, 05:54 PM
ரிலாக்ஸ் பாடல்.

ரொம்ப நாளைக்கு அப்புறம்.

சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.

கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.

http://padamhosting.me/out.php/i58872_RTS1.jpg

பாடலும் படார் படார்தான்.
இசையும் படார் படார்தான்
நடிப்பும் படார் படார்தான்
குரல்களும் படார் படார்தான்

ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.

எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...

நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.

http://i.ytimg.com/vi/B86Gk92C7MM/maxresdefault.jpg

கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.

விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.

'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,

ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.

இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.

'படார் படார் படார்
படார் படார் படார்
படார் படார் படார்'

'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'

அடேயப்பா! என்ன வரிகள்!

அடுத்த வரி டாப்.

தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,

'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)

மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.

அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,

எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,

'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு:)... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்':)

என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.

எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,

'படார் படார் படார்
படார் படார் படார்'

என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,

எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,

'பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு

படார் படார் படார்
படார் படார் படார்'

என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.

'படார் படார் படார்
படார் படார் படார்

எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...

(டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)

இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'

என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,

'நிப்பாட்டு'

என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.:)

'அடி சூர்ப்பனகை ராணி
மூக்கறுந்த மூலி
நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.

நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)

http://padamhosting.me/out.php/i58871_RTS2.jpg

தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.

'முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்':)

எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!

நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.

'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.

'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்:)
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'

இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.

'என்முன் வளைந்து இளம் தென்றலில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
வளையலின் டியூன் கேட்கலாம்'

மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,

இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,

இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.

ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.

'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'

என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!

'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'

எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.

'லவ்லி பியூட்டி கமான் சார்!'

எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்

'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'

என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)

அப்படியே இசை மாறும்.

ஈஸ்வரி,

'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'

எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)

பதிலுக்கு எம்.ஜி.ஆர்,

'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'

இப்போது மேடம் டர்ன்.

'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'

(அப்படிப் போடு அருவாள!):)

எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.

'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'

ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.

'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'

(இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)

இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.

'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'

மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.

'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

பலே பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலே

வெட்டாத கண்ணைக் கொண்டு
முட்டாத நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதலுண்டு
திட்டாதே என்னைக் கண்டு

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.

அப்பாடா!

பாடல் முடிவடையும்.

எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.

பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.

எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.

எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.

பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.

'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார்.:) 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!

நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.

நீங்க எப்படி? பார்த்துட்டு சொல்லுங்கோ!


https://youtu.be/B86Gk92C7MM

arumai

mgrbaskaran
18th October 2015, 05:55 PM
http://i61.tinypic.com/2r2mb9x.jpg

arputham

siqutacelufuw
18th October 2015, 06:25 PM
அக்டோபர் 17-20 தேதியிட்ட, வாரம் இருமுறை வரும் "நக்கீரன்" பத்திரிகையில், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் எழுதி வரும் தொடரில் இந்த வாரம் நம் பொன்மக்னசெம்மலை பற்றிய ஒரு செய்தி - திரி அன்பர்கள் பார்வைக்கு :

http://i60.tinypic.com/o6l6cg.jpg

http://i62.tinypic.com/24bpvmu.jpg

http://i59.tinypic.com/sylc7k.jpg

siqutacelufuw
18th October 2015, 06:36 PM
தனது வியாபாரத்துக்காக, நம் பொன்மனச்செம்மல் நடித்த "ராமன் தேடிய சீதை" என்ற தலைப்பில் படம் எடுத்த, அகந்தை - ஆணவம் - மண்டைக்கணம் பிடித்த சுயநலவாதி, அறிவு ஜீவி போல் தன்னை காட்டி கொள்ளும் இயக்குனர் சேரன், தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்களை பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும், நடிகர் ரித்தீஷ் அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ததை கண்டித்து, அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நடிகர் விஜய் கார்த்திக் தலைமை ரசிகர் மன்றம் சார்பில், சென்னை நகரின் பிரதான பகுதிகளில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. சுவரொட்டியின் புகைப்படம் பின்னர் பதிவிடப்படும்.

siqutacelufuw
18th October 2015, 06:43 PM
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்காக தேவைப்பட்ட இடத்தை வாங்க, தான் நடித்த மூன்று படங்களின் சம்பளத்தை அளித்தவர் தான், கலியுக கடவுள், கொடை வள்ளல் நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள். இடத்தை நம் இதய தெய்வம் மக்கள் திலகம் பொன்மனசெம்மலும், கலைவாணர் அவர்களும் தெரிவு செய்து வாங்கினர்.

பின்னர், அதில் அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அந்த இடத்தில், நம் புரட்சித்தலைவரின் ஆலோசனைப்படி கட்டிடம் கட்டினார். இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர். அவர்கள் உட்பட பலர் இந்த கட்டிடத்துக்கான நிதி வசூல் செய்து அளித்துள்ளனர். இந்த வரலாற்று உண்மை தெரியாமல், நடிகர் சங்க தேர்தலில், நடிகை ராதிகா உட்பட சிலர் உளறி திரிகின்றனர். இது பற்றி ஆதாரத்துடன் கூடிய செய்தி, விரைவில் பதிவிடப்படும்.

பின் குறிப்பு :

சங்கத்தின் LOGOவை
http://i59.tinypic.com/k30z1d.jpg
வடிவமைத்து,

"நடிகன் குரல்" http://i61.tinypic.com/5z883.jpg
என்ற பத்திரிகையை ஆரம்பித்து வைத்தவரும்

நம் மக்கள் திலகம் தான். !

siqutacelufuw
18th October 2015, 06:53 PM
http://i59.tinypic.com/jqqc6h.jpg

சகோதரர் திரு. முத்தையன் அம்மு கைவண்ணத்தில், உருவான நம் மக்கள் திலகத்தின் "எங்கள் தங்கம்" மற்றும் "தாய் சொல்லை தட்டாதே" காவிய கட்சிகள் வெகு அற்புதம்.

