PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

rajraj
14th June 2015, 01:22 AM
Enjoy your holidays chinnakkaNNan ! :) We are also going on vacation to California from the end of this month for four weeks ! Our fun is with the grandchildren ! :)

chinnakkannan
14th June 2015, 01:23 AM
கோவிலெல்லாம் ஏதுக்கு கொஞ்சும் குமரிக்காய்
பாவில் இசைப்போமே பண்ணைத்தான் – தூவிடும்
சாரலாய் நெஞ்சைச் சரம்போல் நனைத்துதான்
தூறும் அழகோ சுகம்.

https://youtu.be/6C_1sBH75vI

thanks rajraj sir..

chinnakkannan
14th June 2015, 01:48 AM
Pazhaiya write up and puthiya song

அந்த யூத் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் ஹிஸ் லவர்.. (மேஜர் சுந்தர் ராஜனைப் போல): எஸ்..அந்த க் கட்டிளம் காளை தன் மனம் கவர்ந்த கட்டிளம் காளிக்காக (ஓ அர்த்தமே மாறிடுதோ) இளமை ததும்பும் மங்கைக்காக அந்த மாமர நிழலில் மாலை நேரத்தில் காத்துக் கொண்டிருக்கிறான்..

“ஹாய்” எனத் துள்ளிக் குதிக்கும் சூரிய காந்திப்பூவாட்டாம் அவளும் வேகமாய் வந்து அவனைப் பார்க்கிறாள்..”ஸாரிப்பா (மே.சு..:மன்னிங்க அத்தான்!) கொஞ்சம் தாமதமாய்டுச்சு.. ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டு இருந்தீங்களோ..

”இல்லை டியர்.. வாழ்க்கைங்கறது என்ன..கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் காத்திருத்தல் தானே..

வார்த்தை வருமென்று மழலையிலே காத்திருந்து
…வாகாக அன்னையினை அழைத்துவிட்டுப் பூத்திருந்து
கூர்ந்து கவனித்துக் கல்விதனைக் கற்கையிலே
..கொள்ளை கொண்டுவிடும் இளமைக்காய்க் காத்திருந்து
சேர்ந்தே வாலிபமும் வந்துவிட துணைதேடல்
..செல்லும் வாழ்க்கையிலே மகவுக்காய்க் காத்திருந்து
ஊற்றும் ஒருகாலம் வற்றிவிடல் போலத்தான்
..ஓடிவந்த முதுமையிலே காத்திருப்போம் முடிவுக்கே..

இல்லையா டியர்”

“ஹேய் வாட் ஹேப்பண்ட் ( .: அன்பான முட்டாள் அத்தானே என்னாச்சு..கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமுமா இந்த மாலைவேளையில் ஒரு ஒய்யாரச் சிங்காரி சிருங்காரங் கொண்டு உன்னைத் தேடி ஓடி வந்தாக்க இப்படியா சொல்றது.! இவ்ளோ நீள வாக்கியம்கறதால கொஞ்சம் மூச்சு வேற வாங்குது! )
என்ன பண்றதுமனக்களைப்பு டியர்..

சரி போம் ஓய் ஒரு ரொமாண்டிக் பாட் நான் வேணுமானா பாடட்டா..

பாடேன்..

https://youtu.be/QcGmozm9Wlc

vasudevan31355
14th June 2015, 07:12 AM
( என்னால் ஓஹோ என எழுதவேவராது.)

ஓஹோ!:)

சின்னா!

'முத்துக் குளிப்பவ்ரே கொஞ்சம் பக்கத்தில வாங்க'.

எத்தனை முறை கேட்டாலும் முத்துதான்.

இந்தப் பாடலை ரவி த்ரெட்டில் தரவேற்றி எழுதிய ஞாபகம் வந்து விட்டது. ராகவேந்திரர் கொடுத்த உற்சாகத்தினால் செய்தேன். இப்படத்தின் எந்த தகவல்களும் அப்போது இல்லாத நிலையில் ராஜ் டிஜிட்டல் பிளசில் அதிர்ஷ்டவசமாக பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை அப்லோட் செய்து பதித்தேன்.(2011)

http://jollyhoo.com/wp-content/uploads/2010/02/Vijaya-Nirmala-Birthday-Celebration-Photo-Gallery-46.jpghttps://i.ytimg.com/vi/Ou6-Wl2jIsk/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/1esaLrBI9-4/hqdefault.jpg

'சத்தியம் தவறாதே' என்ற ரவிச்சந்திரன் அவர்களின் மிக மிக அபூர்வ படத்தைப் பற்றி பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 20.12.1968-இல் வெளிவந்த இந்தப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன், அவரது ஜோடியாக விஜயநிர்மலா ('பணமா பாசமா' புகழ் 'அலேக்' நிர்மலா தான். இவர் தெலுங்குத் திரைப்பட உலகின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவின் மனைவி ஆவார். 'பெஜவாடா பெப்புலி' என்ற நடிகர் திலகம், கிருஷ்ணா இணைந்து நடித்த தெலுங்குத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' என்ற தெலுங்கு மொழி மாற்றத் தமிழ் படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தவர். கிருஷ்ணாவின் ஜோடியாக பல தெலுங்குப் படங்களில் இவர் நடித்ததினால் இவர்கள் இருவருக்கும் காதல் அரும்பி அதுவே கல்யாணத்தில் முடிந்தது) மற்றும் 'மாஸ்டர்' பிரபாகர், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார் என்று நினைக்கிறேன். (C.N. பாண்டுரங்கன் அவர்கள் மகா இசைமேதை. அவர்கள் இசையமைப்பில் மிக மிக அற்புதமான பாடல்கள் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டின. (நடிகர் திலகத்தின் 'எதிர்பாராதது' படத்திற்கும் இசை இவர்தான். டைட்டிலில் பாண்டுரங்கம் என்று போடுவார்கள். தியாகராஜ பாகவதர் நடித்த 'புதுவாழ்வு' போன்ற படங்களுக்கு 'சங்கீதமேதை' ஜி.ராமநாதன் அவர்களுடன் சேர்ந்து இசை அமைத்தவர்)

'சத்தியம் தவறாதே... தாய் நாட்டினை மறவாதே' என்று மாஸ்டர் பிரபாகரன் பீச்சில் பாடுவதாக வரும் பாடல் சோஷலிச கொள்கைகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.

இப்படத்தின் vcd,dvd எதுவும் அப்போது கிடைக்கவில்லை. இந்தப் படத்தைத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். ஆனால் இப்போது வாங்கி விட்டேன். ஏனென்றால் சிறுவயது முதற்கொண்டே

"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...

பாடல் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. சிலோன் ரேடியோவில் இப்பாடலை பலமுறை கேட்டு மெய்மறந்து போய் இருக்கிறேன். இப்படத்தை 'விஜய்' தொலைக்காட்சியில் கூட முன்பு ஒருமுறை போட்டார்கள். அப்போது இந்தப் பாடல் காட்சியை மீண்டும் பார்த்து பூரித்துப் போனேன். பாடலுக்கேற்றவாறு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருந்தது இந்தப் பாடல். அவுட்டோரில் படமாகப் பட்டவிதம் மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் விதமாக உள்ளது. ரவியும் கேப்பெல்லாம் போட்டுக் கொண்டு அழகாகவே தோன்றுவார். டி எம்.எஸ்ஸின் குரல் ரவிக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும். இசைக்குயில் சுசீலாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். "இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன"... என்ற சரணத்தின் வரிகளை இருமுறை அவர் உச்சரிக்கும் விதம் அலாதியானது.

என்ன பாட்டுய்யா அது! 'சத்தியம் தவறாதே' ரவி, விஜயநிர்மலா ஜோடி. பாட்டுக்கள் ஒவ்வொன்றும் டாப் ரகம். இப்போது உங்கள் ரசனையால் இங்கேயே நானும் ரசிக்கிறேன்.

உங்கள் விடுமுறை நாட்கள் இனிதே கழிய வாழ்த்துக்கள் சின்னா!

vasudevan31355
14th June 2015, 07:21 AM
மிக மிக அரிதான இந்தப் படத்தில் தோன்றும் நட்சத்திரம் யார் என்று தெரிகிறதா?

http://www.gulte.com/content/2012/12/news/Pic-Talk--Guess-Who-Is-This--1303.jpg

uvausan
14th June 2015, 08:39 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/nest_zps1hpzd9ok.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/nest_zps1hpzd9ok.jpg.html)

uvausan
14th June 2015, 08:48 AM
கருவின் கரு - பதிவு 83

முத்து - தொடர்ச்சி

இந்த பாடல் CK விற்கு சமர்ப்பணம் - அருமையான பாடல் - அந்த காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த ஒன்று - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - இந்த பாடலும் , "முத்து குளிக்க வாரீங்களா " என்ற பாடலும் - ஆச்சியின் நடிப்பும் , நாகேஷ் அவர்களின் நகைச்சுவையும் கலந்த பாடல் - பாடல்களுக்காக பதிவுகளை போடுவதில்லை எனவே எல்லா பாடல்களையும் போட முடிவதில்லை -- சில உதாரணங்களை மட்டுமே தருகிறேன் .

https://youtu.be/BiD6xmKQcwg

uvausan
14th June 2015, 08:54 AM
கருவின் கரு - பதிவு 84


பவழம் ( Coral)


Unlike most other gemstones which are of mineral origin, Coral is organic, formed by living organisms. It forms from branching, antler-like structures created from coral polyps in tropical and subtropical ocean waters. When the coral polyps die, the hardened skeleton remains, and this material is what is used as a gemstone. Most coral is white, but nature can create coral in several other colors, including the popular orange to red forms. This Red Coral, or Precious Coral as it is often known by, is the most used gemstone form of Coral. In fact, the color known as coral is derived from the typical pinkish-orange color of many red Coral gemstones.


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Coral_zpsqcbtqlti.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Coral_zpsqcbtqlti.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images_zpsanuvmctm.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images_zpsanuvmctm.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/download_zpskekyoyso.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/download_zpskekyoyso.jpg.html)

அகத்தியரின் லலிதா நவரத்தின மாலை 4 - பவழம்

"சிந்தை நிறம்ப வளம் பொழி பாரோ
தேம் பொழி லாமிது செய்தவ யாரோ "

அம்பிகை நல்ல அறிவினை தரக்கூடியவள் - மழை போல அந்த உயர்ந்த அறிவை தருபவள் யாரோ அவளை நமஸ்கரிக்கிறேன் ..

நமது எண்ணங்கள்

அன்னை அறிவை மட்டுமா நமக்குத்தருகிறாள் , நல்ல பண்புகள் , எல்லோரயும் சமமாக நினைக்கும் சுபாவம் , சுய நலம் , தற்பெருமை இல்லாத அதே சமயத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இத்தனையும் அல்லவா நமக்கு ஊட்டுகிறாள் - இதனால் பவழமும் அவளிடம் , வயிரம் , முத்துக்கள், நீலம் தோற்றதைப்போன்று தோற்றுப்போய் விடுகிறது . அம்பிகையை விட அன்னை உயர்ந்தவள் ஆகுகிறாள் இங்கே .

உண்மை சம்பவம் 11 :

என் நண்பனின் அன்னை எங்கள் எல்லோரிடமும் முடிந்தவரை தருமம் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள் - ஒரு முறை மிகுந்த ஏழ்மை நிலைமையில் இருக்கும் ஒருவனிடம் , எங்களிடம் சொல்வதைப்போலவே தருமம் முடிந்தவரை செய் என்றாள் - அவன் சிரித்தான் - " அம்மா என் தினக்கூலி ரூபாய் 10 முதல் 30 வரியும் தான் - சராசரியாக மாதத்திற்கு ருபாய் 750 லிருந்து 800 வரைக்கிடைக்கலாம் - என்னால் எப்படி அம்மா தருமம் செய்ய முடியும் ? "

அந்த தாய் கொடுத்த அறிவுரை ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் கூட கிடைத்திருக்காது --- " தம்பி உன்னால் ஒரு ருபாய் தானம் செய்ய முடியுமா தினமும் ? " அவன் சொன்னான் - " முடியும் அம்மா "

" அது போதும் ! ஒரு காரியம் செய் - மளிகை கடைக்கு செல்- ஒரு ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை வாங்கு - அதை ஒரு எறும்பு புற்றில் போடு - அங்கே இருக்கும் ஆயிரம் எறும்புகளின் வயிறு நிறையட்டும் . யார் சொன்னது , மனிதர்கள் வயிறுதான் நிறைய வேண்டும் என்று ? அன்ன தானத்திற்கு மேல் ஒரு சிறந்த தானம் இல்லையப்பா !"

அந்த ஏழை இன்று ஒரு கம்பெனியின் முதலாளி - அந்த அன்னை சொன்ன அறிவுரை அவனை ஒரு மாடி வீட்டு செல்வந்தனாகியது .....

"பவழ நிறம் அவன் செவ்விதழ் "----- திருமங்கை ஆழ்வார் - உருக வைக்கும் ரங்கனின் நினைப்பு .....


https://youtu.be/l9dg_SPhdxM

காதுகளில் தென் பாயும் அடுத்த பாடல் உங்களுக்காக

https://youtu.be/oFLYvDYxGls

uvausan
14th June 2015, 09:00 AM
கருவின் கரு - பதிவு 85


பவழம் ( Coral)

https://youtu.be/ldnKyyfyI88 ( repeat )

https://youtu.be/qZP1-W-f_Fg

raagadevan
14th June 2015, 09:04 AM
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை...

https://www.youtube.com/watch?v=FPcypPogwCA

Thanks to Banu Oussaine Issoup & youtube for the video, MSV for the amazing composition
and Balu for the superb singing! :)

vasudevan31355
14th June 2015, 09:20 AM
நன்றி ராகதேவன். என்ன ஒரு அருமையான பாடல்! இப்பாடல் பற்றி பாலா தொடரில் விரைவில் வரும்.

இருந்தாலும் மனம் கேட்கவில்லை

நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது ஹம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி

நான் வாவென அழைக்கையில் விரைந்'தோடி'
வந்து தழுவிடும் தேவ மனோகரி
ஆ(யா)ரபிமனமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன் போல் பாவை இல்லை

நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்க
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே

ராகத்தின் பெயர்களைக் கொண்டு அருமையான ராகத்தில் ரகளை பாட்டு ராகதேவன் சார். அளித்ததற்கு மீண்டும் நன்றி!

raagadevan
14th June 2015, 09:34 AM
vaNakkam thiru Vasudevan 3135 :)

It was indeed a pleasure to post one of my favorite Balu songs. By the way, who wrote the lyrics? I am sure it was Kannadasan; but a friend of mine says it was Vaali!

raagadevan
14th June 2015, 09:38 AM
... and the song reminds me of one of my very dear friends! :)

vasudevan31355
14th June 2015, 09:45 AM
vaNakkam thiru Vasudevan 3135 :)

It was indeed a pleasure to post one of my favorite Balu songs. By the way, who wrote the lyrics? I am sure it was Kannadasan; but a friend of mine says it was Vaali!

https://40.media.tumblr.com/8404b425664d1cdf1a1a0365e128f773/tumblr_nodog2fPP61sgynjmo1_250.png:)

vasudevan31355
14th June 2015, 09:49 AM
ராகதேவன் சார்

'உனை என் வசம் தாவென நான் கேட்க' வரியின் போது 'தா' என்பதை பாலு 'தா' என்று வல்லினத்தில் உச்சரிப்பார். கவனித்தீர்களா! சரியோ? தவறோ?:)

vasudevan31355
14th June 2015, 09:55 AM
ராகதேவன் சார்,

இன்று முழுக்க இப்பாடலை முணுமுணுக்கும் படி செய்து வைத்து விட்டீர்களே!:)

RAGHAVENDRA
14th June 2015, 10:05 AM
ரவி
பவழம்... அருமையான ரத்தினம்.. பாடல்களும் அதே போல்..
இதோ மறக்க முடியாத பவழம் ... இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் இசையரசியின் குரல்களில்

பவழ மணித் தேரேறி பவனி வரும் தென்றலே..

[ஆஹா.. சி.க. சாரின் கற்பனைக்கு செம தீனி ]

http://www.inbaminge.com/t/n/Neram%20Nalla%20Neram/

RAGHAVENDRA
14th June 2015, 10:11 AM
அபூர்வ கானங்கள்

டி.எம்.எஸ். பாடி நடித்து பாடல் காட்சி.. இசைக் குழுவை நடத்துபவர், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜெயவிஜயா.

பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஷண்முகப்ரியா

https://www.youtube.com/watch?v=RW7TP50y68A

raagadevan
14th June 2015, 10:12 AM
ராகதேவன் சார்

'உனை என் வசம் தாவென நான் கேட்க' வரியின் போது 'தா' என்பதை பாலு 'தா' என்று வல்லினத்தில் உச்சரிப்பார். கவனித்தீர்களா! சரியோ? தவறோ?:)

வல்லினமா? அப்படின்னா என்னாங்க? ;) எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்ங்க! :) Really! My "expertise" in Tamil is very very limited; mostly limited to Tamil Film Songs and a few writings by Kannadasan, vaali, Jayakanthan, etc!

chinnakkannan
14th June 2015, 10:13 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

வாசுசார்..அதகளம் பண்ணிவிட்டீர்கள் மு.கு பாட்டை.. எனக்கு படமெல்லாம் எப்படி என்று தெரியாது. .இந்தப் பாட்டு சின்னவயதில் கேட்டிருப்பேனா எனவும் நினைவில்லை..இங்கு நமக்காகத் தேடியபோது தான் கேட்டேன் சில தினங்கள் முன்..பச்சக் கென்று மனதில் ஒட்டிக் கொண்டுவிட்டது- தில் தடுகனே தூ வில் அனுஷ்கா ஷர்மா ரன்பீர் சிங்கிற்குக் கொடுக்கும் லிப் லாக்கைப் போல (படம் பார்க்கவில்லை எனில் பார்க்கவும்..கொஞ்சம் நீளம் ஆனால் நைஸ்)- அழகான விவரணைக்கு தாங்க்ஸ்..

பவழம் நு (கோரல் கொஞ்சம் காஸ்ட்லி ஸ்டோன் தெரியுமோ) பார்த்தவுடனே ஆஹா அழகான பாட்டுக்கள் இருக்கேன்ன்னு நினைச்சேன்.. எல்லாம் கொடுத்துட்டீங்க ரவி.. மு.கு.வா பாட்டுக்கும் தாங்க்ஸ்

ராகவேந்தர் சார்..அந்தப் பாட்டுக் கேட்டதில்லையே.. சரி வீட் போய்க் கேக்கறேன்.. முதல்வரியே இன் ட்ரஸ்டிங்கா இருக்கு

ராகதேவன்..இனிய சர்ப்ரைஸ்.. நீ ஒரு ராக மாலிகை.. எனக்கும் பிடிக்கும் தாங்க்ஸ் :)

வியாழன் தான் போகிறேன் லீவில் எனில் .. உஷார் அதுவரை வருவேன் :)

chinnakkannan
14th June 2015, 10:16 AM
க் ச ட த ப ற வல்லினம்
ஞ ங நனமண மெல்லினம்
ய ர ல வ ழ ள இடையினம்..

ராகதேவன் சரியா.. சரி சரி குருதட்சனையா இன்னோர் பாட் போடுங்க ( ஆஹா சிஷ்யப் புள்ளைங்க எண்ணிக்கை ஜாஸ்தி ஆவுதே!) :)

vasudevan31355
14th June 2015, 10:17 AM
எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்ங்க! :)

நம்ப முடியவில்லை...இல்லை...இல்லை...:)

rajeshkrv
14th June 2015, 10:22 AM
ராகதேவன் தனக்கு தமிழ் வராது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது எழுத்துக்கள் எல்லாமே அவர் ஒரு சிறந்த தமிழர் என்று நிரூபிக்கவே செய்கிறது.

வணக்கம் ஜி

rajraj
14th June 2015, 10:22 AM
வல்லினமா? அப்படின்னா என்னாங்க? ;) எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்ங்க! :) Really! My "expertise" in Tamil is very very limited; mostly limited to Tamil Film Songs and a few writings by Kannadasan, vaali, Jayakanthan, etc!

Very honest admission RD ! :) tha is vallinam ! :)

vasudevan31355
14th June 2015, 10:22 AM
'த' வல்லினம் சின்னா. சரி! அதையே இன்னும் 'த' என்று மிக வன்மையாக உச்சரிப்பார் பாலா. 'த' வை இன்னும் பிளாக்காகக் காட்டியிருக்கிறேன் பாருங்கள். தாமரைப் பூக்களை தாமரைப் பூக்கள் என்று உச்சரிக்க இயலாதே.:)

rajraj
14th June 2015, 10:24 AM
க் ச ட த ப ற வல்லினம்
ஞ ங நனமண மெல்லினம்
ய ர ல வ ழ ள இடையினம்..


Correct ! :) But, the sound depends on adjacent letters ! :)

vasudevan31355
14th June 2015, 10:25 AM
ராகதேவன் தனக்கு தமிழ் வராது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது எழுத்துக்கள் எல்லாமே அவர் ஒரு சிறந்த தமிழர் என்று நிரூபிக்கவே செய்கிறது.

வணக்கம் ஜி

வணக்கம். வணக்கம்ஜி. உண்மை.

vasudevan31355
14th June 2015, 10:26 AM
Correct ! :) But, the sound depends on adjacent letters ! :)

Correct ! :)

rajeshkrv
14th June 2015, 10:33 AM
ஆரம்பத்தில் பாலு சில வார்த்தைகளையும் எழுத்துக்களையும் தவறாக உச்சரித்திருப்பார். போக போக சரியாக்கிகொண்டார் .

chinnakkannan
14th June 2015, 10:38 AM
டபக்குன்னு மனசுல பட்ட பாட்டு செந்தமிழில் ஒரு பாட்டெழுதி.. கெடைக்கலை.. ஆனா எஸ்பிபி..மெல்ல வரும். வாசு சார் கிட்டக்க இருந்து..:)

Gopal.s
14th June 2015, 10:42 AM
இசை அமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பது ஒரு symbiotic உறவே. நௌஷட் ஒரு விஸ்வநாதன்-ராமமூர்த்தி பக்தர். விஸ்வநாதன்-ராமமூர்த்தியோ நௌஷத் அவர்களை குரு போல பாவிப்பவர்கள். Mutual Admiration Group .நௌஷட் சாத்தி படத்தில் பாலும் பழமும் போல தர முடியவில்லை என்று குறிப்பிட்டதாக ஞாபகம்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,சுப பந்துவராளி ராகத்தில் அவர்கள் பாலும் பழமும்(1961) படத்தில் இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா என்று முயற்சி செய்தனர். பல அற்புத பாடல்கள் நிறைந்த அந்த படத்தில் ஏனோ இந்த பாடல் சுமாராகவே எடு பட்டது. பாடல் நல்ல பாடல் என்ற போதும் ,ஒரு முழுமை missing .பிறகு 1964 இல் leader என்ற படம் நௌஷட் இசையமைப்பில் பேச பட்ட படம்.இதில் லலித் என்று ஹிந்துஸ்தானி ராகத்தில் ஒரு பாடல்.(ஏக் ஷஹன் ஷா ,ரபி-லதா)

http://www.bing.com/videos/search?q=leader%20Songs%2CHindi&qs=n&form=QBVR&pq=leader%20songs%2Chindi&sc=0-16&sp=-1&sk=#view=detail&mid=026EC6995E7D3F662F76026EC6995E7D3F662F76

ஆஹா ,இணை ,இந்த feel ,melody ,ராக கூறுகள் ,சுப பந்துவராளியின் சில சங்கதிகள்,காதலின் உருக்கம் ,காலத்தை வென்று நிற்கும் பாடல் தயார்.உன்னை நான் சந்தித்தேன்(1965) .சுசிலாவின் அற்புத மாய குரலின் உருக்கம் நிறைந்த பிரிவின் துயர்,காதலின் போக்கு,எதிர்பார்ப்பு .

பிறகு இதனை மிஞ்சும் ஆட்டுவித்தால் யாரொருவர்(1975) இதே சுபபந்துவராளியில்.சௌந்தரராஜன் ,சுயவிரக்கம்,சுய விளக்கம்,தத்துவம் சார்ந்த சுய ஆறுதல் கலந்து பாட ,மற்ற பாடல்களுக்கு அமையாத இன்னொன்று நடிகர்திலகம்.ஏதோ சிந்தனையில் மூழ்கியிருக்கும் அவர்,கிருஷ்ணர் வேடமிட்டு வரும் நண்பன் குழந்தையை சட்டென்று நிலைக்கு வராமல், சுதாரிக்கும் அழகு. புது பரிமாணம் கண்ட பாடல்.

https://www.youtube.com/watch?v=SPuXeYJcXhA

https://www.youtube.com/watch?v=K0kaOdXV21g

https://www.youtube.com/watch?v=3erd1grA2y0

rajraj
14th June 2015, 10:42 AM
ஆரம்பத்தில் பாலு சில வார்த்தைகளையும் எழுத்துக்களையும் தவறாக உச்சரித்திருப்பார். போக போக சரியாக்கிகொண்டார் .

That is true of some carnatic vocalists born and brought up in Tamilnadu! Sad ! :(

raagadevan
14th June 2015, 10:47 AM
க் ச ட த ப ற வல்லினம்
ஞ ங நனமண மெல்லினம்
ய ர ல வ ழ ள இடையினம்..

ராகதேவன் சரியா.. சரி சரி குருதட்சனையா இன்னோர் பாட் போடுங்க

கண்ணா... I really don't know.. the only "இனம்"s that I know are:

இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்...
:)

rajeshkrv
14th June 2015, 10:50 AM
ராப் இசை கொடி கட்டி பறந்த காலமது
கணவனுடன் ஒரு விருந்துக்கு செல்கிறாள் மனைவி
தலைவிரி கோலமாக எல்லோரும் ஆடிக்கொண்டிருக்க மனைவி பொருக்க முடியாமல் நிறுத்துங்கள் என்று கத்தி
நம் மண்ணின் பெருமையை பாட்டாக படிக்கிறாள்

https://www.youtube.com/watch?v=mg4CHkvyyUo

adiram
14th June 2015, 10:58 AM
டியர் சின்னக்கண்ணன் சார்,

சைக்ளோன் பற்றி இவ்வளவு பில்டப் கொடுக்கும்போதே நினைத்தேன், அது உங்களை ஏமாற்றி விட்டு வேறு பக்கம் போய் விடுமென்று. ஆனால் சொல்லவில்லை. சொல்லப்போய் அது மாதிரி நடக்கப்போய், எதுக்கு வம்பு. ஏற்கெனவே திரியில் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லபேரு.

ஆனால் புயல் வரலைன்னு வருத்தப்படுற ஆள் நீங்க ஒருவராகத்தான் இருக்கும். அந்த அளவு வெயில் வாட்டிஎடுக்குதுன்னு நினைக்கிறேன். இங்கும் அப்படித்தான்.

தவிர நான் வெண்பா இலக்கணம் படித்தவன் அல்ல. உங்கள் வெண்பாக்களை படித்துப் பார்த்து 'ஓஹோ வெண்பா இப்படித்தான் எழுதணும் போலும்' என்று எழுதிப் பார்த்தேன். சரி, வெண்பாவில் சேர்க்கத் தகுதியில்லை என்றாலும் 'வெறும்பா' விலாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.

எனது தமிழில் ஏன் எல்லோருக்கும் சந்தேகம் என்று தெரியவில்லை. நான் தமிழ் மட்டுமே தெரிந்த தமிழன். தமிழ் எழுதத் தெரியாதவன் அல்ல. ஆனால் அதை எப்படி இணையத்தில் சேர்ப்பது என்று வழி தெரியாமல் விழித்தவன். அன்பு நண்பர் பிரபுராம் வழிகாட்டினார். அதனால் என இணையத்தமிழுக்கு அவர்தான் குரு. என முதல் தமிழ்ப் பதிவைக்கூட அவருக்கே சமர்ப்பித்தேன்.

'பாடல்கள் பற்றி அலசும் இடத்தில் இவன் என்ன சுயபுராணம் பாடிக் கொண்டிருக்கிறான்' என்று யாரோ அடிக்க வருகிறார்கள். ஆகவே விடு ஜூட்.

chinnakkannan
14th June 2015, 11:44 AM
//பாடல்கள் பற்றி அலசும் இடத்தில் இவன் என்ன சுயபுராணம் பாடிக் கொண்டிருக்கிறான்' என்று யாரோ அடிக்க வருகிறார்கள். ஆகவே விடு ஜூட்.// அன்பின் ஆதிராம்..உங்கள் தமிழில் சந்தேகம் இல்லை.. நன்றாகவே இருக்கிறது.. சரி அதைவிடுங்கள்

சுயபுராணம் எல்லாம் பாடலாம் தான்.. நான் பாடாததா.(எல்லாரும் எவ்ளோ பொறுமையா இருக்காங்க தெரியுமா :) ).என்ன அத்துடன் ஒரு பாட் போட்டு விடுங்கள் எழுத்தில்.. அல்லது காணொளியாய்.. அம்புட்டு தான் ..அதான் இங்கே கண்டிஷனே..

uvausan
14th June 2015, 12:21 PM
அருமை கோபால் சார் - உங்கள் முதல் பதிவே கலக்குகிறது - ரசித்துப்படித்தேன் - நன்றி

uvausan
14th June 2015, 12:24 PM
திரு ராகதேவன் - உங்களைப்பற்றி மிகவும் உயர்வாக வாசு சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் - உங்கள் வரவு இந்த திரியில் நல்வரவாகட்டும் .

அன்புடன்
ரவி

uvausan
14th June 2015, 12:28 PM
Ck - "எங்கேயோ போயிட்டிங்க " என்று சில நாட்களுக்கு முன் உங்களை பற்றிக்குறிப்பிட்டிருந்தேன் - உண்மையில் இந்த ஒரு மாதத்தில் எங்கேயோ போகப்போகிறீர்கள் என்று தெரிகிறது ... ம்ம் எல்லாம் மாய மோதிரமும் , பாரதியும் செய்யும் வேளை .. உங்கள் விடுமுறை அருமையாக அமைய வாழ்த்துக்கள் .

uvausan
14th June 2015, 12:30 PM
நன்றி ராகவேந்திரா சார் - பவழத்தை ரசித்தது மட்டும் அல்லாமல் விட்டுப்போன பாடலையும் அருமையாக பதிவிட்டதற்கு

uvausan
14th June 2015, 12:31 PM
ராஜேஷ் - உங்கள் "திரையில் பக்தி " என்னவாயிற்று ? intermission ஆ ??

uvausan
14th June 2015, 12:37 PM
திரு கல்நாயக் - பூக்களை பறித்துவிட்டு மாலையாக தொடுக்கா விட்டால் அவைகள் வாடிப்போக வாய்ப்பு அதிகம் - நீங்கள் இதுவரை போட்ட பூக்கள் பதிவுகளை நுகர்ந்தவுடன் , வீட்டில் இருந்த எல்லா நறுமண , வாசனை திரவியங்களையும் தூக்கி எறிந்து விட்டேன் - பூக்கள் வரவில்லை என்றால் , மீண்டும் தூக்கி எறிந்த பொருள்களை தேவை இல்லாமல் வாங்க வேண்டியதாகி விடும் . தொடர வேண்டுகிறேன் ----

adiram
14th June 2015, 12:41 PM
டியர் வாசு சார்,

சத்தியம் தவறாதே படத்தில் இடம்பெற்ற 'முத்துக் குளிப்பவரே' பாடல் அலசல் அருமை (ஸர்ப் எக்ஸல்..??)

சின்ன வயது விஜயநிர்மலா என்றால் எனக்கு எப்போதும் ஒரு கிக்தான். (கிருஷ்ணா இந்த பதிவெல்லாம் படிக்க மாட்டார்தானே..! அட, நம்ம கிருஷ்ணாஜி இல்லீங்க, திருவாளர் விஜியைச் சொன்னேன்). விஜி கொஞ்சம் கருப்பு நிறம்தான். கருப்புவெள்ளை படங்களிலேயே நடித்ததால் தெரியவில்லை. ஆனால் என் அண்ணன் காட்டிக்கொடுத்து விட்டார்.

இதென்ன அதிசயம்..?.

பணமா பாசமா, மோசக்காரனுக்கு மோசக்காரன் எல்லாம் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஞான ஒளியைக் காணோம்.

நீங்களாவது..., ஞான ஒளியையாவது... தவிர்ப்பதாவது..... எப்படி?.

vasudevan31355
14th June 2015, 02:54 PM
'சவாலே சமாளி'...'தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி'

ஆதிராம் சார்,

கலக்கல். விழுந்து விழுந்து சிரித்தேன். நன்றி!

எனக்கு ஒளியை மற்றவற்றுடன் கலக்க மனதில்லை சார். அது த.........னி. 'மோசக்காரனுக்கு மோசக்கார'னுடன் சேர்த்து மோசம் போகாமல் காத்துக் கொண்டேன்.:)

இப்போ வேலை வைத்து விட்டீர்களே! தமிழில் வர்ணத்தில் திருமதி கிருஷ்ணா வேறு எதிலாவது அகப்படுகிறாரா என்று தேட வேண்டுமே!:)

http://rymimg.com/lk/f/l/d9ea44bd40617517761d35d524269b9a/4430891.jpg

'ஒளி' தவிர்த்து பார்த்தால் என் ஓட்டு 'உயிரா மானா' விற்கே. விஜி விளையாடுவார் இந்தப் படத்தில்.

நம் தலைவரின் பட டைட்டிலின் தலைப்பு உள்ள பாடல் வரியில் ஜெய்யுடன் இணைந்து அம்மணி அட்டகாசம் பண்ணுவாரே ஆண்பிள்ளை ரேஞ்சுக்கு.

போதாதற்கு என் ராட்சஸி (இதற்கு 'நம்' ராட்சஸி போட மாட்டேன்):) வேறு குரலாயிற்றா? பாடகர் திலகம் உடன் சேர்ந்து பட்டை கிளப்புவார். சின்னா பார்க்காத புயலை, இன்பப் புயலை இப்பாட்டில் அனுபவிக்கலாம்.

இன்னா ஆட்டம்... இன்னா பாட்டம்... இன்னா லிரிக்ஸ். அமர்க்களம் போங்க.

எப்பேர்ப்பட்ட கோழைக்கும் தன்னம்பிக்கை தந்து வீரமாக்கிவிடும் அசுரப் பாடல்.

அதுவும் விஜி... பட்டுப் பாவாடை தாவணியில் பளீர் என்று, பாவாடையைத் தூக்கி இடுப்பில் செருகிக் கொண்டு, 'குதிரைவால்' கொண்டை போட்டு, 'மக்கள் கலைஞ'ருடன் மகா நெருக்கம். (அந்த மச்சம் வேறு மனுஷனைப் பாடாப் படுத்துது). 'மயங்கும் வயது' பாடலில் எம்.ஜி.ஆர் அவர்களும், மேடமும் பண்ணும் அதே காரியங்களைத்தான் இங்கே இவர்களும் செய்கிறார்கள்.:) பாறாங்கல் குன்றுகளின் மீது நின்று டப்பாப்ங்குத்து குத்தாட்டம் போடுவது குற்றால குதூகலம். ஜெய் பல இடங்களில் ஜாலியாக ஆடினாலும் சில இடங்களில் தடுமாறுவார்.

கருங்கல் குன்று ஒன்றின் மேல் விஜி துணிச்சலாக ஏறி நின்று, அந்தக் கால ஏர் உழவன் ரேஞ்சிற்கு கைகளை உயர்த்தி, 'எதிர்த்து நின்னு கணக்கு பண்ணி' நம்மை சமாளிக்க சொல்வது உண்மையிலே பார்க்கும் நமக்கு 'மூச்சு முட்டும்' சவால்தான் சாமி.

ஜெய்யாவது பரவாயில்லை... மனிதர் ஷூ போட்டுக் கொண்டு சமாளித்து ஆடுவார். ஆனால் விஜியோ காலில் காலணி இல்லாமலேயே அந்த கற்பாறைகளின் மீது வெயிலில் கால் சூடையும் கண்டு கொள்ளாமல் ஆடுவார்.

அந்தக் காலத்தில் அப்படி ஒரு தொழில் பக்தி, சின்ஸியாரிட்டி, அர்ப்பணிப்பு இருந்தது. பெண்டு கழன்று விடும். இப்போது காரவான், ஏ.சி சொகுசு என்று இளசுங்க நோகாம மினுக்கிகிட்டு 'கேட் வாக்' போகுதுங்க. பணமா சம்பாதிச்சி ரியல் எஸ்டேட் பிசினெஸ் பண்ணுதுங்க.

ராட்சஸியப் பத்தி சொல்லாமலா? வேறு எவரையும் இந்தப் பாட்டிற்கு இவரை விட்டால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

தெனாவாட்டு, திமிர், 'சொல்வதை அப்போதே கேட்டு செய்' என்பது போல உத்தரவு, அகங்காரம், ஆணை, அலட்சியம் என்று வார்த்தைகளில், எழுத்துக்களின் உச்சரிப்பில் உன்னத அதிசயங்கள் படைப்பார்.

ஒரே ஒரு இடம் உதாரணத்திற்கு சொல்கிறேனே...

'கெழவன் கூட சமாளிக்கும் சவ்..வாலே
நீ குமரனய்யா கம்பெடுத்து ச...மாளி'

இந்த வரிகளை அவர் பாடுவதை கவனியுங்கள். அப்படியே சரண்டர் ஆகி விடுவீர்கள். 'சவாலே' என்பதை அழுத்தி அதனுடன் வ்' சேர்த்து சவ்..வாலே' என்று அவர் உச்சரிக்கும் போது நம் உடல் சிலிர்த்துப் போகும். 'லே' முடிவதே தெரியாது. கண்ணதாசனின் வலுவான வரிகளுக்கு எல்.ஆர் ஈஸ்வரி மேலும் வலு சேர்த்திருப்பார். இசை 'மெல்லிசை மன்னர்'. ராட்சஸியை யூஸ் பண்ணும்போதே தெரியுதே.

அமர்ஜோதி மூவீஸ் அளிக்கும் இப்படத்தை இயக்கியவர் 'கேள்வி தலைப்பு' இயக்குனர் கே.எஸ்.ஜி.:)

இன்று ஞாயிற்றுக் கிழமை. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தேன். வச்சார் ஆதிராம் வேலை. விஜி நினைவுகளை அவர் கிண்டிவிட, நான் அதற்கு மண்டியிட, வந்தது இன்ப ஆபத்து.

ஆதிராம் சார்! ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். தூண்டுகோலாய் துணை நின்றதற்கு நன்றி!

ஆனால் எல்லாவற்றுக்கும் மூல காரணகர்த்தாவாக 'முத்துக் குளித்துவிட்டு' நம் இருவரையும் 'கொஞ்சம் பக்கத்துல வரச்' சொல்லி, புயல் வரலயேன்னு ஒரு மனுஷர் கவலைப்படுகிறாரே:) அவரை என்ன செய்தால் தகும்?

நீங்களே சொல்லுங்கள்.

http://i.ytimg.com/vi/BIVSyDEm_2g/hqdefault.jpg

இன்னொரு விஷயம்...இந்தப் படத்தின் சில காட்சிகள் நெய்வேலி டவுன்ஷிப்பில் ஷூட் செய்யப்பட்டது. நிலக்கரி வெட்டி எடுக்கும் போது வரும் மண்ணை அப்படியே மலை போல குவித்து வைத்து விடுவார்கள். விண்ணைத் தொடும் அளவிற்கு அந்த மணல் மலை இறுகி இருக்கும். அங்கேயெல்லாம் இந்தப் படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. முதலாம் அனல் மின் நிலையம், முதாலம் சுரங்கம் இவைகளின் அருகே.)

முத்துராமன் அயல்நாட்டு அம்மணி கிருஷ்ணகுமாரியிடம் பாடும்,

'நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு' (சீர்காழியார் குரல்)

பாடல் வரிகள் இன்னும் நெய்வேலிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்.

அற்புதமான இந்த லோ-கிளாஸ் பாடலை ஆனந்தத்துடன் கேளுங்கள். ஆனால் கருத்து ரொம்ப ஹை-கிளாஸ்.

என்ன? நண்பர்களே! சவாலை சமாளிக்கத் தயாரா?:)

https://i1.ytimg.com/vi/mnrlgPC4Pb0/hqdefault.jpg

சவாலே சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி

சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி

வயசிருக்கு சைஸிருக்கு பவுசிருக்கு
வயசு வந்த சின்னக் குட்டி எதிரிருக்கு
வயசிருக்கு சைஸிருக்கு பவுசிருக்கு
வயசு வந்த சின்னக் குட்டி எதிரிருக்கு
சமாளி முடிஞ்சா சமாளி

சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி

ஏழைக்குன்னு வறுமை விட்ட சவாலே
நீ எதிர்த்து நின்னு கணக்கு பண்ணி சமாளி

ஏழைக்குன்னு வறுமை விட்ட சவாலே
நீ எதிர்த்து நின்னு கணக்கு பண்ணி சமாளி

ஏய்ச்சி வாழும் கூட்டமிட்ட சவாலே
நீ மூச்சு நிற்கும் நேரம் மட்டும் சமாளி

நலமிருக்கு பலமிருக்கு குலமிருக்கு
நல்லவர்க்கு சாமி ஒன்னு துணையிருக்கு

நலமிருக்கு பலமிருக்கு குலமிருக்கு
நல்லவர்க்கு சாமி ஒன்னு துணையிருக்கு
சமாளி முடிஞ்சா சமாளி

சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி

கையைத் தூக்கி எதிரி விட்ட சவாலே
ஆஹா காலைத் தூக்கி தலையில் வச்சி சமாளி
காசுக்கார கூட்டமிட்ட சவாலே
நீ தூசு போல தூக்கிப் போட்டு சமாளி

துணிச்சலுக்கு தோல்வி இல்லே துக்கமில்லே
துக்கம் வந்தா நானிருக்கேன் பக்கத்திலே
சமாளி முடிஞ்சா சமாளி

சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி

கெழவன் கூட சமாளிக்கும் சவ்..வாலே
நீ குமரனய்யா கம்பெடுத்து ச...மாளி
கெழவன் கூட சமாளிக்கும் சவ்..வாலே
நீ குமரனய்யா கம்பெடுத்து ச...மாளி
அழகுப் பொண்ணு உனக்கு விட்ட சவாலே
நான் அதிசயமா நெனைக்குமட்டும் சமாளி

கொட்டடி மேளம் தட்டடி தாளம் போடடி சும்மா
விட்டது ஏதும் சொல்லணுமின்னா சொல்லடியம்மா
கொட்டடி மேளம் தட்டடி தாளம் போடடி சும்மா
விட்டது ஏதும் சொல்லணுமின்னா சொல்லடியம்மா
சமாளி முடிஞ்சா சமாளி

சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
சவாலே சமாளி


https://youtu.be/PthwY8km7r8

chinnakkannan
14th June 2015, 03:53 PM
வாசுங்க்ணா. இது நியாய்மா தர்மமா நீதியா முறையா..

