PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

chinnakkannan
27th September 2014, 10:32 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

வாசு சார்.. நானும் ஒரு பெண் வந்திராத பாடலின் வரிகளுக்கு நன்றி..இன்னும் கேட்கவில்லை.. கண்ணழகின் சன்னதியில்.. க்ளிக் செய்தால் இன்னொரு tab ஓபன் ஆகி சுற்றிக் கொண்டே இருக்கிறது..!

ராஜ்ராஜ் சார்.. பேகஸி ஹட் சே..பத்மினி பாடலுக்கு நன்றி..

வாங்க கோபால் சார்..தங்கள் பிஸி ஷெட்யூலில் வருகை தந்தமைக்கு நன்றி..
50
ரங்கூன் ராதா மலைக்கள்ளன் தேவதாஸ் ரத்தக் கண்ணீர் பார்த்ததில்லை….கல்யாணப் பரிசு வும் தூக்குத் தூக்கியும் மி.சி.ப வில் என் லிஸ்ட்ல் வரும்..
60
லிஸ்ட்டுடன் ஒத்துப் போனாலும் மோட்டார் சுந்தரம் பிள்ளை, நடு இரவில், இரண்டும் கூடும் போட்டி வித் பாமா விஜயம் அண்ட் நெஞ்சில் ஓர் ஆலயம்..(முதலில் ஒரே ஹாஸ்பிடலில் எடுக்கப் பட்ட படமென்றாலும் என் பத்துலிஸ்டில் இல்லை)..அதே போல நீர்க்குமிழி யும் இதே காலகட்டம் தானே..சிறந்தபடங்களில் அது வந்திருக்க வேண்டுமே..
70
கொஞ்சம் நவீன இலக்கிய வாதியின் பார்வையில் டாப் டென் கொடுத்திருக்கிறீர்கள்..60% எனக்கு உடன்பாடில்லை

80

மீண்டும் ஒரு காதல்கதையை (பிரதாப் ராதிகா?) தயை தாட்சண்யமில்லாமல் நகர்த்திவிட்டு பூவே பூச்சூட வாவிற்குக் கொடுக்கலாம் (வருடத்திற்கொரு படம் என்று எடுத்திருக்கிறீர்களா தெரியாது..என் மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன்)

90

அவதாரத்தை விட சிகரம் பெட்டராக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

2000

கொஞ்ச்ம் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது பின் வருகிறேன்..

அப்புறம் வரட்டா..

rajeshkrv
27th September 2014, 10:41 AM
வாசு ஜி,

இதோ உங்களுக்காக ஒரு இசையரசி பாடல். இசை பப்பி லஹரி.

சுஹாசினியை சகித்து கொள்வது கஷ்டம் .. பாடலை கேட்டு மட்டும் ரசிக்கவும்

http://www.youtube.com/watch?v=x8byJsBMAF8

vasudevan31355
27th September 2014, 10:42 AM
கோபால்

வாருங்கள். நல்வரவு.

வருந்த வேண்டாம். நல்லவைகள் ரசிக்கப் படாமல் போனதே இல்லை. உங்கள் ஸ்கூல் ஆப் ஆக்டிங் வானளாவ புகழப் பட்டது. எனவே கவலைகளை விடுத்து பணி தொடரவும் உங்கள் ஒய்வு நேரத்தில். சில்லறை நடிகைகள் வெளியே தெரிய வேண்டும் என்ற எண்ணமே அல்லாமல் வேறில்லை. வெளியே தெரியாதவர்களை அல்லது தெரிந்து மறந்தவர்களை தெரியப் படுத்துவதில் தவறில்லையே. அதையும் இதையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

உங்கள் முதல் ரசிகனாய் நான் இருக்கையில் ஏன் தங்களுக்கு இந்த மனக் கிலேசம்? இங்கு பல பதிவுகள் கவனிக்கப் படாதது போலத் தோன்றலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிவையும் அணு அணுவாக வாசித்து மதுர கானத்தை மனதார ரசிக்கிறார்கள் என்பதே உண்மை. பின்னூட்டம் இட நேரமின்மை காரணமாக இருக்கலாம்.

உங்கள் திறமை மய்யம் அறிந்த ஒன்று. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. உங்களுக்கு தீவர ரசிகர்கள் அதிகம். பின்னூட்டத்தை வைத்து எடை போடாதீர்கள். உங்களுக்கு பின்னூட்டம் கிடைக்காததற்கு முதல் காரணம் உங்களுக்கு வரும் பொசுக்கென்ற கோபமும், அடுத்தவரை வேதனைப் படுத்தும் வார்த்தைகளும், முன்னுக்கு முரணான கருத்துக்களும், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற சற்று அதீத எக்காளமும் தான். இதை முதலில் நிறுத்திப் பாருங்கள். அப்புறம் உங்களுக்குப் பின்னூட்டம் வருவதைப் பாருங்கள். ஏன் வம்பு இவரிடம் என்று எல்லோரும் உங்களைக் கொண்டு ஒளிந்து கொள்வதுதான் அனைத்திற்கும் காரணம். இந்த சிறு விஷயம் கூட எல்லாம் தெரிந்த தங்களுக்குப் புரியாதது எனக்கு மிக ஆச்சர்யமாய் இருக்கிறது.

ஒரு ஆத்மார்த்தமான நண்பனாக ஹரி கூறுவதைப் போல் உங்களுக்குக் கூறுகிறேன். இதற்கும் வார்த்தைப் பிரயோகம் செய்ய வருவீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதுபற்றி நான் கவலை கொள்ளவில்லை.

தங்கள் நண்பர் ஹரியை நான் பார்த்திருக்கிறேன். அவருடன் பேசியுமிருக்கிறேன். அவரை நான் மிகவும் விசாரித்ததாக சொல்லுங்கள்.

தங்கள் பொன்னான பதிவுகளைத் தொடருங்கள்.

vasudevan31355
27th September 2014, 10:47 AM
வாசு சார்.. நானும் ஒரு பெண் வந்திராத பாடலின் வரிகளுக்கு நன்றி..இன்னும் கேட்கவில்லை.. கண்ணழகின் சன்னதியில்.. க்ளிக் செய்தால் இன்னொரு tab ஓபன் ஆகி சுற்றிக் கொண்டே இருக்கிறது..!



வணக்கம் சி.க. சார்.

நீங்கள் சொல்வது உண்மையே. அனால் அதில் டவுன்லோட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து பாடலைக் கேளுங்கள். ஆன் லைனில் கேட்க யாது.

vasudevan31355
27th September 2014, 10:48 AM
இன்றைய ஸ்பெஷல் (80)

இன்றைய ஸ்பெஷலில் மிக மிக ஸ்பெஷலான ஒரு பாடல்.

இந்தப் பாடல் இன்பங்களின் ஊற்று.

ஆழ்மனதின் அடித்தளத்தில் அனாயாசமாய் நங்கூரமிட்டு அமரும் அமரத்துவ கீதம்.

'மெல்லிசை மன்னரி'ன் பின்னாளைய விஸ்வரூபம். இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் தனித்தனியே சாம்ராஜ்யம். நடத்துகின்றன. ஸ்டீரியோ நுணுக்கங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. மிக நுணுக்கமான பின்னிசை. ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெறும் பாடல். 'என்னால் எந்தக் காலத்திலும், எந்நேரத்திலும் இது போன்ற அமர்க்களமான பாடல்களைத் தர முடியும்' என்று பொட்டில் அடித்தாற்போன்று நெத்தியடி அடித்த பாடல்.

பாலாவின் பரவசமூட்டும் அந்த குலோப்ஜாமூன் குரல் நம்மை குதூகலமடைய வைக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பின் பிரிந்த தன் காதலியைப் பார்த்த சந்தோஷத்தில் தன் மனதின் மகிழ்ச்சிகளையும், ஆசைகளையும் அவள் உணரும்படி பாடகனாக மேடையில் கொட்டித் தீர்க்கும் இளைஞன்.

ஆனால் அவள் நிலைமை வேறு. அவன் பாடப் பாட அவள் சோகத்தில் கண்ணீர் வடிக்கிறாள். அவனோ அவளுடன் பழகிய நாட்களை எண்ணியபடி எழுச்சியுடன் பாடுகிறான் அவள் நிலைமை புரியாமல். ஏனென்றால் அவள் வேறு ஒருவனுக்கு மனைவியாகியிருக்கிறாள்.

பாடகனாக விஜயகாந்த், பரிதாபமான காதலியாக சுதா சந்திரன். விஜயகாந்த் இன்னும் நன்றாகப் பண்ணியிருக்கலாம். சுமார்தான். இந்தப் பாடலின் அர்த்தம் முழுமையாகப் புரிந்து அதற்கேற்றபடி நடிக்க முடியாமல் போனது வருத்தமே. சுதா பரவாயில்லை. அப்போதைய புகழ் பெற்ற மின்னி மின்னி எரியும் டிஸ்கோ லைட்கள் சமாச்சாரமெல்லாம் உண்டு.

மிக மிக அருமையான பொருத்தமான வரிகள். பாட்டைப் பிரிந்த பாடகனுக்கு பல்லவி கிடைத்தது..... உன்னை இன்று பார்ப்பது உண்மைதானா இது நிஜமா இல்லை நிழலா.....முன்பு என்னை விட்டு விலகிப் போன வெள்ளைப் புறா இன்று என்னைத் தேடி வந்து விட்டது.... என்னைக் கை விட்டுப் போன என் செல்வம் மீண்டும் எனக்கே கிடைத்துவிட்டது என்ற பொருள் பதிந்த பரவச வரிகள்.

பாலாவின் பின்னாளைய பாடல்களில் முதல் இடம் பெறத் தகுதி வாய்ந்த பாடல்.

இந்தப் பாடல் ஒரு சேர மகிழ்ச்சியையும், சந்தோஷ உணர்வுகளையும், பாடலைப் பார்க்கும் போது ஒருவித சோகத்தையும் கொடுக்கக் கூடிய வல்லமை நிறைந்த பாடல்.

http://www.inbaminge.com/t/v/Vasantha%20Raagam/folder.jpg

படம்: வசந்த ராகம் (1986)

தயாரிப்பு: வி.வி. கிரியேஷன்ஸ்.(திருமதி ஷோபா சந்திரசேகரன்)

கதை: ஷோபா

நடிகர்கள்: உங்கள் அபிமான நட்சத்திரங்கள் என்று போடுவார்கள் ('பார்த்தால் பசி தீரும்' பட டைட்டில் போல)

பாடல்கள்: கவிஞர் வாலி, புலமைப் பித்தன்.

ஒளிப்பதிவு: எம்.கேசவன்

இசை: 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்

திரைக்கதை, வசனம், இயக்கம்: எஸ்.ஏ.சந்திரசேகரன்

http://i.ytimg.com/vi/3qhG0rTsBto/hqdefault.jpg

இனி பாடலின் வரிகள்.

தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆனாலும் நான் தேடும் பல்லவி
காணாமல் வாடினேன்
கண்ணீரில் ஆடினேன்.

இதுவரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டைத் திரிந்த வார்த்தைகளுக்கொரு
சரணம் கிடைத்தது
என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது

ஹே ஹே ஹேஹே

வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா

வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா
என் கண்ணம்மா
துன்பங்கள் தீர்ந்ததம்மா

நிஜமோ நிழலோ உனை நான் பார்த்தது
பிரிந்தோம் இணைந்தோம்
விதிதான் சேர்த்தது

இதுவரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டைத் திரிந்த வார்த்தைகளுக்கொரு
சரணம் கிடைத்தது

மெய் தொட்டுத் தழுவிய மஞ்சள் நிலாவும்
கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப் புறாவும்
இந்நாளில் தோன்றுதம்மா

மெய் வைத்துத் தழுவிய மஞ்சள் நிலாவும்
கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப் புறாவும்
இந்நாளில் தோன்றுதம்மா
என் கண்ணம்மா
என் செல்வம் மீண்டதம்மா

அடடா! இதுதான் இறைவன் நாடகம்
உறவும் பிரிவும் மனிதன் ஜாதகம்

இதுவரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டைத் திரிந்த வார்த்தைகளுக்கொரு
சரணம் கிடைத்தது
என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=f9I_q8As1J8

rajeshkrv
27th September 2014, 10:55 AM
வசந்த ராகம், நல்ல படம்

ரகுமானின் பாத்திரம் மிகப்பிரமாதம் (வீணையொன்றை கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன் வேறொருவன் சொந்தம் என்று மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்)

நான் உள்ளதை சொல்லட்டுமா .. என்ன அழகான பாடல்

rajeshkrv
27th September 2014, 10:55 AM
வாசு ஜி நீங்கள் அளித்த வசந்த ராகம் பாடல் இயற்றியது வாலி ஐயா.

vasudevan31355
27th September 2014, 10:56 AM
உண்மை ராஜேஷ்ஜி! நல்ல பாடல்கள்.

vasudevan31355
27th September 2014, 10:56 AM
வாசு ஜி நீங்கள் அளித்த வசந்த ராகம் பாடல் இயற்றியது வாலி ஐயா.

superji.

vasudevan31355
27th September 2014, 10:57 AM
வாசு ஜி,

இதோ உங்களுக்காக ஒரு இசையரசி பாடல். இசை பப்பி லஹரி.

சுஹாசினியை சகித்து கொள்வது கஷ்டம் .. பாடலை கேட்டு மட்டும் ரசிக்கவும்


ராஜேஷ்ஜி!

ரசித்தேன். சுகாசினியை அறவே எனக்குப் பிடிக்காது. பாடல் நன்று. எந்த நகரத்து சுடிதார் பெண்மணி பசுமாட்டிடம் பால் கறக்கிறாள்? இதே போல தமிழ் பாடல் ஒன்று கேட்ட ஞாபகம். நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது.

chinnakkannan
27th September 2014, 10:57 AM
//இதுவரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டைத் திரிந்த வார்த்தைகளுக்கொரு
சரணம் கிடைத்தது //
தாங்க்ஸ் வாசுசார்..படம் வெளியான புதிதில் பாட்டு மட்டும் கேட்டிருப்பதாக நினைவு..விஜயகாந்த் சுதா சந்திரன் ஜோடி பார்க்கையில் இட்லிக்கு ஆலுகோபி தொட்டுக்கொண்டு சாப்பிடும் காம்பினேஷன்போல் இருக்கிறது! :) பாடல் நன்று

Gopal.s
27th September 2014, 11:05 AM
கோபால்

வாருங்கள். நல்வரவு.

ஒரு ஆதமார்த்தமான நண்பனாக ஹரி கூறுவதைப் போல் உங்களுக்குக் கூறுகிறேன். இதற்கும் வார்த்தைப் பிரயோகம் செய்ய வருவீர்கள் என்று நினைக்கிறேன். அனால் அதுபற்றி நான் கவலை கொள்ளவில்லை.

தங்கள் நண்பர் ஹரியை நான் பார்த்திருக்கிறேன். அவருடன் பேசியுமிருக்கிறேன். அவரை நான் மிகவும் விசாரித்ததாக சொல்லுங்கள்.

தங்கள் பொன்னான பதிவுகளைத் தொடருங்கள்.

:-D:clap::clap::clap::swinghead::swinghead:

RAGHAVENDRA
27th September 2014, 11:12 AM
Well said.. Vasu... Gopal's minor minus-points look major to others ... If this is overcome... that will be a great boon to him...

நல்ல எழுத்தாளர்..நல்ல மனிதர்... நல்ல முன்கோபியும் கூட...

சிலருக்கு முன்கோபம் பலமாக இருக்கும்.. அதுவே பலவீனமாகவும் இருக்கும்.. கோபால் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்...

வாருங்கள் கோபால் சார்...

தங்களுடைய பொருளில் குற்றமில்லை.. சொல்லில் தான் குற்றமிருக்கிறது.. இது மன்னிக்கப்பட வேண்டியது தான் என்றாலும் களையப்படவும் வேண்டும்.

vasudevan31355
27th September 2014, 11:45 AM
c.k.sir,

Is it alu gopi?:)

http://lh6.ggpht.com/-qULEgUKsUUg/UZhC9dIwk4I/AAAAAAAADPo/zIEbks--egA/IMG_8791_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

chinnakkannan
27th September 2014, 11:56 AM
தலைவிக்குக் காதல் தலைவனுடன்.. இங்கு தோழிக்கும் காதல் இன்னொருவருடன்.. தலைவிக்கோ தன் காதலில் சிறிது சந்தேகம் தான்..முழுதாய்க்காதல் வயப்பட்டு விட்டோமா என்று..தோழி அப்படியில்லை..முழுதும் மயங்கியவள் தன்காதலனிடம்.. தலைவியின் மயக்கத்தைப் பார்த்துப் பாடுகிறாள்..

படத்தில் பாடுபவர்கள் தேவிகா வசந்தா.. அவர்களுக்காகப் பாடியவர்கள் எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா..

பாடல் முழுக்க குறும்பு கொப்பளிக்கும் இரு யெளவன யுவதிகள் காதலில் விழுந்த தன்மையை அழகாகப் பறைசாற்றும்..அழகான கவிஞர் மாயவ நாதனின் வரிகளுக்கு தேவிகையும் வசுவும் பாடுவது இன்னும் அழகு.. ஓஓ ஓஒ என பிசுசீலாவின் ஹம்மிங்கிற்கு தேவிகா துள்ளாட்டம் போட்டு அங்கிட்டிருந்து இங்கிட்டு ஆற்றங்கரையோரம் ஓடி வருவது இன்னும் அழகு..

படம் இதயத்தில் நீ..படம் பற்றி பாடல் வரிகளுக்கு அப்புறம்

/


சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ
இந்தக் கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைத்திட யார் வந்தவரோ
யார் நின்றவரோ யார் வந்தவரோ..

தென்றல் அழைத்துவரத் தங்கத் தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே இடம்
தந்த என் மன்னவரே

கட்டழகில் கவி கம்பன் மகனுடன் ஒட்டி இருந்தவரோ
இந்தப் பட்டு உடலினை தொட்டணைக்கும்கலைக் கற்றுத் தெளிந்தவரோ
உன்னை மட்டும் அருகினில் வைத்து தினம் தினம் சுற்றிவருபவரோ
-நீ கற்றுக் கொடுத்ததை ஒத்திகைபார்த்திடும் முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் முற்றும் தெரிந்தவரோ

வண்ணக்கருவிழி தன்னில் ஒருவிழி என்று அழைப்பவரோ பசும்
பொன்னிற் புதியதைக் கண்ணன் எனப்பெயர் சொல்லித் துடிப்பதுவோ
ஒளி மின்னிவரும் இரு கண்ணசைவில் கவி மன்னவன் என்பதுவோ
இல்லை தன்னைக் கொடுததென்னை தன்னில் மறைத்தவர்
வண்ணப் புதுமலரே
அவர் நெஞ்சம் மலரணையே
மனம் எங்கும் நிறைந்தவரே…

*
ஆனந்தன் வக்கீல் (ஜெமினி) பூங்காவில் வழக்கின் பாய்ண்டிற்காக கூர்மையாக யோசித்துக் கொண்டிருக்கையில் அங்கு தனது பின்பக்க பெஞ்சில் அமர்ந்திருந்த யுவதியின் கூந்தல் தன் மேல் விழ அதைக் கடித்து பாயிண்டிற்கு யோசிக்கிறான்..அந்த யுவதிபடிக்கும் புத்தகம் நீச்சல் கலை..அதில் இருக்கும் ஒரு பாய்ண்ட் அவன் வழக்குக்கு ஒன்றிப்போக யோசனையில் பின்னலைப் பிடித்திழுக்க..

அவ்வளவு தான்..சேல்விழிகள் சிங்கமாய்ச் சீறுகின்றன.. ஹேய் மிஸ்டர் என இவன் வழக்கம் போல அசடு லிட்டர்கணக்கில் வழிந்து சாரி சொல்லி வீட்டுக்கு அவன் இதயத்தில் அவளுடைய முக வரியை எடுத்துச் செல்கிறான்..

மறு நாள்..அதே பார்க் அதே அவள்..அதே இவன்.. அவளிடமே காதல் சொல்வது எப்படி எனக் கேட்கிறான்..அவளும் புதியவள்..இளையவள் காதல் பற்றிய சேதிகளுக்கு..எனில் ஏற்கெனவே காதல்வயப்பட்டிருந்த தோழியிடம் கேட்க தோழியின் சைகையைத் தப்புத்தப்பாகப் புரிந்து அவனுக்கு பதில் கூறுகிறாள் காதல் என்றால் தலை பிச்சுக்க வைக்கும் எட்ஸெட்ரா..

அவன் குழம்பிச் செல்ல தோழி வருகிறாள்..

என்னடி இப்படிப் பண்ணிட்ட

நான் எந்து செய்யு..ஆயாள் இவிட வரும்போது என் நாக்குக் குழறுதடி.கண்கள் புறாச்சிறகாய் படபடக்குது.. இதயம் பக்பக்கெனத் துடிக்குதடி..

சரி சரி அவர் வந்தா சொல்லிடு.. நீ பேசின பேச்சில் அவர் போயே போய்விட்டார்..

அது தான் இல்லையே.. என பின்பக்கமிருந்து தொபீரெனக் குதித்து வருகிறான் காளை..கன்னியின் சித்திரப் பூவிழி கறுப்பு வெள்ளையாயினும் சிவந்து தலை நாணத்தால் குனிகிறது..
அதற்கடுத்த காட்சி தான் இந்த சித்திரப் பூவிழிப் பாடல்..

*
இன்னும் இருக்கும் சில பாடல்கள்
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே – வாலியின் இரண்டாவது பாடல் என நினைவு

பூவரையும் பூங்கொடியே பூமாலை சூடவா – இதுவும் வாலி தான் என நினைக்கிறேன்.. பிபிஎஸ்..

உறவு என்றொரு சொல்லிருந்தால் – பிசுசீலா..

*
பட ஆரம்பக் காதல் காட்சிகளில் தேவிகா வெகு அழகாய்த் தெரிவார்..அதுவும் தங்கவேலிடமும் ஜெமினியிடமும் வடக்கத்திய நங்கையாக, பின் ஹோனலூலுவில் இருந்து வந்த மங்கையாக தமிழைப் பொடித்து ப் பொடித்துப் பேசும் அழகே அழகு..

அப்பாவாக நடிக்கும் எம்.ஆர்.ராதாவிடம் பாசத்தைக் கொட்டும் பாங்கு.. ஜெமினியிடம் காத,ல் மோதல் குமுறல் என கொஞ்சம் நன்னாயிட்டே நடித்திருப்பார்..

ஜெமினி அஸ் யூஸ்வல்..இருபத்தைந்துவயது வாலிபன் என்பது டூமச் தான் இருந்தாலும் இளமை துள்ளும் வாலிபன்கேரக்டருக்குப் பொருத்தம் ..

எம் ஆர்.ராதா..குணச்சித்ரம் சர்ப்ரைஸ் பேக்கேஜ் என்றால் கோபாலகிருஷ்ண முதலியாராய் வரும்கிழவனார் (யார் எனத் தெரியவில்லை) இன்னொரு சர்ப்ரைஸ்.

எம் ஆர் ராதா பழிவாங்கும் நெஞ்சத்துடன் தேவிகாவிடம் பழக, தேவிகா அப்பாவெனப் பாசமழை பொழிய தடுமாறும் இடத்தில் வெகு நன்றாய்ச் செய்திருப்பார்..கடைசியில் இறக்க விட்டிருக்க வேண்டாம்..

நல்லபடம்.. ஒன்றுமே எழுதாமல் ஜஸ்ட் ஜல்லி மட்டும் அடிக்கிறேன் என மனதுக்குள் ஒருகுறு குறுப்பு..எனில் நேற்றிரவு டிவிடி போட்டு முழுப்படமும் பார்த்து எழுதுகிறேன்!!

தங்கவேல் நாகேஷ் சரோஜா நகைச்சுவை அவ்வளவாக சிரிக்க வைக்கவில்லை.ஆனால் தங்கவேல் தேவிகாவிடம் ஆரம்பத்தில் பேசும் வசனம் பக்கெனச் சிரிக்கும் வகை..

படம் முடிந்த பின்னும் மனதில் ஓடிய பாடல் தான் சித்திரப் பூவிழி வாசலிலே.. அந்தப்பாட்டும் படத்தில் பாடியவரையும் மறக்க முடியுமா என்ன..! :)

chinnakkannan
27th September 2014, 12:00 PM
அதே தான் வாசு சார்..கோபி என்றால் காலிஃப்ளவர் – ஹிந்தியில்.. காலிஃபிளவர் இருப்பதாலேயே கொஞ்சம் வித்யாச சுவை இருக்கும்.. பட்டர் நானிற்குத் தான்பொருந்தும்.. இங்கு சில ஹோட்டல்களில் பரோட்டாவுடன் தருவார்கள்..பொருத்தமாய் இராது :)aaloo என்றால் உருளைக்கிழங்கு எனத் தெரியும்தானே

vasudevan31355
27th September 2014, 12:07 PM
சின்னக் கண்ணன் சார்,

'சித்திரப் பூவிழி வாசலிலே' பாடல் பிடிக்காதார் யாருமுண்டோ?! அருமை உங்கள் ஆய்வு. பாடலோடு 'இதயத்தில் நீ' படத்தையும் அலசி பிட்டு பிட்டு வைத்து விட்டீர்களே! படம் என்னவோ சுமார்தான். ஆனால் பாடல்கள் அமரத்துவம் பெற்றவை. அருமை! பாராட்டுக்கள். இதோ பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2Qh8b76lJVU

இந்தப் பாடலுக்கு 'யூ டியூபி' ல் கவிஞரின் மகள் விஷாலி கண்ணதாசன் பின்னூட்டம் அளித்திருப்பதைப் பாருங்கள்.

vasudevan31355
27th September 2014, 12:08 PM
aaloo என்றால் உருளைக்கிழங்கு எனத் தெரியும்தானே

நன்றி! இந்த லொள்ளூ இல்லைனா எங்க சி.க.இல்லையே:)

gkrishna
27th September 2014, 12:20 PM
அனைவருக்கும் அருமை காலை/மதிய வணக்கம்

வாசு சார்
நடிகை நளினா பற்றிய மேல் அதிக தகவல்களுக்கு நன்றி .அதை தொடர்ந்த மது சார்,ராஜேஷ் சார் அவர்களுக்கும் நன்றி

இன்றைய ஸ்பெஷல் 80 களில் வந்த மெல்லிசை மன்னரின் இனிய பாடல் எஸ் எ சந்திரசேகரன் இந்த கால கட்டத்தில் நிறைய படங்கள் கொடுத்தார் வீ வீ creation என்ற banner என்று நினைவு.அவர்களது சொந்த தயாரிப்பு. இசை மெல்லிசை மன்னர் அல்லது ஷங்கர் கணேஷ் இருப்பார்கள். ஆனால் SAC இன் முதல் படமான் அவள் ஒரு பச்சை குழந்தை இசை இளையராஜா. பிறகு நான் சிகப்பு மனிதன் (ரஜினி பாக்யராஜ் ) படத்தில் தான் இளையராஜா சேர்ந்தார் என்று நினைவு .நல்ல பாடல் ஒன்றை நினைவு படுத்தியதற்கு நன்றி

vasudevan31355
27th September 2014, 12:22 PM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 8

'நீ நாடாளும் ராணியாய் இருந்தால் எனக்கென்ன?... என்னை சிறையில் போட்டாலென்ன?... உன்னைப் பற்றி புகழ்ந்து நான் கவி புனைய மாட்டேன். வேண்டுமானால் இப்படிப் பாடுகிறேன்'

'ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த
நாகரக ராணி'


http://www.youtube.com/watch?v=WiukQ-1H2b0&feature=player_detailpage

gkrishna
27th September 2014, 12:24 PM
சினிமா சித்தன்' - மாயவநாதன்

Author: புதுகை.கனகராஜ்

First Published: May 8, 2011 12:00 AM
Last Updated: Sep 20, 2012 3:32 AM

மறைந்துபோன திரைப்படப் பாடலாசிரியர்களுள் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன். விளம்பர வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் புதைந்துபோன சினிமா சித்தன். கேட்கும் தொகையை வழங்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தபோதும், பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு பாடல் எழுதாத பத்தினிப் பாடலாசிரியர்.

திரையிசைப் பாடல்கள் பிரசித்தம் பெறத்துவங்கிய காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர் கண்ணதாசன். அதனால் பிற கவிஞர்கள் எழுதிய நல்ல பாடல்கள் கூட கண்ணதாசன் எழுதியதாக இருக்கும் என்பதே வெகுஜனங்களின் யூகமானதால், மாயவநாதன் கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயே நின்றுவிட்டார்.

சொந்த ஊர், நெல்லை மாவட்டத்திலுள்ள பூலாங்குளம். தீவிரமான காளிபக்தர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர், பாலமுருக சித்தர் என்று சித்தர்களுடன் சிநேகமாக இருந்தவர். படத்தயாரிப்பாளர் தேவரின் வேண்டுகோளை ஏற்று, மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை மாயவநாதன் எழுதிக்கொடுத்தார். அவரது அழியாப் புகழுக்கு அந்தக் கல்வெட்டு ஒரு நல்ல அடையாளமாகும்.

சென்னை-மயிலாப்பூரில் உள்ள ஒரு விடுதியில்தான் அவர் வெகுகாலம் தங்கியிருந்தார். நடிகை சந்திரகாந்தாவின் நாடகக்குழு அப்போது மிகவும் பிரசித்தம். அந்தக் குழுவினரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் திரையுலகின் கவனத்தைக் கவர்ந்தவர் மாயவநாதன். 1960 முதல் 1971 வரை, சில படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். இவர் திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எழுதிய அத்தனை பாடல்களிலும் வெற்றிபெற்ற கவிஞன். "படித்தால் மட்டும் போதுமா' திரைப்படத்தில்,

""தண்ணிலவு தேனிரைக்க

தாழைமடல் நீர்தெளிக்க

கன்னிமகள் நடைபயின்று வந்தாள்-இளம்

காதலனைக் கண்டு நாணி நின்றாள்''

என்ற பாடல் மூலம் அறிமுகமாகி, தன் முதல் பாடலிலேயே தனி முத்திரையைப் பதித்தார். பழந்தமிழ்க் கவிதை சாயலில் இலக்கிய உணர்வலைகள் எழும்ப முதல் பாடலை எழுதி, "யார் இந்த மாயவநாதன்?' என்று திரையுலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய கவிஞர் அவர்.

""கண்ணதாசனின் செல்வாக்கை உடைத்த முதல் கவிஞன் என்ற பெருமையுடையவன் மாயவநாதன்'' என்று புதுக்கவிஞர் நா.காமராசன், தான் எழுதிய "சொர்க்க வசந்தத்தின் ஊமைக் குயில்கள்' என்ற நூலில் குறிப்பிட்டிருப்பது, மாயவநாதன் பற்றிய நேர்மையான மதிப்பீடாகும். இதயத்தில் நீ - திரைப்படத்தில்,

""சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ - இந்த
கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ? - அவர்
தான் என்னவரே...''

என்ற பாடல் இயற்றுவதில் கைதேர்ந்தவர் மாயவநாதன் என்பதற்கு இந்தப் பாடலின் மொழி லாகவம் ஒரு நிரூபணமாகும். சந்தச்சுவையும், கற்பனை வளமும் மிக்க இந்தப் பாடல் திரைப்படப் பாடல்களின் வரிசையில் ஒரு வாடாமலர் என்றுதான் கூறவேண்டும்.

பூமாலை - திரைப்படத்தில், இருளில் ஓர் ஆடவனால் கற்பு சூறையாடப்பட்ட பெண் ஒருத்தியின் நிலையை விளக்க...

""கற்பூரக் காட்டினிலே கனல் விழுந்து விட்டதம்மா''

என்று பளிச்சென்று நெஞ்சைத் தாக்குகின்ற மின்னல் வரிகளைப் படைத்தார்.

மாயவநாதன் யார்க்கும் அஞ்சாத, பணிந்துபோகாத குணமுடையவர். ஒருமுறை "மறக்க முடியுமா' திரைப்படத்துக்குப் பாடல் எழுத வந்தவர், இசையமைப்பாளரிடம் "என்ன மெட்டு?' என்று கேட்டார். அந்த இசையமைப்பாளர், "மாயவநாதன்...மாயவநாதன்' என்று தத்தக்காரத்தைக் கிண்டலாகக் கூறினார். மாயவநாதனுக்கு "கவிக்கோபம்' வந்துவிட்டது. கிடைத்த வாய்ப்புக்காக மண்டியிடாமல் உடனே வெளியேறிவிட்டார். பிறகு அந்த மெட்டுக்கு மு.கருணாநிதி எழுதியதுதான் "காகித ஓடம் கடலலை மீது' - என்ற பாடல்.

மாயவநாதனின் கவியாளுமையை முற்றிலும் அறிந்து, தான் எழுதித் தயாரித்த படங்களில் வாய்ப்புகள் அதிகம் வழங்கி, மாயவநாதனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் மு.கருணாநிதி என்பதும் மறுக்க இயலாத உண்மை. பூம்புகார் திரைப்படத்தில் மாயவநாதன் எழுதிய பாடல்கள், சினிமாப் பாடல்கள் என்பதை மறந்துவிட்டால் அத்தனையும் சித்தர் பாடல்கள்தான். தத்துவசாரமும், மனிதநேயமும் உள்ளடங்கிய பாடல்கள் அவை.

பந்தபாசம் - திரைப்படத்துக்கு கண்ணதாசனுக்குப் பதிலாக யாரை வைத்து எழுதுவது என்ற கேள்வி எழுந்தது. மாயவநாதனைத்தான் தெரிவு செய்தார்கள். "பந்தபாசம்' படத்தில் வருகிற...

""நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? - நெஞ்சில்

நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?

கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?

குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?''

என்ற பாடல், அது வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் பிரபலமானது.

பாலும் பழமும் - திரைப்படத்தில் ஒரு பாடல்,

""பழுத்துவிட்ட பழமல்ல நீ விழுவதற்கு

பாய்ந்துவிட்ட நதியல்ல நீ ஓய்வதற்கு

எழுதிவிட்ட ஏடல்ல நீ முடிவதற்கு

இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?''

