PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

vasudevan31355
9th August 2014, 08:17 AM
காலை வணக்கம் ராஜேஷ் சார்,

விட்டு விடுங்கள். நாம் நம் வேலையைப் பார்ப்போம். ஆனால் ஒன்று.

எப்படி நடிப்பு என்று எடுத்துக் கொண்டால் உலக நடிகர்கள் அத்தனை பேரும் நடிகர் திலகத்திற்கு பின்னாடி கண்களுக்கெட்டாத தூரமோ, அதே போல உலகில் எந்தப் பாடகியை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் சுசீலா அம்மாவுக்குப் பின்னாடிதான். அனைத்திலும் முழுமை பெற்ற முதல்தரப் பாடகி அவர். ஒரு சிறிய திருஷ்டி இருந்தால்தான் நல்லது.

சரி! நம்ம அலப்பரையை ஆரம்பிப்போம்.:) இன்றைக்கு இதுதான் சரியான பாட்டென்று நினைக்கிறேன். இந்தப் பாடலை இந்த ஒப்புவமை இல்லாத பாடகி பாடும் அழகே அழகு! அந்தக் குரலின் தெளிவு அப்படியே பளிங்கு.
அமைதியா.... ஆர்ப்பாட்டமா எதுவுமே கேட்ட மாத்திரத்தில் கிடைக்கும் குரலில், குணத்தில், தரத்தில் உயர்ந்த இந்த மாபெரும் இறையருள் பெற்ற இப் பாடகியிடம். நம் சுசீலாம்மா நம் இந்தியாவின் நிலையான, தலையாய பெருமை. இப்போது மீண்டும் கேட்போம் இக்குரலின் அருமை.

உலகில் எனக்குதான் அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம்
நான் ஒருத்திதான் அவர்களின் காதலி

நேற்றோடு பதினாறு வயதானவள்
நான் பிறந்த ஆண்டு மட்டும் தெரியாதவள்
நிலவென்று பிறந்ததென்று யார் கண்டது
ஆனாலும் அதன் அழகில் ஊர் மயங்குது

உலகில் எனக்குதான் அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம்
நான் ஒருத்திதான் அவர்களின் காதலி

கல்யாண விண்ணப்பம் பல வந்தது
காதலித்தால் போதுமென்று சில வந்தது.
ஆடும்வரை ஆட்டி வைக்கும் பெண்மை இது
ஆண்டவனார் ஆட்டி வைக்கும் பொம்மை இது

உலகில் எனக்குதான் அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம்
நான் ஒருத்திதான் அவர்களின் காதலி


http://www.youtube.com/watch?v=6goaX6_ICyw&feature=player_detailpage

Richardsof
9th August 2014, 08:18 AM
http://i62.tinypic.com/35bv6rq.jpg

http://youtu.be/iI-QHaUzgSY

Richardsof
9th August 2014, 08:21 AM
http://i57.tinypic.com/swcxgg.jpg
http://youtu.be/RpRpyoR6Sb0

Richardsof
9th August 2014, 08:25 AM
http://i60.tinypic.com/11vocg1.jpg

http://youtu.be/TNgViMi0BCE?list=PL60F81F3B90DC8C47

Richardsof
9th August 2014, 08:29 AM
http://i59.tinypic.com/2113yio.jpg
http://youtu.be/otVmp26Ewj0

rajeshkrv
9th August 2014, 08:32 AM
வாசு ஜி வாங்கோ வாங்கோ ..
என்ன அருமையான பாடல்.. இதுவும் இளையராஜாவின் இசையில் அவரின் பெருமையை அவரே சொல்வது போல் அமைந்த பாடல்
உலகில் எனக்குத்தான் அதிக ரசிகர்கள்.. வாலி ஐயாவின் சமயோசித வரிகள் அருமை .... அருமையான பாடல் ..

எஸ்.வி சார்.. அபூர்வ படங்கள் . சாரதா என்ன அழகு... நம் தென்னிந்திய அழகு சாரதாவிற்கு ... .. எல்லாமே அபூர்வ படங்கள் அருமை அருமை
எப்படி ஐய புடிக்கிறீர் .... ஷொட்டு .....

rajeshkrv
9th August 2014, 08:33 AM
வாசு ஜி, எஸ்.வி கொடுத்திருக்கும் ஜெயபாரதி பாடலும் இசையரசி இசைத்தது.... இவரும் இங்கே விரக பாடலை பாடுகிறார் .. துளி விரசம் இருக்காது ... அதையும் கேட்டு ரசிங்கோ ...

Richardsof
9th August 2014, 08:36 AM
http://i62.tinypic.com/2qmd6p4.jpg

http://youtu.be/alhtUt3zbRU

Richardsof
9th August 2014, 08:39 AM
http://i57.tinypic.com/qntjww.jpg
http://youtu.be/27WmXqtvtV0

vasudevan31355
9th August 2014, 08:42 AM
ராஜேஷ் சார்.

தங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.

rajeshkrv
9th August 2014, 08:52 AM
ராஜேஷ் சார்.

தங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.

பதில் கடிதம் போட்டாகிவிட்டது :)

vasudevan31355
9th August 2014, 08:56 AM
வாசு ஜி, எஸ்.வி கொடுத்திருக்கும் ஜெயபாரதி பாடலும் இசையரசி இசைத்தது.... இவரும் இங்கே விரக பாடலை பாடுகிறார் .. துளி விரசம் இருக்காது ... அதையும் கேட்டு ரசிங்கோ ...

ராஜேஷ் சார்,

விரசத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இருக்காது. அதனால்தான் அவர் கண்ணியப் பாடகி. நம் கண்ணான பாடகி.

ஒரு மாதிரியான பாட்டு. கரணம் தப்பினாலும் மரணம் என்பதைப் போல. ஆனால் என்ன ஒரு இனிமை தந்து முகம் சுளிக்க வைக்காமல், அருவருப்பு அடைய வைக்காமல், மீண்டும் மீண்டும் இப்பாடலைக் கேட்கத் தூண்டுகிறார் இந்த இன்னிசை அரசி. இசையரசியின் குரலும், இளையராஜாவின் மிரள வைக்கும் இசையும் எப்படி ஒன்றோடொன்று பின்னி இழைகின்றன!

'நிலவு நேரம்
இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி'

இந்த 'அன்னை' ஓர் ஆலயம்தனே!


http://www.youtube.com/watch?v=tzKF1KLnpoE&feature=player_detailpage

rajeshkrv
9th August 2014, 08:59 AM
ஆம் இந்த அன்னை ஒரு இசை ஆலயம் அதெல்ன்ன சந்தேகம்

Gopal.s
9th August 2014, 09:00 AM
பாரதி ரசிகர்களுக்காக

இதோ ரவி -பாரதி இணையில்



இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கோபாலுக்காக என்று மட்டும் போட்டால் போதும்.

rajeshkrv
9th August 2014, 09:03 AM
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கோபாலுக்காக என்று மட்டும் போட்டால் போதும்.

நானும் ரவி - பாரதியின் தீவிர ரசிகனய்யா என்னையும் சேர்த்து கொண்டேன் அவ்ளோதான்... ஹிஹி

Gopal.s
9th August 2014, 09:06 AM
எஸ்வி,

நடிகைகளின் பழைய படங்கள் அழகோ அழகு. முக்கியமாக சாரதா. நடிகர்திலகத்தின் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்க வேண்டியவர்.

திராவிட மன்மதனுடன் - திராவிட ரதி தேவி இணைந்து கலக்கும் தேவா பாட்டிற்கு நன்றி.

நீங்கள் இந்த மாதிரி பங்களிப்பில் மிளிர்கிரீர்கள். தொடருங்கள். நாங்களும் தொடருவோம்.

உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி. என் எடையை உடற்பயிற்சியின்றி ,ஐந்து கிலோ குறைத்து,ரேகையையும் தேய விட்டாயிற்று.

vasudevan31355
9th August 2014, 09:11 AM
ராஜேஷ் சார்,

பதிலுக்கு பதில் :)

Gopal.s
9th August 2014, 09:12 AM
பதில் கடிதம் போட்டாகிவிட்டது :)

ஒரு பப்ளிக் திரியில்,இந்த மாதிரி தனி பட்ட கொஞ்சல்களை வன்மையாக
எதிர்க்கிறேன்.கண்டிக்கிறேன்.p .m திட்டுவது,கெட்ட வார்த்தை முதலியவற்றுக்கு மட்டுமே பயன் பயத்த பட வேண்டும்.:mrgreen:

rajeshkrv
9th August 2014, 09:17 AM
எஸ்வி,

நடிகைகளின் பழைய படங்கள் அழகோ அழகு. முக்கியமாக சாரதா. நடிகர்திலகத்தின் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்க வேண்டியவர்.

திராவிட மன்மதனுடன் - திராவிட ரதி தேவி இணைந்து கலக்கும் தேவா பாட்டிற்கு நன்றி.

நீங்கள் இந்த மாதிரி பங்களிப்பில் மிளிர்கிரீர்கள். தொடருங்கள். நாங்களும் தொடருவோம்.

உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி. என் எடையை உடற்பயிற்சியின்றி ,ஐந்து கிலோ குறைத்து,ரேகையையும் தேய விட்டாயிற்று.

கோபால் ஜி, ஆம் இருந்தாலும் நடிகர் திலகம் தான் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கொடுத்தார்.
முதன் முதலில் குங்குமம் திரைக்காக அவரை பரிந்துரைக்க மற்றவர்கள் வேண்டாம் என்றார்களாம், ஆனால் நடிகர் திலகமோ நல்லா நடிப்பா அவளையே புக் செய்யுங்க என்று சொன்னாராம்.. இன்னும் பல படங்களில் நடித்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.. மிகத்திறமையான நடிகை

rajeshkrv
9th August 2014, 09:18 AM
ஒரு பப்ளிக் திரியில்,இந்த மாதிரி தனி பட்ட கொஞ்சல்களை வன்மையாக
எதிர்க்கிறேன்.கண்டிக்கிறேன்.p .m திட்டுவது,கெட்ட வார்த்தை முதலியவற்றுக்கு மட்டுமே பயன் பயத்த பட வேண்டும்.:mrgreen:

அச்சச்சோ.... இது வேறயா ....

chinnakkannan
9th August 2014, 09:24 AM
ஹாய் ஆல் குட் மார்னிங்க்.. மாஞ்சு மாஞ்சு எழுதின தண்ணீர் தண்ணீர்..யாருமே கண்டுக்கலயே ..ஒரு வேள நல்லபாட்டில்லையோ..

Gopal.s
9th August 2014, 09:24 AM
எங்கள் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையில் ,பாடகர் திலகம்-இசை தெய்வ பாடகி , கண்ணதாசனின் குறும்பு, மன்மதனுடன் -(பா)ரதி இணைந்து கலக்கும் ராமண்ணா trade mark கிணற்று பாடல்.

https://www.youtube.com/watch?v=E0ofgj--MQQ

rajeshkrv
9th August 2014, 09:27 AM
ஹாய் ஆல் குட் மார்னிங்க்.. மாஞ்சு மாஞ்சு எழுதின தண்ணீர் தண்ணீர்..யாருமே கண்டுக்கலயே ..ஒரு வேள நல்லபாட்டில்லையோ..

சி.க அப்படியெல்லாம் இல்லை அந்த பதிவிற்கு பின் பிரளயமே நடந்து ஓய்ந்தது அதனால் இது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது .. சாரி

தண்ணீர் தண்ணீர் பற்றி பதிவு அருமை .. :claps:

Gopal.s
9th August 2014, 09:27 AM
ஹாய் ஆல் குட் மார்னிங்க்.. மாஞ்சு மாஞ்சு எழுதின தண்ணீர் தண்ணீர்..யாருமே கண்டுக்கலயே ..ஒரு வேள நல்லபாட்டில்லையோ..
கண்டுக்கலைன்னு யார்யா சொன்னாங்க? திட்டலைன்னா பாராட்டுன்னு அர்த்தம். சமையல் எப்படி இருந்தது என்று கேட்கும் மனைவிக்கு தரும் அதே பதில்தான்.

rajeshkrv
9th August 2014, 09:30 AM
கண்டுக்கலைன்னு யார்யா சொன்னாங்க? திட்டலைன்னா பாராட்டுன்னு அர்த்தம். சமையல் எப்படி இருந்தது என்று கேட்கும் மனைவிக்கு தரும் அதே பதில்தான்.
உங்க டைமிங் சோ மாதிரி சும்ம கன கச்சிதம்.. எப்படி இப்படியெல்லாம் முடியுது உம்மால்..

chinnakkannan
9th August 2014, 09:31 AM
ராஜேஷ் கோபால் நன்றி :)சமையல் எப்படி இருந்தது என்று கேட்கும் மனைவிக்கு தரும் அதே பதில்தான். // என்னை மாதிரியே நிறையப் பேரு இருக்காங்க :)

rajeshkrv
9th August 2014, 09:34 AM
வாசு ஜி கன்னட கதம்பம் தொடர்ச்சி..

நாகர ஹாவு (ராஜ நாகத்தின் ஒரிஜினல்).. ராமாச்சாரி வேடத்தில் விஷ்ணுவர்த்தன் அறிமுகம்.. தமிழிலும் கன்னடத்தில் கிறித்துவ பெண் வேடத்தில் சுபா
மஞ்சுளாவின் வேடத்தில் ஆர்த்தி .. தமிழை விட கன்னடம் இன்னும் நன்று .. இயக்கம் புட்டண்ணா..
விஜயபாஸ்கரின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து மாணிக்கம்..

இதோ தேவன் வேதமும் கண்ணன் கீதையும் என்ற தமிழின் ஒரிஜினல் சங்கமா சங்கமா அனுராக சங்கமா

அதையே பெண்டியாலா கொஞம் மாற்றி சங்கமம் சங்கமம் என்று இதன் தெலுங்கு வடிவான கொடெ நாகுவில் தந்தார்..

பி.பிஸ்ரீனிவாஸும் இசையரசியும் அற்புதம் போங்கள்
நீங்களே கேட்டு மகிழுங்கள்

http://www.youtube.com/watch?v=36E9G1Wzp1s

RAGHAVENDRA
9th August 2014, 09:35 AM
ஒரு சாதாரண மழைக்கே இப்போது தண்ணீர் தண்ணீர் என்று தேங்கி நிற்கும் தண்ணீரைப் பார்த்து ஒதுங்கி செல்ல வேண்டிய சாலைகளை நினைத்து சலிக்க வேண்டியதாயிற்று. ஆனால் வறட்சியால் தண்ணீர் தண்ணீர் என்று ஏங்கி நின்ற காலங்கள்... ஹ்ம்ம்... எவ்வளவு கஷ்டங்கள் பட்டோம்... அதை அப்படியே பாலச்சந்தர் திரையில் வடித்து விட்டார்... சி.க. சார் தன் பதிவிலும் அதை அப்படியே பிரதிபலித்து விட்டீர்..
பாராட்டுக்கள் சி.க. சார்

rajeshkrv
9th August 2014, 09:38 AM
நாகரஹாவின் மற்ற பாடல்களை விட முடியவில்லை

அலமேலு தான் படும் கஷ்டங்களை ராமாச்சாரியிடம் சொல்லும் கதெ ஹேளுவே நன்னா கதெ ஹேளுவே..

http://www.youtube.com/watch?v=h_bq84Ti7oo

இதற்கெல்லாம் முன்பாக அலமேலு சந்தோஷமாக இருந்த காலத்தில் பாடும் கற்பூரதா பொம்பே நானு

என்றுமே என்னை மிகவும் சந்தோஷ படுத்தும் பாடல்

http://www.youtube.com/watch?v=zz5VJNaXVPs

RAGHAVENDRA
9th August 2014, 09:38 AM
பொங்கும் பூம்புனல்


ஆளாளுக்கு இப்படி விவாதம் செய்து கொண்டிருந்தால் இதற்கு என்ன தான் முடிவு...

என்னை முறைச்சுப் பார்க்கும் ஆளைக் கண்டால் எனக்குப் பிடிக்கலே...

ஐயையோ .... சார் இதில் எந்த பாலிடிக்ஸும் இல்லை... இந்த பாட்டில் உள்ள வரிகளை எடுத்துச்சொன்னேன் அவ்வளவு தான்..

நாம் எந்தக் கட்சியும் இல்லையடா சாமி... நல்ல பாட்டை யார் தந்தாலும் ஓ.கே. தான்..

சரி..சரி.. விஷயத்திற்கு வருவோம்.. பொங்கும் பூம்புனல் தொடருக்கு பாராட்டும் ஆதரவும் தரும் அனைத்து நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

என்னதான் முடிவு திரைப்படத்திலிருந்து ஆர்.சுதர்ஸனம் இசையில் இசையரசியின் குரலில் அபூர்வமான பாடல்

பொண்ணைப் பாத்து மயிலக் காளை மயங்குதிப்போது...