ஞான் முன்பே எடுத்து வைத்திருந்த பாட்டாணு இது.. நிஞ்ஞள்கிட்ட போட்டாச் கேட்ட பின்னால் போடலாம் என சவாலே சமாளியை வைத்திருந்தேன்.. நீங்கள் என்னடா என்றால் ஆற அமரத் துவைத்து சர்ஃப் எக்ஸெல் போட்டு பின் உஜாலாவும் இட்டு வெளுத்துவிட்டீர்கள்..

கேட்பதற்கு இனிமையான இந்தப் பாடலை பாகம் 4 ஆரம்பிக்கும் போது தான் பார்த்து வைத்திருந்தேன்..

விஜி நினைவுகளை அவர் கிண்டிவிட, நான் அதற்கு மண்டியிட, வந்தது இன்ப ஆபத்து. // வாங்க வாங்க வூட்டாண்ட சொல்றேன் :)

//அந்த கற்பாறைகளின் மீது வெயிலில் கால் சூடையும் கண்டு கொள்ளாமல் ஆடுவார்.// பாவம் குழந்தை கஷ்டப் பட்டிருக்கும்.:)

அதுவும் விஜி... பட்டுப் பாவாடை தாவணியில் // என்னா ஒரு பார்வை..சாமி சத்தியமா அது பட் பாவாடை தாவணின்னு நான் கவனிக்கலை..

//அவரை என்ன செய்தால் தகும்? // பாவம் இவரும் குழந்தை தான் விட்டுடுங்க.. :) தாங்க்ஸ்ங்க்ணா ஃபார் த நைஸ் எழுத்தாடல் அண்ட் காணொளி.. எதுக்கும் போற போக்குல ஒண்ணு கேட்டு வச்சுடலாம் :)

நீங்க எப்போ பாட் தரப் போறீங்க ஆதிராம் ?

adiram
14th June 2015, 04:43 PM
டியர் வாசு சார்,

கொஞ்சம் தூண்டி விட்டால் போதும், மனிதர் நர்த்தனம் ஆடிடுவீங்களே. கிட்டத்தட்ட எனக்கு டெடிகேட் செய்தது போல வந்த 'சவாலே சமாளி' பாடல் ஆய்வு ரொம்ப ரொம்ப அருமை. பார்த்தால் சாதாரணமாக தெரியும் பாடலில் கூட எப்படி இவ்வளவு நுணுக்கங்களை ஆராய முடிகிறது என்பது ஆச்சரியமே.

ஜெய்சங்கருக்கு சண்டைபோடத் தெரிந்த அளவுக்கு ஆடத்தெரியாது. ஒருமாதிரி தையா தக்கா என்று குதித்து, தனது ட்ரேட்மார்க் நடை நடந்து 'சமாளித்து' விடுவார். 'முத்துப்பொண்ணு வாம்மா' பாடலில் ஆட்டத்தில் தேர்ந்த விஜயலட்சுமியுடன் ரொம்பவே பரிதாபப்பட வைப்பார்.

பாறை சூட்டில் விஜயநிர்மலா வெறுங்காலுடன் ஆடுவது பாவமாகத்தான் இருக்கும். போக்கிரி ராஜா படத்தின் 'போக்கிரிக்கு போக்கிரி ராஜா' பாடல் ஷூட்டிங்கில் ரஜினிக்கு மட்டும் ஷூ கொடுத்து தன்னை வெறும் கால்களுடன் ஆடச்சொன்ன எஸ்.பி. முத்துராமனுடன் போக்கிரி ராணி ராதிகா சண்டைக்குப்போனாறாம் தனக்கும் காலணி வேண்டுமென்று. "நீ போட்டிருக்கும் உடைக்கும் காலணிக்கும் பொருந்துமா?" என்று கேட்டு ரஜினிதான் நிலைமையை சமாளித்தாராம் (பெண்ணுரிமை இயக்கங்களே குறித்துக் கொள்ளுங்கள்)

'நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு' வரிகளுக்கு நடித்தவர் கிருஷ்ணகுமாரியா?. நான் பாரதி என்று நினைத்திருந்தேன். (இங்கு ஒருவர் மகாகவி பாரதியாரை நீச்சல் உடையில் கற்பனை செய்த கொடுமை வேறு).

நீங்கள் ஓய்வெடுக்கப் போவதாக சொன்னதால் விஜயநிர்மலாவின் மற்ற பாடல்களான
'வாழைத்தண்டு போல உடம்பு அலேக்' (போட்டாச்சோ?)
'சந்திப்போமா இன்று சந்திப்போமா'
'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாகக'
'அம்மா கண்ணு சும்மா சொல்லு'
போன்ற பாடல்களைப் பற்றி கேட்கவே மாட்டேன்.

நன்றியுடன்

uvausan
14th June 2015, 05:42 PM
திரு ஆதிராம் - தயிரியமாக என் பெயரை குறிப்பிட்டிருக்கலாமே - ஏன் சுத்தி வளைத்து யாரோ ஒருவர் என்று எழுதுகிறீர்கள் - நண்பர்களாகத்தானே பழகுகிறோம் - முக மூடி தேவை இல்லையே - உங்கள் பதிவுகளில் யாராவது ஒருவர் மாட்டுவார் என்று தெரியும் - ஆனால் இன்றே நான் மாட்டுவேன் என்று நினைக்கவில்லை . என் பதிவுகளுக்கு "likes " போடும் உங்களுக்கு என்னை திட்டவும் உரிமை உள்ளது - ஆனால் ஒரு நகைச்சுவை உணர்ச்சியுடன் எழுதினதை " கொடுமை " என்று நீங்கள் சொன்னததுதான் "கொடுமை " - உங்களுக்கு அதிக நகைச்சுவை உணர்ச்சிகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .உடையினில் வறுமை என்பதை பாரதி தன் வாழ்நாள் முழுவதும் கண்டவர் . நண்பர்களாக பழகும் இந்த திரியில் மறைமுகத்தை தவிர்க்க வேண்டுகிறேன் . உங்களுக்காக இந்த பாடல் என் அன்பளிப்பு

https://youtu.be/2jI17IGAtUI

adiram
14th June 2015, 06:43 PM
சின்னக்கண்ணன் சார்,

உடையினில் வறுமை என்று காந்தியை சொல்கிறீர்களா அல்லது பாரதியாரை சொல்கிறீர்களா?. எனக்கென்னவோ பாரதியாரை கோட்டும் முண்டாசும் இல்லாமல் ஒரு படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. அவருக்கு உடையினில் வறுமையா?. சரி, ஆன்றோர்கள் சொல்லும்போது நம்பித்தான் ஆகணும்

vasudevan31355
14th June 2015, 07:12 PM
//எனக்கு டெடிகேட் செய்தது போல வந்த 'சவாலே சமாளி' பாடல் ஆய்வு ரொம்ப ரொம்ப அருமை.//

:):)

vasudevan31355
14th June 2015, 07:13 PM
//நீங்கள் ஓய்வெடுக்கப் போவதாக சொன்னதால் விஜயநிர்மலாவின் மற்ற பாடல்களான
'வாழைத்தண்டு போல உடம்பு அலேக்' (போட்டாச்சோ?)
'சந்திப்போமா இன்று சந்திப்போமா'
'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாகக'
'அம்மா கண்ணு சும்மா சொல்லு'
போன்ற பாடல்களைப் பற்றி கேட்கவே மாட்டேன்.//

நானும் தரவே மாட்டேன்.:):)

vasudevan31355
14th June 2015, 07:15 PM
//'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாகக'//

ஜாக்கிரதையா இருக்கணும்பா மனுஷர்கிட்ட.:) இதைக் கூட ஞாபகம் வச்சுண்டிருக்கார்.:)

vasudevan31355
14th June 2015, 07:16 PM
இன்னைய டார்கெட் அப்பாவிப் பிள்ளை ரவியோ?

vasudevan31355
14th June 2015, 07:19 PM
//வாங்க வாங்க வூட்டாண்ட சொல்றேன்//

நீண்ட கியூ இருக்குமே! பரா...ல்லியா?:)

vasudevan31355
14th June 2015, 07:21 PM
ரவி சார்,

தைரியமா 'லைக்' போட நான் இருக்கேன்.:) :) 'நிலா'வுக்கு அல்ல:)

vasudevan31355
14th June 2015, 07:24 PM
//பாவம் குழந்தை கஷ்டப் பட்டிருக்கும்.//

அப்பாடா! போட்டியில ஒன்னு குறைஞ்சுது.:)

chinnakkannan
14th June 2015, 08:22 PM
ஆதி ராம்.. நான் எதுவுமே சொல்லவில்லையே..என்னை ஏன் இழுக்கிறீர்கள் (அதுவும் கஷ்டம் தான் 108 கிலோ ) :)

அது ரவி சொன்னது..

Gopal.s
14th June 2015, 08:49 PM
A Seperation -2011- Iran - Asghar Farhadi

பல விருதுகளை வென்று குவித்த ஈரானிய படம்.கே.எஸ்.ஜி படங்களை பார்த்து ரசித்த ,தமிழ் உள்ளங்களுக்கு அன்னியமாக தெரியாத குடும்ப படம். இந்த கால மெகா சீரியல் போல குடும்ப சிதைவை(குற்றங்களையும்) உள்ளடக்காது ,குடும்ப பிரச்சினைகளை, நாடு,மத,தனி மனித பின்னணியில் அணுகிய படம். அற்புதமான திரை கதை,இயக்கம், நடிப்பு என்று நம்மை அசத்தி அசத்தி ,அந்நிய தன்மை தோன்றாமல் செய்து விடும். கட்டி போட்டு விடும். மொழிக்கு subtitle தேவை ஆனாலும் ,மிக குறைந்த வசனங்களே .நடேர் என்ற கணவன்,
சிமின் என்னும் மனைவி,தோமே என்னும் பெண் குழந்தை,நடேர் தந்தை ,ரசியா என்னும் பனி பெண்,சாட்ஜா என்னும் அவள் கணவன் இவர்கள்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள்.

1)பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கண்ணுக்கு தெரியும் அளவு,தங்களை நம்பி வாழும் மற்ற உறவுகளின் முக்கிய துவம் தெரியாது போலும். இது மத,இன,மொழி,நாடு வேறுபாடு கடந்த இணைப்பு சங்கிலி போலும்.

2)ஆண்களுக்கோ பல வித உறவின் முரண்களை அணைத்து நின்று , அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரம். ஆனாலும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலை வரும்போது ,சுயநலம் அற்ற போக்கில் ஆண்களே முதன்மை.

3)எல்லா மதங்களும் தனி வாழ்விலும், சமூக பொது வாழ்விலும் இடையூறு செய்து மனிதம் குலைக்கும். ஒரு கால கிறிஸ்துவம் தேவாலயம் சார்ந்த சர்வாதிகாரம், ஹிந்து மதம் ப்ராமணம் அரசின் மீது செலுத்தி தன மக்களையே பிரித்த அநீதி,தற்காலங்களில் மட்டு பட்டாலும், இஸ்லாம் இன்னும் மனிதத்தை துறந்து மதமே என்று நாடுகளில் கோலோச்சும் வினோதம்.

4)மத்திய வர்க்கமே,இன்னொரு தாழ்ந்த தன வர்க்கத்தின் பிரச்சினையில் கண் மூடி சுயநலம் காட்டும் சுயநல ஆதிக்க வக்கிரம்.

5)வயதான மனிதர்கள் வாழ்வு ,மற்றவர்களின் வாழ்வை ஆக்கிரமித்து ,வாழ வேண்டிய வயதினரின் வாழ்வு குலைக்கும் ,நோக்கமில்லா துன்பங்கள்.

6)பணத்தை விட ,மத நம்பிக்கை,மனசாட்சி மனிதர்களின் மீது செலுத்தும் ஆதிக்கம்.

7)ஒரு பிரச்சினையின் பல கோணங்கள்.சிக்கல்கள். தெளிவான சுளுவான குழந்தைதன தீர்வு முறை.

நாடென்ன,மதமென்ன,இனமென்ன,மொழியென்ன,மதமென்ன, சமூக கட்டமைப்பை தூக்கி பிடிக்கும் மத்திய தர வர்க்கம் , தன்னுடைய பிரச்சினையின் தீர்வுக்கு ,அனைத்து கோணத்தையும் சீர் தூக்கி பார்க்கும் தெளிவு.

அவசியம் பார்த்தே ஆக வேண்டிய உன்னத படைப்பு.

chinnakkannan
14th June 2015, 08:59 PM
கோபால் தொடருங்கள்..ஒவ்வொரு படமாக ப் பார்த்த பிறகு தான் என்னால் பின்னூட்டம் என ச்சொல்லமுடியும்.. ஆனால் உங்கள் இடுகைகள் படம்பார்க்கும் ஆவலைத் தூண்டி விடுகின்றன..

chinnakkannan
14th June 2015, 09:20 PM
//பவழமணித் தேர் ஏறி பவனி வரும் தென்றலே// அது எனக்குக் கொடுத்து வைகக்வில்லை ராகவேந்தர் சார்..இன்பமிங்கேயிலும் சரி ராகா டாட் காமிலும் சரி பாட் கேக்க மாட்டேங்குது..

ம்ம்

சரின்னு ச்சின்னதா ஒரு ரவுண்ட் அடிச்சேனா.. ஒரு பவழப் பாட் கிடைச்சுச்சே

ரவிச்சந்திரன் ஒல்லிஒல்லிப்ரமீளா

நெஞ்சுக்குள் தஞ்சமென நேரிழையின் முன்னாலே
கொஞ்சியே பேசிடும் கோ


*

அது அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா

எது எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா
உதடுகள் செம்பவழப் பெட்டி
அதில் ஊறிக்கிடக்கும் வெல்லக் கட்டி..

https://youtu.be/N4doLtqxCVk


வள்ளி தெய்வானை என்பது படமாம்..எப்படி இருக்கும்..

chinnakkannan
14th June 2015, 09:40 PM
என்னமோ போங்க – 24

கொஞ்சம் நடக்கும் சில நடவடிக்கைகளைப் பார்த்ததில் மனதுக்குள் கொஞ்சம் கோபம் வந்தது. கொழுந்துவிட்டும் எரிந்தது..அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து என்ன செய்தேன்…
அப்படியே பக்கத்தறைக்குச் சென்று கண்ணாடியில் பார்த்தேனா.. ஏற்கெனவே கொஞ்சம் சுமாரழகான முகம் இன்னும் கொஞ்சம் சுமாராக மாறி இருக்க ரொம்பவே கோபம்..

வந்து ஏதாவது அது இதுன்னு பாட்டுக் கிடைக்கிறதா என்று பார்த்தால் கீழே உள்ளபாட்டு தான் முதலில் கிடைத்தது..

அதற்கப்புறம் தான் அது இது ..

அந்த முதல்பாட்டு பார்த்த போது குறள் தான் நினைவுக்கு வந்தது

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

மனஸ் புண்ணாய்டுச்சுன்னா அது எங்க தெரியுமாம் ஃபேஸ்புக்ல ஸாரி ஃபேஸ்ல தெரியுமாம் வள்ளுவர் அந்தக்காலத்திலேயே சொல்லியிருக்கார்..

அப்புறம் இந்தப் பாட் முழுக்கக்கேட்ட பிறகு மறுபடி கண்ணாடியைப்பார்த்தேன்.. என்முகம் சிரித்தபடி வெகு அழகாக..

ஸோ கோபம் வந்துச்சுன்னா டைவர்ஷனா ஒண்ணை எடுத்துக்கிட்டு பண்ணிடனும் என்று ஆன்றோர்கள் சொல்வாங்க..உண்மை தாங்க..நம்பலையா.. சரி..என்னமோ போங்க..

*
ரவிச்சந்திரனும் ஜெயலலிதாவும் (அது என்ன உடை சுடிதாரும் இல்லாமல் நைட்டி போலும் இல்லாமல்) வெகு அழகாக உடற்பயிற்சி போல் நடனம் ஆடுகிறார்கள்..(புலியூர் சரோஜா டான்ஸ் போல இருந்தது) பட் பாடல் வரிகள் வெகு அழகு..

*

நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
ஊரறியாமல் மறைத்த போதும் ஓடும் விழிகள் தள்ளாடி

சபையறியாமல் நடக்கும் அது
தலைமுறை கால்வரை அளக்கும்
இடையிடையே கொஞ்சம் சிரிக்கும்
அது ஏழையின் பசி போல் இருக்கும்

ஆசையை ப் பல நாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்

ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும்
அது ஆண்களுக்கெங்கே இருக்கும் இருக்கும்

பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும் போது

கண்ணுக்கு த் திரைகிடையாது
அது கலந்தபின் விலகுவதேது ஏது



https://youtu.be/RBzqNmOqcvo



மாடி வீட்டு மாப்பிள்ளை படமாம் :)

vasudevan31355
14th June 2015, 09:41 PM
//பவழமணித் தேர் ஏறி பவனி வரும் தென்றலே// அது எனக்குக் கொடுத்து வைகக்வில்லை ராகவேந்தர் சார்..இன்பமிங்கேயிலும் சரி ராகா டாட் காமிலும் சரி பாட் கேக்க மாட்டேங்குது..//

சின்னா!

கவலை வேண்டாம். இந்த லிங்கில் டவுன்லோட் செய்து 'பவழமணித் தேர் ஏறி பவனி' வாருங்கள்.

http://tamiltunes.com/neram-nalla-neram.html

chinnakkannan
14th June 2015, 09:46 PM
ooh Sorry.. pavalamani paat sidela kEtkittu irukkEn..:) Thanks vasu sir

vasudevan31355
14th June 2015, 10:01 PM
pavalamani paat sidela kEtkittu irukkEn..:) Thanks vasu sir

சைடுல வேற என்னென்ன இருக்கு சின்னா?:)

chinnakkannan
14th June 2015, 10:18 PM
பார்த்தேன் பார்த்தேன்


பார்த்தேன் உம்விழியில் பரிந்துரைத்த நல்லழகை
கோர்த்தேன் சரம்சரமாய்க் கொஞ்சுதமிழ் மாலையிலே
வார்த்தேன் எனதன்பை வண்ணமுடன் சித்திரமாய்
சேர்ந்தேன் உமதன்பில் சென்றவிடம் நல்ல இடம்!

புரியலையோன்னோ ச்சும்மா எழுதிப்பார்த்தேன் :)..

vasudevan31355
14th June 2015, 10:25 PM
//புரியலையோன்னோ ச்சும்மா எழுதிப்பார்த்தேன்// ..

ஏன் புரியல சின்னா?

நன்னா புரியறது. உம்ம அன்பு.:)

vasudevan31355
14th June 2015, 10:29 PM
chinnaa

meendum pm paarungo:)

chinnakkannan
14th June 2015, 10:51 PM
சைடுல வேற என்னென்ன இருக்கு சின்னா?:)

சைட்லயா கவிதைஇயற்றிக்கலக்கு, நாலாயிர திவ்யப் ப்ரபந்தம், அற்புதமான கதைகள் அனுத்தமா, நடந்தாய் வாழி காவேரி தி.ஜா..அப்புறம் எதிரில் சோர்ந்த செ.ஆட்டுக்குட்டியாய் சி.க. :)

chinnakkannan
14th June 2015, 11:17 PM
ரொம்ப டயர்டா இருக்கா..தூக்கம் தூக்கமா வருதா.. என்னபண்ணலாம்

தூங்கறதுக்கு முன்னாடி பாட்டுப் போட்டுடலாமா

ஆமா சாரதாவிற்கு 70 வயசாமே உண்மையா..

*

ஒரு கோடி சுகம்வந்தது
அது ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மன நிறைவு நீ தந்தது..



https://youtu.be/gr_8Zt7FVIA


இது என்ன படம் மு.க.சு என்ன என்பதை பற்றிச் சொல்பவர்களுக்கு ஒரு பாட்டு பாடுவேன் !

rajeshkrv
15th June 2015, 01:50 AM
https://www.youtube.com/watch?v=wR7TGvPWdyw

Gopal.s
15th June 2015, 03:28 AM
இது என்ன படம் மு.க.சு என்ன என்பதை பற்றிச் சொல்பவர்களுக்கு ஒரு பாட்டு பாடுவேன் !

Mazhai megam???

vasudevan31355
15th June 2015, 08:56 AM
சின்னா!

வெகு அழகான நேர்மையான விளக்கத்துடன் பொருத்தமாக நீங்கள் போட்ட பாட்டு அட்டகாசம். 'நெஞ்சுக்கு முகமே கண்ணாடி'தான். உள்ளத்தில் கள்ளம் வைக்காமல் நெஞ்சில் உள்ளதை உள்ளபடி உணர்த்தியதற்கு நன்றி சின்னா. எதற்கு வருத்தம்? ஆபீஸில் ஏதாவது மனத்தாங்கலா? எதற்கும் வருத்தப் படாதீர்கள். வருத்தமடையச் செய்ய பலர் இருப்பார்கள். புறந்தள்ளிவிட்டுப் போங்கள்.

rajeshkrv
15th June 2015, 09:59 AM
ஜி வணக்கம்

vasudevan31355
15th June 2015, 10:01 AM
வணக்கம்ஜி! நலமா! ஜெமினி திரெட் எல்லாம் போயிட்டு வந்த மாதிரி தெரியுது.:)

uvausan
15th June 2015, 10:04 AM
காலை வணக்கம்

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/manikkam_zpsoltxikug.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/manikkam_zpsoltxikug.jpg.html)

rajeshkrv
15th June 2015, 10:06 AM
மறந்து போன பாடல்கள்

ஒரு ராகம் தராத வீணை

https://www.youtube.com/watch?v=MMwe7MCvGww

சோலை இளங்குயிலே
https://www.youtube.com/watch?v=_XAGI62b8-0

rajeshkrv
15th June 2015, 10:06 AM
வணக்கம்ஜி! நலமா! ஜெமினி திரெட் எல்லாம் போயிட்டு வந்த மாதிரி தெரியுது.:)

ஆமாம் அதுவும் எனக்கு பிடித்த திரி தான் ஜி

uvausan
15th June 2015, 10:08 AM
கருவின் கரு - பதிவு 86


பவழம் ( Coral): தொடர்ச்சி

என்ன அருமையான குரல் வளம் - அந்த காலத்து ரசிகர்கள் கொடுத்துவைத்தவர்கள்

https://youtu.be/ExAzcAiIA1c

uvausan
15th June 2015, 10:33 AM
கருவின் கரு - பதிவு 87

நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images_zpsgaf0yaf4.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images_zpsgaf0yaf4.jpg.html)


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/starruby2_zpsdorwrulz.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/starruby2_zpsdorwrulz.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/star-ruby1_zps2vfxvysn.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/star-ruby1_zps2vfxvysn.jpg.html)


A ruby is a pink to blood-red colored gemstone, a variety of the mineral corundum(aluminium oxide). The red color is caused mainly by the presence of the elementchromium. Its name comes fromruber, Latin for red. Other varieties of gem-quality corundum are called sapphires. Ruby is considered one of the four precious stones, together with sapphire, emerald anddiamond.

Prices of rubies are primarily determined by color. The brightest and most valuable "red" called blood-red or "pigeon blood", commands a large premium over other rubies of similar quality. After color follows clarity: similar to diamonds, a clear stone will command a premium, but a ruby without any needle-likerutile inclusions may indicate that the stone has been treated. Cut and carat (weight) are also an important factor in determining the price. Ruby is the traditional birthstone for July and is always lighter red or pinkthan garnet. The world's most expensive ruby is the Sunrise Ruby.

அகஸ்தியரின் நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)

" மாணிக்க ஒளிக் கதிரே வருவாய் "

ஒரு நல்ல மாணிக்கத்தின் பிரகாசம் , சூரிய கதிர்களை விட அதிகமானது - அப்படிப்பட்ட பிரகாசத்தை உடைய அன்னையே வருக "

நம் எண்ணங்கள் :

1000 மாணிக்கங்கள் சேர்ந்து வந்தாலும் நம் அன்னையின் அன்பின் முன் அவைகளின் ஒளி எடுபடாது . மாணிக்கத்தின் ஒளியை மிஞ்சியவள் நம் தாய் . அகஸ்த்தியர் " ஒரு தாயின் ஒளிக்கதிரே " என்று எழுதியிருக்கவேண்டும் ..........


ராகம் மொஹனம்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ
வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்…

https://youtu.be/PVGm1x0KCRs

uvausan
15th June 2015, 10:36 AM
கருவின் கரு - பதிவு 88

நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)

https://youtu.be/QiH1TvKtU-M

https://youtu.be/YQ8BtPYapSo

uvausan
15th June 2015, 10:38 AM
கருவின் கரு - பதிவு 89

நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)


https://youtu.be/2nxpUnhv7Bs

https://youtu.be/ObIGnPyUfSU

https://youtu.be/M-fTWqOBOgw

uvausan
15th June 2015, 10:41 AM
கருவின் கரு - பதிவு 90::smile2::smile2:

நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)

இந்த பாட்டுக்கு எந்த மாணிக்கமும் இனையாகாதே !!

https://youtu.be/gLiZFaAbWb8

பாடல்: கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: ஆலயமணி

ஆஹாஹா.. ஆஹாஹாஹா.. ஆஹாஹா.. ஆஹாஹாஹா
ஆஹாஹாஹா.. ஆஹாஹாஹா...

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?

ஆஹாஹா.. ஆஹாஹா........ஆஹாஹாஹா......

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?
மின்னல் இடையல்லவா?

ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ.......

கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

ஆஹாஹாஹா ஆஹாஹாஹா

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா ஆ..ஆ..

uvausan
15th June 2015, 10:49 AM
கருவின் கரு - பதிவு 91

வாணி ஜெயராமின் மாணிக்க குரலில்

மல்லிகை முல்லை பூபந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக

மல்லிகை முல்லை பூபந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக

மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து
மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து
பட்டு சேலையும் மெட்டியும் அணிந்து
பக்கம் தோழியர் துணை வர நடந்து
மந்திரம் சொல்லும் மேடையிலே
மங்கல வாத்தியம் முழங்கையிலே
அழகன் உங்கள் அருகினிலே
அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக

மல்லிகை முல்லை பூபந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக

அந்தி மாலையில் சாந்திமுஹூர்த்தம்
அன்னத்தூயிலில் ஆனந்த கோலம்
அந்தி மாலையில் சாந்திமுஹூர்த்தம்
அன்னத்தூயிலில் ஆனந்த கோலம்
அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
அன்பு நாடகம் ஆரம்பமாகும்
அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
அன்பு நாடகம் ஆரம்பமாகும்
பள்ளியில் வாசல் கதவடைத்து
பஞ்சணை பைங்கிளி கையணைத்து
வெள்ளி முளைக்கும் வேளை வரை
சொல்லி முடிப்போம் காதல் கதை
சொல்லி முடிப்போம் காதல் கதை
எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக

மல்லிகை முல்லை பூபந்தல்
மரகத மணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக .

https://youtu.be/dmx2gkelEnc

சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்......
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
.
மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்
மங்கள மங்கை என்போம்,
மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்
மங்கள மங்கை என்போம்,
மனிதனின் வாழ்கையில் நாணயம் இருந்தால்
மனிதருள் மாணிக்கம் என்போம்,
பண்ணிரண்டாண்டில் ஒரு முறை மலரும்
குருஞ்சி மலர்களைப்போலே,
தன்னலம் இல்ல தலைவர்கள் பிறப்பார்
ஆயிரத்தில் ஒரு நாளே,
.
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்......
.
மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்,
மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்,
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும்
தேசம் அவனிடம் ஓடும்,
எல்லா மலரும் இறைவன் படைப்பும்
அவனது தோட்டம்,
தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம்
என்பது சுயநலக்கூட்டம்,

சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
.
இலைகள் மறைத்தும் மணத்தை பரப்பும்
பெருமை உடையது முல்லை,
இலைகள் மறைத்தும் மணத்தை பரப்பும்
பெருமை உடையது முல்லை,
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து
உயரும் வரலாறில்லை,
சூரியன் போகும் திசையினில் எல்லாம்
வளையும் சூரியகாந்தி,
நேரிய வழியில் நிதமும் நடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி,
.
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....

https://youtu.be/2gFduyZImR0

uvausan
15th June 2015, 10:49 AM
"மாணிக்கம் " தொடரும்

vasudevan31355
15th June 2015, 11:18 AM
'ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள் எங்கும்'

'சுவாதி நட்சத்திரம்'

ஜி!

உங்களூக்கு ஒரு அபூர்வ பாடல்.

கே.எஸ்.ஜி கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த 'சுவாதி நட்சத்திரம்' (1974) திரைப்படத்தில் இருந்து சுசீலா அம்மா பாடிய ரேர் சாங்.

http://i.ytimg.com/vi/GG4AwwJRZ3U/sddefault.jpg

உதயசந்திரிகா தான் ஹீரோயின். கண் பார்வை எப்போது வேண்டுமானாலும் போய் போய் வரும். எப்போது பார்வை பறி போகும் எப்போது வரும் என்று தெரியாது. கதையமைப்பு அப்படி இருக்கும். இவரை ஆதரிக்கும் கிறித்துவ சிஸ்டர் பானுமதி.

உதயசந்திரிகாவுக்கு கண் பார்வை கிடைக்கும் ஒரு சமயம் இந்தப் பாடலைப் பாடுவது போல் காட்சி . இந்தப் படம் பிளாக் அண்ட் ஒயிட் படம். இயக்குனர் சமர்த்தர் காசு விஷயத்தில். ஆனால் ஹீரோயினுக்குக் கண் கிடைத்தவுடன் அவள் சந்தோஷத்தை, இயற்கைக் காட்சிகளைக் கண்டு அவள் ஆடும் ஆட்டத்தை, குஷியான குதூகலத்தை பார்வையாளர்கள் உணர வேண்டும் என்று மிக அருமையாக பாடலாக படமாக்கியிருப்பார். இதில் என்ன விசேஷம் தெரியுமா? அந்தப் பாடல் மட்டும் வண்ணத்தில் படமாக்கப்பட்டிருக்கும் காட்சிக்கு மிகப் பொருத்தமாக. (நாயகிக்கு பார்வை வரும் காட்சிகளை மட்டும் வண்ணத்தில் பார்த்த நினைவு.)

ஹீரோயின் மலைமேல் நின்று, அங்கிருந்து கீழே தெரியும் இயற்கை அழகை கண் பார்வை பெற்றவுடன் கண்டு ரசிக்கிறாள். மலையடிவாரம், பூங்காக்கள் என்று சுற்றி சுகம் காணுகிறாள்.

'ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள் எங்கும்
பூமி எங்கும்
ஆடுது பாடுது ஆசையில் தாவுது நெஞ்சம்
எந்தன் நெஞ்சம்
எழில் மிஞ்சும்

வண்ண வண்ண மலர் மின்னும் காட்சிகளை
வாழ்வில் காணுவது மெய்தானா'

என்று நாயகி தன்னைத்தானே இன்னும் நம்பாமல் கேட்டுப் பார்த்துக் கொள்கிறாள்.

'வானம் தூவும் பனி மாவைப் போல
புதுக் கோலம் போடுவது மெய்தானா

நான் என்னென்று சொல்வேன் இதை அம்மா
அம்மம்மா அம்மம்மம்மம்மா'

என்று ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறாள்.

காட்டு வெள்ளமெனப் பொங்கி வரும் அருவி மீது நின்று ஆட்டம் போடுகிறாள்.

'கண்ணில் வந்து இளந்தென்றல் கொஞ்சுதே
எண்ண எண்ண பெரும் இன்பம் பொங்குதே
காண்பவை எல்லாம் கற்பனை தானோ
ஆண்டவன் செய்யும் அற்புதம் தானோ

நான் என்னென்று சொல்வேன் இதை அம்மா
அம்மம்மா அம்மம்மம்மம்மா'

பூங்காவிலுள்ள சிலைகளின் முன் சிலையாய் அபிநயம் பிடித்து, குழந்தைகளுடன் குழந்தையாய் சறுக்கு மரம் ஏறி விளையாடி, ஏரியில் படகு சவாரி விட்டு,

மரகத வண்ண பச்சைப் பட்டு மண்ணைத் தழுவி
மின்னும் அழகைக் கண்டேன்
வர்ணனை செய்ய வார்த்தைகள் இல்லை
கண்கள் பெற்ற பயனை நானும் கொண்டேன்
அம்மா அம்மம்மா அம்மம்மம்மம்மா'

பார்வை வந்ததன் பலனை அனுபவிக்கிறாள்.

பாடல் முடியும் போது பரிதாபமாக மீண்டும் கண் பார்வை பறி போகும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sdfvbn.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sdfvbn.jpg.html)

உதயசந்திரிகாவின் உடை படு சிக்கனம். கவர்ச்சி அதிகம். வண்ணக் குழைவு எண்ணத்தை விட்டு அகல்வேனா என்கிறது. அற்புத வண்ண படப்பிடிப்பு. இயற்கை அழகை அப்படியே காமெரா அள்ளி நம் முன்னே வஞ்சனை இல்லாமல் கொட்டுகிறது.

சுசீலா படுவேகம். ஜெட் வேகத்தில் பாடுவார். இவ்வளவு ஸ்பீடாக வேறு பாடல் ஏதும் பாடியிருப்பாரோ என்பது சந்தேகமே!

'இருளும் ஒளியும்' படத்தில் வாணிஸ்ரீ சுசீலாவின் குரலில் பாடும்

'வானிலே மண்ணிலே'

பாடல் இப்பாடலை கேட்கும் போது நினைவுக்கு வராமல் இருக்காது. (இப்பாடலுக்கு மாமா மியூசிக்)

கண் தெரியாத பெண் பார்வை வந்தவுடன் காட்டும் உற்சாகம், வேகம், ஆனந்தம், பூரிப்பு, ரசிப்பு என்று உதயசந்திராகாவும் பாடலின் வேகத்திற்கு ஈடு கொடுத்திருப்பார்.

இந்த அருமையான பாடலை மருதகாசி எழுதி இருப்பார். இசை 'மெல்லிசை மாமணி' வி.குமார். வித்தியாசம் நன்றாகவே தெரியும். சுசீலாவை வேகமாக பாட வைப்பதில் குமார் கில்லாடி. ('வெள்ளி விழா' படத்தில் 'நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்' ஒரு உதாரணம்).

வண்ணத்துக்காகவே பல தரம் பாருங்கள்.


https://youtu.be/iaUz1sCtUuw

chinnakkannan
15th June 2015, 03:21 PM
Hi all good afternoon

சந்தில் சிந்து ::)

மாணிக்கம் வழக்கம் போல குட் ரவி

நன்றி வாசு.. அண்ட் ஸ்வாதி நட்சத்திர ரைட் அப்பிற்கும்.. பார்த்து பின் ஈவ்னிங்க் எழுதறேன்..

chinnakkannan
15th June 2015, 03:23 PM
மாணிக் நா மாணிக்பாஷா தான் நினைவுக்குவருது :)

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்னு பாடல் எதிரொலிக்கிறது..

Gopal.s
15th June 2015, 07:45 PM
Kill Bill (1 and 2)- Quentin Tarantino - 2003/2004.

எனக்கு மிக பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர். இவருடைய pulp fiction என்ற படத்தை 1994 இல் இயக்குனர் பெயர் அறியாமலே பார்த்து ஈடுபாடு கொண்டு பலமுறை பார்த்துள்ளேன்.

இவர் நமது சம வயதினர். நடிப்பு பள்ளியில் பயின்று ஒரு video archieve கடையில் வேலை பார்க்கும் போது testing பண்ணும் வேலையில் எதையும் முழுசாக பார்க்க முடியாமல் ,துண்டு துண்டாக பார்த்ததில் ,இவருடைய புது பாணி பட முயற்சியான non -linear முறை அவருக்கு சாத்திய பட்டது.

இவருடைய சிறப்பு, பழைய இயக்குனர்கள், படங்கள் எல்லாவற்றையும் மரபு முறையில் தொடராமல், இணைப்பு மற்றும் புது வகை திரைக் கதையமைப்பால் சுவாரச்யமாக்கி புது மெருகுடன் தருவார். பழைய இசைகள், வெவ்வேறு பாணி இசைகள் என்று இவருடைய படங்களில்
இசையமைப்பு எப்போதும் படத்தை கூடுதல் ரசனைக்குரியதாக்கும்.

கில் பில் படத்தின் சிறப்புகள்.

1)ஜப்பானிய ,சீனா போர் முறை , இத்தாலிய பயங்கர குரூரம்,western sphegatti என்று அழைக்க பட்ட (Sergio Leone )பாணிகளை இணைத்து தந்த சுவாரஸ்ய படம்.

2)கதையின் துண்டு துண்டாக மரபற்ற இணைப்பு முறையுடன் , வன்முறையை அழகுணர்ச்சியுடன் தந்த Neo Noir வகையில் அமைந்த வித்தியாச பொழுது போக்கு படம்.(Stylised Revenge Flick )

3)முதல் முறையாக பெண்களை பெருமளவு உலகளவில் ஈர்த்த வன்முறை படம்.அவர்களின் பழியுணர்ச்சி கலந்த வன்முறை வக்கிர உணர்வுக்கு ஒரு fantasy தீர்வாக அமைந்தது ஒரு காரணம்.

4)உமா துருமன் என்ற நடிகை இந்த படத்தை தூக்கி நிறுத்தி ,பல விருதுகள் பெற்றார். அவர்தான் இந்த படத்தின் நாயக-நாயகி.அவரை சுற்றியே படம்.

5)சண்டையில் ஜெயிப்பது தவிர மனிதம்,மென்மை உணர்வுகளுக்கு இடமேயில்லை ,எதிர்ப்பது புத்தனே ஆனாலும் எதிரியை முடிப்பதே குறிக்கோள் என்ற ஜப்பானிய சண்டை தத்துவத்தில் ஊறிய படம்.

6)இயக்குனரின் சிறப்பு தனக்கு முன்னோடியாக அமைந்தவற்றை பல படங்களை ,இயக்குனர்களை குறிப்பிடுவார். இந்த விதத்தில் கமலுக்கு நேர் எதிர்.(ஏன் கமலின் ஹிந்தி ஆளவந்தான் கூட சண்டை காட்சிகள் Graphic பண்ண காரணம் என்று கமலுக்கே credit கொடுத்துள்ளார்)

இதை பற்றி சொல்லுவதை விட இரண்டு பாகங்களையும் ஒரு சேர கண்டு மகிழவும்.

Gopal.s
15th June 2015, 07:52 PM
ஆதிராம்,

அற்புதமான யோசனை. எனக்கும் தமிழின் வளைகாப்பு பாடல்கள்,தோழியர் பாடல்கள் எல்லாம் மிக பிடிக்கும்..ஆரம்பமாகட்டும்

vasudevan31355
15th June 2015, 08:20 PM
கோபால் அண்ணா கோபால் அண்ணா!

அப்படியே நிறுத்துங்கள். இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசக் கூடாது.

முதலில் என் படத்தை எடுத்ததற்கு உம்மை மன்னிக்கவே முடியாது.

http://wiki.tarantino.info/images/Gogo.jpg

நான் பார்த்து பார்த்து அணு அணுவாக அனுபவித்து என் குழந்தைகள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள் அனைவருடனும் ஒவ்வொரு முறையும் அகமகிழ்ந்து பார்த்து அதுவும் பாகம் 1 இல் உமா துருமனுடன் இரும்பு சங்கிலியில் கோர்த்த பிரம்மாண்ட முட்குண்டை வைத்து கழுத்துக்கு மேல் சுற்றி வலதுகாலின் உள்வழியாக வாங்கி, மூர்க்கத்தனமாக மோதி தண்ணி காட்டும் O-Ren Ishii (லூசி லியூ) வின் பாடிகார்டான அந்த பச்சை இளம் ஜப்பான் நடிகை Chiaki Kuriyama வின் பரம ரசிகன் நான். துருமன் காட்டும் முகபாவங்கள் ஒன்று கூட இங்கிருக்கும் எந்த நடிகையும் அறியாதவை.

நான் மிகவும் ரசித்த துருமனின் கண்ணசைப்பு அலட்சியம்

http://i.dailymail.co.uk/i/pix/2014/08/14/video-undefined-20849BC100000578-752_636x358.jpg

முக்கியமாக இரும்பு குண்டை Chiaki கீழே போட்டு பயமுறுத்தியவுடன் துருமன் காட்டும் அந்த அலட்சிய கண்ணடிப்பை ஆயிரம் முறை ரசித்திருப்பேன். Chiaki கொள்ளை அழகு பருவச் சிட்டு. அவள் கண்களில் இறுதியில் ரத்தம் வழியும் போது உடன் வழிந்தது எனக்கும்தான்.


கோ,

உன்னை மன்னிக்கவே முடியாது போ. ஒழுங்காக அடுத்ததற்கு தாவாமல் ஏனோ தானோ என்று இரண்டு வால்யூம்களையும் மொட்டையாக விட்டு விடாதே.

எனக்கு முழு விவரங்களும் கதையோடு தேவை. இரண்டு வால்யூம்களின் கதைகளும் தனித்தனியாக வேண்டும்.

ஏதாவது தவறு இருந்தால் திருத்து. இப்படத்தைப் பற்றி முழு விவரங்களையும் தந்து விட்டு அப்புறம் எங்கு வேண்டுமானாலும் போ. விட மாட்டேன்.

