PDA

View Full Version : Makkal thilakam mgr part-11



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

siqutacelufuw
7th October 2014, 09:34 AM
புதிய வரவாய் இத்திரியினில் இணைந்திருக்கும் திரு. முத்தய்யா அம்மு அவர்களை, மக்கள் திலகம் மற்றும் அன்னை ஜானகி ஆகியோரின் ஆசியுடன் வரவேற்கிறேன்.

http://i59.tinypic.com/9qjsrp.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

நிழற்படம் அளித்து உதவியவர் : அன்பு அண்ணன் பெங்களூர் திரு. சி. எஸ். குமார்

Richardsof
7th October 2014, 09:34 AM
http://i59.tinypic.com/30sy03n.png

Richardsof
7th October 2014, 09:35 AM
http://i58.tinypic.com/k39euu.png

Richardsof
7th October 2014, 09:37 AM
http://i61.tinypic.com/amp55v.jpg

siqutacelufuw
7th October 2014, 09:38 AM
http://i60.tinypic.com/mncr7.jpg

புரட்சித் தலைவரின் இயல்பான தோற்றம் - அருகில் இயக்குனர் ப. நீலகண்டன்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
7th October 2014, 09:40 AM
திருப்பூர் குமரன்: 04 OCTOBER 1904 (It is better late than never. Please forgive me for posting this two days later)
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.

'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். திருப்பூரில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியில் இரக்கமற்ற போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், 'பாரதமாதாகி ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழங்கி உயிர்விட்ட தியாகி தான் இந்தத் திருப்பூர் குமரன். உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். அப்போது அவனுக்கு வயது வெறும் 28. ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த குமரன் தன் குடும்பத்தினரை பரிதவிக்கவிட்டுவிட்டு நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தார்.
அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.

திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:
(தமிழன் இதயம்)

மனமுவந்து உயிர் கொடுத்த
மானமுள்ள வீரர்கள்மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின் மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம்.

நேற்றைய முன்தினம் தான் சென்னிமலை குமரன் என்றழைக்கப்படும் கொடிகாத்த குமரனின் பிறந்த நாள். மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.
அப்பேர்பட்ட குமரனின் குடும்பத்தையும் வாழ வைத்தவர் நம் புரட்சித்தலைவர் தான். ஆமாம். இவரது துணைவியார் ராமாயி அம்மாள் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் அவரைத் தேடிச்சென்று எல்லா உதவிகளையும் செய்தவர் நம் புரட்சித்தலைவர் தான். அதனால் தான், தான் உயிர் வாழ்ந்த காலம் (1998) வரை பொன்மனச்செம்மலை தான் பெறாத பிள்ளையாகவே போற்றி வந்தார் ராமாயி அம்மாள். “எங்க வீட்டுப்பிள்ளை” என்று நாம் எல்லோரும் அழைப்பது போல் அவரும் அழைத்தார் என்பதை விட வேறு பெருமை புரட்ச்சித்தலைவரின் பக்தர்களான நமக்கு வேண்டுமா? திருப்பூர் கிருஷ்ண்னின் இந்த உரையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும். தலைவரின் மனம் பொன் மனம் என்பlது அனைவருக்கும் புரியும். என் மனம் பொன் மனம் என்பதைக்காணலாம் என அவரால் மட்டுமே ஆணித்தரமாக கூற இயலும் வேறு எந்தக்கொம்பனாலும் அவர் அருகில் கூட நிற்க இயலாது..

http://www.youtube.com/watch?v=UfNhuaNuVng

Thank you Sir for uploading this video clip.

siqutacelufuw
7th October 2014, 09:42 AM
எழில் வேந்தன் அவர்களின் ஒயிலான தோற்றம் "இதயவீணை" பட காஸ்டுயூம்ஸ் உடையில் . உடனிருப்பவர் ஜெமினி வாசன் அவர்களின் புதல்வர் திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் :

http://i59.tinypic.com/eqe98h.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th October 2014, 09:45 AM
புரட்சித் தலைவருடன் சிலம்புச்செல்வர்

http://i58.tinypic.com/au8iuc.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th October 2014, 09:49 AM
புரட்சித் தலைவருடன், நாட்டுக்காக மட்டுமே விளையாடி, முதன் முதலில், கிரிக்கெட் போட்டியில், உலக கோப்பை பெற்று தந்த திரு. கபில் தேவ் அவர்கள் { ஓட்டங்கள் (ரன்கள்) பல எடுத்து தனிப்பட்ட சாதனை புரிய வேண்டும் என்ற நினைப்பு இல்லாதவர்}

http://i61.tinypic.com/23rmt6q.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th October 2014, 10:02 AM
மற்ற நடிகர்களின் 25 படங்கள் ஒரு எம்.ஜி. ஆர். படத்துக்கு சமம் ! என்ற தலைப்பில் -

1965 - 1978 களில் வெளிவந்து, மக்கள் திலகத்தின் கலையுலக எதிரிகளுக்கு தக்க பதிலடிகள் அளித்து அசத்திய, அற்புதமான, " திரையுலகம் " இதழுக்காக - பட அதிபர் முக்தா சீனிவாசனின் பிரத்தியோக பழைய பேட்டி -

விரைவில் முழு செய்தியுடன் பிரசுரிக்கப்படும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th October 2014, 10:24 AM
அக்டோபர் - 5

30 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் 3வது பிறவி எடுத்து தான் ஒரு தனிப்பிறவி என்பதை நிரூபிப்பதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தலைவர் சேர்ந்த நாள். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளோ, உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் செல்போன், இணையதளம் ஆகியவை கிடையாது. மாலைப் பத்திரிகையில்தான் தலைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியை பார்த்தேன். சிறியதாகத்தான் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், மருத்துவமனைக்கு செல்வதை விரும்பாத தலைவர் அதுவும் பரிசோதனை முடிந்து உடனே திரும்பாமல் அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால்.... லேசாக பொறி தட்டியது.

அதற்கேற்பவே அடுத்தடுத்த நாட்களில் தலைவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும் மேல் சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்காக செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. பிரதமர் இந்திரா காந்தியே அப்பல்லோ வந்து தலைவரை சந்தித்து அமெரிக்க பயணத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.

பிறகு தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அங்கிருந்தபடியே தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்து திரும்பி வந்து 3வது முறையாக முதல்வராகி 3 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது வரலாறு.


அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

சாதனைகள் என்றால், அது திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி, நம் புரட்சி தலைவர் ஒருவரால் மட்டுமே படைக்க முடியும். பழைய நினைவுகள் சில துயரமாக இருந்தாலும், சாதனை படைத்த விவரத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி திரு. கலைவேந்தன் அவர்களே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th October 2014, 10:39 AM
http://s7.postimg.org/8pzhv3pmj/scan0006.jpg (http://postimg.org/image/5j4ybh56f/full/)

எம். ஜி. ஆர். என்ற மந்திர சொல்லுக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் உள்ள மவுசு எப்படிப்பட்டது என்பதை நாம் அடிக்கடி கூறுவதை, உறுதிப்படுத்தும் விதத்தில், நடு நிலை வார இதழ் "கல்கி" பிரசுரித்த செய்தியை, திரியின் பார்வையாளர்கள் அனைவரும் அறியும் வண்ணம், பதிவிட்டமைக்கு, சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th October 2014, 10:55 AM
http://i60.tinypic.com/292lov5.jpg

தமிழக முதல்வரான பின்பும், நம் புரட்சித்தலைவர் கடைப்பிடித்த எளிமை, வாழ்ந்த வாழ்க்கையின் தூய்மை, ஆண்ட ஆட்சியின் நேர்மை, புரோட்டா கால், பந்தா இல்லாமல் பலரையும் கவர்ந்த தன்மை - இதுதான் இதய தெய்வத்தின் அடையாளம்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
7th October 2014, 10:59 AM
THANKS LOGANATHAN SIR

SUPER ART DESIGN

http://i60.tinypic.com/3462m20.jpghttp://i62.tinypic.com/1z2369g.jpg

அனைத்து லட்சணங்களும் பொருந்தி அனைவரும் மயங்கும் அழகிய இளவரசர்...நம் எழில் ஓவியத்தின் அழகை சுந்தரமாய்க் கொண்டு வந்த அந்த கைகளின் சொந்தக்காரருக்கு எம்ஜிஆர் பக்தர்களின் இதயங்கனிந்த நன்றி. - பதிவிற்கு நன்றி திரு. லோகநாதன் சார்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
7th October 2014, 01:49 PM
எம்.ஜி.ஆருடைய படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் கிட்டத்தட்ட 11 பேர் கதை-வசனம் எழுதினார்கள். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம் ,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் முதலானோர்.

usxihajapon
7th October 2014, 04:28 PM
http://i62.tinypic.com/2lk4dfl.jpg

You can call them as Super Stars, Thalais, Dhalpathis, Supreme Stars, Ulaga Nayagans etc., etc.; Whatever you may feel like. But how long?
Bhagwan Budha quoted that three things cannot be hidden , the Truth, the Sun and the Moon. Likewise, the Charisma of MGR, the three letters magic word would only exist for ever as far as tamil cinemas are concerned.
Yes, no one could have even imagined the tremendous response given by the public at Albert Theatre on the eve of 100th day celebration of “Ayirathil Oruvan” which was originally released in 1965, 50 years back, when most of us were not even born. He had left this world for his heavenly abode in 1987, almost 27 years completed. But still, the gratitude without any expectation given away by the tamil speaking people towards their beloved leader had been proven beyond any doubts which could not be expressed in words. The gratefulness shown by them on that day to a great man who was a dedicated altruistic was awesome. He is still being remembered by them all over the world irrespective of their cast, creed and religion, he lives in their hearts. Time may pass and fade away but memories of him will live for immortal ages.
On that day, the 1040 seated capacity movie hall was jam-packed with around 1500 die-hard fans of MGR, most of them standing near the screen, sitting on the pathway – shouting, dancing and whistling whenever their demigod appeared on the screen. Most of them born after 1965 and I saw hundreds of people in their twenties and early thirties who have born after his death or were kids at the time of his death respectively. The stylish hero had carved a niche for himself not only in the field of acting but in every field of cinema. His body language and the elegant style of fighting (especially fencing) are not only magnetising the younger generations but will definitely create a centre of attention in the minds of future generation too. He had marked an indelible link which will remain eternally.

Russellisf
7th October 2014, 06:13 PM
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போதுதர்மம் வெளியேறலாம்தர்மம் அரசாளும் தருணம் வரும்போதுதவறு வெளியேறலாம்நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்அண்ணா அன்று சொன்னார்என்றும் அதுதான் சத்தியம

Russellisf
7th October 2014, 06:20 PM
எம்.ஜி.ஆர் தோட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத டி.ராஜேந்தர்!


சென்னை - 05-Oct-2014



3.10.2014 அன்று டி.ராஜேந்தருக்கு பிறந்த நாள். ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பினால் பெங்களூர் சிறையில் இருக்கும் காரணத்தால், தன் பிறந்த நாளைக் கொண்டாடாத ராஜேந்தர். தன் ஸ்ரீவில்லிப்புத்தூர் ரசிகர் மா. ஆனந்தராஜின் (இதயக்கனி வாசகரும் கூட) விருப்பத்திற்காக சென்னை ராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர்., தோட்டத்திற்கு முதன்முதலாக வருகை தந்தார். அங்குள்ள காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் பள்ளி மாணவ- மாணவியருடன் மனம் விட்டுப் பேசி கண்ணீர் விட்டு அழுதார். மாணவ-மாணவியர் அவரது கண்ணீரைத் துடைத்த காட்சி கண்டு அனைவரும் நெகிழ்ந்து போயினர். பின் அனைவரும் ஆனந்தராஜின் செலவில், 'இதயக்கனி' விஜயனின் ஏற்பாட்டில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.





இந்த நிகழ்ச்சியில் காலஞ்சென்ற முன்னாள் சபாநாயகர், அமைச்சர் க. ராசாராமின் மகன் ராஜசேகர், முன்னாள் அமைச்சர், சபாநாயகர் மதியழகனின் மகன் இளங்குமரன், தாம்பரம் ராஜன் (இதயக்கனி வாசகர்) ஆகியோரும் பங்கேற்றனர். "என் மனநிலையும், உணர்ச்சியும் எம்.ஜி.ஆரின் ஆன்மாவோடு சம்பந்தப்பட்டது. இந்த நாளை என் வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டேன்" என்றார்.

Russellzlc
7th October 2014, 06:21 PM
எம். ஜி. ஆரின் இதயவீணை, பல்லாண்டு வாழ்க, சிரித்து வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களுக்கு அவரோடு வேலை செய்திருக்கிறேன். சிரித்து வாழ வேண்டும் படத்தில் ஒரு காட்சியில் எம். ஜி. ஆர். சிறைச்சாலைக்குள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியை என்னை எடுக்கும் படி சுபா சுந்தரம் சொல்ல நான் கேமராவை எடுத்து கோணம் பார்த்தேன்.

இப்போ மாதிரி சைபர் சாட் கேமராக்கள் அப்போ கிடையாது. அதனால் போட்டோ எப்படி வர வேண்டுமோ அதற்கேற்ப மாதிரி நடிகர்கள் ஆக்ஷன் கொடுக்க வேண்டும். அதனால் நான் எம். ஜி. ஆரிடம் 'சார் கொஞ்சம் சாப்பாட்டு தட்டை மேலே தூக்கி சாப்பிடுவது போல கையை வையுங்கள்' என்றேன். உடனே பக்கத்தில் இருந்த எம். ஜி. ஆரின் உதவியாளர்கள் ஓடி வந்து என் கையைத் தட்டி விட்டு, 'நீ என்ன சொல்றே...? அவரு எப்படி இருக்காரோ அப்படியே எடு' என்றார்கள். உடனே எம். ஜி. ஆர் அவர்களிடம், 'நீங்க சும்மா இருங்க அவர் வேலையை சரியா செய்ய இடம் கொடுங்க. காட்சி தத்துரூபமா வரணும்ணு தம்பி நினைக்கிறான்' என்று கரகரத்த குரலில் சொன்னதும் நான் புல்லரித்து நின்றேன்.

புகைப்பட கலைஞர் ஸ்டில் ரவி அவர்கள் பேட்டியில் இருந்து
உண்மை விளங்கும் நேரம்’

தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இயக்குநர்களுக்கும் புரட்சித் தலைவர் ஒத்துழைக்க மாட்டார்; அவர் விருப்பப்படிதான் மற்றவர்கள் செயல்பட வேண்டும் என்று நினைப்பார் என்றெல்லாம் கூறப்படும் விமர்சனங்களை தவிடுபொடியாக்கும் வகையில் ஸ்டில் ரவி அவர்களின் பேட்டியை ஆதாரத்தோடு பதிவிட்ட திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

நான் ஏற்கனவே உ..சு.வா.புத்தர் கோயில் சண்டைக் காட்சி பற்றிய பதிவில் கூறியபடி, திரு.ஜி.கிருஷ்ணா போன்றவர்கள் ‘எங்கிருந்தாலும்’ மக்கள் திலகத்தை ரசிக்கவே செய்கின்றனர். தலைவர் நடித்து சிவகாமியின் சபதம் திரைப்படம் வெளியாகவில்லையே என்று நம்மைப் போலவே ஏங்கும் அவருடைய உயர்ந்த ரசனைக்கும் ஸ்டில் ரவி அவர்களின் பேட்டியை பதிவிட்டதன் மூலம் உண்மையை விளங்க வைத்த நேர்மைக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து தாங்கள் இதுபோன்ற பதிவுகளை பதிவிட எங்கள் திரி நண்பர்கள் சார்பாக வேண்டுகிறேன். நன்றி திரு. ஜி.கிருஷ்ணா சார்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

பின்குறிப்பு: நண்பர் திரு.முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு, தங்களுடைய 2,508வது பதிவில், எனக்கு அளித்த பதிலில், ‘இத்தனை நாள் உங்களுடன் interact செய்தது போதும்’ என்று குறிப்பிட்ட தாங்கள், அந்த விரதத்தை முடித்து என்னுடன் interact செய்ததற்கும் அதற்கு காரணமான ‘மார்ச் 31ம் தேதி திரையுலகின் கருப்பு நாள்’ என்று நண்பர் திரு.கோபால் அவர்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு (பின்னர் அவர் அந்த பதிவை எடுத்து விட்டாலும் கூட) அவருக்கு தாங்க முடியாத ஏமாற்றத்தை தந்த, எனக்கும் ‘மிகவும் பிடித்த’ ராஜராஜ சோழன்’ திரைப்படத்துக்கும் நன்றி.

Russellisf
7th October 2014, 06:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps61ecc383.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps61ecc383.jpg.html)

Russellisf
7th October 2014, 06:29 PM
இன்னா செய்தாரை(யே)ஒருத்து _அவர் நாண நன்னயம் செய்துவிடல்!_- by THALAIVAR

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps51acac01.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps51acac01.jpg.html)

Russellisf
7th October 2014, 08:12 PM
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது !
பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை !
சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே !
வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் !
தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு !

Russellisf
7th October 2014, 08:15 PM
இந்த சரித்திர சாட்சியயை
இந்த நேரத்தில்பகிறுவுவது
பொருத்தமாக இருக்கும்
ஆம் கடன்காரணக வலம் வந்த
கருணாநிதியை -நம் தலைவரும்
நம் அம்மாவும் கடனை மீட்டுகொடுக்க
உதவியதாய் கருணவும் மாறன்னும்
கூறிய பேட்டீ

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps70eed2e1.png (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps70eed2e1.png.html)

oygateedat
7th October 2014, 08:42 PM
திருப்பூர் குமரன்: 04 OCTOBER 1904 (It is better late than never. Please forgive me for posting this two days later)
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.

'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். திருப்பூரில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியில் இரக்கமற்ற போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், 'பாரதமாதாகி ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழங்கி உயிர்விட்ட தியாகி தான் இந்தத் திருப்பூர் குமரன். உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். அப்போது அவனுக்கு வயது வெறும் 28. ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த குமரன் தன் குடும்பத்தினரை பரிதவிக்கவிட்டுவிட்டு நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தார்.
அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.

திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:
(தமிழன் இதயம்)

மனமுவந்து உயிர் கொடுத்த
மானமுள்ள வீரர்கள்மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின் மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம்.

நேற்றைய முன்தினம் தான் சென்னிமலை குமரன் என்றழைக்கப்படும் கொடிகாத்த குமரனின் பிறந்த நாள். மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.
அப்பேர்பட்ட குமரனின் குடும்பத்தையும் வாழ வைத்தவர் நம் புரட்சித்தலைவர் தான். ஆமாம். இவரது துணைவியார் ராமாயி அம்மாள் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் அவரைத் தேடிச்சென்று எல்லா உதவிகளையும் செய்தவர் நம் புரட்சித்தலைவர் தான். அதனால் தான், தான் உயிர் வாழ்ந்த காலம் (1998) வரை பொன்மனச்செம்மலை தான் பெறாத பிள்ளையாகவே போற்றி வந்தார் ராமாயி அம்மாள். “எங்க வீட்டுப்பிள்ளை” என்று நாம் எல்லோரும் அழைப்பது போல் அவரும் அழைத்தார் என்பதை விட வேறு பெருமை புரட்ச்சித்தலைவரின் பக்தர்களான நமக்கு வேண்டுமா? திருப்பூர் கிருஷ்ண்னின் இந்த உரையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும். தலைவரின் மனம் பொன் மனம் என்பlது அனைவருக்கும் புரியும். என் மனம் பொன் மனம் என்பதைக்காணலாம் என அவரால் மட்டுமே ஆணித்தரமாக கூற இயலும் வேறு எந்தக்கொம்பனாலும் அவர் அருகில் கூட நிற்க இயலாது.. p

http://www.youtube.com/watch?v=UfNhuaNuVng

Thank u for uploading this matter with video.

Russellbpw
7th October 2014, 09:13 PM
மற்ற நடிகர்களின் 25 படங்கள் ஒரு எம்.ஜி. ஆர். படத்துக்கு சமம் ! என்ற தலைப்பில் -

1965 - 1978 களில் வெளிவந்து, மக்கள் திலகத்தின் கலையுலக எதிரிகளுக்கு தக்க பதிலடிகள் அளித்து அசத்திய, அற்புதமான, " திரையுலகம் " இதழுக்காக - பட அதிபர் முக்தா சீனிவாசனின் பிரத்தியோக பழைய பேட்டி -

விரைவில் முழு செய்தியுடன் பிரசுரிக்கப்படும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

:yessir: :confused2: :smokesmile: :goodidea:

Russellbpw
7th October 2014, 09:31 PM
அக்டோபர் - 5

30 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் 3வது பிறவி எடுத்து தான் ஒரு தனிப்பிறவி என்பதை நிரூபிப்பதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தலைவர் சேர்ந்த நாள். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளோ, உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் செல்போன், இணையதளம் ஆகியவை கிடையாது. மாலைப் பத்திரிகையில்தான் தலைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியை பார்த்தேன். சிறியதாகத்தான் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், மருத்துவமனைக்கு செல்வதை விரும்பாத தலைவர் அதுவும் பரிசோதனை முடிந்து உடனே திரும்பாமல் அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால்.... லேசாக பொறி தட்டியது.

அதற்கேற்பவே அடுத்தடுத்த நாட்களில் தலைவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும் மேல் சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்காக செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தன.

MISSING COMPONENT IN THIS NEWS - ANOTHER REASON BEHIND Mrs. INDIRA GANDHI's VISIT :

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai2-1_zpsbc87b586.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai2-1_zpsbc87b586.jpg.html)


பிரதமர் இந்திரா காந்தியே அப்பல்லோ வந்து தலைவரை சந்தித்து அமெரிக்க பயணத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.

பிறகு தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அங்கிருந்தபடியே தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்து திரும்பி வந்து 3வது முறையாக முதல்வராகி 3 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது வரலாறு.


அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
.....

Russellzlc
7th October 2014, 09:57 PM
அன்பார்ந்த நண்பர் திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு,

தங்கள் விளக்கத்துக்கும் என் மீது தனிப்பட்ட கோபமோ வருத்தமோ கொள்ளும் அளவுக்கு நம்மிடம் எந்த பகையும் இல்லையே என்று கூறியதற்கும் நன்றி.

அதேபோல ‘நான் நினைப்பது தவறாக இருக்கலாம், எனக்குப்படுகிறது, எனக்கு தோன்றுகிறது’ என்று நீங்களே உறுதியாக நம்ப மறுக்கும் அளவுக்கு, எனக்கும் அமரராகி விட்ட திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மீது எந்த கோபமோ வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இன்னமும் சொல்கிறேன். திரு.சிவாஜி கணேசன் அவர்கள் சிறந்த நடிகர். ஆனால், அவர் மட்டுமே சிறந்த நடிகர் என்று ஒப்புக் கொண்டால்தான் அவர் மீது வெறுப்பு இல்லை என்று அர்த்தம் என சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது.

உதாரணமாக, அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பலே பாண்டியா படத்தில் வரும் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடல் காட்சியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பை ரசித்திருக்கிறேன். அதேபோல, அந்த பாடலில் கிண்டலும் கேலியுமாக ஸ்வரம் சொல்லும் நடிகவேள் திரு.எம்.ஆர்.ராதா அவர்களின் நடிப்பை பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். நீங்களே மனசாட்சிப்படி சொல்லுங்கள். அந்த பாடலில் நடிப்பில் யாரை யார் விஞ்சினார்கள்? என்று யார்தான் சொல்ல முடியும்?