அதிலும் குறிப்பாக, நம் தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவம் தாங்கிய பத்திரிகையை வைத்திருக்கும் காட்சி மிக மிக மிக மிக............................. அருமை !

siqutacelufuw
18th October 2015, 06:58 PM
[QUOTE=vasudevan31355;1261040]ரிலாக்ஸ் பாடல்.

ரொம்ப நாளைக்கு அப்புறம்.

சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.

கொஞ்சம் வித்தியாசமான பாடல்.

http://padamhosting.me/out.php/i58871_RTS2.jpg

[B]நம் பொன்மனசெம்மலின் "ராமன் தேடிய சீதை" காவியத்தை பற்றி, சகோதரர் திரு. வாசுதேவன் அவர்களின் தொகுப்பு வெகு அருமை. பாராட்டுக்கள் கலந்த நன்றி !

siqutacelufuw
18th October 2015, 07:10 PM
http://i57.tinypic.com/1runn4.jpg

மறைந்து ஆண்டுகள் பல கடந்தும், மக்களால் இன்றும் பூஜிக்கப்படும் கடவுள், மதிக்கப்படும் தலைவர், மக்கள் நலனே தன் நலன் என்று கருதி அவர்களுக்காகவே வாழ்ந்த உண்மைத் தலைவர் உத்தமத் தலைவர், நம் இதய தெய்வம் தோற்றுவித்த அனைந்த்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 44வது ஆண்டு துவக்கத்தையொட்டி, பதிவுகள் வழங்கிட்ட, மக்கள் திலகம் திரி அன்பர்களுக்கு நன்றி ! !

siqutacelufuw
18th October 2015, 09:26 PM
http://i61.tinypic.com/2l96cz.jpg

தற்போது முரசு தொலைக்காட்சியில், நம் மன்னவனின் "நினைத்ததை முடிப்பவன்" காவியம் ஒளி பரப்பாகி கொண்டிருக்கிறது.

orodizli
18th October 2015, 10:18 PM
இன்று மக்கள்திலகம் அட்டகாச வாள் வீச்சில் கலக்கலோ கலக்கல் --- என வியாபித்த "நீரும் நெருப்பும்" வெளியாகி ரசிகர்கள் உள்ளம் கவர்ந்த நாள்...இந்த காவியம் தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியை விடவும் ஸ்ரீ லங்காவில் மகோன்னத வசூலை கண்டது..."b" &" c" சென்டர்களில் அமோகமாக வெற்றியை ருசித்தது...

orodizli
18th October 2015, 10:23 PM
மக்கள்திலகம் - பல்முனை மாண்புகளை விவரித்திருக்கும் அருமை சகோதரர் பொன்ராஜ் அவர்களின் கட்டுரையை இங்கே அளித்திருக்கும் பாச நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...

orodizli
18th October 2015, 10:32 PM
நடிகர் சங்கத்தை துவக்கிய காலத்தில் மன்னாதி மன்னன் - ஆக திகழ்ந்த மக்கள்திலகம் அந்த அமைப்புக்கு என்னவொரு பொருத்தமாகவும், பெருந்தன்மையாகவும் " தென்னிந்திய நடிகர் சங்கம் " என்று பெயர் வைத்தார்கள்... இன்று அதன் பெயரைத்தான் மாற்ற முயல்கிறார்களே தவிர அதனால் சக நடிக,நடிகையருக்கு என்ன நன்மை விளைந்திடும் என எண்ணி பார்க்க வேண்டும்... அதுவே மக்கள்திலகம் அவர்களின் முயற்சிக்கு பெருமை சேர்க்கும்...

oygateedat
18th October 2015, 10:48 PM
இதய தெய்வம் நம் புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கி 43 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 44வது ஆண்டு காணும் இந்த நாளை மறக்க முடியுமா ?

பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலுக்கு புகழாரம் சூட்டும் அவரது சிறப்புக்களை, இந்த பொன்னாளில் பதிவிடுவதில், பெருமிதம் கொள்கிறேன் :

1. மக்களின் மனதில் நிலையான இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர்
2. பொதுச்செயலாளர் பதவிக்கு மற்றவர்களை அமர வைத்து அழகு பார்த்தவர்
3. சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை மட்டுமே கண்டவர்
4. பக்தியுடன் கூடிய மரியாதை வைத்திருந்த தொண்டர்கள் கொண்டிருந்தவர்
5. தொண்டர்களை அரவணைத்தவர். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டவர்.
6. மக்களின் நலன் மட்டுமே பெரிது எனக் கருதி குளு குளு வாச ஸ்தலம் செல்லாதவர்
7. தனது காலத்தில் புதுவையில் ஆட்சி கண்ட புதுமைப்பித்தன். {அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதல் முதல்வர் என்ற பெருமையை புதுவை ராமசாமி அவர்களுக்கு வழங்கி பெருமை சேர்த்தவர். -
தான் நினைத்திருந்தால், 1974ல் கூட்டணி ஆட்சிக்கு வழி வகுத்து, அந்த கூட்டணி கட்சியின் சார்பில் முதல்வரை தேர்ந்தெடுக்க வைத்து அதன் மூலம்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வர் என்ற பெருமையை தான் அடைந்திருப்பார் }.
8. கட்சியின் மூத்த தலைவர்களை மதித்தவர் அமைச்சர்களை அவர்களது அலுவலக நாற்காலியில் அமரவைத்து தான் நின்று கொண்டு, அவர்களை வாழ்த்திய
பொன்மனம் கொண்டவர்.

http://i58.tinypic.com/24m9mq1.jpg

9. : பொய் என்பதையே அறியாதவர்
10. : மந்திரிசபையில் மந்திரிகளை மாற்றியது கிடையாது.
11. : இவரது ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்தவர் கிரிமினல் குற்றத்துக்காக கைது செய்யப்படவில்லை.
12. : தொடர்ந்து முதல்வாராக, அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர்.
13. : தனது பலத்தை மட்டுமே நம்பி மாபெரும் வெற்றி கண்டவர்.
14. : சட்டமன்ற தேர்தல்களில் தொகுதிக்கு செல்லாமலேயே படுத்துக்கொண்டே ஜெயித்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு
15. : மக்களை எல்லா காலங்களிலும் சந்திப்பதில் பெரும் ஆர்வம் காட்டியவர்.
16. : அரசு விழாக்களில் சளைக்காது கலந்து கொண்டவர். நாட்டு மக்களுக்கு நற்பயனளிக்கும் திட்டங்களை துவக்கி வைப்பதில் பேரின்பம் கண்டவர்.
17. : ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், நேர்மையான நெறியாளராக ஆட்சி புரிந்தவர்.






