PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
3rd May 2015, 06:03 PM
http://i59.tinypic.com/27xdnqx.jpg

Russelldvt
3rd May 2015, 06:04 PM
http://i62.tinypic.com/r0qgyv.jpg

Russelldvt
3rd May 2015, 06:05 PM
http://i58.tinypic.com/11rakaa.jpg

Russelldvt
3rd May 2015, 06:06 PM
http://i61.tinypic.com/25uprgg.jpg

siqutacelufuw
3rd May 2015, 06:07 PM
http://i60.tinypic.com/epoisy.jpg

CONGRATULATIONS Mr. LOGANATHAN for having crossed 7,000 posts.

Russelldvt
3rd May 2015, 06:07 PM
http://i62.tinypic.com/23igtue.jpg

Russelldvt
3rd May 2015, 06:10 PM
http://i57.tinypic.com/b6eerk.jpg

Russelldvt
3rd May 2015, 06:11 PM
http://i62.tinypic.com/vxgabk.jpg

Russelldvt
3rd May 2015, 06:13 PM
http://i62.tinypic.com/qn6934.jpg

Russelldvt
3rd May 2015, 06:13 PM
http://i57.tinypic.com/34xkmjm.jpg

Russelldvt
3rd May 2015, 06:15 PM
http://i57.tinypic.com/25a4ys6.jpg

Russelldvt
3rd May 2015, 06:16 PM
http://i61.tinypic.com/ket15w.jpg

Russelldvt
3rd May 2015, 06:17 PM
http://i59.tinypic.com/n566b7.jpg

Russelldvt
3rd May 2015, 06:18 PM
http://i61.tinypic.com/zxqjk3.jpg

Russelldvt
3rd May 2015, 06:20 PM
http://i61.tinypic.com/2zhr0n5.jpg

Russelldvt
3rd May 2015, 06:20 PM
http://i61.tinypic.com/9um2a0.jpg

Russelldvt
3rd May 2015, 06:22 PM
http://i57.tinypic.com/206ezbs.jpg

Russelldvt
3rd May 2015, 06:23 PM
http://i62.tinypic.com/vze8as.jpg

Russelldvt
3rd May 2015, 06:24 PM
http://i61.tinypic.com/i3x95e.jpg

Russelldvt
3rd May 2015, 06:25 PM
http://i61.tinypic.com/iggfbp.jpg

Russelldvt
3rd May 2015, 06:26 PM
http://i57.tinypic.com/2dh624g.jpg

Russelldvt
3rd May 2015, 06:27 PM
http://i57.tinypic.com/2gtqhaa.jpg

Russelldvt
3rd May 2015, 06:29 PM
http://i59.tinypic.com/30ubm1c.jpg

Russelldvt
3rd May 2015, 06:32 PM
http://i57.tinypic.com/21ylag.jpg

Russelldvt
3rd May 2015, 06:33 PM
http://i59.tinypic.com/30dfs6u.jpg

Russelldvt
3rd May 2015, 06:34 PM
http://i62.tinypic.com/20r1e6x.jpg

Russelldvt
3rd May 2015, 06:36 PM
http://i59.tinypic.com/mtxsok.jpg

Russelldvt
3rd May 2015, 06:37 PM
http://i58.tinypic.com/2nkt8xu.jpg

Russellzlc
3rd May 2015, 06:50 PM
The film industry in India is 1,000 movies a year. In the world known mainly due to the fairy-tale image "Sometimes Happy, Sometimes Sad", associated almost exclusively with dripping in gold costumes, the idyllic landscapes and specific, dance music. To the world, Indian cinema is Bollywood. Meanwhile, in the north of the country formed only 25% of films, and much richer in films cinema from the south is completely different. And just its ambassador in Poland becomes Bartosz Czarnotta, a student of political science at the University of Wroclaw, poet and author of articles in Wikipedia. With Bartosz Czarnottą talking Agnieszka Szymkiewicz.

How did it happen that you get interested in cinema, which is probably most Americans and Europeans do not have the faintest idea?

It all started with three letters - MGR. At the end of 2012 I bought a book on the Polish declined about Indian cinema and it was one article dedicated to cinema tamilskiemu. In the text the author very much space devoted someone named MGR, then for me completely unknown form. But I was intrigued enough that I began to rummage and it turned out that MGR - Maruthur Gopalan Ramachandran - it's a great star, and though he died many years ago, is eternally alive as Elvis Presley and maybe even more! He enjoys an almost fanatical love, and everyone who was first in contact with adoration for him, he can not nor comprehend nor understand the size of this love. This is indeed a unique character, a great actor who time and for me to become a teacher.

But the excitement is not only the dead, but it can - first of all - surviving actors who you've been a fan yet?

I wrote an article about MGR-from Wikipedia..........

http://swidnica24.pl/pokochal-indyjskie-kino-z-wzajemnoscia/

திரு.சைலேஷ் சார்,

போலந்து நாட்டின் மொழியில் வெளியாகும் கட்டுரையில் தலைவரைப் பற்றி அதுவும் அவர் மறைந்து 27 ஆண்டுக்கு பிறகு வெளியாகிறது என்றால் அவரது புகழ் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருப்பது நமக்கெல்லாம் பெருமை.

நீங்கள் கொடுத்துள்ள இணையதள இணைப்பைப் பார்த்தேன். அதில் போலிஷ் மொழியில் கட்டுரை வெளியாகியிருப்பது தெரிகிறது. அதை நீங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளீர்கள். உங்களுக்கு இந்திய மொழிகள் பல தெரியும் என்று எனக்குத் தெரியும், போலிஷ் மொழியும் தெரியும் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். பாராட்டுக்கள். தகவலை பதிவிட்டமைக்கு நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
3rd May 2015, 06:55 PM
அடிமைப்பெண் காவியத்தை பார்த்த அனுபவம் :

01-05-1969 அன்று இக்காவியம் வெளியாகும் சென்னை மிட்லண்ட் திரையரங்கத்தை அலங்கரிக்க, அதற்கு முந்தைய நாளான
30-04-1969 அன்று நானும் என் 9வது வகுப்பு பள்ளி தோழர்களும் சென்னை வெலிங்டன் திரையரங்கில், மறு வெளியீட்டில், அப்போது திரையிடப்பட்ட "மதுரை வீரன்" காவியத்துக்கு இரவு காட்சி கண்டு விட்டு , எங்கள் பணியினை துவக்கினோம். (பள்ளி விடுமுறை காலம் என்பதால், நாங்கள் அவரவர் வீட்டில் நண்பர் வீட்டில் தங்குவதாக
கூறி விட்டு எல்லோரும் இரவு காட்சிக்கு வந்து விட்டோம் ) .

அப்போதைய சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களின் வழிமுறைகளின்படி, சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒரு பொறுப்பினை ஏற்றுக்கொண்டன. சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியில் இயங்கி வந்த, நான் சார்ந்திருந்த எம். ஜி. ஆர். மன்ற அமைப்பின் சார்பில் வழக்கம்போல், இதற்கு முன்பு அதே மிட்லண்ட் அரங்கில் வெளியான 'ஒளி விளக்கு' காவியத்தின் வண்ண ஸ்டில்ஸ்களை ஒட்டி பெரிய ஸ்டார் ஒன்றை தயார் செய்து திரையரங்க நுழைவு வாயிலில் தொங்க விட்டோம். பிறகு, கையால் வரையப்பட்ட மக்கள் திலகத்தின் பிரம்மாண்டமான பேனர்களுக்கு மாலைகள் அணிவித்து மகிழ்ந்தோம்.

இந்த காவியத்தை காண வந்த ரசிக பெருமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி ஆனந்தம் அடைந்தோம்.

பின்னர் மதியம் காட்சியில், எனது பள்ளித்தோழர்களுடன் இந்த காவியத்தை கண்டு களிக்கும் பாக்கியத்தை பெற்றோம். திரையில் நமது பொன்மனச்செம்மல் அவர்கள் முதன் முதலில் தோன்றியவுடன் ரசிகர்களின் வாழ்த்து முழக்கங்கள் விண்ணை பிளந்தன. தீப ஆராதனை ஒரு புறம், புரட்சி நடிகர் வாழ்க , மக்கள் திலகம் வாழ்க என்ற கோஷம் மறுபுறம். வண்ண உதிரிபூக்கள் TITLE காட்டியதில் தொடங்கி நம் மக்கள் திலகம் திரையில் முதன் முதலில் தோன்றும் காட்சி வரை வீசிய வண்ணம் இருந்த ரசிகர்கள் இன்னொரு புறம் உற்சாக ஊற்றாம் நம் காவிய நாயகனை கண்டவுடன் ஆனந்த நடனம் ஆடும் ரசிகர்கள் கூட்டம் வேறு ஒரு புறம். புதுமையான முறையில், நமது நடிகமன்னன் எம். ஜி. ஆர். அவர்கள் ஒற்றைக்காலில் வலையின் மீது வில்லன் அசோகனிடம் வாள் போரிடும் சண்டைக் காட்சி, வலையின் கீழே வரிசையாக குத்தீட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. வலையை இழுத்து பிடித்திருந்த விதத்தில் இருவரும் எம்பி எம்பி குதித்து சண்டை போடும் போது வலையின் அடிப்பகுதி அந்த கூர்மையான குத்தீட்டிகளை தொட்டு விட்டு வரும். பார்ப்பதற்கே மயிர்க்கூச்செறியும் இந்த சண்டை காட்சி வேறு எந்த படத்திலும் அதுவரை காணப்படாத புதுமைக்காட்சியாகும். இந்த காட்சியில் ரசிகர்கள் உணர்ச்சியின் எல்லைக்கே சென்று ஆர்ப்பரித்து பலத்த கைத்தட்டலும், விசில் சப்தமும் திரையரங்கை அதிர வைத்தது.

முதல் பாடல் "அம்மா என்றால் அன்பு" என்று நடிகை ஜெயலலிதா

http://i62.tinypic.com/ml5v14.png

தனது சொந்த குரலில் பாடிய பாடலின்போது அமைதியாய் இருந்த ரசிகர் கூட்டம்,
பின்பு எதிரின்னா என்ன என்று நம் மக்கள் திலகம் நடிகை ஜெயலலிதாவை பார்த்து போது, அதற்கு அவர் "நீங்க இருந்தா தங்கள் வாழ்வு அழிந்து விடும் - ன்னு நினைக்கிறாங்களே அவங்கதான் எதிரி என்று விளக்கம் அளித்தபின்பு, நம் பொன்மனச்செம்மல் அவர்கள் "நான் அப்படி நினைக்கலேயே" என்று கூறுவதும், மீண்டும் நடிகை ஜெயலலிதா அவர்கள் "எல்லோரும் உங்களை மாதிரி இருப்பாங்களா" என்று வினவுவதும், அதற்கும் பதிலாக நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் "அப்படின்னா, அந்த எதிரியை பார்த்து, நான் உனக்கு எதிரி இல்லை என்று சொல்லிட்டு வந்திடறேன் " என்று பதிலுரைக்கும் போதும்,

http://i61.tinypic.com/xfe2xk.jpg

பலத்த கைத்தட்டல்களை எழுப்பி, நகைச்சுவை உணர்வுடன் இந்த காட்சியை ரசித்தது.

தாய்மையை பெருமைபடுத்தும் விதத்தில் பின்பு வரும் "தாயில்லாமல் நானில்லை" என்ற பாடல்
http://i58.tinypic.com/oqbx1w.jpg
படமாக்கப்பட்ட விதமும், அந்த பாடலுக்கு முன் பண்டரிபாய்க்கும், நம் மக்கள் திலகத்துக்கும் நடைபெறும் உரையாடல் காட்சிகளும் நெஞ்சை தொட்டன. பெண்கள் கூட்டம் இந்த காட்சியை கண்டு உணர்ச்சிவசப்பட்டதை காண முடிந்தது. ONCE MORE கேட்டது ஒரு ரசிகர் கூட்டம். "தாயில்லாமல் நானில்லை" என்ற அந்த பாடல் தற்போது பலரது செல்போன்களில் RING TONE ஆக உள்ளது. நானும் எனது செல்போனில் இந்த பாடலைத்தான் RING TONE ஆக வைத்துள்ளேன்.

அடுத்த பாடல் " காலத்தை வென்றவன் நீ"

http://i57.tinypic.com/35aprwh.jpg

என்ற பாடலில் " ஓயாமல் உழைப்பதில் சூரியன் நீ " என்ற வரி இடம் பெறும் போது, கரங்கள் பல உதய சூரியன் வடிவில் குவிக்கப்பட்டு அதில் நம் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் நடுநாயகமாய் ஸ்டைல் ஆக தோற்றமளித்த காட்சியில் ரசிகர்களின் பலத்த ஆரவாரம், தலைவா என்ற கோஷம், கை தட்டல்கள் இவைகளால் திரையரங்கம் மீண்டும் அதிர்ந்தது.

"ஆயிரம் நிலவே வா" என்ற மென்மையான காதல் பாடல்
http://i59.tinypic.com/34doaoo.jpg
ஜெய்ப்பூர் அரண்மனையிலும், அது கண்ணாடி மாளிகையில் படமாக்கப்பட்ட விதமும் கண் கொள்ளா காட்சி. இந்த பாடல் மூலம், திரு.எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த காட்சி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

பிறகு வரும் பாலைவனப்பாடல் "ஏமாற்றாதே ஏமாற்றாதே" யில்,
http://i61.tinypic.com/vpdv61.jpg
அதிர வைக்கும் இசைத்திறனை முழுமையாக வெளிப்படுத்தி இருப்பார் திரை இசைத்திலகம் கே. வி. மகாதேவன். இந்த பாடல் நடனக்காட்சி இப்போதும் பேசப்படுவது ஒரு தனிச்சிறப்பு.

"உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது' பாடல் காட்சியில்,
http://i61.tinypic.com/snf79w.jpg
" நீ கடவுளை பார்த்தது கிடையாது, அவன் கருப்பா சிவப்பா தெரியாது, இறைவன் ஒருவன் இருக்கின்றான், இந்த "ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்" என்ற வரிகள் வரும் பொழுது, வேங்கையன் அழைத்து வரும் கூட்டம் தங்கள் முகத்திரையை விலக்கும் காட்சி மூலம், தான் சார்ந்திருந்த இயக்கமான, பேரறிஞர் அண்ணா அவர்களின் தி. மு. க வின் மீது கொண்ட ஈடுபாடும், ஏழைகள் நலனில் அக்கறை கொண்டவர் இவர் போல் எவரும் இருக்க முடியாது என்பதும் நன்கு புலனாகிறது.

இறுதி காட்சியில், நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் சிங்கத்துடன் மோதி

http://i60.tinypic.com/a9tp1k.jpg

போரிடும் காட்சி கண்டு மெய்சிலிர்த்தோம். இந்த காட்சி பற்றி இந்தி நடிகர் திரு. ராஜ் கபூர் கருத்து தெரிவிக்கையில், :டூப் இல்லாத நிஜமான "சிங்க சண்டை" யை வியந்து பாராட்டி, இது போல் நடிக்க தன்னால் கூட முடியாது என்று கூறினார்.

மொத்தத்தில், "அடிமைப்பெண்" காவியம் நம் தமிழக ரசிகர்களை மட்டுமல்ல மொத்த இந்திய திரைப்பட ரசிகர்களையும் வியக்க வைத்தது என்றால் அது மிகையாகாது. .