என்னைப் பொறுத்தவரை இருவரும் சிறந்த கலைஞர்களே. இத்தனைக்கும் திரு.எம்.ஆர்.ராதா அவர்கள் காழ்ப்புணர்ச்சியால் புரட்சித் தலைவரை சுட்டவர் என்ற போதும் அவரது நடிப்புத் திறமையை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. இதுவே எங்களது நடுநிலைக்கு சான்று. திரு. எம்.ஆர்.ராதா அவர்கள் மீதே வெறுப்பு கொள்ளாத எங்களுக்கு‘ எனது தம்பி ’என்று தலைவரால் அழைக்கப்பட்ட திரு.சிவாஜி கணேசன் அவர்கள் மீது என்ன வெறுப்பு இருக்கப் போகிறது?

சகோதரர் செல்வகுமார் அவர்கள் மற்ற நடிகர்களின் 25 படங்கள் ஒரு எம்.ஜி.ஆர் படத்துக்கு சமம் என்று திரு. முக்தா சீனிவாசன் தலைவரைப் பற்றி புகழும் செய்தியைத்தான் வெளியிடப் போவதாக சொல்லியிருக்கிறார். இதில் என்ன provoke இருக்கிறது? ஆனால், எங்கள் தலைவரை மறைமுகமாக தாக்கும் வகையில் ‘அந்நிய கள்’ என்றும் பஜனைக் கூட்டம் என்று எங்களையும் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? சரி அதுதான் போகட்டும். வேறு யாரையோ கூறியதாகவே இருக்கட்டும். ஆனால், சிவா என்பவர் எங்கள் தலைவரை நேரடியாக கிண்டல் செய்யும் வகையில் ‘நீ தானய்யா உண்மையான பொன்மனச் செம்மல்’ என்று உங்கள் அபிமான நடிகரைப் போற்றுவது provoke இல்லையென்று எப்போதும் நடுநிலையோடு செயல்படுவதாக கூறும் நீங்கள் கூறமாட்டீர்கள் என நம்புகிறேன். நானும் சில விளக்கங்களை தெளிவுபடுத்த உதவிய உங்களுக்கு சிறப்பு நன்றி.

அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Scottkaz
7th October 2014, 10:20 PM
http://i60.tinypic.com/mncr7.jpg

புரட்சித் தலைவரின் இயல்பான தோற்றம் - அருகில் இயக்குனர் ப. நீலகண்டன்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

மிகவும் அருமையான ஸ்டில் திரு செல்வகுமார் சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
7th October 2014, 10:22 PM
மற்ற நடிகர்களின் 25 படங்கள் ஒரு எம்.ஜி. ஆர். படத்துக்கு சமம் ! என்ற தலைப்பில் -

1965 - 1978 களில் வெளிவந்து, மக்கள் திலகத்தின் கலையுலக எதிரிகளுக்கு தக்க பதிலடிகள் அளித்து அசத்திய, அற்புதமான, " திரையுலகம் " இதழுக்காக - பட அதிபர் முக்தா சீனிவாசனின் பிரத்தியோக பழைய பேட்டி -

விரைவில் முழு செய்தியுடன் பிரசுரிக்கப்படும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் விரைவில் பதிவு செய்யவும்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
7th October 2014, 10:30 PM
http://i62.tinypic.com/2lk4dfl.jpg

You can call them as Super Stars, Thalais, Dhalpathis, Supreme Stars, Ulaga Nayagans etc., etc.; Whatever you may feel like. But how long?
Bhagwan Budha quoted that three things cannot be hidden , the Truth, the Sun and the Moon. Likewise, the Charisma of MGR, the three letters magic word would only exist for ever as far as tamil cinemas are concerned.
Yes, no one could have even imagined the tremendous response given by the public at Albert Theatre on the eve of 100th day celebration of “Ayirathil Oruvan” which was originally released in 1965, 50 years back, when most of us were not even born. He had left this world for his heavenly abode in 1987, almost 27 years completed. But still, the gratitude without any expectation given away by the tamil speaking people towards their beloved leader had been proven beyond any doubts which could not be expressed in words. The gratefulness shown by them on that day to a great man who was a dedicated altruistic was awesome. He is still being remembered by them all over the world irrespective of their cast, creed and religion, he lives in their hearts. Time may pass and fade away but memories of him will live for immortal ages.
On that day, the 1040 seated capacity movie hall was jam-packed with around 1500 die-hard fans of MGR, most of them standing near the screen, sitting on the pathway – shouting, dancing and whistling whenever their demigod appeared on the screen. Most of them born after 1965 and I saw hundreds of people in their twenties and early thirties who have born after his death or were kids at the time of his death respectively. The stylish hero had carved a niche for himself not only in the field of acting but in every field of cinema. His body language and the elegant style of fighting (especially fencing) are not only magnetising the younger generations but will definitely create a centre of attention in the minds of future generation too. He had marked an indelible link which will remain eternally.

ஆஹா, சூப்பர். தொடர்ந்து திரியில் அசத்துங்கள் திரு சந்திரசேகர் சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
8th October 2014, 07:21 AM
வேலூர் records 41

http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/b71c58f7-1b10-4bd5-962f-4dc5a783e072_zps5f8ab056.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/b71c58f7-1b10-4bd5-962f-4dc5a783e072_zps5f8ab056.jpg.html)

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
8th October 2014, 07:31 AM
வேலூர் records 42
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/cfa656d8-bd1e-43ef-954a-f1a6b140b503_zps1b2226e4.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/cfa656d8-bd1e-43ef-954a-f1a6b140b503_zps1b2226e4.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

usxihajapon
8th October 2014, 08:42 AM
http://i60.tinypic.com/242uzqq.jpg

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் நினைவுநாள் இன்று. 1959ம் வருடம் இதே நாளில் தான் தலைவரையும், தமிழக மக்களையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு தனது இளம் வயதிலேயே (29) அண்ணார் இவ்வுலகை விட்டு மறைந்தார். ஆனால் அவர் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டும், பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டும் பாடல்களும் இவ்வுலகம் உள்ளளவும் நம் நினைவை விட்டு மறையாது. தலைவர் அவர் மீது வைத்திருந்த அன்பும், அண்ணார் தலைவர் மீது கொண்டிருந்த மரியாதையும் அனைவரும் அறிந்ததே. அவரின் அகால மறைவு தமிழ்ச் சமுதாயத்திற்கும் திரைப்படத் துறைக்கும் (குறிப்பாக தலைவரின் திரை வாழ்க்கைக்கு மட்டுமல்ல; அரசியல் வாழ்க்கைக்கும் இணைந்தே) போன நூற்றாண்டில் நேர்நத மிகப்பெரிய கொடுமையென்று கூறினால் அது மிகையில்லை.

அண்ணாரின் நினைவைப் போற்றுவோம். தலைவரின் வழி நடப்போம்.

Richardsof
8th October 2014, 09:11 AM
Makkal thilagam mgr in ''rajamukthi '' 9.10.1948 ***** 67th anniversary

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 18வது திரைப்படம் ராஜமுக்தி பற்றிய ஒரு சிறு தொகுப்பு :

1. இத்திரைப்படம் வெளியான தேதி : 09-10-1948

2. தயாரிப்பு : எம். கே. தியாகராஜ பாகவதரின் "நரேந்திர பிக்சர்ஸ்" நிறுவனம்

3. இயக்குனர் : ராஜா சந்திரசேகர்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : சேனாதிபதி

5. பாடல்கள் : பாபநாசம் சிவன்

6. கதை & ஸினாரியோ : ராஜா சந்திரசேகர்

7. வசனம் : புதுமைப்பித்தன், நாஞ்சில் நாடு டி. என். ராஜப்பா

8. இசை : சி. ஆர். சுப்பராம்

9. கதாநாயகன் மற்றும் நாயகி : : எம். கே. தியாகராஜ பாகவதர் - பி. பானுமதி

10.. இதர நடிக நடிகையர் : வி. என். ஜானகி, எம். ஜி. சக்கரபாணி, பி.எஸ் வீரப்பா, சி. டி. ராஜகாந்தம்,

courtesy - thiru selvakumar

Richardsof
8th October 2014, 09:12 AM
The year 1948 saw the desperate attempts of M. K. Thyagaraja Bhagavathar to make a comeback after his sad sojourn in prison for some 30 traumatic months following the sensational Lakshmikantham murder case. As soon as he came out of prison, he took refuge in religion, started visiting temples and avoided his friends and favourite haunts. He launched a film project in Poona at the famous Prabhat Studio, appropriately titled Raja Mukthi (The Salvation of Raja (Thyagaraja)!). He called his friend Raja Chandrasekhar to direct the movie. Bhanumathi and V. N. Janaki were cast in the lead. M. G. Ramachandran, yet to hit big time, did a supporting role.

Papanasam Sivan penned the lyrics, while Alathur Subramaniam (of the famous Alathur Brothers) gave ‘sangeetha sikshai’ and C. R. Subbaraman did the orchestration. Puthumai Pitthan, one of the finest writers, worked on the script until premature death took him away. M. L. Vasanthakumari lent her singing voice to V. N. Janaki, and rendered duets with Bhagavathar.

After that phenomenal box-office record-smasher, Haridas (1944), there had been no Bhagavathar movie and consequently expectations ran high about Raja Mukthi and its release was eagerly awaited. Any Bhagavathar movie took long even in the best of times and now it was worse. As the project dragged on, the air was rife with all kinds of rumours — Bhagavathar has lost his voice; he has gone bald; the legendary “Bhagavathar crop” has vanished.

A familiar tale of kings at loggerheads, a pregnant queen (Janaki) being abandoned, a young woman (Bhanumathi) trying to seduce the hero (MKT) with an eye on the throne… all these elements were spun into the story by Raja Chandrasekhar.

MGR played the warring king. Bhanumathi who made a splash in the Telugu film Swargaseema was brought into Tamil cinema and this was her second film as vamp. Like in any Bhagavathar film, in this too, music dominated. The gramophone discs were released well in advance and songs such as ‘Unnaiyallal Oru Thurumbu...’ (MKT, raga Saramathi) became popular. However, when the film was released, it failed miserably and Bhagavathar broke under its shattering impact. It couldn’t revive his old magic. P. S. Veerappa, later noted screen villain and producer (Alayamani), made his debut in this movie. There was an on-screen nagaswaram interlude by the legend T. N. Rajaratnam Pillai but few remember it.

Remembered for: As an attempt by MKT to resurrect his film career but regrettably it did not happen...

Richardsof
8th October 2014, 09:14 AM
http://i61.tinypic.com/5do2kn.jpg

Richardsof
8th October 2014, 09:17 AM
"தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா..." என்றும், "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" எனவும், "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி" போன்ற பெ*ரிய தத்துவங்களை எளிமையாக திரைப்பாடல்களில் இடம்பெற வைத்தவர் பட்டுக்கோட்டையார். தேவையில்லா உவமை, உவமானங்களைத் தேடி அவர் போனதில்லை.

பட்டுக்கோட்டையார் என செல்லமாக அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இந்த உலகில் வாழ்ந்தது மொத்தம் 29 வருடங்கள்தான் ஆனால் இந்த குறுகிய காலத்தில் அவர் எழுதிச் சேர்த்த கவிதைச் செல்வங்கள் நிறைய.

Richardsof
8th October 2014, 09:37 AM
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி

வேலூர் நகர் எம்ஜிஆர் தலைமை மன்றம் வெளியிட்ட ''உலகம் சுற்றும் வாலிபன் '' வரவேற்பு நோட்டீஸ் மற்றும் 100 வது நாள் நோட்டீஸ் பதிவுகள் மிகவும் அருமை .

இனிய நண்பர் திரு சந்திர சேகர்

தங்களுடைய கட்டுரைகள் மிகவும் அருமை .

usxihajapon
8th October 2014, 01:48 PM
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி

வேலூர் நகர் எம்ஜிஆர் தலைமை மன்றம் வெளியிட்ட ''உலகம் சுற்றும் வாலிபன் '' வரவேற்பு நோட்டீஸ் மற்றும் 100 வது நாள் நோட்டீஸ் பதிவுகள் மிகவும் அருமை .

இனிய நண்பர் திரு சந்திர சேகர்

தங்களுடைய கட்டுரைகள் மிகவும் அருமை .

Thankyou very much sir.

usxihajapon
8th October 2014, 01:55 PM
ஆஹா, சூப்பர். தொடர்ந்து திரியில் அசத்துங்கள் திரு சந்திரசேகர் சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

These are all possible only because of the unstinted support shown by all (thalaivar devotees) of you. Infact, you are the one who has encouraged me and also taught each and every thing very patiently over phone. My sincere thanks to you, sir.

Richardsof
8th October 2014, 02:13 PM
COURTESY - AP TALKIES

ADIMAIPEN- TELUGU DUBBED.

http://i62.tinypic.com/2qa6yw9.jpg

Richardsof
8th October 2014, 02:21 PM
மக்கள் திலகம் அவர்களின் ''எங்கள் தங்கம் '' இன்று 44 ஆண்டுகள் நிறைவு நாள் .


9.10.1970 அன்று வெளியான மக்கள் திலகத்தின் எங்கள் தங்கம் - மிகப்பெரிய வெற்றி படம் .

மக்கள் திலகம் வித்தியாசமான வேடத்தில் நடித்த படம் .

மக்கள் திலகம் அவர்களின் பாடல் காட்சிகளில் நடிப்பு அருமை

1. ஒரு நாள் கூத்துக்கு மீசை யை .........

2. விண்வெளி பயணம் பற்றிய பாடல் ....


இனிமையான பாடல்கள் .

தங்க பதக்கத்தில் மேலே ......

நான் அளவோடு ரசிப்பவன் ....

டோன்ட் டச் மீ மேடம் எக்ஸ் .....

நான் செத்து பிழைச்சவண்டா ....

மக்கள் திலகம் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் வெளிநாட்டில் இருந்தபோது வந்த படம் .

மேகலா நிறுவனத்தை வாழவைத்த படம் . இன்றும் அமுதசுரபியாக திகழும் எங்கள் தங்கம் .

Richardsof
8th October 2014, 02:41 PM
http://i58.tinypic.com/24kwnzl.jpg

Richardsof
8th October 2014, 02:41 PM
http://i58.tinypic.com/20fw9ys.jpg

Richardsof
8th October 2014, 02:44 PM
http://i58.tinypic.com/2w6tagw.jpg

Richardsof
8th October 2014, 02:45 PM
http://i61.tinypic.com/ekp5pu.jpg

Richardsof
8th October 2014, 02:48 PM
CHENNAI - CHITHRA TALKIES

http://i60.tinypic.com/35aps83.jpg

Richardsof
8th October 2014, 02:49 PM
http://i59.tinypic.com/jkh7wk.jpg

Richardsof
8th October 2014, 02:53 PM
http://i62.tinypic.com/2jdq7fk.jpg

gkrishna
8th October 2014, 03:41 PM
எங்கள் தங்கம் சித்ரா திரை அரங்கு பற்றிய புகைப்படங்கள் அருமை எஸ்வி சார் . நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் வெளியானது .

Scottkaz
8th October 2014, 04:42 PM
http://i62.tinypic.com/2b1s0j.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
8th October 2014, 04:45 PM
வேலூர் records43
http://i62.tinypic.com/2ltr2u1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
8th October 2014, 04:47 PM
வேலூர் records44
http://i57.tinypic.com/30ij4ls.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
8th October 2014, 04:51 PM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/6092e883-7c4c-492e-9c1d-21ec8fb1f025_zps5371cc2b.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/6092e883-7c4c-492e-9c1d-21ec8fb1f025_zps5371cc2b.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
8th October 2014, 04:55 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps93f259a4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps93f259a4.jpg.html)


அறுபதுகளில் புகழ்பெற்ற தென்னிந்தியக் கதாநாயகிகளில் ஒருவர் ராஜசுலோச்சனா. கடந்த ஆண்டு தனது 77 வயதில் சென்னையில் மறைந்தார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்த இவர் 1961-ல்
வெளியான ‘நல்லவன் வாழ்வான்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி.
அறிஞர் அண்ணா கதை, வசனத்தில் பி. நீலகண்டன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகி ராஜசுலோச்சனாவுக்கு கிளாப் அடிக்க வேண்டும் என்றொரு ஆசை.
எம்.ஜி.ஆர். நடித்த ஒரு ஷாட்டுக்குக் கிளாப் அடிக்கக் கற்றுக்கொடுத்தார் இயக்குநர். ஒருமுறைதான் மிகச் சரியாக அவர் கிளாப் அடித்தார். கிளாப் அடிக்கும் முன்பு எம்.ஜி.ஆர் வியப்பதைப் புகைப்படக்காரர் க்ளிக்கிவிட்டார்.
- தி இந்து .

Russellisf
8th October 2014, 04:57 PM
என்னை நம்பாமல் கெட்டவர்கள்
நிறைய உண்டு ; நம்பிக் கெட்டவர்கள்
இன்று வரை இல்லை ! "



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps73f24c2c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps73f24c2c.jpg.html)

Russellisf
8th October 2014, 05:03 PM
CURRENT SITUATION IN TAMIL NADU


https://www.youtube.com/watch?v=QGwbnw0T4kU

Scottkaz
8th October 2014, 05:07 PM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/c2c4d7f6-aa7d-4b87-bc75-723de3e2d849_zpsbbca718d.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/c2c4d7f6-aa7d-4b87-bc75-723de3e2d849_zpsbbca718d.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
8th October 2014, 05:08 PM
'எங்கள் தங்கம்' படத்தில் 'கதாகாலட்சேப' பாடல் காட்சி ஒன்று உண்டு. கவிஞர் வாலி எழுதிய அந்தப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்., உச்சிக்குடுமியுள்ள பாகவதர்போல், "நம்ம பகுத்தறிவு பதையே"... என்று பாடித் தொடங்குவார்.

'சந்திர மண்டல விஜயம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கதாகாலட்சேபம் முழுவதும், நிலவில் மனிதன் கால் வைத்த நிகழ்வு பற்றியே அமைந்ததாகும்.

டி. எம்.எஸ்., எம்.ஜி.ஆருக்காக பாடிய அந்த பாடலில் நிலவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங் பற்றி, "ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா... வா... உனது காலை எடுத்து வைத்து வா வா..." என்ற வரிகள் சாரதா படத்தில் வரும் "மணமகளே மணமகளே வா வா..." என்ற பாடல் டியூனில் வருவது போல், வேறு சில தமிழ்ப்பட பாடல்களும் கதம்பமாக இடம் பெற்றிருக்கும்.

அப்படி சிவாஜி நடித்த 'இருமலர்கள்' படத்தில் வரும் "மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்" என்ற வரிகளை எம்.ஜி.ஆர்., "மன்னிக்க வேண்டுகிறேன் செய்த தவறுக்கு வருந்துகிறேன்" என்று அதே டியூனில் பாடுவது போல் வரும்.

படத்தின் இசைத்தட்டில் "போகாதே... போகாதே... என் கணவா... பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்ற 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' பாடல் வரிகளை எம்.ஜி.ஆர்., "போகாதே போகாதே நரசிம்மா- பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்று பாடுவது போல் இடம் பெற்றது. ஆனால் படத்தில் பெறவில்லை.

Russellisf
8th October 2014, 05:12 PM
எல்லோரையும் வாழவைத்த தங்கம்




வேலூர் records43
http://i62.tinypic.com/2ltr2u1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
8th October 2014, 05:15 PM
https://www.youtube.com/watch?v=-SGWg7aCiPA



'எங்கள் தங்கம்' படத்தில் 'கதாகாலட்சேப' பாடல் காட்சி ஒன்று உண்டு. கவிஞர் வாலி எழுதிய அந்தப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்., உச்சிக்குடுமியுள்ள பாகவதர்போல், "நம்ம பகுத்தறிவு பதையே"... என்று பாடித் தொடங்குவார்.

'சந்திர மண்டல விஜயம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கதாகாலட்சேபம் முழுவதும், நிலவில் மனிதன் கால் வைத்த நிகழ்வு பற்றியே அமைந்ததாகும்.

டி. எம்.எஸ்., எம்.ஜி.ஆருக்காக பாடிய அந்த பாடலில் நிலவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங் பற்றி, "ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா... வா... உனது காலை எடுத்து வைத்து வா வா..." என்ற வரிகள் சாரதா படத்தில் வரும் "மணமகளே மணமகளே வா வா..." என்ற பாடல் டியூனில் வருவது போல், வேறு சில தமிழ்ப்பட பாடல்களும் கதம்பமாக இடம் பெற்றிருக்கும்.

அப்படி சிவாஜி நடித்த 'இருமலர்கள்' படத்தில் வரும் "மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்" என்ற வரிகளை எம்.ஜி.ஆர்., "மன்னிக்க வேண்டுகிறேன் செய்த தவறுக்கு வருந்துகிறேன்" என்று அதே டியூனில் பாடுவது போல் வரும்.

படத்தின் இசைத்தட்டில் "போகாதே... போகாதே... என் கணவா... பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்ற 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' பாடல் வரிகளை எம்.ஜி.ஆர்., "போகாதே போகாதே நரசிம்மா- பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்று பாடுவது போல் இடம் பெற்றது. ஆனால் படத்தில் பெறவில்லை.

Russellisf
8th October 2014, 05:15 PM
https://www.youtube.com/watch?v=ODsBMRcGo9g


thanks sailesh sir

Russellisf
8th October 2014, 05:20 PM
not an idea we will submit the evidence





:yessir: :confused2: :smokesmile: :goodidea:

Russellisf
8th October 2014, 05:24 PM
போன நூற்றாண்டின் எவர்க்ரீன் டூயட் பாடல்

https://www.youtube.com/watch?v=8fIIh8AXcpg

Richardsof
8th October 2014, 05:28 PM
மணி ஸ்ரீகாந்தன்

"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்"

http://i58.tinypic.com/o08qd0.jpghttp://i60.tinypic.com/2jcyntv.jpg

தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா



தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:

அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.


எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.


வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.
http://i57.tinypic.com/29zcx00.jpg
அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.
http://i58.tinypic.com/s5g1sj.jpg

ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.


எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.

Russellisf
8th October 2014, 05:30 PM
http://www.youtube.com/watch?v=bYYOBCQZRG8

Russellisf
8th October 2014, 05:33 PM
கடல் கடந்தாலும் நீங்கள் தான் மக்களின் நிரந்தர கதா நாயகன்



மணி ஸ்ரீகாந்தன்

"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்"

http://i58.tinypic.com/o08qd0.jpghttp://i60.tinypic.com/2jcyntv.jpg

தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா



தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:

அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.


எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.


வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.
http://i57.tinypic.com/29zcx00.jpg
அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.
http://i58.tinypic.com/s5g1sj.jpg

ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.


எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.

Russellisf
8th October 2014, 05:33 PM
http://www.youtube.com/watch?v=aM1adZVzcFQ

Russellzlc
8th October 2014, 05:39 PM
திரியில் தனக்குத் தானே மானியம் விட்டுக் கொள்ளும் அறிவாளி (உபயம் :திரு.ஆர்.கே.எஸ்) நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,

நடிகர் ஆனந்தன் கூட 3 திரைப்படங்களில் காதல் காட்சிகள், நடனம், சண்டை என்று அசத்தியுள்ளதால் அவர் முதல்வராகும் தகுதி கொண்டவர் என்றால் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்கிறீர்கள்? முதல்வராவதற்கு இவையெல்லாம்தான் தகுதிகள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருப்பது வேடிக்கை. அவை மட்டுமே தகுதி என்றிருந்தால் நடிகர் ஆனந்தனையும் மக்கள் முதல்வராக்கியிருப்பார்களே? இதை நினைவுபடுத்த வேண்டி இருப்பதற்காக வருந்துகிறேன். ஆனந்தனை விட திறமையாளரான திரு.சிவாஜி கணேசன் அவர்களை (இப்போது திருப்தியா?) எம்.எல்.ஏ.வாக கூட மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையே?