Excellent Prof Selvakumar sir.

oygateedat
18th October 2015, 10:51 PM
ரிலாக்ஸ் பாடல்.

ரொம்ப நாளைக்கு அப்புறம்.

சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.

கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.

http://padamhosting.me/out.php/i58872_RTS1.jpg

பாடலும் படார் படார்தான்.
இசையும் படார் படார்தான்
நடிப்பும் படார் படார்தான்
குரல்களும் படார் படார்தான்

ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.

எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...

நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.

http://i.ytimg.com/vi/B86Gk92C7MM/maxresdefault.jpg

கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.

விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.

'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,

ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.

இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.

'படார் படார் படார்
படார் படார் படார்
படார் படார் படார்'

'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'

அடேயப்பா! என்ன வரிகள்!

அடுத்த வரி டாப்.

தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,

'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)

மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.

அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,

எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,

'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு:)... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்':)

என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.

எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,

'படார் படார் படார்
படார் படார் படார்'

என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,

எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,

'பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு

படார் படார் படார்
படார் படார் படார்'

என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.

'படார் படார் படார்
படார் படார் படார்

எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...

(டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)

இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'

என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,

'நிப்பாட்டு'

என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.:)

'அடி சூர்ப்பனகை ராணி
மூக்கறுந்த மூலி
நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.

நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)

http://padamhosting.me/out.php/i58871_RTS2.jpg

தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.

'முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்':)

எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!

நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.

'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.

'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்:)
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'

இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.

'என்முன் வளைந்து இளம் தென்றலில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
வளையலின் டியூன் கேட்கலாம்'

மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,

இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,

இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.

ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.

'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'

என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!

'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'

எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.

'லவ்லி பியூட்டி கமான் சார்!'

எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்

'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'

என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)

அப்படியே இசை மாறும்.

ஈஸ்வரி,

'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'

எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)

பதிலுக்கு எம்.ஜி.ஆர்,

'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'

இப்போது மேடம் டர்ன்.

'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'

(அப்படிப் போடு அருவாள!):)

எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.

'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'

ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.

'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'

(இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)

இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.

'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'

மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.

'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

பலே பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலே

வெட்டாத கண்ணைக் கொண்டு
முட்டாத நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதலுண்டு
திட்டாதே என்னைக் கண்டு

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.

அப்பாடா!

பாடல் முடிவடையும்.

எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.

பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.

எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.

எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.

பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.

'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார்.:) 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!

நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.

நீங்க எப்படி? பார்த்துட்டு சொல்லுங்கோ!


https://youtu.be/B86Gk92C7MM

Arumai Thiru.Vasudevan Sir

Nandri

oygateedat
18th October 2015, 10:53 PM
http://s1.postimg.org/t4r2pjr3j/SCAN0000.jpg (http://postimage.org/)

MAKKAL THILAGAM - M.A. THIRUMUGAM - DEVAR
Courtesy : Dinamalar Vaaramalar.

fidowag
19th October 2015, 09:51 AM
சென்னை சரவணாவில் 16/10/15 முதல் மக்கள் திலகத்தின் " நீரும் நெருப்பும் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது
இந்த ஆண்டில் இணைந்த 24வது எம்.ஜி.ஆர் வாரம்
http://i57.tinypic.com/25ri1zp.jpg
http://i60.tinypic.com/2sb4sa9.jpg


தகவல் உதவி திரு.பாண்டியன் (ஓட்டேரி)

fidowag
19th October 2015, 10:03 AM
http://i57.tinypic.com/2jebjvm.jpg

fidowag
19th October 2015, 10:09 AM
http://i61.tinypic.com/2m6mhio.jpg

fidowag
19th October 2015, 10:10 AM
http://i57.tinypic.com/2lc33eo.jpg

fidowag
19th October 2015, 10:15 AM
http://i62.tinypic.com/igww3c.jpg

mgrbaskaran
19th October 2015, 10:50 PM
http://i62.tinypic.com/igww3c.jpg




என்றும் வாழ்கிறார் எம் ஜி ஆர்


தொடரை எமக்காக இங்கே தந்தமைக்கு நன்றிகள்

fidowag
19th October 2015, 11:24 PM
http://i62.tinypic.com/raby0x.jpg

Richardsof
20th October 2015, 04:38 PM
Makkal thilagam m.g.r in idhaya veenai 44th anniversary today.