சிறப்பம்சங்கள் :

1. "பிலிம்பேர்" பத்திரிகை, 1969ம் ஆண்டின் சிறந்த தமிழ் படமாக "அடிமைப்பெண்" காவியத்தை தேர்வு செய்தது. அது தொடர்பான விழா 19-04-1970 ஞாயிற்று கிழமை இரவு மும்பை சண்முகானந்தா ஹாலில் நடைபெற்றது. அது சமயம், அப்ப்போது இந்திய செய்தி துறை ராஜாங்க மந்திரியான ஐ. கே. குஜ்ரால் (பின்னாளில் இவர் பாரத பிரதமராகவும் சிறிது காலம் பதவி வகித்தார்) அவர்கள் நம் மக்கள் திலகத்துக்கு நினைவுப்பரிசினை வழங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பங்கேற்ற மறைதிரு. ராஜ்கபூர் அவர்கள் நம் பொன்மனசெம்மலை ஆரத்தழுவி தன் அன்பை வெளிப்படுத்தினார்.

http://i60.tinypic.com/20fvm6f.jpg

இந்த விழாவில், வருவாய் இல்லாத நலிந்த இந்தி கலைஞர்களுக்கு உதவும் வகையில், ரூபாய் 15,000/- நன்கொடை வழங்கியபொழுது, பெரும் ஆரவாரத்துடன், பலத்த கைதட்டல் பெற்ற நம் மக்கள் திலகத்தை, இந்தி பட உலகினர் அனைவரும் வரவேற்று, பாராட்டி, தங்கள் மகழ்சியை வெளிபடுத்தி, வாழ்த்தினர்.

நம் பொன்மனச்செம்மலின் கொடைத்தன்மையை பற்றி கேள்விப்பட்டிருந்த வட மாநிலத்தவர் பலருக்கு இந்த செய்கையானது பிற மொழிக் கலைஞர்கள் மேல் நம் பொன்மனச்செம்மலுக்கு உள்ள பற்றினையும், அன்பினையும், ஈடுபாட்டினையும் வெளிப்படுத்தியது.

மேற்கூறிய இந்த இனிய சம்பவங்களையும், நினைவுகளையும், , அப்போதே, எனது நண்பரும், மும்பை மாதுங்கா பகுதியில் இயங்கி வந்த மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்ற செயலாளார் தஞ்சை கே. எஸ்.சோமசுந்தரம் அவர்கள், பின்னர் மகிழ்ச்சியுடன், என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த "பிலிம்பேர்" விருது நிகழ்ச்சியை பின்னர், சென்னை திரையரங்குகளில், இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்கள் நடித்த "சச்சா ஜூட்டா"

2. 1969ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த படமாக "அடிமைப்பெண்" தேர்ந்தெடுக்கப்பட்டது.

3. ஜெய்ப்பூர் அரண்மணை மற்றும் கண்ணாடி மாளிகையில் முதலும், கடைசியுமாக படப்பிடிப்பு நடைபெற்றது இந்த காவியத்துக்கு மட்டுமே !

4. 'பனிப்புயல்' ஒன்றை செயற்கையாக உருவாக்கி அது இயற்கையானது போல் காட்டி, ரசிகர்களை பிரமிக்க வைத்த காவியம் "அடிமைப்பெண்"

5. உயர் வகுப்பு நுழைவு சீட்டு மதிப்பு ரூபாய் 2.93 அப்போது ரூபாய் 100க்கு (இன்றைய மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று யூகித்து கொள்ளுங்கள்) விற்கப்பட்டு தமிழ் திரையுலகினரை திகைக்க வைத்த காவியம் தான் "அடிமைப்பெண்'

6. ஒரு படத்தின் பாடல் காட்சியில் (நான் ஆணையிட்டால் படத்தில் இடம் பெற்ற ' நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்' என்ற பாடலில்) "வருகிறது" என்று காண்பிக்கப்பட்ட பெருமைக்குரிய காவியம் அடிமைப்பெண்.

8. முன்பதிவு ஆரம்பித்த இரண்டே நாட்களில், சென்னையில் திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் 100 காட்சிகள் முதன் முதலில் அரங்கு நிறைந்த காவியம் "அடிமைப்பெண்"




இதர தகவல்கள் :


1. இந்த காவியம் "கோஹி குலோம் நஹி" என்ற பெயரில் இந்தியில் ட ப்பிங் செய்யப்பட்டு மும்பை நகரில் உள்ள 'ரிவோலி' தியேட்டரில் வெளியிடப்பட்டு, கோலாகலமாக தொடக்க விழா கொண்டாடப்பட்டது. மும்பை நகரில் வெற்றிகரமாக ஓடிய வெகு சில தமிழ் படங்களில் பிரதான இடம் பெற்றது.

2. கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் மெஜெஸ்டிக், சாரதா, அபேரா ஆகிய 3 திரையரங்குகளில் 80 நாட்களும், நவ்ரங் அரங்கில் 75 நாட்களும், மைசூர் நகரில் ராஜ்மஹால் அரங்கில் 75 நாட்களும், ஷிமோகாவில் 60 நாட்களும் வெற்றிகரமாக ஓடி, அண்டை மாநிலத்திலும் "வெற்றிக்கொடி நாட்டிய வேங்கையன்" என்று பரபரப்பாக பேச வைத்த காவியம் அடிமைப்பெண்.

3. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சக்தி அரங்கில் 70 நாட்களும், எர்ணாகுளம் சென்ட்ரல் அரங்கில் 70 நாட்களும், கொல்லம் ( QUILON) கவிதா அரங்கில் 70 நாட்களும், கோழிக்கோடு நகரில் 68 நாட்களும், திருச்சூரில் 55 நாட்களும் ஓடி ஒரு புதிய வரலாறு படைத்தது.

4. தமிழகமெங்கும் 56 அரங்குகளிலும், கர்நாடக மாநிலத்தில் 6 அரங்குகளிலும், கேரளா மாநிலத்தில் 5 அரங்குகளிலும், முதல் வெளியீட்டில் "அடிமைப்பெண்" காவியம் திரையிடப்பட்டது. அவற்றில் 16 அரங்குகளில் 100 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், 16 அரங்குகளில் 75 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், 35 அரங்குகளில் 50 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஓடியது. ;

5. மறு வெளியீடுகளிலும், தமிழகமெங்கும் ஒரு புது சகாப்தத்தை உருவாக்கிய காவியம் என்ற பெருமையை பெற்ற மாபெரும் காவியம்.
சமீபத்திய உதாரணம் : மதுரை சென்ட்ரல் அரங்கில்,

http://i59.tinypic.com/4h7ejm.jpg

1.09,000 ரூபாய் வசூலித்து ஒரு பெரிய புரட்சி செய்து மதுரை மாநகரில் இதுவரை எந்த படத்துக்கும் இது போல் கூட்டம் அலை மோதியதில்லை என்ற எழுச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்ட்ரல் அரங்கில் ஞாயிறு அன்று அரங்கு நிறைந்து, ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மேலும் 100 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, நின்று கொண்டே இந்த காவியத்தை கண்டு களித்தனர்.

மேலும், 26-10-2007 அன்று சென்னை மெலோடி அரங்கில் திரையிடப்பட்ட பொழுது, பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய அடைமழை கொட்டிய ,போதும் அரங்கு நிறைந்து மக்கள் டிக்கெட் கிடைக்காமல் சோகத்துடன் திரும்பிய காட்சி இன்னும் நெஞ்சை விட்டு அகலாதிருக்கிறது.

6. "அம்மா என்றால் அன்பு" என்ற பாடலை முதன் முதலில் மறைதிரு. டி. எம். எஸ். அவர்கள் பாடி பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

7. "அடிமைப்பெண்" காவியத்தை பற்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கருத்து : தனி ஒரு நடிகர் இவ்வளவு பெரிய அளவில் படம் எடுத்திர்ப்பதை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். இதில் எவ்வளவு பெரிய ரிஸ்க் இருக்கிறது தெரியுமா, நான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க மாட்டேன். ஆதாரம் : 1969 பொம்மை மாத இதழ்.


இறுதி குறிப்பு :

பேரறிஞர் அண்ணா அவர்கள் காலமானதை தொடர்ந்து, 07-02-1969 அன்று ஊட்டியில் நடக்கவிருந்த "அடிமைப்பெண்" படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,

ஹேட்ஸ் ஆஃப் சார். அடிமைப்பெண் படத்தைப் பற்றிய விரிவான தகவல்கள், தங்களின் படம் பார்த்த அனுபவங்கள், படத்தின் சாதனைகள், இந்தியில் நலிந்த கலைஞர்களுக்கு தலைவர் உதவி வழங்கியது, ஆதாரபூர்வ செய்திகள், படங்கள், பொருத்தமான ஸ்டில்கள் என்று பெரிய விருந்தே படைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.

எனது கணிப்புப்படி தகவல்களை நினைவுபடுத்தி, அதை கோர்வையாக தொகுத்து, டைப் செய்து, ஸ்டில்களையும் புகைப்படங்களையும் பொருத்தமான இடங்களில் போட்டு....குறைச்சலாக பார்த்தாலும் இந்தப் பதிவுக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரரின் பக்தர் என்பதை தங்கள் உழைப்பின் மூலம் நிரூபித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.

சமீபத்தில் மதுரையில் அடிமைப்பெண் படம் திரையிடப்பட்டு (அதுவும் அடிக்கடி திரையிடப்பட்டும்) ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வசூலைக் குவித்துள்ளது என்றால் படம் வெளியாகி 46 ஆண்டுகள் கழித்தும் இப்படி என்றால், வேங்கையனின் பாய்ச்சலை வியந்து பார்த்து வணங்குவதைத் தவிர, வேறென்ன செய்ய? இதுவே, ஏ.சி. திரையரங்கமாக இருந்தால் கட்டணம் இருமடங்காக இருந்திருக்கும். வசூல் ரூ.2 லட்சத்தைத் தாண்டியிருக்கும் என்பதற்கு ஏ.சி. அல்லாத தியேட்டரில் வசூலான ரூ.1 லட்சத்து 9 ஆயிரமே சாட்சியாக உள்ளது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
3rd May 2015, 06:57 PM
1980 பாராளுமன்ற தேர்தலையடுத்து நமது புரட்சித்தலைவரின் புனித ஆட்சி, காரணமின்றி கலைக்கப்பட்டது. அப்போது, திருவொற்றியூரில் இயங்கி வந்த எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர் குழுவினை சார்ந்த நானும், இதர உறுப்பினர்களும், மக்கள் திலகத்தை தலைமை கழகத்தில் நேரில் சந்தித்து, துரோகிகள் பலர் இயக்கத்தை விட்டு வெளியேறிய நிலையில், இதய தெய்வம் தலைமையில் நம்பிக்கை வைத்து, தியாகராயர் கல்லூரி மாணவர்கள் பலரை கழகத்தில் இணைத்து, அவரின் தலைமயில் நம்பிக்கை வைத்து எங்கள் முழுமையான ஆதரவினை தெரிவித்தோம். அந்த சமயத்தில், அவரிடம், என்னுடைய நோட்டு புத்தகத்தில் வாங்கப்பட்ட கையெழுத்து :

http://i59.tinypic.com/2lwm79y.jpg

"உழைப்பவரே உயர்ந்தவர்" என்ற உயரிய தத்துவத்தையும், தான் வணங்கும் தெய்வமாம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நாமம் வாழ்க என்றும் தனது கைப்பட எழதி எனக்கு வழங்கியதை போற்றி பொக்கிஷமாக பாதுகாத்து வரும் இந்த வேளையில், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதமான நாளில், தொழிலாள தோழர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து அதனை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

திரு.செல்வகுமார் சார்,

உழைப்பாளர் தினத்தையொட்டி தலைவரின் கையெழுத்தை எல்லாரின் பார்வைக்கும் பரிசாக வழங்கியிருக்கிறீர்கள். நன்றி.

1980-ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி புரட்சித் தலைவர் அரசு காரணமின்றி கலைக்கப்பட்டது. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி திரைப்படத்தை தலைவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அரசு கலைக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்போதும் தலைவர் நிலை குலையவில்லை. சமையல் கலைஞர் மணி என்பவரை அழைத்து ‘என்ன ஸ்வீட் இருக்கிறது?’ என்று கேட்டு வீட்டில் இருந்த லட்டுகளை வரவழைத்து எல்லாருக்கும் கொடுத்திருக்கிறார். முழு படத்தையும் அமைதியாக பார்த்து ரசித்து பாகவதரின் நடிப்பையும் பாடல்களையும் பாராட்டியிருக்கிறார். இந்த தகவல்களை திரு.மணியன் பதிவு செய்திருக்கிறார்.

இதயம் பேசுகிறது வார இதழில் நம்புங்கள் நாராயணன் என்று ஒரு ஜோதிடர் ராசிபலன்கள் எழுதுவார். அவர் ‘தலைவரின் ஜாதகப்படி இப்போது நேரம் சரியில்லை. அதிமுக ஆட்சிக்கு ஆபத்து’ என்று ஆட்சி டிஸ்மிஸ் ஆவதற்கு முன்பே கூறியிருந்தார். டிஸ்மிஸ் ஆன பிறகு, நம்புங்கள் நாராயணனை தோட்டத்துக்கு வரும்படி போனில் அழைப்பு சென்றிருக்கிறது. தயக்கத்துடனேயே திரு.நாராயணன் போயிருக்கிறார்.

தலைவர் அவரை சாப்பிடச் சொல்லி உபசரித்து, குடும்ப விவரங்கள் கேட்டறிந்து ஒரு தட்டில் ரூ.5,001 பணம் வைத்து (80-ம் ஆண்டில் இது பெரிய தொகை) நாராயணனிடம், ‘உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்’ என்று சொல்லி கொடுத்திருக்கிறார். தலைவர் மறைந்த பிறகு ஒரு பேட்டியில் இதை திரு. நாராயணன் தெரிவித்திருந்தார்.

அரசு டிஸ்மிஸ் ஆன பிறகு 41வது நாளில் மார்ச் 31ம் தேதியன்று உங்களுக்கு நோட்டு புத்தகத்தில் தலைவர் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்ததும் மேலே சொன்ன நினைவுகள் வந்து கண் கலங்கினேன். இப்படி, எந்த சூழலிலும் நிலைகுலையாத உறுதியோடு, தனது ஆட்சி டிஸ்மிஸ் ஆகும் என்று சொன்னவரின் திறமையையும் பாராட்டி பரிசளித்து , நெருக்கடியான சூழலிலும் பார்க்க வந்த உங்களைப் போன்ற தொண்டர்களையும் சந்தித்து கையெழுத்து போட்டு கொடுக்கிறார் என்றால், அதனால்தான் அவர் பொன்மனச் செம்மல்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
3rd May 2015, 07:00 PM
அடிமைப் பெண் திரைப்படம் வெளியான நாள் மற்றும் உழைப்பாளர் தினத்தையொட்டி செய்திகள், படங்கள், விளம்பரங்கள், ஆவணங்களை வெளியிட்ட திரு.குமார் சார், திரு.வினோத் சார், திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், திரு. முத்தையன் அம்மு, திரு.வி.பி.சத்யா ஆகியோருக்கு நன்றி.
கோவை டிலைட்டில் நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டுள்ள தகவல் மற்றும் கவிஞர் திரு.முத்துலிங்கம் அவர்கள் புரட்சித் தலைவரைப் பற்றிய நூலை உருவாக்கி வருவது குறித்தும் தகவல் தெரிவித்த திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு சிறப்பு நன்றி.