வாழ்வின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைக்கும் அதே கணத்தில், சாவின் வாயிலில் அடுத்த அடியை எடுத்து வைக்க நேர்ந்துவிட்ட ஓர் இளம் கதாபாத்திரத்தின் நிலையை முதல் மூன்று வரிகளில் பெருஞ்சோகத்துடன் கூறிவிட்டு, நான்காவது வரியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். ""இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?'' அற்ப ஆயுளில் ஒரு ஜீவனை முடித்து வைக்கும் விதியின் பிடரியில் அறையும் கேள்வி இது.

என்னதான் முடிவு - திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்

""பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்க வைக்காதே''

என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார். நாத்திகவாதியின் மனதைக்கூட கரைந்துபோக வைக்கும் ஆன்மிக வரிகள் அவை.

திரையிசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல்கள் தலைசிறந்தவை. இலக்கிய வகைகளில் இசைப்பாடலும் ஒருவகை. தமிழ் மரபில் இசைப்பாடல்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் அதன் நீட்சியாக திரையிசைப் பாடல்கள் உருவானது. அந்த திரையிசைப் பாடல்களுக்கு இசையின்பத்தைத் தாண்டி ஓர் இலக்கிய இன்பத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் முக்கியமானவர் மாயவநாதன்.

1971-இல் மாயவநாதன் காலமானார். "டெல்லி டூ மெட்ராஸ்' - திரைப்படத்தின் பெயர் பட்டியலில் மாயவநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, அந்தக் கவிஞன் மீதிருந்த மதிப்பை வெளிப்படுத்தினார்கள்.

மேதாவிலாசத்துடன் பாடல்கள் புனைந்த மாயவநாதன் சொற்ப வாய்ப்புகளையும், அற்ப ஆயுளையும் பெற்றது தமிழ்ப் பாடலுலகின் துரதிருஷ்டம் என்றுதான் கூறவேண்டும். பொய்யும், புரட்டும், போலி விளம்பரமும் மலிந்த சினிமா உலகில், சித்த நெறியும், சத்திய வெறியும்கொண்டு ஞானச் சிறகடித்துப் பறந்த கவிஞன் மாயவநாதன்.

vasudevan31355
27th September 2014, 12:27 PM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 9

'புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ 18'

தங்கை போல் நடிக்க வந்தவளின் நோக்கத்தை சிகரெட்டை ஸ்டைலாகப் பிடித்தபடி கண்டு பிடித்து, அவளை (கே.ஆர்.விஜயா) டீஸ் செய்து நடிகர் திலகம் பாடும் அற்புத பாடல். 'ஊட்டி வரை உறவ'ளித்த பாடல்.

இந்த பாடலில் நடிகர் திலகம் அணிந்திருக்கும் உடைதான் அந்தக் கால சினிமா சிலைடுகளில் பல விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப் பட்டது என்பது இன்னொரு விசேஷம்.


http://www.youtube.com/watch?v=9onlEEX8Qyg&feature=player_detailpage

chinnakkannan
27th September 2014, 12:30 PM
வாசு சார் பாராட்டுக்கும் பாட்டிட்டமைக்கும் அகெய்ன் தாங்க்ஸ்.. பாடல் கண்ணதாசனா மாயவ நாதனா.. ? விசாலிகண்ணதாசன் பின்னூட்டம் பார்க்க வேண்டும்.. //தென்றல் அழைத்துவரத் தங்கத் தேரினில் வந்தாரே// மரக்கிளையில் அமர்ந்து ஆடும் தேவிகை..
கலை முற்றும் அறிந்தவரோ என்பதற்கு இல்லை எனத் தலையாட்டல்
காதல் முற்றும் தெரிந்தவரோ என்பதற்கு ஆமாம் எனக் கண்மூடித் தலையசைத்தல் - வெகு அழகு..
ம்ம் டிவியில் ஒரு முறை பார்க்க வேண்டும் மறுபடி!!

ஆலு பத்தி சும்மா கேட்டேன் வாசு சார்..லொள்ஸ்லாம் இல்லை :) மன்னிக்க

டீஸிங்க் பாடல்களில் ராணிமகா ராணி – இ.கா பீரியடில் ஏதாவதொரு பொதுக்கூட்டம் என்றால் வைத்துவிடுவார்கள்..வெகு நாட்களுக்கு எனக்குப் புரியாமல் இருந்தது..

chinnakkannan
27th September 2014, 12:35 PM
மாயவ நாதனைப் பற்றிய பதிவுக்கு நன்றி கிருஷ்ணா ஜி..என் சந்தேகத்தையும் போக்கி விட்டீர்கள்..

vasudevan31355
27th September 2014, 12:39 PM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 10

'அஞ்சல் பெட்டி 520' படத்தில் அசிங்கமான ஒரு நீள் பொய் மூக்கு மாட்டிக் கொண்டு தன்னைப் பார்த்திராத சரோஜாதேவியை டீஸ் செய்து பாடும் பாடல்.

'மஞ்சள் முகமடியோ
மல்லிகைப் பூச்சரமடியோ
கொஞ்சம் கிளியடியோ
கோபம் கொண்டது ஏனடியோ'

'சந்தனச் சிலையே கோபமா
சாகசமா இல்லை நாணமா
தளதளக்கும் இடை குலுங்க
தனியே செல்வது சந்தோஷமா'

'ஆட வாடி ஜிங்கி
உன் அழகுக்கேற்ற மங்கி'


http://www.youtube.com/watch?v=rW5kZLN5aJ4&feature=player_detailpage

gkrishna
27th September 2014, 12:39 PM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTjqb4T64CWVtyfbURqTsqxQAxuDqpk1 wmZgMzu_iWrOlPGIMKJfA

1963-ல் வந்த கற்பகம் வாலியைத் தனித்தன்மையுள்ள கவிஞராக நிறுத்தியது என்றே சொல்லலாம். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் வியத்தகு இசையும் சுசீலாவின் தேன்குரலும் வாலியின் சொற்களை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன.

படத்தில் மொத்தம் நான்கே பாடல்கள். நான்கு பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. படத்தில் ஆண்குரலே இல்லை. வெறும் பெண்குரலில் நான்கே நான்கு பாடல்களைப்போட்டு அந்த நான்கு பாடல்களையுமே சூப்பர் ஹிட்டாக்கிக் காட்டும்

வித்தையெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கடுத்து எந்த இசையமைப்பாளருக்கும்-ஆமாம் எந்த இசையமைப்பாளருக்கும், இதுவரை வாய்த்ததில்லை.

‘அத்தைமடி மெத்தையடி’ பாடல் தமிழகத்தையே குலுக்கிப்போட்டது. அதற்கடுத்த பாடல் ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’ மூன்றாவது பாடல் ‘பக்கத்துவீட்டு பருவமச்சான்’, நான்காவது பாடல் ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா’ வாலி தமிழக மக்களின் நாக்கில் நிரந்தரமாக வந்து உட்கார்ந்தது இந்தப் படத்தில் இருந்துதான்.

இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சம்பவத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தின் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அந்தக் காலத்துப் படங்களின் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களில் இவரும் ஒருவர். இவரது வசனங்கள் புகழ்பெற்றவை. நடிகை கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். கற்பகம் படத்தை கே.எஸ்.ஜி ஆரம்பித்தபோது அந்தப் படத்தில் வெறும் சுசீலாவை மட்டும் பாடவைத்து பாடல்கள் போடுவது என்றெல்லாம் திட்டம் இருக்கவில்லை. அதேபோல வெறும் வாலியை மட்டும் வைத்து அனைத்துப் பாடல்களையும் எழுதவைப்பது என்பதும் திட்டமில்லை. கண்ணதாசன் இல்லாமல் அந்தக் காலத்தில் பெரிய படங்கள் வராது. அவர் இல்லாமல் மற்றவர்கள் பாடல்கள் எழுதுகிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தாம் இருக்கவேண்டும். ஒன்று அவர் கிடைத்திருக்கமாட்டார். அரசியலில் மிகவும் பரபரப்பாக அவர் இருந்த காலகட்டம் அது. இன்று ஒரு ஊர் நாளை இன்னொரு ஊர் என்று அலைந்துகொண்டிருந்த நாட்களில் மற்றவர்களைப் பயன்படுத்திப் பாடல்கள் எழுத வைப்பார்கள். இது ஒரு காரணம். அடுத்த காரணம், குறைவான பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

கற்பகம் படத்துக்கு என்ன காரணத்தினால் வாலியை மட்டும் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பாடல்கள் இப்போதைய வார்த்தையில் சொல்லவேண்டுமானால் சூப்பர் டூப்பர் ஹிட். படமும் பிரமாத ஹிட். இந்தச் சமயத்தில் படத்தின் நூறாவது நாள் விழாவோ வெள்ளிவிழாவோ கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்குத் தலைமைத் தாங்க கண்ணதாசனைக் கூட்டிவருகிறார் கேஎஸ்ஜி. நம்மைப் பாடல் எழுதவைக்காத படவிழாவுக்கு நாம் வருவதா என்பதுபோன்ற ஆதங்கம் எல்லாம் எந்தக் காலத்திலும் வைத்துக்கொள்ளாதவர் கண்ணதாசன். மகிழ்ச்சியோடு வருகிறார். மேடையில் வாலியும் இருக்கிறார்.

அந்த விழாவில் சின்ன அண்ணாமலை பேசுகிறார். “இந்தப் படத்தில் கவிஞர் பாடல் எழுதவில்லை. வேறொருவர் எழுதியிருக்கிறார். ஆனால் எல்லாப் பாடல்களுமே பிரபலமாகியிருக்கின்றன. இது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாய் இருக்கும். ஆச்சரியம்தான். பல ரேக்ளா ரேஸ்களில் ஒன்றுக்கும் ஆகாத சில சோப்ளாங்கி மாடுகள் அதுபாட்டுக்கு ஓடி முன்னால் வந்துவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் இது” என்று பேசிவிட்டார்.

பதறி எழுந்தார் கண்ணதாசன். “நண்பர் சின்ன அண்ணாமலை தவறாகப் பேசிவிட்டார். கற்பகத்தில் வாலி எழுதியிருக்கும் பாடல்களை நான் கேட்டேன். இதோ இப்போது வெளியூரிலிருந்து சென்னைக்குக் காரில் பயணம் செய்தபோது வழியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டு அத்தைமடி மெத்தையடிதான். மிகவும் நன்றாக எழுதியிருக்கிறார். ஒன்றுமில்லாமல் சும்மாவெல்லாம் ஒரு பாட்டு இந்த அளவுக்குப் பிரபலமாகிவிடாது. இதே படத்தில் இன்னொரு பாட்டு..பக்கத்து வீட்டு பருவமச்சான் என்று. அந்தப் பாட்டில் ‘பார்வையிலே வடம் புடிச்சான்’ என்றொரு வரி வருகிறது. இப்படி ஒரு வரியை சாதாரணமானவர்கள் எழுதமுடியாது. ஒரு கவிஞனால்தான் எழுதமுடியும்” என்று பேசினார். கவிஞரிடமிருந்து வாலிக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் இதுதான்.

இணையத்தில் திரட்டிய தகவல்

gkrishna
27th September 2014, 12:42 PM
thanks ceekay sir

regards

gk

vasudevan31355
27th September 2014, 12:42 PM
ஆலு பத்தி சும்மா கேட்டேன் வாசு சார்..லொள்ஸ்லாம் இல்லை :) மன்னிக்க



மன்னிக்க என்ற பெர்ர்ர்ரிய வார்த்தையெல்லாம் போட்டால் மன்னிக்கவே முடியாது. அப்புறன் அழுதுருவேன்.:)

vasudevan31355
27th September 2014, 12:44 PM
இன்று விடை பெறட்டா? மதிய ஷிப்ட்.

கிருஷ்ணா சார், சி.க சார்,

பார்த்துக்கோங்க. கலக்குங்க. ஜமாயுங்க.

நாளைக்குப் பாக்கலாம். பை.

gkrishna
27th September 2014, 12:51 PM
வாசு சார்

அருமையான நடிகர் திலக டீசிங் பாடல்கள் 10க்கும் மேல் வழங்கி உள்ளீர்கள்.

வாழ்த்துகள்

gkrishna
27th September 2014, 12:54 PM
படம்: ஆராதனை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: ராதிகா ?

லலலல லலலல லாலா.. லலலல லலலல லாலா..
இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி தேடி துடித்தபடி.. தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே
இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
...

ஆசை நதி மடை திறக்கும்.. பாஷை வந்து கதவடைக்கும்
காயாது மன ஈரங்கள்.. தாளாது சுடு பாரங்கள்
காவியக் காதலின் தேசங்களே.. ஊமையின் காதலைப் பேசுங்களே
மலர்களும் சுடுகின்றதே

தனானா.. இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
...

பாவை விழித்துளி விழுந்து பூவின் பனித்துளி நனையும்
தீயாகும் ஒரு தேன் சோலை.. போராடும் ஒரு பூமாலை
சூரிய காந்திகளாடியதோ.. சூரியனை அது மூடியதோ
முகில் வந்து முகம் பொத்துமோ

தனானா.. இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி தேடி துடித்தபடி.. தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே
லலலல லலலல லாலா.. லலலல லலலல லாலா

இளையராஜாவின் இன்னிசையில் அவ்வளவாக கேட்கக் கிடைக்காத இளம் பனித்துளி விழும் நேரம்

http://www.our-kerala.com/newgallery/images/photos/images/Sumalatha_91803.jpg

இந்த பாடகி ராதிகா பற்றி தகவல் ஏதும் உண்டா ?

gkrishna
27th September 2014, 01:07 PM
தற்போது குமுதம் வார இதழில் தாம் பழகிய மனிதர்களைப் பற்றிய நினைவோட்டங்களை எழுதி வருகிறார் சோ. இந்தத் தொடரிலும் அவ்வளவுதான். எவ்வித பாசாங்குகளும் அற்று தம்முடைய நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார் அவர். சமீபத்தில் இசையமைப்பாளர் எம்எஸ்விஸ்வநாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல சுவாரஸ்யமான தகவல்களுடனும் திரை இசையைப் பற்றிய, எம்எஸ்வியைப் பற்றிய தமது கருத்துக்களுடனும்……………….!. அதில் சில கருத்துக்களும் தகவல்களும் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களாகவும் உள்ளன. அவர் சொல்கிறார்;

(இதில் சோ சொன்னவையெல்லாம் வண்ணத்தில் உள்ளன)

“கவிஞர் கண்ணதாசனைப் பற்றி நான் குறிப்பிடும்போது அவருக்கு குழந்தை மனது என்றிருப்பேன். இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு குழந்தையேதான்.

அவரைப் பொறுத்தவரை இசைதான் அவருக்கு எல்லாம். இசையைத் தவிர மற்றவற்றைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்வதிலும் விருப்பம் காட்டமாட்டார்.அவருக்குக் குருநாதர் இசையமைப்பாளர் எஸ்எம் சுப்பையா நாயுடு. அவருக்காக எம்எஸ்வி ஒரு விழா எடுத்தார். அந்த விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க என்னை அழைத்திருந்தார். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த விழாவில் எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல நடிகர்கள் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வதாக தகவல் தெரிய வந்ததும் விஸ்வநாதனிடம் கேட்டேன். “நான் திமுகவைக் கடுமையா விமர்சனம் பண்ணிண்டிருக்கேன். திமுகவை விமர்சிக்கிறதை எம்ஜிஆர் கொஞ்சம்கூட விரும்ப மாட்டார்(அப்போது அவர் திமுகவில் இருந்த சமயம்). நான் அவரோட சினிமாவில் நடிச்சாலும் இந்த மேடையில் நான் தொகுத்து வழங்கறப்போ என்ன பேசுவேனோன்னு அவர் நினைக்கலாம். சில பிரச்னைகள் வரலாம். அதனால் நீங்க என்னைத் தொகுத்து வழங்கச் சொல்லாமல் வேறு யாரையாவது பண்ணச் சொல்லுங்க. நான் வேண்டாம். உங்களுக்கும் இது நல்லதில்லை”.

விஸ்வநாதன் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

“அதெல்லாம் பத்தி எனக்கென்ன? நான் ஒரு விழா எடுக்கறேன். எனக்கு சோ ஃபிரண்ட். எனக்கு அவர் வேணும். கலந்துக்கணும். இதனாலே எல்லாம் எம்ஜிஆருக்குக் கோபம் வராது. நீங்க நினைக்கிறமாதிரி எல்லாம் ஒண்ணும் நடக்காது. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டு என்னிடம் “நீங்க அங்கே அரசியல் பேசுவீங்களா?” என்று கேட்டார்.

“நான் எந்த இடத்தில் எதைப் பேசறதுன்னு எனக்குத் தெரியாதா? நான் அரசியல் பேசமாட்டேன்” என்று சொன்னேன்.

“சரி அது போதும்” என்று சொல்லிவிட்டு விழாவுக்கான அழைப்பிதழைக் கொண்டுவந்து காண்பித்தார்.

எம்ஜிஆரின் பெயர் முதலில் போடப்பட்டிருந்தது. என்னுடைய பெயரும் இருந்தது.

“எம்ஜிஆரிடம் இதைக் காண்பிச்சுட்டீங்களா?”

“இல்லை இனிமேல்தான் காண்பிச்சுட்டு சொல்லப்போறேன்” சொல்லிவிட்டு எம்ஜிஆரைச் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறார். அழைப்பிதழை வாங்கியதும் அதிலுள்ள பெயர்களை எல்லாம் பார்த்திருக்கிறார் எம்ஜிஆர்.

“இந்த இன்விடேஷன்ல இருக்கறவங்ககிட்டே எல்லாம் சொல்லிட்டீங்களா?”
“சொல்லிட்டேன்”

“சோ கிட்டே சொல்லிட்டீங்களா?”

“சொல்லிட்டேன்”

“என்ன காரியம் பண்ணியிருக்கீங்க நீங்க? சோ திமுகவை எதிர்க்கிறவர். அவர் ஏதாவது திமுகவைப் பத்திப் பேசினா எனக்குத் தர்மசங்கடமாப் போகும். என் கிட்டே நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா?”

“இதில் பிரச்னை இருக்கும்னு தோணலை” – தயக்கத்துடன் சொல்லிவிட்டுத் தொடர்ந்திருக்கிறார் எம்எஸ்வி. “உங்க படங்களில்கூட சோ நடிக்கிறாரே?”

“அது வேற. இது வேற”

“நான் வேணும்னா சோ கிட்டே போய் ‘எம்ஜிஆர் வேணாம்ங்கிறார். அதனால் நீங்க வேணாம்னு சொல்லிடுறேன்”

“இன்னும் இதைக் கெடுக்கறதுக்கு என்ன வழியுண்டோ அதைக் கண்டுபிடிக்க உன்னால்தான் முடியும்” என்று எம்எஸ்வியைக் கண்டித்தாலும் சொன்னபடி விழாவுக்கு வந்து விட்டார் எம்ஜிஆர்.சிவாஜியும் வந்துவிட்டார். மேடை நிறைந்துவிட்டது. முன்னால் நல்ல கூட்டம். விழா நிகழ்ச்சிகளைத் தொகுக்க வந்த நான் முதலில் மைக்கைப் பிடித்தேன். போனதும் உரத்த குரலில் “வாத்தியார்” என்று சொல்ல, கூட்டத்தில் ஒரே கைத்தட்டல்.

“இது வாத்தியாருக்கான விழா. இங்கே ஒரு வாத்தியார் வந்திருக்கார். அது மட்டுமில்லை. விஸ்வநாதன் தன்னுடைய வாத்தியார் சுப்பையா நாயுடுவுக்காக நடத்துற விழா இது” என்று வாத்தியார் என்கிற சொல்லை வைத்து ரொம்பவும் விளையாடினேன். எதிரில் இருந்த கூட்டத்திற்கும் திருப்தி. இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த எம்ஜிஆருக்கும் பரம திருப்தி.

அடுத்த நாள் சிவாஜியுடன் ஷூட்டிங். நான் போனதுமே “சரியான அயோக்கியன்டா நீ. வாத்தியார்ங்கற ஒரு வார்த்தையை வைச்சுக்கிட்டு எப்படியெல்லாம் சமாளிச்சே” என்று கிண்டல் பண்ணினார் அவர்.

Thanks to kumudam

chinnakkannan
27th September 2014, 01:25 PM
”என்ன விசு சார்.. இன்னும்கவிஞர் பாட்டுத் தரலையே பட ஷூட்டிங்கோ மே மாசம் வெச்சாச்சு..பெரிய நடிகரோட கால்ஷீட்..படம் வெளி நாடு..விசா அது இதுல்லாம் சமாளிச்சாச்சு.. ஹீரோயின்க்கு வேற ஒரு படம் வேற இருக்கு.. இது ஏப்ரல் மாசம ஏன் இப்படி டிலே பண்றார்..”

“தெரியலையே..கவிஞர் இப்படிச் செய்ய மாட்டாரே..போன் பண்ணீங்களா…”

“ நல்லாச் சொன்னீர்ங்காணும்..உங்க கிட்ட வர்றதுக்கு முன்னாடி அங்க போன் போட்டு பேசிட்டு தான் வந்தேன்” என்றார் தயாரிப்பாள்ர்..

“இருங்க நான்பேசறேன்” என்ற விசு கவிஞருக்கு ஃபோன் போட மறுமுனையில் குரல் கோபமாய் “ என்ன விசு..அதான் தர்றேன்னு சொன்னேனில்ல..இப்படிப் பிரஷர் பண்ணா…சரி சரி..அந்தப் ப்ரொட்யூசர ரெண்டு மணி நேரம் கழிச்சு வரச் சொல்லு இங்கே.. எழுதித் தர்றேன்..”

“கவிஞரே..ஒருபாட்டுல்லாம்பத்தாது..எல்லாம் வேணுமே.. நான் வேணும்னா ரெண்டு நாள் கழிச்சு வரட்டா”

“விஸ்வ நாதா..எல்லாப் பாட்டையும் தான் தர்றேன்னு சொன்னேன்..ஒழுங்கா வந்து வாங்கிக்கோ” என கவிஞர் ஃபோனை வைக்க இரண்டு மணி நேரம் கழித்து விஸ்வ நாதனும் தயாரிப்பாளரும் போய் சந்தித்தால் – ஒருகத்தை பேப்பர்… எல்லாப் பாடல்களும் ரெடி..

விஸ்வ நாதனும் தயாரிப்பாளரும் திக்குமுக்காடி தாங்க்ஸ் சொல்ல கொஞ்சம் கூலாய் இருந்த கண்ண தாசன்.. “விசு.. இதுல்ல ஒரு பாட்டுல ஒனக்கும் இந்த ப்ரொட்யூசருக்கும் டெடிகேட் பண்ணி எழுதியிருக்கேன்..படிச்சுப் பார்த்து க் கண்டு பிடி..போய்ட்டு வா”

ஸ்டூடியோ வந்து எல்லாப் பாடல்களும் படித்தால் அனைத்தும் முத்து..ஆனால் கவிஞர் சொன்னது போல் எதுவும் டெடிகேட் பண்ணியது போலத் தெரியவில்லை..

எல்லாம் நன்னா இருக்கு..கவிஞர் ஏன் இப்படி ச் சொல்றார்.. எம்.எஸ்.வி குழம்பி க் குழம்பி மறுபடி மறுபடி படித்துப் பார்க்க பளிச்சென மூளைக்குள் பல்ப்.. ப்ரொட்யூசரை அழைத்து இந்தப் பாட்டுதான் ஓய்..

எப்படிச் சொல்றீங்க விசு சார்..

பாருங்க கவிஞர்கிட்ட மே மாசம் ஷூட்டிங்க்னு பிரஷர் கொடுத்தோமோன்னோ.. இந்தப் பாட்டு முழுக்க மே மேன்னு முடியற மாதிரி எழுதியிருக்கார்..!

அட ஆமாம்.. என்றார் தயாரிப்பாளர்..

அந்தப்பாடல் அன்பு நடமாடும் கலைக் கூடமே..

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மாதவி கொடிப் பூவின் இதழோரமே மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே பாடும் புது ராகமே

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே

மானிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே
**
என்னா அழகுப் பாட்டு..என்னா அழகிய கவிஞர்.. ரெண்டு மணி நேரத்தில் எழுதிய மற்ற பாடல்கள்…ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, மனிதன் நினைப்பதுண்டு, எங்கிருந்தோ ஒருகுரல் வந்தது..

படமாக்கிய விதமும் அழகு. . ந.தி வித் மஞ்சுளா.. அழகான நெய்மணக்கும் பொங்கலுடன் அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் சாப்பிட்டாற்போல வெகு பொருத்தமான ஜோடி..வெகு பொருத்தமான பாட்டு!

ம்ம் கண்ணதாசன் கண்ணதாசன் தான்..

(முன்பு மய்யத்தில் நண்பர் கணேஷ் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மசாலா தூவி உங்களுக்கு வழங்கியது – அடியேன்..:)

mahendra raj
27th September 2014, 01:32 PM
அழகே அழகு-நன்றி உயிர்மை s .ராமகிருஷ்ணன்

http://www.sramakrishnan.com/wp-content/uploads/2012/07/raja.jpg

சில திரையிசைப் பாடல்கள் கேட்ட முதல்நாளில் இருந்து இன்று வரை அதன் ஈர்ப்பை அப்படியே வைத்திருக்கின்றன, அதில் ஒன்று ராஜபார்வை படத்தில் இடம் பெற்ற ஜேசுதாஸ் பாடியுள்ள அழகே அழகு தேவதை பாடல்

கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாடல் பாதாதி கேசம் பெண்ணை வர்ணிக்கும் மரபில் உருவானது, பாடலை ரசித்து அழகாக எழுதியிருக்கிறார் கவியரசர், எளிமையும், வியப்பும் ஒருங்கே கொண்ட பாடலது, கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் மனதில் ஒரு பெண்உருவம் தோன்றி பாடல் கேட்பவரை தன்வசமாக்குகிறது,

ராஜபார்வை தமிழ்சினிமாவில் முக்கியமான ஒரு படம், இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதிதுபுதிதாக ஆச்சரியங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. இன்று வெளியாகியிருக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக எப்படி உருவாக்கினார் கமல்ஹாசன் என்று வியப்பாகவே உள்ளது

வேறுமாநிலங்களில் இருந்து நடிகைகளை மட்டுமே தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்து கொண்டிருந்த சூழலில் ராஜபார்வையில் இடம்பெற்ற கலைஞர்களின் பட்டியலைப் பாருங்கள், படத்தின் இயக்குனர் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த சிங்கிதம் சீனிவாசராவ், ஒளிப்பதிவாளர் வங்காளத்தைச் சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் பரூண் முகர்ஜி, முக்கியக் கதாபாத்திரமொன்றில் நடித்திருப்பவர் தெலுங்கு தமிழ் திரைப்படங்களின் முக்கியத் தயாரிப்பாளரும், நடிகருமான எல்.வி.பிரசாத், இன்னொரு முக்கியக் கதாபாத்திரம் கேரளாவைச் சேர்ந்த K.P.A.C. லலிதா, இவர் இயக்குனர் பரதனின் மனைவி.

மாதவியின் அப்பாவாக நடித்திருப்பவர் ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஏவி.தனுஷ்கோடி, இவர் அமெரிக்கத் தூதரகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர், சிறந்த ஒவியர், ஜெர்மனியில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்ப்புகள் செய்திருப்பவர், படத்தின் உயிரோட்டமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா, இவர்களுடன் கண்ணதாசன், வைரமுத்து இருவரின் அற்புதமான பாடல்கள், இப்படி படத்தின் உருவாக்கத்தில் இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகள் பலரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள், ஆனால் படம் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை, அதற்கான முக்கிய காரணம் கமல்ஹாசனின் நூறாவது படம் என்பது குறித்து அவரது ரசிகர்கள் மிதமிஞ்சிய எதிர்ப்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள், அதை நிறைவேற்றி வணிகவெற்றி பெறுவதைவிடவும் தனக்கு விருப்பமான ஒரு கதையை, விருப்பமான தொழில்நுட்பக்குழுவினரைக் கொண்டு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கமல்ஹாசன் இப்படத்தைத் தயாரித்திருந்தார்,

இசையை மையமாகக் கொண்ட படமாக அமைந்ததோடு சம்பிரதாயமான காதல்காட்சிகள், சண்டைகள், திடீர் திருப்பங்கள் எதுவுமில்லாமல் மாறுபட்ட கதைசொல்லும்முறையை கொண்டிருந்ததை அன்றைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்கு காரணம் அன்று தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருந்த பொது ரசனை,

1981களில் மாறுபட்ட காதல்கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தன, அதில் பன்னீர்புஷ்பங்க்ள், பாலைவனச்சோலை, இன்று போய் நாளை வா, அலைகள் ஒய்வதில்லை ஆகிய நான்கு படங்களும் நான்குவிதமான காதல்கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்லி வணிகரீதியாக வெற்றி பெற்றன, இந்த ஆண்டு வெளியான மகேந்திரன் இயக்கிய நண்டு புதிய கதைக்களனோடு வெளியானது, ஆனால் படம் வணிக வெற்றியை பெறவில்லை, அது போன்ற ஒரு சூழலே ராஜபார்வைக்கும் நேர்ந்த்து,

அழகே அழகு தேவதை பாடல் படமாக்கபட்டுள்ள விதம் சிறப்பானது, கேமிரா நகர்வதற்கு போதுமான அளவு கூட இல்லாத ஒரே வீடு, அதற்குள் முழுப்பாடலும் எடுக்கபட்டிருக்கிறது, ஆடம்பரமில்லை, பகட்டான ஆடை அணிகள் இல்லை, மாதவியின் கிளர்ச்சியூட்டும் அழகு தான் பாடலின் மையப்புள்ளி. பாடல் இடம் பெறும் சூழல் கதையின் போக்கில் ஒரு முக்கியத் தருணம். பாடலின் துவக்கமும் முடிவும் அதைக் கதையோடு சேர்ந்த பாடலாகப் பொருந்த வைக்கிறது,

இப்படத்தில் திரைப்படப் பின்னணி இசை சேர்க்கும் குழுவில் உள்ள பார்வையற்ற வயலின் இசைக்கலைஞராக கமல்ஹாசன் நடித்திருக்கிறார், கதை எழுதுவதற்காக அவரைச் சந்திக்கும் மாதவி அவரோடு நெருங்கிப் பழகத் துவங்குகிறார், இவரும் ஒருநாள் சமையல் செய்கிறார்கள், சமையல் புத்தகத்தை பார்த்துச் சமைக்க முற்படும் போது எதிர்பாராத விதமாக சமையல்பொருள்களை மாதவி மீது கொட்டிவிடுகிறார் கமல், அவள் குளித்துவிட்டு ஈரத்தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டவராக அமர்ந்திருக்கையில் அவளது அழகை வியந்து பாடுவதாகவே இப்பாடல் இடம் பெற்றுள்ளது

அழகே அழகு, தேவதை என்ற மூன்று வார்த்தைகளில் அவளது அழகின் மீதான லயப்பு முழுமையாக வெளிப்பட்டுவிடுகிறது, அதிலும் அழகு என்று உச்சரிக்கும் போது ஏற்படும் சிலிரிப்பு பின்வரும் தேவதை என்ற சொல்லின் வழியே நிறைவு அடைகிறது,

ராஜபார்வை முழுவதும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் தான், குறிப்பாக பார்வையற்றோர் பள்ளியில் நடைபெறும் வயலின் இசை நிகழ்வில் அவர் அமைத்துள்ள இசைக்கோர்வை உலகத்தரமானது, இப்பாடலின் துவக்கத்தில் ஜேசுதாஸின் ஹம்மிங் மயக்ககூடியது,

ஒவியத்தின் மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம், அவரது படங்களில் ஒவியர்கள் கதாபாத்திரமாக வருவதுண்டு, அவரே அன்பே சிவத்தில் ஒவியராக நடித்திருக்கிறார், காதலா காதலாவிலும் ஒவியம் வரைபவராக பிரபுதேவா சித்தரிக்கபடுவார், விருமாண்டியிலும் ஒரு ஒவியர் முக்கிய சம்பவங்களின் சாட்சியாக இருப்பார், இப்பாடலில் மாதவி சித்திரம் வரைந்து கொண்டிருக்க அவரது ஒவ்வொரு அங்கமாக தொட்டுணர்ந்து கமல்ஹாசன் பாடுகிறார்,

தனது அழகைப்பற்றி பாடுவதை உள்ளுற ரசித்தபடியே அவரைசீண்டிக் கொண்டிருக்கிறார் மாதவி, குறிப்பாக பட்டன் அணியாத மேல்சட்டையுடன் உள்ள கமலின் உணர்ச்சிபாவங்களும், அவரது தலையில் செல்லமாகத் தட்டி விளையாட்டுகாட்டும் மாதவியின் நளினமும் காதல்வசப்பட்ட அவர்களின் நெருக்கத்தை தெளிவாக காட்சிபடுத்தியிருக்கின்றன

படியில் அமர்ந்திருந்த மாதவியைக் காணவில்லை என்று கமல் தேடும்போது அவரது விரலைப்பற்றி பல்லிடுக்கில் வைத்துக் கடிக்கும் அவரது குறும்புதனமும் விடுபடாத விரலோடு ததும்பும் மனமயக்கத்தில் அந்த இதழ்களை தொட்டு அறிந்து அவர் பாடுகிறார்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்

மின்னுகின்றன

சேர்ந்த பல்லின் வரிசையாவும்

முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ

தேன்குழல் விரல்களோ

ஒரு அஙகம் கைகள் அறியாதது

அறைக்குள்ளாகவே பாடல் படமாக்கபட்டுள்ளது, ஆனால் மாறுபட்ட கோணங்கள், உணர்ச்சிநிலைகள், ஊடல் என அந்தரங்க நெருக்கத்தை தருகிறது இப்பாடல், அதற்கு முக்கிய காரணம் இளையராஜாவின் நேர்த்தியான இசையும் யேசுதாஸின் மென்மையான குரலும் பருண் முகர்ஜியின் கவித்துவமான ஒளிப்பதிவும், நடனமில்லாமல் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கமல் மற்றும் மாதவியின் நடிப்புமே, இவையே பாடலின் வெற்றிக்கான முதன்மைக் காரணங்கள்

