PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

gkrishna
8th July 2014, 01:24 PM
the following is the one information read in some other article.just to share and also to know whether it is true ?

Henry Daniel and Joseph krishna were Assistant music directors who assisted MSV. They were well versed in Piano and western violin.
Fliflo, Velai_Vetti_nothing and others who rarely discuss music in tfm forum should not mistake me when I place this fact -
Henry Daniel joined IR orchestra in late 70s and that was his last experience since he was openly insulted in the studios by IR,
and the poor senior musician left his profession and passed away later.
Joseph krishna who remained an assistant to MSV was good in piano and violin. He remained in his standard and became a Religious preacher before he passed away, content as a musician.

gkrishna
8th July 2014, 01:33 PM
வாசு சார்
அனுபவித்த படம் அனுபவி ராஜா அனுபவி

நாகேஷ் இன் versatile அண்ட் இன்னொசென்ட் காமெடி படம் முழுவதும் வெளிப்படும். படம் முழுவதையும் தோளில் சுமந்து இருப்பார்
எதிர்நீச்சல்,நீர்க்குமிழி,பாமா விஜயம் போல

ஆனந்த விகடன் மதன் ஒரு பேட்டியில் கூறியது நினைவிற்கு வருகிறது

பாலச்சந்தர் மீண்டும் (எல்லாவற்றியும் ஒதுக்கி விட்டு ) அவருடைய பழைய படங்களை போல் கொடுப்பாரா

gkrishna
8th July 2014, 01:35 PM
வழக்கமாக ஜெய(ந்தி) தான் வருவார் இதில் எப்படி ஜெய(பாரதி)

gkrishna
8th July 2014, 01:37 PM
வாசு சார்
இந்த ஸ்டில்களை எப்படி இணைக்கிறீர்கள் பதிவிற்கு நடுவில்
இந்த வித்தையை சொல்லி தரகூடதா

Gopal.s
8th July 2014, 01:42 PM
எனது favourite pairs ரவி-பாரதி மற்றும் T .M .S -எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கிய ஜாலி படம்.

பாவம் வங்காள பாணியில் மறக்க முடியாமல் அடி பட்ட மாறன், மீள தேர்ந்தெடுத்த சுவாரஸ்ய வழி ,happening hero and safe bet . நன்றாகவே வெற்றி பெற்றார்.

ரவியும் ராதாவும் தற்செயலாய் teasing ஆரம்பித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். மூர்த்தி என்ற allround கேட்டவன், தன சிங்கப்பூர் மாமா பெண் ராதாவை (சொத்தையும் )அடைய தன் மாமா உருவம் கொண்ட தனது சமையல் காரனை வைத்து ஆள்மாறாட்டம் செய்ய ,அதை ரவி தன் நண்பன் பாபுவுடன் சேர்ந்து முறியடிக்கும் குட்டி கதை.

உற்சாகம் வாலிப விருந்து பாடலில் தொடங்கி ,அவன் காதலித்தான் என விரிந்து ,மணமகள் தேவை என மனு போட்டு ,எங்கே எங்கே என் மனது என்று தேடி சுபமாய் சென்னபட்டினம் போய் முடியும். ரெண்டு teasing song ,ஒரு அருமையான டூயட் ,பாரதி தனியாக ஒரு பாடல் ,சந்திரபாபு பெண் வேட பாடல் என்று A ,B ,C என்று அத்தைனையும் குதூகலிக்கும். சுதர்சன் A .V .M விட்டு வேதனை பிரிவில் , பூம்புகார், வாலிப விருந்து ரெண்டு படங்களிலும் (வெவ்வேறு Genre ) அசத்தி பட்டை கிளப்பினார். இதில் வாசுவை மகிழ்விக்க என்றே அனைத்தும் ஈஸ்வரிக்கே.

ரவி -பாரதி இணையில் வந்த best இதுதான். ரெண்டு பெரும் திருஷ்டி சுத்தி போடலாம் போல அவ்வளவு அழகு ,பொருத்தம்.ரெண்டு பெரும் இளமை,உற்சாகம் பொங்கி வழிய முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை தூள் கிளப்பியிருப்பார்கள்.பாலையா ,சந்திரபாபு ,அசோகன் அனைவருமே காட்சிகளுக்கு மெருகூட்டி சுவாரஸ்ய படுத்துவார்கள்.

படம் எந்த வித சிக்கல், செண்டிமெண்ட் இல்லாமல் முழுவதும் action ,romance ,situational comedy என்று போகும்.

கிளைமாக்ஸ் சண்டை ஜாலி. ஜூடோ ரத்னம் சண்டை, சின்னி-சம்பத் நடனங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கும். மாறன் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக விருந்தாக்கி, வெற்றி கண்டார்.

நிஜ வாலிப விருந்துதான். (அத்தனையும் எனக்கு பிடித்த chat item கள் .)

https://www.youtube.com/watch?v=qKpo4x5UlP4

vasudevan31355
8th July 2014, 01:59 PM
வாசு சார்
இந்த ஸ்டில்களை எப்படி இணைக்கிறீர்கள் பதிவிற்கு நடுவில்
இந்த வித்தையை சொல்லி தரகூடதா

ரொம்ப சிம்பிள் சார்

1.இமேஜைக் காப்பி பண்ணிக்கோங்க

2. Quick Reply விண்டோவில் insert image box ஐ கிளிக் செய்யுங்கள்

3.அதில் வரும் URL கட்டத்தில் இமேஜை paste பண்ணுங்கள்.

4.அதற்கு முன் Retrieve remote file and reference locally இல் உள்ள tik மார்க்கை எடுத்து விடுங்கள்.

5. பின் ok கொடுங்கள்

அம்புடுதேன்.

mr_karthik
8th July 2014, 02:56 PM
ரொம்ப சிம்பிள் சார்

1.இமேஜைக் காப்பி பண்ணிக்கோங்க

2. Quick Reply விண்டோவில் insert image box ஐ கிளிக் செய்யுங்கள்

3.அதில் வரும் URL கட்டத்தில் இமேஜை paste பண்ணுங்கள்.

4.அதற்கு முன் Retrieve remote file and reference locally இல் உள்ள tik மார்க்கை எடுத்து விடுங்கள்.

5. பின் ok கொடுங்கள்

அம்புடுதேன்.

எனக்கும் இந்த வித்தை தெரியாமல்தான் அட்வான்ஸ்ட் ரிப்ளைக்குப் போய் தம்மாத்தூண்டு, தம்மாத்தூண்டு படமாக சில சமயம் இணைத்து வந்தேன்.

இனி இந்த வழியில் முயன்று பார்க்கிறேன்.

mr_karthik
8th July 2014, 03:14 PM
டியர் வாசு சார்,

கண்ணழகி விஜயலலிதாவின் ஸ்டில்கள் அனைத்தும் அருமையாக உள்ளன. ரொம்ப சிரமப்பட்டு என்னைப்போன்ற ரசிகர்களுக்காக தேடியெடுத்து, பதித்தமைக்கு மிக்க நன்றி.

பேலன்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் ஜோதிலட்சுமி ஸ்டில்களை போட்டு விடாதீர்கள்

mr_karthik
8th July 2014, 03:20 PM
Karthik, glad to see someone praising Vijayalalitha... adeyappa sokkavaikkum parvai, arpudhamana nadana thiran, thevaiyana idangalil/padangalil nalla nadippu ena veluthu vaangiyavar.

டியர் ராஜேஷ் சார்,
கவர்ச்சி நடன நடிகைகளில் விஜயலலிதாவை எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஜெய்குமாரிக்கு அடுத்தபடியாகத்தான். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விஜயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடத்தவறியதில்லை.
நடிகர்திலகம் திரிகளின் ரெகுலர் வாசகர் மற்றும் பங்களிப்பாளரான உங்களுக்கு தெரிந்திருக்கும். நடிகர்திலகம் பாகம் 11-ல் நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர்' என்ற சீரீஸில் விஜயலலிதாவைப் பற்றிய தனிப்பதிவு எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். அத்தொடரில் இவரைப்பற்றி மட்டுமல்லாது ஜெய்குமாரி, பிரமீளா, சத்யப்ரியா, ஏ.சகுந்தலா, பத்மாகன்னா, சினேகலதா, விஜயஸ்ரீ ஆகியோரை பற்றியும் எழுதியிருக்கிறேன். ஆலம், தீபா, ஜெயமாலினி, சில்க் உள்பட இன்னும் சிலரைப்பற்றிய பதிவுகள் முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் "அங்கே" பதிவிட எதிர்ப்பு வந்ததால், பழசு, புதுசு எல்லாவற்றையும் கலந்து தனித்தியாகப் பதிவிடாலாமா என்ற எண்ணம் உள்ளது..

Gopal.s
8th July 2014, 03:26 PM
டியர் வாசு சார்,


பேலன்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் ஜோதிலட்சுமி ஸ்டில்களை போட்டு விடாதீர்கள்

ஹை ...இது போங்காட்டம். ஏற்கெனெவே பேசி ஏற்பாடெல்லாம் செஞ்சாச்சு.வாசு என்னை போலவே ஜோதி கட்சியாக்கும்.

mr_karthik
8th July 2014, 04:13 PM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷல் பதிவாக வாழ்க்கை வாழ்வதற்கே படத்தில் இடம்பெற்ற 'நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான்' என்ற அருமையான பாடலை எதிர்பாராமல் தந்து இனிய பொழுதாக்கி விட்டீர்கள்.

அந்தப்படத்தை நிற்க வைத்ததே பாடல்கள்தான். இந்த பாடலுக்கு முன்னர் வரும்
'அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்'
பாடலும்,

படத்தில் முதல் பாடலாக இடம்பெறும்
'அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்குமலை
மேற்குமலை எங்கள் மலை'
பாடலும்

படத்தில் இரண்டு முறை (சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும், பெரியவர்கள் சோகமாகவும் பாடும்) நீங்கள் குறிப்பிட்ட
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடுகட்டி
பாடலும் என, அனைத்துப் பாடலுமே அருமைதான்.

ஜெமினி - சரோஜாதேவி ஜோடியின் இன்னுமொரு கல்யாணப்பரிசு, கைராசியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றியது...

gkrishna
8th July 2014, 04:28 PM
http://i1.ytimg.com/vi/TufKtnsHujw/movieposter.jpg?v=52872eea http://i1.ytimg.com/vi/27avq1GpIFo/movieposter.jpghttp://i1.ytimg.com/vi/-nFfkP_X5B0/movieposter.jpg?v=539ed136 http://antrukandamugam.files.wordpress.com/2013/12/rajkogila-enga-paattan-sothu-1975.jpg

மற்ற இயக்குனர்களுக்கு எல்லாம் பக்கம் பக்கமாக எழுதினால் தான் மௌசு . ஆனால் இந்த இயக்குனருக்கு படத்தை பார்த்தாலே பரவசம்

கண்ணோடு கண் நோக்ககின் வாய் சொற்கள் பயனுமில


பெண் ஒரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி

அ ஆ சொல்லி கொடுத்த வாசு சார் அவர்களுக்கு நன்றி

gkrishna
8th July 2014, 05:00 PM
http://i1.ytimg.com/vi/wnmhz1YVAow/maxresdefault.jpg
அதை விட ரகசியம் 1978
க்ருபா சங்கர் இயக்கம்
(இவர் துணை நடிகராக இருந்து இயக்குனர் ஆகி பின் துணை நடிகர் என்று கேள்விபட்டேன் )
கண்ணதாசன் கதை
சிவகுமார் ஜெய்கணேஷ் படபட் சுமா நடித்து வெளிவந்தது
ஷங்கர் கணேஷ் இசை
மலேசிய வாசுதேவன் ஜானகி குரல்களில்
செங்கரும்பு தங்கக்கட்டி ஏலலன் குயிலே குயிலே அன்னமே

நல்லதொரு குத்து பாடல்

http://www.youtube.com/watch?v=wnmhz1YVAow

vasudevan31355
8th July 2014, 05:56 PM
செங்கரும்பு தங்கக்கட்டி ஏலலன் குயிலே குயிலே அன்னமே

கிருஷ்ணா சார்!

அன்ன(ம்)மே:razz:

http://www.inbaminge.com/t/a/Athaivida%20Ragasiyam/folder.jpg

vasudevan31355
8th July 2014, 06:08 PM
கிருஷ்ணா சார்!

ஆசிரியருக்கு(!) மாணவர் தந்த 'எங்க பாடன் சொத்து ராஜ்கோகிலா பா(ப)டம். ஆஹா! மாணவர் என்றால் இப்படியல்லவோ இருக்கணும்! குருதட்சணை அபாரம் சார்!:happydance:

காலையில் நீங்க சொன்ன மாதிரி

செம லூட்டி சார்
உங்கள் கொட்டம் தாங்கலையே
ஜாலியாக தான் சொல்லுதேன்:grin:

vasudevan31355
8th July 2014, 06:15 PM
அருமை கார்த்திக் சார்!

நம் பாடகி பாடிய (பச்ச குத்தலையோ பச்சை)

அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்குமலை
மேற்குமலை எங்கள் மலை

பாடலை மறந்து விட்டேன். அம்சமாக ஞாபகப்படுத்தி கார்த்திக் சார் கார்த்திக் சார்தான் என்று நிரூபித்து விட்டீர்கள்.


https://www.youtube.com/watch?v=EQds_Ko5FbQ

எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்

பாடலின் இடையிசையாக வரும் அந்த 'டொன் டொ டொ டொன் டொன் டொ டொ டொன்' மலைநாட்டு மியூசிக்கை மறக்கவே முடியாது.

vasudevan31355
8th July 2014, 06:30 PM
டியர் வாசு சார்,

கண்ணழகி விஜயலலிதாவின் ஸ்டில்கள் அனைத்தும் அருமையாக உள்ளன. ரொம்ப சிரமப்பட்டு என்னைப்போன்ற ரசிகர்களுக்காக தேடியெடுத்து, பதித்தமைக்கு மிக்க நன்றி.

பேலன்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் ஜோதிலட்சுமி ஸ்டில்களை போட்டு விடாதீர்கள்


அய்யய்யோ கார்த்திக் சார்! பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.:smile: பெரிய இடத்து விஷயம் சார் பெரிய இடத்து விஷயம். கூட்டணி முறிவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற ரேஞ்ச் வரை போய்விட்டது.:smile:

இருந்தாலும் கார்த்திக் சார் இன்னும் பெரிய இடம் என்பதால் கூட்டணி மாறி விடலாமா என்ற நினைப்பு இப்போது வந்துள்ளது. :confused2:

பார்க்கலாம்.

Gopal.s
8th July 2014, 06:50 PM
வாசு,

இந்த திரியில் தற்காலிக ஓய்வு எடுக்கு முன்.....

இந்த திரி யோசனை நாம் போனிலும் ,நேரிலும் பழைய பாடல்களை அலசும் போது உருவானது. நீங்கள் துவங்குங்கள் என்றாய். ஆனால் நான் பிடிவாத கருத்துகள் கொண்டவன். நீதான் சரியென்று எனக்கு தெரியும்.நீ சொன்னவுடனே இணைய முடிவு செய்தேன். உன்னுடைய உற்சாகம்,குறும்பு,உழைப்பு, நட்பான அணுகுமுறை எனக்கு மிக மிக உவப்பானது.இந்த திரி ஐந்து நட்சத்திரம் வாங்கிய சந்தோஷத்தை முதலில் உன்னுடன் பகிர்ந்தது (ஷிப்ட் இல் இருந்தாய் அப்போது)நானே.இப்போது எல்லோருடைய எதிர்பார்ப்புக்கும் ஈடு கொடுத்து நீ செய்யும் ஜாலம்....Hats off .....

கார்த்திக்,

நீங்கள் வந்தாலே ஒரு தனி களைதான் .அடடா இந்த பதிவுக்கு நாளை கார்த்திக் பதில் எப்படியிருக்கும் என்று எதிர்பார்ப்போம்.உங்கள் நீட்சி துணை பதிவுகள்,எங்கள் முதுகு தடவி எங்களை இன்னும் கொஞ்ச தூரம் கூட்டி செல்லும் நெகிழ்வு.உங்களிடம் உரையாடுவதில்,உரையாட போவதில் ,போராட போவதிலும் மகிழ்ச்சியே.

கிருஷ்ணாஜி,

இந்த திரியின் surprise package நீங்கள்தான். என் சிறு வயது நண்பன் ஒருவனுடம் கிரிக்கெட் ஆடும் போது , அவன் பந்து வீசும் அழகே தனி. ஒரு பால் பாஸ்ட். அடுத்து லெக் பிரேக்.அடுத்து கூக்ளி.என்று ஒவ்வொன்று ஒவ்வொரு விதம். ஆனால் length ,line எதுவுமே இருக்காது.ஓவருக்கு ஒன்று அல்லது இரண்டு சரியாக வரும் போது செட்டில் ஆகவே முடியாத bats man stump பறக்கும்.அந்த மாதிரி புகுந்து விளையாடுகிறீர்கள். திரிக்கே புது மாதிரி ஒரு களை .என்ன ஒரு நினைவு சக்தி. அடடா.

அமர்க்களம். எங்கோ கொண்டு போகிறீர்கள்.

rajeshkrv
8th July 2014, 08:46 PM
டியர் ராஜேஷ் சார்,
கவர்ச்சி நடன நடிகைகளில் விஜயலலிதாவை எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஜெய்குமாரிக்கு அடுத்தபடியாகத்தான். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விஜயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடத்தவறியதில்லை.
நடிகர்திலகம் திரிகளின் ரெகுலர் வாசகர் மற்றும் பங்களிப்பாளரான உங்களுக்கு தெரிந்திருக்கும். நடிகர்திலகம் பாகம் 11-ல் நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர்' என்ற சீரீஸில் விஜயலலிதாவைப் பற்றிய தனிப்பதிவு எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். அத்தொடரில் இவரைப்பற்றி மட்டுமல்லாது ஜெய்குமாரி, பிரமீளா, சத்யப்ரியா, ஏ.சகுந்தலா, பத்மாகன்னா, சினேகலதா, விஜயஸ்ரீ ஆகியோரை பற்றியும் எழுதியிருக்கிறேன். ஆலம், தீபா, ஜெயமாலினி, சில்க் உள்பட இன்னும் சிலரைப்பற்றிய பதிவுகள் முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் "அங்கே" பதிவிட எதிர்ப்பு வந்ததால், பழசு, புதுசு எல்லாவற்றையும் கலந்து தனித்தியாகப் பதிவிடாலாமா என்ற எண்ணம் உள்ளது..

yes yes. adhai yellam padithen kuripaaga A.sakunthalavai patri neengal kuripittadhu (male like lady ... 100% true) .. yes yes .. Somehow even though VJayalalitha did item numbers she can never be branded as item girl. she was more than that. she did character roles, dancer and good performer too.

gkrishna
9th July 2014, 09:39 AM
வாசு,

இந்த திரியில் தற்காலிக ஓய்வு எடுக்கு முன்.....


கிருஷ்ணாஜி,

இந்த திரியின் surprise package நீங்கள்தான். என் சிறு வயது நண்பன் ஒருவனுடம் கிரிக்கெட் ஆடும் போது , அவன் பந்து வீசும் அழகே தனி. ஒரு பால் பாஸ்ட். அடுத்து லெக் பிரேக்.அடுத்து கூக்ளி.என்று ஒவ்வொன்று ஒவ்வொரு விதம். ஆனால் length ,line எதுவுமே இருக்காது.ஓவருக்கு ஒன்று அல்லது இரண்டு சரியாக வரும் போது செட்டில் ஆகவே முடியாத bats man stump பறக்கும்.அந்த மாதிரி புகுந்து விளையாடுகிறீர்கள். திரிக்கே புது மாதிரி ஒரு களை .என்ன ஒரு நினைவு சக்தி. அடடா.

அமர்க்களம். எங்கோ கொண்டு போகிறீர்கள்.

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/11/Ellorum-Nallavare.jpg

அனைவருக்கும் காலை வணக்கம் 09/07/14

வாசு சார்

காலையில் உங்களை போன் செய்து தொந்தரவு செய்து விட்டேன் மன்னிக்கவும் .நீங்கள் அப்போதுதான் இரவு பணி முடிந்து வந்து இருந்தீர்கள் .இருந்தும் எனக்காக சிறிது நேரம் ஒதுக்கியது மிகவும் மகிழ்ச்சி .
இன்றைய தமிழ் ஹிந்து பேப்பர் இல் என்னதே கண்ணைய பற்றிய ஒரு கால் பக்க குறிப்பு திரு ராஜாமணிகம் அவர்கள நினவு கூர்ந்து இருந்த்தார்கள்
அதை சொல்லவே போன செய்தேன்

ராகதேவன் கோபால் சார்

ஓய்வு அறியா சூரியன் நீங்கள் உங்களுக்கு ஓய்வு தேவையா
ஓய்வுக்கு ஓய்வு கொடுங்கள் .
நீல வானிலே செந்நிற பிழம்பாக சில வேளை சுட்டு எரித்தாலும்
குளிர்கின்ற நிலவாய் எங்கள் நெஞ்சமெல்லாம் நீக்கமர நிறைந்து நிற்கும் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் முத்திரை பதித்த ஒன்று என்றால் அது மிகை ஆகாதே. நேற்று இரவு மெகா டிவி யில் அமுத கானம் நிகழ்ச்சியில் சிநேகிதி திரை படத்தில் நீங்கள் மிகவும் சிலாகித்த
"தங்க நிலவே 'நீ இல்லாமல்' நினைத்து பார்க்க முடியுமா " பாடல் ஒளி பரப்பானது.
என்னை பற்றிய உங்களின் கருத்து மிக மிக சரி . (லைன் அண்ட் length
இல்லாத கிரிக்கெட் bowler ஆனால் விக்கெட் எடுப்பவர்). என்னுடைய மேல் அதிகாரி ஒருவர் நீங்கள் சொன்னதை போலவே ஒரு முறை கூறினார் .

ஜெமினியின் எல்லோரும் நல்லவரே 1975
பாலன் இயக்கம்
முத்துராமன் மஞ்சுளா நடித்தது
குமார் இசை
ஒரு அருமையான கிராம கதை
'பூதாய்யான மகா அய்யு ' என்ற கன்னட பட தழுவல்

https://www.youtube.com/watch?v=__01Nap94LM

vasudevan31355
9th July 2014, 09:39 AM
இன்றைய ஸ்பெஷல் (25)

இன்று உற்சாகமூட்டும், தன்னம்பிக்கை உரமூட்டும் ஒரு அபூர்வ பாடல்.

'விஜயபுரி வீரன்' (1960) திரைப்படத்திலிருந்து.

http://www.photofast.ca/files/products/7787.jpg

சி.எல்.ஆனந்தன், ஹேமலதா, ராமதாஸ், அசோகன், பாண்டி செல்வராஜ், சந்திரகாந்தா முதலிய நட்சத்திரங்கள் மின்னிய படம் இது.

அதுவரை நடனக் கலைஞராக குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த ஆனந்தன் இப்படத்தின் ஹீரோவாக்கப் பட்டார். நடனம், வாள்வீச்சு, குதிரையேற்றம் இவற்றில் சிறந்த பயிற்சி பெற்றிருந்ததால் அவர் இந்தப் படத்தில் நன்கு சோபித்து 'விஜயபுரி' ஆனந்தன் என்று படத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டார். வில்லன் நடிகர் எஸ்.வி.ராமதாசுக்கும் இது முதல் படம்.

http://4.bp.blogspot.com/_hwdv3bttE4I/SfLpCriNs2I/AAAAAAAAAjI/2s2CyhlFq6U/s1600/scan0014.jpg

சிட்டாடல் பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பு இது. ஜோசப் தளியத் ஜூனியர். நம் திருலோகச்சந்தர் திரைக்கதை அமைத்து உதவி இயக்கமும் செய்து இருந்தார். டி.ஆர்.பாப்பா இசை அமைத்திருந்தார். நல்ல வெற்றி பெற்ற படமும் கூட.

தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் இப்படத்தில் இயற்றிய சூப்பர் பாடலை இன்று பார்க்கலாம்.

பொதுவாகவே அப்போதைய கதாநாயகன் குதிரையில் ஏறி காடு, மலை, மேடு, தேயிலைத் தோட்டமெல்லாம் ஒத்தையடிப் பாதையில் வளைந்து வளைந்து சுற்றி வந்து 'டொக் டொக்' என்ற குளம்பொலியுடன் புரட்சி கருத்துக்களை டி.எம்.எஸ்.வாய்ஸிலோ அல்லது சீர்காழியாரின் வாய்ஸிலோ பாடி ஜனங்களின் நாடி நரம்புகளை அந்த சமயம் முருக்கேற்றுவான்.

ஆனால் இந்தப் படத்தில் மூன்று நாயகர்கள் ஒன்று சேர்ந்து அருமையான அறிவுத்தல் பாடல் ஒன்றைப் பாடி வருகிறார்கள். அதுவும் மிருதுவான குரல் கொண்ட ஏ.எம்.ராஜா அவர்களின் இனிய குரலில் கோஷ்டியாக. அதுதான் இப்பாடலின் வித்தியாசம், விஷேசம்.

இம்மாதிரிப் பாடல்களை கம்பீரமான குரல்களிலேயே கேட்டுப் பழகிப் போன நமக்கு சாப்ட் வாய்ஸாலும் இப்பாடலை நன்கு ரசிக்க வைக்க முடியும் என்று தன் தங்கக் குரலால் நமக்குப் புரிய வைத்திருப்பார் ராஜா. பாப்பாவும் கூட.

இரண்டாவது எளிமையான வளமான புரியக்கூடிய கருத்துக்கள். விளக்கமே தேவையில்லாத வரிகள். இனிமையான இசை.

நெஞ்சிலே துணிவும், தன்மானமும் என்றும் கொண்டிருக்க வேண்டும் என்ற தத்துவத்தை அழகாக விளக்கும் பாடல். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு உத்வேகம் பிறப்பது தவிர்க்க முடியாதது.

பொதுவாக 'ஆளுக்கொரு வீடு கட்டுவோம்'... 'சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா', என்று ரம்பம் போடும் தொல்லைக்காட்சி சேனல்கள் இம்மாதிரிப் பாடல்களை ஒளிபரப்புவதே இல்லை.

சிறுவயது முதலே இப்பாடலில் எனக்கு அப்படி ஒரு மோகம். நீங்களும் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள்.

இப்போது நம் திரியின் வாயிலாக இன்னொரு முறை.

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா

(குதிரைகள் குளம்பொலி)

வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம் போலவே சீறக் கூடாது
வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம் போலவே சீறக் கூடாது

வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
வாலிபத்தை விட்டுவிடக் கூடாது
வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
வாலிபத்தை விட்டுவிடக் கூடாது

மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

ஏட்டுச் சுரைக்காயெல்லாம்
மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்
ஏட்டுச் சுரைக்காயெல்லாம்
மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்

மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா

கார்த்திக் சார்,

'மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே'

வரிகள் நமக்காகவே எழுதப்பட்டது போல் இல்லை?


http://www.youtube.com/watch?v=4p4Nqcx5J90&feature=player_detailpage

gkrishna
9th July 2014, 11:14 AM
[QUOTE=vasudevan31355;1146274]இன்றைய ஸ்பெஷல் (25)

வாசு சார்

விஜயபுரி வீரன் திரைபடத்தில் இருந்து அவ்வளவாக வெளியில் தெரியாத பாடல் ஒன்றை நினவு கூர்ந்து உள்ளீர்கள் . மிக்க மகிழ்ச்சி
எனக்கு இந்த விஜயபுரி வீரனுக்கும் வீரதிருமகனுக்கும் கொஞ்சம் குழப்பும்

ரொம்பநாள் கழித்து அவரை அடுத்த வாரிசு படத்திலும் ஊமை விழிகள் படத்திலும் பார்த்த நினைவு.
காந்த கண் அழகி நம்ம விஜயலலிதவை செந்தூர பூவே யில் பார்த்த நினைவு

ஒருமுறை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறன்
தஞ்சையில் அசோகா ஹோட்டல் இல் நானும் என்னுடைய மேல் அதிகாரி ஒருவரும் தங்கி இருந்தோம் . . காலையில்
சுமார் 8.30 மணி இருக்கும் .வேலை நிமித்தம் ஆக தஞ்சாவூர் இல் இருந்து கும்பகோணம் சென்று அங்கிருந்து மாயவரம் சென்று
இரவுக்குள் நெல்லை செல்லவேண்டிய பரபரப்பான ஒரு வேளையில்
தீடீர் என பக்கத்துக்கு அறையில் இருந்து ஒரே சத்தம். அறையில் தங்கி இருந்தவருக்கும் ஹோட்டல் சிப்பந்திக்கும் வாக்குவாதம்
என்ன என்று எட்டி பார்த்தால் விஜயபுரி வீரன் ஆனந்தன் ஹோட்டல் சிப்பந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார்
சிறிது நேரத்தில் அந்த சிப்பந்தி வந்து எங்களிடம் "நேற்று இரவில் அடிச்ச சரக்கே இறங்கலை இன்னும் காலையிலே வேறு மீண்டும்
ஏற்றி கொண்டு எங்களை சாகடிக்கிறார் " என்று சொல்லி விட்டு போனார் .
சற்று நேரம் கழித்து ஆனந்தன் அவர்களே வந்து எங்களிடம் "தம்பிகளா மன்னிக்கவும் உங்களை காலையில் நோக அடித்து விட்டேனா ? நீங்கள் எல்லாம் படித்தவர்கள் பல ஜோலி காரர்கள். இன்று இரவு நாடகம் 7 மணிக்கு மேல் தான். அது வரை பொழுது போக வேண்டும். எனக்கு வேற வேலை எதுவும் தெரியாது . அதனால் காலையிலே கொஞ்சம் சீக்கிரம் சரக்கு (கிடா மார்க்) ஆரம்பித்து மதியம் ஒரு தூக்கம் போட்டு எழுந்து பிறகு மாலையில் நாடகம் ஆரம்பிபதற்கு சரியாக இருக்கும். அதற்குள் இந்த பாவி பய மூடை ஸ்பாயில் செய்து விட்டான் . பாருங்க ஸ்பாயில் சொன்னவுடன் நினைவிற்கு வருகிறது ஆப்பாயில் சொல்லி அரை மணி நேரம் ஆகிறது இன்னும் வரவில்லை அவனை " என்று
சொல்லி கொண்டே போனார் . நினைவலைகளை மீட்டி விட்டீர்கள் .
நானும் கொஞ்சம் நீட்டி விட்டேன் . மன்னிக்கனும் . உங்களுக்கும் பல ஜோலி இருக்கும் போய் கவனீங்க

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRU-FP6nqxbzKPMfyMpc0o_9wX3xh5SsYsSckWoo1LK4eDUL4OWME8 QSN4

vasudevan31355
9th July 2014, 11:47 AM
வணக்கம் கிருஷ்ணா சார்!

நன்றி!

பார்த்தீங்களா! 'உள்ளத்திலே உரம்' பாட்டைப் போட்டால்
ஆனந்தன் உள்ளுக்குள் 'கடா' இறக்கின சூப்பர் கதை வருதே!:)

ஆனா மனுஷன் உண்மையை மறைக்காம சொன்னாரே! அதுவரைக்கும் பாராட்டணும்.

vasudevan31355
9th July 2014, 11:55 AM
'வீரத்திருமகன்' படத்துல 'வெத்தல போட்ட பத்தினி பொண்ணு சுத்துது முன்னாலே' பாட்டுல அச்சு அசலா அப்படியே டிஸ்கோ சாந்தி மாதிரியே பொம்பள வேஷத்தில் ஆனந்தன் இருப்பார். என்ன கொஞ்சம் குண்டா தெரிவார். நல்ல டான்சர் அப்படிங்கிறதனால சமாளிச்சுடுவார்.

ஆனா அதைவிட டாப் பாடகர் திலகத்தின் குரல்தான். அம்சம். அப்பத்தைய கூடையில கருவாடு.


http://www.youtube.com/watch?v=3VAX91N3uJc&feature=player_detailpage

gkrishna
9th July 2014, 12:17 PM
வாசு சார்

"வெதுல போட்ட பத்தினி பொண்ணு சொக்குது முன்னாலே "
சூப்பர் பாட்டு இது

பாடகர் திலகத்தின் இன்னொரு குரல் பாட்டு இது
வீர திருமகன் சச்சு என்ற சரஸ்வதி ஜோடி
அந்த ஊஞ்சல் ஆடும் காட்சி

ரோஜா மலரே ராஜகுமரி
பாடாத பாட்டு எல்லாம் பாட வந்தாய்

கண்ணதாசனின் காலத்தால் அழியாத மதுர கானங்கள்
ஆனந்தன் ஆளு கொஞ்சம் குள்ளமாய் தெரிவார் .
மேல் பாடி வீதி கொஞ்சம் ஜாஸ்தி .

இந்த நேரத்தில் முத்து பெற்ற ரத்தினம் பாடி நடித்த அமரன்
படத்தில்
"வெத்தில போட்ட ஷோக்குல " பாட்டு ஒன்னு நினைவுக்கு வருகிறது
இது நிச்சயம் மனதை மயக்கும் மதுர கானம் கிடையாது .
ஜஸ்ட் for remembrance

பேச்சே வராது இதுல புன்னகவராளில பாட்டு வேற


http://www.youtube.com/watch?v=kk4oBJcAfEs

vasudevan31355
9th July 2014, 12:19 PM
'மகளே உன் சமத்து' திரைப்படம் எனக்கு ரொம்பப் பிடித்த படம். எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்காகவே நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இன்றைய திரியின் ஹீரோவாகிவிட்ட ஆனந்தன் தான் இப்படத்தின் ஹீரோ. ராஜஸ்ரீ ரொம்ப சமத்து. ஹீரோயின். முகமூடிக் கதை. எல்லாம் mask of the zorro படம் ஒன்னு வந்து அப்போ ஹிட்டானதனால் வந்த வினை.

பத்மினி பிரியதர்ஷினி நடிகவேளின் ஜோடியாக வருவார்.

http://i1.ytimg.com/vi/1tjNfBTe088/maxresdefault.jpg

எம்.ஆர்.ராதா வயதான மன்னர். நல்லவர். ஆனால் அப்பாவி. ஆட்சியை சரிவர கவனிக்க மாட்டார். எல்லாம் கெட்ட தளபதி பொறுப்பு. பெண் சபலம் ஜாஸ்தி. பத்மினி பிரியதர்ஷினியை தாரம் போல வைத்திருப்பார். ராதாவுக்கு இளமை மீண்டும் திரும்ப வேண்டும் என்று ஆசை. தோற்றத்திலும் வாலிபனாக வேண்டும் என்று பேராசை. வைத்தியர்களைக் கூப்பிட்டு அதற்கு மருந்து ரெடி பண்ண சொல்லி வற்புறுத்துவார். இவர் தொல்லை தாங்காமல் 'அய்யா தெரியாதய்யா' ராமாராவும், பக்கிரிசாமியும் வேறு ஏதோ மருந்தை ராதாவுக்குக் கொடுத்துவிட கெட்டது கதை. ஏற்கனவே கிழமாக இருந்த ராதா இப்போது படுகிழமாக உருமாறிப் போய்விடுவார். காமெடிக் கலக்கல்.

இப்படியாக ராதா போர்ஷன் போகும். செம ஜாலியாய் இருக்கும். ஆனந்தன் ராதாவின் மகன். இளவரசன். வழக்கம் போல எஸ்.ஏ.நடராஜன் தளபதி. கொடுங்கோலாட்சி. மக்கள் பிரதிநிதியாக ஒருவன் முகமூடி அணிந்து தளபதியின் சூழ்ச்சிகளை முறியடிக்கிறான். ஆனால் அது ஹீரோ ஆனந்தன் கிடையாது. பின் யார் அந்த நல்ல முகமூடி? அதுதான் சஸ்பென்ஸ். மிகுதியை வெண் திரையில் காண்க.

இந்தக் காலத்தில் வெண் திரையில் எங்கே பார்ப்பது? எல்.சி.டி.திரையில்தான் பார்க்க முடியும். நல்ல பொழுதுபோக்கு படம்.

இந்தப் படத்தில் ஒரு அருமையான பாடல்

சுசீலாம்மாவின் 'அன்பில் ஆடுதே... இன்பம் தேடுதே' பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து.

இனிமையான ஒரு பாடல்.


http://www.youtube.com/watch?v=LBTKLtrz1xk&feature=player_detailpage

vasudevan31355
9th July 2014, 12:21 PM
படமே கதை சொல்லி விடுமே!

http://www.photofast.ca/files/products/7749.jpg

mr_karthik
9th July 2014, 12:32 PM
அய்யய்யோ கார்த்திக் சார்! பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.:smile: பெரிய இடத்து விஷயம் சார் பெரிய இடத்து விஷயம். கூட்டணி முறிவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற ரேஞ்ச் வரை போய்விட்டது.:smile:

இருந்தாலும் கார்த்திக் சார் இன்னும் பெரிய இடம் என்பதால் கூட்டணி மாறி விடலாமா என்ற நினைப்பு இப்போது வந்துள்ளது. :confused2:

பார்க்கலாம்.

டியர் வாசு சார்,

கார்த்திக்கை எல்லாம் நம்பி அணி மாறி விடாதீர்கள். கார்த்திக் ஒரு மண்குதிரை. அதையெல்லாம் நம்பி ஆற்றில் இறங்குவது ஆபத்து.

களம் பல கண்ட பீஷ்மர் துணையிருப்பதே தங்களுக்கு நல்லது.

vasudevan31355
9th July 2014, 12:48 PM
டியர் வாசு சார்,

களம் பல கண்ட பீஷ்மர் துணையிருப்பதே தங்களுக்கு நல்லது.

கார்த்திக் சார்,

அதுக்கு வாயெல்லாம் பல்லா இருக்கும் இப்போ.:):):)

vasudevan31355
9th July 2014, 12:51 PM
நடிகர் ஆனந்தன் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்

http://antrukandamugam.wordpress.com/2013/09/22/c-l-anandan/

gkrishna
9th July 2014, 12:54 PM
தெய்வநாயகி - கே ஆர் விஜயா

பி.ஏ.குமார் தயாரித்த "மகளே உன் சமத்து" என்ற படத்தில், கே.ஆர்.விஜயாவுக்கு சிறு வேடம் கிடைத்தது.

நியூடோன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. எம்.ஆர்.ராதா நடித்த காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அவருக்கு இரண்டு பக்கமும், இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கே.ஆர்.விஜயா.

அவரைப் பார்த்த எம்.ஆர்.ராதா, "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.

"தெய்வநாயகி" என்று மெல்லிய குரலில் கூறினார், விஜயா.

"தெய்வநாயகியா? நோ... நோ...! இதெல்லாம் ஓல்டு மாடல் பெயர். சினிமாவுக்கு எடுபடாது. விஜயா... கிஜயா... இப்படி ஏதாவது பெயர் வைத்துக்கொள்!" என்றார், ராதா.

அவர் கருத்தை விஜயாவின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். அன்றே தெய்வநாயகி, கே.ஆர்.விஜயாவாக மாறினார்.

mr_karthik
9th July 2014, 12:59 PM
டியர் வாசு சார்,

இதெல்லாம் ரொம்ப அநியாயமான வைப்ரேஷன் சார். பின்னே என்ன?. விஜயபுரி வீரனின் 'உள்ளத்திலே உரம் வேணுமடா' பாடலைப் பற்றிய சிறப்புப் பதிவைப் படித்துக்கொண்டே வரும்போதே, ஆனந்தன் ராஜஸ்ரீ நடித்த 'அன்பில் ஆடுதே' பாடல் என்ன படமென்று கேட்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே (விஜயபுரி வீரன், வீரத்திருமகன் இரண்டும் பார்த்திருக்கிறேன். இரண்டிலும் அப்பாடல் இல்லை) தொடர்ந்து படித்துக்கொண்டே வந்தால் 'அன்பில் ஆடுதே' பாடலைப்பற்றியும் ஒரு தனிப்பதிவு போட்டிருக்கிறீர்கள். நிஜமாகவே சற்று ஆடிப்போய்விட்டேன் சார்.

இன்று ஆனந்தன் தினமாகிவிட்டதால் அவருடன் ஏற்பட்ட அனுபவத்தை அடுத்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்...

vasudevan31355
9th July 2014, 01:03 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/TMR01_zpsc71436ce.jpg

ஆனந்தன் நடிகர் திலகத்தின் 'தங்கமலை ரகசியம்' படத்தில் சிப்பாய் வேடத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு நடனமாடுவார்.

'தந்தனத்தான் தமுக்கடிச்சான் தைய்யா தக்கா போட்டுக்கினான்'

என்ற பாட்டுதான் அது. ரொம்ப ஒல்லியாக இருப்பார்.

ஜமுனா காட்டில் கூடாரம் போட்டு தங்கியிருப்பாரே! 'அமுதைப் பொழியும் நிலவே' பாடலுக்கு முன்னால் ஆனந்தன் பாடும் பாட்டு வரும்.