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
3rd May 2015, 07:02 PM
தின இதழ் -03/05/2015
http://i61.tinypic.com/2n6enwj.jpg
http://i62.tinypic.com/9jdill.jpg




குறிப்பு: நடிகை சரோஜாதேவி பேசியபடி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்
தொழிலாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளவர் என்பது உண்மையே.

ஆனால் பிரசுரம் ஆன செய்தியில் தவறு உள்ளது. வாஹினி படபிடிப்பு நிலையத்தில்
தீ விபத்து விபரம் அறிந்ததும்,தொழிலாளர்கள் பார்த்துக் கொள்ளும்படி செய்யாமல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நேரில் ஆஜராகி, தொழிலாளர்கள் உதவியுடன் தீயை அணைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தபின் நள்ளிரவில் வீடு திரும்பினர். பின்னர் காலையில் மறுபடியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தயாரிப்பாளர் நாகிரெட்டி காலையில் விவரம் அறிந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த நெருக்கமான உறவு, நட்பு, அன்பின் அடையாளம்தான் இந்த செயல்பாடு.

திரு.லோகநாதன் சார்,

தாங்கள் குறிப்பிட்டுள்ளது மிகச்சரி. வாஹினி படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து பற்றி அறிந்ததும் மக்கள் திலகம் அங்கு சென்று உதவியதும் அதற்கு திரு.நாகிரெட்டியார் நன்றி தெரிவித்ததும் பத்திரிகைகளில் வந்து எல்லாரும் அறிந்த செய்தி.

திருமதி. சரோஜாதேவி அவர்களுக்கும் இது தெரிந்திருக்கும். எல்லாருக்கும் தெரிந்ததுதானே என்று அவர் கூறாமல் இருந்திருக்கலாம். அல்லது அவர் கூறியும் நாளிதழில் அந்த தகவல் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். அப்படி பேசி வெளியிடாமல் இருந்திருந்தால், வேண்டுமென்று செய்திருக்க மாட்டார்கள். மேலே உள்ள படத்துக்கு கீழே பாருங்களேன்.

‘சரோஜா தேவி பேச்சு’ என்று இருக்க வேண்டியதற்கு பதிலாக ‘ச ர ஜோ ஜா தேவி பேச்சு’ என்று தவறாக அச்சாகியிருக்கிறது. என்னத்தைச் சொல்ல.... ? பாவம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
3rd May 2015, 07:04 PM
http://i58.tinypic.com/1z1vec5.jpg

வார இதழ்கள், நாளிதழ்களில் தலைவரைப் பற்றிய என்ன செய்தி வந்தாலும் அதை தவறாமல் பதிவிட்டு, 7,000 பதிவுகள் கண்டு தலைவரின் புகழ் பாடி வரும் திரு.லோகநாதன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
3rd May 2015, 07:10 PM
http://i62.tinypic.com/2h5tz6p.jpg


அடிமைப்படுத்தும் பெண்

அடிமைப்பெண் திரைக்காவியம் தலைவரின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. நம் எல்லாருக்குமே மனதுக்கு எழுச்சியூட்டும் காவியம். படத்தைப் பற்றிய ஆதாரபூர்வ அரிய தகவல்கள், சிறப்புகளை பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள் அருமையாக எழுதியுள்ளார். முழுபடத்தைப் பற்றியும் ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பையும் எழுத வேண்டுமானால் நமது திரியின் இந்த பாகம் போதாது. நேரம் கிடைக்கும்போது சிறிது சிறிதாக பார்ப்போம்.

படத்தின் ஹைலைட்களான ஈட்டி முனைகளுக்கு மேல் கட்டப்பட்ட வலையில் ஒரு காலை கட்டியபடி அசோகனுடன் தலைவர் போடும் வாள் சண்டை, உடலை பிய்த்து எறியும் வகையில் இரு கைகளும் கட்டப்பட்டு அந்த கயிறு பெரிய உருளையுடன் பிணைக்கப்பட்டு இழுக்கப்படும்போது திரண்டிருக்கும் கட்டுடலை காட்டியபடி கைகளை ஒன்று சேர்த்து கயிறை அறுந்து விழச் செய்யும் இடம் (தியேட்டரில் இந்தக் காட்சியின் போது சூடம் காட்டப்படாமல் நான் பார்த்த காட்சிகள் குறைவு) மனோகருடன் மோதும் காட்சி, பின்னர் அரண்மனையில் இருந்து தப்பிச் செல்லும் காட்சியில் தலைவரின் சுறுசுறுப்பு,பாடல்கள், ஜஸ்டினுடன் சண்டை, கிளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை என்று ஒவ்வொன்றையும் பிரித்து மேய ஆசை.

இப்போதைக்கு, நம் எல்லாரையும் ‘கவர்ந்த தாயில்லாமல் நானில்லை..’ படத்தின் பாடலுக்கு முன் வரும் காட்சியை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் திரைப்படத்தில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம் இழையோடும். (தலைவர் நடித்த தாயின் மடியில் படத்திலும் ‘தாயின் மடியில் தலை வைத்திருந்தால்... பாடல் உட்பட) ஆனால், தாயைப் பற்றி உற்சாகமாக, பாடலை கேட்டாலே தாயைப் பற்றி பரவசமாக மகிழ்ச்சியாக நினைக்கத் தூண்டும் பாடல் ‘தாயில்லாமல் நானில்லை...’.

பாடலுக்கு முன்பு ‘உங்கள் தாயை காட்டுகிறேன்.. ’என்று தலைவரை செல்வி.ஜெயலலிதா அவர்கள் அழைத்துச் செல்வார். தாயை அவர் காட்டியதும் பசுவைக் கண்ட கன்று போல ‘அம்மா.. அம்மா...’ அழைத்தபடியே கைகளை உயரே தூக்கி கும்பிடுவார் தலைவர். தாயிடம் தனக்குள்ள பக்தியை காட்டியிருப்பார் என்று கூட சொல்ல முடியாது. உண்மையாகவே உணர்ச்சி வசப்பட்டு கும்பிட்டிருக்கிறார்.

அந்தக் காட்சியில், மலைப்பகுதியில் எதிர் திசையில் உள்ள தாயைப் பார்க்கும் ஆர்வத்தையும் அவசரத்தை காட்டும் வகையில் 60 அடி உயரமுள்ள மலை உச்சியில் இருந்து கீழே ஆற்றில் குதிப்பதாக காட்சி. (இந்தக் காட்சியில் தனக்கு டூப்பாக நடித்த ஸ்டண்ட் நடிகருக்கு படத்துக்காக பேசியதை தவிரவும் தனிப்பட்ட முறையில் பணம் அளித்திருக்கிறார் தலைவர். 25 ஆண்டுகளுக்கு முன் ‘தேவி’ வார இதழில் எஸ்.விஜயன் எழுதிய தொடரில் அந்த நடிகரின் பேட்டியை வெளியிட்டிருந்தனர். பேசிய பணத்தை கொடுத்தாலே போதும் என்றாலும் சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்கிறார் என்றால் அது உழைப்பாளிகளுக்கு தலைவர் தரும் மரியாதை. அப்படி கூடுதலாக பணம் கொடுத்தது கூட யாருக்கும் தெரியாது. தலைவர் மறைந்த பிறகு அந்த நடிகர் பேட்டியில் சொல்லித்தான் தெரிந்தது.) உயிரை துச்சமாக மதித்து மலையில் இருந்து குதிக்கும் அளவுக்கு தாய் மீதான அன்பை வெளிப்படுத்தும் காட்சி.

தாய் பண்டரிபாயை சந்திக்கும்போது அவர் முகத்தைக் காட்ட மறுப்பார். நமது நாட்டைச் சேர்ந்த பெண்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்ட பிறகுதான் என் முகத்தை பார்க்கலாம் என்று நிபந்தனை விதிப்பார். அப்போது, தலைவர் பண்டரிபாயின் காலைக் கட்டிக் கொண்டு அழும்போது, அவரது காலில் சங்கிலி பிணைக்கப்பட்டிருப்பதை பார்ப்பார். உடனே அவரின் அழுகை மாறி, முகத்தில் ஆத்திரம் கொப்பளிக்க கையாலேயே சங்கிலியை அறுத்தெறிய முயற்சிப்பார். தாயின் காலில் விலங்கு மாட்டப்பட்டிருந்தால் யாருக்கும் இப்படித்தான் கோபம் வரும். சுத்தியல், கத்தியை தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்த உணர்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் தலைவர். அவரை, ‘நமது நாட்டின் அடிமைப்பட்டிருக்கும் பெண்களின் விலங்கொடித்து கடைசியாக என் விலங்கை அகற்று’ என்று பண்டரிபாய் தடுத்து விடுவார். அதற்கு கட்டுப்பட்டு பிறகு தாயிடம் இருந்து விடைபெறுவார் தலைவர்.

அப்போது அவர் சொல்லும் வார்த்தைகள் நமது நெஞ்சை பிசையும். அதை சொல்லும்போது அழுதபடியே கும்பிடுவார். இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என்னை அறியாமல் என் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியிருக்கிறது. நான் ஏதோ தலைவரின் நடிப்பை புகழ வேண்டும் என்பதற்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. இந்தக் காட்சியை பார்த்த நம் எல்லாருக்குமே இந்த உணர்வு இருந்திருக்கலாம்.

காட்சியின் சூழலும் சொல்லும் வார்த்தைகளும் அப்படி. தன் தந்தையைக் கொன்று நாட்டை அடிமைப்படுத்தியிருக்கும் சர்வாதிகாரியை வீழ்த்தி நாட்டையும் மக்களையும் காக்க வேண்டும். அந்த சபதத்துக்காக தன் மகனைக் கூட சிறுவயது முதல் பார்க்காமல் தன்னையே வறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தாய். தலைவர் ஏற்றுள்ள வேங்கையன் பாத்திரமோ தனது கடமைகளையும் பொறுப்புகளையும் இப்போதுதான் உணரவே செய்கிறது. சர்வாதிகாரியை வீழ்த்த ஆள், அம்பு, சேனைகளை திரட்ட வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ? அதுவரை தாய் இருக்க வேண்டும். படை திரட்டி சர்வாதிகாரியுடன் நடக்கும் போரில் தனது உயிரே கூட போகலாம். அதன் பிறகு தாயை பார்க்கவே முடியாமல் போய்விடலாம்.

இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான காட்சியின் சூழலில் தலைவரின் நடிப்பும் சொல்லும் வார்த்தைகளும் நெஞ்சைப் பிழிவது இயற்கைதானே. உருக்கமான அந்தக் காட்சியில் அழுதுகொண்டே கும்பிட்டபடி தலைவர் சொல்லும் வார்த்தைகள்...

‘‘அம்மா... என்ன மறந்துடாதீங்கம்மா’’

இனி எப்போது பார்ப்போமோ? என்ற ஏக்கத்துடன் கூடிய உள்ளக் குமுறலின் வெளிப்பாடாய் வார்த்தைகள்.

உள்ளே உயிர் வளர்த்து, உதிரத்தால் பால் கொடுத்து ஆளாக்கிய அன்னையின் பாசத்துக்கு அடிமையாகாதார் யார்?

தலைவரின் அடிமைப்பெண்.... நம்மை அடிமைப்படுத்தும் பெண்.... தாய்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
3rd May 2015, 07:20 PM
sir nice writing i given you tube link for that particular scene starts from 1.04 mins to 6.04 mins

https://www.youtube.com/watch?v=5XU6P2sdLuI



http://i62.tinypic.com/2h5tz6p.jpg


அடிமைப்படுத்தும் பெண்

அடிமைப்பெண் திரைக்காவியம் தலைவரின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. நம் எல்லாருக்குமே மனதுக்கு எழுச்சியூட்டும் காவியம். படத்தைப் பற்றிய ஆதாரபூர்வ அரிய தகவல்கள், சிறப்புகளை பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள் அருமையாக எழுதியுள்ளார். முழுபடத்தைப் பற்றியும் ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பையும் எழுத வேண்டுமானால் நமது திரியின் இந்த பாகம் போதாது. நேரம் கிடைக்கும்போது சிறிது சிறிதாக பார்ப்போம்.

படத்தின் ஹைலைட்களான ஈட்டி முனைகளுக்கு மேல் கட்டப்பட்ட வலையில் ஒரு காலை கட்டியபடி அசோகனுடன் தலைவர் போடும் வாள் சண்டை, உடலை பிய்த்து எறியும் வகையில் இரு கைகளும் கட்டப்பட்டு அந்த கயிறு பெரிய உருளையுடன் பிணைக்கப்பட்டு இழுக்கப்படும்போது திரண்டிருக்கும் கட்டுடலை காட்டியபடி கைகளை ஒன்று சேர்த்து கயிறை அறுந்து விழச் செய்யும் இடம் (தியேட்டரில் இந்தக் காட்சியின் போது சூடம் காட்டப்படாமல் நான் பார்த்த காட்சிகள் குறைவு) மனோகருடன் மோதும் காட்சி, பின்னர் அரண்மனையில் இருந்து தப்பிச் செல்லும் காட்சியில் தலைவரின் சுறுசுறுப்பு,பாடல்கள், ஜஸ்டினுடன் சண்டை, கிளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை என்று ஒவ்வொன்றையும் பிரித்து மேய ஆசை.

இப்போதைக்கு, நம் எல்லாரையும் ‘கவர்ந்த தாயில்லாமல் நானில்லை..’ படத்தின் பாடலுக்கு முன் வரும் காட்சியை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் திரைப்படத்தில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம் இழையோடும். (தலைவர் நடித்த தாயின் மடியில் படத்திலும் ‘தாயின் மடியில் தலை வைத்திருந்தால்... பாடல் உட்பட) ஆனால், தாயைப் பற்றி உற்சாகமாக, பாடலை கேட்டாலே தாயைப் பற்றி பரவசமாக மகிழ்ச்சியாக நினைக்கத் தூண்டும் பாடல் ‘தாயில்லாமல் நானில்லை...’.

பாடலுக்கு முன்பு ‘உங்கள் தாயை காட்டுகிறேன்.. ’என்று தலைவரை செல்வி.ஜெயலலிதா அவர்கள் அழைத்துச் செல்வார். தாயை அவர் காட்டியதும் பசுவைக் கண்ட கன்று போல ‘அம்மா.. அம்மா...’ அழைத்தபடியே கைகளை உயரே தூக்கி கும்பிடுவார் தலைவர். தாயிடம் தனக்குள்ள பக்தியை காட்டியிருப்பார் என்று கூட சொல்ல முடியாது. உண்மையாகவே உணர்ச்சி வசப்பட்டு கும்பிட்டிருக்கிறார்.

அந்தக் காட்சியில், மலைப்பகுதியில் எதிர் திசையில் உள்ள தாயைப் பார்க்கும் ஆர்வத்தையும் அவசரத்தை காட்டும் வகையில் 60 அடி உயரமுள்ள மலை உச்சியில் இருந்து கீழே ஆற்றில் குதிப்பதாக காட்சி. (இந்தக் காட்சியில் தனக்கு டூப்பாக நடித்த ஸ்டண்ட் நடிகருக்கு படத்துக்காக பேசியதை தவிரவும் தனிப்பட்ட முறையில் பணம் அளித்திருக்கிறார் தலைவர். 25 ஆண்டுகளுக்கு முன் ‘தேவி’ வார இதழில் எஸ்.விஜயன் எழுதிய தொடரில் அந்த நடிகரின் பேட்டியை வெளியிட்டிருந்தனர். பேசிய பணத்தை கொடுத்தாலே போதும் என்றாலும் சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்கிறார் என்றால் அது உழைப்பாளிகளுக்கு தலைவர் தரும் மரியாதை. அப்படி கூடுதலாக பணம் கொடுத்தது கூட யாருக்கும் தெரியாது. தலைவர் மறைந்த பிறகு அந்த நடிகர் பேட்டியில் சொல்லித்தான் தெரிந்தது.) உயிரை துச்சமாக மதித்து மலையில் இருந்து குதிக்கும் அளவுக்கு தாய் மீதான அன்பை வெளிப்படுத்தும் காட்சி.