Russellbfv
20th October 2015, 05:52 PM
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் களேபரங்கள் 18-10-2015 அன்று மிகவும் விசித்திரமானவையாக இருந்தன. ஒருவர் மீது ஒருவர் தனி நபர் விமர்சனங்கள் அதிகமாக இருந்ததேயன்றி சங்கத்தின் முன்னோடிகள் சங்கத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு செயலாற்றிய நிகழ்வுகள் போன்ற விவரங்களை அந்த தருணத்தில் மக்களுக்கு எடுத்துக் கூற யாரும் இல்லாத நிலை மிகவும் வருந்த தக்கது. குறிப்பாக புரட்சித் தலைவர் அவர்கள் நடிகர் சங்க வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் சிறப்பாக செயல்பட்டவர். இது குறித்து முன்பே நாம் பத்திரிக்கை இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளோம். தேர்தல் நடந்து கொண்டிருந்த அந்த தருணத்தில் புரட்சித் தலைவர் நடிகர் சங்கத்திற்கு ஆற்றிய வளர்ச்சிப் பணிகள்- கொண்டிருந்த ஈடுபாடு- செய்துள்ள புதுமைகள் என பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் ஏராளம் இருக்க ஊடங்களுக்கு முன்னால் பேசிய அனைவரும் ஒருவர் மீது ஒருவர் தனிநபர் விமர்சனங்கள் வைத்தார்களேயன்றி எவரும் சங்க முன்னோடிகள் குறித்த பெருமைகளை பேசவில்லை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடிகர் சங்கத்திற்கு செய்துள்ள உதவிகள் செயல்பாடுகள் போன்றவை இனி எவரும் அங்கு செய்ய முடியாத அளவிற்கு செயலாற்றியுள்ளார். இன்று நடிகர் சங்கத்தின் அடையாளசின்னமான ஒரு தாய் நான்கு குழந்தைகளை அரவணைத்து செல்வதாக உள்ள அந்த அடையாள சின்னத்திற்கு ஆலோசனை சொல்லி அதை செயல்படுத்தியதே புரட்சித் தலைவர் தான் என்பதை யாருமே நினைவு கொள்ளவில்லை --ஆம் நமது தாய் சங்கமான தமிழ் பேசும் நடிகர் சங்கம் மற்ற மொழி பேசும் கலைஞர்ளை அரவணைத்து செல்வதாக இருக்க வேண்டும் கலை தாய்க்கு இன மொழி வேற்றுமைகள் இல்லை. எனவே மற்ற மொழி பேசும் கலைஞர்களும் கலைத்தாயின் பிள்ளைகள்தான் என பழம்பெரும் இயக்குனரும் நடிகர் சங்க ஆரம்பகால முன்னோடியுமான கே.சுப்பிரமணியம் அவர்களிடம் எடுத்து கூறி அதற்கான சின்னத்தை புரட்சித் தலைவர் செயல்படுத்திய வரலாற்று நிகழ்வை ஊடகத்தின் முன் பேசிய எவரும் நினைவு கொள்ளவில்லை. நடிகர் சங்கத்திற்கென்று ஒரு பத்திரிகை வேண்டும் அப்போது தான் சங்க விவரங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என்ற நல் எண்ணத்தில் நடிகன் குரல் என்ற பத்திரிக்கை ஒன்றை தொடக்கி அதற்கு தானே பதிப்பாசிரியராக இருந்து மிகச் சிறப்பாக அதை செயல் படுத்தினார். புரட்சித் தலைவர். முன்பெல்லாம் ஒரு சில காட்சிகளில் நடிப்பவர்களை எக்ஸ்ட்ரா நடிகர்கள் என கூறுவர். இம் முறையை மாற்றியமைத்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் அவர்களை துணை நடிகர்கள் { junior artist } {அ} சகநடிகர்கள் என அழைக்க வேண்டும் என்ற முறையை உருவாக்கியவர் புரட்சித் தலைவர் என்பதை எத்தனை சங்க உறுப்பினர்கள் அறிவார்கள்.? இன்றைய சூழலில் வாக்குகளுக்காக மட்டுமே நாடக நடிகர்களை தேடி சென்று அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையை காண முடிகிறது. ஆனால் அன்று எவ்வித பிரதி பலனுமின்றி அவர்களை அரவணைத்தவர் புரட்சித் தலைவர். குறிப்பாக வறுமையின் காரணமாக சில நடிகர்கள் மாத சந்தாவான 5 ரூபாய் கூட கொடுக்க முடியாமல் இருந்தார்கள். அவர்களின் நிலையை நன்குணர்ந்து அவர்கள் சார்பில் அந்த சந்தாவை புரட்சித் தலைவரே கட்டினார். பெண்களும் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர், அவர்களும் நிர்வாகம் செய்ய இயலும் என நடிகை அஞ்சலி தேவி அவர்களை நடிகர் சங்க தலைவர் ஆக்கி பெண்களை பெருமை படுத்தியதும் புரட்சித் தலைவர் அவர்களே. சங்க உறுப்பினர்கள் மகிழும் வண்ணம் ஆண்டு தோறும் பொங்கல் விழாவை நடிகர் சங்க வளாகத்தில் தனது சொந்த செலவில் நடத்தி அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். சங்கத்தில் தனக்கிருந்த ஈடுபாட்டை உணர்த்தும் வண்ணம் நடிகர் சங்க முத்திரையை தனது கை விரல் மோதிரத்தில் அணிந்து கொண்டார்.- இப்படியாக புரட்சித் தலைவர் நடிகர் சங்கத்திற்கு ஆற்றியுள்ள பணிகள் கணக்கிலடங்காதவை. நடிகர்களுக்கு மற்ற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ பட்டங்கள் அல்லது கௌவரங்கள் கிடைக்கப் பட்டால் உடனே ஓடிச்சென்று அவர்களுக்கு விழா எடுத்து சிறப்பு செய்வார். இப்படி நடிகர் சங்கத்தில் புரட்சித் தலைவரின் செயற்கரிய நல்ல செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். உலக அரங்கில் இந்திய நடிகர்களுக்கு குறிப்பாக -தமிழ் நடிகர்களுக்கு உயர் அந்தஸ்தை ஏற்படுத்தியவர் புரட்சித் தலைவர். ஆம் தனது கலைப் பணி மற்றும் மக்கள் பணி வாயிலாக மக்களிடம் செல்வாக்கு பெற்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு நடிகர் உலக அரங்கில் முதல் முறையாக பொறுப் பேற்றுக் கொண்டு நடிகர் சமுதாயத்தை உயர்த்தினார். ஆயிரக்கணக்கான நலிந்த நடிகர்களுக்கு ஏராளமான உதவிகளை பல்வேறு வழிகளில் செய்துள்ளவர்.- தான் முதல்வராக அந்த காலங்களிலும் மறைந்த ஏராளமான நடிகர்களின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டவர். இப்படி நடிகர் சங்கத்திற்கான புரட்சித் தலைவரது நற்பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே புதிதாக பதவிஏற்றுள்ள பாண்டவர் அணி புரட்சித் தலைவர் சங்கத்திற்கு செய்துள்ள எண்ணிலங்கா பணிகளை நன்குணர்ந்து புதிதாக அமையவிருக்கும்---
நடிகர் சங்க கட்டடத்திற்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டுவது சாலச் சிறந்ததாக இருக்கும் என்பதோடு உலக தமிழர்கள் அனைவரும் இதனால் மெத்த மகிழ்வு கொள்வார்கள் என்பதையும் நினைவு கூற விரும்புகிறோம். அப்படி ஒரு வேளை வேறு சில காரணங்களால் அப்படி செய்ய இயலாமல் போனால் புரட்சித் தலைவரின் முழு உருவ வெண்கலச் சிலையை குறைந்த பட்சம் கட்டிட வளாகத்தில் அமைக்க முன் வரலாம். அப்படி செய்யும் பட்சத்தில் எதிர்கால நடிகர் சங்க வரலாற்று ஆவணத்தில் உங்களது பெயர் நீக்கமற நிலைபெற ஒரு அற்புத வாய்ப்பாகவும் அது உங்களுக்கு அமையும் என்ற உண்மையையும் இந்த தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறோம். .தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருந்தாலும் சரி அல்லது தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று இருந்தாலும் சரி கூடுதலாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மாளிகை என பெயர் அமையப் பெறுவது கூடுதல் சிறப்பாக அமையும் என்பதே நமது கருத்து. அதுதான் அந்த மாமனிதர் சங்க வளர்ச்சிக்கு செய்துள்ள பணிகளுக்கு கைம்மாறு செய்வதாக அமையும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள பாண்டவர் அணிக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் வாழ்த்துக்கள்--
அன்பன் --ஆர்.கோவிந்தராஜ்