செம டப்பாங்குத்துப் பாடல்.

vasudevan31355
9th July 2014, 01:05 PM
டியர் வாசு சார்,

இன்று ஆனந்தன் தினமாகிவிட்டதால் அவருடன் ஏற்பட்ட அனுபவத்தை அடுத்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்...

ஆஹா! லட்டு தின்ன லஞ்சமா! (பின் எத்தனை நாளைக்குதான் 'கரும்பு தின்னக் கூலியா' சொல்லிக் கொண்டிருப்பது)

காத்துக் கிடக்கிறேன் கார்த்திக் சார்.

gkrishna
9th July 2014, 01:05 PM
மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.
மகளே உன் சமத்து என்ற படத்தில் ‘தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.

gkrishna
9th July 2014, 01:09 PM
ஆனந்தனை பற்றி மேலும் அறிந்து கொள்ள
http://imprintsonindianfilmscreen.blogspot.in/2013/05/cl-anandan.html

mr_karthik
9th July 2014, 01:13 PM
// ரொம்பநாள் கழித்து அவரை அடுத்த வாரிசு படத்திலும் ஊமை விழிகள் படத்திலும் பார்த்த நினைவு. //

டியர் கிருஷ்ணாஜி,

கமல் நடித்து மேஜர் இயக்கிய 'அந்த ஒரு நிமிடம்' படத்தின் கடைசி சண்டைக்காட்சியிலும் ஆனந்தன் நடித்திருப்பார். பழைய சுறுசுறுப்பு கொஞ்சமும் குறையாமல் சண்டையிட்டிருப்பார். அதில் கூட ஒய்.ஜி.மகேந்திரன் வில்லன் மேஜரைப்பார்த்து "என்னய்யா, உன்னால முடியலேன்னதும் விஜயபுரியிருந்து வீரனை அழைத்து வந்திருக்கியா?" என்று கேட்பார். விஜயபுரி என்ற பட்டம் அவருடன் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டதற்கு இதுவும் ஒரு அடையாளம்..

Richardsof
9th July 2014, 01:13 PM
Anandhan in Thani piravi -1966
http://youtu.be/n7GQLajoM6Q

vasudevan31355
9th July 2014, 01:13 PM
'தங்கமலை ரகசிய'த்தில் ஆனந்தன். இப்பதான் டிவிடியிலிருந்து பிடித்தேன்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_03_2VOB_000213096_zps5d918d90.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_03_2VOB_000213096_zps5d918d90.jpg.html)

gkrishna
9th July 2014, 01:18 PM
ஆனந்தன் முதல் மலையாள படம் காட்டுமைனா 1963
இதை பற்றி அறிந்து கொள்ள கீழ உள்ள லிங்க் சொடுக்கவும்

http://oldmalayalam.blogspot.in/2012/02/kaattumaina-1963.html
http://3.bp.blogspot.com/-9jn1lYl3CWI/TzmzSkXlU6I/AAAAAAAAAAQ/sVQrsxEXxjA/s320/13KIMP_OLDGOLD_921094f.jpg

vasudevan31355
9th July 2014, 01:35 PM
ஆனந்தன் நடித்த படங்களில் இன்னொரு படம் மறக்க முடியாதது.

யானை வளர்த்த வானம்பாடி மகன்.

வண்ணப்படம். கடலூரில் (முத்தையா ) மிக அருமையாகப் போனது.
காட்டில் விலங்குகள் வளர்க்கும் சிறுவன் ஆனந்தன் பெரியவனாக வளர்ந்து யானை மேல் 'ஜாம் ஜாமென்று சந்தோஷமா' பாடி வருவார்.
பாட்டு வித்தியாசமாக இருக்கும்.

'ஜாம் ஜாமென்று சந்தோஷமா
நீ தளிர்நடை போடடா ராஜபீமா'

ஆனந்தனை பெரியவனாக்கிக் காட்டும் போது பாலா குரலில் பாட்டு அதம் பறக்கும்.

'காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு
ஆனால் கடிக்கக் கூடாது என்ற நெஞ்சும் இருக்கு'.
நாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு
அந்த நாலோடு சேர்ந்து கொஞ்சம் வாலும் இருக்கு

தேவராஜன் இசை கிளப்பியிருப்பார்.

நிறைய காட்டு விலங்குகளுடன் துணிச்சலாக ஆனந்தனுக்கு சண்டைக்காட்சிகள் உண்டு.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=v8rnGMVvk_k

இன்னொரு பாடலும் அருமை

https://lh5.googleusercontent.com/proxy/UwEFFFsAIuRhewMWrON_a8OBwBGj8TOG6EtDfMb9hz8_QBH5pA uBfTg2f0vmee_TeOtlDCdFgn9Cn3uUp7BW=w426-h240-n

'ராஜா மகன் ராஜாவுக்கு ஆணை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி'


http://www.youtube.com/watch?v=rB7aUWM3KJc&feature=player_detailpage

mr_karthik
9th July 2014, 01:40 PM
அப்போதுதான் மு.க.ஸ்டாலின் அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வந்த நேரம். ஸ்டாலினும் அப்போது தி.மு.க.விலிருந்த 'விஜயபுரி' ஆனந்தனும் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் எங்கள் ஏரியாவில் நடந்தது. (ஸ்டாலின் மிசாவில் சிறை செல்வதற்கெல்லாம் முன்பு). அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தஞ்சை சுல்தான் எங்களுக்கெல்லாம் ரொம்ப தெரிந்தவர். சிறுவனான நான் அவரிடம் ஆனந்தனையும் ஸ்டாலினையும் கிட்டே பார்க்கணும் என்ற ஆசையைச்சொல்ல, சரியென்று மேடைக்கு அழைத்துச்சென்றவர் என்னை ஸ்டாலின் மற்றும் ஆனந்தன் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆனந்தன் எப்போதுமே அழகானவர். அன்றைக்கு லேசான மேக்கப்பும் போட்டிருந்தார். சுருள் சுருளான தலைமுடியுடன், மேடை வெளிச்சத்தில் ரொம்பவே அழகாக இருந்தார். என்னைப்பார்த்து 'படிக்கிறியா?. எந்த கிளாஸ்?' என்று கேட்க நான் ஏதோ உளறிவைத்தேன். 'நல்லா படிக்கணும் என்ன?' என்று சொன்னவர், நான் ஆட்டோகிராப் வாங்க புக் எதுவும் எடுத்துச்செல்லவில்லைஎன்று தெரிந்துகொண்டு, தன் பாக்கெட்டிலிருந்து அவருடைய விசிட்டிங் கார்டை எடுத்து அதில் ஆட்டோகிராப் போட்டுத்தந்தார். ஸ்டாலினும் அதே போல தன்னுடைய விசிட்டிங் கார்டில் ('மாணவர் தி.மு.க. அமைப்பாளர்' என்று போட்டிருந்தது) ஆட்டோகிராப் போட்டுத்தந்தார். இத்தனைக்கும் நான் அப்போது அந்த சின்ன வயதிலேயே தீவிர ஸ்தாபன காங்கிரஸ்காரன்.

மறுநாள் அந்த இரண்டு விசிட்டிங் கார்டுகளையும் பள்ளி தோழர்களிடம் காட்டி ரொம்ப பெருமையடித்துக் கொண்டேன்.

gkrishna
9th July 2014, 01:42 PM
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி கார்த்திக் சார்
எல்லாம் ஆனந்த மயம்

vasudevan31355
9th July 2014, 01:50 PM
Interesting Karthik sir

gkrishna
9th July 2014, 02:02 PM
மலை நாட்டு மங்கை 1974
ஜெமினி விஜயஸ்ரீ (தெய்வமகன்,அதே கண்கள் புகழ்)
இந்த படத்திலும் ஆனந்தன் நடித்து இருப்பார்
நீலா productions
p சுப்ரமணியம் இயக்கம் (இவர் திருவனத்தபுரம் நியூ, பத்மநாபா போன்ற திரை அரங்குகளுக்கு உரிமையாளர்
விஜயஸ்ரீ இன் மரணத்தில் இவர் பெயரும் கொஞ்சம் 'அடி' பட்டது )
தேவராஜன் இசை
ஜேசுதாஸ் சுசீலா குரல்களில்
'நீலமாம் கடல் அலையில் '
http://www.youtube.com/watch?v=HZdUseDXT1A

http://images.mavshack.com/PicturePublishing/IND-DVD-06-445--MALAI_NATTU_MANGAI--S_202eb1f3-19b7-47e2-ab07-2c12ba0d3c1d.jpg
http://i1.ytimg.com/vi/h2OsBmH1o20/hqdefault.jpg

mr_karthik
9th July 2014, 02:19 PM
நேற்றைக்கு முரசு தொலைக்காட்சியில் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' முழுத்திரைப்படம் ஒளிபரப்பானது. அழகான வண்ணத்தில்.

ஆனந்தன், ராஜஸ்ரீ, சோ, மனோரமா, மனோகர் உள்பட பலர் நடித்திருந்தனர். ஆனந்தன் புலியுடன் சண்டையிடும் காட்சியெல்லாம் இடம்பெற்றிருந்தது. ஆனந்தன் தரையிலேயே நடக்காமல் மரத்துக்கு மரம் தாவியே செல்வது வித்தியாசமாக இருந்தது.

1971-ல் பிரபாத்தில் ரிலீசானபோது பார்த்தது. நேற்றுத்தான் மீண்டும் பார்த்தேன்...

vasudevan31355
9th July 2014, 02:23 PM
நேற்றைக்கு முரசு தொலைக்காட்சியில் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' முழுத்திரைப்படம் ஒளிபரப்பானது. அழகான வண்ணத்தில்.

ஆனந்தன், ராஜஸ்ரீ, சோ, மனோரமா, மனோகர் உள்பட பலர் நடித்திருந்தனர். ஆனந்தன் புலியுடன் சண்டையிடும் காட்சியெல்லாம் இடம்பெற்றிருந்தது. ஆனந்தன் தரையிலேயே நடக்காமல் மரத்துக்கு மரம் தாவியே செல்வது வித்தியாசமாக இருந்தது.

1971-ல் பிரபாத்தில் ரிலீசானபோது பார்த்தது. நேற்றுத்தான் மீண்டும் பார்த்தேன்...

அச்சச்சோ! தெரியாமல் போயிற்றே! நானும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன. ரிலீசில் பார்த்ததோடு சரி!

mr_karthik
9th July 2014, 02:27 PM
டியர் கோபால் சார்,

இந்த திரியை அர்த்தமுள்ள இசைத்திரியாக விளங்கச்செய்யும் வண்ணம் ராகங்களைப்பற்றிய அபூர்வ விளக்கங்களுடன் மிளிரச்செய்த நீங்கள், தற்போது தற்காலிக ஓய்வு பற்றிய அறிவிப்பால் எல்லோரையும் மிரளச்செய்வது ஏன்?.

ராகங்களைப்பற்றிய விவரணங்களை நிறுத்திவைத்தாலும், பாடல்கள் பற்றிய விவாதங்களில் / அரட்டைகளில் பங்குபெறுங்கள்.

நீங்கள் இல்லாத திரி, நிலவில்லாத வானம்...

vasudevan31355
9th July 2014, 02:36 PM
http://i1.ytimg.com/vi/NqJoKnxHnYs/0.jpg

'மலை நாட்டு மங்கை'யில் இன்னொரு நல்ல பாடல். ஜேசுதாஸ் பாடியிருப்பார்.

வந்தாள் காட்டு பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன்வண்டு

மலையாளத்தில் 'காடு' என்ற படமே தமிழில் மலை நாட்டு மங்கை ஆனது. கவர்ச்சிக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.
மலையாளத்தில் வின்சென்ட் ஏற்ற பாத்திரத்தை தமிழில் ஜெமினி செய்தார்.




http://www.youtube.com/watch?v=2lE5F97Yu_k&feature=player_detailpage

vasudevan31355
9th July 2014, 02:38 PM
கார்த்திக் சார்!

அப்படி இல்லை. கோபால் சார் ஆபிஸ் வேலை நிமித்தம் வெளியிடங்களுக்கு சென்றுள்ளார் என்று நினைக்கிறேன். அதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

vasudevan31355
9th July 2014, 02:40 PM
பொடி வைப்பதில் அவர் கில்லாடியாயிற்றே!

mr_karthik
9th July 2014, 02:45 PM
டியர் வினோத் சார்,

தனிப்பிறவியில் ஆனந்தன் கிளிப்பிங்க்ஸ் நன்றாக இருந்தது. அப்படத்தில் 'நல்ல'நம்பியாரின் வில்லத்தம்பி.

உங்களுக்கு மிகவும் பிடித்த நீரும் நெருப்பும் படத்திலும் ஆனந்தன் நடித்திருந்தார்.

மோகன், நளினி, சத்யராஜ் நடித்த '24 மணிநேரம்' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார் ஆனந்தன். (ஜெயில் அதிகாரியாக ஜெய்சங்கர்).

vasudevan31355
9th July 2014, 02:49 PM
பாவம் விஜயபுரி வீரன். மதுரை வீரனிடம் 'நீரும் நெருப்பும்' படத்தில் வாழைத் தோட்டத்தில் வாள் சண்டை போட்டு ஆடைகள் கிழிந்து உள்ளாடைகள் தெரிந்து அசிங்கப்பட்டுப் போய் விடுவார். கழுதை தேய்ந்த கதைதான்.

Richardsof
9th July 2014, 03:36 PM
கார்த்திக் சார்

நீரும் நெருப்பும் படத்தில் ஆனந்தன் சண்டை காட்சி சற்று ஏமாற்றம்தான் .
பெங்களூரில் ஒரு முறை அதிமுக கூட்டத்தில் ஆனதன் கலந்து கொண்ட நேரத்தில் [1974] அவரை
நேரில் சந்தித்து உரையாடியது நினைவிற்கு வந்தது .இனிமையான மனிதர் .

மறந்து விட்ட ஒரு நடிகரை நினைவு படுத்தி நமக்கெல்லாம் பழைய நினைவுகளை வழங்கிய வாசு
சார் - பாராட்ட வார்த்தைகள் இல்லை .

அனைத்துலக ஆடலழகி ஜோதிலட்சுமி மன்ற தலைவர் திரு கோபால் பதிவை எதிர்பார்க்கிறேன் .

Richardsof
9th July 2014, 03:46 PM
MY CONTRIBUTION ......

http://youtu.be/RvH7gem64nE

gkrishna
9th July 2014, 03:56 PM
http://s1.dmcdn.net/AjeIt/526x297-2C7.jpg
'வாசு சார்/

மலை நாட்டு மங்கை
(முதல் எழுத்து ரொம்பவும் கவனமாக எழுத வேண்டும் அது போல் முதல் வார்த்தையும் )
நான் மிகவும் ரசித்த மற்றும் மறக்க முடியாத படம் சார் .
முதலாவது காரணம் அதில் நடித்த விஜயஸ்ரீ
அந்த படத்தில் அவர் படம் முழுவதும் அரை ட்ரஸில் தான் வருவார்
அதை ரசிக்க (பிஞ்சில் பழுத்த இந்த அரை டவுசர் )
1973-74 கால கட்டத்தில் 8 ஆப்பு அல்லது 9 ஆப்பு (அப்ப எல்லாம் ஆப்பு தான் ) படித்து கொண்டு இருந்த நேரம் .
அந்த வருட quarterly half early exams இல் maths சுமார் மார்க் (முட்டை இல்லை) .
அதனால் வீட்டில் டியூஷன் சேர்த்து விட்டு இருந்தார்கள் .
மலை நாட்டு மங்கை நெல்லை பாபுலர் ரிலீஸ் அன்று சனி கிழமை நல்ல நினைவு
காலையில் டியூஷன் கிளாஸ் இல் மதேமடிக்ஸ் வீக்லி டெஸ்ட் வைத்தார்கள் .
அதில் 100 அவுட் ஒப் 100 வாங்கியதை எனது அம்மாவிடம் காண்பித்து 'கெட்டிகாரன்' என்று ஷொட்டு ஒன்று வாங்கி
45 பைசா (தரை டிக்கெட்)+5 பைசா (ஒரு அரிசி முறுக்கு 3 பைசா) 2 முறுக்கு வாங்கினால் 5 பைசா (ஆனால் அதில் ஒன்று தேன்குழல் முறுக்கு சவ சவ என்று நவுத்து இருக்கும் பல்லுக்கு ஹிதம்) ஆட்டையை போட்டு indha படம் பார்த்தேன் .
படம் பார்த்து விட்டு வந்து வீட்டுக்கு வந்தால் எனது அபபா போட்டு பின்னி எடுத்துட்டாரு.
டியூஷன் கிளாஸ் டெஸ்ட்ஐ காண்பித்து அது ஸ்கூல் டெஸ்ட் மார்க் என்று ஏமாற்றி விட்டு போனதற்காக

கொஞ்சம் சொந்த கதை தான் ஆனால் ஆனந்த(னின்) நினைவு
இங்கு பகிர்ந்ததில் கொஞ்சம் பாரம் இறங்கியது
கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்

gkrishna
9th July 2014, 04:04 PM
[QUOTE=esvee;1146388]MY CONTRIBUTION ......

excellant contribution esvee sir

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/11/Thalaivan-300x296.jpg

gkrishna
9th July 2014, 04:18 PM
தலைவன் 1970
http://lh4.ggpht.com/-DSPFXM7FO3k/Ts_OqJsgbyI/AAAAAAAAA_g/pr78FWShYxI/MGR_Sivaji_Nageswararao_thumb%25255B1%25255D.jpg?i mgmax=800
எஸ்.எம்.சுப்பையா நாயுடு, வாலி அவர்கள்
நீராழி மண்டபத்தின், இசைதர்பாரில் வீற்றிருக்க
பீ.சுசீலா, பாலு அவர்களின் குரல்கள்
நாட்டிய நர்த்தனமிட....நம்மையெல்லாம்
அந்த இசைதர்பாருக்கே அழைத்து செல்கிறது
மக்கள் திலகம் , வாணிஸ்ரீ நடிப்பில்
இந்த தலைவன் படப்பாடல்.. கேளுங்கள்..


நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தால்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கைத்தொடும்போது தலை குனிந்தாள்

வாடையிலே வாழை இலை குனியும் ம்ம்ம்ம்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

பெண்ணிலவு அங்கே நானுவதைக்கண்டு
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பெண்ணிலவு அங்கே நானுவதைக்கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேளை கண்டாள் - அவள்
பூமுகத்தில் முத்தம் நூறு கொண்டான்

நீராழி மண்டபத்தில்

தேனளந்தே இதழ் திறந்திருக்க - அதை
தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க

போய் மறைந்த நிலவும் முகிழ்ந்திருக்க வந்து
வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துறைக்க

பேரளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெருவதிலே ஒன்றை இனைந்திருக்க
கீழ்திசையில் கதிர் தொன்றும் வரை அங்கு
பொழிந்ததெல்லாம் இன்ப காதல் மழை

நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தால்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

பாலாவின் மெலிய குரல் சுசீலாவின் இனிமையுடன்

http://www.youtube.com/watch?v=xF8mBsg4UkU

vasudevan31355
9th July 2014, 08:09 PM
கிருஷ்ணா சார்!

தலைவன் படத்தின் நீராழி மண்டபத்தில் பாடலைத் தந்து தங்கள் ரசனையை மறுபடி நிருபித்திருக்கிறீர்கள். பாடல் வரிகளுக்கு நன்றி!

எனக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும். ஆனால் இதைவிட நம் ராட்சசி பாடகர் திலகத்துடன் இணைந்து பாடிய

http://i1.ytimg.com/vi/fb4JGubfbRE/0.jpg

'ஓடையிலே ஒரு தாமரைப்பூ

பாடல்தான் ரொம்பப் பிடிக்கும்.

vasudevan31355
9th July 2014, 08:11 PM
கிருஷ்ணா சார்,

தங்கள் 'மலைநாட்டு மங்கை' படம் முறுக்கு தின்று பார்த்த அனுபவம் நறுக். ரசித்தேன்.

rajeshkrv
9th July 2014, 08:32 PM
Anandhan appeared as Gemini's servant in Soorakottai singakutti as well

rajeshkrv
9th July 2014, 09:15 PM
another Vijayalalitha telugu song from Charmain Chalamayya(chalam's own movie), music by Salilda


http://www.youtube.com/watch?v=CjFW0Lg9qkw

rajeshkrv
9th July 2014, 09:28 PM
one more from Kannada too


http://www.youtube.com/watch?v=cruPmifgIC4

gkrishna
10th July 2014, 09:31 AM
அனைவருக்கும் காலை வணக்கம் 10/7/14

ராஜேஷ் சார்

சலம் (ஊர்வசி சாரதாவின் கணவர் பின்னாட்களில் சாரதாவிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் ) விஜயலலிதா நடித்த பாடல் காட்சி சலில் சௌத்ரி இசை .அருமையான மெலடி . விஜயலலிதா எவ்வளுவு அழகு இந்த பாடல் காட்சியில் . முகத்தில் காட்டும் அந்த மலர்ச்சி மறக்க முடியாதது
மொழி தெரியாத பாடல் என்றாலும் இனிமையானது
நன்றி .

Bullemmaa Bullodu

சலம் விஜயநிர்மலா (நடிகர் கிருஷ்ணாவின் மனைவி),vijayalalitha நடித்து 1972 இல் வெளிவந்த மற்று ஒரு தெலுகு படம்


http://4.bp.blogspot.com/-s-KH1UoOTWo/TpPFHUaZ5bI/AAAAAAAACMg/jwh1WVeVtx0/s320/Bullemma+Bullodu-1972.jpgl

பாலா சுசீலா குரல்களில் சத்யம் இசையில் ஒரு நல்ல பாடல்

http://www.youtube.com/watch?v=LWkd6vdHYGc

vasudevan31355
10th July 2014, 10:04 AM
இன்றைய ஸ்பெஷல் (26)

http://www.thehindu.com/multimedia/dynamic/01222/30cp_madras_to_pon_1222330e.jpg

படம்: மெட்ராஸ் டு பாண்டுச்சேரி
நடிகர்கள்: ரவிச்சந்திரன் (டைட்டிலில் B.S ரவிச்சந்திரன் என்று போடுவார்கள்), கல்பனா, நாகேஷ், ஏ.கருணாநிதி, 'பக்கோடா' காதர்
இசை: டி.கே.ராமமூர்த்தி
ஒளிப்பதிவு: விட்டல்ராவ்
தயாரிப்பு: விவிதபாரதி
இயக்கம்: திருமலை-மகாலிங்கம்
இயக்கம் மேற்பார்வை: ஏ.பீம்சிங்.

இன்றும் அதிகம் கேட்டறியாத ஒரு பாடல். அதிகம் என்ன.... முற்றிலுமே அறியப்படாத ஒரு பொக்கிஷப் பாடல். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கிடைக்கும் இன்பத்தைவிட எனக்கு நம் மக்கள் மீது கோபம்தான் அதிகமாக வரும்.

இப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு எந்தெந்த குப்பைப் பாட்டுக்களையெல்லாம் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் இந்த ரசனை கெட்ட உலகத்தை நினைத்து (மன்னிக்கவும்) வருந்தாமல் என்ன செய்ய?

ஒரு இனிமையான பாடல் வரவேற்புப் பெறாமல் போனதின் எரிச்சலும் ஆத்திரமும் ஏற்பட்டதனால் வந்த கோபம்தான் இது.

சினிமாவில் சேர்ந்து கதாநாயகியாக வேண்டும் என்று இந்த நாகரீக யவதியின் கனவு, லட்சியம். எப்படியும் நடிகையாகி உலகப் புகழ் பெற்று விடுவோம் என்ற தன்னம்பிக்கை கொண்டு உற்சாகத்துடன் ஷவரில் குளித்தபடி சற்றே திமிருடன் கூட இப்பாடலைப் பாடுகிறாள் ஆங்கில வார்த்தைகள் கலந்து. அவளே இன்னொரு வடிவமாகி அவளையே பாராட்டுவது போன்ற ஆரம்பக் காட்சிகள்.

அவள் ரூம் முழுதும் புகழ் பெற்ற நடிகைகளின் புகைப்படங்கள். தனக்குத் தானே தன் இன்னொரு கற்பனை உருவத்தின் மூலம் தன்னம்பிக்கை ஊட்டிக் கொள்கிறாள். உலகம் தன்னை விரைவில் புகழப் போகிறது என்று சந்தேகமற கூறுகிறாள். தன் மேனியழகை தானே மெச்சிக் கொள்கிறாள்.

அழகாக நடிகை போல தன்னை அலங்கரித்துக் கொண்டு சைக்கிளில் பாடியபடி வலம் வருகிறாள். சந்தோஷ ரேகைகள் அவள் முகத்தில் பரவி ஓடுவதை காண முடிகிறது.

http://antrukandamugam.files.wordpress.com/2013/08/kalpana-madras-to-pondicherry-6.jpg

அழகான 'சிக்'கென்ற இன்னொரு 'கன்னடத்துப் பைங்கிளி' கல்பனா. ரொம்ப ஸ்லிம். அழகாகச் செய்திருக்கிறார். காட்சியும் அம்சமாகப் படமாக்கப் பட்டிருக்கும்.

பாடியது சுசீலா. ரொம்ப அனுபவித்துப் பாடியிருப்பார்.சிறு சிறு வார்த்தைகளை விட்டு விட்டு அவர் எடுக்கும் போது அதை நாம் கேட்கையில்அனுபவிக்கும் சுகமே அலாதி. அந்தக் குரலும், தெளிவும்...ம்...இப்போது எவராலும் இயலுமா? பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

பாடலின் வரிகள் சிரமமானவை. ஆனால் தமிழ் விளையாடுகிறது. நாயகி நாகரீகப் பெண் என்பதனால் பாடலாசிரியர் புரிந்து கொண்டு ஆங்கில வார்த்தைகளை பாடலில் சிம்பிளாக கலந்திருப்பது சிறப்பு.

என்னுயிரில் கலந்த பாடல். ராமமூர்த்தியின் ரசனையின் உச்சம் இப்பாடலில் தெரியும். கேட்டுவிட்டு சொல்லுங்கள் இந்த அற்புத பாடலின் இன்ப அனுபவங்களை.

பாடலின் வரிகளை கவனியுங்கள்

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

லலலல லாலல்லா
லலலல லாலல்லா

லலலல லாலல்லா

Hello

My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
ஒருநாள் மலரும்
உலகம் புகழும்
உண்மையில் சந்தேகம் என்ன

My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு

carry on

ஹாஹா.................ஹஹா

மேனி என்ற மலர் மூடுகின்ற உடை
ராணி உன் அழகை மூடுமோ
தேனை அள்ளி வரும்
பாவை உந்தன் இதழ்
தேவை வந்தவுடன் பேசுமோ

மேனி என்ற மலர் மூடுகின்ற உடை
ராணி உன் அழகை மூடுமோ
தேனை அள்ளி வரும்
பாவை உந்தன் இதழ்
தேவை வந்தவுடன் பேசுமோ

(ஓஹோஹோ! என்ன அருமையான வரிகள்! தேவை வரும் போது அவள் தேனிதழ்கள் பேசுமாம்)

ஆசை பந்தாடும்
சங்கீதப் பண்பாடும்
பெண் மான் என்ற ஆனந்த பாவமோ
மாலை பொன்மேகம்
கொண்டாடும் சிங்கார
செங்கோலத்தில் ஏனிந்த நாணமோ


My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
ஒருநாள் மலரும்
உலகம் புகழும்
உண்மையில் சந்தேகம் என்ன
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு கண்ணு கண்ணு

பார்வை சென்ற வழி
பயணம் போகும் எழில்
போதை கொண்டு
இசை பாடுதே
வாழ்க்கை வானில்
மனம் வாகை சூடவே
வேகம் கொண்டு
பறந்தோடுதே

பார்வை சென்ற வழி
பயணம் போகும் எழில்
போதை கொண்டு
இசை பாடுதே
வாழ்க்கை வானில்
மனம் வாகை சூடவே
வேகம் கொண்டு
பறந்தோடுதே

ஆஹா எந்நாளும்
செண்டாடும் வண்டாக
உல்லாசம் தன்னால்
துள்ளும் lovely life
காலம் என்னோடு
கைகூடும் என் ஆவல்
முன்னேறும் என்
வாழ்வென்றும் ஜாலி life

My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
ஒருநாள் மலரும்
உலகம் புகழும்
உண்மையில் சந்தேகம் என்ன
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு கண்ணு கண்ணு

carry on


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7l3vEqEbnLw

vasudevan31355
10th July 2014, 10:33 AM
கிருஷ்ணா சார்!

காலை வணக்கம்.

விஜயலலிதாவை இன்னும் விடலையா?

gkrishna
10th July 2014, 10:40 AM
வாசு சார்

கடை இன்னும் திறக்கலையேனு போணி ஆகலேன்னு நினைச்சேன்
கல்லா நல்லா கட்டுறீங்க
ரவியின் மெட்ராஸ் டு pondicherry பற்றி கோபால் சொன்னது நினைவிற்கு வருகிறது ஹிந்தியின் பாம்பே டு கோவா இதில் பாதி கூட இல்லை
நேற்று தனி பிறவி சன் லைப் இல் ஆனந்தன் பார்த்ததும்
காலையில் நாம் ஆனந்தன் பற்றி பேசியது நினைவிற்கு வந்தது
கார்த்திக் சார் சொன்ன மாதரி என்ன ஒரு vibration

gkrishna
10th July 2014, 10:42 AM
எப்படி விட முடியும் வாசு சார்
பின்னிட போறாங்க
நாம விடணும்னு நினைச்சாலும் ராஜேஷ் விட மாட்டேங்கறரே

vasudevan31355
10th July 2014, 11:09 AM
'மதறாஸ் TO பாண்டிச்சேரி'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-11.jpg

ரவிச்சந்திரன் அவர்களின் 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா?... அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவளை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.

இடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், 'பக்கோடா' காதர்' (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக 'கள்ளபார்ட்' நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் ('கட்டிலா தொட்டிலா' திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-10.jpg

நகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் 'வெட வெட' வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா இராணியும் செய்திருந்தார்கள்.

படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-5.jpg

ஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் "குய்யோ முய்யோ" என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து "பாம்.. பாம்".. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி "அது ஒண்ணும் செய்யாது சாமி...கொழந்த மாதிரி" என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து "அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா" என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.

பஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ?..

பஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு "அம்மா பக்கோடா" என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் "அம்மா பக்கோடா" என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் 'பக்கோடா' காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)

இது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.

சரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).

கல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்...படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை 'சைட்' அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் "ஏம்மா சும்மா கத்தற... பஸ்ஸு இரும்பு மாதிரி...பய காந்தம் மாதிரி...வந்து ஒட்டிக்குவான் பாரு" என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)

பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.

திரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.

O.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.

இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள்!. T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.

கல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் "மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன" பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

பஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் "பயணம் எங்கே?... பயணம் எங்கே?" பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.

"என்ன வேலை என்ன தேவையோ..
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ...
பயணம் எங்கே?... பயணம் எங்கே?...
கோயில் பார்க்கவோ...
பாவம் தீர்க்கவோ...
சொத்து சேர்க்கவோ...
சுமையைத் தூக்கவோ"...

என்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.

பின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் "எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ"...என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.

ஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் "மலரைப் போன்ற பருவமே" பாடல் படு சூப்பர். (stop...listen...proceed... என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)

'மதறாஸ் TO பாண்டிச்சேரி' யக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.

gkrishna
10th July 2014, 11:22 AM
மெட்ராஸ் டு பாண்டிசெர்ரி
முதல் தமிழ் ரோடு movie (பின்னாட்களில் திருமலை தென்குமரி,பயணம்,நிஜங்கள் போன்ற படங்கள் இதே போல் பேருந்து பயணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது )
முற்றிலும் எளிய அருமையான காமெடி காட்சிகள்
அதனுடன் ஒரு சிறு suspense அண்ட் த்ரில் அதுவும் 1966 கால கட்டத்தில்

ஒரு பேருந்து
சென்னையில் இருந்து pondicherry வரை
அதில் பயணம் செய்யும் கதா பாத்ரங்கள்
எப்போதும் சண்டை போட்டு கொண்டு இருக்கும் கணவன் மனைவி
அவர்களின் மகன் எப்போதும் பகோடா தின்று கொண்டு
ஒரு வயதான பெண்மணி அவர்களுடைய பேத்தி, ஒரு மரியதிகுரிய குடும்பம் ,வீதியில் பொருட்கள் விற்கும் வியாபாரி , ஒரு பாம்பாட்டி
இவர்களுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர்

ஆனால் முக்கிய கதா பாத்ரம் ஒரு பருவ பெண் (கல்பனா) தாய் தந்தை பார்க்கும் மணமகன் வேண்டாம் என்று கூறி பிறகு
இரண்டு ஏமாற்று பேர்வழிகளிடம் சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறி மாட்டி கொண்டு பிறகு அந்த இருவரில் ஒருவன் (ராமதாஸ்) இன்னொருவனை கொல்வது அதை பார்த்த சாட்சி கல்பனா
ராமதாஸ் இடம் இருந்து தப்பி ஒரு ஆடவனிடம் (ரவி) காதல் கொள்வது
இறுதியில் எல்லாம் சுபம்

அருமையான திரைகதை எல்லா கட்சிகளும் நகைச்சுவை நிறைந்த
தேர்ந்து எடுக்கப்பட்ட நடிகர்கள்
நாகேஷ் கண்டக்டர் ,எ.கருணாநிதி டிரைவர்
இருவரும் இந்த பயணத்தில் மறக்க முடியாத சித்திரங்கள்
இந்த திரை படத்தில் கருணாநிதி யின் expressions are சுபெர்ப்
காமெடியன் இல் முன்னுக்கு வராத ஒரு மிக சிறந்த காமெடியன்
(புதிய பறவை மரத்தடி மாமுனி ,ஆதி பராசக்தி நிசும்பன் )
பகோடா காதர் அவரை எப்போதும் கடிந்து கொள்ளும் வீரப்பன்
அங்கமுத்து அவர் கொண்டு வரும் கோழி காமெடி அப்போதைய நாட்களில் மிக பிரசித்தம்
Sun Beam Productions தயாரிப்பு
மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி இசை (கோபால் அவர்களின் ஆதங்கம் )

ஒரு பயணத்தின் போது இப்படி கூட காமெடி உண்டா என்ன ஒரு கற்பனை அல்லது அனுபவம்

1966 கால கட்டம் என்பது ஒரு மாற்றத்தின் தொடர்ச்சி
1964 இல் ஸ்ரீதர் ஆரம்பித்த காதலிக்க நேரமில்லை தொடர்ந்து,அன்பே வா போன்ற காமெடி திரைப்படங்களின் தொடர்ச்சி இந்த மெட்ராஸ் டு
பாண்டிசெர்ரி . இவ்வளுவுக்கும் 60 சதவிகித படம் ஸ்டுடியோவில் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கும் எனென்றல் இப்போது போல் அப்போது technical சப்போர்ட் அவ்வளவாக கிடையாது இருந்தும் எல்லா தரபினரியும் கவர்ந்த திரைப்படம்

கலை வேலை பிரிவு களில் தமிழ் திரை படம் அவ்வளுவு முன்னோடி இல்லை என்று சொல்பவர்கள் இந்த திரை படத்தை முழுவதும் பார்த்து
அனுபவிக்க வேண்டும்
இந்த படத்தின் காமெடி ஐ பின்னாட்களில் நிறைய படங்களில் காபி அடித்து வெளியிட்ட்ருப்பர்கள்

அமிதாப் அருணா இராணி நடித்து வெளிவந்த பாம்பே டு கோவா இதன் தழுவல் மெஹ்மூத் நாகேஷ் ரோல் இல் கண்டக்டர் ஆக வருவார்

மெஹ்மூத் நாகேஷ் இன் பரம விசிறி .நாகேஷ் இன் எதிர் நீச்சல் ,அனுபவி ராஜ அனுபவி ,சர்வர் சுந்தரம் போன்றவற்றை ஹிந்திக்கு கொண்டு சென்றவர்

வீரப்பனின் காமெடி காட்சிகள் அமைப்பதில் வல்லவர் .கௌண்டமணி செந்தில் வாழை பழ காமெடிக்கு அச்சாணி வீரப்பன்

திருமலை மகாலிங்கம் பீம்சிங் உதவியாளர் இது போன்று சாது மிரண்டால் ,சோப்பு சீப்பு கண்ணாடி காமெடி படங்களை இயக்கியவர்

gkrishna
10th July 2014, 11:28 AM
வாசு சார்
மன்னிக்கவும்
மெட்ராஸ் டு பாண்டிசெர்ரி பற்றி நீங்கள் எழதியது என்னால் கவனிக்க பட வில்லை . பக்கத்தை reload செய்ய மறந்து விட்டேன்
மிக அருமையாக படத்தை பற்றி கூறி உள்ளீர்கள்

ரவியின் நடனம் உண்மையில் இந்த படத்தில் மிக சிறப்பு

gkrishna
10th July 2014, 11:47 AM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcReOeCSr9DZ7np2JWshYdghZYVVILLw_ HDehoGQpIO5-seg60j8
http://www.aptalkies.com//modules/movies/dataimages/jquery/Madras_To_Hyderabad_19691.jpg

மெட்ராஸ் டு பாண்டிச்சேரி தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு
மெட்ராஸ் டு ஹைதராபாத் என்ற பெயரில் வெளி ஆனது

gkrishna
10th July 2014, 11:52 AM
சில காட்சிகள் மெட்ராஸ் டு பாண்டிச்சேரி

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTCttq4Fb_Q-6OvEVehuPw0r8CcYKBKeesWTRIkfghNWyPtny3_Tg
http://i1.ytimg.com/vi/hijzm00YBJg/maxresdefault.jpg
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/kalpana-madras-to-pondicherry-10.jpg

கல்பனா ஜாடை கொஞ்சம் பாருங்க ஜோதி லக்ஷ்மி மாதிரி இருக்கும்

vasudevan31355
10th July 2014, 12:06 PM
கிருஷ்ணா சார்,

மன்னிப்பு என்ற பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் இனி இங்கு கூடாது தெரியுமோ! இது என் அன்புக் கட்டளை. ஒன்றுமே செய்யாமல் எதற்கு ஸாரி?

உங்கள் பாணியில் நீங்கள் எழுதிய 'மதறாஸ் to பாண்டிச்சேரி' நன்றாக இருந்தது. பாராட்டுக்கள். (அப்பா! விஜயலலிதா, ஜோதி லஷ்மி இப்படத்தில் இல்லை)

vasudevan31355
10th July 2014, 12:12 PM
http://www.kollytalk.com/wp-content/gallery/actor-ravichandran-dead/actor-ravichandran-dead-28.jpg

gkrishna
10th July 2014, 12:26 PM
கிருஷ்ணா சார்,

மன்னிப்பு என்ற பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் இனி இங்கு கூடாது தெரியுமோ! இது என் அன்புக் கட்டளை. ஒன்றுமே செய்யாமல் எதற்கு ஸாரி?

உங்கள் பாணியில் நீங்கள் எழுதிய 'மதறாஸ் to பாண்டிச்சேரி' நன்றாக இருந்தது. பாராட்டுக்கள். (அப்பா! விஜயலலிதா, ஜோதி லஷ்மி இப்படத்தில் இல்லை)

வாசு சார் dictionary இல் தமிழில் மன்னிப்பு என்ற வார்த்தையும் ஆங்கிலத்தில் சாரி என்ற வார்த்தையும் தவிர்கபட்டது

கல்பனா ஜாடை ஜோதி லக்ஷ்மி மாதிரி இருக்கே

vasudevan31355
10th July 2014, 12:26 PM
http://i1.ytimg.com/vi/8H8_IgbbZoI/mqdefault.jpg

ரவி ஓடும் பஸ்ஸில் எதிரி இருப்பதை கல்பனாவுக்கு உஷார்படுத்தி
பயணிகளையும் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்திப் பாடும் பாடல்

எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடகர் திலகத்தின் குரல்வளம் வித்தியாசம். பயணிகளை எச்சரிக்கும் பாடல்.

http://www.sylvianism.com/wp-content/2009/05/78bf4552e8np6.png

எங்கே

பயணம் எங்கே பயணம் எங்கே
என்ன வேலை என்ன தேவையோ
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ
கோவில் பார்க்கவோ பாவம் தீர்க்கவோ
சொத்து சேர்க்கவோ சுமையைத் தூக்கவோ

பயணம் எங்கே பயணம் எங்கே

சேர்ந்து வருபவர் எத்தனை பேர்
நல்லவர் கெட்டவர் யார்
அசலைப் போலே நகல் இருக்கும்
அசந்த நேரம் கேடிருக்கும்
வாழ்வில் கவனம் வேண்டும்
அதை வெல்லும் துணிவும் வேண்டும்
வாழ்வில் கவனம் வேண்டும்
அதை வெல்லும் துணிவும் வேண்டும்

பயணம் எங்கே பயணம் எங்கே

புகையும் இடத்தில் தீ இருக்கும்
எந்தப் பகையும் அருகில் மறைந்திருக்கும்
வகை தெரியாம மாட்டிகிட்டா
அது வஞ்சம் தீர்க்கத் துணிந்து விடும்
வாழ்வில் கவனம் வேண்டும்
அதை வெல்லும் துணிவும் வேண்டும்
வாழ்வில் கவனம் வேண்டும்
அதை வெல்லும் துணிவும் வேண்டும்

பயணம் எங்கே பயணம் எங்கே
என்ன வேலை என்ன தேவையோ
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ
பயணம் எங்கே பயணம் எங்கே

கோவில் பார்க்கவோ பாவம் தீர்க்கவோ
சொத்து சேர்க்கவோ சுமையைத் தூக்கவோ

பயணம் எங்கே பயணம் எங்கே


http://www.youtube.com/watch?v=KiyREatwoPI&feature=player_detailpage

gkrishna
10th July 2014, 12:31 PM
வாசு சார்
பாம்பே டு கோவா வில் ராமதாஸ் ரோல் சத்ருகன் என்று நினவு
மிக அருமையாக செய்து இருப்பார்
தமிழ் இல் ஹீரோ சூப்பர் ஹிந்தியில் அமிதாப் சற்று குறைவு
தமிழ் இல் வில்லன் ராமதாஸ் ஐ விட சத்ருகன் better

vasudevan31355
10th July 2014, 12:32 PM
கல்பனா ஜாடை ஜோதி லக்ஷ்மி மாதிரி இருக்கே

சார்! அப்படியா தெரிகிறது?

gkrishna
10th July 2014, 12:34 PM
பயணம் எங்கே பாடல் அருமை

இந்த ராமதாஸ் க்கு பதிலாக நம்ம தென்னாட்டு ஒமர் ஷெரிப்ப் ஸ்ரீகாந்த் நடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்பது என் கணிப்பு

gkrishna
10th July 2014, 12:37 PM
வாசு சார்
ஜோதி படம் எதாவது கிடைச்சதுன்ன இரண்டையும் சேர்த்து வைச்சு
பார்துரோவோம்
காசா பணமா துட்டா

vasudevan31355
10th July 2014, 12:45 PM
கிருஷ்ணா சார்,

'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தில் வில்லன் ராமதாஸ் இல்லை. 'கள்ளபார்ட்' நடராஜனே பிரதான வில்லன்.