ராஜபார்வை படத்தில் குறிப்பிட்டுள்ள சொல்ல வேண்டிய மூவர், தாத்தாவாக நடித்துள்ள எல்வி பிரசாத், இவர் பிரசாத் ஸ்டுடியோவின் அதிபர், தெலுங்கில் நடிகராக அறிமுமாகி முக்கியத் தமிழ் தெலுங்கு தயாரிப்பாளராக பல புகழ்பெற்ற படங்களை உருவாக்கியவர், படத்தில் அவரது கதாபாத்திரம் வித்தியாசமானது, தனது பேத்தியின் காதலுக்காக அவர் நடந்து கொள்ளும விதம், இரவில் சாலையில் நிற்கும் கமலிடம் பெர்த்டே வாழ்த்து சொல்லும் அன்பு, மாதவியின் காதலைப்பற்றி முன்பே தெரியுமா எனக் கோபத்துடன் கேட்கும் மகனிடம் தடுமாற்றதுடன் சமாளிக்கும் பாங்கு, இறுதிக் காட்சியில் தேவாலயத்தில் இருந்து காதலர்களை சேர்த்து வைக்கும் போது வெளிப்படும் அவரது உறுதியான மனப்போக்கு யாவும் அவரை மறக்கமுடியாத ஒரு நடிகராக மாற்றிவிடுகின்றன,

இது போன்ற பாத்திரப்படைப்புகள் இன்று தமிழ் சினிமாவில் நிறைய வந்துவிட்டன, ஆனால் ராஜபார்வை தான் அதன் முதல்முயற்சி, அதற்கு முந்திய ஆண்டுகளில் வயதானவர்கள் என்றாலே ஒரே மெலோடிராமாவாக இருக்கும், அதைத் தூக்கிப்போட்டுவிட்டு புதியதொரு கதாபாத்திரமாக எல்விபிரசாத்தின் தாத்தா ரோல் உருவாக்கபட்டிருக்கிறது

இது போலவே படத்தில் தனித்து பாராட்ட இன்னொரு கலைஞர் ஏவி தனுஷ்கோடி, ஆங்கிலப்பேராசிரியராக சில ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இருபது ஆண்டுகள் அமெரிக்க தூதரகத்தில் பொருளதாரப்பிரிவில் ஆலோசகராக பணியாற்றியவர், ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர், தேர்ந்த ஒவியர், மொழிபெயர்ப்பாளர், இவர் மாதவியின் தந்தையாக நடித்திருக்கிறார்,

படபடப்பும், முன்கோபமும் கொண்ட கதாபாத்திரமது, அவரது கார் வி.கே.ராமசாமி காரோடு மோதும் போது ஏற்படும் கோபம், வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட கமல்ஹாசனிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் விதம், மகளிடம் கோபத்தில் கத்தும் போது ஏற்படும் உணர்ச்சிவேகம், பெண்கேட்டு வந்த கமல்ஹாசன் முன்பாக அப்பாவியாக கேட்கும் இயல்பு, இரவில் குடித்துவிட்டு தன்வீட்டின் முன்பு கலாட்டா செய்யும் கமல் கோஷ்டியைக் கண்டு ஏற்படும் ஆத்திரம் என்று தனுஷ்கோடி சிறப்பாக நடித்திருக்கிறார், இவ்வளவு தேர்ந்த நடிகர் ஏன் தமிழ்சினிமாவால் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போனார் என்பது ஆதங்கமாகவே உள்ளது,

இது போலவே கமலின் சிற்றன்னையாக வரும் K.P.A.C. லலிதா, அரியதொரு கதாபாத்திரம், வழக்கமான சித்தி போல கொடுமைக்காரியாக அவர் சித்தரிக்கபட்ட போதும் வீடு தேடிவந்து அவர் கமலிடம் பேசும் முறையும், அவருக்காக விகேராமசாமியிடம் பெண் கேட்பதும், போலீஸில் இருந்து மகனை மீட்டுவந்து காட்டும் அக்கறையும், மாதவி வீட்டில் போய் பேசும் கம்பீரமும், தான் விரும்பிய பெண்ணை கமல் ஒத்துக் கொள்ள மறுக்கும் போது காட்டும் ஆதங்கமும் என K.P.A.C. லலிதா தேர்ந்த நடிகை என்பதை நிருபணம் செய்திருக்கிறார், அவருக்கும் கமலிற்குமான உரையாடல்கள் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன,

எண்பதுகளில் வெளியான மலையாளத்திரைப்படங்களின் அழகியலை ஒத்தே ராஜபார்வை உருவாக்க்பட்டிருக்கிறது, மொத்தபடத்திலும் பத்தே கதாபாத்திரங்கள், அதிலும் நான்கு பேர் தான் முக்கியமானவர்கள், அவர்களை சுற்றியே படம் இயங்குகிறது. சம்பிரதாயமான காட்சிகள் என ஒன்று கூட கிடையாது, கமல் குடியிருக்கும் வீடு, அவரது ஒலிப்பதிவு கூடம், பார்வையற்றோர் பள்ளி யாவும் மிக இயல்பாக, யதார்த்தமான பின்புலமாக உருவாக்கபட்டிருக்கிறது,

1980 ஆண்டு சாய் பரஞ்சிபே ஸ்பார்ஷ் என்றொரு படத்தை இயக்கினார், இதில் நஸ்ருதீன்ஷா பார்வையற்றவராக நடித்திருக்கிறார், இப்படத்திற்கு ராஜபார்வைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன, இரண்டிலும் முக்கியக் கதாபாத்திரங்கள் மற்றவர்களிடம் இருந்து உதவியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், blind need help not pity or charity என்பதே இருவரது எண்ணமும்,

இரண்டிலும் பார்வையற்றோர் பள்ளி முக்கியக் களமாக உள்ளது, ஸ்பார்ஷ் படத்தில் ஷபனா ஆஸ்மி கதாநாயகியாக நடித்திருக்கிறார், அவரது தோற்றம் மற்றும் கேசத்தை வாறிவிடும் இயல்பு ஆகியவை போலவே மாதவியின் தோற்றமும் உள்ளது,

ஸ்பார்ஷ் படத்தில் ஒரு நாள் ஷபனா ஆஸ்மியின் பாடலை தற்செயலாக கேட்ட நஸ்ரூதீன் ஷா அவரைத் தனது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாட்டு கற்றுதரும்படியான சேவைக்கு அழைக்கிறார், விதவையான ஷபனா ஆஸ்மி தயங்கி ஏற்றுக் கொள்கிறார், இருவரும் பேசிப்பழகி ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள், ஷபனாவைக் காதலிக்கத் துவங்குகிறார் நஸ்ரூதீன் ஷா, அவர்களது திருமணம் நிச்சயக்கபடுகிறது, ஆனால் கருத்துவேறுபாடால் திருமணம் நின்று போகிறது, ஷபனா முன்பு போலவே பார்வையற்றோர் பள்ளியில் பாடல் சொல்லிக் கொடுத்தபடியே தனது நாட்களை கழிக்கிறார், முடிவில் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்,

இப்படத்தின் கதையும் ராஜபார்வையின் கதையும் வேறுபட்டவை, ஒருவேளை ஸ்பார்ஷ் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் காரணமாக கமல் ராஜபார்வையை உருவாக்கியிருக்க்கூடும், நஸ்ரூதீன் ஷாவிற்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது, ஆனால் தமிழ் சினிமாவில் அதன்முன்புவரை இப்படியொரு கதாபாத்திரம் உருவாக்கபடவில்லை,

ஒரு நடிகராக கமலின் இன்னொரு உயரிய பரிமாணம் இப்படத்தில் வெளிப்பட்டுள்ளது, வழக்கமான டுயட்டுகள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை, படம் முழுவதும் பார்வையற்றவரின் மொழியாக இசையே உள்ளது, அம்மாவிடம் கமல் வயலினில் பேசும் காட்சியில் மாஸ்ட்ரோ இளையராஜாவின் இசை விளையாடுகிறது, பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் மாவிலை பாதமோ என்ற உவமை கண்ணதாசனின் கற்பனையை கொண்டாட வைக்கிறது, அவ்வகையில் இப்பாடல் அழகே அழகு என்று தான் சொல்ல வேண்டும்

••

(உயிர்மையில் வெளியாகி வரும் பறவைக்கோணம் பத்தியில் இடம்பெற்றது)


Beautiful write-up on Raja Paarvai. Please permit me to add on. When Kaviarasu Kannadhasan was approached to write this situational song he inquired as to the film's title and he was replied 'Andhi Mazhai'. Even Vyramuthu had written the title song. Kannadhasan advised Kamalhassan and Chandrahassan that such a title will not bode well for a maiden project (being Kamal's first productions). The word 'andhi' denotes the sun going down and it is sentimentally not suitable, he explained. He, then, suggested the title of 'Raja Paarvai' after listening to the story line. That's how the title was changed from 'Andhi Mazhai' to 'Raja Paarvai'. Even Kamal recollected this incident in a tv media about a few months ago.

gkrishna
27th September 2014, 01:33 PM
பொங்கலுக்கு கத்தரிக்காய் கொத்சு வேண்டாமா சி கே சார்

எம். எஸ். வி. திரும்பத் திரும்ப கவிஞரிடம் மே மாதம் ஷ¥ட்டிங் இருக்கிறது, பாடலை விரைவில் கொடுங்கள் என்றார்.

மலேசியா செல்வதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி என்ற நிலையில் கண்ணதாசனிடம் பேசிய எம். எஸ். வீ. மே மாதம் படப்பிடிப்பு நடத்த வேண்டும், பாடல் எழுதி தருகிறாயா? இல்லை வேறு யாரிடமாவது எழுதி வாங்கி கொள்ளட்டுமா? என்று கேட்டிருக்கிறார்.

பொறுமை இழந்த கடுப்பான கண்ணதாசன் ‘என்னையா.... சும்மா மே... மே... ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க’ என்ற படியே ஐந்து நிமிடத்தில் பாட்டை எழுதி கொடுத்தாராம்.

அந்தப் பாடல்தான் ‘அன்பு நடமாடும் கலைக்கூடமே’ என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்று முடியும். இந்தப் பாடலில் ‘மே’ என்ற எழுத்து 56 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கவிஞரே கூறியுள்ளார்.

http://www.thinakaran.lk/2013/02/26/tknc1.png

gkrishna
27th September 2014, 01:35 PM
Beautiful write-up on Raja Paarvai. Please permit me to add on. When Kaviarasu Kannadhasan was approached to write this situational song he inquired as to the film's title and he was replied 'Andhi Mazhai'. Even Vyramuthu had written the title song. Kannadhasan advised Kamalhassan and Chandrahassan that such a title will not bode well for a maiden project (being Kamal's first productions). The word 'andhi' denotes the sun going down and it is sentimentally not suitable, he explained. He, then, suggested the title of 'Raja Paarvai' after listening to the story line. That's how the title was changed from 'Andhi Mazhai' to 'Raja Paarvai'. Even Kamal recollected this incident in a tv media about a few months ago.

excellant and thanks for the information mr.mahender raj

you are always welcome

rgds

gk

gkrishna
27th September 2014, 01:39 PM
http://www.thinakaran.lk/2013/02/26/f5.png

ரஜினி நடித்த ரகுபதி ராகவன் ராஜாராம், ஆயிரம் ஜென்மங்கள், சதுரங்கம் ஆகிய மூன்று படங்களை டைரக்ட் செய்தவர். துரை, ரஜினியுடன் பழகியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி துரை கூறியதாவது:-

என் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் ரகுபதி ராகவன் ராஜாராம். அண்ணன் தம்பிகள் மூவரை சுற்றிப் பின்னப்பட்ட கதை. கதாநாயகியின் முறை மாப்பிள்ளையான வீரய்யன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார். எஸ்டேட்டில் சைக்கிள் கடை வைத்திருந்த வீரய்யன், யார் வம்புக்கும் போகமாட்டான். வந்த வம்பையும் விடமாட்டான்.

முறைப்பெண்ணை காதலிக்கும் வீரய்யன், அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதை அறிந்து, ஒதுங்கிக் கொள்வான். இந்த நிலையில், முறைப் பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டான் என்பதை அறியும் போது துடித்துப் போவான். உன்னைக் கெடுத்தவனை உயிருடனோ, அல்லது பிணமாகவோ உன் காலடியில் போடும் வரை ஓயமாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு வெளியேறுவான். சொன்னது போலவே வில்லனை கொன்று, பிணத்தை முறைப் பெண் முன் கொண்டுவந்து போட்டுவிட்டு பொலிஸில் சரண் அடைவான்.

ஆயிரம் ஜென்மங்கள் படப்பிடிப்பு ஆழியார் இணைப் பகுதியில் நடந்தது. அங்கு மூன்று அறைகள்தான் இருந்தன. ஒரு அறை கதாநாயகி லதாவுக்கு, இன்னொரு அறையில் விஜயகுமார் தங்கினார். மூன்றாவது அறை டைரக்டரான எனக்கும், ரஜினிக்கும் ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் ஒரு கட்டில் தான். மற்றொருவருக்காக தரையில் “பெட்” விரிக்கப்பட்டிருந்தது. நீங்கள் கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள். நான் தரையில் உள்ள படுக்கையில் படுத்துக்கொள்கிறேன் என்று கூறினேன். அதை ரஜினி ஏற்கவில்லை. நீங்க கட்டிலில் படுங்க. நான் கீழே படுக்கிறேன். என்று கூறி அப்படியே படுத்துக்கொண்டார். அவருடைய பெருந்தன்மை என்னை நெகிழச் செய்துவிட்டது.

சீரியசான கெரக்டரில் அறிமுகமாகி, ஸ்டைல் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி, சதுரங்கம் படத்தில் பெண்களைப் பார்த்து பயப்படும் அப்பாவியாக நடித்தார். அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினி தொழில் மீது பக்தி மிக்கவர். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிடுவார். கடும் உழைப்பாளி. படப்பிடிப்பு நேரங்களில் தான் அடுத்து நடிக்க வேண்டிய சீன் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பார். அவர் என்னை எங்கு பார்த்தாலும் அன்பாக இரண்டு வார்த்தைகளாவது பேசாமல் போகமாட்டார். இவ்வாறு கூறினார் துரை.

gkrishna
27th September 2014, 01:48 PM
ரஜினி நடித்த ஆயிரம் ஜென்மங்கள், முக்கியமான படம். அவர் நடித்த முதல் கலர்ப்படம் இதுதான். பல்லவி என்டர்பிரைசஸ் சார்பாக பட அதிபர் எம்.முத்துராமன் (என்.வி.ஆர்முத்து) தயாரித்த படம் இது. இதில் விஜயகுமார்- லதா ஜோடியாக நடித்தனர். லதாவின் அண்ணனாக ரஜினி நடித்தார்.

இது, ஆவிகள் பற்றிய கதை. மலையாளத்தில், ஷீலா டைரக்சனில் யக்சகானம் என்ற பெயரில் பத்திரிகையாளர் மதி ஒளி சண்முகம் தயாரித்து வெற்றி கண்ட படம். தமிழ்ப்பதிப்புக்கு மதி ஒளி சண்முகம் திரைக்கதை- வசனம் எழுத, துரை டைரக்ட் செய்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

இந்த படத்தின் கதை புதுமையானது.

விஜயகுமாரும், பத்மபிரியாவும் காதலர்கள். இருவருக்கும் திருமணம் நடைபெற சில நாட்கள் இருக்கும் தருணத்தில், பத்மபிரியாவை கற்பழிக்க வில்லன் முயற்சிக்கிறான். அவனிடமிருந்து தப்பி ஓடும்போது, நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறந்து போகிறார் பத்மபிரியா. அதன்பின் ஆவியாக அலைந்து கொண்டிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்குப்பின், விஜயகுமாருக்கும், லதாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஒரு சமயம் லதா தனியாக இருக்கும்போது, அவர் உடலுக்குள் பத்மபிரியாவின் ஆவி புகுந்து கொள்கிறது. லதா ஆவியாகத் திரிகிறார். விஜயகுமாரும், பத்மபிரியாவின் ஆவி புகுந்துள்ள லதாவும் தாம்பத்ய உறவு கொண்டால், அந்த ஆவி நிரந்தரமாக லதா உடலிலேயே தங்கி விடும்.

ரஜினி இதைத் தெரிந்து கொள்கிறார். லதாவின் உடலில் இருந்து பத்மபிரியாவின் ஆவியை வெளியேற்றி, மீண்டும் லதாவின் ஆவியை அதன் உடலுக்குள் புகச் செய்ய அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை வைத்து, கதை புதுமையாகவும், விறுவிறுப்பாகவும் பின்னப்பட்டு இருந்தது.

10-3-1978-ல் வெளியான இந்தப்படம், நூறு நாள் ஓடியது. மாறுபட்ட வேடத்தில் ரஜினி சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற வெண்மேகமே என்ற பாடல் மிகப்பிரபலம்.

http://mmimages.maalaimalar.com/Articles/2012/Oct/63d8c9b7-9b07-4fa2-aa68-e662ba19280f_S_secvpf.gif

chinnakkannan
27th September 2014, 01:48 PM
பொங்கலுக்கு சுட்ட கத்தரிக்காய்கொத்சு தான் கரெக்ட் காம்பினேஷன்..அதான் ஏற்கெனவே ந.தி..தேவிகா ஜோடி இருக்கே அதான் அ. வெ. .சா ந்னு சொன்னேன் கிருஷ்ணா சார்..(மீசைல மண் ஒட்டலை) ஐந்து நிமிஷத்தில் எழுதிய பாடலா..எழுதியிருப்பார் கவிஞர்..

இந்த ஐந்து நிமிடப் பாடலை விட டெலிஃபோனிலேயே கவிஞரிடம் மெட்டு சொல்லப் பட அவர் ட்டான் டானென்று சொன்னபாடல்.. கையிலேபணமிருந்தால் கழுதை கூட அரசனடி..கைகட்ட ஆளிருந்தால் காக்கைகூட தெய்வமடி.. (இது எங்கோபடித்த நினைவு)

மகேந்திர ராஜ் தாங்க்ஸ் ஃபார் தெ இன்ஃபோ..

கண்ணே கலைமானே பாட்டுக்கு கவிஞர் உடல் நிலை குன்றிய சமயம் ஏர்போர்ட்டுக்கு அமெரிக்கா சென்று கொண்டிருந்த தருணத்தில் இளையராஜா அவரிடம் காரிலேயே சென்று எழுதி வாங்கி வந்தாராம்..எழுதிய கவிஞர் கண்ணதாசன் கண்ணே கலைமானே மெட்டுக்கு சோகமாகவும் சிலவரிகள் எழுதிக் கொடுக்க அதை மூன்றாம்பிறையில் இறுதியில் உபயோகப் படுத்தினாராம் இளைய ராஜா (இதுவும் நண்பர் கணேஷ் எழுதியது இதே மய்யத்தில்)

gkrishna
27th September 2014, 01:59 PM
பெண் குழந்தைக்குத்தந்தையான தனக்கு இராணுவ ஜெனரல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோதுமனைவி ஒரு குழந்தைக்குத் தாயானதைக்கண்டு அதிர்ச்சியடையும் கதையுடன் 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஜெனரல் சக்கரவர்த்தி"

இராணுவ ஜெனரல் சிவாஜிகணேசன் அவரது மனைவி கே.ஆர்.விஜயா.அவர்களின் மகள் கவிதா, மோகன் ஷர்மாவை (லக்ஷ்மியின் முன்னாள் கணவர் )உயிருக்குயிராகக்காதலிக்கிறார். பருவ வயதில் இருவரும் தம்மை மறந்ததனால் கவிதா கர்ப்பமாகிறார்.காதலன் திடீரென இறந்துவிட செய்வதறியாது தடுமாறிய கவிதா தாயிடம் உண்மையைக்கூறுகிறார்.

திருமணமாகாத தனது மகள் கர்ப்பமானதையும் அதற்குக்காரணமான மோகன் ஷர்மா இறந்ததையும் அறிந்த தாய் துடிதுடிக்கிறார்.மகளையும் குடும்ப மானத்தையும் காப்பாற்றுவதற்காக தான் கர்பமாக இருப்பதாக கூறி மகளுக்குப்பிறந்த குழந்தையைத்தன் குழந்தை என ஊருக்குக்கூறுகிறார்.

மனைவி இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதை அறிந்து, தனது மேலதிகாரிகளிடம் குதூகலத்துடன் தகவல் தெரிவிப்பார். வீட்டுக்கு வந்ததும், தன் குழந்தைக்கு மகள் பால் கொடுப்பதைப் பார்த்து, சந்தேகமடைந்து, உண்மையை வெளிவரச்செய்ய, தனக்கு இனி குழந்தை பாக்கியமில்லை என்று மனைவியிடம் பொய் சொல்வார்.

மகளைக்காப்பாற்றுவதற்காக நடத்திய நாடகத்தினால் கணவன் தன் மீது சந்தேகம் கொள்வதை அறிந்த கே.ஆர்.விஜயா, துடிதுடிக்கிறார்.உணமையைச்சொல்ல முடியாது தடுமாறுகிறார்.திருமணம் செய்யாத மகளின் குழந்தை என எப்படிச்சொல்வதெனத தெரியாது தடுமாறினார்.

அழுத குழந்தைக்கு மகள் தாய்ப்பால் கொடுப்பதை பார்த்த சிவாஜிக்கு உண்மையைக்கூறுகிறார் மனைவி கே.ஆர்.விஜயா.மகளின் நிலை அறிந்த சிவாஜி நிலை குலைந்து போகிறார் . .இறந்துபோனதாக்க்கூறப்பட்ட மோகன் ஷர்மா உயிருடன் வருகிறார். அதன்பின் அவர்களின் வழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும் போட்டிபோட்டு நடித்தனர்.உணர்ச்சிகரமான இவர்களின் நடிப்பு ரசிகர்களைக்கலங்க வைத்தது.மனோரமா,கவிதா,மோகன் ஷர்மா,டி.பி.முத்துலக்ஷ்மி ஆகியோர் நடித்தனர்.கதை செல்வபாரதி,வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனம் படத்துக்கு உயிரைக்கொடுத்தது.பாடல்கள் கண்ணதாசன், இசை எம்.எஸ். விஸ்வநாதன்.இயக்கம் டி.யோகானந்.100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.

கே.எஸ்.ராஜவின் மதுரக்குரலில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான இப்படத்தின் விளம்பரங்கள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

படம் முடிகிறபோது, உண்மையிலேயே ஜெனரல் சக்கரவர்த்தியின் மனைவி கர்ப்பமாக இருப்பார். “ஃபிஃப்டி இயர்ஸ்! எப்படி?” என்று கையை மடக்கிக் காட்டி, கண்சிமிட்டுவதோடு ‘வணக்கம்’ கார்டு போடுவார்கள்

நன்றி ரமணிமித்திரன்


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTP7fjzm4ylQm2V3J9Hi7HO8Eck23B7F id7wN8WQoDMKDm4szpX

gkrishna
27th September 2014, 02:10 PM
பாடகர் திலகம் ,கண்ணிய பாடகி குரல்களில் கலந்து கட்டும்
'ஒ மை டியர் டாக்டர் ,வாட் இஸ் தி மேட்டர் '


http://www.youtube.com/watch?v=Ys3KhUC1E6w

chinnakkannan
27th September 2014, 02:11 PM
ஆயிரம் ஜென்மங்க்ள் முன் ஜென்மத்தில் ஸாரி முன்பாகத்தில் தோய்த்து அலசியாகிவிட்டதே கிருஷ்ணா ஜி.. இருந்தாலும் அடிஷனல் தகவலுக்கு நன்றி

குயில் இட்ட முட்டை என்று காக்கைக்குத் தெரியும்
அது கூவும் போதும் தாவும் போதும் யாருக்குப் புரியும்
காட்டுக்கதை வீட்டில் கூட நடக்குது கண்ணா
கடவுள் கண்ணை தீபப்புகை மறைக்குது கண்ணா..

ம்ம் கண்ணதாசன் டிஎம் எஸ் ந.தி..இன் ஜெ.ச..(காப்பி பேஸ்ட்ல ஜெனரல் சக்கரவர்த்தி போஸ்டிங்க் நடுல்ல நிறைய ?? ?? வருதுகிருஷ்ணா சார்)

gkrishna
27th September 2014, 02:13 PM
பாடகர் திலகம் குரலில் 'நீ என்ன கண்ணனா நான் என்ன கம்சனா'
நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பும் டி எம் எஸ் அவர்களின் கண்ணீர் குரலும் சேர்ந்து ரசிக்க வைக்கும் பாடல்

http://www.youtube.com/watch?v=x41bJ3dLmD0

gkrishna
27th September 2014, 02:15 PM
ஆயிரம் ஜென்மங்க்ள் முன் ஜென்மத்தில் ஸாரி முன்பாகத்தில் தோய்த்து அலசியாகிவிட்டதே கிருஷ்ணா ஜி.. இருந்தாலும் அடிஷனல் தகவலுக்கு நன்றி

குயில் இட்ட முட்டை என்று காக்கைக்குத் தெரியும்
அது கூவும் போதும் தாவும் போதும் யாருக்குப் புரியும்
காட்டுக்கதை வீட்டில் கூட நடக்குது கண்ணா
கடவுள் கண்ணை தீபப்புகை மறைக்குது கண்ணா..

ம்ம் கண்ணதாசன் டிஎம் எஸ் ந.தி..இன் ஜெ.ச..(காப்பி பேஸ்ட்ல ஜெனரல் சக்கரவர்த்தி போஸ்டிங்க் நடுல்ல நிறைய ?? ?? வருதுகிருஷ்ணா சார்)

இப்போது பாருங்கள் அதனையும் திருதபட்டன .

நன்றி சி கே சார் முதல் பாகத்தில் பாடல்கள் மட்டும் அலசப்பட்டன
கதை களம் அவ்வளவாக அலசப்படவில்லை என்று நினைவு

gkrishna
27th September 2014, 02:17 PM
வாணியின் அழகிய குரலில் 'அழகிய கிளிகளின் ஊர்வலம் அவசரபட்டால் நடக்காது அடிகடி நீங்கள் ஹோர்ன் அடித்தால் '

அய்யா ஒருவகை மைனர் அடி
ஹரன் அடிப்பதில் மேஜர் அடி

இந்த பாடலின் விடியோ கிடைக்குமா சி கே சார்

chinnakkannan
27th September 2014, 02:32 PM
தேடிப் பார்க்கிறேன் கிருஷ்ணா சார்.. நன்றி இப்போ படிக்க முடிகிறது

இருந்தாலும் இந்த சாவிக்கொத்து சினிமால மாட்டிக்கிட்டுபட்ட பாட்டிற்கு ஒரு வியாசமே எழுதலாம் :)

gkrishna
27th September 2014, 02:38 PM
சி கே சார்
சமீபத்திய அரண்மனை ஆயிரம் ஜன்மங்கள் உல்டா என்று கேள்வி
உண்மையா ?

https://mathimaran.files.wordpress.com/2014/09/aayiram-9.jpg?w=640https://mathimaran.files.wordpress.com/2014/09/aranmanai-sundar-c-1.jpg?w=640

gkrishna
27th September 2014, 02:39 PM
கலாட்ட கல்யாணம் நடிகர் திலகம் 'சாவி' நினைவு உள்ளதா சி கே சார் ?

gkrishna
27th September 2014, 02:59 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcS4hw7fPaN5wYRyeYeNF0yzisCKD1lS7 2l79k1n45FCKWvq_7n0

பஞ்சு அருணாசலம், புலமைப் பித்தன், முத்துலிங்கம் ஆகியோரும் எம்.ஜி.ஆரின் அறிமுகங்களே. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் நா. காமராசன்.

நா. காமராசன் தேனிமாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர். அவ்வூரைச் சேர்ந்த பழங்கவிஞர் கான்முகமது என்பவரிடம் கவிதை இலக்கணத்தைக் கற்றவர். கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றியிருக்கிறார். தாம் கல்லூரியில் தமிழ்ப்பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் பிற வகுப்பு மாணவர்களும் பேராசியர்களும் கதவு ஜன்னல்கள் எல்லாம் முகமாக நின்று தம் பாடங்களை ஆர்வத்தோடு கவனிப்பார்கள் என்று நா. காமராசன் கூறியிருக்கிறார். முன்னால் சபாநாயகர் காளிமுத்து, எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ஆகியவர்களோடு இளமையில் திராவிட இயக்கத்தின் தனித் தமிழ்நாடு கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்குகொண்டார். அதற்காகச் சிறைசென்றிருக்கிறார். சிறையில் அவர் கால்விலங்கு பூட்டப்பட்ட நிலையில் தண்டனை அனுபவித்தார். தாமரை, முரசொலி, மன்றம், காஞ்சி, காதல், சுரதா, தீபம் ஆகிய பத்திரிகைகளில் அவர் கவிதைகள் எழுதி வெளியிட்டார். தன் இலக்கியத் தாய்வீடு என்று தாமரை இதழைக் குறிப்பிடுகிறார்.

gkrishna
27th September 2014, 03:03 PM
நீதிக்குத் தலைவணங்கு என்னும் திரைப்படம் வாயிலாக நா. காமராசன் திரைப்பாடல் எழுத வந்தார். அவருடைய நூற்றுக்கணக்கான பாடல்களில் வெற்றிபெற்ற பாடல்கள் பல.

'கனவுகளே ஆயிரம் கனவுகளே',

'போய்வா நதியலையே',

'விளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான்',

'ஓ மானே மானே உன்னைத்தானே',

' மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ',

'ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே' – ஆகிய பாடல்கள் அவர் எழுதியவற்றில் கவர்ந்தவை. மிதமான உருவகமும் தகுதியழகோடு விளங்கும் பொருத்தமான வார்த்தைகளும் நா. காமராசன் பாடல்களின் சிறப்பு. கவிஞனுக்கே உரிய கௌரவத்தோடு,தம்மை முன்னிறுத்தி முந்திக்கொள்ளாமல் தம் பாடல்களின் ஜீவமொழியைத் திரைத்துறைக்கு வழங்கிவிட்டு ஓரமாக நின்றுகொண்டார். தாம் திரைத்துறைக்குப் பாடல் எழுதிய அனுபவங்களைப் பிற்காலத்தில் தம் கவிதையொன்றில் பதிவு செய்கையில்

‘பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன், இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்’ என்று கசப்போடு கூறுகிறார்.

‘பூபாள ராகம் புயலோடு போனதுபோல் ஆகாய கங்கை பாதாளப் படுகுழியில் விழுந்ததுபோல் என் சுயத்தைத் தொலைத்துவிட்டேன்’
என்று மனம் வெதும்பிச் சொன்னார்.

gkrishna
27th September 2014, 03:11 PM
ஏ.வி.எம்மின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ திரைப்படத்தில் நா. காமராசன் எழுதிய பாடல் ‘சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது’ என்பது. நா. காமராசனின் தமிழ் ஆட்சியும் சொல்லழகும் சந்தத்தோடு மெல்ல வழிந்து இதயத்தை வேதனைக்கடலில் மூழ்கடிக்கும் பாங்கும் அப்பாடலில் உண்டு. கேட்பவர் எவரும் பாடலின் இறுதியில் விழிக்கடை நீர்த்திரளைத் துடைக்காமல் எழமுடியாதபடி இருக்கும் அப்பாடல். பாடிய ஜேசுதாஸின் குரலில் அத்தனை உருக்கம் பாடலெங்கும் பனியாக மூடியிருக்கும்.

'நானே எனக்கு நண்பன் இல்லையே' என்று போக்கிரித்தனமாக சுற்றியலைந்த நாயகன் காதலுற்றுத் தன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டு உன்னதமான நிலைக்கு வருவான். அவர்களுடைய காதல் வாழ்வுக்கு சாட்சியாக ஒரு மகள் பிறந்திருப்பாள். அச்செல்ல மகள் தந்தைசொல் மீறித் தன் தலைவனைத் தேடி மணந்து பெற்றவரை நீங்குவாள். தன் இழிவுகள் அனைத்தையும் ஏற்று சகித்து தன்னையும் சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்கிய தன் காதல் மனைவி வெந்து துடிப்பதைக் காணமுடியாத நிலையில் நாயகன் பாடும் பாடல் அது. பிரிவுத் துயரமும் உறவுகளின் நிலையாமையும் அந்தப் பாடல் வரியெங்கும் பிசினாக ஒட்டியிருக்கும்.

சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா ?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா ?

சிட்டுக்குருவி நம் மகள். நம் இல்லக்கூட்டில் செல்லச் சிட்டாகப்பிறந்த ஒரே மகள். உணவையும் உயிரையும் வாயிட்டு ஊட்டி வளர்த்த அன்புச் சிறுவள். அந்தச் சிட்டுக் குருவிக்குச் சிறகு முளைத்துவிட்டது. சிறகு முளைத்ததும் கொஞ்சமும் காத்திருக்காமல் அவசரப்பட்டுப் பறந்து போய்விட்டாளே ! ரத்தத்தைப் பொழிந்து வளர்க்கப்பட்டவள், ரத்த உறவாக என்றும் இருந்து நம்மீது அன்பு செலுத்த வேண்டியவள் – அவளோடு இருந்த அத்தனை உறவும் தன் மணவாளனைத் தேடிப் பறந்ததில் கிளைபோல் முறிந்துவிட்டதே ! நாம் இந்த வாழ்வில் பெற்ற ஒரே பேறு நான் தந்தை என்பதும் நீ தாய் என்பதும்தான். அந்தப் பேற்ற நமக்குப் பிறந்து வழங்கியவள் நம் மகள். அவளே நம்மைத் துறந்து சென்றுவிட்டபிறகு அந்தப் பெருமையைக் கூட நாம் இழந்துவிட்டோமா ? அவளே இல்லையென்றால் நான் தந்தையும் இல்லை, நீ அன்னையும் இல்லையே ! இல்லை இது வெறும் கனவுதானா ? அல்லது அப்போதைக்கு நின்று நிலவிப் பின் மறந்தி நீங்கிவிடவேண்டிய நினைவா ? சொந்தம் என்பது பிறப்போடு வருவது. பந்தம் என்பது வாழ்வின் நிகழ்வுகளில் வந்து சேர்வது. அப்படி நெஞ்சோடு பந்தமாக வந்து சேர்ந்தவை எல்லாமே என்றும் தொடரும் தொடர்கதையா ? அல்லது அவ்வப்போது முடிந்துவிடும் சிறுகதையா ?

நாம் போடும் மேடைகளே நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம்
கூடி வாழக் கூடு தேடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாடக் காடு தேடும் யார் செய்த பாவம் ?
தாயென்னும் பூமாலை தரை மேலே வாடுதே !