இந்த குரலைக் கேட்டு இங்கு கூட மயங்குதிப்போது...

http://www.youtube.com/watch?v=DOGmJERSWMQ

rajeshkrv
9th August 2014, 09:40 AM
ஒரு சாதாரண மழைக்கே இப்போது தண்ணீர் தண்ணீர் என்று தேங்கி நிற்கும் தண்ணீரைப் பார்த்து ஒதுங்கி செல்ல வேண்டிய சாலைகளை நினைத்து சலிக்க வேண்டியதாயிற்று. ஆனால் வறட்சியால் தண்ணீர் தண்ணீர் என்று ஏங்கி நின்ற காலங்கள்... ஹ்ம்ம்... எவ்வளவு கஷ்டங்கள் பட்டோம்... அதை அப்படியே பாலச்சந்தர் திரையில் வடித்து விட்டார்... சி.க. சார் தன் பதிவிலும் அதை அப்படியே பிரதிபலித்து விட்டீர்..
பாராட்டுக்கள் சி.க. சார்

குறும்பு , தண்ணீரை எங்கு பார்த்தாலும் ஒதுங்குவதால் தான் சி.காவின் பதிவை ஒதுக்கி விட்டீரா பாருங்கள் குழந்தை கோவித்து கொண்டுவிட்டது ..

rajeshkrv
9th August 2014, 09:41 AM
ராகவ் ஜி . நீங்கள் தான் பழைய படங்களில் வரும் மாமனார் போல வீட்டில் இடியே விழுந்தாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே போல பொங்கும் பூம்புனலை சலிக்காமல் அள்ளி வழங்கி கொண்டிருக்கிறீர்கள் .. நெஞ்சார்ந்த நன்றிகள் ...

rajeshkrv
9th August 2014, 09:42 AM
இதோ சங்கமா சங்கமாவின் தெலுங்கு வடிவம்

http://www.youtube.com/watch?v=tPouwijp6_Y

RAGHAVENDRA
9th August 2014, 09:47 AM
பொங்கும் பூம்புனல்

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் தமிழ் உச்சரிப்பிற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் அடியேனும் அடக்கம். வேறு சில பாடகர்கள் மொழியை சிதைக்கும் போதெல்லாம் சீர்காழியார் பாடியிருக்கலாமே என மனதில் தோன்றும். அப்போது நம் மனதிற்குள் இப்படியெல்லாம் எண்ணங்கள் தோன்றும் என்று முன்கூட்டியே யூகித்ததைப் போல இந்தப் பாடல் வரிகள் அமைந்திருப்பதைப் பாருங்கள்..

தமிழ்க்கலைதனில் ஊறிய களையெடுப்பாய்...

பாடலின் பல்லவியே இந்த அளவிற்கு தைரியமாக உள்ளது வியப்பைத் தருகிறதல்லவா..

என்னதான் முடிவு திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் என் நினைவு தெரிந்த நாள் முதல் இது வரை ஒரு முறை கூட வானொலியிலோ கல்யாணம் கச்சேரி போன்ற பொது நிகழ்ச்சிகளிலோ கேட்ட நினைவு இல்லை. முதன் முறை படத்தில் பார்த்த போது கேட்டது பார்த்த வாய்ப்பிற்குப் பிறகு இப்போது தான் டிவிடியில் மூலமாக கிடைத்தது.

நீங்களும் பாட்டைக் கேளுங்கள் பாருங்கள்..

http://www.youtube.com/watch?v=ungtfrjVcCw

RAGHAVENDRA
9th August 2014, 09:50 AM
மாமனார்கள் மாறுவதில்லை.. எவ்வளவு தலைமுறைகளானாலும் ராஜேஷ் சார்...

rajeshkrv
9th August 2014, 09:50 AM
வாசு ஜி , கிருஷ்ணா ஜி, மற்றும் கோபால் ஜி
உங்களை மயக்க இரு பாடல்கள் இதோ

கண்டசாலாவின் இசையில் கன்னட தெலுங்கு மொழியில் ஒரே பாடல்

தெலுங்கில் பந்திபொட்டு (என்.டி.ஆர் - கிருஷ்ணகுமாரி)
கன்னடத்தில் வீரகேசரி (ராஜ்குமார்- லீலாவதி மிகவும் ஹிட் ஜோடி)

ஊஹலு குச குட லாடே
மெல்லுசிரே சவி கானா

http://www.youtube.com/watch?v=-Ry8xeDKnRY

http://www.youtube.com/watch?v=q8Qi0Ua3ZXI

rajeshkrv
9th August 2014, 09:51 AM
மாமனார்கள் மாறுவதில்லை.. எவ்வளவு தலைமுறைகளானாலும் ராஜேஷ் சார்...

நூற்றில் ஒரு வார்த்தை

vasudevan31355
9th August 2014, 09:53 AM
ஒரு பப்ளிக் திரியில்,இந்த மாதிரி தனி பட்ட கொஞ்சல்களை வன்மையாக
எதிர்க்கிறேன்.கண்டிக்கிறேன்.p .m திட்டுவது,கெட்ட வார்த்தை முதலியவற்றுக்கு மட்டுமே பயன் பயத்த பட வேண்டும்.:mrgreen:


சிரிக்கிறது கூட இப்படிதான் பச்சையா மங்கி மாதிரி சிரிக்கணுமா? மனுஷன் மாதிரி சிரிக்கத் தெரியாதா? :)

RAGHAVENDRA
9th August 2014, 09:55 AM
பொங்கும் பூம்புனல்

கணக்குப் பார்த்து காதல் வந்ததா காதல் வந்ததால் கணக்கு வந்ததா... விடை தெரியாத பல கேள்விகளில் இதுவும் அடக்கம்..

இங்கே ஒரு காதல் ஜோடி அசலையும் வட்டியையும் வசூலிப்பதைப் பற்றி ஆராய்வதைப் பாருங்கள்...

அதுவும் எங்கே...குளியலறையில்...

ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்குமாம்...

கோபால் சார்... இது உங்களுக்காக...

மறக்க முடியுமா படத்திலிருந்து மெல்லிசை மன்னர் டி.கே.ஆரின் கைவண்ணத்தில்...

http://www.youtube.com/watch?v=OZ3iOYKjDro

vasudevan31355
9th August 2014, 10:03 AM
ஹாய் ஆல் குட் மார்னிங்க்.. மாஞ்சு மாஞ்சு எழுதின தண்ணீர் தண்ணீர்..யாருமே கண்டுக்கலயே ..ஒரு வேள நல்லபாட்டில்லையோ..

அய்யய்யோ! அப்படி இல்லை சி.க.சார். உங்களுக்கு எப்போதோ பாராட்டு பதில் படித்து ரசித்து ரெடி செய்து விட்டேன். அதற்குள் டிராக் மாறியதால் கொஞ்சம் லேட். ரொம்ப ரசித்துப் படித்தேன்

அதுவும் அந்த 3 கூறுக்கு (ஒன்னு ஓசி வேற) பத்து ரூவா டிக்கெட்டுக்கு போதுமா கிழவிக்கு? வெத்திலை பாக்குக்கு நம்ம சி.க. தருவாரோ! அருமை சி.க.சார்.

இப்படித்தான் சார் நல்ல பதிவுகள் சிலராலே அடிபட்டுப் போகும். ஆனா நம்ம திரியில் அப்படி இல்ல. கவனிக்கப்பட்டு ரசிக்கப்பட்டு விடும்.

நேற்று இரவு கூட உங்கள் பதிவைப் படிச்சுட்டு பதில் போட்டேனே!

chinnakkannan
9th August 2014, 10:03 AM
நன்றி ராகவேந்திரர் சார்..கோமல் சுவாமி நாதன் எழுதிய நாடகத்தை வெகு அழகாகப் படமாக்கியிருப்பார் பாலச்சந்தர்.. வசனம்,, திருநெல்வேலி பாஷை வசனப்பயிற்சி கொடுத்திருந்தவர் நாயர்.கே.ராமன்..அவரும் நடித்திருப்பார் முக்கிய கதாபாத்திரமாக..

பருவத்தோடு அது அதுக்கும் நேரம் வரணும்..
பொண்ணப்பார்த்து மயங்கும் ஆளு வருவதெப்போது.. ம்ம் முதன் முதலில் கேட்கிறேன் ராகவேந்தர் சார்.. நன்றி..ஆமா யாராக்கும் அந்தக் கன்னுக்குட்டி:)

நூறு ஜன்ம பலசி…சங்கமா.. மொழி தெரியாவிட்டாலும் பாடல் நன்னாயிட்டு இருக்கு ராஜேஷ்..ஆமாம் யாராக்கும் ஆர்த்தி..

கோபம் இல்லை ராஜேஷ்....நேற்று மாலை எழுத நினைத்து இரவில் தான் எழுத முடிந்தது.. ஒழுங்காக வந்திருக்கிறதா இல்லையா என்று ஒரு சம்சயம் அது தான்..

RAGHAVENDRA
9th August 2014, 10:03 AM
பொங்கும் பூம்புனல்

இதுவும் மறக்க முடியுமா திரைப்படத்திலிருந்து தான். பல்லவி சற்று சிரமமான நடையில் அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். மிகவும் தேர்ந்த பாடகர்களால் மட்டுமே பாட முடியும். சற்று தடுமாறினாலும் ஸ்ருதி பிசகி நாராசமாகி விடும் வகையில் பல்லவி அமைந்திருப்பது வியப்பிற்குரியது. பாடகர் திலகம் என்ற பெயருக்கேற்ப டி.எம்.எஸ். அவர்களால் மட்டுமே பாட முடியும் என்பது இப்பாட்டில் நிரூபித்திருக்கிறார்.

எட்டி எட்டி ஓடும் போது கொதிக்குது நெஞ்சம்..

http://www.youtube.com/watch?v=xzWwqOWv68c

rajeshkrv
9th August 2014, 10:03 AM
அந்த நடந்ததடி ஈ..ஈ சமீபத்தில் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கையில் அப்படியே மெய் மறந்து சுசீலாம்மாவை தொலைபேசியில் அழைத்து அந்த நடந்ததடிக்கே சர்க்கரை போட வேண்டும் என்று கூறினேன் .. மாமாவின் இசையில் மிகவும் வித்தியாசமான பாடல்

http://www.youtube.com/watch?v=aSp13YmPbA4

rajeshkrv
9th August 2014, 10:06 AM
நன்றி ராகவேந்திரர் சார்..கோமல் சுவாமி நாதன் எழுதிய நாடகத்தை வெகு அழகாகப் படமாக்கியிருப்பார் பாலச்சந்தர்.. வசனம்,, திருநெல்வேலி பாஷை வசனப்பயிற்சி கொடுத்திருந்தவர் நாயர்.கே.ராமன்..அவரும் நடித்திருப்பார் முக்கிய கதாபாத்திரமாக..

பருவத்தோடு அது அதுக்கும் நேரம் வரணும்..
பொண்ணப்பார்த்து மயங்கும் ஆளு வருவதெப்போது.. ம்ம் முதன் முதலில் கேட்கிறேன் ராகவேந்தர் சார்.. நன்றி..ஆமா யாராக்கும் அந்தக் கன்னுக்குட்டி:)

நூறு ஜன்ம பலசி…சங்கமா.. மொழி தெரியாவிட்டாலும் பாடல் நன்னாயிட்டு இருக்கு ராஜேஷ்..ஆமாம் யாராக்கும் ஆர்த்தி..

கோபம் இல்லை ராஜேஷ்....நேற்று மாலை எழுத நினைத்து இரவில் தான் எழுத முடிந்தது.. ஒழுங்காக வந்திருக்கிறதா இல்லையா என்று ஒரு சம்சயம் அது தான்..

இசைக்கு மொழியும் உண்டோ.. பாட்டு நிங்கள்க்கு இஷ்டபட்டதில் வல்லிய சந்தோஷம்....

chinnakkannan
9th August 2014, 10:06 AM
யா வாசு சார் நன்றி..அதைப்பற்றி எழுத நினைத்து விட்டுப் போய் விட்டது.. :) இங்கே மஸ்கட் கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிற்து.கொஞ்சம் மெல்லிய பூங்காற்று குளிர் கலந்து வீசுகிறது சூழ்லுக்கு ஏற்ற ஒரு பாடல் தாருங்கள் பார்க்கலாம்

vasudevan31355
9th August 2014, 10:07 AM
உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி. என் எடையை உடற்பயிற்சியின்றி ,ஐந்து கிலோ குறைத்து,ரேகையையும் தேய விட்டாயிற்று.

ஓஹோ! ஒரு படத்திற்கு 5 கிலோவா? அப்போ எஸ்வி சார் போட்டது 1,2,3.......

chinnakkannan
9th August 2014, 10:08 AM
மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விடும் நேரம் தேவ மயக்கம்.. என் மனசிலோடும் பாட்டு இது கேட்டோ..

ராஜேஷ் கன்னடப் பாட்டுக்கு மலையாள பதிலாக்கும்..

RAGHAVENDRA
9th August 2014, 10:12 AM
பொங்கும் பூம்புனல்

எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.. அதுவும் மெல்லிசை மன்னர் கேட்கவே வேண்டாம்... இவர்கள் இருவரின் இணையில் வந்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை... இவற்றைக் கேட்டால் கொஞ்ச நேரம் என்ன .. ஜன்மம் முழுவதுமே நம்மை நாம் மறந்து விடுவோம்.. அப்படி ஒரு பாடல் சிரித்து வாழ வேண்டும் படத்தில் இடம் பெற்ற கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்..

இந்த மாதிரியான கஷ்டமான பாடல்கள் ஜானகி அவர்களுக்கு ஜூஜூபி... சும்மா ஊதித் தள்ளி விடுவார்.. இந்தப் பாடலை ஒரு லட்சம் முறை கேட்டாலும் சலிக்காது...

மெல்லிசை மன்னர் ... சொல்லவே வேண்டாம்.. அதுவும் இரண்டாம் சரணத்திற்கு முந்நதைய பிஜிஎம்.... திடீரென்று இசை நின்று மழை சொட்டும் ஓசை மட்டும் கேட்கும்.. பின்னர் வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே என ஜானகி ஆரம்பிக்கும் போது நாமே மழையில் நனைந்து உடல் சிலிர்ப்பது போல் ஒரு உணர்வு நம்மை ஆட்கொள்ளும்..

http://www.inbaminge.com/t/s/Sirithu%20Vaazha%20Vendum/

vasudevan31355
9th August 2014, 10:15 AM
யா வாசு சார் நன்றி..அதைப்பற்றி எழுத நினைத்து விட்டுப் போய் விட்டது.. :) இங்கே மஸ்கட் கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிற்து.கொஞ்சம் மெல்லிய பூங்காற்று குளிர் கலந்து வீசுகிறது சூழ்லுக்கு ஏற்ற ஒரு பாடல் தாருங்கள் பார்க்கலாம்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qccGUGO0PE4

chinnakkannan
9th August 2014, 10:16 AM
கொஞ்ச நேரம் வெகு அழகியபாடல்..செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக தந்திட வந்தேன் காணிக்கையாக..ம்ம் எனக்குப் பசிக்குது ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போறேன் :)

Richardsof
9th August 2014, 10:18 AM
http://youtu.be/g0RWHjy1W5Y

RAGHAVENDRA
9th August 2014, 10:19 AM
தோட்டத்திலே உதிர்ந்த மலரை காற்று கடவுள் சந்நிதியில் சேர்ப்பது போலே...

எங்கோ கேட்ட மாதிரி உள்ளதா.. ஆம் கடவுள் தந்த இருமலர்கள் பாட்டுத் தான்.. கிட்டத்தட்ட அதே வரிகள் ... அதே இரு பெண்களின் மனக் கஷ்டங்கள்... இங்கேயும்..

பத்து மாத பந்தம் திரைப்படத்திலிருந்து பூமாலை ஒன்று .. பாடல்

ஜிக்கி பி.சுசீலா குரல்களில்..

சங்கர் கணேஷ் இசையில்...

அங்கே கே.ஆர்.விஜயா பத்மினி
இங்கே சரோஜா தேவி ராஜஸ்ரீ

http://www.youtube.com/watch?v=aYZX6n5rwi0

chinnakkannan
9th August 2014, 10:21 AM
மழைவருது மழை வருது குடைகொண்டுவா மானே உன் மாராப்பிலே.. வாவ் எனக்கு மிகவும்பிடித்த பாடல்களில் ஒன்று.. வீடியோ இப்போது தான் பார்க்கிறேன்..இது ராஜா கையை வச்சாவா (கெளஸ்ஸோட காதில் இருக்கும் குட்டி தங்க தோசைக்கல் அழகு :)//

Richardsof
9th August 2014, 10:21 AM
isai arasi and isai arakki -

http://youtu.be/jlGlD41oxJg

rajeshkrv
9th August 2014, 10:22 AM
கொஞ்ச நேரத்திற்கு சற்றும் சளைக்காத பாடல் .. இசையரசியின் இசை ராஜாங்கம்...

வாசு ஜி ஸ்பெஷல்

http://www.youtube.com/watch?v=stNUCAwX_A0

RAGHAVENDRA
9th August 2014, 10:23 AM
ஓகே நண்பர்களே... சற்றே இடைவெளி .... மீண்டும் சந்திப்போம்... அது வரையில்...

http://www.youtube.com/watch?v=-EcDiwC5zbU

chinnakkannan
9th August 2014, 10:25 AM
கொஞ்ச நேரம்..க்கு தாங்க்ஸ் எஸ்வி சார்..

ஆனாலும்சரோஜாதேவி ஏவி எம் ராஜனுக்காக இவ்ளோ வருத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை :)

rajeshkrv
9th August 2014, 10:25 AM
எஸ்.வி ஜி .. அருமை அருமை மலருக்கு தென்றல் பகையானால்.. 1000 லைக்குகள்...