ஓடும் பஸ்ஸில் 'பயணம் எங்கே" பாடலில் பேப்பர் படித்தபடி துப்பாக்கியால் கல்பனாவை குறி வைத்தபடி வருவாரே ஒரு துணை வில்லன்! அவர் நமது 'சாந்தி' திரையரங்கில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலையில் இருந்தார். (அநேகமாக கார்த்திக் சாருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)

'சந்திப்பு' படத்தில் '50 கோடி அம்பலவாணன்' என்று பெயர் இவருக்கு. இவரை கோழி தீவன மெஷினில் போட்டு நம்பியார் அரைக்கப் பார்ப்பார். ஆனால் இந்த நபரை நடிகர் திலகம் காப்பாற்றி விடுவார்.
நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் வருவார். ஒன்று ரவுடியாக அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டராக. 'ராஜா' படத்தில் வைரப் பெட்டியுடன் டிமிக்கி கொடுக்கப் பார்க்கும்( 'நீ வர வேண்டும்')நடிகர் திலகத்தையும், மேடத்தையும் கான்ஸ்டபிள்களுடன் பாலோ செய்யும் இன்ஸ்பெக்டர் இவர்தான். நடிகர் திலகத்தின் ரொமான்ஸ் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை லேசாக கடித்து சிரிப்பார். ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'.

vasudevan31355
10th July 2014, 12:46 PM
வாசு சார்
ஜோதி படம் எதாவது கிடைச்சதுன்ன இரண்டையும் சேர்த்து வைச்சு
பார்துரோவோம்
காசா பணமா துட்டா


கவனிக்கப்படும்.:)

இரண்டாவது விருப்பம்

இல்லை இல்லை மூன்றாவது விருப்பம்.

இன்னும் யாராவது விருப்பப்படும் நபர் இருக்கிறார்களா?

vasudevan31355
10th July 2014, 12:56 PM
அமிதாப் பாடும் இந்தி பயணம் எங்கே

'தேகானா ஹயரே சோச்சானா' செம சூப்பர் பாட்டு சார்.

vasudevan31355
10th July 2014, 01:06 PM
கிருஷ்ணா சார்

கேட்டு விட்டீர்கள். மனசு கேட்கவில்லை. அப்புறம் மதிய சாப்பாடு செரிக்காது. இதைப் பார்த்துக் கொண்டே சந்தோஷமாகப் பார்த்து மகிழுங்கள். ஆனால் ரூமில் தனியாக சாப்பிடுங்கள்.:)

'பில்லா பிடுகா' வில் ராட்சஸி குரலில் ஜோதிலஷ்மி கலக்குவதைப் பாருங்கள். இதைப் பார்த்தும் கூடவா ஜோதியைப் பிடிக்காமல் போகும். பார்த்து விடுவோம் ஒரு கை.:)


http://www.dailymotion.com/video/x8h8ri_jyothilakshmi-in-pilla-piduga_shortfilms

mr_karthik
10th July 2014, 01:09 PM
டியர் வாசு சார்,

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் இடம்பெற்ற மிக அற்புதமான பாடலை இன்றைய ஸ்பெஷலாக தந்துள்ளீர்கள். சும்மா ஒப்புக்காக சொல்லவில்லை. இன்றைய ஸ்பெஷல் தலைப்பில் நீங்கள் தரும் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்பது மட்டுமல்ல. ஒவ்வொன்றும் அதிகம் கேட்டிராத அபூர்வ, அதே சமயம் அருமையான பாடல்கள்.

இன்றைய ஸ்பெஷலாக வந்துள்ள 'மை ப்ரண்ட், நெஞ்சத்தில் என்ன' பாடலை நானும் நான்கு முறையும் படத்தில் பார்த்தது / கேட்டது தவிர வேறு எந்த சேனல்களிலும் பார்த்ததே இல்லை. இதுபோன்ற நல்ல பாடல்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது உண்மையிலேயே வருந்தத் தக்கது. ஒரு இருபத்தைந்து, முப்பது பாடல்களை மட்டுமே பொறுக்கி வைத்துக்கொண்டு அவைகளையே திருப்பித்திருப்பி ஒளிபரப்பி வருகின்றனர்.

நல்ல பாடலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தைப்பற்றிய விரிவான ஆய்வும் அருமையாக எழுதியுள்ளீர்கள். படத்தை நேரில் பார்ப்பது போன்று அருமையான விவரிப்புக்கள். உங்கள் ஆய்வு இப்படத்தை இதுவரை பார்க்காதவர்களை நிச்சயம் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது...

mr_karthik
10th July 2014, 01:20 PM
ஓடும் பஸ்ஸில் 'பயணம் எங்கே" பாடலில் பேப்பர் படித்தபடி துப்பாக்கியால் கல்பனாவை குறி வைத்தபடி வருவாரே ஒரு துணை வில்லன்! அவர் நமது 'சாந்தி' திரையரங்கில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலையில் இருந்தார். (அநேகமாக கார்த்திக் சாருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)

'சந்திப்பு' படத்தில் '50 கோடி அம்பலவாணன்' என்று பெயர் இவருக்கு. இவரை கோழி தீவன மெஷினில் போட்டு நம்பியார் அரைக்கப் பார்ப்பார். ஆனால் இந்த நபரை நடிகர் திலகம் காப்பாற்றி விடுவார்.
நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் வருவார். ஒன்று ரவுடியாக அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டராக. 'ராஜா' படத்தில் வைரப் பெட்டியுடன் டிமிக்கி கொடுக்கப் பார்க்கும்( 'நீ வர வேண்டும்')நடிகர் திலகத்தையும், மேடத்தையும் கான்ஸ்டபிள்களுடன் பாலோ செய்யும் இன்ஸ்பெக்டர் இவர்தான். நடிகர் திலகத்தின் ரொமான்ஸ் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை லேசாக கடித்து சிரிப்பார். ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'.

டியர் வாசு சார்,

அவர் பெயர் 'சாந்தி' குமார். 70-க்குப்பின் வந்த நடிகர்திலகத்தின் முக்கால்வாசி படங்களில் இருப்பார். 'திரிசூலம்' படத்தின் மூன்று பிரதான வில்லன்களில் ஒருவர். 'தியாகம்' படத்தில் வி.கே.ஆரின் கையால் 'காளி' இவர்தான். இப்படி நிறையப் படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

சாந்தி தியேட்டரில் டிக்கட் கொடுத்து முடிந்தபின் வெளியில் வந்து ரசிகர்களுடன் பேசிக்கொண்டு நிற்பார். அப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் ரோல் பற்றி நிறைய சொல்வார்.

இவருக்கு நடிகர்திலகம்தான் திருமணம் பேசி, தானே நின்று நடத்தி வைத்தார். அதிதீவிர சிவாஜி ரசிகர்.

vasudevan31355
10th July 2014, 01:37 PM
டியர் வாசு சார்,

அவர் பெயர் 'சாந்தி' குமார். 70-க்குப்பின் வந்த நடிகர்திலகத்தின் முக்கால்வாசி படங்களில் இருப்பார். 'திரிசூலம்' படத்தின் மூன்று பிரதான வில்லன்களில் ஒருவர். 'தியாகம்' படத்தில் வி.கே.ஆரின் கையால் 'காளி' இவர்தான். இப்படி நிறையப் படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

சாந்தி தியேட்டரில் டிக்கட் கொடுத்து முடிந்தபின் வெளியில் வந்து ரசிகர்களுடன் பேசிக்கொண்டு நிற்பார். அப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் ரோல் பற்றி நிறைய சொல்வார்.

இவருக்கு நடிகர்திலகம்தான் திருமணம் பேசி, தானே நின்று நடத்தி வைத்தார். அதிதீவிர சிவாஜி ரசிகர்.

டியர் கார்த்திக் சார்,

தங்கள் மனம்நிறை பாராட்டுதல்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

நீங்கள் 'சாந்தி' குமார் பற்றிக் கொடுத்துள்ள தகவல்கள் அபூர்வமானவை.
எனக்கு இன்றுதான் அவர் பெயர் தங்கள் பதிவால் தெரிந்தது.

'சாந்தி' குமார் நடிகர் திலகத்திற்கு உறவுக்காரர் என்றும் ஒரு நண்பர் சொன்னார். அனால் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

mr_karthik
10th July 2014, 01:44 PM
டியர் கிருஷ்ணாஜி,

நமது வாசு சார் 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' படத்தின் பாடலைப் பதித்ததும், உங்கள் பங்குக்கு படத்தின் கதைச்சுருக்கம், காட்சிகளின் விரிவாக்கம், படங்களின் ஸ்டில்கள், அதன் இந்தி ரீமேக், தெலுங்கு டப்பிங் என அனைத்து விவரங்களையும் தந்து படத்தைப் பற்றிய விவரங்களை முழுமையாக்கி விட்டீர்கள்.

கல்பனா கே.எஸ்.ஜி.யின் 'ஸ்வாதி நட்சத்திரம்' (1971) என்ற படத்திலும் நடித்திருந்தார். வித்தியாசமான கதை. ஒரு இளம்பெண்ணுக்கு இடையிடையே கண்பார்வை வருவதும் போவதுமாக இருக்கும். பார்வை இல்லாத காட்சிகளை கருப்பு வெள்ளையிலும், கண்பார்வை இருக்கும் காட்சிகளை வண்ணத்திலும் எடுத்திருந்தார். சீனியர் பானுமதி கிறிஸ்டியன் மதர் வேடத்தில் நடித்திருந்தார். படம் வெற்றியடையவில்லை.

gkrishna
10th July 2014, 01:49 PM
http://www.thinakaran.lk/2013/05/07/f5.jpg
சந்திரோதயம் 1966
கே.ஷங்கர் இயக்கம்
சரவணா ஸ்க்ரீன்ஸ் வேலுமணி தயாரிப்பு
மக்கள் திலகம்,கலை செல்வி,பாரதி,நாகேஷ்,நம்பியார் நடித்து
இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் (என்று) (இந்த வார்த்தை சேர்த்தால் ஒருத்தருக்கு புடிக்கும்)
வெளிவந்தது கருப்பு வெள்ளை

மக்கள் திலகம் பத்திரிகையாளர் ஆக வருவார்
சமீபத்தில் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள்

அருமையான பாடல்கள்

சீர்காழி கோவிந்த ராஜனின் கணீர் வெண்கல தொண்டை குரலில்
பாரதிதாசனின் "புதியதோர் உலகம் செய்வோம் "
வாலியின் பிற பாடல்கள்
"கெட்டிமேளம் கொட்டுற கல்யாணம் " சுசீலாவின் இனிய சோலோ
"புத்தன் ஏசு காந்தி பிறந்தது " பாடகர் திலகத்தின் சோலோ
"காசிக்கு போகும் சந்நியாசி " சீர்காழி ,பாடகர் திலகம் இணைந்த குரல்களில் காமெடி பாடல்
மற்றும் இரண்டு தேனினும் இனிய மெலடி பாடல்கள்


சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிறியாத உறவல்லவோ ….

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ (பின்னணியில் காலை சூரியன் ஒளி கிரணங்கள் )
செவ்வானமே உந்தன் நிறமானதோ

ஆ அஅ ஆ ஹா ................................... (அருமையான ஹம்மிங்)

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே ….
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

ஆ அஅ ஆ ஹா ...................................

அருமையான தமிழ்,அதனோடு சேர்ந்த இசை ,இசையோடு சேர்ந்த இசை கருவிகள்


2.எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்
என்னனென்று சொல்ல தெரியாமலே
நான் ஏன் இங்கு மாறினேன்

ஆசை வரும் வயது இளம் வயது
பேசும் இள மனது எந்தன் மனது
ஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும்
மாதுள்ளம் நாளொரு தூதுகள் அனுப்பும்
என்னென்ன சுகம் வருமோ

தேவி - பாடகர் திலகத்தின் குரல்

எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்
என்னனென்று சொல்ல தெரியாமலே
நான் தான் உன்னை மாற்றினேன்

மாலை வரும் மயக்கம் என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
மாலை வரும் மயக்கம் என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
பூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க
நான் அதை பார்கையில் நூல் என இளைக்க
என்னனென்ன அதிசயமோ

சந்தித்தோ பார்வைகள் தித்தித்ததோ நினைவுகள்
(நிச்சயமாக தித்திகின்ற நினைவு தான் இந்த பாடலை கேட்கும் போது )
மையலை சொல்ல தெரியாமலே
ஏன் ஏன் இந்த கேள்விகள்

ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ல.. ல.. லா.. லா..

சூப்பர் triumpht சாக்ஸ் பங்கோ கலந்த இசை

இந்த இரண்டு பாடல்களையும் இசையோடு சேர்ந்து இன்னும் சற்று விளக்கமாக ஆராய ஆசை .
வாசு சார் கார்த்திக் சார் எஸ்வி சார் யாரவது உதவி செய்வீர்களா
http://www.youtube.com/watch?v=nMc8d53LLaM
http://www.youtube.com/watch?v=kfqjI4LYjs0

mr_karthik
10th July 2014, 01:56 PM
// ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'. //

இதே போலத்தான் வெகுநாட்கள் வரை நடிகர் ராஜவேலுவின் பெயர் திரியாமல் அவரை 'பாரதவிலாஸ் சம்மந்தி' என்று குறிப்பிடுவோம்...

gkrishna
10th July 2014, 01:57 PM
டியர் கிருஷ்ணாஜி,

நமது வாசு சார் 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' படத்தின் பாடலைப் பதித்ததும், உங்கள் பங்குக்கு படத்தின் கதைச்சுருக்கம், காட்சிகளின் விரிவாக்கம், படங்களின் ஸ்டில்கள், அதன் இந்தி ரீமேக், தெலுங்கு டப்பிங் என அனைத்து விவரங்களையும் தந்து படத்தைப் பற்றிய விவரங்களை முழுமையாக்கி விட்டீர்கள்.

கல்பனா கே.எஸ்.ஜி.யின் 'ஸ்வாதி நட்சத்திரம்' (1971) என்ற படத்திலும் நடித்திருந்தார். வித்தியாசமான கதை. ஒரு இளம்பெண்ணுக்கு இடையிடையே கண்பார்வை வருவதும் போவதுமாக இருக்கும். பார்வை இல்லாத காட்சிகளை கருப்பு வெள்ளையிலும், கண்பார்வை இருக்கும் காட்சிகளை வண்ணத்திலும் எடுத்திருந்தார். சீனியர் பானுமதி கிறிஸ்டியன் மதர் வேடத்தில் நடித்திருந்தார். படம் வெற்றியடையவில்லை.

கார்த்திக் சார்

எப்பவுமே நீங்கள் வந்தீங்கனா ஒரு தகவல் ஓடு வருவீங்க
சாந்தி குமார் பற்றி நம்ம NT திரியில் படித்த நினைவு
ராஜா படத்தில்
NT கலை செல்வியின் கன்னத்தை தொடும் போது
கள்ள சிரிப்பு ஒன்று சிரித்து கொண்டே நின்று கொண்டு
இருப்பார் .மறக்க முடியாது
நீங்கள் சொன்னது போல் 70 களுக்கு பிறகு நிறைய NT படங்களில் வருவார்
சுவாதி நட்சத்திரம் நினைவிற்கு வருகிறது

வாசு சார்
மெட்ராஸ் டு பாண்டிசேரி இதுவரை நான் அது ராமதாஸ் என்ற நினைவில் இருந்தேன். எக்ஸாம் இல் arrear விழுந்து விட்டது
கொஞ்சம் dvd பார்த்து பாஸ் பண்ணனும்

vasudevan31355
10th July 2014, 01:58 PM
'சாந்தி' குமாரை பற்றி தெரிந்து கொண்டாகி விட்டது. இனி அவர் போட்டோ போடாமல் விட்டு விடுவதா? அதுவும் நடிகர் திலகத்தின் தீவிர பக்தரை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா?

இதோ இவர்தான் 'சாந்தி' குமார். நன்றி கார்த்திக் சார்!

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_02_1VOB_001970435_zpse061e1b2.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_02_1VOB_001970435_zpse061e1b2.jpg.html)

gkrishna
10th July 2014, 02:01 PM
// ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'. //

இதே போலத்தான் வெகுநாட்கள் வரை நடிகர் ராஜவேலுவின் பெயர் திரியாமல் அவரை 'பாரதவிலாஸ் சம்மந்தி' என்று குறிப்பிடுவோம்...

vasu sir
இதே மாதிரி பாரத விலாஸ் படத்தில் போட்டோ எடுப்பவர் ஆக வில்லி cid சகுந்தலாவின் அண்ணனாக ஒருவர் கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு
வருவார் .அவர் ஹீரோ வாக நடித்த பழைய தாலாட்டு என்று ஒரு படம் நினவு .1975-76 கால கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக எங்கோ படித்த நினவு . அவர் பெயரும் மறந்து விட்டது

vasudevan31355
10th July 2014, 02:04 PM
அப்படியே கண்ணுக்கு விருந்தாக சொக்க வைக்கும் மதிய பரிசு

'நீ வர வேண்டும்' பாடலில் ஸ்டைல்களின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரர் எங்கள் 'ராஜா'

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/VTS_02_1VOB_001796828_zps72345895.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/VTS_02_1VOB_001796828_zps72345895.jpg.html)

gkrishna
10th July 2014, 02:05 PM
'சாந்தி' குமாரை பற்றி தெரிந்து கொண்டாகி விட்டது. இனி அவர் போட்டோ போடாமல் விட்டு விடுவதா? அதுவும் நடிகர் திலகத்தின் தீவிர பக்தரை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா?

இதோ இவர்தான் 'சாந்தி' குமார். நன்றி கார்த்திக் சார்!

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_02_1VOB_001970435_zpse061e1b2.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_02_1VOB_001970435_zpse061e1b2.jpg.html)

வாசு சார்
எங்க திருநெல்வேலி யிலே சந்திர விலாஸ் என்று ஒரு ஹோட்டல் அந்த காலத்தில் famous . நாம் தோசை என்று சர்வர் இடம் ஆர்டர் செய்தவுடனே எ அந்த சர்வர் அந்த இடத்தில இருந்து தோசை என்று சவுண்ட் கொடுப்பார்
உடனே தோசை கல்லில் சொயிங் என்று தண்ணீர் தெளிக்கும் சத்தம் வாரியல் தேய்க்கும் சத்தம் உடனே தோசை பரிமாறப்படும்
அது போல் அல்லவே சூடாக சுவையாக
எங்கள் வாசு கபே நெய்வேலி
இருக்க கவலை ஏன்

gkrishna
10th July 2014, 02:08 PM
அப்படியே கண்ணுக்கு விருந்தாக சொக்க வைக்கும் மதிய பரிசு

'நீ வர வேண்டும்' பாடலில் ஸ்டைல்களின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரர் எங்கள் 'ராஜா'[/COLOR]

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/VTS_02_1VOB_001796828_zps72345895.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/VTS_02_1VOB_001796828_zps72345895.jpg.html)

வானிலே சூரியனை காணோமே
அந்த சூரியன் தான் வெள்ளை பண்ட சாம்பல் கலர் கோட் போட்டு கொண்டு போஸ் கொடுத்து கொண்டு நிற்கிறார்

vasudevan31355
10th July 2014, 02:08 PM
vasu sir
இதே மாதிரி பாரத விலாஸ் படத்தில் போட்டோ எடுப்பவர் ஆக வில்லி cid சகுந்தலாவின் அண்ணனாக ஒருவர் கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு
வருவார் .அவர் ஹீரோ வாக நடித்த பழைய தாலாட்டு என்று ஒரு படம் நினவு .1975-76 கால கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக எங்கோ படித்த நினவு . அவர் பெயரும் மறந்து விட்டது

கிருஷ்ணா சார்,

அவர் பெயர் ராஜபாண்டியன். நடிகர் திலகத்தின் நாடகக் குழுவில் முக்கியமான ஒரு நடிகர்.

'தங்கப்பதக்கம்' திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் செய்த ரோலை இவர்தான் 'தங்கப்பதக்கம்' நாடகத்தில் செய்தார்.( நடிகர் திலகத்தின் மகனாக)

நிறையப் படங்களில் நடித்துள்ளார்.

'டாக்டர் சிவா'வில் தொழு நோயாளியாக டாக்டர் சிவாவின் அப்பாவாக வருவார்..

mr_karthik
10th July 2014, 02:09 PM
டியர் கிருஷ்ணாஜி,

'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ' என்ன ஒரு அருமையான பாடல். காவியக்கவிஞர் வாலியும், மெல்லிசை மன்னரும், பாடகர் திலகமும், இசையரசியும் என்னமாய் உழைத்து அருமையாக உருவாக்கியிருந்தனர்.

ஆனால் பாடலுக்கான காட்சி படமாக்கப்பட்ட விதம், வயிற்றெரிச்சல்.

எம்.ஜி.ஆர். எப்படி இப்படி படமாக்கத்தை அனுமதித்தார்...?. இந்த அருமையான பாடலுக்கு தண்ணீர்குழாய், மணல் மேடு, கட்டைவண்டி

"இயக்குனர் கே.சங்கர் ஒழிக"...

vasudevan31355
10th July 2014, 02:10 PM
வானிலே சூரியனை காணோமே
அந்த சூரியன் தான் வெள்ளை பண்ட சாம்பல் கலர் கோட் போட்டு கொண்டு போஸ் கொடுத்து கொண்டு நிற்கிறார்

Excellent krishna sir. தெய்வம் இருப்பது அங்கே.

gkrishna
10th July 2014, 02:20 PM
டியர் கிருஷ்ணாஜி,

'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ' என்ன ஒரு அருமையான பாடல். காவியக்கவிஞர் வாலியும், மெல்லிசை மன்னரும், பாடகர் திலகமும், இசையரசியும் என்னமாய் உழைத்து அருமையாக உருவாக்கியிருந்தனர்.

ஆனால் பாடலுக்கான காட்சி படமாக்கப்பட்ட விதம், வயிற்றெரிச்சல்.

எம்.ஜி.ஆர். எப்படி இப்படி படமாக்கத்தை அனுமதித்தார்...?. இந்த அருமையான பாடலுக்கு தண்ணீர்குழாய், மணல் மேடு, கட்டைவண்டி

"இயக்குனர் கே.சங்கர் ஒழிக"...

உண்மை கார்த்திக் சார்
இது மாதிரி சில நலல பாடல்கள் மோசமாக படமாக்கப்பட்ட விதம் நம்மை மிகவும் எரிச்சல் அடைய செய்யும்
நீங்கள் சொல்வது போல் இது போன்ற பாடல்கள் பார்ப்பதை விட கேட்பது நல்லது என்று நினைக்கிறன்
ஆர்கெஸ்ட்ரா composition மிக அருமை

gkrishna
10th July 2014, 02:21 PM
கிருஷ்ணா சார்,

அவர் பெயர் ராஜபாண்டியன். நடிகர் திலகத்தின் நாடகக் குழுவில் முக்கியமான ஒரு நடிகர்.

'தங்கப்பதக்கம்' திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் செய்த ரோலை இவர்தான் 'தங்கப்பதக்கம்' நாடகத்தில் செய்தார்.( நடிகர் திலகத்தின் மகனாக)

நிறையப் படங்களில் நடித்துள்ளார்.

'டாக்டர் சிவா'வில் தொழு நோயாளியாக டாக்டர் சிவாவின் அப்பாவாக வருவார்..

நன்றி வாசு சார்

3 நாளாக மண்டையை உடைத்து கொண்டு இருந்தேன்
தோசை 2

vasudevan31355
10th July 2014, 02:30 PM
கிருஷ்ணா சார்,

ராஜ பாண்டியனையும் பார்த்து விடலாம்.

'டாக்டர் சிவா' படத்தில் ராஜபாண்டியன்.


http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/DrSivaGetIndianStuffcomDvdripavi_008165320_zps116c edaa.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/DrSivaGetIndianStuffcomDvdripavi_008165320_zps116c edaa.jpg.html)

vasudevan31355
10th July 2014, 02:37 PM
கார்த்திக் சார்,

உண்மைதான். அந்தப் பாடல் சரியாகப் படமாக்கப் படவில்லை. ஆனால் பாடல் பட்டை கிளப்பும் சார். அதைவிட 'எங்கிருந்தோ ஆசைகளி' ன் நடுவே இடையிசையாக அதே வரிகளை ஷெனாய் மூலம் மெல்லிசை மன்னர் பின்னி எடுப்பாரே! அருமை சார்.

vasudevan31355
10th July 2014, 02:44 PM
டியர் கார்த்திக் சார்,

http://s.ecrater.com/stores/47612/48494249e628d_47612b.jpg

'சுவாதி நட்சத்திரம்' படத்தின் நாயகி உதயசந்திரிகா. கன்னடத்துக்காரர். நானும் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. கண் தெரியாத உதய சந்திரிகாவை சண்முகசுந்தரம் கெடுத்து விடுவார். படத்தில் கலர்க் காட்சிகளும் ரம்மியம்.

ஆனால் கல்பனா இருக்கிறாரா தெரியவில்லை. எந்த வேடத்தில் வருகிறார் என்பது நினைவில் இல்லை.

vasudevan31355
10th July 2014, 02:54 PM
படத்தில் முகவாய்க் கட்டையில் கை வைத்திருப்பவர் உதயசந்திரிகா. (தில்லானா மோகனாம்பாளி'ல் பாலாஜி மனைவி இவர்).

http://3.bp.blogspot.com/-mqO9oK3TRsQ/UBIflx9PkLI/AAAAAAAAsAc/4AnpqIsBgSE/s1600/mqdefault.jpg

vasudevan31355
10th July 2014, 02:56 PM
கிருஷ்ணா சார்

3 தோசை முடிந்து விட்டது

நான்காவது தோசை மாலை ஆறு மணிக்கு.:)

gkrishna
10th July 2014, 03:06 PM
சுவாதி நட்சத்ரம் சூப்பர் போட்டோ
நெல்லை பார்வதி ரிலீஸ் 1974

parthasarathy
10th July 2014, 03:34 PM
M/s. Vasu / Krishnaji / Karthik:

Outstanding entertainment. Special thanks to Vasu Sir for that pose from Raja; but, my favourite one is during the fight (before that long but interesting climax) between NT and Balajee in which NT's stance with cream colour shirt and pant with scarf...Wow. I remember Mr. Raghvender also shared some thing about this still photo some time back.

Kalpana committed suicide and died, which was followed by another Kannada actress Vijayasree (NT's love interest in Babu). She was very famous for heroine oriented roles and was groomed by Puttanna Kanagal. However, both got separated. Irulum Oliyum's original was Puttanna's in which Kalpana acted as lead lady. Her way of wearing blouse with almost full sleeves with collar around neck was very famous. When this movie was remade as Irulum Oliyum, this was also copied by Vanisree!

Bharathi only will almost like Saroja Devi; not Kalpana. Kalpana's is a unique face. Good talent; as usual wasted in Tamil.

Regards,

R. Parthasarathy

Gopal.s
10th July 2014, 03:50 PM
ராஜ பாண்டியந்தானே மல்லிகை பூபோட்டு கண்ணனுக்கு மங்கல தாலாட்டு?



நினைப்பது நிறைவேறும் -எம்.எல்.ஸ்ரீகாந்த்?

gkrishna
10th July 2014, 04:42 PM
https://lh6.ggpht.com/_bQVMgvwda6DzKzvhMA5DjKZW6tsWL354_q_4mpffkPeDDD_ho mCaa65_aHKEdNUFXoJOQ=s113http://cdn.spicyonion.com/cache/images/profile/artist/avmrajan-175x250.jpg
http://www.tamilstar.com/profile/uploads/artist/ai5200jeishankar_5.jpg
அம்மன் அருள் 1973
அம்பிகா movies தயாரிப்பு
பட்டு என்ற பட்டாபிராமன் இயக்கம்
ஜெய் ஷங்கர்,மஞ்சுளா விஜயகுமார்,நடிப்புசுடர் ஏவிஎம் ராஜன்,
அசோகன் நடித்து வந்த கருப்பு வெள்ளை
இசை இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ்

AVM ராஜன் அம்மன் கோயில் பூசாரி அவர் மகள் மஞ்சுளா .அசோகன் அந்த ஊர் பண்ணயார் அவர் மகன் ஜெய்சங்கர் இவர் மேல்நாட்டில் டாக்டர் பட்டம் படித்து விட்டு வரும் பகுத்தறிவு வாதி .கடவுள் உண்டா இல்லையா என்ற வாக்கு வாதம் அடிக்கடி நடக்கும்
ஏவிஎம் ராஜன் இந்த படத்தில் இருந்து தான் 'மகமாய் மகமாய் அம்மா கருமாரி ' என்று அடிகடி சொன்னதாக நினவு
இப்போது கிறிஸ்துவ மத போதகர் ஆக இருக்கிறார் .
ஜெய்சங்கர் மஞ்சுளாவை விரும்புவார் ஆனால் இதை அசோகன் விரும்பமாட்டார் . அம்மன் கோயிலில் சீட்டு போட்டு பார்த்து விபுதி வந்த காதலை கை விடுவது ,குங்குமம் வந்தால் காதலியுடன் சேர்வது என்று முடிவாகும் .ஏவிஎம் ராஜனே எல்லா பொட்டலதிலும் விபுதி வைத்து விடுவார் .ஜெய் கோபித்துகொண்டு ஊரை விட்டு போவார் அசோகன் கோபம் கொண்டு கோயிலையும் அம்மன் சிலையையும் உடைக்க முயற்ச்சி செய்வார். இதற்கு நடுவில் ஒரு சங்கிலி ஒன்று காணமல் போகும் . அது அம்மன் கழுத்து சங்கிலியா அல்லது மஞ்சுளா கழுத்து சங்கிலியா என்று நினைவில் இல்லை
முடிவு dvd (கிடச்சா வாங்கி ) பாருங்க


இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கும்
radha jayalakshmi சகோதரிகள் குரலில்
'அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ' என்ற பாடல்
நவராத்திரி சமயத்தில் எல்லா அம்மன் கோயில்லும்,ஆடி மாத கொடை விழாக்களிலும் கலந்து கட்டிய பாடல்


http://www.mediafire.com/?p9k42abuh9d64p2

பாலா சுசீலா குரல்களில்
கொஞ்சம் மாணவன் "கல்யாண ராமனுக்கும் " பாடலை நினைவு படுத்தும் . ஆனால் பாலாவின் ஆரம்ப குரல் ஹம்மிங் தொடர்ந்து சுசீலாவின் குரல் இனிமை நம்மை மயக்கும் .வழக்கம் போல் கவிஞர் வழங்கிய தேவரின் இன்னிசை வேந்தர்கள் வீணை flute கலந்து

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதை தருவேன் நான்தானே
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென நூறாய் நான் தருவேனே

பட்டு தளிர் கோடியில் பச்சை பசும் கிளிகள்
தொட்டு கொண்டு பேசும் சிந்து
புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
ஓடை நீரில் வாலை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்ன
ஓடும் தென்றல் பூவை பார்த்து
கூறும் கதைகள் என்னனென்ன
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென நூறாய் நான் தருவேனே

http://cdn.600024.com/store/image/cache/data/raj-video-vision/dharmam-vellum-amman-arul-500x500.jpg
http://www.youtube.com/watch?v=MmUpkPvYd2U

gkrishna
10th July 2014, 04:50 PM
ராஜ பாண்டியந்தானே மல்லிகை பூபோட்டு கண்ணனுக்கு மங்கல தாலாட்டு?

நினைப்பது நிறைவேறும் -எம்.எல்.ஸ்ரீகாந்த்?


ninappathu niraiverum yes m.l.srikanth music
song vani with m.l.srikanth

ராஜபாண்டியன் பழைய தாலாட்டு பட ஹீரோ நினைவில் உள்ளது
பாட்டு நினைவில் இல்லை

mr_karthik
10th July 2014, 05:41 PM
but, my favourite one is during the fight (before that long but interesting climax) between NT and Balajee in which NT's stance with cream colour shirt and pant with scarf...Wow. I remember Mr. Raghvender also shared some thing about this still photo some time back.

'ராஜா' படத்தின் செய்தித்தாள் விளம்பரங்களில், பாட்டுப்புத்தக அட்டையில், பொம்மை பேசும்படம் பத்திரிகைகளில், தியேட்டர் கட்-அவுட்களில் (மவுண்ட் ரோடு அண்ணாசிலை பின்புறம் வைக்கப்பட்ட கட்-அவுட் ரொம்ப பேமஸ்) இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருந்த அந்த போஸ் (மஞ்சள் பேண்ட், மஞ்சள் முழுக்கை ஷர்ட், கழுத்தில் கருப்பு ஸ்கார்ப் இவற்றுடன் இரண்டு கைகளையும் விரித்து நிற்கும் தோற்றம்), ஆனால் படத்தில்......??????

கண்மூடித் திறப்பதற்குள், ஒரு செகண்டின் பத்தில் ஒரு பகுதியில் சட்டென வந்து மறைந்துவிடும்...

vasudevan31355
10th July 2014, 06:17 PM
டியர் கார்த்திக் சார் /பார்த்தசாரதி சார்/ கிருஷ்ணா சார்,

என்னிடம் இருந்த என் இதய தெய்வத்தின், நம் நடிக தெய்வத்தின் அசர வைக்கும் இன்னொரு 'ராஜா' ஸ்டில்.

இதுவரை போடாமல் காத்து வந்தேன். இன்று 'ரா(ஜா)ஜ' நேரம் போல் இருக்கிறது.

இப்போது உங்கள் எல்லோருக்கும் இங்கு முதன் முறையாக.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/raja_zps5201d7f8.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/raja_zps5201d7f8.jpg.html)

mr_karthik
10th July 2014, 06:58 PM
"come on..... Get up...!"

டியர் வாசு சார்,

என்ன ஒரு அற்புதமான போஸ்.

"உலகத்துக்கே 'ஸ்டைல் கிங்' நான்தான். இல்லையென்பவன் எவனடா" என்று கைநீட்டிக் கேட்கிறாரோ...

gkrishna
10th July 2014, 07:33 PM
டியர் கார்த்திக் சார் /பார்த்தசாரதி சார்/ கிருஷ்ணா சார்,

என்னிடம் இருந்த என் இதய தெய்வத்தின், நம் நடிக தெய்வத்தின் அசர வைக்கும் இன்னொரு 'ராஜா' ஸ்டில்.

இதுவரை போடாமல் காத்து வந்தேன். இன்று 'ரா(ஜா)ஜ' நேரம் போல் இருக்கிறது.

இப்போது உங்கள் எல்லோருக்கும் இங்கு முதன் முறையாக.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/raja_zps5201d7f8.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/raja_zps5201d7f8.jpg.html)

dear vasu sir

உன் பையர் என்ன
ராஜா
மெல்லிசை மன்னரின் bgm
டன் டன் டன் டென்
உன் பையர் என்ன
ராஜா
மீண்டும் மெல்லிசை மன்னரின் bgm
டன் டன் டன் டென்
என் பெயர் ராஜா இல்லை
டன் டன் டன் டென்
சேகர்
சந்தர்

லாங் சாட் மனோகர் yellow கலர் pant
கலக்கல் வாசு சார்
4வது தோசை சூப்பர் முறுகல் கருக்காமல்

vasudevan31355
10th July 2014, 07:35 PM
'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலில் நடிகர் திலகம்.

http://s2.dmcdn.net/ACL8M/x240-4jg.jpg

எப்போது பார்த்தாலும் புதுமையாகவே தெரியும் நடிகர் திலகம்.

இதில் முக்கியமாக ஒன்று கவனித்தேன்.

பொதுவாக நடிகர்கள் கையில் எதுவுமில்லாமல் சும்மா நிற்கும் போது அந்தக் கைகளை, அல்லது கால்களை எப்படி வைத்துக் கொள்வது என்று திண்டாடுவார்கள். எஸ்.எஸ்.ஆர், ஜெமினி தேவயில்லாமல் இடுப்பில் விறைப்பாக கை வைத்துக் கொள்வார்கள்)

(கோபால் கூட ஜெமினியைத் தாக்கியிருப்பார்)

ஆனால் இதில் நடிகர் திலகத்தைப் பார்த்த போது அந்தக் கைகளையும், கால்களையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமல்லாமல் அதையே எவ்வளவு ஸ்டைலாகக் காட்ட வேண்டும் என்றும் பாடம் எடுத்து ஜமாய்க்கிறாரே!

பாடலின் முதல் வரியில் ஜெயலலிதா படிக்கட்டுகளில் ஏறி மேலே ஒரு சிறு நீள்சமதள தரையில் நிற்கும் நடிகர் திலகத்திடம் செல்வார். அப்போது நடிகர் திலகம் ஒரு சிறு அழகிய மெதுவான நடை ஒன்றை நடப்பார். நான்காவது ஸ்டெப் நடக்க ஆரம்பிக்கும் போது கைகளை எடுத்து கோட்டைத் தூக்கி பேண்ட் முன் பாக்கெட்டுகளில் நுழைப்பார். பின் மெதுவாக அந்த நடையை மறுபடி தொடர்வார்.

பாடலின் பல்லவி முடிந்து அருமையான அந்த ஷெனாய் ஓசை வரும் போது நடிகர் திலகம் தன் ஆட்காட்டி விரலை உதட்டில் வைத்து ஜெயாவிடம் ஒரு 'இச்' கேட்க ஜெயா மறுத்து பாறைகளின் மேலே ஓடி வருவார்.
அப்போது நடிகர் திலகம் 'அடடா! மிஸ் ஆயிடுச்சே' என்பது போல வலது கையை லேசாக உதறி கால் முட்டி மீது வைத்து ஒரு செகண்ட் நிற்பார்.

'இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்' வரியின் போது பாறைகளின் இறக்கத்தில் கால்களை சற்று மடக்கி நின்றபடி ஜெயாவின் கைகளை இங்கிருந்து அங்குவரை மோப்பம் பிடித்தபடி பெட்டியை வாங்குவார்.

'காலமும் நமக்கினி சாதகமே' வரியின் போது பாருங்கள்... பாறைகளின் சரிவென்றாலும் ஜெயாவின் இடுப்பைத் தாங்கிப் பிடித்தபடி நிற்கும் கால்களின் கம்பீர ஸ்டைல்... லாங் ஷாட்டாக இருந்தாலும் கீழே கடல் அலைகள் ஆர்ப்பரிக்க அட்டகாசமாய் இருக்கும்.

இராண்டாவது சரணத்தின் இடையிசையில் பாறையின் மேல் நடந்து வந்து அழகாய் நின்றபடி கை விரல்களைச் சொடுக்கி (சொடுக்கி விட்டு வலது கையை கால் முட்டிமீதும் இடது கையை இடுப்பின் மீதும் வைத்துக் கொள்வார்) பின்னால் நிற்கும் ஜெயாவைக் கூப்பிடுவார். ஜெயா அருகில் வந்ததும் மீண்டும் முன்னால் ஒரு நடை நடந்து கைகளை பின்னே கட்டி விசிலடித்தபடி தலையாலே சைகை செய்து மறுபடி ஜெயாவை அழைப்பார். ஒரு இடத்தில் கூட கை,கால்கள் தவறு பண்ணாது. மாறாக தன்னிகரில்லா ஸ்டைலைத்தான் காட்டும்.