இந்த உலகில் நாம் நடந்துகொள்ளும் நிகழ்வுகள் எல்லாமே நாடக மேடை நிகழ்வுகளே. அவை வெறும் போலிகள். நாம் நம்பிப் பயணிக்கும் ஓடங்களாகிய உறவுகள் எல்லாமே மூழ்கி உருவழியும் காகித ஓடங்களே. பாசம் என்றா சொல்ல முடியும் ? எல்லாமே வெறும் வேஷம் என்பதாகத்தானே இருக்கிறது ? அல்லது காலம் இட்டுக் காட்டுகிற வண்ணக்கோலங்களா இவையெல்லாம் ? ஜோடிக்குருவிகளாக இருந்த நம்மோடு கூடிவாழ்வதற்காக நம் உறவுக் கூட்டுக்கு ஓடி வந்த ஜீவன் நம் மகள். சிறகு முளைத்ததால் ஆடிப் பாடி மகிழ்வதற்காக நம் பாதுகாப்பான கூட்டைவிட்டு அது காட்டுக்குப் பறந்து போய்விட்டதே. அந்தக் காட்டில் அந்தச் சிறுகுருவியைக் கொத்தித் தின்பதற்காக எத்தனை எத்தனை பருந்துகளும் வல்லூறுகளும் வட்டமிடுகின்றனவோ ! அந்தத் துயரத்தில் அவளைப் பெற்ற தாயென்னும் இந்தப் பூமாலை தரைமேலே வாடி வதங்குகின்றதே !

காலங்கள் மாறிவரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலைக் கூறுவதெங்கே
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை
பாச தீபம் கையில் ஏந்தி வாழவந்த வேளை
கண்கள் ஆடப் பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே !

புரிகிறது. காலங்கள் மாறிவருகின்றன. அதற்கேற்ப மாறிவிட்ட காட்சிகளைத்தான் இங்கே காண்கிறேன். என் மகள் பிரிந்துபோனது பருவத்தின் நிர்ப்பந்தம், ஒருநாள் மனம் மாறித் திரும்பவருவாள் என்றெல்லாம் நியாயங்கள் சில இருக்கலாம். ஆனால், அந்த நியாயங்கள் எங்களுக்கு ஆறுதலைக் கூறுவதில்லை. மஞ்சளும் குங்குமமும் மார்புச் சந்தனமும் சூடுகின்ற எங்கள் கன்னிப் பாவை எங்கள் குலவிளக்கு. பாசத்தின் ஒளிவிளக்கைத் தன் திருக்கரங்களில் ஏந்தி எங்களோடு வாழ்வதற்காக வந்த வேளை இது என்று எண்ணியிருந்தோம். தன் கண்கள் ஒருவனைக் கண்டு காதலில் ஆடிவிட்டதால் அவள் புதிதாக அடைந்திருக்கும் பெண்மை அவளது எண்ணத்திற்கு ஒத்துப்பாடி விட்டதால் இன்பம் கண்டு மகிழும் வழியில் வளர்ந்த மங்கையாகிச் சென்றுவிட்டாள். சரி அதற்காக அவளைச் சபிக்கவா முடியும் ? தாயும் தந்தையுமாகிய நாங்கள் கெட்டு அழிவுற்று வாடி நின்றாலும் அவள் எல்லா நலங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும் !

மகளைப் பெற்றவர்கள் எவரும் இந்தப் பாடலின் ஆழத்தை இன்னும் அதிகமாக உணர முடியும். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என்னை அடர்த்தியான மௌனம் சூழ்ந்துகொள்ளும். அது நானும் மகளைப் பெற்றவன் என்பதாலோ என்னவோ !

http://www.youtube.com/watch?v=qIN52qll0u8

gkrishna
27th September 2014, 03:14 PM
நா காமராசனின் மேலும் சில பாடல்கள்

1)துப்பாக்கி கையிலெடுத்து - கோடை மழை

2) உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது - தங்கரங்கன்

3) யாரிது தேவதை - என் பிரியமே

4) தூண்டா மணி விளக்கு - வாழ்க வளர்க

gkrishna
27th September 2014, 03:22 PM
வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே வானம்பாடி
நாமும் கொஞ்சம் ஆடலாமா

http://www.youtube.com/watch?v=YEnK8zbS8xQ

gkrishna
27th September 2014, 03:24 PM
அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்குது - தஙகமகன் - நா காமராசன்

http://www.youtube.com/watch?v=QHhsbvnNr9s

gkrishna
27th September 2014, 03:26 PM
பாடும் வானம் பாடி ஹா
மார்கழி மாதமோ
பார்வைகள் ஈரமோ - நான் பாடும் பாடல் - நா காமராசன்

www.youtube.com/watch?v=12V13oDF81c

gkrishna
27th September 2014, 03:42 PM
கவிஞர் ஆபாவாணன் - மனோஜ் கியான் இசை

தோல்வியில் இழப்பில் கையறுநிலையில் கலங்கும் மனித மனத்தை ஆறுதல்படுத்தி ஆற்றுப் படுத்தும் வல்லமை நிச்சயம் இசைப்பாடலுக்கு உண்டு. இந்த வகைமைப் பாடல்களில் கண்ணதாசன் இயற்றிய ‘மயக்கமா கலக்கமா ?’ என்னும் பாடலுக்கே முதலிடம் என்றாலும் அது ஆன்மீகத் தத்துவ கருத்துகளை கொஞ்சம் அதிகமாகவே கொண்டதாக இருக்கும். ஆனால் தத்துவ கருத்துகள் எதுவுமில்லாமல் அதற்கு இணையான் இன்னொரு பாடல் உண்டென்றால் அது ஆபாவாணன் இயற்றிய ‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..?’ என்னும் பாடல்தான். இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர் பி.பி. ஸ்ரீனிவாஸ் என்னும் மந்திரக் குரல் வேந்தர் என்பது அரிய சிறப்பு.

தமிழ்த் திரைப்படப் பாடல் வரலாற்றில் ‘வெற்றி’ என்ற வார்த்தையில் துவங்கும் பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. ஆனால், தோல்வி என்ற சொல்லில் துவங்கும் பாடல் இதுவொன்றாகத்தான் இருக்க முடியும். தோல்வியிலிருந்து எழுந்து நகரும் இடம்தான் வெற்றி என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அந்தச் சொல்லில் தம் பாடலைத் துவக்குவதில் அவருக்குத் துளியும் தயக்கம் இருந்திருக்கவில்லை.

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா ?

உடமையை இழந்தோம்
உரிமையை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா ?

உணர்வைக் கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா ?

விடியலுக்கில்லை தூரம்
விடியும் ! மனதில் இன்னும் ஏன் பாரம் ?

உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ?

யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா ?

ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா ?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

வாழ்வை சுமையென நினைத்துத்
தாயின் கனவை மிதிக்கலாமா ?

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTIyFb9MfLOUnmQR0YFr4GNcXR8VTGq6 f_sqWst2y5xeBRLxgCXUw

http://www.youtube.com/watch?v=0boI_dAMhZk

gkrishna
27th September 2014, 03:58 PM
1931ல் டி.எஸ்.ரெங்கராஜனாக ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலி தனது முப்பதுகளில் சென்னை ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்தபடியே சினிமாவுக்கு பாடலாசிரியராக முயன்றுள்ளார். ஆனால் வாய்ப்புக்கள் வரவில்லை. ஒருமுறை வறுமையின் காரணமாக தற்கொலைக்கு அவர் முயன்ற போது அவரைக் காப்பாற்றியதும் ஒரு பாடல். அது அவரது நண்பர் பி.பி.சீனிவாஸ் பாடிய 'மயக்கமா கலக்கமா'. அப்பாடலைக் கேட்டு மனம் மாறி மீண்டும் முயற்சி செய்ய ஆரம்பித்தார்

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

http://www.youtube.com/watch?v=wmjEXNFNupM

gkrishna
27th September 2014, 04:03 PM
ஆட்டோகிராப் - கவிஞர் பா விஜய் - பரத்வாஜ் இசையில்

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே[4]
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே"

என்று வாழ்வை ஒரு போராட்டமாக எடுத்துக்கூறித் தொடங்கும் இப்பாடல் வரிகள், படிப்படியாக, மனித வாழ்வின் இயல்புகளையும், எதிர்கொள்ளக்கூடிய நிலைமைகளையும், அவற்றைக் கையாள வேண்டிய மனப்பக்குவம் குறித்தும் அழுத்தமாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன.

"எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்"

என்று வாழ்வில் காயங்கள் ஏற்படுவது வழமை என்பதையும் அவ்வடுக்களின் தன்மை குறித்தும் எடுத்துக்கூறும் பாடல்,

"உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்

என்று வாழ்வின் வலிகள், எதிர்காலத்தில் மனிதன் பக்குவம் அடைவதற்காகத் தான் என்பதைக் கவிதை நயத்துடன் எடுத்துக்காட்டுகிறது.

"வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சைப் போல சுவாசிப்போம்"

என்று எதிர்கால நன்மைக்காக முயற்சி செய்யும்படி அறைகூவல் விடுக்கும் பாடல் வரிகள்,

"மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வி இன்றி வரலாறா துக்கம் இல்லை என் தோழா
ஒரு முடிவு இருந்தால்.. அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்"

என மனிதனின் எதிர்காலத்துக்குத் தோல்விகள் ஊட்டமாக அமையக்கூடும் என்பதையும், ஒரு உறுதியான முடிவுடன், தெளிவாகச் செயற்பட்டால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதையும் சொல்கிறது.

விரக்தி நிலையில் இருக்கும் நாயகனுக்கு உற்சாகம் கொடுக்க முயற்சி செய்பவளாக வரும் பெண்ணொருத்தி பாடுவதாக இப்பாடல் உள்ளது. இதற்காகப் பின்னணிக் குரல் கொடுத்திருப்பவர் கே. எஸ். சித்ரா. பல்வேறு மொழிகளில் பல விருதுகளைப் பெற்றவரான இவர் மிகவும் சிறப்பாக இப்பாடலைப் பாடியுள்ளார். பாடல் வரிகளுக்கும், காட்சிக்கும் பொருத்தமான அழுத்தமான குரலுடன், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும், உயிரோட்டத்துடனும் பாடியிருப்பதாக தேசிய திரைப்பட விருதுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.youtube.com/watch?v=QIb-jvI2wQ8

JamesFague
27th September 2014, 04:35 PM
Fantastic melody from the movie Saath Saath with Farooq Sheik and Deepti Naval.


http://youtu.be/-GRqHkV9Bls?list=PLCD0BBCF0821C9084

JamesFague
27th September 2014, 04:37 PM
Enjoy the melody from the movie Do Raaste - Rajesh Khanna and Mumtaz


http://youtu.be/1lyJyjSezC8?list=PLCD0BBCF0821C9084

JamesFague
27th September 2014, 04:39 PM
Enjoy the superb melody from the movie Anamika by Sanjeev and Jaya Badhuri


http://youtu.be/kq_vWD4lTcw?list=PLCD0BBCF0821C9084

chinnakkannan
27th September 2014, 04:50 PM
//கலாட்டா கல்யாணம் நடிகர் திலகம் 'சாவி' நினைவு உள்ளதா// நினைவில்லாம கிருஷ்ணா சார்..முதலில் இட நினைத்து எடிட்பண்ணி விட்டேன்

//சமீபத்திய அரண்மனை ஆயிரம் ஜன்மங்கள் உல்டா என்று கேள்வி
உண்மையா ?// கொஞ்சம் ஆயிரம் ஜென்மங்கள், கொஞ்சம் சந்திர முகி..மனோபாலா கோவை ச்ரளா சந்தானம் கிக்கிக்கிக் எனச் சிரிக்க வைக்கிறார்கள்.. டிபிகல் சுந்த்ர் சி படம்..

madhu
27th September 2014, 05:55 PM
படம்: ஆராதனை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: ராதிகா ?

இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
இந்த பாடகி ராதிகா பற்றி தகவல் ஏதும் உண்டா ?

பாடகி பற்றி தெரியலீங்க....

http://youtu.be/d-nJrSt46cU

madhu
27th September 2014, 05:58 PM
வாணியின் அழகிய குரலில் 'அழகிய கிளிகளின் ஊர்வலம் அவசரபட்டால் நடக்காது அடிகடி நீங்கள் ஹோர்ன் அடித்தால் '

அய்யா ஒருவகை மைனர் அடி
ஹரன் அடிப்பதில் மேஜர் அடி

இந்த பாடலின் விடியோ கிடைக்குமா சி கே சார்

கிருஷ்ணா ஜி..

இந்தாங்கோ

http://youtu.be/4G6vLH2236I

gkrishna
27th September 2014, 08:50 PM
நன்றி மது சார்

gkrishna
27th September 2014, 09:15 PM
தமிழில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகைகள் என்றால்

டி ஏ மதுரம்
டி பி முத்துலட்சுமி
மனோரமா
ஈ வி சரோஜா
சச்சு
காந்திமதி
ஊர்வசி
கோவை சரளா
கல்பனா
ஆர்த்தி

முதலானோரை சொல்லலாம். இதுதவிர கனகா (விரலுக்கேத்த வீக்கம்), சுவாதி (அசத்தல்) போன்ற நாயகிகள் மார்க்கட் போனபின் காமெடி செய்தனர்.

ஷகிலா,ஷீத்தல் – ஜல்லிக்கட்டு காளை
ஜோதிமீனா - பரம்பரை
பாபிலோனா - அசத்தல்
போன்ற கவர்ச்சி நடிகைகள் சில படங்களில் காமெடி செய்தனர்.

ஆனால் காமெடி நடிகர்களுடன் ஒப்பிட்டால் இவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஏன் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவா?.

gkrishna
27th September 2014, 09:27 PM
http://4.bp.blogspot.com/--qR17cfJcrQ/UJgBgD6IM2I/AAAAAAAAKlI/zxu-4uUjkcM/s640/Amitabh_web.jpg

இந்த நிழல் படத்தின் தகவல் ஏதும் தர முடியுமா ?

gkrishna
27th September 2014, 09:34 PM
மக்கள் திலகத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்காக திரைப்படக் கலைஞர்கள் பாராட்டு விழா எடுத்தனர். இப்போது நேரு ஸ்டேடியம் இருக்குமிடம் அப்போது காலி இடமாக இருந்தது. அங்குதான் பாராட்டு விழா நடந்த்து. பிரமாண்டமான அரங்கம் அமைத்து அந்த விழா நடந்தது.

பாரதிராஜா, பாக்யராஜ். டி.ராஜேந்தர் என்று மக்கள் திலகம் மீது மரியாதை கொண்ட அனைவரும் வந்து மனதார வாழ்த்தினர். நடிகை ரேவதி உட்பட பலர் நடனம் ஆடினார்கள்.

இந்த விழா நடப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் சின்ன விழா நடந்தது. அங்கேயும் திரை பிரபலங்கள் குவிந்திருந்தார்கள். மக்கள் திலகம் அப்போது முதல்வர் என்பதால் அவர் வர மாட்டார் என்ற நினைப்பில் நான், ஜெய்சங்கர் உட்பட சிலர் டிரிங்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

திடீரென்று மக்கள் திலகம் வந்துவிட்டார். அப்போது இலங்கை பிரச்சினை உச்சத்தில் இருந்த்தால் அவர் கருப்பு உடையில் வந்திருந்தார். அவர் வந்ததும் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த டிரிங்ஸை மறைத்துவிட்டோம். நான் அவசரம், அவசரமாக ஓட்டல் ஊழியரிடம் சென்று டூத் பேஸ்ட்டு வாங்கி பல் துலக்கிவிட்டு வந்து மக்கள் திலகத்திற்கு வணக்கம் வைத்தேன்.

“எப்படியிருக்கு சினிமா..?” என்று கேட்டார் மக்கள் திலகம்.

“நல்லாயில்லை..” என்றேன்..

“ஏன்..” என்றார்.

“நீங்கதான் சி.எம். ஆகிட்டீங்களே ஸார்..” சிரித்துக் கொண்டே என் தோளில் கை போட்டார்.

பல் துலக்காததால் மது வாடை பிடிக்கும் என்பதாலும், அது மக்கள் திலகத்திற்குப் பிடிக்காது என்பதால் தூரத்திலேயே நின்று கொண்டிருந்தார் நடிகர் ஜெய்சங்கர்.

மக்கள் திலகம் சில கலைஞர்களுடன் தோளில் கை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்தார். நான் படம் பிடித்தேன். அப்போது டைரக்டர் பாலு மகேந்திரா மக்கள் திலகம் தோள் மீது கை போட்டுவிட்டார். அவர் தோளில் கை போட்ட அடுத்த நிமிடமே பட்டென்று மக்கள் திலகம் அவரது கையைத் தட்டிவிட்டார். அவசரத்தில் அதையும் நான் படம் பிடித்துவிட்டேன். மக்கள் திலகம் இதைக் கவனித்துவிட்டார்.

“நடிகை ஷோபா, பாலுமகேந்திராவில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று பேசப்பட்ட நேரம் அது. முதல்வர் என்பதால் வழக்கில் இருந்து தப்பிக்க மக்கள் திலகத்திற்கு நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக அப்படி தோளில் கை போட்டு படம் பார்க்கப் பார்த்திருக்கிறார் பாலுமகேந்திரா..” என்று முணுமுணுத்தார்கள். “பெருந்தன்மையாக எல்லோருடைய தோளிலும் முதல்வர் கை போடுகிறார். இதற்காக அவர் தோளிலேயே கை போடலாமா..?” என்று சிலர் சிடுசிடுத்துக் கொண்டிருந்தார்கள்.

விழா நடந்த அன்று இரவு 11 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது வாசலில் ஜேப்பியார் நின்று கொண்டிருந்தார்.

“என்ன ஸார்.. எம்.ஜி.ஆர்., நெகடிவ் ரோலை எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னாரா..? என்று கேட்டேன். “அதெப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க..?” என்றார் ஜேப்பியார். “இத்தனை வருஷமா அவர்கூட இருந்திருக்கேன். இது தெரியாதா ஸார் எனக்கு..? பாலுமகேந்திரா தோளில் கை போட்டதும் நான் படம் எடுத்ததை மக்கள் திலகம் பார்த்துவிட்டார். நிச்சயம் பிலிம் ரோலை வாங்கிக் கொள்வார்ன்னு தெரியும்..” என்று சொல்லிவிட்டு பிலிம் ரோலை ஜேப்பியாரிடம் கொடுத்தேன்.

அதை வாங்கிக் கொண்டதும், “தலைவர் கொடுக்கச் சொன்னார்..” என்று சொல்லி ஒரு கவரைக் கொடுத்தார் ஜேப்பியார். பிரித்துப் பார்த்தேன். அதில் நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்து இருந்தன.

நன்றி :

“தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.”
எழுதியவர் : புகைப்படக் கலைஞர் திரு.ஏ.சங்கர்ராவ்
நக்கீரன் வெளியீடு
பக்கங்கள் : 264
விலை : ரூ.150

gkrishna
27th September 2014, 09:39 PM
சலவை நிலா - இளைய நிலாவாக மாறிய மர்மம்..!

கவிப்பேரரசு பற்றி பல இயக்குநர்கள் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனும் அவர் பங்குக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலை முதலில் ‘சலவை நிலா பொழிகிறது’ என்றுதான் வைரமுத்து எழுதிக் கொடுத்தாராம்..

அந்தச் ‘சலவை’ என்ற வார்த்தை நன்றாக இல்லை. அதற்குப் பதிலாக வேறு வார்த்தையை போடும்படி ஆர்.சுந்தர்ராஜன் வற்புறுத்தியும் கவிஞர் ஏற்கவில்லையாம்.. பதிலுக்கு, “உங்களைவிட அறிவாளிகள் நிறைய பேர் தமிழ்நாட்டுல இருக்காங்க..” என்று பதில் சொன்னாராம்.. “இருக்கலாம் ஸார்.. ஆனா எனக்கே அது என்னன்னு புரியலையே..? அப்புறம் எப்படி நான் மத்தவங்களுக்கு புரிய வைக்கிறது..?” என்று சண்டையிட்டாராம் ஆர்.சுந்தர்ராஜன்.

இளையராஜாவும் ஆர்.சுந்தர்ராஜனை அழைத்து, “இது உனக்கு முதல் படம்.. ரொம்ப திமிரா இருக்காத.. கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.. கவிஞர் சொன்ன மாதிரியே இருக்கட்டும்..” என்று அட்வைஸ் செய்திருக்கிறார். “இல்ல ஸார்.. என் படத்துல என் ஹீரோயினை பாடாய்ப்படுத்தி அடிச்சு, துவைச்சு காயப் போட்ட மாதிரி காட்டப் போறேன்.. அதுக்கு முன்னாடியே இப்படி ‘சலவை’ன்னு போட்டா நல்லாயிருக்காது ஸார்..” என்றிருக்கிறார். “சரி.. கதைக்கு தேவையில்லைன்னா நீ எப்படி வேண்ணாலும் மாத்திக்க..” என்று இளையராஜா ஓகே சொன்ன பின்புதான் ‘சலவை நிலா’-‘இளைய நிலா’வாக மாறியதாம்..!

gkrishna
27th September 2014, 09:47 PM
மும்பையில், நோய்வாய்ப்பட்டு சகோதரர் வீட்டில் தங்கியிருந்த தன் தாயார், டி.எம்.எஸ்ஸைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, அதன்படி அருகில் வாணி வித்யாலயாவுக்கு வந்திருந்த டி.எம்.எஸ். அவர்களிடம் கவிஞர் வாலி போய் தன் தாயாரின் விருப்பத்தைச் சொன்னவுடன், மறுப்பேதும் சொல்லாமல் டி.எம்.எஸ். உடனே கிளம்பி வந்து, தாயாரின் அருகில் அமர்ந்துகொண்டு பரிவோடு விசாரித்து, அவர் கேட்டுக்கொண்டபடி இரண்டு திரைப்படப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார் என்று சமீபத்திய குமுதம் இதழில் சொல்லியிருக்கிறார் கவிஞர் வாலி. இதன் பின்னணியில், பாட்டுத் தலைவன் டி.எம்.எஸ்ஸின் பேரன்பையும் பெரியமனசையும் வெளிக்காட்டும் விதமாக ஒரு சுவாரஸ்ய செய்தி உள்ளது.

டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தான். எத்தனையோ வைத்தியர்களைப் பார்த்தும், எத்தனையோ சிகிச்சைகள் செய்தும் அவன் உடல்நிலை தேறவே இல்லை. ‘முருகா… முருகா…’ என்று அனத்திக்கொண்டு இருந்த அவனைப் பார்க்கப் பார்க்க பெற்ற உள்ளம் துடிதுடிக்க, அருகே இருந்து ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார் டி.எம்.எஸ். அவர் மனம் பிள்ளை படும் துயரைக் காணச் சகியாமல் அழுதுகொண்டு இருந்தது.

அதே நேரம், ‘பாகப் பிரிவினை’ படத்துக்காக அவர் போய் ஒரு பாடலைப் பாடிக்கொடுக்கவேண்டிய கட்டாயம். தன்னால் ஏதும் தாமதம் ஆகிவிடக்கூடாதே என்று, மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, மகனிடம் விடைபெற்று, ஸ்டுடியோவுக்குப் போய் அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ். வழக்கமாக ஓரிரண்டு முறை ரிகர்சல் பார்ப்பது வழக்கம். ஆனால், அந்தப் பாடலுக்கு ரிகர்சல் ஏதும் பார்க்கவில்லை. பாடல் வரிகளைக் கேட்டுக்கொண்டார். மெட்டு என்ன என்று கேட்டுக் கொண்டார். இசையமைப்பாளரை ஒருமுறை பாடச் சொல்லிக் கேட்டார். அவ்வளவுதான்! ஒரே டேக்கில் பாடிப் பதிவாகிவிட்டது அந்தப் பாடல்! அப்போது அவர் இருந்த சோகமான மனநிலையோடு அந்தப் பாடல் வரிகளும் மெட்டும் ஒத்துப் போயிருந்ததால் பாடல் மிகக் கச்சிதமாக அமைந்துவிட்டது.

அதுதான், ‘ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?’ பாடல்!

பாடலைப் பாடிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய டி.எம்.எஸ்ஸுக்குப் பேரதிர்ச்சி! உடல்நிலை சரியில்லாத மகன் உயிரை விட்டிருந்தான். துடிதுடித்துப் போனார் டி.எம்.எஸ். ஆற்றாது அழுது தீர்த்தார்.அத்தனை பேராலும் பாராட்டப்பட்ட அந்தப் பாடல், அவர் வரையில் ஒரு மீளாத் துயரத்தின் நினைவுச் சின்னமாக ஆகிவிட்டது. ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடல் டி.எம்.எஸ். மனத்தின் சோகத்தைக் கிளறும் பாடலாகிவிட்டது. எனவே, அந்தப் பாடலை அவர் அறவே வெறுத்தார்.
எந்த மேடையிலும் அதைப் பாடுவதில்லை என்று தவிர்த்தார். எந்தக் கச்சேரியில் எத்தனைப் பெரிய பிரமுகர் கேட்டுக்கொண்டாலும், ‘மன்னிக்கவும். அதை நான் பாடமாட்டேன்’ என்று பிடிவாதமாக மறுத்துவிடுவார்.. அவ்வளவு ஏன்… வீட்டில் ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்போது ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடல் ஒலித்தால், சட்டென்று எழுந்து போய், ரேடியோவை அணைத்துவிடுவார். அந்த அளவுக்கு அவர் நெஞ்சில் காயம் ஏற்படுத்தியிருந்தது அந்தப் பாடல்.

பாகப் பிரிவினை படம் வெளியானது 1959-ஆம் ஆண்டு.

1960-ல்… நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞர் வாலியின் தாயார் தன்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பிச் சென்று, அந்த மூதாட்டியைச் சந்தித்தார் டி.எம்.எஸ். அந்தத் தாயார் டி.எம்.எஸ்ஸைப் பாடச் சொல்லிக் கேட்ட பாடல்… ‘ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?’

ஒருகணம் உள்ளுக்குள் அதிர்ந்து போனார் டி.எம்.எஸ். இருப்பினும் சுதாரித்துக்கொண்டார். ‘இங்கே இந்தத் தாய் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இவர் விரும்பிக் கேட்கும் பாடலைப் பாடி மகிழ்விப்பது என் கடமை!’ என்று முடிவெடுத்தார். தனது வைராக்கியத்தைக் கைவிட்டார். அதே உருக்கமும் துயரமும் இழையோடும் குரலில் ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடினார். எத்தனைப் பெரிய மனசு!

இந்த பேரன்பு மிக்கவரைத்தான் ஆணவம் பிடித்தவர், பிறரை மதிக்காதவர், திமிர் பிடித்தவர் என்று ஒரு கூட்டம் இன்னும் சொல்லிக்கொண்டு திரிகிறது!

gkrishna
27th September 2014, 09:56 PM
https://scontent-b-mxp.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10639667_560345930736400_9180315484223950914_n.jpg ?oh=9cae9cb6b9c622ae3ed8a94d283df6e8&oe=54BA6E20

இப்போது இந்த பத்திரிகை வருகிறதா ? என்று தெரியவில்லை

gkrishna
27th September 2014, 09:59 PM
https://scontent-a-mxp.xx.fbcdn.net/hphotos-frc3/v/t1.0-9/p240x240/564107_10151444264349478_672275_n.jpg?oh=1d3817b08 59eff3f34aa070e26d9f060&oe=54CCE95E

நெஞ்சத்தை கிள்ளாதே திரைபடத்தில் பணி புரிந்த போது புகை பட கலைஞர் stills ரவி கிளிக்கியது

gkrishna
27th September 2014, 10:02 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/v/t1.0-9/s851x315/960220_10152452175379478_32510647_n.jpg?oh=4d81098 32d1953f53ace9c91aa143864&oe=54C03929&__gda__=1422952914_89710cb5063f695f6e9f9f550df01b3 a

எம் ஜி வல்லபன் ,ராதிகா மற்றும் சக்கரவர்த்தி - தைபொங்கல் படபிடிப்பில்

gkrishna
27th September 2014, 10:06 PM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/1441549_10152396666989478_1068507477_n.jpg?oh=8943 7d20df77e4a5c2d5bd418b37c288&oe=54CE3855&__gda__=1421920650_693f0f227513434814c4328aad542d6 4

gkrishna
27th September 2014, 10:07 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn2/v/t1.0-9/555978_10152396667624478_917007358_n.jpg?oh=23f00f 9c0d9adc6e8875bcc5a4b393f7&oe=54838101&__gda__=1418018475_cee8d83e7dda743f1b129faf39261ce b

gkrishna
27th September 2014, 10:08 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/1463110_10152396668494478_709500384_n.jpg?oh=1b00d 4c84dcbb866d02991f9949fd01f&oe=54CC1A0D&__gda__=1422824582_f93a94b9ab98a6b0c1471f670a7b5ea 8

venkkiram
28th September 2014, 01:19 AM
80,90, 2010களின் சிறந்த படங்கள்(கோபால் தேர்வு)
நிறைய இடங்களில் எனது ரசனைகள் வேறுபட்டு நிற்கின்றன. உதாரணமாக 'ஆண்பாவம்' - இதுபோன்ற திரைக்கதை-நகைச்சுவை-இசை மூன்றும் சங்கமமான அற்புதமான படைப்பை கோபால் அவருடைய சிறந்த பத்தில் இடம்பெறச் செய்யல. பிறகு நேரம்வரும்போது இன்னும் பேசலாம்.

Richardsof
28th September 2014, 05:22 AM
இனிய நண்பர் கிருஷ்ணா சார்

மின்னல் வேக 2000 பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு மதுர கான திரியில் பல அரிய தகவல்கள் மற்றும் பாடல்கள் பதிவிட்டு பெருமை சேர்த்த உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் .மிகவும் குறுகிய நாட்களில் 333 பக்கங்களை கடந்து விரைவில் இந்த பாகம் நிறைவு பெற்று மூன்றாம் பாகம் தொடங்கவுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி

Richardsof
28th September 2014, 05:53 AM
1976ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''நீதிக்கு தலை வணங்கு ''

அருமையான பட தலைப்பு

இனிய பாடல்கள் ...குறிப்பாக தாலாட்டு பாடல் - இந்த பச்சை கிளிக்கொரு ....

தவறு செய்தவன் - தண்டனை அனுபவிக்க வேண்டும் -கருத்தினை உணர்த்திய படம் .

1976ல் வெளியான சிறந்த படங்களில் நீதிக்கு தலை வணங்கு படம் .- இது என்னை போன்ற பலருக்கு பிடித்த படம் .

Russellmai
28th September 2014, 07:12 AM
டியர் கிருஷ்ணாஜி சார்,
2000 பதிவுகளைக் கடந்தமைக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
கோபு.

Gopal.s
28th September 2014, 07:20 AM
congratulations krishna. Your lively contributions are greatly appreciated. We need your participation in Nadigarthilagam thread also. Instead of crowding your postings in one thread ,you can distribute in two threads as you have time,verve and concepts. Pl.Accept my request.

Gopal.s
28th September 2014, 07:22 AM
1976ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''நீதிக்கு தலை வணங்கு ''

அருமையான பட தலைப்பு

இனிய பாடல்கள் ...குறிப்பாக தாலாட்டு பாடல் - இந்த பச்சை கிளிக்கொரு ....

தவறு செய்தவன் - தண்டனை அனுபவிக்க வேண்டும் -கருத்தினை உணர்த்திய படம் .

1976ல் வெளியான சிறந்த படங்களில் நீதிக்கு தலை வணங்கு படம் .- இது என்னை போன்ற பலருக்கு பிடித்த படம் .

It is more or less in same line as needhi,panam pen pasam. Only artists are complete misfit and cant sit thru.Pachai kilikku padal was great but cant accept the artists involved in it.

Richardsof
28th September 2014, 08:22 AM
It is more or less in same line as needhi,panam pen pasam. Only artists are complete misfit and cant sit thru.Pachai kilikku padal was great but cant accept the artists involved in it.
it is your point of view. but my view about the artist is perfect. opinion is differs.

Russellbpw
28th September 2014, 08:31 AM
Songs like Ennamma Kannu Sowkyama of Mr. Bharath ...was inspired from this song !!

http://www.youtube.com/watch?v=ulNjLsIV3JU

vasudevan31355
28th September 2014, 08:43 AM
http://img-s3-01.mytextgraphics.com/sparklee/2013/11/23/df7c26ee60630b7067d36e800850cd0c.gif

congratulations krishna sir.

rajraj
28th September 2014, 08:48 AM
chinnakaNNan: Your next assignmeent : "konju". :) Here are some songs to start with:

----konjum mozhi sollum kiLiye
----konji konji pesi madhi mayakkum
----konjum mozhi peNgaLukku anjaa nenjam veNdumadi
----konjum kiLi aana peNNNai kooNdukkiLi aakkivittu
----konjum salangai kEttu nenjil
.....vaandhu vandhu konjuvadhen veNNilaave
.....kulungidum poovil ellaam.....konjidum anjugame

You have enough to fill a few pages. Have fun ! :)

Russellbpw
28th September 2014, 08:52 AM
Beautiful song !!!!! Anytime ! Anywhere ! Any circumstance !! Ultimate !!!



நடிகர் திலகம் டீஸிங் பாடல் 8

'நீ நாடாளும் ராணியாய் இருந்தால் எனக்கென்ன?... என்னை சிறையில் போட்டாலென்ன?... உன்னைப் பற்றி புகழ்ந்து நான் கவி புனைய மாட்டேன். வேண்டுமானால் இப்படிப் பாடுகிறேன்'

'ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த
நாகரக ராணி'

http://www.youtube.com/watch?v=j5Hf_toX9tg

Gopal.s
28th September 2014, 09:07 AM
வெங்கி, சி க,வாசு,ராகவேந்தர் ,

நன்றிகள் பல.