கோபால் ஜி,வாசு ஜி

ராமமூர்த்தியின் இசையில் இசையரசியின் தேனினும் இனிய குரலும் பொன்னுசாமியின் ஹம்மிங்கும் என்னை என்றும் மயக்கும் பாடல்
அதுவும் இசையரசி கண்களை மூடு பைங்கிளியே பைங்கிளியே நாம் மெய் மறக்கத்தானே செய்வோம்

http://www.youtube.com/watch?v=Z9ObJpV-Fmc

rajeshkrv
9th August 2014, 10:26 AM
கொஞ்ச நேரம்..க்கு தாங்க்ஸ் எஸ்வி சார்..

ஆனாலும்சரோஜாதேவி ஏவி எம் ராஜனுக்காக இவ்ளோ வருத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை :)

படமென்று வந்து விட்டால் இதெல்லாம் ஜகஜம்...

vasudevan31355
9th August 2014, 10:39 AM
ராஜேஷ் சார்!

வழக்கத்தைவிட அதிகமாக முத்துமுத்தான இசையரசியின் பாடல்கள். யாருக்கு நன்றி நவில்வது? நிச்சயம் நம் திரி நண்பர்களுக்கல்ல:)

vasudevan31355
9th August 2014, 10:43 AM
என்ன ஆயிற்று காலையில். ஒரே மஜாவா! சும்மா புகுந்து விளையாடுகிறீர்கள். சாரதா சாந்த அழகு. அந்தக் கால சுஜாதா. வாணிஸ்ரீ, காஞ்சனா, அலாவுதீனும் அற்புத விளக்கும் ஜெயபாரதி, மிக அழகாக ராஜஸ்ரீ என்று போட்டு ஒரே அதம்?

சமரசம் உலாவும் திரி
நம் ஹப்பில் காணா
சமரசம் உலாவும் திரி.

நல்ல படங்களுக்கு நன்றி!

vasudevan31355
9th August 2014, 10:51 AM
ராஜேஷ் சார்/ வினோத் சார்/சி.க.சார்

இன்னொரு இசையரசியின் நெஞ்சைத் தழுவும் பாடல்

'தண்ணீர் எனும் கண்ணாடி
தழுவுது முன்னாடி
பெண்ணின் உடலும் பேதை மனமும்
துள்ளுது சுகத்தில் தள்ளாடி தள்ளாடி தள்ளாடி'

என்ன இன்னைக்குத் தண்ணீர் தண்ணீர் என்றே வருகிறது?. எல்லாம் இந்த சி.க.ஜியைச் சொல்லணும்.:)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S_dOJtHLp8w#t=170

rajeshkrv
9th August 2014, 10:57 AM
ஆரம்ப ஹம்மிங் மட்டுமே போதும்

http://www.youtube.com/watch?v=TBSWiFyGeVQ

rajeshkrv
9th August 2014, 11:08 AM
https://www.youtube.com/watch?v=S7c6aAsiPkQ

https://www.youtube.com/watch?v=z6Cu7EROL3M

https://www.youtube.com/watch?v=yHk4f1AOsjI

https://www.youtube.com/watch?v=cUCSNSCkBdg

https://www.youtube.com/watch?v=CyLWQylc-z8

Richardsof
9th August 2014, 11:08 AM
PADAGAR THILAGAM + ISAI ARASI - RAIN SONG

http://youtu.be/baVfueJXQvU

Gopal.s
9th August 2014, 11:11 AM
இதை விடவா செக்ஸி வாய்ஸ் , மற்றும் வேறு பட்ட பாடும் முறை உலகில் உண்டு?

https://www.youtube.com/watch?v=bvmxghzvaoE

Gopal.s
9th August 2014, 11:13 AM
https://www.youtube.com/watch?v=WvlTf0_rgdI

rajeshkrv
9th August 2014, 11:14 AM
இதை விடவா செக்ஸி வாய்ஸ் , மற்றும் வேறு பட்ட பாடும் முறை உலகில் உண்டு?



அட அட அருமை அருமை .. சொல்லவும் வேண்டுமோ

rajeshkrv
9th August 2014, 11:15 AM
இதையே தான் நான் கொடுத்த வீடியோவில் சரத் சொல்லுவார்.. கள்ளத்தனமில்லாத ரெண்டரிங் என்று ..

rajeshkrv
9th August 2014, 11:19 AM
https://www.youtube.com/watch?v=jp3tV1V14G8

rajeshkrv
9th August 2014, 11:21 AM
https://www.youtube.com/watch?v=_eoM-OpwK4E

Gopal.s
9th August 2014, 11:23 AM
அப்படியே மலைதேனில் ,பலாச்சுளையை தோய்த்த மதுர குரலில். இதை விட authentic change in pitching பண்ணியும் ,இவ்வளவு மதுரமாக ஒரு குரல் உலகில் ஒலிக்க முடியுமா?லதாவே துச்சம் என்னும் போது ,மற்றவைகளை குறிப்பிடவே தேவையில்லை.

https://www.youtube.com/watch?v=1hn8ddKiUiw

rajeshkrv
9th August 2014, 11:24 AM
சரியாக சொன்னீர்கள் .. ஹை பிட்ச்சில் கூட வார்த்தைகளின் தெளிவு அடடா என்ன அழகு..

gkrishna
9th August 2014, 11:27 AM
எல்லோருக்கும் காலை வணக்கம்
காலையில் ஹப் திறந்தால்
'மைசூர் மகாராஜா சண்டை
அந்த சண்டையிலே கிழிஞசதும்மே மகாராணி ... (மண்டை ):)

என்னதான் முடிவு ? (திரை படத்தின் பெயரை சொன்னேன்)
இவ்வளுவு சண்டைக்கும் நடுவில் ஏக தகவல்கள்
(சிந்து பைரவி கஜபதி ) மண்டை வீங்குது சார்

ஜெயபாரதி யின்
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQYDlgcPoRGWMQdC8BoDXYAf7S4JgFJ6 2tRTtBUvVKPB0fqpQye


அ அ வி யில் தேவராஜன் இசையில் சூப்பர் பாட்டு உண்டே சார்

'சந்தனம் கடைந்தெடுத்த ' இளவரசி ரோஷனியின் (jb ) பாடல்

http://www.youtube.com/watch?v=VTbKbNuOxdY

Gopal.s
9th August 2014, 11:35 AM
எல்லோருக்கும் காலை வணக்கம்
காலையில் ஹப் திறந்தால்
'மைசூர் மகாராஜா சண்டை
அந்த சண்டையிலே கிழிஞசதும்மே மகாராணி ... (மண்டை ):)


பு .... இவ்வளவுதானா?என்னவோ சொல்ல போகிறீர்கள் என்று பார்த்தேன்.:roll:

chinnakkannan
9th August 2014, 11:36 AM
தண்ணீர் என்னும்கண்ணாடி தழுவுது முன்னாடி

குளிர்ந்த காற்றும் நடிக்குதம்மா
கூவும் குயிலும் துடிக்குதம்மா
மயிலுக்குப் போர்வைவேண்டுமென்று மனமும் உடலும் கேக்குத்ம்மா..ம்ம்..

ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி
மழை முத்து முத்துப் பந்தலிட்டு..
சொல்லவோ சுகமான கதை சொல்லவோ… என்ன ஒரு பாட்டு
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் அன்பைக் கொடுப்பேன் (காஃபி டீலாம் தரமாட்டாங்க போல)
மின்னலது பின்னிவிழும் முன்னழகுக் கண்மலரில் என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய்
செல்வமகள் காவியத்தில் என்னழகு.. பின்னிக் கொடுப்பேன்.. அழகிய வரிகள்..*மணிமாலா தானே.)
மனம்படைத்தேன்..
சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனி ..ஜெபி ஒண்ணும் அவ்வளவு அழகாக இல்லை..

பாடல்-கள் தந்த அனைவருக்கும் ஒரு ஓ….

rajeshkrv
9th August 2014, 11:36 AM
பு .... இவ்வளவுதானா?என்னவோ சொல்ல போகிறீர்கள் என்று பார்த்தேன்.:roll:

அதானே

gkrishna
9th August 2014, 11:40 AM
ராஜேஷ் சார் யு டூ

வேற என்ன எதிர்பார்த்தீங்க

பகவான் கீதையில் கடமை செய் பலனை எதிர்பார்க்காதே
அப்படின்னு சொல்லி இருக்காரே

கோபால் சார் அந்த மனுஷ குரங்கு படம் எப்படி வரையறது ப்ளீஸ் ஹெல்ப்

gkrishna
9th August 2014, 11:43 AM
சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனி ..ஜெபி ஒண்ணும் அவ்வளவு அழகாக இல்லை..



பிட்சுபுடுவேன் பிச்சு :)

ck சார்
நீங்க அந்த வாடகைக்கு ஒரு ஹ்ருதயம், இதோ இவிடே வரு, ரதி நிர்வேதம்
பார்த்தது இல்லையா

சின்னகண்
ஊன கண் கொண்டு பாரகாதீங்க
ஞான கண் கொண்டு பாருங்க

rajeshkrv
9th August 2014, 11:46 AM
ஜெ.பியையும் கொஞ்சம் அழகாக காட்டிய படம்
இசையரசியின் குரலால் அழகு கூடியதோ என்னவோ

https://www.youtube.com/watch?v=pP_D3XwGpFg

chinnakkannan
9th August 2014, 11:50 AM
//ck சார்
நீங்க அந்த வாடகைக்கு ஒரு ஹ்ருதயம், இதோ இவிடே வரு, ரதி நிர்வேதம்
பார்த்தது இல்லையா// ஹய்யாங்க்..இதெல்லாம் என்னவாக்கும்.. எனக்கு மலையாளம் குறச்சு மனசிலாயிட்டில்லா..

ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார்
அவன் வேண்டும் வேண்டுமென்றான் அவள் நாளை நாளை என்றாள்

வெள்ளிய மேகம் துள்ளியெழுந்து
அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
விதவிதமான சடுகுடு விளையாட்டு

விட்டுவிடாமல் கட்டியணைத்துத் தொட்டது பாதி
பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு…ம்ம்

பாடகர் திலகம் அண்ட் இசையரசி... ப்ளஸ் ந.தி..காஞ்ச்..அள்ளும் பாட்டு..

rajeshkrv
9th August 2014, 11:52 AM
ஜெயபாரதி நல்ல கதாப்பாத்திரங்களும் செய்யத்தான் செய்தார்.. கிருஷ்ணா ஜி உம்ம கண்ணுக்கு ரதி நிர்வேதமும் ஹூம் மற்ற என்னவெல்லாமோ தான் கண்ணுக்கு தெரிகிறது பாவம்..

சி.கா.. இதோ மிகவும் சாந்தமான சிம்பிளான ஜெயபாரதி ..எம்.எஸ்.வியின் இசையில் இசையரசி .. கோபால் ஜி, வாசுஜி கேட்டு மகிழுங்கள்

https://www.youtube.com/watch?v=-lm2hSWAR3A

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.வி.எம்மின் நிம்மதி உங்கள் சாய்ஸ்ஸில் சரத்பாபுவிற்கு ஜோடியாக பிரமாதமாக செய்தார்

https://www.youtube.com/watch?v=kG9OF_nmxE4

chinnakkannan
9th August 2014, 11:54 AM
தரவாலே எடுத்தாலும்.. கலர்ப்பாட்டில் பரவாயில்லை..ப்ளாக் அண்ட் வொயிட் ஸோ சோ தான்.. நன்றி ராஜேஷ்..ரெண்டு பாட்டும் இசையரசி நன்னாயிட்டு இருக்கு

Gopal.s
9th August 2014, 12:03 PM
பேசும் தெய்வத்தில் படு cute ஜெயபாரதி.பேசாமல்,நடிகர்திலகம் ,இவரையே மணந்திருக்கலாமோ என்று தோன்றும்.ஆனால் பத்மினி படத்தில் காய்ந்து கிடப்பார். கிடைத்த சைக்கிள் கேப் பில் ,கொஞ்சூண்டு நேரமானாலும் ,நடிகர்திலகம் புகுந்து புறப்பட்டு விடுவார்.பத்மினியும் ,தாத்தாவும் படு பொருத்தம் பயங்கரமான reaction .தாத்தாவும் சான்ஸ் கிடைத்ததே என்று பேத்தியை விளையாடி விடுவார்.

பேசும் தெய்வம்,நூறாண்டு காலம்.

https://www.youtube.com/watch?v=ZqtdSAA-5Es

rajeshkrv
9th August 2014, 12:04 PM
தரவாலே எடுத்தாலும்.. கலர்ப்பாட்டில் பரவாயில்லை..ப்ளாக் அண்ட் வொயிட் ஸோ சோ தான்.. நன்றி ராஜேஷ்..ரெண்டு பாட்டும் இசையரசி நன்னாயிட்டு இருக்கு

Cika adhu karavaaLeduthaalum
Glad u liked those songs

gkrishna
9th August 2014, 12:08 PM
http://www.malayalachalachithram.com/posters/300.jpg

ராஜேஷ் சார்
உண்மை ஜெயபாரதியின் சில நல்ல உணர்சிகரமான நடிப்புள்ள படங்கள் சில நான் கண்டதுண்டு

ks sethumadhavan இயக்கத்தில் கடல்பாலம் னு ஒரு படம் என் நினைவில் உண்டு
நசீர் ஜெயா பாரதி ஜோடி ரொம்ப நல்ல படம்

அதே மாதிரி மாதவிக்குட்டி னு ஒரு படம் நினைவில் உண்டு
http://4.bp.blogspot.com/_EFXQombE590/TP9R0HbGW0I/AAAAAAAAAjE/R8S-LWPC3RQ/s1600/madhavikutty.jpg

vasudevan31355
9th August 2014, 12:09 PM
கிருஷ்ணா ஜி உம்ம கண்ணுக்கு ரதி நிர்வேதமும் ஹூம் மற்ற என்னவெல்லாமோ தான் கண்ணுக்கு தெரிகிறது பாவம்..


நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.வி.எம்மின் நிம்மதி உங்கள் சாய்ஸ்ஸில் சரத்பாபுவிற்கு ஜோடியாக பிரமாதமாக செய்தார்



ராஜேஷ் சார்,

என்னை எப்படி மறக்கப் போச்சு?:) உங்க பேச்சு கா!:) நானும் கிருஷ்ணா சாரும் இந்த விஷயத்துல ஒன்னு. இந்தப் பெருமை போதாதா?:)

அய்யய்யோ! ராஜேஷ் சார். அது தனிக்கதை. அதுக்காக நீங்க கொடுக்கும் நல்ல நல்ல பாட்டையெல்லாம் நிறுத்திடாதீங்க. நிச்சயமா ரசிக்கும் பக்குவம் உண்டு.

chinnakkannan
9th August 2014, 12:17 PM
ரொம்பகஷ்டப்ப்ட்டுப் பார்த்தா தான் ரெண்டாவதுபாவாடை சட்டை தாவணிப் பெண் ஜெயபாரதின்னு தெரிகிறது..எனிவே தாங்க்ஸ் ஃபார் த இஃபோ கோபால் சார் :)

இதே போலச் சீமாவும் ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் படத்தில் குட்டி வில்லியாய் வெகு இளமையாய் ஒரு பாட்டில் வந்திருப்பார்..எங்க சொல்லுங்க பார்க்கலாம்(எனக்கு மறந்து விட்ட்து)

vasudevan31355
9th August 2014, 12:20 PM
ரொம்பகஷ்டப்ப்ட்டுப் பார்த்தா தான் ரெண்டாவதுபாவாடை சட்டை தாவணிப் பெண் ஜெயபாரதின்னு தெரிகிறது..எனிவே தாங்க்ஸ் ஃபார் த இஃபோ கோபால் சார் :)

இதே போலச் சீமாவும் ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் படத்தில் குட்டி வில்லியாய் வெகு இளமையாய் ஒரு பாட்டில் வந்திருப்பார்..எங்க சொல்லுங்க பார்க்கலாம்(எனக்கு மறந்து விட்ட்து)

'எங்க சொல்லுங்க பார்க்கலாம்?' அப்படின்னு கேட்டவருக்கு தெரியும்னு பார்த்தா அவர் 'தொபுக்கடீர்':).

gkrishna
9th August 2014, 12:20 PM
ராஜேஷ் சார்,

என்னை எப்படி மறக்கப் போச்சு?:) உங்க பேச்சு கா!:) நானும் கிருஷ்ணா சாரும் இந்த விஷயத்துல ஒன்னு. இந்தப் பெருமை போதாதா?:)

அய்யய்யோ! ராஜேஷ் சார். அது தனிக்கதை. அதுக்காக நீங்க கொடுக்கும் நல்ல நல்ல பாட்டையெல்லாம் நிறுத்திடாதீங்க. நிச்சயமா ரசிக்கும் பக்குவம் உண்டு.

வாசு சார்
பாடல்களை ரசிப்பதில் நாம் எல்லோரும் ஒருவரே

vasudevan31355
9th August 2014, 12:22 PM
.//தாத்தாவும் சான்ஸ் கிடைத்ததே என்று பேத்தியை விளையாடி விடுவார்//

அடப்பாவி மனுஷா! நீ நல்லா இருக்க.

vasudevan31355
9th August 2014, 12:23 PM
//ck சார்
நீங்க அந்த வாடகைக்கு ஒரு ஹ்ருதயம், இதோ இவிடே வரு, ரதி நிர்வேதம்
பார்த்தது இல்லையா// ஹய்யாங்க்..இதெல்லாம் என்னவாக்கும்.. எனக்கு மலையாளம் குறச்சு மனசிலாயிட்டில்லா..