Russellbfv
20th October 2015, 05:55 PM
http://i57.tinypic.com/t6v1if.jpg

Russellbfv
20th October 2015, 05:56 PM
http://i58.tinypic.com/2psejag.jpg

Russellbfv
20th October 2015, 05:57 PM
http://i57.tinypic.com/154iyxt.jpg

Richardsof
20th October 2015, 08:38 PM
Madurai - Ram Theater
Makkal Thilagam MGR in
IDHYA KANI - Now Running

oygateedat
20th October 2015, 09:28 PM
http://s11.postimg.org/l521gkr6r/trrr.jpg (http://postimage.org/)

siqutacelufuw
20th October 2015, 10:00 PM
மக்கள் திலகத்தைப் பற்றி ஒன்றும் அறியாமல், தெரியாமல், சினிமாவிலும் அரசியலிலும் அவர் வெற்றி பெற்றதன் பின்னணி பற்றி புரியாமல், புரிந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் மனம் போன போக்கில் எழுதும் அரைவேக்காடுகள் " திண்ணை " என்ற தளத்தில் கண்டபடி உளறுகின்றன. 1957-ல் வெளிவந்த நாடோடி மன்னன் என்று உளறியிருப்பதே இந்த அரைவேக்காடுகளின் ‘ஞானத்தை’ சொல்லும். ஒரு வருடம் முன்னமே ரீலீஸ் செய்து விட்டது. கட்டுரையில் பல சம்பவங்களில் வருடங்கள் தவறு. முதல்வரான பிறகு மக்கள் திலகம் ருத்ராட்சம் அணிந்தாராம். (எப்போது?) இதுவும் அந்த பைத்தியக்காரனின் உளறல். அதுவரை ஆத்திகர் என்பதை சாமர்த்தியமாய் மறைத்து வைத்தாராம்

எப்பவுமே மக்கள் திலகம் தன்னை நாத்திகர் என்று சொன்னதில்லை. ஆத்திகர் என்பதை மறைத்ததும் இல்லை. அண்ணா இருந்தபோதே தனிப்பிறவி படத்தில் முருகன் வேடத்தில் தோன்றினார். அண்ணா இருந்தபோதே தேவரின் வேண்டுகோளுக்காக, மருதமலை முருகன் கோயிலுக்கு சென்று அங்கு தேவர் செலவில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளை தொடங்கி வைத்தார். இருவரும் இணைந்திருக்கும் அந்த படம் கூட நமது திரியில் முன்னர் பதிவாகி உள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின், ஒரு பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்ற கேள்விக்கு ‘துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகும் நான் உயிருடன் இருப்பதிலிருந்தே தெரியவில்லையா?’ என்று நம் புரட்சித்தலைவர் அவர்கள் பதிலளித்தார்.

வழக்கம் போல், பொறாமையில் பாரத் பட்டத்தை பற்றியும் உளறல். நல்லவேளை கமலஹாசன் அரசியலில் இல்லை. இருந்தால அவருக்கும் அரசியலால்தான் கிடைத்தது என்பார்கள்.
வயிற்றெரிச்சல்தான்.

திண்ணை பத்திரிகையில் ‘சமஸ்கிருதம் கற்றுக் கொள்வோம்’ என்ற தொடர் இருக்கிறது. இதிலிருந்தே அதன் பின்னணியை புரிந்து கொள்ளலாம்.

கட்டுரையை எழுதிய இந்த அறிவுஜீவி (??????) மக்கள் திலகம் படத்தை எல்லாம் எங்கே பார்த்திருக்கப்போகிறது? பார்த்தால் தீட்டு பட்டு விடுமே ?