எனக்கு தமிழ் படங்களில் முழுக்க உடன்பாடு இல்லையென்றாலும் (விவரம் தெரிந்த 13 வயது முதல்) பெரும்பாலும் 95% தமிழ் படங்களை 40 கள் முதல்(மறு வெளியீடுகளில்) இன்று வரை பார்த்துள்ளேன்.90 கள் முதல் தமிழ் மன்ற மேடைகளில் நான் சொல்லி வருவது.இனி இளைய தலைமுறையிடம் தமிழ் வாழ்வது தமிழ் படங்கள்,பாடல்கள் இவற்றால் மட்டுமே சாத்தியம்.மொழி வாழ வியாபார தேவைகளால் மொழி ஜீவித்திருப்பது அவசியம். இந்திய படங்கள் எல்லாமே மோசம் என்றாலும் தமிழர்கள் தமிழ் படங்களை மட்டுமே காசு கொடுத்து பாருங்கள். தமிழ் பாடல்களையே கேளுங்கள்.(லகான்,த்ரீ idiots விதி விலக்குகள் தவிர)
அதனால் எங்கு இருந்தாலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை நான் சித்திரவதை பட்டாவது தமிழ் சேவையாக செய்துள்ளேன்.ஒரு முறை ஜீன்ஸ் பாடல்களை ஹிந்தியில் கேட்டு கொண்டிருந்த தமிழ் குடும்பத்தை (மும்பை) கேவலமாக திட்டியுள்ளேன்.அவர்கள் கிருஷ்ணா போல என்னுடன் டூ விட்டு விட்டனர்.

எனது தேர்வுகளில் பிடித்த நடிகர்கள்,இயக்குனர்கள்,இசையமைப்பாளர்கள் என்றெல்லாம் பாகு பாடின்றி, ஆர்ட் ,commercial என்றெல்லாம் பாராமல்,வெற்றி-தோல்வி என்று பகுக்காமல் , கீழ்கண்ட விதிகளில் செய்துள்ளேன்.(objective )

1)ஏதேனும் ஒரு வகையில் மிக தேர்ந்த ரசிகனான என்னை பாதித்து,திருப்தி படுத்தியிருக்க வேண்டும்.

2)ஏதோ ஒரு வகையில் சிறப்பாக உருவான முன்னோடி படமாக இருக்க வேண்டும்.

3)தமிழ் புத்தகங்கள் அடிப்படை ,புதுமை கதையமைப்பு,புதிய பார்வைகள்,தொழில் நுட்ப தேர்ச்சி கொண்ட படங்கள்.

4) Classic என்ற தேர்வில் நிலைப்பவை.ஜீவித்திருப்பவை .இன்றும் புதுமையாக சுவைப்பன .

5)புது முயற்சி,புதிய அலை படங்கள் ( வந்த போது ) ஆனால் pretentious என்று இல்லாத நன் முயற்சிகள்.

ஆனால் உங்களின் பங்களிப்பால் வரிசை மெருகேறும். ஆனால் காதலிக்க நேரமில்லை ,புதிய பறவை அறுபதுகளில் வந்த பூமியில் ஆண் பாவத்தை 80 களில் சிறந்த பத்தாக்குவது மன்னிக்கவே பெரும் பாவமாகி விடும்.(ஆண் பெண் பேதமின்றி )ஆனால் ஆண் பாவத்தை 1986 இல் ஒன்றாக சேர்த்துதானே உள்ளேன்?

Gopal.s
28th September 2014, 09:10 AM
it is your point of view. but my view about the artist is perfect. opinion is differs.
:rotfl:

vasudevan31355
28th September 2014, 09:18 AM
கிருஷ்ணா சார்,

2000 முத்தான பதிவுகளை கடந்ததற்கு என் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

தங்கள் உழைப்பு மலைக்கவும், பிரம்மிக்கவும் வைக்கிறது. நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.

உங்கள் உண்மையான நேர்மையான சிரத்தையான பதிவுகளுக்கு என்றே இங்கே ரசிகர்கள் நிறைய. தகவல் களஞ்சியமாய் இந்தத் திரியில் திகழ்கிறீர்கள். வாழ்த்துக்கள். இது என் நெஞ்சின் அடித்தளத்திலிருந்து வரும் ஆழமான வார்த்தைகள்.

Gopal.s
28th September 2014, 09:39 AM
அடுத்து வருட வாரியாக என்னை மிக மிக கவர்ந்த அதிசய பாடல்கள் வரிசை.1957 முதல் 2000 வரை மட்டுமே.(M.S.V only after Karthik is back)

vasudevan31355
28th September 2014, 09:48 AM
கிருஷ்ணா சார்,

ராஜ காந்தம்
அங்கமுத்து
ரமாப்ரபா,
அம்முக்குட்டி புஷ்பமாலா
காந்திமதி
பிந்துகோஷ்
சில படங்களில் சைலஸ்ரீ
ஹலம் (கடவுள் மாமா படத்தில் காமெடி ரோல்)
'அச்சச்சோ' சித்ரா (நான் அவனில்லை இறுதிக் காட்சியில் பின்னி எடுப்பார்)
விஜயசந்திரகா (தேன் கிண்ணம் போன்ற சில படங்களில்)

என்று நகைச்சுவை நடிகைகள் பட்டியல் நீளுமே!

chinnakkannan
28th September 2014, 10:23 AM
குட் மார்னிங்க் ஆல்..

முதற்கண் கிருஷ்ணா சாருக்கு இரண்டாயிரம் போஸ்ட்டிற்கு ஒரு ஓ+ வாழ்த்துக்கள்+ நன்றிகள்.. ம்ம் நடத்துங்க நடத்துங்க..இன்னும் எழுதுங்க..இந்த மற்றவர்களின் எழுத்துக்களை ப் பதிவிடுவது சுவாரஸ்யமாய்த் தான் இருக்கிறது..அப்பப்ப கொஞ்சம் சொந்த சரக்கையும் கொடுங்க கிருஷ்ணா ஜி..உங்களால முடியும் இது சி.கவின் சி.ரெக்வஸ்ட்

ராஜ் ராஜ் சார் கொஞ்ச முயல்கிறேன்..:)

Richardsof
28th September 2014, 10:33 AM
CHENNAI - GEMINI STUDIO - OLDEN DAYS MEMORIES- RECOLLECT

http://i57.tinypic.com/9uruyx.jpg

Richardsof
28th September 2014, 10:36 AM
BIG FLOOR

http://i61.tinypic.com/29lepax.jpg

Richardsof
28th September 2014, 10:37 AM
MAKE UP ROOM
http://i58.tinypic.com/2aifshw.jpg

Richardsof
28th September 2014, 10:39 AM
CAMERA TEST
http://i61.tinypic.com/1zvxxz5.jpg

Richardsof
28th September 2014, 10:39 AM
MUSICAL TROOP
http://i58.tinypic.com/239qf6.jpg

Richardsof
28th September 2014, 10:40 AM
http://i61.tinypic.com/20ft9q9.jpg

Richardsof
28th September 2014, 10:44 AM
http://i59.tinypic.com/kdrhxd.jpg

vasudevan31355
28th September 2014, 10:45 AM
இன்றைய ஸ்பெஷல் (81)

இன்றைய ஸ்பெஷலை 'சொல்லத்தான் நினைக்கிறேன்'. ஓ! சொல்லி விட்டேனா?

http://i.ytimg.com/vi/za5l0dexNgA/0.jpg

வயதான பூர்ணம் விஸ்வநாதன், அவர் இளம் மனைவி ஜெயசுதா திருமண வைபவத்தில் 'பிளே பாய்' கமல் கல்யாணத்தைக் கிண்டல் செய்து ஆடிப்பாட, அதற்கு கோண வாய் ஜெயச்த்ரா (ஜெயச்த்ரா ரசிகர்கள் மன்னிக்க) கல்யாணம் பற்றிப் புகழ்ந்து பாடி அவனுக்கு பதிலடி கொடுக்க, நமக்குக் கிடைத்தது அற்புதமான 'மெல்லிசை மன்னரி'ன் அருமையான பாடல் மற்றும் கமலின் உற்சாகமான ஆடல்.

உடம்பை வில்லாக வளைத்து ஆடும் கமல், அலட்சிய நடிப்பில் அசத்தும் ஜெயசித்ரா, கமலை 'ஜொள்' விட்டுப் பார்க்கும் பூர்ணம் மனைவி ஜெயசுதா என்று எல்லாமே அசத்தல்.

அதைவிட அசத்தல் பாலாவின் இளமை துள்ளும் குறும்பு கொப்பளிக்கும் குதூகலக் குரல்.

அதைவிடவும் அசத்தல் படு லட்சியமாக ஆங்கில வார்த்தைகளுடன் கலந்து இந்தப் பாடலைப் பாடும் என் ராட்சஸி.

அருமையான இசைப் பின்னணி. அட்டகாசமான காட்சியமைப்பு கதையை ஒட்டி. பாடல் மகா இனிமை.

'சொல்லத்தான் நினைக்கிறேன்' படப் பாடல். பாலச்சந்தரின் அருமையான இயக்கத்தில்.

https://i.ytimg.com/vi/Bd3j1yeOOYc/mqdefault.jpg

இனி பாடலின் வரிகள்.

oh, marriage marriage marriage
take it easy
why equal as so crazy

கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே

கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
ஆஹ் வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
take it easy

you teenage teenage teenage
don't be silly
sing about it nicely

கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
ஹ... வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
don't be crazy

take it easy

கோவில் காளை போலே திரிந்தால்
கல்யாணம் புரியாது
அது காவல் தாண்டி மேயும்
அங்கே கால்கட்டு கிடையாது

கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
don't be crazy

நாள்தோறும் நாம் காணும்
கல்யாணம் என்பது இந்நாளில்
தெருவோரம் தீர்மானம் செய்வது

நாள்தோறும் நாம் காணும்
கல்யாணம் என்பது இந்நாளில்
தெருவோரம் தீர்மானம் செய்வது

now a days you know
marriages are made in street corner ஹ ஹா

foolish! you don't know
marriages are made in heaven.. nnu :)

தெய்வம் சொல்லும் தீர்ப்பைக் கொண்டே திருமணம் முடிகிறது
அதன் இச்சைப்படியே சொர்க்கம் தனிலே நிச்சயம் ஆகிறது
தெய்வம் சொல்லும் தீர்ப்பைக் கொண்டே திருமணம் முடிகிறது
அதன் இச்சைப்படியே சொர்க்கம் தனிலே நிச்சயம் ஆகிறது

கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
don't be crazy

ஹே.. ஹேஹேஹே...
யா... யாயாயாயா...

அம்மாடி கல்யாணம்
ஆண்களுக்கோர் சிறைச்சாலை
பெண்டாட்டி பிள்ளைகள்
உண்டாக்கும் தொழிற்சாலை

marriage! don't dare

மாலைகள் சூடும் மணவறைக்
கோலம் மங்கையின் லட்சியமே
அதைக் கேலிகள் செய்யும் வாலிபர்
பேச்சு எங்களுக்கலட்சியமே
we don'r care

கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு ஹா ஹா
அதில் வேறென்ன இருக்கு ஹா ஹா

take it easy
don't be crazy

ஹா

take it easy
don't be crazy


http://www.youtube.com/watch?v=KX7g6U1Khag&feature=player_detailpage

Richardsof
28th September 2014, 10:45 AM
http://i57.tinypic.com/2q325pz.jpg

vasudevan31355
28th September 2014, 10:55 AM
பாடகர் திலகம் குரலில் 'நீ என்ன கண்ணனா நான் என்ன கம்சனா'
நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பும் டி எம் எஸ் அவர்களின் கண்ணீர் குரலும் சேர்ந்து ரசிக்க வைக்கும் பாடல்



krishna sir, orijinal song. Thalaivar... waaav....great.


http://www.youtube.com/watch?v=ssRwuA-17rM&feature=player_detailpage

vasudevan31355
28th September 2014, 11:02 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 11

தனது ஜோடியுடன் ராக்காம்மாவை ராகிங் செய்து 'ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே' என்று ரெண்டையும் கட்டி மேய்க்க தயாராகும் மூக்கையாத் தேவன். ராக்காம்மாவின் பல்லாக்கு நெளிப்பில் நெஞ்சு குலுங்கும் எங்கள் மூக்கையாத் தேவன்.

'அடி என்னடி ராக்கம்மா'


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yOoguw_wQ7Y

தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்ட பாட்டு.

vasudevan31355
28th September 2014, 11:14 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 12

அதே மூக்கையன் ஹிப்பி முகேஷாக தன்னடன் வாழப் பிடிக்காத மனைவியைத் திருத்த.

'என் பேர் முகேஷ்... நான் லண்டன்ல இருந்து வந்திருக்கேண்டி என் ஜின்ஜின்னாக்கடி'

ஹிப்பி கிராப்புடன் கிடார் வைத்து கலாட்டா பண்ணி,

'நல்வாழ்த்து நான் சொல்லுவேன்' பாடி,

கல்பனாவை இல்லை இல்லை கல்புவைக் கலகலக்க வைத்த கண்ணிய, தமிழ்ப் பண்பாடு காத்த கிராமத்தான்.

"புருஷன் லண்டனுக்குப் போய் ரெண்டு வருஷத்துக்கு மேல ஆவுது. இங்க இந்த அம்மா கர்ப்பமாக இருக்காங்க. அதெப்படி?'

எப்படி? (கோரஸ்)

நக்கல் நையாண்டி நடிகர் திலகம்.

'ஆஹாஹா! 1,2,3,4 பதில் பதில் பதில்'

அதுதான் மானம்
அதுதான் நடிகர் திலகம்


http://www.youtube.com/watch?v=HkXXY_m6EIY&feature=player_detailpage

vasudevan31355
28th September 2014, 11:25 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 13

'ஹோ லிட்டில் பிளவர்'

ஆஹா! கனியக் கனிய வளர்ந்த பருவமே! (ராஜஸ்ரீயின் முடியைக் கொத்தாகப் பிடித்து)
கருத்த விழியில் மிரட்டும் உருவமே
உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே'

என்று தன் உருவத்தையே கிண்டலடித்துக் கொண்டு (உண்மையில்லாத போதும்) காதலியையும் கிண்டல் அடித்த எங்கள் மன வானில் நிறைந்த 'நீல வான' நாயகன்


http://www.youtube.com/watch?v=sJ9HKFehHYw&feature=player_detailpage

Gopal.s
28th September 2014, 12:03 PM
Superb ESVEE .Enjoyable. Thanks.

Gopal.s
28th September 2014, 12:04 PM
Vasu,

Teasing songs!!!! Wah!!! Deserve to be in NT Thread. Can I use it?

gkrishna
28th September 2014, 12:37 PM
எல்லோருக்கும் நன்றியுடன் கூடிய காலை மற்றும் மதிய வணக்கம்

உண்மையில் 2000 பதிவு என்பது நான் கவனத்தில் கொள்ளவே இல்லை .
நேற்று இரவு வாசு சார் உடன் நாட்டு நடப்பு மற்றும் நேற்றைய ஸ்பெஷல் பேசி விட்டு திரு stills ரவி அவர்களின் சில புகைப்படங்கள் கிடைத்தன
அதை பதிவிட்டு விட்டு இன்று காலை சில சொந்த அலுவல் காரணமாக நமது திரிக்கு வர முடியவில்லை. வந்து பார்த்தல் தான் தெரிகிறது 2000 பதிவுகள் . வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் சொல்லி கொள்கிறேன்.

நண்பர் கோபால்
நிச்சயம் நடிகர் திலகம் திரியின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த ஓத்துஉழைப்பு நல்குவேன்.

gkrishna
28th September 2014, 12:43 PM
வாசு சார்

கலைச்செல்விக்கு நல்வாழ்த்து சொல்லி இருக்கிறீர்கள்

கல்பனா - 'நான் லண்டன் ல படிச்சவ '

தலை(நம்ம) - லண்டன் வாட் இஸ் லண்டன் ? culture ஆர்ட் civilization இன் தி நேம் of civilization யு ஆர் going backward நாட் forward
என்னம்மா கண்ணு அசந்து போய் நிக்கற நானும் நாலு எழுத்து படிச்சவன் தான் . நாம் படிச்சது எல்லாமே நம்ம நாட்டோட கலாசாரத்தை காப்பற்ற தான்

gkrishna
28th September 2014, 12:48 PM
இன்றைய ஸ்பெஷல்
சொல்லத்தான் நினைக்கிறன்
சொல்லாமல் தவிக்கிறேன்
உங்கள் பதிவு சுகமானது
பாடல் சுகமானது

காரை பற்றி மட்டும் தெரிந்த பூரணத்திற்கு அதை ஓட்டறது எப்படின்னு தெரியலை - ஒரு நல்ல டயலாக் ஒன்னு வரும் படத்தில்
கமல் வில்லனாக அறிமுகம். ஏற்கனேவே அரங்கேற்றம் படத்தில் பாதி வில்லன் .

gkrishna
28th September 2014, 12:49 PM
http://www.youtube.com/watch?v=Aax0cTRUU8M

காதல் சுகமானது
ஸ்னேஹா ,ரோஜாரமணி சன் தருண் ஹீரோ
தெலுகு டப்பிங் என்று நினைவு

சொல்லத்தான் நினைக்கிறன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது டொ டொ டயங்க்

ஸ்னேஹா குரங்கு மாதிரி டான்ஸ் ஆடுவாங்க .நல்ல சிரித்த முகம்
'சரவணா ஸ்டோர்ஸ்' விளம்பரத்தில் நிறைய ஆடி பார்த்த நினைவு

vasudevan31355
28th September 2014, 01:10 PM
Vasu,

Teasing songs!!!! Wah!!! Deserve to be in NT Thread. Can I use it?

தாரளமாக கோ.

vasudevan31355
28th September 2014, 01:13 PM
1974-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஹாத் கி சஃபய்' என்ற படத்தில் இடம் பெற்ற மிக மிக பிரபலமான ஒரு பாடல். வினோத் கண்ணா, ரந்தீர்கபூர், ஹேமாமாலினி, சிமி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இசை கல்யாண்ஜி ஆனந்த்ஜி இரட்டையர்கள்.

http://www.thehindu.com/multimedia/dynamic/01417/05DFR_1_1417269g.jpg

இப்படத்தில் வினோத் கன்னாவிற்கும், சிமி கர்வாலுக்கும் அற்புதமான டூயட் ஒன்று உண்டு. 'வாதா கரு லே சாஜ்னா' என்று தொடங்கும் இப்பாடலின் இனிமையையும், இசையமைப்பையும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. முகமது ரஃபியும், லதாஜியும் இப்பாடலில் புரியும் விந்தைகளை எப்படி புகழ்வது?

பாடலின் இடையே ஒலிக்கும் கிடாரின் இனிமையை நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீங்களும் கேளுங்கள்.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=z9IqyrdZ0Yo

vasudevan31355
28th September 2014, 01:15 PM
அடுத்து மிகவும் புகழ் பெற்ற 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' படத்திலிருந்து ஒரு சூப்பர் டூப்பர் பாடல். 1971-ஆம் ஆண்டுகளில் ஹிப்பிஸ் ஸ்டைல் உலகமெங்கும் தலை விரித்தாடியது. ஆண்கள் பெண்கள் போல கூந்தல் வளர்த்து கழுத்தில் மாலைகள் அணிந்து கொண்டு நீண்ட பெல்பாட்டம் அல்லது பைஜாமா பனியன் சகிதம் சிகரெட், கஞ்சா புகைத்துக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் ஒன்றாக பாடி ஆடிக் கொண்டு, அதுவும் அவர்களது தாரக மந்திரம் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' சுலோகத்தை உச்சரித்துக் கொண்டு தன்னை மறந்த நிலையில் போதைக்கு அடிமையாகி நாடோடி போல ஆங்காங்கே சுற்றித் திரியும் ஹிப்பியிசம் உலகையே குலுங்க வைத்தது. அதைத் தழுவி இந்தியின் ஸ்டைல் மன்னன் தேவ் ஆனந்த் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற படத்தை எடுத்து மாபெரும் வெற்றி கண்டார். இந்தித் திரை உலகையே புரட்டிப் போட்ட இப்படத்தில் தேவ் ஆனந்துடன் ஜீனத் அமன், மும்தாஜ் இணைந்து நடித்திருந்தனர். சிறு வயதில் காணாமல் போன அன்புத் தங்கை ஹிப்பி கூட்டத்தில் சேர்ந்து வளர்கிறாள். போதைகளுக்கு அடிமையாகி மனம் போன போக்கில் சுற்றுகிறாள். பருவ வயது அடைந்த அவளைத் தேடி அண்ணன் புறப்பட்டு அவளை கண்டு பிடித்து அவள் வாழ்வை சீர்திருத்தி அவளை நல்வழிப்படுத்துகிறான். இதுதான் கதை. தேவ் ஆனந்த் தனக்கே உரித்தான ஸ்டைலில் பின்னி எடுத்திருந்தார். ஜீனத் ஹிப்பி பெண்ணாகவே வாழ்ந்து காட்டினார். பாடல்கள் மிக மிக பிரசித்தம்.

ஜீனத் அமன் படத்தில் ஹிப்பிகளுடன் சேர்ந்து பாடுவதாக வரும் 'தம்மரே தம்' பாடல் அதகளம் செய்தது. இப்பாடலை முணுமுணுக்காதவர்களே அப்போது இல்லை எனலாம். ஆர்.டி.பரமன் இசையில் பாடல்கள் பட்டை கிளப்பின. இப்பாடலை ஆஷா போன்ஸ்லேவும், நம்மூர் உஷா உதூப்பும் இணைந்து எங்கேயோ கொண்டு சென்று விட்டனர். எப்போது கேட்டாலும் தாளம் போட்டு நம்மை இன்ப உலகத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல். பாருங்கள்.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ddGjV51Edok

gkrishna
28th September 2014, 01:18 PM
gopal - அவர்கள் கிருஷ்ணா போல என்னுடன் டூ விட்டு விட்டனர்.

கோபால்
நீங்கள் என்றும் என் நண்பர்
நிச்சயமாக உங்களுடன் என்றும் சேக்கா தான் :)
டூ கிடையாது

உனக்காக நான்

http://www.youtube.com/watch?v=GQvBncn1aq4

gkrishna
28th September 2014, 01:25 PM
நடிகன் இயக்குனரால் ஆட்டி வைக்கப்படும் பொம்மையல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்தவர் தேவ் ஆனந்த். அவரே ஒரு இயக்குனர், தயாரிப்பாளர், கதைவசனகர்த்தா, முகது ரபிக்கே பின்னணி பாடிய பாடகர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவரது சாதனை ஒளிவீசுகிறது.

தேவ் ஆனந்த் படங்களில் முக்கியமான படம் கைட். எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் புகழ் பெற்ற நாவல்தான் இது. 1965 ம் ஆண்டு இது வெளியானது. ராஜூ என்ற சுற்றுலா வழிகாட்டியாக நடித்தார் தேவ். தொல்பொருள் ஆய்வாளரான மார்க்கோ தமது இளம் மனைவி ரோசியுடன்- (வகிதா ரஹ்மான்-) குகைகளை ஆய்வு செய்ய வருகிறார். கணவரின் பணிச்சுமை காரணமாக தனிமையில் தள்ளப்படும் ரோசி சுற்றுலா வழிகாட்டி ராஜூவுடன் நெருங்கிப் பழகுகிறாள். விலைமாதுவின் மகளான அவள் தனது நடன ஆர்வத்தைக் கூட பறிகொடுத்து, மார்க்கோவுடன் விரும்பாத ஒரு தாம்பத்ய வாழ்க்கையை வாழ்கிறாள்.ஒரு கட்டத்தில் மன அழுத்தம் தாங்காமல் அவள் தற்கொலைக்கு முயலும் போது, ராஜூ அவளை காப்பாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். ஆனால் ஊர் மக்களும் அவள் அம்மா, மாமா போன்ற உறவினர்களும் ரோசியை விலைமாது என்று கூறி வெறுப்பை உமிழ்கிறார்கள் எதிர்ப்புகளை மீறி ரோசி நடனக் கலையில் புகழ் பெற ராஜூ உதவுகிறான்.புகழால் ரோசி ராஜூவை புறக்கணிக்கிறாள். இதனால் மது, சூதுக்கு அடிமையாகிறான் ராஜூ. அவளது லட்சியம் நிறைவேறுகிறது. ஆனால் அதனால் அவள் தன்னை உயிராக மதித்தவரின் அன்பை கூட புரிந்துக் கொள்ளாமல் போய்விடுகிறாள். கணவன் மார்கோ ரோசியைத் தேடி வருகிறான். மார்கோ ரோசியுடன் இணைவதை விரும்பாத ராஜூ ரோசியின் கையெழுத்தை போலியாக போட்டு லாக்கரில் இருந்த ரோசியின் நகைகளை மீட்க மார்கோவுக்கு உதவுகிறான். ஆனால் பணத்துக்காக இதை அவன் செய்ததாக உண்மை அறிந்த பின் ரோசி அவனை வெறுக்கிறாள். மனம் உடைந்த ராஜூ ஒரு மோசடி வழக்கி்ல் சிக்கி, பணத்தை கையாடல் செய்த குற்றத்தை சுமந்து 2 ஆண்டுகளுக்கு சிறை செல்கிறான். சிறையில் இருந்து வெளியே வரும் ராஜூ மனநிம்மதி நாடி துறவு கொள்கிறான். தற்செயலாக திருமணமே விரும்பாத பெண்ணுக்கு புத்தி சொல்லி அதை அவள் ஏற்றதால் ,அவனிடம் மந்திர சக்திகள் இருப்பதாக கிராம மக்கள் எளிதில் நம்பிவிடுகிறார்கள். அவனைப் புோல ஒரு புனித ஆன்மா 12 நாள் சோறு தண்ணீர் இல்லாமல் உண்ணாவிரதம் இருந்தால் மழையே இல்லாத அந்த கிராமத்தில் மழை பெய்யும் என்று அவன்கூறிய குட்டிக் கதையையே தங்கள் நம்பிக்கையாக அவன் மீது திணிக்கிறார்கள். ராஜூ உண்ணாவிரதம் மேற்கொள்கிறான். அவனை வணங்க ஆயிரக்கணக்கானோர் அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து திரள்கின்றனர். தாய், காதலி,நண்பர்கள், மற்றும் ஊராரான் அன்பு, அணைப்பு எல்லாவற்றையும் இழந்து விட்ட ராஜூ ஒரு உயர்ந்த நோக்கத்துடன் இறைவன் மீது நம்பிக்கை வைத்து 12 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் வேளையில் தனது கடந்த கால வாழ்வை தியானம் செய்கிறான். கணவரைப் பிரிந்த ரோசி அவனுக்காக காத்திருக்கிறாள். வயதான தாயும் அவன் வருகையை எதி்ர்பார்த்திருக்கிறாள். காவியைத் துறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பலாமா என்றும் யோசிக்கிறான். தனது பாவங்கள் தீர புனிதமான காரியத்தில் ஈடுபடுத்திய மக்களின் நம்பிக்கையை சிதறடிக்க அவன் விரும்பவில்லை.அவனுக்குள் தன்னலம் மறந்து பொதுநலத்தை நினைக்கும் புதிய மனிதன் பிறக்கிறான். ஆன்மீக விழிப்புணர்ச்சி பெற்ற ராஜூ முன்னர் இருந்த வழிகாட்டி ராஜூ என்றைக்கோ செத்துப் போய்விட்டதாக உணர்கிறான். 12வது நாளில் மழை பெய்கிறது. மக்களின் இறை நம்பிக்கை வீண் போகவில்லை. ஆனால் ராஜூவின் ஆன்மா உலக வாழ்க்கையின் போலித்தனத்தைப் பொறுக்க முடியால், உறவுகளின் பொய்மையை தாங்க முடியாமல், இறைவனுடன் கலந்து விடுகிறது.ஆன்மா இறப்பதில்லை. உடல் மட்டுமே இறக்கிறது என்ற பகவத் கீதையின் வாசகத்துடன் படம் முடிவடைகிறது.
அடுத்தவரின் மனைவியை காதலிப்பது, காதலியால் புறக்கணிக்கப்படுவது, குற்றத்தை ஏற்று சிறைக்கு செல்வது, பொதுநலன் கருதி உயிர்த்தியாகம் செய்வது என பல தளங்களில் படம் முன்னகர்ந்து செல்கிறது. அனைத்துப் பரிமாணங்களையும் தேவ் ஆனந்த் என்ற அற்புதமான நடிகர் பிரதிபலித்த விதம் தனது வாழ்க்கைப் பாதையின் வழி தெரியாத ஒரு வழிகாட்டியின் கையறு நிலையை கண்முன்னே நிறுத்தியது.

இப்படத்தின் கதாநாயகி வஹிதா ரஹ்மான். அந்நாள் கனவு தேவதை அவர்.அழகழகான பிளெயின் சேலைகள் அணிந்து ,சுதந்திர உணர்வும் கலை ஈடுபாடும் கொண்ட பெண்ணாக கணவனுக்கும் காதலனுக்கும் இடையில் அவர் போராடினார். பழங்குடியின பெண்ணை பலவந்தமாக மானபங்கம் செய்த கணவனின் அயோக்கியத்தனத்தையும் ஆழமான காதலால் வாடுகிற காதலனின் உள்ளத்தையும் புரிந்துக் கொண்டு கணவனை விட்டு வெளியேற துணிகிற பாத்திரம் அவருடையது.

இப்படத்தின் மற்றொரு பலம் எஸ்.டி.பர்மனின் இசை. முகமது ரபி, லதா மங்கேஷ்கர் ,கிஷோர் குமார் ஆகியோர் பாடிய பாடல்கள் யாவும் சூப்பர் ஹிட். எஸ்டி பர்மனை தாதா என்று மரியாதையாக அழைப்பார்கள். அவர் இந்தப் படத்தில் வஹான் கோன் ஹை தேரா என்று ஒரு பாட்டு பாடியிருப்பார். நீண்ட காலம் மனதுக்குள் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஆழமான குரலும் அர்த்தமுள்ள வரிகளும் நமது இருப்பையை குலைத்து, துயரத்தையும் நமது தனிமையையும் அடர்த்தியாக்கி விடுகிறது.உனக்கென இவ்வுலகில் யார் இருக்கிறார்கள் பயணியே....என்ற வரிகளுடன் மாயம் செய்தவர் பாடலாசிரியர் சைலேந்திரா. இவர்தான் ராஜ்கபூரின் பல படங்களுக்கும் பாடலாசிரியர்.

இப்படத்தின் இயக்குனர் தேவ் ஆனந்தின் சகோதரர் விஜய் ஆனந்த். இப்படத்திற்கு ஏராளமான விருதுகள் கிடைத்தன.இன்றும் இப்படம் நிகரற்ற காவியமாக விளங்குகிறது. பத்து சிறந்த இந்திப் படங்களைத் தேர்வு செய்தால் முதல் 5 இடத்தில் கட்டாயம் கைடு இருக்கும் . இருக்க வேண்டும்

http://jagdishk.dinstudio.com/files/guide.jpg

gkrishna
28th September 2014, 01:27 PM
http://www.youtube.com/watch?v=b543r0E8ciI

vasudevan31355
28th September 2014, 01:28 PM
'பெஹலே பெஹலே பியார் கி முலாகாத்தே யாத் ஹே.'

ஆர்.டிபர்மனின் அருமையான இசை அமர்க்களமாய் ஆரம்பிக்க, அழகான ஸ்டெப்ஸ் வைத்து நீது ஆட, ஆரம்பிக்க கம்பீர நெட்டை அமிதாப் ஸ்டைலாக உடன் இருக்க,

மேரா கியா நாம் ஹே?

அஞ்சானா...

தேரா கியா நாம் ஹே?

சுல்தானா...

என்று இருவரும் கொஞ்ச,

படம் முழுக்க இணைந்து இழைந்து வரும் அந்த கிடார் பீஸ் குருகிருக்க வைக்கும் நம்மை.

வெளிநாடுகளில் தயாரிக்கப் பட்ட படம்.

தி கிரேட் கேம்ப்ளர். ரபியும், ஆஷாவும் அமர்க்களம் செய்யும் பாடல்.

பாடலின் இனிமையில், இசை வெள்ளத்தில் மூழ்கத் தயாராகுங்கள்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=odFBlamoNEk

gkrishna
28th September 2014, 01:29 PM
http://www.youtube.com/watch?v=XmG7DKmnQnA

gkrishna
28th September 2014, 01:34 PM
खेल खेल में khel khel mein

1975 இல் வெளிவந்த ரவிடண்டன் இயக்கிய ரிஷி ,நீட்டு நடித்த வெற்றி சித்ரம்

ஆர் டீ பரமன் இசையில் பொளந்து கட்டிய பாடல்கள்
கல்லூரி மாணவர்கள் வாழ்கையை ஒட்டி அமைக்கப்பட்ட கதை
படத்திற்கு பலம் சேர்த அருணா இராணி ,இப்தகார்

vasudevan31355
28th September 2014, 01:34 PM
'கைட்' வஜ்ரம் போல நெஞ்சில் ஒட்டிய வைரம். எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது. அதே போல 'ஜ்வல் தீப்' படமும்.