அய்யோ பாவமாக்கும் எங்கள் கண்ணன்.

gkrishna
9th August 2014, 12:29 PM
1979-80 கால கட்டத்தில் kayalum கயறும் னு ஒரு படம் சார்
ஜெயபாரதி நம்ம மோகன் ஷர்ம (லக்ஷ்மி),மது நடித்து வந்தது
மாமா இசை னு நினைவு
வாணி ஜெயராம் பாடல் ஒன்று 'கடல் புரத்தில்' னு வரும்

எனக்கு லிங்க் கிடைக்க வில்லை
http://i1.ytimg.com/vi/wIZR4w-MYd8/hqdefault.jpg

vasudevan31355
9th August 2014, 12:36 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00588/2007050215890201_588014g.jpg

http://2.bp.blogspot.com/-TJLXhRoYm94/Ts5S7Ls-cRI/AAAAAAAABV4/PM1Mm2GiThY/s1600/Jayabharathi12991.jpg

http://3.bp.blogspot.com/-s_lyzM6KlEQ/Ts4xQ7r5UNI/AAAAAAAABUY/C-CbvV4HOvY/s640/Jayabharathi+03.jpg

http://www.keralamovietime.com/wp-content/uploads/2013/05/image1.jpg_480_480_0_64000_0_1_0.jpg

http://www.jayceyf.com/P-GALLERY/jayabharathi.jpg

http://www.balachandramenon.com/moviesthumb/scan0015_15.jpg

gkrishna
9th August 2014, 12:39 PM
http://4.bp.blogspot.com/-wJcqChQr8qQ/Ts4xZRTCd8I/AAAAAAAABUo/jRskY6t4SXI/s400/M0000482.jpg

ராமு காரியத் இன் நெல்லு ஜெயபாரதியின் one of the best movies

vasudevan31355
9th August 2014, 12:39 PM
http://i46.tinypic.com/dlqqhk.jpg

http://i46.tinypic.com/2uhpvsk.jpg

http://i45.tinypic.com/6o342s.jpg

http://i47.tinypic.com/155tgus.jpg

vasudevan31355
9th August 2014, 12:45 PM
ஜெயபாரதி தமிழில் இன்னும்

நம்ம வீட்டு தெய்வம்

அனுபவி ராஜா அனுபவி

மைக்கேல் மதன காமராஜன்

தலைவன்

அப்புறம் கிருஷ்ணாஜி ஹெல்ப்.

gkrishna
9th August 2014, 12:51 PM
நம்ம தலைவரின் மோகன புன்னகை

ஆரம்ப காலத்தில் ஒரு சந்தேகம் உண்டு
குடிசை இயக்குனர் ஜெயபாரதியும் நம்ம நடிகை ஜெயபாரதியும் ஒரே ஆள் தான் என்று .

gkrishna
9th August 2014, 01:00 PM
பிரேம் நசிர் இன் லிசா னு ஒரு படம் 1978 கால கட்டத்தில் வெளி வந்தது
அதில் ஜெயபாரதி உண்டா ?
ஒரு ஜேசுதாஸ் சாங் ரொம்ப நல்ல இருக்கும் சார்
'பிரபாதமே ' அப்படின்னு வரும். நசிர் வைட் அண்ட் வைட் போட்டுண்டு
பாடிண்டு வருவார்
அதே மாதிரி இன்னொரு சாங் 'இணக்கமோ பினக்கமோ '

http://pksongs.me/site_292.xhtml

vasudevan31355
9th August 2014, 01:07 PM
பிரேம் நசிர் இன் லிசா னு ஒரு படம் 1978 கால கட்டத்தில் வெளி வந்தது
அதில் ஜெயபாரதி உண்டா ?
ஒரு ஜேசுதாஸ் சாங் ரொம்ப நல்ல இருக்கும் சார்
'பிரபாதமே ' அப்படின்னு வரும். நசிர் வைட் அண்ட் வைட் போட்டுண்டு
பாடிண்டு வருவார்



கிருஷ்ணா சார்!

இந்தாங்கோ!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WTRtL9KLS8k[/VIDEO

vasudevan31355
9th August 2014, 01:08 PM
//அதே மாதிரி இன்னொரு சாங் 'இணக்கமோ பினக்கமோ '//


https://www.youtube.com/watch?v=789IOgHTBAI&feature=player_detailpage

gkrishna
9th August 2014, 01:19 PM
மிகவும் ரசித்த பாடல்கள். இணைப்பிற்கு நன்றி வாசு சார்
நேற்று சுசீலா அம்மாவின் வீட்டு மாப்பிள்ளை பாடல் கேட்ட உடன் மேலும் சில பாடல்கள் நினைவில் வந்தது
'காலம் நமக்கு தோழன் காற்றும் மழையும் நண்பன் ' பெற்ற மனம் பித்து
'பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபங்கள் பால் பொங்கல் பொங்குது '
துலாபாரம்

gkrishna
9th August 2014, 01:25 PM
நீங்கள் சொன்னது போல் பிரமீளாவின் நடிப்பு இந்த பாடலில் மிக அருமை
பிரமீளாவும் ஒரு நல்ல நடிகை . கோமாதா என் குலமாதா,வாழையடி வாழை, தங்கபதக்கம்,கை நிறைய காசு,வீட்டு மாப்பிள்ளை,சொந்தம்,பிரியாவிடை போன்ற நல்ல படங்களில் நடித்து கொண்டு இருந்தவர் ஏன் தடம் மாறினார் என்று தெரியவில்லை
http://cdn.spicyonion.com/images/profile/movie/1975/priyavidai.jpg

Richardsof
9th August 2014, 01:43 PM
http://youtu.be/SOE1yARKmC4

sss
9th August 2014, 02:04 PM
1979-80 கால கட்டத்தில் kayalum கயறும் னு ஒரு படம் சார்
ஜெயபாரதி நம்ம மோகன் ஷர்ம (லக்ஷ்மி),மது நடித்து வந்தது
மாமா இசை னு நினைவு
வாணி ஜெயராம் பாடல் ஒன்று 'கடல் புரத்தில்' னு வரும்

எனக்கு லிங்க் கிடைக்க வில்லை

திரு கிருஷ்ணா அவர்களே

நீங்கள் தேடிய பாடல் இது தானா ?? ( Kadakkanniloru Kadal)

https://www.mediafire.com/?rhn18sc9tr1b823

வாணி - யின் மெய்மறக்கும் குரலில் கேட்டு மகிழுங்கள்.

நன்றி.

gkrishna
9th August 2014, 02:06 PM
:mrgreen:

உரேகா உரேகா
கண்டுபிடித்து விட்டேன் மனித குரங்கை:)

பி கு (பின் குறிப்பு)
இந்த பதிவு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

gkrishna
9th August 2014, 02:09 PM
திரு கிருஷ்ணா அவர்களே

நீங்கள் தேடிய பாடல் இது தானா ?? ( Kadakkanniloru Kadal)

வாணி - யின் மெய்மறக்கும் குரலில் கேட்டு மகிழுங்கள்.

நன்றி.

ஐயோ (இதை சொல்ல கூடாது என்று சிலர் சொல்வார்கள் ஏன் என்றால் எமன் பொண்டாட்டியாம் )

மிக மிக மிக மிக மிக க...................நீள ள ள ள ள ள நன்றி

'கேட்டது கிடைத்தது கோடி கணக்கில் போட்டது முளைத்தது கொத்து கொத்தாய் பூத்தது நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜ தான் '

2 தினங்களுக்கு முன் 'நிலவை நேற்று பார்த்தது ' அருமையான பாடலை தேடி கொண்டு வந்தீர்கள் .இன்று வாணியின் இந்த பாடல்

மீண்டும் ஒரு முறை நன்றி

உங்கள் முகம் என்னவாக இருக்கும் .

ravi200101
9th August 2014, 02:19 PM
ஒன்றல்ல.. ஆயிரக் கணக்கான பாடல்கள். Randomஆக எதைவேண்டுமானாலும் நீங்கள் கேட்டு லயிக்கலாம், இவங்க நிழலை ..இல்லை இல்லை.. இவங்களோட எல்லைக் கோட்டில் நிற்க / எட்டிப்பார்க்கக் கூட யாருக்கும் தகுதியில்லை என முடிவெடுக்கத் தூண்டும் பலப் பலப் பாடல்கள். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று.. அதுவும் இப்போதைய காலக் கட்டத்தில் நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் ஒரு பாடல் என்பதால் சட்டென ஞாபகத்திற்கு வருகிறது. எஜமான் படத்தில் வரும் "உரக்கக் கத்துது கோழி!". இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களை ஒப்பிடுகையில் இதன் வீச்சு குறைவுதான். ஆனால் பொக்கிஷம் என்றே நான் கருதுகிறேன். சரணத்தின் ஒவ்வொரு அடியிலும் எப்பேர்பட்ட ஏற்ற இறக்கங்கள்.. அந்த மேடு பள்ளங்களை எப்படி ஜானகி தான் உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும் உணர்ச்சியை (காமம்) பொதித்து இயல்பாக கடக்கிறார்! எப்பேர்பட்ட இசையுருவாக்கம் ராஜாவிடமிருந்து! எப்பேர்பட்ட உள்வாங்கல் ஜான்கியிடமிருந்து! Truly genius stuff!

https://www.youtube.com/watch?v=JTgeTgs6sxk

பின்குறிப்பு! யூடியுப் காணொளி! But ஒலியில் மட்டுமே கவனத்தை செலுத்தவும்.

ஒலி மட்டும் இங்கே!

http://www.raaga.com/player5/?id=40003&mode=100&rand=0.7685091313917625

Tamil cinema was undergoing a big change in the late seventies with the college going youth beginning to be leading audiences as the older generation slowly reducing their going to the movies with the advent of television. These youths preferred romantic songs and dance oriented songs . SJ's voice suited these type of songs more than PS's. In fact their were little situational or emotional songs since the middle of 70's.

gkrishna
9th August 2014, 02:29 PM
thanks esvee sir for loading கண்ணு பட போகுதடி கட்டிகடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுகடி ரவிக்கையை என் கண்ணு என் செல்லம் என் தங்கம்
ஒரு இழுப்பு இழுப்பான்களே சார் (நான் பாட்டில் சுசீலா ஈஸ்வரியை சொன்னேன் )

gkrishna
9th August 2014, 02:52 PM
இந்த பேட்டியில் உள்ள பல கருத்துகள் எல்லோருக்கும் ஏற்புடையது அல்ல . இருந்தாலும் ஒரு நல்ல துணை மற்றும் நாடக நடிகரின் அனுவபம் பற்றியது என்பதால் பகிர்ந்து கொள்கிறேன்

http://antrukandamugam.files.wordpress.com/2013/09/kambar-jayaraman.jpg?w=593

”கம்பர்” ஜெயராமன் – தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர, வில்லன் பாத்திரங்களில் பிரபலமானவர். பல திரைப்படங்களுக்குக் கதைகளும் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார். நீதிபதி, திலகம், தசாவதாரம், கைதி கண்ணாயிரம், பொண்ணு மாப்பிள்ளை, சோப்பு சீப்பு கண்ணாடி, குறத்தி மகன், காவல் தெய்வம், உயர்ந்த மனிதன் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.

தமிழ் மேடை நாடகம் மற்றும் திரைப்படம் இரண்டிலும் வெற்றிகரமாக இருந்த பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் கம்பர் ஜெயராமன். இதுவரைக்குமான தன் வாழ்நாளில் அறுபத்தாறு வருடங்களை அவர் இத்துறைகளில் செலவழித்திருக்கிறார். ஆனால், அவரது இருப்பு பிற நடிகர்களைப் போல உரத்து தக்கவைத்துக்கொண்டது அல்ல. அதன் காரணமாகவே அவரது நட்சத்திர பிம்பம் சற்று மங்கியதாகவே இருந்து வந்திருக்கிறது. கம்பர் ஜெயராமனின் சற்று அடக்கி வாசிக்கப்பட்ட நடிப்பாற்றல் மற்ற நடிகர்களிடமிருந்து அவரை முற்றிலுமாக வேறுபடுத்திக் காட்டுவது, அவரது இருப்பின் மீதான குறைவான வெளிச்சத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். அறுபதுகளில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில், முன்னாள் மெட்ராஸ் போலிஸ் கமிஷ் னர் பார்த்தசாரதி அய்யங்கார், முன்னாள் முதல்வர் பக்தசவச்சலம் ஆகியோர் உத்தரவில் இந்தி திணிப்புக்கு ஆதரவாக அரசு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் கம்பர் ஜெயராமன் அசந்தர்ப்பமாக நுழைக்கப்பட்டு கடுமையான வன்முறைக்கு உள்ளானார். அந்த அளவில் இந்த நேர்காணல் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றும்கூட.

உங்களது பூர்விகம் பற்றியும், நடிப்புக்கு வந்தபிறகான உங்கள் ஆரம்பகால அனுபவங்கள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லுங்கள்.

தஞ்சாவூர் ஜில்லாவில், திருவாரூரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அம்மையப்பன் நான் பிறந்த ஊர். அது கிராமம் கிடையாது. ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் எல்லாம் இருந்த பெரிய ஊர். என் பெற்றோருக்கு நான் நாலாவது பிள்ளை. எனக்கு சிறு வயதிலேயே சங்கீதத்தில் ஈடுபாடு இருந்தது. டி.ஆர். மகாலிங்கத்தின் பாடல்களை அப்போது நான் சர்வ சாதாரணமாகப் பாடுவேன். நான் பாடுவதைப் பள்ளிக்கூடத்தில் எல்லோரும் ‘ஆ…’ என்று வாயைப் பிளந்து கேட்டது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. கச்சேரியில்கூட பாடியிருக்கிறேன். சி.எஸ். ஜெயராமன் என் குரலைக் கேட்டு பாராட்டியிருக்கிறார். உடனே எங்கப்பா என்னை அழைத்துக்கொண்டு போய் நாதஸ்வர வித்துவானிடம் சங்கீதம் படிக்க சேர்த்துவிட்டார். அஞ்சுவர்ணம் கற்றுக்கொண்டேன். அதற்குள் என்னை நாடக கம்பெனியில் சேர்த்து விட்டுவிட்டார்கள். நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில்தான் முதலில் எங்க அண்ணன் அப்ளிகேஷன் போட்டார். ஆனால், அங்கு எனக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்து, சிவப்பிரகாசம் என்ற எங்க குடும்பம் நண்பர் ஒருவர் தேவி நாடக சபாவில் என்னை சேர்த்துவிட்டார். அது 1946. அப்போது எனக்கு பத்து வயது.

தேவி நாடக சபாவில் கிட்டத்தட்ட முந்நூறு பேர் இருந்தார்கள். அந்த கம்பெனியில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சீன் செட்டுகளை தூக்குவது, கவுண்டரில் டிக்கட் கொடுப் பது, விளம்பரம் செய்வது… இப்படி எல்லாவற்றுக்கும் ஆட்கள் இருந்தார்கள். பயணம் செய்யும்போது, ஒரு முழு ரயிலில் எங்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கும்.

நான் நாடகத்தில் அதன் இறுதிக்காலம் வரை இருந்தேன். சினிமா காரணமாக நாடகத்தில் இருந்து ஒவ்வொருவராக விலகிக்கொண்டே இருந்தார்கள். ஒருகட்டத்தில் நாடகத்துக்கு ஆள் இல்லை என்னும் அளவுக்கு நிறைய பேர் சென்றுவிட்டார்கள். இதனால், எனக்கு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் எல்லோரும் எல்லா கதாபாத்திரத்தையும் பாடம் செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி நான் எல்லா பாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால், இன்று நான் முக்கியமாக நினைப்பது ஸ்தீரி பார்ட் (கதாநாயகி வேடம்) பாத்திரங்களில் நடித்ததைத்தான். ஏ. வீராச்சாமி ‘மெயின் ஸ்த்ரிபார்ட்’ (தண்ணீர் தண்ணீர், முதல் மரியாதை). அவரைப் போல் ஸ்திரிபார்ட் பிரமாதமாக நடித்த இன்னொரு நடிகரை நான் பார்த்ததில்லை. அவ்வளவு அருமையாக நடிப்பார். அவருடைய பாத்திரங்கள் அனைத்தையும்கூட நான் நடித்திருக்கிறேன். அதன்பிறகு, அக்ரிமெண்ட் போடும்போதே, நான் ஸ்த்ரிபார்ட்டில் நடிப்பதை உறுதி செய்துகொள்வேன். ஒரு கட்டத்தில் மொட்டை அடித்துக்கொண்டு ஸ்த்ரிபார்ட் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தேன். ஆனால், அந்த வைராக்கியத்தை தொடர முடியவில்லை.

‘கே.எஸ். கோபாலகிருஷ்ணனோட தம்பி’ என்று ஒரு நாடகம். இதில் நான் ஸ்த்ரி பார்ட் செய்தேன். இந்நாடகத்தில் எனக்கு தங்கையாக ராஜாத்தி அம்மாள் நடித்திருந்தாங்க. காரணம், அந்த அளவுக்கு எனது ஸ்த்ரிபார்ட் வேடம் புகழ்பெற்று இருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களும் ஸ்திரீபார்ட்டாக நடித்தவர்கள்தான். சினிமா இயக்குநர் ஏ.பி. நாகராஜனும், ‘பாலமுருகன் பாய்ஸ்’ கம்பெனியில் இருந்தபோது பெரிய ஸ்திரீ பார்ட்டாக இருந்தவர். ஸ்த்ரீ பார்ட்டாக நடிப்பவர்களுக்கு எல்லா வேடங்களிலும் நடிக்கத் தெரிந்திருக்கும்.