அந்த திண்ணை பத்திரிகை கட்டுரைக்கு கீழேயே சஞ்சய் என்பவர் பதில் சொல்லிருக்கார். 1977ல் தேர்தல் வெற்றிக்கு காரணம் மக்கள் திலகமே என்று கூறியுள்ளார்.

http://puthu.thinnai.com/?p=30659sanjay says:

October 19, 2015 at 8:31 am

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட ஜனவரி 88லிருந்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற ஜனவரி 89 வரை ராஜிவ்காந்தி 37 முறை தமிழகம் வந்து மூப்பனாருக்காக பிரச்சாரம் செய்தார். ஆயினும், மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்திய காங்கிரசும் படுதோல்வி அடைந்தது. இத்தனைக்கும் அப்போது தமிழக ஆளுநராக இருந்த P.C .அலெக்சாண்டரின் ஆட்சி காங்கிரஸ் ஆட்சியாகவே பாவிக்கப்பட்டது. ஆகவே ஒருவகையில், 1989 தேர்தலை காங்கிரஸ் ஆளும் கட்சியாகவே சந்தித்தது எனலாம். அந்தத் தேர்தலின்போது காங்கிரஸ் ஒருவேளை மூப்பனாருக்கு பதிலாக சிவாஜியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தியிருந்தால்? வரலாற்றின் ifs and buts தருணங்களில் இதுவும் ஒன்று.

Comment by Mr. Sanjay

This is a wrong assessment. Sivaji’s popularity as an actor was dimmed by this time. He also lost the elections in 1989. Also, he happened to be in the winning side in some elections & it was not because of him, his party won the elections
.
For instance, though MGR & Sivaji were in parties which were electoral allies in 1977, the alliance won primarily because of MGR & not for Sivaaji. Sivaji never stood up for his fans when they were insulted in the congress party. He simply kept quiet. He should have quit politics after he lost the elections & disbanded his party.

But he chose to become the leader of a party which no one in Tamil Nadu had heard of Janata Dal. He gave interviews that he would strive & bring Janata Dal to power.
Sivaji was a failure & unlucky in politics.

oygateedat
20th October 2015, 10:07 PM
http://s21.postimg.org/dvysndzp3/scan0001.jpg (http://postimage.org/)
Courtesy : Cinema Express

oygateedat
20th October 2015, 10:09 PM
http://s30.postimg.org/760nf8335/image.jpg (http://postimage.org/)