இருந்தாலும் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்பதுதானே ஜனநாயகம்? அந்த வகையில் ஆனந்தன் என்ன? அவரைப் போல ஆடல், பாடல், சண்டை போன்ற திறமைகள் இல்லாத நீங்களே கூட (மன்னிக்க வேண்டும். உங்களுக்கு ஒருவேளை அந்த திறமைகள் இருக்கலாம். எனக்கு தெரியாததால் கூறுகிறேன். இருந்தால் தெரியப்படுத்துங்கள். மகிழ்கிறோம்) முதல்வராகலாம். ஆனால், உங்களையெல்லாம் விட்டு விட்டு புரட்சித் தலைவரை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தார்களே ஏன்? வெறும் நடிகர், பன்முகத் திறமையாளர் என்ற வட்டங்களையெல்லாம் தாண்டி, ஏழைகளின் துயர் துடைக்க நீ்ண்ட அவர் கரங்களை பலப்படுத்த மக்கள் முடிவு செய்ததுதான் காரணம்.

ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை சிறப்பாக செய்பவன் சிறந்த நடிகன். இல்லாவிட்டால் சிறந்த நடிகன் இல்லை. இதுதான் பொதுவான அளவுகோல். இதில் ஒரு சில பாத்திரங்களோடு அந்த நடிகர்களின் திறமைகள் சுருங்கிவிடும் என்றெல்லாம் கூறுவதில் அர்த்தமில்லை. தருமி, வைத்தியாக வாழ்ந்த நாகேஷ், தவில் வித்வானாக விளங்கிய முத்துராக்கு, தொழுநோய் பாதித்து துயருற்றவரை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய எம்.ஆர்.ராதா (நவராத்திரி படத்தில் தொழுநோயாளி வேடத்துக்கு அண்ணன் ராதா தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று சிவாஜி கணேசன் அவர்களே கூறியிருக்கிறார்) ஆகியோர் செய்த பாத்திரங்களை வேறு யாராவது செய்ய முடியுமா? காதலிக்க நேரமில்லையில் பாலையா, நாகேஷ் போன்று யாரும் நடிக்க முடியாது என்று ரவிச்சந்திரன் திரியில் ஒருவர் எழுதினால் அதை நீங்கள் மீள்பதிவு செய்கிறீர்கள். அதையே நான் கூறினால் கோபப்படுகிறீர்கள். திரிக்கு ஒரு கொள்கையா?

நீங்கள் கூறுவதுபோல எங்களிடமும் ஏகப்பட்ட சர்ச்சைப் பதிவுகள், ஆதாரங்கள் உண்டு. கலைத்துறை, அரசியல் ஆகிய இரண்டிலும். அவற்றை இங்கே விளக்கினால் சிலரது மனம் புண்படும். மேலும், உங்கள் மீது உள்ள கோபத்தில் மறைந்து விட்ட ஒரு கலைஞனை கறைப்படுத்த வேண்டுமா? என்று யோசிக்கிறோம்.

சில நேரங்களில் என் எழுத்தில் ஒரு பளிச் தெரிவதாக கூறுகிறீர்கள். வண்ணத்தில் பெரிய எழுத்துக்களில் நான் பதிவிட்டதை படித்தபோது உங்களுக்கு அது பளிச் என்று தெரிந்திருக்கலாம். மற்றபடி எங்கள் சகோதரர்கள் யாரும் எழுத்தில் இளைத்தவர்கள் அல்ல. உங்கள் திரியில் சாரதா, கார்த்திக், கல்நாயக் என்று பல பெயர்களில் வருபர்கள் ஒருவரா? பலரா? என்ற சந்தேகம் நண்பர் ஆர்.கே.எஸ்.சுக்கு உண்டு. அதை அவர் கேட்டும் இருக்கிறார். சமீபத்தில் கூட கொல்கத்தாவில் வசிக்கும் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ராமதாஸ் என்ற பெயரில் ஒருவர் வந்தாரே; அதுபோல, ஒரே ஐடியில் பலர் வரும் வழக்கம் எங்களுக்கு இல்லை. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக உணர்வுபூர்வமாக சொல்ல வேண்டுமென்றால் எங்கள் திரியில் எல்லாரிடம் நான் இருப்பேன். என்னிடம் எல்லாரும் இருப்பார்கள். காரணம், எங்களை நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.

களமாடப் புகும் முன் மாற்றான் வலிமையையும் திறமையும் அறிந்து கொள்வது தலைவரின் பாணி. அதைப் பின்பற்றுபவர்கள் நாங்கள். அந்த வகையில் உங்கள் திரியை ஊன்றி படித்தபோது உங்கள் எழுத்துக்களையும் கவனிக்க நேர்ந்தது. அப்படி படிக்க நேர்ந்த போது திரு.ராகவேந்திரா, திரு.ஜி.கிருஷ்ணா, ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் பேசும் ‘ரெண்டு இட்லி ஒரு வடை’ வசனத்தைப் பற்றி குறிப்பிடும்போது ‘நிலவிலும் களங்கம் உண்டு என்பதைப் போல அவர் இப்படி பேசிவிட்டாரே என்று நினைத்து மருகுகிறோம்’ என்று கூறிய திரு. சிவாஜி செந்தில் அவர்கள் போன்ற பண்பாளர்கள், கண்ணியவான்கள் தென்பட்டார்கள். நீங்களும் சில சமயங்களில் நன்றாகவே எழுதுகிறீர்கள். நாடோடி மன்னன் படத்தைப் பற்றிய உங்கள் சுருக்கமான விமர்சனம் அருமை. ‘மாற்று முகாம் என்ன? மாற்று முகம் கூட அறியாதவன் நான்’ என்று எழுதிய தாங்கள் நாடோடி மன்னனை மட்டும் ஒளிந்து கொண்டு பார்த்திருப்பீர்கள் போலிருக்கிறது. அதற்கே இவ்வளவு ஞானம்.

எனக்கு முன்கூட்டியே வரவேற்பளிக்கிறோம் என்று நீங்கள் கூறியதற்கு நன்றி. ஆனால், தலைவரின் ரசிகனாக இருந்து பின்னர் அதைத் தாண்டி அந்த மனிதப் புனிதரிடம் நான் கொண்டுள்ள அன்பும் பக்தியும் விசுவாசமும் என்றென்றும் மாறாதவை. நீங்கள் எனக்கு அழைப்பு விடுத்ததைப் போல உங்களுக்கும் எங்கள் திரிக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாம் என்றால், ‘அடுத்தவன் கழிந்ததை, வாந்தியெடுத்ததை, விடாய் காலம்’ என்று நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் தடுக்கின்றன. மக்கள் திலகம் திரிக்கென்று ஒரு மாண்பு உண்டு என்பதால் உங்களை அழைக்க முடியவில்லை.

திரு.ராகவேந்திரா அவர்களின் நியாயமான கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களைப் பார்த்து ஊர் இரண்டு பட்டால்... என்கிறீர்கள். ஆனால், என்னை நீங்கள் அழைப்பதை பார்க்கும்போது ஊர் இரண்டுபட வேண்டும் என்று நீங்கள் தான் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூட்டையல்ல; சீனத்துப் பெருஞ்சுவர் நாங்கள்.

இறுதியாக கூறுகிறேன். கேலி கிண்டல்களால் உங்கள் அறிவும், திறமையும், எழுத்துக்களும் பின்னுக்குத் தள்ளப்படுகிறதே? அதை நீங்கள் கவனிக்கவில்லையா? எவ்வளவுதான் அறிவும் திறமையும் இருந்தாலும் ஆணவம் அவற்றை அழித்து விடும். இன்று கூட உயர் பொதுமக்களின் பிரதிகள் நாம் என்று கூறியுள்ளீர்கள். அறிவும், திறமையும் ஒரு சாதிக்கோ, இனத்துக்கோ, மதத்துக்கோ மட்டும் சொந்தமானது அல்ல நண்பரே.

எந்த இடத்தில் எந்த நேரத்தில் எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது அதிகம் படித்த உங்களுக்கு தெரியாமல் போனது விந்தைதான். கடவுள் பெயராக இருந்தாலும் அதை எங்கு சொல்ல வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. திருமண வீட்டில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் என்னதான் கடவுள் பெயராக இருந்தாலும் திருப்பதியில் கோஷம் போடுகிற மாதிரி கைகளை உயரக் குவித்து ‘‘கோவிந்தா...... கோ........விந்தா’’ என்று கூவினால் ஒட்டுமொத்த கூட்டமும் அந்த நபரை அடிக்கத்தான் வரும். அந்த நபரின் நிலையில் இருக்கும் தங்களைப் பார்த்து உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன்.

உங்களுக்கு அறிவுரையாக அல்ல. ஆலோசனையாக கூறுகிறேன். அய்யா பெரியார் பாணி அவருக்குத்தான் சரிப்படும். அவர் பாணியில் கைம்பெண்களை ‘முண்டச்சிகள்’ என்று கூறாமல் பேரறிஞர் அண்ணா பாணியில் ‘வாழ்விழந்த வனிதா மணிகள்’ என்று கூறிப் பழகுங்கள். உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டால் மகிழ்ச்சி. ஆனாலும் நம்பிக்கை இல்லை. அப்படி மாறிவிட்டால்தான் நீங்கள் கோபால் இல்லையே. ஹூம்.... இருந்தாலும் all the best.

ஏழைகள், நலிந்தோர், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடம் எங்கள் தலைவர் அன்பும் பாசமும் அதிகம் காட்டுவார். அவர் வழிவந்தவர்கள் நாங்கள். அந்த அடிப்படையில் விசாரிக்கிறேன். ஒன்றரை ஆண்டுக்கு முன் நீங்கள் போட்ட பதிவில் குறிப்பிட்ட நினைவு. கடல் கடந்து வாழும் உங்களுக்கு பணிவிடை செய்யும் அந்த மலாய் வேலைக்காரியை நான் விசாரித்ததாக சொல்லுங்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

பின்குறிப்பு: தங்கள் தரப்பில் இருந்து provocation ஏற்பட்டாலும் தவறு தவறுதான் என்று ஒப்புக் கொண்ட திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களின் நேர்மைக்கு மீண்டும் ஒரு சிறப்பு நன்றி.

Richardsof
8th October 2014, 05:53 PM
http://youtu.be/u7NCgIzOWfI

fidowag
8th October 2014, 11:33 PM
CHENNAI - CHITHRA TALKIES



http://i60.tinypic.com/35aps83.jpg


இந்த பேனர் வைக்கப்பட்டுள்ள திரை அரங்கம் மேகலா.
சித்ரா அல்ல.-நண்பர் திரு. வினோத் அவர்களுக்குரிய தகவல்

fidowag
8th October 2014, 11:38 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "உலகம் சுற்றும் வாலிபன் " டிஜிடல் -புகைப்படங்கள் உதவி: திரு. நாகராஜன் (திரைப்பட
வினியோகஸ்தர் ).

http://i61.tinypic.com/nqzh3n.jpg

fidowag
8th October 2014, 11:39 PM
http://i59.tinypic.com/14xp1mg.jpg

fidowag
8th October 2014, 11:40 PM
http://i57.tinypic.com/1zm3093.jpg

Richardsof
9th October 2014, 06:15 AM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

இனிய நண்பர் திரு கோபாலுக்கு தாங்கள் அளித்த பதிலில் நகைச்சுவை உணர்வையும் , நினைவாற்றலையும் , தகுந்த நேரத்தில் தகுந்த பதிலும் வழங்கிய உங்களின் தெளிவான வார்த்தைகள் மிகவும் அருமை . இதை படித்த பிறகாவது அவருக்கு மன மாற்றம் ஏற்பட்டால் சரி .இந்த நேரத்தில் சந்திரோதயம் படத்தில் ஒரு காட்சியில் எம் ஆர் . ராதா கூறும் வசனம் நினைவிற்கு வந்தது .

Richardsof
9th October 2014, 08:41 AM
FORMER TAMIL NADU CHIEF MINISTER M. BHAKTHAVACHALAM BIRTH DAY - TO DAY

http://i62.tinypic.com/kevuc6.jpg

ujeetotei
9th October 2014, 09:37 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/Thadam-pathithavargal_zpsdaf02e6f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/Thadam-pathithavargal_zpsdaf02e6f.jpg.html)

Vendhar TV takes pride in presenting the stories of men and women who have achieved the pinnacle of success, their raise from ordinary to the extraordinary.

And our update in srimgr.com

http://mgrroop.blogspot.in/2014/10/vendhar-tv.html

Scottkaz
9th October 2014, 01:24 PM
கலைச்செல்வி' கார்த்திகை 1965: எம்.ஜி.ஆரின் இலங்கை விஜயம்!
'மரகதத்தீவில் மக்கள் திலகம்'
- சி-.சு.-

இலங்கையில் எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி...[நூலகத் தளத்தில் ஈழத்துப் படைப்புகள், சஞ்சிகைகளையெல்லாம் சேகரித்து ஆவணப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கு இம்முயற்சி பெரிதும் பயன்படும். ஈழத்திலிருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களில் முக்கியமானதொன்று சுன்னாகத்திலிருந்து வெளிவந்த 'கலைச்செல்வி' இதழ். இவ்விதழின் கார்த்திகை 1965 இதழில் அச்சமயம் ஈழத்துக்கு நடிகை சரோஜாதேவியுடன் வருகை தந்திருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி 'மரகத்தீவில் மக்கள் திலகம்'என்னுமொரு கட்டுரை சி.சு. என்பவரால் எழுதப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே மீள்பிரசுரிக்கப்பட்டுள்ளன.]
http://i62.tinypic.com/2mzy1lf.jpg
கண் பார்த்த இடமெல்லாம் கணக்கற்ற சனக்கூட்டம்; வீதியோரங்களிலே, வெளியான இடங்களிலே, மாடிவீடுகளிலே, மதிற்சுவர்களிலே, சந்துபொந்துகளிலே, சன்னல் விளிம்புகளிலே, வாசற்படிகளிலே, வாகனக்களின் மேலே எங்கெல்லாம் ஒற்றக்காலிலாவது நிற்கலாமோ அங்கெல்லாம் அப்படியே நிற்கிறார்கள். ஆடவரும், அரிவையரும் அணியணியாய் நிற்கிறார்கள். சிறுவரும், சிறுமியரும் சீராக நிற்கிறார்கள். சிங்களரும், தமிழரும், சோனகரும் நின்றார்கள். தொழிலாளியும் முதலாளியும் தோளோடு தோள் நின்றார்கள். கொதி கொதிக்கும் வெயிலிலும் கொடகொடக்கும் குளிரிலும் கூட்டமாய் நின்றார்கள்.

வைத்த விழி வாங்காது, நின்ற இடம் நகராது யாருக்காக நின்றார்கள்? எதற்க்காக நின்றார்கள்?
http://i57.tinypic.com/4ptk06.jpg
நாடாளும் மன்னனுக்காக நிற்கவில்லை; நாட்டின் பிரதமருக்காக நிற்கவில்லை; அரசியல் தலைவருக்காக நிற்கவில்லை; சமயத்தின் காவலருக்காக நிற்கவில்லை. சர்வாதிகாரிக்காகவும் நிற்கவில்லை.

'கலைச்செல்வி' இதழ்; கார்த்திகை 1965.பின், யாருக்காக நின்றார்கள்? ஒரு மனிதனின் வரவை எதிர்பார்த்து நின்றார்கள்; எம்.ஜி.ராமச்சந்திரனை எதிர்பார்த்து நின்றார்கள், ஆம்! எம்.ஜி.ஆர். ஒரு மனிதன். மனித உருவில் மிருகங்கள் உலாவும் இவ்வுலகில் - மனிதரைப் போன்ற கயவர்கள் மலிந்துள்ள இவ்வுலகில் - ;மனிதம்' என்ற உணர்ச்சி நிறைந்த , உயர்ந்த பண்புகளும் சிறந்த குண்நலன்களும் நிறைந்து விளங்கும் மனிதன் என்ற நிறைகுடம் எம்.ஜி.ஆர். அந்த மனிதனை எதிர்பார்த்துத்தான் ஆயிரம் ஆயிரமாகக் கூடி நின்றார்கள் மக்கள். கண்டவுடன் களிபேருவகை கொண்டார்கள்; கடவுளைத் தொழுவதைப்போல் கை கூப்பி வணங்குகின்றார்கள்.

கொழும்பிலும், கண்டியிலும், மட்டுநகரிலும், மாத்தளையிலும், யாழ்ப்பாணத்திலும், நுவரெலியாவிலும் இதே காட்சி; இதே நிகழ்ச்சி! சரித்திரம் கண்டறியாத சனத்திரள் ஒவ்வொரு நகரத்திலும் கூடியது.... மேலும் வாசிக்க
மேலும் சில காட்சிகள்....
http://i61.tinypic.com/3127dqu.jpg http://i57.tinypic.com/2vjepvb.jpg
கொழும்பில் மக்கள் திலகம் மற்றும் அபிநய சரஸ்வதி.மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் 'சொல்லின் செல்வர்' செ.ராஜதுரையுடன்...

நன்றி: நூலகம் http://noolaham.net/

endrum engal kuladeivam MGR

siqutacelufuw
9th October 2014, 03:34 PM
மக்கள் திலகம் நடிப்பில், 09-10-1970 ல் வெளியான "எங்கள் தங்கம் " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i59.tinypic.com/67o9cj.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
9th October 2014, 03:41 PM
மக்கள் திலகம் நடிப்பில், 09-10-1970 ல் வெளியான "எங்கள் தங்கம் " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :





http://i57.tinypic.com/15fiw7s.jpg



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.

Russellbpw
9th October 2014, 03:48 PM
not an idea we will submit the evidence


Sir,

Oh......Evidence....!!!!

Am very much afraid of the evidence... :mrgreen:

RKS

Russellbpw
9th October 2014, 04:08 PM
திரியில் தனக்குத் தானே மானியம் விட்டுக் கொள்ளும் அறிவாளி (உபயம் :திரு.ஆர்.கே.எஸ்) நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,

உங்கள் திரியில் சாரதா, கார்த்திக், கல்நாயக் என்று பல பெயர்களில் வருபர்கள் ஒருவரா? பலரா? என்ற சந்தேகம் நண்பர் ஆர்.கே.எஸ்.சுக்கு உண்டு. அதை அவர் கேட்டும் இருக்கிறார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

பின்குறிப்பு: தங்கள் தரப்பில் இருந்து provocation ஏற்பட்டாலும் தவறு தவறுதான் என்று ஒப்புக் கொண்ட திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களின் நேர்மைக்கு மீண்டும் ஒரு சிறப்பு நன்றி.


என்ன கலைவேந்தான் சார்

ஒரு விஷயம் தெரிந்துகொள்ள விரும்புவதால் பதிவிடுகிறேன் மற்றபடி குழப்பம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கம் இல்லை.

நடிகர் திலகம் திரியில் எல்லாவற்கும் என் மீது கோவம் வரவேண்டும் என்பதாலா எல்லாவற்றிற்கும் இப்போது நீங்களும் திரு செல்வகுமார் அவர்களும் என்னுடைய பெயரை reference பாயிண்டாக உங்கள் பதிவுகளில் குறிப்பிடுவது ?

அதாவது....நான் சொல்லல...ஏற்கனவே உங்க RKS ஏ சொல்லிருக்காரு என்று கேள்வி எழுந்தால் சொல்வதற்க்க என்று கேட்கிறேன்.

நான் பாட்டுக்கு தேமேனே என்று இருக்கிறேன்...எதுக்கு சார் ?

வேணாம் சார் ! எதுக்கு வீணா ?

நீங்க யாருன்னு எனக்கு தெரியும் ...நான் யாருன்னு உங்களுக்கு தெரியும்...நாம யாருன்னு இங்க நண்பர்களுக்கு தெரியும்...அப்புறம் எதுக்கு ?

தேங்க்ஸ்

RKS


http://www.youtube.com/watch?v=gMK2D1jeO7k

siqutacelufuw
9th October 2014, 04:23 PM
,


Sir,

Oh......Evidence....!!!!

Am very much afraid of the evidence... :mrgreen:

RKS


Dear RKS,

Why do you poke your nose unnecessarily in this Thread and create issues. I think, you will never get changed, inspite of our repeated blow of words. If you would like to post anything about our beloved God M.G.R. in this Thread, you may do so. Otherwise, please allow both the Threads, to go in a smooth manner.

I presume you would like to exhibit yourself as HERO between the NT Fans, by interpreting with us and interrupting, interfering baselessly in M.T. THREAD.

I regret to say the above remarks.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
9th October 2014, 04:37 PM
,




Dear RKS,

Why do you poke your nose unnecessarily in this Thread and create issues. I think, you will never get changed, inspite of our repeated blow of words. If you would like to post anything about our beloved God M.G.R. in this Thread, you may do so. Otherwise, please allow both the Threads, to go in a smooth manner.

I presume you would like to exhibit yourself as HERO between the NT Fans, by interpreting with us and interrupting, interfering baselessly in M.T. THREAD.

I regret to say the above remarks.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Dear Sir,

Could you please advise the same to the person who commented me just before my comment.

I had just replied to him in a lighter vein meaning "bayamuruththareengale"...didn't you see the smiley i had put?

I don't know why you harp on me every time with so much of closed mindset on every silly matter be it is in conversing with you or with others..!

Why is that your eyes always see as an "ISSUE" in whatever i post?

I am not a hero point no.1. point no.2 there is no need for me to exhibit and am not an exhibitionist. what do i gain ?

I don't believe in Heroism to become a HERO by interfering, interpreting, interrupting in this beloved thread.

Don't be biased always.....and try to project as if you are giving a fair judgement !!!!!!!!!

First Please be the Change that you wanted to See !!!!!

I equally feel sorry to give this remark ..

Regards

RKS

Richardsof
9th October 2014, 06:00 PM
மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள் ....

படத்தின் அறிமுக காட்சியில் புரட்சி நடிகராக - சட்ட மன்ற உறுப்பினராக - சிறு சேமிப்பு துணை தலைவராக விழாவில் பங்கேற்று பேசும் காட்சி.


லாரி ஓட்டுனராக மக்கள் திலகம் நடித்த காட்சிகள் . லாரியில் இடம் பெற்ற கனவு பாடல் . குண்டுமணி மற்றும் நடராஜனிடம் கால்களாலே பந்தாடும் ரம்மியமான காட்சிகள் .

பார்வையற்ற தங்கை புஷப்லாதாவிடம் பூக்கள் பற்றி கண்டு பிடிக்கும் காட்சி மிகவும் அருமை .ஏ .வி எம் ராஜனுடன் அறிமுக இடத்தில குடியை பற்றி இடம் பெற்ற வசனங்கள் பிரமாதம்
.