அப்பொழுது நாடகத்தில் இருந்து கிடைத்த வருமானம் உங்களுக்குப் போதுமானதாக இருந்ததா?

மாதம் ஐந்து ரூபாய் கொடுப்பார்கள். அப்பொழுது அதை வருமானம் என்று பெரிதாகச் சொல்லமுடியாது. மாதச் செலவுக்குப் போதாது. எனவே, ஊரில் இருந்து யாராவது வரும்பொழுது நூற்றைம்பது ரூபாய் பணம் கொடுத்து அனுப்புவார்கள். அப்பாவும் அண்ணனும்தான் என்னைப் பார்க்க வருவார்கள். நாடக சபாவிலும் என்னைக் குழந்தையைப் பார்த்துக்கொள்வது மாதிரி பார்த்துக்கொள்வார்கள். ஆனால், ஊருக்குப் போகமுடியாது. நான் ஊரிலிருந்து புறப்பட்டு சில வருடங்களிலே எங்கப்பா இறந்துவிட்டார். பிறகு, அம்மாவும் இறந்துவிட்டார்கள். அதன்பிறகு, என்னுடைய அண்ணன்களோ என்னைத் தேடவில்லை. எங்க பெரியப்பா இறந்ததுக்குக்கூட நான் ஊருக்குச் செல்லவில்லை. என்னை அனுப்பமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது எனக்கு இருபத்தைந்து வயசு. நான் 19 வருஷம் கழித்துதான் மீண்டும் ஊருக்குச் சென்றேன்.

நீங்கள் அதிகமாக நடித்தது புராண நாடகங்களா அல்லது சமூக நாடகங்களா?

இரண்டுமே நடித்திருக்கிறேன். அக்காலத்தில் சக்தி நாடக சபாக்காரர்கள் புராண நாடகங்களைப் போடுவார்கள்; டி.கே.எஸ். பெரும்பாலும் சமூக நாடகங்களை அரங்கேற்றுவார்.

நான் வேலை பார்த்த தேவி நாடக சபாவின் முதலாளி கே.என். ரத்தினம். இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடன் வைத்தியநாதன், சுந்தரம், கே.என். காளை, சேட்டு ஒருவர் ஆகியோர் சேர்ந்து தேவி நாடக சபாவை நடத்தினார்கள். சுந்தரமும் காளையும் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் சகோதரர்கள்; சேட்டு, மிலிட்டரியில் இருந்தவர். கே.என். ரத்தினம், பாய்ஸ் கம்பெனியில் உடையலங்காரம் செய்தவர்.

தேவி நாடக சபாவில் நான் கதாநாயகன் தவிர எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்தேன். முக்கியமாக, ஏற்கெனவே சொன்னதுபோல் ஸ்த்ரீ பார்ட் அதிகம் செய்தேன். சண்முக சுந்தரியும் ராஜமணியும் என்னுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ராஜமணி, சிறு வயதிலிருந்தே தேவி நாடக சபாவில் இருந்தார்கள். அவர்கள் குமாரி ஆனது நாடக கம்பெனியில்தான்.

பதினைந்து வருடங்கள் தேவி நாடக சபாவில் இருந்தேன். அதன்பிறகு, மனோகர் பார்ட்டிக்கு வந்துவிட்டேன். அங்கே ஆறு வருடங்கள் இருந்தேன். மனோகருடன் ‘இலங்கேஸ்வரன்’ நாடகத்தின் நான் லட்சுமணனாக நடித்தேல். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன் காரணமாக மனோகரன், என்னைத் தம்பி தம்பி என்றுதான் கூப்பிடுவார். அவர் வீட்டிலும் எனக்கு அதிகப்படியான சுதந்திரம் கொடுத்திருந்தார். மனோகர் நாடகக் குழுவில் கட்டுப்பாடுகள் அதிகம். அவர் யாரையும் சுலபத்தில் வீட்டுக்குள் அழைக்கமாட்டார். ஆனால், என்னை மட்டும் கடைசிவரை வீட்டுக்குள் நுழைய அனுமதித்தார். அவருக்கு என்மேல் அவ்வளவு நம்பிக்கை.

உங்களுக்கு கம்பர் ஜெயராமன் என்ற பெயர் எப்படி வந்தது?

எஸ்.வி. சகரஸ்நாமம் ‘சேவா ஸ்டேஜ்’ என்று ஒரு நாடகக் குழு வைத்திருந்தார். அக்காலத்தில் சேவா ஸ்டேஜ் ஒரு முக்கியமான நாடகக்குழு. அதில் நான் ரொம்ப காலம் வேலை செய்தேன். இந்த சேவா ஸ்டேஜில் இருந்துதான் பண்டரிபாய், மைனாவதி, எம்.என். ராஜம், தேவிகா, முத்துராமன் போன்றவர்கள் எல்லாம் வந்தார்கள். இன்னும் பல நடிகர்கள் இருந்தார்கள். சேவா ஸ்டேஜ், சென்னை ராயப்பேட்டையில் எஸ்.வி. சகரஸ்நாமம் வீட்டிலேயே இருந்தது.

எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் ‘கவிச்சக்கரவர்த்தி’ என்னும் நாடகத்தை சேவா ஸ்டேஜ் போட முடிவு செய்தது. கு. அழகிரிசாமி, அந்நாடகத்தில் கம்பர் பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்திருப்பார். அதில் யார் கம்பராக நடிப்பது என்ற பேச்சு வந்தபொழுது, முதலில் எஸ்.வி. சகரஸ்நாமம், ‘நான் நடிக்கலை’ என்று ஒதுங்கிக்கொண்டார். நடிகர் கோபாலகிருஷ்ணன், தான்தான் நடிப்பேன் என்றார். வேறு சிலரும் நடிக்க முன்வந்தார்கள். சரி பிரச்சினை வேண்டாம் என்று எல்லோரும் சேர்ந்து ஒரு ஒட்டெடுப்பு நடத்தினார்கள். அந்த ஒட்டெடுப்பில் நான் வெற்றிபெற்றேன். அப்போது நான், ஆர்.ஆர். நாடக சபாவில் இருக்கிறேன். ஓட்டெடுப்பில் நான் வெற்றிபெற்ற தகவலை என்னிடம் வந்து சொன்னவர்கள் கே. வீரப்பனும் கே. விஜயனும். கே. விஜயன், பின்னாடி சினிமாவில் இயக்குநராக ஆனார்.

டி.கே.எஸ். எல்லாவற்றையும் விளக்குவதுடன் நடித்தும் காண்பிப்பார். எப்படி உட்கார வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையும் துல்லியமாக நடித்துக் காண்பிப்பார். இப்படி சொல்லிக்கொடுப்பதில் என்ன நிகழ்ந்தது என்றால், வெவ்வேறு நடிகர்கள் என்றாலும் எல்லாருமே டி.கே.எஸ். மாதிரியே இருப்பார்கள். சகஸ்ரநாமம் அப்படியல்ல. நடிப்பு சொல்லிக்கொடுக்க மாட்டார். அவர்தான் டைரக்டர் என்றாலும், இப்படி வேண்டும் அப்படி வேண்டும் என்றும் கேட்கமாட்டர். ஆனால், கதாபாத்திரத்தை நன்றாக விளக்குவார். அதனைச் சரியாகப் புரிந்துகொண்டால், நடிகர்கள் திறமையில் அப்பாத்திரத்தை சிறப்பாக நடிப்பார்கள் என்று கருதுவார். ‘இது சார்ந்து உனது சொந்த அனுபவங்கள் என்னன்ன வைத்திருக்கிறாயோ அதை நடிப்பில் போடு’ என்பார். நடிகர்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்தார். இதனால், நடிகர்களின் தனித்துவத்தைக் காண் பிக்க வாய்ப்பு கிடைக்கும். ஒட்டுமொத்த நாடகத்திலும் நடிப்பில் ‘வெரைட்டி’ இருக்கும். இதனால், வெவ்வெறு விதமான திறமைகளை வெளிக்கொணர்ந்தார் எஸ்.வி. சகரஸ்நாமம். அவர் பெரிய கலைஞன். அவரைப் பற்றி மட்டும் ஒரு நாள் முழுக்க பேசிக்கொண்டிருக் கலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.

சேவா ஸ்டேஜ், சென்னை ராயப்பேட்டையில் எஸ்.வி. சகரஸ்நாமம் வீட்டிலேயே இருந்தது என்று சொன்னேன். நாடகக்காரர்கள் எப்பொழுதும் உள்ளே போகலாம். அவர் வீட்டில் எந்நேரமும் கேரம் போர்டு ஆடிக்கொண்டு இருப்பார்கள். அவரும் விளையாடுவார். நாம் அதில் கலந்துகொள்ளலாம். இதனால், நடிகர்களுக்குள் நல்ல நட்பும் புரிதலும் இருந்தது.

சேவா ஸ்டேஜ் மட்டுமில்லாமல் நாடகக் கழகம், நாடகப்பள்ளி என்று இரண்டு அமைப்புகளையும் சகஸ்ரநாமம் வைத்திருந்தார். ஆனால், போதிய பொருளாதார வசதி இல்லை. எனவே கடுமையாக நஷ்டப்பட்டார். அரசாங்கத்தின் உதவியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நிறைய முயற்சிகள் செய்தார். நாடக உலகத்துக்கு அரசு என்னென்ன திட்டங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கையாக ஒரு கோப்பு தயார் செய்தார். அது காமராஜரிடம் இருந்தது; அதன்பிறகு கலைஞரிடம், அதற்கப்புறம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. அவர் மிகவும் விரும்பியது முழுக்க முழுக்க நாடகத்துக்காக மட்டும் ஒரு பெரிய நாடக அரங்கம். அக்கனவு கடைசிவரை நிகழவேயில்லை.

நான் உங்கள் கேள்வியில் இருந்து ரொம்ப தூரம் சென்றுவிட்டேன் என நினைக்கிறேன். இப்படி சகஸ்ரநாமம் இயக்கத்தில் ‘கவிச்சக்கரவர்த்தி’ நாடகத்தில் கம்பராக நான் நடித்தேன். அதற்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. தமிழ்நாட்டுக்கு வெளியேயும் பத்திரிகைகள் பாராட்டி விமரிசனம் எழுதினார்கள். அதன் விளைவு, பம்பாயில் தமிழ்ச்சங்கம் ‘கவிச்சக்கரவர்த்தி’ நாடகம் நடத்தினபோது, அதற்குத் தலைமை தாங்கின இராணுவ மந்திரி கே.கே. மேனன், தன் தலைமையுரையில், “இவர் வெறும் ஜெயராமன் இல்லை, கம்பர் ஜெயராமன்’ என்று புகழ்ந்து சொன்னார். அதிலிருந்து என்னை கம்பர் ஜெயராமன் என அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சேவா ஸ்டேஜில் யார் கதை வசனம் எழுதினார்கள்?

எழுத்தாளர்கள் பி.எஸ். ராமையா, கோமல் சுவாமிநாதன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி போன்ற பெரிய எழுத்தாளர்கள் எல்லோரும் எழுதியிருக்கிறார்கள். தி. ஜானகிராமனை சேவா ஸ்டேஜின் ஒரு முக்கிய அங்கம் என்றுகூட சொல்லலாம். எங்கள் கூடவே இருப் பார்; நாடகக் குழுக்கள் வெளியூர் போகும்போது அவரும் வருவார். பம்பாய், கல்கத்தா போன்ற பிற மாநிலங்களுக்கு போனாலும் கூடவே வருவார். இதனால், சேவா ஸ்டேஜில் எங்கள் எல்லோருக்கும் இலக்கிய பரிச்சயமும் இருந்தது. இந்த இலக்கியப் பரிச்சயத்தினால் நான் நிறைய நன்மைகள் அடைந்திருக்கிறேன். சகஸ்ரநாமம் வீட்டிலேயே ஒரு பெரிய லைப்ரரி வைத்திருந்தார். யார் வேண்டுமானாலும் புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம். எல்லோரும் அங்கே படித்துக்கொண்டு இருப்பார்கள். நடிகர்களுக்கு அடிப்படை இலக்கிய அறிவு வேண்டும் என்று அவர் நம்பினார்.

கு. அழகிரிசாமி எங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொடுத்துக்கொண்டு இருந்த காலம் அது. அந்த சமயத்தில், சிவாஜி, தன் நாடகங்களில் வரலாற்று நாடகங்களுக்கு என்று தனியாக ஒரு வசன உச்சரிப்பு பாணியை வைத்திருந்தார். ‘களம் கண்ட கவிஞன்’ என்கிற நாடகத்தில் சிவாஜி பேசின ‘ஹிஸ்டரி பாணி’ ரொம்ப புகழ்பெற்றது. நடிப்பிலும் பேச்சிலும் நான் அதிலிருந்து வேறுபட்டு ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்கு கு. அழகிரிசாமியின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தினேன். அவர் தூத்துக்குடி, நெல்லை வழக்கில் பேசுவார். கொஞ்சம் கொஞ்சு கிற தன்மையில இருக்கும் அவர் பேசுவது. “என்ன சொல்லுதிய… என்ன பண்ணுவிய…’’ என்பதுபோல். சத்தமும் வேறு மாதிரி இருக்கும். அதை நான் மாற்றிப் பேச முயற்சி செய்தேன். “அசோகவனத்தில்… அனுமன்…. சிதாபிராட்டியை… தேடிக்கொண்டிருந்த காலத்தில்…’’ என்று கொஞ்சம் இழுத்து, ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் ரசிகர்களுக்கு கொஞ்சம் கற்பனை செய்ய நேரம் கொடுத்தேன். அதனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் ராகம் போட்டு இழுத்து சொன்னேன். அதில் சங்கீதமும் சுதியும் சேர்ந்திருக்கும். தம்பூரா சுதி மாதிரியே இருக்கும். அதிலேயே பாட்டுப் பாடிடுவேன். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.

தேவி நாடகக் குழு, சேவா ஸ்டேஜ் தவிர

வேறு எந்தெந்த நாடகக் குழுக் களில் இருந்திருக்கிறீர்கள்?

ஒரு காலகட்டத்தில் நாடகங்களுக்கு வரவேற்பு குறைய ஆரம்பித்தது. அப்போது சகஸ்ரநாமத்தால் எங்கு சென்றும் நாடகம் போடமுடியவில்லை. அதனால், சகஸ்ர நாமம் தம்முடைய நாடகக் கம்பெனியை கோமல் சுவாமிநாதனிடம் ஒப்படைத்தார். அதற்குப் பிறகு ‘நவாப் நாற்காலி’, ‘ஜீஸஸ் வருவார்’ போன்ற நாடகங்களில் அவரும் நடித்தார். அதே காலகட்டத்திலே மனோகரின் நாடகத்திற்கு நல்ல வசூல் இருந்தது. எனவே, மனோகர் நாடகங்களில் நடித்தேன்.

எம்.ஆர். ராதா. நடத்திய ‘ஒத்தைவாடை தியேட்டர்’ பங்கெடுத்திருக்கிறேன். அவரின் ‘ராமாயணம்’, ‘ரத்தக் கண்ணீர்’ நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். தேவி நாடக சபாவிலிருந்த போது ஒரு நாள் நாங்கள் எல்லோரும் இரவோடு இரவாக புறப்பட்டு விழுப்புரம் வந்தோம். அங்கே எஸ்.வி. சுப்பையா அண்ணன் தலைமையில் ஒரு நாடகக்குழு இயங்கிக் கொண்டிருந்தது. அந்த நாடகக் குழுவிற்கு முதலாளி கிடையாது. அது முழுக்க முழுக்க நாடகத்தில் நடித்த தொழிலாளர்களால் நடத்தப்பட்டது. அந்தக் குழுவில் நாங்கள் இணைந்துகொண்டோம். அந்தக் குழு ஒரு நாடகம் போட்டபோது எம்.ஆர். ராதா தலைமை தாங்கினார். அப்போது அவர், “நீங்கள் இங்கே இருந்து கஷ்டப்பட வேண்டாம். நான் ‘ராமாயணம்’ நாடகம் போடப் போகிறேன். ஆகவே, நீங்கள் அந்த நாடகத்திற்காக வந்துவிடுங்கள்’’ என்றார். நாங்களும் சென்றோம். ‘ராமாயணம்’ நாடகத்தில் நான் விபூஷ்ணனாக நடித்தேன். இந்திரஜித்தாக குமரப்பா என்று ஒருவர் நடித்தார்.

கோலார் தங்கவயலில் ‘ரத்தக் கண்ணீர்’ நாடகம் போட்டுவிட்டு திரும்பிய நிலையில், திடீரென்று ஒருநாள் குமரப்பாவுக்கு பி.பி. அதிகமாகிவிட்டது. பக்கம் பக்கமாய் வசனம் பேசிய அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனவே. அதற்குப் பின்னால் அந்த வேடத்தில் நான் நடித்தேன். அவர் வைரம் செட்டியார் கம்பெனியின் வசனங்களையும் சேர்த்துப் பேசுவார். அதே போலவே நானும் பேசினேன்.