ப்ளாக் மாம்பா, காட்டன் மவுத், சினேக் சார்மர்....ஒன்று விடாமல் வேண்டும். அந்த ஒற்றைக் கண் கொடூர ஆணழகி முதற்கொண்டு.

படுபாவி! தூக்கத்தைக் கெடுத்தாயே!

vasudevan31355
15th June 2015, 08:27 PM
கோ,

அந்த ஸ்கூலில் இருந்து வரும் நீக்ரோ பச்சைக் குழந்தை முன் உமாவும், அந்தக் குழந்தையின் தாயும் கத்தியுடன் மோதும் வேகத்தை எந்தப் படத்திலாவது பார்க்க முடியுமா? அதகளம் நடந்தும் குழந்தை என்ன நடக்கிறது என்று அறியாமல் முழிக்க உமாவும், அந்த தாயும் பிஞ்சு மனது நோகக் கூடாதே என்று அந்த நேரம் சண்டையை நிறுத்தி விட்டு மகளை அந்த தாய் உமாவிடம் அறிமுகப்படுத்த உமா அந்தக் குழந்தைக்கு வாழ்த்துச் சொல்வது ஓஹோ! குழந்தை அப்படிச் சென்றவுடன் மறுபடி ரணகள சண்டை. வாவ்...என்ன ஒரு சீன்.


https://youtu.be/hg6rqDX-1wQ

rajeshkrv
15th June 2015, 08:27 PM
uma thurman.. good actress

vasudevan31355
15th June 2015, 08:27 PM
இந்த ஆயுதத்தைப் பார்த்தாலே இன்னும் குப்பென்று வேர்க்கிறது.

http://img4.wikia.nocookie.net/__cb20150117111945/immwdb/images/6/60/Kill-bill-vol-1-still.jpg

vasudevan31355
15th June 2015, 08:30 PM
உமா நிற்கும் அந்த ஸ்டைல்

http://images.fanpop.com/images/image_uploads/Kill-Bill-Vol--1-uma-thurman-263937_500_330.jpg

vasudevan31355
15th June 2015, 08:34 PM
முக்கியமாக அந்த பிளாஷ் பேக் கார்ட்டூன் காட்சிகள்.

உமா ஹோட்டலில் லூசியின் அடியாட்களிடம் ரத்தம் தெறிக்க தெறிக்க
மோதும் உக்கிர சண்டை. இறுதியில் ஒரு பொடியன் மட்டுமே மிஞ்சுவான். அவன் உமாவிடம் கை நடுங்க சண்டைக்கு வர உமா அவன் கத்தியைத் தட்டிவிட்டு நாலு சாத்து சாத்தி உங்க அம்மாகிட்டே ஓடு என்று பால்குடி குழந்தையாய் அவனை விரட்டுவது ஜோரான காட்சி.


https://youtu.be/0FxSfolCPn8

vasudevan31355
15th June 2015, 08:43 PM
http://images5.fanpop.com/image/photos/30600000/Random-Captions-Vol-2-kill-bill-30693103-1600-900.jpg

அந்த ஒற்றைக்கண் லேடி daryl hannah தானே!

vasudevan31355
15th June 2015, 08:44 PM
http://images2.fanpop.com/images/photos/3700000/kill-bill-kill-bill-3750698-1400-905.jpg

vasudevan31355
15th June 2015, 08:58 PM
உமாவும், Chiaki Kuriyama வும் மோதும் படத்தின் உச்ச நிலை சண்டைக்காட்சி. மிரளாதவர்களே இருக்க முடியாது. கழுத்தில் சங்கிலி இறுக இறுக துருமன் காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் பசுமையாய் நெஞ்சில் நிழலாடுகின்றன.


https://youtu.be/x9iIKn1Bl6c

chinnakkannan
15th June 2015, 11:59 PM
ஹப்பாடி காலை ஏழேகாலுக்குக் கிளம்பி அந்த அரசு ஆஸ்பத்திரிக்குப் போனால்..

தாடி தலைக்குக் குல்லாய் அணிந்திருந்த ஓமானி ஏதோ ஒரு ஆலாபனையில் பாடிய படி நான் கொடுத்த பேப்பர்ஸை பச்சக் பச்சக் கென்று ஸ்டாம்ப் வைத்து
கையில் பாசமாக டோக்கனையும் வைக்க,

மறுபடி திரும்பி அந்தப் பழைய கட்டட்த்தின் இரண்டாவது மாடிக்கு லொங்கிடி லொங்கிடி என ஏறி பின் க்யூவில் பொறுமை காத்து (ஒரு இருபத்தைந்து பேர் இருக்கும்), அப்படியே அந்த அறைக்குப் போனால்,

கொஞ்சம் ரிம்லெஸ் கண்ணாடி அணிந்து (ஃபோட்டோ க்ரோமாட்டிக் இல்லை என நினைக்கிறேன்) கருமாணிக்க விழிகள் மின்ன (ர்வியால் வந்த வர்ணனை) கொஞ்சம்குண்டான கருஞ்சிற்பம் போன்ற நர்ஸ், ஒன்ற பேர் என ஆங்கிலத்தில் கேட்க,

யெஸ் மேடம் என்ற பவ்ய பாவனையில் சொல்ல மறுபடி பேப்பர்கள் பிரித்து சிலபேப்பரைக் கொடுத்து, முதலறையில் கொடுத்த அந்த சிரிஞ்சையும் கொடுத்து அதே அறையின் மூலையில் ஒரு பூஞ்சையாய் வயதான் நர்ஸ் (ரொம்ப ஒல்லி.. நான் பெருமூச்சு விட நாற்காலியிலிருந்து கொஞ்சம் எழும்பி அமர்ந்தாளென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) ஒக்காரு மேன் என ஹிந்தியில் சொல்ல,

கையை மடி மேன்...எனக் கேட்க முடியாத் இந்தாங்க என் உள்ளப் புறங்கை.. உள்ளங்கையின் பின்புறம் இதிலேயே எடுத்துக்கோமமா,

வலிக்குமேப்பா, சரி எனச் சொல்லி சின்சியராய் ஊசியை என் நரம்பைத் தட்டிக் கொஞ்சி எடுத்து அதில் குத்தி ர்ர்ர்ர் என எடுக்க,

எனது ரத்ததான அனுபவமெல்லாம் இல்லை.. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கின்ற ப்ரொஸீஜர் ரினிவல்.. மெடிக்கல்..

பின் முடித்து மறுபடி கார் ஏறி ஆஃபீஸ் வந்து மூச்சு முட்ட வேலை.. நடு நடுவில் சிந்து, சர்ரூ.. பார்த்தால் மறுபடியும் ஆர்.ஓ.பி எனப்படும் ராயல் ஓமான் போலீஸ் ஹெட்க்வார்ட்டர்ஸுக்குப் போகவேண்டுமாம்..பி.ஆர் ஓ சொல்ல,

போன தடவை போகலையேய்யா,

அதான் இந்த தடவை, நீங்கள், உங்க்ள் குடும்பம் மதியானம் மூன்று மணி போய்ட்டு வரலாம்..

அடப்பாவி ஊருக்குப் போவதால் இரண்டாயிரத்தெட்டு வேலை இருக்கேடா,

நீங்க தானே இப்பவே பண்ணச் சொன்னீங்க நான் ஊரு போய்ட்டு வாங்கன்னுசொல்லத் தாவலை... என உடைந்த ஆங்கிலத்தில் ஓமானி சொல்ல
சரியென மூன்றரைக்குக் கிளம்பி நான்கு மணிக்கு அந்த இடத்திற்குச் சென்று இரண்டரை மணி நேரம் அங்கும்டோக்கன் வாங்கி முகம் ஃபோட்டோ கைரேகை எலலாம் பதிந்து ஒர்க் பெர்மிட் எனச் சொல்லப் படும் வேலைக்கான அட்டை ரினிவல் முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டேன் என நினைத்தீர்களென்றால்.. நோ..

பின் ஷாப்பிங்க்க்க் பின் பின் ஒரு ப்ரான்ச் சரவணபவன் சென்றுஅங்கு பார்க்கிங்க் கிடைககாமல் மறுபடி இன்னொரு ப்ராஞ்ச் சென்று வாழைககாய் பஜ்ஜி காஃபி சாப்பிட்டு க் கிளம்பி வீட்டுக்குள் நுழைய பத்தாகிவிட்டது..ம்ம்

இந்த ஆங்கிலப் படங்களை எல்லாம் நான் பார்த்ததில்லை என்றால் கோபால் வாசு நம்ப வேண்டும்..ஆனால் இனி பார்ப்பேன்..

*
வளைகாப்புப் பாடல்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இரண்டு பாடல்கள்.. அதில் முதலானது..அடுத்த போஸ்டில்..

chinnakkannan
16th June 2015, 01:28 AM
சுற்றிலும் இருட்டாய் மெல்ல
..சூழ்ந்திடக் கொஞ்சம் மூச்சு
சுற்றியே கால்கள் முட்டி
..சுழன்றுதான் இருக்கும் போதில்
எட்டியே கேட்ப தென்ன
..இனிமையாய் ஒலிகள் என்ன
குட்டியாய்ப் பாப்பா கேட்க
..குலுங்கிடும் வளைகள் அன்றோ..

வளைகாப்பு அவரவர்கள் குடும்ப வழக்கப் படி ஆறாவது முதல் எட்டாவது மாதத்தில் முதல் குழந்தைக்குயின் கர்ப்பத்தின் போது அந்தப் பெண்ணிற்குச் செய்வார்கள்.. கர்ப்பிணிப் பெண்களின்கைகளில் வளையல்கள் அணிவித்து கொஞ்சம் பாடி மகிழ்வதும் உண்டு..பேஸிக்கலாக திருஷ்டிகள் அண்டாமல் இருக்கவேண்டும் என்றும் சொல்பவர்கள் உண்டு..ஆக்சுவல் காரணம்.. அப்போது தான் அந்தச்சின்ன மொட்டான கரு கொஞ்சம் வெளிஉலகின் ஒலிகளை உற்றுக் கவனிக்கத்தொடங்குமாம்..அதற்குச் சொல்லிக் கொடுக்கவே இது – இந்த ஃபங்க்ஷன் என்பார்கள்..

இங்கு பாருங்களேன் ஒரு பாட்டி, தன் பேரனின் மனைவிக்கு அவளது வளைகாப்பிற்கு அமர்க்களமாய் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் செய்கிறாள்..

யாராக்கும் அந்தப் பாட்டி..

*
பணம் … தலைமுறை தலைமுறையாய்ச் சேர்த்து வைத்த சொத்தின் மூலம் கிடைக்கும் பணம்..அதனாலேயே அந்தப் பணக்காரப் பெண்மணிக்கு அகந்தை, ஆணவம் வந்தது என்றால் உண்மை தான்..

அந்தப் பெண்மணிக்குஒரு பையன்.. அடக்க சுபாவம்..ஆனால் அவனுக்கும் இளமையில் எல்லாருக்கும் வரும் காதல் வந்துவிடுகிறது..காதல் வரலாம்..ஆனால் பணக்காரன் என்றால் பணக்காரியைத் தான் காதலிக்க வேண்டும்..அப்பொழுது தானே குல கெளரவம் எல்லாம் காக்கப்படும்..

ஆனால் அவன் காதலித்தது ஏழைப் பெண்ணை..மணமும் செய்து விடுகிறான்..பொறுக்குமா அந்த கண்ணம்மைக்கு..பணக்காரப் பெண்ணின் பெயர் அது என வைத்துக் கொள்ளலாம்..பையனை மிரட்டி அந்த ஏழைப் பெண்ணிடமிருந்துபிரித்தும் வைத்து விடுகிறாள்..

ஏழைப்பெண் என்ன செய்வாள்.. கர்ப்பவதியான அவள் காலத்தில் குழந்தை பெற்று வளர்க்கிறாள்.. குழந்தையின் பெயர் செளரி ராஜன்..

செளரி வளர்ந்துபெரியவனாகிறான்.. அவனுக்கு அவனது பாட்டியைப் பற்றிய விஷயங்கள் தெரியவருகின்றன.. அதே சமயத்தில் அவனும் காதல் வயப்பட்டு காதலித்த பெண்ணையே மணமுடிக்க அது பாட்டிக்குத் தெரியவருகிறது..

ஒரு புறம் பாட்டிக்கு பேரன் மீது அன்பு மருமகள் வேண்டாம் பேரனின் மனைவியைப் பிடித்துவிடுகிறது..
பேரனின் மனைவி கர்ப்பமாயிருப்பதை அறிந்து அவளைத் தனது வீட்டிற்கு வரவழைத்து அலங்காரம் செய்து அமர்க்களமாக வளைகாப்பைக் கொண்டாடுகிறாள்..

பின் பின்..பின் பாட்டி மனம் மாறினாளா.. செளரியின் அப்பாவும் அம்மாவும் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்..

இது.. இது சத்தியம் என்ற படத்தின் கதைச்ச்சுருக்கம்.. ரா.கி. ரங்கராஜன் குமுதத்தில் தொடர்கதையாக எழுதியது அதே தலைப்பில் படமாக வந்தது

செளரியாக அசோகன், பாட்டியாக கண்ணாம்பா (என்ன ஒரு கம்பீரம்) செளரியின் அப்பாவாக டி.எஸ்.பாலையா என ஒரு உணர்ச்சிப் போராட்டமேபடத்தில் உண்டு..செளரியின் மனைவி சந்திர காந்தா..

பாடல்கள் எல்லாமே அருமையானவை..
சிங்காரத் தேருக்கு சேலைகட்டி – ஹேமாமாலினி
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் – அசோகன் சந்திரகாந்தா
எல்லாம் அறிந்த இறைவனின் ஆணை சொல்லப்போவது யாவையும் உண்மை.. சத்தியம் இது சத்தியம் – அசோகன்

குங்குமப் பொட்டு குலுங்குதடி..இது தான் நாம் பார்க்கப் போகும் பாட்டு..
*
குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி

கண்ணகி வந்து பிறப்பாளோ கற்புக் கவிதை படிப்பாளோ?
நல்ல கற்புக் கவிதை படிப்பாளோ?
கங்கை கொண்டவன் காவிரிச் சோழன் மங்கை வயிற்றில் உதிப்பானோ?
மங்கை வயிற்றில் உதிப்பானோ ஆஹா மங்கை வயிற்றில் உதிப்பானோ?
சிங்கத்தை வெல்லும் வரதனோ சேரநாட்டு மறவனோ?
கையில் மங்கை தங்கும் எங்கும் பொங்கும் மாமயில் கொண்ட முருகனோ? - ஆஹா
மாமயில் கொண்ட முருகனோ?

என ஆட்டம் பாட்டமாய் சந்திரகாந்தாவுக்கு வளைகாப்புச் சூட்டுகையில் பாட்டி கண்ணாம்பா என்ன சொல்கிறார்..

பேரிடும் பாட்டன் உருவமோ என்தன் பேரன் குழந்தை அழகனோ? (ஒரு மிஸ்டேக் யுவர் ஹானர்..இதில் பேரன் இல்லை;.இது கொள்ளுப்பேரன் அல்லது கொ.பேத்தி கண்ணாம்பாவிற்கு)
பரத நாட்டுத் தலைவன் போலப் பண்பு நிறைந்த தலைவனோ?

பக்தி நிறைந்த ஞானியோ பாடித் திரியும் தேனீயோ

நல்லகட்டி வெல்லம் எங்கள் வீட்டில்
தாவித் திகழ்ந்து தவழுமோ ஆஹா
தாவித் திகழ்ந்து தவழுமோ?
*
பொங்கியெழு மனோகரா என ச்சீறிய கண்ணாம்பாவை இந்தப் படத்தில் கம்பீரம் திமிர் ஆணவத்தின் உருவாகப் பார்த்த போது வித்தியாசமாக இருந்தது..

ரா.கி.ரங்கராஜன் அவரது சுயசரிதையில் – தொடர்கதை என்று எழுத ஆரம்பித்து முதல் மூன்று அத்தியாயத்திற்குக் கதானாயகனே வராமல் எழுதிவிட்டேன்..அப்புறம் மூன்று அத்தியாயங்கள் வந்தவரை கதானாயகனின் நண்பனாக மாற்றிவிட்டேன் என எழுதியிருந்ததாக நினைவு..

நல்ல படம்.. நல்ல பாடல்கள்.. நல்ல வளைகாப்புப் பாடலும் கூட
p.susheela, s.janaki music m.s.v and rama moorthi lyrics kEtka vEnumaa enna.. Kannadaasan..

https://youtu.be/Mhfkoyui21w

appuram vaarEn :)

Gopal.s
16th June 2015, 04:51 AM
வாசு,

நான் எனக்கு பிடித்த இயக்குனர்களின் ஒரு படத்தை மட்டுமே எடுத்து, அதை பற்றிய சுற்று சூழ்நிலை, எனக்கு ஏன் பிடிக்கும் என்று விளக்கி விட்டு, பார்க்க தூண்டி விட்டு கடந்து விட எண்ணியிருந்தால் ,நீங்கள் என்னை விளக்க தூண்டுகிறீர்கள்.

எல்லா western ,cowboy ,அது எந்த நாட்டு,மொழி,இன படமாக இருந்தாலும், mafia கொலை கும்பல்,அது சார்ந்த பழிவாங்கல்,என்றே போகும்.
நமது காலம் வெல்லும்,கங்கா உட்பட.(நான் கர்ணன் விசிறி)

அதில்தான் வசீகரம் கலக்கிறார் டாரண்டினோ. நமக்கு பரிச்சயமான விஷயத்தில் ,அசாதாரண பின்னணிகள், வினோத கதை சொல்லல்,குரூரத்தை அழகுணர்ச்சியுடன் காட்டல் , உமாவை அற்புதமாக செதுக்கி ,இந்த படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்.(இசை வேறு பின்னணிக்கு தோதாய்-ரசிகனையா இவன்)

இதன் பின்னணி bill (Snake Charmer )என்பவன் Deadly viper assassination squad(பாம்பு பெயர்கள் அங்கத்தினர்களுக்கு) என்ற அவனது gang இலிருந்து துரோகம் பண்ணி ஒதுங்கி விட்டதாக நினைக்கும் மணப்பெண் என்று அழைக்க படும் (2 ஆம் பாகத்தில் அவள் பெயர் Beatrix Kiddo என்பது தெரியவரும்.இவளுக்கு பாம்பு பெயர் Black Mamba ) அந்த பாத்திரத்தை ,அவள் மணநாளன்று ,தேவாலயத்தில் ,முழு மண விழா குழுவினரையும் குரூரமாக கொல்வதில் துவங்கும்.நான் உன் குழந்தையை சுமக்கிறேன் என்று பில்லிடம் மணப்பெண் சொல்லி விட்டு ,நினைவிழப்பாள் .


4 வருடம் கோமா நிலையில் இருந்து மீளும் மண பெண் (இடையில் Elle Driver மூலம் விஷ ஊசி போட்டு கொலை முயற்சி -பில் வேண்டாம் என்று திருப்பி விடுவான்)தன்னை நினைவிழந்த நிலையில் தன்னை உடலுறவுக்கு உபயோகித்தவனை கொன்று விட்டு தப்புவதில் தொடங்கி ,பழிவாங்கல் கதை தொடங்கும்.

முதல் பலி Vernita Green (copper Head ). குடும்பம் குட்டியுடன் செட்டில் ஆன இவளை மகள் முன்னாள் கொல்ல வேண்டாம் என்று வெளியில் அழைப்பாள் .ஆனால் ரகசியமாக துப்பாக்கி எடுக்க முயல்பவளின் நெஞ்சில் கத்தி பாயும்.

பிறகு O Ren Ishil(Cotton Mouth )என்ற அமெரிக்க .சீன -ஜப்பானிய பெண்.இவள் யகூசா என்ற ஜப்பானிய மாபியா புதிய தலைவி.(தன் பெற்றோர்களை கொன்ற பழைய தலைவனை,தன் தலைமையை கேள்வி கேட்கும் அல்லக்கையை கொன்று). அவளை டோக்யோ உணவு விடுதி ஒன்றில் கூட்டத்துடன் சந்தித்து (அதில் ஒருவராக நம் டரண்டினோ) அவளின் தலை மேற்பகுதியை இளநீர் போல சீவுவாள் .

Hatori Hanzo என்பவனை சந்தித்து தனக்கு ஒரு விசேஷ வாள் செய்து தர சொல்லி வேண்டுவாள் மணப்பெண் .அவரோ ஒதுங்கியிருப்பவர்.தன்னுடைய பழைய மாணவன் Bill தான் குறி என்றதும் உடன் படுவார். விசேஷ வாள் தயார்.

O Ren Ishil உதவியாள் Sophie என்பவளை சித்திரவதை செய்து Bill பற்றி செய்தியறிய மணப்பெண் முயல்வாள். sophie இடம், பெண் உயிரோடிருப்பது அவளுக்கு தெரியுமா என்று Bill கேட்பதில் முதல் பகுதி முடியும்.

Gopal.s
16th June 2015, 05:31 AM
அடுத்து பில்லின் தம்பி Budd(Side Winder ) . பில்லினால் எச்சரிக்க படும் Budd ,தயாராக ஒரு துப்பாக்கி. தோட்டாவுக்கு பதில் மலை உப்பு. அதனால் வீழ்த்த படும் மன பெண் உயிரோடு புதைக்க படுகிறாள்.அந்த விசேஷ வாளை Elle Driver (California Mountain Snake )என்ற ஒற்றை கண் பெண்ணிடம் கொடுத்து விற்க சொல்வான் Budd .

பில்லின் முயற்சியால் Pai Mei என்ற martial art விற்பன்னரிடம் சென்று கற்க முயல்வாள் மணப்பெண்.முதலில் அவளை எள்ளி நகையாடும் Pai Mei ,பிறகு அவளிடம் ஈர்க்க பட்டு, தன் விசேஷ வித்தையான Five Point Palm Exploding Heart Technique என்ற ஒன்றை கற்பிப்பார்.(ஐந்து முறை நடந்ததும் எதிரி மாண்டு வீழ்வான்).

Pai Mei கற்பித்த கலையை கொண்டு சவ பெட்டியில் உயிரோடு புதைக்க படும் மணப்பெண் (Beatrix )மீண்டு வருவாள்.(கொஞ்சம் அம்புலி மாமா சாயல்)

Elle(இவளும் Pai Mei சிஷ்யை.அவரால் ஒரு கண் இழந்து விஷம் வைப்பாள்) வாளில் mambasa விஷ பாம்பை வைத்து Budd ஐ கொன்று விட்டு வாளுடன் தப்ப முயல, Beatrix அவளுடன் சண்டையிட்டு அந்த இன்னொரு கண்ணையும் கொய்து விடுவாள்.(காட்ட படும்).விஷ பாம்புடன் கண்ணின்றி தனியாக அலறுவாள்.

தன் 4 வயது பெண் BB பில்லுடன் மெக்ஸிகோ வில் இருப்பதை அறிந்து ,அங்கு செல்வாள். அப்போது பில் அம்பு மூலம் உண்மை அறியும் மருந்தை (Truth Serum )அவளுக்கு செலுத்தி ,அவள் கூட்டத்துக்கு துரோகம் செய்த பின்னணி அறிவான்.Lisa வை பழிவாங்க கூட்டத்தால் அனுப்ப படும் Beatrix ,தன்னை கொல்ல லிஸா வால் அனுப்ப படும் Karen உடன் உடன்படிக்கை செய்து கூட்டத்தை விட்டு வெளியேறி புது வாழ்வுக்கு முயன்றதன் காரணம் தான் கற்பம் என்பதை அறிந்து குழந்தையின் நல்வாழ்வை முன்னிட்டே என்ற உண்மையை சொல்கிறாள் Beatrix .

இதனால் சமாதானமடையும் Bill தன் முடிவுக்கு தயாராகிறான்.Beatrix தான் Pai Mei இடம் கற்ற விசேஷ வித்தையை அவன் மீது பிரயோகிக்க அவன் ஐந்தடி எடுத்து வைத்து வீழ்கிறான்.Beatrix தன் மகள் BB யுடன் வெளியேறுவதில் படம் முடியும்.

தயவு செய்து இரண்டு பகுதிகளையும் ஒரு சேர பாருங்கள்.

வாசு,திருப்தியா?

Gopal.s
16th June 2015, 05:37 AM
சின்ன கண்ணன்,

மற்ற ஆசிரியர்களிடம் சொல்லி அனுமதி பெற்று புண்ணியமில்லை. ஹெட் மாஸ்டர் நான் சொன்னால்தான் லீவ் கிடைக்கும். உங்களுக்கு லீவ் கொடுக்க முடியாது. Holiday என்று கூறியிருப்பதால் Holiday Homework ஆக
தோழியர் பாடல் ஆரம்பியுங்கள்.(சித்திர பூவிழி,உனது மலர் கொடியிலே,பாட்டொன்று தருவார்,ராதைக்கேற்ற கண்ணனோ,தூது சொல்ல இப்படி....)

Richardsof
16th June 2015, 05:43 AM
டியர் கோபால்
எனக்கு பிடித்த தோழி பாடல் ...உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் .


https://youtu.be/cgfn_s6bPSw

rajeshkrv
16th June 2015, 07:18 AM
திரையில் பக்தி -6:
பக்தி என்றாலே முருகன் அல்லது கண்ணன் பாடல்களே ஏராளம்

முருகா என்றால் உருகாதா மனம்.. அதுவும் மதுரை சோமு அவர்களின் குரலில் இந்த பாடலை மருதமலை மாமணி அந்த முருகனே மருதமலையிலிருந்து
வரமாட்டாரா என்ன

குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் கண்ணதாசனின் வரிகள்

https://www.youtube.com/watch?v=82qfhI7uZf0

vasudevan31355
16th June 2015, 07:34 AM
//வாசு,திருப்தியா?//

கோ,

சிசர்ஸ் பரம திருப்தி.:)

நன்றி கோ. நிஜ நன்றி!

இது உங்கள் ஒருத்தரால் மட்டுமே சாத்தியம். இது சத்தியம். என்ன ஒரு ரசனை! கோர்வையாக நீங்கள் பில் கதை கோர்த்தது வெகு சாமர்த்தியம். நீங்கள் சொன்னது போது பிட் பிட் ஆன துண்டுகளை (கன்னா பின்னா) ஒன்று சேர்த்து வரிசை சரம் கோர்த்தது அமர்க்களம். கொஞ்சம் தலை சுற்றல் கதைதான்.

இத்தனை முறை பார்த்தும் சில சில இடங்களில் குழம்புவேன். இப்போது தெளிவானேன். மறுபடி உட்கார்ந்தால் முழுமையாகும். சில படங்களின் ஆதிக்கத்திலிருந்து மீள்வது அவ்வளவு லேசல்ல. ரோஷமான் போன்றவை. கில் பில் அதிலொன்று.

//அதில்தான் வசீகரம் கலக்கிறார் டாரண்டினோ. நமக்கு பரிச்சயமான விஷயத்தில் ,அசாதாரண பின்னணிகள், வினோத கதை சொல்லல்,குரூரத்தை அழகுணர்ச்சியுடன் காட்டல் , உமாவை அற்புதமாக செதுக்கி ,இந்த படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்.(இசை வேறு பின்னணிக்கு தோதாய்-ரசிகனையா இவன்)//

நீங்கள் இசையின் ஆதிக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டது சத்தியமான உண்மை. நிஜமாகவே ரசிகன்தான். குறிப்பாக ஆம்புலன்ஸ் அலாரம் போல துருமன் போராட்டக் களத்தில் வாளெடுத்து சுழற்றும் போது ஒரு சைரன் ஒலி ஒலிக்குமே! ஞாபகம் இருக்கிறதா?


https://youtu.be/cOy6hqzfsAs

அந்த விசில் ட்ராக் வெரி சிம்பிள்.


https://youtu.be/S32X5-eKVp4

vasudevan31355
16th June 2015, 07:48 AM
//4 வருடம் கோமா நிலையில் இருந்து மீளும் மண பெண் (இடையில் Elle Driver மூலம் விஷ ஊசி போட்டு கொலை முயற்சி -பில் வேண்டாம் என்று திருப்பி விடுவான்)தன்னை நினைவிழந்த நிலையில் தன்னை உடலுறவுக்கு உபயோகித்தவனை கொன்று விட்டு தப்புவதில் தொடங்கி ,பழிவாங்கல் கதை தொடங்கும்.//

Elle Driver கொஞ்சம் கூட பதட்டப்படாமல் துருமனுக்கு விஷ ஊசி ரெடி பண்ணும் காட்சி. உடன் புகழ்பெற்ற அந்த விசில் சப்தமும்.


https://youtu.be/i94nansYjsM

vasudevan31355
16th June 2015, 07:58 AM
Elle விஷப் பாம்பை விட்டு Budd ஐ கடிக்க வைத்து ரசிக்கும் கொடூரம். சூட்கேஸில் பண அடுக்குகளின் மத்தியில் இருந்து எழுந்து கோர தாண்டவம் ஆடி பாட்டின் முகத்தை பாம்பு கொத்திப் பிடுங்கும் கொடூரம்.


https://youtu.be/QsaG8rJGlyQ

uvausan
16th June 2015, 08:05 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/good%20morning_zpsenbbfffs.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/good%20morning_zpsenbbfffs.jpg.html)

vasudevan31355
16th June 2015, 08:07 AM
Elle யுடன் Beatrix (uma)வாளுடன் மோதி, அவள் கண்களை பாம்பு கொத்துவது போல கைகளால் கொத்தி, கண்களைப் பிடுங்கி, அவளைத் துடிக்க வைத்து (கழிப்பறை வேறு) பிடுங்கிய கண்களை (அம்மாடி எவ்வளவு பெரிய கண்!) கீழே போட்டு கால்களால் நசுக்கி... அடேயப்பா வன்மத்தின் உச்சம். காணக் கண் கோடி வேண்டும் கோ.:)


https://youtu.be/RWwGXIjxbnI

uvausan
16th June 2015, 08:09 AM
கருவின் கரு - பதிவு 92

மாணிக்கம் தொடர்கிறது


மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு
மதுரையிலே முகூர்த்த நாள்...

https://youtu.be/uuGHetzS400

https://youtu.be/Hh3hTu3SUlw

https://youtu.be/9K8Q8zjXy70

uvausan
16th June 2015, 08:18 AM
கருவின் கரு - பதிவு 93

மரகதம்

Emeralds, like all colored gemstones, are graded using four basic parameters–the four Cs of Connoisseurship: Color, Cut, and Clarity and Carat weight. Before the 20th century, jewellers used the term water, as in "a gem of the finest water”, to express the combination of two qualities: colour and clarity. Normally, in the grading of coloured gemstones, colour is by far the most important criterion. However, in the grading of emeralds, clarity is considered a close second. Both are necessary conditions. A fine emerald must possess not only a pure verdant green hue as described below, but also a high degree of transparency to be considered a top gem.

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/stock-photo-green-emerald-on-abstract-background-140876677_zpsrahvan3s.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/stock-photo-green-emerald-on-abstract-background-140876677_zpsrahvan3s.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/green%20cubic%20zirconia%20stone_zps3iv00e7g.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/green%20cubic%20zirconia%20stone_zps3iv00e7g.jpg.h tml)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Panna-Stone-Benefits_zps6qoex7z1.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Panna-Stone-Benefits_zps6qoex7z1.jpg.html)

அகஸ்தியரின் நவரத்தின மாலை - 6 மரகதம் (எம்ரால்ட்)

" மரகத வடிவே சரணம் சரணம் "

மரகதம் மிகவும் அழகான நவரத்தின கல் - அந்த நிறத்தில் இருக்கும் அன்னை இன்னும் அழகானவள் - அவள் பாதங்களில் சரணடைகிறேன் .

நம் எண்ணங்கள் :

நிறத்தை இழந்து , தன் அழகையும் இழந்து நம்மை வளர்க்கிறாள் - அவளுடைய கருணையின் அழகுக்கு முன் இந்த மரகதம் எம்மாத்திரம் ?


உண்மை சம்பவம் 12.


உண்மை சம்பவம் 12.

சந்துருவின் தாய் ஒரு சிறந்த மருத்துவர் . அவரிடம் வரும் நோயாளிகள் அதிகம் . மருந்துகளைத்தவிர அவளுடைய வார்த்தைகளில் இருக்கும் கனிவு , அன்பு மருந்துகளை சாப்பிடாமலேயே நோய்களை விரட்டிவிடும் . யாரை குறை சொல்லலாம் என்று அவள் மனம் என்றுமே நினைப்பதில்லை - எல்லோருக்கும் ஒரு பொது மொழி அது அன்புதான் என்று நினைப்பவள் . மனோதத்துவங்கள் தெரிந்தவள் . ஒருமுறை ஒரு நபர் அவளிடம் சென்றார் . அந்த சமயத்தில் அந்த மருத்துவர் தன் நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தார் - இந்த நபரை பார்த்ததும் " பெப்பி ரூமுக்கு வெளியில் நில்லு " என்று சொல்லி தன கதவின் ரூமை சாத்திக்கொண்டார் .. அந்த நபருடன் உரையாடல் தொடங்குகிறது .

டாக்டர் ! கொஞ்ச நாட்களாக அடிக்கடி இறந்து விடுவோம் என்ற பயம் வருகிறது . இன்னும் வாழ்க்கையை சரியாக அனுபவிக்கவில்லை
- இறந்த பின் என்ன வாகும் ? இந்த பயத்தை எப்படி போக்குவது ?

டாக்டர் : பதில் ஒன்றுமே சொல்லாமல் எழுந்து சென்று தன் ரூமின் கதவைத்திறந்தார் . அவளின் நாய் ஓடிவந்து அவள் கால்களில் விழுந்து அவளை கொஞ்சியது . உடனே அந்த நபரிடம் " பார்த்தீர்களா - இங்கு என்ன நடந்தது என்று இந்த நாயிக்குத் தெரியாது - ரூமுக்குள் நான் இருக்கிறேன் என்பது ஒன்று மட்டும் தான் தெரியும் . நம் எல்லோருக்கும் ஒரு மாஸ்டர் இருக்கிறான் - அவன் நம்மை பார்த்துக்கொள்வான் - நமக்கு வேண்டியது அவனிடம் நம்பிக்கை - இந்த நாயைப்போல -------

அந்த நபரின் முகத்தில் வெளிச்சம் , மகிழ்ச்சி - ஒரு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாக சொல்ல முடியுமா ? சந்துருவை மிகவும் பாராட்டினேன் - இப்படி ஒரு தாயை அவன் பெற்றதற்கு .

1. https://youtu.be/026qHaAnsFc

uvausan
16th June 2015, 08:19 AM
கருவின் கரு - பதிவு 94

மரகதம்

https://youtu.be/SZ_n2SMaCYs

https://youtu.be/zfXDayluo5M

https://youtu.be/mtn42SnMXOc

vasudevan31355
16th June 2015, 08:26 AM
//இதனால் சமாதானமடையும் Bill தன் முடிவுக்கு தயாராகிறான்.Beatrix தான் Pai Mei இடம் கற்ற விசேஷ வித்தையை அவன் மீது பிரயோகிக்க அவன் ஐந்தடி எடுத்து வைத்து வீழ்கிறான்.Beatrix தன் மகள் BB யுடன் வெளியேறுவதில் படம் முடியும்.//

இறுதியில் இதய அட்டாக். துருமனின் அழுகை செண்டிமெண்ட் தமிழை நினைவூட்டுகிறது. பில் கோட்டெல்லாம் சரி பண்ணிக் கொண்டு சாவது கொஞ்சம் வேடிக்கைதான்.:)


https://youtu.be/zrigaQbUvZQ

vasudevan31355
16th June 2015, 08:32 AM
ராகவேந்திரன் சார்!

http://vignette3.wikia.nocookie.net/animaljam/images/2/25/Excellent.jpg/revision/latest?cb=20140205162144

'நானே ராஜா' ஆய்வு நீங்கள்தான் 'பதிவுகளின் ராஜா' என்று பறை சாற்றி விட்டது. அற்புதமான அலசல். இதுவரை யாரும் தொடாதது. என் மனமுவந்த வாழ்த்துக்கள்.

vasudevan31355
16th June 2015, 08:34 AM
//படைப்பாளிகளை விட படைப்பாளிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவர்கள் உண்மையிலேயே போற்றத்தக்கவர்கள்.

அந்த அடிப்படையில் நமது நெல்லை கோபு அவர்கள் இந்த மய்யம் திரியிலேயே அதிக அளவில் மற்றவர்களை ஊக்குவித்துள்ளார் தனது லைக்குகளின் எண்ணிக்கையின் மூலம். மய்யம் திரியிலேயே ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக மற்றவர்களின் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து முன்நிலையில் உள்ள கோபு அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன்.//

நானே சொல்ல வேண்டும் என்றிருந்தேன் ராகவேந்திரன் சார். நீங்கள் சொல்லி விட்டீர்கள். அமைதியாக பாராட்டுக்கள் தெரிவிக்கும் கோபு சாருக்கு என் சார்பாகவும், மதுர கானங்கள் சார்பாகவும் ஆழ்ந்த நன்றிகள்.

vasudevan31355
16th June 2015, 08:51 AM
ரவி சார்,

மாணிக்கங்களாக, மரகதங்களாக உங்கள் கருவின் கரு நூறு தொடப் போகிறது. முதல் வாழ்த்து என்னுடையதாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்.

உங்கள் அயரா உழைப்புக்கும், அருமையான பாடல்களுக்கும் பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
16th June 2015, 09:11 AM
மாணிக்கம் இன்னும் இருக்கின்றன. மரகதத்திற்கு வந்து விட்டோம். என்றாலும் மாணிக்கமான ஒரு மாணிக்கப் பாடலைப் பார்த்தும் கேட்டும் ரசிப்போமா..

மெல்லிசை மன்னரின் இசையில் துணைவி படத்திற்காக மலேசியா வாசுவும் எஸ்.ஜானகியும் இணைந்தளித்த அருமையான கானம்.


http://www.dailymotion.com/video/xulkot_muthu-manikka-kangal-thunaivi-hot-song_shortfilms

RAGHAVENDRA
16th June 2015, 09:16 AM
மெல்லிசை மன்னரின் சாம்ராஜ்ஜியம் 80களிலும் தொடர்ந்ததற்கான துவக்கமான இப்பாடல் என்றென்றும் நம் நினைவில் நீங்காத மரகதமாகும்.

மேகத்தையே இங்கு மரகதமாக்கி உவமை கூறுகிறார் கவிஞர்.

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிது..

சி.க. சார் பக்கெட்டை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்..

https://www.youtube.com/watch?v=MnG0hMm5os0

vasudevan31355
16th June 2015, 10:45 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

8

'நீராழி மண்டபத்தில்'

http://padamhosting.me/out.php/i133379_ThalaivanCover.jpg

அடுத்த பாலாவின் தொடர் வரிசையில் வருவது 'தலைவன்' படத்தின் 'நீராழி மண்டபத்தில்' பாடல்.

பாலா இதுவரை பாடிய பாடல்களை நீங்கள் உணர்ந்து கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் பாடலில் அவர் குரல் இன்னும் இளமையாக, பஞ்சு போல் மிருதுவாக ஒலிப்பதை கேட்பதை நீங்கள் நன்றாகவே உணரலாம். சற்றே பெண்மை கலந்த ஆணின் குரல்.

எம்.ஜி.ஆர் அவர்களும், வாணிஸ்ரீயும் நடித்த கனவு டூயட் பாடல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/9.%20Neerali%20Mandapathil%20-%20%20%20-%20YouTube.mp4_20150616_102121.726.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/9.%20Neerali%20Mandapathil%20-%20%20%20-%20YouTube.mp4_20150616_102121.726.jpg.html)

வாணிஸ்ரீ பத்திரிகையில் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தைப் பார்த்து, பின் சுவற்றில் மாட்டியுள்ள நீராழி மண்டபத்தில் காதல் புரியும் ரதி மன்மதன் போன்ற காதலர்களின் புகைப்படத்தைப் பார்த்து கனவு காணுவார். புகைப்படத்தில் தெரியும் நீராழி மண்டபம் இப்போது நிஜ செட்டாகத் தெரிய, பாடல் ஆரம்பிக்கும்.

சிம்பிளான பாடல்தான். வரிகளில் தமிழ் கொஞ்சுகிறது. அதிக செட்கள், ஆடம்பரம் என்றில்லாமல் எளிமையாகவே பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. (சற்று வறட்சி நிலைதான்)

முஸ்லீம் மங்கை போல கழுத்திலிருந்து கால்வரை முழு உடை தரித்து, கழுத்தில் தொங்கும் இரட்டை ஜடையுடன், 'பார்பி' டால் மாதிரி நெற்றியில் புரளும் முடியுடன் வாணிஸ்ரீ மிக அழகாக மும்தாஜ் போல ஜொலிக்கிறார். தலையில் முக்காடிட்டிருக்கும் மெல்லிய வெள்ளைத் துணி மேலும் அழகூட்டுகிறது. அதே போல கைகளில் கட்டியிருக்கும் கர்சிப் போன்ற கிளாத்தும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/9.%20Neerali%20Mandapathil%20-%20%20%20-%20YouTube.mp4_20150616_102158.680.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/9.%20Neerali%20Mandapathil%20-%20%20%20-%20YouTube.mp4_20150616_102158.680.jpg.html)

எம்.ஜி.ஆர் அவர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் கோட்டில் 'எங்கே அவள்?...என்றே மனம்'...'குமரிக் கோட்டம்' தோற்றத்தை நினைவு படுத்துவார்.

மீன் தொட்டியின் உள் தோற்றத்தைப் போல செட். நீர்த்தாவரங்களும், அடியிலிருந்து கிளம்பும் நீர்க்குமிழ்களும், சுற்றித் திரியும் மீன்களும் இதுபோல நிறைய தடவை பார்த்தாயிற்றே என்று சலிப்படையத்தான் வைக்கும். பின் அடுத்த சரணம் விண்ணில் உலவுவது போல.

வழக்கமான காதல் உற்சாகம் எம்.ஜி.ஆர் அவர்களிடம் குறைந்தது போல இருக்கும். தாவல், துள்ளல், துவட்டல்கள் அதிகம் இருக்காது.

'போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க' எனும் போது எம்.ஜி.ஆர் அவர்களின் கைவிரல்கள் ஆட்டோமேடிக்காக இரட்டை இலைச் சின்னத்தை சுட்டிக் காட்டுவது போல இயற்கையாக அமைந்தது விந்தை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/9.%20Neerali%20Mandapathil%20-%20%20%20-%20YouTube.mp4_20150616_102112.703.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/9.%20Neerali%20Mandapathil%20-%20%20%20-%20YouTube.mp4_20150616_102112.703.jpg.html)

பாடல் முடிவடையும் தருவாயில் மீண்டும் பல்லவிக்கு வரும் போது எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ ஸ்டில்கள் 6 காட்டியே பாடலை முடிப்பது அட்ஜஸ்ட்மென்டா:) அல்லது புதுமையா என்று குழப்பம் வருகிறது. ஒருவேளை கால்ஷீட் கிடைக்காததால் இவ்வாறு ஒப்பேற்றி விட்டார்களோ!?

அருமயான பாடல். பாலா, சுசீலா நல்ல ஒத்துழைப்பு. கொஞ்சும் பாடல் வரிகள். இனிமையான இசை எல்லாம் அமைந்திருந்தும் பாடல் படமாக்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

'காதலிலே பெண்மை தலை குனியும்' என்று சுசீலா முடித்தவுடன் பாலா தரும் 'ஆ'....ஹம்மிங் அவருக்கே உரித்தான தனித்துவம் பெற்றது.

'பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய'

கவிஞரின் (வாலி) திறமைக்கு இருவரி எடுத்துக்காட்டு.

'காதலி வெட்கப்படும் போது நமக்கு இங்கே என்ன வேலை? மேகத்துக்குள் ஒளிந்து கொள்வோம்... வெளிச்சம்தானே தடை...இருட்டில் அவள் வெட்கம் கொள்ளாமளிருக்கட்டும்... காதலனும் ஜமாய்க்கட்டும்'...

என்று நிலவு மேகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறதாம். நல்ல வளமான சுவைமிகுந்த கற்பனை நயம். எஸ்.எம்.எஸ். இசை வழக்கம் போல் வளமை! இனிமை!

இந்தப் படத்தில் வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களில் பணி புரியும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைவாகவே பணி புரிந்திருப்பார்கள். (ஆர்.கே.சண்முகம் போன்ற ஒரு சிலர் தவிர)

கிறித்துவர் தயாரிப்பு (பி.ஏ தாமஸ்) என்பதால் நிறைய கிறித்துவ உதவி தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பங்கு பெற்றிருப்பார்கள். உதவி இயக்கம், படத்தொகுப்பு உதவி இயக்கம் அலெக்சாண்டர் ரோச் என்ற நபர். இயக்கம் தாமஸ் மற்றும் சிங்கமுத்து

எஸ்.பி.பி பாடிய பழைய பாடல்களில் எல்லோரும் ஞாபகம் வைத்து சொல்லும் பாடல் என்பதிலேயே இப்பாடலின் வெற்றியை அனைவரும் உணரலாம். பாலா நிறைய சுசீலாவுடன் பாட ஆரம்பித்த கால கட்டமிது.

நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/9.%20Neerali%20Mandapathil%20-%20%20%20-%20YouTube.mp4_20150616_102102.087.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/9.%20Neerali%20Mandapathil%20-%20%20%20-%20YouTube.mp4_20150616_102102.087.jpg.html)

நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும் போது தலை குனிந்தாள்

வாடையிலே வாழை இலை குனியும்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்

ஆ..........ஆ

காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
ஆ..........ஆ

பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய

காதலனும் நல்ல வேலை கண்டான்
அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்

நீராழி மண்டபத்தில்

தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க

போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
வந்து வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க

பேர் அளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க

கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை

நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்


https://youtu.be/F_UCHJmTUBk

Gopal.s
16th June 2015, 10:53 AM
ரவி,



தங்களிடமிருந்து அயராத உழைப்பை, பரிசாக கேட்க விரும்புகிறேன். எத்தனை பதிவுகள் குறுகிய காலத்தில்? அதுவும் theme எடுத்து மென கெட்டு .நாளுக்கு நாள் மெருகேறி வருகிறீர்கள்.பாராட்டுக்கள்.



சின்ன கண்ணன்,



தாங்கள் திரியை இணைக்கும் நாராக ஆகி விட்டீர்கள். தங்கள் பாணி (எத்தனை % நகைசுவை,எத்தனை % கவிதை ETC )பரிச்சயமாகி விட்டாலும் அலுக்கவில்லை.



ஆதிராம்,



தங்களுடையது திருக்குறள் போல. சுருக்கம். அர்த்தபுஷ்டி.



கல்நாயக்,



நீண்ட பதிவெல்லாம் இங்கு வந்த பிறகுதான்.சி.க விற்கு பக்க மேளம்.



கிருஷ்ணா,



கலகலப்பு. வெண்கல கடையில் யானை.அம்புஜம் மாமி குசும்பு ,அடடா. அழுந்த சாதிக்கிறேள் .



கலைவேந்தன்,



உங்களின் உற்சாகம் நிறைந்த பாராட்டு மற்றவர்களுக்கு தூண்டுகோல். சமூக கருத்துக்களை பாட்டின் மூலம் இணைப்பது எனக்கு உடன்பாடற்ற பாணி எனினும் ,தங்கள் எழுத்தால் மெருகு பெறுகிறது. தராசின் முள்ளில் கவனம் தேவை. ஒரு பக்க நியாயமே அலச படுகிறது. அதுவும் வசதியான நிலை பாட்டில்.



ராகவேந்தர்,.



நமக்குள் பிளவு-உடன்பாடு சகஜம். ஆனால் நான் அரசியல்வாதியல்ல. நான் சக்தி போல சூது வாது அறியாத தேவர் பக்தன். நீங்கள் கொஞ்சம் மாயன் போல மாறி வருகிறீர்கள். முரளியை மதன் பாப் போல வக்கீலாக மாற்ற முயல்வது கண்கூடு.இது தேவையில்லா விஷயம். நான் உங்களை ,எந்தவித,நிபந்தனையும் இன்றி தொடர்கிறேன்.நீங்களும் என்னை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. நீங்கள் எல்லா திரிகளிலும் பங்கு பெற்று அளிக்கும் பங்களிப்பை ரசித்து தொடர்கிறேன். இன்றைய நானே ராஜா, என்றுமே நீங்கள்தான் ராஜா என்று பறை சாற்றுகிறது.



ராஜேஷ்,



நீ ஜாலி பேர்வழி. உனக்கு பிடித்த பாடல்கள் ,மற்ற படி நீ உண்டு ,வாசு உண்டு.



வாசு,



உன்னை நான் பாராட்டுவதோ, திட்டுவதோ, எனக்கு நானே செய்து கொள்ளும் அர்ச்சனை. நாம் வேறு வேறா?(அதற்கென்று உன் எல்லா செயல்களுக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்.ஆனால் என் எல்லா செயல்களுக்கும் நீ பொறுப்பேற்க வேண்டும் )

யார் தர்மலிங்க பூபதி, யார் நாகலிங்க பூபதி என்பது மற்றவர் யூகத்திற்கு.



ராஜ் ராஜ்,



யம காதகர். இவரின் பதிவுகள் அவ்வளவு அழுத்தம். என்ன இருந்தாலும் அனுபவஸ்தர்.



எஸ்.வீ,



எப்போதுமே நண்பர். சாயாமல் நின்றால் உற்சாக ,நம்ப கூடிய பங்காளி .



முரளி,



கௌரவ நடிகர். அதுவும் ராகவேந்தர் இவரை இன்னொரு கோபுவாக மாற்ற முயன்ற பின் ரேஞ்சே வேறு. என்ன இருந்தாலும் ஒரே மேடையில் தோளோடு தோளாக மாதா மாதம் நிற்பவர்கள். நாமெல்லாம் யார்?



ஒன்று நான் புரிந்து கொண்டேன்.இது அரட்டை மேடை. என்னால் முடிந்த வரை ஆழமான விஷயங்களை இலகுவாக தர முயல்வேன். கேட்பவர் கேட்கட்டும் ,உரியவர் பயன் பெறட்டும். வேறென்ன சொல்ல?

vasudevan31355
16th June 2015, 10:59 AM
//ராஜேஷ்,

மற்ற படி நீ உண்டு ,வாசு உண்டு.//

இப்போது குறைவுதான் :) ரொம்ப :)

vasudevan31355
16th June 2015, 11:00 AM
வாசு,

//உன்னை நான் பாராட்டுவதோ, திட்டுவதோ, எனக்கு நானே செய்து கொள்ளும் அர்ச்சனை. நாம் வேறு வேறா?(அதற்கென்று உன் எல்லா செயல்களுக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்.ஆனால் என் எல்லா செயல்களுக்கும் நீ பொறுப்பேற்க வேண்டும் )//

உத்தரவு மகராஜா:)

vasudevan31355
16th June 2015, 11:02 AM
//கேட்பவர் கேட்கட்டும் ,உரியவர் பயன் பெறட்டும்.//

Kill Bill? :)

vasudevan31355
16th June 2015, 11:04 AM
//யார் தர்மலிங்க பூபதி, யார் நாகலிங்க பூபதி என்பது மற்றவர் யூகத்திற்கு//

:):):)

vasudevan31355
16th June 2015, 11:08 AM
//ஆனால் என் எல்லா செயல்களுக்கும் நீ பொறுப்பேற்க வேண்டும் )//

அதிலும் சுயநலமா?:)

RAGHAVENDRA
16th June 2015, 11:10 AM
நான் சக்தி போல சூது வாது அறியாத தேவர் பக்தன். நீங்கள் கொஞ்சம் மாயன் போல மாறி வருகிறீர்கள்.

மாயன் என்றால்... தேவர் மகன் நாசரா... ஆஹா.. நாசர் நம் தலைவரின் சிஷ்யனாயிற்றே.. சந்தோஷம் .... ஆஹா வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.. இதைவிட வேறென்ன வேண்டும்...


முரளியை மதன் பாப் போல வக்கீலாக மாற்ற முயல்வது கண்கூடு


கௌரவ நடிகர். அதுவும் ராகவேந்தர் இவரை இன்னொரு கோபுவாக மாற்ற முயன்ற பின் ரேஞ்சே வேறு

https://www.youtube.com/watch?v=U6evVV067ew

ஆஹா.. நான் சொல்கிறபடியெல்லாம் முரளி சார் கேட்கிறாரே.. முரளி சார்.. உங்கள சொத்தில் பாதி எனக்கு எழுதித் தந்து விடுங்களேன்...

என்ன இருந்தாலும் முரளிக்கு இந்த பாராட்டு டூ மச்... இல்லையா கோபால்..

ஹ்ம்..ஜமாயுங்க ...இன்னிக்கி கோபால் காட்டுலே அடை மழை...

RAGHAVENDRA
16th June 2015, 11:11 AM
கோபால்..
இது உங்களுக்காக..

https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30

vasudevan31355
16th June 2015, 11:13 AM
ஆஹா! கோபாலை எம்.ராதாவாகவும் ஆக்கிக் காட்டி விட்டார் ரசிக வேந்தர்.:)

vasudevan31355
16th June 2015, 11:43 AM
//முதலில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவனின் அதிர்ச்சி, அடுத்து sorry sorry என கண்களால் சொல்வது, பிறகு மன்னிக்க மாட்டாயா என்ற கெஞ்சலை கண்களில் வெளிப்படுத்துவது, பிறகு உன்னிடம் எனக்கு என்ன பயம் என்று முகபாவத்தை மாற்றுவது, செய்த தவறினால் தோன்றும் குற்ற உணர்வை மறைக்க சிகரெட்டை புகைப்பது, நடக்க முடியாமல் பின்னுகின்ற கால்களை நான் நார்மலாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக நடப்பது, சோபாவின் நுனியில் அமர்வது, மனைவியின் கோவமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முகத்தை திருப்ப முயற்சிப்பது, நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே என்ற வரிக்கு வலது கையை மொத்தமாக மூடி உள்ளே இருக்கும் சிகரெட்டை ஆழமாக இழுப்பது என்று அடித்து தூள் கிளப்பியிருப்பார் நடிகர் திலகம்.//

முரளி சார்!

இந்த நான்கே வரிகளில் 'சொர்க்கம்' என்னவென்றால் என்னவென்று காட்டி விட்டீர்கள். அம்சம். நடிகர் திலகத்தின் இப்பாடலுக்கான வெளிப்பாட்டு உள் உணர்வுகளை இதைவிட ஆழமாக விவரிக்கவே முடியாது. அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு உங்கள் இந்தப் பதிவைப் படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே...அதுதான் நிஜ சொர்க்கமே! இதயம் மகிழ்ந்த நன்றி கூறி மீண்டும் படிக்கப் போகிறேன் உங்கள் நான்கு வரி திருக்குறளை.

chinnakkannan
16th June 2015, 11:49 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

என்ன ஆச்சுன்னே தெரிலை.. நேத்துக்கு ரொம்ப்ப்ப வேலை, உடம்புல்லாம் அசதின்னு எழுதியிருந்தேனா பட் ஒரு விஷயம் சொல்ல மறந்தேபுட்டேன்..

என்னன்னா.. எனது வலதுகண் இடைவிடாது அப்பப்ப த் துடித்துக்கொண்டே இருந்தது அசோகவனத்தில் சீதைக்கு இடதுகண் துடித்தாற்போல


நல்லது நடக்குமே நாளெலாம் என்றுதான்
துள்ளித் துடித்ததே கண்

இப்படியே நெனச்சுக்கிட்டிருந்தேனா (என்ன நல்ல விஷய்ம்..டூர் போறச்சே டூர் புக்பண்ண கரிஷ்மாங்கற டெல்லி ப் பொண்ணும் கூட வருமா, அல்லது சென்னையில் எக்ஸ் கேர்ள்ஃப்ரண்டை மீட் பண்ணுவேனா,அல்லது போங்க எல்லாத்தையும் சொல்ல முடியாது) வந்தா இன்ப அத்த்திர்ச்சி...:)

யாரோ கிரகங்கள் எல்லாத்தையும் பேர்த்துட்டாங்களோ என்ன.. ஒட்டுக்க எல்லாரையும் பாராட்டி விட்டார் நம்ம ஹெட்மாஸ்டர்கோபால்.. நன்றி ஸ்ஸார்..(லீவ் சாங்க்*ஷன் பண்ணுங்கண்ணா ப்ளீ ஸ் :) )

//அலுக்கவில்லை// நன்றி அகெய்ன். பட் கொஞ்சம் பாணியை மாற்ற்ப் பார்க்கிறேன்..

பாருங்க கோ.. சாரதா பாட் யாருமே கண்டுக்கலை.. நீங்க தான் ஒரு படம் பெயர் போட்டிருந்தீங்க.. அதுவும் மறந்து போச் பட் நான் மறக்காதது..

ஆகப் பலவிஷயம் அற்புதமாய்க் கோர்த்துதரும்
கோபாலே நீரொரு கோ..

(ஹெட்மாஸ்டர்னு நீங்களே கொடுத்துக்கிட்டது :) )

ஹெட்மாஸ்டரிடம் ஒரு சின்ன ரெக்வஸ்ட்.. உங்கள் பட அலசல்களைத் தொடருங்கள் நான் திரும்பி வருவதற்குள் குறைந்தது 25 படங்கள் பற்றி எழுதியிருக்கவேண்டும் நீவிர்.

அப்புறம் ரவியின் பாடல்கள் பற்றி என்னமோ போங்கவில் எழுதியதை ரவியின் இழையில் போஸ்ட் செய்தமைக்கு மிக்க நன்றி.. (இது முன்னாலேயே செய்திருக்க வேண்டியது ஆனால் இந்த Courtesy சின்னதாகப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்த பிறகு தான் உரைத்தது.. மன்னிக்க :) )


கடைசியில ஒரு பஞ்ச் வச்சீங்க பாருஙக்

//ஒன்று நான் புரிந்து கொண்டேன்.இது அரட்டை மேடை. என்னால் முடிந்த வரை ஆழமான விஷயங்களை இலகுவாக தர முயல்வேன். கேட்பவர் கேட்கட்டும் ,உரியவர் பயன் பெறட்டும். வேறென்ன சொல்ல?// இது தான் “தான்” கோபால்.. இங்க நின்னுட்டீங்க.. எப்படியும் மாறமாட்டேன் என்று..

(பட் ஜாலியா ப் பேசறது எழுதிப்பாக்கறது எழுத்துல தப்புல்லாம் இல்லை தானே.. இதுக்கெல்லாம் பெஞ்ச் மேல நிக்கச் சொல்லாதீங்க :) )

*

மரகத ரவி, மரகத மேகப் பாடல் கொடுத்த ராகவேந்தருக்கு(அந்தப் பாட்டைக் கேட்டதில்லை சார், பட் பக்கெட்லாம் காப்பிரைட் வாசு, க்ருஷ்ணா) நன்றி.. ஹோம் ஒர்க் பண்ணிட்டு ஈவ்னிங்க் வர்றேன்

*

வாஸ்ஸூ சார்.. வாவ் .. நீராழி மண்டபத்தில் எனக்குமிகப் பிடித்த பாடல்களில் ஒன்று அப்போல்லாம் இரட்டை இலைச் சின்னம் தோன்றவில்லை என நினைக்கிறேன் இல்லியோ.. ம.தி. வாணி இந்த ஒரு படம் தானே ஜோடியாக நடித்தார்கள்.. நான்பார்த்த்தில்லை..

//காதலி வெட்கப்படும் போது நமக்கு இங்கே என்ன வேலை? மேகத்துக்குள் ஒளிந்து கொள்வோம்... வெளிச்சம்தானே தடை...இருட்டில் அவள் வெட்கம் கொள்ளாமளிருக்கட்டும்... காதலனும் ஜமாய்க்கட்டும்'...

என்று நிலவு மேகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறதாம். நல்ல வளமான சுவைமிகுந்த கற்பனை நயம். எஸ்.எம்.எஸ். இசை வழக்கம் போல் வளமை! இனிமை!// அடுத்த லைன் தான் ஹைலைட்டே

மேகமது வெண்ணிலவின் மேனி மறைத்திடவும்
தேகஞ் சிலிர்க்கவைத்த தென்றலினால் - வேகமாய்
பெண்ணிலவை அள்ளியவன் பேதமை தூண்டிவிட்டு
தந்தனன் முத்தங்கள் தான்..

அதான் மேகம் மறைச்சுடுத்துங்கறதால் இருள் வந்துடுச்சு இருள் வந்தா என்ன..இருள் இருக்கே அது வெட்கங்கெட்ட ஒரு விஷயம்..எல்லா இளமனங்களின் வெட்கங்களையும் கட்டவிழச் செய்யும் தன்மை அதற்கு உண்டு..அப்புறம் இன்னொரு மோசமான விஷயம் தனிமை.. காதலியோட இருக்கறச்சே.. ஸோ இருள் தனிமை இருந்துச்சுன்னா என்ன அம்புட்டுத் தான்..

அணைத்தான் ஆரணங்கை ஆர்வமாய் அங்கே
இணைந்தான் இனிதாக வே...

என ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். :) அதையே அழகாக வாலியும் சொல்லியிருக்கிறார்..

ம்ம் காலங்கார்த்தல இப்படியாக்கும் பண்றது ம்க்கும் :).

அப்புறம் வாரேன் :)

vasudevan31355
16th June 2015, 12:26 PM
சின்னா!

பின்னூட்டத்தில் உம்மை மிஞ்ச யார்! சின்னா பின்னமாக்கி விட்டீர். இருட்டு என்றால் எகிறிக் குதித்துக் கொண்டு ஓடி வருவீரே!

//அணைத்தான் ஆரணங்கை ஆர்வமாய் அங்கே
இணைந்தான் இனிதாக வே...//

என்ன வே!:) தாய் நாட்டைப் பார்க்கப் போகும் குஷியா?:)

நிலவையாவது மேகம் மறைத்தது.

'நிலவு முகத்திலே முக்காடு போடும் மேகத்தை விலக்கடி லைலா' என்று எனது சலீம் பாடினாரே மஞ்சு(நி)லா(ளா) அனார்கலியிடம். அது இன்னும் அமர்க்களம் இல்லையோ!

உங்கள் பதிவுக்கு சலாமு சின்னா!

வூட்டாண்ட சொல்றேன்னு என்னைய தூங்க விடாம பண்ணீரே!:) இப்போ வகையா மாட்டுனீரா?:) எப்படி? எப்படி?...கரிஷ்மாவா வேணும் உமக்கு? எக்ஸ் கேர்ள்ஃப்ரண்டை மீட் பண்ணனுமா? எங்க வாய் இன்னா வெறும் அவல் மெல்லுமா?:)

chinnakkannan
16th June 2015, 12:48 PM
அடங்காமல் ஆடும் அலையின் படகாய்
மடக்கினீர் எம்நெஞ்சை ஆம்


ஓய்..அது என்னா பாட்டுங்க

படகு படகு ஆசைப் படகு படகு படகு பார்த்துப் பழகு
போவோமா பொன்னுலகம்

பாட் நியுசினிமாலபார்த்தப்போ ஒண்ணும் புரியலை..அப்புறம் பார்த்தப்ப தான் புரிஞ்சுதாங்காட்டியும்..(அதாவது சந்தோஷமாப் பாடி பின் சோகமா வர்ற சீன்ஸ்..பின்னால் வரப்போகும் காட்சிகளுக்கான பில்டப் இந்தப் பாட்டுஙக்றது)

நிலவு முகத்திலே முக்காடு போடும்
மேகத்தை விலக்கடி லைலா
உன் அழகுக்கு சலாமு லைலா

ஆடவர் உலகில் ஆண்மகன் நீயே
அடிமையன்றோ நான் உனக்கு
கயஸ் அரசன்ன்றோ நீ எனக்கு..

**

அனாரு என்றால் மாதுளம்
ஆசை கொண்ட மாதுளம்
சலீம் என்னும் மன்னவன் சலாமு வைத்தான் உன்னிடம்..

அக்பர் என்னும் பாதுஷா அரசை ஆளும் பாதுஷா
கண்ணின் முன்னே வந்த்து காதல் நெஞ்சைத்தந்த்து..

வாவ்

சோஓஒகம்லாம்வேணாமே..

ந.தி, மஞ்சுளா கனகச்சிதமாக இருக்கும்..( இருந்தாலும் தேவன் வந்தாண்டி எனக்கு இன்னும் பிடிக்கும்)

//அவல் மெல்லுமா// ஹி ஹி..சமர்த்தோன்னோ..டீல் நானும் மறக்கறேன் நீங்களும் மறந்துடுங்க.. :)

Pink kullaa, pink midi manju.. ஓய் நீர் அடி வாங்கப் போறீர்..இப்படி நினைவு படுத்தியதற்கு :)

இந்தாங்க பாட்..

https://youtu.be/ruUSzvl1TME

vasudevan31355
16th June 2015, 01:04 PM
//டீல் நானும் மறக்கறேன் நீங்களும் மறந்துடுங்க..//

அது...:)

vasudevan31355
16th June 2015, 01:08 PM
//அக்பர் என்னும் பாதுஷா அரசை ஆளும் பாதுஷா//

அரசை ஆளும் வாரிசா...

ஹெட் மாஸ்டர் கிட்டே கொஞ்சமும் பயமில்ல. 'அந்த' ஹெட் மாஸ்டர் கிட்டே.:)

vasudevan31355
16th June 2015, 01:11 PM
மன்னவரும், மன்னவியும்:) (கோபாலுக்கு வழக்கம் போல குருவி மிட்டாய்):)

http://i.ytimg.com/vi/4Xc5MxPM6Cs/hqdefault.jpg

chinnakkannan
16th June 2015, 01:19 PM
கோபால் சித்திரப் பூவிழி பற்றி முன்பு எழுதியது..

http://www.mayyam.com/talk/showthread.php?11121-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE/page327

adiram
16th June 2015, 02:59 PM
டியர் ரவி சார்,

மாணிக்கத்தை முடித்துக்கொண்டு மரகதத்துக்கு வந்துவிட்டீர்கள்.

பணக்காரப் பிள்ளை படத்தில் இடம்பெற்ற
"மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் மகாராணி"
பாடலை சேர்த்தீர்களா என்று தெரியவில்லை.

கோபால் அவர்களுக்கு பிடிக்கும், ரவிச்சந்திரன் இருப்பதால்.
கலைவேந்தன், வினோத் ஆகியோருக்கும் பிடிக்கும், ஜெயலலிதா இருப்பதால்.
ராகவேந்தர் அவர்களுக்கும் பிடிக்கும் சுப்பையா நாயுடு இசை என்பதால்.
ஹி.. ஹி... எனக்கும் பிடிக்கும், பாடல் நன்றாக இருப்பதால்.

chinnakkannan
16th June 2015, 03:06 PM
ஆதிராம் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் ரவி கொடுத்துவிட்டார்..

http://www.inbaminge.com/t/t/Thennamkeetru/Manicka%20Maamani.eng.html

மாணிக்க மாமணி மாலையில் மங்கையவள் தங்கமுகம் இது கொடுக்கலை..:)

தென்னங்கீற்று விஜயகுமார் சுஜாதா (இதுபற்றி வாசு எழுதுவார்..!)

adiram
16th June 2015, 03:14 PM
டியர் கோபால் சார்,

நன்றி,... ஏதோ திருக்குறள் என்று பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள். பயமாகத்தான் இருக்கிறது. அதே சமயம் கோபால் சார் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பங்கம் வராமல் பதிவிடனும் என்ற எச்சரிக்கை மணியும் அடிக்கிறது.

நீங்கள் பதிவிட்டு இருக்கும் வேற்றுமொழி படங்களை நான் பார்த்ததில்லை. அதனால் எதிர்வினை / பின்னூட்டம் இட முடியவில்லை. எங்கள் சார்பில் வாசு அந்தப்படங்களை அலசோ அலசென்று அலசிவிட்டார். அவருக்கும் நன்றிகள்.

rajeshkrv
16th June 2015, 06:09 PM
//ராஜேஷ்,

மற்ற படி நீ உண்டு ,வாசு உண்டு.//

இப்போது குறைவுதான் :) ரொம்ப :)
அப்படியெல்லாம் இல்லை ஜி. என்ன இப்படி சொல்லிபுட்டீக :)

rajeshkrv
16th June 2015, 06:12 PM
சி.க ஆமாம் சாரதாவிற்கு 70 வயசாம். நம்பத்தான் முடியவில்லை. இன்றும் கண்ணில் அதே அழுத்தப்பார்வை. அந்த சின்னச் புன்முறுவலுடன் அழகாகத்தான் இருக்கிறார்

vasudevan31355
16th June 2015, 06:49 PM
ஆதிராம் அவர்களே!

நேரிடையாகக் கேட்கிறேன்? உங்களுக்கு என்ன வேண்டும்?

ஏன் தேவையே இல்லாமல் சதா எப்போதும் வம்பு பேசிக் கொண்டு இதே வேலையாய் அலைகிறீர்கள்?

உங்களுக்கு இதே பிழைப்பாய் போயிற்று. திருக்குறள் என்று முரளி பதிவிற்கு நான்தானே பதில் சொன்னேன். கோபால் எங்கு சொன்னார்? ஏன் தேவையே இல்லாமல் புறம் பேசுகிறீர்கள்?

அன்று ரவி போட்ட ஜாலி பதிவிற்கு கேலி பேசினீர்கள். அப்புறம் சின்னக் கண்ணன் பெயர் சொல்லி புலம்பினீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?

இது ஒரு பொதுத் திரி என்ற சாதாரண விஷயம் கூட உங்களுக்குத் தெரியாதா? மற்றவையெல்லாம் நன்றாகத் தெரிகிறதே. இல்லை வம்பு பேசுவதற்கு தெரியாதது போல் நடிக்கிறீர்களா?

இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். எங்கள் மனதிற்கு சரியென்று பட்டதைத்தான் நானும், இங்குள்ள அன்பர்களும் எழுதிக் கொண்டிருக்கிறோம் ஹப்பின் வரைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு. இங்கு யாரும் ஒருவருக்கு ஒருவர் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு எழுத வரவில்லை. அனைவரும் ஒரு மன நிம்மதிக்காக, ரிலாக்சுக்காக, தங்களுக்குத் தெரிந்த நல்ல விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள வருகிறார்கள்.

இதில் முட்டுக்கட்டை போட நீங்கள் யார்? இப்படி போட வேண்டும்... இப்படிப் போடக் கூடாது என்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

கோபால் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, அவர் எச்சரிக்கை மணிக்குக் கட்டுப்பட்டு நான் பதிவிடும் கட்டாயத்தில் இருக்கிறேன் என்பது போல உங்கள் இஷ்டத்திற்கு அள்ளி விடுகிறீர்கள். கோபாலாயிருந்தால் என்ன... யாராய் இருந்தால் என்ன.... யாரும் யாரையும் இங்கே கட்டுப்படுத்த முடியாது அவர்கள் தவறு செய்யாத வரையில். கோபாலின் நம்பிக்கையைக் காப்பற்ற எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒன்றும் அதை சொல்லித்தர வேண்டாம். கோபாலையும் உங்கள் கைப்பிள்ளையாக்கி அவர் முதுகில் சவாரி செய்து அவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம்.

இது பாடல்கள் திரி. இங்கு அவர் இவர் என்ற பேதமில்லாமல் எல்லா நடிகர்களின் பாடல்களும் அலசப்படுகின்றன. இங்கு அவர் பாடல்களைப் போடக்கூடாது... இவர் பாடல்களைப் போடக் கூடாது என்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ, சுற்றி வளைத்தோ நீங்கள் சொல்ல வேண்டாம். திரிக்கு வரம்பை நீங்கள் உருவாக்காதீர்கள். வீணே வம்புக்கும் அலைய வேண்டாம்.

இங்கு நடிகர் திலகம், திரு எம்.ஜி.ஆர், ரவி, ஜெய், சிவக்குமார் முத்துராமன், கமல், ரஜினி என்று அத்தனை பேருடைய பாடல்களும் அலசப்படுகின்றன. நான் எம்.ஜி.ஆர் பாடல் எழுதிப் பதிவிட்டால் நான் எம்.ஜி.ஆர் அடிவருடியாக ஆகிவிட முடியாது. கலைவேந்தன் சார் வினோத் சார் ஆகியோர் நடிகர் திலகம் பாடல்கள் போட்டால் அவர்கள் நடிகர் திலகம் பக்தர்களாகி விட முடியாது. இந்த சின்ன கான்செப்ட் கூடவா உங்களுக்குப் புரியவில்லை? நான் எம்.ஜி.ஆர் பாடல் எழுதினால் நான் என்னவோ நடிகர் திலகத்திற்கும் அவர் குடும்பத்திற்கும் பெரும் துரோகம் இழைத்து விட்டது போல புறம் பேசுகிறீர்கள். அதனால் நானென்னவோ நடிகர் திலகம் பக்தன் என்பதே சந்தேகம் என்பது போல ஒரு மாயையை கிரியேட் செய்கிறீர்கள். உங்களுக்கே அருவருப்பாக இல்லை? சே! நீங்கள் நடிகர் திலகம் ரசிகர்தானா என்று இப்போது எனக்கு சந்தேகம் வருகிறது.

இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் மனதிற்கு சரியென்று பட்டதைத்தான் பதிவு செய்கிறோம். பதிவு செய்வோம். உங்களுக்குத் தைரியம் இருந்தால் என்னை நேருக்கு நேர் கேள்வி கேளுங்கள். அதை விடுத்து அங்கங்கே போய் புலம்பி புலம்பி சீரியல் மருமகள் போல அழாதீர்கள். பதிவுகளில் தவறிருந்தால் சொல்லுங்கள். சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். அதை விடுத்து இவருக்கு கட்டுப்பாடு, எச்சரிக்கை மணி என்றல்லாம் சீண்டிப் பார்க்காதீர்கள். இங்கு யாருமே எல்லை மீறி, விதிகளை மீறி எதுவும் செய்யவில்லை. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாய், ஜாலியாய், சகோதரர்களாகத்தான் அனைவரும் பழகுகிறோம். மதுர கானங்களின் ஒற்றுமையும், வெற்றியும் பிரிக்க முடியாது. ஏன் வயிறு எரிகிறீர்கள்?

இதில் உள்ளே நுழைந்து கட்டுப்பாடு விதிக்க, இதைப் போட வேண்டும்... அதைப் போடக் கூடாது என்று சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லை. என்ன புரிந்ததா?

உங்கள் கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி பேச்சையெல்லாம் வேறு திரிகளில் வைத்துக் கொள்ளுங்கள். ஒழுங்காகப் பதிவுகள் போடுவதாய் இருந்தால் இங்கு தாராளமாகப் போடுங்கள். கிண்டி விட்டு வேலை பார்ப்பதாய் இருந்தால் அதை மறந்து விடுங்கள்.

உங்கள் அநாகரீகமான கிண்டல் என்ன கேலி என்ன....

பண்பாக, நாகரீகமாக நாங்கள் ஒருவரை ஒருவர் ஜாலியாக அடுத்தவர் மனம் புண்படாதபடி கேலி, நையாண்டிகள் செய்து கொண்டு ரொம்ப நாளாகிறது. உங்கள் ஜிகினா வித்தையெல்லாம் இங்கே காட்டாதீர்கள்.
எடுபடாது.

நல்ல விதமாகவே சொல்கிறேன். இது போன்ற புறம் பேசுதல்கள், அடுத்தவரை நோகச் செய்யும் கேலி பேசல்கள், பதிவிட முடியாமல் எழுத விடாமல் மறைமுகமாக தடை செய்தல் (ரவி சார் உங்கள் கேலிப் பதிவால் திரியை விட்டு விலகுகிறேன் என்று சொன்னார்) போன்ற வேலைகளில் ஈடுபட்டால் ஹப்பின் விதிகளின் கீழ் மாடரேட்டர்களிடம் இது பற்றி முறையாகப் புகார் செய்வோம் என்று இதன் மூலம் கூறுகிறேன்.

இந்தப் பதிவிற்கு பதில் பதிவு கூட உங்களுடையது புலம்பல் பதிவாகத்தான் இருக்கும் என்பது தெரியும். அது பற்றி இனி எனக்குக் கவலையில்லை. உங்களுடைய கேலிக் கூத்துக்களுக்கு இனி இங்கே இடமில்லை. உங்களை ஒரு பொருட்டாகவும் இனி மதிக்கப் போவதில்லை.

இங்கிருப்பவர்களின் சார்பாகத்தான் உங்களுக்கே இந்த எச்சரிக்கை மணி. புரிந்து நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்படியே திருந்தியும்.

நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லு.

Gopal.s
16th June 2015, 07:31 PM
Memento - Christopher Nolan -2000.

ஒரு கடினமான complex variable M .S c maths கணக்கு போட்டிருக்கிறீர்களா? Integration ,Differentiation பண்ணியதுண்டா? அதற்கு சற்றும் குறையாத புதிர் இந்த படம். சும்மா உட்கார்ந்து பார்த்து விட்டு கடக்க முடியாது.இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக நான் கருதும் புத்திசாலி படைப்பு. திரைக்கதை,எடிட்டிங் இரண்டிலும் வெளுத்து வாங்கிய Neo Noir வகை Psychological thriller .

கதாநாயகன் Antero Grade Amnesia என்ற மறதி நோய். எதையுமே ரொம்ப நேரம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாமல் புகை படம் ,குறிப்புகள்,நிரந்தர விஷயங்களை பச்சை குத்தி கொண்டு.(ஞாபகம் வந்து தொலைக்கிறது. இதைத்தான் உருக்குலைத்து கஜினி பண்ணி கழுத்தறுத்தார்கள். சிரிப்பு காப்பாற்றியது தமிழை. மூல இயக்குனருக்கு insult இந்த copy ) கருப்பு-வெள்ளை முன்னோக்கி விரிய, வண்ணம் பின்னோக்கி செல்ல., சந்திக்கும் மைய புள்ளியை புரிந்து கொள்ளும் அறிவை பெற எனக்கே தலை சுற்றியது. என் பையனிடம் விளக்கம் கேட்டேன். (அவன் என்னை விட தேர்ந்த அற்புத சினிமா ரசிகன்) இதுவும் நேர்கோட்டில் பயணிக்காமல் வெட்டி வெட்டி பயணிக்கும் வகையே. ஒரு துண்டு துண்டு கிழித்து போட்ட காகிதத்தை ஒட்ட வைத்தது போல நினைவுகள்,மாயைகள்,துக்கம் நிறைந்த சுய -பிரமைகள் ,கொஞ்சமே கொஞ்சமாய் நடப்பு நிஜம் என்று புகை நடுவே பிம்பமாய் படம் விரியும். புரியும்-ஆனால் புரியாது. இதுதான் என கையில் பிடிக்க முடியாது.(நமக்கே குறிப்புகள் வேண்டும் தொடர)

இந்த படத்திற்கு எனக்கு மூன்று முறை பிடித்தது புரிய. ஆனால் தொடர்ந்தால் கிடைப்பது ஒரு புதிரை விடுவித்து பரிசு வாங்கிய பரவசம்.

இவரின் Prestige எனக்கு மிக மிக மிக மிக பிடித்த படம். இரு மந்திரவாதி நிபுணர்களின் போராட்டம் பற்றியது. Inception பற்றி குழந்தை கூட பேசும்.

1970 இல் பிறந்து 1998 முதல் இயங்கி வரும் அதி புத்திசாலி இயக்குனர்(தம்பியும் சேர்த்தே) பிரிட்டன் -அமெரிக்க பின்னணி. சிறு வயது முதலே கனவு-நினைவு அனைத்தும் சினிமாதான் இவருக்கு.

vasudevan31355
16th June 2015, 07:39 PM
கோ,

ஆர்வமாய் இருக்கிறது. ஆனால் கேள்விப்பட்டதே இல்லை. அருமை. பார்க்க முயற்சி செய்கிறேன். Inception பற்றி இந்த குழந்தை கூட பேசும்.:)

vasudevan31355
16th June 2015, 08:06 PM
http://thefilmstage.com/wp-content/uploads/2014/11/memento.jpg

vasudevan31355
16th June 2015, 08:11 PM
கோ! இருங்கள்! இருங்கள்

பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஞாபகத்திற்கு வருதா என்று பார்க்கிறேன்.

vasudevan31355
16th June 2015, 08:16 PM
அப்படியெல்லாம் இல்லை ஜி. என்ன இப்படி சொல்லிபுட்டீக :)

ஜி! சந்திக்கும் நேரம் குறைவு என்று சொன்னேன்.:) செகண்ட் ஷிப்ட் முடிந்து இருவரும் இரவில் அரட்டை அடித்து பாடல்கள் பகிர்ந்து கொண்டது கொஞ்சம் குறைந்து விட்டது. இனி ஒரு பிடிபிடிப்போம்.

vasudevan31355
16th June 2015, 08:37 PM
சி.க ஆமாம் சாரதாவிற்கு 70 வயசாம். நம்பத்தான் முடியவில்லை. இன்றும் கண்ணில் அதே அழுத்தப்பார்வை. அந்த சின்னச் புன்முறுவலுடன் அழகாகத்தான் இருக்கிறார்

ஜி! நீங்கள் எந்த சாரதாவை சொல்லுகிறீர்கள்? புரியலையே!

adiram
16th June 2015, 08:40 PM
ஆதிராம்,


தங்களுடையது திருக்குறள் போல. சுருக்கம். அர்த்தபுஷ்டி.

என்ன வாசு சார் வம்பா போச்சு

கோபால் அவர்களின் மேற்கண்ட பதிவுக்கு தானே பதில் சொல்லியி ருக்கிறேன். இதில் உங்களை எங்கே இழுத்திருக்கிறேன். ஆகாத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல இருக்கிறதே.

நான் செய்த மடத்தனம் அப்பவே கோபால் சார் பதிவை 'கோட்' பண்ணாமல் விட்டது.

இந்த திரிக்கு நான் வரக்கூடாது என்றால் சொல்லி விடுங்கள். நான் வரவில்லை. ஆனால் உண்மையை தெரிந்து கொள்ளாமல் இப்படி தடிமனான பதிவுகள் போட வேண்டாம். கோபால் சார் எல்லோரையும் ஒன்றிரண்டு வரிகளில் பாராட்டியது போல என்னையும் பாராட்டியுள்ளார். அதற்கு நன்றிப்பதிவு போட்டதற்கு ஏன் இப்படி கோபப் படுகிறீர்கள். அவர் பதிவு இதற்கு முந்திய பக்கத்தில்தான் இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள். (Post No. 1120)

chinnakkannan
16th June 2015, 08:52 PM
ராகவேந்தர் சார்.. கை கொடுங்க.. இதுவரை நானே ராஜா பார்த்ததில்லை..அதைப் பார்க்கும் ஆவலை க் கொண்டுவந்துவிட்டீர்கள் உங்கள் எழுத்தில்..ம்ம் ஊர் போய் டிவிடியில் பார்க்கிறேன்..

அப்புறம் மரகத மேகம் பாடலில் மேகம் ஒண்ணும் பச்சையாய் இல்லை..லோபட்ஜெட் படம் போல இருக்கு..பாட்டுமுழுக்க சரத்திற்கு ஒரேபாண்ட் சொக்கா, ஹீரோயின்(?!)க்கு நீல அல்லது கரு நீலப் புடவை..( நல்ல நிறங்க..அட புடவையைச் சொன்னேன் :) ) ஆமா யாராக்கும் அந்த நீலப் புடவைக் காரவுக..(இப்ப பக்கெட் வரும்!)

adiram
16th June 2015, 09:05 PM
வாசு சார்

மேற்கண்ட பதிவு அவசரத்தில் போட்டது. சர்வர் மக்கர் பண்ணியதால் ரொம்ப நேரம் அவஸ்தைப்பட்டு அந்த விளக்கத்தை அளித்தேன். திரியை விட்டு போகும்போது கூட குற்றவாளியாக போகக்கூடாது. நம் தரப்பை விளக்கி விடவேண்டும் என்று தவித்து விட்டேன் என்பதே உண்மை.