கதைச் சுருக்கத்திற்கு நன்றி கிருஷ்ணா சார். அருமை.

gkrishna
28th September 2014, 01:36 PM
http://www.youtube.com/watch?v=XeKU6gAqF70

ek mai aur ek tho

gkrishna
28th September 2014, 01:38 PM
thanks vaasu sir

நம் வயதை ஒத்த அனைவரயும் கவர்ந்த படம் guide

gkrishna
28th September 2014, 01:40 PM
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/93/Iftekhar_Khan_%28d.1995%29.jpg/220px-Iftekhar_Khan_%28d.1995%29.jpg

இவர் நினைவு இருக்கிறதா வாசு சார்

உங்களுக்கு நினைவு தப்பினா தான் எல்லாம் மறக்கும் :)

vasudevan31355
28th September 2014, 01:40 PM
நீட்டுசிங், ரிஷிகபூர்... 'குல்லம் குல்லா பியார் கரேங்கே ஹம் தோனோ '... பிஸ்.....ஸ். நீது சிங் டிரெஸ் சூப்பரோ சூப்பர். அவருக்கு மட்டுமே சூட்டாகும்.


http://www.youtube.com/watch?v=a4hfuFI2xWY&feature=player_detailpage

gkrishna
28th September 2014, 01:43 PM
போடாத வேஷம் கிடையாது
அப்பா ,மாமா,போலீஸ் ஆபீசர்,ஜட்ஜ்,பிரின்சிபால் ,போலீஸ் கமிசினர்
இப்படி பல வேடங்களில் கலந்து கட்டுவார்
வாய்ஸ் கொஞ்சம் கர கர னு இருக்கும் .ஆனால் அது தான் அவர் பலம்

உங்கள் பதிவில் தான் இவர் பெயர் வர வேண்டும்

vasudevan31355
28th September 2014, 01:49 PM
இந்திப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோலா கூப்பிடு Iftekhar ஐ :)

Iftekhar as inspector in Don (1978)

http://3.bp.blogspot.com/-yNTe3Q1QVpE/UCCgAYn73FI/AAAAAAAACQA/G-LzZghN9j4/s1600/4.jpg

vasudevan31355
28th September 2014, 01:51 PM
போடாத வேஷம் கிடையாது
அப்பா ,மாமா,போலீஸ் ஆபீசர்,ஜட்ஜ்,பிரின்சிபால் ,போலீஸ் கமிசினர்
இப்படி பல வேடங்களில் கலந்து கட்டுவார்
வாய்ஸ் கொஞ்சம் கர கர னு இருக்கும் .ஆனால் அது தான் அவர் பலம்

உங்கள் பதிவில் தான் இவர் பெயர் வர வேண்டும்

தமிழில்தான் நீங்கள் போட்டு விட்டீர்களே இப்தகார் என்று. சரிதான்.

gkrishna
28th September 2014, 01:55 PM
அருமை வாசு சார்
இன்சாப் கா தராசு தமிழ் இல் நியாயம் என்று நினைவு
சிமி,இப்தேகார் நடித்து இருப்பார்கள்
செம ஓட்டம்

vasudevan31355
28th September 2014, 02:00 PM
முழுப் பெயர் சய்யதன இப்தகார் அகமத் ஷெரிப். நல்ல ஓவியரும் கூட. இவருக்கு சல்மா என்றொரு மகளும் உண்டு.

http://3.bp.blogspot.com/-zMSC3AYZPOs/Ua4hn3Xl6YI/AAAAAAAABhM/fkrVTJAa7oc/s1600/DSCN0051.jpg

http://1.bp.blogspot.com/-vkm5fmUfFJU/Ua4jan-ExjI/AAAAAAAABh0/nFkBGgnGTyA/s1600/DSCN0062.jpg

http://3.bp.blogspot.com/-5uZ9hWPuMx4/Ua4kdWG_25I/AAAAAAAABiU/x4cWEHiMffk/s1600/ittefaq.jpg

http://2.bp.blogspot.com/-r10XMKA5Qqk/Ua4l-mcB-UI/AAAAAAAABjA/zT8h-Nhty80/s1600/DSCN0056.jpg

இப்தகார் வரைந்த ஓவியம்.

http://3.bp.blogspot.com/-noRHjIW5XKA/Ua7k6SNq3hI/AAAAAAAABj4/6vBu-ngJRCY/s1600/DSCN0075.jpg

சல்மா

http://1.bp.blogspot.com/-teF__oCm6wg/Ua4oTRpndCI/AAAAAAAABjg/lw8BN2ZWBwA/s1600/salma+ji.jpg

gkrishna
28th September 2014, 02:01 PM
http://i169.photobucket.com/albums/u230/ppcccaps/fakira8.jpg

in movie fakira

gkrishna
28th September 2014, 02:02 PM
அருமை வாசு சார்

gkrishna
28th September 2014, 02:03 PM
http://memsaabstory.files.wordpress.com/2008/10/professor_iftekhar.jpg

iftekhar in movie professor 1962

vasudevan31355
28th September 2014, 02:04 PM
http://cineplot.com/encyclopedia/wp-content/uploads/2012/02/iftekhar.jpg

http://cineplot.com/wp-content/uploads/2012/02/iftekhar-chess.jpg

gkrishna
28th September 2014, 02:05 PM
http://2.bp.blogspot.com/_YQSZcpg4rHg/TJ3ffFG-l4I/AAAAAAAAF8w/GLmi5bkrIb4/s320/Iftehkar.JPG

Jal Bin Machhli Nritya Bin Bijli 1971

vasudevan31355
28th September 2014, 02:06 PM
என்ன கொடுமை இது கிருஷ்ணா சார்! ராஜ்பாபரை?......

https://indiancine.ma/UTO/256p.jpg

vasudevan31355
28th September 2014, 02:09 PM
அழகான ஆச்சி

http://3.bp.blogspot.com/-Tec7d2_EVtQ/UAP3kSHdaQI/AAAAAAAAAcI/zrmmj17LsYA/s1600/manorama+old+picture.jpg

gkrishna
28th September 2014, 02:10 PM
http://3.bp.blogspot.com/_YQSZcpg4rHg/SzlVdF__2oI/AAAAAAAADrA/fQIGEkCBNDk/s320/Padmini+Kolhapure.JPG

பத்மினி கோலபுரி சிறு வயதில் ட்ரீம் கேர்ள் 1977 படத்தில்
ஆனால் ட்ரீம் கேர்ள் ஹேமா தான்
http://4.bp.blogspot.com/_YQSZcpg4rHg/SzlVcy2x1hI/AAAAAAAADq4/x0QP9qEA_qk/s320/Hema+Malini+dream+Girl+1977.JPG

vasudevan31355
28th September 2014, 02:10 PM
கிருஷ்ணா சார்!

போஜனம் ஆச்சா? வயிறு 'கப கப' ங்குதே!

gkrishna
28th September 2014, 02:13 PM
http://2.bp.blogspot.com/_YQSZcpg4rHg/Sxna5ohQjBI/AAAAAAAADio/qgkMTss3mCk/s400/Kahani+Kismet+Ki+1973.jpg

இந்த படம் தர்மேந்திராவுக்கு 1973 இல் சூப்பர் டுபர் ஹிட்

gkrishna
28th September 2014, 02:16 PM
கிருஷ்ணா சார்!

போஜனம் ஆச்சா? வயிறு 'கப கப' ங்குதே!

வாசு சார்
ஆமாம் வெங்காய சாம்பார் மணக்க மணக்க
உருளை கார பொரியல்
பொளந்து கட்டியாச்சு
[பிரா]மணாள் போஜன பிரியாள்

நீங்க முடிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கோ

chinnakkannan
28th September 2014, 02:30 PM
கொயந்த (நாந்தேன்) ரொம்ப வேலபாத்து களைச்சுட்டு லஞ்ச்டயத்துல வந்தா க்யா ஹோ ரஹா ஹை இதர்..ஒரே ஹை மயமா இருக்கு..ம்ம் எனக்கும் பசிக்குது..சாப்பிட்டுட்டு வர்றேன்.. தமிழ்ல பேசுங்கப்பா :) ம் எனக்கு கூப் சூரத் ரேகா நினைவு கூடவே லஷ்மிஆகயா (தமிழ் நினைவு!))

gkrishna
28th September 2014, 02:44 PM
kahaani kismat ki 1973
http://1.bp.blogspot.com/_YQSZcpg4rHg/SxnWllPXulI/AAAAAAAADg4/mTprcNxwMjw/s320/Slide65.JPG
http://4.bp.blogspot.com/_YQSZcpg4rHg/SxnRpmFauOI/AAAAAAAADfo/ssOvdbtlf38/s320/Dharmendra+Kahani+Kismat+Ki.JPGhttp://1.bp.blogspot.com/_YQSZcpg4rHg/SxnXs9Qy9SI/AAAAAAAADho/JkphIiF8lxY/s320/Slide83.JPGhttp://1.bp.blogspot.com/_YQSZcpg4rHg/Sxnc7BqxaTI/AAAAAAAADjI/pJKySVI610Q/s320/Dharmendra+Sexy.JPG
http://4.bp.blogspot.com/_YQSZcpg4rHg/SxnZYH5oKZI/AAAAAAAADiY/KVHucDzpluQ/s320/rekha+Kahani+Kismat+Ki.JPG
இளம் தர்மேந்திரா,அழகு புயல் ரேகா (காதல் மன்னன் செய்த நல்ல காரியங்களில் ஒன்று ரேகா மாதிரி பொன்னை (நல்லா கவனீங்க பெண்ணை அல்ல :)) பெற்றது ),யாதோன் கி பாரத் வில்லன் அஜித் ,அர்ஜுன் ஹிந்கோரணி ,ஜெயஸ்ரீ (டி) நடித்த படம்

குர்பானி புகழ் கல்யாண் ஜி ஆனந்த ஜி இசை . எல்லா பாடல்களும் ஹிட்
அப்பப்ப நல்ல பாடல்களை கொடுக்கும் இசை ஜோடி

கதை கொஞ்சம் மாசலா கலந்து இருக்கும் . தரம் வேலை கிடைக்காமல் ஒரு திருட்டு கேசில் ஜெயிலுக்கு சென்று விடுவார் . பிறகு வெளியில் வந்து நல்ல வாழ்கை வாழ முயற்ச்சி செய்யும் போது பணக்காரர் அஜித் உதவி செய்வார் .அவர் பொண்ணு ரேகா என்ன அழகு தெரியுமா இந்த படத்தில் செம cute . ரேகா தரம் காதல் ஆரம்பம் . ஒரு கட்டத்தில் தரம் ரேகாவை விட்டு பிரிய தனக்கு கான்செர் என்று சொல்வார் . இதற்கு நடுவில் வில்லன் அர்ஜுன் ஹிந்கோரணி தரம் ஐ ப்ளாக் மெயில் செய்வார் . முடிவு என்ன வெள்ளி திரையில் காண்க

vasudevan31355
28th September 2014, 02:47 PM
வாசு சார்
ஆமாம் வெங்காய சாம்பார் மணக்க மணக்க
உருளை கார பொரியல்
பொளந்து கட்டியாச்சு
[பிரா]மணாள் போஜன பிரியாள்

நீங்க முடிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கோ

கிருஷ்ணா சார்!

இதெல்லாம் நல்லதுக்கில்லே. இப்படியா வெறுப்பேத்தறது?

இங்க வெஜிடபள் மீல் மேக்கர் புலாவ், தயிர் வெங்காயப் பச்சடி, கொள்ளுரசம், தயிர், அப்பளம், மோர் மிளகாய்

'யாரடி நீ மோகினி' படம் பார்த்துகிட்டே ரசிச்சு சாப்பிட்டேன். ரகுவரன் கேரக்டரை ரொம்ப ரசிச்சு பார்த்தேன்.
எனக்குப் பிடித்த அருமையான படம். நயன், தனுஷ், மனோபாலா எல்லோரும் அருமையாகப் பண்ணியிருப்பார்கள். பாடல்கள் தேன். அதுவும் நயனின் அந்த பூஜா பூஜா அலறல் கலக்கலோ கலக்கல்.

chinnakkannan
28th September 2014, 02:50 PM
பார்த்தால் ரேகா மாதிரித் தெரியவில்லையே கிருஷ்ணா ஜி..கஹானி கிஸ்மத் கியில்..ஆனால் போட்டிருப்பது என்னவோ ரேகா என்று தான்..

ம்ம்..

கீழே உள்ளது tamil.culturalindia.net இல் இருந்து...


ரேகா அவர்கள், ஹிந்தித் திரையுலகில் வெற்றிபெற்ற நடிகைகளுள் ஒருவராகப் போற்றப்படுபவர். தமிழ் திரையுலகில் ‘காதல் மன்னன்’ என்று எல்லோராலும் போற்றப்பட்ட ‘ஜெமினி கணேசன்’ அவர்களின் மகளான பானுரேகா கணேசன் அவர்கள், திரையுலகில் ‘ரேகா’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 40 ஆண்டுகளில், 180 படங்களில் நடித்து, நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், ஒரு தேசிய விருதினையும் வென்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் நடித்து வரும் அவரின் வாழ்க்கை வரலாறு

அவர், தமிழில் புகழ்பெற்று விளங்கிய நடிகரான ‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகையான புஷ்பவள்ளிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் (அப்போது மதராஸ்) அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தையும், தாயும் நடிகர்களாக இருந்ததால், அவரும் அவர்கள் சென்ற வழியிலே செல்ல விரும்பினார்.

ஆரம்பகால வாழ்க்கை

அவரது இளமைப் பருவத்தில், அவரது தந்தை, அவரது தந்தைமையை ஒப்புக்கொள்ளாததாலும், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும், தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு, சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்தார். தமிழ் மற்றும் தெலுங்குப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், வீட்டில் தெலுங்குப் பேசியதால், அம்மொழியையே தாய்மொழியாகக் கொண்டார். அவர், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் வல்லமைப் பெற்றிருந்ததால், திரையுலகில் நுழைவதற்கு எளிதாக இருந்தது.

தொழில்

அவர், 1966ல், ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார். 1969ல், ‘கோவா தள்ளி சி.ஐ.டி 999’ என்ற கன்னடப் படத்திலும், அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

பின்னர் அவர், ‘ஸாவன் பாதோன்’ (1970), ‘டபுள் கிராஸ்’ (1972), ‘ராம்பூர் கா லக்ஷ்மன்’ (1972), ‘ஏக் பேச்சேரா’ (1972), ‘கோரா அவுர் காலா’ (1972), ‘தர்மா’ (1973), ‘கஹானி கிஸ்மத் கி’ (1973), ‘நமக் ஹராம்’ (1973), ‘பிரான் ஜாயே பர் வச்சன் நா ஜாயே’ (1974), ‘தரம் கரம்’ (1975), ‘தர்மாத்மா’ (1975), ‘ஆக்ரமன்’ (1975), ‘தோ அஞ்சானே’ (1976), ‘சந்தான்’ (1976), ‘கபீலா’ (1976), ‘ஆலாப்’ (1977), ‘கூன் பசினா’ (1977), ‘ஆப் கி காத்திர்’ (1977) ‘இம்மான் தரம்’ (1977), ‘கச்சா சோர்’ (1977), ‘கங்கா கி சௌவ்கந்த்’ (1978), ‘கர்’ (1978), ‘முகாதார் கா சிகந்தர்’ (1978), ‘ப்ரேம் பந்தன்’ (1979), ‘கர்தவ்யா’ (1979), ‘சுஹாக்’ (1979), ‘மிஸ்டர் நட்வர்லால்’ (1979), ‘ஜானி துஷ்மன்’ (1979), ‘ஆன்ச்சல்’ (1980), ‘ஜுடாய்’ (1980), ‘காலி காடா’ (1980), ‘ஜல் மஹால்’ (1980), ‘கூப்சூரத்’ (1980), ‘அக்ரீமென்ட்’ (1980), ‘கல்யூக்’ (1980), ‘சில்சிலா’ (1981), ‘உம்ராவ் ஜான்’ (1981), ‘பசீரா’ (1981), ‘ஏக் ஹை பூல்’ (1981), ‘விஜேதா’ (1982), ‘ஜீவன் தாரா’ (1982), ‘நிஷான்’ (1983),’ முஜே இன்சாப் சாஹியே’ (1983), ‘அகர் தும் ந ஹோதே’ (1983), ‘பிந்தியா சம்கேகி’ (1984), ‘உத்சவ்’ (1984), ‘ஃபாஸ்ளே’ (1985), ‘முசாஃபிர்’ (1986), ‘லாக்கெட்’ (1986), ‘பியார் கி ஜீத்’ (1987), ‘கூன் பாரி மாங்’ (1988), ‘இஜ்ஜாசத்’ (1988), ‘பீவி ஹோ தோ ஐசி’ (1988), ‘ப்ரஷ்டாச்சர்’ (1989), ‘மேரா பதி சிர்ஃப் மேரா ஹை’ (1990), ‘பூல் பனே அங்காரே’ (1991), ‘மேடம் எக்ஸ்’ (1994), ‘கிலாடியோன் கா கிலாடி’ (1996), ‘உடான்’ (1997), ‘ஆஸ்தா’ (1997), ‘காம சூத்ரா: எ டேல் ஆஃப் லவ்’ (1996), ‘புலாந்தி’ (2000), ‘சுபெய்தா’ (2001), ‘லஜ்ஜா’ (2001), ‘முஜே மேரி பிவி சே பச்சாவோ’ (2001), ‘தில் ஹை தும்ஹாரா’ (2002), ‘பூத்’ (2003), ‘கோயி … மில் கயா’ (2003), ‘பச்கே ரெஹ்னா ரே பாபா’ (2005), ‘க்ரிஷ்’ (2006), ‘குடியோன் கா ஹை ஜமானா’ (2006), ‘யாத்ரா’ (2007), ‘சடியான்’ (2010), மற்றும் ‘க்ரிஷ் 3’ (2013).

விருதுகளும், அங்கீகாரங்களும்

1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார்.
நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளை’ 1981ல் ‘கூப்சூரத்’ என்ற படத்திற்காகவும், 1989ல் ‘கூன் பாரி மாங்க்’ என்ற படத்திற்காகவும், 1997ல் ‘கிலாடியோன் கா கில்லாடி’ என்ற படத்திற்காகவும், 2003ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதும்’ வென்றார்.

சர்வதேச விருதுகளான ‘சாம்சங் திவா விருதை’ 2003லும், ‘இந்திய சினிமாவின் ஒப்பற்ற சாதனைக்கான விருதினை’ 2012லும் பெற்றார்.

2004ல் ‘கோயி மில் கயா’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் விருதினை வென்றார்.
இல்லற வாழ்க்கை

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, அதாவது 1990ல், அவர் தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார். அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் கழித்து, அவரது கணவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். தற்போது, ரேகா அவர்கள், மும்பையில் பாந்த்ராவிலுள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார்.

காலவரிசை

1954: ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1966: ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார்.

1969: ‘கோவா தள்ளி சி.ஐ.டி 999’ என்ற கன்னடப் படத்திலும், அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார்.

1990: தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார்.

1991: அவரது கணவர் மரணமடைந்தார்.

2004: ‘கோயி மில் கயா’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் விருதினை வென்றார்.

vasudevan31355
28th September 2014, 02:51 PM
இந்தாங்க என் பங்குக்கு.

http://india-films.ru/wp-content/uploads/2013/02/Istoriya.sudby_.1973.044.jpg

http://indian-film.info/wp-content/uploads/2013/04/Istoriya.sudby_.1973.050.jpg

http://india-films.ru/wp-content/uploads/2013/02/Istoriya.sudby_.1973.035.jpg

chinnakkannan
28th September 2014, 02:54 PM
இங்கே கோதுமை மோர் சாதம், கொத் மல்லிச் சட்னி, குகும்பர் என்னுடைய லஞ்ச்!


கிருஷ்ணா சார்!

இதெல்லாம் நல்லதுக்கில்லே. இப்படியா வெறுப்பேத்தறது?

.

gkrishna
28th September 2014, 02:56 PM
'Kab tak na dogi dil' -

ரேகா ஜெயஸ்ரீ டி மற்றும் தோழிகளுடன் ஆடும் டான்ஸ் பாடல்
ரேகாவுக்கு தோழிகள் மசாஜ் செய்யும் காட்சி உடன் பாடல் ஆரம்பம் ஆகும் ரேகா செம டான்ஸ் கூட ஜெயஸ்ரீ உடன் 'லெஸ்' உடான்ஸ்

www.youtube.com/watch?feature=player_embedded&v=zFDoBh0RI-Y

gkrishna
28th September 2014, 02:59 PM
ரேகா என்ன அழகு தெரியுமா இந்த படத்தில் சி கே சார
நானும் யாரடி நீ மோகனி பார்த்து கொண்டு இருக்கிறேன் வாசு சார்
நடுவில் பாஸ் என்ற பாஸ்கரன் ஆதித்ய காமெடி காட்சி

gkrishna
28th September 2014, 03:02 PM
சி கே சார்

ரேகா கதை பெரிய கதை
70 களில் ஒரு தடவை விஷம் குடிச்சு பிறகு அதை மறைக்க உப்புமா புளித்த உப்புமா சாப்பிட்டதால் வவுறு நோவு என்று உடான்ஸ் கதை எல்லாம் சொல்லி ஏகப்பட்ட ஹீரோக்களை காலி செய்த காலி பொண்ணு

வாசு சார்
நம்ம கொளந்தை சி கே சார் க்கு கொஞ்சம் அப்டேட் செய்யுமாறு வேண்டுகிறேன்

chinnakkannan
28th September 2014, 03:03 PM
பார்க்கணும் கிருஷ்ணாஜி..வித்யாசமா ஃபோட்டோஸ்ல இருக்காங்க..யாரடி நீ மோகினி நல்ல படம்.. நயன்,ரகுவரன் அப்புறம்தான் தனுஷ்..என்னடா ஏன் வாசுசார் நீங்க்ள்ளாம் பாக்கறீங்கன்னு பார்த்தா..அட ஆமா..பாலக்காட்டுபாட்டு ரீமிக்ஸா..அதானா..

chinnakkannan
28th September 2014, 03:06 PM
//ரேகா கதை பெரிய கதை // அச்சோ எனக்குத் தெரியாதே..என்ன என்ன.. எனக்குத் தெரிஞ்சதுல்லாம் மீண்டும் கோகிலால்லபாதி நடிச்சுட்டு எதுக்கோ கோபமோ கால்ஷீட் தீர்ந்துச்சோ தெரியாது மறுபடி மும்பை ரேகா போனதால தீபாவை வைத்து ரி ஷூட் பண்ணினாங்கன்னு கேள்வி..உண்மையா.

gkrishna
28th September 2014, 03:09 PM
வாசு சார் /சி கே சார்

சன் action தொலைக்காட்சி - சரத் குமார் -சூப்பர் குட் பிளம்ஸ் - கேப்டன்
ஜெயா மொவீஸ் ஆறில் இருந்து அறுபதை வரை

gkrishna
28th September 2014, 03:10 PM
//ரேகா கதை பெரிய கதை // அச்சோ எனக்குத் தெரியாதே..என்ன என்ன.. எனக்குத் தெரிஞ்சதுல்லாம் மீண்டும் கோகிலால்லபாதி நடிச்சுட்டு எதுக்கோ கோபமோ கால்ஷீட் தீர்ந்துச்சோ தெரியாது மறுபடி மும்பை ரேகா போனதால தீபாவை வைத்து ரி ஷூட் பண்ணினாங்கன்னு கேள்வி..உண்மையா.

மீண்டும் கோகிலா - ரேகா வின் நிழல் படம் ஒன்னு பொம்மையில் நல்ல நினைவு - தேடி கொண்டு இருக்கிறேன் . ப்ளாக் கலர் ராணி டிரஸ் .சூப்பர் லோ ஹிப்

gkrishna
28th September 2014, 03:11 PM
ஒரு வேளை வாசு சார் தேடி கொண்டு இருக்கிறாரோ தெரியலை
நீங்கள் எங்கையாவது பார்தீங்கனா எடுத்து போடுங்க

Richardsof
28th September 2014, 03:13 PM
ஆகாயம்

ஆனந்தம்

லட்டு....தா

கும்மாளம்

போதை --- ஆட்டம் --பாட்டம்

மயக்கம்

அரண்மனை

மெல்லிய காதல்

மோதல்

பிணக்கு

இணைப்பு

சுபம்


வாசு சார் / கிருஷ்ணா சார்

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .

சின்ன க்ளு

2991972

gkrishna
28th September 2014, 03:13 PM
மீண்டும் கோகிலா - மொக்கை சுதாகர் கூட ஒரு அருமையான் பாட்டு - பொன்னான மேனி - ஜேசுதாஸ் ஜானகி இணை குரல்களில் சூப்பர் பாட்டு இல்லையா சார்

gkrishna
28th September 2014, 03:17 PM
எஸ்வி சார்
செத்தோம் நாங்க
வாசு சார் ஏதாவது புரியுதா

chinnakkannan
28th September 2014, 03:32 PM
vasantha maaligai sv sir?

Richardsof
28th September 2014, 03:35 PM
vasantha maaligai sv sir?

chinnakannan sir declared and elected at vasantha maligai released on 29/9/1972. proceed.....

gkrishna
28th September 2014, 03:51 PM
chinnakannan sir declared and elected at vasantha maligai released on 29/9/1972. proceed.....

அருமை சி கே சார் /எஸ்வி சார்

20 மணி துளிகள் (நிமிஷம்) மண்டையை உடைத்து கொண்டேன்
சூப்பர் வினாடி வினா
இன்டர்நெட் connection வெரி வெரி slow

gkrishna
28th September 2014, 04:01 PM
http://3.bp.blogspot.com/-jTy7BPIte_o/TiL2uyOwxnI/AAAAAAAAChI/-v4C2HFmvug/s640/253410_10150328309224478_613614477_9901472_2088655 _n.jpg

johny shooting suhasini worked as Assistant camera (wo)man

gkrishna
28th September 2014, 04:03 PM
http://3.bp.blogspot.com/-DXcF3UyyHnE/TiL2y3EoakI/AAAAAAAAChM/iU9DcZA90KI/s640/255188_10150330134994478_613614477_9921212_7460973 _n.jpg

gkrishna
28th September 2014, 04:05 PM
http://4.bp.blogspot.com/-TCS1QDkg2hI/TiL3_h4TYtI/AAAAAAAACho/o_h1NpqVgZk/s1600/227583_10150312410709478_613614477_9750047_1734311 _n.jpg

gkrishna
28th September 2014, 04:12 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01456/cp12manivannan__cm_1456934g.jpg

அமைதிப்படை படபிடிப்பில் இளைமையான மணிவண்ணன்

gkrishna
28th September 2014, 04:16 PM
http://1.bp.blogspot.com/-gPROQP-7CW0/TiL3zM2CInI/AAAAAAAAChg/pYj6O9e40Gk/s640/180938_10150192177664478_613614477_8864005_7632613 _n.jpg

gkrishna
28th September 2014, 04:30 PM
எல்லா பள்ளி, கல்லூரி மேடைகள் மட்டுமல்ல, எல்லா தொலைக்காட்சி சான்ல்களின் போட்டியிலும் தவறாமல் பங்கேற்கும் ஒரு பாடல் ஆபாவாணன் (ஊமை விழிகள்) பாடியது. கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு ஏற்கனவே பிடித்த பாடலாக இது இருக்கும். வெளியில் வாராத இரண்டு பேர் திரை படத்தில் இசை சுனில் வர்மா (மனோஜ் கியான் இரட்டையரில் கியான் அவர்களின் குமரன் என்று நினைவு )

http://www.inbaminge.com/t/r/Rendu%20Per/Varan%20Varan.eng.html

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே

ரயிலு வண்டியிலே மெயிலு வண்டியிலே
பறந்து வராண்டா பாஞ்சு வராண்டா
காட்டு வழியிலே எதிர் மேட்டு வழியிலே
தீ மூட்ட வராண்டா கொடி நாட்ட வராண்டா

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே

ஏழு கடல தாண்டி
ஏழு கடல தாண்டி ஏழு மலைய தாண்டி
வருவான் பூச்சாண்டி
வருவான் பூச்சாண்டி வலைய விரிப்பாண்டி
மனசெல்லாம் தோண்டி பாடம் படிப்பாண்டி
மனசெ குடுப்பாண்டி சபதம் முடிப்பாண்டி

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே

கொல்லிமலை தாண்டி
கொல்லிமலை தாண்டி குடகு மலை தாண்டி
காத்தா வருவாண்டி
காத்தா வருவாண்டி கருப்பா வருவாண்டி
வேசம் கலைப்பாண்டி வெரதம் முடிப்பாண்டி
ஆரியக்கூத்தாடி காரியம் முடிப்பாண்டி

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே

gkrishna
28th September 2014, 04:42 PM
ஆபாவாணன் (ஊமை விழிகள்)

முதன் முதலில் இவர் தர விரும்பிய படம் ‘இரவுப்பாடகன்’ ஆனால் அது வெளிவரவே இல்லை. இதே போல் விஜயகாந்தை வைத்து இவர் தர நினைத்த மூங்கில் கோட்டையும் வெளிவரவே இல்லை. இறுதியாக இவர் தர நினைத்த ’இரண்டு பேர்’ திரைப்படமும் வெளிவராமலே போய்விட்டது. வித்தியாசமாகவே தர நினைத்தாலும் சில பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்ததால் பெரிய நட்டத்தினை அடைந்தார். இறுதியாக இவர் பங்களிப்பில் வெளி வந்தது கங்கா யமுனா சரசுவதி நெடுந்தொடரே. பாலச்சந்தரின் நாடகத்திற்குப் பின்பு, சன் டிவி நெடுந்தொடரில் காலோச்சிய காலத்தில் ராஜ் டிவியில் வந்து ஓரளவு வெற்றியடைந்த தொடரும் அது ஒன்றே! இவருடையது மட்டுமல்ல, ஒரு காலத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும் கூட ஏனோ இப்பொழுது இல்லாமலே போய்விட்டது. கொடுத்ததில் பாதி வெற்றிப்படங்கள், பாதி தோல்வியாக இருந்தாலும், தன் படங்களின் மூலம் ஏற்படுத்திய, அதிர்வுகளையோ, அதில் தொனித்த வித்தியாசங்களையோ, பிண்ணனியிலுள்ள திறமை கலந்த உழைப்பையோ எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது….

(இணையத்தில் திரட்டிய தகவல்கள்)

gkrishna
28th September 2014, 04:50 PM
இரவுப்பாடகன் - நண்பர் போகன் பகிர்ந்து கொண்டது -நெல்லை சீமையை சேர்ந்தவர்

எம்ஜியாரை இந்த சிறிய வாழ்க்கையில் இரண்டு முறை பார்த்திருக்கிறேன் என்பது இப்போது எண்ண வியப்பாக இருக்கிறது.ஒருமுறை ரத்னா தியேட்டர் எதிரில் இருந்த வளாகத்துக்கு அவர் வந்தபோது.இன்னொருதடவை சேர்மாதேவியில் அவர் மணிமுத்தாறு போவதற்கு வந்தபோது வழியில் ஒரு ரயில்வே கேட்டில்.அந்த சமயம் சரியாக ரயில்வே கேட் அடைக்கப்படும் என்று தெரிந்து நான் உட்பட ஒரு சிறிய கூட்டம் அவர் காருக்காகக் காத்திருந்தது.நினைத்தபடியே அவர் கார் வந்தது.ஆனால் கார் கண்ணாடி இறக்கப்படவே இல்லை.காவல் கூட்டம் ச்ச்ச்சூ ச்சூ என்று எங்களை விரட்டிக் கொண்டிருந்தது.என் பக்கத்தில் ஒரு பெண் ஒரு குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார்.குழந்தை அழுதுகொண்டே இருந்தது,ரயில் நீண்ட கூச்சலுடன் வந்து போய்விட்டது எம்ஜியார் மூஞ்சியைக் காண்பிக்கிறார் இல்லை.ரயில்வே கேட் திறக்கப்பட்டது. கூட்டம் முண்டியது.நெரிசல்.' அவருக்கு உடம்பு சரியில்லை போங்க போங்க'என்று யாரோ விரட்டினார்கள்.அவர்கள் லேசாகத் தள்ளியதில் அந்தப் பெண்மணி தடுமாறி விழப் போக குழந்தை மேலும் பெரிதாக அழுதது..முன்வண்டிகள் புறப்பட்டு எம்ஜியாரின் வண்டியும் புறப்படுகையில் சட்டென்று கண்ணாடி இறக்கப்பட்டு எம்ஜியாரின் சிவந்த கரம் நீண்டு அந்தக் குழந்தையின் முகத்தைத் தொட்டது.குழந்தை திகைத்து அழுகையை நிறுத்தியது.அதன் கையில் ஒரு நூறு ரூபாய்த் தாள்

என்னைத் தோள் மீது தூக்கிக் கொண்டிருந்த சித்தப்பா திரும்பி ''எம்ஜியார் அழுறதைப் பார்த்தேண்டா''என்றார் .''எம்ஜியார் அழுதார்!''

gkrishna
28th September 2014, 04:58 PM
உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையில் மறக்க முடியாத அனுபவம் உண்டா?

எம்.ஜி.ஆரின் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. நேரு, தாகூர் எழுதிய புத்தகங்களோடு எனது "கறுப்பு மலர்கள்' புத்தகத்தையும் வைத்திருந்தார். அதை என்னால் மறக்கமுடியாது. எனது புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு என்னை அழைத்து பாடல் எழுதச் சொன்னவர். எல்லாக் கவிஞர்கள் எழுதும் பாடல்களையும் அவர் பார்த்து சில திருத்தங்கள் செய்வார் என்று கூறுவார்கள். ஆனால் என்னுடைய பாடல்களை அவர் பார்த்துவிட்டு எம்.எஸ்.வி அண்ணனிடம் மெட்டு அமைக்கச் சொல்லுவார். "ஊருக்கு உழைப்பவன்' படத்தில் வரும் "இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்' என்ற என்னுடைய பாடலை எம்.எஸ்.வி ஏற்றுக்கொள்ள மறுத்தார். உடனே எம்.ஜி.ஆர் தலையிட்டு "காமராசன் எழுதியதை நீங்கள் மெட்டுப்போட வேண்டும்' என்று கட்டளையிட்டார். அதை இன்றும் என்னால் மறக்கவே முடியாது.

உங்கள் திரையுலகப் பயணம் எப்படி? யாரால் நடந்தது?

என்னுடைய திரையுலகப் பயணம் எம்.ஜி.ஆரால் தான் நடந்தது. அது எனது பாக்கியம். அதோடு ஆர்.எம். வீரப்பன் அண்ணன் பெயரையும் குறிப்பிடவேண்டும். எனது "கறுப்பு மலர்கள்' புத்தகத்தை எம்.ஜி.ஆரிடம் படிக்கக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு திடீரென்று ஒருநாள் பாடல் எழுதச் சொன்னார். "கனவுகளே, ஆயிரம் கனவுகளே' என்ற எனது முதல் பாடல் எம்.ஜி.ஆருக்கு எழுதினேன். அதேபோல அண்ணன் ஆர்.எம். வீரப்பன் சத்யா மூவிஸின் எல்லா படங்களிலும் எனக்கு பாடல் எழுத வாய்ப்பளித்தார். அதை என்னால் என்றும் மறக்கமுடியாது.

நீங்கள் எழுதிய திரைப்பாடல்களில் உங்கள் மனதை அதிகம் கவர்ந்த பாடல்கள் எவை?

"இரவு பாடகன் ஒருவன் வந்தான்' என்ற பாடலும், "போய்வா நதி அலையே' என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். வெள்ளை ரோஜாவில் "ஓ! மானே, மானே' என்ற பாடலும், "உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது' என்ற "தங்க ரங்கன்' படத்தில் வரும் பாடலும் மிகவும் பிடித்த பாடல்களாகும்.