தாய் பண்டரிபாயை சந்திக்கும்போது அவர் முகத்தைக் காட்ட மறுப்பார். நமது நாட்டைச் சேர்ந்த பெண்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்ட பிறகுதான் என் முகத்தை பார்க்கலாம் என்று நிபந்தனை விதிப்பார். அப்போது, தலைவர் பண்டரிபாயின் காலைக் கட்டிக் கொண்டு அழும்போது, அவரது காலில் சங்கிலி பிணைக்கப்பட்டிருப்பதை பார்ப்பார். உடனே அவரின் அழுகை மாறி, முகத்தில் ஆத்திரம் கொப்பளிக்க கையாலேயே சங்கிலியை அறுத்தெறிய முயற்சிப்பார். தாயின் காலில் விலங்கு மாட்டப்பட்டிருந்தால் யாருக்கும் இப்படித்தான் கோபம் வரும். சுத்தியல், கத்தியை தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்த உணர்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் தலைவர். அவரை, ‘நமது நாட்டின் அடிமைப்பட்டிருக்கும் பெண்களின் விலங்கொடித்து கடைசியாக என் விலங்கை அகற்று’ என்று பண்டரிபாய் தடுத்து விடுவார். அதற்கு கட்டுப்பட்டு பிறகு தாயிடம் இருந்து விடைபெறுவார் தலைவர்.

அப்போது அவர் சொல்லும் வார்த்தைகள் நமது நெஞ்சை பிசையும். அதை சொல்லும்போது அழுதபடியே கும்பிடுவார். இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என்னை அறியாமல் என் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியிருக்கிறது. நான் ஏதோ தலைவரின் நடிப்பை புகழ வேண்டும் என்பதற்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. இந்தக் காட்சியை பார்த்த நம் எல்லாருக்குமே இந்த உணர்வு இருந்திருக்கலாம்.

காட்சியின் சூழலும் சொல்லும் வார்த்தைகளும் அப்படி. தன் தந்தையைக் கொன்று நாட்டை அடிமைப்படுத்தியிருக்கும் சர்வாதிகாரியை வீழ்த்தி நாட்டையும் மக்களையும் காக்க வேண்டும். அந்த சபதத்துக்காக தன் மகனைக் கூட சிறுவயது முதல் பார்க்காமல் தன்னையே வறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தாய். தலைவர் ஏற்றுள்ள வேங்கையன் பாத்திரமோ தனது கடமைகளையும் பொறுப்புகளையும் இப்போதுதான் உணரவே செய்கிறது. சர்வாதிகாரியை வீழ்த்த ஆள், அம்பு, சேனைகளை திரட்ட வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ? அதுவரை தாய் இருக்க வேண்டும். படை திரட்டி சர்வாதிகாரியுடன் நடக்கும் போரில் தனது உயிரே கூட போகலாம். அதன் பிறகு தாயை பார்க்கவே முடியாமல் போய்விடலாம்.

இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான காட்சியின் சூழலில் தலைவரின் நடிப்பும் சொல்லும் வார்த்தைகளும் நெஞ்சைப் பிழிவது இயற்கைதானே. உருக்கமான அந்தக் காட்சியில் அழுதுகொண்டே கும்பிட்டபடி தலைவர் சொல்லும் வார்த்தைகள்...

‘‘அம்மா... என்ன மறந்துடாதீங்கம்மா’’

இனி எப்போது பார்ப்போமோ? என்ற ஏக்கத்துடன் கூடிய உள்ளக் குமுறலின் வெளிப்பாடாய் வார்த்தைகள்.

உள்ளே உயிர் வளர்த்து, உதிரத்தால் பால் கொடுத்து ஆளாக்கிய அன்னையின் பாசத்துக்கு அடிமையாகாதார் யார்?

தலைவரின் அடிமைப்பெண்.... நம்மை அடிமைப்படுத்தும் பெண்.... தாய்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
3rd May 2015, 07:36 PM
நான் குறிப்பிட்ட காட்சியை எல்லாரும் பார்க்கும் வகையில் தரவேற்றிய திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி. இந்தக் காட்சியை பார்க்கும் தாய்ப்பாசம் உடைய யாரும், எவ்வளவு கல்நெஞ்சங்களாக இருந்தாலும் கண் கலங்காமலாவது இருக்க முடியாது.

மிக்க நன்றி திரு.யுகேஷ் பாபு.

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
3rd May 2015, 08:16 PM
தற்பொழுது சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின்
காவல்காரன்

Richardsof
3rd May 2015, 08:31 PM
மக்கள் திலகத்தின் மாறு வேட நிழற் படங்கள் மிகவும் அருமை.நன்றி முத்தையன் சார் .
அடிமைப்பெண் -தாய்ப்பாசம் பற்றி அருமையாக எழுதிய திரு கலைவேந்தனுக்கு பாராட்டுக்கள் .

Richardsof
3rd May 2015, 08:39 PM
தற்பொழுது சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின்
காவல்காரன்
THANKS RAVICHANDRAN SIR
MY FAVOURITE SCENES
https://youtu.be/NLXGf8hSqCw
https://youtu.be/85rU6F8MzD8

fidowag
3rd May 2015, 10:46 PM
பிரபல இயக்குனர் திரு. ஏ.சி.திருலோகசந்தர் அவர்களின் நெஞ்சம் நிறைந்த நினைவுகள் நூலில் பிரசுரம் ஆன புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i60.tinypic.com/26458b9.jpg

fidowag
3rd May 2015, 10:47 PM
http://i62.tinypic.com/3502e6f.jpg

fidowag
3rd May 2015, 10:48 PM
http://i58.tinypic.com/t6t0yq.jpg

fidowag
3rd May 2015, 10:49 PM
http://i61.tinypic.com/b4bya1.jpg

fidowag
3rd May 2015, 10:50 PM
http://i58.tinypic.com/34j3ijb.jpg

fidowag
3rd May 2015, 10:59 PM
http://i59.tinypic.com/2r5ahid.jpg

fidowag
3rd May 2015, 11:00 PM
http://i61.tinypic.com/px85d.jpg

fidowag
3rd May 2015, 11:01 PM
http://i57.tinypic.com/6yh3ep.jpg

fidowag
3rd May 2015, 11:02 PM
http://i58.tinypic.com/2wpqc93.jpg

fidowag
3rd May 2015, 11:03 PM
http://i62.tinypic.com/25r2x05.jpg

fidowag
3rd May 2015, 11:03 PM
http://i60.tinypic.com/516ntf.jpg

fidowag
3rd May 2015, 11:22 PM
http://i60.tinypic.com/15660qd.jpg

fidowag
3rd May 2015, 11:23 PM
http://i59.tinypic.com/zm1p38.jpg

fidowag
3rd May 2015, 11:24 PM
http://i62.tinypic.com/dy0t4j.jpg

fidowag
3rd May 2015, 11:25 PM
http://i58.tinypic.com/dov409.jpg

fidowag
3rd May 2015, 11:26 PM
http://i58.tinypic.com/30m38uv.jpg

fidowag
3rd May 2015, 11:27 PM
http://i59.tinypic.com/1z53cc3.jpg

fidowag
3rd May 2015, 11:28 PM
http://i57.tinypic.com/120jdaf.jpg

fidowag
3rd May 2015, 11:29 PM
http://i57.tinypic.com/1zzg9s6.jpg

fidowag
3rd May 2015, 11:31 PM
http://i60.tinypic.com/nwitkg.jpg

உரிமைக்குரல் இதழ் -மே 2015- செய்திகள் / புகைப்பட பதிவுகள் நாளை தொடரும்.....

oygateedat
4th May 2015, 05:21 AM
அன்பே வா காவியத்தின் இயக்குனர் திரு ஏ சி திருலோகசந்தர் அவர்கள் எழுதிய நெஞ்சம் நிறைந்த நினைவுகள் என்ற நூலில் இருந்து அரிய பல படங்களை பதிவு செய்த திரு லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

oygateedat
4th May 2015, 05:25 AM
http://s23.postimg.org/h4g6k12uj/IMG_20150504_WA0001.jpg (http://postimage.org/)
Fwd by Mr.Sivakumar.

Russellrqe
4th May 2015, 11:57 AM
http://i57.tinypic.com/2rc0u9g.jpg

Russellrqe
4th May 2015, 11:58 AM
http://i59.tinypic.com/f2b11.jpg

uvausan
4th May 2015, 12:47 PM
ஆன்மிகத்திற்கும் , மக்கள் திலகத்திற்கும் அதிகமாக சம்பந்தம் இல்லை என்று சொல்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு இது . அவர் மனதில் ஓடிய ஆன்மிகம் மிகவும் ஆழமானது , அழகானது - சில சமயங்களில் அவரிடமிருந்து வெளிப்படும் போது அது அழுத்தமாகவும் இருக்கும் .

மாலிக்கபூரின் மதுரை மீனாட்சி கோவில் படையெடுப்பு! மதுரைக்கு வந்து கொண்டிருந்தான் கொடுங்கோலன் மாலிக்கபூர். அவன் வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல்.நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் விக்கிரக மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் நம் மக்கள்.

இப்படியாக துவங்கியது தான் படையெடுப்பு.* இவன் மதுரை நோக்கி படையெடுத்து வருவதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு அயோக்கியன் கை வைத்து விடக் கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும் வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.*

சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன் மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறிய படியே கர்ப்பகிரக்கத்திற்குள்ளேயே ஒரு கல் திரை எழுப்பினார்கள். வெளியே இன்னொரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப் போலவே நகை, விளக்கு,மாலை, எல்லாம் ஏற்பாடுசெய்தார்கள்.* மதுரை வந்தான் மாலிக்கபூர்.ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். போலி விக்ரகத்தை உண்மையென்று நினைத்து இடித்தான்.செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு போனான்.* அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை.

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.* அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் மறுசீரமைப்பு செய்தார்கள். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.*

அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்கிரகமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள்! இதோ இடித்து விட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்கிரகமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார்.சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும் வரை எப்படியாவது நான் இதை சொல்லி விட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று மகிழ்ச்சியுடனும் அழுதுகொண்டே சொன்னார்.உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்.......--- உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்ப்பகிரகத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!! * 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும் போது இருந்த படியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புதுபொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.*

இன்றும் மதுரை மீனாட்சி கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விவரம் ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மதுரை கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள்? வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதி போடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார்.* ॐ ஓம் நம: சிவாய ॐ

Russellrqe
4th May 2015, 01:54 PM
1969 - அக்டோபர் - திரை உலகம் .
http://i58.tinypic.com/2rysx6u.jpg

ainefal
4th May 2015, 01:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/4th%20may%202015_zpso48cuuqc.jpg

http://dinaethal.epapr.in/492192/Dinaethal-Chennai/04.05.2015#page/13/1

Russellrqe
4th May 2015, 01:55 PM
http://i58.tinypic.com/n3ur10.jpg

Russellrqe
4th May 2015, 02:02 PM
http://i60.tinypic.com/igvx8y.jpg
http://i62.tinypic.com/4kiwkn.jpg

Russellzlc
4th May 2015, 03:28 PM
http://i62.tinypic.com/2utoy7q.jpg

தமிழ் நாட்டில், மருத்துவ பல்கலைகழகம் ஒன்று துவக்க, மருத்துவர்கள் குழு ஒன்று 05-07-1983 அன்று நம் புரட்சித்தலைவரை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கும் புகைப்படம்.

இடமிருந்து வலமாக : மருத்துவர்கள் எஸ். ஆறுமுகம், எச். வி. ஹண்டே (அப்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்), எம். நடராஜன், எஸ். காமேஸ்வரன் முதலானோர்.



அரிய புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th May 2015, 03:31 PM
http://i59.tinypic.com/2r5ahid.jpg

திரு.ஏ.சி. திருலோகச்சந்தர் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்து தலைவரின் அரிய புகைப்படங்களை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th May 2015, 03:36 PM
http://i57.tinypic.com/1zzg9s6.jpg

ஸ்டைல் சக்கரவர்த்தியின் அட்டகாச அழகு படத்தை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th May 2015, 03:42 PM
ஆன்மிகத்திற்கும் , மக்கள் திலகத்திற்கும் அதிகமாக சம்பந்தம் இல்லை என்று சொல்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு இது . அவர் மனதில் ஓடிய ஆன்மிகம் மிகவும் ஆழமானது , அழகானது - சில சமயங்களில் அவரிடமிருந்து வெளிப்படும் போது அது அழுத்தமாகவும் இருக்கும் .

மாலிக்கபூரின் மதுரை மீனாட்சி கோவில் படையெடுப்பு! மதுரைக்கு வந்து கொண்டிருந்தான் கொடுங்கோலன் மாலிக்கபூர். அவன் வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல்.நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் விக்கிரக மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் நம் மக்கள்.

இப்படியாக துவங்கியது தான் படையெடுப்பு.* இவன் மதுரை நோக்கி படையெடுத்து வருவதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு அயோக்கியன் கை வைத்து விடக் கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும் வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.*

சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன் மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறிய படியே கர்ப்பகிரக்கத்திற்குள்ளேயே ஒரு கல் திரை எழுப்பினார்கள். வெளியே இன்னொரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப் போலவே நகை, விளக்கு,மாலை, எல்லாம் ஏற்பாடுசெய்தார்கள்.* மதுரை வந்தான் மாலிக்கபூர்.ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். போலி விக்ரகத்தை உண்மையென்று நினைத்து இடித்தான்.செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு போனான்.* அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை.