கோபால் அவர்கள் என் பதிவுகளை திருக்குறள் போல சுருக்கமாக என்று சொன்னதற்கே அந்த பதிவை இட்டேனே அன்றி, நீங்களும் முரளி சாரும் பதிவிட்டதெல்லாம் என் கவனத்துக்கு வரவில்லை.

இந்த திரியின் 1120-வது பதிவில் கோபால் சார் சொன்னதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி என்னை விளித்து வரும் பதிவுகளை 'கோட்' பண்ணியே பதிலளிக்கிறேன்.

என் விளக்கத்தைப் படித்து உங்கள் முந்தைய பதிவை நீக்குவீர்கள் அல்லது மாற்றம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இனி நான் திரியில் தொடர்வதும் விடைபெற்றுப் போவதும் உங்கள் முடிவு.

vasudevan31355
16th June 2015, 09:10 PM
டியர் கோபால் சார்,

நன்றி,... ஏதோ திருக்குறள் என்று பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள். பயமாகத்தான் இருக்கிறது. அதே சமயம் கோபால் சார் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பங்கம் வராமல் பதிவிடனும் என்ற எச்சரிக்கை மணியும் அடிக்கிறது.

நீங்கள் பதிவிட்டு இருக்கும் வேற்றுமொழி படங்களை நான் பார்த்ததில்லை. அதனால் எதிர்வினை / பின்னூட்டம் இட முடியவில்லை. எங்கள் சார்பில் வாசு அந்தப்படங்களை அலசோ அலசென்று அலசிவிட்டார். அவருக்கும் நன்றிகள்.

உங்க சித்து விளையாட்டு, நாடகம் எல்லாம் எல்லோருக்குமே புரியும். ஒன்றுமே தெரியாதது போல் நடிக்காதீர்கள். இங்கு இருப்பவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் இங்கு நினைக்க வேண்டாம்.
நீங்கள்தான் புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளாதீகள். புரிகிறதா?

vasudevan31355
16th June 2015, 09:14 PM
வாசு சார்

மேற்கண்ட பதிவு அவசரத்தில் போட்டது. சர்வர் மக்கர் பண்ணியதால் ரொம்ப நேரம் அவஸ்தைப்பட்டு அந்த விளக்கத்தை அளித்தேன். திரியை விட்டு போகும்போது கூட குற்றவாளியாக போகக்கூடாது. நம் தரப்பை விளக்கி விடவேண்டும் என்று தவித்து விட்டேன் என்பதே உண்மை.

கோபால் அவர்கள் என் பதிவுகளை திருக்குறள் போல சுருக்கமாக என்று சொன்னதற்கே அந்த பதிவை இட்டேனே அன்றி, நீங்களும் முரளி சாரும் பதிவிட்டதெல்லாம் என் கவனத்துக்கு வரவில்லை.

இந்த திரியின் 1120-வது பதிவில் கோபால் சார் சொன்னதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி என்னை விளித்து வரும் பதிவுகளை 'கோட்' பண்ணியே பதிலளிக்கிறேன்.

என் விளக்கத்தைப் படித்து உங்கள் முந்தைய பதிவை நீக்குவீர்கள் அல்லது மாற்றம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இனி நான் திரியில் தொடர்வதும் விடைபெற்றுப் போவதும் உங்கள் முடிவு.

நீங்கள் இங்கு பதிவிடுவதும், பதிவிடாததும் உங்கள் இஷ்டம். இதில் தலையிட நான் யார்? உங்களுக்கு எது இஷ்டமோ அதை நீங்கள் செய்யுங்கள். என்னால்தான் விலகுகிறேன் என்று ஏன் மறுபடி இந்த மாயை? அது உங்கள் இஷ்டம்.

adiram
16th June 2015, 09:14 PM
அன்புள்ள ரவி சார், வாசு சார், கோபால் சார், ராகவேந்தர் சார், கிருஷ்ணா சார், சின்னக்கண்ணன் சார், வினோத் சார், கலைவேந்தன் சார், ராஜேஷ் சார், கல்நாயக் சார், மற்றும் நண்பர்களுக்கு

இந்த திரியிலோ அல்லது வேறெந்த திரியிலோ தங்கள் மனங்கள் புண்படும்படியாகவோ வருத்தம்படும்படியாகவோ நான் பதிவிட்டிருந்தால் எல்லோரும் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள்.

rajeshkrv
16th June 2015, 10:55 PM
ஜி! நீங்கள் எந்த சாரதாவை சொல்லுகிறீர்கள்? புரியலையே!

எத்தனை சாரதாவை உமக்கு தெரியும் :)

Murali Srinivas
16th June 2015, 11:38 PM
வாசு,

பாராட்டிற்கு நன்றி. இதை அங்கே பதிவதற்கு இன்னும் மனதளவில் நீங்கள் தயாராகவில்லை என நினைக்கிறேன். விரைவில் அந்த நாள் வரட்டும்.

அன்புடன்

rajeshkrv
17th June 2015, 01:07 AM
அன்புள்ள ரவி சார், வாசு சார், கோபால் சார், ராகவேந்தர் சார், கிருஷ்ணா சார், சின்னக்கண்ணன் சார், வினோத் சார், கலைவேந்தன் சார், ராஜேஷ் சார், கல்நாயக் சார், மற்றும் நண்பர்களுக்கு

இந்த திரியிலோ அல்லது வேறெந்த திரியிலோ தங்கள் மனங்கள் புண்படும்படியாகவோ வருத்தம்படும்படியாகவோ நான் பதிவிட்டிருந்தால் எல்லோரும் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள்.

ஆதிராம் சார்.
சிலர் மனம் புண்படும்படி பதிவு போடுவதும் தேவையில்லை பின் வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை
பாடல்கள் குறித்து நீங்கள் எழுதுங்கள் உங்கள் பார்வையில் சொல்லுங்கள் . நல்ல எழுத்தை ஊக்குவிக்கவும் ரசிக்கவும் இந்த திரியில் ஆட்கள் அதிகம்
ஆனால் ஏதோ பதிவிடுவதே சிலரை வம்பிழுக்கவோ இல்லை ஏதோ ஒன்று சொல்ல வேண்டும் என்றோ சொல்வது அழகல்ல
இதுவரையில் இந்த திரியில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அது பலருக்கு எரிச்சலாக கூட இருக்கலாம். அதற்கெல்லாம் அசையும் கூட்டமில்லை ..

ரவி, சி.க எல்லோருமே நல்ல பதிவாளர்கள். அவர்கள் யார் வம்புக்கும் கூட போகாதவர்கள் அவர்கள் கூட சங்கடப்படுமளவிற்கு நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் உள்ளது.

வெறுப்பில் திரியை விட்டு செல்லவும் வேண்டாம் வேண்டா வெறுப்பாக வந்து பதிவிடவும் வேண்டாம்.
உங்கள் இஷ்டம். ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியதை சொன்னேன் அவ்ளோதான்..

Gopal.s
17th June 2015, 06:57 AM
நான் சில விஷயங்கள் சொல்ல விழைகிறேன். ஆனால் நண்பர்கள் உஷ்ணம் வேண்டாமென்று சத்தியம் வாங்கி கொண்டனர். ராஜேஷ் பொறுமை இழப்பது தேவையில்லா ஒன்று. ஆதிராம், வாசு பார்த்து கொள்ளட்டும்.



என்னை உலக படம்,இசை மட்டோடு நிறுத்தி கொள்ள சொல்லியுள்ளனர்.

vasudevan31355
17th June 2015, 07:04 AM
வாசு,

பாராட்டிற்கு நன்றி. இதை அங்கே பதிவதற்கு இன்னும் மனதளவில் நீங்கள் தயாராகவில்லை என நினைக்கிறேன். விரைவில் அந்த நாள் வரட்டும்.

அன்புடன்

உண்மைதான் முரளி சார். உளமார ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்வது போல என் மனது எங்கே 'அலைந்து' கொண்டிருக்கும் என்று உங்களுக்கும், அனைவருக்கும் தெரியும்.

உங்கள் 'சொர்க்கப்' பதிவிலிருந்து இன்னும் மீளவில்லை நான். ஏறக்குறைய இருபது தடவைகளுக்கு மேல் படித்து விட்டேன். நண்பர்களிடமும் அலைபேசியில் சொல்லி மகிழ்ந்தேன்.

அது போல ராகவேந்திரன் சார் வேல்பாளையத்து வேந்தன், வில்லாள மன்னன் மூலம் விட்ட ஆய்வுக்கள அம்பு வேறு இன்ப அதிர்ச்சியாய் இதயத்துக்குள் இறங்கி விட்டது. இதற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.

vasudevan31355
17th June 2015, 07:44 AM
கோ,

அடுத்த படம் தொடருங்கள். காத்திருக்கிறேன். 'டாக்ஸி டிரைவர்' உங்கள் லிஸ்டில் வருமா? நான் தமிழ் டிரைவரை சொல்லவில்லை.:) அவார்ட் வின்னரைச் சொன்னேன்.

RAGHAVENDRA
17th June 2015, 07:55 AM
கோ,

அடுத்த படம் தொடருங்கள். காத்திருக்கிறேன். 'டாக்ஸி டிரைவர்' உங்கள் லிஸ்டில் வருமா? நான் தமிழ் டிரைவரை சொல்லவில்லை.:) அவார்ட் வின்னரைச் சொன்னேன்.

1978ல் சென்னையில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவின் போது திரையரங்குகளை ரசிகர்கள் முற்றுகையிட்டு கலாட்டா செய்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடந்ததே... அந்த 'டாக்ஸி டிரைவர்' படத்தைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது வாசு சார். மெல்லிசை மன்னரின் இசையில் சுகமான சிந்தனையை ஊட்டும் அருமையான பாடல்களைக் கொண்ட ஜெய்யின் 150வது படத்தைப் பற்றித் தான் தெரியும்...'அந்தப்' படத்தைப் பற்றி கோபால் எழுதட்டும், நாம் படிக்கக் காத்திருப்போம்..

rajeshkrv
17th June 2015, 07:55 AM
நான் சில விஷயங்கள் சொல்ல விழைகிறேன். ஆனால் நண்பர்கள் உஷ்ணம் வேண்டாமென்று சத்தியம் வாங்கி கொண்டனர். ராஜேஷ் பொறுமை இழப்பது தேவையில்லா ஒன்று. ஆதிராம், வாசு பார்த்து கொள்ளட்டும்.



என்னை உலக படம்,இசை மட்டோடு நிறுத்தி கொள்ள சொல்லியுள்ளனர்.

நான் எப்போதுமே பொறுமை இழப்பதில்லை. என்ன ஆச்சர்யம் இதுவே உமக்கு பொறுமை இழப்பது போல் உள்ளதா .. அட ராமா நீங்கள் இவ்வளவு சாந்தமாகிவிட்டதை நினைத்து மிகவும் சந்தோஷமாக உள்ளது.

vasudevan31355
17th June 2015, 07:56 AM
//முரளியும் ,வாசுவும் போட்டு வாங்கு வாங்கு என்று என்னை வாங்கி விட்டனர். நீ பாட்டுக்கும் இசை,உலக படம்,நடிப்பிலக்கணம், ஆய்வு இதையெல்லாம் எழுதி விட்டு ஒதுங்கி கிடப்பதுதானே? இல்லையென்றால் உன் ப்ளாக் துவங்குவதாக சொன்னாயே?அதை செய்து தொலைக்க வேண்டியதுதானே?அதை விட்டு.... என்று .நண்பர்களுக்காக அடக்கி வாசிக்க போகிறேன்.//

இந்த அப்'பாவி'ப் பிள்ளையை எந்த லிஸ்டில் சேர்ப்பது? ம்..

சின்னா கேட்டதை மறக்க முடியாது. 'புலி பாஞ்சுடுத்தா?:) சின்னா! உம்மை!:) (உஷார்ப்படுத்துனவன் மேலேயே புலி பாய்ஞ்ச புதுமைக் கதை):)

பாய்ஞ்சி இப்போதைக்கு ஓய்ஞ்சி படுத்திருக்கு.:) காலையில கூட லைட்டா உறுமின சத்தம் கேட்டுது.:) எப்போ பாயுமோ?:) ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.:)

vasudevan31355
17th June 2015, 07:59 AM
நான் எப்போதுமே பொறுமை இழப்பதில்லை. என்ன ஆச்சர்யம் இதுவே உமக்கு பொறுமை இழப்பது போல் உள்ளதா .. அட ராமா நீங்கள் இவ்வளவு சாந்தமாகிவிட்டதை நினைத்து மிகவும் சந்தோஷமாக உள்ளது.

வாங்கோ ஜி! வணக்கம். இப்பதான் நான் பாய ஆயத்தமானேன். நீங்க வந்து சாந்தப்படுத்தறேள்.:) உங்க ஹேண்ட்லிங் ரொம்ப அழகுஜி! ஹேண்ட்ஸம் உங்களைப் போலவே.

vasudevan31355
17th June 2015, 08:01 AM
ஜி!

உங்க நாராயணா! நாராயணா! தான் சூப்பர்ஜி.

vasudevan31355
17th June 2015, 08:03 AM
//நண்பர்களுக்காக அடக்கி வாசிக்க போகிறேன்//

இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா?:)

vasudevan31355
17th June 2015, 08:05 AM
//ப்ளாக் துவங்குவதாக சொன்னாயே//

பிளாக்மெயில் பண்ணியும் பிளாக் துவங்கலியே:)

rajeshkrv
17th June 2015, 08:09 AM
வணக்கம் ஜி.

vasudevan31355
17th June 2015, 08:43 AM
ஜி!

http://i3.ytimg.com/vi/fsJcFCeT_3U/movieposter.jpg

என்ன அருமையான பாடல்! 'வெண்ணிற ஆடை' நிர்மலா கணவன் முத்துராமனை நினைத்து வேண்டி உருகும் பாடல்.

இசையரசியின் குரலில் மங்களம் பொங்கும் பாடல். காலையில் கேட்க தகுந்த திகட்டாத கானம். அந்த ஸ்ரீதேவியே சுசீலாம்மா நாவில் அமர்ந்து பாடுகிறாளோ!

நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி
எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும்
கண் போன்ற மணவாளன் கல்யாண மாங்கல்யம்
பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்.

கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும்
பெண்ணோடு ஆண் என்ற பொருளல்லவோ
கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும்
பெண்ணோடு ஆண் என்ற பொருளல்லவோ

கல்யாணமும் செல்வங்களும்
பதினாறு பேறேன்னும் வாழ்வல்லவோ
கல்யாணமும் செல்வங்களும்
பதினாறு பேறேன்னும் வாழ்வல்லவோ
பொன் மஞ்சளும் பூ மாலையும்
எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ
எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ

உன்னை நினைந்து உன்னை மணந்து
உன்னோடு வாழ்கின்ற திருமால் அவன்
உன்னை நினைந்து உன்னை மணந்து
உன்னோடு வாழ்கின்ற திருமால் அவன்
வான் மீதிலே தனியாகவே வாழ்ந்தாலும்
அவன் என்றும் உன் நாயகன்
உன் கண்களும், உன் உள்ளமும்
உன் காதலன் மணவாளன் சிம்மாசனம்

நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி
எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும்
கண் போன்ற மணவாளன் கல்யாண மாங்கல்யம்
பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்.

குரலா அது! வெண்கலம் போல! என்ன ஒரூ தெளிவு! உச்சரிப்பு!ஆளை அப்படியே மயக்குகிறது. அதுவும் 'ஸ்ரீதேவி' எனும் போது சிலிர்க்கிறது.

சலிக்கவே சலிக்காத பாடல். 'வீட்டுக்கு வீடு' படப் பாடல்.


https://youtu.be/8gnHaTFFra8

rajeshkrv
17th June 2015, 08:51 AM
ஜி
ஆஹா அருமை. உறக்கத்தை தழுவும் முன் இந்த தேன் குரலால் என் மனதை குளிர வைத்துவிட்டீர்கள்
யாரங்கே ஆயிரம் பொற்காசுகள் கொண்டு வாருங்கள்

rajeshkrv
17th June 2015, 08:56 AM
இதோ பரிசாக உமக்கு ஒரு அருமையான தெலுங்கு பாடல்
ஜாவளி ....

பொப்பிலி யுத்தம் திரையில் அழகான எல்.விஜயலெட்சுமி என்ன அருமையாக ஆடுகிறார்
இசையரசி என்ன அழகாக பாடுகிறார்

https://www.youtube.com/watch?v=XDmwW583_3o

rajeshkrv
17th June 2015, 09:00 AM
ஜானியின் என் வானிலே தெலுங்கில் இதோ

https://www.youtube.com/watch?v=Jv1P_PzRcFQ

vasudevan31355
17th June 2015, 09:17 AM
ஜி
ஆஹா அருமை. உறக்கத்தை தழுவும் முன் இந்த தேன் குரலால் என் மனதை குளிர வைத்துவிட்டீர்கள்
யாரங்கே ஆயிரம் பொற்காசுகள் கொண்டு வாருங்கள்

இதுவரை மூன்றாயிரம் பொற்காசுகள் வாங்கியிருக்கிறேன்.:)

chinnakkannan
17th June 2015, 10:17 AM
hi good morning all..

மத்த ரெண்டாயிரம் பொற்காசுகள் எதற்கு..

அப்புறம் புலி பாயாம இருக்கப் போகுதா..ஒருவேளை ரம்தான் மாதம் நாளைக்கு ஆரம்பிக்குது..அதனால இருக்கலாம் :)


பட் கோபல்ல புலி அடக்க ஒடுக்கமா எழுத்து வேலை பார்த்தாலே போதும்..( நவீன கவிதையைச் சொல்லவில்லை..ஸாரி அந்த சமாச்சாரம் எனக்குப் புரியாது) இந்த ஆடு அவரிடம் தானாகவே சரண்டர் ஆகிவிடும்..ஆடுன்னா ரொம்ப தன்னடக்கமா இருக்கோ..சரி..குட்டிப் புலின்னு வெச்சுக்கலாம் :) ( நான் என்னைச் சொன்னேன்!)

adiram
17th June 2015, 11:10 AM
அன்புள்ள ராஜேஷ் சார்,

நீங்களும் நேற்றைய நிகழ்வை புரிந்துகொள்ளாமல் பதிவிட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

கோபால் அவர்கள் 'எனக்கு' சொன்ன பதிவுக்கு நான் 'அவருக்கு' (கோபாலுக்கு) சொன்ன பதில் அது. (விளக்குவதற்காக அவருடைய பதிவையும் கோட் பண்ணியிருக்கிறேன். அவருக்கு நான் இட்ட பதிலை திரு வாசுதேவன் அவர்களும் கோட் பண்ணியிருக்கிறார்)

கோபால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே பதிவில், ஆளுக்கு ஒன்றிரண்டு வரியாக பாராட்டு சொல்லும்போது (பதிவு என்: 1120) என்னையும் ஒரே வரியில் "ஆதிராம், உங்கள் பதிவுகள் திருக்குறள் போல சுருக்கம்" என்று சொல்லியிருந்தார். அதற்கு நான் "நன்றி,.. ஆனால் திருக்குறள் என்ற பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள். பயமாக இருக்கிறது. அதே சமயம் உங்கள் நம்பிக்கைக்கு உரிய வகையில் பதிவிடனும் என்ற எச்சரிக்கை மணியும் எனக்குள் ஒலிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்த பதிலில் வாசு அவர்கள் எங்கு இடம்பெறுகிறார் என்று நீங்களே சொல்லுங்கள். அவராக ஒன்றை கற்பனை செய்துகொண்டு என்னைத்தாக்கி அவ்வளவு நீண்ட பதிவு போட்டிருக்கிறார்.

அவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடலைப் போட்டால் என்ன, அல்லது வேறு யாருடைய பாடலைப் போட்டால் என்ன, அதை தடுக்கவோ, குறைசொல்லவோ, முட்டுக்கட்டை போடவோ, நான் யார்?. எனக்கு என்ன உரிமை அல்லது அருகதை இருக்கிறது?. இதுகூட தெரியாத முட்டாளா நான்?.

அவர் (வாசு) இந்த திரியைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருபவர். நான் வெறுமனே எட்டிப் பார்த்து இரண்டு மூன்று வரிகளில் பாராட்டு கமெண்ட் எழுதுபவன் மட்டுமே. என்னுடைய லிமிட் என்னவென்று எனக்கு தெரியாதா?. அப்படியிருக்க என்னைத்தாக்கி, நான் சொல்லாதவற்றை எல்லாம் குறிப்பிட்டு அவ்வளவு பெரிய தாக்குதல் பதிவு என்மீது போட்டிருக்கிறார்.

நீங்களும் என் விளக்கங்களை மேம்போக்காக படித்துவிட்டு என்னையே குறை சொல்லியிருக்கிறீர்கள்.

வருத்தம்தான் நண்பர் ராஜேஷ் அவர்களே.

(பாடல்கள் பற்றிய பொதுத்திரியில் என்னுடைய விளக்கங்களையே பதிவிட்டுக் கொண்டு இருப்பது பங்கேற்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சலிப்பை ஊட்ட வாய்ப்பிருப்பதால் நிறுத்திக் கொள்கிறேன்)

vasudevan31355
17th June 2015, 12:31 PM
'மாடி வீட்டுப் பொண்ணு மீனா'

படம்: புகுந்த வீடு

சிறப்பு அம்சங்கள் நிறைந்த சிந்தை மயக்கிய பாடல்.

எனதருமை கோபால் சாருக்கு இப்பாடலை பரிசாக அளிக்கிறேன்.

பாடகர் திலகத்தின் ஆளுமை. இரட்டையர்கள் சங்கர்-கணேஷ் இசை இராஜ்ஜியம். இசைக்குழுவினர் ஒவ்வொருவரின் ஒற்றுமைப் பங்களிப்பு, ரவியின் ஸ்டைல், அழகு, ஆட்டம், ரவி இதுவரை செய்யாத சில புது முகபாவங்கள், லஷ்மியின் நடிப்பு

என்று பல சிறப்புகள் நிறைந்த பாடல்.

சந்தர்ப்ப வசத்தால் பிரிந்த தம்பதியர். கணவன் மேடைப் பாடகனாக இன்னிசைக் கச்சேரி மேடையில். அவன்தான் பாடப் போகிறான் என்று தெரியாமல் அரங்கின் உள்ளே வரும் மனைவி. அவனைக் கண்டதும் அதிர்ச்சி. அவனுக்கும் இன்ப, துன்ப அதிர்ச்சி. மைக்கை கையில் எடுத்து மனதில் உள்ளதை (அவள் மட்டுமே) புரியும்படி வார்த்தைகளில் இன்னிசையோடு கொட்டித் தீர்க்கிறான். அவள் தர்மசங்கடத்தில் ஆழ்கிறாள். அழுகிறாள்.

இது பாடலுக்கான காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110641.664.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110641.664.jp g.html)

இன்னிசைக் கச்சேரி ஒன்றில் ரசிகர்களிடம் சங்கர்-கணேஷ் இரட்டையர்களை ரவி நிஜமாகவே அறிமுகப்படுத்துவதுடன் இந்தப் பாடல் தொடங்கும். மேடையில் இன்னிசை வேந்தர்கள். இருவரும் இளமையாக. சுறுசுறுப்பாக.

பாடலின் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமாக டிரம்பெட் எடுத்து கூலிங் கிளாஸ் அணிந்த இசைக் கலைஞர் ஒருவர் வாசிக்க ஆரம்பிக்க, அப்படியே நாம் நம்மை நம் வசம் இழக்க ஆரம்பிப்போம். காதுகளில் ரீங்காரமிட்டு ஆர்ப்பாட்ட இசை நம்மை இன்ப சித்ரவதைகள் செய்ய ஆரம்பிக்கும்.

இசைக்கலைஞர்கள் கள்ளமில்லா புன்னகையோடு கிடார் கருவிகளை தீண்ட, மற்ற சிலர் 'பாங்கோஸ்' பரவசமாய் வாசிக்க, மற்ற கலைஞர்களும் அவரவர்கள் இசை வேலையைச் செவ்வனே செய்ய, பாடகர்கள் அணியும் வெண் கோட் சூட் அணிந்து ரவி உற்சாகக் கரை புரள பாடத் துவங்குவார்.

மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா

கால்கள் தள்ளாடினா
கண்கள் போராடினா
நெஞ்சம் திண்டாடினா
நாணம் கொண்டோடினா
ஒரே பயம் பாவம்
ஒரே பயம்

மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா

நேர் ஆங்கிளிலும் சைட் ஆங்கிளிலும் ரவி அழகு. சற்று முகம் முற்றியதும் தெரியும். ஆனாலும் அதவும் ஒரு தனி அழகு.

லஷ்மி இப்போது அரங்கத்தினுள் என்ட்டர். ரவியைப் பார்த்ததும் கண்களை உயர்த்தி அதிர்ச்சி அடைந்து நிற்பார்.

இப்போது இடையிசை. சங்கர்-கணேஷ் பின்னி எடுப்பார்கள். சங்கர் அக்கார்டின் எடுத்து அக்கிரமம் புரிகையில் கணேஷ் தன் கைகளால் இசைக் குழுவினரை வழி நடத்துவார். கண்ணாடி வாலிபர் கருமமே கண்ணாக டிரம்பெட் வாசித்து கலக்கிக் கொண்டிருப்பார். பின் ஐந்தாறு வயலின் விற்பன்னர்கள் புகுந்து புறப்படுவார்கள்.

லஷ்மி சீட்டு இருக்கை நம்பரை செக் செய்தபடி இருக்கை இருக்கும் வரிசையைத் தேடிச் செல்வார். இப்போது அனைத்து இசைக் கலைஞர்களும் சேர்ந்து காட்டப்படுவார்கள்.

இருபது வயது இளைஞன் ஒருவன்
வருவதைக் கண்டாள் பின்னாடி
இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு

(ரவி குனிந்தபடி தத்தித் தத்தி நடந்து ஆடுவது செம அழகு)

அன்னம் நடந்தாள் தள்ளாடி
அங்கொரு பார்வை இங்கொரு பார்வை

(இந்த இடத்தில் ரவி, லஷ்மி ரகசிய முகபாவங்கள் ரசிக்க வைக்கும்)

அங்கொரு பார்வை இங்கொரு பார்வை
அச்சம் கொண்டாள் நெஞ்சோடு
காதல் என்னும் பாடல் கேட்டு
பின்னால் சென்றாள் அவனோடு
காதல் என்னும் பாடல் கேட்டு
பின்னால் சென்றாள் அவனோடு

மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா

http://i.ytimg.com/vi/1nFZ5o4kKAo/hqdefault.jpg

பாங்கோஸ் உருட்டல், மிரட்டல்களுக்கு மத்தியில் (வாசிக்கும் அந்த அழகு இளைஞரிடம்தான் என்ன ஒரு உற்சாகம்!) அந்த ஓசைக்கேற்றவாறு லஷ்மியின் கண்கள் மிரட்சியில் மிரண்டு கவிதைகளாய் உருளும். உருக்கும். ரவி ஆர்வ எகத்தாளமாய் அவரைப் பார்ப்பது இன்னும் சுவை. லஷ்மி செய்வதறியாமல் கீழுதட்டை மெல்லக் கடிப்பார். டிரம்ஸ் புகுந்து விளையாடும்.

கிடார்கள் முழங்க, தொடர்ந்து புல்லாங்குழல் வாசிப்பாளர் குழல் வாசித்து புளகாங்கித புல்லரிக்க வைப்பார். சாக்ஸோபோன் பிடித்து சர்க்கஸ் வித்தைகள் நடத்திக் காட்டுவார் இன்னொரு வாசிப்பு ஜாம்பவான்.

(இந்த ஜாம்பவானுக்கு, அவர் வாசிக்கும் அழகிற்கு, அற்புதத்திற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும். மனுஷன் பின்னுவார் சாக்ஸில் மெய்மறந்து.)

மலரும் நினைவுகளில் மூழ்கிய லஷ்மியின் மௌன அழுகை அவரிடம் நம்முள் இரக்கம் பிறக்க வைக்கும்.

உறவினில் தொடங்கி ஊடலில் முடிய
இருவரும் பிரிந்தார் தனியாக
சென்றவன் தானே வந்திடக் கூடும்
என்றவள் நினைத்தாள் முடிவாக

என்று ரவி இதழ் மூடாமல் முகத்தில் சோகம் காட்டி தொடருவார். (அருமையாக பாவங்கள் காட்டுவார் ரவி இந்த இடத்தில் பழைய நினைவுகளை நினைத்தபடியே)

காதலில் நெஞ்சம் வாடிய பின்னால்
காதலில் நெஞ்சம் வாடிய பின்னால்

(லஷ்மியின் புருவங்கள் கோபத்தில் ஏறி இறங்கும் விதம் வித்தை)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110957.473_1. jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110957.473_1. jpg.html)

இரண்டாம் முறை 'காதலில் நெஞ்சம்' எனும் போது ரவி வாயசைப்பது அப்படியே நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்தும். 'ம்' இழுக்கும் போது கவனியுங்கள்.

தானே வந்தாள் துணை தேடி

காலம் ஒருநாள் மாறும் என்று
மன்னன் நின்றான் இசை பாடி
காலம் ஒருநாள் மாறும் என்று
மன்னன் நின்றான் இசை பாடி

மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா

'பாங்கோஸ்' இசையுடன் பாடல் முடியும். ஆனால் அப்போதுதான் மீண்டும் நம் மனதில் இசைக்கத் துவங்கும்.

நான் பார்த்து பார்த்து, அனுபவித்து அனுபவித்து, ரசித்து ரசித்து, மகிழ்ந்த பாடல். பாடகர் திலகத்தின் பாடல் வரிசைகளில் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்ட பாடல். பாடல் கொஞ்சமும் அழகு கெடாமல் சுவை குன்றாமல் நாம் நினைத்ததற்கு மேலும் அற்புதமாக படமாக்கப் பட்டிருக்கும்.

இசைக் கலைஞர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் ரவி,லஷ்மி நடிப்பையும் சேர்த்து அவர்களோடு கலந்து இப்பாடலை சுவைத்து மகிழலாம்.

என்ன ஒற்றுமையான ஒருங்கிணைப்பு! பாடகர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர் என்று ஒருவரை ஒருவர் மிஞ்சும் திறமையான காலகட்டம். என்ஹி போயிற்று அந்த சொர்க்கபுரி நாட்கள்? திரும்ப வரவே வராதா? ஒவ்வொருவருக்கும் டைம் மெஷின் இருக்கக் கூடாதா? அதில் ஏறி அந்தக் காலத்திற்கு நாம் பறக்கக் கூடாதா?

இறந்தும் இசையால், நடிப்பால், கலையால் நம்மை வாழ வைக்கும் சாகசக் கலைஞர்களுக்கு இப்பாடல் அர்ப்பணம்.

அப்பாடி! ரொம்ப நாள் ஆசை இன்று நிறைவேறி விட்டது.

ரசித்த, ஏற்கனவே ரசித்த, இப்போது ரசிக்கப் போகும் அனைத்து ரசிக உள்ளங்களுக்கும் நன்றி!


https://youtu.be/9Zg31-cOuhA

vasudevan31355
17th June 2015, 12:42 PM
'மாடி வீட்டுப் பொண்ணு மீனா' பாடலில் பங்கு பெற்ற இசைக் கலைஞர்கள்.

ராகவேந்திரன் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

இந்தப் பாடலில் வரும் இசைக் கலைஞர்களின் பெயர்களை தாங்கள் அறிந்திருந்தால் இங்கு கூற முடியுமா?

ராகவேந்திரன் சார்,

'மாடி வீட்டுப் பொண்ணு மீனா' பாடலில் மேடையில் பங்களிக்கும் இசைக் கலைஞர்களின் நிழற் படங்களை இங்கே தனித்தனியாக பதிவிடுகிறேன்.
ஒவ்வொருவரையும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110646.591.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110646.591.jp g.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110846.708.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110846.708.jp g.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110829.175.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110829.175.jp g.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110818.575.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110818.575.jp g.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110817.358.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110817.358.jp g.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110727.646.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110727.646.jp g.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110659.366.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355037/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110659.366.jp g.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355038/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_125136.036.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355038/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_125136.036.jp g.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355038/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_125131.892.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355038/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_125131.892.jp g.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355038/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_125055.765.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355038/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_125055.765.jp g.html)

RAGHAVENDRA
17th June 2015, 12:54 PM
வாசு சார்
தங்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒரு பாட்டினைப் பற்றி எழுத இவ்வளவெல்லாம் சிரமப்பட வேண்டியிருக்குமா என்கிற வியப்பைத் தருகிறது தங்கள் உழைப்பு. மிகவும் நுணுக்கமாய் ஆய்ந்து எழுதியுள்ளீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

மேற்காணும் இசைக்கலைஞர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது எனினும், ஒரு சிலர் அக்காலத்தில் அனைத்து இசைக்குழுவிலும் பங்காற்றியவர்கள் எனத் தெரிகிறது. காரணம் மெல்லிசை மன்னரின் இசைக்குழுவின் அங்கத்தினர்கள் - சங்கர் கணேஷ் உள்பட - இதில் இடம் பெற்றிருப்பதே.

இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கண்ணன் லதா என்ற இசைக்குழுவிலும் மேடையில் வாசித்து வந்தார்கள் என ஞாபகம்.

மெல்லிசை மன்னர் இணைய தள நண்பர்கள் மூலமாக இவற்றை நாம் அறிந்து தர முயற்சிக்கிறேன்.

புகுந்த வீடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. நவநீதா ஃபிலிம்ஸ் சுப்ரமணிய செட்டியார் அவர்கள் தொடர்ந்து பல படங்களை எடுக்க இது தூண்டுகோலாக இருந்தது. புகுந்தவீடு படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டியவர் நடிகர் திலகம் என்பது குறிப்பிடத்தக்கது.

vasudevan31355
17th June 2015, 02:45 PM
//மெல்லிசை மன்னர் இணைய தள நண்பர்கள் மூலமாக இவற்றை நாம் அறிந்து தர முயற்சிக்கிறேன்.//

மிக்க நன்றி ராகவேந்திரன் சார். அருமையான யோசனை. தங்கள் முயற்சியால் நிச்சயம் பலன் கிட்டும். கிடைத்தவுடன் பகிருங்கள். இசைக் கலைஞர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே!

Gopal.s
17th June 2015, 03:19 PM
வாசு,



எப்படி என் மனதை படித்தாய்?அடுத்தது Scorsese தான்.Taxi Driver தான்.

RAGHAVENDRA
17th June 2015, 04:13 PM
அருமை நண்பர் ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் சில இசைக்கலைஞர்கள் பெயரை அளித்துள்ளார். அவருக்கு உளமார்ந்த நன்றி.

கிடார் - வசந்த் மற்றும் அபு
டிரம்பெட் - யூஜீன்
அக்கார்டின் - இசையமைப்பாளர் சங்கர்
புருஷோத்தமன் - டிரம்ஸ்

vasudevan31355
17th June 2015, 05:30 PM
அருமை நண்பர் ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் சில இசைக்கலைஞர்கள் பெயரை அளித்துள்ளார். அவருக்கு உளமார்ந்த நன்றி.

கிடார் - வசந்த் மற்றும் அபு
டிரம்பெட் - யூஜீன்
அக்கார்டின் - இசையமைப்பாளர் சங்கர்
புருஷோத்தமன் - டிரம்ஸ்

ராகவேந்திரன் சார்!

இவ்வளவு சிரத்தை எடுத்து, இசைக் கலைஞர்களின் பெயர்களை, பதிவிட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே இங்கு தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! இசைக் கலைஞர்களின் பெயர்களை தந்து உதவி செய்த திரு. ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.

இதுதான் ரசிக வேந்தர் என்பது. கேட்ட மாத்திரத்தில் பெயர்களை கொடுத்து விட்டாரே! அபார சுறுசுறுப்பு. மீண்டும் மனமார்ந்த நன்றி ராகவேந்திரன் சார்.

rajeshkrv
17th June 2015, 05:53 PM
ஆஹா புகுந்த வீடு பற்றி பிரமாதமான விளக்கம் ஜி. நன்றி
போங்கோஸில் திரு பாஸ்டன் கணேஷும் உண்டு. (எங்களது நீண்டகால முகனூல் நண்பர் சமீபத்தில் இறந்து எங்களை சோகத்தில் ஆழ்தினார்)

vasudevan31355
17th June 2015, 05:54 PM
வாசு,



எப்படி என் மனதை படித்தாய்?அடுத்தது Scorsese தான்.Taxi Driver தான்.

https://pbs.twimg.com/profile_images/862827383/martytwitter_400x400.jpg

http://theselvedgeyard.files.wordpress.com/2010/07/scorcese-de-niro-taxi-driver.jpg?w=700

ஆஹா! கோபால்! இதை ரொம்ப எதிர்பார்க்கிறேன். 76-லோ அல்லது அதற்கு பிறகோ (சரியாக நினைவில்லை) மெட்ராஸில் நடை பெற்ற பிலிம் பெஸ்டிவெலில் இப்படம் கலந்து கொண்டதும், ரசிகர்கள் அடிதடியில் இறங்கி ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி 'எதையோ' :) எதிர்பார்த்து, பின் ஏமாந்து போய் வெறுத்து வந்ததையும் பத்திரிகையில் படித்த செய்தி புகையாய் நிழலாடுகிறது.

ஆனால் அதற்கு பிறகு 80-களில் இப்படத்தை தேடி அலைந்து பிடித்து (வீடியோ கேசெட்) வீட்டில் போய்ப் பார்த்து நானும் ஏமாந்தேன். ரசிகர்கள் எதிர்பார்த்தது ஏமாந்தது போல் அல்ல.:) கடைக்காரர் தேவ் ஆனந்த் நடித்த இந்தி Taxi Driver படத்தை கொடுத்து விட்டார். பின் 'Jaayen To Jaayen Kaha' (Talat Mahmood கஜல் ரொம்பப் பிடிக்கும். அவருடைய நடுக்கும் குரல் டாப்) பார்த்து விட்டு திரும்ப கொடுத்தேன். இன்னும் Martin Scorsese-ன் 'டாக்சி டிரைவர்' பார்த்த பாடில்லை. நீங்கள் எழுதியதும் அதைப் படித்து விட்டு பார்க்க ஆவல் ஏற்படுகிறது.

நன்றி கோ.

உங்களால் அற்புதமான கலைப் படைப்புகளை அடையாளம் கண்டு கொள்வதோடு மட்டுமல்லாமல் அணுஅணுவாக ரசித்தும் பார்க்க முடிகிறது.

Robert De Niro அதற்கு மேல் எனக்குப் பிடித்த Jodie Foster கலக்கல்தானே!

rajeshkrv
17th June 2015, 05:57 PM
Taxi driver... waiting for that Gopal ji.

vasudevan31355
17th June 2015, 06:02 PM
ஆஹா புகுந்த வீடு பற்றி பிரமாதமான விளக்கம் ஜி. நன்றி
போங்கோஸில் திரு பாஸ்டன் கணேஷும் உண்டு. (எங்களது நீண்டகால முகனூல் நண்பர் சமீபத்தில் இறந்து எங்களை சோகத்தில் ஆழ்தினார்)

தகவலுக்கும், பாராட்டிற்கும் நன்றி ஜி! அற்புதமான கலைஞர் பாஸ்டன் கணேஷ் மறைந்து விட்டாரே!

vasudevan31355
17th June 2015, 06:08 PM
Jodie Foster in 'Taxi Driver'

http://www.moma.org/explore/inside_out/inside_out/wp-content/uploads/2014/07/Taxi_Driver_2.jpg

vasudevan31355
17th June 2015, 06:16 PM
கோ,

Taxi Driver - டிரைலரே அதம் பறக்குதே!


https://youtu.be/sLpMx8_TYOo

vasudevan31355
17th June 2015, 06:21 PM
கோ,

Jodie Foster கையெழுத்திட்ட அவருடைய ஒரு மாதிரி போட்டோ 'ebay' வில் 193 டாலர்களுக்குக் கிடைக்கிறது. 'டாக்ஸி டிரைவர்' படத்தின் போஸ்தான். ரசிகர்கள் ஏன் ரத்தம் வழிய அடித்துக் கொள்ள மாட்டார்கள்?:)

vasudevan31355
17th June 2015, 06:33 PM
ji!

p.m paarungo.:)

rajraj
17th June 2015, 10:20 PM
From SrivaLLi

yaar undhanaippol enai aadharippavar aarumukatharase.....

http://www.youtube.com/watch?v=ZPTiggMPaho

Baby Kamala dancing.

I posted this song because a leading vocalist opened his concert with this song. That was a surprise to me. In my days concerts always opened with 'vaathaapi ganapathim.....'. I like the change shifting to Tamil compositions opening the concerts ! :)

Gopal.s
17th June 2015, 11:47 PM
Taxi Driver -1975-Martin Scorsese

Neo noir படங்களின் மூலகர்த்தாக்களில் ஒருவர்.அது என்ன Neo Noir ?அடிக்கடி சொல்கிறாயே என்கிறீர்களா? இதற்கு அர்த்தம் Theme (கருபொருள் )Content (உட்பொருள்கள் ),Style (அமைப்பு),Form (வடிவம்),Visual Element (காட்சி படிமங்கள்) எல்லாவற்றிலும் வேறுபட்ட புதிய கருப்பு படங்கள் . பெரும்பாலும் Anti -Hero படத்தின் protagonist ஆக இருப்பார்.Camera Placement ,Light &Shadows ,Low Key Lighting ,Visual எல்லாமே மாறுபட்டிருக்கும்.இதில் காதாநாயகர்கள் மன அழுத்தம் கொண்டு விரக்தியான விளிம்பு நிலையில் ,அழிவில் நீதி காணுவார்கள்.