கவிஞர் நா காமராசன் நக்கீரன் நேர்காணலில் ஒரு பகுதி

gkrishna
28th September 2014, 05:12 PM
கலியுக கண்ணன் என்ற திரைப்படம் 1974 இல் தேங்காய் ஸ்ரீனிவாசன் ,சௌகார் ஜானகி, நடித்து வெளிவந்த படம். படத்தில் தேங்காய் ஆரம்பத்தில் முதல் பாதியில் ஏழை சமையல் காரர் ஆகவும்,இரண்டாவது பாதியில் பெரும் பணக்கரார் ஆகவும் நடித்து இருப்பார்.ஓரளவு வெற்றியை பெற்றது . இதன் வெற்றியை தொடர்ந்து உடனே அதன் தொடர்ச்சியாக கரோட்டி கண்ணன் என்று ஒரு படம் எடுத்து தேங்காயை வைத்து கூத்து அடித்தனர். வீ குமார் இசை 1975 களில் வெளி வந்தது. ஒரு பாடல் பத்மப்ரியுடன் அவர் அடிக்கும் கொட்டம்


http://www.inbaminge.com/t/k/Karotti%20Kannan/welcome.vid.html#ytplayer

gkrishna
28th September 2014, 05:26 PM
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் சாருகேசி ராகதில் இடம் பெற்ற பல்வேறு திரைப்பட பாடல்களை இரண்டு தினங்களுக்கு முன் சக்கை சாறாக பிழிந்தோம் இன்று ஒரு பாடல் கிடைத்தது - இதை பற்றி அலசி விட்டோமா என்று நினைவு இல்லை

சாருகேசி ராகத்தில் P சுசீலா அம்மா பாடிய இந்தப் பாடல் மீண்டும் K V மகாதேவனின் இசையில் அவரது பாடல்கள் மனதை என்னவோ பண்ணுகிறது என்னும் கருத்திற்கு வலு சேர்கிறது. நளினமான பதிமினியின் நடன அசைவுகள் அற்புதம்.

திரைப் படம்: ராணி சம்யுக்தா (1962)
இசை: K.V. மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
ஹா ஹா ஹா
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என்
முகம் தேடி அசைந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என்
முகம் தேடி அசைந்திருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
இந்த தோகைக்கென்றே இதயம் திறந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

www.youtube.com/watch?v=L6yEmOHcZAc

gkrishna
28th September 2014, 05:51 PM
நன்றி சகோதரர் கானா பிரபா

சினிமா உலகில் அதிக வெளிச்சம் படாத இயக்குனர் சின்னத்திரையில் சாதித்துக் காட்டுவது உண்டு. இவ்வகையான இயக்குநர்களில் முன்னோடி இயக்குநர் என்று இயக்குனர் சுந்தர் கே.விஜயனைக் குறிப்பிடலாம். இவரின் தந்தை புகழ்பெற்ற இயக்குநர் கே.விஜயன். தயாரிப்பாளர் நடிகர் கே.பாலாஜியின் பிற்கால திரைப்படங்கள் பெரும்பாலும் கே.விஜயனின் இயக்கத்திலேயே இருப்பதுண்டு. தந்தை வழியில் தனயன் சுந்தர் கே.விஜயனும் "ரேவதி" என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

சுந்தர் கே.விஜயன் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படம் "என் அருகில் நீ இருந்தால்" அந்தப் படத்தின் பாடல்களைக் காட்சிகளைத் தவிர்த்து இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள். அருமையான இசைப் பெட்டகம் அது.

ரேவதி என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த படம் "வெளிச்சம்". இந்தப் படத்துக்கு இசை வழங்கிய மனோஜ் கியான் இரட்டையர்கள் அப்போது ஊமை விழிகள் திரைப்படத்தின் வாயிலாகப் பரவலாக அறிமுகமாகியிருந்தார்கள். இளையராஜா காலத்தில் சந்திரபோஸ் இற்கு அடுத்து அதிகம் அறியப்பட்ட இசையமைப்பளார்களாக எண்பதுகளின் இறுதியில் மனோஜ் கியான் இரட்டையர்களின் பங்களிப்பு சிறப்பானது. குறிப்பாக இவர்கள் இசையமைத்த "வெளிச்சம்" திரைப்படம் மற்றைய படங்களைப் போலப் பரவலாக அறியப்படாத படம் என்றாலும் என் பார்வையில் இந்தப் படத்துக்கு இவர்கள் தந்த இசை மற்றைய படங்களை விடத் தனித்துவமாக நிற்கும். குறிப்பாக இரண்டு பாடல்களில் ஒன்று "ஓ மை டியர் ஐ லவ் யூ" பாடலை டாக்டர் கல்யாண், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களில் கேட்டுப்பாருங்கள் ஒரு பாடலில் இரண்டு விதமான தளங்களில் பயணப்படும் முக்கோணக் காதலை அழகாகக் கொடுத்திருக்கும்.

http://songs.shakthi.fm/ta/Velicham_www.shakthi.fm/shakthi.FM%20%20-%20%20My%20Dear.mp3

gkrishna
28th September 2014, 05:54 PM
வெளிச்சம் படத்தில் வரும் "துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே" பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். அந்தக்காலத்துச் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம் வாயிலாக அறிமுகமான பாடலிது. கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் இளையராஜாவுக்குக் கொடுத்தது மட்டுமன்றி ரவீந்திரன் (உதாரணம் ஏழிசை கீதமே, பாடி அழைத்தேன்), சந்திரபோஸ் (சந்தோஷம் காணாத வாழ்வுண்டா) வரிசையில் மனோஜ் கியானுக்காகப் பாடிய பாடல்களைத் தேடிக் கேட்பதே சுகம். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் குரலுக்குக் கிடைத்த இன்னொரு பரிமாணம் துலங்கும்.

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடலில் இழைத்திருக்கும் மெல்லிசையும், வைரமுத்துவின் அழகிய வரிகளும், ஜேசுதாஸ் இன் குரலும் சேர்ந்து கிட்டிய இந்த அழகிய பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது அது தரும் சுகமே தனி.

http://songs.shakthi.fm/ta/Velicham_www.shakthi.fm/shakthi.FM%20%20-%20%20Thulli%20Thulli.mp3

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/f/f9/Velicham87.jpg/220px-Velicham87.jpg

gkrishna
28th September 2014, 07:09 PM
thanks tamil the hindu

திரைப்படங்களின் பார்வையில் நிலவு என்பது இதமான இயற்கையையும் தாண்டிய ஒரு முக்கிய உருவகமாகத் திகழ்கிறது. மகிழ்ச்சியான தருணங்களில் தன் காதலியை நிலவுடன் ஒப்பிட்டுப் பாடுவார்கள் நம் திரை நாயகர்கள்.

அதேபோல் காதலை விட்டுக் காததூரம் ஓட நேரிடும் சோகமான சமயங்களிலும் நிலவை அழைத்துத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவார்கள். இந்தக் கழிவிரக்க உணர்வு இந்தி, தமிழ்ப் படப் பாடல்களில் ஒரே விதத்தில் மிக அழகாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.

இந்தித் திரைப்பட ரசிகர்களே அதிகம் அறிந்திராத மஹிபால் –ரத்னமாலா ஜோடி நடித்து 1963-ம் ஆண்டு வெளிவந்த நாகஜோதி என்ற படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

சர்தார் மல்லிக் இசை அமைத்த இப்பாடலை எழுதியவர் இந்தித் திரையுலகில் இலக்கிய வளத்துடன் பாடல் எழுதும் திறன்பெற்றவர் எனப் போற்றப்பட்ட பரத் வியாஸ் என்ற கவிஞர்.

சுவரொட்டிகள் உள்பட இப்படத்தின் அடையாளங்கள் எதுவுமே ஆவணப்படுத்தப்படாமல் மறைந்துவிட்டன. தற்போது எஞ்சியுள்ளது, சோக உணர்வைக்கூடச் சுகமாகக் கேட்க வைக்கும் சிறப்பான குரல் வளம் கொண்ட முகேஷ் பாடிய அதன் பாடல்கள் மட்டுமே.

சுன் சாந்த் மேரி யே தாஸ்த்தான்

மே கஹூம் துஜே யா கே நா கஹூம்

தேரி சாந்தினி தேரா பாஸ் ஹை

முஜே யே பத்தா மே கஹான் ரஹூம்

கிலி ரேன் மே தேக்கோ சேன் ஸே

பொருள்:

நிலவே கேள். என்னுடைய இந்தக் கதையை

உன்னிடம் சொல்லவா அல்லது வேண்டாமா (என மயங்குகிறேன்)

(நீ வசிப்பதற்கு) உன் சாந்தினி (நிலவின் இனிய அம்சம்) உன்னிடம் இருக்கிறது.

நான் எங்கே (அப்படி) வசிப்பது

என்று எனக்குச் சொல்

உற்றுப் பார்.

மலர்ந்துவிட்ட இந்த இரவில்

இந்த உலகம் முழுவதும் உறங்கிக்கொண்டிருக்கிறது.

உன்னுடைய நட்சத்திரங்களில் நிழலில் நான் மட்டும் அமைதியாக அழுதுகொண்டிருக்கிறேன்.

தனிமை என்ற தணல் என் தேகம் முழுவதும் பற்றியுள்ளது.

என்னால் இதைச் சகிக்க முடியுமா அல்லது

சகிக்க முடியாதா (தெரியவில்லை)

என் உள்ளத்தில் பதிந்துவிட்ட அந்த

(உன்) பார்வை ஒரு சூலம் போல உள்ளது

பூக்களைப் பூக்களால் அலங்கரிப்பது போல

என் உள்ளங்கையில்

(என்னில்) உன் முகத்தை அலங்கரித்தேன்

இப்படியே (என்னுள்) ஓடிக்கொண்டிருக்கும்

உன் நினைவு என்ற நதியில்

(இப்பொழுது) நான் பிரவாகிக்கவா இல்லை கூடாதா (எனத் தெரியவில்லை)

நிலவே கேள். என்னுடைய இந்தக் கதையை உன்னிடம் சொல்லவா

அல்லது வேண்டாமா (என மயங்குகிறேன்).

இந்தக் கழிவிரக்க உணர்வு சிறிதும் குறையாமல், தன்னை நாடும் பெண்ணின் காதலை ஏற்கத் தயங்கும் கதாநாயகன் பாடுவதாக அமைந்த தமிழ்ப் பாடல் அமரத்துவமான பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02127/isai_2127154g.jpg

gkrishna
28th September 2014, 07:10 PM
தமிழ்ப் பாடல்.

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நான் இல்லை

(நிலவே)

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்

என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ

பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்

என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

(நிலவே)

அமைதியில்லாத நேரத்திலே

அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்

நிம்மதி இழந்து நான் அலைந்தேன்

இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...

கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை அமைத்து ஜெமினி கணேசன் கே.ஆர். விஜயா நடித்த ராமு என்ற இப்படத்தின் இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கப்படுகிறது.

நல்ல மெட்டு, கருத்தாழமிக்க எளிய வரிகள் மனதை வருடும் பி.பி. ஸ்ரீநிவாஸ் குரல் ஆகியவற்றை உடைய இப்பாடல் தனக்கு விருப்பமான சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்று எனப் புகழ்பெற்ற பலர் தெரிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை பாடியவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு வந்த ராமு படத்துக்கு இசை அமைத்தது எம்.எஸ்.வி மட்டும்தான். அந்தப் பாடலில் விட்டு போன இன்னொரு சரண வரிகள் இதோ: "ஊமையின் கனவை யார் அறிவார்? என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்? மூடிய மேகம் கலைந்த பின்னே நீ பாட வந்தாயோ வெண்ணிலவே

gkrishna
28th September 2014, 07:14 PM
அறுபதுகளில் புகழ்பெற்ற தென்னிந்தியக் கதாநாயகிகளில் ஒருவர் ராஜசுலோச்சனா. கடந்த ஆண்டு தனது 77 வயதில் சென்னையில் மறைந்தார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்த இவர் 1961-ல் வெளியான ‘நல்லவன் வாழ்வான்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி.

அண்ணா கதை, வசனத்தில் பி. நீலகண்டன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகி ராஜசுலோச்சனாவுக்கு கிளாப் அடிக்க வேண்டும் என்றொரு ஆசை.

எம்.ஜி.ஆர். நடித்த ஒரு ஷாட்டுக்குக் கிளாப் அடிக்கக் கற்றுக்கொடுத்தார் இயக்குநர். ஒருமுறைதான் மிகச் சரியாக அவர் கிளாப் அடித்தார். கிளாப் அடிக்கும் முன்பு எம்.ஜி.ஆர் வியப்பதைப் புகைப்படக்காரர் க்ளிக்கிவிட்டார்.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02127/padam_2127150f.jpg

gkrishna
28th September 2014, 07:25 PM
இன்று பிறந்த நாள் காணும் இசை குயில் லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்

நன்றி மாலை மலர்

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Sep/01770e8b-8aa5-4d72-b106-acf41a0a34ac_S_secvpf.gif


இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர். இவர் 1929ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இந்தூரில் பிறந்தார். இவரது தந்தை பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கரும் ஒரு பாடகர்தான். லதா மங்கேஷ்கர் தனது 13வது வயதில், அதாவது 1942ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். அதன்பின்னர் தனது குடும்பத்தின் நெருங்கிய நண்பரான மாஸ்டர் வினாயக்கின் உதவியுடன், பாடகராகவும், நடிகையாகவும் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1948ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரையில் அதிக அளவில் பாடல்களை பாடியதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றார்.

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் இவருக்கு, இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் லதாவும் ஒருவர். இதுதவிர பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே மற்றும் தேசிய விருதுகளும் இவரது பெருமையை பறைசாற்றுகின்றன.

முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர், திருமணம் செய்துகொள்ளவில்லை. பாடகி ஆஷா போஸ்லே இவரது சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

gkrishna
28th September 2014, 07:36 PM
http://lh3.ggpht.com/-O8jF4u9coFA/VCT0slkQq7I/AAAAAAAANqw/GnDzbOdG1PA/w1366/070000.jpg

gkrishna
28th September 2014, 07:36 PM
http://lh6.ggpht.com/-XrQP-LrUR54/VCT0tAuJhZI/AAAAAAAANq0/lAkoFKVjvPI/w1366/070001.jpg

gkrishna
28th September 2014, 07:37 PM
http://lh3.ggpht.com/-RDiN-aQkb2A/VCT0uGVON7I/AAAAAAAANrA/j4lsRhZhQwg/w1366/070002.jpg

gkrishna
28th September 2014, 07:38 PM
http://lh6.ggpht.com/-WbdIVxr7H5s/VCT0uEKhpHI/AAAAAAAANrI/6cX_e4ZvQBg/w1366/070003.jpg

Richardsof
28th September 2014, 07:39 PM
Krishna sir
today's your half century-postings is superb. Satapti express speed . Hats off

gkrishna
28th September 2014, 07:40 PM
உங்கள் பாராட்டிற்கு நன்றி எஸ்வி சார்

ஜெமினி circle புகைப்படம் அருமை சார்
இப்போது தான் பழைய ஆவணங்களை பார்த்து கொண்டு இருந்தேன்
நினைவலைகளை மீட்டு விட்டீர்கள்

vasudevan31355
28th September 2014, 07:58 PM
நடிகர் திலகத்தின் உடன் பிறவா சகோதரியான இந்த இசைக்குயில் 72 ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதல் பாடிய திரைப்பாடல். இந்தக் குயிலுக்கு நமது திரியின் சார்பாக மனப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0_5RfSE6ZRA

gkrishna
28th September 2014, 08:07 PM
1995 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
வாழ்த்தி பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூறியது :

" பலர் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று வருத்தபடுகிரர்கள். மகாத்மா காந்திக்கு ஆண்
குழந்தைகள் மட்டுமே பிறந்தன. இன்று உலகில் காந்திஜியை மட்டும்தான் தெரியும். அவர் பிள்ளைகளை யாருக்கு தெரியும் ?
ஆனால் , நேருவிற்கு ஒரே ஒரு பெண் குழந்தை தான் பிறந்தது . உலகம் போற்றும்
பிரதமர் இந்திராவாக அவர் திகழ்நத்தை கண்கூட பார்த்தோம் . எனவே , பெண் குழந்தை பிறந்தால் கவலை படாதீர்கள்

நன்றி குமுதம் 24/9/14 வார இதழ்

gkrishna
28th September 2014, 08:10 PM
அருமை வாசு சார்
இசைக்குயிலின் முதல் பாடலை வெளியிட்டு பெருமை படுத்தி விட்டீர்கள்

vasudevan31355
28th September 2014, 08:12 PM
'சங்கர் சலீம் சைமன்' படத்தில் மிக அபூர்வமான ஒரு பாடல்.

வந்தாளே ஒரு மகராசி
வம்பேதான் என்றும் இவள் ராசி
அதிகாரம் இவள் கைராசி
அதை வெல்லும் எந்தன் முகராசி

பெண்ணென்னும் பொன்மேனி
எந்நாளும் மகராணி
நீதான் என் அடிமை
அந்நாளும் பெண்ணேதான்
இந்நாளும் பெண்ணேதான்
யார் வென்றார் சொல்லய்யா
கண்ணையா சின்னையா

சுசீலாம்மா, பாலா பாடிய அபூர்வ பாடல். மெல்லிசை மன்னர் இசையில். ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப் பாடலுக்கு நடித்தது.


https://www.youtube.com/watch?v=gzKecYE2fAA&feature=player_detailpage

gkrishna
28th September 2014, 08:13 PM
https://www.youtube.com/watch?v=lqzsOapTgyU

லதா மங்கேஷ்கர் தமிழில் இளையராஜா இசையில் பாடிய இளையதிலகம் பிரபு நடித்த ஆனந்த திரை படத்தின் பாடல்

gkrishna
28th September 2014, 08:21 PM
https://www.youtube.com/watch?v=3prYBNIPtlg

ஏவிஎம் ராஜன் புஷ்பலதா நடித்த வேதா இசையில்
இன்று வந்த சொந்தமா ? பாடகர் திலகம் கண்ணிய பாடகி இசையில்
கணவன் மனைவி இணைந்து பாடும் பாடல்

vasudevan31355
28th September 2014, 08:24 PM
http://images.mavshack.com/PicturePublishing/IND-DVD-09-218--RISHYA_SINGAR--S_ee360bd9-e625-454e-ad7a-590e67ef46f1.jpg
மாலை மதுரம்

ஒரு அபூர்வமான பாடல்.

'ரிஷ்ய சிங்கர்' படத்தில் சுசீலா அம்மா பாடிய பாடல்.

'காதல் இன்பமே காணவே வாராய்
சோதனை இன்னும் ஏனோ சாமி'

நம்ம பாலாஜி, நாகையா, கும்மிடி, டி.ஆர்.ராமச்சந்திரன், ராஜ சுலோச்சனா, மாலதி, கிரிஜா நடித்தது. இசை டி.வி.ராஜு. இயக்கம் முக்கமாலா.

http://i.ytimg.com/vi/P2lKl9VE2CU/maxresdefault.jpg

http://i.ytimg.com/vi/7rB8T_ZLJRU/maxresdefault.jpg


https://www.youtube.com/watch?v=-aG4qLdKkNY&feature=player_detailpage

gkrishna
28th September 2014, 08:38 PM
அன்பு வாசு சார்

இன்றைய மாலை மதுரம் அருமை
உண்மையில் இப்படி ஒருபடம் இது வரை கேள்வி பட்டது இல்லை
1990 களில் வெளி வந்த மது அம்பாட் - பரதன் - வைஷாலி நினைவு உண்டு
ரிஷ்ய ச்ரிங்கா என்று அழைக்கும் போது ரம்மியமாக இருக்கும்
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/0/09/Vaisali_VCD_Cover.jpg/220px-Vaisali_VCD_Cover.jpg

gkrishna
28th September 2014, 08:41 PM
dear vaasu sir

விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் நேரடியாக ஒரு ஹிந்தி படத்திற்கு 1955 வாக்கில் இசை அமைத்ததாக நேற்று ஒரு பதிவு படித்தேன்
அதை பற்றி நாம் பதிவு இட்டு விட்டோமா ?

vasudevan31355
28th September 2014, 08:52 PM
Krishna sir,

http://i.ytimg.com/vi/QlJfHNN0IiE/sddefault.jpg


https://www.youtube.com/watch?v=QlJfHNN0IiE&feature=player_detailpage

chinnakkannan
28th September 2014, 08:54 PM
ஹாய் குட் ஈவ்னிங்க்…

என்ன கிருஷ்ணா சார்..ஒரே வே ஏ ஏ கம்.. இப்படியா இவ்ளோ போஸ்டிங்க்ஸ்..ம்ம் நைஸ்..தொடருங்கள்..(உன் சமையலறையில் இப்போ டிவில ஓடுதே பாக்கறீங்களா) இன்று வந்த சொந்தமா பாட்டு ரொம்பப் பிடிக்கும்..

எஸ்வி சார் நன்றி..(கிருஷ்ணா ஜி நயன மயக்கத்தில் இருந்தார் அதான்)

காதல் இன்பமே காணவே வாராய் ரிஷ்ய ச்ருங்கர் பாட்டுக்கு தாங்க்ஸ் வாசுசார்… நேற்று ஜெயா மேக்ஸில் ஒரு பாட் பார்த்தேன்.. மாடி வீட்டுமாப்பிள்ளை என்ன தோழி என்று ஆரம்பிக்கும் அதை போட்டு விட்டீர்களா (சீரியஸ் பார்வையுடன் ரவிச்சந்திரன் கெஞ்சல் பார்வையுடன் ஜெயலலிதா)

நெய்வேலி சென்னைல்லலாம் ப்ரச்னை எதுவும் இல்லையே

chinnakkannan
28th September 2014, 08:58 PM
//1990 களில் வெளி வந்த மது அம்பாட் - பரதன் - வைஷாலி நினைவு உண்டு// ஆஹா நான் சொல்லலாம்னு வந்தா கிருஷ்ணா ஜி சொல்லிட்டார்.. நல்ல படம்..அந்த ராஜாவா வர்றவர் பூவிழி வாசலிலே வில்லன்.. அப்புறம் வைஷாலி வித்யாச அழகான நடிகைன்னு மட்டும் நினைவு..பெயர்லாம் நினைவில்லை ரிஷ்ய ச்ருங்கர்.. அவரை எல்லாம் யார் ஞாபகம் வெச்சுப்பாங்க..:)

vasudevan31355
28th September 2014, 08:59 PM
கிருஷ்ணா சார்,

மேலே தந்துள்ள 'மெல்லிசை மன்னர்' இசையமைத்த இந்திப் பாடலின் தமிழ் பாடல் என்னவென்று தெரிகிறதா? கண்டு பிடித்து விட்டீர்களா?

vasudevan31355
28th September 2014, 09:02 PM
அவரை எல்லாம் யார் ஞாபகம் வெச்சுப்பாங்க..:)

கோபால் சார் பாணியில் கேட்கிறேன். அடப் பாவி மக்கா!:)

vasudevan31355
28th September 2014, 09:05 PM
நெய்வேலி சென்னைல்லலாம் ப்ரச்னை எதுவும் இல்லையே

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சி.க .சார். இதைத்தான் கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான பாசம் என்பது. எந்தப் பிரச்னையும் நெய்வேலியில் இல்லை. பிள்ளைகள் வெளியூரில் தங்கிப் படிக்கிறார்கள். அவர்களும் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள்.

நன்றி சி.க.சார்.

vasudevan31355
28th September 2014, 09:09 PM
'வைஷாலி' சுபர்ணா ஆனந்த்

http://1.bp.blogspot.com/-JOsOT0PyMTo/UScWXonS3QI/AAAAAAAANxY/J4fRyxH17VY/s1600/14.JPG

http://cf2.imgobject.com/t/p/original/zTIPYBAO5ls19dK6wvJnNJAVdpw.jpg

vasudevan31355
28th September 2014, 09:10 PM
சி.க சார்,

இப்போதைய படம் வேணுமா?:)

RAGHAVENDRA
28th September 2014, 09:15 PM
காற்றடிக்கும் திசையிலெல்லாம் மெல்லிசை மன்னரின் இசை பறக்கும் பாடலின் ஹிந்தி வடிவத்தைத் தந்து அசத்தி விட்டீர்கள் வாசு சார்

RAGHAVENDRA
28th September 2014, 09:16 PM
சிங்கார வேலனே தேவா பாடலை நினைவூட்டும் மனதை மயக்கும் மதுர கானம் வைஷாலி மலையாளப் படத்திலிருந்து...

http://www.youtube.com/watch?v=W-Nz6otLjNE

RAGHAVENDRA
28th September 2014, 09:19 PM
ரவி இசையில் வைஷாலி மலையாளத் திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் அசாதாரணமானவை. ஒவ்வொரு பாடலும் முதன் முறை கேட்கும் போதே மனசை என்னவோ செய்யும். குறிப்பாக சித்ரா பாடிய இந்தப் பாடல் நரம்புகளுக்குள் புகும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்து புஷ்பம் சூடி நில்கும் என்ற இப்பாடலை நீங்கள் கேட்கும் போது இதை நிச்சயம் உணர்வீர்கள்.

பாடலுக்காகவே இப்படத்தை வெளியான போது மூன்று முறை பார்த்தேன். படம் முடிந்த பின்னும் இப்படத்தின் இசை நம்மை எழுந்திருக்க விடாது.

http://www.youtube.com/watch?v=4V6LSLcPPps

chinnakkannan
28th September 2014, 09:19 PM
சுசீலாம்மா, பாலா பாடிய அபூர்வ பாடல். மெல்லிசை மன்னர் இசையில். ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப் பாடலுக்கு நடித்தது.// தாங்க்ஸ் வாசு சார்.பாட்டுக் கேட்டேன்..

இந்தப் படத்துல ஒரு ஜோக் உண்டு..

“டேய் இப்போப் போனாங்களே அந்த டீச்சர் எந்தக் கிளாஸ்ல் பாடம் எடுக்கறாங்க..”

“யாரு.. மஞ்சுளாக்காவயா கேக்கறீங்க..ஐய..அவங்க டீச்சர்லாம் இல்லை..ஆறாங்கிளாஸ் படிக்கறாங்க (எந்தக் கிளாஸ் மறந்து விட்டது)

//கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ// ரொம்ப நல்ல பாட்டு.. எப்போதும் நான்கேட்பது.. தாங்க்ஸ் க்ருஷ்ணாஜி..

89 என நினைவு.. நான் வேலை பார்த்த அலுவலகத்தில் சிவசங்கரி வந்திருந்தார்..அவர் வேலையாக..இடம் துபாய்.. தமிழ்ச்சங்க நண்பர் ஒருவருடன்.. அவர் எனக்குத் தெரிந்தவர்.. பாருங்க இந்தக் கால இளைஞர்களை..சார் பேரு கண்ணன்..ஆனா தமிழ்ச் சங்கத்துல எல்லாம்சேர்ந்துக்கலை.. “ என அவர் சிவசங்கரியிடம் சொல்ல – மிக பரபரப்பாய் வேலைக்கிடையே எதற்கோ அந்தப்பக்கம் சென்றிருந்த நான் கொஞ்சம் முறுவலித்து- எனக்குத் தமிழ் தான் மூச்சு அதை மற்றவர் மீது விடமாட்டேன் எனப் படபடத்து பை ங்க.. சொல்லி (கவிதை ஞானக்கூத்தனுடையது) என் அறைக்குச் சென்று விட்டேன்..

இரு நாட்கள் கடந்திருக்கும்.. மறுபடியும் எதற்கோ வந்த அவர் என்னறைக்கு வந்து கைகுலுக்கி போய்ட்டுவரேன் சொல்லிச் சென்றார்..உங்கள் சி-ஜெ படத்தைப்பார்த்ததும் இது நினைவுக்கு வந்தது.
.
வாசு சார் கொஞ்சம் கவலையாய்த் தான் இருந்தது. தாங்க்ஸ்...மதுண்ணா கிருஷ்ணாஜி அப்புறம் மற்ற ஊர் வாழும் நண்பர்கள் எல்லாரும் ஓகேயாக இருப்பார்கள் என நம்புகிறேன்..

vasudevan31355
28th September 2014, 09:25 PM
வாருங்கள் ராகவேந்திரன் சார்.

கரெக்ட். உங்களை சந்தித்து ரொம்ப நாட்களானது போல உள்ளது. நலம்தானே!

RAGHAVENDRA
28th September 2014, 09:26 PM
வாசு சார்
ஜேசுதாஸ் பாடிய தமிழ்ப் பாடல்களைக் காட்டிலும் அவருடைய மலையாளப் பாடல்களே என்னை அதிகம் கவர்ந்தவை. குறிப்பாக 80களில் சில படங்களில் அவருடைய பாடல்களை இங்கு நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.

த்வனி திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும் இனிமையானவை. குறிப்பாக இப்பாடலைச் சொல்ல வேண்டும். நீங்களே உணருங்கள்.

http://www.youtube.com/watch?v=EBvaZlcrn7Y

vasudevan31355
28th September 2014, 09:26 PM
சிவசங்கரி இன்ட்ரெஸ்ட்டிங்.சி.க.சார்.

RAGHAVENDRA
28th September 2014, 09:28 PM
இந்தியத் திரையுலக இசை வரலாற்றில் தவறாமல் குறிப்பிடத்தக்க பாடல், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும். என்னைக் குறிப்பாக மிகவும் ஈர்த்த பாடல் கோபிகா வசந்தம். ரவீந்திரன் இசையில் ஜேசுதாஸ் பாடியது.

http://www.youtube.com/watch?v=Ik5nrjQ22jg

vasudevan31355
28th September 2014, 09:30 PM
கண்டிப்பாகக் கேட்டு விட்டு சொல்கிறேன் ராகவேந்திரன் சார். ரவீந்திரன் இசையமைப்பில் 'ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா' படத்தில் ஜேசுதாஸ் பாடிய இப்பாடல் எனக்கு நிரம்பப் பிடிக்கும் ராகவேந்திரன் சார்.


http://www.youtube.com/watch?v=t3l9W-g2mrU&feature=player_detailpage

RAGHAVENDRA
28th September 2014, 09:30 PM
இசையரசியும் ஜேசுதாஸும் கலக்கும் இப்பாடல் நெஞ்சுக்குள் ஊடுருவி உயிரோடு கலந்து விடும்.

ஜானகி ஜானே ... த்வனி படத்திலிருந்து ...

http://www.youtube.com/watch?v=WZEk-835Sro

vasudevan31355
28th September 2014, 09:32 PM
ராகவேந்திரன் சார்,

அடடா! என்ன ஒற்றுமை! இருவருமே ஒரே சமயத்தில் ஹிஸ் 'ஹைனஸ் அப்துல்லா' பற்றி யோசித்திருக்கிறோமே! ஆச்சரியமாக...... இல்லை!

RAGHAVENDRA
28th September 2014, 09:36 PM
காயல் கரையில் தனிச்சு வந்தது காணான் ....

மெலடி என்பதன் விளக்கம்.

http://www.youtube.com/watch?v=GSB2KJ3TS_I

vasudevan31355
28th September 2014, 09:43 PM
சினிமா எக்ஸ்பிரஸ் (16th october 2012)

Exclusive.

'புலியூர்' சரோஜாவின் அட்டகாசமான பேட்டி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-53.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-53.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-52.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-52.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-36.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-36.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-25.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4-25.jpg.html)

RAGHAVENDRA
28th September 2014, 09:44 PM
Vasu Sir

http://polyglottutor.files.wordpress.com/2012/07/telepathy.jpg

chinnakkannan
28th September 2014, 09:45 PM
இந்திர நீலிமலோலம் ஏமிதபொய்தகலின் இன்னலே பொய்கையின் நீ நோக்கி நின்னு ஆஹா என்ன பாட்டு ( நடுவில் வந்து ஏதோபேசும் மான் வெகு அழகு!) இந்து புஷ்பம் சூடி நில்கும் ராத்ரி வெகு அழகிய பாட்டு.(இன்ஃபாக்ட் படம்பார்த்தபின் பலவருடங்களுக்குப்பிறகு இப்போது தான் பார்க்கிறேன்..அந்தக்காலத்திலேயே ஓவியனாகி இருக்கக்கூடாதா என க் கொஞ்சம் நொந்து கொண்டதும் நினைவுக்கு வருகிறது!) . மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.. அதற்குள் மேலும் இரண்டு பாட்டு கொடுத்துவிட்டீர்கள் அண்ட் ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா..கேட்டு வருகிறேன்..

chinnakkannan
28th September 2014, 09:54 PM
சுபர்ணா ஆனந்த் படத்திற்கு நன்றி. வாசு சார். இ கா ப வேண்டாமே
அழகிய மலையாளப்பாடல்களுக்கு ராகவேந்தர்சார் வாசு சார் இருவருக்கும் நன்றி..

Murali Srinivas
29th September 2014, 12:06 AM
வாசு,

ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் இந்த பாடலை கேளுங்கள். பாடல் ஒரு தேவாமிர்தம் என்றால் மோகன்லாலின் நடிப்பு வாவ்! பாடல் நிறைவு பெறும்போது உங்கள் மனம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து அனுபவியுங்கள்

https://www.youtube.com/watch?v=H_mLAQJ4pXY

அன்புடன்

rajeshkrv
29th September 2014, 06:43 AM
இந்திப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோலா கூப்பிடு Iftekhar ஐ :)

Iftekhar as inspector in Don (1978)

http://3.bp.blogspot.com/-yNTe3Q1QVpE/UCCgAYn73FI/AAAAAAAACQA/G-LzZghN9j4/s1600/4.jpg

எத்தனை எத்தனை வேடங்கள் ... அருமையான நடிகர். நல்ல போலீஸ் மேலதிகாரி என்றால் முக்கால்வாசி படங்களில் இவர் தான்.

venkkiram
29th September 2014, 08:24 AM
எனது தேர்வுகளில் பிடித்த நடிகர்கள்,இயக்குனர்கள்,இசையமைப்பாளர்கள் என்றெல்லாம் பாகு பாடின்றி, ஆர்ட் ,commercial என்றெல்லாம் பாராமல்,வெற்றி-தோல்வி என்று பகுக்காமல் , கீழ்கண்ட விதிகளில் செய்துள்ளேன்.(objective )

1)ஏதேனும் ஒரு வகையில் மிக தேர்ந்த ரசிகனான என்னை பாதித்து,திருப்தி படுத்தியிருக்க வேண்டும்.

2)ஏதோ ஒரு வகையில் சிறப்பாக உருவான முன்னோடி படமாக இருக்க வேண்டும்.