தங்கைக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கொதிக்குமிடத்தில் மக்கள் திலகம் உணர்ச்சி கரமான காட்சிகள்

தங்கையின் கொடுமைக்கு காரணமான -தன் நண்பன் ஏ.வி.எம். ராஜனை கண்டு பிடித்து அவரையே தங்கைக்கு மண
முடித்து வைக்கும் காட்சி - தவறான வழியில் செல்லும் ராஜனை திருத்த முயன்று அவர் செய்யாத கொலைக்கு இவர் பழி ஏற்று கொலைகாரனை கண்டு பிடிக்கும் காட்சிகள்


தங்க பதக்கத்தின் மேலே ..
நான் அளவோடு ரசிப்பவன்
நான் செத்து பிழைச்சவண்டா
சூப்பர் பாடல்கள் .
விண்வெளி கதாகலாட்சேபம் - மக்கள் திலகம் அபாரமாக நடித்து ரசிகர்களை பரவசபடுத்தினார் .

ஒரு நாள் கூத்துக்கு ...பாடல் - சிறப்பான இசையில் மக்கள் திலகத்தின் நடனம் சூப்பர் .
கிளைமாக்ஸ் காட்சிகள் பரபரப்பாக இருந்தது .
44 ஆண்டுகள் நிறைவு பெற்ற எங்கள் தங்கம் இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் காட்சியளிக்கிறது .

9.10.1970 வெளிவந்த எங்கள் தங்கம் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த காவியம் .

Richardsof
9th October 2014, 06:02 PM
http://youtu.be/OZnxsBxwljc

Richardsof
9th October 2014, 06:05 PM
http://youtu.be/EOr2jGHoIbI

Russellisf
9th October 2014, 06:05 PM
எனக்கு பிடித்த காட்சிகள்

ஏவிஎம் ராஜன் குடித்து விட்டு தலைவரிடம் சொல்லுவார் தங்கம் நீ இந்த சாராய கடைய எல்லாம் முட சொல்ல வேண்டியது தானே ......................... நீ சொன்ன எல்லாமே நடக்குதாமே






மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள் ....

படத்தின் அறிமுக காட்சியில் புரட்சி நடிகராக - சட்ட மன்ற உறுப்பினராக - சிறு சேமிப்பு துணை தலைவராக விழாவில் பங்கேற்று பேசும் காட்சி.


லாரி ஓட்டுனராக மக்கள் திலகம் நடித்த காட்சிகள் . லாரியில் இடம் பெற்ற கனவு பாடல் . குண்டுமணி மற்றும் நடராஜனிடம் கால்களாலே பந்தாடும் ரம்மியமான காட்சிகள் .

பார்வையற்ற தங்கை புஷப்லாதாவிடம் பூக்கள் பற்றி கண்டு பிடிக்கும் காட்சி மிகவும் அருமை .ஏ .வி எம் ராஜனுடன் அறிமுக இடத்தில குடியை பற்றி இடம் பெற்ற வசனங்கள் பிரமாதம்
.

தங்கைக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கொதிக்குமிடத்தில் மக்கள் திலகம் உணர்ச்சி கரமான காட்சிகள்

தங்கையின் கொடுமைக்கு காரணமான -தன் நண்பன் ஏ.வி.எம். ராஜனை கண்டு பிடித்து அவரையே தங்கைக்கு மண
முடித்து வைக்கும் காட்சி - தவறான வழியில் செல்லும் ராஜனை திருத்த முயன்று அவர் செய்யாத கொலைக்கு இவர் பழி ஏற்று கொலைகாரனை கண்டு பிடிக்கும் காட்சிகள்


தங்க பதக்கத்தின் மேலே ..
நான் அளவோடு ரசிப்பவன்
நான் செத்து பிழைச்சவண்டா
சூப்பர் பாடல்கள் .
விண்வெளி கதாகலாட்சேபம் - மக்கள் திலகம் அபாரமாக நடித்து ரசிகர்களை பரவசபடுத்தினார் .

ஒரு நாள் கூத்துக்கு ...பாடல் - சிறப்பான இசையில் மக்கள் திலகத்தின் நடனம் சூப்பர் .
கிளைமாக்ஸ் காட்சிகள் பரபரப்பாக இருந்தது .
44 ஆண்டுகள் நிறைவு பெற்ற எங்கள் தங்கம் இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் காட்சியளிக்கிறது .

9.10.1970 வெளிவந்த எங்கள் தங்கம் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த காவியம் .

Russellisf
9th October 2014, 06:09 PM
நான் செத்து பொழச்சவண்டா

உலக சினிமா வரலாற்றில் தன்னுடைய அனுபவத்தை பாடலாக நடித்து அதை உண்மை என்று உணரச்செய்த ஒரே நடிகர் எங்கள் இயற்கை நடிகர் பொன்மனச்செம்மல் ஒருவரே

siqutacelufuw
9th October 2014, 06:11 PM
மக்கள் திலகத்தின் புகழ் பாடி வந்த 'திரை உலகம்" பத்திரிகை, 15-01-1976 தேதியிட்டு வெளியிட்ட " நீதிக்கு தலை வணங்கு" சிறப்பு மலரில் பிரசுரிக்கப்பட்ட இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் பேட்டி :

http://i61.tinypic.com/izoivs.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
9th October 2014, 06:13 PM
http://youtu.be/rsLBs5DS-Vs

Richardsof
9th October 2014, 06:13 PM
http://youtu.be/3xlUQN98zII

Richardsof
9th October 2014, 06:14 PM
http://youtu.be/GReEbdgTeSI

Richardsof
9th October 2014, 06:15 PM
http://youtu.be/p3Qr3edrUZ8

Richardsof
9th October 2014, 06:17 PM
http://youtu.be/Bzv7MBSbujI

Russellisf
9th October 2014, 06:23 PM
கடவுளுக்கு பாராட்டுக்கள் தேவை இல்லை

Russellisf
9th October 2014, 06:37 PM
இப்படி பட்ட வரிகள் தலைவருக்கு மட்டுமே சாத்தியம் தற்போது உள்ள தமிழகத்தின் நிலைதனை 1971-இல் தலைவர் பாடிவிட்டார் இந்த வரிகள் தலைவருக்கும் பொருந்தியது இப்பொழுது தலைவிக்கும் பொருந்துகிறது .


நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?

Russellzlc
9th October 2014, 07:45 PM
திரு.ஆர்.கே.எஸ்.

நேற்றைய தினம் சகோதரர் திரு.செல்வகுமார் அவர்கள் முக்தா சீனிவாசனின் பதிவு பற்றி பதில் அளித்து அதற்கு தாங்களும் விளக்கம் கூறினீர்கள். பின்னர், திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களும் எதிர்மறையாக இல்லாத பட்சத்தில் தாராளமாக பதிவுகளை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார். எந்த எதிர்வினையும் புரிய வேண்டாம் என்று உங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். திரு.செல்வகுமார் அவர்கள் யாரையும் புண்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில் பதிவை வெளியிடாமல் இருக்கிறார்.

சகோதரர் திரு. யுகேஷ் பாபு அவர்கள் வெளியிட்ட கருத்து இவற்றுக்கெல்லாம் முன்னால் நேற்று பதிவிட்டது. எல்லாம் முடிந்து அமைதியாக இருக்கும் நிலையில், அவரது பதிவை எடுத்துப் போட்டு கிண்டல் செய்வதன் மூலம் தேவையின்றி இங்கு வந்து வலிய வம்பிழுக்கிறீர்களே, இது நியாயமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இல்லை, ஒருவேளை ஆதாரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்பது உங்கள் ஆசையா? உங்கள் செயலை திரு. முரளி ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
9th October 2014, 08:00 PM
டைட்டில் கார்ட்-1http://i60.tinypic.com/11btgl4.jpg

Russelldvt
9th October 2014, 08:02 PM
http://i58.tinypic.com/2wr2jbt.jpghttp://i58.tinypic.com/o06j9x.jpg

Russellisf
9th October 2014, 08:06 PM
ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களில் பங்கு கொண்ட 4 கலைஞர்கள், பிறகு தமிழக முதல்அமைச்சர்களாக ஆனார்கள். 1946ல் ஜுபிடர் தயாரித்த ஸ்ரீமுருகன் படத்தில், சிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

அவரும், கே.மாலதியும் ஆடிய சிவபார்வதி தாண்டவம் புகழ் பெற்றது. இப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர் முருகனாக நடித்தார். படத்தை ஜுபிடர் சோமு டைரக்ட் செய்தார். ஏ.காசிலிங்கம், இணை டைரக்டராகப் பணியாற்றினார்.

படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜுபிடரின் "ராஜகுமாரி.'' அவருடன் கே.மாலதி இணைந்து நடித்தார். மற்றும் டி.எஸ்.பாலையா, இலங்கைக்குயில் தவமணிதேவி ஆகியோரும் நடித்தனர். கத்திச்சண்டை காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும் நிறைந்த படம்.

இந்தப் படத்தை, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். இந்தப் படத்திற்குத்தான் முதன் முதலாக கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். எனினும், படத்தின் டைட்டிலில் "வசனம்: ஏ.எஸ்.ஏ.சாமி. உதவி: மு.கருணாநிதி'' என்று போடப்பட்டது.

இந்தப் படத்துக்கு பாடல் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

11.4.1947ல் வெளியான "ராஜகுமாரி'', வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் வெற்றிப்பயணத்துக்கு வழிவகுத்தது.

இதில் எஸ்.எம்.குமரேசன் அபிமன்ïவாக நடித்தார். அவருக்கு ஜோடி ஆர்.ஜீவரத்தினம். எம்.ஜி.ஆர். அர்ஜீனனாக நடித்தார்.

ஜுபிடர் சோமுவும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர். திரைக்கதை வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது என்றாலும், வசனத்தின் பெரும் பகுதியை எழுதியவர் கருணாநிதிதான். அவர் பெயர் போடப்படவில்லை.

படத்தில் நரசிம்மபாரதி கிருஷ்ணனாக நடித்தார். என்.டி.ராமராவ் பட உலகுக்கு வருவதற்கு முன்பே கிருஷ்ணனாக நடித்து புகழ் பெற்றவர் நரசிம்மபாரதி. அழகிய தோற்றம் கொண்டவர்.

மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.சந்தானலட்சுமி, கே.மாலதி ஆகியோரும் நடித்தனர்.

வசனமும், இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின.

1948ல் ஜுபிடர் தயாரித்த மற்றொரு படம் "மோகினி.'' மாயாஜாலங்கள் நிறைந்த படம்.

இதில் எம்.ஜி.ஆர் வி.என்.ஜானகி இணைந்து நடித்தனர். மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், மாதுரிதேவி, மாலதி ஆகியோர் நடித்தனர்.

திரைக்கதையை ஏ.எஸ்.ஏ.சாமி எழுத, எஸ்.டி.சுந்தரம் வசனம் எழுதினார். லங்காசத்யம் டைரக்ட் செய்தார்.

31.10.1948ல் இப்படம் வெளிவந்தது.

இதன்பின் பேரறிஞர் அண்ணாவின் கதைவசனத்தில், "வேலைக்காரி''யை ஜுபிடர் தயாரித்தது. இப்படம் 25.2.1949ல் வெளிவந்தது.

இதில் கே.ஆர்.ராமசாமி, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், வி.என்.ஜானகி, எம்.வி.ராஜம்மா ஆகியோர் நடித்தனர். பாடல்களை உடுமலை நாராயணகவி எழுத, சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்தனர். டைரக்ஷன்: ஏ.எஸ்.ஏ.சாமி.

புரட்சிகரமான வசனங்களைக் கொண்ட "வேலைக்காரி'', மாபெரும் வெற்றிச்சித்திரமாக அமைந்தது. கே.ஆர்.ராமசாமி வக்கீலாக வந்து, "சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு'' என்று வாதாடிய கட்டம் சிறப்பாக அமைந்தது.
1951ம் ஆண்டு "மர்மயோகி'' படத்தை ஜுபிடர் தயாரித்தது. இந்த படம் மர்மம் நிறைந்த காட்சிகளை கொண்டு தயாரிக்கப்பட்டதால், படத்திற்கு "ஏ'' சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் "ஏ'' படம் மர்மயோகிதான். படத்தில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்தார். அவருக்கு ஜோடியாக மாதுரிதேவி நடித்தார். அஞ்சலிதேவி, வில்லியாக நடித்தார்.

"மர்மயோகி'', இந்தியில் "ஏக்தராஜா'' என்ற பெயரில் வெளியானது.

1953ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸ் "அழகி'', "இன்ஸ்பெக்டர்'', "நாம்'' ஆகிய 3 படங்களை வெளியிட்டது. இதில் `நாம்' படத்தை, மேகலா பிக்சர்சும், ஜுபிடரும் இணைந்து தயாரித்தன. இதில் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, பி.எஸ்.வீரப்பா ஆகியோர் நடித்தனர். படத்திற்கு கருணாநிதி கதை, வசனம் எழுதினார். டைரக்ஷன்: ஏ.காசிலிங்கம்.

Russelldvt
9th October 2014, 08:08 PM
http://i60.tinypic.com/11btgl4.jpghttp://i57.tinypic.com/au6nvm.jpghttp://i58.tinypic.com/o06j9x.jpg

Russelldvt
9th October 2014, 08:12 PM
http://i61.tinypic.com/9uofid.jpghttp://i59.tinypic.com/sy9eom.jpghttp://i62.tinypic.com/15dkobd.jpg

Russelldvt
9th October 2014, 08:14 PM
http://i59.tinypic.com/1zm0e1g.jpghttp://i57.tinypic.com/2hhg9hf.jpghttp://i57.tinypic.com/156alhh.jpghttp://i61.tinypic.com/2vhyj44.jpg

Russellbpw
9th October 2014, 09:11 PM
திரு.ஆர்.கே.எஸ்.

நேற்றைய தினம் சகோதரர் திரு.செல்வகுமார் அவர்கள் முக்தா சீனிவாசனின் பதிவு பற்றி பதில் அளித்து அதற்கு தாங்களும் விளக்கம் கூறினீர்கள். பின்னர், திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களும் எதிர்மறையாக இல்லாத பட்சத்தில் தாராளமாக பதிவுகளை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார். எந்த எதிர்வினையும் புரிய வேண்டாம் என்று உங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். திரு.செல்வகுமார் அவர்கள் யாரையும் புண்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில் பதிவை வெளியிடாமல் இருக்கிறார்.

சகோதரர் திரு. யுகேஷ் பாபு அவர்கள் வெளியிட்ட கருத்து இவற்றுக்கெல்லாம் முன்னால் நேற்று பதிவிட்டது. எல்லாம் முடிந்து அமைதியாக இருக்கும் நிலையில், அவரது பதிவை எடுத்துப் போட்டு கிண்டல் செய்வதன் மூலம் தேவையின்றி இங்கு வந்து வலிய வம்பிழுக்கிறீர்களே, இது நியாயமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இல்லை, ஒருவேளை ஆதாரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்பது உங்கள் ஆசையா? உங்கள் செயலை திரு. முரளி ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


திரு கலைவேந்தன்

எதற்கு இந்த நாடகம் நீங்கள் அரங்கேற்றுகிரீர்கள் ?

பிரச்சனையை ஆரம்பித்தது உங்கள் திரு செல்வகுமார் அவர்கள் தான் !

நான் அதற்க்கு எந்த கிண்டலோ கேலியோ செய்யவில்லை. குட் ஐடியா என்ற ஒரு icon எடுத்து போட்டேன்.

அந்த icon உக்கு பதில் எழுதியது திரு யுகேஷ் பாபு அவர்கள் தான். அவர் எழுதியதற்கு தான் நான் பயமுருதுகிரீர்களே என்ற தொனியில் ஒரு lighter side ஆக பதிவு செய்தேன்...

அதற்க்கு வரிந்து கட்டிக்கொண்டு செல்வகுமார் எழுதினர் !

இதுதான் நடந்தது !

என்ன கிண்டல் பதிவு நான் போட்டேன் ...ஏன் இப்படி பொய்யுரைக்கிரீர்கள் திரு கலைவேந்தன் ?

எதற்கு இப்படி திரித்து எழுதி பொய்யை உண்மையாக்க பார்க்கிறீர்கள் திரு கலைவேந்தன் ?

காமாலைகாரனுக்கு பார்பதெல்லாம் மஞ்சள் என்பதுபோல எந்த பதிவு போட்டாலும் அதை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதே வழக்கமாகியுள்ளது இப்போதெல்லாம் திரு செல்வகுமார் அவர்களுக்கு.

தேவையில்லாமல் ஒரு statement பதிவு செய்து அதை பற்றி முரளி பதிவிட்டபோது...தேவையில்லாமல் என் பெயரை இழுத்து சம்மாளிக்கபார்த்தார் திரு செல்வகுமார்...! அது உங்களுக்கு வம்பாக தெரியவில்லை திரு கலைவேந்தன்...

பிறகு நீங்களும் கோபாலுக்கு எழுதிய பதிவில் என் பெயரை பயன்படுத்தினீர்கள்...அது பெரிய யோக்ய செயலா திரு கலைவேந்தன் அவர்களே ?

இப்படி எல்லா செயல்களும் நீங்கள் மற்றும் திரு செல்வகுமார் மாறி மாறி செய்துவிட்டு என்னை இழிப்பதும், பழிப்பதும் ரொம்ப நாகரீகம் தான் போங்கள் !

Rks

Russelldvt
9th October 2014, 09:18 PM
http://i59.tinypic.com/2jdmff5.jpghttp://i61.tinypic.com/35n7brd.jpghttp://i58.tinypic.com/33x7itf.jpghttp://i60.tinypic.com/j9334p.jpghttp://i61.tinypic.com/2ihxp8m.jpghttp://i61.tinypic.com/16abple.jpg

Russelldvt
9th October 2014, 09:32 PM
http://i62.tinypic.com/1jth4z.jpghttp://i57.tinypic.com/2hoyyrr.jpghttp://i62.tinypic.com/j9bnmt.jpghttp://i61.tinypic.com/124j34m.jpg

oygateedat
9th October 2014, 10:05 PM
கோவை டிலைட்

திரை அரங்கில்

இன்று

மக்கள் திலகத்தின்

திரைக்காவியம்

தர்மம் தலைகாக்கும்

கடைசி நாள்.

நாளை முதல்

தாழம்பூ



எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------

oygateedat
9th October 2014, 10:23 PM
தீபாவளித் திருநாளில்

கோவை நகர மக்கள் திலகத்தின்

ரசிகப்பெருமக்களை

மகிழ்விக்க வரும்

பொன்மனச்செம்மலின்

வெற்றிக்காவியங்கள்

ராயல் - குடியிருந்தகோயில்

டிலைட் - உரிமைக்குரல்


எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------

Richardsof
10th October 2014, 05:15 AM
http://i59.tinypic.com/1zm0e1g.jpghttp://i57.tinypic.com/2hhg9hf.jpghttp://i57.tinypic.com/156alhh.jpghttp://i61.tinypic.com/2vhyj44.jpg

super. Thanks muthayan sir

Richardsof
10th October 2014, 05:16 AM
11.10.1972 DINAMANI PAPER

http://i62.tinypic.com/2zq4egh.jpg

Richardsof
10th October 2014, 05:22 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

கோவை நகரில் மக்கள் திலகத்தின் ''தாழம்பூ ''

உரிமைக்குரல்

குடியிருந்த கோயில் மூன்று படங்கள் விருந்தாக உங்களுக்கு கிடைப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

Richardsof
10th October 2014, 05:39 AM
தமிழகத்தின் ''அக்டோபர் புரட்சி '' துவங்கிய தினம் இன்று . 10.10 1972

புரட்சி நடிகர் எம்ஜிஆரை திமுகவிலிருந்து ''டிஸ்மிஸ் '' செய்தி - இந்தியா முழுவது பரப்பரப்பாக பேசப்பட்டது .

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - மன்றங்கள் தங்களை முழுமையாக எம்ஜிஆர் ஆதரவு என்று பிரகடன படுத்தினார்கள் .

குக்கிராமம் முதல் மாநகரம் வரை மக்களும் எம்ஜிஆருக்கு முழு அதரவு அளித்தார்கள் .

ஒரு புதிய அத்தியாம் - சரித்திரம் துவங்கிய நாள் - இன்று .

கடந்த 42 ஆண்டுகளாக அரசியல் - திரை உலகிலும் தொடர்ந்து தினமும் உச்சரிக்கப்டும் பெயராக மக்கள் திலகம்

எம்ஜிஆர் சரித்திர நாயகனாக திகழ்ந்து கொண்டு வருகிறார் .

Stynagt
10th October 2014, 11:32 AM
October Revolution 1972 - The magic moment when MGR approach the People. See the boy’s happiness.
http://i57.tinypic.com/sgqsnc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th October 2014, 11:46 AM
வெற்றித்திருமகன்

http://i58.tinypic.com/i1lhds.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th October 2014, 12:23 PM
எம்ஜிஆரிடம் உள்ள தனி சிறப்பு அவர் ஏற்படுத்திய வசூல் சாதனைகளை அவரே வென்று காட்டியதுதான்....
http://i62.tinypic.com/2db2x35.jpg
http://i60.tinypic.com/69n9rb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

Stynagt
10th October 2014, 12:59 PM
http://i59.tinypic.com/xeeus5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Suriyan Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

gkrishna
10th October 2014, 02:09 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02147/b_2147830g.jpg

ந்திரலேகா படத்தைப் போலவே ஜெமினி எஸ்.எஸ். வாசன், அவ்வையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரம்மாண்டமாகத் தயாரித்தார். அன்று அவ்வையாராக நடிக்க ஒரே சாய்ஸாக இருந்த கே.பி.எஸ்.ஸுக்கு இன்று 106-வது பிறந்ததினம்.

ஐந்து ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தி உருவான அந்தப் படம் 1953-ல் வெளியாகி காவிய வெற்றியைப் பெற்றது. படத்தில் அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியிருந்தார் கே.பி.சுந்தராம்பாள். அவருடைய குரலும், பாடல்களும், நடிப்பும் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றன.

1965-ல் வெளியான திருவிளையாடல் படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் நடித்து தமிழர்கள் மத்தியில் அவ்வையாகவே அடையாளம் பெற்றுவிட்ட கே.பி.எஸ். மறைந்தபோது அவரை ‘தேசிய நட்சத்திரம்’ என்று புகழ்ந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை கோவை கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டுக்குச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். தனது வீட்டின் பூஜையறைக்கு அழைத்துச் சென்று அவரது நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டார் கே.பி.எஸ். பிறகு கே.பி.எஸ்ஸுடன் தரையில் அமர்ந்து எம்.ஜி.ஆர் உரையாடியதை க்ளிக்கியவர் அந்நாளைய புகைப்படக்காரர் கதிரவன்.

ujeetotei
10th October 2014, 02:58 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_bird_zps6f315d0f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_bird_zps6f315d0f.jpg.html)

MGR Fan Venkatesan.

Stynagt
10th October 2014, 03:52 PM
http://i59.tinypic.com/2ai3eky.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Video News Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

siqutacelufuw
10th October 2014, 04:34 PM
15-10-14 தேதியிட்ட குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்ட கீழ்கண்ட செய்தி தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ளும் விஷயமாகும்.[

http://i62.tinypic.com/23ie0cw.jpg

இந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், நமது திரியின் பார்வையாளரும், மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் பலவற்றினை திரு. வினோத் மூலம் இத்திரிக்கு அளித்தவரும், எம். ஜி. ஆர். ரசிகர்களில் மூத்தவருமான பெங்களூரு சி. எஸ்.குமார் அவர்களின் சகோதரர் (சிற்றப்பா மகன்). புரட்சித்தலைவரின் மீது பெரும் மதிப்பு கொண்டவர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
10th October 2014, 04:35 PM
இந்த நாளில் அன்று (1.10.1973); பிரிவினை கோரிக்கை மறைமுகமாகவும் அ.தி.மு.க. எழுப்பாது; எம்.ஜி.ஆர். பேச்சு

இந்த நாளில் அன்று (1.10.1973)

பிரிவினை கோரிக்கை மறைமுகமாகவும் அ.தி.மு.க. எழுப்பாது;

எம்.ஜி.ஆர். பேச்சு

சென்னை, செப்.30 - அண்ணா தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையை மறைமுகமாகவும் எழுப்பாது என்று அக்கட்சியின் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் திட்டவட்டமாக அறிவித்தார்.