எனக்கு பிடித்த மிசொகுசி,ரொசலினி,பெல்லினி,குப்ரிக்,அன்ட்ரே வாஜ்தா,ஆர்சென் வேல்ஸ்,பிரான்சிஸ்கோ ரோசி,ஹிட்ச்காக் போன்ற இயக்குனர்களால் உந்த பட்டவர் Martin Scorsese .இவரின் சமீப படங்கள் Gangs of Newyork ,Aviator ,Departed போன்ற படங்கள் எனக்கு பிடிக்குமென்றாலும்,taxi Driver தனி ரகம்.1975 இல் இதை பட விழாவில் பார்த்து விட்டு வந்த போது சக மாணவர்களின் பொறாமை தீயில் வெந்தேன். ஆனால் எனக்கு படம் பிடித்தது வேறு காரணங்கள்.(அந்த சமாசாரத்துக்கு மலையாள பிட் படம் போதுமே )

வியட்நாம் போர் என்பது அமெரிக்க மனசாட்சியை குலுக்கி விட்டது. சம்பந்தமே இல்லாத, எதற்கு என்ற காரணம் புரியாமல் ,கட்டாயமாக ராணுவ சேவைக்கு பல இளைஞர்கள் பரிச்சயமில்லாத நாட்டுக்கு ,குரூரம் புரிய அனுப்ப பட்டு உடலும்,மனமும் சிதைந்து ,மன அழுத்தத்திற்கு ஆட்பட்டார்கள். இதன் கதாநாயகன் ,மன அழுத்தம் கொண்டு ,தூக்கம் வராமல் இரவில் டாக்ஸி ஓட்டி, போர்னோ படம் பார்த்து கொண்டு நோக்கமில்லாமல் வாழ்வை கழிப்பவன்.(பெரும்பாலும் இந்த காலகட்டத்தில் ஹிப்பி culture அல்லது criminal tendency பல பேரை அமெரிக்காவில் ஆட்கொண்டது). ஒரு பெண்ணை கவர முயன்று தோல்வி கண்டு, ஏதோ ஒரு விபசார பெண் விஷயத்தில் obsession கொண்டு, அவளை விடுவிக்கும் போக்கில் கடைசியில் மன அழுத்த வெடிப்பில் குற்றங்களை செய்து , ஒரு உண்மை நாயகனாக கூட்டத்தால் கொண்டாட படுகிறான்.

அப்பப்பா ,முதல் காட்சியிலிருந்து படம் நம்மை கட்டி போடும். இந்த இயக்குனருக்கும் ,Robert Deniro வுக்கும் நம்ம பீம்சிங்-சிவாஜி அளவு chemistry . இந்த படத்தில் நண்டின் இயல்பில் நடிப்பார் . "He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side." நமது நடிகர்திலகமும் பல படங்களில் மிருகங்களின் இயல்பை தனது பாத்திரங்களில் கையாண்டு ,பாத்திரங்களை மெருகேற்றுவார். அத்தனை உலக நடிகர்களும் கையாண்ட இந்த உத்தியை ,நமது மேதை 50 களில் இருந்தே கையாண்டுள்ளார்.

இந்த படம் , எப்படி ஒரு Neo Noir படம் எடுக்க பட வேண்டும் என்ற ஒரு பாடம். ரொம்ப உட்புக மனமில்லையென்றால் ஒரு crime thriller மாதிரியும் ரசித்து விட்டு கடக்கலாம்.

chinnakkannan
18th June 2015, 12:22 AM
வாசு..புகுந்த வீடு பார்த்ததில்லை (படம் தான்) மாடிவீட்டு மைனா பாட்டு புகையாய்க் கேட்ட நினைவு..இப்போது தான் பார்க்கிறேன்..வழக்கம்போல அக்கக்காக அனுபவித்து ரசித்திருக்கிறீர்கள்

ராகவேந்தர்.. இசைத்தவர்களின் படங்கள் தகவல்களுக்கு நன்றி..

ராஜேஷ் தெலுகுப் பாட்டிற்கும் ராஜ் ராஜ் குமாரிகமலா பாட்டிற்கும் தாங்க்ஸ்

கோ.. வெகு அழகாக இருக்கிறது நீங்கள் படங்கள் கொடுப்பது..டாக்ஸி டிரைவர் பார்த்ததில்லை..ஆனால் ராபர்ட் டி நீரோ பிடிக்கும் பிற் படஙக்ளில்.. அனலைஸ் திஸ், மீட் த பேரண்ட்ஸ் பார்த்திருக்கிறேன்..இன்னொரு படம் ராபர்ட் டி நீரோவும் இன்னொருவரும் ( மாஸ்க் ஹீரோவா என்ன) கனடாபக்கம் சென்று ஒரு சர்ச்சில் பாதிரியார்களாக அதகளம் பண்ணியிருப்பார்கள் ( படம் பெயர் மறந்து விட்டது) மறக்காதது ஒன்று - அந்தப் படத்தில் டெமி மூர் உண்டு (அதானே) தொடருங்கள்..

RAGHAVENDRA
18th June 2015, 07:48 AM
Taxi Driver..

The real dimension in which this film has to be approached ... is rightly presented by Gopal..

Well done Gopal..

பல அந்நியப் படங்கள் நமக்குள்ளே பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன என்றால் அதற்கு மூல காரணம் நமது நடிகர் திலகமே... நடிப்பின் அத்தனை பரிமாணத்தையும் தன் முதல் சில படங்களிலேயே அளித்து விட்டதால், எந்த நடிகரைப் பார்த்தாலும் எந்தப் படத்தைப் பார்த்தாலும் மனம் நம்மையும் அறியாமல் நடிகர் திலகத்தைத் துணைக்கழைக்கிறது. அவருடைய துணை நம் நினைவில் வராமல் நம்மால வேற்றுப் படங்களைப் பார்க்க முடிவதில்லை. இதற்கு Sivaji Phobia என்று பெயர் வைத்தாலும் தப்பில்லை.

இதே அடிப்படையில் தான் டாக்ஸி டிரைவர் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது.

மிகவும் அதிக அளவில் நடிகர் திலகத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் நினைவூட்டிய படம், ஓமர் முக்தர். அந்தோனி க்வின் நடிப்பு அப்படியே நம்மவரை நினைவூட்டும்.

ஓமர் முக்தரைப் பற்றிய அலசலை கோபாலிடம் எதிர்பார்க்கிறேன்.

Of course is not such a cult classic in my view.

ஒரே ஒரு யோசனை தோன்றுகிறது..

இது பாடல்களைப் பற்றிய திரி என்பதால் படங்களைப் பற்றிய கருத்துரைகளை நம் நெஞ்சம் மறப்பதில்லை இழையில் விவாதிக்கலாமே.. (எல்லாம் ஒரு சுயநலமே)

rajeshkrv
18th June 2015, 07:52 AM
பிறப்பால் தமிழர்களாக இருந்தாலும் சிலர் வட இந்தியாவில் வளர்ந்ததால் அங்கே பிரபலமடைந்தார்கள்
அவர்களில் இந்த இருவர் மிகச்சிறந்தெ பெண் பாடகிகள்

ஒருவர் கவிதா கிருஷ்ணமூர்த்தி இல்லை சுப்ரமணியம்.. அல்கா யாக்னிகும் இவரும் 80’களின் கடைசியில் வந்து 90’களின் கடைசி வரை கொடிகட்டி பறந்தனர்.
http://www.glamsham.com/movies/interviews/images/kavita-krishnamurthy.jpg
அல்கா மெலோடி என்றால் கவிதா ஒரு வித ஹிந்துஸ்தானி சாயை உள்ள குரல் ..
எத்தனை எத்தனை பாடல்கள் ... ஆர்.டி.பர்மனின் கடைசிபடங்களின் பெண் குரல் இவருடையது தான்
ஏக் லட்கி கோ தேகா போன்ற பாடல்கள் இன்றும் நம்மை கவரத்தானே செய்யும்..

ஆஜ் மைன் ஊபர் ஆஸ்மான் நீச்சே , மார் டாலா போன்ற பாடல்களின் இவரது திறமை நமக்கு தெரியுமே
இவர் தமிழில் குறைவாகவே பாடியிருந்தாலும் தமிழ் உச்சரிப்பிலும் சரி பாடிய விதத்திலும் சரி என்றுமே சூப்பர் தான்

ஆர்.டி.பர்மனின் இசையில் தான் இவரது முதல் தமிழ் பாடலும்

அடடா வயசுப்புள்ள

https://www.youtube.com/watch?v=d7Bmd57-rz4

பின் பல பாடல்கள் பாடினாலும் எனக்கு மிகவும் பிடித்த 2 பாடல்கள்
ஆம்
தேவதை படத்தில் இளையராஜாவுடன் இவர் பாடிய நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பெளர்ணமி

அதே போல் ரிதம் திரையில் உன்னியுடன் இவர் பாடிய காற்றே என் வாசல் வந்தாய் பாடலும் அழகோ அழகு

https://www.youtube.com/watch?v=tJvz8sRK-OI

கவிதாவைப்போலவே தமிழராய் இருந்தாலும் வட இந்தியாவில் புகழ்பெற்ற இன்னொருவர்
மஹாலெக்*ஷ்மி ஐயர்
http://www.bollyspice.com/images/feature-images/08oct_mahalakshmi-05a.jpg
இவரும் சங்கர் மகாதேவனும் மராட்டி அபங் எல்லாம் வெளுத்துவாங்குவார். ஒரு துளி கூட இவர்கள் பாடுவதில் தமிழ் வாடை கொஞ்சம் கூட இருக்காது.
இவரும் தமிழில் பல பாடல்களை அற்புதமாக பாடியுள்ளார்
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
என்னவோ என்னவோ
குறுக்கு சிறுத்தவளே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
யாரோ யாரோடி
பூவே வாய் பேசும் போது
முத்தம் முத்தம் முத்தமா
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
போன்ற அற்புத பாடல்கள் இவரது குரலில் ஒலித்தது.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இளையராஜாவின் இசையில் பூந்தோட்டம் திரையில் ஹரிஹரனுடன் பாடிய
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்

https://www.youtube.com/watch?v=_cAR7GMdSIM

vasudevan31355
18th June 2015, 09:23 AM
ஜி!

கலந்து கட்டி விளையாடி விட்டீர்கள். சூப்பர். கவிதாவின் கிறங்கடிக்கும் குரலில் சொக்கிப் போனவன் நான். 'அடடா வயசுப் புள்ள' செம ரகளை. அதுவும் அவர் 'அஹ்ஹோ' என்று சப்போர்ட் பண்ணும் போது அள்ளிகிட்டு போகும்.

ஜி! மறுபடி மூட்-அவுட் செய்து விட்டீர்கள். கவிதா பாடல்களை கேட்க ஆரம்பித்தால் இன்றைய என்னுடைய வேலைகள் அனைத்தும் அம்பேல்.:) சின்னா மாதிரி 'என்னவோ போங்க' என்று சொல்ல முடியாது.

என் வரையில் ஸ்ரீதேவிக்கு மிகப் பொருத்தமான குரல் யாரென்றால் அது கவிதாவுடையதுதான். அப்படியே அம்சமாகப் பொருந்தும்.

'மிஸ்டர் இந்தியா' வின் வெற்றி ஸ்ரீதேவிக்கு இவர் சிறப்பான பாடகி என்ற இடத்தைக் கொடுத்தது. இவர் குரலில் ஸ்ரீதேவி களத்தில் இறங்கினார் என்றால் ஏக ரகளைதான்.

முக்கியமாக நிறைய க்ரூப் டான்சர்களுடன் ஸ்ரீதேவி வேடிக்கை வினோதங்கள், கேலி முகபாவங்கள், புரிந்து பிரம்மாண்ட செட்களில் பாடும் இந்தப் பாடல் என்னை மிகவும் கொள்ளையடித்த பாடல் ஆகும்.

'ரூப் கி ராணி சோரான் கா ராஜா' என்ற அனில்கபூரின் படத்தில் 'யாரோ கோன்' என்ற பாடலில் கவிதாவின் குரலில் சர்வ அலட்சியமாக ஸ்ரீதேவி கேலி, கிண்டல்கள் மிகுந்த நடனம் புரிவது டாப்போ டாப். கவிதா புகுந்து விளையாடுவார்.

நான் இப்பாடலை எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை.

ஸ்ரீதேவியைப் பாராட்டுவதா அல்லது கவிதாவை புகழ்வதா இல்லை ஜாவேத் அவர்களைப் புகழ்வதா, லஷ்மி-பியாரியை பாராட்டுவதா

அல்லது இன்று கவிதா பற்றி எழுதி என் மூடை ஸ்பாயில் செய்த உங்களை:) செல்லமாக பாராட்டுவதா என்றுதான் தெரியவில்லை.

நான் கவிதாவுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் இந்தக் கால ஷம்ஷத். சரிதானே ஜி!

இந்தாங்க ஸ்ரீதேவி, கவிதா அக்கிரமத்தைப் பாருங்க. இந்த பேஜை விட்டு நகரவே மாட்டீங்க.


https://youtu.be/gDaZqxTBJZw

rajeshkrv
18th June 2015, 09:29 AM
ஆமாம் ஜி
ஸ்ரீதேவிக்கு மிகவும் பொருத்தம் கவிதா தான்.
ஹவா ஹவாயி மறக்க முடியுமா

vasudevan31355
18th June 2015, 09:49 AM
ஆமாம் ஜி
ஸ்ரீதேவிக்கு மிகவும் பொருத்தம் கவிதா தான்.
ஹவா ஹவாயி மறக்க முடியுமா

ஐயோ! தூள்! மறுக்க முடியுமா?:)

vasudevan31355
18th June 2015, 09:52 AM
//பல அந்நியப் படங்கள் நமக்குள்ளே பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன என்றால் அதற்கு மூல காரணம் நமது நடிகர் திலகமே... நடிப்பின் அத்தனை பரிமாணத்தையும் தன் முதல் சில படங்களிலேயே அளித்து விட்டதால், எந்த நடிகரைப் பார்த்தாலும் எந்தப் படத்தைப் பார்த்தாலும் மனம் நம்மையும் அறியாமல் நடிகர் திலகத்தைத் துணைக்கழைக்கிறது. அவருடைய துணை நம் நினைவில் வராமல் நம்மால வேற்றுப் படங்களைப் பார்க்க முடிவதில்லை. இதற்கு Sivaji Phobia என்று பெயர் வைத்தாலும் தப்பில்லை.//

http://kikkidu.com/wp-content/uploads/2011/04/super_250.jpg

vasudevan31355
18th June 2015, 04:28 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

9

'நிலவே நீ சாட்சி'

http://www.inbaminge.com/t/n/Nilave%20Nee%20Satchi/folder.jpg

பாட்டின் முதல் வரியே படத்தின் தலைப்பும்.

முதலில் கொஞ்சம் கதை பார்ப்போம்.

கல்லூரியில் படிக்கும் ஜெய்யும், கே.ஆர்.விஜயாவும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுக்கிறார்கள். ஆனால் விஜயாவின் அக்காள் மணிமாலா குழந்தை பெற்றுவிட்டு இறந்து போக, அவள் கணவர் மனோதத்துவ டாக்டர் முத்துராமன் குழந்தையுடன் தனியே கஷ்டப்படுகிறார். வேறு கல்யாணம் செய்யவும் மறுக்கிறார்.

அக்காளின் குழந்தையை விஜயா அன்போடு பார்த்துக் கொள்வதை வீட்டின் பெரியோர் கவனித்து விஜயாவை முத்துராமனுக்குத் திருமணம் செய்து வைத்தால் முத்துராமனுக்கும் மறுவாழ்வு கிடக்கும்....குழந்தைக்கும் விஜயாவைவிட சிறந்த மாற்றுத் தாய் அமைய முடியாது என்று விஜயாவை திருமணத்திற்கு வற்புறுத்துகின்றனர். விஜயா ஜெய் காதல் விவகாரம் வீட்டாருக்குத் தெரியாது.

முதலில் மறுக்கும் விஜயா வீட்டாரின் பிடிவாதத்தால் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிறார். திருமணத்திற்கு மறுக்கும் முத்து விஜயா சம்மதித்ததால் தானும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தே விடுகிறது

வீட்டாரிடம் பெர்மிஷன் வாங்கி நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஜெய்யைக் காத்திருக்கச் சொன்ன விஜயா இன்னொருத்தர் மனைவியாக காதலன் ஜெய்யை சந்தித்து தனக்குத் திருமணம் நடந்த கதை கூறி தன்னை மறந்து விடும்படி கூறி சென்று விடுகிறார். அவள் மேல் அளவு கடந்த காதல் வைத்துள்ள ஜெய் இந்த அதிர்ச்சியைத் தாங்காமல் மனநில பாதிப்புக்கு உள்ளாகி பைத்தியம் பிடித்தவர் போல் ஆகிறார்.

http://s2.dmcdn.net/gPdJ/x240--Tf.jpg

விதி விளையாடுகிறது. மனநிலை மருத்துவரான முத்துராமனிடமே நோயாளியாக வந்து சேருகிறார் ஜெய். விஜயா தர்ம சங்கடத்துக்கு உள்ளாகிறார். ஆனால் கடமை முக்கியம் என்று ஜெயக்கு நினைவு திரும்பச் செய்ய முத்துராமன் முடிவெடுக்கிறார் அவர் தன் மனைவியின் காதலன் என்று தெரிந்தே. (விஜயா எல்லா உண்மையையும் முத்துராமனிடம் முன்னமேயே சொல்லியிருப்பார். முத்துராமனும் உளமார அவரை நம்பி நேசிப்பார்)

விஜயா செய்வதறியாது தவித்து, முதலில் மறுத்து, கணவனின் பிடிவாதத்தால் ஜெய்யைக் குணப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார்.

காதலர்களாக இருக்கும் போது ஜெய் வயலின் வாசிக்க, விஜயா 'நிலவே நீ சாட்சி' என்ற பாடலைப் பாடியிருப்பார். எனவே அதே பாடலை திரும்பப் பாடினால் ஜெய் குணமடையக் கூடும் என்று முத்து விஜயாவை ஜெய் முன் பாடச் சொல்வார். விஜயாவும் 'நிலவே நீ சாட்சி' என்று பாடலைப் பாட ஆரம்பிக்க, பாடலின் வரிகளைக் கேட்டு ஜெயக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்து, புத்தி தெளிந்து, தானே மீதிப் பாடலைப் பாடி முடிப்பார். முத்துராமனும் தன் பேஷன்ட் குணமாகி விட்டார் என்று சந்தோஷப்படுவார். விஜயாவிற்கு கஷ்டகாலம் ஆரம்பமாகும்.

அப்புறம் கிளைமாக்ஸ்? அது எதற்கு நமக்கு? பாடலின் சிச்சுவேஷன் புரிந்து விட்டதல்லவா? இனி பாடலை நீங்கள் புரிந்து ரசிக்கலாம்.

விஜயா வழக்கம் போல பரிதாபப்பட வைப்பார். 'நச்'சென்று பொருந்தும் பாத்திரம். பழைய காதலனுக்கும், மருத்துவக் கணவருக்கும் இடையே சிக்கி போராட்டம். இத்தனைக்கும் கணவர் எல்லா உண்மையும் தெரிந்தவர் என்ற போதிலும். முத்துராமன் டாக்டர் கணவன். அநியாயத்துக்கு நல்லவர். ஜெய் காதலன் ப்ளஸ் பேஷன்ட். இவரும் பரிதாபப்பட வைப்பார். நடிப்பில் முன்னேற்றம் தெரியும்.

முத்துராமன் விஜயாவிடம் முன்பு அவர் ஜெய்யிடம் பாடிய பாடலை பாடச் சொல்லி வற்புறுத்த விஜயா 'நிலவே நீ சாட்சி' என்று பாடத் துவங்க, ஜெய் தலையில் இடி மின்னல் இறங்கி, அவர் குழம்பி, பின் தெளிந்து விஜயா விட்ட இடத்திலிருந்து பாடலை முழுதாகப் பாடி முடித்து தான் குணமடைந்ததைக் காட்ட, இது ஒருவிதமான குடும்பப் பாட்டு போல் வியாதியை குணமாக்கும் காதல்(அரு)மருந்துப் பாட்டு.

ஆனால் பாலா குரலில் நமக்கு விருந்து தரும் பாட்டு.

மிக இனிமையாகப் பாடியிருப்பார் மனிதர். முதலில் விஜயா பாடுவதும் பின் ஜெய் தொடர்வதும் நன்றாகவே இருக்கும். விஜயாவுக்கு ராதா குரல் கொடுத்திருப்பார் இந்தப் பாடலில். சரியா ராகவேந்திரன் சார்?

எஸ்.பி.பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்திற்கு கதை வசனம் பாலமுருகன். கண்ணதாசனின் மிக அருமையான பாடல்கள்.

'மெல்லிசை மன்னர்' இசையில் மட்டுமல்ல... பாடல் பாடுவதிலும் நான் மன்னன் என்று நம் எல்லோரையும் ஏன் நமது கோபாலையும் கூட வாய்பிளக்க வைத்த படம் இது.

(நீ நினைத்தால்... இந்நேரத்திலே... ஏதேதோ நடக்கும்...ராட்சஷியுடன் 'மன்னர்' பாடிய இப்பாடலை 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் பதிவாகத் தந்துள்ளேன்)

கொஞ்சம் சிக்கலான கதை அமைப்புள்ள இப்படத்தை மாதவன் நன்றாகவே இயக்கியிருந்தார். ஒளிப்பதிவை பி.என்.சுந்தரம் கவனித்திருந்தார்.

'என்னடா இது!.. நடிகர் திலகத்தின் ஆஸ்தான கூட்டமாயிருக்கிறதே' என்று ஆச்சர்யம்தானே உங்களுக்கு ஏற்படுகிறது?

படத்தின் டைட்டிலில் கூட இப்பாடலின் விசில் சப்தத்தை 'மன்னர்' அழகாகத் தந்திருப்பார்.

பாலா மிக மிக அழகாக பாடி தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொண்ட பாடல். ரொம்ப அருமையாக அனுபவித்துப் பாடியிருப்பார்.

இதே பாடலை சுசீலா அம்மா விஜயாவிற்காக அற்புதமாக தனியே பாடியதை மறந்து விட்டு இந்தப் பதிவை எழுதினால் நான் மனிதனே இல்லை. (ஜி சந்தோஷப்படுவார்)

https://i.ytimg.com/vi/o8YWpamt4Ic/mqdefault.jpg


நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

நிலவே
நிலவே
நீ சாட்சி
சாட்சி
மன
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

பாதைகள் இரண்டு சந்திப்பதும்
அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்
பாதைகள் இரண்டு சந்திப்பதும்
அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்
காதலில் கூட நடப்பதுண்டு
அங்கே காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு
காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு

நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு
இது இறைவன் நடத்தும் விளையாட்டு
இறைவன் நடத்தும் விளையாட்டு

நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

நிலவே நீ சாட்சி


https://youtu.be/o8YWpamt4Ic

இதே படத்தின் இன்னொரு பாலாவின் ஈடு இணையில்லாத பாடல் அடுத்த பாலா பதிவில்

RAGHAVENDRA
18th June 2015, 04:59 PM
வாசு சார்
அட்டகாசமான தேர்வு. மெல்லிசை மன்னருக்கு புதியதாக ரசிகர்களைத் தேடித்தந்த பாடல். உங்கள் தேர்வினை நான் எப்படிப் பாராட்ட..
பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ..பதிவைப் பார்த்தால் சொல்லத்தோன்றும் இன்னும் நூறாயிரம்...
மேலே தாங்கள் பதிவிட்டுள்ள பாடலைப் பாடியவர் ராதாவே தான்.

ராதா என்றதும் பலர் குழம்பிப் போவார்கள்.. அவர்களுக்காக..

இவர் பிரபல பின்னணிப் பாடகர் மறைந்த கே.வீரமணி அவர்களின் குழுவில் பக்திப்பாடல்களைப் பாடியவர். ஈஸ்வரி பாடி பிரபலமடைந்த அம்மன் பாடல்களை மேடையில் ராதா தான் பாடி வந்தார். இசைத்தட்டிற்காக ஈஸ்வரி அவர்கள் பாடினார்கள்.

இவர் அதிகம் சினிமாவில் பாடவில்லை. மேடையில் அதுவும் கே.வீரமணி அவர்களின் குழுவில் மட்டுமே பாடியுள்ளார்.

vasudevan31355
18th June 2015, 05:35 PM
நன்றி ராகவேந்திரன் சார்!

'ராதா' பற்றிய விவரங்களுக்கு நன்றி. அப்போதேல்லாம் மேடைக் கச்சேரிகளில் வீரமணியும், ராதாவும் சேர்ந்து பாடுவதை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். எங்கள் உறவினர் வீட்டுக் கல்யாணம் ஒன்று சென்னையில் அப்போது நடந்தது. அங்கு வீரமணி, ராதா இன்னிசைக் கச்சேரி நடந்ததாம். அப்போது இது பெரிய விஷயம்.

வீரமணியுடன் ராதா சேர்ந்து பாடிய பாடலை இப்போது கேட்டு ராதாவை நினைவு படுத்திக் கொள்ளலாம்.

'உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலஷ்மி'

நல்ல குரல் வளம் ராதாவிற்கு.


https://youtu.be/xONAtbUA6W0

Gopal.s
18th June 2015, 05:37 PM
வாசு,

என்ன இது பொன்னென்றும் பூவென்றும் போட்டு விட்டு,சபதமிட்டு, சுமதி என் சுந்தரியுடன் , உத்தரவின்றி உள்ளே வந்து, அவளுக்கென்று ஒரு மனம் உள்ளதை அறியலாமே?

vasudevan31355
18th June 2015, 05:50 PM
கோ,

நான் 5 பதிவுகளில் போட நினைத்திருப்பதை ஐந்தே வார்த்தைகளில் போட்டால் எப்படி.? நான் விளங்கச் சொல்லி சுருங்க வைக்கும் கேஸ்.
நீங்கள் சுருங்கச் சொல்லி சுருள வைக்கும் கேஸ்.:) என்ன இருந்தாலும் நீங்களும் ஒரு 'டாக்ஸி டிரைவர்'தானே!:) பொழுது சாய்ந்ததும்.:)

Gopal.s
18th June 2015, 07:18 PM
Citizen Kane - Orson Welles -1941.

சில படங்களை பற்றி யாரை கேட்டாலும் சிலாகித்தே பேசுவார்கள். (உருளை கிழங்கு போல யாராலும் வெறுக்க முடியாது)அப்படி எல்லோரும் கொண்டாடிய ஒரு படம். வந்த காலத்தை மீறி நின்ற படம். தமிழிலும் அப்படி அந்தநாள்,புதியபறவை,காதலிக்க நேரமில்லை,தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும், ஹிந்தியில் மொகலே ஆசம் ,பியாசா,guide ,அமர்ப்ரேம் படங்கள் இப்படி பட்டவை. நூற்றுக்கு நூறு பேரால் விரும்ப படுபவை. ஒரேயடியாக துர் நடவடிக்கைகளில் neo noir வன்முறைகளில் திளைத்து, வாசுவிடம் டாக்ஸி டிரைவர் கெட்ட பெயர் வாங்கி விட்டோமே என்று மென்மையான இந்த படத்தை எடுத்து ஆராய்ந்து நற்பெயருக்கு முயல்வேன். (பழையதையும் நினைவு படுத்த வேண்டாமா ? அடுத்த நான்கும் 40,50,60 களின் கொடிதான்.கருப்பு-வெளுப்பு பொற்காலமே )

ஆர்சன் வெல்ஸ் ,தானே இயக்கி ,கேன் பாத்திரத்திலும் நடித்த இந்த படம் ,வந்த நாள் முதல் இன்று வரை சிறந்த உலக பத்துக்களில் ஒன்றாக கொண்டாட படுகிறது.இந்த படம் நமது சிறு வயதின் உன்னத ,மனதுக்கு நெகிழ்வான நினைவலைகளை அசை போட செய்யும் மென்மையுணர்வை கிளறி விடும். ஒரு மனிதனின் முன்னேறும் துடிப்பு, தேர்ந்தெடுக்கும் குறுக்கு வழிகள், செய்யும் தவறுகள் இவற்றை மீறி சாதித்தும் ,வெறுமையுணர்வு மிஞ்சி ,குழந்தைமையின் நேர்மையான, அப்பாவி சந்தோஷ நினைவுகளில் திளைத்து உயிர் விடும் மனிதனின் கதை.

ஆனால் ரோஷமான் படத்தின் கூறுகளாய் ,அவரை சுற்றி இருப்பவர் பார்வையில் கதை விரியும். இறுதி வரை மென்மை புதிர் விடுபடாது. இயக்குனரின் இறுதி காட்சி காணும் வரை.

இந்த படம் அப்போதைய March of Time என்ற பிரபல பத்திரிகையின் Dynamic எடிட்டிங், investigative reporting ,மிக குத்தலான ,கொழுப்பான பத்திரிகை நடவடிக்கைகளின் அங்கத சாடலாக சொல்வாரும் உண்டு. (கதாநாயகன் பத்திரிகை அதிபரும் கூட) வில்லியம் ,ஹென்றி என்று அப்போதைய பத்திதிகை ஆட்களை சாடும் முயற்சி என்று அர்த்த படுத்துவோரும் உண்டு.

பலவித யூகங்களுக்கு ஆட்படுத்தும் வித்தியாச, சுவாரஸ்ய, வினோத திரைக்கதையமைப்பு,நம்மை இப்போது பார்த்தாலும், இன்றைய தலைமுறை பார்த்தாலும் கட்டி போடும்.

uvausan
18th June 2015, 07:18 PM
வாசு சார் இரண்டு நாளில் ஒரு ஊர்த்தவ தாண்டவமே ஆடிவிட்டீர்கள் . என்ன பதிவுகள் !! என்ன அலசல்கள் !! மாய மோதிரத்தின் சக்தியைக் மலைத்துவிட்டேன் . நெய்வேலியில் இருப்பதால் , கண்டுகொள்ளாத பாடல்களை தோண்டிக்கண்டுபிடித்து அந்த கரியை எல்லோரும் புகழ காசாக்கும் திறமை -- என்னமோ போங்க -- எழுதவே முடியவில்லை இதற்குமேல் .....

நம் மதுரகான திரியில் இதுவரை எல்லோரையும் வாங்க வாங்க என்று சொல்லி அன்புடன் எல்லோரும் அழைப்பது மட்டுமே எனக்குத்தெரியும் - யாரையும் வெளியில் போ என்று சொல்ல இங்கு யாருக்கும் மனதும் வாராது , சொல்லவும் மாட்டர்கள் - அப்படி ஒரு எழுதாத சட்டத்தை வைத்திருக்கும் நாம் , திரு கோபாலை " கோ " என்று குறிப்படுவதர்க்குப்பதில் "கோபால்" என்றே அழைக்கலாமே ! - எனது சிறிய வேண்டுகோள் - தவறாக நினைக்காதீர்கள் - கடலூரை தாண்டி செல்லும்போது உங்கள் நினைவு வந்ததை 100 km வேகத்திலும் தடுக்க முடியவில்லை .......

RAGHAVENDRA
18th June 2015, 07:21 PM
கோபால்
சிட்டிஸன் கேன் படத்திற்கு சற்றும் குறையாத இன்னும் சொல்லப் போனால், படம் பார்த்து முடிந்த பின் நீண்ட நேரத்திற்கு Hangover உண்டாக்கும் Bicycle Thief சொல்லாமல் விட்டால் எப்படி...

RAGHAVENDRA
18th June 2015, 07:22 PM
ரவி
வாசு சார் கோபாலை go என்று சொல்லவில்லை. வல்லினமாக 'ko' என்று தான் அழைக்கிறார். தமிழில் வல்லிய கோவுக்கு அரசன் என்று ஒரு பொருள் உண்டே.

uvausan
18th June 2015, 07:28 PM
திரு கோபால் - உங்கள் பதிவுகள் , பல முறை பார்த்து ரசித்த படங்களை , அடாடா - இந்த கோணத்தில் பார்க்கத்தவறி விட்டோமே - அப்படி யோசிக்க தோணவில்லையே என்று ஏங்க வைக்கின்றன - அதே சமயத்தில் என் பதிவுகள் உங்கள் வேகத்தை தடுக்கக்கூடாதே என்ற கவலையும் வருகிறது ...... எல்லா சுவையும் திரிக்குத்தேவை என்பதால் சற்றே மெதுவாகத்தொடருகிறேன் ... அருமை என்ற ஒரு வார்த்தைக்குள் கட்டுப்படக்கூடிய பதிவுகள் அல்ல உங்களுடையவைகள் ----- தொடருங்கள்


HM ஆகா இங்கு வந்து CK வின் விடுமுறையை cancel பண்ணியதற்கு மிகவும் நன்றி ....

uvausan
18th June 2015, 07:30 PM
என் தமிழுடன் விளையாட வந்த நீங்கள் முக்கண் முதல்வனே ஆகட்டும் -----

uvausan
18th June 2015, 07:32 PM
ராகவேந்திர சார் - நானே ராஜா அலசல் மிகவும் அருமை - எவரும் நான் ராஜா என்று இனி சொல்ல முடியாதபடி செய்து விட்டீர்கள்

rajeshkrv
18th June 2015, 07:50 PM
வாங்க ரவி
நலமா

uvausan
18th June 2015, 07:56 PM
நலமே ஜி --- உங்கள் "திரையில் பக்தி " மிகவும் நெகிழ வைக்கின்றது - மிகவும் சிரமம் எடுத்துக்கொள்கிறீர்கள்

rajeshkrv
18th June 2015, 08:25 PM
நலமே ஜி --- உங்கள் "திரையில் பக்தி " மிகவும் நெகிழ வைக்கின்றது - மிகவும் சிரமம் எடுத்துக்கொள்கிறீர்கள்

நானெல்லாம் துக்கடா எழுதுவது போல் 4 வரி 5 வரி எழுதுபவன்.
சிரமம் எடுத்து எழுதுவது தாங்கள், சி.க மற்றும் வாசு ஜி

vasudevan31355
18th June 2015, 08:34 PM
Thanks to winwallpapers.net

http://www.winwallpapers.net/w1/2013/11/Citizen-Kane-1941-Wallpapers-14.jpg

http://www.winwallpapers.net/w1/2013/11/Citizen-Kane-1941-Photos.jpg

http://www.winwallpapers.net/w1/2013/11/Citizen-Kane-1941-Wallpapers-2.jpg

http://www.winwallpapers.net/w1/2013/11/Citizen-Kane-1941-Wallpapers-15.jpg

http://www.winwallpapers.net/w1/2013/11/Citizen-Kane-1941-Wallpapers-8.jpg

http://www.winwallpapers.net/w1/2013/11/Citizen-Kane-1941-Wallpapers-12.jpg

http://www.winwallpapers.net/w1/2013/11/Citizen-Kane-1941-Wallpapers-16.jpg

vasudevan31355
18th June 2015, 08:39 PM
ரவி சார்,

வாங்க..ஊர்ப் பயணமெல்லாம் நல்ல படியா முடிந்ததா?

கடலூர் பக்கம் வந்தவர் எனக்கு ஒரு போன் பண்ணியிருகக் கூடாதா? கண்டிப்பாக வந்திருப்பேனே.

வைத்தீஸ்வரன் கோவில் சென்று தரிசித்தீகளா? நெய்வேலியில் இருந்து பக்கம். கோபால் சாரும், நானும் இரண்டு முறை போய் வந்தோம். செம ஜாலியான ட்ரிப்.

vasudevan31355
18th June 2015, 08:45 PM
ஜி! 'பொப்பிலி யுத்தம்' பாடல் இப்போதுதான் பார்த்தேன். விஜி நன்றாகவே ஆடுகிறார். இளம் வயதில் அழகாகவே இருப்பார். ஆனால் போகப் போக முகம் மாறி முகத்தில் ஆண் தன்மை சற்று கலந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஊட்டி வரை உறவு பட ஷூட்டிங்கில் நடிகர் திலகம் விஜியை கேமிராவினால் படம் பிடித்துக் கொண்டு இருப்பாராம்.

பாடலும் நன்றாக இருந்தது. Thanks.

rajeshkrv
18th June 2015, 09:09 PM
ஜி பாடல் உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி

vasudevan31355
18th June 2015, 09:13 PM
ஜி!

இசையரசி பாடிய இன்னொரு கிராம பாணி பாடல். கொஞ்சம் வெளியே தெரியாத பாடல்.

http://cdn.600024.com/store/image/cache/data/raj-video-vision/kathavarayan-guruthatchanai-500x500.jpg

நடிகர் திலகம் அமர்க்களப்படுத்திய 'குருதட்சணை' படத்தில் ஜெயா மேடம் பாடும் பாடல்.

'சின்னஞ்சிறு உலகம்' படத்தில் 'மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்சப் புள்ளையாட்டம்' அப்படி என்று ஒரு பாடல் வருமே! அது போலவே மேலே சொன்ன பாடலும் இருக்கும்.

'அடி ஆயி ஆயி ஆயி ஆயி... உய்யா' என்று உற்சாகத்துடன் அற்புதமாக பாடலைத் தொடங்குவார் சுசீலா அம்மா. 'அம்மா'வுக்கும் பொருத்தமாக இருக்கும்.

'ஆத்தோரம் மரமிருக்கு... காத்தாட எடமிருக்கு
ஆளான பொண்ணுரிக்கேன்... கண்ணு மச்சான்
கொஞ்சம் அப்படி இப்படி பார்த்தாக்க என்ன மச்சான்

மாசி மக சந்தையிலே மச்சான் ஒன்ன பாக்கையிலே
மனச விட்டு பேசினேனே கண்ணு மச்சான்
அந்த மர்மம் கூட புரியலையா சொல்லு மச்சான்
ஜல்லிக்கட்டு காளைகளை அள்ளிக் கட்டும் கைகளுக்கு
என்னக் கட்டத் தெரியலையா கண்ணு மச்சான்

இன்னும் என்ன சொல்லி புரிய வைப்பேன் சொல்லு மச்சான்'

செம பாட்டுஜி. நடிகர் திலகம் என்னா முறைப்பு... விறைப்பு! ஜெயா விரட்டி விரட்டித் துரத்துவார்.

'தூங்கையிலே உன் நினைப்பு'

என்று சுசீலா அம்மா 'ஹஹஹஹாங் ...ஹஹஹஹாங்... ஹாங்' பெருமூச்சு விடுவது போல பாடுவது அப்படியே அள்ளும் ஜி.

உங்களுக்குத் தெரியாததா? இருந்தாலும் இப்ப ஒரு தபா கேளுங்க. இப்படத்திற்கு இசை புகழேந்தி என்பது இன்னொரு விசேஷம்.

http://www.inbaminge.com/t/g/Guru%20Dhakshinai/

chinnakkannan
18th June 2015, 09:28 PM
கானகத்தில் மரக்கிளையில் கருங்குயில்கள் இன்னிசையாய்
கானத்தைப் பாடுவதை கேட்டந்த சிறுகுருவி
பானகமாய்ப் பண்ணிசைக்கத் தெரியாத சின்னதுதான்
படபடத்துத் தன்னினைவில் ஊடித்தான் தேடுகையில்
வானமது கூரையென வருவதுவும் வரட்டுமென
…வஞ்சிமகள் தானொருத்தி வாழ்ந்திருந்த போதினிலே
மோனத்தில் மூழ்கித்தான் சோகத்தில் இருந்தசிலர்
..வாழ்வினையே மாற்றியது நினைவினிலே வந்ததுவே..

in my next post :)

chinnakkannan
18th June 2015, 09:31 PM
**
அவள்..அவர்.. அவர்கள்..
*****
அவள்..
**
”உனக்குத் தெரியுமா.. எனக்கு இதுவரை இரண்டு விவாகரத்து ஆகிவிட்டது. என் மூத்தபையனுக்கு எட்டு வயது இரண்டாவது பொண்ணுக்கு ஆறு வயது..இதோ இந்தச் சின்னது இருக்கே இதற்கு இரண்டு வயது.. தனியாக இருக்காளே மடங்குவாள் நிறையச் சொத்து என்றெல்லாம் நினைக்காதே ..எனது பேங்க் பேலன்ஸ் 74 டாலர் தான்..புரிஞ்சுதா”

நான் சீறித் தான் விழுந்தேன்..ஆனால் வந்திருந்த பக்கத்து வீட்டு மோட்டார் பைக்காரன் சிரித்தான்..

“எனக்குக் குழந்தைகள் பிடிக்கும்.. நான் அவர்களுடன் விளையாடுகிறேன்..அவ்வளவு தான்..”

“அவ்வளவு தானே.. சரி இப்போது விளையாட வரமாட்டார்கள்..அப்புறம் பார்க்கலாம்” முகத்தில் கஷ்டப் பட்டுசிரிப்பை வரவழைத்து க் கொண்டு கதவை அவன் முகத்தில் அறைந்து தாழிட்டேன்..

என் கஷ்டம் எனக்கு.. வேலைக்கு இண்டர்வியூ போனால் கிடைக்க மாட்டேன் என்கிறது.. கார் ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது.. அதுவும் தோற்றுவிட்டது.. அந்த லாயர் அவரும் ஒரு காரணம்..என்ன நமட்டுச் சிரிப்பு..ச்சும்மா செவேல் என்றுதான் இருக்கிறார்.. தலைமுழுக்க நரைமுடி வயதானவர்.. யெஸ் போய்க் கேட்போம்

லாயர்..
**

“என்ன செய்யப் போகிறீர்கள் எனக்கு” என்று அந்தப் பெண் திடுதிப்பென ஆஃபீஸுள் நுழைந்து கேட்டால் எனக்குச் சிரிப்பு தான் வந்தது
நான் உனக்கு என்ன செய்யவேண்டும்..

இதோ பாருங்கள் லாயர்.. கார் ஆக்ஸிடெண்டில் என் வழக்கு வென்றிருக்கும்..வெல்லாததற்கு நீரும் ஒரு காரணம்..

நான் காரணமில்லை லேடி நீ..உன் உடை..உன் அலட்சியமான கெட்ட வார்த்தைகள்…

உன்னைக் கெடுப்பேன் லாயர்…

இதையே தான் சொன்னாய் ஆங்கிலத்தில் இங்கு சொன்னது போல்..

இந்த பாருங்கள்.. நான் கொஞ்சம் எமோஷனல்.. எனக்கு வேலை இல்லை எனக்குக் கிடைக்க இருந்த வேலையும் போய்விட்டது..ஒருவேலை வேண்டும்..
அவளைப்பார்த்தேன்.. நல்ல வெளிர் மரக்கலர் கூந்தல்.. உடையில் அலட்சியம் கண்களில் அலட்சியம் கூர்மையான மூக்கு.. இவளுக்கு என்ன வேலை தர முடியும்..