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.* அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் மறுசீரமைப்பு செய்தார்கள். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.*

அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்கிரகமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள்! இதோ இடித்து விட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்கிரகமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார்.சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும் வரை எப்படியாவது நான் இதை சொல்லி விட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று மகிழ்ச்சியுடனும் அழுதுகொண்டே சொன்னார்.உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்.......--- உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்ப்பகிரகத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!! * 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும் போது இருந்த படியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புதுபொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.*

இன்றும் மதுரை மீனாட்சி கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விவரம் ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மதுரை கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள்? வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதி போடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார்.* ॐ ஓம் நம: சிவாய ॐ

நன்றி திரு.ரவி சார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று செய்திகளை சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள். இந்த வரலாறு அருங்காட்சியகத்தில் இருந்தால் வெறும் காட்சிப் பொருளாகத்தான் இருக்கும் என்று கருதி விவரங்களை கோயிலுக்கு வருவோரின் பார்வையில் படும்படி எழுதி வைக்கச் சொன்ன புரட்சித் தலைவரின் மதியூகம் வியக்க வைக்கிறது. மிக்க நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th May 2015, 03:47 PM
http://i60.tinypic.com/igvx8y.jpg
http://i62.tinypic.com/4kiwkn.jpg

புகழ்ச்சியை விரும்பாத, பாராட்டுக்கு மயங்காத பொன்மனச் செம்மலின் உரையை, அற்புதமான ஆவணத்தை பதிவிட்ட திரு.குமார் சார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
4th May 2015, 06:04 PM
FANS WRITING IN FACEBOOK THALAIVAR MOVIES DIALOGUES I POSTED SOME OF THE DAIALOGUES

MGR's mom: "உன் அழகுக்கும் அறிவுக்கும் நீ எப்படி எல்லாம் வாழ வேண்டியவன்.. என் வயத்துல பிறந்து இப்படி பாடு படுறியே பா."
MGR: "அப்படி எல்லாம் சொல்லாதிங்க மா. எல்லா வசதியும் இருந்தும், தாய் அன்பு இல்லாம தவிக்கிற பெரிய லட்சாதிபதியை விட, தன்னை பெத்த தாய் உயிரோட இருந்து, ஒவ்வொரு நாளும் அவங்கள கும்பிட்டு கூலி வேலை செய்யற என்ன மாதிரி ஏழை தொழிலாளிங்க எவ்வளவோ உயர்ந்தவங்க மா."
படம்: தொழிலாளி

Russellisf
4th May 2015, 06:04 PM
பாவிகளுக்கு துணை போறதுல பெருமை இல்ல.
தியாகிகளோட வழி படி நடக்குறதுல தான் பெருமை எல்லாம் இருக்கு.
படம்: நம் நாடு

"இருட்டுக்குள்ளாரையே இருந்து மற்றவங்களை திட்டுவதை விட,
அந்த இருளை போக்குவதற்க்கு தீபத்தை ஏற்றி வைக்கறாங்களே,
அவங்கதாண்ணே நாட்டுக்கு தேவையானவங்க".

'நேர்மையான பிச்சைக்காரனுக்கு
தலைவணங்குவேனே தவிர
அநியாயமான பணக்காரனுக்கு
தலைவணங்கவே மாட்டேன்'

என்ற வரிகள் கொண்ட உரையாடல் (நம்நாடு) மறக்க முடியாதது.

வாழ்க புரட்சி தலைவர் புகழ்.

Russellisf
4th May 2015, 06:07 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsjewwc5gb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsjewwc5gb.jpg.html)


இந்த புகைபடத்தினை நீங்கள் எங்கும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.... தலைவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன் தேசிய மகளிர் தடகள போட்டியினை துவக்கி வைக்க கோவை நேரு விளையாட்டு அரங்கம் வந்திருந்தார். விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை எற்றுகொண்டபோது எடுத்த படம்.
படம் எடுத்தவர் கண்ணன் ஸ்டுடியோ மறைந்த குணசேகரன் அவர்கள்.

Russellzlc
4th May 2015, 06:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsjewwc5gb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsjewwc5gb.jpg.html)


இந்த புகைபடத்தினை நீங்கள் எங்கும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.... தலைவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன் தேசிய மகளிர் தடகள போட்டியினை துவக்கி வைக்க கோவை நேரு விளையாட்டு அரங்கம் வந்திருந்தார். விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை எற்றுகொண்டபோது எடுத்த படம்.
படம் எடுத்தவர் கண்ணன் ஸ்டுடியோ மறைந்த குணசேகரன் அவர்கள்.

நன்றி திரு.யுகேஷ் பாபு,

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, நின்று கொண்டு (உடல் நிலை காரணமாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் யார் கேட்கப் போகிறார்கள்?) அவர்களுக்கு சல்யூட் செய்யும் தலைவரின் பண்பும், உடல் நிலையை மீறிய மன உறுதியும் நாம் போற்றி பின்பற்றத்தக்கது.

தலைவரின் அரிய படத்தை பதிவிட்டு உங்களுக்கு.....

படமே பதில்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th May 2015, 07:09 PM
http://i57.tinypic.com/1zzg9s6.jpg

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு.முத்தையன் அம்மு. தலைவரின் ஆசியால் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளும் உடல் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
4th May 2015, 07:28 PM
http://s29.postimg.org/g60x6tolz/WP_20150504_19_09_43_Pro.jpg (http://postimage.org/)

Kumudham - weekly

ainefal
4th May 2015, 09:20 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/9unnamed_zps6mxuid69.jpg

ainefal
4th May 2015, 09:21 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/4unnamed_zps8pprp77l.jpg

ainefal
4th May 2015, 09:21 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/7unnamed_zps4sm1o2xb.jpg

ainefal
4th May 2015, 09:22 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3unnamed_zpso5wkt0cq.jpg

ainefal
4th May 2015, 09:23 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/10unnamed_zpsvg3z61xa.jpg

ainefal
4th May 2015, 09:24 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/12unnamed_zpscq9drunn.jpg

ainefal
4th May 2015, 09:24 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2unnamed_zps6ztwjrp1.jpg

ainefal
4th May 2015, 09:25 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/5unnamed_zpsximrlqza.jpg

ainefal
4th May 2015, 09:26 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/6unnamed_zpshdjuyps4.jpg

ainefal
4th May 2015, 09:27 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/8unnamed_zps9syam6ob.jpg

ainefal
4th May 2015, 09:28 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ukshop_zpsb7dfby0u.jpg

oygateedat
4th May 2015, 09:50 PM
திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு,

தாங்கள் குறிப்பிட்ட விழாவிற்கு நானும் சென்று மக்கள் திலகத்தை பார்க்கும் அரிய வாய்ப்பை பெற்றேன். அவ்விழாவில் எடுக்கப்பட்ட தலைவரின் புகைப்படம் என் பாக்கெட் டைரியில் இன்றுவரை என்னுடன் பயணிக்கின்றது.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

fidowag
4th May 2015, 10:37 PM
தின இதழ் -04/05/2015
http://i62.tinypic.com/15fi168.jpg
http://i60.tinypic.com/2wlt5oi.jpg
http://i61.tinypic.com/eafcs4.jpg
http://i58.tinypic.com/2zhi8gk.jpg
http://i59.tinypic.com/35bywit.jpg

fidowag
4th May 2015, 10:42 PM
http://i58.tinypic.com/2meeaud.jpg

http://i59.tinypic.com/2zqzw5j.jpg

http://i59.tinypic.com/2a7dgd3.jpg

http://i58.tinypic.com/vq2wt4.jpg

http://i62.tinypic.com/2wf6cuw.jpg
http://i57.tinypic.com/25qd4dt.jpg

fidowag
4th May 2015, 11:26 PM
உரிமைக்குரல் -செய்திகள் /புகைப்படங்கள் தொடர்ச்சி ........

http://i57.tinypic.com/eqci3c.jpg

http://i59.tinypic.com/2gw848l.jpg

fidowag
4th May 2015, 11:27 PM
http://i61.tinypic.com/2cctu29.jpg

fidowag
4th May 2015, 11:29 PM
http://i62.tinypic.com/24yphfl.jpg

http://i62.tinypic.com/14kcww6.jpg

fidowag
4th May 2015, 11:29 PM
http://i62.tinypic.com/2w6b1c3.jpg

fidowag
4th May 2015, 11:30 PM
http://i57.tinypic.com/11ah7v6.jpg

fidowag
4th May 2015, 11:32 PM
http://i57.tinypic.com/jii8ep.jpg

http://i61.tinypic.com/359wa5s.jpg

fidowag
4th May 2015, 11:33 PM
http://i62.tinypic.com/15n3h4y.jpg

fidowag
4th May 2015, 11:34 PM
http://i60.tinypic.com/cqq1w.jpg

fidowag
4th May 2015, 11:35 PM
http://i61.tinypic.com/14smxwh.jpg

fidowag
4th May 2015, 11:36 PM
http://i62.tinypic.com/2ng6cer.jpg
http://i58.tinypic.com/10xrls4.jpg

ainefal
4th May 2015, 11:37 PM
மாபெரும் கருத்தரங்கம். நன்றி : ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ்

https://www.youtube.com/watch?v=8aMxmKu78nQ

fidowag
4th May 2015, 11:37 PM
http://i58.tinypic.com/wltx7s.jpg

fidowag
4th May 2015, 11:38 PM
http://i57.tinypic.com/24ux2c3.jpg

fidowag
4th May 2015, 11:44 PM
எனது தாயார் மறைவிற்கு , புகைப்படத்துடன், இரங்கல் தெரிவிக்கும் வகையில்
அனுதாப செய்தி பிரசுரம் செய்த, உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜ்
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

எனது சகோதர, சகோதரிகளும், குடும்பத்தினரும் இரங்கல் செய்தி பிரசுரம்
செய்ததற்கு திரு. பி.எஸ். ராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


ஆர். லோகநாதன்.

fidowag
5th May 2015, 07:10 AM
தின இதழ் -05/05/2015
http://i62.tinypic.com/2vih8j5.jpg
http://i57.tinypic.com/vie98o.jpg
http://i60.tinypic.com/10fvnso.jpg
http://i59.tinypic.com/261nhgp.jpg

http://i61.tinypic.com/33dbi20.jpg

fidowag
5th May 2015, 07:13 AM
http://i58.tinypic.com/2zixwd4.jpg
http://i61.tinypic.com/2hppr9f.jpg

http://i57.tinypic.com/21bof2f.jpg
http://i60.tinypic.com/ehwt8h.jpg

oygateedat
5th May 2015, 01:28 PM
விரைவில்

கோவை

சண்முகாவில்

நாடோடி மன்னன்

ainefal
5th May 2015, 01:58 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/5th%20may%202015_zpsjgy6jnzu.jpg

http://dinaethal.epapr.in/493439/Dinaethal-Chennai/05.05.2015#page/13/1

Richardsof
5th May 2015, 03:58 PM
மக்கள் திலகத்தின் '' 'இன்று போல் என்றும் வாழ்க ''

இன்று 39வது ஆண்டு துவக்க நாள் .

5.5.1977 வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .

இந்த இனிய நன்னாளில் பிறந்த நாளை கொண்டாடும் அன்பு நண்பர் திரு முத்தையன் இன்று போல் என்றும் வாழ்க

என்று வாழ்த்துகிறேன் .

Richardsof
5th May 2015, 04:09 PM
6.5.1973.
மக்கள் திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் .

அண்ணா திமுக மாநில மாநாடு 6.5.1973 அன்று வேலூர் அருகே சத்துவாச்சாரியில் நடைப்பெற்றது .
மிகவும் பிரமாண்டமான மாநாடு . திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம் .தமிழ்நாடு முழவதும் உள்ள தொண்டர்கள் லட்ச்சக்கணக்கில் குவிந்தனர் .
சென்னையிலிருந்து மக்கள் திலகம் அவர்கள் நேராக மாநாட்டு திடலுக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் சிறிது நிமிடங்கள் உரையாடி விட்டு மேடை நோக்கி . விரைந்தார் .

அவர் என்ன பேசினார் ?

மக்கள் திலகம் காரை விட்டு இறங்கியதும் தொண்டர்கள் பலர் அவரை சுற்றி வாழ்த்துக்கள் , வணக்கங்கள் கூறி 'உலகம் சுற்றும் வாலிபன் '' படம் எப்போது வரும் ? என்று கேட்டனர் .
மக்கள் திலகம் ; இன்று மாலை பேப்பர் பாருங்கள் . விளம்பரம் வரும் என்று கூறினார் .

அதே போல் அன்றைய மாலை ''அலை ஓசை '' மாலை பேப்பரில்

மே 11 முதல்

உலகம் சுற்றும் வாலிபன்

சென்னை
தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா மற்றும் தென்னாடெங்கும் .

மே 7 முதல் முன்பதிவு ஆரம்பம்

என்று விளம்பரம் பார்த்த மக்கள்வெள்ளம் அடைந்த ஆரவாரம் இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது .

Richardsof
5th May 2015, 04:31 PM
1969 -திரை உலகம் இதழில் வெளிவந்த மக்கள் திலகத்தின் பேச்சு பற்றிய ஆவண பதிவுமிகவும் அருமை .திரு குமார் சார் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் மதுரை கோயிலில் வைக்கப்பட்ட ஆவண குறிப்பை பற்றி பதிவிட்ட திரு ரவிகுமார் அவர்களுக்கு நன்றி .

Richardsof
5th May 2015, 04:38 PM
சத்துணவு தந்த
சரித்திர நாயகனே!
முத்தமிழ் உள்ளவரை
முழங்கும்
உனது பெருமை!




பாட்டுக்கோர் புலவன் பாரதியின்
நூற்றாண்டு
புகழ்
பரப்ப
மகா கவிக்கு
சிலை எடுத்து சிறப்பித்தாய்
உனது புகழ் - மங்காது
வாழிய! வாழியவே!

நெஞ்சை அள்ளும் தஞ்சையிலே!
தமிழ் பல்கலைக் கழகம் தந்தாய்
தலைநகர் டில்லியிலே
தமிழ்ச் சங்கம் தோன்ற
பேருதவி புரிந்தாய்!



வையகம் போற்றும் வண்ணம்
மாட மதுரை மாநகரில்
ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை
உவகையுடன் செய்திட்டாய்!
மதுரை வீரனே!
உம்-புகழ்வாழ்க!


"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்

ஊர் மட்டுமல்ல உலகமும்
சொல்லும்படி வாழ்ந்த
திலகம் இவர்!

மக்கள் திலகம் இவர்!

கழகம் துவங்கி
ஐந்து ஆண்டுகளில்
மகுடம் சூடிய
மன்னாதி மன்னன் நீங்கள்!

'தொட்டனை ஊறும் மணற் கேணி
மந்தர்க்கு கற்றனை ஊறும் அறிவு'

தொட்டது துலங்கும்

ஆசியும், ராசியும்
மேலோங்கி வளரும்
இவரது கை பட்டால்?

நடிகர் சிவகுமாரின்
கல்வி அறக்கட்டளை

தழைத்தோங்கி
வளர்வதற்கு காரணம்
இவரது கைராசி !


திரை படங்களில்
சூளுரைக்கும் வசனத்தை
சுருக்கி சொன்னவர் நீவீர்!

தற்போது
தமிழ் படங்களில்
பவனி வரும் "பன்ச்ச்" வசனத்தின்
முன்னோடியும்
நீ(ர்)தான்!


கேள்வி = நிலைத்து நிற்கும் எனது அதிகாரத்தின் ஆழம் தெரிய வில்லையா உமக்கு?

பதில் = உங்களது அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா?
நிலைத்து நிற்பதற்கு?

கேள்வி = மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
பதில் =சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஒடும்.


கேள்வி = தோல்வியே அறியாதவன் நான்!

பதில் = தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான்!


ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்

அல்லாவா?








அறிஞர் அண்ணாவின்
உதய சூரியனுக்கு
சுடராய் நின்றவர்
எம்.ஜி.ஆர்!

சமுதாயத்தின் சக்திகளாக
விளங்கும்
மகளீர்க்கென
தனீ பேருந்து தந்தவர்
எம்.ஜி.ஆர்!

பத்திரிகை துறையிலும்
பாதம் பதித்தவர்

தாய் பத்திரிகையின் நிறுவனர்.

அண்ணா பத்திரிகையின் நிறுவனர்

நேச மணி தமிழ் மாத இதழ் ஆசிரியர்







தீமையை தீண்டாத திலகம் இவர்!
வாய்மையை போற்றும் உலகம் இவர்!
(இவரின்)
அரசியல் வாரிசு செல்வி.ஜெயலலிதா
கலைஉலக வாரிசு கே.பாக்யராஜ்
இரு வாரிசுகளை…
தேர்ந்தெடுத்த தேவன் இவர்.








அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

எல்லோரிடமும் அன்பு பாராட்டிய
அரும்பெரும் தலைவர் எம்.ஜி.ஆர்.

தேசத் தந்தை காந்தியிடம் - நேசம்
மூதறிஞர் ராஜாஜியிடம் - பாசம்
கர்மவீரர் காமராஜரிடம் - எளிமை/பற்று
அறிஞர் அண்ணாவிடம் - தலைமை பண்பு
கலைஞர்/ சிவாஜி இருவரிடம் - நட்பு (பாராட்டிய)
சமத்துவ தலைவர் எம்.ஜி.ஆர்.


"கட்டழகர்களில் கண்டாலே போதுமென!
காந்தப் பார்வை பட்டாலே போதுமென!
பசும்பொன் மேனி தொட்டாலே போதுமென!
பாசத்தோடு
கை கொடுக்க வேண்டும் என எண்ணம், எண்ண!

இயற்கையோடு கலந்துவிட்ட
"காஞ்சித் தலைவனை"
நமது நெஞ்சத்தில் வைத்து
அவரின் புகழை
போற்றுவோமே!
இந்நாளில்!







தொடர்ந்து
மூன்று முறை முதல்வராய்
இருந்த
முத்தமிழ் முதல்வருக்கு
இன்னும்
மூன்று ஆண்டுகளில்
நூற்றாண்டு!(1917 – 2017)

வாருங்கள் ரத்தத்தின் ரத்தங்களே!
மங்காத புகழுக்கு

ஊறு விளைவிப்போரை
வேறோடு சாய்ப்போம்!
காலத்தை வென்ற காவிய நாயகனுக்கு
அன்பு என்னும் மாலையை
அவரது அழியாப் புகழுக்கு சூடுவோம் !.


மனித புனிதர் எம்.ஜி.ஆர் புகழ்
இன்று போல் என்றும் வாழ்க!
பல்லாண்டு வாழ்க!
வாழ்க! வளர்க! எம்.ஜி.ஆர் திருநாமம்.

courtesy - net
புதுவைவேலு

Richardsof
5th May 2015, 04:40 PM
குறவர் வேஷம் போட்டு
குறவஞ்சி பாடிய
தேடி வந்த மாப்பிள்ளை யாரோ?

படகோட்டி சென்று மீனவ நண்பனை
கண்டது யாரோ?
நாளை நமதே என்று
நம்பிக்கை அளித்தவர் யாரோ?

என் அண்ணன்
என்று சொல்லும்
ஊருக்கு உழைப்பவன் யாரோ?

பணத்தோட்டத்தை தேடிச் சென்ற
மலைக் கள்ளன் யாரோ?
ஓரம் போ! என்று சொல்லும்
ரிக் ஷாக்காரன் யாரோ?

காதல்வாகனம் ஏறி
குமரிக்கோட்டம் சென்றவர் யாரோ?

அடிமைப் பெண்னை
விடிதலை செய்தது யாரோ?
கூண்டுக் கிளியை
பறக்க விட்டது யாரோ?

மந்திரி குமாரியை
மணக்கச் சென்றவர் யாரோ?
ராஜ குமாரியை
கண்டவர்தான் யாரோ?

பெற்றால்தான் பிள்ளையா?
என்று கேட்டவர்தான் யாரோ?
நீரும் நெருப்புடனும்
விளையடியவர்தான் யாரோ?

தாழம் பூவை அழகு என்று
சொன்னவர்தான் யாரோ?
தொழிலாளிக்கு
தோள் கொடுத்த தோழர்தான் யாரோ?

யார் அவர்?
புதுமை பித்தனா?
ராஜா தேசிங்கா?
நாடோடியா?
நாடோடி மன்னனா?
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?

யார்தான் அவர்?

அவர்தான்........!
எதிர்வரும் 2017-ல்
நூற்றாண்டு விழா காணப் போகும்

புது யுகத்தின் புரட்சி நாயகர்
டாக்டர் எம்.ஜி.ஆர்!

courtesy
புதுவை வேலு

Russelldvt
5th May 2015, 06:33 PM
மக்கள் திலகத்தின் '' 'இன்று போல் என்றும் வாழ்க ''

இன்று 39வது ஆண்டு துவக்க நாள் .

5.5.1977 வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .

இந்த இனிய நன்னாளில் பிறந்த நாளை கொண்டாடும் அன்பு நண்பர் திரு முத்தையன் இன்று போல் என்றும் வாழ்க

என்று வாழ்த்துகிறேன் .

http://i57.tinypic.com/2exscv6.jpg

Russelldvt
5th May 2015, 06:40 PM
என் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் சொன்ன தலைவரின் பக்தர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..

http://i58.tinypic.com/ali0y0.jpg

Russelldvt
5th May 2015, 06:40 PM
http://i59.tinypic.com/2s0xwfd.jpg

Russelldvt
5th May 2015, 06:42 PM
http://i62.tinypic.com/imta8h.jpg

Russelldvt
5th May 2015, 06:43 PM
http://i59.tinypic.com/2hptaqe.jpg

Russelldvt
5th May 2015, 06:44 PM
http://i58.tinypic.com/34t63pe.jpg

Russelldvt
5th May 2015, 06:45 PM
http://i57.tinypic.com/m951r4.jpg

Russelldvt
5th May 2015, 06:46 PM
http://i57.tinypic.com/23h7p8n.jpg

Russelldvt
5th May 2015, 06:47 PM
http://i57.tinypic.com/2dt511i.jpg

Russelldvt
5th May 2015, 06:47 PM
http://i57.tinypic.com/674bp0.jpg

Russelldvt
5th May 2015, 06:48 PM
http://i57.tinypic.com/9k6n41.jpg

Russelldvt
5th May 2015, 06:49 PM
http://i58.tinypic.com/1589gtg.jpg

Russelldvt
5th May 2015, 06:51 PM
http://i61.tinypic.com/r8waw4.jpg

Russelldvt
5th May 2015, 06:52 PM
http://i62.tinypic.com/b3stbr.jpg

Russelldvt
5th May 2015, 06:52 PM
http://i60.tinypic.com/24q654p.jpg

Russelldvt
5th May 2015, 06:53 PM
http://i62.tinypic.com/24myr95.jpg

Russelldvt
5th May 2015, 06:54 PM
http://i62.tinypic.com/2j5jryt.jpg

Russelldvt
5th May 2015, 06:54 PM
http://i59.tinypic.com/25txa1t.jpg

Russelldvt
5th May 2015, 06:55 PM
http://i57.tinypic.com/2d8q8bd.jpg

Russelldvt
5th May 2015, 06:56 PM
http://i60.tinypic.com/feox9z.jpg

Russelldvt
5th May 2015, 06:57 PM
http://i59.tinypic.com/2ih0x1l.jpg

siqutacelufuw
5th May 2015, 07:16 PM
http://i59.tinypic.com/f2b11.jpg

நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு, நம் புரட்சித்தலைவர் அவர்கள் வீட்டை மீட்பதற்கு மட்டுமா பண உதவி செய்தார். அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புக்களை "பறக்கும் பாவை",, "கண்ணன் என் காதலன்" மற்றும் "அடிமைப்பெண்" காவியங்கள் மூலம் வழங்கி , நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்தார் நம் மக்கள் திலகம்.

ஆனால், சந்திரபாபு போதிய நிதி இல்லாத காரணத்தினாலும், இதர காரணங்களாலும், "மாடி வீ ட்டு ஏழை" திரைப்படத்தை தொடர முடியாமல் போனதற்கு, நமது பொன்மனசெம்மலின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், காழ்ப்புணர்ச்சி கொண்டு சில இழி பிறவிகள் அவர் மீது புழுதி வாரி தூற்றினர்.

உண்மை நிலையை பலரும் அறியும் வகையில், இந்த கட்டுரை மூலம், பதிவிட்டு, அந்த அநாகரீகவாதிகளை வாயடைக்க செய்த திரு.வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !

siqutacelufuw
5th May 2015, 07:28 PM
இந்த திரியினில் அருமையான நற் பதிவுகளை வழங்கி வரும் திரு. வி..பி. சத்யா அவர்களின் தந்தையார் நேற்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது பூத உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம் ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்களை வேண்டிகொள்கிறேன்.

தந்தையாரை இழந்து வாடும் திரு. வி..பி. சத்யா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

siqutacelufuw
5th May 2015, 07:39 PM
திரு,. முத்தையன் அம்மு அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

http://i61.tinypic.com/xbwxtg.png

தாங்கள் அளித்து வரும் பதிவுகள் மிகவும் அருமை. நமது புரட்சித்தலைவரின் பல்வேறு நிழற்படங்களை தரவேற்றம் செய்யும் தங்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.

ஒரு சிறு வேண்டுகோள் : எந்தெந்த காவியங்களிலிருந்து எந்தெந்த நிழற்படங்கள் இடம் பெற்றிருக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், இந்த திரியினை இன்றைய தலைமுறையினரும் பார்த்து வருவதால், அவர்கள் அறியும் பொருட்டு, அக்காட்சிகள் இடம் பெற்ற காவியங்களின் பெயரை குறிப்பிட்டால் மிக்க நன்றாக இருக்கும்.

மீண்டும் எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கலந்த நன்றி !

ujeetotei
5th May 2015, 07:51 PM
மக்கள் திலகத்தின் '' 'இன்று போல் என்றும் வாழ்க ''

இன்று 39வது ஆண்டு துவக்க நாள் .

5.5.1977 வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .

இந்த இனிய நன்னாளில் பிறந்த நாளை கொண்டாடும் அன்பு நண்பர் திரு முத்தையன் இன்று போல் என்றும் வாழ்க

என்று வாழ்த்துகிறேன் .

Thanks for the remainder. And Happy returns of the day to Mr.Muthaian Sir.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/indru-pol-endrum-vazhga_costumes_1_zpsa0ajfuwv.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/indru-pol-endrum-vazhga_costumes_1_zpsa0ajfuwv.jpg.html)

http://www.mgrroop.blogspot.in/2015/04/mgr-costumes-iii.html

ujeetotei
5th May 2015, 07:52 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/indru-pol-endrum-vazhga_costumes_2_zpsshah7y2d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/indru-pol-endrum-vazhga_costumes_2_zpsshah7y2d.jpg.html)

Costumes from the movie Indru Pol Endrum Vazgha.

http://www.mgrroop.blogspot.in/2015/04/mgr-costumes-iii.html

ujeetotei
5th May 2015, 07:53 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/indru-pol-endrum-vazhga_costumes_3_zpsdobl37ha.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/indru-pol-endrum-vazhga_costumes_3_zpsdobl37ha.jpg.html)

The article is given in the link below.

http://www.mgrroop.blogspot.in/2015/04/mgr-costumes-iii.html

ujeetotei
5th May 2015, 07:54 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/indru-pol-endrum-vazhga_costumes_4_zpss78vhr1s.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/indru-pol-endrum-vazhga_costumes_4_zpss78vhr1s.jpg.html)

http://www.mgrroop.blogspot.in/2015/04/mgr-costumes-iii.html

ujeetotei
5th May 2015, 08:00 PM
இந்த திரியினில் அருமையான நற் பதிவுகளை வழங்கி வரும் திரு. வி..பி. சத்யா அவர்களின் தந்தையார் நேற்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது பூத உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம் ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்களை வேண்டிகொள்கிறேன்.

தந்தையாரை இழந்து வாடும் திரு. வி..பி. சத்யா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

Heart felt condolences for the loss, may his soul rest in peace.

uvausan
5th May 2015, 08:33 PM
திரு,. முத்தையன் அம்மு அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

http://i61.tinypic.com/xbwxtg.png

தாங்கள் அளித்து வரும் பதிவுகள் மிகவும் அருமை. நமது புரட்சித்தலைவரின் பல்வேறு நிழற்படங்களை தரவேற்றம் செய்யும் தங்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.

ஒரு சிறு வேண்டுகோள் : எந்தெந்த காவியங்களிலிருந்து எந்தெந்த நிழற்படங்கள் இடம் பெற்றிருக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், இந்த திரியினை இன்றைய தலைமுறையினரும் பார்த்து வருவதால், அவர்கள் அறியும் பொருட்டு, அக்காட்சிகள் இடம் பெற்ற காவியங்களின் பெயரை குறிப்பிட்டால் மிக்க நன்றாக இருக்கும்.

மீண்டும் எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கலந்த நன்றி !

திரு முத்தையன் அம்மு - உங்கள் பிறந்த நாள் இனிதாக அமையட்டும் - இது எங்கள் உளமார்ந்த ப்ராத்தனை - திரு ஆதிராம் சொன்னதைப்போல தேக ஆரோக்கியத்திற்கும் முதலிடம் கொடுத்து , பிறகு பதிவுகள் இடுங்கள் - உங்கள் ஆரோக்கியமான சேவை இந்த இரு திரிகளுக்கும் பல யுகங்கள் தேவை . இரு திலகங்களின் இடங்களை யாருமே , என்றுமே நிரப்ப முடியாது .

அன்புடன்

uvausan
5th May 2015, 08:41 PM
திரு. வி..பி. சத்யா

ஈடு கட்டமுடியாத இழப்பு . தந்தை - தாய் இந்த இருவருக்கும் சமமாக ஆண்டவனாலேயே யாரையும் படைக்க முடியவில்லை - இன்று வரை இறைவனுக்கு இது ஒரு பெரிய தோல்வியே !! - உங்களுக்கு நல்ல மனதிடம் கிடைத்திட எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை வணங்குகிறேன் .

fidowag
5th May 2015, 09:12 PM
http://i58.tinypic.com/j8i0cg.jpg



புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.( புகழ் )"இன்று போல் என்றும் வாழ்க "- திரைப்படம்
வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றது.

படம் வெளியான முதல் நாளன்று (05/05/1977), தேவி பாரடைசில் மாலை காட்சி
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., அவரது துணைவியார் திருமதி வி.என்.ஜானகி,
ஆகியோருடன் பார்த்து ரசித்தது பசுமையான மலரும் நினைவுகள்.

பாடல் காட்சிகள் , பல முக்கிய திருப்பம் நிறைந்த காட்சிகள், ரயில் சண்டை காட்சிகள் ஆகியவற்றிற்கு ரசிகர்களின் கைதட்டலும், ஆரவாரமும் அரங்கை
அதிரவைத்தன.

இந்த இனிய நாளில் பிறந்த நாளை காணும் நண்பர் திரு. முத்தையன் அவர்களும்
எல்லா வளமும் , நலமும் பெற்று , " இன்று போல் என்றும் வாழ்க ".

fidowag
5th May 2015, 09:13 PM
நண்பர் திரு. வி.பி. சத்யா அவர்களின் தந்தையார் காலமானார் என்கிற செய்தி
அறிந்து மிக்க துயருற்றேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல
இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தந்தையை இழந்து வாடும் நண்பர் திரு. சத்யா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல
சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆர். லோகநாதன்

fidowag
5th May 2015, 09:20 PM
http://i57.tinypic.com/2u8j86x.jpg


7000 பதிவுகள் முடித்து , திரியில் தொடர்ந்து பயணிக்கும் எனக்கு வாழ்த்துக்கள் /
பாராட்டுக்கள் நல்கிய அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது இதயங்கனிந்த
நன்றி.


இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.


வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.


ஆர். லோகநாதன்.

fidowag
5th May 2015, 09:28 PM
சென்னை சைதாபேட்டை , கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்
பண்டிகை மற்றும் கால சூழ்நிலைக்கு ஏற்ப வியாபார ரீதியில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பேனர்கள் வைப்பது, உரிமையாளரின் வழக்கம்.