காலஞ்சென்ற அண்ணாதுரையின் 65வது பிறந்த தினத்தையொட்டி அண்ணா தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். பெருமழையையும் பொருட்படுத்தாமல் திருவல்லிக்கேணி சீரணி அரங்கத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டனர்.

தமது கட்சியினுடைய அரசியல், பொருளாதாக் கொள்கைகளை விளக்கிப் பேசிய எம்.ஜி.ராமச்சந்திரன், மாநில - மத்திய அரசுகள் சம பங்காளிகள் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு சோஷலிச சமுதாயத்தை அமைப்பதில் இரண்டு அரசுகளுக்கும் சமமான பொறுப்பு உண்டு என்றும் கூறினார்.

கருணாநிதி அமைச்சரவை லஞ்சத்திற்கு ஆளாகி விட்டதாகக் குற்றஞ்சாட்டிவிட்டு, அந்த அரசை வெளியேற்றும் வரை தமது கட்சி ஓய்ந்திருக்கப் போவதில்லை என்றும் எம்.ஜி.ஆர். கூறினார்.

courtesy dinamani

siqutacelufuw
10th October 2014, 04:50 PM
மக்கள் திலகத்துடன் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் மற்றும் அவர் புதல்வர் எஸ். எஸ். பாலன்.

http://i59.tinypic.com/2a0bbxv.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ்!

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
10th October 2014, 05:01 PM
http://i57.tinypic.com/11qjvr6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Suriyan Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

Russellwle
10th October 2014, 05:09 PM
TITLE THADAM PATHITHAVARGAL

PURATCHI THALAIVAR Dr.MGR PROGRAMME IS GOING TO BE TELECAST IN VENTHAR TV ON COMING SUNDAY (12-10-2014) AT 1 PM. THIS PROGRAME WILL BE CONTINUED EVERY SUNDAY SAME TIME.
THANKING YOU,
R GOVINDARAJ

Russellzlc
10th October 2014, 05:09 PM
திரு. ஆர்.கே.எஸ்.
சகோதரர் யுகேஷ் பாபு அவர்கள் போட்ட பதிவை எடுத்து கிண்டல் செய்கிறீர்களோ என்று நினைத்தேன். ஆனால், lighter side ஆகத்தான் போட்டேன் என்று நீங்கள் விளக்கம் அளித்திருப்பதை பார்த்த பின் உங்கள் நோக்கத்தில் தவறில்லை என்று புரிந்து கொண்டேன்.

சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களும் உள்நோக்கத்தோடோ, வம்புக்காகவோ உங்கள் பெயரை இழுத்ததாக நினைக்கவில்லை. முரளிக்கு அவர் அளித்த விளக்கமாகவே பார்த்தேன். இப்போது, உங்கள் விளக்கத்தை நான் ஏற்கவில்லையா?

திரு.கோபால் அவர்களுக்கு அளித்த பதிலில் உங்கள் பெயரைப் பயன்படுத்தியது குறித்து நீங்கள் முதலில் ‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ’பதிவு போட்டபோதே விளக்கம் சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால், தேவையில்லாமல் பிரச்னை செய்கிறாரே என்று நினைத்து கோபம் வந்ததால் விளக்கத்தை தவிர்த்து, இது நியாயமா? என்று கேட்டிருந்தேன். உங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டதால் இப்போது விளக்கம் அளிக்கிறேன்.

‘தனக்குத் தானே.....’ சொற்றொடரைப் பொறுத்தவரை நீங்கள் அதை திறமையாக கையாண்டிருந்ததும் அதில் தொக்கியிருந்த நகைச்சுவையும் என்னைக் கவர்ந்ததால் அதை அப்படியே பயன்படுத்தினேன். காப்பி அடித்தது போலாகிவிடுமே என்பதால் உங்கள் பெயரை போட்டேன்.

ஐடி விவகாரத்தை பொறுத்தவரை உங்கள் திரியில்தான் அவ்வாறு உண்டு என்று பொதுவாகக் கூறினால், அப்படி எல்லாம் இல்லை என்று யாராவது கூறி, ஆதாரம் எங்கே? என்று கேட்டால் மீண்டும் நான் ஆதாரத்தை சொல்ல வேண்டியிருக்கும். சொல்லாமல் விட்டாலும் நான் பொய் கூறியது போல இருக்கும். விவாதத்தை மேற்கொண்டு தொடர விரும்பாமல் கேள்விக்கே வழி இல்லாத வகையில் ஆதாரத்தோடு சொல்ல நினைத்ததால் நீங்கள் ஏற்கனவே எழுப்பிய சந்தேகத்தை மேற்கோள் காட்ட வேண்டியதாகி விட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். திரு.கோபால் அவர்களுக்கு அளித்த பதிலைத் தொடர்ந்து விவாதத்தை விரும்பாதது போலவே இப்போதும் விவாதத்தை தொடர விரும்பவில்லை. என்றாலும், உங்கள் பெயரைப் பயன்படுத்தியதற்காக நீங்கள் வருந்தினால் அதற்காக நானும் வருந்துகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

பின்குறிப்பு: பண்பாளர்கள், கண்ணியவான்கள் என்று கூறி திரு.ராகவேந்திரா, திரு.ஜி.கிருஷ்ணா, திரு. சிவாஜி செந்தில் ஆகியோர் பெயர்களையும் கூறியிருந்தேன். அதில் ஒரு பெயர் விட்டுப் போய் விட்டது. அவர்.. திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்கள்.(என்ன வாசு சார், எதிரணியில் நமக்கு நல்ல பெயர் உண்டு என்று இனி நீங்களாகவே நினைத்துக் கொள்ள வேண்டாம். நிஜமாகவே உங்களுக்கு இங்கு நல்ல பெயர் உண்டு. நீங்கள் மட்டுமல்ல, அடிப்படையில் எல்லாருமே நல்லவர்கள்தான், ராட்சச ரசிகர்கள் உட்பட) பண்பாளர்கள், கண்ணியவான்கள் பட்டியலில் உங்கள் பெயர்களை பயன்படுத்தியதற்காக எதிர்ப்பு தெரிவிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எதிர்ப்பு தெரிவித்தால் அப்படி சொன்னதற்காக மன்னிப்பு கோர தயாராக இருக்கிறேன்..... என்று எச்சரிக்கிறேன்.

Russellzlc
10th October 2014, 05:11 PM
நண்பர்களுக்கு வணக்கம்.

திரு.எஸ்.வி.சார், திரு.செல்வகுமார் சார், திரு.எஸ்.வி.சார் போட்டிருந்த ஆவணப் பதிவுகள் அட்டகாசம். கோவை தலைவரின் கொடி பறக்கும் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது படங்கள் திரையீடுகளை தெரிவிக்கும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். களேபரத்தில் சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு வரவேற்பு கூறவும் மறந்ததுடன், எங்கள் தங்கள் திரைப்படம் பற்றிய எனது கருத்துக்களை கூறக் கூட நேரமில்லாமல் போய் விட்டது. திரு.முத்தையன் அம்மு அவர்களை திரிக்கு வரவேற்று தலைவரின் புகழ்பாட வாழ்த்துகிறேன்.

‘கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது தர்மம் வெளியேறலாம்’ என்று உரிமைக்குரல் படத்தில் தலைவர் பாடியதுபோல கண்ணை மறைத்ததால் திமுகவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நாள் இன்று. ‘தர்மம் அரசாளும் தருணம் வரும்போது தவறு வெளியேறலாம்’ என்பதையும் நிரூபித்தவர் தலைவர்.

*எங்கள் தங்கம் படத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு சிறப்புகள் உண்டு. தலைவராகவே அவர் வரும் இரண்டு படங்களில் இது ஒன்று. (மற்றொன்று தேர்த்திருவிழா)

*அண்ணாவிடம் இருந்து தலைவர் பரிசு பெறுவது போன்ற காட்சி இந்தப் படத்தில் மட்டுமே உண்டு.

* திரு.எஸ்.வி.சார், சகோதரர் யுகேஷ்பாபு ஆகியோர் கூறியதுபோன்று மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தையும் திரு. மு.கருணாநிதி குடும்பத்தையும் இப்படத்தில் இலவசமாக நடித்ததன் மூலம் கடனில் இருந்து மீட்டவர் தலைவர்.

*திரு.முரசொலி மாறன் நடித்த ஒரே படம். சிறுசேமிப்புத்துறை தலைவராக தலைவர் வரும் காட்சியில் அவர் அருகில் அமர்ந்திருப்பார். (அவரது கல்லூரிப் படிப்புக்கு பணம் கொடுத்தது தலைவர்தான் என்பது உபரித் தகவல்)

*அதிலும் கதாகாலட்சேப காட்சி. வழக்கமாக மொட்டை அடித்ததுபோல மேக்கப் போட்டிருப்பவர்களுக்கு தலையை சுற்றி paste செய்தது தெரியும். ஆனால், இதில் தலைவருக்கு கச்சிதமாக மேக்கப் போடப்பட்டிருக்கும். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் தலைவர் நடித்திருப்பார்.

* திரைப்படங்களில் பல கதாகாலட்சேப காட்சிகள் இடம் பெற்றதுண்டு. நல்ல தம்பி படத்தில் கலைவாணர், தெய்வப்பிறவியில் தங்கவேலு, அன்னபூரணியில் சோ போன்றவர்கள் அந்தக் காட்சிகளில் நடித்துள்ளனர். கலைவாணரைத் தவிர்த்துப் பார்த்தால் (முழு காலட்சேபமும் அவரே)மற்ற படங்களில் நடிக்கும் நடிகர்கள், இடையே வரும் பாடல்களைத் தவிர வசனங்களைத் தாங்களே பேசியிருப்பார்கள். ஆனால், தலைவருக்கு மட்டுமே பாடல்களோடு வசனங்களுக்கும் டி.எம்.எஸ். குரல் கொடுத்திருப்பார்.

பாடல் காட்சிகளுக்கு இசையோடு வரும் வார்த்தைகள் இழுவையாக இருக்கும் என்பதால் அதற்கு வாயசைப்பது கூட சற்று சுலபம். ஆனால், அடுத்தவர் பேசும் வசனத்துக்கு அந்த டைமிங்கில் வாயசைப்பது கடினம். (ஒருவரை பேசவிட்டு காட்சி எடுத்து பின்னர், திரையில் அவரது பேச்சுக்கேற்ப ஒலிப்பதிவு கூடத்தில் மற்றவர்கள் டப்பிங் கொடுப்பது வேறு. ஆனால் இதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டி.எம்.எஸ்.சின் வசனங்கள்) அதற்கேற்ப தலைவர் அசால்டாக பேசி நடித்திருப்பார். இத்தனைக்கும் நீண்ட ஷாட்டுகள் வேறு.

* நான் அளவோடு ரசிப்பவன் பாடலின் முதல் வரியை எழுதிய வாலி மேற்கொண்டு என்ன போடுவது என்று யோசித்து கொண்டிருந்தபோது, ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என்று எடுத்துக் கொடுத்தவர் திரு.மு.கருணாநிதி. இதை புரட்சித் தலைவரிடம் வாலி கூறியதும், பதிலுக்கு அவரை (கருணாநிதியை) பாராட்டுவது போல பாடலை அமைக்குமாறு தலைவர் வாலியை கேட்டுக் கொள்ள.... ‘நான் செத்துப் பிழைச்சவன்டா’ பாடலில் ‘ஓடும் ரயிலை இடைமறித்து....’ வரிகள் இடம் பெற்றன. இதை வாலியே பலமுறை கூறியிருக்கிறார்.

*ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் பாடலில் தலைவரின் மேக்கப் வித்தியாசமானது. தனக்கு ஆடத் தெரியாதது போலவே ஜெயலலிதாவுடன் அவர் போடும் ஸ்டெப்ஸ் அசத்தல். அந்தப் பாடலில், கத்திச் சண்டை, குத்துச் சண்டை, கம்புச் சண்டை, வம்புச் சண்டை என்ற இந்த வார்த்தைகள் 4 விநாடிகளுக்குள்தான் வரும். அந்த 4 விநாடிகளுக்குள் அந்தந்த சண்டைக்கேற்ற அபிநயங்களை காட்டும் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர் தலைவர் மட்டுமே. தொடர்வோம்...

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
10th October 2014, 05:18 PM
சின்ன எம். ஜி. ஆர். என்றழைக்கப்பட்ட மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் "திரை உலகம்" இதழுக்காக அளித்த பிரத்தியோக பேட்டி :

http://i59.tinypic.com/wmfjna.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
10th October 2014, 05:27 PM
அருமையான பதிவு திரு கலியபெருமாள் சார்


எம்ஜிஆரிடம் உள்ள தனி சிறப்பு அவர் ஏற்படுத்திய வசூல் சாதனைகளை அவரே வென்று காட்டியதுதான்....
http://i62.tinypic.com/2db2x35.jpg
http://i60.tinypic.com/69n9rb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
10th October 2014, 05:27 PM
பொன்மனசெம்மலைப் போற்றி நடிகை சி. ஐ. டி. சகுந்தலா அவர்கள், "திரை உலகம்" இதழுக்காக அளித்த பேட்டி http://i57.tinypic.com/2qjkidu.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
10th October 2014, 05:32 PM
தலைவரின் வெற்றி உலா ஆரம்பம்


October Revolution 1972 - The magic moment when MGR approach the People. See the boy’s happiness.
http://i57.tinypic.com/sgqsnc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
10th October 2014, 05:32 PM
கொள்கை வேந்தனாம் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி, கல்லூரி மாணவி "திரை உலகம்" இதழுக்காக அளித்த பேட்டி !

http://i59.tinypic.com/2hov50o.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
10th October 2014, 05:34 PM
நன்றி ரூப் சார் மற்றும் வெங்கடேஷ்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_bird_zps6f315d0f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_bird_zps6f315d0f.jpg.html)

MGR Fan Venkatesan.
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
10th October 2014, 05:36 PM
திரு. ஆர்.கே.எஸ்.
சகோதரர் யுகேஷ் பாபு அவர்கள் போட்ட பதிவை எடுத்து கிண்டல் செய்கிறீர்களோ என்று நினைத்தேன். ஆனால், lighter side ஆகத்தான் போட்டேன் என்று நீங்கள் விளக்கம் அளித்திருப்பதை பார்த்த பின் உங்கள் நோக்கத்தில் தவறில்லை என்று புரிந்து கொண்டேன்.

சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களும் உள்நோக்கத்தோடோ, வம்புக்காகவோ உங்கள் பெயரை இழுத்ததாக நினைக்கவில்லை. முரளிக்கு அவர் அளித்த விளக்கமாகவே பார்த்தேன். இப்போது, உங்கள் விளக்கத்தை நான் ஏற்கவில்லையா?

திரு.கோபால் அவர்களுக்கு அளித்த பதிலில் உங்கள் பெயரைப் பயன்படுத்தியது குறித்து நீங்கள் முதலில் ‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ’பதிவு போட்டபோதே விளக்கம் சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால், தேவையில்லாமல் பிரச்னை செய்கிறாரே என்று நினைத்து கோபம் வந்ததால் விளக்கத்தை தவிர்த்து, இது நியாயமா? என்று கேட்டிருந்தேன். உங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டதால் இப்போது விளக்கம் அளிக்கிறேன்.

‘தனக்குத் தானே.....’ சொற்றொடரைப் பொறுத்தவரை நீங்கள் அதை திறமையாக கையாண்டிருந்ததும் அதில் தொக்கியிருந்த நகைச்சுவையும் என்னைக் கவர்ந்ததால் அதை அப்படியே பயன்படுத்தினேன். காப்பி அடித்தது போலாகிவிடுமே என்பதால் உங்கள் பெயரை போட்டேன்.

ஐடி விவகாரத்தை பொறுத்தவரை உங்கள் திரியில்தான் அவ்வாறு உண்டு என்று பொதுவாகக் கூறினால், அப்படி எல்லாம் இல்லை என்று யாராவது கூறி, ஆதாரம் எங்கே? என்று கேட்டால் மீண்டும் நான் ஆதாரத்தை சொல்ல வேண்டியிருக்கும். சொல்லாமல் விட்டாலும் நான் பொய் கூறியது போல இருக்கும். விவாதத்தை மேற்கொண்டு தொடர விரும்பாமல் கேள்விக்கே வழி இல்லாத வகையில் ஆதாரத்தோடு சொல்ல நினைத்ததால் நீங்கள் ஏற்கனவே எழுப்பிய சந்தேகத்தை மேற்கோள் காட்ட வேண்டியதாகி விட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். திரு.கோபால் அவர்களுக்கு அளித்த பதிலைத் தொடர்ந்து விவாதத்தை விரும்பாதது போலவே இப்போதும் விவாதத்தை தொடர விரும்பவில்லை. என்றாலும், உங்கள் பெயரைப் பயன்படுத்தியதற்காக நீங்கள் வருந்தினால் அதற்காக நானும் வருந்துகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

பின்குறிப்பு: பண்பாளர்கள், கண்ணியவான்கள் என்று கூறி திரு.ராகவேந்திரா, திரு.ஜி.கிருஷ்ணா, திரு. சிவாஜி செந்தில் ஆகியோர் பெயர்களையும் கூறியிருந்தேன். அதில் ஒரு பெயர் விட்டுப் போய் விட்டது. அவர்.. திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்கள்.(என்ன வாசு சார், எதிரணியில் நமக்கு நல்ல பெயர் உண்டு என்று இனி நீங்களாகவே நினைத்துக் கொள்ள வேண்டாம். நிஜமாகவே உங்களுக்கு இங்கு நல்ல பெயர் உண்டு. நீங்கள் மட்டுமல்ல, அடிப்படையில் எல்லாருமே நல்லவர்கள்தான், ராட்சச ரசிகர்கள் உட்பட) பண்பாளர்கள், கண்ணியவான்கள் பட்டியலில் உங்கள் பெயர்களை பயன்படுத்தியதற்காக எதிர்ப்பு தெரிவிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எதிர்ப்பு தெரிவித்தால் அப்படி சொன்னதற்காக மன்னிப்பு கோர தயாராக இருக்கிறேன்..... என்று எச்சரிக்கிறேன்.

very good reply - kalaiventhan sir.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ்!

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
10th October 2014, 05:36 PM
அருமை முத்தையன் சார். உங்களிடம் இன்னும் அதிகமாக எதிர் பார்கிறேன்

http://i59.tinypic.com/2jdmff5.jpghttp://i61.tinypic.com/35n7brd.jpghttp://i58.tinypic.com/33x7itf.jpghttp://i60.tinypic.com/j9334p.jpghttp://i61.tinypic.com/2ihxp8m.jpghttp://i61.tinypic.com/16abple.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
10th October 2014, 05:42 PM
இன்று தி இந்து தமிழ் நாளிதழ்
http://i58.tinypic.com/2gvmown.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
10th October 2014, 05:45 PM
அவருக்கு எனது வாழ்த்துக்கள் திரு செல்வகுமார் சார்


15-10-14 தேதியிட்ட குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்ட கீழ்கண்ட செய்தி தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ளும் விஷயமாகும்.[

http://i62.tinypic.com/23ie0cw.jpg

இந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், நமது திரியின் பார்வையாளரும், மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் பலவற்றினை திரு. வினோத் மூலம் இத்திரிக்கு அளித்தவரும், எம். ஜி. ஆர். ரசிகர்களில் மூத்தவருமான பெங்களூரு சி. எஸ்.குமார் அவர்களின் சகோதரர் (சிற்றப்பா மகன்). புரட்சித்தலைவரின் மீது பெரும் மதிப்பு கொண்டவர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
10th October 2014, 05:50 PM
ஸ்டில்ஸ் என்று சொன்னால் அது திரு செல்வகுமார் சார் தான் என்பது உறுதி

மக்கள் திலகத்துடன் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் மற்றும் அவர் புதல்வர் எஸ். எஸ். பாலன்.

http://i59.tinypic.com/2a0bbxv.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ்!

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
10th October 2014, 05:56 PM
இந்த வருடம் கோவையில் வந்த தலைவரின் படங்களை பட்டியல் இடவும்
நன்றி திரு இரவிச்சந்திரன் சார்


தீபாவளித் திருநாளில்

கோவை நகர மக்கள் திலகத்தின்

ரசிகப்பெருமக்களை

மகிழ்விக்க வரும்

பொன்மனச்செம்மலின்

வெற்றிக்காவியங்கள்

ராயல் - குடியிருந்தகோயில்

டிலைட் - உரிமைக்குரல்


எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
10th October 2014, 05:59 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsa5a4b338.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsa5a4b338.jpg.html)

கருணாநிதிக்கு நன்றி


11.10.1972 நமது புரட்சி நடிகர் திமுக வில் இருந்து வெளியேற்றப்பட்டார் கருணாநிதியால் , அன்று மட்டும் தலைவரை அவர் வெளியேற்றமால் இருந்து இருந்தால் நமது தமிழகம் பத்தாண்டு பொற்கால ஆட்சி தனை இழந்து இருக்கும் . நாம் எல்லோரும் ஒரு சிறந்த முதல்வரை இழந்து இருப்போம் ,

எல்லாவற்றிக்கும் மேலாக அ இ அ தி மு க என்ற மாபெரும் மக்கள் கட்சி இந்த உலகத்திற்கு வராமல் போயி இருக்கும். இப்படி பட்ட பெருமைகளை கொடுத்த கருணாநிதிக்கு நன்றி சொல்வோம் .

Scottkaz
10th October 2014, 06:00 PM
நல்ல விளக்கம் திரு கலைவேந்தன் சார்
அருமையாக உள்ளது
நன்றி சார்

நண்பர்களுக்கு வணக்கம்.

திரு.எஸ்.வி.சார், திரு.செல்வகுமார் சார், திரு.எஸ்.வி.சார் போட்டிருந்த ஆவணப் பதிவுகள் அட்டகாசம். கோவை தலைவரின் கொடி பறக்கும் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது படங்கள் திரையீடுகளை தெரிவிக்கும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். களேபரத்தில் சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு வரவேற்பு கூறவும் மறந்ததுடன், எங்கள் தங்கள் திரைப்படம் பற்றிய எனது கருத்துக்களை கூறக் கூட நேரமில்லாமல் போய் விட்டது. திரு.முத்தையன் அம்மு அவர்களை திரிக்கு வரவேற்று தலைவரின் புகழ்பாட வாழ்த்துகிறேன்.

‘கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது தர்மம் வெளியேறலாம்’ என்று உரிமைக்குரல் படத்தில் தலைவர் பாடியதுபோல கண்ணை மறைத்ததால் திமுகவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நாள் இன்று. ‘தர்மம் அரசாளும் தருணம் வரும்போது தவறு வெளியேறலாம்’ என்பதையும் நிரூபித்தவர் தலைவர்.

*எங்கள் தங்கம் படத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு சிறப்புகள் உண்டு. தலைவராகவே அவர் வரும் இரண்டு படங்களில் இது ஒன்று. (மற்றொன்று தேர்த்திருவிழா)

*அண்ணாவிடம் இருந்து தலைவர் பரிசு பெறுவது போன்ற காட்சி இந்தப் படத்தில் மட்டுமே உண்டு.