இப்படி நான் எல்லாப் பார்ட்டியிலேயும் இருந்திருக்கிறேன். யாரோடும் முரண்பட்டுக்கொள்ள மாட்டேன். அதுபோல் எல்லோரும் என்னை மரியாதையாகவும் நடத்தினார்கள்.

எம்.ஆர். ராதாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் எப்படியிருந்தது?

எம்.ஆர். ராதா, இந்த சமூகத்தை அரசை எதிர்த்தால் நாடகம் பார்க்க மக்கள் அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்த்தார். அது நடந்தது. நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது கற்களை தூக்கி எறிவார்கள். அசரமாட்டார். ஜனங்கள் எழுந்திருக்கும்போது, “உட்காருங்கள், பொம்பளைங்களே உட்கார்ந்து பார்க்கிறாங்க. நீங்க ஏன் எழுந்து போறீங்க’’என்று மக்களை வைத்து மக்களையே மடக்குவார். பெரிய வக்கீல்களுக்குத் தெரியாத சட்ட நுணுக்கங்கள் எல்லாம்கூட அவருக்குத் தெரியும்.

உதாரணத்திற்கு, ‘ராமாயணம்’நடத்துறோம். ‘ராமாயணம்’நாடகத்தில் முதல் காட்சியில் ராமர், சீதை, ரிஷிகள் இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் சோமபாணம் அருந்திக்கொண்டே, குதிரையின் காலை நெருப்பில் வாட்டி சாப்பிடுவார்கள். இது ராஜாஜி எழுதிய ராமாயணத்திலேயே இருக்கிறது. அந்த காலத்தில் பிராமணர்கள் அசைவம் சாப்பிட்டிருக்கிறார்கள். அப்போது தமிழர்கள், அதாவது திராவிடர்கள் சாப்பிட மாட்டார்கள். இதனால் அந்த நாடகத்தை தடை செய்துவிட்டார்கள்.

பிறகு, ‘ரத்தக் கண்ணீர்’ நாடகம் இன்று புதுமையான காட்சிகளோடு நடைபெறும் என்று அறிவிப்பு செய்தார். அப்போது எங்கு பார்த்தாலும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ராதா, “போலீஸ் என்பது நமது பாதுகாப்புக்காக வந்திருக்கிறது. ஆகவே, தமிழர்களே நாடகத்திற்கு வாருங்கள்’’என்றார். ‘ரத்தக் கண்ணீர்’நாடகத்தில் ராமாயணத்தின் காட்சிகளை இணைத்துவிட்டார். நான் அந்த நாடகத்தில் வால்மீகியாக நடித்தேன். ‘ஒற்றை வாடை’தியேட்டரில் நடந்தது. ஜனங்கள் மிக அதிகமாக இருந்தார்கள். கலாட்டா வந்துவிடும் போல் தெரிந்ததால் உடனே ‘ரத்தக் கண்ணீர்’நாடகத்தை நடத்திவிட்டார். ஐ.ஜி. பார்த்தசாரதி ஐயங்கார், நாடகம் முடிந்தவுடன் பெரிய போலீஸ் பட்டாளத்தோடு உள்ளே வந்து ராதாவிடம், “உங்களை கைது செய்கிறோம்’’என்றார். அதற்கு ராதா, “நான் ராமாயணம் நடத்தவில்லை’’என்றார். மேலும், “நீங்க என்னை கைது செய்யுங்க. ஆனால், நல்லா யோசனை பண்ணி செய்யுங்க. ஏனெனில், ராமாயணத்தில் 18 வகையான ராமாயணம் இருக்கிறது. எந்த ராமாயணத்திற்காக கைது செய்றீங்கன்னு சொல்லிவிட்டு செய்யுங்க’’என்றார். போலீஸ்காரர்கள் குழம்பிவிட்டார்கள். திரும்பிப் போனார்கள். இதே வாதத்தை கோர்ட்டிலும் வாதாடி வழக்கை உடைத்து திரும்பவும் ‘ராமாயணம்’நாடகம் நடத்தினார்.

உள்ளே இவ்வளவும் நடந்துகொண்டு இருந்தபோது, வெளியே ஜனங்கள் கலைந்துபோகாமல் அப்படியே இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட ராதா உடனே மேடைக்கு வந்து, “அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை; அதனால் கலைந்து செல்லுங்கள்’’என்றார். ஆனால், அதை போலீஸ்காரர்கள் சொல்கிற வரையில் ஜனங்கள் கலைந்து செல்லவில்லை.

அக்காலம் திராவிட அரசியல் இயக்கப் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த காலம். நீங்கள் அரசியல் போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறீர்களா?

இல்லை. ஆனால், இந்தித் திணிப்பின்போது, வலுக்கட்டாயமாக நான் ஒரு அரசியல் கைதியாக சித்தரிக் கப்பட்டு துன்பப்படுத்தப்பட்டேன். அதனை இங்கே சொல்லியாக வேண்டும். 1962ஆம் வருடம் என்று நினைக்கிறேன். ஏ. வீரப்பன், நான் உட்பட மொத்தம் இருபத்தேழு பேர் ராயப்பேட்டை ஜம்மி பில்டிங்கில் குடியிருந்தோம். அதற்கு எதிர்த்தார்போல் தபால் அலுவலகம். அங்கே ஒரு நாள் ஐந்தாறு சின்னப் பசங்க வந்தார்கள். அவர்கள் கையில் ஒரு தார் டப்பா இருந்தது. அதை வைத்து இந்தியில் இருந்த எழுத்துக்களை அழித்தார்கள். அதன்பிறகு, அங்கு தரையில் இருந்த எல்லாப் பொருள்களையும் காலால் நெம்பித் தள்ளி உடைத்தார்கள். சில பொருட்களை வெளியே கொண்டுவந்து போட்டு எரித்தார்கள். அதன்பிறகு சென்றுவிட்டார்கள். அவர்கள் சென்றபிறகு எங்கள் பில்டிங்கில் இருந்த யாரோ போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்திருக்கிறார்கள்; வாணி ஆர்ட்ஸில் இருந்தவர்களாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

போராட்டக்காரர்கள் சாமான் களை உடைத்துவிட்டு செல்லும்போது, நாங்கள் மாடியில் உட்கார்ந்திருந்தோம். சாப்பாட்டுக் கடை ஒன்றுகூட இல்லை. எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மெடிக்கல் எக்யுப்மெண்ட் எல்லாம் வைத்துக்கொண்டு சாலையில் நின்றுகொண்டு இருந்தார். கலவரமாக இருந்ததால், அவர், நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்திற்கு வந்துகொண்டிருந்தார். போராட்டக்காரர்கள் பக்கமிருந்து அவர் வருவதை அஜந்தா ஹோட்டல் பக்கமிருந்து வந்த போலீஸ் பார்த்திருக்கிறது. இதனை வைத்து எங்கள் பில்டிங்கில் தங்கியிருந்தவர்கள்தான் செய்திருப்பார்கள் என்று முடிவுசெய்து, மூன்று மாடியிலும் இருந்தவர்களை அடித்து துவசம் செய்தனர். நான் அந்தக் கூட்டத்திலிருந்து தப்பி போலீஸ் வேனுக்குள் உட்கார்ந்துகொண்டேன். அதன்பிறகு பார்த்தால் மற்ற எல்லோரையும் கூட அடித்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். எங்களைக் கொண்டு போய் இரவு 12 மணிக்குதான் சிறை யில் அடைத்தார்கள். அங்கு ஏற் கெனவே 6000 பேர் இரத்தக் காயத்துடன் இருந்தார்கள்.

அப்போது ஜெயில் சுப்பிரண்டண்ட் வந்து, “எஸ்.எஸ்.எல்.சி. படிச்சவங்க எல்லாம் வரிசையாக வாங்க’’என்றார். அப்படியானால், படிக்காதவங்களை வரிசையில் நிறுத்தி அடிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அந்த சமயத்தில் என் ‘பர்சில்’ ஒரு நோட்டீஸ் இருந்த ஞாபகம் வந்தது. அந்த நோட்டீஸில் நானும் சகஸ்ரநாமமும் ஒரு நாடகத்தில் நடிப்பதாக அச்சிடப்பட்டிருந்தது. அந்த நோட்டிஸை சுப்பிரண்டண்டிடம் காண்பித்து, “நாங்க வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். எங்களையும் பிடித்துக் கொண்டுவந்து விட்டார்கள்’’என்று சொன்னேன். உடனே அவர், “இவுங்களை இனிமேல் அடிக்காதீங்க’’ என்று சொல்லிவிட்டு எங்களை தனியே உட்கார வைத்தார். அதற்குப் பிறகு அங்கிருந்த 6000 பேரையும் அடி அடியென்று அடித்தார்கள். மிகக் கொடுமையான காட்சி அது. ஜெயில் சுப்பிரெண்ட் எங்களிடம், “உங்களுக்கு என்ன வசதி வேண்டுமோ சொல்லுங்கள், செய்து தருவார்கள்’’என்றார். அதே மாதிரி செய்தும் தந்தார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு எங்களை மட்டும் வெளியேவிட்டார்கள். ‘என்ன எங்களை மட்டும் வெளியே விட்டுவிட்டார்கள்’ என்ற ஆச்சரியத்துடன் வெளியே வந்து பார்த்தால், அங்கு மரத்தடியில் சகஸ்ரநாமமும் நடிகர் முத்துராமனும் எஸ்.ஆர். கோபாலும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் தான் எங்களை வெளியில் கொண்டு வந்தார்கள் என்று தெரிந்துகொண் டோம்.

அப்போது பக்தவத்சலம் முதலமைச்சராகவும் சிங்காரவேலு போலிஸ் கமிஷனராகவும் இருந்தனர். இந்த இரண்டு பேரின் தலையைக் கொண்டுவந்தால் 100 ரூபாய் பரிசு என்று மாணவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். அத னால் அவர்கள் இருவரும் தங்கியிருக்கும் இடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக் கெடுபிடிகளுக்கும் நடுவே அவர்களை எப்படியோ சந்தித்து, எங்களை வெளியே கொண்டு வருவதற்கு அனுமதி வாங்கியிருந்தார் சகஸ்ரநாமம். நாங்கள் ஜெயிலில் சரியாக சாப்பிட்டிருக்க மாட்டோம் என்று நினைத்து நிறைய பட்சணங்களையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். நடிகர்கள் மேல் அவருக்கு அப்படியொரு அன்பு. என்னுடைய வாழ்க்கை அடிச்சுவட்டில் அப்படியொரு மனிதரை நான் சந்தித்தது எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸைக் கண்டாலே எனக்கு நடுக்கம் வந்துவிடும். அதனால், சகஸ்ரநாமம் வீட்டின் மாடியிலேயே என்னைத் தங்கவைத்தார்.

சினிமாவுக்கு எப்போது வந்தீர்கள்?

இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், ஏ.வி.எம்.இன் ‘அன்னை’படத்தின் ஹரிநாத் என்ற கதாநாயக வேடத்திற்காக, என்னைக் கூட்டிச் சென்று செட்டியாரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது செட்டியார், “ஏதாவது நடிங்க’’ என்றார். அங்கேயே, கோபாலகிருஷ்ணன் பெண்ணாகவும் நான் ஆணாகவும் ஒரு காதல் காட்சியில் நடித்துக் காண்பித்தோம். உடனே செட்டியார், “நல்லா இருக்கு. கிருஷ்ணன் பஞ்சுவை காண்டக்ட் பண்ணுங்க’’என்றார். பிறகு, அவரைப் போய் பார்த்தோம். இரண்டு நாள் கழித்து எனக்கு உயரம் போதவில்லை என்று சொல்லிவிட்டார்கள். என்னுடைய முதல் கதாநாயக வாய்ப்பு இப்படி கைநழுவிப் போனது. அடுத்ததாக சீனிவாசன் என்ற டைரக்டரிடம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்னை கூட்டிக்கொண்டு போனார். அப்போது ராமநாதன் என்பவரை ஜூபிடர் பிக்சர்சில் புக் செய்திருந்தார்கள். அங்கே, சோலமலை என்பவர் கதாசிரியராக இருந்தார். அவர் மிகவும் வற்புறுத்தியதால் ராமநாதனை கதாநாயகனாக போட்டார்கள். இதனால், என்னுடைய இரண்டாவது கதாநாயகன் வாய்ப்பும் பறிபோய்விட்டது.

ஏ.எஸ்.ஏ. சாமி, என்மீது பிரியம் கொண்டவர். அவர் பிரசாத் என்பவரை பார்க்கச் சொன்னார். அவரைப் போய் பார்த்தேன். ‘தாயுள் ளம்’என்ற படம். என்னை உயரம் குறைவு என்று போகச்சொல்லிவிட்டார்கள். அந்தப் படத்தில் வளையாபதி நடித்தார். ஆனால், உண்மையிலேயே அவர் என்னைவிட உயரம் குறைவு. அதே நேரம் அவர் ஏற்கெனவே சினிமாவில் நடித்திருந்தார் என்பது அவரது கூடுதல் தகுதியாக இருந்தது.

அதன்பிறகு, ஏ.எஸ்.ஏ. சாமி அவரது டைரக்ஷனிலேயே உருவாகிய ‘கைதி கண்ணாயிரம்’படத்தில் ஒரு வேடம் தந்தார். அந்த வேடம் படத்தில் முக்கியமானதாக இருந்தது. அப்போது அதன் தயாரிப்பாளர் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்களுக்கும் ஏ.எஸ்.ஏ. சாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், ஏ.எஸ்.ஏ.சாமி விலகிவிட்டார். ‘கைதி கண்ணாயிரம்’படத்தை டி.ஆர். சுந்தரமே தொடர்ந்து டைரக்ட் செய்தார். என்னுடைய வேடம் மிகக் குறைவாகவும், தங்கவேலுவின் வேடம் மிக முக்கியமானதாகவும் மாற்றப்பட்டது. அது சின்ன வேடம் என்றாலும் முக்கியமான வேடம்; ‘கைதி கண்ணாயிரம்’தான் எனது முதல் படம்.

எனக்கு திருமணம் ஆகி முதல் குழந்தை பிறந்தது. நடிப்பினால் வரும் சம்பாத்தியத்தை வைத்து இனிமேல் குடும்பத்தை நடத்த முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, ‘உதவி இயக்குநராக ஆவது’என்று முடிவு செய்தேன். அதற்கான வாய்ப்பும் அப்போது இருந்தது. 1962ஆம் வருடம் ஏ.வி.எம்.இல் ‘உயர்ந்த மனிதன்’படம் எடுத்தார்கள். அப்போது ஏ.வி.எம்.இல் ஸ்டிரைக் வந்தது. ‘உயர்ந்த மனிதன்’அப்படியே நின்று போனது. பிறகு, இரண்டு வரும் கழித்து அதே படத்தை மீண்டும் எடுத்தார்கள். அதன் இயக்குனர்களில் ஒருவரான பஞ்சு, உதவி இயக்குனராக என்னை அழைத்தார். ஜாவர் சீதாராமன்தான் அந்தப் படத்திற்கு வசனம் எழுதி இருந்தார். உதவி இயக்குநர் வாய்ப்பு என்னைத் தேடி வந்ததற்கு அவரும் ஒரு காரணம். மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.

உதவி இயக்குநராக சேர்ந்த பிறகு நாடகத்திற்கெல்லாம் போகக்கூடாது என்று சொல்லிவிட்டனர். சகஸ்ரநாமத்திடம் நான் இந்த விஷயத்தை சொல்ல, அவர், “நீ வேலையெல்லாம் விடவேண்டாம். நாடகத்திற்கு மட்டும் போகிறேன் என்று நான் சொன்னதாக பஞ்சு சாரிடம் சொல்’’என்றார். நான் பஞ்சு சாரிடம் சொல்ல, அவரும் சரி என்றார்.

நான் காலை ஒன்பது மணிக்கே ஸ்டூடியோவிற்கு சென்றுவிடுவேன். அங்கே சிவக்குமார், வாணிஸ்ரீ, சோஜாரமணி, பாரதி ஆகியோர்களுக்கு வசனம், தமிழ் உச்சரிப்பு, நடிப்பு ஆகியவற்றை எல்லாம் சொல்லிக் கொடுப்பேன். கிருஷ்ணண் பஞ்சுவிடம் இருபது வருடங்கள் வேலை பார்த்தேன்.

உங்கள் அனுபவத்தில் நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

இரண்டும் வெவ்வேறு ஊடகங்கள். ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கேயுரிய பலங்களும் பலவீனங்களும் உள்ளன. சினிமாவில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாடகத்தில் அப்படி செய்ய முடியாது. கல்கத்தாவில் ‘சேது’ என்று ஒரு நாடகம். அந்தக் கதையில் மனைவிக்கு தான் மலடு என்று தெரிந்ததும் தற்கொலை செய்துகொள்வதற்காக அவள் ரயிலை நோக்கி ஓடுகிறாள். நாடகத்தில் இதைக் காண்பிக்க, முழுக்க முழுக்க லைட் எபெக்ட்ஸைப் பயன்படுத்தினார்கள். தவப்சென் என்ற டெக்னிஷியன்தான் செய்தார். மிகவும் சிரமப்பட்டு செய்தார். சினிமாவில் சுலபமாகச் செய்துவிடலாம்.