(நடுவில் 'போலீஸிடம் சொல்லி விடுவேன்' என்ற மிரட்டலில் ஜெயாவின் கன்னத்தை அவர் கைகளைக் கொண்டே தன் கைவிரல்களின் பின் பக்கங்களால் வருடச் செய்து காரியம் சாதிப்பார். கன்னம் தொட்ட கை விரல்களுக்கு தானே முத்தம் வேறு கொடுத்துக்கொள்வர்)

'வைரமென்றே எனை நீ பாடு' என்று ஜெயா ஆடியபடி பின்னோக்கி நடக்க, நடிகர் திலகம் படு காஷுவலாக மறுபடியும் சொல்கிறேன் படுபடு காஷுவலாக ஒரு அலட்சிய நடை முன்னோக்கி நடப்பார்.

'உன் மனமும் குணமும் நாடகம்' என்று பாடியபடி ஜெயாவைக் கை கோர்த்துக் கொண்டு கையில் சூட்கேசுடன் உற்சாகம் கொப்பளிக்க ஒரு வேக நடை நடப்பார் பாருங்கள்.

பாடல் முடியும்போது (ஆஹா ஆஹா சுசீலா ஹம்மிங்) பெட்டியைக் கையில் மாற்றியபடியே நடந்து வருவது இன்னும் சூப்பர்.

ஆரம்பத்திலிருந்து இப்பாடலின் இறுதி வரை இந்த அற்புதப் பிறவி கை,கால்கள், நிற்கும் ஸ்டைல், நடக்கும் ஸ்டைல், அலட்சியம், சுறுசுறுப்பு, வேகம், விவேகம், கொப்பளிக்கும் குறும்பு, காதல், அத்தோடு சேர்ந்த ஊடல், நினைத்ததை சாதிக்கும் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம், கிண்டல் கேலி சேர்ந்த நையாண்டி, உடைகளின் அழகு, ஒல்லியான ஸ்லிம்மான பிரம்மிக்க வைக்கும் ஸ்வீட் அழகு என்று ஏகத்துக்கும் இந்த ராஜா நம்மை ஆள்கிறாரே!

கொடுத்து வைத்த குடிமக்கள் நாம் அல்லாமல் வேறென்ன!


http://www.dailymotion.com/video/xi89vb_nee-varavendum-endru_school

gkrishna
10th July 2014, 07:54 PM
வாசு சார்
ரொம்ப கஷ்ட படுத்துறீங்க (இன்ப கஷ்டம்)
ஒரு பாட்டை எப்படி எல்லாம் கவனிகீறீர்கள் என்பதற்கு இந்த பதிவு மிக சிறந்த உதாரணம்
மன்மத லீலை யை சீன் க்கு சீன் க்கு அலசியது போல் ராஜாவை ஒரு நாள் அலசுவோமா

rajeshkrv
10th July 2014, 08:23 PM
படத்தில் முகவாய்க் கட்டையில் கை வைத்திருப்பவர் உதயசந்திரிகா. (தில்லானா மோகனாம்பாளி'ல் பாலாஜி மனைவி இவர்).

http://3.bp.blogspot.com/-mqO9oK3TRsQ/UBIflx9PkLI/AAAAAAAAsAc/4AnpqIsBgSE/s1600/mqdefault.jpg

udhayachandrika acted in velli vizha, also as Muthuraman's sister in kasethan kadavulada i guess

rajeshkrv
10th July 2014, 08:30 PM
M/s. Vasu / Krishnaji / Karthik:

Outstanding entertainment. Special thanks to Vasu Sir for that pose from Raja; but, my favourite one is during the fight (before that long but interesting climax) between NT and Balajee in which NT's stance with cream colour shirt and pant with scarf...Wow. I remember Mr. Raghvender also shared some thing about this still photo some time back.

Kalpana committed suicide and died, which was followed by another Kannada actress Vijayasree (NT's love interest in Babu). She was very famous for heroine oriented roles and was groomed by Puttanna Kanagal. However, both got separated. Irulum Oliyum's original was Puttanna's in which Kalpana acted as lead lady. Her way of wearing blouse with almost full sleeves with collar around neck was very famous. When this movie was remade as Irulum Oliyum, this was also copied by Vanisree!

Bharathi only will almost like Saroja Devi; not Kalpana. Kalpana's is a unique face. Good talent; as usual wasted in Tamil.

Regards,

R. Parthasarathy

To an extent Kalpana & bharathi were like SD. Kalpana was introduced by B.R.PAnthulu . If you see Karnan movie She will be the one who played the role of Dharma devathai , she will appear in the end in the battle field as well.

She had relationship with Puttanna and Their combination movies were super duper hit, my fav is sharapanjara (what a performance by kalpana
)

https://www.youtube.com/watch?v=2buMagdSLgA
what a rendition by PS

she was called minugu thare (shining star), her dressing style was class.

Puttanna brought Arthi in the movie NAgarahaavu( rajanagam in tamil) and Kalpana was not given any role and slowly she went into depression and finally committed suicide..

both barathi & Kalpana are extremely talented artists .. Barathi went to act in all languages (including telugu & malayalam & lent her own voice in those languages too)

bad that these 2 were not utilized in tamil that much.

vasudevan31355
10th July 2014, 09:20 PM
Thanks Rajesh.

vasudevan31355
10th July 2014, 09:59 PM
Kalpana with Sivakumar in 'kattila thottila'


http://www.dailymotion.com/video/x16sry9_kattila-thottila-1973-oru-vitha-mayakkam_shortfilms

vasudevan31355
10th July 2014, 10:12 PM
udhayachandrika acted in velli vizha, also as Muthuraman's sister in kasethan kadavulada i guess

'காசேதான் கடவுளடா' படத்தில் முத்துராமனின் தங்கையாக வருபவர் உதய சந்திரிகா அல்ல. வேறொரு துணை நடிகை. (விஜயரேகா? அல்லது ரேணுகா?) ஆனால் உதயசந்திரிகா போன்றே தோற்றம் கொண்டவர். அதனால்தான் இந்தக் குழப்பம்.

rajeshkrv
10th July 2014, 11:42 PM
'காசேதான் கடவுளடா' படத்தில் முத்துராமனின் தங்கையாக வருபவர் உதய சந்திரிகா அல்ல. வேறொரு துணை நடிகை. (விஜயரேகா? அல்லது ரேணுகா?) ஆனால் உதயசந்திரிகா போன்றே தோற்றம் கொண்டவர். அதனால்தான் இந்தக் குழப்பம்.

krishna .. yes but it's always a confusion

here is a scene with both of them


https://www.youtube.com/watch?v=x0DT8dpS6qE

rajeshkrv
10th July 2014, 11:44 PM
Kalpana with Sivakumar in 'kattila thottila'


http://www.dailymotion.com/video/x16sry9_kattila-thottila-1973-oru-vitha-mayakkam_shortfilms


kalpana acted in sadhu mirandal, madras to pondicherry,thennangeetru, kattila thottila and few more movies in tamil as well

the best song from kattila thottila "naan nallavar illaram nalamura vendugiren" vaali-PS-Vkumar


http://www.dailymotion.com/video/x16ss72_kattila-thottila-1973-naan-nallavar-illam_shortfilms

RAGHAVENDRA
11th July 2014, 08:07 AM
ஒரே நாளில் எவ்வளவு பதிவுகள் எத்தனை விஷயங்கள்... கிருஷ்ணா, வாசு, கார்த்திக், என அனைத்து நண்பர்களும் இணைந்து இத்திரியை இம்மய்யத்தின் இசைப் பொக்கிஷமாய் மட்டுமின்றி தகவல் பொக்கிஷமாகவும் உருவாக்கி வருகிறீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.

கோபால் சார் செம form ல் இருக்கிறார். யாரை எங்கே எப்படி கலாய்க்கப் போகிறாரோ தெரியவில்லை. நினைத்தாலே அடி வயிறு கலக்குகிறது.. .எனிவே ஜமாயுங்கள்.. தங்கள் இமேஜினேஷன் ரூட்டே தனி....

உங்கள் வழி தனி வழி

RAGHAVENDRA
11th July 2014, 08:13 AM
மெல்லிசை மன்னரின் இசைக்குழு சில படங்களில் தலை காட்டியிருக்கிறது. சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் இதைப் பார்த்திருப்பீர்கள். இதை விட இன்னும் சிறப்பாக கல்லும் கனியாகும் திரைப்படத்தில் படமாக்கியிருப்பார்கள். அதிலிருந்து நமக்காக சில நிழற்படங்கள்

ட்ரம்ஸ் நோயலும் கணேஷூம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/msvtroupkallumkaniyagum01_zps57c840e5.jpg

ஏ எல் ராகவன் கிடார் கலைஞராக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/msvtroupkallumkaniyagum02_zpsb89a28ff.jpg

கோரஸ் குரல் தரும் கணேஷ் மற்றும் புல்லாங்குழல் நஞ்சுண்டையா

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/msvtroupkallumkaniyagum04_zps274d25e4.jpg

கிடார் பிலிப்ஸ்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/msvtroupkallumkaniyagum03_zps9649dc20.jpg

குழு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/msvtroupkallumkaniyagum06_zpsc7a9a396.jpg

அக்கார்டின் கலைஞர்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/msvtroupkallumkaniyagum05_zps4d2dcdb9.jpg

RAGHAVENDRA
11th July 2014, 08:29 AM
இன்றைய பொழுது இனிமையாக தொடங்க கேளுங்கள் ராசலீலா

http://www.youtube.com/watch?v=rGTF7OtsZfc

இந்த ஆல்பத்தை முழுமையாகக் கேட்க

http://www.youtube.com/watch?v=qp1yaI6ygmI

இந்த ஆல்பம் இப்போது சிடியாக வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சிடியின் நிழற்படம்

https://lh5.googleusercontent.com/_xthZltGQI5O4mLI8EMPrck8UAGMK6ZSgvjiTgOF_t0=w298-h223-p-no

vasudevan31355
11th July 2014, 08:39 AM
இன்றைய ஸ்பெஷல் (27)

இன்றைய ஸ்பெஷலில் மனதை பிழிந்தெடுக்கும் ஒரு பாடல்.

இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். உங்களை அறியாமலேயே உங்கள் இதயம் கனத்துப் போவதை அறியலாம். கனக்க வைப்பவர் 'பாடகர் திலகம்' சௌந்தரராஜன் அவர்கள்.

இந்தப் பாட்டில் ஏதோ ஒன்று ஒளிந்து கொண்டிருக்கிறது சார். இதை கேட்கும் போதெல்லாம் மனதில் ஏதோ இனம்புரியா கலவரம் உண்டாகிறது.

http://www.inbaminge.com/t/e/Ethirkalam/folder.jpg

http://i.ytimg.com/vi/RXKBgnpvuow/0.jpg

தணிகைவேல் பிச்சர்ஸ் தயாரித்த எதிர்காலம் (1970) படத்திலிருந்துதான் இந்தப் பாடல். ஜெமினி கணேஷ், ஜெயசங்கர், பத்மினி, வாணிஸ்ரீ, பாலையா, நாகேஷ் என்று ஒரே நட்சத்திரப் பட்டாளம். பத்மினிக்கு அடாவடி குப்பத்துப் பெண் வேடம். புடவையை வரிந்து கட்டிக் கொண்டு கேமரா மேதை கர்ணன் படத்தில் வருவது போல சண்டைகள், ஜிம்னாஸ்டிக் வேலைகள் எல்லாம் செய்வார். ஜெமினி இவருக்கு ஜோடி. ஜெமினி நியாயமான ஏழை ரிக்ஷாக்காரர். அவர் தம்பிதான் ஜெய். நேர்வழி வாழ்க்கைக்கு உதவாது என்று வாழ்க்கையில் அடிபட்டு திருடனாகவும், கொள்ளைக்காரனாகவும் ஜெய் மாறி விடுவார். ஜெயக்கு வாணிஸ்ரீ. பாலையா பேட்டை வஸ்தாத்.

பாடல்கள் கவியரசர்.

இசை மெல்லிசை மன்னர். (எல்லாப் பாடல்களும் அற்புதம். எல்லாப் பாடல்களுமே இன்றைய ஸ்பெஷல் தொடரில் வர இருக்கின்றன)

'மௌனம்தான் பேசியதோ'- ராட்சஸி

'வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா வாழ்க்கை இது சுலபம் சுலபம்'- சௌந்தரராஜன்,ராட்சஸி

'மஜா மஜா மஜா மாப்பிள்ளே'-சௌந்தரராஜன், சுசீலா (கோபாலுக்கு அல்வா பாட்டு)

என்று கலக்கல் பாடல்கள்.

தயாரிப்பு எம்.எஸ்.ராஜேந்திரன். இயக்கம் எம்.எஸ்.சோலைமலை.

குப்பத்துக் காட்சிகளும், நகரத்துக் காட்சிகளும் சம பங்கில் ஆக்கிரமிப்பு செய்யும் படம் இது.

திருடனாகி,கொள்ளைக்காரனாகி திரியும் தம்பியை நீண்ட நாள் சென்று சந்திக்கிறான் ரிக்ஷாக்கார ஏழை அண்ணன். நேர்மையாய் வாழச் சொல்லி பலதடவைகள் அறிவுரை கூறுகிறான். தர்மமே, நியாயமே ஜெயிக்கும் என்றும் கூறுகிறான். தம்பி அதை ஏற்க மறுக்கிறான். வசதியான வாழ்வு வாழ்கிறான். அண்ணனையும் பாசத்தோடு தன்னோடு இருக்க அழைக்கிறான். ஆனால் இதை அண்ணன் மறுக்கிறான்.

உன் பாதை பெரிதா அல்லது என் பாதை பெரிதா என்று இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். நீ என் பாதைக்கு வருவே என்று இருவரும் மோதிக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட சிச்சுவேஷனில் வரும் பாடல்தான் இது.

திருந்தாத தம்பியை நினைத்து அண்ணன் வேதனயுடன் பாடுகிறான். என்ன சொன்னாலும் தம்பி திருந்த வில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு.

'எக்கேடாவது கெட்டுப் போ... பட்டு அனுபவித்துத் தெளிந்து வா... திருந்தி வா'...என்ற அர்த்தத்தில் மனம் நொந்து பாடுகிறான். 'நாடக மேடை ராஜாதான் தற்போது நீ. வேஷம் கழித்து வெளியே வரும் நாள் வெகு தொலைவில் இல்லை' என்கிறான்.

காட்சிக்குத் தகுந்த வரிகளை எளிமையாக அனைவருக்கும் புரியும்படி வடிப்பதில் கவிஞருக்கு இணை ஏது?

மெல்லிசை மன்னர். அப்படியே நம் உயிரை இப்பாடலின் டியூன் மூலம் உருக்குகிறார். ஜெமினியும் அம்சம். ஜெமினியின் உள்ளத்தின் வேதனையை நம்முள் பிரதிபலிக்கச் செய்தது பாடகர், கவிஞர், இயக்குனர் இவர்களின் வெற்றி.

ஜெமினியின் மனவேதனையையும், அதை புரிந்து கொள்ளாத ஜெயசங்கரின் உற்சாகக் கேளிக்கைகளையும் மாறி மாறி காட்டுகிறது இப்பாடல் காட்சி

இதயம் கனக்கத் தயாராகுங்கள்.

https://i1.ytimg.com/vi/il5G-qbRlig/mqdefault.jpg

கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல

கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல

ஆற்றுக்குள் நாணலிட்டால்
காட்டுக்குள் ஆட்டை விட்டால்
என்னென்று முடிவாகும்

ஆசையை முன்னே வைத்து
தர்மத்தை பின்னே வைத்தால்
என்னென்ன விளைவாகும்

நாடக மேடை ராஜாவானால்
அங்கென்ன அதிகாரம்
நாணயமாக வாழ்வதில்தானே
யாருக்கும் எதிர்காலம்

நாடக மேடை ராஜாவானால்
அங்கென்ன அதிகாரம்
நாணயமாக வாழ்வதில்தானே
யாருக்கும் எதிர்காலம்
உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல

ஓடத்தைப் பார்த்த பின்னும்
வெள்ளத்தில் நீந்திச் சென்றால்
சொந்தத்தில் அறிவேது
பட்டுத்தான் தேறுமென்றால்
கெட்டுத்தான் மாறுமென்றால்
புத்திக்கு விலையேது
உள்ளத்தில் கோழை
ஊருக்கு வீரன்
இது உந்தன் நிகழ்காலம்
உண்மையைத் தேடி
ஒருநாள் வந்தால்
ஒளி விடும் எதிர்காலம்
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல

கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yfx1kel88PE

போனஸ்

இப்பாடலில் மனம் சோகமயமாக, அதற்கு மாற்றாக ஒரு ஜாலி மருந்து இதே படத்திலிருந்து.

'நாட்டியப் பேரொளி' சண்டைப் போராளியாக மாறி நம்மை நடுங்க வைப்பதைப் பார்த்து மகிழுங்கள். யப்பா! இன்னா போடு! இன்னா சாத்து! 'தில்லானா' ஆடுன மோகனா 'தில்'லா என்னாமா செலம்பம் வெள்ளாடுது. ஜாக்கிரதையாவே இருக்கணும் சாமி.


http://www.youtube.com/watch?v=RXKBgnpvuow&feature=player_detailpage

gkrishna
11th July 2014, 09:26 AM
[அனைவருக்கும் காலை வணக்கம்

நேற்று எவ்வளுவு விஷயங்கள்
பாரத விலாஸ் ராஜவேலு சம்பந்தி
-do - ராஜபாண்டியன் போடோக்ராபர்
ராஜா - சாந்தி குமார்
கல்பனா -கட்டில தொட்டில
உதயசந்திரிகா - பல படங்கள்
வாசு சார் சுட சுட தோசை போட்டார்
பின்னாடியே ராஜேஷ் சார் அவர் பங்குக்கு ஏகப்பட்ட தகவல்கள்
கல்பனா, உதய சந்திரிகா பற்றி சுண்டல் மசால் வடை
எல்லோரையும் தூக்கி மோர்னிங் மினி டிபன் ராகவேந்தர் சார்
மெல்லிசை மன்னரின் குழுவையே கொண்டு வந்துட்டார் ,தொட்டுக்க சட்னி சாம்பார் ராசலீலா
விடுவாரா நெய்வேலி வாசுதேவன் கபே
straight லஞ்ச் - எதிர் காலம்
10 நாள் முன்னாடி முரசு வில் பார்த்து கொண்டு இருந்தேன்
'கல்லுக்கு நீதி சொல்ல முடியாது '
நம்ம திரியில் ஆரம்பத்தில் ராட்சசியின் "மௌனம் தான் பேசியதோ "
பற்றி ராகவேந்தர் ஒரு பதிவு போட்டு விட்டார்
இப்ப நைட் டின்னெர் என்ன தெரியலை

ஓய்வு க்கு ஓய்வு கொடுத்து விட்டு நேற்று கோபால் சார் ஒரு பதிவு
சாரதி சார் பதிவு

வாழ்த்துகள் வாசு சார் .
இன்று வெள்ளி

"வெள்ளிகிழமை விடியும் வேளை வாசலில் கோலம் இட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன் '

http://www.youtube.com/watch?v=2tDB6NWrXdg

'அம்மன் அருள்' எல்லோருக்கும் கிடைக்கட்டும்

vasudevan31355
11th July 2014, 09:32 AM
ராஜேஷ் அவர்களின் பங்களிப்புகள் அருமை. அரிதான, வித்தியாசமான, தகவல்கள் அடங்கிய அவரது பதிவுகள் திரிக்கு பெருமை. அவர் இப்படியே தொடர்ந்து அரிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி ராஜேஷ். இரவு நேரம் அழகாகத் திரியையும் முடித்து வைக்கிறீர்கள்.

vasudevan31355
11th July 2014, 09:32 AM
கிருஷ்ணா சார்

'அம்மன் அருள்' எனக்கும் கிட்டிற்று. மஞ்சுளா ஆயிற்றே! விட்டுவிட முடியுமா? ராஜன் சித்ரவதையை சகித்துக் கொண்டேன்.

அம்மன் அருளை மீண்டும் பெறச் செய்ததற்கு நன்றி. அதை விட ஒன்றே ஒன்று, பாடல் வரிகளுக்கு.

அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்.

vasudevan31355
11th July 2014, 09:33 AM
நாலாவது தோசை இல்லை சார். அமுதம். தேவாமிர்தம். தேவர்களுக்கு மட்டுமே!

vasudevan31355
11th July 2014, 09:33 AM
ராகவேந்திரன் சார்!

இதெல்லாம் உங்களால் மாத்திரமே முடியும். கல்லையும் கனியாக்கும் இசைக்கலைஞர்களின் நிழற்பட வரிசை நிஜமாக ஜோர். ராசலீலையும் பரம சுகம். அனைத்திற்கும் நன்றி!

vasudevan31355
11th July 2014, 09:37 AM
கோபால் சார்!

என்னைக் கலாய்க்கும் போது 4 வரி கூட சேர்த்து கலாய்த்து எனக்கு பெருமை தேடித் தர வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

ராகவேந்திரன் சாருக்கு திக் திக்கென்று இருக்கிறது. ஆனால் எனக்கு சிரித்து சிரித்து 'விக்' விக்' என்று விக்கலே எடுத்து விட்டது.

ஜமாய் ராஜா.

vasudevan31355
11th July 2014, 10:06 AM
கிருஷ்ணா சார்

'நீ' படத்தில் வித்தியாசமான அந்தப் பாடல்

'ஒன்டே ஒன் வே ஒன் கேர்ள் ஒன் பாய்'.

பி.பி.எஸ்ஸும், ராட்சஸியும் புகுந்து விளையாடும் வெஸ்டெர்ன் டைப் சாங். செம கிடார் விளையாட்டுக்களுடன்.

ஈஸ்வரி

'வானில் வருவது ஒன்லி மூமூமூ.......ன்' (பாடகியில் வருவது ஒன்லி ஈஸ்வரி)

என்று சொல்லி நம்மை குதூகலிக்கச் செய்யும் ஜாலம்.

நாகேஷின் கால்கள் விரித்து சேர்க்கும் சர்க்கஸ்,


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=m_IlgG88ViM

rajeshkrv
11th July 2014, 10:17 AM
ராஜேஷ் அவர்களின் பங்களிப்புகள் அருமை. அரிதான, வித்தியாசமான, தகவல்கள் அடங்கிய அவரது பதிவுகள் திரிக்கு பெருமை. அவர் இப்படியே தொடர்ந்து அரிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி ராஜேஷ். இரவு நேரம் அழகாகத் திரியையும் முடித்து வைக்கிறீர்கள்.

Nandri sir. edho anil madhiri en pangayum seyya muyarchikkiren

rajeshkrv
11th July 2014, 10:19 AM
before going to bed a rare song from Kannamma

gopal sir, vasu sir matrum ellorum indha padathai patri niraya vishayangal solvargal


https://www.youtube.com/watch?v=2-Sli3mwle4

vasudevan31355
11th July 2014, 10:23 AM
http://i1.ytimg.com/vi/TMXqW-iejHQ/maxresdefault.jpg

'யார் நீ' படத்திலும் இது போல ஒரு பாடல் உண்டு.

டிக்கிரிக்கி டிக்கிரிக்கி டாட்டடா
டிக்கிரிக்கி டிக்கிரிக்கி வா
பக்கம் வந்து பக்கம் வந்து பார்க்க வா
பட்டு இதழ் தொட்டுக் கொள்ளவா
வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா

டிக்கிரிக்கி டிக்கிரிக்கி டாட்டடா
டிக்கிரிக்கி டிக்கிரிக்கி வா
உனக்கென்ன எனக்கென்ன ரகசியம்
ஒருதரம் அருகினில் வா
வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா

அதே பி.பி.எஸ்ஸும், ராட்சஸியும்.

'டாட்டடா' கோரஸ் முடிந்தவுடன் ஈஸ்வரி 'ஹஹஹ்ஹஹா' என்று மயில் மாதிரி ஒரு அலட்சியக் கூவல் கூவுவாறே! ஜென்ம சாபல்யம் அடைந்து விடலாம்.

கோரஸ், இசை, நடனம் என்று சகலமும் சிறப்பாக வேதாவின் கைவண்ணத்தில் ஆனந்தக் கூத்தாட வைக்கும் பாடல்.


http://www.dailymotion.com/video/x15myft_tikkirikki-tikkirikki-yaar-nee-1966_shortfilms

vasudevan31355
11th July 2014, 10:33 AM
ராஜேஷ் சார்,

கண்ணம்மா படத்தின் 'தென்ன மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' தங்களின் வித்தியாச ரசனையை எங்களுக்கு இன்னொருதரம் உணர்த்தி விட்டது. நன்றி சார்.

நவரசத்திலகம் முத்துராமன் திரியில் நமது அருமை கார்த்திக் சார் நீங்கள் கேட்டிருந்த 'கண்ணம்மா' படத்தைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை ஒன்றை அற்புதமாக எழுதி இருந்தார்.

அதை நான் தங்களுக்காக மறுபதிவு செய்கிறேன்.

அருமையான் தகவல்களுடன் கூடிய அட்டகாசமான கட்டுரை. மேற்கொண்டும் இப்படத்தின் பாடல்களை நாம் அலசலாம்.

இப்போது கார்த்திக் சாரின் 'கண்ணம்மா' கட்டுரை

'கண்ணம்மா (1972)

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று, (தென்னகத்துக்கு தேசிய விருதுகள் குதிரைக் கொம்பாக இருந்த காலத்தில்) தேசிய விருதை அள்ளிய செம்மீன் படத்தை இயக்கிய ராமுகாரியத், தமிழில் தயாரித்த வண்ணப்படம் கண்ணம்மா. இப்படத்தை கதை, வசனம் எழுதி இயக்கியவர் மா. லட்சுமணன்.

நாயகனாக நவரசத்திலகம் முத்துராமன், நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா நடித்த இப்படத்தில் மிக அருமையான குணசித்திர பாத்திரத்தில் நடித்திருந்தவர்கள் நம்பியாரும், பாலாஜியும். பிற்காலத்தில் நம்பியார் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத்துவங்கியபின் வந்த படமல்ல, அவர் வில்லனாக கொடிகட்டிப்பறந்த காலத்தில் வந்த படம். இப்படி ஒரு வேடத்தில் கொஞ்சமும் எதிர்பாராமல் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இன்னொரு திருப்பம் இப்படத்தின் பிரதான வில்லனாக நாகேஷ். அழகான பெண்களை வேட்டையாடுவதையே தொழிலாகக்கொண்ட காமுகன். இவர்தான் எந்த ரோலிலும் தூள் கிளப்புவாரே. அதகளம் பண்ணிட்டார். நீச்சல் குளத்தை ஒட்டிய, கண்ணாடி சுவர் வைத்த பாதாள அறையில் அமர்ந்து, குளிக்கும் பெண்களின் அழகை அவர்கள் அறியாவண்ணம் ரசிப்பது, பின் அவர்களில் ஒருவரை மிரட்டி படுக்கை அறைக்கு வரவழைப்பது போன்ற காமக் கொடுரங்களில் '24 மணிநேரம்' எக்ஸ்.டபிள்யூ.ராமரத்னம் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படி ஒரு பிளே-பாய்.

நகைச்சுவை நடிகர் வில்லனாக கோட்டையைப் பிடித்தாரென்றால், வில்லன் நடிகர் குணச்சித்திர ரோலில் கொடிநாட்டினார். இரண்டு பெண்குழந்தைகளில் ஒன்றை இறந்தும், இன்னொன்றை உயிரோடும் பறிகொடுத்துவிட்டு பிள்ளைப்பாசத்தில் துடிக்கும் துடிப்பை நம்பியார் மிக அருமையாக காட்டியிருந்தார்.

அதிலும் பிளாஷ் பேக்கில் காட்டப்படும் காட்சி மனதை அதிர வைக்கும். ரங்கூனிலிருந்து கல்கத்தாவுக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்குழந்தை இறந்துவிட, சொந்த ஊரில் கொண்டுபோய் இறுதிச்சடங்கு செய்ய கொண்டுவரும்போது, ரயிலில் உடன் பயணம் செய்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிணத்தை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியும்படி வற்புறுத்த, இவர் மறுக்க, இதனிடையே இறந்த குழந்தையின் பிணத்தை பக்கத்தில் கிடத்திவிட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருக்கும்போது, பயணிகள் அனைவரும் தொடர்ந்து விடாமல் நச்சரிக்க, அவசரத்தில் செய்வதறியாமல் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே வீசியெறிய, ஜன்னலைத்தாண்டி விழும்போது குழந்தை 'அப்பா'வென்று காத்த, அதிர்ச்சியில் "கண்ணம்மா" என்று நம்பியார் அலறும்போது தியேட்டர் மொத்தமும் அதிர்ச்சி அலையில்.

இன்னொருபக்கம் பாலாஜி, கண்சிமிட்டும் வக்கீல் பத்திரத்தை மிக அழகாக செய்திருந்தார். முத்துராமனுக்கு அளவான, அமைதியான கதாநாயகன் ரோல், மிக நன்றாக நடித்திருந்தார். கே.ஆர்.விஜயாதான் வழக்கம்போல கொஞ்சம் ஓவராக அலட்டிக்கொண்டார். டைட்டில் அவர் பெயரிலாச்சே, அதுவும் ஒரு காரணமோ. இவர்களோடு ஆங்கிலோ இந்தியப்பெண்ணாக சுகுமாரி, முஸ்லிம் பெரியவராக ஓ.ஏ.கே.தேவர், நாயகனை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக ஜெய்குமாரி நடித்திருந்தனர். (அழகான ஜெய்குமாரியை விட்டுவிட்டு, அவரைப்போல இருமடங்கு உருவம் கொண்ட மொக்கை கே.ஆர்.விஜயாவை நாயகன் காதலிக்கும்போது 'என்னய்யா உன் டேஸ்ட்டு' என்று தோன்றுகிறது நமக்கு).

இன்னிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல்கள் அனைத்தும் காதுக்கினிய மதுர கீதங்கள். நீண்ட நெடிய காலத்துக்குப்பிறகு இப்படத்தின் பாடல்கள் தற்போது தொலைக்காட்சிகளில் (குறிப்பாக 'முரசு' சேனலில்) ஒளிபரப்பாகின்றன.

கிராமத்து கல்யாண ரிசப்ஷனில் முத்துராமன் பாடுவதாக அமைந்த "எங்கெங்கும் என் எண்ணம், அங்கெல்லாம் உன் வண்ணம்" பாடல், பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய இறுதிக்காலப் பாடல்களில் ஒன்று. நிஜமான கிராமத்து கல்யாண வரவேற்பு இசை நிகழ்ச்சி போலவே அமைத்திருப்பார் இயக்குனர். மேடையில் அமர்ந்து மடியில் 'புல்-புல்-தராங்' இசைக்கருவியை வைத்து இசைததவாரே ரொம்ப கேஷுவலாக நடித்திருப்பார் முத்துராமன். (இந்த -புல்-புல்-தராங்' இசைக்கருவி எங்கள் வீட்டிலும் ரொம்ப காலம் இருந்தது. இந்த இசைக்கருவியை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மிஸ்ஸியம்மா படத்தில் ஏ.எம்.ராஜா பி.லீலா பாடிய 'வாராயோ வெண்ணிலாவே' பாடல்தான்).

அடுத்த பாடல் விஜயாவின் கற்பனையில் கே.ஆர்.விஜயா, முத்துராமனுடன் டூயட் பாடுவதாக வரும் "அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு" என்ற சுசீலாவின் சோலோ பாடல். ஊட்டி கார்டனில் கண்களுக்கு குளிர்ச்சியாக படமாக்கியிருப்பார்கள். மெட்டும் அழகான மெட்டு. என்ன ஒன்று, விஜயா பல்வேறு மாடர்ன் உடைகளில் வந்து பாடாய் படுத்துவார். (அவரது கணவர் இப்படத்தின் துணைத்தயாரிப்பாளர் என்பதால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது?).

எனக்குப்பிடித்த இன்னொரு அருமையான பாடல் டி.எம்.எஸ். மற்றும் சுசீலா இணைந்து பாடிய "தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்". இப்பாடலில் முத்துராமனும் விஜயாவும் கேரளா முஸ்லிம் பணியில் உடையணிந்திருக்க, கேரளா சூழலில் படமாக்கப்பட்ட அழகான பாடல். கேரள ஏரியில் படகு சவாரி கண்களுக்கு விருந்து.

விஜயாவுக்காக சுசீலா பாடும் மற்றொரு பாடல், "செல்வங்கள் இங்கே, செல்வர்கள் இங்கே, கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே" என்ற பாடல். தன் வளர்ப்புத்தந்தை நம்பியார் அளிக்கும் விருந்தில் செல்வர்கள் கூடியிருக்க, தன் ஏழைக்காதலன் முத்துராமனை நினைத்துப் பாடும் பாடல். அனைத்துப்பாடல்களுமே சங்கர்-கணேஷ் இரட்டையர் உழைத்து உருவாக்கியிருந்தனர்.

படத்தின் டைட்டில் காட்சியில் சென்னை மௌண்ட்ரோட்டில் கேமரா பயணிக்கும்போது சாந்தியில் பட்டிக்காடா பட்டணமா, பிளாசாவில் பிள்ளையோ பிள்ளை, குளோப்பில் நான் ஏன் பிறந்தேன் படங்களின் கட்-அவுட் மற்றும் பேனர்களைக் காணலாம்.

எனது அனுபவம்: பட ரீலீஸின்போதே குளுகுளு மிட்லண்ட் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளேன். சற்று வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களின் வித்தியாசமான உருவாக்கம், நட்சத்திரங்களின் மாறுபட்ட நடிப்பு, இனிய பாடல்கள் மற்றும் இசை என எல்லாவிதத்திலும் எனக்குப்பிடித்திருந்தது

vasudevan31355
11th July 2014, 10:47 AM
'அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு'

முத்துராமனும், விஜயாவும் பாடும் காதல் பாட்டு. இனிமை பொங்கும் பாடல். (கார்த்திக் சார் இரண்டே வரிகளில் அற்புதமாய் எழுதியிருந்தார்)

ஊட்டி கார்டன் கண்ணுக்குக் குளிர்ச்சி.
ஊதிப் போன விஜயா கார்டன் கண்ணுக்கு அதிர்ச்சி.


http://www.youtube.com/watch?v=sh55OZW_US8&feature=player_detailpage

vasudevan31355
11th July 2014, 10:52 AM
கிருஷ்ணா சார்

ரொம்ப நாழியா டைப் பண்றீங்கன்னு நினைக்கிறேன். செம பதிவா?

Gopal.s
11th July 2014, 10:56 AM
யப்பா,தாங்கலைடா சாமி. இனிமேல் இசைக்கும்,ராகவேந்தர் சாரின் திரிக்கும் மட்டுமே என் பணி .மக்குகளோடு மாரடிக்க முடியாது சாமி. சும்மாவா சொன்னாங்க அசடுகளுக்கு ஆங்காரம் என்று.

gkrishna
11th July 2014, 10:59 AM
கிருஷ்ணா சார்

ரொம்ப நாழியா டைப் பண்றீங்கன்னு நினைக்கிறேன். செம பதிவா?

யார் நீ 1966

சுசீலா குரலில்
கண்ணதாசன்
வேதா
என்ன ஒரு மெலடி சார்
இது ஹிந்தி தழுவல் தான் ஆனாலும் சுகம்


பொன் மேனி தழுவாமல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பொன் மேனி தழுவாமல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா

பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ

இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
உறவென்பது உன் நெஞ்சிலே என்றேனும் தோன்றுமா
நீ சொல்வதை நான் சொல்வதா
இது நீதியாகுமா
தாளாத பெண்மை எங்கும் போது மௌனமாகுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ


மழை மேகமே
என் தீபமே
என் காதல் தெய்வமே
மழை மேகமே
என் தீபமே
என் காதல் தெய்வமே
மறு வாழ்விலும் உன்னோடு நான் ஒன்றாக வேண்டுமே
நான் என்பதும் நீ என்பதும் ஒரு ராகமல்லவே
நாமொன்று சேர்ந்து வாழும் போது வார்த்தை வேண்டுமா

பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ
http://www.youtube.com/watch?v=DOks2BzWm2k

gkrishna
11th July 2014, 11:02 AM
கண்ணம்மா பயங்கர குளுமை சார்

பூந்தளிர படத்திற்கு ஈஸ்ட்மேன் கலர் பதிலாக வண்ணகுழந்தை
அது போல் கண்ணம்மா வண்ணகுமரி (ஜெயகுமரியை சொன்னேன் )

gkrishna
11th July 2014, 11:17 AM
[QUOTE=vasudevan31355;1146925]http://i1.ytimg.com/vi/TMXqW-iejHQ/maxresdefault.jpg


http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/c6/Woh_Kaun_Thi.jpg/240px-Woh_Kaun_Thi.jpg
http://www.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Aame%20Evaru%20(1966)/posters/Aame%20Evaru%20(1966)2.jpg

யார் நீ ஹிந்தியில் ஓ கௌன் தொ மனோஜ்குமார் சாதனா
தெலுங்கில் அமெ எவரு கலைச்செல்வி ஜக்கய்யா
மற்ற மொழிகளில் உண்டா சார்

vasudevan31355
11th July 2014, 11:39 AM
http://i.ytimg.com/vi/-UK6xiHzHG4/0.jpg

'பொன்மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல்' பாடலில் ஜெயலலிதா அவர்களின் அழகைச் சொல்லி மாளாது. மேக்-அப் அவ்வளவு அற்புதமாய் இருக்கும். ஹேர் ஸ்டைல் மிக அருமை.

http://i1.ytimg.com/vi/lZX9gNTExak/hqdefault.jpg

இதைப் போலவே 'ரகசிய போலீஸ் 115' இல் (அது வண்ணம்) மிக அழகாகத் தெரிவார் ஸ்லிம்மமான உடலுடன்.

vasudevan31355
11th July 2014, 12:58 PM
கிருஷ்ணா சார்,

இன்று மதியம் ஷிப்ட். (2 to 10) நாளை மார்னிங் ஷிப்ட். நாளை மதியம் சந்திக்கலாம்.

parthasarathy
11th July 2014, 01:18 PM
[QUOTE=gkrishna;1146935]யார் நீ 1966

சுசீலா குரலில்
கண்ணதாசன்
வேதா
என்ன ஒரு மெலடி சார்
இது ஹிந்தி தழுவல் தான் ஆனாலும் சுகம்


பொன் மேனி தழுவாமல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Thank you Krishna Ji.

However, if you listen to the original composition of Madan Mohan - Lag ja gale - the BGM, especially!

Vasudevan Sir:- Can you chip in?

Regards,

R. Parthasarathy

mr_karthik
11th July 2014, 04:15 PM
மன்மத லீலை யை சீன் க்கு சீன் க்கு அலசியது போல் ராஜாவை ஒரு நாள் அலசுவோமா

டியர் கிருஷ்ணாஜி,

ஸ்டைல் கிங் அசத்திய 'ராஜா' திரைப்படத்தைப்பற்றி நடிகர்திலகம் திரியின் பாகம் 11-ல் அட்டகாசமாக அலசப்பட்டிருக்கிறது. நமது ஹப்பர்கள் அனைவரும் பங்குபெற்று மிக அருமையாக பதிவுகள் இட்டிருந்தனர். நடிகர்திலகம் மற்றும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் பற்றி மட்டுமல்லாது வசீகர வில்லன் விஸ்வம் மற்றும் நடனதாரகை தாரா பற்றியும் கூட பதிவுகள் இடப்பட்டுள்ளன. அதுபோக ஏராளமான நிழற்படங்கள் மற்றும் காட்சிகள் என 'ராஜா' பூரணமாக ஆயப்பட்டுள்ளது. (அவற்றில் நமது வாசு சாரின் உழைப்பு அசுரத்தனமாக அமைந்துள்ளது)

எனவே தற்போது நமது திரியில் ராஜாவின் பாடல் காட்சிகள் பற்றி ஆராயலாம். ஏற்கெனவே 'இரண்டில் ஒன்று' மற்றும் 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடல்கள் அலசப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடல்கள் 'கல்யாண பொண்ணு', 'கங்கையிலே ஓடமில்லையோ' மற்றும் 'நான் உயிருக்கு தருவது விலை' ஆகிய பாடல்கள் பற்றி கூடிய விரைவில் ஆய்வு செய்வோம்...

mr_karthik
11th July 2014, 04:36 PM
'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலில் நடிகர் திலகம்.

ஆரம்பத்திலிருந்து இப்பாடலின் இறுதி வரை இந்த அற்புதப் பிறவி கை,கால்கள், நிற்கும் ஸ்டைல், நடக்கும் ஸ்டைல், அலட்சியம், சுறுசுறுப்பு, வேகம், விவேகம், கொப்பளிக்கும் குறும்பு, காதல், அத்தோடு சேர்ந்த ஊடல், நினைத்ததை சாதிக்கும் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம், கிண்டல் கேலி சேர்ந்த நையாண்டி, உடைகளின் அழகு, ஒல்லியான ஸ்லிம்மான பிரம்மிக்க வைக்கும் ஸ்வீட் அழகு என்று ஏகத்துக்கும் இந்த ராஜா நம்மை ஆள்கிறாரே!