* திரு.எஸ்.வி.சார், சகோதரர் யுகேஷ்பாபு ஆகியோர் கூறியதுபோன்று மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தையும் திரு. மு.கருணாநிதி குடும்பத்தையும் இப்படத்தில் இலவசமாக நடித்ததன் மூலம் கடனில் இருந்து மீட்டவர் தலைவர்.

*திரு.முரசொலி மாறன் நடித்த ஒரே படம். சிறுசேமிப்புத்துறை தலைவராக தலைவர் வரும் காட்சியில் அவர் அருகில் அமர்ந்திருப்பார். (அவரது கல்லூரிப் படிப்புக்கு பணம் கொடுத்தது தலைவர்தான் என்பது உபரித் தகவல்)

*அதிலும் கதாகாலட்சேப காட்சி. வழக்கமாக மொட்டை அடித்ததுபோல மேக்கப் போட்டிருப்பவர்களுக்கு தலையை சுற்றி paste செய்தது தெரியும். ஆனால், இதில் தலைவருக்கு கச்சிதமாக மேக்கப் போடப்பட்டிருக்கும். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் தலைவர் நடித்திருப்பார்.

* திரைப்படங்களில் பல கதாகாலட்சேப காட்சிகள் இடம் பெற்றதுண்டு. நல்ல தம்பி படத்தில் கலைவாணர், தெய்வப்பிறவியில் தங்கவேலு, அன்னபூரணியில் சோ போன்றவர்கள் அந்தக் காட்சிகளில் நடித்துள்ளனர். கலைவாணரைத் தவிர்த்துப் பார்த்தால் (முழு காலட்சேபமும் அவரே)மற்ற படங்களில் நடிக்கும் நடிகர்கள், இடையே வரும் பாடல்களைத் தவிர வசனங்களைத் தாங்களே பேசியிருப்பார்கள். ஆனால், தலைவருக்கு மட்டுமே பாடல்களோடு வசனங்களுக்கும் டி.எம்.எஸ். குரல் கொடுத்திருப்பார்.

பாடல் காட்சிகளுக்கு இசையோடு வரும் வார்த்தைகள் இழுவையாக இருக்கும் என்பதால் அதற்கு வாயசைப்பது கூட சற்று சுலபம். ஆனால், அடுத்தவர் பேசும் வசனத்துக்கு அந்த டைமிங்கில் வாயசைப்பது கடினம். (ஒருவரை பேசவிட்டு காட்சி எடுத்து பின்னர், திரையில் அவரது பேச்சுக்கேற்ப ஒலிப்பதிவு கூடத்தில் மற்றவர்கள் டப்பிங் கொடுப்பது வேறு. ஆனால் இதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டி.எம்.எஸ்.சின் வசனங்கள்) அதற்கேற்ப தலைவர் அசால்டாக பேசி நடித்திருப்பார். இத்தனைக்கும் நீண்ட ஷாட்டுகள் வேறு.

* நான் அளவோடு ரசிப்பவன் பாடலின் முதல் வரியை எழுதிய வாலி மேற்கொண்டு என்ன போடுவது என்று யோசித்து கொண்டிருந்தபோது, ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என்று எடுத்துக் கொடுத்தவர் திரு.மு.கருணாநிதி. இதை புரட்சித் தலைவரிடம் வாலி கூறியதும், பதிலுக்கு அவரை (கருணாநிதியை) பாராட்டுவது போல பாடலை அமைக்குமாறு தலைவர் வாலியை கேட்டுக் கொள்ள.... ‘நான் செத்துப் பிழைச்சவன்டா’ பாடலில் ‘ஓடும் ரயிலை இடைமறித்து....’ வரிகள் இடம் பெற்றன. இதை வாலியே பலமுறை கூறியிருக்கிறார்.

*ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் பாடலில் தலைவரின் மேக்கப் வித்தியாசமானது. தனக்கு ஆடத் தெரியாதது போலவே ஜெயலலிதாவுடன் அவர் போடும் ஸ்டெப்ஸ் அசத்தல். அந்தப் பாடலில், கத்திச் சண்டை, குத்துச் சண்டை, கம்புச் சண்டை, வம்புச் சண்டை என்ற இந்த வார்த்தைகள் 4 விநாடிகளுக்குள்தான் வரும். அந்த 4 விநாடிகளுக்குள் அந்தந்த சண்டைக்கேற்ற அபிநயங்களை காட்டும் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர் தலைவர் மட்டுமே. தொடர்வோம்...

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
10th October 2014, 06:04 PM
நிச்சயமாக மிக பெரிய கெட்டதில்,மிக மிக பெரியது கிடைத்தது நமக்கு
நன்றி திரு யுகேஷ் சார்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsa5a4b338.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsa5a4b338.jpg.html)

கருணாநிதிக்கு நன்றி


11.10.1972 நமது புரட்சி நடிகர் திமுக வில் இருந்து வெளியேற்றப்பட்டார் கருணாநிதியால் , அன்று மட்டும் தலைவரை அவர் வெளியேற்றமால் இருந்து இருந்தால் நமது தமிழகம் பத்தாண்டு பொற்கால ஆட்சி தனை இழந்து இருக்கும் . நாம் எல்லோரும் ஒரு சிறந்த முதல்வரை இழந்து இருப்போம் ,

எல்லாவற்றிக்கும் மேலாக அ இ அ தி மு க என்ற மாபெரும் மக்கள் கட்சி இந்த உலகத்திற்கு வராமல் போயி இருக்கும். இப்படி பட்ட பெருமைகளை கொடுத்த கருணாநிதிக்கு நன்றி சொல்வோம் .


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
10th October 2014, 06:05 PM
திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் பதிவிட்ட கோவை திரையரங்க செய்திகள் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

திரு. வினோத் அவர்களின் ஜெட் வேகப்பதிவுகள் வியப்பில் ஆழ்த்துகிறது.

திரு. கலியபெருமாள் அவர்களின் வித்தியாசமான பதிவுகள் விறுவிறுப்பானவை.

மக்கள் திலகம் படங்களின் பழைய வரலாற்று சாதனைகளை தொடர்ந்து பதிவிடும் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள் பாராட்டுக்குரியவர்.

திரு. கலைவேந்தன் அவர்களின் நச்சான பதிவுகள் மிகவும் அமர்க்களம்.

இதர சகோதரர்கள் அவ்வப்போது பதிவிடும் பதிவுகள் பளிச் !

புதிய வரவுகளான முத்தையன் அம்மு. சந்திரசேகர் ஆகியோரின் பதிவுகள் அதிகமான அளவில் இருக்க வேண்டும் என்பது என் ஆவல்.

http://i60.tinypic.com/noh4s7.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
10th October 2014, 06:16 PM
http://i62.tinypic.com/p0qrt.jpg

Courtesy: Suriyan Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

Russellisf
10th October 2014, 06:17 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ADMK_Membership_Form_zpsf5a7f64e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ADMK_Membership_Form_zpsf5a7f64e.jpg.html)

Russellisf
10th October 2014, 06:20 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/0_zpsf6e0805f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/0_zpsf6e0805f.jpg.html)

Russellisf
10th October 2014, 06:23 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/f_zps06eaaa50.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/f_zps06eaaa50.jpg.html)

Russellisf
10th October 2014, 06:24 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zpsf4b468b0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zpsf4b468b0.jpg.html)

Stynagt
10th October 2014, 06:25 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/f_zps06eaaa50.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/f_zps06eaaa50.jpg.html)

From the world records, M.G.R. Was the First actor to become the Chief minister of a State.

Russellisf
10th October 2014, 06:26 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zps03a46ada.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zps03a46ada.jpg.html)

Stynagt
10th October 2014, 06:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsa5a4b338.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsa5a4b338.jpg.html)

கருணாநிதிக்கு நன்றி


11.10.1972 நமது புரட்சி நடிகர் திமுக வில் இருந்து வெளியேற்றப்பட்டார் கருணாநிதியால் , அன்று மட்டும் தலைவரை அவர் வெளியேற்றமால் இருந்து இருந்தால் நமது தமிழகம் பத்தாண்டு பொற்கால ஆட்சி தனை இழந்து இருக்கும் . நாம் எல்லோரும் ஒரு சிறந்த முதல்வரை இழந்து இருப்போம் ,

எல்லாவற்றிக்கும் மேலாக அ இ அ தி மு க என்ற மாபெரும் மக்கள் கட்சி இந்த உலகத்திற்கு வராமல் போயி இருக்கும். இப்படி பட்ட பெருமைகளை கொடுத்த கருணாநிதிக்கு நன்றி சொல்வோம் .


http://i59.tinypic.com/be613n.jpg
Thanks Yukesh Babu Sir.

Russellisf
10th October 2014, 06:41 PM
11.10.1972

மக்கள் திலகத்தின் கோடானு கோடி ரசிகர்களின் கறுப்பு நாள்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps540166a6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps540166a6.jpg.html)

Scottkaz
10th October 2014, 06:43 PM
பாட்டாளிகளின் தலைவன்
[QUOTE=Yukesh Babu;1171141]http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zps03a46ada.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zps03a46ada.jpg.html)[/QUOT
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
10th October 2014, 06:50 PM
தலைவர் பட்ட இன்னல்கள்

11.10.1972 முதல் 29.06.1977 வரை அவர் பட்ட இன்னல்கள் வேறு ஒருவருக்கு நேர்ந்து இருந்தால் நாட்டை விட்டு போயிருப்பான் . மக்கள் துணையோடு வந்த சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி என்னும் இமயத்தில் தனி ஒரு ஆளாக நின்று எதிரிகளை சுமார் பத்து வருடம் கோட்டை பக்கம் தலை காட்டாமல் செய்த எங்கள் புண்ணிய தலைவரின் புகழ் இன்று போல் என்றும் இருக்கவேண்டும் .

Russelldvt
10th October 2014, 07:07 PM
மக்கள் மனதை மீட்ட SUNDARAPANDIYANhttp://i57.tinypic.com/5drlv7.jpg

Russellisf
10th October 2014, 07:10 PM
எதிரிகளை ஓட விட்ட எங்கள் சுந்தரபாண்டியன்





மக்கள் மனதை மீட்ட SUNDARAPANDIYANhttp://i57.tinypic.com/5drlv7.jpg

Russelldvt
10th October 2014, 07:10 PM
பையில் இருப்பதை மட்டும் அல்ல கையில் இருப்பதையும் கொடுக்கும் வள்ளால் எங்கள் தலைவர் http://i57.tinypic.com/2v81lbo.jpg

Russellisf
10th October 2014, 07:13 PM
http://www.youtube.com/watch?v=XvMZDtFRipk

thanks sailesh sir

Russellisf
10th October 2014, 07:17 PM
தலைவரின் சிவ தாண்டவத்தை கண்டு மகிழுங்கள்

http://www.youtube.com/watch?v=6zCpv4Fe53M

Russellisf
10th October 2014, 07:19 PM
மதங்களை கடந்து வாழும் எங்கள் குல கடவுள்




பையில் இருப்பதை மட்டும் அல்ல கையில் இருப்பதையும் கொடுக்கும் வள்ளால் எங்கள் தலைவர் http://i57.tinypic.com/2v81lbo.jpg

Russelldvt
10th October 2014, 07:21 PM
உண்மையான இரட்டை VEDAMhttp://i62.tinypic.com/2ilmrl2.jpg

Russellisf
10th October 2014, 07:21 PM
http://www.youtube.com/watch?v=kUdXd4xvJbo

thanks sailesh sir

Russelldvt
10th October 2014, 07:26 PM
இந்த பாட்டை கேட்டு இருக்கிரிகலாhttp://i61.tinypic.com/2quq1wz.jpg

Russellisf
10th October 2014, 07:31 PM
http://www.youtube.com/watch?v=6Go80E0Q29k




இந்த பாட்டை கேட்டு இருக்கிரிகலாhttp://i61.tinypic.com/2quq1wz.jpg

Russelldvt
10th October 2014, 07:32 PM
3615parakkum paavai

Russelldvt
10th October 2014, 07:44 PM
3614madurai meetta sundarapandiyan

Richardsof
10th October 2014, 08:24 PM
10.10.1972

மக்கள் திலகம் எம்ஜிஆர் திமுக விலிருந்து நீக்கிய செய்தி அறிந்து அன்று மாலை வேலூர் தாஜ் அரங்கு முன்பு
வேலூர் மற்றும் புற நகர் எம்ஜிஆர் மன்றங்கள் -நிர்வாகிகள் எல்லோரும் ஒன்று கூடினர் .அந்த நேரத்தில் தாஜ்
அரங்கில் ''அன்னமிட்டகை '' 27 வது நாளாக ஓடிகொண்டிருந்தது .ஏராளமான ரசிகர்களும் , பொது மக்களும் கூடி விட்டனர் . தாஜ் அரங்கில் பக்கத்தில் இருந்த அப்சரா அரங்கில் '' வசந்த மாளிகை '' 12வது நாளாக ஓடிகொண்டிருந்தது . அந்த அரங்கிலும் ஏராளமான சிவாஜி ரசிகர்களும் கூடியிருந்தார்கள் . மொத்தத்தில் அன்றைய தினம் சாதாரண நாளில் [செவ்வாய்கிழமை ] சாலை முழுவதும் பயங்கர கூட்டம் .

மக்கள் திலகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரிந்து கொள்ள எல்லாதரப்பு ரசிகர்களும் மக்களும் ஆர்வமாக ஒன்றுகூடி விவாதித்து கொண்டு வந்தார்கள் . அன்றைய தின மாலை முரசு - அலை ஓசை இதழ்கள்
சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன . 27வது நாளில் அன்னமிட்டகை இரவு காட்சி தாஜ் அரங்கம் நிறைந்தது .

காரசார விவாதம் என்னவென்றால்

எம்ஜிஆர் மன்னிப்பு கேட்பாரா ?

எம்ஜிஆர் சமாதானம் செய்து கொண்டு மீண்டும் திமுகவில் சேருவாரா ?

எம்ஜிஆர் புது கட்சி ஆரம்பிப்பாரா ?

ஸ்தாபன காங் கட்சி அல்லது இ .காங் கட்சியில் சேருவாரா ?

இப்படியாக பலவித யூகங்கள் முதல் நாள் நடந்தது .

oygateedat
10th October 2014, 11:06 PM
விரைவில்

மக்கள் திலகத்தின்

திரைக்காவியம்

நான் ஆணையிட்டால்

கோவை - ராயல் ( தகவல் - திரு ஹரிதாஸ்)

மதுரை - சென்ட்ரல் (தகவல் - ஆர் சரவணன்)



எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------------------

oygateedat
10th October 2014, 11:36 PM
http://i59.tinypic.com/b3u2l0.jpg
http://i57.tinypic.com/5eble0.jpg

Richardsof
11th October 2014, 05:45 AM
http://i58.tinypic.com/2rosrur.jpg

Richardsof
11th October 2014, 08:54 AM
http://i62.tinypic.com/126btkp.jpg

Richardsof
11th October 2014, 08:54 AM
http://i60.tinypic.com/2zqf0k8.jpg

Richardsof
11th October 2014, 08:56 AM
http://i62.tinypic.com/fu5kco.jpg

Richardsof
11th October 2014, 08:57 AM
http://i62.tinypic.com/e9zqyr.jpg

Richardsof
11th October 2014, 09:00 AM
http://i58.tinypic.com/1zmp828.jpg

Richardsof
11th October 2014, 09:01 AM
http://i57.tinypic.com/rr7dxy.jpg

Richardsof
11th October 2014, 09:02 AM
http://i58.tinypic.com/25k537k.jpg

Richardsof
11th October 2014, 09:04 AM
http://i62.tinypic.com/jphncg.jpg

Richardsof
11th October 2014, 09:06 AM
http://i57.tinypic.com/2ai4s5j.jpg

ujeetotei
11th October 2014, 11:12 AM
From which magazine you are posting Vinod sir.

Richardsof
11th October 2014, 11:46 AM
From which magazine you are posting Vinod sir.

Roop Sir

I got it from ''sama needhi '' and ''Mandram '' old magazines.

Russellwle
11th October 2014, 12:32 PM
http://youtu.be/s9wyva1bxZA

Russellwle
11th October 2014, 12:37 PM
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கே பீ ராமகிருஷ்ணன் அவர்கள் இடம் பெட்ர காட்சி தொகுப்பு

Richardsof
11th October 2014, 01:04 PM
OLD POSTER - KOVAI - GANGA 1996

http://i61.tinypic.com/wmimhy.jpg

Russellisf
11th October 2014, 02:20 PM
ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பிறகு, அவர் மகன் எம்.எஸ்.காசி, படத்தொழிலில் இறங்கினார். ஸ்ரீதர் டைரக்ஷனில் "நெஞ்சம் மறப்பதில்லை'' படத்தைத் தயாரித்தார். காசி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் "பி.எஸ்.சி'' முதல் ஆண்டு படித்து வந்தபோது, தந்தை சோமுவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், தனக்கு உதவியாக மகன் காசியை படத்தொழிலில் இறக்கினார். 1959ம் ஆண்டு "தங்கப்பதுமை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை காசி கவனித்தார்.

இதன்பின் எம்.ஜி.ஆர். நடித்த "அரசிளங்குமரி'' தயாரிக்கப்பட்டு வந்தபோது, சோமு மரணம் அடைந்தார். இதனால், அந்தப்படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பை காசி ஏற்றார்.

இந்த அனுபவம் பற்றி காசி கூறியதாவது:

"மாணவ பருவத்திலேயே, ஜுபிடர் படங்களின் படப்பிடிப்பை பார்த்திருக்கிறேன். எனவே, சின்ன வயதிலேயே எனக்கு சினிமா பற்றி ஓரளவு தெரியும்.

என் தந்தை உடல் நலம் குன்றியதால், நான் படத்தொழிலுக்கு வந்தேன். படத்தயாரிப்பின் நுட்ங்கள் பற்றி, எனக்கு என் தந்தை பயிற்சி அளித்தார்.

"அரசிளங்குமரி'' தயாராகி வந்தபோது என் தந்தை காலமாகிவிட்டதால், அந்தப் படத்தை முடிக்க எம்.ஜி.ஆர். செய்த உதவி மறக்க முடியாதது. கிட்டத்தட்ட பாதி படத்தை அவர்தான் டைரக்ட் செய்தார் என்று கூறவேண்டும்.

ஒரு காரியத்தை எடுத்தால், அதை முடிக்கும் வரை சாப்பாடு, தூக்கம் எதைப்பற்றியும் எம்.ஜி.ஆர். நினைக்கமாட்டார். "எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்க வேண்டும்'' என்பதே அவர் கொள்கை. அவரிடமிருந்து நான் கற்ற முக்கிய பாடம் இது.''

இவ்வாறு காசி கூறினார்.

"அரசிளங்குமரி'' படத்திற்குப் பிறகு, ஜுபிடர் பிக்சர்ஸ் பேனரில் படம் எதுவும் தயாரிக்கப்படவில்லை.

Russellisf
11th October 2014, 02:31 PM
கலைவாணர் ஒரு புரியாத புதிர்!
1966 –ம் ஆண்டு ஆனந்த விகடனில் என்.எஸ்.கே. பற்றி எம்.ஜி.ஆர்.எழுதியது...

“கலைவாணர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தார்..., அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ''ராமச்சந்திரனைப் பார்க்கணும்...அவனை வரச் சொல்லுங்கள்'' என்றாராம். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார்.
''யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது'' என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால், உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் ...எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன்.
பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ''ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா?
பல பேர் வர்றாங்க. வந்து, பார்த்துட்டுப் போறாங்க. பத்திரிகைக்காரங்க, 'அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார்’ என்று செய்தி வெளியிடுறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கிற செய்திதான் வெளியே தெரியும்.
எனக்காக நீ செய்துவருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறா நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச் சொன்னேன்'' என்றார்.

என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்து கொள்ள முடியும்?
அவர் தனக்காகவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது? எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!”

# எம்.ஜி.ஆரின் இந்த பேட்டியைப் படித்தபோது எனக்கு எம்.ஜி.ஆரின் ஒரு பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது...

“ஒருவன் மனது ஒன்பதடா – அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா!
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா! – அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா!”

Russellisf
11th October 2014, 02:32 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfde23d61.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfde23d61.jpg.html)

Russellisf
11th October 2014, 02:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps4af5fca1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps4af5fca1.jpg.html)

Russellisf
11th October 2014, 02:35 PM
super answer given by tamilaruvi about makkalthilagam natural acting and fight scenes





http://i59.tinypic.com/b3u2l0.jpg
http://i57.tinypic.com/5eble0.jpg

Russellisf
11th October 2014, 02:42 PM
கோடம்பாக்கம் மேம்பாலம் கட்டாத காலத்தில் அந்த பக்கம் கார் போனாலே அது சினிமாக்காரனின் கார்தான் என்று சொல்வார்கள்.
ஒரு நாள் அந்தப் பக்கம் வந்த காரை வழி மறித்து பிச்சை கேட்ட கிழவிக்கு , காரின் உள்ளிருந்த ஒரு கை ஐந்து ரூபாய் பிச்சை போடுகிறது. அந்த கிழவி கருணை முகத்துடன் ..."எம்.ஜி.ஆர். நல்லாயிருக்கணும்...''னு வானத்தை நோக்கி பிரார்த்தித்தாராம் .... ஆனால் ஐந்து ரூபாய் பிச்சை போட்டவர் எஸ்.எஸ்.ஆர். …”

இந்த சுவாரஸ்யமான தகவலை சொன்னவர் இயக்குனர் – நடிகர் ஆர்.சுந்தரராஜன் ...

சரி ..இன்னைக்கு எல்லோரும் வாத்தியார் தின வாழ்த்து சொல்லிட்டாங்க...
வாத்தியார்களைப் பத்தி ஸ்டேடஸ்சும் போட்டுட்டாங்க...
நாமளும் வாத்தியார் பத்தி ஸ்டேடஸ் போட்டுட்டோம்...

..அதாங்க ..எம்.ஜி.ஆர். னாலே வாத்தியார்தானே...!!!

Russellisf
11th October 2014, 02:47 PM
மதுரை முத்து ” அப்படின்னு இப்போ கூகிளில் தேடினால் "கலக்கப் போவது யாரு ?" முத்துவைத்தான்
அது காட்டுகிறது ...
ஆனால் 1970 களில் தமிழ் நாட்டையே கலக்கு கலக்குன்னு கலக்கிய ஒரு மதுரை முத்துவை நம்மில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை...
எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியான சமயத்தில் ,அந்தப் படத்தை வெளியிடாமல் தடுக்க அப்போதைய தி.மு.க.அரசு ...அசுர முயற்சி எடுத்தது....
அந்த சமயத்தில் தி.மு.கவின் மதுரை சாம்ராஜ்யம் முழுக்க அப்போதைய மதுரை மேயர் “ மதுரை முத்து ” என்பவரின் கைகளில்தான் இருந்தது...

மதுரை முத்து பகிரங்கமாக ஒரு சவால் விட்டார்...
“எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளிவராது...
வரவும் விடமாட்டேன்...
அப்படி, படம் ரிலீஸ் ஆகி விட்டால் , நான் சேலை கட்டிக் கொள்கிறேன்...'”...
இப்படி பகிரங்க சவால் விட்டு பதட்டத்தை உண்டாக்கினார் இந்த மதுரை முத்து....
ஆனால் எம்.ஜி.ஆரின் சமயோசித மூளையினால் ...சாமர்த்திய வேலைகளால் .... உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி பெரும் வெற்றியும் பெற்றது...
சவால் விட்ட மதுரை முத்துவுக்கு, சேலைகள் ஏராளமாக வந்து குவிந்தனவாம்......