சினிமாவில் நடிப்பு மிகவும் எளிமையாகிவிட்டது. பேச்சு மட்டும் இருந்தால் இன்றைக்கு நடித்துவிடலாம். நாடகத்தில் அது முடியாது.

வீட்டில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பார்களோ அப்படித்தான் நாடக கம்பெனிகளில் எங்களைப் பாதுகாத்தார்கள் தீபாவளி, பொங்கலுக்கு துணி எடுத்து தையல்காரரை வரவழைத்து தைப்பார்கள். அதெல்லாம் அருமையான அனுபவங்கள். இந்த கவனிப்பு சினிமா வில் கிடையாது. ஆனால், சினிமா நடிகர் எல்லோரும் செழுமையுடன் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. சினிமாவில் எம்.ஜி.ஆர். நடிப்பதற்கு ஆறு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவார். ஆனால் 25,000 ரூபாய்க்குதான் கையெழுத்து போடுவார். அவருக்கு அடுத்ததாக இதே முறையை சிவாஜி பின்பற்றினார். அதன்பிறகு எல்லா நடிகர்களும் பின்பற்றினர். சினிமா விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என்று எல்லோருமே இதே நடைமுறையை பின்பற்றத் தொடங்கினர். இதனால்தான் கருப்பு பணம் சினிமாவில் புழங்கத் தொடங்கியது. இந்த கருப்பு பணத்தால் பெரிய நடிகர்கள் தவிர மற்ற நடிகர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டனர். எங்களைப் போன்ற நடிகர்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, லட்சம் ரூபாய்க்கு கையெழுத்து வாங்குவார்கள்.

இன்று நினைத்துப் பார்க்கும்போது நாடக அனுபவம்தான் பிரமாதமாகப் படுகிறது. நாடகத்தில் பாத்திரமாக நடிப்பவர்களை உண்மையான பாத்திரங்களாக மக்கள் நினைத்தனர்.

நாடகம், சினிமாவுக்குப் பிறகு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறீர்கள்?

சினிமாவால்தான் நாடக கம்பெனிகள் சீரழிந்து போயின. நாடக நடிகர்கள் சிரமப்பட்டார்கள். ஆனால், சினிமாவிற்குப் பிறகு வந்த சீரியல்கள் நாடக நடிகர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகளைத் தந்தன. பணமும் வசதியும் கிடைத்தது. ஆனால், இன்னொரு ஆபத்து நிகழ்ந்தது. சீரியல்களை மக்கள் நாடகமாக நினைத்துக்கொண்டார்கள். அது நாடகத்தை முழுமையாக சாகடித்தது. 180 நாடக சபாக்கள் இருந்த ஊரில் இன்று எல்லாமே காணமல் போய்விட்டன. இப்போது நாடகங்களுக்கு ஸ்பான்சர் வாங்கித்தான் நடத்துகிறார்கள். அப்போதும் எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் மாதிரி கூத்தடிக்கிற நாடகம்தான் இருக்கிறது.

நடிகர்களில் உங்களை அதிகம் பாதித்தவர் யார்?

இருவரைச் சொல்லவேண்டும். ஒருவர் எம்.கே. ராதா. அவர் கண்ணாலே நடிப்பார். என்னுடைய நடிப்புக்கு அவர்தான் ஆதர்சம். இன்னொருவர், என்னோடு நாடகக் கம்பெனியில் இருந்த செல்லப்பா என்பவர். அவர்தான் மந்திரிகுமாரியில் நடிப்பதாக இருந்தது. பின்னாளில் அவர் மறைக்கப்பட்டுவிட்டார். நடிப்பு என்பதை நான் இவரிடமும் கற்றுக்கொண்டேன்.

காற்றினிலே வரும் கீதம் படத்தில் இளையராஜா இசை ஜெயச்சந்திரன் குழுவினர் குரல்களில் திரு கம்பர் ஜெயராமன் நடித்த பாடல்

http://www.youtube.com/watch?v=Bk4R0ZfkRwg

gkrishna
9th August 2014, 03:08 PM
ck sir

kindly see private message please

gkrishna
9th August 2014, 03:26 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02048/3_1_2048523g.jpg

இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் வெளி வந்த ஒரு செய்தி

வாதூலன் என்ற ஒருவர் (ஒருவர் தான் பின்ன கோஷ்டியா) வீட்டு மனை வாங்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இறுதியில் அந்த மனையின் சிறப்பை இவ்வாறு கூறுகிறார்

கடைசியாக ஒரு செய்தி, எங்கள் வீட்டு மனைக்கு ஒரு சினிமாவிலும் நடித்த பெருமை உண்டு. ‘வீட்டுக்கு வீடு’ (பெயரும் பொருத்தமாக இருக்கிறது) படத்தின் ஆரம்பக் காட்சியில் ஜெய்சங்கரும் லட்சுமியும் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார்கள். அந்தப் பின்னணியில் உள்ள இடம் எங்கள் மனைதான்.

Russellmai
9th August 2014, 03:27 PM
வாசு சார்,
ஜெயபாரதி நடித்த ரஹஸ்ய ராத்திரி,காமம் குரோதம் மோகம்,நட்சத்திரங்களே காவல் ஆகிய படங்கள் தொடர்பான பதிவுகள்
உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன?சீமா நடித்த அவளுடெ ராவுகள்
பாடல்களின் காணொளியினைப் பதிவு செய்யுங்கள்
கோபு

gkrishna
9th August 2014, 03:33 PM
நேற்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் வெளி வந்த குலதெய்வம் ராஜகோபால் பற்றிய கட்டுரை

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02046/aiyaaa_2046967g.jpg

விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகைச்சுவையில் கடைசிவரை ஆபாசத்திற்கு இடம் கொடுக்காமல் தூய்மையைக் கடைபிடித்தார் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். அவரது வழியை அப்படியே பின்பற்றியதால்தான் குலதெய்வம் ராஜகோபாலை ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டம் தேடி வந்தது. 1961-ல் மதுரை ரசிகர்கள் அவருக்கு இந்தப்பட்டத்தை வழங்கினார்கள்.

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்டராமாணிக்கம் என்ற சிற்றூரில் பிறந்து,சிறு வயது முதலே தெருக்கூத்துக்களில் நடிக்க ஆரம்பித்தார். லோகிதாசனாகவும் பாலமுருகனாகவும் நடித்துப் புகழ்பெற்ற ராஜகோபால் பிறகு 12 வயதில் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.

பிறகு 16 வயதில் ஸ்த்ரீ பார்ட்டுகளை ஏற்று நடிப்பதிலும் தேர்ச்சி பெற்று மதுரையில் பிரபலமான நாடகக் குழுவாக இருந்த கலைமணி நாடகக்குழுவில் சேர்ந்தார். மதுரையிலிருந்து ஒருமுறை சேலத்தில் நாடகம் நடிக்கச் சென்றிருந்தபோது முதல்முறையாகக் கலைவாணரைச் சந்திக்கிறார்.

ராஜகோபாலின் நடிப்புத் திறனும் நகைச்சுவை உணர்வும் கலைவாணருக்குப் பிடித்துப்போக “எனது கம்பெனியில் நடிக்க விரும்பினால் வாங்க மைனர்!” என்று கலைவானார் அழைப்பு விடுகிறார். இதைவிடச் சிறந்த வாய்ப்பு அமையுமா என்ன? கலைவாணரின் நாடகக் குழுவில் சிறப்பு மற்றும் சிரிப்பு நடிகராக மாறினார் ராஜகோபால். பிறகு கலைவாணர் திரைப்படங்களுக்கு இடம்பெயர்ந்தபோது, ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அப்போதெல்லாம் கலைவாணர் தான் நடித்த படங்களிலேயே அவருக்குப் பரிந்துரை செய்தார்.

கலைவாணரும் எம்.கே.டியும் நண்பர்களாக இருந்ததால் எம்.கே.டி. நடித்த ‘புதுவாழ்வு’ என்ற படத்தில் ராஜகோபாலுக்கு முதல் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அந்தப்படத்தை முந்திக்கொண்டு, ராஜகோபால் இரண்டாவதாக நடித்த ‘நல்ல காலம்’(1954) முதலில் வெளியாகிவிடுகிறது. அதன் பிறகு வரிசையாகப் படங்கள் கிடைக்க ராஜகோபால் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரது ‘டைமிங்சென்ஸை’ ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர் கிசு கிசு குரலில் பேசுவதை வெகுவாக ரசித்தனர். இதனால் இரண்டே ஆண்டுகளில் விறுவிறுவென்று வளர்ந்த ராஜகோபாலின் பெயருக்கு முன்னால் ‘குலதெய்வம்’ என்ற படத்தின் பெயர் சேர்ந்து கொண்டது 1956-ம் வருடம்.

ஏ.வி.எம். கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘குலதெய்வம்’ படத்தில் மொத்தம் நான்கு கதாநாயகர்கள். அதில் கடைக்குட்டி இவர்தான். அந்தப் படத்தில் நகைச்சுவை குணச்சித்திரம் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து நடித்த ராஜகோபால் அதன் பிறகு நகைச்சுவை குணச்சித்திர வேடங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். பல படங்களில் மனைவியிடம் இவர் மாட்டிக்கொண்டு விழிப்பது அன்றைய 60களின் சம்சாரிகள் வாழ்வில் இருந்த தினப்பாட்டின் ஆதங்கமாக இருந்ததால் ராஜகோபால் வரும் காட்சிகளுக்கு அப்ளாஸ் விழுந்தது.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தனது சொந்த நாடகக் குழுவையும் தொடங்கி, பட்டி தொட்டியெங்கும் பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தி வந்தார்.நல்ல பக்திமானாக விளங்கிய இவர், கலைவாணரைப் போலச் சிறந்த ‘வில்லுப்பாட்டு’ கலைஞராகவும் பெயர்பெற்றார். ‘ஐயப்பன் சரித்திரம்’, ‘முருகன் பெருமை’, ‘ஐயனார் கதை’, ‘நல்லத்தங்காள்’, ‘ஆறு அண்ணன்மார் அருக்காணி தங்கை’, ஆகிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளைத் தனது குழுவினருடன் தமிழகமெங்கும் இசைத்தார். தனது ஆசானுக்கு நன்றி பாராட்டும் விதமாக ‘கலைவாணர் வாழ்க்கை வரலாற்றையும்’ வில்லுப்பாட்டாக இசைத்தார்.

யார் கண் பட்டதோ, ஊர் ஊராகச் சென்று கலை வளர்த்து ஈட்டிய செல்வத்தை சொந்தப் படம் தயாரிக்க முதலீடு செய்துசெய்து பெரும் இழைப்பை சந்தித்தார். சுமார் 15 ஆண்டுகாலம் திரைப்படத் துறையிலிருந்து விலகியிருந்தவரை கே. பாக்கியராஜ் தனது படங்களில் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தார்.

பாக்கியராஜின் இயக்கத்தில் அவரது அப்பாவாகவும் இன்னும் பல குணச்சித்திரங்களிலும் நடித்த குலதெய்வம் ராஜகோபால் தன்னை கலைவாணரின் கடைசி சீடன் எனத் துணிச்சலாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அது மறுக்க முடியாத உண்மை.

கட்டுரை இறுதியில் கட்டுரையாளர் 'குலதெய்வம்' ராஜகோபால் சொந்த படம் எடுத்து அனைத்தையும் இழந்தார் என்று எழுதி உள்ளார் .அவர் எடுத்த சொந்த படம் எது ? வெளியானதா ?

gkrishna
9th August 2014, 04:09 PM
http://lh4.ggpht.com/-lfpmne_xc_8/U-R0DVXKKCI/AAAAAAAALr8/ZN64Sam7FOA/w1280/070000.jpg

gkrishna
9th August 2014, 04:11 PM
http://lh3.ggpht.com/-JtDesNr1zrE/U-R0DpTImeI/AAAAAAAALro/4DEu-_8x_3E/w1280/070001.jpg

gkrishna
9th August 2014, 04:12 PM
http://lh4.ggpht.com/-HdiLhdY76CU/U-R0ENfnduI/AAAAAAAALr0/Y60YvvGUZJ8/w1280/070002.jpg

sss
9th August 2014, 04:12 PM
உங்கள் முகம் என்னவாக இருக்கும் .

அன்புள்ள திரு கிருஷ்ணா அவர்களே

உங்களை எல்லாம் விட வயதில் அனுபவத்தில் சிறியவன்தான், முகம் எப்படி இருந்தாலும் பார்த்து தானே ஆகவேண்டும்...

நானும் நெல்லை சீமை தான்.

இந்த மாதம் ntfans நிகழ்ச்சியில் என்னை அறிமுகம் செய்கிறேன்...
வாணி அவர்களின் பாடல்கள் தமிழில் சுமார் 1500 வைத்துள்ளேன், மற்றொரு இணையத்தில் அதை பதிவு செய்துள்ளேன்...
வேற்று மொழி பாடல்களும் உள்ளன... என்னிடம் இருப்பதாய் மற்றவர்களுக்கு தருவதில் மகிழ்ச்சியே..

அன்புமிக்க வீயார் என்னை இப்போது கண்டு பிடித்திருப்பார்.

நன்றி

gkrishna
9th August 2014, 04:14 PM
http://lh3.ggpht.com/-Ko7kOG8V3Lk/U-R0EkHI1NI/AAAAAAAALr4/iyijXX_SQZE/w1280/070003.jpg

gkrishna
9th August 2014, 04:16 PM
http://lh5.ggpht.com/-erTvJrY90YI/U-R0E_upASI/AAAAAAAALsA/VI7Bh2rbxj4/w1280/070004.jpg

gkrishna
9th August 2014, 04:18 PM
அன்புள்ள திரு கிருஷ்ணா அவர்களே

உங்களை எல்லாம் விட வயதில் அனுபவத்தில் சிறியவன்தான், முகம் எப்படி இருந்தாலும் பார்த்து தானே ஆகவேண்டும்...

நானும் நெல்லை சீமை தான்.

இந்த மாதம் ntfans நிகழ்ச்சியில் என்னை அறிமுகம் செய்கிறேன்...
வாணி அவர்களின் பாடல்கள் தமிழில் சுமார் 1500 வைத்துள்ளேன், மற்றொரு இணையத்தில் அதை பதிவு செய்துள்ளேன்...
வேற்று மொழி பாடல்களும் உள்ளன... என்னிடம் இருப்பதாய் மற்றவர்களுக்கு தருவதில் மகிழ்ச்சியே..

அன்புமிக்க வீயார் என்னை இப்போது கண்டு பிடித்திருப்பார்.

நன்றி

காத்து கொண்டு இருக்கிறேன் sss சார்

JamesFague
9th August 2014, 06:40 PM
Mr Vasu JI

Expecting a jem of a post from you about Acting God.

I am waiting.

Regards

madhu
9th August 2014, 08:26 PM
அடக் கடவுளே !

கடைசியில் திருஷ்டி பட்டே விட்டதா ?

ஊரு கண்ணு உறவு கண்ணுன்னு சொல்லி மடக் மடக்னு திருஷ்டி கழிக்கிறேன்.. சஷ்மே பத் தூர்...

ஜெயபாரதி ஒரு நல்ல நடிகை. ஆனால் அந்தக் காலத்து மலையாள முண்டு உடுத்தி வந்ததால் நம்ம ஊர் லேடீஸ் முகம் திருப்பு... ஆண்களோ விருப்பு..

அயலாத்தே சுந்தரின்னு ஒரு படத்தில் பிரேம் நசீர் ஜேசுதாஸ் குரலில் சங்கர் கணேஷ் இசையில் பாடிய "லக்ஷார்ச்சன கண்டு மடங்கும்போளொரு லஜ்ஜையில் முங்கிய முகம் கண்டு" பாட்டைக் கேளுங்க

http://youtu.be/AmaYzCApmac

இதே பாட்டு தமிழில் எஸ்.பி.பி, வாணி ஜெயராம் குரல்களில் "பொன்னோவியம் ஒன்று" என்று பாக்கியராஜ் ராதிகாவை வர்ணிக்கும் "குமரிப் பெண்ணின் உள்ளத்திலே" படப் பாடல்

http://youtu.be/co-sM74FaPY

madhu
9th August 2014, 08:28 PM
அன்புள்ள திரு கிருஷ்ணா அவர்களே

உங்களை எல்லாம் விட வயதில் அனுபவத்தில் சிறியவன்தான், முகம் எப்படி இருந்தாலும் பார்த்து தானே ஆகவேண்டும்...

நானும் நெல்லை சீமை தான்.

இந்த மாதம் ntfans நிகழ்ச்சியில் என்னை அறிமுகம் செய்கிறேன்...
வாணி அவர்களின் பாடல்கள் தமிழில் சுமார் 1500 வைத்துள்ளேன், மற்றொரு இணையத்தில் அதை பதிவு செய்துள்ளேன்...
வேற்று மொழி பாடல்களும் உள்ளன... என்னிடம் இருப்பதாய் மற்றவர்களுக்கு தருவதில் மகிழ்ச்சியே..

அன்புமிக்க வீயார் என்னை இப்போது கண்டு பிடித்திருப்பார்.

நன்றி

இன்னும் ஒரு இசை அக்ஷய பாத்திரமா ?

அருமை அருமை .... நன்றி sss ஜி !!