கொடுத்து வைத்த குடிமக்கள் நாம் அல்லாமல் வேறென்ன!

டியர் வாசு சார்,

இத்தனைக்கும் ராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பாபு, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே ஆகிய படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார்.

காலையில் ஒரு பட ஷூட்டிங்க், மாலையில் இன்னொரு பட ஷூட்டிங்க், இரவில் வேறொரு பட ஷூட்டிங்க் என்று கலந்து கொண்டு நடித்தார். காலையில் தாடியும் மீசையும் கிழிந்த உடைகளுமாக கைரிக்ஷா இழுக்கும் பாபு, மதியம் ஸ்டைலான சி.ஐ.டி.ராஜா, இரவில் இவற்றுக்கு சம்பந்தமே இல்லாத மூக்கையா சேர்வை, மறுநாள் காலை முரடன் ஆண்ட்டனி இப்படி மாறி மாறி கூடு விட்டு கூடு பாய்ந்த ஒரு நடிப்புலக மேதையை, எல்லாப்படங்களிலும் 'ஒரே மாதிரி வந்து போனவர்களுடன்' ஒப்பிட்டு பேசுகிறார்களே. என்ன ஒரு அறியாமை...

mr_karthik
11th July 2014, 04:44 PM
டியர் ராஜேஷ் சார்,

தங்களின் அருனையான தகவல் பதிவுகளுக்கு நன்றி. கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' பாடலின் காணொளிக்கும் நன்றி. (முத்துராமன் திரியில் ராகவேந்தர் சார் 'கண்ணம்மா' முழுப்பட வீடியோவையும் கொடுத்துள்ளார். பார்த்து இன்புறவும்)

கண்ணம்மா பற்றிய என்னுடைய கட்டுரையை இத்திரியில் மீள்பதிவு செய்த அன்பு வாசு சாருக்கும் நன்றி...

mr_karthik
11th July 2014, 04:52 PM
டியர் ராஜேஷ் சார்,

தங்களின் அருனையான தகவல் பதிவுகளுக்கு நன்றி. கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' பாடலின் காணொளிக்கும் நன்றி. (முத்துராமன் திரியில் ராகவேந்தர் சார் 'கண்ணம்மா' முழுப்பட வீடியோவையும் கொடுத்துள்ளார். பார்த்து இன்புறவும்)

கண்ணம்மா பற்றிய என்னுடைய கட்டுரையை இத்திரியில் மீள்பதிவு செய்த அன்பு வாசு சாருக்கும் நன்றி...

mr_karthik
11th July 2014, 05:17 PM
டியர் வாசு சார்,

ஐயோ ஐயோ... இப்படி ஒரேயடியாக எங்களைக் கொல்லலாமா?. இது நீதியா?. நியாயமா?. ராஜா திரைக்காவியத்தில் இடம்பெற்ற 'நீ வரவேண்டும்' பாடல் பதிவைத்தான் சொல்கிறேன். என்ன ஒரு அருமையான, அதே சமயம் போலீஸ் காவலுடன் கூடிய மிரட்டல் டூயட். இப்பாடல் பற்றி ஏற்கெனவே நடிகர்திலகம் திரியில் எழுதியிருந்த போதிலும் ஆவல் அடங்கவில்லை.

பாடலில் நமது நடிகர்திலகமும் சரி, 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களும் சரி செம க்யூட். மேட் பார் ஈச் அதர் என்பது போன்ற கெமிஸ்ட்ரி. வெள்ளை பேண்ட், கிரீம் கலர் ஷர்ட், வெளிர் நீல நிற ஸ்கார்ப், பிரௌனும் மஞ்சளும் கலந்த நிறத்தில் கோட், சொக்க வைக்கும் ஹேர் ஸ்டைல் இவற்றுடன் நடிகர்திலகம். வித்தியாசமான மெரூன் கலர் ஸாரி, அதே கலரில் புல்ஸ்லீவ் ஜாக்கெட், அழகான ஹேர்ஸ்டைல், காதோரம் வளைத்துவிடப்பட்ட முடியலங்காரம் என 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள்.

பாடலின் ஒவ்வொரு வரியையும் என்னமாய் ரசித்து ரசித்து விளக்கம் அளித்துள்ளீர்கள். அட்டகாசம் சார். உங்கள் விளக்கத்தைப் படித்துக்கொண்டே பாடலின் வீடியோவைப் பார்ப்பது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது. கணக்கிலடங்கா தடவை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. அதனால் ஸீன்-பை-ஸீன் அத்துப்படி. ராஜாவும் ராதாவும் மட்டுமா?. தர்மலிங்கம், நாகலிங்கம், பூசாரி காளிதாஸ், கமிஷனர் பிரசாத், பட்டாபி, ஜானகி, சீதா ராமன்கள், பாபு (சந்தர்), விஸ்வம், குமார், ஜம்பு, பார்வதி, தாரா என அனைவரும் நம் இதயங்களில் ஒன்றிவிட்டனரே. இந்தப்பாடலும் சரி,

இந்தப்படமும் சரி எத்தனை தடவை விவாதித்தாலும் சலிக்காது.

திடீர் விருந்துக்கு மிக்க நன்றி வாசு சார். (பி.எம்.பார்த்தீர்களா)

mr_karthik
11th July 2014, 05:37 PM
வாசு சார் & கிருஷ்ணா சார்,

'யார் நீ' படத்தில் இடம்பெற்ற கிளப் டான்ஸ் பாடலையும், 'பொன்மேனி தழுவாமல்' பாடலையும் பதித்ததற்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

யார் நீ பாடல்கள் அனைத்துமே அருமைதான் (அத்தனையும் ஹிந்திப்பட மெட்டுக்களாக இருந்தபோதிலும்) . ஆனந்தன் சீசன் இன்னும் முடியவில்லை போலும். இந்தப்படத்திலும் பிரதான வில்லன் ஆனநதன்தான்.

எனக்கு பிடித்த இன்னும் நான்கு பாடல்கள்...

படத்தின் பெயரைச் சொன்னதுமே நினைவுக்கு வரும் "நானே வருவேன் இங்கும் அங்கும்" படத்தில் பலமுறை ரிப்பீட்டட் ஆக வந்தாலும் அலுக்காது. காரணம் திகில் காட்சிகள் அப்படி. 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் ஆவியாகவே வந்து அசத்தியிருப்பார்.

ஜெய்சங்கர் குமாரி ராதாவுக்கான டூயட், டி.எம்.எஸ்ஸும், ராட்சசி ஈஸ்வரியும் இணைந்து பாடிய
'பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா'
மனதை வரும் மென்மையான மேலோடி. பாடல் முடிந்த சிறிது நேரத்தில் பாவம் குமாரி ராதா கொல்லப்படுவார்.

இன்னொரு அட்டகாசமான பாடல் கண்ணியப்பாடகிக்கு...

வீட்டை விட்டு புறப்படும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் ஜெய்யைப்பார்த்து பாடும்..
'என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு
அழுவதேன் கண்ணா'

மன அமைதிக்காக ஜெய் கொடைக்கானல் சென்றிருக்கும் சமயம் அங்கு பார்த்து ரசிக்கும் குரூப் டான்ஸ் பாடல், கோரஸுடன் இணைந்து ராட்சசி..

'கண்ணுக்கென்ன சும்மா சும்மா பாக்குது
அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது'

காப்பியடித்தாலும் அதை அழகாக செய்தால் அழகுதான். அதை அழகாக செய்தவர் வேதா...

mr_karthik
11th July 2014, 05:43 PM
கிருஷ்ணாஜி,

யார் நீ படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு பட விளம்பரங்களைப் பதித்தீர்களே, அப்படியே தமிழ் விளம்பரம் கிடைத்தாலும் பதியுங்களேன். (இங்காவது அல்லது மக்கள் கலைஞர் திரியிலாவது)..

gkrishna
11th July 2014, 06:16 PM
கிருஷ்ணாஜி,

யார் நீ படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு பட விளம்பரங்களைப் பதித்தீர்களே, அப்படியே தமிழ் விளம்பரம் கிடைத்தாலும் பதியுங்களேன். (இங்காவது அல்லது மக்கள் கலைஞர் திரியிலாவது)..

நிச்சயமாக கிடைத்ததும் போடுகிறேன் kaarthik sir

gkrishna
11th July 2014, 06:50 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRVneGrBNXsX5XB6mHbxYwoop2M7znDC 2jmsJXQXa7iElzREMHGhttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/NoolVeli0007.jpghttp://i1.ytimg.com/vi/kYGOurwVabQ/0.jpghttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQdidJvjghTxCLgGeakqG6AKnRNFudue bwCl6gobvpRX2EXaSXIhttp://upload.wikimedia.org/wikipedia/en/8/8f/Guppedu_Manasu.jpg

நூல்வேலி 1979
பாலசந்தர் இயக்கம்
சரத்பாபு சுஜாதா சரிதா நாராயண ராவ் (நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் ஜெயசுதாவின் கணவர் ரஜனிக்கு கார் டிரைவர்), ரமணமுர்த்தி(சங்கராபரணம் சோமயாஜுலு சகோதரர்) ,அனுமந்து நடித்து வெளி வந்த திரை படம்
மெல்லிசை மன்னர் இசை
இதே படம் குப்புடு மனசுடு என்று தெலுங்குலும் வெளியானது
நினைத்தாலே இனிக்கும் (ஏப்ரல் 1979) திரைப்படத்திற்கு பிறகு வந்த திரை படம்
கதை பயங்கர வி(வ)காரமான கதை . பாலச்சந்தரின் பல சீனியர் ரசிகர்கள் அவரை perverted என்று சொல்ல ஆரம்பித்த படம்
ஏற்கனேவே புன்னைகை,அரங்கேற்றம் போன்ற திரை படங்களில் இந்த புகார் எழுந்தது.
சரத்பாபு சுஜாதா கணவன் மனைவி
சரத்பாபு கட்டிட வல்லுனுர் .சுஜாதா நாவல் ஆசிரியை மற்றும் திரை பட தணிக்கை குழு உறுப்பினர் . அவர்களுக்கு பக்கத்துக்கு வீடு ஒரு சீனியர் நடிகை (இவர் நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் கமலுக்கு அம்மா
) மற்றும் அவரது மகள் சரிதா . சரிதா வெகுளி பெண் . நீண்ட நாட்கள் திரை துறையை விட்டு விலகி இருக்கும் சரிதாவின் அம்மாவிற்கு மீண்டும் திரை துறையில் (கமலுடன் நடிக்க ) சான்ஸ் கிடைக்கும்.ஆனால் எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஆரம்ப தினத்தன்று சரிதாவின் அம்மா இறந்து விடுவார். இதனால் அனாதை ஆகும் சரிதாவிற்கு சுஜாதா சரத்பாபு தம்பதியினர் பாதுகாவலர்கள் ஆக மாறுவார்கள் .சரிதா சுஜாதாவை அக்கா என்றும் சரத்பாபுவை மாமா என்றும் அழைக்க ஆரம்பிபார். சுஜாதாவின் தம்பி (நாராயண ராவ் ) வெளிநாட்டில் இருக்கும் டாக்டர் .அவர் சரிதாவை நேசிக்க ஆரம்பிபார் இந்த நிலையில் ஒரு நாள் மாலை மழை நேரத்தில் சரத்பாபுவின் நெருக்கத்திற்கு சரிதா ஆளாவார். இது கற்பழிப்பு அல்ல இரு மன இணைப்பு. அதே நேரத்தில் சுஜாதா ஒரு திரை படத்திற்கு (வளர்ப்பு தந்தை அவருடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்வது போல் இருக்கும்) 'இது ஒரு சமுதாய கேடு இதை அனுமதிக்க முடியாது' என்று கூறி அனுமதி மறுத்து விட்டு ,பள்ளியில் படிக்கும் தன மகளை கூட்டி கொண்டு தன வீட்டிற்கு வருவார் .வந்து கதவை திறந்தால்
'சரத் சரிதா ஏடாகூடம் - சோலி முடிந்தது'
மூவரின் மன போராட்டம் (மௌனத்தில் விளையாடும் மனசாட்சி)
சுஜாதா தன தந்தை (ரமணமுர்த்தி) இடம் எல்லா உண்மையையும் கூறி அவரிடம் இதற்கு நல்ல முடிவு ஒன்று கூறுமாறு கேட்பார் . ஆனால் அவரோ இதற்கு என்னால் முடிவு சொல்ல இயலாது என்று மறுத்து விடுவார். பிறகு தன கணவர் சரத்பாபுவிடம் வாக்குவாதம் செய்வார் .
அவரோ "தான் ஒரு சாதாரண மனிதன் எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் " என்று அவரோடு ஓத்துழைக்க மறுத்து விடுவார் .இதற்கு நடுவில் வெளிநாட்டில் இருக்கும் அவரது தம்பி எல்லா விவரங்களையும் அறிந்த பின்னும் சரிதாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சொல்வார் .அவரிடமும் சுஜாதா வாக்குவாதம் செய்வார் . இந்நிலையில் சரிதா கர்ப்பம் ஆகி ஹைதராபாத் சென்று குழந்தையை பெற்றுகொள்வார் .இறுதியில்
சுஜாதாவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வார் .

இதே பாலசந்தர் 'கல்யாண அகதிகள்' திரை படத்தில் தற்கொலை முடிவு அல்ல என்று கூறுவார் .

'இது நல்ல படமா மோசமான படமா '
'வெற்றி படமா தோல்வி படமா '

(நாயகன் கமல் ) தெரியலேப்பா

ஆனால் மெல்லிசை மன்னரின் இனிமையான பாடல்கள்

1.பாலா வாணி LR அஞ்சலி குரல்களில் கோல்டன் பீச் location
family outing அண்ட் gettogether ஒரு நல்ல பாடல்

(மெல்லிசை மன்னர் குழுவின் தபேலா மாஸ்டர் நயம் அக்மார்க் ஜீவன் brand ரவையை குழைத்து தேச்சு இருப்பார் போல .நச்னு இருக்கும் )

நானா பாடுவது நானா ... நானும் இளவயது மானா
வெரிகுட் (பாலாவின் குரல்)
ஹ ... ஹ ..ஹ ..(சிரிப்பு).. (பாலாவும் வாணியும் இணைந்து)

நானா பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா

இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்

நானா
ஹா
பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....

(அஞ்சலியின் அருமையான ஹம்மிங்)
ப ப பா ப ப பா ...ரப பபப்பா ..ப ப பா ப ப பா ரபபபப்பா ..
ருருறு ..ரம்பப ரம்பப ரம்பப ரம்
ரம்பப ரம்பப ரம்பப ரம் ...ரம்பப ரம்பப ரம்பப ரம்

(தபேல இசை ) பின் violin இசை
சரணம் 1

கோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை

ஹஹஹஹ்ஹா ..(பாலாவின் சிரிப்பு)

(அஞ்சலியின் அருமையான மூச்சு முட்டும் ஸ்வரம்)
நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி
பபதத ததத மமபப பபபப
மபம , பதப , தநிதத நிஸநி தநிபா

கோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை

தாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே
தாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே
நீயும் தாயல்லவா , இதில் ஏனோ சந்தேகமே
இதில் ஏனோ சந்தேகமே
(தபேல இசை )
நானா
ம்
பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....

அஞ்சலி ஹம்மிங்
டிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங் டிண்டிகுடிங்
டிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங்

இடை இசை மீண்டும் தபேலா violin கலந்து
சரணம் 2
கவிஞன் சொல்லாததோ .... தமிழ் கவிதை காணாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வெனம்மா

பாலா அஞ்சலி இணைந்து மீண்டும் ஸ்வரம்
நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி
பபதத ததத மமபப பபபப
மபம , பதப , தநிதத நிஸநி தநிபா

கவிஞன் சொல்லாதோ ...தமிழ் கவிதை கானாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வேனம்மா

நீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்
நீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்
பாடும் ஆசைவந்தால் எந்த பாட்டும் சபையில் வரும்
எந்த பாட்டும் சபையில் வரும்
(தபேலா)
நானா
ஹ ..ஹ ..ஹ
பாடுவது நானா .... நானும் இளவயது மானா
இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
நானா .... பாடுவது நானா .... நானும் ... இளவயது மா .னா ..

http://www.youtube.com/watch?v=aszzDKEJ8xw

2. பாலமுரளி கிருஷ்ணா குரலில் சாமா ராக பாடல்

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே

ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)
சோதனைக்களம் அல்லவா?
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)
(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

ஒரு நாள் வீட்டில் கண்ணதாசன் தன் பூட்டிய அறைக்குள் இந்தப் பாடலை மட்டும் மீண்டும்,மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டிருந்தாராம். அவருக்கு என்ன கஷ்டமோ

http://www.youtube.com/watch?v=1YxUO0KXRlE


3.3.பாலா வாணி குரல்களில் ஒரு அருமையான டூயட் கனவு பாடல்
நாராயண ராவ்விற்கும் சரிதாவிற்கும்
(இந்த பாட்டில் மெல்லிசை மன்னர் இடை இசையில் இன்ஸ்ட்ருமென்ட் சும்மா டம் டம் னு பின்னி எடுத்து இருக்கும். மிருதங்க சத்தமும் தபேலா சத்தமும் சேர்ந்த மாதிரி . நினைத்தாலே இனிக்கும் படத்தில் கூட இந்த இன்ஸ்ட்ருமென்ட் அடிகடி அடிகடி ஓலிக்கும்)

SPB:வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?
பூசிய சந்தனம்
மார்பினில் சாய்ந்ததும்
கன்னம் தடமாகுமா ?
பூசிய சந்தனம்
மார்பினில் சாய்ந்ததும்
கன்னம் தடமாகுமா?
பொங்கிய குங்குமம்
செங்கனி வாய் இதழ்
எங்கும் விளையாடுமா ?
பொங்கிய குங்குமம்
செங்கனி வாய் இதழ்
எங்கும் விளையாடுமா ?

VJ:விழி ஓரங்கள்
கதை பேசுமோ ?
தேன் அமுதினில் மழை வர
நாதங்கள் உருவாகுமோ ?

SPB:அழகிய திருமுகமதில்
நாணங்கள் விளையாடுமோ ?
இடை எனும் சிறு கொடிதனில்
வானங்கள் கவிபாடுமோ ?

VJ:வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?

VJ:மன்மத மந்திரம்
மாலையில் கேட்டதும்
எண்ணம் அலையாகுமோ
மங்கள நாடகம்
பள்ளியில் வந்ததும்
பெண்மை விலையாகுமோ
மங்கள நாடகம்
பள்ளியில் வந்ததும்
பெண்மை விலையாகுமோ

SPB:ரதி நேர் வந்து
மலர் தூவுமே
ஒரே ரகசிய கவிதையில்
ஆனந்தம் கலைஆகுமஎ

VJ:இலையோடு மலரென தினம்
உள்ளங்கள் உறவாடுமோ
இருவரும் ஒரு நிலை பெற
கீதங்கள் துணையாகுமோ

SPB:வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?

VJ:மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?

http://www.youtube.com/watch?v=uqqhdI3WV4Y

4.பாலாவின் சோலோ
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் (2)
காவிரி பொங்கிடும் நீரோட்டம் ,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம் ,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

பொண்ணாட்டம் அங்கு பெணாட்டம்
என் கணோட்டம் ஒரு வெளோட்டம் (2)
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம் (2)

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

பூந்தோட்டம் ,(ஒரு இனிமையான flute )
பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம் (2)
வண்ன வன்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம் (2)

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும் (2)
என்ன என்ன சுகம் உளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும் (2)

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...
http://www.youtube.com/watch?v=v0XetBorpMg

gkrishna
11th July 2014, 06:59 PM
டியர் கிருஷ்ணாஜி,

ஸ்டைல் கிங் அசத்திய 'ராஜா' திரைப்படத்தைப்பற்றி நடிகர்திலகம் திரியின் பாகம் 11-ல் அட்டகாசமாக அலசப்பட்டிருக்கிறது. நமது ஹப்பர்கள் அனைவரும் பங்குபெற்று மிக அருமையாக பதிவுகள் இட்டிருந்தனர். நடிகர்திலகம் மற்றும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் பற்றி மட்டுமல்லாது வசீகர வில்லன் விஸ்வம் மற்றும் நடனதாரகை தாரா பற்றியும் கூட பதிவுகள் இடப்பட்டுள்ளன. அதுபோக ஏராளமான நிழற்படங்கள் மற்றும் காட்சிகள் என 'ராஜா' பூரணமாக ஆயப்பட்டுள்ளது. (அவற்றில் நமது வாசு சாரின் உழைப்பு அசுரத்தனமாக அமைந்துள்ளது)

எனவே தற்போது நமது திரியில் ராஜாவின் பாடல் காட்சிகள் பற்றி ஆராயலாம். ஏற்கெனவே 'இரண்டில் ஒன்று' மற்றும் 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடல்கள் அலசப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடல்கள் 'கல்யாண பொண்ணு', 'கங்கையிலே ஓடமில்லையோ' மற்றும் 'நான் உயிருக்கு தருவது விலை' ஆகிய பாடல்கள் பற்றி கூடிய விரைவில் ஆய்வு செய்வோம்...

அன்பு கார்த்திக் சார்
நிச்சயமாக ராஜாவின் பிற பாடல்களை அலச வேண்டும்
நீங்களாவது வாசு சார் ஆவது நிச்சயம் எழுத வேண்டும்
நாங்கள் எல்லாம் அதை படிக்க வேண்டும்

காத்து கிடப்பதில் சுகம் உண்டு

gkrishna
11th July 2014, 07:22 PM
வாசு சார் & கிருஷ்ணா சார்,


காப்பியடித்தாலும் அதை அழகாக செய்தால் அழகுதான். அதை அழகாக செய்தவர் வேதா...

உண்மை கார்த்திக் சார்
என்னை தவறாக நினைக்கவில்லை என்றால் ஒன்று சொல்லுகிறேன்
விடுதலை நமது nt யும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடித்து வெளி வந்த படம் . ஹிந்தி குர்பானி தழுவல் .ஹிந்தியில் கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் பாட்டுக்காகவே ஓடிய படம்.
அதை தமிழ் இல் சந்திர போஸ் இசையில் 'நீல குயில்கள் இரண்டு'
பாடலை தவிர வேறு எதாவது மனதை கவர்ந்ததா
நிச்சயமாக விடுதலையில் இன்னும் பாடல்கள் பிரபலமாகி இருந்து இருக்க வேண்டும் என்பது எனுடைய தனிப்பட்ட கருத்து

rajeshkrv
11th July 2014, 09:57 PM
டியர் ராஜேஷ் சார்,

தங்களின் அருனையான தகவல் பதிவுகளுக்கு நன்றி. கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' பாடலின் காணொளிக்கும் நன்றி. (முத்துராமன் திரியில் ராகவேந்தர் சார் 'கண்ணம்மா' முழுப்பட வீடியோவையும் கொடுத்துள்ளார். பார்த்து இன்புறவும்)

கண்ணம்மா பற்றிய என்னுடைய கட்டுரையை இத்திரியில் மீள்பதிவு செய்த அன்பு வாசு சாருக்கும் நன்றி...

கார்த்திக் மற்றும் வாசு சாருக்கு நன்றி.
கண்ணம்மா பாடல்களை கேட்டிருந்தாலும் இந்த பாடல் சற்று வித்தியாசமாகவும் கேரள மாப்ள பாடல்கள் தொனியில் வேடமும் பாடலும் அமைந்தது மனதை கவரத்தான் செய்தது.

Russellisf
12th July 2014, 01:20 AM
காதலுக்கு அடுத்தபடி இந்தியத் திரைப்படங்களில் முக்கியத்துவம் பெறும் சென்டிமெண்ட் அண்ணன் தங்கைப் பாசம். பேசாப் படங்களின் காலத்தில் கூட இடம்பெற்ற இந்த சென்டிமென்ட், பின்னர் தமிழ், இந்தித் திரைப்படங்களின் வெற்றி சூத்திரங்களில் ஒன்றாகக் காலம்தோறும் கையாளப்பட்டு வந்திருக்கிறது.

காட்சியமைப்பின் அடிப்படையில் பல சிறந்த அண்ணன் - தங்கைப் படங்களைப் பட்டியலிடுவது சாத்தியம் என்றாலும் பாடல்களைப் பொறுருத்தவரை, ஒப்பீடு இல்லாத பாடல் என்று தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு பாடலை மட்டுமே கூற முடியும் என்பது மிக்க வியப்புகுரியது.

அண்ணன்-தங்கைப் பாசத்தைப் பிழிந்து எடுத்துப் பேழையில் வைத்த, கண்ணதாசனின் ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்ற பாசமலர் படச் சொல்லடுக்குத் தமிழ்ப் பாட்டுக்கு நிகராகச் சோகம் அக்கறை ஆகிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்திப் பாடல் நீண்ட காலம் இல்லாமல் இருந்தது.

தமிழ்த் திரைப்படம் வெளிவந்த வெகு காலத்திற்குப் பின்னர் தேவ் ஆனந்த் ஜீனத் அமன் நடிப்பில் ஆர்.டி. பர்மன் இசையில் ஆனந்த பக் ஷி எழுதிய ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்ற படத்தின் பாடல் மூலம் அந்த குறை நீங்கியது.

அந்தப் பாடல் இதுதான்...

ஃபூலோன்-கா, தாரோன்-கா ஸப்கா கஹ்னா

ஹை ஏக் ஹஜாரோன்-மே, மேரி பஹனா ஹை.

சாரி உமர் ஹமே சங் ரஹனா ஹை.

ஜப்ஸே மேரி ஆங்க்கோன் ஸே ஹோ கயீ து தூர்

தப்ஸே ஸாரே ஜீவன் கே ஸப்னே ஹை சூர்

ஆங்க்கோன் மே நீந்த் நா, மன்மே ச்சேனா ஹை.

ஏக் ஹஜாரோன்....

இதன் பொருள்.

மலர்கள், நட்சத்திரங்கள் கூறுகின்றன

ஆயிரத்தில் ஒருத்தி என் தங்கை

வாழ்க்கை முழுவதும் நாம் ஒன்றாய்

இருக்க வேண்டியவர்கள்.

எப்பொழுது நீ என் கண்களிலிருந்து தொலைவில் சென்றாயோ

அப்பொழுதே வாழ்வின் எல்லாக் கனவுகளும் நொறுங்கிவிட்டன.

விழிகள் உறங்கவில்லை மனதின் நினைவு இல்லை.

மலர்கள் பார், நாம் இருவரும்

ஒரு கொடியின் இரு மலர்கள்,

நான் (உன்னை) மறக்கவில்லை

நீ எப்படி என்னை மறந்து போனாய்

வா என் அருகில், சொல் உனக்கு என்ன என்ன சொல்ல வேண்டுமோ (அதை)

மலர்கள்...

வாழ்க்கையின் துக்கங்களைக் கண்டு

இப்படிப் பயப்படலாகாது

உண்மைகளிலிருந்து இப்படி

ஒளிந்து ஓடக் கூடாது .

சுகத்தை விரும்பினால் துக்கத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்

மலர்கள், நட்சத்திரங்கள் கூறுகின்றன

ஆயிரத்தில் ஒருத்தி என் தங்கை.

இப்பொழுது,

மிகையான கவி அழகுடன் அமைந்த கண்ணதாசனின் பாசமலர் படப் பாடல்.

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

அண்ணன் வாழ வைப்பான்

என்று அமைதி கொண்டாள்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை

மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்

மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்

மணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில்

பறந்து சென்றான்

ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்

அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்

வாழிய கண்மணி வாழிய என்றான்

வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்

(கலைந்திடும் கனவுகள்)

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்

பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்

மாமனைப் பாரடி கண்மணி என்றாள்

மருமகள் கண்கள் தன்னில்

மாமன் தெய்வம் கண்டாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று

அமைதி கொண்டாள்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்

அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்.

இரு மொழிகளிலும் பாடலின் சந்தர்ப்பங்களும் அவற்றின் பின்னணிகளும் மிகவும் வேறு பட்டிருந்தாலும் தங்கை மீது கதாநாயக அண்ணன் வெளிப்படுத்தும் கலப்பில்லாத எல்லையற்ற பாச உணர்வின் அடிப்படையில் இரு மொழிப் பாடல்களும் இணைந்திருப்பது கவனிக்கத் தக்கது. கண்ணதாசனின் வரிகள் அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு தெய்விகத் தன்மையை அளித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

rajeshkrv
12th July 2014, 02:13 AM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRVneGrBNXsX5XB6mHbxYwoop2M7znDC 2jmsJXQXa7iElzREMHGhttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/NoolVeli0007.jpghttp://i1.ytimg.com/vi/kYGOurwVabQ/0.jpghttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQdidJvjghTxCLgGeakqG6AKnRNFudue bwCl6gobvpRX2EXaSXIhttp://upload.wikimedia.org/wikipedia/en/8/8f/Guppedu_Manasu.jpg

நூல்வேலி 1979
பாலசந்தர் இயக்கம்
சரத்பாபு சுஜாதா சரிதா நாராயண ராவ் (நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் ஜெயசுதாவின் கணவர் ரஜனிக்கு கார் டிரைவர்), ரமணமுர்த்தி(சங்கராபரணம் சோமயாஜுலு சகோதரர்) ,அனுமந்து நடித்து வெளி வந்த திரை படம்
மெல்லிசை மன்னர் இசை
இதே படம் குப்புடு மனசுடு என்று தெலுங்குலும் வெளியானது
நினைத்தாலே இனிக்கும் (ஏப்ரல் 1979) திரைப்படத்திற்கு பிறகு வந்த திரை படம்
கதை பயங்கர வி(வ)காரமான கதை . பாலச்சந்தரின் பல சீனியர் ரசிகர்கள் அவரை perverted என்று சொல்ல ஆரம்பித்த படம்
ஏற்கனேவே புன்னைகை,அரங்கேற்றம் போன்ற திரை படங்களில் இந்த புகார் எழுந்தது.
சரத்பாபு சுஜாதா கணவன் மனைவி
சரத்பாபு கட்டிட வல்லுனுர் .சுஜாதா நாவல் ஆசிரியை மற்றும் திரை பட தணிக்கை குழு உறுப்பினர் . அவர்களுக்கு பக்கத்துக்கு வீடு ஒரு சீனியர் நடிகை (இவர் நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் கமலுக்கு அம்மா
) மற்றும் அவரது மகள் சரிதா . சரிதா வெகுளி பெண் . நீண்ட நாட்கள் திரை துறையை விட்டு விலகி இருக்கும் சரிதாவின் அம்மாவிற்கு மீண்டும் திரை துறையில் (கமலுடன் நடிக்க ) சான்ஸ் கிடைக்கும்.ஆனால் எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஆரம்ப தினத்தன்று சரிதாவின் அம்மா இறந்து விடுவார். இதனால் அனாதை ஆகும் சரிதாவிற்கு சுஜாதா சரத்பாபு தம்பதியினர் பாதுகாவலர்கள் ஆக மாறுவார்கள் .சரிதா சுஜாதாவை அக்கா என்றும் சரத்பாபுவை மாமா என்றும் அழைக்க ஆரம்பிபார். சுஜாதாவின் தம்பி (நாராயண ராவ் ) வெளிநாட்டில் இருக்கும் டாக்டர் .அவர் சரிதாவை நேசிக்க ஆரம்பிபார் இந்த நிலையில் ஒரு நாள் மாலை மழை நேரத்தில் சரத்பாபுவின் நெருக்கத்திற்கு சரிதா ஆளாவார். இது கற்பழிப்பு அல்ல இரு மன இணைப்பு. அதே நேரத்தில் சுஜாதா ஒரு திரை படத்திற்கு (வளர்ப்பு தந்தை அவருடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்வது போல் இருக்கும்) 'இது ஒரு சமுதாய கேடு இதை அனுமதிக்க முடியாது' என்று கூறி அனுமதி மறுத்து விட்டு ,பள்ளியில் படிக்கும் தன மகளை கூட்டி கொண்டு தன வீட்டிற்கு வருவார் .வந்து கதவை திறந்தால்
'சரத் சரிதா ஏடாகூடம் - சோலி முடிந்தது'
மூவரின் மன போராட்டம் (மௌனத்தில் விளையாடும் மனசாட்சி)
சுஜாதா தன தந்தை (ரமணமுர்த்தி) இடம் எல்லா உண்மையையும் கூறி அவரிடம் இதற்கு நல்ல முடிவு ஒன்று கூறுமாறு கேட்பார் . ஆனால் அவரோ இதற்கு என்னால் முடிவு சொல்ல இயலாது என்று மறுத்து விடுவார். பிறகு தன கணவர் சரத்பாபுவிடம் வாக்குவாதம் செய்வார் .
அவரோ "தான் ஒரு சாதாரண மனிதன் எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் " என்று அவரோடு ஓத்துழைக்க மறுத்து விடுவார் .இதற்கு நடுவில் வெளிநாட்டில் இருக்கும் அவரது தம்பி எல்லா விவரங்களையும் அறிந்த பின்னும் சரிதாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சொல்வார் .அவரிடமும் சுஜாதா வாக்குவாதம் செய்வார் . இந்நிலையில் சரிதா கர்ப்பம் ஆகி ஹைதராபாத் சென்று குழந்தையை பெற்றுகொள்வார் .இறுதியில்
சுஜாதாவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வார் .

இதே பாலசந்தர் 'கல்யாண அகதிகள்' திரை படத்தில் தற்கொலை முடிவு அல்ல என்று கூறுவார் .

'இது நல்ல படமா மோசமான படமா '
'வெற்றி படமா தோல்வி படமா '

(நாயகன் கமல் ) தெரியலேப்பா

ஆனால் மெல்லிசை மன்னரின் இனிமையான பாடல்கள்

1.பாலா வாணி LR அஞ்சலி குரல்களில் கோல்டன் பீச் location
family outing அண்ட் gettogether ஒரு நல்ல பாடல்

(மெல்லிசை மன்னர் குழுவின் தபேலா மாஸ்டர் நயம் அக்மார்க் ஜீவன் brand ரவையை குழைத்து தேச்சு இருப்பார் போல .நச்னு இருக்கும் )

நானா பாடுவது நானா ... நானும் இளவயது மானா
வெரிகுட் (பாலாவின் குரல்)
ஹ ... ஹ ..ஹ ..(சிரிப்பு).. (பாலாவும் வாணியும் இணைந்து)

நானா பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா

இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்

நானா
ஹா
பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....

(அஞ்சலியின் அருமையான ஹம்மிங்)
ப ப பா ப ப பா ...ரப பபப்பா ..ப ப பா ப ப பா ரபபபப்பா ..
ருருறு ..ரம்பப ரம்பப ரம்பப ரம்
ரம்பப ரம்பப ரம்பப ரம் ...ரம்பப ரம்பப ரம்பப ரம்

(தபேல இசை ) பின் violin இசை
சரணம் 1

கோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை

ஹஹஹஹ்ஹா ..(பாலாவின் சிரிப்பு)

(அஞ்சலியின் அருமையான மூச்சு முட்டும் ஸ்வரம்)
நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி
பபதத ததத மமபப பபபப
மபம , பதப , தநிதத நிஸநி தநிபா

கோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை

தாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே
தாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே
நீயும் தாயல்லவா , இதில் ஏனோ சந்தேகமே
இதில் ஏனோ சந்தேகமே
(தபேல இசை )
நானா
ம்
பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....

அஞ்சலி ஹம்மிங்
டிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங் டிண்டிகுடிங்
டிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங்

இடை இசை மீண்டும் தபேலா violin கலந்து
சரணம் 2
கவிஞன் சொல்லாததோ .... தமிழ் கவிதை காணாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வெனம்மா

பாலா அஞ்சலி இணைந்து மீண்டும் ஸ்வரம்
நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி
பபதத ததத மமபப பபபப
மபம , பதப , தநிதத நிஸநி தநிபா

கவிஞன் சொல்லாதோ ...தமிழ் கவிதை கானாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வேனம்மா

நீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்
நீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்
பாடும் ஆசைவந்தால் எந்த பாட்டும் சபையில் வரும்
எந்த பாட்டும் சபையில் வரும்
(தபேலா)
நானா
ஹ ..ஹ ..ஹ
பாடுவது நானா .... நானும் இளவயது மானா
இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
நானா .... பாடுவது நானா .... நானும் ... இளவயது மா .னா ..

http://www.youtube.com/watch?v=aszzDKEJ8xw

2. பாலமுரளி கிருஷ்ணா குரலில் சாமா ராக பாடல்

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே

ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)
சோதனைக்களம் அல்லவா?
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)
(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

ஒரு நாள் வீட்டில் கண்ணதாசன் தன் பூட்டிய அறைக்குள் இந்தப் பாடலை மட்டும் மீண்டும்,மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டிருந்தாராம். அவருக்கு என்ன கஷ்டமோ

http://www.youtube.com/watch?v=1YxUO0KXRlE


3.3.பாலா வாணி குரல்களில் ஒரு அருமையான டூயட் கனவு பாடல்
நாராயண ராவ்விற்கும் சரிதாவிற்கும்
(இந்த பாட்டில் மெல்லிசை மன்னர் இடை இசையில் இன்ஸ்ட்ருமென்ட் சும்மா டம் டம் னு பின்னி எடுத்து இருக்கும். மிருதங்க சத்தமும் தபேலா சத்தமும் சேர்ந்த மாதிரி . நினைத்தாலே இனிக்கும் படத்தில் கூட இந்த இன்ஸ்ட்ருமென்ட் அடிகடி அடிகடி ஓலிக்கும்)

SPB:வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?
பூசிய சந்தனம்
மார்பினில் சாய்ந்ததும்
கன்னம் தடமாகுமா ?
பூசிய சந்தனம்
மார்பினில் சாய்ந்ததும்
கன்னம் தடமாகுமா?
பொங்கிய குங்குமம்
செங்கனி வாய் இதழ்
எங்கும் விளையாடுமா ?
பொங்கிய குங்குமம்
செங்கனி வாய் இதழ்
எங்கும் விளையாடுமா ?

VJ:விழி ஓரங்கள்
கதை பேசுமோ ?
தேன் அமுதினில் மழை வர
நாதங்கள் உருவாகுமோ ?

SPB:அழகிய திருமுகமதில்
நாணங்கள் விளையாடுமோ ?
இடை எனும் சிறு கொடிதனில்
வானங்கள் கவிபாடுமோ ?

VJ:வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?

VJ:மன்மத மந்திரம்
மாலையில் கேட்டதும்
எண்ணம் அலையாகுமோ
மங்கள நாடகம்
பள்ளியில் வந்ததும்
பெண்மை விலையாகுமோ
மங்கள நாடகம்
பள்ளியில் வந்ததும்
பெண்மை விலையாகுமோ

SPB:ரதி நேர் வந்து
மலர் தூவுமே
ஒரே ரகசிய கவிதையில்
ஆனந்தம் கலைஆகுமஎ

VJ:இலையோடு மலரென தினம்
உள்ளங்கள் உறவாடுமோ
இருவரும் ஒரு நிலை பெற
கீதங்கள் துணையாகுமோ

SPB:வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?

VJ:மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?

http://www.youtube.com/watch?v=uqqhdI3WV4Y

4.பாலாவின் சோலோ
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் (2)
காவிரி பொங்கிடும் நீரோட்டம் ,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம் ,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

பொண்ணாட்டம் அங்கு பெணாட்டம்
என் கணோட்டம் ஒரு வெளோட்டம் (2)
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம் (2)

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

பூந்தோட்டம் ,(ஒரு இனிமையான flute )
பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம் (2)
வண்ன வன்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம் (2)

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும் (2)
என்ன என்ன சுகம் உளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும் (2)

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...
http://www.youtube.com/watch?v=v0XetBorpMg

sujatha .. what an actress.. top class acting.. subtle & strong = Sujatha..

rajeshkrv
12th July 2014, 02:30 AM
50’களிலும் 60’களிலும் பல நல்ல படங்கள் தமிழில் இருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன

அப்படி ஒரு படம் தான் சபாஷ் ராமு (தெலுங்கில் சபாஷ் ராமுடு)

இதில் பல நல்ல பாடல்கள் உண்டு இருந்தாலும் டப்பிங் பாடல் போல் இல்லாமல் மிகவும் அருமையாக அமைந்த பாடல்

ஏ.எம்.ராஜாவும் சுசீலாவும் இசைத்த “கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே”

திரையில் சித்திரம் பேசுதடி மாலினியும், ரமணமூர்த்தி(சோமயாஜுலுவின் இளைய சகோதரர்) ..


http://www.youtube.com/watch?v=pJC31U4PTl4


இதன் தெலுங்கு வடிவம்
இசையரசியுடன் கண்டசாலா அவர்கள்


http://www.youtube.com/watch?v=894RTvuPweo

vasudevan31355
12th July 2014, 05:09 AM
நன்றி ராஜேஷ் அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு

'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே'

1959-ல் வெளிவந்த உடுமலை நாராயணகவி இயற்றிய 'மஞ்சள் மகிமை' படத்தில் ஒலிக்கும் பாடல். இப்படத்திற்கு இசை 'மாஸ்டர்' வேணு என்று நினைவு. ராஜேஷ் கொடுத்துள்ள 'சபாஷ் ராமு'(டு) படத்திற்கு இசை கண்டசாலா அவர்கள். இதுவும் 1959-ல் வந்த படம்தான்.