சில காலம் பின் கருணாநிதியோடு மதுரை முத்துவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட ..ஏகப்பட்ட தயக்கத்துக்குப் பின் ...எம்.ஜி.ஆருடன் வந்து இணைந்தார் மதுரை முத்து....!!!
அன்றைய மாலை பொதுக்கூட்டத்திலேயே , கருணாநிதியை கடுமையாக தாக்கிப் பேசினாராம் மதுரை முத்து....
அந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும் போது, 'வருங்கால மேயர்.. அண்ணன் முத்து அவர்களே...' என்று அழைத்ததோடு ...மதுரை மேயர் பதவியையும் வழங்கி, கவுரவித்தாராம் ...

Russellisf
11th October 2014, 03:02 PM
"சில மன்னிப்புகள் கூட
ஒருவகையில் தண்டனைதான்..! "..-நான் ரசித்த உண்மை இது...

எம்.ஜி.ஆர். முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோது மதுவிலக்கை கடுமையாக அமல் படுத்தினார் ...
இதுபற்றி ' கண்ணதாசன் ' பத்திரிகையில் ஒரு கேள்வி :

"ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆணையிட்டிருக்கிறாரே..?"
கண்ணதாசன் பதில் :
"ஆண்டவனே வந்து கேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன் . உங்கள் எம்.ஜி.ஆரிடம் இன்னொரு சட்டம் போட சொல்லுங்கள் ...ஒரு காதலிக்கு மேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள் "

யுத்தம் தொடர்ந்தது...
கடைசியில் எம்.ஜி.ஆர்.கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக நியமித்தார் . உடனே கண்ணதாசன் சொன்னார்...
" எம்.ஜி.ஆருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் ,
கடைசியாக தோற்று விட்டேன் "


courtesy facebook

Russellisf
11th October 2014, 03:41 PM
ன்பிருந்தால், ஆண்மையும் தாய்மையடையும்" - இதை அன்றே நிரூபித்தவர் அன்னை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர்...!

இதோ ...எம்.ஜி.ஆருடன் கதாசிரியர் ஆரூர்தாசுக்கு ஏற்பட்ட அன்பு அனுபவங்கள்...ஆரூர்தாசின் வார்த்தைகளில்...

"எம்.ஜி.ஆரின் ஒப்பனைஅறைக்குள் நுழைந்தேன்.சுழல் நாற்காலியில் அமர்ந்து மேக்-அப் போட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். , எதிர்க்கண்ணாடியில் என்னைப்பார்த்து திடுக்கிட்டுத் திரும்பி என் முகத்தைக் கையால் பிடித்துக்கொண்டு கண்களைக் கவனித்து ...
எ ம்.ஜி.ஆர் : "என்ன, கண் இப்படி ரத்தக் கோளமா இருக்கு... சிவாஜி பிலிம்ஸ் படம் ராத்திரியில கண்ணு முழிச்சி எழுதுறீங்களா?"
நான்: "ஆமாண்ணே."
எம்.ஜி.ஆர்:- "சரி. என் குடும்ப டாக்டர் வி.ஆர்.எஸ்.கிட்டே போறீங்களா? போன் பண்ணி சொல்லட்டுமா?"
நான்:- "வேண்டாண்ணே....எனக்கு அப்படி ஒண்ணும் இல்லே. நல்லாத்தான் இருக்கேன். தூக்கம் இல்லே. அவ்வளவுதான். தூங்கினா சரியா போயிடும். "

மதிய வேளை வழக்கம்போல் மேக்-அப் அறையில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து சாப்பிட்டேன். "குழம்பைக் குறைச்சிக்கிட்டு நிறைய தயிர் போட்டுக்குங்க. தினமும் காபி, டீக்குப் பதிலா மோர் நிறைய குடிங்க. கெட்டித்தயிர்ல சர்க்கரை கலந்து சாப்பிடுங்க. இளநீர் குடிங்க. உஷ்ணம் குறைஞ்சிடும்.."
"சரிண்ணே.."
சாப்பிட்டு முடித்ததும் எம்.ஜி.ஆர். வழக்கம்போல் ’பாக்கெட் ரேடியோ’வில் மாநிலச் செய்திகள்கேட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தார். நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.
வயிறார சாப்பிட்டது! ஏற்கனவே இருந்த களைப்பு! இரண்டுமாகச் சேர்ந்து என் கண்களைச் சொக்கிச் சுழல வைத்தன. அதை மட்டுந்தான் நான் உணர்ந்தேன். பின்னர் உணர்விழந்தேன்....
எவ்வளவு நேரம் என்று தெரியாத நிலையில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன். இப்பொழுது என் தலை எம்.ஜி.ஆரின் மடி மீது இருந்தது!
மிரள மிரள விழித்தபடி "அண்ணே.." என்றேன். ஏதோ கனவு கண்டதுபோல...
எம்.ஜி.ஆர். என் முதுகைத்தடவியபடி சொன்னார் :

"தூக்கத்திலே அப்படியே சோபாவுலே சரிஞ்சி விழுந்து ஒரு பக்கமா சாஞ்சிட்டிங்க. தலை தொங்குச்சி. சுளுக்கிக்கும் இல்லியா? அதனால ஒங்க தலையை என் மடியிலே வச்சிக்கிட்டேன். அதுகூட தெரியாத அளவுக்கு அடிச்சிப்போட்டதுபோல ஆயிட்டிங்க. பரவாயில்லே. இன்னும் நேரம் இருக்கு. அப்படியே என் மடியில படுத்து தூங்குங்க..."

ஆரூர்தாசின் இந்த அனுபவங்களைப் படிக்கும்போது , எம்.ஜி.ஆர். இப்போது இல்லையே ..என்ற ஏக்கம் , எவருக்குமே ஏற்படுவது இயற்கை..!

எங்கோ படித்தது...என் நினைவுக்கு வருகிறது...

"நம் அன்புக்கும் ,அபிமானத்துக்கும் உரியவர்கள்
நாம் வாழும் காலத்திலேயே நம் கண் முன் இறப்பதுதான்
இயற்கை நமக்குத் தரும் மிகப் பெரிய சாபம்"


courtesy net

Russellzlc
11th October 2014, 03:59 PM
PESUM PADAM -1971

http://i61.tinypic.com/wrhohy.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
11th October 2014, 04:09 PM
அந்த நாள் ஞாபகம்..//
சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்.. என்ற அரைப்பக்க விளம்பரம் பிரசுரமான அதே நாளில்,
"எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்" என்ற அரைப்பக்க விளம்பரம் வேறு பக்கத்தில் பிரசுரமாகியது! இந்தப் படத்தை "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" தயாரிக்கப் போவதாகவும் அந்த விளம்பரம் கூறியது. அதாவது எம்.ஜி.ஆரின் சொந்தப்படம்!
இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தனர். திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "சிவாஜி, எம்.ஜி.ஆர். இடையே பெரும் மோதல் உருவாகி விட்டது" என்று எல்லோரும் நினைத்தனர். ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டிருந்த நேரம் அது.
இந்த விவகாரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட்டார். எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, "நீங்கள் ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தை தயாரித்து வருகிறீர்கள். அதில் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். சிவாஜி கணேசன் வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளை. உத்தமபுத்திரனை சிவாஜிக்கு விட்டுக்கொடுங்கள்" என்று கூறினார்.
கலைவாணரிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் எம்.ஜி.ஆர். கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். எனவே, போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
[நன்றி :மாலைமலர்]

Russellisf
11th October 2014, 04:12 PM
எம்.ஜி.ஆர் தனக்கென்று சில இமேஜ்களை எப்போதும் வைத்திருந்தார்...!
"யாதோன் கி பாரத்" ஹிந்திப் படத்தில் ஒரு காட்சியில் ,
கதாநாயகி கோபித்துக் கொண்டு போக ,
கதாநாயகன் அவள் பின்னே ஓடி ...[ஓ மேரி சோனி..]ஆடிப்பாடி ..சமாதானம் செய்வார்...
அதே "யாதோன் கி பாரத்" தமிழில் "நாளை நமதே" ஆனபோது...அதே காட்சியில் நேர்மாறாக ..கதாநாயகன் கோபித்துக் கொண்டு போக ,கதாநாயகி , நாயகனின் பின்னே ஓடி ஆடிப் பாடி [காதல் என்பது காவியமானால் ..]கெஞ்சிக் கூத்தாடுவார்...
நாடே அவர் பின்னால் போனபோது
நாயகிகள் மட்டும் போகாமலிருக்க முடியுமா..?

Russellisf
11th October 2014, 04:29 PM
தி.நகரில் ஒரு ரெஸ்டாரண்டில் மாலை நேர அரையிருளில் அமர்ந்து நண்பன் ரவியோடு உணவு அருந்திக் கொண்டிருந்தேன்..எதிர்மேஜையில் ... அட..கவிஞர் முத்துலிங்கம்...நண்பன் ரவி ஆர்வமானான்...
" ஜான்....பிளீஸ்..அவர்கிட்ட கொஞ்சம் பேசுவோமே..."
கவிஞர் முத்துலிங்கம் அருகில் நாங்கள் அமர இடம் இல்லை...எங்கள் அருகே நிறைய இடம் இருந்தது...நான் கவிஞர் அருகே சென்று ,சற்று தயக்கத்துடன் கேட்க அவர் தயக்கமின்றி உடனே எங்களுடன் வந்து அமர்ந்தார்...நான் உண்மையை ஒத்துக் கொண்டேன்.."ஐயா ..உங்களை எங்களுக்குத் தெரியும்..ஆனா ..உங்க பாட்டெல்லாம் அவ்வளவா தெரியாது.."
"பரவாயில்லை "என்ற முத்துலிங்கம் அவர்கள் ,தாம் எழுதிய சில பாடல்களை நினைவுபடுத்தி சொன்னார்...
"மணி ஓசை கேட்டு எழுந்து(பயணங்கள் முடிவதில்லை)..ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ(பயணங்கள் முடிவதில்லை)..சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் (உதய கீதம்).."
அவர் பாடல்களை சொல்ல சொல்ல நண்பன் ரவி உற்சாகமானான்...ஒரு புதிய நூறு ரூபாய் நோட்டை எடுத்து .."சார்...இதில உங்க கையெழுத்து வேணும்.."என்று கவிஞரிடம் நீட்ட ,அவர் தடுத்து..இன்னும் சில தன் பாடல்களை சொன்னார்..
"சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே (முந்தானை முடிச்சு)
ஆறும் அது ஆழமில்லை (முதல் வசந்தம்) .. செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா (செந்தூரப்பூவே).."
நண்பன் ரவி உணர்ச்சிவசப்பட்டு மேலும் உற்சாகமாகி ,இப்போது ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து,மறுபடியும் கையெழுத்து கேட்க ,முத்துலிங்கம் இப்போதும் மறுத்து இன்னும் தன் பாடல்களை தொடர்ந்தார்....
"இதயம் போகுதே எனையே பிரிந்தே (புதிய வார்ப்புகள்).. டாடி டாடி ஓ மை டாடி (மவுன கீதங்கள்)... .தேவன் கோயில் தீபம் ஒன்று (நான் பாடும் பாடல்)...பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் (ஊருக்கு உழைப்பவன்)...மாஞ்சோலை கிளிதானோ (கிழக்கே போகும் ரயில் ).."..இப்போது நண்பன் ரவி எல்லை கடந்த உற்சாகத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அதில் கையெழுத்து இடச் சொன்னான்..கவிஞர் முத்துலிங்கம் அமைதியாக சொன்னார்..."நண்பரே..எம்ஜியார் எனக்கு அன்பை கொடுத்ததோடு ... சில பதவிகளும் கொடுத்து அழகு பார்த்தவர்..நான் முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.அதனால் சொல்கிறேன்..சட்டப்படி ரூபாய் நோட்டில் கையெழுத்து போடக் கூடாது ...ஒரு துண்டுக் காகிதம் கொடுங்கள்.."....கொடுத்தோம்...அவர் எழுதிய பாடலையே எழுதி கையெழுத்து இட்டுக் கொடுத்தார்..."அன்புக்கு நான் அடிமை ..தமிழ் பண்புக்கு நான் அடிமை.."
ரூபாய் நோட்டின் மதிப்பு மட்டும் அல்ல...கவிஞர் முத்துலிங்கத்தின் மதிப்பும் எங்களுக்கு முழுமையாக தெரிந்தது....
அன்புக்கு நாங்களும் அடிமை...!

Russellzlc
11th October 2014, 04:30 PM
http://i57.tinypic.com/2dwgtc.jpghttp://i57.tinypic.com/1yrgpt.jpghttp://i61.tinypic.com/15cisms.jpghttp://i62.tinypic.com/ndugr6.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
11th October 2014, 05:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsbd73ff23.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsbd73ff23.jpg.html)


courtesy dinamalar

Russellisf
11th October 2014, 07:02 PM
M.G.R. the “Heart fruit of Arignar Anna”. [Tamil Speech.S.V.Ramani.]
அனைத்து நெறிகளிலும்,வழிகளிலும் அண்ணா என்ற அற்புத நிலையை “அண்ணாவின் இதயக்கனி” புரட்சித் தலைவர் உருவாக்கினார்.

In 1972, DMK leader Karunanithi started to project his first son in a big way in film industry and also in politics. Understanding the tactics played by Karunanithi to corner him, MGR started to claim that corruption had grown within the party after the demise of Annadurai and in a public meeting asked for the financial details of the party to be publicised which enraged the leadership of DMK. Consequently, as expected, MGR was expelled from the party, and floated a new party named Anna Dravida Munnetra Kazhagam (ADMK), later renamed All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), the only powerful opponent of the DMK.He mobilized the period between 1972-1977 to spread and preach his party ambition with films like Netru Indru Naalai(1974), Idhayakani(1975) etc..,.


He became Chief Minister of Tamil Nadu on the 30th of July 1977, remaining in office till his death in 1987. The AIADMK won every state assembly election as long as MGR was alive. Although Anna Durai as well as Karunanidhi had acted in stage plays in trivial roles, in their younger days, before becoming chief minister, MGR was the first popular film actor to be a Chief Minister in India.Though the Congress won by a small margin of votes with the DMK in the 1980 parliamentary elections, the AIADMK under MGR won the state elections the same year. This made the Congress to ally with the AIADMK in the 1984 elections.


Once he became Chief Minister of Tamil Nadu, he placed great emphasis on social development, especially education. One of his most successful policies was the introduction of the “Mid-day Meal Scheme” introduced by the popular Congress Chief Minister and Kingmaker K Kamaraj to a nutritious Mid-day Meal Scheme in the Government-run and aided schools in Tamil Nadu. He also introduced Women’s Special buses.


He introduced Liquor ban in the state and Preservation of old temples and historical monuments, ultimately increasing the state’s tourist income. He set up a free school for the Cinema Technicians children in Kodambakkam called MGR Primary & Higher Secondary School which provided Free Mid-Day meals in the 1950s. He led the ADMK to victory in the 1984 assembly elections despite not taking part in the campaigning. At that time he was undergoing medical treatment in America and his images were broadcast in Tamil Nadu through cinema halls. This was an effective campaign and ADMK won the elections, indicating the depth of his popular support.


He won the election in a double landslide victory in 1984.He still holds the record of being the chief minister with the highest consistent longevity of more than a decade.MGR in every way of his rule followed Arignar Anna and established that he was the Heart Fruit [Idhayakkani] of Arignar Anna.

Russellisf
11th October 2014, 07:08 PM
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=60&cad=rja&uact=8&ved=0CFcQFjAJODI&url=http%3A%2F%2Flacamomille.com%2Fvideopage%2Fon% 2FJO06LmLwL1c.html&ei=CTI5VPDaAdSpuwTTuYLoAw&usg=AFQjCNHrnmq9RSeSCA9JXbdOqrEytZbCuw

Richardsof
11th October 2014, 07:15 PM
"எங்க வீட்டுப்பிள்ளை"யின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர், தனக்கு அதிக லாபம் வந்ததால், ரூ.1 லட்சத்தை பட அதிபர்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா கம்பைன்ஸ் அதிபர்களான நாகிரெட்டி- சக்ரபாணி பெயரில் ரூ.1 லட்சத்துக்கு "செக்" அனுப்பி வைத்தார். அத்துடன், "நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஒரு லட்சம் ரூபாயை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.

ஆனால் அந்தப் பணத்தை பட அதிபர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்கள். "உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும், இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை, உங்கள் விருப்பப்படி தர்மகாரியத்திற்கு பயன்படுத்துங்கள்" என்று கடிதம் அனுப்பினார்கள்.

:happydance::happydance::happydance::happydance::h appydance::happydance:

Russellisf
11th October 2014, 07:21 PM
வள்ளல் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படி சொல்லுவது - மிகவும் சுலபம் m g r என்று சொல்லலாம் .




"எங்க வீட்டுப்பிள்ளை"யின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர், தனக்கு அதிக லாபம் வந்ததால், ரூ.1 லட்சத்தை பட அதிபர்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா கம்பைன்ஸ் அதிபர்களான நாகிரெட்டி- சக்ரபாணி பெயரில் ரூ.1 லட்சத்துக்கு "செக்" அனுப்பி வைத்தார். அத்துடன், "நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஒரு லட்சம் ரூபாயை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.

ஆனால் அந்தப் பணத்தை பட அதிபர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்கள். "உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும், இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை, உங்கள் விருப்பப்படி தர்மகாரியத்திற்கு பயன்படுத்துங்கள்" என்று கடிதம் அனுப்பினார்கள்.

:happydance::happydance::happydance::happydance::h appydance::happydance:

Richardsof
11th October 2014, 07:49 PM
THANKS-SYLVIANISM- NET

Enga Veetu Pillai (1965)

Enga Veetu Pillai is a remake of Ramadu Bheemadu, a Telegu Movie starring NT Ramarao (Doh, why a remake in the list? There is a difference). Nagi Reddy, the famous Telugu film producer and the owner of Vijaya Productions makes this movie in Telugu and as it became a good hit, he remade this movie with minor changes to suit MG Ramachandran’s image in Tamil. It became a blockbuster in Tamil and still remembered.

Incidentally, the original is not a original too as it borrowed the storyline from Alexander Dumas’ Corsican Brothers. The story is about twin brothers Ramu and Ilango (MGR) separated in birth due to a family problem. Ramu, grown as innocent and spineless by his uncle, Narendran (MN Nambiar), who is also his Sister’s (Pandari Bai) husband. Narendran is waiting for Ramu’s 25th birthday in order to swindle the family property as written in the will of Ramu’s father. Ilango on the other hand is a spendthrift and happy go-lucky guy lives with his step-mom ( later revealed).

Leela ( Saroja Devi) initially chosen as the bride for Ramu dislikes him as she finds him cowardly but later meets Ilango, mistakes him to be Ramu and unknowingly helps him to swap places with Ramu in Narendran’s house. Ilango realizing the plight of people inthe house, stays there and teaches a lesson to Narendran. Ramu on the other hand lives peacefully at Ilango’s house and falls in love with a village girl. The confusions and mix-ups dominate the movie unroll everyone finds the past and all ends well.

The movie was directed by Tapi Chanakya with Music from MS Viswanathan – Ramamurthy and produced by Nagi Reddy under Vijaya Productions Banner. The cast includes MGR, Saroja Devi, Pandari Bai, MN Nambiar, SV Rangarao, Nagesh and Thangavelu.

Why it is so Special?

1. As I said it’s the perfect masala movie with all the aspects of Indian movie style rightly placed in the right measure in a perfect way. Glorious music, hilarious comic scenes, well-made action sequences with the right dose of sentimental scenes

2. The music of the movie is still revered. Kumari Pennin Ullathile, Naan Maan Thoppil are classics and of course the best hero worship ever made “Naan Aanai Ittal”. The song is so perfectly choreographed for the lyrics of Vaali. The picture of MGR with the whip and hands spread is a long lasting image of Tamil Cinema

3. The comic scenes of Thangavelu, Nagesh, SV Rangarao and MGR. Nagesh, as stammering assistant of MGR was in his own self and Thangavelu as the assistant of Nambiar were equally hilarious. The facial expression of Thangavelu when Ilango hits Narendran for the first time shows it all

4. If the supporting cast especially Saroja Devi and Pandari Bai were awesome, Nambiar as the evil uncle was fantabulous. I always believe that Villain has to be strong, because the people will love it only when the Hero prevails over the strongest evil. I think Nambiar would have been the most hated villain of all times.In this movie, he even hits MGR with the whip during the initial scenes and I dunno how people would have reacted in Theatres

5. MGR, the man. In fact this movie also gave him space to act, as the cowardly Ramu he scores full marks and Ilango is his usual charactersation which you see in most of his movies. I can only reiterate one fact – he is the best brand manager I have ever known. He knew how to engineer success and follow it up with huge success in political life too


Why this is in the list?

1. One of the biggest trend setters in Tamil Movies. I can’t count the number of movies taken with the same story line. From the trash copy called Vani Rani (which even has a similar whipping scene like the one in Enga Veetu Pillai) to one of the recent hits of Surya – Vel, all the double action movies have been made with Enga Veetu Pillai in mind.

2. One of the biggest blockbusters in Tamil cinema and continues to be a hit even on reruns.

3. As I said, the perfect masala movie of all times which has all the ingredients rightly mixed in apt proportions

Trivia

1. Ramadu Bheemadu was released in 1964 and there was a Hindi remake of the same movie called Ram Aur Shyam with Dilip Kumar (!!! I dunno how he would suited such a storyline). It didn’t do well at the box office. All the movies were directed and produced by the same team of Tapi and Nagi Reddy

2. “Naan Aanaiyittal” was originally written as ” Naan Arasan Yendral, Naan Aandu vittal” but MGR made Vaali to change the lyrics to the current version as he felt it would the sentiments of DMK leaders. Eventually he came out of DMK to start ADMK and as they say the rest is history. Even ADMK uses the song for every election campaign

3. The song became so famous that there was a movie released as Naan Aanaiyital in 1966 with MGR in the lead.

Richardsof
11th October 2014, 08:09 PM
http://i59.tinypic.com/6pylu9.jpg

Russellisf
11th October 2014, 08:27 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7e13b809.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7e13b809.jpg.html)

Richardsof
11th October 2014, 08:29 PM
B.NAGIREDDY ABOUT M.G.R

Nagi Reddi remembers Enga Veettu Pillai and its success, and, later, MGR telling him that he wanted to make a film to find out how people would react to his entry into politics. Reddi suggested remaking the Telugu hit, Kathanayakudu, which featured NT Rama Rao. MGR agreed. Nam Naadu was made.

“When it was released, we both went to Theatre to watch the reaction of the viewers. Except for the manager, no one was aware of our presence. It was a pleasant evening and the doors had been kept wide open. MGR stood leaning on one side of the door and I was leaning on the other. There was a scene in which Jayalalitha, the heroine of the movie, appeared singing the song Vaangaiya Vaathiyaraiah while welcoming MGR after his victory in the elections.”

“The audience rose as one man, cheering, clapping, whistling. There were cries: ‘We want to see the scene again! Repeat the scene!’ We advised the manager to oblige the audience. The reel was rewound and the sequence was shown again. I turned to MGR. His eyes were filled with tears of joy. He hugged me. ‘O Reddiar! I have received the people’s acceptance.’ ” What reader would not ask for more?