இங்கே ஃபைலிங் வேலை இருக்கிறது..ஆனால் நோ பெனிஃபிட்ஸ்..ஐ மீன் மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் எக்ஸடீரா..

ஓ.கே ஐவில் டேக் த ஜாப்..

அவள்..
**

லாயரிடம் சொல்லி விட்டேனே தவிர குழந்தைகளை என்ன செய்வேன்.. அட பக்கத்து டோர் நெய்பர் ஆபத்பாந்தவ தாடிவாலா..

ஹாய்

ஹாய் லேடி

முறைத்தேன்.. எனக்குக் கொஞ்சம் ஒரு சுமாரான வேலை கிடைத்திருக்கிறது.. நீயோ பைக் ரேஸர்..இப்போது சும்மா தான் இருப்பதாகச் சொல்லியிருந்தாய்..என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறாயா

டன் லேடி

(மறுபடி லேடி என்கிறான்..பார்த்துக்கிறேன் என்கிறானே .. அதுவரை ஓ.கே..)

மறு நாள் முதல் சேர்ந்து ஒருவாரம் ஓகேயாய்த் தான் எனக்குப் போனது..ஈஸி வேலை தான்..
ஏதோ ஒரு ஃபைலில் உள்ள பேப்பர்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது..இது என்ன ஒருகேஸ்.. ஒரு புறநகர்ப்பகுதியில் வாழும் குடும்பங்கள் ஒரு கம்பெனியிடம் வழக்கு தொடுத்து தள்ளுபடி ஆகியிருக்கிறது..பிஅண்ட் ஜி என்கிற அந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் அந்தபுறநகர்க் காலனியில் தண்ணீரில் கலந்து அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது என்பதை இல்லவே இல்லை என்றிருக்கிறார்கள்.. ஹை சுவாரஸ்யமாக இருக்கிறதே..இது உண்மையா..அதெப்படி 300க்கும் மேற்பட்ட நபர்கள் சொல்வது உண்மையில்லாமல் போய்விடும்..செக் பண்ணலாம்.. இந்த ஹென்க்லியில் இருக்கும் பி.ஜி கம்பெனிபற்றி ஆவணங்கள் காப்பகத்திற்குப் போகலாம்.. நாளைக்கே..

மறு நாள் எழுந்து கொஞ்சம் தாழ்வான கையில்லாத பனியனைப் போட்டுக் கொண்டேன்..காரணமாய்த்தான்.. என் ஓட்டைக் காரைலொக் லொக்கென்று இரும வைத்து அந்த இடம் சென்று கூட்டிவந்திருந்த சின்னக் குட்டியை இடுப்பில் வைத்து அங்கு சென்றால் அங்கிருந்த பியூன் என்னை, என் கையில்லாபனியனை.. அதன் கழுத்து விளிம்பைப் பார்த்து மனதில் கற்பனையின் விளிம்பை அடைந்திருந்தது அவனது பார்வையில் தெரிந்தது..

என்ன வேண்டும் மேடம்

ஒரு ஃபைல்பார்க்க வேண்டும் சில மணி நேரம் பரவாயில்லையா..

வழக்கமாக மற்றவரென்றால் மாட்டேன்..குழந்தையை என்னிடம் கொடுங்கள் டா வா டியா டாவா..வாடா செல்லம்..

குழந்தையை வாங்கும் சாக்கில் விரலுரசினான்.. பொறுக்கி..போகட்டும்..

உள்சென்று தூசு எல்லாம் இல்லாமல் ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பல கம்பெனிகளின் ஃபைல்களில் அந்த பி அண்ட் ஜி தேடி கிடைத்துப் பார்த்தால்..
உண்மை தான்..அந்த த் தொழிற்சாலைக்கழிவுகளில் க்ரோமியம் குடி நீருடன் கலக்கத் தான் செய்கிறது..ஆனால் இல்லை என்று குடியிருப்பவர்களை ஏமாற்றிவிட்டார்கள் கம்பெனிக்காரர்கள் பாவிகள்..

இதை லாயரிடம் சொல்லலாமே.. சரி கொஞ்சம் போய் அந்த ஹென்க்லி குடியிருப்பை நாளை ரவுண்ட் விட்டு வரலாம்..

மறு நாள் போய் ரவுண்ட் விட்டு வந்தேன்.. பின் மறுபடியும் ஆவணக்காப்பகத்துக்குச் சென்று அந்த ஃபைலை கனகாரியமாக எடுத்து, ஜொள்ளனிடம் என் உடலழகைக் கொஞ்சம் காட்டி அந்த ஃபைலை போட்டோகாப்பி எடுத்து லாயரிடம் காண்பிக்க அலுவலகம் வந்து என் அறைக்கு வந்தால் அங்கு என் அறையான க்யூபே இல்லை..சேரில்லை.. டேபிள் இல்லை..

என்னாயிற்று..எங்கே அந்தக் கிழம்.. கிழ லாயர்..

லாயர்
**
“உனக்கு வேலையே இல்லை உன் அறை எப்படி இருக்கும்” சீறி என்னிடம் வந்த அவளிடம் சொன்னேன்.. “இது என்ன உன் வீடா ஆஃபீஸ்.. நீ ஒரு சாதாரண கிளார்க்..ஒருஃபோன் கிடையாது.. நாலு நாட்கள் வரவில்லை..எனில் காலி பண்ணிவிட்டேன்..”

“லாயர்..” கத்தினாள் அவள் “உங்களுக்காகத் தான் நான் வேலை பார்த்தேன்..இந்த பி அண்ட் ஜி கம்பெனி பற்றிப் படித்தேன்..இதில் டிஃபமேஷன் சூட் போட்டோமானால் நீங்கள் ஜெயிக்கலாம்..அதை விட கெமிக்கலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் நஷ்ட ஈடு வாங்கித் தரலாம்..”

“லுக் லேடி..கேஸ் கொடுப்பதற்கு எனக்கு உள்ள வாடிக்கையாளர்களைச் சமாளிப்பதற்கே நேரமில்லை.. நீ வேறு புதுகேஸ்..உனக்கு வேலை இல்லை எனில் இல்லை தான்” எனச் சொல்லி முடிக்க கொஞ்சம் முறைத்துப் பின் சென்று விட்டாள்..

பின் எதற்கோ நண்பன் ஒருவனிடம் தொடர்புகொண்டு பேசுகையில் அவன் ஹென்க்லி நகர், பி ஜி கம்பெனி ஏமாற்றல் என்பதைப் பற்றிச் சொல்ல எனக்கு ஃப்ளாஷ் அடித்தது..இதைத்தானே அவள் சொன்னாள்..

ஏதோ பேப்பர்கள் சேகரித்ததாக.. அவள் அட்ரஸ் ..இங்கு தானே எழுதிவைத்தேன்..ஓஹ்..இதோ இதில் இருக்கிறது..போய்ப்பார்க்கலாம்..கேட்கலாம்..

*
அவள்:
**

“எதற்காக வந்தீர்கள்” சாதாரணமாய்த்தான் கேட்க நினைத்தேன்.. ஆனால் என் சுபாவம் பேச்சு சீறலாய் வர லாயர் முகத்தில் புன்னகை..
சரியம்மா.. நான் தப்பு பண்ணிவிட்டேன். மறுபடி ஜாய்ன் செய்

காரணமில்லாமல் நீங்கள் வரமாட்டீர்களே..அதே சாலரிக்கெல்லாம் வரமாட்டேன்

சரி..இந்த சாலரி ஓக்கேயா

ஓக்கே மெடிக்கல் பெனிஃபிட்ஸ் வேண்டும்.

ஷ்யூர்..ஆனால் அதற்குமுன் அங்கே பாதிக்கப்பட்ட குடும்ப நபர்களைச் சந்திக்கவேண்டும் நீ.. செய்வாயா..

கேஸ் (பெட்ரோல்)

எடுத்துக்கொள்..

என் பயணம் ஆரம்பமானது
*
அவர்கள்:

முதலில் ஒரு பெண்மணியைப்பார்த்தேன்.. நீ லாயரா என்றாள் முகத்திலடித்தாற்போல் பேசமாட்டேன் போ என்றுவிட்டாள்

பின் ஒரு குடும்பம்.. போனால் அங்கு ஒரு இளவயதுப் பெண்ணுக்குப் பாதிப்பு சருமம் வரண்டிருந்தது..மற்றவர்களும் சோர்வாகத் தான் இருந்தார்கள்

இப்படியே சிலபல குடும்பங்கள் தனி நபர்கள் எனப்பார்க்கையில் ஒட்டுமொத்தமாக அந்தத் தண்ணீரில் கலக்கப்பட்ட விஷத்தின் பாதிப்பு அவர்களிடம் இருந்தது கண்கூடு.. எனக்கோ கண்கள் கலங்கித்தான் போயிற்று

கடவுளே.. நிம்மதியாய் இருக்க கடன் உடன் வாங்கி வீடுகட்டிக்கொண்டு ஒதுக்குப்புறமாய் இருக்க இவர்கள் வந்தால் இவர்களின் வாழ்வில் ஒரு புயலா

எல்லோரும் ஒன்றே ஒன்று சொன்னார்கள்..அது பெரிய கம்பெனி நாங்கள் சாமான்யமானவர்கள் பெட்ரோல் பங்க், பார், ஏதோ ஆஃபீஸ் என வேலை செய்பவர்கள்..எங்களால் தனியாக எப்படி எதிர்க்க முடியும்..

தனியாக முடியாது.. க்ரூப்பாக எதிர்க்கலாம்.. நான் பெட்டிஷன் போடுகிறேன் என்று லாயரிடம் சொல்லி பெட்டிஷன்போட மறு நாள் தேடிவந்தான் ஒருவன்.. பி.ஜி கம்பெனி லாயர்

ஸ்மார்ட்டா தான் இருந்தான்.. லாயருடன் நானும் சென்றேன்..ஸ்ட்ரெய்டாக விஷயத்திற்கு வந்தான்..100000 டாலர்கள் நஷ்ட ஈடு வேண்டுமால் தருகிறோம்..

எனக்கு ஓகே தான் 300குடும்பம் ஒரு லட்ச டாலர்.. லாயர் ம்ஹூம்.. முடியாதென்று விட்டார்..எத்தனை உயிர்கள் அதற்கு ஒருலட்சமா.. போய்யா போ

உங்களுக்கு வேண்டுமானல் தனியாக…

லாயரின் முகம் அவ்வளவு சிவக்கும் என எனக்குத் தெரியாது.. வெளி வழியைக் காட்டினார் அவனுக்கு..

மறுபடியும் நாங்கள் கலந்தாலோசித்து 100 மில்லியன் டாலர்கள் கேட்கலாம் என ஃபைல் பண்ண, மறுபடியும் பி.ஜி கம்பெனி இந்ததடவை ஒரு பெண்.. தடாலடியாக நீட்டாக டிரஸ்பண்ணி வந்தவள் என்னை, லாயரை, மற்றும் எங்களுடன் அமர்ந்திருந்த கலீக்ஸை அல்பமாய்ப் பார்த்து இவ்வளவு பைசாவை க் கொடுக்க நாங்கள் என்ன சாரிட்டியா.. எனக்கேட்க எனக்கு வந்ததே கோபம்

“ஆமாண்டி.. அந்த க் குடும்பங்கள் எல்லாம் உங்களை மாதிரி பைசாக்காக கிராதகக் கம்பெனிக்குல்லாம் வககால்த்து வாங்கறாங்க .. நீங்க கொடுக்கற பைசாவுல ஸ்விம்மிங்க் பூல் கட்டிக்குளிப்பாங்கன்னு தானே நினைக்கற நீ” என நான் கத்திய கத்தில் அவளுக்கு மூச்சுவாங்கியது..அங்கிருந்த தண்ணீரைக் குடிக்கப் போனாள்..
நான் அமைதியாகச் சொன்னேன்..” உங்களுக்காகத் தான் அந்த க் குடியிருப்பிலிருந்து தண்ணீர் ஸ்பெஷலாக வரவழைத்திருக்கிறேன்..குடிங்க..குடிடி” என்றதும் குடிக்காமல் வைத்துவிட்டாள்..

எனது வேலைகள் தொடர்ந்தன.. முதலில் பார்த்த பெண்மணி உறுத்திக் கொண்டே இருந்தாள் மனதில்..பின் அவளையும் சந்தித்தால்தமிழில் பேதடிக் எனச் சொல்வோமே அந்த நிலைமையில் இருந்தார் அவர்.. கான்ஸர் முற்றிய நிலை..காரணம் தண்ணீர்.. செலவுகள் பேபண்ணமுடியாத நிலைமை..மருத்துவச் செலவுக்குப் பணமில்லை..கேட்க மறுபடியும் என் நெஞ்சில் ரத்தம்..

அவர்களைக் கூட்டமாக சந்திக்க வைத்துப் பேசினோம்.. அதற்குள் எதிர்த்தரப்பு பி.ஜி கம்பெனி லாயர் பேசியதால் கோர்ட் குறைந்த பட்சம் 300 பேர்களிடமாவது கையெழுத்து வாங்கி வரவேண்டும்..அப்பொழுது தான் நஷ்ட ஈடு பற்றிப் பேசலாம் எனச் சொல்ல..

நான் ஓடினேன் ஓடினேன்..ஒவ்வொரு இடத்திற்காய் ஓடினேன்.பார், பெட்ரோல் பங்க், கறிகாய்க்கடை க்ரோஸரி ஸ்டோர் ஒருஇடம் பாக்கியில்லாமல் அங்கிருந்த பாதிக்கப் பட்டவர்களிடம் இரண்டே நாட்களில் (கோர்ட் கொடுத்த டைம் 3 நாள்) கையெழுத்து வாங்கி ஆப்பொனண்ட் லாயரிடம் காண்பிக்க…
அவர் அதிர்ந்தார்..

இது எப்படி நிகழ்ந்தது.. என என் அலுவலக நண்பர்கள், லாயர் இருக்கையில் என்னிடம் கேட்டார்..

“ராப்பகலாக தேடி த் தேடி 634 நபர்களுடன் தாச்சித் தூங்கி இந்தக் கையெழுத்து வாங்கி வந்திருக்கிறேன்” என்றேன் சிரிக்காமல்..மற்றவர்கள் சிரிக்க எதிர்க்கட்சி லாயர் முகத்தில் ஈயாடவில்லை..

பின் கோர்ட் கேஸ் நடந்துமுடிய ஜெயம் எங்களுக்கு..இல்லை இல்லை சோகத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு.. கிட்டத்தட்ட 100 மில்லியன்.. லாயர் ஃபீஸ் போக மிச்சம் 80வது கிடைக்கும்..

ஒரேசந்தோஷமாய் விஷயத்தை ஷேர் பண்ண லாயர் ஆஃபீஸ் போனால் சிவந்த நரைத்தலைக் கிழத்தின் முகமே மாறியிருந்தது

லாயர்:

சந்தோசமாக இருந்த அவளின் முகத்தை சலனமில்லாமல் ஏறிட்டேன்..

ஸீ.. நான் பார்ட்னர்களுடன் கலந்தாலோசித்தேன்..இந்த வெற்றிக்கு மூல காரணம் நீ என்றார்கள்..

நிறுத்தினேன்..அவளது இதயத் துடிப்பு எகிறுவதை என்னால் உணர முடிந்தது

“அவர்கள் உனக்கு 50000 டாலர் கொடுக்கலாம் உன் பங்கிற்கு என்றார்கள்..ஆனால்”

அவள்முகம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிவப்பாக ஆரம்பித்தது

“ஆனால்.. என்ன ஆனால்.. உங்கள் புத்தி எனக்குத் தெரியுமே.. நான் இதற்காக எத்தனை பாடுபட்டேன் தெரியுமா மோட்டார் பைக்காரன் பார்த்துக்கொண்டாலும் என் குழந்தைகளைப் பிரிந்து ராப்பகலாக ஒவ்வொரு வீடாக ப் போய் ஓவ்வொருவரையும் பார்த்து கன்வின்ஸ் பண்ணி அவர்களுக்கும் பைசா கிடைக்கும் நம் லாயர் ஃபீஸ் கம்மிதான் என்றெல்லாம் சொல்லி கையெழுத்து வாங்கி..”

அவளுக்கு மூச்சிரைத்தது..”இந்த வெற்றியில் எனக்குஒவ்வொரு அணுவிலும் பங்கிருக்கிறது.ஆனால் நீங்கள் என்னசொல்லியிருப்பீர்கள் என்று தெரியும்.. நான் ஒன்றும் உதவாதவள்.. ஜூனியர் ஸ்டாஃப் என்றெல்லாம் சொல்லித் தட்டிக் கழித்திருப்பீர்கள் தானே .. உன்னைக் கெடுப்பேன் .. நான் போகிறேன்”

“எரின்” என அவளை அழைத்தேன்..இந்தா இந்த செக் வாங்கிக் கொண்டு போ…

அவள் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டாள் வெறும் 5000 டாலர் இருக்கும் என நினைத்திருப்பாள் போலும்..

பார்க்கப் பார்க்க அவள் கண்கள் விரிந்தன..அவளால் நம்பவும் முடியவில்லை..

டூ மில்லியன் டாலர்ஸ்.. என்று சொல்லிச் சொல்லிப் பார்த்தாள்

என் முகத்தில் எப்போது புன்முறுவல் மலர்ந்தது என்று எனக்கே தெரியவில்லை

அது சிரிப்பாகவும் மாறிச் சிரிக்க ஆரம்பித்தேன்..சிரித்தபடி பேசவும் செய்தேன்..

“எரின்.. ஆனால் 50000 டாலர் என்பது அவள் உழைப்புக்குக் கம்மி எனப் பேசி இதை வாங்கித் தந்தேன்.. எங்கே மறுபடி சொல்லு அந்தக் கெ.வார்த்தை..”

எரின் கண்களில் அழுகை முகத்தில் சந்தோஷம் உடலில் நடுக்கம் பதற்றம் எல்லாம் கலந்து கட்டி மெல்ல எழுந்து வந்து என்னை அணைத்து “ தாங்க்ஸ் லாயர்..” என்றாள்

**

இது ஜூலியா ராபர்ட்ஸ்,ஆல்பர்ட் ஃபின்னி மற்றும் பலர் நடித்த எரின் ப்ரோக்கோவிச் படத்தின் கதைச்சுருக்கம்

அமெரிக்காவில் சிலவருடம் இருந்த போது – அப்போதைய சி.க கொஞ்சம் நடுத்தரவயது.. நண்பன் வா டாலர் தியேட்டரில் இந்தப்படம் ஓடுது ( புதிய படங்கள் ஓடி முடித்து வேறு தியேட்டரில் போடும்..அதற்குக் கட்டணம் ஒரேஒரு டாலர்..அப்படிப்பட்ட தியேட்டர்களை டாலர் தியேட்டர் என அழைப்பார்கள்) போலாம் எனக் கூட்டிச் சென்ற போது படத்தைப் பற்றி எதுவும் தெரியாது..ஜூலியா ராபர்ட்ஸ் ப்ரட்டி உமன் பார்த்திருக்கிறேன்..அழகை விட நடிப்பு பிடித்திருந்தது.. மற்றபடி கதையெல்லாம் தெரியாமல் பார்த்த படம்.

பின் தான் இது உண்மைக் கதை என்றும் தெரிந்தது..ரியல் எரின் ப்ராக்கோவிச்சும் படத்தில் ஒருபார் கேர்ளாக வருவார்கள்.. இணையத்தில் நிறைய செய்திகள் இருக்கின்ற்ன

பலவிதமான அவார்ட் வாங்கிய படம்..லாயராக நடித்திருந்த ஆல்ஃப்ரட் ஃபென்னி கலக்கியிருப்பார்..ஜூலியாவும் அந்த வேஷத்திற்குத் தகுந்தபடபடப்பு எனப் பலவிதபரிமாணங்கள் காட்டுவார்..

(அப்புறம் பார்த்த ஜூலியா ராபர்ட்ஸின் படங்கள் நாட்டிங் ஹில் ( நம்ம ஊர் சுமதி என் சுந்தரியின் ஆங்கில ரீமேக்!) ரனவே ப்ரைட் இன்னும் நிறைய..)

ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..என்னைக் கவர்ந்த படம்..

ஏதோ ஜாம்பவான்கள்லாம் பெரிய பெரிய கற்களுடன்பாலம் கட்டும்போது இந்த சித்தெறும்பால சின்னத் தம்மாத்தூண்டுக் கல்.. ஓகேயா

(ஃப்ளைட்டுக்குக் கிளம்பாம டைப்படிக்கற ஒரே மனுஷன் நானாத்தான் இருக்கணும்..சிலமணி நேரம் தான்..அப்புறம் ஸ்ஸ்ஸ்ஸொய்ங்க்க்..ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்)

வாசு பக்கெட்ல நல்ல படமா (ஜூ.ரா) போடுங்க..:) கோபால் மேல்தகவல்கள் சொல்லுங்கள்..அல்லது படம் பிடிக்காது என்னா டேஸ்டுய்யா உனக்கு என்று சொன்னாலும் சரி..

அப்ப நான் வரட்டா..டாட்டா ( கொஞ்ச நேரத்த்ல மறுபடி எட்டிப் பார்த்தாலும் பார்ப்பேன்..)

*
(ரொம்ப நாள் முன்னால் பார்த்ததினால் (பட ரிலீசின் போது மட்டும்) சில புள்ளி விவரங்கள் மாறு பட்டிருக்கலாம் மன்னிக்க :)

vasudevan31355
18th June 2015, 09:39 PM
Chinna!

http://www.dilsecomments.com/graphics/Happy-Journey-3992.jpg

rajeshkrv
18th June 2015, 09:41 PM
ஜி இதோ காணொளி

https://www.youtube.com/watch?v=lmFW2YB1KDw

vasudevan31355
18th June 2015, 09:45 PM
சூப்பர்ஜி! தேடிகிட்டே இருந்தேனா...வீட்டுல சாப்பிட கூப்பிட்டங்களா... சாப்பிட்டிட்டு வந்து பார்த்தா நீங்க போட்டுட்டீங்க. நன்றிஜி!

rajeshkrv
18th June 2015, 09:52 PM
சூப்பர்ஜி! தேடிகிட்டே இருந்தேனா...வீட்டுல சாப்பிட கூப்பிட்டங்களா... சாப்பிட்டிட்டு வந்து பார்த்த நீங்க போட்டுட்டீங்க. நன்றிஜி!

நல்ல பாடல் .. வீடியோ போடாமல் எப்படி.

vasudevan31355
18th June 2015, 09:58 PM
அதானே!

Gopal.s
19th June 2015, 05:08 AM
**

இது ஜூலியா ராபர்ட்ஸ்,ஆல்பர்ட் ஃபின்னி மற்றும் பலர் நடித்த எரின் ப்ரோக்கோவிச் படத்தின் கதைச்சுருக்கம்

போலாம் எனக் கூட்டிச் சென்ற போது படத்தைப் பற்றி எதுவும் தெரியாது..ஜூலியா ராபர்ட்ஸ் ப்ரட்டி உமன் பார்த்திருக்கிறேன்..அழகை விட நடிப்பு பிடித்திருந்தது.. மற்றபடி கதையெல்லாம் தெரியாமல் பார்த்த படம்.

பின் தான் இது உண்மைக் கதை என்றும் தெரிந்தது..ரியல் எரின் ப்ராக்கோவிச்சும் படத்தில் ஒருபார் கேர்ளாக வருவார்கள்.. இணையத்தில் நிறைய செய்திகள் இருக்கின்ற்ன

பலவிதமான அவார்ட் வாங்கிய படம்..லாயராக நடித்திருந்த ஆல்ஃப்ரட் ஃபென்னி கலக்கியிருப்பார்..ஜூலியாவும் அந்த வேஷத்திற்குத் தகுந்தபடபடப்பு எனப் பலவிதபரிமாணங்கள் காட்டுவார்..


ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..என்னைக் கவர்ந்த படம்..

ஏதோ ஜாம்பவான்கள்லாம் பெரிய பெரிய கற்களுடன்பாலம் கட்டும்போது இந்த சித்தெறும்பால சின்னத் தம்மாத்தூண்டுக் கல்.. ஓகேயா

(ஃப்ளைட்டுக்குக் கிளம்பாம டைப்படிக்கற ஒரே மனுஷன் நானாத்தான் இருக்கணும்..சிலமணி நேரம் தான்..அப்புறம் ஸ்ஸ்ஸ்ஸொய்ங்க்க்..ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்)

வாசு பக்கெட்ல நல்ல படமா (ஜூ.ரா) போடுங்க..:) கோபால் மேல்தகவல்கள் சொல்லுங்கள்..அல்லது படம் பிடிக்காது என்னா டேஸ்டுய்யா உனக்கு என்று சொன்னாலும் சரி..

அப்ப நான் வரட்டா..டாட்டா ( கொஞ்ச நேரத்த்ல மறுபடி எட்டிப் பார்த்தாலும் பார்ப்பேன்..)

*
(ரொம்ப நாள் முன்னால் பார்த்ததினால் (பட ரிலீசின் போது மட்டும்) சில புள்ளி விவரங்கள் மாறு பட்டிருக்கலாம் மன்னிக்க :)

சின்ன கண்ணன்,

ரொம்ப அவசர படுகிறீர்கள். இங்கே நான் எழுத விழைவது ,மிக சிறந்த இயக்குனர்கள் பற்றி ,அவர்களின் மிக சிறந்த படைப்புகள் பற்றி.உலகளவில் மிக சிலரே/சிலவே இந்த ரகம். பல படங்கள்/இயக்குனர்கள் உண்டு. சிலவற்றை நாம் ரசித்தும் இருப்போம். ஆனால் அவையெல்லாம் லிஸ்டில் வராது.நான் கதைசுருக்கம் எழுத போவதுமில்லை. (வாசு விரும்பி கேட்டதால் கில் பில்) .இயக்குனர்,படம் பற்றி சின்ன அறிமுகம். என் சொந்த குறிப்புகள். பிடித்தால் பாருங்கள் என்ற வகையில்.

நீங்கள் சொன்ன படம் stephen Spielberg இயக்கியது அல்ல. Steven Soderberg .
மிக நல்ல இயக்குனர். இவரின் Sex Lies Videotapes படம் என் லிஸ்டில் உண்டு.

கிட்டத்தட்ட ஒரே பின்னணியை கொண்ட ரோமன் போலன்ஸ்கி இயக்கிய Pianist பார்பவர்களுக்கு, Steven Spielberg இயக்கிய Schindlers List எவ்வளவு மொண்ணை என்பது புரிய வரும்.(இவர் நம்ம ஊர் சங்கர் மாதிரி ரகம்).ஆழமான படம் எடுக்க லாயக்கில்லை. Terminal கொஞ்சம் பிடிக்கும்.

P.S-
சுஜாதா பாணியில் விவரிப்புக்கு முயல்கிறீர்கள். சுஜாதா பாணியே எனக்கு அலர்ஜி.

rajeshkrv
19th June 2015, 06:00 AM
கோபால் ஜி,

சுஜாதா பாணி உங்களுக்குத்தானே அலர்ஜி சி.காவுக்கு இல்லையே. சுஜாதா மாதிரி அவர் எழுதினால் அவருக்கு அந்த சாயல் வருகிறது. நல்லது தானே..

Gopal.s
19th June 2015, 07:03 AM
கோபால் ஜி,

சுஜாதா பாணி உங்களுக்குத்தானே அலர்ஜி சி.காவுக்கு இல்லையே. சுஜாதா மாதிரி அவர் எழுதினால் அவருக்கு அந்த சாயல் வருகிறது. நல்லது தானே..

ராஜேஷ்ஜி ,



நல்லதேதாங்க. நமக்கேன் வம்பு? என் சொந்த கருத்துக்களை சொன்னேன்.



மற்றபடி தீவிர தாக்குதல்கல்கள் இல்லை என்று முரளிக்கும்,வாசுவிற்கும் வாக்களித்து விட்டேன்.(சுமார் தாக்குதல்களை பற்றி வாக்கு எதுவும் வழங்கவில்லை.உஷார்)

Russellisf
19th June 2015, 07:22 AM
மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா என்ற கேள்விக்குறியோடு சென்ற வாரம் முடித்திருந்தேன். மெட்டுக்குப் பாட்டு எனும்போது பொதுவாக ஒரு கிளப் டான்ஸ் என்றால் இயக்குநரோடு கலந்து பேசி, இசையமைப்பாளர் மெட்டுப் போட்டு வைத்திருப்பார். கவிஞரிடம் விவரத்தைக் கூறி, அந்த மெட்டை இசைத்துக் காட்டுவார்கள். அந்தத் தத்தகாரத்துக்கு ஏற்ற வார்த்தைகள் துல்லியமாக கவிஞரிடம் இருந்து வந்து விழும். இதுதான் மெட்டுக்குப் பாட்டு!

பாட்டுக்கு மெட்டு என்றால் படத்தின் திரைக்கதையில் வரும் சூழலுக்கு ஏற்ற பாடல். இயக்குநர் கதைக் களத்தின் காட்சியை கவிஞரிடம் கூறி, படத்தில் இந்தச் சூழல் ரசிகனுக்கு உணர்த்தப்படும் வகையில் பாடல் வேண்டும் என்று கேட்பார். கதையின் காட்சியை உள்வாங்கிக்கொண்ட கவிஞர், அதனை மையமாக வைத்து முழு சுதந்திரத்துடன் பாடலை எழுதிக்கொடுப்பார். அந்தப் பாட்டுக்கு இசையமைப்பாளர்கள் இசையமைப்பார்கள். இதுதான் பாட்டுக்கு மெட்டு!

கவியரசரின் பாடலைக் கேட்டாலே கதையின் ஆழமும், காட்சியின் நேர்த்தி யும் தெரிய வந்துவிடும். பாட்டு கதையோடு இணைந்து வருவதால் மக்கள் மனதில் பதிந்துவிடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ‘பாசமலர்’ படத்தில் அண்ணன் சிவாஜிகணேசன் நடிப்பில் மலரும் பாட்டு,

‘மலர்களைப் போல்

தங்கை உறங்குகிறாள்

அண்ணன் வாழ வைப்பான்

என்று அமைதி கொண்டாள்

கலைந்திடும் கனவுகள்

அவள் படைத்தாள்

அண்ணன் கற்பனைத் தேரினில்

பறந்து சென்றான்…’

- என்ற பாடல் காட்சி. எத்தனையோ ஆண்டுகள் கடந்து சென்றாலும் இந்தப் பாட்டு பசுமரத்தாணிபோல் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதுபோலத்தான் கவியரசு கண்ணதாசனின் பல ஆயிரம் பாட்டுகளும் கதையோடு சேர்ந்து வந்ததாகும். அவருடைய பாட்டில் இலக்கியமும், வாழ்வியலும், தத்துவங்களும் தமிழாக வந்து கொட்டும்.

குற்றால அருவியில் சீசனில்தான் நீர் கொட்டும். ‘கவிஞரின் தமிழ் அருவி 365 நாட்களும் கொட்டும்’. சில காட்சிகளுக்குக் கடகடவென்று மூன்று, நான்கு பல்லவிகளை சொல்லிவிடுவார். ஒன்றுக்கு ஒன்று சிறப்பாக இருக்கும். அதில் எதைத் தெரிவுசெய்வது என்பதே இயக்குநர்களுக்குப் பெரிய வேலையாகிவிடும்.

கவியரசர் எழுதிய பாட்டை வாங்கி எம்.எஸ்.வி படித்தவுடனேயே அதற்கு சரியான ஒரு ராகத்தில் இசையமைப்பார். ‘‘இந்தப் பாட்டுக்கு இந்த ராகத்தை எப்படிண்ணே தேர்ந்தெடுத்தீங்க?’’ என்று எம்.எஸ்.வியிடம் கேட்டால், ‘‘கவிஞரின் பாடலிலேயே ராகம் இருக்கிறது’’ என்பார் சிரித்துக்கொண்டே.

ஒரு சில நேரங்களில் கவிஞர் பாடலைச் சொல்லச் சொல்ல, அதனை இராம.கண்ணப்பன் எழுதிக் கொடுப்பார். எம்.எஸ்.வி. படித்துவிட்டுத் தயக்கம் காட்டுவார். அதில் கவிதை நயம் இல்லாமல் இருக்கும். பக்கத்தில் இருக்கும் மூத்த தபேலா கலைஞர் அனுமந்த், ‘‘இதை எழுதுறதுக்கு கவிஞர் வேணுமா? புதுசா வந்திருக்கிறவங்களே எழுதுவாங்களே’’ என்று சூடு ஏற்றிவிடுவார்.

அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் ‘‘அனுமந்த்… இப்போ பாரு…’’ என்று வேறு வரிகளைச் சொல்வார் கவிஞர். அனுமந்த் கைதட்டி ‘‘இதுதான் கவிஞர் முத்திரை…’’ என்பார். அங்கே நல்லதொரு மெல்லிசையும் பிறந்துவிடும்.

இந்த இடத்தில் இராம.கண்ணப்பனைச் பற்றிச் சொல்ல வேண்டும். பஞ்சு அருணாச்சலத்துக்குப் பிறகு கவிஞருக்கு உதவியாளராக வந்தவர்தான் இவர். கவிஞரோடு கனிவுடன் மிகுந்த ஈடுபாட்டோடு பணிபுரிந்தவர். கவிஞரின் படைப்புகளை, எழுத்துகளைப் பத்திரமாக பாதுகாத்து வைத்து, அவையெல்லாம் நூல் வடிவம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர். நன்றியோடு இவரைப் பாராட்டலாம்.

ஒருமுறை, ஒரு பாட்டை எழுதி வாங்குவதற்காக கவிதா ஓட்டலுக்கு நான் சென்றிருந்தேன். அங்கே கவிஞர் அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தார். அவரது முகத்தில் ஏதோ ஒரு பரபரப்பு. பத்திரிகை, படத் தயாரிப்பு, பல இதழ்களுக்குக் கட்டுரை எழுத வேண்டிய சூழல்... குடும்பம், அதிகமான பிள்ளைகள், வரவுக்கு மேல் செலவு, அரசியல் குழப்பங்கள் இத்தனைக்கும் இடையில் அவர் பாட்டு எழுத வேண்டும். கவிதா ஓட்டல் நிர்வாகி மக்களன்பனிடம் ‘‘கவிஞர் இன்று இந்தப் பாட்டை எழுதிவிடுவாரா?’’ என்று நான் கேட்டேன்.

‘‘நிச்சயம் எழுதிவிடுவார்…’’ என்றார் அவர். அவர் சொன்னபடியே அந்தப் பாட்டை நன்றாகவே எழுதிக் கொடுத்தார். மக்களன்பனிடன் ‘‘எழுதிடுவார்னு எப்படி உறுதியா சொன்னீங்க’’ என்றேன். ‘‘இங்கே கடன்காரர் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார்.

அங்கே பாருங்கள் கம்பெனி கொடுக்குற பணத்தை அந்தக் கடன்காரருக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்’’ என்றார். கவிஞரைப் போல் சம்பாதித்தவரும் இல்லை. கடன்பட்டவரும் இல்லை. முதலுக்கு மேல் வட்டிக் கட்டியவரும் இல்லை. உழைக்கத் தெரிந்த கவிஞருக்கு கடைசி வரை பிழைக்கவே தெரியவில்லை. கவிஞரை முழுதுமாக அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் எழுதிய ‘வனவாசம்’, ‘மனவாசம்’ புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

ஏவி.எம் ஸ்டுடியோவில் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்வதற்காக எம்.எஸ்.வி. இசை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந் தார். இயக்குநரும், ஏவி.எம் செட்டியாரும் கவிஞர் எழுதிய பாடலைப் படித்துவிட்டு, ‘‘சரணத்தில் வந்துள்ள கருத்து ரொம்ப நல்லா இருக்கு. ஆனா, இந்தக் கருத்தை பல்லவியில் கொண்டுவந்தா திரும்பத் திரும்ப அது வரும்.

ஆகவே சரணத்தைப் பல்லவியாக்கி, பல்லவியை சரணமாக்கினா நல்லா இருக்குமே’’ என்று கருதினார்கள். செட்டியார் என்னை அழைத்து ‘‘முத்துராமா நீயே போய் கவிஞரிடம் விவரத்தைக் கூறி, பாட்டை மாற்றி எழுதி வாங்கிட்டு வா. பின்னணிப் பாடகர்கள் வருவதற்குள் பாட்டெழுதிக் கொண்டு வந்துவிட வேண்டும்’’ என்று சொன்னார். சரி என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு நான் புறப்பட்டேன்.

கவிஞர் வீட்டிலும் இல்லை. அலுவல கத்திலும் இல்லை. சினிமா கம்பெனிகளில் போய் பார்த்தால் அங்கேயும் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தோடு காரில் நான் வந்துகொண்டிருந்தேன். அப்போது ஜெமினி அருகே காரில் கவிஞர் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. என் கார் டிரைவரிடம், ‘‘கவிஞருடைய காரை மடக்கு’’ என்று கூறினேன். டிரைவர் காரை வேகமாகக் செலுத்தினார். சினிமா சேஸைப் போல கவிஞருடைய காரை எங்கள் கார் துரத்தியது.

நான் கவிஞரை மடக்கினேனா? பாட்டை மாற்றி எழுதி வாங்கினேனா..?


the hindu tamil

uvausan
19th June 2015, 08:02 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150512-WA0009_zpsgwxcye9v.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150512-WA0009_zpsgwxcye9v.jpg.html)

rajeshkrv
19th June 2015, 08:23 AM
ராஜ் சீதாராமன் என்ற ஒரு பாடகர்.
ஒரு சமயம் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவிற்கும் பாலுவுக்கும் பூசல்.
அப்பொழுது புது பாடகரை கொண்டுவந்தார்.ஆம் அவர் தான் ராஜ் சீதாராமன்.
மள மள வென பல படங்களில் பாடினார். சோபன் பாபுவுக்கு பாடினார்.
அப்படியே தமிழிலும் பாடினார்
ஆம் மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தான் வி.எஸ். நரசிம்மன் இசையில் பாடினாரே அவர் தான்
https://www.youtube.com/watch?v=wEjZJ7G8uL0

இளையராஜாவின் இசையில் கலக்கிய பாடல் மெல்ல மெல்ல என்னைத்தொட்டு மன்மதன் தன் வேலையை காட்டு இசையரசியுடன் ஜமாய்த்திருப்பார்

https://www.youtube.com/watch?v=Qveg840rPDY

தெலுங்கில் பப்பி லஹரியின் இசையில் பல பாடல்கள் பிரபலமாயின

https://www.youtube.com/watch?v=fmAJibQIvLY

இப்படி நல்ல பாடல்கள் பாடிக்கொண்டிருந்த அவர் , பாலு மீண்டும் கிருஷ்ணாவிற்கு பாடத்தொடங்கியவுடன் இவர் காணாமலே போய்விட்டார்

தமிழ் பாடலான எங்கிருந்தோ அழைக்கும் பாடல் தெலுங்கில் பாடியது இவரே.. அப்புறம் காணவில்லை
https://www.youtube.com/watch?v=gfVQnr4pw-A
இப்படி சில நல்ல பாடகர்கள் கொஞ்சம் காலம் தலைகாட்டிவிட்டு மறைந்தே விடுகின்றனர் பாவம்.

uvausan
19th June 2015, 10:21 AM
வாசு , நீங்கள் வைதீஸ்வரன் கோயில்யைப்பற்றி கேட்டதால் , என் மன குமறல்களை கொட்டவேண்டியதாகிவிட்டது . அருமையான பழம்பெரும் கோயில் . கடலூரிலிருந்து 61km தொலைவில் உள்ள சிவன் கோயில் - இறைவன் பெயர் வைதீஸ்வரன் அல்லது Pullirukkuvelur . மருத்துவர்களுக்கு எல்லாம் மருத்துவர் - அன்னையின் பெயர் தையல் நாயகி . ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்கு இருந்த கோயில் , இன்று இருக்கும் நிலை மனதை என்னவோ செய்கிறது - கோயில் புதுப்பிக்கப்படவேயில்லை - சுவர்கள் சுண்ணாம்பை கண்டு பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன - அழகிய பறவைகள் கூடிய இந்த இடத்தில் இன்று புறாக்களும் , வெளவால்களும் தான் வாசம் செய்கின்றன . செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வரும் இடம் இது . இன்று கோவிலே தோஷம் உள்ளதாக காட்சி தருகின்றது . தேவாரம் பாடிய ஐவரும் இந்த கோயிலை பலவாறு புகழ்ந்தவர்கள் .

வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே."

இந்த கோயிலை தர்மபுரம் ஆதினம் பார்த்துக்கொள்கிறது - மனம் கேட்க்காமல் இந்த கேள்வியைக் கேட்டேன் - ஏன் கோயில் இவ்வளவு பழமையாக உள்ளது - பணம் போதவில்லையா ?? - அங்கு இருந்த ஒரு பெரியவர் இருமிக்கொண்டே பதில் தந்தார் - இல்லை தம்பி - இந்த கோயிலுக்கு நிறைய நிலமும் , சொத்தும் இருக்கிறது - வெளிநாடுகளிடம் இருந்தும் பணம் வருகிறது - ஆனாலும் இங்கு இருப்பவர்களுக்கு புதுப்பிக்க மனம் வரவில்லை . போன தடவை விளக்குகளுக்காக நான் கொடுத்த சிறிய தொகையும் அந்த காரியத்திற்கு பயன் படுத்தப்படவில்லை .

அங்கு பணி புரியும் பண்டிதர்கள் வறுமைக்கு ஒரு புதிய அர்த்தத்தை தந்து கொண்டிருந்தார்கள் . அழகிய தெப்பக்குளம் - பாட்டி ,தாத்தா , அப்பா , அம்மாவுடன் பலதடவைகள் இங்கு வந்ததை மனம் சொல்லிக்கொண்டே இருந்தது . வைத்திய நாத சுவாமியிடம் , எல்லோருக்கும் ஆரோக்கியமான உடம்பை கொடுப்பா என்று கேட்கத் தோன்றவில்லை - ventillatorஇல் இருக்கும் அவரை - உன் உடம்பை கொஞ்சம் பார்த்துக்கோ " என்று சொல்லிவிட்டு மிகுந்த மனசுமையுடன் ஊர் திரும்பினேன் .