இரு பாடல்களும் கேட்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி டியூனில் இருப்பதை உணர முடியும். ஆனால் இரண்டும் இனிமைதான். 'மஞ்சள் மகிமை' தமிழில் நேரிடையாகவும் எடுக்கப்பட்டதால் 'ஆகாய வீதியில்' இன்னும் அருமையாக இருக்கும்.


https://www.youtube.com/watch?v=F_qoAQEGf0s&feature=player_detailpage

rajeshkrv
12th July 2014, 05:55 AM
நன்றி ராஜேஷ் அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு

'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே'

1959-ல் வெளிவந்த உடுமலை நாராயணகவி இயற்றிய 'மஞ்சள் மகிமை' படத்தில் ஒலிக்கும் பாடல். இப்படத்திற்கு இசை 'மாஸ்டர்' வேணு என்று நினைவு. ராஜேஷ் கொடுத்துள்ள 'சபாஷ் ராமு'(டு) படத்திற்கு இசை கண்டசாலா அவர்கள். இதுவும் 1959-ல் வந்த படம்தான்.

இரு பாடல்களும் கேட்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி டியூனில் இருப்பதை உணர முடியும். ஆனால் இரண்டும் இனிமைதான். 'மஞ்சள் மகிமை' தமிழில் நேரிடையாகவும் எடுக்கப்பட்டதால் 'ஆகாய வீதியில்' இன்னும் அருமையாக இருக்கும்.


https://www.youtube.com/watch?v=F_qoAQEGf0s&feature=player_detailpage

ஆம் மஞ்சள் மகிமையில் எல்லா பாடல்களுமே அருமை . நாராயணகவி நீண்ட நாட்களுக்கு பின் இயற்றிய பாடல்கள்
ஆம் தெலுங்கு இசையமைப்பாளர் மாஸ்டர் வேணு தான் இசை

வரிகள் அற்புதம்... “ கண்மனி தாரகை உன்னை கைவிடேன் என்றே “ ..

இந்த பாடல் முடிந்ததும் ரங்காராவ் மற்றும் சி.கே.சரஸ்வதி வந்துவிடுவார்கள் உடனே தங்கவேலுவும் சாவித்திரியும் இதே பாடலை வேறு வார்த்தைகளுடன் பாடுவார்கள் (பின்னாலிருந்து நாகேஸ்வரராவ் குரல் கொடுப்பார் தங்கவேலுவிற்கு)

இதோ அதையும் கண்டு களியுங்கள்

பாடல் 4:08’ல் ஆரம்பிக்கும்


http://www.youtube.com/watch?v=Em6XbRpn4r4

Gopal.s
12th July 2014, 06:34 AM
எனக்கு மனது கேட்கவில்லை. நான் வதை பட்டாலும்,அந்த திரி சிதை படுவது காண சகிக்கவில்லை.என் பிற நண்பர்களை போல் என் மனம் இன்னும் முழு கல்லாகவில்லை.அப்படியே கல்லாக மாற்றினாலும் ,அந்த நடிக ராமபிரானின் நினைவு என்ற பாதம் பட்டு இந்த கல் உயிர்த்து விடுகிறதே என்ன செய்ய? .

Gopal.s
12th July 2014, 06:38 AM
யுகேஷ் பாபு,

மலர்களை போல் பாட்டில் முத்திரை வரிகள் "பூ மனம் கொண்டவள் பால் மனம் கண்டாள் ".இதற்கு ஈடாக இந்தி கவிஞர்கள் கிடையாது.

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா மலர்ந்ததம்மா பாட்டை எப்படி மறந்தீர்கள்?

இதே படத்தில் இடம் பெற்ற மயங்காத மனம் யாவும் மயங்கும் என்னுடைய favourite .

Gopal.s
12th July 2014, 08:22 AM
டி.எம்.எஸ்.-பீ.பீ.எஸ் இணைந்து பாடி கலக்கிய பாடல்களில் உங்கள் பிடித்தம் என்று யாராவது கேட்டால்.... ப்ளீஸ் ....வெயிட்..... அவரச பட்டு பொன்னொன்று கண்டால் நான் எப்படி பொறுப்பாக முடியும்?நீங்கள் கவலை பட்டு யோசிக்க வேண்டாம். "கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு " பாடல்தான்.


உரிய இடத்தை அடையாத மூன்று உன்னத காவியங்கள் எல்லாம் உனக்காக,பந்த பாசம்,வளர்பிறை.பந்த பாசம் ,சாந்தி picture பெரியண்ணாவின் முதல் படம். அருமையான நட்சத்திர அணிவகுப்பு,பீம்சிங்,வலம்புரி சோமநாதன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி இவ்வளவும் இருந்தும் ,ஏன்தான் சோடை போனதோ?இவ்வளவிற்கும் படமும் நல்ல படம்.

என்னை யாராவது டி.எம்.எஸ் -பீ.பீ.எஸ் இணைவில் சிறந்த பாடல் எது என்றால் கவலைகள் கிடக்கட்டும் என்பேன்.சீர்காழியின் மிக சிறந்த பாடல் எது என்றால் நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ என்பேன். சுசிலாவின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றாக தண்ணிலவு தேனிறைக்க பாடலை தேர்வு செய்வேன். பீ.சுசிலா-எல்.ஆர்.ஈஸ்வரி இணைவில் வந்த மிக சிறந்த பாடல்களில் ஒன்றாக சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ பாடலை தேர்வு செய்வேன்.

திரும்பி அவசரம் உங்களுக்கு .... அத்தனை பாடல்களும் இரட்டையர் என்று குதிப்பீர்கள். உண்மை....ஆனால் அது மட்டுமே உண்மை இல்லை. இத்தனை பாடல்களுக்கும் பாடலாசிரியர் கவிஞர் மாயவ நாதன்.இத்தனைக்கும் தெலுங்கு.உருது,ஹிந்தி,அரபிக் போல இசைக்கு இசையா கடின வீர மொழி என்று பெயர் பெற்றது தமிழ்.
ஆனால் சில கவிஞர்களே அதை இசைக்கு இசைவாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தார்கள்.அதில் தலையாய துரதிர்ஷ்டசாலிகள் அகால மரணம் எய்திய பட்டுகோட்டையார், தலைவணங்கா தன்மானத்துடன் தனித்து நின்ற சுரதா,நான் கவிஞனடா என்னையும் மதிக்க கற்று கொள் என்று இசையமைப்பாளர்களுக்கு சவால் விட்ட மாயவ நாதன் உரிய இடத்தை அடையாத மூன்று உன்னத கவிஞர்களே.

மாயவ நாதன் மாதிரி ஒரு கவிஞன் இனி பிறப்பது இல்லை.

இசைக்கு இசைவான சொல் நயம்,சொல்லுக்காக பொருளை இழக்காத மதி நயம்,மதிக்காக பட கருத்தில் வெளியே தாவாத அமைப்பு நயம், குரலுக்கு இசைவான தோதான வரி நயம் ,வரிக்காக எந்த வரிசையிலும் நிற்காமல் அரிதான கற்பனை நயம் என்று இந்த கவிஞனை போற்ற வார்த்தைகளே இல்லை.

பெரும்பாலோர் வெற்றியின் பின்னால் வால் பிடித்து ஓடுவர்.ஆனால் தோல்விகளுக்கு பின்னால் உள்ள மேதைகளின் திறமையை சொல்வதுதானே நேர்மை?வாய்மை? ஆஹா கண்ணதாசா.....ஆஹா வாலி என்று சொல்ல லட்சகணக்கில் மந்தைகள் உள்ள போது ,அதில் ஒரு ஆடாவது வேறு பாதையில் போக வேண்டாமா?


கண்ணதாசன் அத்தனை பாடல்களும் எழுதி கலக்கிய படித்தால் மட்டும் போதுமாவில் ஒரே பாடலில் ஜெயித்த கவிஞன்,வாலி அத்தனை பாடல்களும் எழுதிய இதயத்தில் நீ படத்திலும் கிடைத்த ஒரே பாடலில் முதல் பதக்கம் வாங்கிய கவிஞன்,தனக்கு முழு வாய்ப்பு கிடைத்த பந்த பாசத்தில் அத்தனை பாடல்களையும் முத்திரை ஆக்கிய முத்திரை புலவன் மாயவ நாதன் மாயம் அறிய......


https://www.youtube.com/watch?v=HEAd3KM4mHA


https://www.youtube.com/watch?v=vVffTg8AoWY

rajeshkrv
12th July 2014, 09:15 AM
கோபால் சார். ஆம் மாயவ நாதன் என்ன அருமையான கவிஞர். அதே போல் தான் விந்தன் அவர்களும்

இதோ முகனூலில் நான் பாடலாசிரியரை அறிவோம் தொடரில் திரு மாயவனாதன் குறித்து எழுதியது.. பதிவுகளின் நடுவில் இது தவறு என்றால் நீக்கிவிடுகிறேன்


இதோ எனது கட்டுரை

================
பாடலாசிரியரை அறிவோம் 10- கவிஞர் மாயவநாதன்

சத்தியமாக இன்றைய தலைமுறைக்கு தெரியாத பாடலாசிரியர் இவர்.

குறுகிய காலத்தில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன்.எந்த விளம்பரமும் இல்லாததால் மறைந்தே ஆம் நாம் மறந்தே போன கவிஞர் இவர்.
பணம் எவ்வளவு தந்தாலும் அது பெரிதல்ல தன் மானமும் கவிதையும் பெரிது என்று முழக்கமிட்ட கவிஞர் இவர்.

சொந்த ஊர், நெல்லை மாவட்டத்திலுள்ள பூலாங்குளம்.காளிபக்தர் , சில சித்தர்களுடன் நெருக்கமாக பழகி வந்தவர்.

படத்தயாரிப்பாளர் தேவரின் வேண்டுகோளை ஏற்று, மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை மாயவநாதன் எழுதிக்கொடுத்தார்.

அவரது அழியாப் புகழுக்கு அந்தக் கல்வெட்டு ஒரு நல்ல அடையாளமாகும்.


நடிகை சந்திரகாந்தாவின்( நடிகர் சண்முகசந்தரத்தின் சகோதரி,ஆம் கலைக்கோயில் போன்ற படங்களின் கதாநாயகி)நாடகக்குழு அப்போது மிகவும் பிரசித்தம்.
அந்தக் குழுவினரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் திரையுலகின் கவனத்தைக் கவர்ந்தவர் மாயவநாதன்.

அப்படி நுழைந்தார் திரையுலகில்.. இவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை சொற்பமே ஆம் 23௨5 பாடல்களே என்றாலும் அத்தனையும் முத்துக்கள் , கருத்தாழமிக்க பாடல்கள்

இன்றும் இவர் பேர் சொல்லும் பாடல் என்றால் அது இவரது முதல் பாடல்.
ஆம் “படித்தால் மட்டும் போதுமா” படத்தில் இவர் குளிர்ச்சாயக கவிதையால் புனைந்த “தன்னிலவு தேனிரைக்க தாழை மரம் நீர் தெளிக்க”என்ற பாடல்.
இலக்கிய நயத்துடன் இவர் எழுதிய இந்த பாடல்
அப்போது கோலோச்சிக்கொண்டிருந்த கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞர் முன்னால் இதோ நானும் ஒரு கவிஞன் தான் என்று மார் தட்டி நின்றவர் மாயவநாதன்.
"யார் இந்த மாயவநாதன்?" என்று திரையுலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய கவிஞர் அவர்.

இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்ற சுசீலா,ஈஸ்வரி பாடிய “சித்திரை பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ “ என்ற பாடல் அவரது கவிதை சந்தத்தின் அழகை சொல்லும் பாடல்

இவரது கவிதைத் திறமையை கண்டு மகிழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி, அதனால் தான் அதிக பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்புகளை வழங்கினார் மாயவநாதனுக்கு.

பூமாலை என்ற படம் ,கலைஞரின் வசனத்தில் உருவான படம், அதில் இடம்பெற்ற பெண்ணே உன் கதி இது தான என்று மனதை உருக்கும் வகையில்
இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரலில் ஒலிக்கும் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் இவரே.இதன் வரிகளை கவனித்தவர்கள் இதன் வலிமையை உணர்வார்கள்.

இதே படத்தில் "உலகமே எதிர்த்தாலும் “ என்ற பாடலையும் மறக்க முடியாத ஒன்று.

கலைஞர் பூம்புகார் படத்தில் மாயவநாதனுக்கு 6 பாடல்களை எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.
காவிரி பெண்ணே வாழ்க, தமிழ் எங்கள் உயிரானது, தப்பித்து வந்ததம்மா, துன்பமெல்லாம் என இவரது கவி ஆளுமை சொல்லும்
பாடல்கள் இன்றும் நம் சிந்தயை மயக்கும் பாடல்கள்.

மாயவநாதன் யாருக்கும் அஞ்சாதவர். முகத்திற்கு நேரே பேசிவிடுபவர். ஒரு முறை கலைஞரின் மறக்கமுடியுமா
படத்திற்கு பாடல் எழுத வந்த இவர் என்ன மெட்டு என்று ராமமூர்த்தியை கேட்க அதற்கு அவர்
“மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்” என்று சொல்ல கோபம் கொண்ட இவர்
பாடல் எழுதாமல் சென்று விட்டார் . பின் கலைஞர் அந்த பாடலை எழுத அது தான் “காகித ஓடம் கடலலை மீது “ என்ற பாடல்

இவர் முழுக்க முழுக்க பாடல்கள் எழுதிய ஒரே படம் பீம்சிங்கின் “பந்த பாசம்”. எப்பொழுதும் கண்ணதாசனே எழுதும்
பீம்சிங் -மெல்லிசை மன்னர்களின் கூட்டணியில் இந்த படத்தில் மட்டும் பெரும்பாலான பாடல்களையும் எழுதியது மாயவநாதனே..

இதில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் அருமை
இதழ் மொட்டு விரித்திட - காதல் கனிரசம் சொட்டும் வரிகள்
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - தத்துவம்

முத்தாய்ப்பாய் சீர்காழியாரின் குரலில் ஒலித்த
"நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? - நெஞ்சில்
நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?” என்ற பாடல் என்றும் நம் மனதை விட்டு நீங்கா பாடல்


என்னதான் முடிவு - திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்

"பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம்
தீருமுன்னே இறக்க வைக்காதே''

என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார்.

தொழிலாளி திரைப்படத்தில் இடம்பெற்ற என்ன கொடுப்பாய் என்ற பாடல் வித்தியாசமான வார்த்தைகளால் அமைத்திருப்பார்.

தென்றல் வீசும் திரையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் அழகான மலரே அறிவான பொருளே என்ற அழகான பாடலை எழுதியதும் இவரே.

1971’ல் வெளிவந்த ஜெய் - ஸ்ரீவித்யா நடித்த “டெல்லி டூ மெட்ராஸ் “ படத்தில் ஒலித்த புன்னகையோ பூமழையோ”
என்ற பாடல் இவர் எழுதியது தான். இது தான் கடைசி பாடலும் கூட.

வறுமையில் வாடிய இந்த தமிழ் கவிஞர் நடு வீதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இவர் மட்டுமல்ல
செக்கிழுத்த செம்மல் நாடு சுதந்திரம் அடைந்தபின் சென்னையில் பலசரக்கு கடை வைத்து வாழ்ந்து மடிந்தாராம். அதே மாதிரி ஒரு
நிலை தான் நம் மாயவநாதனுக்கும். பணத்தை பெரிதாக நினைக்கவில்லை, வறுமையில் வெருமையாக இருந்தாலும் யாருக்கும்
பணிவதில்லை என்ற கொள்கையை கைப்பிடித்தவர்.

எனக்கு கோபம் இவர் மேல் அல்ல. தமிழ் திரையுலகின் மீது,கொஞ்சம் மெல்லிசை மன்னர்களின் மீதும் தான், கண்ணதாசனுடன்
தாங்களும் வளார்ந்த இவர்கள் இந்த மாதிரி திறமையான கவிஞர்களை மேலும வளர்த்திருக்கலாம், நிச்சயமாக முடியும் அவர்களலால்.
இப்படி நடு வீதியில் ஒரு தமிழ் களஞ்சியம் விழுந்து மடிந்திருக்காது. தன்னிலவு தேனிரைக்க பாடல் ஒலிக்கும் போதெல்லாம்
மாயவநாதனின் நினைவு வராமல் இருக்குமா என்ன .. கடவுள் எப்பொழுதும் இதுபோன்ற திறமைசாலிகளை பிடித்துப்போகிறது, சீக்கிரமே தன்னிடம் அழைத்துக்கொள்கிறார்
பாவம் நாங்கள் இவர்களது தமிழை இன்னும் கொஞம் கேட்க முடியாமல் போனது நமது துரதிர்ஷடம்

Gopal.s
12th July 2014, 09:35 AM
ராஜேஷ்,

உங்களுக்கு என் நன்றி பாராட்டுக்கள் உரித்தாகுக.

ஒரு இசை மேதை(ராமமூர்த்தி),இன்னொரு கவி மேதையுடன் (மாயவநாதன்) காலத்தின் கோலத்தால் ,இந்த மேதைகள் வதை பட்டதால்,சிதை பட்டது தமிழ் பாடல்களின் அழகும்,இசை வளமுமே .பெருமூச்சு விட்டு ஒரு சொட்டு கண்ணீர்தான் விட முடியும். கடவுள் எனக்கு செல்வ வளத்தை தந்து ஒரு 30 ஆண்டுகள் முன்னே படைத்திருந்தால் ,இந்த மேதைகளை கண்ணில் வைத்து போற்றி,தகாத கலை அரசியல் வாட்டாமல் காத்திருப்பேனே?

இன்று எங்கு தேடினும் ,சராசரிகளின் மோசமான தகுதியற்ற உறவுகளே,இயக்குனர்களாக,நடிகர்களாக,பாடலாசிரியர்களாக, இசையமைப்பாளர்களாக,பாடகர்களாக வலம் வரும் தொழிலில் ,கலையாவது ,மேதைமையாவது? கலையும்,மேதைமையும் கொண்டவர்கள்தான் பொறியியல்,மருத்துவம்,நிதி நிர்வாகம்,வியாபாரம் என்ற நச்சு சூழலில் சிக்கி சிதைகிறோம்.வயிற்றளவில் பெருங்கவளம் உண்டாலும்,மனதளவில்,உணர்வளவில் மாயவநாதன்,ராமமூர்த்திகளின் வறுமையையே,துயரத்தையே சுமந்து அல்லல் படுகிறோம்.

RAGHAVENDRA
12th July 2014, 09:39 AM
ராஜேஷ்
பாடலாசிரியரைப் பற்றி இங்கே பதிவிடுவது சாலப் பொருத்தமாயிருக்கும். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலக ஆரம்ப காலப் பாடலாசிரியர்களைப் பற்றிய ஒரு தொடரை நான் இத்திரியில் துவக்கியிருக்கிறேன். தாங்கள் அறிவீர்கள் என எண்ணுகிறேன். என்றாலும் இதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்

http://www.mayyam.com/talk/showthread.php?11002-%26%232990%3B%26%232985%3B%26%232980%3B%26%233016% 3B-%26%232990%3B%26%232991%3B%26%232965%3B%26%233021% 3B%26%232965%3B%26%233009%3B%26%232990%3B%26%23302 1%3B-%26%232990%3B%26%232980%3B%26%233009%3B%26%232992% 3B-%26%232965%3B%26%233006%3B%26%232985%3B%26%232969% 3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%23302 1%3B&p=1139237&viewfull=1#post1139237

மாயவநாதனைப் பற்றிய அருமையான தகவல் களஞ்சியமாக தங்கள் பதிவு விளங்குகிறது. பாராட்டுக்கள். முன்னரே வேறோர் இடத்தில் குறிப்பிட்டது போல், தண்ணிலவு தேனிறைக்க பாலும் பந்த பாசம் திரைப்படத்திற்காக பதிவு செய்யப் பட்டது என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதைப் பற்றி விவரமான தகவல் ஏதும் இல்லை.

RAGHAVENDRA
12th July 2014, 09:41 AM
கோபால்
மாயவநாதன் பற்றிய தங்களுடைய பதிவு நூற்றுக்கு நூறு சதவீதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அபூர்வமான பாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது அபூர்வமான பாடலாசிரியர்களையும் இங்கே நினைவு கூர்வோம்.

RAGHAVENDRA
12th July 2014, 09:51 AM
மிக நீண்ட நாட்களுக்குப் பின் காணொளியாக இப்பாடலைப் பார்க்கும் போது மனம் துள்ளுகிறது. திருச்சி லோகநாதனுடன் ராட்சஸி ஈஸ்வரியின் ரம்மியமான குரலில் தமிழன்பர்களின் நெஞ்சில் கருத்தாழமிக்க பாடலாக நிலைத்து விட்ட நாலு வேலி நிலம் பாடல்.

ஊரார் உறங்கையிலே

http://youtu.be/MaaAQTkhEj8

rajeshkrv
12th July 2014, 09:52 AM
ராஜேஷ்
பாடலாசிரியரைப் பற்றி இங்கே பதிவிடுவது சாலப் பொருத்தமாயிருக்கும். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலக ஆரம்ப காலப் பாடலாசிரியர்களைப் பற்றிய ஒரு தொடரை நான் இத்திரியில் துவக்கியிருக்கிறேன். தாங்கள் அறிவீர்கள் என எண்ணுகிறேன். என்றாலும் இதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்

http://www.mayyam.com/talk/showthread.php?11002-%26%232990%3B%26%232985%3B%26%232980%3B%26%233016% 3B-%26%232990%3B%26%232991%3B%26%232965%3B%26%233021% 3B%26%232965%3B%26%233009%3B%26%232990%3B%26%23302 1%3B-%26%232990%3B%26%232980%3B%26%233009%3B%26%232992% 3B-%26%232965%3B%26%233006%3B%26%232985%3B%26%232969% 3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%23302 1%3B&p=1139237&viewfull=1#post1139237

மாயவநாதனைப் பற்றிய அருமையான தகவல் களஞ்சியமாக தங்கள் பதிவு விளங்குகிறது. பாராட்டுக்கள். முன்னரே வேறோர் இடத்தில் குறிப்பிட்டது போல், தண்ணிலவு தேனிறைக்க பாலும் பந்த பாசம் திரைப்படத்திற்காக பதிவு செய்யப் பட்டது என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதைப் பற்றி விவரமான தகவல் ஏதும் இல்லை.

ராகவேந்திரா சார். அருமை . அந்த திரியில் என்னால் ஆன பங்களிப்பை அளிக்கிறேன்.

rajeshkrv
12th July 2014, 10:00 AM
அமர தீபத்தில் எத்தனையோ பாடல்கள் இருக்க மிகவும் பிரபலமான பாடல்
“தேன் உண்ணும் வண்டு மாமலரைக்கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு”

டி.சலபதிராவ் இசையில் ஏ.எம்.ராஜாவும் இசையரசியும் இசைத்த காதல் கீதம்.. இதை எழுதியது யார் தெரியுமா

பராசக்தி திரையில் பூசாரியாக வந்து ஸ்ரீரஞ்சனியை வஞ்சிக்க நினைப்பாரே அவரே தான் .. அவர் எழுதிய பாடல் தான் இது.


இதோ கவி காமாட்சியை பற்றி நான் எழுதிய கட்டுரை


திரு கே.பி.காமாட்சி சுந்தரம் அவர்கள்
திரையுலகம் இவரை கவி காமாட்சி என்றழைப்பது வழக்கம்.

இவரது வரலாறு தெரியாவிட்டாலும் இப்படி ஒரு பாடலாசிரியர் இருந்தார் என்று மக்களுக்கு சொல்வதே நமது நோக்கம்.
மேலும் ஒரு விஷேஷ செய்தி என்னவென்றால் இவர் நடிகரும் கூட.. ஆம் பராசக்தி படம் எல்லோருக்கும் நினைவிருக்கும்
அதில் கொடூரமான அந்த பூசாரி வேடமேற்றவரை மறந்திருக்க முடியாது ஆம் அவரே தான் கே.பி.காமாட்சி.

இவர் நடிப்பைத் தவிர பாடல்களும் எழுதியுள்ளார். அனைத்தும் முத்தான பாடல்கள்.

திரு கலைவாணாரின் நல்லதம்பி படத்தில் அழகான சாருகேசி ராகத்தில் ஒலித்த கானலோலன் மதனகோபாலன் பாடலை இயற்றியது கவி காமாட்சியே.

அதே போல் 1941'ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும் ஆம் இது தான் முதல் வடிவம் , திரு கலைவாணரும் திருமதி மதுரம் அவர்களும் நடிந்த இந்த
படத்தில் அனைத்து பாடல்கள்ளையும் எழுதியது கவி காமாட்சியே .
இந்த படம் தோல்வியடைந்தாலும் எழுத்தாளர் ரன்டொர் குய் இதை புதுமையான முயற்சி என்று பாராட்டியுள்ளார். இந்த படத்தில் நடித்த தூத்துக்குடி ராமசாமி ஐயர்
புளிமூட்டை என்ற பாத்திரத்தில் நடித்ததால் புளிமூட்டை ராமசாமி ஆனார்.
இதில் கலைவாணர் பாடிய அடிச்சுப்புட்டானே நோகுதடா என்ற பாடல் பிரபலமடைந்தது. எழுதியது கவி காமாட்சி.

பின்னர் பைத்தியக்காரன்,மருத நாட்டு இளவரசி,1950’ல் வெளிவந்த லைலா மஜ்னு(ராஜம்மா, மகாலிங்கம் ஜோடி),
மணமகள்,பெற்ற மன்ம் என இவரது நடிப்பும் பாடலும் தொடர்ந்தது.

அதே போல் பராசக்தியில் இவர் நடித்ததோடு மட்டுமல்லாமல் "ஓ ரசிக்கும் சீமானே' "புதுப் பெண்ணின் மனதைத்தொட்டு' பாடல்களை எழுதியதும் இவர் தான்.


இன்பவல்லி என்ற படத்தில் ஒலித்த டங்குடா டிங்காலே என்ற கலைவாணர் பாடல் இவர் எழுதியதே.

இந்த பாடல்களையெல்லாம் நாம் மறந்திருந்தாலும் கூட இப்போது நான் சொல்லப்போகும் பாடலை மறந்திருக்க நியாயமில்லை
ஆம் “உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்” ஆம் வாழ்க்கை திரையில் ஒலித்த பாடல்
வைஜெயந்திமாலா, டி.ஆர்.ராமசந்திரன் ஜோடி சேர்ந்த படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது க்வி காமாட்சியே.

இதே படத்தில் மிகவும் பிரபலமான “கோபாலனோடு நான் ஆடுவேன் “ என்ற எம்.எல்.வியின் பாடலையும் வைஜெயந்திமாலாவின் நாட்டியமும்
கண்கொள்ளா காட்சி..இந்த பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் கவி காமாட்சி அவர்கள்.

இதற்கெல்லாம் மைல்கல்லாக அமைந்த பாடல் இன்றும் நாம் ஏ.எம்.ராஜா சுசீலா டூயட் பாடல் என்றால் உடனே நாம் சொல்வது
“தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு “ என்ற அமரதீபம் திரைப்பாடலை.
இவரது தமிழுக்கு இந்த பாடல் சான்று ஆம் மாமலர் என்று அவ்வளவாக நாம் பயன் படுத்துவதில்லை.
அதை உபயோகித்திருக்கிறார் அதுவும் அழகாக மெட்டிர்க்குள் அடங்குகிறது. காதுகளுக்கு இனிமையாகவும் இருக்கிறது.

வீணை இன்ப நாதம் எழுந்திடும் வினோதம் விரலாடும் விதம் போலவே... இதில் வினோதம் என்ற சொல்லை கையாண்டிருக்கிறார்..
அருமை இனிமை ...

இன்னும் பல அருமையான பாடல்களை தந்தவர் காமாட்சி அவர்கள். கண்ணதாசனின் வரவிற்கு பின் மருதகாசி மட்டும் தான் கண்ணதாசனுடன் ஈடுகொடுத்து எழுதிக்கொண்டிருந்தார்
நாராயணகவி, கு.மா.பா, கே.பி.காமாட்சி என எல்லோரும் மெல்ல மெல்லை மறையத்தொடங்கினர். இதில் இழப்பு தமிழுக்கே திரைப்படப்பாடலுக்கே..

வாழ்க காமாட்சி வளர்க தமிழ்..


http://www.youtube.com/watch?v=BasTpEiLv9g

gkrishna
12th July 2014, 10:28 AM
திரு கே.பி.காமாட்சி சுந்தரம் அவர்கள்
திரையுலகம் இவரை கவி காமாட்சி என்றழைப்பது வழக்கம்.

இவரது வரலாறு தெரியாவிட்டாலும் இப்படி ஒரு பாடலாசிரியர் இருந்தார் என்று மக்களுக்கு சொல்வதே நமது நோக்கம்.


அனைவருக்கும் காலை வணக்கம் 12/7/14

ராஜேஷ் சார் அதனை தொடர்ந்து யோகேஷ் சார்,ராகவேந்தர் சார்,கோபால் சார் பல மனதை நெருடும் நினைவுகளை மீட்டி விட்டீர்கள்
கவிஞர்கள் மாயவநாதன்,காமாட்சி பற்றிய பதிவு மிக அருமை
மறந்து போன அல்லது மறக்கடிக்கப்பட்ட கவிஞர்கள் பற்றி நினவு கூறுவது என்பது உயிர் கலப்பு போன்றது .

சமீபத்தில் படித்த ஒரு பதிவு 'குங்கும பொட்டின் மங்கலம்' வாலி எழுதியது என்று போட்டு இருந்தது.
அதுவாவது தவறாக சொல்லி விட்டார் என்று கூறலாம் .

ஒரு பதிவில்
'கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு ' பாடலை பற்றி மிக உயர்வாக கூறி இருந்தார்கள் .

என்னத்தை சொல்ல
என் எண்ணத்தை சொல்ல
எங்க வீட்டு வைக்க
உன்னை எங்க கொண்டு வைக்க

வாய்ப்பிற்கு நன்றி

gkrishna
12th July 2014, 10:46 AM
பாடலாசிரியரை அறிவோம் 10- கவிஞர் மாயவநாதன்

சத்தியமாக இன்றைய தலைமுறைக்கு தெரியாத பாடலாசிரியர் இவர்.

எனக்கு கோபம் இவர் மேல் அல்ல. தமிழ் திரையுலகின் மீது,கொஞ்சம் மெல்லிசை மன்னர்களின் மீதும் தான், கண்ணதாசனுடன்
தாங்களும் வளார்ந்த இவர்கள் இந்த மாதிரி திறமையான கவிஞர்களை மேலும வளர்த்திருக்கலாம், நிச்சயமாக முடியும் அவர்களலால்.
இப்படி நடு வீதியில் ஒரு தமிழ் களஞ்சியம் விழுந்து மடிந்திருக்காது. தன்னிலவு தேனிரைக்க பாடல் ஒலிக்கும் போதெல்லாம்
மாயவநாதனின் நினைவு வராமல் இருக்குமா என்ன .. கடவுள் எப்பொழுதும் இதுபோன்ற திறமைசாலிகளை பிடித்துப்போகிறது, சீக்கிரமே தன்னிடம் அழைத்துக்கொள்கிறார்
பாவம் நாங்கள் இவர்களது தமிழை இன்னும் கொஞம் கேட்க முடியாமல் போனது நமது துரதிர்ஷடம்

கவி மாயவநாதன் பற்றிய உங்கள் கட்டுரை மிக அருமை ராஜேஷ் சார்

திரு ராஜநாயகம் அவர்கள் இரண்டு தினம் முன்பு நடிகர் என்னத்தை கன்னையா பற்றி எழுதி இருந்தார். (இது ஏற்கனவே அவருடைய வலைபதிவில் பதிந்த ஒன்று தான் என்றாலும்) அதில் அவர் எழுதிய ஒன்று
'78 கால கட்டங்களில் பாரதி ராஜ,மகேந்திரன்,கமல் போன்றோர் திரு
கன்னையா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்.
ஏனோ அவர்கள் மறுத்து விட்டார்களா அல்லது மறந்து விட்டார்களா தெரியவில்லை'

அது போல் தான் மெல்லிசை மன்னர்கள் அல்லது திரை இசை திலகம் போன்றவர்கள் மாயவநாதன் போன்றவர்களை அரவணைத்து இருக்க வேண்டும்

Gopal.s
12th July 2014, 11:02 AM
சீர்காழி கோவிந்த ராஜன்.

இந்த மாதிரி ஒரு பாடகர் அபூர்வமாகவே தோன்றுவர். தமிழ்,இசை ,ஓங்கு குரல்,பாவங்கள் என்று அமைந்த பாடகர். 50 களில் நடிகர்திலகத்தின் பாடு குரலாக டி.எம்.சௌந்திரராஜன் வலம் வந்த போது மாற்று முகாமின் பாடும் குரலாக வலம் வந்தவர் சீர்காழி கோவிந்தராஜனே.(1955 முதல் 1961 நல்லவன் வாழ்வான் வரை)
பிறகுதான் சீர்காழியின் குரலில் மெல்லிசை பாடும் கதாநாயக ஈர்ப்பு இல்லாததை உணர்ந்து அனைத்து முக்கிய நடிகர்களின் ஒரே குரலாக சௌந்திரராஜன் தனிக்காட்டு ராஜாவானார்.

ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் தன்னை பொருத்தி கொண்ட திறமையாளர்,இன்றும் பேச படும் பல பாடல்களில் தன் திறமையை காட்டினார்.

காதலியிடம் தன் உள்ளத்தை கொட்டி உருக்கி உலுக்கும் "கல்லிலே கலை வண்ணம்", "உன்மேலே கொண்ட ஆசை" ,

சூழ்நிலையின் கனத்தை உணர்ந்து நாடி,நரம்புகளை உருக்கும் "நித்தம் நித்தம் மாறுகின்ற","ஆடி அடங்கும் வாழ்க்கையடா".

தனிமையின் வெறுமை சொன்ன வங்காள பாணி நாடோடி பாடலாய் "ஓடம் நதியினிலே".

மோக தாகத்தை தாபத்தை உணர்த்தும் "தட்டு தடுமாறி நெஞ்சம்"

குத்து பாட்டில் வடக்கு சாயலில் உருவான "மாம்பழ தோட்டம்".வினோத,வித்தியாச குத்து பாட்டு :கூத்தாடும் கொண்டையிலே"

சுத்த கர்நாடக பாடலாய் "அமுதும் தேனும் எதற்கு"

ஒரு திறமையாளனை,நல்ல மனம் கொண்டவனை சேராத இடம் சேர்த்து ,வஞ்சத்தில் வீழ வைத்த வாழ்கை சோகம் பாடிய "உள்ளத்தில் நல்ல உள்ளம்"

போதனை தந்த கீதை சாரம் "மரணத்தை எண்ணி கலங்கிடும்"
காதலன் குறும்பு சொன்ன "என்னை விட்டு ஓடி போக","குத்தால அருவியிலே"

வண்டியுடன் ,நம் மனதையும் குதியாட்டம் ஆட வைக்கும் :சாட்டை கையில் கொண்டு"

கமியுனிச தத்துவம் பேசிய "உழைப்பதிலா ,உழைப்பை பெருவதிலா",

பக்தியில் நம்மை குளிப்பாட்டி நெக்குருக்கும் "விநாயகனே ,வினை தீர்ப்பவனே"

சூழ்நிலையின் சோதனையின் அசரீரியாய் "பாட்டோடு ராகம் இங்கே", இது நீரோடு செல்கின்ற ஓடம்",தேவன் கோவில் மணியோசை .
இதில் மாதிரி மணிகள் .

https://www.youtube.com/watch?v=AhRQFRMszlg

https://www.youtube.com/watch?v=SXDzICClM4U

http://www.youtube.com/watch?v=448XOrldBGE

gkrishna
12th July 2014, 11:40 AM
http://cdn.spicyonion.com/cache/images/profile/artist/suman-130x200.jpg

நீச்சல் குளம் 1979
மாரியம்மன் கிரியேஷேன் தயாரிப்பு
ஜனரஞ்சக இயக்குனர் ராமண்ணா இயக்கம்
தாராபுரம் சுந்தர்ராஜன் இசை

சுமன் (அறிமுகம்),கதாநாயகி அபிலாஷா (முதல் பாவம் அபிலாஷா அல்ல ),மாஸ்டர் சேகர் ,லாவண்யா நடித்து வெளிவந்தது

சுமன் வெடவெடன்னு நினைத்தாலே இனிக்கும் படத்தில் ஒரு வசனம்
"சோள கொல்லை பொம்மைக்கு pant ஷர்ட் போட்ட மாதிரி ". அவர்தான் இன்ஸ்பெக்டர் . .மாஸ்டர் சேகர் வில்லன்

செல்வம் படத்தில் "உனக்காகவா நான் எனக்காகவா ' பாடலை பாடியவர் தாராபுரம் சுந்தர்ராஜன் என்று நினைவு

4 பாடல்கள் நினைவில் உண்டு

1.பாலா சுசீலா குரல்களில் ஒரு அருமையான மெலடி டூயட்
"கட்டழகை தொட்டால் என்ன கன்னத்திலே இட்டால் என்ன
கட்டிலறை காவியமே வா பக்கமா '

2.ஜானகியின் ஒரு நாட்டுபுற பாடல்
"ஆடி 18 ஆடுது பூஞ்சிட்டு எல்லோரும் கொண்டாடுங்க கூடியே '
பொதிகையில் இந்த பாடல் ஆடி 18 அன்று ஒலிபரப்புவார்கள்

3.honey honey லவ் லவ் தித்திப்பது honey honey
சுசீலா ஆண் குரல் மலேசிய என்று நினைவு
(இந்த பாடல் போனி எம் அல்லது saturday நைட் fever ஆங்கில பாடலின்
தழுவல் )

4.ஆத்துக்குள்ளே ஊத்து ஆடுதம்மா நாத்து
மலேசிய வாணி ஜோடி குரல்களில்

https://www.youtube.com/watch?v=qhWPFKbHSg8

http://www.inbaminge.com/t/n/Neechal%20Kulam/

Gopal.s
12th July 2014, 11:50 AM
இங்கு தெரிந்த அனைத்தையும் ஒரே நாளில் கொட்டி தீர்த்து விடும் வெறியுடனே வர வேண்டியதில்லை. பதிவுகளுக்கு வேண்டிய spacing ,interraction ,digestion அவசியம். போட்டு ஒரு நாளைக்கு இருபது பக்கங்கள் என்று எல்லாவற்றையும் சமாதியாக்காமல்,மற்றவர் பதிவுகளுக்கும் இடமளித்தால் நலம்.

இங்கு ரசிக்கவும் வரலாமே?தவறில்லையே?ஒரு பார்வையாளர் ஒரு நாள் எத்தனைதான் தாங்க முடியும்?மயில் தோகையானாலும்,ஒரு அளவு மேல் வண்டியில் ஏற்றினால் அச்சு முறிந்து விடும் என்று வள்ளுவன் கூறியுள்ளானே?

Gopal.s
12th July 2014, 12:05 PM
டிங் டிங் டாங் டிங் டாங் டிங்கிலோலா நீச்சல் குளத்திலா?

mr_karthik
12th July 2014, 12:32 PM
ஒரு உண்மையான தமிழ்க்கவிஞன் மாயவனாதனை நினைவுகூர்ந்த கோபால், ராஜேஷ், ராகவேந்தர், கிருஷ்ணா மற்றும் அன்புள்ளங்களுக்கு நன்றி. இதுபோன்ற காலத்தால் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட நிஜமான திறமையாளர்களை நினைவு கூர்வதில் நமது திரி பெருமையடைகிறது.

திரு மாயவநாதன் இயற்றிய பல பாடல்கள் இங்கு நினைவு கூறப்பட்டன. நண்பர்கள் சொல்ல மறந்த ஒரு அருமையான பாடலை பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் தவறான தீர்ப்பால் கோவலன் கொலைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு, பலிபீடத்தில் அவன் தலை வெட்டப்பட்ட அடுத்த கணம் கணீரென்று அசரீரியாய் ஒலிக்கிறது ஒரு குரல்

"நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா?. அல்லது நீயும் சென்று அந்தக்கொலைக்களத்தில் உயிர் விட்டாயா?"

என்ற தொகையறாவை தொடர்ந்து துவங்குகிறது பல்லவி, அருளிசைப் பாடகி கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரலில்....

அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது.

காலடி தாமரை நோவதை மறந்து காதலனோடு நடந்தாளே
அந்தக்காலனும் தொடர்ந்து நடந்ததை எண்ணி கற்புக்கரசி துடித்தாளே
அடையாகதவாய் இமையா விழியாய் ஆயிரம் யுகங்கள் பொறுத்தாளே
இன்று விளையாநிலத்தின் விதையாய்ப்போன வேதனையறிந்து தவித்தாளே

(ஆகா என்னவொரு வார்த்தை ஜாலம்.., சொற்சிலம்பம்...,)

அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது.