Russellisf
11th October 2014, 08:34 PM
'நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?''
இந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர் .பதில்..
''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், முக்கியமாக 'என் தங்கை' நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சி வசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். அது ரொம்பவும் இயற்கையாக இருக் கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின்' போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதே போல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்து போய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்துகொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின்' போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.''
[விகடன் 2.8.1964]

Russellisf
11th October 2014, 08:39 PM
எம்.ஜி.ஆரின் அசுர வளர்ச்சியைப் பார்த்து பயந்துதான், அவருக்குப் போட்டியாக தனது முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து 'பிள்ளையோ பிள்ளை'(பொருத்தமான பெயர்தான்) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார் கருணாநிதி.
எம்.ஜி.ஆரின் தலைமையிலேயே துவக்க விழாவும், 1972-ல் படத்தின் முதற் காட்சி வெளியீட்டு விழாவையும் நடத்தியிருக்கிறார்.
படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய மு.க.முத்து “தனக்கு வழிகாட்டி, குருநாதர் எல்லாமே எம்.ஜி.ஆர்.தான்..” என்று பேசியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். வாழ்த்திப் பேசும்போது, “என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி முத்து பேசினார். அதைக் கேட்டு பெருமைப்படுகிறேன். ஆனால் முத்து ஒருநாள்கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். பேசியதைக் கூர்ந்து கவனித்தால் மு.க.முத்து பற்றிய அவரது எண்ணத்தை சுலபமாக ஊகிக்க முடிகிறது. உண்மையில் எம்.ஜி.ஆரை இமிடேட் செய்துதான் மு.க.முத்து அந்தப் படத்தில் தனது முழு திறமையையும் காட்டியிருந்தார்.
வண்ணத் திரைப்படமான இந்தப் படத்தில் முத்துவுக்கு எம்.ஜி.ஆர். போல இரட்டை வேடம். எம்.ஜி.ஆர் போலவே நடை, உடை பாவனையுடன் சண்டையும் போட்டிருக்கிறார். சண்டைப் பயிற்சியாளர்கூட எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பயிற்சியாளரான ஷியாம் சுந்தர்தான்..
பொதுவாக எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் அவர் அறிமுகமாகும் காட்சியே சற்று ரகளையாக இருக்கும். அப்போதுதான் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கும். அது போலவே இந்தப் படத்திலும் "உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான். ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்று பாடியவாறுதான் அறிமுகமானார் முத்து.
படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள். கவிஞர் வாலியின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமர்க்களமாக இசையமைத்திருந்தார்.

Russellisf
11th October 2014, 08:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsacd44d0b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsacd44d0b.jpg.html)

Hi, I'm Amitabh Bachchan," says the voice that needs no introduction, as he gives you a firm handshake. Suave, dapper and charming, the thorough professional shows no signs of fatigue despite the long evening spent at the audio launch function of Dasavatharam.

Reacting to the clipping he saw of the film earlier, he says, "Kamal Haasan is truly remarkable. He keeps experimenting and coming up with new ideas. He has played 10 different roles and you can't make out one from the other! He is setting great challenges for us actors to reach. I wish him all the best. It looks like a great film."

Links with the South...
Big B's links with Chennai, by his own admission, go back a long way. "I have worked with a lot of production houses like Gemini, AVM and others. The Southern actors like MGR, Sivaji, Gemini Ganesan, Jayalalitha and others always treated me with great respect and love. I was very humbled when MGR undertook a difficult penance in a temple for my good health, when I had a major accident in 1982. He was a great personality." Bachchan recounts how he used to touch the feet of Sivaji Ganesan whenever he met him. "I admired him as an actor and I was a big fan. I acted in the Hindi remake of his Kai Kudutha Deivam and I was amazed by the energy and intensity of his performance."
Bachchan can't help but notice the mob frenzy that is generated when stars in the South meet fans. "I have travelled with Rajini and Kamal and the patronage they receive from fans is incredible. They are loved not just as actors but as human beings. Even Rajkumar, Mammooty and Mohanlal are such down-to-earth and warm people."

Films and the Man...
The Bollywood film, Bhoothnath where he plays a friendly ghost who befriends a child who is kind to him, is what AB will be seen in next. Bachchan is also considering Sanjay Leela Bhansali's next venture. If he were offered a role in Tamil films, the Big B says, "I would like to say my own lines." No dubbing for him! Would he consider acting in a movie along with Jackie Chan, Rajini and Kamal? "Sure, bring me a proposal first!" he replies.

Big B's fundas...
From brand endorsements to films, promos, interviews and world tours, life for Big B is a whirlwind of activity. Is there a special diet he follows which keeps him energised to face his day? "Everyone is busy these days so there's nothing special about my day," he shrugs modestly. Probe a bit deeper and he admits, "Maybe it's diet control that keeps me energised. I follow a regimen and have controlled eating habits. I don't drink and smoke nor do I have sweets. I have given up a lot of things."

If there is one thing the Big B has faced in abundance, it's challenges. Being in the public eye has drawn him into the eye of many a storm. Is there anything he would change about his life, were he given a chance? "No, I wouldn't want to change anything. Life would be very dull without challenges," he says thoughtfully. With the inclusion of Aishwarya in the Bachchan household, how does Big B view his role as father-in-law? "It's another phase of life. We feel we have another daughter at home and we love having her with us," he replies.

On a nostalgia trip...
He has been visiting Chennai for decades. How does he view the changes in the city? "I see a lot of progress. There are a lot of flashy buildings. But I miss the old Madras. It used to be a lot quieter. Today the pace seems more hectic. But then everything in India is becoming like that," he signs off nostalgically.

courtesy times of india

Scottkaz
12th October 2014, 05:23 AM
நடிப்பதற்கு நிறைய நடிகர்கள் உள்ளனர் அது ஒரு நீண்ட பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் தன்னுடைய இயல்பான நடிப்பு (அதுதான் original acting)
விதத்தை தந்தது,அதேபோல் வாழ்ந்து காட்டியது சரித்திரம் படைத்தது
THE ONLY ONE NATURAL ACTOR பாரத் & பார்த் ரத்னா MGR[/SIZE]

http://i59.tinypic.com/b3u2l0.jpg
http://i57.tinypic.com/5eble0.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th October 2014, 05:28 AM
நன்றி திரு கோவிந்தராஜ் சார் தொடர்ந்து பதிவுகள் செய்யவும்

http://youtu.be/s9wyva1bxZA

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th October 2014, 05:31 AM
நன்றி கலைவேந்தன் சார் அருமை

http://i57.tinypic.com/2dwgtc.jpghttp://i57.tinypic.com/1yrgpt.jpghttp://i61.tinypic.com/15cisms.jpghttp://i62.tinypic.com/ndugr6.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th October 2014, 05:38 AM
நன்றி திரு வினோத் சார்

http://i62.tinypic.com/126btkp.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th October 2014, 06:04 AM
வேலூர் records 45
வேலூர் நகரத்தில் எம்ஜிஆர் மன்றங்கள் உதயமான நோட்டீஸ்
http://i61.tinypic.com/10z5pmv.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th October 2014, 06:13 AM
வேலூர் records 46
http://i57.tinypic.com/106xy0w.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th October 2014, 06:21 AM
வேலூர் records 47
http://i60.tinypic.com/33ts4zs.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th October 2014, 06:38 AM
வேலூர் records 48
http://i62.tinypic.com/sqhz11.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th October 2014, 06:50 AM
வேலூர் records 49
http://i57.tinypic.com/aaazxu.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
12th October 2014, 06:55 AM
http://i60.tinypic.com/fabqk9.jpg

Scottkaz
12th October 2014, 06:57 AM
வேலூர் records 50
http://i60.tinypic.com/zyeyd1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th October 2014, 07:14 AM
வேலூர் records 51
http://i58.tinypic.com/2qss7ir.jpg
http://i62.tinypic.com/2eem04l.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
12th October 2014, 04:07 PM
http://i57.tinypic.com/34y20k9.jpg
http://i58.tinypic.com/2akk7sm.jpg
http://i59.tinypic.com/344zcwk.jpg
http://i59.tinypic.com/f04z03.jpg

Richardsof
12th October 2014, 04:10 PM
1963- 1964 MURASOLI

http://i60.tinypic.com/2ih04r5.jpg

Richardsof
12th October 2014, 04:14 PM
http://i59.tinypic.com/29ntu8z.jpg

Richardsof
12th October 2014, 04:20 PM
http://i61.tinypic.com/2a4oiv4.jpg

Richardsof
12th October 2014, 04:23 PM
http://i60.tinypic.com/2hq71vc.jpg

Richardsof
12th October 2014, 04:33 PM
GANDHI VAZHIYIL ANNA -1964

http://i60.tinypic.com/16h22rs.jpg


ANNA VAZHIYIL MAKKAL THILAGAM - 1972

http://i60.tinypic.com/xaw0nr.jpg

Russelldvt
12th October 2014, 04:39 PM
http://i58.tinypic.com/ogb71z.jpg
http://i57.tinypic.com/14tu3dl.jpg
http://i58.tinypic.com/10cq446.jpg
http://i59.tinypic.com/90rktj.jpg

Russelldvt
12th October 2014, 04:42 PM
மிகவும் நன்றாக உள்ளது எஸ் வீ சார் நான் இதுவரை காணதது

http://i59.tinypic.com/29ntu8z.jpg

Russelldvt
12th October 2014, 04:56 PM
அடேயப்பா அண்ணாவின் 59 வது பிறந்தநாள் விழா நோட்டீஸ் மற்றும் கலைப்பேரொளி எம்ஜிஆர் ரசிகர் மன்றம் & படிப்பகம் நோட்டீஸ் சிறப்பாக உள்ளது
இராமமூர்த்தி சார்

வேலூர் records 51
http://i58.tinypic.com/2qss7ir.jpg
http://i62.tinypic.com/2eem04l.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
12th October 2014, 05:06 PM
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்....


நண்பர்களுக்கு வணக்கம்.

திரு.எஸ்.வி.சார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் சார், திரு. ராமமூர்த்தி சார், திரு. கலிய பெருமாள் திரு.யுகேஷ்பாபு ஆகியோரின் ஆவணப் பதிவுகள் அருமை
நேற்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன். நேரமின்மையால் முடியவில்லை.

நேற்று முன்தினம் இரவு ஜெயா தொலைக்காட்சியில் விக்கிரமாதித்தன் திரைப்படம் பார்த்தேன். ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறது. பத்மினி, ராகினி நாட்டியப் போட்டியில் தீர்ப்பு சொல்ல கோமாளி வேடத்தில் தலைவர் வரும் காட்சியில் அவரிடம் ‘நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?’ என்று மன்னராக வரும் திருப்பதிசாமி கேட்க, தமிழகத்தின் சிறப்பை பற்றி ஒவ்வொருவரிடமும் சென்று படுவேகமாக தலைவர் கூறும் வசனங்களைக் கொண்ட நீண்ட காட்சியில் தலைவரின் நடிப்பு அற்புதம்.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது டி.எம்.எஸ்.சின் தேவகானக் குரலில் ‘தீ்ர்மானம் சரியாக ஆடாவிட்டால்..’’ பாடல். கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்தது இந்தப் பாடல். நான் முறைப்படி சங்கீதம் கற்றவனல்ல. ஏதோ சிறிதளவு கேள்வி ஞானம். அதுவும் திரைப்படப் பாடல்களில் இருந்துதான். புதுமைப் பித்தனில் ‘உள்ளம் ரெண்டும் ஒன்று’ பாடல் கல்யாணி ராகம் என்று யாராவது கூறி தெரிந்து கொண்டால் அதன் சாயலில் உள்ள பாடல்கள் கல்யாணி ராகம் என்று தெரிந்து கொண்டு, சங்கீதம் தெரிந்தவர்களிடம் அதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வேன். ஆனால், கேட்க மிகவும் இனிமையாக இருக்கும் ‘தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்...’ பாடல் என்ன ராகம் என்று தெரியவில்லை.

ஒன்று ஆரம்பித்தால் நினைவலைகள் எவ்வளவோ வந்து மோதுகிறது நண்பர்களே. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. அதன் மூலம் நானும் recall செய்து கொண்டது போலிருக்கும். மேலும், குடும்ப பொறுப்புகளாலும் பணிச்சுமையாலும் வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்ட இன்றைய சூழலில் அந்தக் காலத்தைப் போல நண்பர்களுடன் அளவளாவுவதே அரிதாகிவிட்டது. உங்களுடன் இப்படியாவது தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் எனக்கு தெரிந்ததை அதுவும் இளைய சகோதரர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.

‘உள்ளம் ரெண்டும் ஒன்று...’ பாடலைப் பற்றி கூறியதும் பாடல் மற்றும் புதுமைப் பித்தன் படத்தோடு தொடர்புடையவர்களைப் பற்றி சில நினைவுகள். தலைவருக்காக குரல் கொடுத்துள்ள இசை சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் மு.கருணாநிதியின் மைத்துனர். சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி பத்மாவதிதான் கருணாநிதியின் முதல் மனைவி. அவருக்குப் பிறந்தவர்தான் தலைவரின் ரசிகரான மு.க.முத்து.( இவர் ஏற்கனவே தலைவர் இருக்கும்போதே அதிமுகவில் சேர வந்தார். அவரை தலைவர்தான் திருப்பி அனுப்பி வைத்தார். பின்னர், 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு அதிமுகவில் சேர்ந்தார். எனது தந்தை எனக்கு மாத செலவுக்கு ரூ.8,000தான் பணம் கொடுக்கிறார் என்று பேட்டி வேறு கொடுத்தார். அவருக்கு குடும்ப நல நிதியாக ஜெயலலிதா ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார் என்பது தனிக்கதை)
http://i58.tinypic.com/1r901j.jpg
புதுமைப் பித்தன் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ஆர்.ராமண்ணா, அந்தக் கால கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரியின் சகோதரர். ராமண்ணாவுக்கு இரு மனைவிகள். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இரண்டு பேருமே நடிகைள். இரண்டு பேர் பெயருமே சரோஜா. புதுமைப் பித்தனில் தலைவருக்கு ஜோடியாக நடித்த பி.எஸ்.சரோஜா ஒருவர். மற்றவர் கொடுத்து வைத்தவள் படத்தில் தலைவருக்கு ஜோடியாக நடித்த ஈ.வி.சரோஜா. (இங்கே நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தலைவரைப் பற்றி கலைத்துறை, அரசியல்துறை எதுவாக இருந்தாலும் அவரோடு தொடர்புடையவர்கள் பற்றிய தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பதிவிடுங்கள். அவற்றை பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். சில ஆண்டுகள் கழித்து பார்த்தால் நமது திரி ஆவணக் களஞ்சியமாக இருக்கும். குறிப்பாக, தலைவரின் மெய்க்காப்பாளராக இருந்த திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் புதல்வர், சகோதரர் கோவிந்தராஜ் அவர்கள் தனது தந்தையிடம் கேட்டு ஆதாரத்துடன் நிறைய தகவல்களை வெளியிட வேண்டும் என்று அன்போடு கோருகிறேன்.)

சரி... விட்ட இடத்துக்கு வருகிறேன். தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் பாடலில் தலைவர்தான் எவ்வளவு அழகு. மேலே உள்ள புகைப்படம் அந்த பாடல் காட்சியின் ஒரு காட்சிதான். எந்தப் படமாக இருந்தாலும் தனது கட்சியையும் கொள்கைகளையும் திரைப்படத்தின் மூலம் வெகுமக்களிடம் எடுத்துச் செல்வதில் தலைவருக்கு நிகர் அவர்தான். அதற்கு இந்தப் புகைப்படத்தில் அவரது நெற்றியில் உள்ள பேரறிஞர் அண்ணா கண்ட உதயசூரியன் வடிவிலான திலகமே சான்று. தாளக்கட்டுக்கு ஏற்றபடி விரல்களில் அவர் தாளம் போடும் லாவகம்தான் என்ன?

‘தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும், சன்மானம் ஏது சொல்?
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்...’

வாழ்க்கையின் எவ்வளவு பெரிய தத்துவத்தை விளக்கும் வார்த்தைகள். உலகமென்னும் நாடகமேடையில், நமக்கு நாமே ஆயுளை நிர்ணயித்துக் கொள்ள முடியாத வாழ்க்கைக் களத்தில், நாம் ஒவ்வொருமே ஏதாவது ஒரு பாத்திரத்தில் ஆடிக் கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கையின் அந்த ஆட்டத்தில் தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் சன்மானம் கிடைக்காது. சன்மானம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தன்மானம் இழந்து எவ்வளவு இன்னல்களுக்கும் பாதிப்புகளுக்கும் மனிதர்கள் ஆளாக வேண்டியுள்ளது? இது எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய அனுபவ மொழிகள்.

இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நண்பர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்கள் நினைவுக்கு வந்தார். தேக்குமர தேகம் என்று மக்கள் திலகத்தை அவர் விமர்சித்தாரே. அந்த தேக்கு மர தேகத்தில் பாதியை இந்தக் காட்சியில் தரிசிக்கலாம். (சமீபத்தில் கே.பி.எஸ்.சுடன் தலைவர் இருக்கும் படத்தையும் செய்தியையும் வெளியிட்டிருந்ததற்காக நன்றி திரு. கிருஷ்ணா சார். அந்தப் படத்தில் விபூதி, குங்குமத்துடன் தலைவரின் முகத்தில்தான் என்ன ஒரு தெய்வீகம்) உயர்ந்த ரசனையும் சிறந்த சங்கீத ஞானமும் உள்ள திரு.ஜி.கிருஷ்ணா அவர்கள் இந்தப் பாடலை ஆய்வு செய்து நமது திரியில் எழுதினால் மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு உடனடியாக இப்போது நேரம் கிடைக்காவிட்டாலும் கூட இப்போதைக்கு, பாடல் என்ன ராகம் என்று தெரிவிக்குமாறு பணிவன்புடன் கோருகிறேன்.

வாழ்க்கையில் தீர்மானம் சரியாக ஆடுவோம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th October 2014, 05:14 PM
வினோத் சார்

அருமையான காலபெட்டகம் - முரசொலி பொங்கல் மலர் முகப்பு அட்டை . நம் இதய தெய்வத்தின் ஆசான் அவர்களின் படங்கள் அருமை . இதுவரை பார்க்காத காஞ்சித்தலைவன் - தாயின் மடியில் விளம்பரங்கள் - கண்ணுக்கு விருந்து .

ராமமூர்த்தி சார்

வேலூர் எம்ஜிஆர் மன்ற நோட்டீஸ் - தூள் கிளப்புகிறீர்கள் ..

நீங்கள் இருவரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு கிடைத்த வரப்பிரசாதம் .

தினமும் பிரசாதத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள் திலகத்தின் பக்தன்

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellwle
12th October 2014, 10:04 PM
http://i62.tinypic.com/10ek7i9.jpg

Russellwle
12th October 2014, 10:14 PM
http://i62.tinypic.com/mbpzro.jpg

idahihal
12th October 2014, 10:14 PM
வினோத் சார், பேராசிரியர் செல்வகுமார் சார், வேலூர் ராமமூர்த்தி சார், கலக்கறீங்க.
புது வரவு மக்கள் திலகத்தின் நிழலாக இருந்த மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் அவர்களின் புதல்வர் கோவிந்தராஜன் அவர்களுக்கு நல்வரவு. தங்களிடமிருந்து பல அரிய புகைப்படங்கள், தகவல்களை எதிர்பார்க்கிறோம்.

oygateedat
12th October 2014, 10:50 PM
இன்று மக்கள் திலகத்தை பற்றி பலஅரிய பதிவுகளை வழங்கிய அன்பு நண்பர்கள் திரு வினோத் மற்றும் ராமமூர்த்தி ஆகியோருக்கு நன்றி.

ஆயிரத்தில் ஒருவன் கட்டுரையை பதிவிட்ட திரு கோவிந்தராஜ் அவர்களுக்கும் நன்றி

எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------

oygateedat
12th October 2014, 10:55 PM
நீண்ட இடைவெளிக்குப்பின் கோவை நாஸ் திரை அரங்கில் நமது இதய தெய்வத்தின் திரைக்காவியம் அடுத்த மாதம் வெளியாகும் என்ற இனிய தகவலை இன்று அலைபேசியில் தெரிவித்தார் அன்பு நண்பர் திரு.ஹரிதாஸ் அவர்கள்.

ரகசிய போலீஸ் 115

எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------

Richardsof
13th October 2014, 06:03 AM
இனிய நண்பர் திரு கலைவேந்தன்

மக்கள் திலகத்தின் ''விக்கிரமாதித்தன் '' படத்தை பற்றிய தங்களது பதிவு மிகவும் அருமை .மிகவும் அனுபவித்து ரசித்து படம் பார்த்து உள்ளீர்கள் . மக்கள் திலகம் அவர்கள் திமுக சின்னத்தை எப்படிஎல்லாம் தன்னுடைய படங்களில் கட்ட முடியுமோ அந்த அளவிற்கு உதய சூரியன் சின்னத்தை மக்களுக்கு அறிமுக படுத்திய பெருமை -மக்கள் திலகத்தையே சேரும் .

1953 முதல் 1972 வரை உதயசூரியன் சின்னத்தை வளர்த்தார் . 1972ல் சோதனை காலம் .

1973 திண்டுக்கல் இடை தேர்தலில் ''இரட்டை இலை '' சின்னம் உருவானது .

1972-1987 அவர் கட்டி காத்த இரட்டை இலை சின்னம் 1988ல் சோதனை கண்டது .

1989ல் மீண்டும் இரட்டை இலை அரசியல் அரங்கில் உயிர் பெற்றது .

இன்று அதிமுக இயக்கதிற்கு ஒரு சோதனையான நேரம் .

பலர் கனவு காண்கிறார்கள் - 2016 ஆட்சியை பிடிப்போம் என்று அணிகள் மாற தயாராகி விட்டார்கள் .

கல்கி வார இதழ் குறிப்பிட்டது போல்

''எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மற்றும் இரட்டை இலை மீண்டும் 2016லும் நிரூபிக்க போகிறது ''

அதுதானே உண்மை .

Richardsof
13th October 2014, 06:09 AM
http://i58.tinypic.com/2uggdua.jpg

Richardsof
13th October 2014, 06:11 AM
http://i59.tinypic.com/vf8u3s.jpg

Richardsof
13th October 2014, 09:49 AM
RARE STILL
http://i58.tinypic.com/72v9kj.jpg

Richardsof
13th October 2014, 09:51 AM
http://i60.tinypic.com/9746pu.jpg

Richardsof
13th October 2014, 09:53 AM
http://i60.tinypic.com/2z3na11.jpg

Richardsof
13th October 2014, 09:54 AM
http://i57.tinypic.com/2s837zn.jpg

Richardsof
13th October 2014, 09:55 AM
http://i58.tinypic.com/25fktwx.jpg

Stynagt
13th October 2014, 11:10 AM
என்றுமே இளைஞராய் தோன்றிய எழில் வேந்தன்

http://i62.tinypic.com/oktv77.jpg

Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt.Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
13th October 2014, 04:22 PM
http://i58.tinypic.com/28vagbo.jpg

Courtesy: Suriyan Magazine, Singapore & Malaysia
Tmt.Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
13th October 2014, 05:57 PM
http://i59.tinypic.com/73lz51.pnghttp://i59.tinypic.com/ipyvyo.jpg

Russelldvt
13th October 2014, 06:00 PM
http://i57.tinypic.com/2ql7rt0.jpghttp://i62.tinypic.com/nci7u8.jpg