siqutacelufuw
20th October 2015, 10:17 PM
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் களேபரங்கள் 18-10-2015 அன்று மிகவும் விசித்திரமானவையாக இருந்தன. ஒருவர் மீது ஒருவர் தனி நபர் விமர்சனங்கள் அதிகமாக இருந்ததேயன்றி சங்கத்தின் முன்னோடிகள் சங்கத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு செயலாற்றிய நிகழ்வுகள் போன்ற விவரங்களை அந்த தருணத்தில் மக்களுக்கு எடுத்துக் கூற யாரும் இல்லாத நிலை மிகவும் வருந்த தக்கது. குறிப்பாக புரட்சித் தலைவர் அவர்கள் நடிகர் சங்க வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் சிறப்பாக செயல்பட்டவர். இது குறித்து முன்பே நாம் பத்திரிக்கை இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளோம். தேர்தல் நடந்து கொண்டிருந்த அந்த தருணத்தில் புரட்சித் தலைவர் நடிகர் சங்கத்திற்கு ஆற்றிய வளர்ச்சிப் பணிகள்- கொண்டிருந்த ஈடுபாடு- செய்துள்ள புதுமைகள் என பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் ஏராளம் இருக்க ஊடங்களுக்கு முன்னால் பேசிய அனைவரும் ஒருவர் மீது ஒருவர் தனிநபர் விமர்சனங்கள் வைத்தார்களேயன்றி எவரும் சங்க முன்னோடிகள் குறித்த பெருமைகளை பேசவில்லை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடிகர் சங்கத்திற்கு செய்துள்ள உதவிகள் செயல்பாடுகள் போன்றவை இனி எவரும் அங்கு செய்ய முடியாத அளவிற்கு செயலாற்றியுள்ளார். இன்று நடிகர் சங்கத்தின் அடையாளசின்னமான ஒரு தாய் நான்கு குழந்தைகளை அரவணைத்து செல்வதாக உள்ள அந்த அடையாள சின்னத்திற்கு ஆலோசனை சொல்லி அதை செயல்படுத்தியதே புரட்சித் தலைவர் தான் என்பதை யாருமே நினைவு கொள்ளவில்லை --ஆம் நமது தாய் சங்கமான தமிழ் பேசும் நடிகர் சங்கம் மற்ற மொழி பேசும் கலைஞர்ளை அரவணைத்து செல்வதாக இருக்க வேண்டும் கலை தாய்க்கு இன மொழி வேற்றுமைகள் இல்லை. எனவே மற்ற மொழி பேசும் கலைஞர்களும் கலைத்தாயின் பிள்ளைகள்தான் என பழம்பெரும் இயக்குனரும் நடிகர் சங்க ஆரம்பகால முன்னோடியுமான கே.சுப்பிரமணியம் அவர்களிடம் எடுத்து கூறி அதற்கான சின்னத்தை புரட்சித் தலைவர் செயல்படுத்திய வரலாற்று நிகழ்வை ஊடகத்தின் முன் பேசிய எவரும் நினைவு கொள்ளவில்லை. நடிகர் சங்கத்திற்கென்று ஒரு பத்திரிகை வேண்டும் அப்போது தான் சங்க விவரங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என்ற நல் எண்ணத்தில் நடிகன் குரல் என்ற பத்திரிக்கை ஒன்றை தொடக்கி அதற்கு தானே பதிப்பாசிரியராக இருந்து மிகச் சிறப்பாக அதை செயல் படுத்தினார். புரட்சித் தலைவர். முன்பெல்லாம் ஒரு சில காட்சிகளில் நடிப்பவர்களை எக்ஸ்ட்ரா நடிகர்கள் என கூறுவர். இம் முறையை மாற்றியமைத்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் அவர்களை துணை நடிகர்கள் { junior artist } {அ} சகநடிகர்கள் என அழைக்க வேண்டும் என்ற முறையை உருவாக்கியவர் புரட்சித் தலைவர் என்பதை எத்தனை சங்க உறுப்பினர்கள் அறிவார்கள்.? இன்றைய சூழலில் வாக்குகளுக்காக மட்டுமே நாடக நடிகர்களை தேடி சென்று அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையை காண முடிகிறது. ஆனால் அன்று எவ்வித பிரதி பலனுமின்றி அவர்களை அரவணைத்தவர் புரட்சித் தலைவர். குறிப்பாக வறுமையின் காரணமாக சில நடிகர்கள் மாத சந்தாவான 5 ரூபாய் கூட கொடுக்க முடியாமல் இருந்தார்கள். அவர்களின் நிலையை நன்குணர்ந்து அவர்கள் சார்பில் அந்த சந்தாவை புரட்சித் தலைவரே கட்டினார். பெண்களும் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர், அவர்களும் நிர்வாகம் செய்ய இயலும் என நடிகை அஞ்சலி தேவி அவர்களை நடிகர் சங்க தலைவர் ஆக்கி பெண்களை பெருமை படுத்தியதும் புரட்சித் தலைவர் அவர்களே. சங்க உறுப்பினர்கள் மகிழும் வண்ணம் ஆண்டு தோறும் பொங்கல் விழாவை நடிகர் சங்க வளாகத்தில் தனது சொந்த செலவில் நடத்தி அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். சங்கத்தில் தனக்கிருந்த ஈடுபாட்டை உணர்த்தும் வண்ணம் நடிகர் சங்க முத்திரையை தனது கை விரல் மோதிரத்தில் அணிந்து கொண்டார்.- இப்படியாக புரட்சித் தலைவர் நடிகர் சங்கத்திற்கு ஆற்றியுள்ள பணிகள் கணக்கிலடங்காதவை. நடிகர்களுக்கு மற்ற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ பட்டங்கள் அல்லது கௌவரங்கள் கிடைக்கப் பட்டால் உடனே ஓடிச்சென்று அவர்களுக்கு விழா எடுத்து சிறப்பு செய்வார். இப்படி நடிகர் சங்கத்தில் புரட்சித் தலைவரின் செயற்கரிய நல்ல செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். உலக அரங்கில் இந்திய நடிகர்களுக்கு குறிப்பாக -தமிழ் நடிகர்களுக்கு உயர் அந்தஸ்தை ஏற்படுத்தியவர் புரட்சித் தலைவர். ஆம் தனது கலைப் பணி மற்றும் மக்கள் பணி வாயிலாக மக்களிடம் செல்வாக்கு பெற்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு நடிகர் உலக அரங்கில் முதல் முறையாக பொறுப் பேற்றுக் கொண்டு நடிகர் சமுதாயத்தை உயர்த்தினார். ஆயிரக்கணக்கான நலிந்த நடிகர்களுக்கு ஏராளமான உதவிகளை பல்வேறு வழிகளில் செய்துள்ளவர்.- தான் முதல்வராக அந்த காலங்களிலும் மறைந்த ஏராளமான நடிகர்களின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டவர். இப்படி நடிகர் சங்கத்திற்கான புரட்சித் தலைவரது நற்பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே புதிதாக பதவிஏற்றுள்ள பாண்டவர் அணி புரட்சித் தலைவர் சங்கத்திற்கு செய்துள்ள எண்ணிலங்கா பணிகளை நன்குணர்ந்து புதிதாக அமையவிருக்கும்---
நடிகர் சங்க கட்டடத்திற்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டுவது சாலச் சிறந்ததாக இருக்கும் என்பதோடு உலக தமிழர்கள் அனைவரும் இதனால் மெத்த மகிழ்வு கொள்வார்கள் என்பதையும் நினைவு கூற விரும்புகிறோம். அப்படி ஒரு வேளை வேறு சில காரணங்களால் அப்படி செய்ய இயலாமல் போனால் புரட்சித் தலைவரின் முழு உருவ வெண்கலச் சிலையை குறைந்த பட்சம் கட்டிட வளாகத்தில் அமைக்க முன் வரலாம். அப்படி செய்யும் பட்சத்தில் எதிர்கால நடிகர் சங்க வரலாற்று ஆவணத்தில் உங்களது பெயர் நீக்கமற நிலைபெற ஒரு அற்புத வாய்ப்பாகவும் அது உங்களுக்கு அமையும் என்ற உண்மையையும் இந்த தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறோம். .தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருந்தாலும் சரி அல்லது தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று இருந்தாலும் சரி கூடுதலாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மாளிகை என பெயர் அமையப் பெறுவது கூடுதல் சிறப்பாக அமையும் என்பதே நமது கருத்து. அதுதான் அந்த மாமனிதர் சங்க வளர்ச்சிக்கு செய்துள்ள பணிகளுக்கு கைம்மாறு செய்வதாக அமையும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள பாண்டவர் அணிக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் வாழ்த்துக்கள்--
அன்பன் --ஆர்.கோவிந்தராஜ்

THANK YOU MY DEAR BROTHER K.P.R. GOVINDARAJ FOR THE EXCELLENT POSTING WITH NICE SUGGESTION.

YOU CHERISHED THE OLD AND SWEET MEMORIES OF OUR BELOVED GOD M.G.R.'s DEDICATED AND COMMENDABLE WORK FOR THE NADIGAR SANGAM.

THE ACHIEVEMENTS OF OUR BELOVED GOD M.G.R. MADE WHEN HE WAS HOLDING THE KEY POSITION IN NADIGAR SANGAM, IS EVER MEMORABLE ONE.

HE (OUR BELOVED GOD M.G.R.) ALSO GAVE WAY FOR OTHERS TO HOLD POSITIONS IN THE NADIGAR SANGAM, SUBSEQUENTLY. THIS SHOWS HIS GENEROSITY & NOBILITY.