3)தமிழ் புத்தகங்கள் அடிப்படை ,புதுமை கதையமைப்பு,புதிய பார்வைகள்,தொழில் நுட்ப தேர்ச்சி கொண்ட படங்கள்.

4) Classic என்ற தேர்வில் நிலைப்பவை.ஜீவித்திருப்பவை .இன்றும் புதுமையாக சுவைப்பன .

5)புது முயற்சி,புதிய அலை படங்கள் ( வந்த போது ) ஆனால் pretentious என்று இல்லாத நன் முயற்சிகள்.

ஆனால் உங்களின் பங்களிப்பால் வரிசை மெருகேறும். ஆனால் காதலிக்க நேரமில்லை ,புதிய பறவை அறுபதுகளில் வந்த பூமியில் ஆண் பாவத்தை 80 களில் சிறந்த பத்தாக்குவது மன்னிக்கவே பெரும் பாவமாகி விடும்.(ஆண் பெண் பேதமின்றி )ஆனால் ஆண் பாவத்தை 1986 இல் ஒன்றாக சேர்த்துதானே உள்ளேன்?

சரி..உங்களுக்கு ஆண்பாவத்தின் மகத்துவம் தெரியல.. விட்ருவோம்! 90-2000 ஆண்டுகளின் சிறந்த பத்தில் ஹேராமும் காணும்! நீங்கள் மேற்சொன்ன 5 விதிகளையும் பூர்த்திசெய்யும் படைப்பு. காவியம். 75 வருட தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த பத்தில் கூட இடம்பிடிக்கும் வரலாறு அது. அது இடம்பெறாத எந்தவொரு பட்டியலும் எனக்கு பத்தோடு ஒன்னு பதினொன்று. அம்புடுதேன்.

gkrishna
29th September 2014, 10:07 AM
வாசு சார்

வைஷாலி -கதாநாயகி புகைப்படம் வெளியிட்டு கலக்கல் அதை தொடர்ந்து ராகவேந்தர் சார் அந்த படத்தில் இடம் பெற்ற மதுர கானங்களை வெளியிட்டு அமர்க்களம் செய்தார் . இதே கால கட்டத்தில் கொஞ்சம் முன்னாடி என்று நினைவு வெளி வந்த ராம் தேரி கங்கா மைலி மந்தாகினி நினைவு வரும் .வைஷாலி படம் பார்க்கும் போது சரி ராஜ்கபூர் இன் ராம் தேரி கங்கா மைலி பார்க்கும் போதும் சரி அடிகடி குப் குப் னு வியர்க்க வைக்கும் அடி வயற்றில் .

ஜீ தமிழ் தொலைக்காட்சி பாரம்பரிய மருத்துவம் யாரவது பார்த்தாங்கன்ன என்ன மருந்து இந்த நோய்க்கு என்று கேட்டு சொல்லவும்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/d7/Ram-teri-ganga-maili.jpg/220px-Ram-teri-ganga-maili.jpg

gkrishna
29th September 2014, 10:12 AM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSG_R0Ec5irCMTMx3kL11yB7tdV7kKdp vORpZTVFB1J6w9lVgAo

சி கே சார்
வைஷாலி ராஜா பூ விழி வாசலிலே வில்லன் - பாபு அன்டனி
உடம்பு கொஞ்சம் பாளம் பாளமாக இருக்கும்
சத்யராஜ் ரகுவரன் பாபு அன்டனி combination பூ விழி வாசலிலே கலக்கல்
இளையராஜா இசை - லா லா லா - bgm பின்னி பெடல் எடுத்து இருப்பார்

chinnakkannan
29th September 2014, 10:15 AM
குட்மார்னிங்க் ஆல்..

கிருஷ்ணா ஜி.. என்ன காலங்கார்த்தால மந்தார மலர் நினைவு..சத்யம் சிவம் சுந்தரம் ஓ..பக்தியா :)

பூவிழி வாசலிலே கார்த்திகா சிஏ முடிச்சாரோ இல்லியோ தெரியலையே.. இருந்தாலும்..ஒருகிளியின் தனிமையிலே சிறுகிளி இங்கு வரவு..

gkrishna
29th September 2014, 10:21 AM
ராம் தேரி கங்கா மைலி - mandakini

http://media.movietalkies.com/profilepicture/bollywood/mandakini/mandakini-1.jpg


http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Mandakini01.jpg/220px-Mandakini01.jpg

rajraj
29th September 2014, 10:23 AM
chinnakkaNNan: Here is another 'konjum' song for you.

konjum mozhi maindhargaLe dhavaLa vaanil thavazh nilavin..... by MLV. :)

gkrishna
29th September 2014, 10:26 AM
பூவிழி வாசலிலே கார்த்திகா சிஏ முடிச்சாரோ இல்லியோ தெரியலையே.. இருந்தாலும்..ஒருகிளியின் தனிமையிலே சிறுகிளி இங்கு வரவு..

சாணகியன் அப்படின்னு ஒரு படம் வந்ததே நினைவு உண்டா சி கே சார் கமல் கூட உண்டு என்று நினைவு திலகன் கலக்கி இருப்பார்
இந்த படத்தில் கார்த்திகா உண்டா ? . இந்தியன் ஊர்மிள உண்டு
http://n1.sdlcdn.com/imgs/a/a/i/VMLF0348T_M_1_2X-a0906.jpg

gkrishna
29th September 2014, 10:30 AM
அருமையான பாடலை நினைவு படுத்திய சி கே அவர்களுக்கு நன்றி
ஜேசுதாஸ் மற்றும் சித்ரா தனி தனியாக பாடுவாங்க


ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
உறவு உறவு உறவு உறவு
இரு கிளிகள் உறவினிலே புது கிளி ஒன்று வரவு
வரவு வரவு வரவு வரவு
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெல்லாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு

ஒரு கிளியின் தனிமையிலே ....

முத்து ரத்தினம் உனக்குச் சூட
முத்திரைக் கவி இசைந்துப் பாட
நித்தம் நித்திரைக் கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினைந்துக் கூட
சிறு மழலை மொழிகளிலே
இனிமை தவழ இதயம் மகிழ
இரு மலரின் விழிகளிலே
இரவு மறைய பகலும் தெரிய
ஆசையால் உனை அள்ள வேண்டும்
அன்பினால் எனைக் கொல்ல வேண்டும்
சேரும் நாள் இதுதான்

ஒரு கிளியின் தனிமையிலே ....

கட்டளைப்படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்குப் போதும்

மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்துப் புன்னகை எனக்குப் போதும்

ஒரு இறைவன் வரைந்த கதை
புதிய கவிதை இனிய கவிதை

கதை முடிவும் தெரிவதில்லை
இளைய மனதை இழுத்தக் கவிதை

பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பென்னும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இது தான்

ஒரு கிளியின் தனிமையிலே ....

gkrishna
29th September 2014, 10:32 AM
www.youtube.com/embed/ZJu6i9vZ-mQ?

ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு

chinnakkannan
29th September 2014, 10:33 AM
இல்லை..கார்த்திகா கிடையாது ஊர்மிளா. தான் ..ஜெயராம் அறிமுகம் என நினைக்கிறேன்..

மதுரையில் சிந்தாமணியில் கொஞ்சம் 25 நாளாவது ஓடிய மலையாளப் படம் நியூடெல்லி..என நினைக்கிறேன்..படம் முடிந்ததற்கு அப்புறம் தான் அட படத்தில் பாட்டே இல்லையே என ரியலைஸ் பண்ணிய படம்..

chinnakkannan
29th September 2014, 10:34 AM
கொஞ்சும் மொழி மைந்தர்களே கேட்டதில்லையே ராஜ் ராஜ் சார்..கொஞ்சுமெழில் விஞ்சிவர குடம்சுமந்து நீ நடந்தால்னு கவிதை வரி வேண்டுமானால் வேகமா வருது..கொஞ்சும் பாட்டு தேடணும் :)

gkrishna
29th September 2014, 10:37 AM
கார்த்திகா என்ற பெயரில் எதனை நடிகைகள் சி கே சார்

1) பூவிழி வாசலிலே படத்தில் நடித்த (அழகிய பெரிய கண்ணுள்ள) ஹீரோயின் பெயர் கார்த்திகா

2) தூத்துக்குடி உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திகா(கருவாப்பையா..கருவாப்பையா பாட்டு நியாபகம் இருக்கா?)

3) திண்டுக்கல் சாரதி பட ஹீரோயின் கார்த்திகா

4)கோ,அன்னக்கொடி படங்களின் கதாநாயகி (ராதாவின் அருமை மகள் )

rajraj
29th September 2014, 10:42 AM
கொஞ்சும் மொழி மைந்தர்களே கேட்டதில்லையே ராஜ் ராஜ் சார்..கொஞ்சுமெழில் விஞ்சிவர குடம்சுமந்து நீ நடந்தால்னு கவிதை வரி வேண்டுமானால் வேகமா வருது..கொஞ்சும் பாட்டு தேடணும் :)

Here is the song:

http://www.youtube.com/watch?v=wDx6K5WGNX8

Gopal.s
29th September 2014, 10:48 AM
சரி..உங்களுக்கு ஆண்பாவத்தின் மகத்துவம் தெரியல.. விட்ருவோம்! 90-2000 ஆண்டுகளின் சிறந்த பத்தில் ஹேராமும் காணும்! நீங்கள் மேற்சொன்ன 5 விதிகளையும் பூர்த்திசெய்யும் படைப்பு. காவியம். 75 வருட தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த பத்தில் கூட இடம்பிடிக்கும் வரலாறு அது. அது இடம்பெறாத எந்தவொரு பட்டியலும் எனக்கு பத்தோடு ஒன்னு பதினொன்று. அம்புடுதேன்.

வெங்கி,



ஹே ராம் எனக்கும் பிடித்த படம். சில இடங்களில் கமலை (என் பிறந்த நாள் நண்பன்7/11) அப்படியே ஆகாசத்தில் வைக்க மனசு அலைபாயும். இளைய ராஜா அப்படி இழைத்து இழைத்து செய்திருப்பார். Sur -Realistic காட்சிகள், ஆளவந்தான் hallucination காட்சிகள் போல சுவை.என் சிறு வயது பிரிய கதையான கல்லுக்கும் ஈரம் (ர.சு.நல்லபெருமாள்) சாயல் கொண்டது.



ஆனால் ஐந்தாவது பாயிண்ட் இல் தோற்றது. முழுமையில்லாத,குழப்பமான pretentious என்ற வகையில் சிறந்த பத்தில் இல்லை. வெறும் சோதனை மட்டுமே மிஞ்சியது.

chinnakkannan
29th September 2014, 10:55 AM
வேற கார்த்திகா தெரியலையே கிருஷ்ணாஜி..பூ.வி.வா கார்த்து நாயகன்ல கமலுக்கு அம்மாவா ஸாரி டைப்போ மகளா நடிச்சு டபக் டபக்குன்னு கத்திட்டு விசுக்விசுக்குன்னு போய் நீள் மூக்கு நாசரைக் கல்யாணம் கட்டிக்கும்.. கருவாய்ப்பையா கார்த்திகா ஸோ ஸோ தான்.. நல்லாத்தமிழ் பேசத் தெரிஞ்சதால அவருக்குத் தமிழ்ல வாய்ப்புக் கிடைக்கலை! தி.சா படமும் பார்க்கலை மூன்றாம் கார்த்திகை பத்தித் தெரியாது..ராதாஸ் உசர டாட்டர் கார்த்திகா கோவிலேயே சுமார் தான்.. அ.கோ பாக்கலை..ஆனா ஐ ப்ரோ அழகா பண்ணிக்கிட்டு வர்ற ஆடுமேய்க்கற பொண்ணா வரும்னு கேள்வி..ம்ம் அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி.. பத்மப் ப்ரியை தான் நினைவுக்கு வர்றாங்க..!

gkrishna
29th September 2014, 11:00 AM
Here is the song:



http://www.thehindu.com/multimedia/dynamic/00959/2009012350361601_959158e.jpg

ராஜ் ராஜ் சார்
இந்த பாட்டு என் வீடு படத்தில் தானே நாகையா இயக்கம்
மாண்புமிகு அம்மா அவர்களின் சித்தி வித்யாவதி கூட உண்டு என்று நினைவு . சாண்டில்யன் கதை இசை கூட நாகையா தான் என்று நினைவு

gkrishna
29th September 2014, 11:05 AM
வேற கார்த்திகா தெரியலையே கிருஷ்ணாஜி..பூ.வி.வா கார்த்து நாயகன்ல கமலுக்கு அம்மாவா ஸாரி டைப்போ மகளா நடிச்சு டபக் டபக்குன்னு கத்திட்டு விசுக்விசுக்குன்னு போய் நீள் மூக்கு நாசரைக் கல்யாணம் கட்டிக்கும்.. கருவாய்ப்பையா கார்த்திகா ஸோ ஸோ தான்.. நல்லாத்தமிழ் பேசத் தெரிஞ்சதால அவருக்குத் தமிழ்ல வாய்ப்புக் கிடைக்கலை! தி.சா படமும் பார்க்கலை மூன்றாம் கார்த்திகை பத்தித் தெரியாது..ராதாஸ் உசர டாட்டர் கார்த்திகா கோவிலேயே சுமார் தான்.. அ.கோ பாக்கலை..ஆனா ஐ ப்ரோ அழகா பண்ணிக்கிட்டு வர்ற ஆடுமேய்க்கற பொண்ணா வரும்னு கேள்வி..ம்ம் அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி.. பத்மப் ப்ரியை தான் நினைவுக்கு வர்றாங்க..!

http://3.bp.blogspot.com/-w1DdjtfBMGk/T1w72lUygeI/AAAAAAAAC6o/L4vwwlk5zw4/s400/images+(4).jpg

gkrishna
29th September 2014, 11:06 AM
http://chennaionline.com/images/articles/February2012/76df4e45-b2c9-4435-bd34-45fd334a03faOtherImage.jpg

karuvaai paiya kaarthu

gkrishna
29th September 2014, 11:08 AM
http://chennai365.com/wp-content/uploads/movies/Dindugal-Sarathy/Dindigul-Sarathy-Still-1.jpg

திண்டுக்கல் சாரதி கார்த்து (பார்த்து சி கே அண்ணா )

gkrishna
29th September 2014, 11:11 AM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRzEgDeHfhkon1ITHoJtlcmn-jb7NUZZuvmS6m74ybc1YiT9zYr3qEzDHQY

சி கே அண்ணா
புருவத்தை eye பிரா (brow அடித்தால் தமிழில் இப்படிதான் மாறுகிறது) பென்சில் கார்த்து .

புருவத்தை வில்லா வளைக்கும் நடிகர் ஒருவர் உண்டுன்ன அது வேற யாரு நம்ம NT தான்

rajraj
29th September 2014, 11:12 AM
இந்த பாட்டு என் வீடு படத்தில் தானே நாகையா இயக்கம்
மாண்புமிகு அம்மா அவர்களின் சித்தி வித்யாவதி கூட உண்டு என்று நினைவு . சாண்டில்யன் கதை இசை கூட நாகையா தான் என்று நினைவு

It was based on a Hindi movie. Nagaiah was the producer and director. He was also the music director. It was not Sandilyan's story. It was also produced in Telugu as Naa Illu.

gkrishna
29th September 2014, 11:18 AM
தகவலுக்கு நன்றி ராஜ் ராஜ் சார்
வசனம் சாண்டில்யன் என்று நினைக்கிறன்

gkrishna
29th September 2014, 11:45 AM
("அங்கீகாரம்' என்ற தன் சுயசரிதை நூலில் கலைமாமணி பி.ஆர்.துரை).

ஆர்.எஸ்.மணி அவர்களின் மூலமாக எனக்கு சங்கர்கிரி அவர்களின் (முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் புதல்வர்) அறிமுகம் கிடைத்தது. அவர் ஓர் ஆங்கிலப் படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். சங்கர்கிரி அவர்களே கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் படப்பிடிப்பையும் துவக்கினார்.

திருவாங்கூர் மகாராஜா பேலஸ், ஐ.ஜி.ஆபீஸ், கவர்னர் மாளிகையின் உட்புறம், அடையார் போட்கிளப் என அரசாங்க அனுமதியோடு படப்பிடிப்பு பல இடங்களில் நடத்தப்பட்டு அதன்பின் சகல பணிகளும் துரிதமாக நடைபெற்று முடிந்து ஒரே மாதத்தில் படம் ராஜகுமாரி தியேட்டரில் வெளியிடப்பட்டது. அந்தத் தியேட்டர் முன்பு சாஹ்னிங் என்று அழைக்கப்பட்டது. அங்கு ரிலீஸôன ஆங்கிலப் படம்தான் "எபிசில்'. இந்தப் படத்திற்குப் பல சிறப்புகள் உண்டு. ஜனாதிபதியின் மகனே இயக்குநர். கதை வசனம் அதுவும் அவரேதான். கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த கோபாலகிருஷ்ணன். அவரது தந்தையாக நடித்தவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த். ரமண மூர்த்தியும் அதில் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சிறப்பு அந்தப் படத்திற்கு உண்டு. திருமதி சந்தியா நடித்து இருக்கிறார்கள். இன்றைய துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடித்தார். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதுபோல நானும் அந்த நகைச்சுவைப் பகுதியில் சோ அவர்களோடு சேர்ந்து நடித்தேன். அதுதான் என் முதல் திரைப்படம். அந்த ஆங்கிலப் படத்திற்கு இன்னும் முக்கியமான ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்தான்.

"எபிசில்' என்றால் லெட்டர், கடிதம் என்று பொருள். இன்றைய நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கதாநாயகியாக நடிக்க நம் தமிழ்நாட்டில் ஒரு ஆங்கிலப் படமும் தயாராகி இருக்கிறது என்றால் நமக்கும் கலையுலகிற்கும் பெருமைதானே!

Richardsof
29th September 2014, 12:21 PM
29.9.1972

vasu sir / krishna sir

can you recollect?

watched at vellore apsara theater on 29.9.1972 - opening show 9 am.

http://i57.tinypic.com/2d9soqr.jpg

Richardsof
29th September 2014, 12:22 PM
http://i61.tinypic.com/c40ox.jpg

gkrishna
29th September 2014, 12:43 PM
எஸ்வி சார்

நேற்று நீங்கள் போட்ட விடுகதைக்கு விடை
சி கே கண்டு பிடித்து விட்டார் .
2991972 என்பதை நான் ஏகப்பட்ட permutation போட்டு பார்த்தும் அதை தேதி என்று கொள்ளாமல் தமிழ் ஆங்கில எழுத்துகள் என்று கணக்கிட்டு மண்டை பணால் . அருமை சார்

gkrishna
29th September 2014, 12:47 PM
இன்று தேதி 29/9/14 -42 -ஆண்டுகள் - ஆனந்த், லதா ,விஜயகுமார்,திவான்,பஞ்சவர்ணம்,கௌரி மறக்க கூடிய கதாபாத்திரங்களா

வசந்த மாளிகை ரிலீஸ் நெல்லை சென்ட்ரல்
100 நாட்கள் கண்டு இருக்க வேண்டிய படம் .70 நாட்கள் என்று நினைவு
தீபாவளிக்கு கூட மாற்றவில்லை .
நினைவு ஊட்டிய எஸ்வி சார் அவர்களுக்கு நன்றி

gkrishna
29th September 2014, 01:02 PM
இப்படத்தைப் பற்றிய சில சிறப்புத் தகவல்கள் பிரேம் நகரம் என்ற பெயரில் 1971 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக்தான் ‘வசந்த மாளிகை’.

தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வரர ராவ், வாணி ஸ்ரீ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

பின்னர் இந்த படம் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டு ராஜேஷ் கண்ணா, ஹேமமாலினி நடிக்க பிரேம் நகர் என்ற பெயரில் 1974 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.

மூன்று மொழிகளிலும் படத்தை இயக்கியவர் கே. எஸ். பிரகாஷ்ராவ்.

கொடூரி கெளசல்யா தேவி எழுதிய ‘பிரேம் நகர்’ என்ற நாவலை மையமாக வைத்துதான் இந்த படத்தையே உருவாக்கினார்கள்.

தமிழ், தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். ஹிந்திப் படத்திற்கு இசையமைத்தவர் எஸ். டி. பாமன்.
மூன்று மொழிகளிலுமே இந்த படத்தின் பாடால்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

தமிழில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிக்கப்படுகின்றன.
படத்தின் கதையும் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த சம்பவமும் ஒன்றாக இருந்ததாம். அதனால் கவிஞர் இப்படத்திற்கு மிகவும் சிறப்பாக பாடல்களை எழுதி தந்தார் என்று அப்போது சினிமா வட்டாரத்திதில் பேசிக் கொண்டார்களாம்.

‘ஏன் ? ஏன் ? ஏன் ? ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’, ‘குடிமகனே பெருங்குடி மகனே நான் கொடுக்கட்டுமா’, ‘கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ’, ‘மயக்கமென்ன இந்த மெளனமென்ன’, ‘குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்து விடலாம்’, ‘யாருக்காக இது யாருக்காக’ என அனைத்துப் பாடல்களுமே கேள்வியின் வடிவம் அதிகம் இருக்கும்.

இப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தவுடன் ஹீரோவாக சிவாஜிகணேசன் மட்டுமே நடிக்கப் பொருத்தமானவர் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்தார்கள்.ஹீரோயினாக நடிக்க பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் தெலுங்கில் நடித்த வாணிஸ்ரீயின் அழகான தோற்றம் தமிழிலும் நடிக்க வைத்து விட்டது.

சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், பண்டாரிபாய், பாலாஜி, சுகுமாரி, ரங்காராவ், வி. கே. ராமசாமி, புஷ்பலதா, ராமதாஸ், சி கே. சரஸ்வத, சி. ஐ. டீ. சகுந்தலா, ரமா பிரபா, செந்தாமரை என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
படத்தின் வசனம் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று அதை எழுதியர் பாலமுருகன்.

இப்படத்தில் முதலில் கிளைமாக்கில் சிவாஜிகணேசன் இறந்து விடுவதாக காட்சியமைத்திருந்தார்கள். தியேட்டரில் மக்கள் அதை விரும்பவில்லை என்று அறிந்ததும், பின்னர் சிவாஜியும் வாணிஸ்ரீயும் ஒன்று சேர்வது போல காட்சியை மாற்றி தியேட்டர்களுக்கு பிரின்ட் போட்டு அனுப்பி வைத்தார்கள். படத்திற்கு கூட்டம் அலை மோதியது.

இலங்கையில் அதிக ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் படம் ‘வசந்த மாளிகை’ 12 ஊர்களில் 14 அரங்குகளில் ஓடியது.
இலங்கையில் இரண்டு அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடும் வித்ததில் ஓடிய முதல் படமும் ‘வசந்த மாளிகை’ தான்.
கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கில் 287 நாட்களும், யாழ்ப்பாணம் வெலிங்டன் திரையரங்கில் 208 நாட்களும் ஓடியது.
தமிழ் நாட்டில் மதுரை நியூ சினிமா திரையரங்கில் 200 நாட்களும், சென்னை சாந்தி திரையரங்கில் 175 நாட்களும், கிரெளன், புவனேஸ்வரி திரையரங்குகளிலும், திருச்சி ராஜா திரையரங்கிலும் 140 நாட்களுக்கும் ஓடியது.

மேலும், தஞ்சை, கோவை, சேலம், வேலூர், ஈரோடு, கடந்தை, மாயவரம் ஆகிய ஊர்களிலும் 100 நாட்களுக்கும் மேலும், மற்ற பல ஊர்களில் 50 நாட்களுக்கும் மேல் ஓடியது. இது அந்த காலத்தில் மாபெரும் சாதனை.

இப்படத்தின் 100வது நாள் விழா ஒரே நாளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் ஆகிய நான்கு ஊர்களில் 1973 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காலை 10 மணிக்கு திருச்சியிலும், பகல் 3 மணிக்கு தஞ்சாவூரிலும், மாலை 7 மணிக்கு கும்பகோணத்திலும், இரவு 10 மணிக்கு மாயவரத்திலும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான காதல் திரைப்படங்கள் வந்திருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளாக அடிக்கடி திரைப்பிடப்படுவதும் வசூலில் மாபெரும் சாதனை படைப்பதுமாக இருந்து வருவது இந்த ஒரு படம் மட்டுமே.

ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழாப் படங்களை 1959, 1961 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 1972 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மூன்றாவது முறையாக 2 வெள்ளி விழாப் படங்களை தந்தது.

‘வசந்த மாளிகை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் திடீரென்று காலமாகிப் போனார். இறுதிச் சடங்குகள் முடிந்த ஐந்தாம் நாள் வீட்டிலிருந்த சிவாஜி, தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வந்து நெஞ்சில் துக்கத்தை உண்டாக்குகிறது. எனவே படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் மனம் அமைதியாவது இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளரும் சரி என்று சொல்லி படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கியிருக்கிறார். நடிகர் திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கம் என்ன இந்த மெளனமென்ன’ என்ற காதல் ரசம் சொட்டும் பாடல் காட்சி கவலையின் ரேகையே முகத்தில் தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார் அதுதான் சிவாஜி தொழில் வேறு, குடும்பம் வேறு என்று கடைசி வரை உறுதியாக இருந்தவர்.

இப்படத்திற்காக ‘அடியம்மா ராசாத்தி’ என்று தொடங்கும் ஒரு டூயட் பாடல் பாடமாக்கப்பட்டது. அது ரெக்கார்டு பிளேயார்களிலும் இடம்பெற்று வானொலிகளிலும் வெகுகாலம் ஒலிபரப்பாகி வந்தது ஆனால் திரைப்படத்தில் ஏனோ இடம் பெறவில்லை. முதன் முதலாக வண்ணத்தில் ‘ஸ்லோமோஷன்’ முறையில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் ‘வசந்த மாளிகை’. இப்படி பல சிறப்புக்களையும் சாதனைகளையும் புரிந்தது வந்த மாளிகை.

காதலை காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

http://cinema.vikatan.com/images/gallery/Movie_Stills_(24).jpg

thanks-maalaimalar

gkrishna
29th September 2014, 01:07 PM
வசந்த மாளிகை 1972 மதுரை நியூ சினிமா வில் தானே ரிலீஸ் சி கே சார் /முரளி சார்

Gopal.s
29th September 2014, 01:08 PM
வசந்த மாளிகை-1972

எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.

மதனுடன் ரதி இணையின் இன்பம் இத்தரணி க்கல்லவோ
அதனுடன் விடுக்க பட்ட விரக பாணங்கள் வீசிய காதற்புயல்

ஆனந்தன் தன் கண்ணான லதாவை காணு முன்பு கிண்ணத்தை ஏந்திய எண்ணங்களில்
ஞானந்தனை முறித்து மது மாது ஆனந்தங்களில் தன்னை தொலைத்தவன்

கெட்டு போனவனே அன்றி கெட்டவனுமல்ல கெடுத்தவனுமல்ல
விட்டு விட்ட மனசாட்சியை தேடியலையும் தூய துணையரியா வீட்டு அனாதை

தொட்டு பார்த்து தூசு தட்டி கலைமகள் கைபொருளை சீராட்ட வந்தாள் ஒரு வாணி
விட்டு பட்ட வீட்டு சொந்தங்களோ தங்களுக்குள் விலங்கிட சுயநல சூழல் வளர்க்க

குடிலில் இணைந்தாலே குதூகல இணைப்பு மாளிகையில் வசந்தமாக தரும் மயக்கமென்ன
முடிவில் வசந்த மாளிகையில் யாருக்காக என உலகே உணர்ந்து ஊருக்கும் உணர்த்தியது

தாயிருந்தும் செவிலி மடியில் உறங்கிய சேய் இரவல் தாயை கௌரவ கொலை கொள்ளும்
பேயிடமிருந்து ஞாயமற்ற காயங்களில் மனதை தொலைக்க சுயம் தொலைத்தவன்

வசந்த மாளிகை வடித்து தன்னை மீட்டியவளால் தான் தன்னை மீட்ட அதிசயம்
கசந்த மாளிகையானதோ காயம் தரும் இங்கிதமற்ற ஒரே கேள்வியால்

மருந்தானவளே காயம் தருகிறாள் தன் சுயம் காக்க மீட்ட வீணையின் தந்தியருக்கிறாள்
அருமையான ஆத்மாவை மீட்க ஆட்கொண்ட தேவதையின் சிரத்தில் செய்த சத்தியம்

மருத்துவரோ மதுவை மருந்தாக்க நாடிய மாதுவுக்கு நாடேன் மதுவை என்ற
இருமனம் கேட்கும் வாலிப சேயை நாடாதே என சொந்தமின்றி சொல்லி விட

திருமணம் முடிக்க செல்லும் திருமகளை தீர வாழ்த்தி நஞ்சுதனை
விரும்பி நாடி ஓலமிடும் ஊமை காதலனின் உரத்த ஓசையின் உளமறிந்து

அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.

மானிட ஜாதியை விளித்து துவங்கும் நடிப்பு தேவன்
வானிடை உலவும் வனிதா தேவதையின் கை கோர்க்கும்

வைபவம் காண வசந்த மாளிகைகளின் கொட்டகை வாசல்களில்
எய்பவன் எங்கோ இருக்க எங்கள் மீதெல்லாம் மன்மத அம்புகள்

கிண்ணத்தை ஏந்தி களிநடம் புரிபவன் விசையுறு பந்தாக
எண்ணத்தை எல்லாம் வண்ண ஜாலமாய் வாரியிறைப்பதை

கண்ணதாசன் பாடலுக்கு என்னத்தை சொல்ல இதய கண்ணனின்
விண்ணதிரும் சிருங்கார ஜால வித்தை விண்ணவரும் காணா விந்தை

கன்னியருடன் கன்னமிடும் இக்கள்வனா எல்லோரின்
இன்னுயிரை கவ்வி சென்ற ஆலம் விழுதுகள் போல் வந்த

ஆயிரம் உறவுகளுடன் கண்ணீர் கடலில் குளிக்க செய்தவன்
பாயிர பாடல்களில் ஆலத்துடனே ஆடி களிக்கிறான்

வண்ண காஞ்சனாவுடன் சிவந்து மண்ணில் ஒருநாள் கண்டு
கன்னமிட்டவன் இந்த சின்ன காஞ்சனாவையும் கொஞ்சி சுவைக்கிறான்.

அப்பராக அப்பர் மக்களை அதி உன்னத அமைதியால் அசத்தியவன்
தப்பராக தோன்றி லோயர் தளத்தையும் துதி பாட துள்ளுகிறான்

வானத்து தேவதையோ வரவேற்பறையில் வரவேற்க வாலிப வண்ணங்கள்
கானத்தின் கணத்தில் காமுகன் கண்களுக்கு கன்னல் கரும்பாக

வாலிப வண்ண எண்ண விடலை கனவுகளில் கடலை கடக்கும் காற்றாக
ஜாலி பண்ண ஜோலி பார்க்கும் வெறி வேங்கையின் வெற்றிகாணா

இந்த நேரம் இன்னும் கூடாதா என் கனவு கன்னியின் தனங்கள் தரிசனம்
வந்த வாலிப மதனோ காக்கும் கரங்களாய் கனவை கலைக்க

உந்தலுடன் உன்மத்தினிடம் வேண்டாமெனில் விடு விரும்பினால் தொடு
கந்தலை மேலுடையால் போர்த்தி கன்னியை கனிய காண்பான்

குடிமகனை களிக்க வரும் கணிகையை காம கண்களால் களித்து
கடித்து முடிக்கும் கள்வெறியுடன் காந்த கவர் கண்களின் கவர்ச்சி

உதைத்து தள்ளி உன்மத்தம் ஊட்டி பதைத்து எழுப்பி பஞ்சணையில்
கதைத்து நெஞ்சணைத்து உடையென்ற திரை உடைக்கும் ஆனந்தனின் ஆனந்தம்

வீணை மீட்டும் வாணியை வீண் பொருளாய் வாட்டிஎடுத்து வெகுண்டவன்
இணை தேடும் இன்ப பரப்பின் பரபரப்பின் பார்வையில் கனிந்த நோக்கு

காந்தமென்ற சொல்லுக்கு கண்ணழகன் கண்களே காணு பொருளாய் கண்டோம்
சாந்தம் வென்ற சந்தத்தில் சாந்தியை பெற்றவன் சாந்தி பெரும் சாரம்

பறப்பதை தடுக்க விரும்பா திருந்திய குறும்பனின் விருதா விருப்பம்
திறப்பதை திறந்த திருமகளை தீர தீண்டுமன கரும்பனான விரும்பன்

ஆதி மனிதன் ஆடும் நடனம் வருணனையே வானம் திறக்க செய்யும்
பாதியில் நின்று ராசாவுடன் ராணி இணைவு காண குடிலில் மன்மத

பாணத்துடன் பருவ தாக போக பார்வையுடன் பழத்தை சுவைக்கும்
நாணத்துடன் நல்கி நாடும் நல்லிதயம் விளித்து கொள்ளியால் புகை நாடும்

இளமானுடன் இளமானுடன் இதம் காணும் இளமையுடன் தனிமை
வளமான வாலிபனுக்கு வருமோ உளம்நாடும் உள்ளத்துணிவு

குடிலிலே இணைவு காணும் இணைக்கு இல்லம் காண மாளிகை
மடியிலே மகிழ்ந்து கன்னத்தில் முத்தமிட்டு கள்வெறி கொள்வதும்

கழுத்திலே முத்தமிட்டு காண்போரையல்லாம் கனவு கடலில் கவிழ்த்து
எழுத்திலே வடிக்கவொன்னா ஏந்திழையாளுடன் மெல்லிசைவு அசைவு நடமாடி

பிரிவு துயருக்கு பெருங்காப்பியமே படித்து துவண்டு துடித்து
பரிவு துயர் ஊட்டி இருமனம் வேண்டிய பெருமன வேள்வி வடித்து

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
பாருக்காக இது ஊருக்காக என்று உலகே வியந்து ஊரறியா வெற்றி தந்து

முடியா மாளிகையாய் காதல் காவியங்களுக்கு கதை மாளிகையாய்
அடிமுடியறியா நடிப்பு சுரங்கத்தின் விடிவெள்ளி வடிவு வண்ணம்

கண்டங்கள் கண்டு வென்ற நடிப்பினை கண்டெங்கள் இதயம்
வண்டென நாடி நல்கும் வண்ண மலர் வாணிக்கும் வாழ்த்து சொல்லி வணங்கும்