வெயிலே இல்லாத காலத்தில் கிடைக்கின்ற நிழலால் பயனென்ன
கெஞ்சி வேண்டியபோது ஒதுங்கிய நீதி வந்தேன்ன போயென்ன
உயிரே போனபின் உடலெனும் கூட்டுக்கு உயர்வென்ன தாழ்வென்ன
செய்யா பிழைக்கே தலையது வீழ்ந்தால் செய்தவன் கதியென்ன
செய்தவன் கதியென்ன
பிழை செய்தவன் கதியென்ன

சுதர்சனத்தின் அதிரடி இசையுடன் பாடல் நிறைவுறும்.

என்ன அருமையான பாடல், என்னவொரு கருத்துச்செறிவு, என்னவொரு சொல்லாடல்... ஆகா இவ்னடா கவிஞன். நாயகர்களை துதி பாடியவர்களை பெருங்கவிஞர்கள் என்று கொண்டாடிய நம் சிறுமதியை என்ன சொல்வது?

முதலில் இப்பாடலின் பல்லவியை

அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது

என்று எழுதினார் மாயவநாதன். ஆனால் 'தெய்வம் எங்கே சென்று விட்டது என்று நான் பாடலாமா? அதை மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்று கே.பி.எஸ். கேட்க 'தெய்வம் இங்கே வந்து விட்டது' என்று மாற்றி, அந்த வரி வரும்போது கண்ணகி கையில் சிலம்போடு பொட்டல்வெளியில் கோபாவேசத்தோடு வருவதாக காட்டியிருப்பார்கள்.

படம் : "பூம்புகார்....

Gopal.s
12th July 2014, 12:43 PM
முதலில் இப்பாடலின் பல்லவியை

அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது

என்று எழுதினார் மாயவநாதன். ஆனால் 'தெய்வம் எங்கே சென்று விட்டது என்று நான் பாடலாமா? அதை மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்று கே.பி.எஸ். கேட்க 'தெய்வம் இங்கே வந்து விட்டது' என்று மாற்றி, அந்த வரி வரும்போது கண்ணகி கையில் சிலம்போடு பொட்டல்வெளியில் கோபாவேசத்தோடு வருவதாக காட்டியிருப்பார்கள்.

படம் : "பூம்புகார்....
கார்த்திக் சார்,

அன்று கொல்லும் அரசின் ஆணை பாடலை படு விவரமாக நினைவு கூர்ந்து (மாற்ற பட்ட வரிகள் உட்பட) சொன்ன விதம் சுகமோ சுகம்.

இவர் காகித ஓடத்தில் ஏறாமல் போனது வருத்தமே.

இவரின் இன்னொரு வசீகர பாடல் திரை இசை திலகத்தின் கை வண்ணத்தில் தொழிலாளியில் என்ன கொடுப்பாய்,என்ன கொடுப்பாய்.

இந்த பாடலும்,காதல் எந்தன் மீதில் பாடலும் cute என்று சொல்ல வேண்டிய ரகம்.

mr_karthik
12th July 2014, 12:47 PM
நான் அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பது வழக்கம். அதை மீண்டும் இங்கே வைக்கிறேன் (67-வது முறையாக)...

மூன்று வரி, நான்கு வரி கமெண்ட் எழுதுவதற்காக கிட்டத்தட்ட அரைப்பக்கம் அளவிலான பெரிய பதிவுகளை, அதிலுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடன் அப்படியே 'கோட்' செய்யாதீர்கள். பலவீனமான சர்வர் இணைப்பு உள்ளவர்கள் இதனால் சிரமப்பட ஏதுவாகிறது....

தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள் + 1,00,000

(ராஜேஷ் சார், நூல்வேலி படத்தின் பாடலுக்கான தங்கள் பின்னூட்டத்தை பார்த்தபின் வேண்டுகோள் விடுக்கத் தோன்றியது. வருத்தப்பட வேண்டாம்)..

Gopal.s
12th July 2014, 01:09 PM
இதுபோன்ற காலத்தால் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட நிஜமான திறமையாளர்களை நினைவு கூர்வதில் நமது திரி பெருமையடைகிறது.



டி.கே.ராமமூர்த்தி தவிர.....???????????

gkrishna
12th July 2014, 01:15 PM
நான் அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பது வழக்கம். அதை மீண்டும் இங்கே வைக்கிறேன் (67-வது முறையாக)...

மூன்று வரி, நான்கு வரி கமெண்ட் எழுதுவதற்காக கிட்டத்தட்ட அரைப்பக்கம் அளவிலான பெரிய பதிவுகளை, அதிலுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடன் அப்படியே 'கோட்' செய்யாதீர்கள். பலவீனமான சர்வர் இணைப்பு உள்ளவர்கள் இதனால் சிரமப்பட ஏதுவாகிறது....

தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள் + 1,00,000

அன்பு கார்த்திக் சார்/கோப்ல சார்

நீங்கள் இருவரும் சில improvement suggestions கொடுத்து உள்ளீர்கள்

என்னுடைய வேண்டுகோள்

ஒரு உதாரணத்திற்கு எந்த பதிவில் எப்படி இருந்து இருக்க வேண்டும் என்று சொன்னால் எனக்கு கொஞ்சம் புரிந்து கொள்ள வசதி ஆக இருக்கும் . நான் இதை positive feedback ஆகவே எடுத்து கொள்கிறேன்

நான் நிறையவே சொல்புத்திகாரன் .கொஞ்சம் தான் சுயபுத்தி
.

mr_karthik
12th July 2014, 01:16 PM
டி.கே.ராமமூர்த்தி தவிர.....???????????

அவரையும்தான். (அடுத்தவரை மட்டம் தட்டாது சரியான முறையில் நினைவு கூறப்பட்டால்)..

mr_karthik
12th July 2014, 01:20 PM
டியர் கிருஷ்ணாஜி,

நான் சொன்னது நண்பர் ராஜேஷ் அவர்களின் பதிவு குறித்து. (பதிவில் மாற்றம் செய்திருக்கிறேன் பாருங்கள்)

மற்றபடி பதிவுகளின் எண்ணிக்கை குறித்து நான் எதுவும் சொல்லவில்லை.

பதிப்பவர்களுக்கே சிரமம் இல்லாதபோது
படிப்பவர்களுக்கு சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன்

gkrishna
12th July 2014, 01:56 PM
நன்றி கார்த்திக் சார்


என்னுடைய பதிவில் ஏதாவது தவறு அல்லது improvement தேவை என்றால் நீங்கள் பதிவை குறிப்பிட்டு தவறை சுட்டி காட்டீர்களானால்
திருத்தி கொள்ள ஏதுவாக இருக்கும்

இந்த வேண்டுகோள் எல்லோருக்குமே பொதுவாக வைக்கப்படும் ஒன்று

அதே போல நேற்று விடுதலை படத்தில் பாடல்கள் சரியாக அமையவில்லை என்று குறிப்பிட்டு இருந்தேன். அது நம் NT அல்லது ரஜினி ரசிகர்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் என்றால் அதையும் திருத்தி கொள்ள தயார் ஆக இருக்கிறேன்

gkrishna
12th July 2014, 02:08 PM
டிங் டிங் டாங் டிங் டாங் டிங்கிலோலா நீச்சல் குளத்திலா?

இந்த பாட்டோட அடுத்த வரியை அல்லது பாடியாவர்கள் ஏதாவது சொல்ல முடியுமா கொஞ்சம் முயற்ச்சி செய்து பாப்போம்

Gopal.s
12th July 2014, 02:24 PM
இந்த பாட்டோட அடுத்த வரியை அல்லது பாடியாவர்கள் ஏதாவது சொல்ல முடியுமா கொஞ்சம் முயற்ச்சி செய்து பாப்போம்
வந்ததென்ன தந்ததென்ன சிங்கார சிட்டல்லவா

RAGHAVENDRA
12th July 2014, 03:07 PM
டிங் டாங் டிங் டாங் டிங்கிலல்லோ...

அடுத்த வீட்டுப் பெண்

RAGHAVENDRA
12th July 2014, 03:11 PM
கோபாலின் மனம் கவர்ந்த கீதாஞ்சலி கதாநாயகியாக நடித்த பாரஸ்மணி ஹிந்திப் படத்தின் பாடல்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப் பட்டு மிகப் பிரபலமடைந்தன. அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் கோதை உன் மேனி ஒளியோ.... மாய மணி என்ற அப்படத்தின் பாடல் இதோ நம் பார்வைக்கு.

மஹிபாலுக்கு குரல் தந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்

http://www.youtube.com/watch?v=0WINiy0h4sU

குறிப்பு.. மாயமணி தமிழ் மொழிமாற்றுத்திரைப்படம் டிவிடியாக வெளிவரவில்லை. இதை இணையத்தில் தரவேற்றிய புண்ணியவான் யாரோ செய்த கைங்கரியம். ஹிந்தி வீடியோ தமிழ் ஆடியோ

vasudevan31355
12th July 2014, 03:24 PM
வந்ததென்ன தந்ததென்ன சிங்கார சிட்டல்லவா

இரண்டு வார்த்தை விட்டாயிற்று

'வந்ததென்ன தந்ததென்ன' க்குப் பிறகு 'சொந்தமென்ன பந்தமென்ன' போடணும். அப்புறம்தான் சிங்காரச் சிட்டல்லவா.

'ஹலோ பார்ட்னர்' படத்தில் ராட்சஸி பாடிய கலக்கல் பாடல். விஜயலலிதா நாகேஷ் ஜோடி தேன் கிண்ணத்திற்குப் பிறகு.

தேன் கிண்ணத்'தில் வி.கே.ஆர் முதலாளி எம்.ஆர்.ஆர்.வாசு ஜால்ரா

'ஹலோ பார்ட்னரி'ல் அப்படியே தலைகீழ்.

'வெள்ளி நிலவோ.. வீசும் தென்றலோ' என்று அருமயான பாடகர் திலகத்தின் பாடல் ஒன்று பார்ட்னரில் உண்டு. பின்னால் வரும்.

இந்தப் படத்தை அப்படியே உல்டா பண்ணி 'எல்லாம் இன்ப மயம்' என்று கமலை வைத்து எடுத்தார்கள். வாசு பண்ணின ரோலை ஜெய் பண்ணினார். நாகேஷ் ரோல் கமலுக்கு வித்தியாசமான 5 வேடங்களுடன். மாதவி ஜோடி. கன்னட லூஸ் மாப்பிள்ளை கமல் தும்மல் போட்டு மாதவியின் கவுன் தும்மலில் பறப்பதை கிருஷ்ணா எழுதுவார். அதை விலாவாரியாக கோபால் விவரிப்பார். நம் வேலை முடிந்தது.

mr_karthik
12th July 2014, 03:41 PM
பேராசிரியர் மீது ஒரே சமயத்தில் மூன்று மாணவிகள் பாலியல் புகார் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் பேராசிரியர் குற்றமற்றவர். மாணவிகள் ஒவ்வொருவரும் அவரை அடைய விரும்பியே பழி சுமத்துகின்றனர். பழியைத்துடைக்க பேராசிரியரின் விசுவாசமான மாணவர்கள் களத்தில் இறங்குகின்றனர்.

இந்நிலையில் பேராசிரியரின் காதலி அவரை அந்த மூன்று பெண்களுடன் சம்மந்தப்படுத்தி நினைத்துப் பார்க்கும்போது இந்த பாடல் உருவெடுக்கிறது.

இந்தப்பாடலில் சம்மந்தப்பட்ட அனைவருமே எனக்குப்பிடித்த நட்சத்திரங்கள். கனவு காணும் லட்சுமி, கனவில் பேராசிரியருடன் ஆடிப்பாடும் ஸ்ரீவித்யா, விஜயலலிதா, ஜெய்குமாரி என எல்லோரும் கண்களுக்கு விருந்து படைக்கின்றனர்.

நித்தம் நித்தமொரு புத்தம் புதிய சுகம்
நான் தேடினேன்
இளமை கொஞ்சும் விழி தலைமை தாங்கும் உன்னை
என்றும் நாடினேன்

கையணைக்க மெய்யணைக்க
விழி மொழிகள் கூறாதோ
மெய்யெழுத்தும் உயிரெழுத்தும்
ஒரு மொழியில் சேராதோ

ஓராயிரம் பாவையர் பார்வை பட்டும்
உன்மேல் விழுந்தன கண்கள்
ஈராயிரம் ஆண்டுகள் தவமிருந்தாலும்
உன்போலில்லை பெண்கள்

வேளைக்கு வேளை புது ரோஜா
வேண்டுகின்ற ஒரு மகராஜா
மலருக்கு மலர் ஒரு சுவை கண்டான்
வாடா மலராய் உன்னைக்கண்டான்

கவிஞர் வாலியின் பாடலுக்கு கலைமாமணி வி.குமார் இசையமைத்திருக்க, சிறப்பாக படமாக்கியிருந்தார் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர். பாடலின் முடிவில், காதலியின் மதிப்பில் பேராசிரியர் 0/100 என்று காட்டியிருப்பது டைரக்டோரியல் 'டச்'. பாடலில் நடிகையர் நால்வருமே 'நச்'.

பேராசிரியராக (நமது கோபால் சாருக்கு மிகவும் பிடித்த) மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்திருந்தார்.

படம்: "நூற்றுக்கு நூறு" பாடலோ 100 / 100.

Gopal.s
12th July 2014, 03:57 PM
நீங்க ஏதோ ஒரு ஆள் பெயரை சொன்னீர்களே, அந்த ஆள் பாலசந்தர் இயக்கத்தில் நடித்த நூற்றுக்கு நூறு என்னுடைய விருப்ப படம்.சுமாராக நடிக்கவும் வைத்திருப்பார் பாலச்சந்தர். யானை,புலி,சிங்கங்கள் ,குழந்தைகள் நடிக்கும் போது ,இந்த தொழிலில் இருக்கும் ஆட்கள் ஒரு படத்தில் கூடவா ,இயக்குனர் சொல் படி நடிக்க முடியாது?

vasudevan31355
12th July 2014, 03:58 PM
டியர் கார்த்திக் சார்,

குமாரின் இசையில் பின்னி எடுக்கும் நூற்றுக்கு நூறு படத்தின் 'நித்தம் நித்தம் ஒரு' பாடலின் வரிகளையும், அப்பாடலின் விசேஷங்களையும் அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.

இப்பாடலைப் பற்றி விரிவாக எழுத மிகவும் ஆசை. ஏனென்றால் மிக மிக மிக மிகப் பிடித்த ஒரு பாடல். குமார் பைத்தியம் வேறு. ஸ்பெஷலில் எழுதுவதை விட அலச ஆவல். நேரம் வாய்க்கும் போது மன்மத லீலை போல லீலைகள் புரியலாம்.

vasudevan31355
12th July 2014, 04:16 PM
இன்றைய ஸ்பெஷல் (28)

'சீதா' என்றொரு வெளியில் அவ்வளவாகத் தெரியாத படம். ஜெமினியும் அவர் பெண்டாட்டியும் நடித்திருப்பார்கள். சாவித்திரி முற்றலின் உச்சகட்டத்தில் இருப்பார். அதனால் நெற்றியில் முடிக் கற்றைகளைப் படர விட்டு இளமை காட்ட முயற்சிப்பார். ஆனால் 'சுழி' யாரை விட்டது? புரியாதவர்கள் பின்னால் கேள்விகள் கேட்கலாம். அதனாலோ என்னவோ ஜெமினியும் சோர்ந்து போய் சாவித்திரியைப் பார்த்து 'காலங்களில் அவள் வசந்தம்' என்று உன்னைப் பார்த்து இப்போது பாட முடியுமா?' என்று மனதுக்குள் சபித்தபடி 'தேமே' என்று உட்கார்ந்து இந்தப் பாடலில் புத்தகம் பார்த்துக் கொண்டிருப்பார். சாவித்திரி அவர் பாட்டுக்கு பாடிக் கொண்டிருப்பார்.

'எப்படி ஆனால் என்ன?

'கண்ணியப் பாடகி'யின் இந்தப் பாடல் சிறு வயதிலேயே என் நெஞ்சில் ஆழப் புதைந்து விட்டது. 'லஷ்மி கல்யாணம்' 'ராமன் எத்தனை ராமனடி' ஞாபகம் வந்தாலும் இந்தப் பாடலும் அலாதியான இன்பத்தை அள்ளித் தருகிறது.

மிகவும் அரிதான ஒரு பாடல். ஆனால் அப்போது ரேடியோவில் ரொம்ப பிரசித்தம். இப்போது பெரும்பாலும் மறந்திருக்கலாம்.

இந்தப் படங்களைப் பற்றிய விவரம் வேண்டாம். ஏனென்றால் எனக்குத் தெரியாதே!

பாடலை வீடியோவுடனேயே பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பார்க்க முடிந்தால் பாருங்கள். இல்லையேல் கண்களை மூடிக் கொண்டு பாடலை செவி வழி மட்டும் கேட்டு இன்புறுங்கள்.

ஆனால் நல்ல பாடல். கவிஞரின் வரிகள். இசை மெல்லிசை மன்னரோ?

'காவியத்தின் தலைவன் ராமனடி
தோழி கற்பனைகெட்டாத அழகனடி
அவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி
அந்த அழகுமகள் பேர் சீதையடி

காவியத்தின் தலைவன் ராமனடி
தோழி கற்பனைகெட்டாத அழகனடி
அவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி
அந்த அழகுமகள் பேர் சீதையடி

காவியத்தின் தலைவன் ராமனடி

அன்றொரு நாள் அந்தி மாலையிலே
நேரில் அவன் முகம் அவள் கண்ட வேளையிலே
கண்ணோடு கண் சேர்ந்து கொண்டதடி
வார்த்தை நின்றதடி மௌனம் வந்தடி

காவியத்தின் தலைவன் ராமனடி
தோழி கற்பனைகெட்டாத அழகனடி
அவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி
அந்த அழகுமகள் பேர் சீதையடி

காவியத்தின் தலைவன் ராமனடி

அழகுக்குக் கல்யாண ராமனடி
தந்தை அன்பினில் கட்டுண்ட சேயனடி
நீதியிலே ராஜா ராமனடி
சீதை நெஞ்சினிலே சீதா ராமனடி

காவியத்தின் தலைவன் ராமனடி
தோழி கற்பனைகெட்டாத அழகனடி
அவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி
அந்த அழகுமகள் பேர் சீதையடி

காவியத்தின் தலைவன் ராமனடி


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=w64-dq5JzCA

mr_karthik
12th July 2014, 04:48 PM
டியர் வாசு சார்,

'சீதா' அவ்வளவு பிரபலமில்லாத படமல்ல. கொஞ்சம் பிரபலமான படம்தான். ஜெமினி கணேசனுக்கு இது 100-வது படம். சாவித்திரிக்கு இதுவே 150-வது படம். சாவித்திரி தெலுங்கிலும் நடித்ததால் எண்ணிக்கை அதிகம். புதுக்கோட்டைக்காரர் லோக்கல் வண்டி மட்டுமே. பல நடிகர்களுக்கு 100-வது படம் சறுக்கியது போல இவருக்கும் சறுக்கியது. அது சரி, எல்லோருமே 'நவராத்திரியில் ஒளிவிளக்கு' ஏற்றிவிட முடியுமா?. ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் கணவருக்கு வேண்டுமானால் முடியலாம். ஆனானப்பட்ட 'ரா..., ரா...,'க்களே சறுக்கிவிட்டனரே (ராஜபார்வை, ராகவேந்திரர்) .

'காவியத்தின் தலைவன் ராமனடி' பாடல் கேட்க இனிமைதான். காட்சி நீங்கள் சொன்னதுபோல 'சப்'. உங்களுடைய இன்றைய ஸ்பெஷல்கள் ஒன்றையொன்று மிஞ்சிக்கொண்டிருந்தபோது கண்பட்டுவிட்டது போலும். இப்போது சீதாவால் திருஷ்டி கழிந்தது...

vasudevan31355
12th July 2014, 04:56 PM
டியர் வாசு சார்,
இப்போது சீதாவால் திருஷ்டி கழிந்தது...

கார்த்திக் சார்,

ரொம்ப ரொம்ப ரசித்து சிரித்தேன். Only one our Karthik.

vasudevan31355
12th July 2014, 05:02 PM
டியர் கார்த்திக் சார்,

ஸாரி! சொல்ல மறந்து விட்டேன். தங்களது 'பூம்புகார்' பதிவான மாயவநாதன் இயற்றிய

'அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது'

பாடலைப் பற்றிய விவரப் பதிவு உண்மையிலேயே திரிக்கு ஒரு வரபிரசாதம். அருமையான பதிவு. பாடல் வரிகளின் மாற்றங்கள் கூட உங்கள் விரல்கள் நுனியில். அற்புத நினைவாற்றல். அதற்கு மேல் அதை அம்சமாக வழங்கும் தனிப்பட்ட திறன். சொல்ல வார்த்தைகள் எழவில்லை சார். என் மனம் கவர்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும். மாயவநாதனுக்கு உண்மையான புகழாஞ்சலி.

vasudevan31355
12th July 2014, 05:13 PM
ராஜேஷ் சார்,

அற்புதமான கட்டுரைகள் அபூர்வமான பாடலாசிரியர்களைப் பற்றி அதுவும் நுணுக்கமாக.

கவிஞர் மாயவநாதன், காமாட்சி இவர்களைப் பற்றி ஓரளவிற்குதான் தெரியும். அனால் தங்களுடைய இந்த பொன்னான் பதிவுகள் மூலம் மேலும் இந்த அருமையான கவிஞர்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.

நிஜமாகவே நீங்கள் எல்லாம் இந்தத் திரியை எட்டா உயரத்திற்கு கொண்டு செல்கிறீர்கள். நன்றி ராஜேஷ் சார்.

mr_karthik
12th July 2014, 05:23 PM
டியர் ராகவேந்தர் சார்,

இடைக்காலப்பாடல்களை இங்கே அலசிக்கொண்டிருக்கும்போது இடையிடையே நீங்கள் அள்ளி வழங்கும் பழங்கால புதையல்களான அபூர்வ பாடல்கள் திரிக்கு அழகு சேர்ப்பதுடன் அவற்றை அறிந்திராத பலருக்கு அரிய பொக்கிஷங்களாகவும் திகழ்கின்றன.

மிக்க நன்றி சார்.

vasudevan31355
12th July 2014, 05:41 PM
கோபால்,

சீர்காழியார் பாடல்களில் 'பாட்டோடு ராகம் இங்கே' பாடலை நீங்கள் விட்டிருந்தால் உங்களை ஒரு வழி பண்ணியிருப்பேன். தப்பித்தீர்கள்.

இன்னொன்று

'பூவா தலையா' பாடலை ஜெய் மேல் இருக்கும் வஞ்சத்தால் மறைத்திருக்கிறீர்கள். கேட்டால் பிடிக்காது என்று கோயபல்ஸாக மாறுவீர்கள். ஜனரஞ்சகப் பாடல் என்றாலும் சௌந்தரராஜனும், சீர்காழியும் பின்னி இருப்பார்கள்.

அதற்கு மேல் எம்.எஸ்.வி. மேற்கத்திய இசைக் கருவிகளோடு விளையாடி இருப்பார்.

நடுவில் வரும் அந்த கோரஸ் அப்படியே கோலாகலமாக நம்மை கோலோச்சும்.

அந்த 'மாப்பிள்ளை முறுக்கு'.... எப்படி மறக்க இயலும்?

ராகவேந்திரன் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்

இந்தப் பாடலின் ஆரம்ப இசை இடையிசை, கோரஸ் இவற்றை தனியே பிரித்து இங்கே தரவேற்றி அளிக்க முடியுமா? ப்ளீஸ்.

இன்னொன்று 'மனித தெய்வம்' நடித்த படத்தில் சீர்காழி சீர்மிகு அழகில் பாடும்

'ஆறு கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தாய் முருகா தாலேலோ
அழகிய தா........மரை மலர்களிலே' ('தா' வுக்கு ஒரு இன்ப இழுப்பு. நமக்கு எவ்வளவு பெரிய இழப்பு!)

சூப்பரோ சூப்பர்.

உடனே தலைவரே என்று புராணம் எழுத ஆரம்பிப்பீர்களே!

மாலை நேர மகிழ்ச்சி வேண்டுமா? இதோ!


https://www.youtube.com/watch?v=AioxtiLTB3Y&feature=player_detailpage

Gopal.s
12th July 2014, 05:53 PM
rp ராஜநாயகம் மற்றும் எல்லோருக்கும் மூல மந்திரம். கவிஞர்கள்,பாடகர்கள்,இசையமைப்பாளர்கள்
அனைவரையும் பற்றி அத்தனை செய்திகளையும் திரை இசை அலைகளாக தொகுத்த என் நண்பர் வாமனன் அவர்களுக்கு நாம் எல்லோரும் தலை வணங்கியே தீர வேண்டும். அவர் இல்லையென்றால் ஒருவரை பற்றியும் ஒரு செய்தியும் உலகிற்கு வெளி வந்திருக்காது.

vasudevan31355
12th July 2014, 05:56 PM
நண்பர் யுகேஷ் பாபு,

அண்ணன் தங்கை பாசத்திற்கு உதாரணமாக

ஃபூலோன்-கா...தாரோன்-கா ஸப்கா கஹ்னா' பாடலைத் தந்து அந்தப் பாடலுக்கான அர்த்தத்தையும் தந்து மகிழ்வித்துள்ளீர்கள்.

உங்கள் மேல் ஒரு செல்லக் கோபமும் வரச் செய்து விட்டீர்கள். இப்படத்தின் பாடல்களை திரும்பவும் வெறி பிடித்தாற் போன்று கேட்கச் செய்து விட்டீர்கள். ஏற்கனவே என் டெஸ்க்டாப்பில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் பாடல்கள்.

குறிப்பாக

'காஞ்சீரே காஞ்சீரே' மும்தாஜ், தேவ் கலக்கல். பைத்தியம் பிடிக்க வைத்த காலத்தால் அழியாத பாடல்.

நடிகர் திலகத்தின் 'பாச மலரை' நீங்கள் அனுபவித்து ரசித்து எழுதியதற்கு எனக்கு ஏற்பட்டது மகிழ்ச்சிப் பெருக்கு.

vasudevan31355
12th July 2014, 06:22 PM
கிருஷ்ணா சார்,

நல்ல நீச்சல் குளத்தில் நீந்த வைக்க முற்பட்டீர்கள். அதற்குள்....???

இதுகெல்லாம் கவலைப் படாதீர்கள். ருத்ரைய்யா படத்தை நினைத்துக் கொள்ளுங்கள். 'ள்' ளுக்கு பதிலாக 'ர்' போட்டுக் கொள்ளுங்கள். ('ன்' போட்டுக் கொண்டாலும் சரி!):) தட்ஸ் ஆல். சிம்பிள். இதுவும் சொல் புத்திதான். இதையும் கேட்டு நடவுங்கள்.

எனக்கு மிக பிடித்த பாடல் ஆங்கிலத் தழுவலாக இருந்தாலும்

honey honey லவ் லவ் தித்திப்பது honey ஹோநே
honey honey லவ் லவ் புத்தம் புது honey honey
சுகம் தேடும் இரவு நேரம்

தாராபுரம் தாம்பரம்
தலையிலே கனகாம்பரம்


https://www.youtube.com/watch?v=XeQMB0_wH0s&feature=player_detailpage

Gopal.s
12th July 2014, 06:44 PM
இது வரை அலசிய ராகங்கள் .

சிந்து பைரவி - #178
சுபபந்துவராளி-#192
மாயா மாளவ கவுளை-#270
சாருகேசி- # 276
நட பைரவி-#368
பாகேஸ்வரி-#439
ஆபேரி/பீம்ப்ளாஸ் -#570.
கல்யாணி-#583.
மோகனம்-#675.
பிருந்தாவன சாரங்கா-#687.
பேஹாக்- #1011.
ரீதி கவுளை- #1048.
காபி/பிலூ- #1052.
கீரவாணி- #1113.
சிம்மேந்திர மத்தியமம்-#1117.
ஷண்முக ப்ரியா- #1351.
ஆபோகி- #1166.
ஹம்சத்வனி - #1249.
தர்மாவதி/மதுவந்தி- #1322.
வகுளாபரணம் - 1323.
ஹமீர் கல்யாணி- # 1387.
ஹரி காம்போதி/காம்போதி/- #1411

mr_karthik
12th July 2014, 07:32 PM
'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல் ஒன்று

இந்த படமே ஒரு ஜஸ்ட் ரிலாக்ஸ் படம்தான். எல்லா பாடல்களுமே ஜஸ்ட் ரிலாக்ஸ் பாடல்கள்தான். நான்கு பெண்களுக்கு ஒரே நேரத்தில் கல்யாணம் என்றால் அது சாதாரண கல்யாணமாக இருக்க முடியுமா? நிச்சயம் கலாட்டா கல்யாணமாகத்தானே இருக்க முடியும்?. (அப்பாடா படம் பேர் வந்தாச்சு). அதில் ஒரு கலாட்டா பாடல்.

பணக்காரன் வீட்டு பச்சைக்குழந்தையை கடத்தியாச்சு. ஆனால் அதை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?. அதுவும் இரண்டு ஆண்களால்?. படாத பாடு படுகிறார்கள் இருவரும். அந்த குழந்தையை சமாதானப்படுத்தும் சாக்கில் தங்கள் அவஸ்தையை சொல்லத்தான் இந்தப்பாட்டு. பாட்டு கதாநாயகனுக்கு மட்டும்தான். இந்த பாடல் முழுக்க கொஞ்சம் கூட சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்வதுதான் நடிகர்திலகத்தின் அசாதாரண திறமை. உடன் இருக்கும் நாகேஷ் கூட இதில் சறுக்கி விடுவார்.

பாடகர் திலகத்தின் குரலில்...

லு...லு..லு...ஆரி ஆரி ஆரி ஆரிரரோ
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ

கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கைமீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்

அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ

கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
உனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சும்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்

அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ

திராவிட மன்மதன் மெலிந்து அழகோவியமாக திகழ்ந்த காலகட்டத்தில் வந்த படம்தான் இது. இப்பாடலில் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேன்ட், வெள்ளை அரைக்கை சட்டை, சுருள் சுருளான சொந்த தலைமுடியில் சிம்பிளாக ஆனால் வெகு அழகாக இருப்பார். கையில் கைக்குழந்தை.

உடன் நாகேஷ் வழக்கம்போல கோமாளித்தனங்கள் செய்து கொண்டிருப்பார்.

மெல்லிசை மன்னர் வித்தியாசமான தாளக்கட்டில் அமைத்த, எப்போது பார்த்தாலும் மனம் ரிலாக்ஸாகும் பாடல். (வீடியோ ப்ளீஸ்)...

Gopal.s
12th July 2014, 07:35 PM
கரஹர ப்ரியா.

மையலான ராகத்தை சமையல் கொண்டே விவரிக்கலாம்.நன்கு சர்க்கரை பாகு காய்ச்சி வையுங்கள். ஒரு கம்பி பதம். இதை வைத்து லட்டு,பூந்தி,மைசூர் பாகு,ஜாங்கிரி,பாதுஷா என்று பல பல item செய்து வெட்டலாம் இல்லையா ,அப்படி ஒரு சர்க்கரை பாகு இந்த ராகம்.

இதமான மெலடியுடன் இழையோடும் மெல்லிய சோக ரசம் கொண்ட கருணை சுரக்க வைக்கும் அதிசயம் இந்த ராகம்.

ஹரப்ரியா என்ற பெயர் பின்னால் திரிந்தது. ஹிந்துஸ்தானியில் காஃ பி என்ற பிரிவில் வரும் மேளகர்த்தா சம்பூர்ணமே. பல ஜன்ய உறவினர்கள் வச வசவென்று. உங்களுக்கு ஏற்கெனெவே சிலரை அறிமுக படுத்தி விட்டேன்.ஆபேரி,ஆபோகி,பிருந்தாவன சாரங்கா,காபி,ரீதி கௌளை ஆகியவர்களை உங்களுக்கு தெரியும்.

இந்த ராகம் versatile ,fluid and flexible என்ற வகையில் கற்பனை நீட்சியை தடையின்றி அனுமதிக்கும் நண்பன்.ஸ்வரங்களின் இடைவெளி மிக சீரானது.கமகம் (variation of pitch of notes )கொண்டு டோனை மேல் அழுத்தம்,கீழ் அழுத்தம்,ஊசலாட்டம்,திடீரென்று மேலெழுப்பும் உயர் பிட்ச் என்று இஷ்டத்துக்கு விளையாட அனுமதிக்கும் ராகம்.

ஒரு பாடல் டூயட் தான் .சிறு வயதில் எனக்கு மிக மிக பிடித்த இரட்டையர்களின் இசையில் டி.எம்.எஸ் சுசிலாவில் பாடல்.ரொம்ப அழகான பாடல்.peppy ஆக இருக்கும்(recording கொஞ்சம் தேய்ந்தாற்போல ஒலிக்கும். ஆனால் archestration ஆரம்பமே களை கட்டும்.)என்ன ஏமாற்றம் .படம் பார்க்கும் போது மகாராஜன் உலகை ஆளவில்லை.இரவும் நிலவுமே வளர்ந்தது.நண்பன் குறிப்பிட்ட காரணம் தஞ்சை கோவிலில் படமாக்கியதால்,தமிழ் nativity வந்து,கைவிட பட்டது என்றான் .இன்னும் ஒரு ஓரத்தில் என் மூன்றாவது பிரிய ஜோடியுடன் இந்த பாடலை காணாமல் போனோமே என்று மனம் எங்கும்."மகாராஜன் உலகை ஆளலாம்"

கவிஞர் தான் பிரித்து ,ஆதரித்து, போஷித்த ஒரு இசையமைப்பாளரை குழந்தை என்றே எண்ணி போஷித்து,ஒரு தமிழ் மேதையை வஞ்சித்தார்.இந்த கேரள குழந்தையோ கவிஞர்தான் உண்மையில் குழந்தை என்று நிரூபித்து விட்டது. ஒரு போட்டியாளரை ,கவிஞருக்கு எதிரான நடிகருடன் சேர்த்து வளர்த்து கண்ணதாசன் வயிற்றில் அடிக்க பார்த்தது. கவிஞர் முதலில் சிணுங்கி ,பிணங்கினாலும் ,ஒரு பாடலை கேட்டு போட்டியாளரை அங்கீகரித்து தடவி கொடுத்தார்.
"மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் ".

அந்த நடிக மேதையின் 1976 க்கு பிந்திய படங்கள் பிரம்மாண்ட வெற்றிகளை பெற்று மேதைக்கு மகுடம் கொடுத்து கொண்டிருந்தாலும் ,உண்மையான கலை ரசிகர்கள் வருத்தத்தில் மிதந்தார்கள்.அந்த வாட்டம் போக்க நடிக இமயமும் ,அவரின் பரம ரசிகரான இயக்குன இமயமும் இணைந்து உரிய மரியாதை செய்தனர் உண்மை ரசிகர்களுக்கு. ஆனால் மத்திய அரசோ ,ராஜீவின் நண்பரின் விஷ பாம்பு குணம் கொண்ட வஞ்சக மனைவி எம்.பீ விவகாரத்தில் கணவரின் தோல்வியை தாங்காமல் கழுத்தறுக்க ,தனக்கு இந்த கலைஞனை கவுரவித்து ,அந்த பட்டத்துக்கு உரிய பட்டத்தை மறுத்து விட்டு ,தீரா பழியை தேடி கொண்டது.வேஷம் மாறியும் ,இந்த சாமிக்கு மகுடம் ஏறலை."பூங்காற்று திரும்புமா ,என் பாட்டை விரும்புமா".

என்னை கவர்ந்த பிற பாடல்கள்.

இளங்காற்று வீசுதே- பிதா மகன்.

பச்சை நிறமே பச்சை நிறமே-அலை பாயுதே.

Gopal.s
12th July 2014, 07:40 PM
அருமை கார்த்திக். இன்னொன்னு தெரியுமோ?இந்த வேடிக்கை ரிலாக்ஸ் பாடலை படமாக்கும் போது நடிகர்திலகத்துக்கு 104 டிகிரி காய்ச்சல்.

https://www.youtube.com/watch?v=aZPtmkZOHbc

vasudevan31355
12th July 2014, 09:10 PM
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/Galattakalyanamvob_006462622_zps669842e6.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/Galattakalyanamvob_006462622_zps669842e6.jpg.html)

'கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்'

முடிந்ததும் முழங்கைகளை மடக்கி, இரு உள்ளங்கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்தாற்போன்று தலைக்கு பின் பக்கம் கோர்த்து, இடுப்பை ஒடித்தபடி தலையை வெட்டி, வெட்டி நடந்து வரும் அந்த 7 ஸ்டெப்ஸ்.

அது என்ன ஒயிலா
அது என்ன அழகா
அது என்ன அற்புதமா
அது என்ன நளினமா
அது என்ன வெறுப்பா
அது என்ன துன்பமா
அது என்ன ஸ்டைலா
அது என்ன நடையா

முடிந்தால் சொல்லுங்கள்.

கார்த்திக் சாருக்கு இன்று இரவு என்னை தூங்க விடாமல் செய்வதில் அப்படி என்ன இன்பமோ? ஹும். (நாகையா பெருமூச்சு)

rajeshkrv
12th July 2014, 11:14 PM
honey honey male voice saibaba ( andha pakkam vaazhbavan fame)

rajeshkrv
12th July 2014, 11:16 PM
karthik sir, suggestion taken will avoid quoting

vasudevan31355
12th July 2014, 11:32 PM
honey honey male voice saibaba ( andha pakkam vaazhbavan fame)

thank u rajesh.

rajeshkrv
13th July 2014, 03:56 AM
கவி மாயவநாதன் பற்றிய உங்கள் கட்டுரை மிக அருமை ராஜேஷ் சார்

அது போல் தான் மெல்லிசை மன்னர்கள் அல்லது திரை இசை திலகம் போன்றவர்கள் மாயவநாதன் போன்றவர்களை அரவணைத்து இருக்க வேண்டும்

கிருஷ்ணா சார், திரையிசைத்திலகம் மாமா அவர்கள்தான் மற்றவர்களுக்கும் நிறைய வாய்ப்பு வழங்கினார் .. மருதகாசி ஐயா போன்ற்வர்களுக்கு எப்பொழுதும் வாய்ப்பு வழங்கியது கே.வி.மகாதேவன் அவர்கள்


இதோ ஞானக்குழந்தையில் மருதகாசி ஐயாவின் கைவண்ணத்தில் மகாதேவனின் இசையில் இசையரசி இசைத்த அற்புத கானம்
இதில் மெட்டுக்குள் அடங்க “ஓசஒ கொடுத்த நாயகியே ஈசன் ஒரு பாதி தனை கொண்ட நான்முகியே சுரலய ஓசை கொடுத்த நாயகியே “ என அந்த சுரலய என்ற வார்த்தை பிரயோகம் அருமை ..


http://www.youtube.com/watch?v=waMeOCnVJv0

RAGHAVENDRA
13th July 2014, 10:09 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/00626/10MP_JOLLEE_JPG_G16_626971e.jpg

ஜாலி ஆபிரகாம் -
இவருடைய தமிழ் உச்சரிப்பு விவாதத்திற்குரியது என்றாலும் குரல் சொக்க வைத்து விடும். பெரும்பாலும் மெல்லிசை மன்னரின் இசையில் தான் இவர் அதிகம் பாடியிருக்கிறார். பாடிய அனைத்துப் பாடல்களும் மறக்க முடியாதவை.

http://www.inbaminge.com/t/a/Agni%20Pravesam/folder.jpg

இவர் பாடிய பாடல்களில் அக்னிப் பிரவேசம் படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் இவர் பாடிய இப்பாடல் ஒரு முறை கேட்டாலே போதும் நெஞ்சில் உடனே நிலைத்து விடும்.

கேளுங்கள்

http://www.inbaminge.com/t/a/Agni%20Pravesam/

RAGHAVENDRA
13th July 2014, 10:17 AM
1978ல் வெளிவந்த அவள் ஒரு அதிசயம், விட்டலாச்சாரியாவின் புதல்வர் ஸ்ரீநிவாஸ் இயக்கிய திரைப்படம். ஜெய்சங்கர் ஸ்ரீப்ரியா நடித்து விஜய பாஸ்கர் இசையமைத்த திரைப்படம். இதில் இரு பாடல்கள் மிகவும் இனிமையானதாகும்.

அடி கண்மணி வண்ணப் பூங்கொடி மற்றும் சொர்க்கத்தைப் பார்க்கிறேன் உன்னிடம் ...

நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் பாடல்கள்.. இன்றைய பொழுது இப்பாடல்களை முணுமுணுத்தவாறே சென்று விடும். It will leave a hangover on you to last long.

Listen:

http://www.inbaminge.com/t/a/Aval%20Oru%20Athisayam/

RAGHAVENDRA
13th July 2014, 10:18 AM
கார்த்திக்
தங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு மாறுதலுக்காக அவ்வப்பொழுது அந்த பழைய பாடல்களை நினைவூட்டிக் கொள்வோமே என்கிற எண்ணமே காரணம்.