அந்த வகையில், உழைப்பாளர் தினத்தினை முன்னிட்டு தற்போது வைக்கப்பட்டுள்ள
பேனர் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i61.tinypic.com/nvd2d3.jpg

fidowag
5th May 2015, 09:30 PM
http://i57.tinypic.com/11uxr3r.jpg

ainefal
5th May 2015, 10:10 PM
மாபெரும் கருத்தரங்கம். நன்றி : ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ்

https://www.youtube.com/watch?v=zJglBrUvaVA

uvausan
5th May 2015, 10:15 PM
http://i57.tinypic.com/2u8j86x.jpg


7000 பதிவுகள் முடித்து , திரியில் தொடர்ந்து பயணிக்கும் எனக்கு வாழ்த்துக்கள் /
பாராட்டுக்கள் நல்கிய அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது இதயங்கனிந்த
நன்றி.


இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.


வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.




ஆர். லோகநாதன்.



திரு லோகநாதன் - ஏழாயிரம் பதிவுகள் !! - அடேயப்பா !!! - இதில் எவ்வளவு பூஜ்யங்கள் உள்ளன என்பது எனக்குத்தெரியாது - தெரிந்தாலும் என்ன பயன் - உங்கள் இலக்கை அடைய இன்னும் 100 ஆண்டுகள் எனக்கு தேவைப்படலாம் ...

ஏழாயிரம் பதிவுகளுக்குபின் இருக்கும் உங்கள் உழைப்பு - என் கண்களில் தெரிகின்றது - அந்த அசுர உழைப்பிற்கு என் பணிவான வணக்கங்கள் .

அன்புடன்
ரவி

ainefal
5th May 2015, 10:22 PM
Congrats Loganathan Sir for crossing 7000th milestone. Since, I was more involved in reading your postings, I did not notice that you have crossed 7000.

Thanks.

ainefal
5th May 2015, 10:44 PM
https://www.youtube.com/watch?v=b6UWWKP3EUM

ainefal
5th May 2015, 10:46 PM
https://www.youtube.com/watch?v=REiQkwAwOEs

ainefal
5th May 2015, 10:47 PM
https://www.youtube.com/watch?v=9iRoQqsdCGo

ainefal
5th May 2015, 10:49 PM
https://www.youtube.com/watch?v=wIg4q6NLl4w

ainefal
5th May 2015, 10:55 PM
https://www.youtube.com/watch?v=b6UWWKP3EUM

ainefal
5th May 2015, 10:56 PM
https://www.youtube.com/watch?v=zuLPaA8LBUw

oygateedat
5th May 2015, 11:00 PM
நமது திரியின் சக பதிவாளர் திரு வி பி சத்தியா அவர்களின் அன்பு தந்தையார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

- எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
5th May 2015, 11:10 PM
திரு முத்தையன் அம்முவிற்கு
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்.

- எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
5th May 2015, 11:20 PM
8.5.2015 முதல்
கோவை சண்முகா
திரை அரங்கில்
நாடோடி மன்னன்.
வீராங்கனின்
வெற்றி முழக்கம்
மறுபடியும்
கொங்கு மண்ணில்.

http://s13.postimg.org/evxbk0gjb/IMG_20150505_WA0004.jpg (http://postimage.org/)

ainefal
5th May 2015, 11:55 PM
My heartfelt condolences to Sathya and his family members:

https://www.youtube.com/watch?v=eAFHdzD0dCs

RAGHAVENDRA
6th May 2015, 06:28 AM
திரு சத்யா
தந்தையை இழந்து வாடும் தங்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் வெறும் சம்பிரதாயமாகத்தான் இருக்கும். இந்தத் துயரைத் தாண்டி வாழ்வில் தொடர்த்து பயணிக்க தங்களுக்குத்தேவையான மன வலிமையை அந்த இறைவன் தங்களுக்குத் தரவேண்டும். தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

07.05.2015 - திருத்தம் செய்யப்பட்டது.

தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நண்பர் ஆதிராம் அவர்களுக்கு நன்றி.

செய்தியில் இடம் பெற்றிருந்த தவறுக்கு சத்யா அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Russellrqe
6th May 2015, 08:04 AM
இனிய நண்பர் திரு முத்தையன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் 7000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் .

Russellrqe
6th May 2015, 08:06 AM
இனிய நண்பர்திரு சத்யா அவர்களின் தந்தையின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

Russellrqe
6th May 2015, 08:32 AM
வாழ்கையே உல்லாசமாக இருந்த மதுரை மற்றும் இந்திய வாழ்கை இந்த நாட்டு இளைஞர்களுக்கு வேறு விதமாக கிடைக்கிறது. கிறிஸ்துமஸ், தாங்க்ஸ் கிவிங், வெட்டரன்ஸ் டே, வாலண்டைன்ஸ் டே. மதர்ஸ் டே, பாதர்ஸ் டே, ஹாலோவீன் என மாதம் ஒரு பண்டிகை வருகிறது. எல்லாமே பழைய கடவுள்கள்.

பிறகு வந்த எம் ஜி ஆர் என்ற புதிய கடவுள் மக்களை இரவுமுழுவதும் கண்முழிக்க வைத்தார். மதுரை மீனாட்சி திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்தை திரையிட்டபோது மக்கள் ஊண் உறக்கமின்றி வரிசையில் நின்றிருந்தனர். அரங்கம் நிறைந்தவுடன் காட்சி பிற்கு மீண்டும் டிக்கட் பிறகு காட்சி என இரவு பகல் பாராமல் உலகம் சுற்றும் வாலிபரை கண்டு நான் அடைந்த பரவசத்தை அடைந்தனர் மக்கள்
courtesy - siva- net

Russellrqe
6th May 2015, 08:46 AM
1956ல் ஹாட்ரிக் கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் - பானுமதி நடித்த மூன்று படங்கள் .

60வது ஆண்டில்

1. அலிபாபாவும் 40 திருடர்களும்

2. மதுரை வீரன்

3. தாய்க்கு பின் தாரம் .


அலிபாபாவும் 40 திருடர்களும் - மாடர்ன் நிறுவனத்தின் முதல் வண்ணப்படம் + தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம்.


மதுரை வீரன் - தமிழ் திரை உலகில் பல சாதனைகள் புரிந்த படம் . மதுரையில் வெள்ளிவிழா மற்றும் அதிக அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .

தாய்க்கு பின் தாரம் - மக்கள் திலகம் - தேவர் கூட்டணியில் முதல் வெற்றி படம் .

Russellrqe
6th May 2015, 08:56 AM
1970- THIRAI ULAGAM - REVIEW
http://i57.tinypic.com/11h86ea.jpg

Richardsof
6th May 2015, 09:49 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ca684e2a-da62-4a64-9109-49514ed4857c_zpsxn38b0fn.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ca684e2a-da62-4a64-9109-49514ed4857c_zpsxn38b0fn.jpg.html)

oygateedat
6th May 2015, 01:53 PM
நமது திரியின் மூத்த பதிவாளர் மதிப்புக்குரிய திரு சி எஸ் குமார் அவர்கள் தனது 500 வது பதிவை இன்று பதிந்து தமது பதிவுப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார். அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

uvausan
6th May 2015, 02:34 PM
திரு குமார் - 500 பதிவுகள் - அருமை என்ற வார்த்தை அதன் பின் இருக்கும் உழைப்பை சரியாக எடை போடாது என்று நினைக்கிறேன் - வார்த்தைகள் கிடைக்க வில்லை - மனம் திறந்த பாராட்டுக்கள்

அன்புடன்
ரவி

Russellzlc
6th May 2015, 02:52 PM
சகோதரர் திரு.வி.பி.சத்யா அவர்களின் தந்தையார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தந்தையை இழந்து வாடும் திரு.சத்யா அவர்களுக்கு இழப்பை தாங்கும் மனவலிமையும் துயரில் இருந்து மீண்டுவரும் உறுதியும் கிடைக்க வேண்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th May 2015, 02:53 PM
500 பதிவுகள் கண்ட திரு.குமார் சாருக்கு வாழ்த்துக்கள். தலைவர் பற்றிய அரிய பொக்கிஷங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th May 2015, 02:56 PM
நமது சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும் திரு.ரவி சார், திரு.ராகவேந்திரா சார் ஆகியோருக்கு நன்றிகள்.

பணி நிமித்தமாக திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் வெளியூரில் இருக்கிறார் என்றும் திரிக்கு வரமுடியவில்லை என்றும் கருதுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
6th May 2015, 08:57 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/6th%20may%202015_zpsd8xpdmfd.jpg

http://dinaethal.epapr.in/493588/Dinaethal-Chennai/06.05.2015#page/13/1

ainefal
6th May 2015, 10:13 PM
Congrats Kumar Sir, for crossing the 500th milestone:

மாபெரும் கருத்தரங்கம். நன்றி : ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ்

https://www.youtube.com/watch?v=a4XmpvHodmw

ainefal
6th May 2015, 10:17 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/singaporemgr_zpsg0hefxeo.jpg

We are in the News!!! Don't miss! We have an exclusive coverage of MGR The Legend II, Ms Shoba & Singapore MGR in today's The New Paper (06/05/15) Page 14. MGR The Legend II team would like to express our sincere thanks to TNP and their reporter Mr Shaffiq for their article - Singapore MGR Sultan.

fidowag
6th May 2015, 11:00 PM
தின இதழ் -06/05/2015

http://i62.tinypic.com/25jxrvn.jpg
http://i59.tinypic.com/23r4hfc.jpg
http://i59.tinypic.com/2rpu16d.jpg
http://i59.tinypic.com/2d6w701.jpg
http://i61.tinypic.com/2khlx4.jpg

fidowag
6th May 2015, 11:06 PM
http://i59.tinypic.com/soyhc6.jpg
http://i59.tinypic.com/o6hgjt.jpg

http://i59.tinypic.com/23lb24k.jpg
http://i62.tinypic.com/2lboyz5.jpg
http://i62.tinypic.com/wheb6v.jpg

fidowag
6th May 2015, 11:07 PM
http://i58.tinypic.com/1zm12br.jpg
http://i61.tinypic.com/4j6vqe.jpg

fidowag
6th May 2015, 11:48 PM
தமிழ் இந்து -06/05/2015
http://i58.tinypic.com/2rhy355.jpg

http://i57.tinypic.com/rs6hzs.jpg

eehaiupehazij
7th May 2015, 07:03 AM
ஒரு நிலைப்பட ஆவண சுரங்கமாக அமுதசுரபியாக புகழ் பெற்றுவிட்ட மக்கள் திலகத்தின் புகழார்வலர் திரு முத்தையன் அம்மு அவர்களின் கல்வெட்டுப் பதிவுகள் நடிகர்திலகத்தின் Close-up உடல்மொழி காட்சியமைப்பில் அவரது வெல்ல முடியாத ஆளுமையை நிலை பெறச் செய்து நடிப்பு மாணாக்கர்களுக்கு அடிப்படைப் பாடங்களை போதிக்கின்றன!! நடிகர்திலகத்தின் புகழ் சேவையில் எங்கள் மனதில் நிறைந்து விட்டீர்கள் அம்மு!! நன்றிகள் கோடானுகோடி!!
அன்புடன் செந்தில்

Russelldvt
7th May 2015, 07:55 AM
TODAY 11.00AM WATCH SUNLIFE TV

http://i58.tinypic.com/sdl05v.jpg

http://i62.tinypic.com/2vtnu4h.jpg

Russelldvt
7th May 2015, 07:58 AM
TODAY 7.00 PM WATCH SUNLIFE TV

http://i57.tinypic.com/2qsvsbl.jpg

http://i62.tinypic.com/b51xtd.jpg

fidowag
7th May 2015, 08:58 AM
தினத்தந்தி -07/05/2015
http://i59.tinypic.com/2hrh85i.jpg

fidowag
7th May 2015, 11:26 AM
http://i61.tinypic.com/20u63ht.jpg

நாளை (8/5/15) முதல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் முருகனில் (DTS) தினசரி 4 காட்சிகள் அடிமைப்பெண் திரையிடப்படுகிறது

தகவல் உதவி மதுரை திரு.எஸ்.குமார்

ainefal
7th May 2015, 02:07 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/7th%20may%202015_zpsndsulyba.jpg

http://dinaethal.epapr.in/494774/Dinaethal-Chennai/07.05.2015#page/13/1

adiram
7th May 2015, 05:53 PM
நமது திரியின் சக பதிவாளர் திரு வி பி சத்தியா அவர்களின் அன்பு தந்தையார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

- எஸ் ரவிச்சந்திரன்


திரு சத்யா
தாயாரை இழந்து வாடும் தங்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் வெறும் சம்பிரதாயமாகத்தான் இருக்கும். இந்தத் துயரைத் தாண்டி வாழ்வில் தொடர்த்து பயணிக்க தங்களுக்குத்தேவையான மன வலிமையை அந்த இறைவன் தங்களுக்குத் தரவேண்டும். தங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

When posting a condolance message, why this much confusion and avasaram?.

One is telling Thiru Sathya's father.

One is telling Thiru Sathya's mother.

What is this? please be serious in this kind of sensitive matters.

Russellzlc
7th May 2015, 06:10 PM
திரு. ஆதிராம் சார்,

எங்கள் திரிக்கு வருகை புரிந்ததற்கு நன்றி. திரு.வி.பி.சத்யா அவர்களின் தந்தையார்தான் அமரராகி விட்டார். நேற்றே கவனித்தேன். அதை சுட்டிக்காட்டினால் எல்லாருமே வருத்தப்படுவார்கள் என்று விட்டு விட்டேன்.