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Vaitheeswarankovil5_zpsm6niayam.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Vaitheeswarankovil5_zpsm6niayam.jpg.html)

uvausan
19th June 2015, 11:44 AM
கருவின் கரு - பதிவு 96

கோமேதகம் (Hessonite)

Hessonite is one of the most beautiful and unique gemstones. In Hindi its name is “Gomed” while in ancient Sanskrit it is called “Gomedak.” Because Hessonite is related to the “Rahu and Ketu” or the north and the south lunar nodes to be exact, it is believed that it helps with problems related to Earth.

Also called ‘Gomedhaka’ in Tamil and Sinhalese, the name hessonite is derived from the unfortunate Greek word meaning ‘inferior’ – this does not relate to the beauty or popularity of the stone, but is due to the fact that it is has less hardness and density than most of the other garnet varieties.

You can identify the Hessonite stone with its red-orange (honey color). A fairly rare as a gemstone, the Hessonite is a silicate of zirconium and is commonly found in igneous rocks. The range of colors of Zircon is found in red, blue, green, yellow, orange, and brown shades. The types of Hessonite that are not associated with Rahu are the blue and green hessonite or the white colorless variety which are also rarely found.



http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images%201_zpsgfxorfrg.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images%201_zpsgfxorfrg.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images%203_zpsxjhvi2bk.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images%203_zpsxjhvi2bk.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images%202_zpss2rxtvxq.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images%202_zpss2rxtvxq.jpg.html)

கோமேதகம் -

அகஸ்தியரின் நவரத்தின மாலை 7

கோமேதகமே குளிர் வாண் நிலவே !---

கோமேதகமான சிவந்த உதடுகளை உடையவள் , நிலவைப்போல குளிர்ச்சியத்தரும் அவள் கருணை -------

நம் எண்ணங்கள் :

நம் அன்னை கோமேதகத்தைக்காட்டிலும் உயர் வானவள் - நம் கண்ணகளில் அவள் கொடுத்த முத்தங்கள் - எந்த நவரத்தின கற்களுக்கும் இணை ஆகாது .



உண்மை சம்பவம் 13 :


நான் பல வருடங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக வளர்ந்தேன் - கோயிலுக்கு செல்பவர்களை எள்ளி நகையாடுவேன் .. அம்மாவிற்கு ஒரே வருத்தம் - ஒரே பிள்ளை இப்படி வளர்ந்து விட்டானே என்று ... அம்மாவிற்கு அருகில் இருக்கும் அகிலாண்டேஸ்வரியைப் பார்க்காமல் ஒரு நாளும் பிறந்ததில்லை ... ஒரு நாளாவது இவன் திருந்தி தன்னுடன் இந்த அகிலாண்டேஸ்வரியை பார்க்க வரமாட்டானா என்று தினமும் புலம்புவாள் . ஒரு முறை அவளுக்குப்பிடிக்காத ஒரு கேள்வியை அவளிடம் வைத்தேன் . " அம்மா - கடவுள் உண்மையிலே இருக்கிறானா ? அவனுக்கு எதற்கு கும்பிடுவதர்க்கென்று ஒரு தனிப்பட்ட இடம் தேவை ?? "

அம்மா இந்த சின்ன கதையை சொன்னாள் ... இந்த ஒரு கதையினால் திருந்த முடியுமா இன்று கேட்க்காதீர்கள் - திருந்தி விட்டேன் - அம்மா சொன்ன விதம் அப்படி ------

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு. அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு. அப்ப அந்த முடி திருத்துபவர், "கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை.."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க.......அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு. கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?"

இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார்.அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம், "உங்களுக்கு ஒன்று தெரியுமா? முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"

அதிர்ச்சியான முடி திருத்துபவர்,
"அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்."
"இல்லை...........அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."

"அஹ் முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"

"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான் கடவுள் என்பவர் இருக்கிறார். மக்கள் அவனைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"
இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்.

“கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் ..”

அம்மா சொன்ன கதை நெஞ்சை உலுக்கியது - இன்று தினமும் அகிலாண்டேஸ்வரியைப்பார்க்க அம்மா என்னுடன் தான் வருகிறாள்

கோமேதம் என்ற வார்த்தையில் பாடல்கள் கிடைக்கவில்லை - அதனால் அதனையும் மிஞ்சுகின்ற சில உயர்ந்த பாடல்களை இங்கு பதிவு செய்கின்றேன்

https://youtu.be/nckSMw3J34U

https://youtu.be/nx_v9qo6gnM

JamesFague
19th June 2015, 12:43 PM
Courtesy: Tamil Hindu

காற்றில் கலந்த இசை 9: கிராமத்துக் காதலின் சங்கீதம்


ஊருக்கு வெளியே இருக்கும் ரயில்வே கேட், ரயில் வரும் நேரங்களில் மூடப்படும்போது, அதன் இருபுறங்களிலும் நிற்கும் வாகனங்களில் காத்திருக்கும் பயணிகளிடம் பூ, பழம், தின்பண்டங்களை விற்பவர்களைப் பார்த்திருப்போம். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் 1983-ல் வெளியான ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’ படத்தின் கதைமாந்தர்கள் அவர்கள்தான்.

கையில், பேசும் கிளியுடன் அந்தச் சிறு வணிகத்தில் பங்கேற்கும் ராஜலட்சுமிதான் படத்தின் நாயகி. எளிய மனிதர்கள் வாழும் சின்னஞ்சிறிய அந்தக் கிராமத்துக்கு முதல் முறையாக வரும் பேருந்து இன்னொரு முக்கியமான பாத்திரம். அதன் நடத்துநர் (கார்த்திக்) படத்தின் நாயகன். கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும் இந்தக் கதை சிறப்பாகப் படமாக்கப்பட்டதா என்பது வேறு விஷயம்.

எனினும், ‘ராசிபுரம் காத்தவராயன், ஸ்ரீரங்கம் சீனிவாசன் ஆகியோர் விரும்பி கேட்டிருக்கும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’. பாடலைப் பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி, எஸ்.பி. ஷைலஜா. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடலுக்கு இசை இளையராஜா’ என்று மவுன இடைவெளிகளுக்கு நடுவில் விவித்பாரதி அறிவிப்பாளர்களால் பல முறை ஒலிபரப்பப்பட்ட பாடல்களைக் கொண்ட படம் இது.

காலை நேரத் தென்றல்

முந்தைய நாளில் எத்தனையோ கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இயற்கையின் சுகந்தத்துடன், புத்தம் புதிதாக, மலர்ச்சியுடன் மறுநாள் காலை புலரும் தருணங்கள், எவர் மனதையும் உடலையும் புத்துயிர்ப்புடன் உணரவைத்துவிடும். காலை நேரத்தில் கண் விழிக்கும் மலர்களும் பறவைகளும் இயற்கையின் அற்புதத்தைப் பாடிக்கொண்டிருக்கும். நமது நாயகனும் நாயகியும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்வது இந்த நேரத்தில்தான் என்பதால், ‘காலை நேரக் காற்றின் வாழ்த்தைக்’ கோருகிறது இந்தப் பாடல்.

துள்ளும் இளமையுடன் ஒலிக்கும் கிட்டாருக்கு இணையாகக் குதூகலமாக இசைக்கும் வீணையுடன் பாடல் தொடங்குகிறது. துடிக்கும் மனதின் இசை வடிவமாகக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் தபேலா, இயற்கையின் இளமையைச் சுமந்தபடி பாடல் முழுவதும் ஒலிக்கும். ஒற்றையடிப் பாதையின் இருபுறமும் சிலிர்த்துக் கிடக்கும் செடி-கொடிகள், காற்றின் தாளத்துக்கு அசையும் நாற்றுக்கள், காற்றின் தீண்டலில் மெல்லிய அலைகள் பரவும் நீர்ப்பரப்புகள் என்று இந்தப் பாடல் வழங்கும் மனச்சித்திரங்கள் அபாரமானவை. முதல் சரணத்துக்கு முன்னதாக ஒலிக்கும் புல்லாங்குழல் இயற்கை அழகை ரசித்தபடி வருடிச் செல்லும் காலைத் தென்றலின் இசை வடிவமாக ஒலிக்கும்.

இயற்கை சார்ந்த பல பாடல்களைத் தீபன் சக்கரவர்த்திக்கு இளையராஜா வழங்கியதன் காரணம் என்னவாக இருக்கும்? இயற்கையை வியக்கும் அடங்கிய, குளிர்ந்த அவரது குரல் இப்பாடல்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று இளையராஜாவுக்குத் தோன்றியிருக்கலாம்.

இயற்கையுடன் இசைந்து ஒலிக்கும் இதுபோன்ற பாடல்கள் எஸ்.பி. ஷைலஜாவுக்குக் கொடுக்கப்பட்டதற்கு, விரிந்துகிடக்கும் இயற்கையின் எல்லையைத் தொட முயலும் அவரது துல்லியமான குரல் காரணமாக இருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும் இதுபோன்ற கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் நமக்குக் கிடைத்திருக்கும் பாடல்கள், இயற்கையின் பேரழகை நம் கண்முன் நிறுத்துபவை.

சாரல் தெறிக்கும் இசையருவி

உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா பாடிய ‘செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நினைச்சு’ பாடல், கிராமியக் காட்சிகளை வரைந்துசெல்லும் மற்றொரு பாடல். ‘காலை நேரக் காற்றே’ பாடல் புதிதாகத் தொடங்கும் காதலின் குறுகுறுப்பு கலந்த துள்ளல் கலந்தது என்றால், இந்தப் பாடல் காதலில் திளைக்கும் ஜோடியின் ரகசியச் சந்திப்பின் கொண்டாட்டம் எனலாம்.

‘தானானே… தானானா…’ என்று கிராமத்தின் அசல் குரல் ஒன்றுடன் தொடங்கும் பாடல், எளிய தாளக்கட்டுடன் கிட்டார், ஜலதரங்கம் என்று இசைக் கருவிகளின் சங்கமத்துடன் தொடர்கிறது. அருவியின் கிளைகளாகப் பிரிந்து செல்லும் ஓடைகளில் ஒன்று, பசுமையாகக் குளிர்ந்து கிடக்கும் பாறைகளின் மீது ஓடிச்செல்வது போல், தன்னியல்பாக விரிந்துசெல்லும் இசை கொண்ட பாடல் இது.

மாலை நேரத்தில் தென்னங்கீற்றுகளின் நடுவில் எட்டிப் பார்க்கும் சூரியக் கதிர்களின் மஞ்சள் பின்னணியில், பெயர் தெரியாத காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சி மனதுக்குள் விரியும். ‘கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே’ என்று இளையராஜா பாடும்போது, இதுவரை அறிந்திராத அருவியின் சாரல் நம் மீது தெறிப்பதை உணர முடியும். அத்தனை அசலான கிராமத்துப் பாடல் இது.

கங்கை அமரன் பாடிய டைட்டில் பாடலைத் தவிர்த்து வேறு இரண்டு பாடல்களும் படத்தில் உண்டு. சசிரேகா பாடிய ‘தென்றல் காற்றும் அன்புப் பாட்டும்’ பாடல், காதல் வாழ்வில் குறுக்கிடும் சோகங்களை நினைத்து வருந்தும் நாயகியின் மனக்குரலாக ஒலிக்கும். தனித்த குரல் கொண்ட சசிரேகாவின் சிறந்த பாடல்களில் ஒன்று இது. எஸ்.பி.பி. பாடும் ‘ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை’ பாடல், நாயகனின் தரப்பில் பாடப்படும் மற்றொரு காதல் சோகப் பாடல்

JamesFague
19th June 2015, 12:46 PM
Courtesy: Tamil Hindu


சினிமா ரசனை 3: முப்பதே ஷாட்களில் ஒரு திரைப்படம்!





பொதுவாகவே உலகம் முழுக்க இருக்கும் திரைப்பட ரசிகர்களுக்கிடையே ஒரு கருத்து நிலவுவதைப் பார்க்கலாம். ‘திரைப்படம் என்பது வேகமாக இருக்க வேண்டும்' என்பதே அது. வணிகத் திரைப்படங்கள் இப்படி இருந்தால்தான் ஆடியன்ஸால் ரசிக்கப்படும் என்பது ஒரு விஷயம். உலகத் திரைப்பட ரசிகர்களுக்கேகூட இப்படி ஒரு எண்ணம் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில், கலைப்படங்களைப் பற்றி எப்போது எழுதப்பட்டாலும், நகைச்சுவையான உதாரணமாக ‘மரத்தையே அரைமணி நேரம் காட்டுதல்', ‘கேமராவை நகர்த்தாமல் நீண்ட ஷாட்கள் எடுத்தல்' என்றெல்லாம் எழுதப்படுவதைக் காண்கிறோம். ஆ

னால், வாழ்க்கை என்பதை எடுத்துக்கொண்டால், நிஜத்தில் அப்படியா இருக்கிறது? மெதுவாக நகரும் பல சம்பவங்களைக் கொண்டதே நம் வாழ்க்கை. இதில் இப்படிப்பட்ட சம்பவங்களைக் காண்பதால்/அனுபவிப்பதால் நமக்குள் ஏற்படும் எண்ணங்கள், நிகழும் மாற்றங்கள் ஆகியவற்றை எப்படி விளக்குவது?

ஒரு குதிரை ஒரு தத்துவவாதி

‘ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவவாதி ஃப்ரீட்ரிஃக் நீட்ஸ்ஸே (Friedrich Nietzsche - நீட்ஷே என்று நாம் தவறாக உச்சரிக்கும் பெயர், ஜேர்மன் மொழியில் இப்படித்தான் சொல்லப்படுகிறது), 1889 ஜனவரி மூன்றாம் தேதி, டுரின் நகரில் ஆறாம் எண்ணுள்ள வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்போது, அங்கே ஒரு கோச் வண்டியில் பிணைக்கப்பட்டுள்ள குதிரை திமிறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறார்.

நகர மறுக்கும் அந்தக் குதிரையை, வேறுவழியில்லாமல் அந்தக் குதிரைக்காரர் அடிக்க முயல்கிறார். இதைக் கண்டதும் பொறுக்க முடியாமல் நீட்ஸ்ஸே ஓடிச்சென்று குதிரையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழத் துவங்குகிறார். அவரது நண்பர் உடனடியாக வந்து நீட்ஸ்ஸேவை உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார்.

வீட்டுக்குள் இரண்டு நாட்கள் அசையாமல் படுத்திருக்கும் நீட்ஸ்ஸே, கடைசியாக, ‘Mother, I am stupid' என்று சொல்கிறார். இதன் பின் பத்து வருடங்கள் பேசாமலும் மனநிலை பாதிக்கப்பட்டும் உயிர் வாழ்ந்த நீட்ஸ்ஸேவை அவரது தாயும் சகோதரிகளும் கவனித்துக்கொண்டனர். அந்தக் குதிரையின் கதி தெரியவில்லை'.

இவை The Turin Horse (A torini l) என்ற படத்தின் ஆரம்ப வரிகள். நீட்ஸ்ஸேவால் காப்பாற்றப்பட்ட குதிரையின் கதை இது. இந்த வரிகளுக்குப் பின்னர் திரை வெளிச்சம் பெறுகிறது. வண்டியில் பூட்டப்பட்ட குதிரையை மிக அருகே காண்கிறோம். ஓட்டுபவரின் கையில் ஒரு சாட்டை. சற்றே வேகமாக நடக்கும் அந்தக் குதிரையின் கடிவாளம், கஷ்டப்பட்டு வண்டியை இழுக்கும் அதன் வலி ஆகியவை தெளிவாகப் புரிகின்றன.

இதன்பின் அதே ஷாட்டில் பின்னால் அமர்ந்திருக்கும் குதிரைக்காரரைக் கவனிக்கிறோம். கடிவாளத்தை இழுத்துப்பிடித்திருக்கும் அவரது முகத்தில் ஒருவித இயந்திரத்தனத்தோடு கூடிய சலிப்பும் வலியும் தெளிவாகத் தெரிகிறது. அவரையே கவனித்துக்கொண்டிருந்துவிட்டுப் பின்னர் மறுபடியும் குதிரைக்குச் செல்கிறது கேமரா. அந்தக் குதிரையுமே இயந்திரத்தனமாகவே செல்வதுபோன்ற பிரமை ஏற்படுகிறது.

பின்னணியில் வரும் இசை, உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் நமது மனதை அறுக்கிறது. இதன் பின் கேமரா மெதுவே பின்னால் வருகிறது. வண்டியைப் பனி சூழ்கிறது. ஒருவிதக் காட்டுப் பகுதியில் வண்டி செல்கிறது. துவக்கத்தில் இருந்து ஒரேபோன்ற இசை. பின்னர் மறுபடியும் குதிரைக்கு வருகிறோம். அதன் முகத்தைக் கவனிக்கிறோம். மெல்ல இசை குறைந்து வண்டியின் சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது. வண்டி நிற்கப்போகிறது என்பதை அறிகிறோம். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் ஓடும் ஒரே ஷாட் இது.

மறக்கவே முடியாது

வண்டிக்காரரின் வீட்டில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்த மகள், குதிரை, குதிரைக்காரர் ஆகியவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதுதான் முழுப்படமும். நீட்ஸ்ஸேவைத் தீராத துயரில் தள்ளிய குதிரை இது. இந்தக் குதிரை அந்தக் குதிரைக்காரரின் வாழ்க்கைக்கு எப்படித் துணை புரிகிறது? அந்தக் குதிரை இல்லாமல் அவராலும் அவரது மகளாலும் வாழ்க்கையைத் தொடர முடியுமா?

வீட்டில் அந்த மகளின் தினசரி வாழ்க்கை எப்படிச் செல்கிறது? குதிரை இறந்துவிட்டால் அதன்பின் அவர்களின் வாழ்க்கை என்ன ஆகும்? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலாகவே இந்த முழுப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தப் படத்திலும் முப்பதே ஷாட்கள்தான். படம் முழுதும் தொடரும் அருமையான இசையும் (Mihly Vg), படத்தின் நீளமான ஷாட்களும் இந்தப் படத்தை அவசியம் நம்மால் மறக்கவே முடியாத ஒரு படமாக ஆக்கும் என்பதில் சந்தேகமில்லை.



எதைப் பற்றிப் பேசுகிறது?

மனித வாழ்க்கையின் அழுந்தும் பாரம் பற்றிய வெளிப்பாடுதான் இந்தப் படம் என்பது இயக்குநர் பேலா தாரின் (Bla Tarr) கருத்து. ஒவ்வொரு நாளும் ஒரே விதமான வேலைகளை- கிணற்றுக்குச் சென்று தண்ணீர் எடுப்பதை - செய்துவருவது எத்தனை கடினம்? எத்தனை கொடுமை? ஒரேவிதமான இந்த வேலைகளைத் தினமும் முடிவே இல்லாமல் செய்வது, இவர்களின் உலகத்தில் எதுவோ தவறு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்பது பேலா தாரின் வாதம்.

Slow Cinema என்ற கருத்துக்கு இப்படம் ஒரு உதாரணம். இது ஒரு கறுப்பு வெள்ளைப் படமும் கூட. ‘மெதுவான திரைப்படம்', ‘கறுப்பு வெள்ளை' என்றதும் இது பழைய படம் என்று நினைத்துவிடவேண்டாம். இது 2011-ல் வெளிவந்த படம். இயக்குநர் பேலா தாரின் இறுதிப் படமும்கூட.

இதுவொரு இயக்கம்

முப்பதே ஷாட்களில், திரும்பத் திரும்ப ஒரே விஷயங்கள் நடக்கும் கதையாக இருந்தாலும், உள்ளது உள்ளபடி கவனித்தால் இந்தப் படத்தில் பல கருத்துகளை நாம் அறியலாம். படம் பார்த்து முடித்தபின் மனித வாழ்க்கையின் துயரம் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் பல கருத்துகள் எழும்.

இதுபோன்ற கருத்துகள்தான் வாழ்க்கையைப் பற்றிய பல எண்ணங்களை நமது மனதில் அழித்து இன்னும் செம்மையாக எழுதுகின்றன. இதுபோன்ற படங்கள்தான் பிற உயிர்களின்மீது கருணை கொள்ளவும், அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் நமக்கு உதவுகின்றன.

Slow Cinema Moment பற்றிய ஒரு அறிமுகம்தான் இந்தக் கட்டுரை. இன்னும் ஏராளமான விஷயங்கள் இதில் உள்ளன. அவற்றை அறிய, Theo Angelopoulos, Bla Tarr, Albert Serra, Aleksandr Sokurov, Lisandro Alonso, Tsai Ming-liang, Sharunas Bartas, Pedro Costa, Jia Zhang-ke, Carlos Reygadas, Gus Van Sant, Hou Hsiao-hsien ஆகிய இயக்குநர்களின் படங்களைக் கவனிக்கலாம். நிஜ வாழ்க்கையின் பரிணாமங்களை உள்ளது உள்ளபடி நமக்கு உணர்த்தும் இந்த ரீதியிலான படங்கள் நம் திரை ரசனையை மேம்படுத்திக் கொள்ள அவசியம். இதுபோன்ற படங்களைப் பார்க்கப் பார்க்க அதை கண்டிப்பாய் உணர்வீர்கள்.

uvausan
19th June 2015, 01:14 PM
கருவின் கரு - பதிவு 97



பதுமராகம்
Yellow Sapphire


The enduring and alluring Sapphire forms in more colors than just the legendary blue. Each color exhibits its own unique metaphysical properties and vibrational patterns, yet all are Stones of Wisdom. They honor the higher mind, bringing intuition, clarity and self-mastery. Worn throughout the ages for protection, good fortune and spiritual insight, Sapphires are not only symbols of power and strength, but also of kindness and wise judgment.

Yellow Sapphire brings the wisdom of prosperity, not only by attracting wealth and financial abundance into one’s life, but in its ability to manifest one’s creative energy into form through action. Yellow Sapphire stimulates the intellect, helping to formulate ideas and goals, then focuses that intent through the Solar Plexus Chakra, the will center, allowing one to hold their vision long enough to bring it into being. It also encourages the exploration of moving in new directions, bringing excitement and joyful expectation about the possibilities in life.

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/pukhraj_zpsoz1d7g5b.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/pukhraj_zpsoz1d7g5b.jpg.html)



http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Yellow_Sapphire_zps9r5q94vn.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Yellow_Sapphire_zps9r5q94vn.jpg.html)

அகஸ்தியரின் நவரத்தின மாலை - 8 பதுமராகம்
|| ரஞ்சனி நந்தினி அங்கனி பதும

ராக விகா ஸவியாபினி அம்பா ||

Goddess who makes peace, who has divine bliss,
Who has pretty limbs , who extends everywhere,
Who is the shine of sapphire , who is the mother - victory to you

நம் எண்ணங்கள் :

அம்மாவின் அழகு அவளுடைய கருணை அந்த பதுமராகத்திர்க்கு ஏது - ஏதோ மின்னுகிறது அவ்வளவுதான் - என்றும் மின்னுபவள் நம் தாய் - ஏ பதும ராகமே கொஞ்சம் அடங்கு !!




https://youtu.be/b-Uwn2O_tDw

https://youtu.be/o2bjPcpZW1A

uvausan
19th June 2015, 01:31 PM
கருவின் கரு - பதிவு 98

9. cat's eye : வைடூரியம்

General Information Of Cat’s Eye Gemstone/ Lehsuniya :

According to Indian astrologer Cat’s Eye gemstones symbolize “KETU”. It is known as Lehsunia or Vaiduria. The other names of this gem are Chrysoberyl, Cyophane Cat’s Eye, Ketu-Ratna, Ketu’s Gem and Sutra-Mani but Indian people knows it as Sutra Mani.This gemstone is found in Brazil, China, South India, Ceylon and many other countries. Cat’s eye gemstone is available in different shades and sizes. Even then this gem destroys and removes all bad effects of ketu in horoscope/ birth chart. Ketu is also known as second mars. Rahu and Ketu are so attached to each other that they could not be talked about in different sentences. Ketu is almost the another print of Rahu exploring different shades and in different confinements which could be seen in its icon Cat’s Eye Gemstone or lehsunia on land.

The strength of Cat’s Eye or lehsunia gem could be predicted by smoothness, brilliance of chatoyance, high specific gravity, having three streaks of light similar to the sacred thread worn by Brahmins in India, straightness of the chatoyance. But Cat’s Eye or lehsunia could contain some flaws as well like dullness which could lead to bad health and wealth, crack bring injuries from sharp edged weapons, cobweb inside bring imprisonment, holes or dents bring diseases of the stomach, five bands bring misfortune, flat tell its being devoid of effects and uneven shape tells about being unlucky.

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Substitute-of-Cats-Eye_zpszjzj7lud.gif (http://s818.photobucket.com/user/jravikumar/media/Substitute-of-Cats-Eye_zpszjzj7lud.gif.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Chrysoberyl-009_zps9bidcb7p.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Chrysoberyl-009_zps9bidcb7p.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images%202_zpsn59ybymg.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images%202_zpsn59ybymg.jpg.html)


நவரத்தின மாலை 9 - வைடூரியம்

" அடியார் முடிவாழ் வைடூரியமே "

உன்னை வணங்கும் எல்லோருக்கும் வைடூரியமாக இருப்பவள் நீ ----



இந்த ஒரு கல் தான் கொஞ்சம் அம்மாவுடன் ஒத்துப்போகிறது -- அவளை வணங்கும் எல்லோருமே வைடூரியங்களாகத்தான் ஜொலிப்பார்கள் - இதில் சந்தேகமே இல்லை


Song - Vaidoorya Ratnamaala Charthi...
Film - Pullimaan (പുള്ളിമാന്), 1972,
Lyrics - Sreekumaran Thampi,
https://youtu.be/BOXexqxLiBc

https://youtu.be/1oeao8pBkX8

https://youtu.be/LnFCiai2QcU

https://youtu.be/qVl_wv1dRAI

uvausan
19th June 2015, 01:35 PM
கருவின் கரு - பதிவு 99

நவரத்தின மாலை இனிதே முடிவடைகிறது ......

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/200px-Queen-Sirikit-Navaratna_zpst199dlxi.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/200px-Queen-Sirikit-Navaratna_zpst199dlxi.jpg.html)

https://youtu.be/y6siMElVT8k

vasudevan31355
19th June 2015, 07:33 PM
http://i58.tinypic.com/hwiw7d.jpg

rajeshkrv
19th June 2015, 08:08 PM
வணக்கம் ஜி

RAGHAVENDRA
19th June 2015, 10:11 PM
நாளை 20.06.2015 சனிக்கிழமை மாலை மெல்லிசை மன்னரின் பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக அவர் இசையமைத்த படங்களின் முகப்பிசை, பின்னணி இசை, இடையிசை போன்றவற்றை விளக்கமாக அலசும் வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழின் நிழற்படம்.

அனுமதிச்சீட்டுக்கு நிழற்படத்தில் உள்ள கைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்க

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xat1/t31.0-8/s960x960/11312896_395285050665242_7333686709777875240_o.jpg

RAGHAVENDRA
19th June 2015, 10:15 PM
அபூர்வ நிழற்படம்..

மணியோசை திரைப்படப் பாடல் உருவாக்கத்திற்காக இயக்குநர் மாதவன், கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி விவாதிக்கும் காட்சி..

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/kdmsvtkpmmaniosaifw_zpsmhyertok.jpg

பேசும்படம் டிச.1962 இதழிலிருந்து..

RAGHAVENDRA
19th June 2015, 10:16 PM
நண்பர்களே,
ஜூன் 24 கவியரசர் மெல்லிசை மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று முழுதும் இவர்கள் இணையில் வெளிவந்த பாடல்களைப் பற்றி பகிர்ந்து கொள்வோமா..

uvausan
20th June 2015, 07:10 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150501-WA0001_zpspndn5hfg.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150501-WA0001_zpspndn5hfg.jpg.html)

uvausan
20th June 2015, 07:14 AM
கருவின் கரு - பதிவு 100:):smile2:

தாயின் பரிமாணங்கள் -1

நம் எல்லோரிடமும் தாயின் சில அம்சங்களாவது இணைந்திருக்கும் - உறவுகள் வேறுபட்டாலும் , பிறருக்கு நாம் கருணையை , அன்பைக் காட்டும் போது நாமும் தாய்மை என்ற பெயரை பெற்றுவிடுகிறோம் - கருணைக்கு "அம்மா " என்ற ஒரே அர்த்தத்தை தவிர வேறு ஒரு அர்த்தம் அதற்கில்லை .. இங்கே பாருங்கள் - ஒரு தங்கை தன் அண்ணனை "தாயின் முகம் இங்கு நிழலாடுகிறது "என்று பாடுகிறாள் - ஒரு அண்ணன் இங்கே ஒரு தாயாக அவள் கண்களில் தெரிகிறாள்

https://youtu.be/MmWZrz-IwdM

தாயின் பரிமாணங்கள் -2.

இன்னொமொரு தங்கை அண்ணனை ஒரு கோயிலாகவும் , தன்னை அந்த கோயினுள் இருக்கும் தீபமாகவும் நினைக்கிறாள் - தாய் தந்தை அன்பை தன் அண்ணன் மூலம் தான் பார்க்கிறாள் - இங்கும் அந்த அண்ணன் ஒரு தாயாக மாறுகிறான் ..

https://youtu.be/VLMjv8LzMHY

uvausan
20th June 2015, 07:15 AM
கருவின் கரு - பதிவு 101

தாயின் பரிமாணங்கள் -3.

இங்கே ஒருவன் தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும் - தாளாத என் ஆசை சின்னம்மா -- வெகு நாளாக என் ஆசை சின்னம்மா " என்று பாடுகிறான் -தாயாகுவதில் இவனுக்குத்தான் எவ்வளவு பெருமை !! உருக வைக்கும் பாடல் .....

https://youtu.be/J0TrMbpWScg

தாயின் பரிமாணங்கள் -4

இங்கே தங்கையைப்பற்றி கனவு காணும் ஒரு அண்ணன் - தாயில்லை அவளுக்கு வரன் பார்க்க ----

பூமணம் கொண்டவள் பால் மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்

எல்லாமே தங்கைதான் என்று வாழும் ஒரு அண்ணன் - தாயின் பாசத்தையும் மிஞ்சியவனாகுகிறான் ......

https://youtu.be/9P8Hynotz1M

தாயின் பரிமாணங்கள் -5

நட்புக்காக எதையும் செய்பவன் இவன் --- தன் காதலையும் தன் நண்பனுக்காக மறக்கிறான் ... அவன் காதலி அவனுக்கே தங்கை ஆகின்றாள் --- தன் அன்பையும் , பாசத்தையும் உலகம் புரிந்துக்கொள்ளவில்லை - நண்பன் சந்தேகிக்கிறான் அவர்கள் உறவை ----- வெறுத்த மனம் - விதைக்கும் விஷ வார்த்தைகள் - இதன் நடுவில் அவளை அவளின் காதலனுடன் இணைக்கிறான் - இங்கேயும் தாயை மறக்காமல் வரும் வார்த்தைகள் - தாய் வழியே வந்த நாணத்தைக்காட்டி ------------

வேறு யார்
இப்படி எழுதமுடியும்?
இப்படி இசையமைக்கமுடியும்?
இப்படிப்பாடமுடியும்?
இப்படி நடிக்கமுடியும்
அது ஒரு பொற்காலம்... இணையத்தளத்தில் ஒருவரின் புலம்பல் ------

https://youtu.be/prT3e7Wb29M

uvausan
20th June 2015, 07:21 AM
கருவில் கரு - பாகம் 1 - இத்துடன் இந்த பாகம் இனிதாக முடிவடைகிறது - எவ்வளவோ சொல்ல விரும்பினேன் - கொஞ்சம் தான் சொல்ல முடிந்தது - அன்னையின் கருணைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க யாரால் முடியும் ? பல பாடல்கள் , உங்களுக்குத் தெரிந்தவைகள் இங்கே நான் எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் --- சில பதிவுகள் தப்பித்தவறி உங்கள் மனங்களை காயப்படுத்திருக்கலாம் - இரண்டுக்கும் முதலில் என் மன்னிப்புக்கள் .....

ஒரு வேள்வியைப்போல ஆரம்பித்தேன் - எண்ண ஓட்டங்களில் தடை வரவேயில்லை அவளின் அருளால் ... முன்னமேயே சொன்ன மாதிரி இங்கு சொன்ன அத்தனை நிகழ்ச்சிகளும் , என் வாழ்க்கையிலும் , உறவினர்கள் வாழ்க்கையிலும் , நண்பர்கள் சிலர் வாழ்க்கையிலும் நடந்த உண்மை சம்பவங்கள் - மிகைப்படுத்தப்பட்டவைகள் அல்ல ......

நடமாடும் அந்த தெய்வத்திற்கு ஒரு பாமாலை நான் சூட வாயிப்பு கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் , இந்த திரியை ப்படிக்கும் அத்தனை நல்ல இதயங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . இறைவன் எங்குமே தனியாக இருப்பதில்லை அவள் உருவில் என்றுமே நம்முடன் வாழ்கிறான் - இருக்கும் போது மதிப்போம் - அவள் நிழலும் நமக்கு உதவும் - இல்லை என்று ஆகி விட்டால் அவளைப்போல ஆகமுயற்ச்சிப்போம் மற்றவர்களுக்கு ------

இங்கு இருக்கும் / படிக்கும் எல்லோருடைய அன்னையர்களின் பாதங்களில் இந்த கருவின் கரு - பாகம் 1 யை அன்புடன் வணங்கி சமர்ப்பிக்கிறேன் .

அன்புடன்

https://youtu.be/PFPX9OgqEG4


https://youtu.be/jDn2bn7_YSM

uvausan
20th June 2015, 07:32 AM
RECAP - கருவின் கரு - பாகம் ஒன்று ( ஆரம்பித்த நாள் 23/05/205-பதிவு எண் 98 ) பதித்த பாடல்கள் , சொற்பழிவு , ஸ்லோகங்கள் மொத்தம் 155க்கும் மேல் ......

முதலில் ஆதி சங்கரரின் மனம் உருகி தாயைப்பற்றி பாடிய மாத்ருகா பஞ்சகம்த்தை பார்த்தோம் - 5 பாடல்கள் அன்னையின் சிறப்பை சிகரமாக வைத்தவை

அதனை ஒட்டி தாயின் அன்பை , கருணையை பல திரைப்பட பாடல்கள் மூலம் கண்டு உருகினோம் - மொழி வித்தியாசம் இல்லாத பாடல்கள்

ஒரு தாயின் தியாகத்தையும் அன்பையும் 5 பருவங்களாக பார்த்தோம் - தத்ரீ (Dhatree) - அதாவது குழந்தையை சுமப்பவள் - இந்த நிலையில் அவள் செய்யும் தியாகங்களுக்கு அளவே இல்லை - ஒரு பெண் தாய்மை என்ற நிலையை அடையும் போதுதான் அவளின் உள்ளே ஒளிந்திருக்கும் கருணை ஒரு கருவாக உருவாகிறது .

இரண்டாவது இடம் ஜனணி (Janani) - குழந்தையை ஈன்றுபவள் - இங்குதான் அவளின் சுயநலம் , தனக்கு என்று வாழ்தல் என்னும் குணங்கள் கொல்லப்படுக்கின்றன - தாய்மை கருவாக வெளி வருகிறது ( A child gives birth to a mother )

மூன்றாவது அம்பா ((One who nourishes the limbs of the child) - தன் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் அழகு பார்க்க தொடங்குகிறாள் - அவைகளை ஆராதிக்கின்றாள் .

நான்காவது "வீரசு" ( veerasu ) - (One who makes him a hero),- தன் குழந்தையை வளர்க்கத்தொடங்குகின்றாள் - தன்னம்பிக்கையை பாலாக ஊட்டுகின்றாள் - ஒரு பண்புள்ள நல்ல தலைவனாக வருவான் என்று கனவுகள் பல காணுகின்றாள் .

அடுத்தது ஷுஸ்ரூ - Shusroo- (One who takes care of him till her end ) - பல வருடங்கள் தன் குழந்தையை சுமக்குகின்றாள் - இளமை உதிர்ந்த இலைகளாக கீழே விழ , முதுமையின் கொடுமையிலும் அவனுக்காகவே வாழ்கிறாள் - அவள் தவம் செய்யும் இடத்திற்கு , யாரோ " முதியோர் இல்லம் " என்ற தவறான பெயரை கொடுத்துள்ளனர் - இவைகளில் சம்பந்தப்பட்ட திரைப்பாடல்களை ரசித்தோம் .

பிறகு நவரத்தினத்தால் அன்னைக்கு ஒரு அழகிய மாலையைத்தொடுத்தோம் ..

கடைசியாக அன்னையின் கருணையை வைத்து எழுப்பப்படும் பல பரிமாணங்களைபார்த்தோம் - அவளின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் .

திரு கோபாலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் - கருவில் ஒரு பதிவை உருக்கமாக போட்டதற்காக ..... அதே மாதிரி திரு ஆதிராமும் தன்னுடைய அன்னையுடன் சேர்ந்திருக்க அந்த இறைவன் அருள் செய்யட்டும் -----ராஜேஷ் அவர்களும் அவர் பங்கில் சில நல்ல பாடல்களை சேர்த்திருந்தார் - பிறகு CK வின் உருக்கமான அவருடைய தாயைப்பற்றிய பதிவு - உற்சாகப்படுத்தும் திரு வாசு , திரு கல்நாயக் , திரு முரளி , திரு ராகவேந்திரா சார் ,திரு கலை அண்ட் திரு வினோத் அவர்களின் வார்த்தைகள் ( யாருடைய பெயர்கள் விட்டிருந்தால் மன்னிக்கவும் ) , திரு கோபு அவர்களின் திரிக்குப்பின் இருந்து வரும் "likes ", திரு ராஜ் ராஜ் அவர்களின் மௌனம் கலந்த வாழ்த்துக்கள் - சொல்லிக்கொண்டே போகலாம் ----எல்லோருக்கும் மீண்டும் எனது தாழ்மையான வணக்கங்கள் , நன்றிகள்

அன்புடன்

Gopal.s
20th June 2015, 08:18 AM
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நம் ரத்தத்தில் கலந்த இரு மேதைகள். இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் காணும் பிரித்தறிய முடியா உயிர் நண்பர்கள். (ஜூன் 24) கண்ணதாசன் ஒரு வருடம் மூத்தவர்.(1927) .இருவருமே நடிகர்திலகத்தை விட மூத்தவர்கள்.
நடிகர்திலகம்- விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன் இணைவு பாகபிரிவினை (1959)முதல் சாந்தி(1965) வரை தொடர்ந்தது. நடிகர்திலகம்-விஸ்வநாதன்-கண்ணதாசன் இணையோ ,கண்ணதாசன் இறப்பு வரை தொடர்ந்தது. பல உயரிய தமிழ் பாடல்கள் இந்த இணைவுக்கு சொந்தமானவை.

கண்ணதாசன் சுப்ரமணிய பாரதிக்கு அடுத்த நிலையில் கொண்டாட படும் உன்னத கவிஞன். என்னதான் வசனம், தனி பாடல்கள்,நாவல்கள்,சுயசரிதை,தத்துவம்,மதநூல்கள் என்று எழுதியிருந்தாலும், மறக்க முடியாத சாதனை அவர் திரைப்பாடல்களே.

அவர் திரை பாடல்கள் சாதித்தவை ,பலருக்கு ஊக்கம் கொடுத்து கவிஞனாக தூண்டியவை,.

1)இலக்கியத்துக்கும் ,திரை பாடல்களுக்கும் கலப்பு மணம் செய்வித்தவர். திருக்குறள்(உன்னை நான் பார்க்கும் போது ),அக-புற பாடல்கள்(நேற்று வரை நீ யாரோ), கம்ப ராமாயணம் (பால் வண்ணம் ),திருப்பாவை(மலர்ந்தும் மலராத,மத்தள மேளம் முரசொலிக்க ),காளமேக புலவர் சிலேடைகள் (இலந்த பயம்)பட்டினத்தார் (வீடு வரை உறவு), பிற்கால கவிஞர்கள் (அத்தான் என்னத்தான் ) என்று எத்தனை எத்தனை.என்று ஆய்வு செய்தால் வாழ்நாள் காணாது.

2)நடைமுறையை இணைத்தவர்.அரசியலை அழகாக படத்துடன் ,கதையமைப்பு கோணாது இணைத்தவர்.(ஓஹோ ஓஹோ மனிதர்களே,அண்ணன் காட்டிய வழியம்மா,யாரை எங்கே வைப்பது என்றே,என்னதான் நடக்கும்,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு,சிவகாமி மகனிடம்,நலந்தானா யாரை நம்பி நான் பொறந்தேன்)

3)சொந்த வாழ்விலிருந்து கவிதைக்கு பொருள் சேர்த்து உரமாக்கியவர்.அவரின் வாழ்க்கையில் அனுபவங்களுக்கோ பஞ்சமில்லை. வாழ்க்கையை வெற்றி-தோல்வி,இன்ப-துன்பம்,பற்றி கவலையின்றி வாழ்ந்து பார்த்தவர். ஒளிவு மறைவில்லா திறந்த புத்தகம்.(அண்ணன் என்னடா தம்பி என்னடா, நாளை முதல் குடிக்க மாட்டேன்,இரண்டு மனம் வேண்டும்,ஆட்டுவித்தால்,மனிதன் நினைப்பதுண்டு ,)

4)இவ்வளவையும் மீறி இசையின் தேவையறிந்து,குறிப்பறிந்து ,வார்த்தைக்கு அழகியல் மெருகு சேர்த்து அர்த்தமும் கொடுத்து இசையை வள (வசமும்)படுத்திய கவிஞர்.

5)ஒரு படத்தின் ஜீவன் உணர்ந்து பாடல்கள் தருவதில் மிஞ்ச முடியாதவர். ஒரே வரியில் கதையை முடிப்பார்.(,கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ,சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று )

கண்ணதாசா, நீ எங்கள் ஞான தந்தைகளில் ஒருவன்.