வாசு சார்
கூடிய விரைவில் தாங்கள் கோரிய பூவா தலையா இசையைத் தொகுக்க முயல்கிறேன்.

RAGHAVENDRA
13th July 2014, 10:29 AM
மகராசி வாழ்க... மெல்லிசை மன்னரின் இசையில் மறக்க முடியாத அத்தாணி மண்டபத்தில் பாடல் நம் அனைவர்க்கும் நினைவிருக்கும். ஆனால் இதே படத்தில் வாணி பாடிய இப்பாடல் எப்பேர்ப்பட்ட ஈடு செய்ய முடியாத குரல் வளம் கொண்ட பாடகியை இந்தித் திரையுலகம் சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பது நம் மனதில் தோன்றும் எண்ணம்.

குறிப்பாக இப்பாடலில் உள்ள நுணுக்கங்கள் வாணி ஜெயராம் அவர்களால் மட்டுமே சாத்தியம்.

பாடலின் பதிவுத்ததரம் நடுவில் சற்றே குறைகின்றது. என்றாலும் நினைவில் நீங்கா பாடலாயிற்றே..

வேகம் என்ற வார்த்தை சொல்லும் போது அவர் தரும் சங்கதியும் பின்னணியில் தபேலாவின் இணைப்பும் நம்மை சொக்க வைக்கும்.

http://www.inbaminge.com/t/m/Maharasi%20Vazhga/

Gopal.s
13th July 2014, 10:42 AM
வேந்தரே,

அட்டகாசம். என்னா choice !!!!எல்லாமே புதிசு. எனக்கு இந்த திரியில் ,இது வரை தெரியாத பாடல்கள் என்றால் தெனாலி ராமன் ரீதி கவுளை பாடலும்,பஞ்சமியுமே.இது இரண்டையும் பதித்தவர் நீங்களே.

RAGHAVENDRA
13th July 2014, 01:06 PM
கல்லும் கனியாகும் திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் இடம் பெற்ற மெல்லிசை மன்னரின் இசைக்குழு உறுப்பினர்கள்....நிழற்படங்கள் மேலும் சில ..

https://scontent-a-iad.xx.fbcdn.net/hphotos-xaf1/t1.0-9/10401477_748732551835945_8841306110695089184_n.jpg

பேங்கோஸ் வாசிக்கும் கணேஷ் மற்றும் எம்எஸ்வி ரசிகர்களின் உள்ளம் கொள்ளை கொண்ட ட்ரம்ஸ் நோயல்

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xaf1/t1.0-9/10488216_748732561835944_1584097382069702723_n.jpg

படத்தில் கிடார் கலைஞராக நடிக்கும் ஏ.எல்.ராகவன்

https://scontent-a-iad.xx.fbcdn.net/hphotos-xpa1/t1.0-9/10304979_748732538502613_4498614882935520935_n.jpg

மேலே கிடார் வாசிக்கும் கலைஞர்களில் இடது புறம் இருப்பவர் சாய்பாபா. இவர் பாலையா அவர்களின் புதல்வர். திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்களைப் பற்றி முந்தைய பதிவுகளில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வலது புறம் இருப்பவர் பாபு.

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/t1.0-9/10527397_748732545169279_3626261768276981066_n.jpg

மேலே உள்ள படத்தில் நின்றபடி புல்லாங்குழல் வாசிப்பவர் நஞ்சுண்டையா. பல பிரபல கர்நாடக வித்வான்கள் இவருடைய வாசிப்பில் மெய்மறந்ததுண்டு. அவரருகில் மைக்கில் குரல் தருபவர் கணேஷ்.

https://scontent-a-iad.xx.fbcdn.net/hphotos-xpa1/t1.0-9/10523743_748732531835947_2232622598098502995_n.jpg

மேலே உள்ள படத்தில் அக்கார்டியன் கலைஞராக வருபவர் பென் சுரேந்தர். இவர் சில படங்களுக்கு இசையமைத்துமிருக்கிறார். நடிகர் திலகம் ஜெயலலிதா இணைந்து நடிக்க இருந்து துவக்கப் பட்ட தேவன் கோயில் மணியோசை படத்திற்கு இசையமைக்க ஆலோசிக்கப் பட்டவர்களில் இவரும் ஒருவர். மற்றவர்கள் இளையராஜா மற்றும் டி.எஸ்.ராகவேந்தர். டி.எஸ்.ராகவேந்தர் தேர்வு செய்யப் பட்டு பாடல் பதிவு செய்யப்பட்டது. பின்னர் படம் நின்று விட்டது.

https://scontent-b-iad.xx.fbcdn.net/hphotos-xpf1/l/t1.0-9/10410197_748732541835946_948857706744673366_n.jpg

முழுமையாக காட்சி தரும் இசைக்குழு.

Gopal.s
13th July 2014, 01:46 PM
ஏ.எல்.ராகவன்.

தமிழில் சீர்காழி,டி.எம்.எஸ்,சி.எஸ்.ஜெயராமன் என்ற வன் குரலாளிகள் ,மெலடி கழுத்தை நெரித்து கத்திக் கொண்டு சங்கீதம் கத்த(எல்லா ஹீரோக்களுக்கும்),தமிழ் பட மெல்லிசை பாடல்கள் intensive care unit இல் coma நிலையில் இருக்க,ஹிந்தி பாடல்கள் கோலோச்சி நின்றன 1950 களில்.

கொஞ்சம் .ராமநாதன் புண்ணியத்தில் சுத்த சங்கீதத்தில் பிழைத்து நின்றன.ராஜாவும்,ராகவனுமே மென் குரல் இசையை மேன்மையாக்கி நின்றனர்.ஆனால் பீ.பீ.எஸ் வந்து விஸ்வரூபம் எடுக்கும் வரை இவர்கள் இருவருமே மெல்லிசையை ஓரளவு காப்பாற்றி நின்றனர்.

சுப்புராமனின் தேவதாஸ்,ஏ.எம்.ராஜாவின் கல்யாண பரிசு,கே.வீ.எம் மின் முதலாளி,வண்ணக்கிளி ,ஜி.ராமநாதனின் உத்தம புத்திரன் ,மெல்லிசை மன்னர்களின் பாக பிரிவினை ஓரளவு தமிழ் இசையை முன்னெடுத்து சென்றாலும்,தமிழ் பட இசை தழைத்தது மன்னாதி மன்னன்,பாவ மன்னிப்பு,தா வரிசை படங்கள்,தேன் நிலவு போன்ற திருப்பு
முனைகளால்தான்.

அப்போது சீர்காழியும்,சி.எஸ்.ஜெயராமனும் முன்னணி கதாநாயகர்களுக்கு பொருத்தமற்றவர்கள் ஆகி விட, டி.எம்.எஸ் முன்னணி பாடகராக மெல்லிசைக்கு தன்னை பொருத்தி கொண்டாலும்,ஹிந்தியில் ஒரு ஆறு பாடகர்கள் variety கொடுத்தது போல இல்லாமல் , வேறு பட்ட குற்ற குரல் வளம் இன்றி ,இசையமைப்பாளர்கள் வாடி கொண்டிருக்க,பருவ மழையாக ஏ.எல்.ராகவன்,ஏ.எம்.ராஜா.,பீ.பீ.ஸ்ரீநிவாஸ். ஏ.எம்.ராஜா இசையமைப்பாளராக சாதித்தாலும்,முன் கோபத்தால் எதிரிகளை உற்பத்தி செய்து ஒதுக்க பட்டார். ஏ.எல்.ராகவன் குரல் ஜெமினிக்கு படு பொருத்தம்.(மற்ற இருவரை விட)ஆனா ஆவன்னா ஜெமினி பேசுவதை கேட்டு,ஏ.எல்.ராகவன் பாடுவதை கேட்போருக்கு புரியும். ஆனால் முக்கிய கதாநாயகர்களுக்கு டி.எம்.எஸ்,ஜெமினிக்கும் ,இரண்டாவது நாயகர்களுக்கும் பீ.பீ.எஸ் என்று சூத்திரம் வரைய பட்டு விட ,ராகவன் நகைச் சுவைக்கும்,சீர்காழி அசரீரிக்கும் தள்ள பட்டனர்.

அதையும் மீறி ராகவனின் மனதில் நிற்கும் அற்புத பாடல்கள். (ஏ.எல்.ஆர,பீ.பீ.எஸ் இருவரின் சோகம்,,காதல் ஒரே மாதிரி தொனிக்கும்)

இன்பமான இரவிதுவே ,காதல் என்றால்,அன்று ஊமை பெண்ணல்லோ,திங்களுக்கு என்ன இன்று ,கால்கள் நின்றது ,தீர்த்த யாத்திரைக்கு ,அத்தான் என்றேன் முத்து முத்தாக என்ற காதல் பாடல்கள்,

எங்கிருந்தாலும் வாழ்க என்ற காதல் சோகம்.

பார்த்தீரா ஐயா ,வானும் நிலமும், வாழை தண்டு போல உடம்பு என்ற காமெடி பாடல்கள்.

மேற்கத்திய பாணி boy பாய்,பாயின்னா பையன்,பார்த்ததும் காதலை .

ராகவனின் மணிகள் (samples )

https://www.youtube.com/watch?v=Job48frOMDg

https://www.youtube.com/watch?v=8EgsqUSNFPk

https://www.youtube.com/watch?v=4RnGvxOAd6k

vasudevan31355
13th July 2014, 03:51 PM
கோபால் சார்,

அசத்தலான பதிவு.:clap: ராகவன் எனக்குப் பிடித்த பாடகர். இவர் குரல் வளம் ஒரு புறம் இருக்கட்டும். presentation ரொம்ப அற்புதம். பல்வேறுபட்ட திறமைகள் கொண்டவர்.

சோவுக்குப் பொருந்தாவிட்டாலும் "அந்த ஏழை வாழ்வு சிம்பிள்" great.

நகைச்சுவைப் பாடல்களில் இவரின் நையாண்டிகள் நகாசு வேலைகள் சுகமோ சுகம். ராகவன் பாடினாலே அப்பாடலுக்கு நாகேஷ் நடித்திருப்பார் என்ற நினைப்பு வருமளவிற்கு நாகேஷுக்குப் பொருந்தியவர்.

'அட இந்தாம்மே! நடைய மாத்து'

'போட்டுடாதே'

வாழைத்தண்டு போல வளமையான குரலில் நம்மை வழுக்கி விழச் செய்தவர்.

அது போல நீங்கள் குறிப்பிட்ட பூஜைக்கு வந்த மலரின் 'கால்கள் நின்றது நின்றதுதான்' என்னுடைய பேவரைட்.

ஆனால் மனிதர் பண்ணின மகத்தான சாதனை என்ன தெரியமா. நான் யார் தெரியுமா பாட்டில் தரும் அந்த எக்கோ வாய்ஸ். ரொம்ப கஷ்டம் கோ. தொலைகாட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறியது.

"இப்போது இருக்கும் தொழில் நுட்ப நுணுக்கங்களில் எப்படி வேண்டுமானாலும் என்ன தேவையானாலும் எதை வேண்டுமானாலும் இசையில் கோர்த்துக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காலத்தில் 'பார்த்ததும் காதலை' பாடலில் வரும் 'பெபபி பெபபி' என்று என் குரலிலேயே எக்கோ கொடுக்க ரொம்ப சிரமப்பட்டேன்".

உண்மை! செம வெரைட்டியாக இந்தப் பாடலில் பிளந்து கட்டியிருப்பார் ராகவன்.

அது போல இவர் பாடல்களை கேட்கும் மாத்திரத்தில் உற்சாகம் நம்மையறியாமல் தொற்றிக் கொள்ளும்.

தங்கைக்காக படத்தில் நாகேஷ் கூத்தடிக்கும் பாடல்.

'அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல'

சிலோனின் பொப்பிசை போல மனசை சிறகடிக்க வைக்கும் பாட்டு.

அடுத்து 'சுமதி என் சுந்தரி'யில் அற்புதமாக ரயிலில் படமாக்கப்பட்ட

'எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும்' ராட்சஸியோடு ராகவன் ரகளை.

(ஆஹா! இந்தப் பாடலில் ஒவ்வொரு கலைஞர்களிடமும் கொப்பளிக்கும் உற்சாகத்தை ஒரு கட்டுரையாகவே வடிக்கலாம். என்ன ஜாலி! என்ன ஜாலி) இதே போல இதற்கு முன்னாடி வெளிவந்த 'நீலகிரி எக்ஸ்பிரெஸி'ல் இதே போல இன்பத்தை அள்ளித் தரும் பாட்டு 'வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு" ராகவன் கலக்காதது. டிரெயினில்.

சாத்தனூர் அணைக்கட்டில் பாலாஜிக்கு பட்டு சிறகு கொடுத்து நம்மை காலம் முழுக்க கட்டி போட்ட விந்தை. (இதுவும் ராட்சஸியோடு)

ராகவன் அருமையான 'கிளாஸ்'கள் கொடுத்திருந்தாலும் என்னுடைய வோட்டு அவருடைய ஜனரஞ்சகங்களுக்கே.


கோபால்,

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். என் அபிமானப் பாடகரை எடுத்து கௌரவப்படுத்தி நினைவு கூர்ந்து என்னையும் நினைவு கூறச் செய்ததற்கு.

எனக்குப் பிடித்த உங்களின் பதிவுகளில் முக்கியமானது இது. உங்கள் எழுத்துக்களினால் அல்ல. ராகவன் அதில் கலந்ததினால்.:)

mr_karthik
13th July 2014, 03:58 PM
ஏ.எல்.ராகவன்.

ராகவனின் மனதில் நிற்கும் அற்புத பாடல்கள். (ஏ.எல்.ஆர,பீ.பீ.எஸ் இருவரின் சோகம்,,காதல் ஒரே மாதிரி தொனிக்கும்)

இன்பமான இரவிதுவே ,காதல் என்றால்,அன்று ஊமை பெண்ணல்லோ,திங்களுக்கு என்ன இன்று ,கால்கள் நின்றது ,தீர்த்த யாத்திரைக்கு ,அத்தான் என்றேன் முத்து முத்தாக என்ற காதல் பாடல்கள்,

எங்கிருந்தாலும் வாழ்க என்ற காதல் சோகம்.

பார்த்தீரா ஐயா ,வானும் நிலமும், வாழை தண்டு போல உடம்பு என்ற காமெடி பாடல்கள்.

மேற்கத்திய பாணி boy பாய்,பாயின்னா பையன்,பார்த்ததும் காதலை .

டியர் கோபால் சார்,

ஏ.எல்.ராகவன் பற்றிய நினைவு கூறல் பதிவு அருமை அவர் பாடிய பாடல்களின் பட்டியலும் கூட. அவருடைய 'கால்கள் நின்றது நின்றதுதான்' பாடலை எங்கு கேட்டாலும் என் கால்கள் நின்றது நின்றதுதான்.

அவர் பாடிய மேலும் சில நல்ல பாடல்கள் நினைவுக்கு வந்தவை...

வாழைத் தண்டு போல உடம்பு அலேக் (பணமா பாசமா)
இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா (சித்தி)
சீட்டுக்கட்டு ராஜா.. ராஜா (வேட்டைக்காரன்)
போடச்சொன்னா போட்டுக்கிறேன் (பூவா தலையா) ஸ்ரீகாந்துக்காக.
சாமி இல்லாமல் ஊர்கோலமா..தாலி இல்லாமல் கல்யாணமா

இப்படி எத்தனையோ..

அவரிடம் பிடிக்காதது, எந்த விழாவுக்கு போனாலும் 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடலை மட்டுமே பாடுவது. ஒரு சில பாடகர்கள் / பாடகிகள் ஏன்தான் இப்படி ஒரே பாடலைப்பாடி அறுக்கிறார்களோ....

சுசீலாவா.... 'உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல'
வாணியா... 'மல்லிகை என் மன்னன் மயங்கும்'
மாலதியா.. 'மன்மத ராசா.. மன்மத ராசா'
ராட்சசியா... 'காதோடுதான் நான் பாடுவேன்'
மஞ்சள் சட்டை கருப்பு கண்ணாடியா... 'வாழை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்'
மாணிக்க விநாயகமா... 'கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி'

கொடுமைடா சாமி......

mr_karthik
13th July 2014, 04:13 PM
// 'சுமதி என் சுந்தரி'யில் அற்புதமாக ரயிலில் படமாக்கப்பட்ட

'எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும்' ராட்சஸியோடு ராகவன் ரகளை.

(ஆஹா! இந்தப் பாடலில் ஒவ்வொரு கலைஞர்களிடமும் கொப்பளிக்கும் உற்சாகத்தை //

டியர் வாசு சார்,

இந்தப்பாடலை 'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல் வரிசையில் எடுத்து அலசி ஜமாயுங்களேன். மிகப்பொருத்தமான பாடல். எல்லா நகைச்சுவை நடிகர்களுடன் 'நம்ம' ஜெய்குமாரியும் இருக்கிறார்....

Gopal.s
13th July 2014, 07:00 PM
சிறு வயதில், ஒரு பாட்டில் மோகம் என்றால் மோகம்.அப்படி ஒரு மோகம். கே.ஜே .ஜேசுதாஸ்-எல்.ஆர்.ஈஸ்வரி,கண்ணதாசன்-மெல்லிசை மன்னர் ஜாலம். simple orchestration . simple structure . பாடகர்கள் எல்லைக்குள்ளே விளையாடுவார்கள்.

அலங்காரம் கலையாமல் கலையாமல் அணைப்பதுதான் என்ன கலையோ,
அழகோடு விளையாடி சுவைத்தால் அது என்ன சுவையோ

இதில் சரணத்தில் நாலு twist வரும். பதமாக கொஞ்சம் மெதுவாக,இதமாக காதல் மிதமாக, என்று யேசுதாஸ் சரணம் தொடங்க ஈஸ்வரி பலவிதமாக உள்ளம் வசமாக பழகுவதென்ன சுவையாக என்று முதல் திருப்பு. யேசுதாஸ் , நடமாடும் தங்க குடமாக ,நதியோடும் செல்லும் படகாக என்று மூன்றாவது திருப்பு. தொட்டு வரும் காற்று பட்டு இதமாக, தொடருவதென்ன சுவையாக என்று நாலாவது திருப்பு. பல்லவியுடன் இணைய இன்னொரு தொடருவதென்ன சுவையாக.

கோபாலை கவருவதேன்றால் சும்மாவா?நம்ம பந்துலு மாமாவின் நம்ம வீட்டு லட்சுமி.

http://www.youtube.com/watch?v=VJi4megXwfM

இந்த படத்தில் ,என் இரு கன்று குட்டி காதல் நாயகிகள்.(வாணிஸ்ரீ,பாரதி)

இதே படத்தில் வித்யாசமான டி.எம்.எஸ் -பீ.எஸ் டூயட். தன் இன்னொரு குரு எஸ்.எம்.எஸ் பாணியில் எம்.எஸ்.வீ. சரணம் இலக்கில்லாமல் வித்யாசமாக அலையும். பாக்கெட்டில் அடைக்க முடியாத வகை.கேளுங்கள்.யாரிடம்

http://www.youtube.com/watch?v=saOiJqVSV0Q

Gopal.s
13th July 2014, 07:19 PM
வெகுளி பெண் என்றொரு படம்.நமது கார்த்திக்கின் அண்ணியார் தயாரிப்பு.(நடித்தும் இருப்பார் அண்ணியாகவே) அவருடைய ஒன்று விட்ட கணவர் தேவதாஸ் டைரக்டர்.வெண்ணிற ஆடை நிர்மலா பின்னி பெடலெடுத்திருப்பார் வெகுளி பெண்ணாக. அந்த வருட (1971 )சிறந்த படமாக தேர்வு.

இதில் ஒரு பாடல். டி.எம்.எஸ் மூக்காலும்,முக்காமலும் அவருடைய இயல்பான பிட்சில் நன்றாக விளையாடியிருப்பார்.மெல்லிசை மாமணி வீ.குமார் இசை.

எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது.
என்னை தொட்ட எண்ணங்கள்.மின்னலிட்ட கன்னங்கள் ,என்னென்று நான் சொல்வதோ,(எங்கெல்லாம்)

சுகமான இசை பாடும் இள மங்கை யாரோ,பதமாக நடமாடும் அவள் வண்ண தேரோ,
வானத்தில் இருந்து தேவதை இறங்கி ,வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி (என்னை தொட்ட)

லாலா லாலா லாலா லாலா லாலா லலல்லா
கரை போட முடியாத புது வெள்ளை ஆடை,கலை மானும் அறியாத விழி வண்ண ஜாடை,
பார்வையில் இளமை,வார்த்தையில் மழலை,கூந்தலும் வணங்கும் காலடி நிழலை (என்னை தொட்ட)

https://www.youtube.com/watch?v=KMdL4kgbYrI

Gopal.s
13th July 2014, 07:49 PM
ஹரி போத்தன் (நம்ம பிரதாப் போத்தன் அண்ணாச்சி)தயாரிப்பில் 1969 இல் வந்த நல்ல தங்காள் remake துலாபாரம். (மலையாளம் மூலம்).வின்சென்ட் இயக்கம்(ரியலிசம் ???). நல்ல படம். (சோகம்தான் நெஞ்சு முட்டும்).ஏ.வீ.எம் .ராஜன்-சாரதா இணைவு அபாரம். பின்னியிருப்பார்கள். தேவராஜன் இசையில் பூஞ்சிட்டு, சங்கம் வளர்த்த தமிழ்,வாடி தோழி, துடிக்கும் ரத்தம் பேசட்டும் எல்லாமே வித்யாசமான flavour .
டி.எம்.எஸ் அவருக்கு இசைவான octave கொண்டு பின்னியிருப்பார் . அருமை.

சிரிப்போ இல்லை நடிப்போ ,இது சிங்கார பொன்னூஞ்சல் அழைப்போ.
விழிப்போ வலை விரிப்போ என்னை விருந்து பருக சொல்லும் துடிப்போ

கோபுர கலசத்தை கூந்தலில் மறைக்கும் கோலத்தை ரசிப்பேனா ,(கோபுர)
இளம் கோடி விட்ட பூவென இடை விட்ட பூவுக்கு ஆசையை விரிப்பேனா (இளம்)
அந்த ஆற்றினில் மிதப்பேனா ,ஆற்றினில் மிதப்பேனா (சிரிப்போ)

ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை நான் வலம் வருவேனா (ஊர்வலம் )
அவர் ஒரு பக்க ஜாடையை ,கலை வட்ட மேடையை ஓவியம் வரைவேனா (அவர் ஒரு)
அதில் என் உள்ளத்தை வரைவேனா ,உள்ளத்தை வரைவேனா (சிரிப்போ)

பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள் என பாத்திரம் படைத்தானோ (பார்க்கின்ற)
அந்த பனிமுத்து துளிகளை பெருகிடவே எனை மாத்திரம் படைத்தானோ (அந்த)
இதுதான் வாழ்க்கை என்றுரைத்தானோ,வாழ்க்கை என்றுரைத்தானோ (சிரிப்போ)

https://www.youtube.com/watch?v=FLoVvhHreWU

Gopal.s
13th July 2014, 08:29 PM
எனக்கு,கார்த்திக்,வாசு எல்லோருக்கும் விருப்பம்.

கால்கள் நின்றது நின்றதுதான்

http://www.youtube.com/watch?v=f_OclT91zH4

vasudevan31355
13th July 2014, 11:01 PM
//

டியர் வாசு சார்,

இந்தப்பாடலை 'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல் வரிசையில் எடுத்து அலசி ஜமாயுங்களேன். மிகப்பொருத்தமான பாடல். எல்லா நகைச்சுவை நடிகர்களுடன் 'நம்ம' ஜெய்குமாரியும் இருக்கிறார்....

நிச்சயமாக கார்த்திக் சார். நாளை நீங்கள் பார்க்கலாம்..

rajeshkrv
14th July 2014, 02:57 AM
அடிக்கடி நாம் கேட்ட பாடல்தான் இருந்தாலும் எப்பொழுது கேட்டாலும் புதுசாகவே இருக்கும்

ஏ.எம்.ராஜாவின் இசையில் அவரும் இசையரசியும் இசைத்த “தனிமையிலே இனிமை காண முடியுமா” பாடல் தான். இதை எழுதியது யார் என்று பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை

அதை எழுதியவர் கே.டி.சந்தானம்.. நல்ல குணச்சித்திர நடிகர் இவர்

இதோ அவரைப்பற்றி என் கட்டுரை

திரு கே.டி.சந்தானம். இவரை தெரியாதவர்கள் இருக்க நியாயமில்லை
மிக அருமையான குணச்சித்திர நடிகர். எத்தனையோ படங்களில் தந்தையாக நடித்திருக்கிறார்
குறிப்பாக புரட்சி தலைவரும் ஜெயலலிதாவும் பாடும் என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம் பாடலுக்கு மத்தியில்
என்னம்மா அங்கே சத்தம் என கேட்பாரே அவரே தான். வா ராஜா வாவில் பிரபாகருக்கு கட்டளைகளை சொல்லுவாரே அவரே தான்.
இவர் நடிகர் மட்டுமல்ல எப்படி கே.பி.காமாட்சி பாடலாசிரியராகவும் இருந்தாரோ அதே காலகட்டத்தில் இவரும் பாடலாசிரியராக இருந்தார்.

திரு கே.பி.காமாட்சியைப்போல் இவரும் எந்த வருடம் பாடலாசிரியராக நுழைந்தார் என்பது தெரியாது.ஆனாலும் இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்.
பானுமதியின் மிகப்பெரிய வெற்றிப்படமான சண்டிராணியின் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமனாக இருந்தாலும் மிகவும் பிரபலமான பாடலான
இன்ப தேன் மாறி பாயுதே என்ற பாடலை எழுதியது திரு கே.டி.சந்தானம் அவர்கள். இதற்கு இசை மெல்லிசை மன்னர்கள்.

இதே வரிசையில் இவர் இயற்றிய பாடல்கள் இதோ.
தேவதாஸ் திரைப்படத்தில் எல்லாம் மாயை
தாய் மகளுக்கு கட்டிய தாலியில் பல பாடல்கள் என எல்லவாற்றையும் எழுதியது இவர் தான்.

அம்பிகாபதி திரையில் கு.மா.பா, தஞ்சை ராமய்யாதாஸ் எல்லோருடும் இவரும் பாடல் எழுதினார்.
ஆம் ஆடட்டுமா கொஞ்சம், வாடா மலரே என்ற பாடல்களை எழுதியது இவரே.

மணமகள் தேவை படத்தில் ஒலித்த மிகப்பிரபலமான பாடல் பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே பாடலை
எழுதியது இவர் தான்.

மோகன சுந்தரம் படத்தில் சுகுமாரன் எழில் கண்டு ,பாட்டு வேண்டுமா, ஓம் ஜகம்தனில் இன்பம் என பிரபலமான பாடல்களை எழுதியதும் இவரே.

கோமதியின் காதலன் படத்தில் சீர்காழியார் ஜிக்கி குரல்களில் ஒலித்த மின்னுவதெல்லாம் பொன் என்றே எண்ணி என்ற பாடலை இயற்றியது இவரே.


கலைவாணரின் மிகவும் பிரபலமான பாடலான “தேதி ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்” என்ற பாடல் எவ்வளவு கருத்தாழமிக்க
பாடல் .. சிந்தனையை தூண்டும் வரிகளுக்கு சொந்தக்காரர் இவரே.

சக்ரவர்த்தி திருமகள் படத்திலும் நலுங்கிட்டு பார்ப்போமடி என்ற பாடலை எழுதியது இவரே.
ஆடிப்பெருக்கு திரையில் ஒலித்த தனிமையிலே இனிமை காண முடியுமா .. என்ன அருமையான வரிகள்
“மலர் இருந்தால் மனம் இருக்கும் தனிமையில்லை செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை”
கண்ணிழந்த மனிதர் முன்னே என அர்த்தமுள்ள பாடல்களை எழுதியது இவரே.


திரு சீர்காழியாரின் அகத்தியர் படத்தை மறந்திருக்க நியாயமில்லை
ஆம் தலைவா தவப்புதல்வா, இசைத்தமிழாய் இருப்பவனே என்ற் பாடல்களுக்கு சொந்தக்காரர் இவரே.

அதே போல் ஏ.பி. நாகராஜனின் கண்காட்சி படத்தில் பாடல்கள் எழுதினார். குறிப்பாக
பாலசுப்பிரமணியம், ஈஸ்வரி பாடிய "அனங்கன் அங்கஜ்ஜன் அன்பன் வசந்தன் மன்மதன்" என்ற மன்மதன் ரதி பாடுவதாக அமைந்த பாடலை இயற்றியது இவரே.

பாடலாசிரியராக இவரை பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை ஆனால் நல்ல குணச்சித்திர நடிகராக பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
இன்னுமொரு குறுந்தகவல் நாடக கம்பெனியில் சிறுவர்களான சிவாஜியையும் காகா ராதாகிருஷ்ணனையும் சேர்த்துவிட்டவரும் இவர் என்பது பலருக்கு தெரியாது.
இப்படி முகம் தெரியாமல் தமிழ் தொண்டாற்றிய எத்தனையோ முகங்களில் இவரும் ஒன்று. இன்றைய இசை ரசிகர்களுக்கு இவரை தெரிந்திருக்கவே நியாயமில்லை
அதனாலேயே இந்த அறிமுகம்..



http://www.youtube.com/watch?v=s0Tskmj9OYc

rajeshkrv
14th July 2014, 03:00 AM
கோபால் சார், கார்த்திக் மற்றும் வாசு சார் அருமையான கட்டுரைகள்
ராகவேந்திரா சார் கூடுதல் பாராட்டுக்கள் உங்களுக்கு

vasudevan31355
14th July 2014, 06:52 AM
ராஜேஷ் சார்,

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTcexbp7WTy0NbLm6dZH3WPAEccFVDic sCA7zusl3-IhKXyWQBPTA

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_01_1VOB_000479245_zps7bd40eb2.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_01_1VOB_000479245_zps7bd40eb2.jpg.html)

கே.டி.சந்தானம் என்ற ஒரு அருமையான நடிகரையும், பாடலாசிரியரியும் வெளி உலகிற்குக் கொண்டு வந்து கௌரவப் படுத்தியதற்கு நன்றி! நல்ல முயற்சி.

கே.டி.சந்தானம் ஒரு அருமையான நடிகர் பிளஸ் பாடல் ஆசிரியர். இவரை ஏ.பி.நாகராஜன் தன் படங்களில் இவரை அதிகம் பயன்படுத்திக் கொண்டார்.

'ராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் மும்முடிச் சோழனின் தலைமை சிற்பியாக கே.டி.சந்தானம் படத்தைத் துவங்கி வைப்பார். நந்தி சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்கு தயார் செய்யும் சிற்பி ரோல். சிற்பி கவனியாமல் கடமை தவறாமல் சிற்பம் செதுக்கும் போது நடிகர் திலகம் வெற்றிலை மடித்துக் கொடுக்கும் அடப்பைகாரன் போல சந்தான சிற்பிக்கு பணிபுரிவார்.

முதல் தேதி, திருமலை தென்குமரி படங்களிலும் நடித்திருப்பார்.

அதே போல 'சங்கமம்' திரைப்படத்தில் 'ஒரு பாட்டுக்கு பலராகம்' பாடலின் போது ஜெமினி, கே.ஆர்.விஜயாவை தூரத்திலிருந்து கண்காணிப்பார். பெரும்பாலும் வயதான தந்தை, ஆசிரியர் ரோலில் வருவார்.

காரைக்கால் அம்மையார், சக்கரவர்த்தி திருமகள், குமார ராஜா, கோமதியின் காதலன் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

vasudevan31355
14th July 2014, 08:00 AM
கே.டி.சந்தானம் அவர்கள் இடம் பெற்ற ஒரு பாடல்.

'திருமலை தென்குமரி' படத்தில் ஒரு அருமையான தென்னிந்திய மொழிகள் கலந்த ஒரு பாடல்.

'அமுதே தமிழே நீ வாழ்க'

மலையாளம், கன்னடம், தெலுங்கு, சென்னைத் தமிழ், ஆங்கிலம், சுத்தத் தமிழ் என்று எல்லாம் ஒன்று சேர்ந்த 'பாரத விலாஸ்' டைப் ராகம் இந்தப் பாடல்.

திருமலையிலிருந்து தென்குமரி வரை பஸ்ஸில் டூர் செலும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த பயணிகள் பொழுதுபோக்காக பாடும் பாடல்.

ஒவ்வொரு மொழியும் அவ்வளவு இனிமை. 'பாடணுன்னு மனசுகுள்ளே ஆச நெறையகீது' உட்பட.


http://www.dailymotion.com/video/x15glvk_azhage-thamizhe-thirumalai-thenkumari-1970_shortfilms

gkrishna
14th July 2014, 09:08 AM
கே.டி.சந்தானம் அவர்கள் இடம் பெற்ற ஒரு பாடல்.

'திருமலை தென்குமரி' படத்தில் ஒரு அருமையான தென்னிந்திய மொழிகள் கலந்த ஒரு பாடல்.

'அமுதே தமிழே நீ வாழ்க'

மலையாளம், கன்னடம், தெலுங்கு, சென்னைத் தமிழ், ஆங்கிலம், சுத்தத் தமிழ் என்று எல்லாம் ஒன்று சேர்ந்த 'பாரத விலாஸ்' டைப் ராகம் இந்தப் பாடல்.

திருமலையிலிருந்து தென்குமரி வரை பஸ்ஸில் டூர் செலும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த பயணிகள் பொழுதுபோக்காக பாடும் பாடல்.

ஒவ்வொரு மொழியும் அவ்வளவு இனிமை. 'பாடணுன்னு மனசுகுள்ளே ஆச நெறையகீது' உட்பட.


http://www.dailymotion.com/video/x15glvk_azhage-thamizhe-thirumalai-thenkumari-1970_shortfilms


வாழ்க வளமுடன்

ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்

என்னம்மா

gkrishna
14th July 2014, 09:19 AM
அனைவருக்கும் காலை வணக்கம்

கொஞ்சம் சொந்த ஜோலி மற்றும் சிஸ்டம் இல்லாமல் கஷ்டம் எல்லாம் சேர்ந்து கொண்டு திரியில் கலந்து கொள்ள (கொல்ல) முடியவில்லை
மன்னிக்கனும்
கே.ர. சந்தானம் பற்றிய பதிவு மிக அருமை
தெரிந்த முகம் தெரியாத பல தகவல்கள் .
எல்லாம் ஒண்ணுக்கு ஒண்ணு சளைத்தது அல்ல

ராகவன் - கல்லும் கனியாகும்,கண்ணில் தெரியும் கதைகள் இரண்டு படத்திற்கும் சொந்தகாரர் என்று நினைவு

சிவகாமி நான் ஜெயுசெட்டேன் ஜெயுசெட்டேன்
கை விரலில் பிறந்தது நாதம்

இது கல்லும் கனியாகும் தானே

gkrishna
14th July 2014, 09:22 AM
http://www.youtube.com/watch?v=Bp8kuO1Dq-o

http://i1.ytimg.com/vi/aAH74QRMSH4/mqdefault.jpg

gkrishna
14th July 2014, 09:25 AM
http://i1.ytimg.com/vi/RpRpyoR6Sb0/hqdefault.jpg

அண்ணாமார்களே

மேல உள்ள பாடல் எந்த படத்திலே சார்

gkrishna
14th July 2014, 09:28 AM
நான் கடவுளை கண்டேன் எனது மழலை மொழியிலே
அவன் கருணையை கண்டேன்
வாசு கார்த்திக் கோபால் வேந்தர் ராஜேஷ் நடையிலே

vasudevan31355
14th July 2014, 10:03 AM
அண்ணாமார்களே

மேல உள்ள பாடல் எந்த படத்திலே சார்

வணக்கம் மற்றும் நன்றி கிருஷ்ணா சார்.

அது 'கொடி மலர்' படத்தில் வரும் கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி பாடல். நடித்தவர் காஞ்சனா.

gkrishna
14th July 2014, 10:08 AM
கரஹர ப்ரியா.



கரஹர பிரியா

ஒரு சிறு மருத்துவ குறிப்பு

strengthens the mind and relieves tension. Curative for heart disease and nervous irritablility, neurosis, worry and distress.Evokes a humid, cool, soothing and deep mood ,For patients suffering from insomnia and need a peaceful sonorous sleep. Useful in the treatment of sleep disorders.

best to sing in any time; especially midnight

மேலும் சில பாடல்கள்
நெற்றிக்கண் - மாபிள்ளைக்கு மாமன் வயசு மாமனுக்கு காமன் வயசு
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQGm1g3IDmZdcNh2MC1Tymqw0qDlOgt6 LVGgLW5Ncw82udaQnmqJg

சின்ன தம்பி - தூளியிலே ஆடவந்த
ஊரு விட்டு ஊரு வந்து - தானா வந்த சந்தனமே

gkrishna
14th July 2014, 10:11 AM
வணக்கம் மற்றும் நன்றி கிருஷ்ணா சார்.

அது 'கொடி மலர்' படத்தில் வரும் கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி பாடல். நடித்தவர் காஞ்சனா.

thanks vasu sir

மௌனமே பார்வையால் pbs அந்த கொடிமலர் (1966-sridhar) தானே

Richardsof
14th July 2014, 10:14 AM
KODI MALAR

http://youtu.be/RpRpyoR6Sb0

gkrishna
14th July 2014, 10:21 AM
thanks esvee sir

gkrishna
14th July 2014, 10:22 AM
வாசு சார்

மேலும் சில மறந்த முகங்களை (துணை) நினைவு கூற முடியுமா

ஜம்புகேசன் என்ற ஜம்பு (சுமதி என் சுந்தரி தேங்காயின் உதவியாளர் ஆக வருவார்,கலாட்ட கல்யாணம் சென்சஸ் அதிகாரி ) . இவர் நடிகை இலவரிசியின் தந்தை என்று நினைவு. இவர் போட்டோ கூட குமுதம் பத்திரிகையில் பார்த்த நினைவு

ராஜா படத்தில் முருகேச ஓதுவார் (சந்திரபாபு)இடம் குமரேச ஓதுவார் பற்றி விசாரிக்க ஒருவர வருவார்
தலை ஒரு மாதிரி மஞ்சள் மற்றும் சிகப்பு கலரில் இருக்கும் .இவர் தியாகம் படத்தில் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ' பாடலில்
பாலாஜி படத்தில் எல்லாம் பார்க்கலாம் .
அதே போல் மன்மத லீலை படத்தில் கமலுக்கு கவுன்சிலிங் செல்லும் டாக்டர் ஒருவர் அவரும் தியாகம் படத்தில் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ' பாடலில் வருவார் இருவரும் போட் சிப்பந்திகள் ஆக வருவார்

http://www.youtube.com/watch?v=iC7LlfcvcVs

parthasarathy
14th July 2014, 10:30 AM
வாசு சார்

மேலும் சில மறந்த முகங்களை (துணை) நினைவு கூற முடியுமா

ஜம்புகேசன் என்ற ஜம்பு (சுமதி என் சுந்தரி தேங்காயின் உதவியாளர் ஆக வருவார்,கலாட்ட கல்யாணம் சென்சஸ் அதிகாரி ) . இவர் நடிகை இலவரிசியின் தந்தை என்று நினைவு. இவர் போட்டோ கூட குமுதம் பத்திரிகையில் பார்த்த நினைவு

ராஜா படத்தில் முருகேச ஓதுவார் (சந்திரபாபு)இடம் குமரேச ஓதுவார் பற்றி விசாரிக்க ஒருவர வருவார்
தலை ஒரு மாதிரி மஞ்சள் மற்றும் சிகப்பு கலரில் இருக்கும் .இவர் தியாகம் படத்தில் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ' பாடலில்
பாலாஜி படத்தில் எல்லாம் பார்க்கலாம் .
அதே போல் மன்மத லீலை படத்தில் கமலுக்கு கவுன்சிலிங் செல்லும் டாக்டர் ஒருவர் அவரும் தியாகம் படத்தில் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ' பாடலில் வருவார் இருவரும் போட் சிப்பந்திகள் ஆக வருவார்



Krishna Ji,

Jambu who appears in S.E.S, Galatta Kalyanam is different from the one who appears in Raja, Thyagam and other Balajee movies. While Jambu is a constant in Sridhar's movies including Sivandha Mann, the other one is a constant in Balajee movies - in fact, this person's name appears in title as Asst. in Production also.

Regards,

R. Parthasarathy

gkrishna
14th July 2014, 10:35 AM
ஆமாம் பார்த்த சாரதி சார்

மொத்தம் 3 பேர் தான்

1.ஜம்பு என்ற ஜம்புகேசன்
2. பாலாஜியின் தியாகம் படத்தில் வரும் இருவர்
(அதில் ஒருவர் பாலாஜி படத்தில் ரெகுலர் ஆக வருவர் - டக்லஸ் கன்னையா என்று ஒருவர் assistant ஆக டைட்டில் பார்த்த நினைவு )

Gopal.s
14th July 2014, 10:35 AM
Balaji movie Jambu,Actress Ilavarasi Father.