இதுபோன்ற விஷயங்களில் திரு.ராகவேந்திரா சார் மட்டுமல்ல, யாருமே வேண்டுமென்று செய்ய மாட்டார்கள். இது தெரிந்தால் அவரே வருத்தப்படுவார். ஏதோ அவசரத்தில் தவறு நடந்து விட்டது. எங்கள் திரியை தாங்கள் கூர்மையாக கவனிப்பதற்கும் சுட்டிக் காட்டியதற்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
7th May 2015, 08:48 PM
நமது திரியின் பதிவாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் புதல்வர் திரு. ஆர். பிரசாந்த் மற்றும் திரு. ராமமூர்த்தி அவர்களின் புதல்வர் திரு. ஆர். ரோஷன்குமார், +2 தேர்வில், முறையே 1108, 1118 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

http://i60.tinypic.com/27zagiv.jpg

மக்கள் திலகத்தின் பக்தர்களாகிய திரு. ரவிச்சந்திரன்மற்றும் திரு. ராமமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினருக்கு, மேலும் பெருமை சேர்த்து, எதிர்கால இந்தியாவை வளமுள்ள வலிமையான பாரத தேசமாக்க அவர்களின் பங்கு மகத்தானது என்பதை உணர்ந்து, அவர்கள் கல்வியறிவு மேலும் சிறக்க, தமிழ்நாட்டில் அதிக அளவில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் உருவாக்கி கல்வித்துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண வைத்த நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் ஆசியுடன், அன்புடன் வாழ்த்துகிறேன்.

ainefal
7th May 2015, 08:58 PM
நமது திரியின் பதிவாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் புதல்வர் திரு. ஆர். பிரசாந்த் மற்றும் திரு. ராமமூர்த்தி அவர்களின் புதலவர் திரு. ஆர். ரோஷன்குமார், +2 தேர்வில், முறையே 1108, 1118 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

http://i60.tinypic.com/27zagiv.jpg

மக்கள் திலகத்தின் பக்தர்களாகிய திரு. ரவிச்சந்திரன்மற்றும் திரு. ராமமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினருக்கு பெருமை சேர்த்து, எதிர்கால இந்தியாவை வளமுள்ள வலிமையான பாரத தேசமாக்க அவர்களின் பங்கு மகத்தானது என்பதை உணர்ந்து, அவர்கள் கல்வியறிவு மேலும் சிறக்க, தமிழ்நாட்டில் அதிக அளவில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் உருவாக்கி கல்வித்துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண வைத்த நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் ஆசியுடன், அன்புடன் வாழ்த்துகிறேன்.

https://www.youtube.com/watch?v=TgFPeJyHGcI

fidowag
7th May 2015, 10:46 PM
தமிழ் இந்து -05/05/2015

http://i60.tinypic.com/ta4sjm.jpg

fidowag
7th May 2015, 11:00 PM
நாளை முதல் (08/05/2015) மீண்டும் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வருகிறது.

http://i59.tinypic.com/2crqe6u.jpg

Russellxss
7th May 2015, 11:48 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11049628_829339757150533_3006140939294764470_n.jpg ?oh=d1b100eb6706aeeed4f83df44f7f3f19&oe=55D3F1B8

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russelldvt
8th May 2015, 04:57 AM
இசைக்கருவிகளுடன் தலைவர்

படம்: ஆயிரத்தில் ஒருவன்

http://i62.tinypic.com/20jk4ys.jpg

Russelldvt
8th May 2015, 05:00 AM
படம்: பாக்த்தாத் திருடன்

http://i61.tinypic.com/23wk5co.jpg

http://i58.tinypic.com/2qb9du9.jpg

Russelldvt
8th May 2015, 05:02 AM
படம்: புதிய பூமி

http://i57.tinypic.com/24v00nk.jpg

Russelldvt
8th May 2015, 05:03 AM
படம் : மகாதேவி

http://i60.tinypic.com/o0se8x.jpg

Russelldvt
8th May 2015, 05:06 AM
படம்: என் அண்ணன்

http://i60.tinypic.com/28vc5tz.jpg

Russelldvt
8th May 2015, 05:07 AM
படம்: கலையரசி

http://i59.tinypic.com/2d9ahec.jpg

Russelldvt
8th May 2015, 05:09 AM
படம்: குடியிருந்த கோவில்

http://i58.tinypic.com/4kuvrs.jpg

http://i60.tinypic.com/11tocj7.jpg

Russelldvt
8th May 2015, 05:13 AM
படம்: கண்ணன் என் காதலன்

http://i60.tinypic.com/dzbi9k.jpg

http://i58.tinypic.com/sff2is.jpg

http://i57.tinypic.com/10xxd37.jpg

Russelldvt
8th May 2015, 05:18 AM
படம்: மன்னாதி மன்னன்

http://i62.tinypic.com/15zf2b6.jpg

http://i58.tinypic.com/23k21xt.jpg

http://i61.tinypic.com/muz9g6.jpg

Russelldvt
8th May 2015, 05:20 AM
படம்: மந்திரிகுமாரி

http://i62.tinypic.com/w1b8g4.jpg

Russelldvt
8th May 2015, 05:23 AM
படம்: நினைத்ததை முடிப்பவன்

http://i62.tinypic.com/mw9zwo.jpg

http://i58.tinypic.com/2yx3tcx.jpg

Russelldvt
8th May 2015, 05:24 AM
படம்: நாடோடி

http://i58.tinypic.com/f4l6e1.jpg

Russelldvt
8th May 2015, 05:26 AM
படம்: ஆசை முகம்

http://i59.tinypic.com/oat6xv.jpg

Russelldvt
8th May 2015, 05:28 AM
படம்: ஒருதாய் மக்கள்

http://i62.tinypic.com/25k5soj.jpg

Russelldvt
8th May 2015, 05:30 AM
படம்: படகோட்டி

http://i58.tinypic.com/fved89.jpg

Russelldvt
8th May 2015, 05:33 AM
படம்: பணம் படைத்தவன்

http://i62.tinypic.com/210c4dv.jpg

http://i57.tinypic.com/34gnkh4.jpg

Russelldvt
8th May 2015, 05:34 AM
படம்: பணத்தோட்டம்

http://i60.tinypic.com/3008m6g.jpg

http://i58.tinypic.com/29wvfxw.jpg

http://i57.tinypic.com/xku138.jpg

Russelldvt
8th May 2015, 05:36 AM
படம்: புதுமைப்பித்தன்

http://i62.tinypic.com/j76xsn.jpg

Russelldvt
8th May 2015, 05:39 AM
படம்: ராஜாதேசிங்கு

http://i59.tinypic.com/s5gqx1.jpg

Russelldvt
8th May 2015, 05:41 AM
படம்: ரிக்க்ஷக்காரன்

http://i61.tinypic.com/35hn05w.jpg

Russelldvt
8th May 2015, 05:43 AM
படம்: சக்கரவர்த்தி திருமகள்

http://i58.tinypic.com/2earv9t.jpg

Russelldvt
8th May 2015, 05:45 AM
படம்: தொழிலாளி

http://i57.tinypic.com/21alaav.jpg

http://i57.tinypic.com/8xik1z.jpg

oygateedat
8th May 2015, 05:47 AM
http://s9.postimg.org/onuiwu6en/IMG_20150507_WA0004.jpg (http://postimage.org/)
COIMBATORE SHANMUGHA THEATRE - DAILY 4 SHOWS - FROM TODAY.

Russelldvt
8th May 2015, 05:50 AM
படம்: இன்றுபோல் என்றும் வாழ்க

http://i61.tinypic.com/bjh26w.jpg

Russelldvt
8th May 2015, 05:51 AM
படம்: சிரித்து வாழவேண்டும்

http://i62.tinypic.com/2v8oeo4.jpg

Russelldvt
8th May 2015, 05:53 AM
படம்: வேட்டைக்காரன்

http://i60.tinypic.com/24nkveo.jpg

Russelldvt
8th May 2015, 05:54 AM
படம்: நவரத்தினம்

http://i59.tinypic.com/25a9x.jpg

http://i61.tinypic.com/qraqh1.jpg

fidowag
8th May 2015, 08:47 AM
தின இதழ் -07/05/2015
http://i57.tinypic.com/b8olzk.jpg
http://i58.tinypic.com/2cnfpuh.jpg
http://i58.tinypic.com/2evxaaq.jpg

http://i62.tinypic.com/2wox3pg.jpg
http://i62.tinypic.com/2i293pl.jpg

fidowag
8th May 2015, 08:56 AM
http://i59.tinypic.com/skvm1v.jpg

http://i57.tinypic.com/2d7v8r7.jpg
http://i58.tinypic.com/35ivuwk.jpg
http://i60.tinypic.com/1onngw.jpg
http://i59.tinypic.com/8x0h8w.jpg

fidowag
8th May 2015, 09:00 AM
http://i60.tinypic.com/rwpe9s.jpg

http://i60.tinypic.com/2aeuvxj.jpg

http://i59.tinypic.com/243lo3d.jpg

http://i60.tinypic.com/295b6vo.jpg

fidowag
8th May 2015, 09:03 AM
டைம் பாஸ் -16/05/2015


http://i61.tinypic.com/359wp6s.jpg

http://i57.tinypic.com/rciuzc.jpg

ainefal
8th May 2015, 01:52 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/8th%20may%202015_zpsmssnhqfr.jpg

http://dinaethal.epapr.in/495509/Dinaethal-Chennai/08.05.2015#page/13/1

Russelldvt
8th May 2015, 06:44 PM
http://i59.tinypic.com/6h7pd0.jpg

fidowag
8th May 2015, 09:15 PM
தின இதழ் -08/05/2015
http://i61.tinypic.com/uu62u.jpg

http://i60.tinypic.com/2rqdnxd.jpg
http://i58.tinypic.com/119xdox.jpg

http://i60.tinypic.com/be7lap.jpg

fidowag
8th May 2015, 09:18 PM
http://i62.tinypic.com/2itsi7s.jpg

http://i62.tinypic.com/qzet0l.jpg

http://i61.tinypic.com/23m8tht.jpg

fidowag
8th May 2015, 09:54 PM
இன்று முதல் (08/05/2015) மீண்டும் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வருகிறது.
http://i57.tinypic.com/2n0r5up.jpg

fidowag
8th May 2015, 09:58 PM
http://i62.tinypic.com/qx2dew.jpg

fidowag
8th May 2015, 09:59 PM
http://i60.tinypic.com/2hfq6pu.jpg

fidowag
8th May 2015, 10:19 PM
http://i59.tinypic.com/2e64umv.jpg




நமது திரி நண்பர்களும், முக்கிய பங்களிப்பாளர்களும் ஆகிய திரு.ரவிச்சந்திரன் மற்றும் திரு. ராமமூர்த்தி மகன்கள் +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று
தேர்ச்சி அடைந்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி. மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள்.

மாணவர்களின் மேல் படிப்புக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசியும் அருளும்
கிடைக்கட்டும். நன்றி.

ஆர். லோகநாதன்.

uvausan
8th May 2015, 10:19 PM
நமது திரியின் பதிவாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் புதல்வர் திரு. ஆர். பிரசாந்த் மற்றும் திரு. ராமமூர்த்தி அவர்களின் புதல்வர் திரு. ஆர். ரோஷன்குமார், +2 தேர்வில், முறையே 1108, 1118 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

http://i60.tinypic.com/27zagiv.jpg

மக்கள் திலகத்தின் பக்தர்களாகிய திரு. ரவிச்சந்திரன்மற்றும் திரு. ராமமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினருக்கு, மேலும் பெருமை சேர்த்து, எதிர்கால இந்தியாவை வளமுள்ள வலிமையான பாரத தேசமாக்க அவர்களின் பங்கு மகத்தானது என்பதை உணர்ந்து, அவர்கள் கல்வியறிவு மேலும் சிறக்க, தமிழ்நாட்டில் அதிக அளவில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் உருவாக்கி கல்வித்துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண வைத்த நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் ஆசியுடன், அன்புடன் வாழ்த்துகிறேன்.

படிப்பதற்கும் , கேட்பதற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது - திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் , திரு ராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் - கல்வியிலும் , செல்வத்திலும் , ஆரோக்கியத்திலும் உங்கள் பிள்ளைகள் மேலும் சிறப்பாக விளங்க வாழ்த்துக்கள் .

அன்புடன்
ரவி

Russellxss
8th May 2015, 10:47 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/s720x720/11026219_1624704634431240_6217019042760985881_n.jp g?oh=9e24c2895ea0c68babb55107fd147742&oe=55C17C1F


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
8th May 2015, 10:49 PM
திரைப்பட உலக ஜாம்பவான் டைரக்டர் சந்தாரமிடம் பரத ரத்னா விருது பெற்றவுடன் ஆசி வாங்கும்போது அருகில் பிரதமர் மொரார்ஜி தேசாய்


https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/11165086_1626123317622705_3106627315544332553_n.jp g?oh=d8e0f191740011214830f78db647206c&oe=55C37030


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
8th May 2015, 10:50 PM
ஜெய்சங்கர் நடித்த வீரப்பனின் கண்ணிப்பெண் படப்பிடிப்பு தளத்தில் தலைவர் சகுந்தலா வாணிஸ்ரீ


https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/11182222_1626120927622944_5931024600803749636_n.jp g?oh=bb50e9e6abacfc90cf3fcd23ab7f7015&oe=5609AE94

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

fidowag
8th May 2015, 10:51 PM
http://i60.tinypic.com/51znsz.jpg

இனிய நண்பர் திரு. சி.எஸ். குமார் அவர்கள் துரிதமாக 500 பதிவுகள் பதித்து
தொடர்ந்து பயணிப்பதற்கு அன்பான வாழ்த்துக்கள்.


7000 பதிவுகள் முடித்த எனக்கு தாமதம் ஆனாலும் , தவறாது வாழ்த்துக்கள்
தெரிவித்த நண்பர்கள் திரு. சி.எஸ். குமார், திரு. சைலேஷ் பாசு, திரு. ரவி (ஹைதராபாத் ) ஆகியோருக்கு இதயபூர்வமான நன்றி.



கடந்த வாரம் கோவை டிலைட்டில் நினைத்ததை முடிப்பவன்
இந்த வாரம் கோவை சண்முகாவில் நாடோடி மன்னன் - தகவல்கள் , பதிவுகள்
செய்த நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.


ஆர். லோகநாதன்.

Russellxss
8th May 2015, 10:51 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/11203175_1625432681025102_7429638445529358251_n.jp g?oh=10efb1e95722a45d1e3875f2fc8ac3a7&oe=55C613C8&__gda__=1440676121_5c194f31c4dbf999acef1f79c52720c c


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
8th May 2015, 10:55 PM
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? (2)
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?(2)
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
பெண்: பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?
ஆண்: நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11165219_1647224925506678_4982879199449209121_n.jp g?oh=2150229d05b1d4dbb7f9bdc23419ef23&oe=560B0708

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

fidowag
8th May 2015, 11:10 PM
தினகரன் -08/05/2015
http://i61.tinypic.com/dxxzs8.jpg

Russellxss
8th May 2015, 11:12 PM
"தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை,
என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
நான் என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
என்னுடனே எந்தன் பூவுடல் வாழும்,
உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்;
தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை,
என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
நான் என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
(https://youtu.be/m6K4iHRN5vU)
திரைப்படம் : பணம் படைத்தவன்,
பாடல் : வாலி அவர்கள்,
இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர்,
பாடியவர் : பி.சுசீலா அவர்கள்,
இயக்கம் : டி.ஆர்.ராமண்ணா அவர்கள்,
வெளியான ஆண்டு : 1965.


https://youtu.be/m6K4iHRN5vU?t=30

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
8th May 2015, 11:14 PM
மீனவ நண்பன் படக்காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட சமயம் .........
பாடலாசிரியர்களின் பெயர் பட்டியலை பார்வையிட்ட மக்கள் திலகம் , குறிப்பிட்ட அந்த பாடலாசிரியருக்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டாராம் ....
உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து அந்த பாடலாசிரியருக்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூற........
.படத்தின் இயக்குனர் ஸ்ரீதரோ ,
" எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? "
எனக் கேட்க ...
மக்கள் திலகமோ விடாப்பிடியாய் ,
: உங்களுக்குத் தெரியாதா .....ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க "
என்று கூறினாராம் ...
அந்தப் பாடல் தான்
'' தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து ''
ஜேசுதாஸ் - வாணியம்மா பாடிய பாடல்.!
அந்த கவிஞர் முத்துலிங்கம் !


https://youtu.be/w7qMSkDnE6k


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
8th May 2015, 11:42 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/s720x720/10408913_829707713780404_2400278441683463345_n.jpg ?oh=3c8322e5ab10c10d140c030322fb9854&oe=55CED81F

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

fidowag
9th May 2015, 08:08 AM
தின இதழ் -09/05/2015
http://i57.tinypic.com/2q16w3t.jpg

http://i61.tinypic.com/24yy2i8.jpg
http://i61.tinypic.com/95wyzr.jpg
http://i62.tinypic.com/2m780nc.jpg

http://i59.tinypic.com/2hydjl.jpg

fidowag
9th May 2015, 08:09 AM
http://i60.tinypic.com/xby73q.jpg
http://i60.tinypic.com/23ivt4i.jpg

http://i62.tinypic.com/mj234w.jpg