WE ARE ALL PROUD TO BE THE FANS AND DEVOTEES OF SUCH A GREAT PERSONALITY

siqutacelufuw
20th October 2015, 10:31 PM
தனது வியாபாரத்துக்காக, நம் பொன்மனச்செம்மல் நடித்த "ராமன் தேடிய சீதை" என்ற தலைப்பில் படம் எடுத்த, அகந்தை - ஆணவம் - மண்டைக்கணம் பிடித்த சுயநலவாதி, அறிவு ஜீவி போல் தன்னை காட்டி கொள்ளும் இயக்குனர் சேரன், தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்களை பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும், நடிகர் ரித்தீஷ் அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ததை கண்டித்து, அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நடிகர் விஜய் கார்த்திக் தலைமை ரசிகர் மன்றம் சார்பில், சென்னை நகரின் பிரதான பகுதிகளில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. சுவரொட்டியின் புகைப்படம் பின்னர் பதிவிடப்படும்.

http://i60.tinypic.com/2h5odjc.jpg

mgrbaskaran
21st October 2015, 02:35 AM
இன்று நவராத்திரி பூஜை இலண்டன் நியூ மோல்டன் திருத்தணிகை முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடை பெற்றது.

அங்கு பிரசங்கம் செய்த சிவாச்சாரியார் ராஜசேகர குருக்கள் ,

மக்கள் எல்லாரும் நீதியின் வழியில் நடந்து தன்னால் ஆன உதவிகளை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். ஆண்டவன் தேவைக்கு அதிகமாக உங்களுக்குத் தரும் பணத்தை நல வழியில் செலவிடுங்கள். வாடும் ஏழை மக்களுக்கு கொடுங்கள் . அப்படி கொடுத்தால் நீங்கள் என்றும் வாழ்வீர்கள் என்றார்.



உங்களுக்கே தெரியும்
இறந்தும் இறவாப் புகழுடன்
இன்றும் வாழும் எம் ஜி ஆர்
எப்படி வாழ வேண்டும் என்று
உங்களுக்கு வாழ்ந்து
காட்டியிருக்கின்றார்
என்று உரையை முடித்தார்.

Russelldvt
21st October 2015, 02:36 AM
http://i59.tinypic.com/24qqu4n.jpg

Russelldvt
21st October 2015, 02:37 AM
http://i57.tinypic.com/2uy6haw.jpg

Russelldvt
21st October 2015, 02:38 AM
http://i61.tinypic.com/ocvow.jpg

Russelldvt
21st October 2015, 02:40 AM
http://i62.tinypic.com/fy1rvn.jpg

Russelldvt
21st October 2015, 02:41 AM
http://i61.tinypic.com/2ytvhq9.jpg

Russelldvt
21st October 2015, 02:41 AM
http://i57.tinypic.com/20zpt2x.jpg

Russelldvt
21st October 2015, 02:42 AM
http://i60.tinypic.com/23uxy07.jpg

Russelldvt
21st October 2015, 02:43 AM
http://i60.tinypic.com/24eu7t3.jpg

Russelldvt
21st October 2015, 02:44 AM
http://i59.tinypic.com/21d30k6.jpg

Russelldvt
21st October 2015, 02:44 AM
http://i62.tinypic.com/2eghg5v.jpg

Russelldvt
21st October 2015, 02:45 AM
http://i59.tinypic.com/28ho1w5.jpg

Russelldvt
21st October 2015, 02:45 AM
http://i60.tinypic.com/p5e7s.jpg

Russelldvt
21st October 2015, 02:46 AM
http://i59.tinypic.com/33vfex3.jpg

Russelldvt
21st October 2015, 02:47 AM
http://i57.tinypic.com/2wohycy.jpg

Russelldvt
21st October 2015, 02:47 AM
http://i58.tinypic.com/2moz134.jpg

Russelldvt
21st October 2015, 02:48 AM
http://i61.tinypic.com/w7n51s.jpg

Russelldvt
21st October 2015, 02:48 AM
http://i60.tinypic.com/2jbv8du.jpg

Russelldvt
21st October 2015, 02:49 AM
http://i60.tinypic.com/dcgdbn.jpg

Russelldvt
21st October 2015, 02:50 AM
http://i59.tinypic.com/10hudqa.jpg

Russelldvt
21st October 2015, 02:50 AM
http://i58.tinypic.com/6xqkaf.jpg

Russelldvt
21st October 2015, 02:51 AM
http://i57.tinypic.com/23ii14z.jpg

Russelldvt
21st October 2015, 02:52 AM
http://i61.tinypic.com/260v1aq.jpg

Russelldvt
21st October 2015, 02:52 AM
http://i61.tinypic.com/2s7ua1v.jpg

Russelldvt
21st October 2015, 02:53 AM
http://i57.tinypic.com/28jfhiq.jpg

Russelldvt
21st October 2015, 02:54 AM
http://i62.tinypic.com/4khern.jpg

Russelldvt
21st October 2015, 02:55 AM
http://i62.tinypic.com/sxd4eu.jpg

Russelldvt
21st October 2015, 02:55 AM
http://i59.tinypic.com/21u6xg.jpg

Russelldvt
21st October 2015, 02:56 AM
http://i60.tinypic.com/2ik885k.jpgv

Russelldvt
21st October 2015, 02:57 AM
http://i62.tinypic.com/14xnzpt.jpg

Russelldvt
21st October 2015, 02:58 AM
http://i61.tinypic.com/ta1p2p.jpg

Russelldvt
21st October 2015, 02:58 AM
http://i58.tinypic.com/14u9ueo.jpg

Russelldvt
21st October 2015, 02:59 AM
http://i59.tinypic.com/k9dr8n.jpg

Russelldvt
21st October 2015, 03:00 AM
http://i57.tinypic.com/2z6fgx0.jpg

Russelldvt
21st October 2015, 03:01 AM
http://i62.tinypic.com/2606azb.jpg

Russelldvt
21st October 2015, 03:02 AM
http://i57.tinypic.com/23mkd44.jpg

Russelldvt
21st October 2015, 03:03 AM
http://i62.tinypic.com/1zvd2fn.jpg

Russelldvt
21st October 2015, 03:05 AM
http://i59.tinypic.com/2uj1svq.jpg

Russelldvt
21st October 2015, 03:06 AM
http://i59.tinypic.com/5usnm.jpg

Russelldvt
21st October 2015, 03:06 AM
http://i60.tinypic.com/es4wo5.jpg

Russelldvt
21st October 2015, 03:07 AM
http://i57.tinypic.com/t7df6r.jpg