Gopal.s
9th August 2014, 08:53 PM
Tamil cinema was undergoing a big change in the late seventies with the college going youth beginning to be leading audiences as the older generation slowly reducing their going to the movies with the advent of television. These youths preferred romantic songs and dance oriented songs . SJ's voice suited these type of songs more than PS's. In fact their were little situational or emotional songs since the middle of 70's.

இது படு படு அபத்தமான வாதம். நான் 1984 வரை மாணவ பருவத்தில் இருந்தவன். 1976- 1981- பீ.டெக்.1982-1984- எம்.டெக் .முழுக்க முழுக்க ஹாஸ்டல்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள். நானோ எல்லோரிடமும் சரளமாக உரையாடி ரசனை அறிபவன். கிட்டத்தட்ட 90% ஜானகியின் முழு வெறுப்பாளர்கள். இளைய ராஜாவின் அற்புதமான இசையால் , வேறு வழியில்லாமல் பல்லை கடித்து அந்த மிமிக்ரி சகித்தோம்.

Gopal.s
9th August 2014, 09:22 PM
பல நண்பர்கள் ராகத்துடன் ஒலி குறிப்பை கொடுப்பது சிறந்தது என்று சொன்னதால் முதல் பத்திற்கு .

பக்கம் 8-178ஆம் பதிவு-சிந்துபைரவி

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--sindhu-bhairavi.html

பக்கம்-20- 192 ஆம் பதிவு-சுபபந்துவராளி

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--subha-pantuvarali.html

பக்கம்-27- 270 ஆம் பதிவு -மாயா மாளவ கௌளை

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--mayamalavagowlai.html

பக்கம்-28- 276 ஆம் பதிவு -சாருகேசி

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--charukesi.html

பக்கம்-37- 368 ஆம் பதிவு-நடபைரவி

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--natabhairavi.html

பக்கம்-44- 439 ஆம் பதிவு- பாகேஸ்வரி

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--bageshri.html

பக்கம்-57- 570 ஆம் பதிவு- ஆபேரி .

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--abheri.html

பக்கம்-59-583 ஆம் பதிவு கல்யாணி

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--kalyani.html

பக்கம்-68- 675 ஆம் பதிவு- மோகனம்.

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--mohanam.html

பக்கம்-69- 687 ஆம் பதிவு- பிருந்தாவன சாரங்கா

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--brindavana-saranga.html

vasudevan31355
9th August 2014, 11:39 PM
வாசு சார்,
சீமா நடித்த அவளுடெ ராவுகள்
பாடல்களின் காணொளியினைப் பதிவு செய்யுங்கள்
கோபு

Ragendu Kiranangal


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3IGdGI2tv58

rajeshkrv
10th August 2014, 01:04 AM
சீமாவுக்கு இசையரசி இதோ சில கானங்கள்

https://www.youtube.com/watch?v=XIgDUkNaQLA

https://www.youtube.com/watch?v=wvNVn78CEV8

இன்னும் நல்ல நல்ல பாடல்கள் உண்டு. ஜெ.பியை போலவே சீமாவும் நல்ல நடிகை, நிறைய பெண்மை போற்றும் புரட்சி வேடங்கள் செய்துள்ளார்
இருந்தாலும் அவளுடே ராவுகள் இமேஜ் இவரை விட்டு போகவில்லை பாவம்

chinnakkannan
10th August 2014, 01:37 AM
என்னுள் கலந்த கானங்கள் 6

ஊறும் இளமை உணர்வுகளைச் சித்திரமாய்
கூறும் பலகவிதை காண்.. என ஆன்றோர்(?!) வாக்கு…

இளமை கொலுவிருக்கும் இயற்கை துணையிருக்கும்
இனிமை மணம் பரப்பும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமிலை உலகத்திலே
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ

இளமை எனும் பூங்காற்று பாடுவது ஓர் பாட்டு
ஒரு பொழுதிலோர் ஆசை சுகம் சுகம் அதிலே..
இதெல்லாம் திரைபாடல்கள்..

இந்த மிஸ்டர் பட்டினத்தார் என்ன சொல்கிறார்..
சீயுங்குருதிச் செழுங்கழு நீர்பாயும்புடவை ஒன்றிலாதபோது
பகலிரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்றவற்றுக்குள்
மாயும் மனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையே
.
அது சரி..அதுக்காக
இளமையில அனுபவிக்க வேண்டிய விஷயங்களை அனுபவிக்கக் கூடாதா என்ன

கணுக்காலும் கண்ணிமையும் கொட்டியே சொல்லும்
அனுபவத்தில் தான்வருமே ஆம்..

எஸ்..எல்லாம் அனுபவம் தான்..எது..இளமைப்பருவம்..கண்ணதாசன் சொல்வதென்ன..அனுபவத்தால் அமைவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்..ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து அனுபவமே தான் நான் எனச் சொன்னான்....


எனில் இந்த இளமைப் பருவம் இருக்கிறதே.. ஒருமுறை தான் வரும் .. பதில் சொல்லக் கூடும் உல்லாசஏம் உற்சாகம் காட்டும் இளமை டாண்ட்டாண்டா டட டாடா…என அந்தக் காலத்தில் வந்தபாட்டைப் போலவே தான்..எல்லாருக்கும் மறக்காது (குறிப்பாய் எனக்கு..இன்னும் இளமைப் பருவத்தில் தான் இருக்கிறேன்!
)
ஆணோ பெண்ணோ எல்லாமே விசித்திரமாய் இருக்கும்..

ஆணென்றால் :எதைப் பற்றியும் கவலைப் படாத வயது..

எழுந்தோமா அம்மா வச்ச டிஃபனை சாப்பிட்டோமா காலேஜ் போனோமா..என்னாச்சு..ஓ அந்தப் பொண்ணப் பார்த்ததும் என்னாகிறது..அதுவும் பட்டாம் பூச்சிக் கண்ணிமைகள் படக் படக் என அடித்துக் கொள்வதைப் பார்த்தால் இதயம் தடக் தடக் என்கிறதே..

இதுவே பெண் என்றால்.. அவளுக்கும் அப்படித் தான்..ஆனால் ஆணைப் போல் வெளிக்காட்டிக் கொள்வதில்லை..கொய்ங்க் கொய்ங்க் என்று எதிரணி அவஸ்தைப் படுவதை உள்ளத் தாமரையில் உவகை கொப்பளிக்க ஏதும் தெரியாதது போல் அன்ன நடை பயின்று சென்று கொண்டிருப்பாள்..

காரணம்..கெமிஸ்ட்ரியா பருவம் செய்யும் வேலையா..

அதுவும் கல்லூரிப் படிப்பு முடிந்தால் –ஆணுக்கு வேலை அவசியமாகிறது..இந்தக் காலத்தில் பெண்ணுக்கும் வேலை அவசியமாகிறது..
//டாட்.. யூ ஸீ என்னோட படிப்புக்கேத்த வேலை பாக்கறேனே..அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணி வைக்கற வரைக்கு்ம்..
அடிப்பாவி ஒன்னச் சின்னப் பொண்ணுன்னுல்ல நினச்சுண்டிருக்கேன்..
நோ டாட்.. சி.பொண் லாம் சொல்லாதீங்க.. நான் வளர்கிறேனே டாடி..வேலை பாக்கட்டா..
உன் இஷ்டம் போல செய்டா கண்ணா..//

அந்தக் காலத்தில் அதுவும் வசதி வாய்ப்பெல்லாம் இல்லாமல் இருக்கும் இந்த கிராமத்துப் பெண்ணுக்கு..கல்யாணம் பற்றிய கனவு தான்..அதுவும் வெகு அழகாகப் பாடுகிறாள்..அவளுக்கு ஒரே ஒரு உறவு..தந்தையின் தம்பி..வீட்டில் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டவுடன் அவரும் தொடர்ந்து பாடுகிறார்….
கேக்கலாமா..

படம்.. கல்யாண ஊர்வலம்.. பாடியவர் எஸ்.ஜானகி கேஜேஜேசுதாஸ்.. படத்தில் வெகு ஸ்லிம் மணிமாலா.. சித்தப்பாவாக நாகேஷ்.. படம்

பார்த்ததில்லை..ஆனால் பாட்டு வளர இஷ்டம்…லிரிக்ஸ்.. வாலிபக் கவிஞர் வாலி...
நல்ல படமா.என்ன..
*
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி - இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?

மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகைச் செண்டு கொஞ்சம்
காதலி உள்ளம் வெள்ளம் அதில் காதலின் ஓடம் செல்லும் - இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?
நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதைத் தன்னுடனே எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள் புது
மனையில் புகுந்து மணவரையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ கல்யாண நாள் வருமோ?
சித்தப்பா...
ஆயிரம் காலத்தைக் கடந்து விழி நீரினைக் கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
பருவ மழையில் இரு உருவம் நனைந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?

நல்ல பாடல் தானே..

chinnakkannan
10th August 2014, 01:46 AM
சீமா பாட்டுக்கு நன்றி ராஜேஷ்..இன்னும்பாக்கலை ..வைரமுத்துவின் இந்தக்கால வரிகளில் ஒன்று..உதட்டின் மேலேபடுத்துக்கலாமா.அந்தக்காலத்தில் அந்த உதட்டழகால் புகழப்பட்டவர் அவர்..எப்படியாகினும் நல்ல நடிப்பு என்பது அவரிடம்..ம்ஹீம் இல்லவே இலலை..மஹாலிங்கபுரத்தில் ஐவிசசியின் வீடு இருக்கிறதுஅதுவே இவரின் வீடும் கூட.. இவர் பெண்கள் அப்படியே அம்மாவை ஜெராக்ஸ் எடுத்தது போல் இருப்பார்கள்..இந்த சந்தர்ப்பத்தில் முக நூல் ஜோக் நினைவுக்கு வருகிறது..

//டார்லிங்.. என்னுடைய செல்ஃபோனை மறந்து எங்கோ விட்டுவிட்டேன்..

டியர்..இட்ஸ் இன் யுவர் ஜீன்ஸ்..

யோவ்..உன் அப்பா அம்மவும் தான் ஞாபக மறதிக் காரர்கள்..என் பரம்பரையைப் பழிக்காதே..

ஓஹ்..மை ஸ்வீட் ஹார்ட் இட்ஸ் இன் யுவர் ஜீன்ஸ் பாண்ட்..மறந்துவிட்டாயா.. :)//

எனில் சீமாவின் குழந்தைகள் அவர் மாதிரி இருப்பதற்குக் காரணம் ஜீன்ஸ் :) வரட்டா நாளை பாக்கலாம் குட் நைட் :)

chinnakkannan
10th August 2014, 01:53 AM
சி.கவின் சின்ன விண்ணப்பம்..இந்த இழை முடியும் காலம் ஆகிவிட்டது

பானகம் நன்றாகப் பல்விதமாய்த் தின்றாலும்
கானம் முடியாது காண்..

என்பதற்கேற்ப இவ்விழையின் கடைசிப் போஸ்டில் முக்கியமான கோபாலின் ராகங்கள், வாசுவின் இன்றைய ஸ்பெஷல், ராகவேந்திரரின் பொங்கும் பூம்புனல் எஸ்வியின் படங்கள் பாடல்கள், ராஜேஷின் கானங்கள், ஜி.கே யின் இடுகைகள் என லிங்க்ஸ்கொடுத்தால் நலமாக இருக்குமே..

rajeshkrv
10th August 2014, 01:55 AM
என்னுள் கலந்த கானங்கள் 6

ஊறும் இளமை உணர்வுகளைச் சித்திரமாய்
கூறும் பலகவிதை காண்.. என ஆன்றோர்(?!) வாக்கு…

இளமை கொலுவிருக்கும் இயற்கை துணையிருக்கும்
இனிமை மணம் பரப்பும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமிலை உலகத்திலே
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ

இளமை எனும் பூங்காற்று பாடுவது ஓர் பாட்டு
ஒரு பொழுதிலோர் ஆசை சுகம் சுகம் அதிலே..
இதெல்லாம் திரைபாடல்கள்..

இந்த மிஸ்டர் பட்டினத்தார் என்ன சொல்கிறார்..
சீயுங்குருதிச் செழுங்கழு நீர்பாயும்புடவை ஒன்றிலாதபோது
பகலிரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்றவற்றுக்குள்
மாயும் மனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையே
.
அது சரி..அதுக்காக
இளமையில அனுபவிக்க வேண்டிய விஷயங்களை அனுபவிக்கக் கூடாதா என்ன

கணுக்காலும் கண்ணிமையும் கொட்டியே சொல்லும்
அனுபவத்தில் தான்வருமே ஆம்..

எஸ்..எல்லாம் அனுபவம் தான்..எது..இளமைப்பருவம்..கண்ணதாசன் சொல்வதென்ன..அனுபவத்தால் அமைவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்..ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து அனுபவமே தான் நான் எனச் சொன்னான்....


எனில் இந்த இளமைப் பருவம் இருக்கிறதே.. ஒருமுறை தான் வரும் .. பதில் சொல்லக் கூடும் உல்லாசஏம் உற்சாகம் காட்டும் இளமை டாண்ட்டாண்டா டட டாடா…என அந்தக் காலத்தில் வந்தபாட்டைப் போலவே தான்..எல்லாருக்கும் மறக்காது (குறிப்பாய் எனக்கு..இன்னும் இளமைப் பருவத்தில் தான் இருக்கிறேன்!
)
ஆணோ பெண்ணோ எல்லாமே விசித்திரமாய் இருக்கும்..

ஆணென்றால் :எதைப் பற்றியும் கவலைப் படாத வயது..

எழுந்தோமா அம்மா வச்ச டிஃபனை சாப்பிட்டோமா காலேஜ் போனோமா..என்னாச்சு..ஓ அந்தப் பொண்ணப் பார்த்ததும் என்னாகிறது..அதுவும் பட்டாம் பூச்சிக் கண்ணிமைகள் படக் படக் என அடித்துக் கொள்வதைப் பார்த்தால் இதயம் தடக் தடக் என்கிறதே..

இதுவே பெண் என்றால்.. அவளுக்கும் அப்படித் தான்..ஆனால் ஆணைப் போல் வெளிக்காட்டிக் கொள்வதில்லை..கொய்ங்க் கொய்ங்க் என்று எதிரணி அவஸ்தைப் படுவதை உள்ளத் தாமரையில் உவகை கொப்பளிக்க ஏதும் தெரியாதது போல் அன்ன நடை பயின்று சென்று கொண்டிருப்பாள்..

காரணம்..கெமிஸ்ட்ரியா பருவம் செய்யும் வேலையா..

அதுவும் கல்லூரிப் படிப்பு முடிந்தால் –ஆணுக்கு வேலை அவசியமாகிறது..இந்தக் காலத்தில் பெண்ணுக்கும் வேலை அவசியமாகிறது..
//டாட்.. யூ ஸீ என்னோட படிப்புக்கேத்த வேலை பாக்கறேனே..அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணி வைக்கற வரைக்கு்ம்..
அடிப்பாவி ஒன்னச் சின்னப் பொண்ணுன்னுல்ல நினச்சுண்டிருக்கேன்..
நோ டாட்.. சி.பொண் லாம் சொல்லாதீங்க.. நான் வளர்கிறேனே டாடி..வேலை பாக்கட்டா..
உன் இஷ்டம் போல செய்டா கண்ணா..//

அந்தக் காலத்தில் அதுவும் வசதி வாய்ப்பெல்லாம் இல்லாமல் இருக்கும் இந்த கிராமத்துப் பெண்ணுக்கு..கல்யாணம் பற்றிய கனவு தான்..அதுவும் வெகு அழகாகப் பாடுகிறாள்..அவளுக்கு ஒரே ஒரு உறவு..தந்தையின் தம்பி..வீட்டில் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டவுடன் அவரும் தொடர்ந்து பாடுகிறார்….
கேக்கலாமா..

படம்.. கல்யாண ஊர்வலம்.. பாடியவர் எஸ்.ஜானகி கேஜேஜேசுதாஸ்.. படத்தில் வெகு ஸ்லிம் மணிமாலா.. சித்தப்பாவாக நாகேஷ்.. படம்

பார்த்ததில்லை..ஆனால் பாட்டு வளர இஷ்டம்…லிரிக்ஸ்.. வாலிபக் கவிஞர் வாலி...
நல்ல படமா.என்ன..
*
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி - இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?

மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகைச் செண்டு கொஞ்சம்
காதலி உள்ளம் வெள்ளம் அதில் காதலின் ஓடம் செல்லும் - இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?
நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதைத் தன்னுடனே எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள் புது
மனையில் புகுந்து மணவரையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ கல்யாண நாள் வருமோ?
சித்தப்பா...
ஆயிரம் காலத்தைக் கடந்து விழி நீரினைக் கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
பருவ மழையில் இரு உருவம் நனைந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?

நல்ல பாடல் தானே..

ஆம் சி.கா நல்ல பாடல் ... வாலி ஐயாவின் வரிகள், ஆர்.பார்த்தசாரதியின் இசையில் கல்யாண ஊர்வலம் பாடல் அருமை ..

இதே திரையில் இசையரசி இசைத்த எந்தன் உயிர் காதலன் கண்ணன் என்று ஒரு அமர்க்களமான பாடலும் உண்டு

rajeshkrv
10th August 2014, 05:46 AM
வாசு ஜி, கோபால் ஜி , இசையரசி பாடும் fast number உங்களுக்காகவே ..
மாமாவின் இசை

குங்கும தும்பிகள் குறுமொழி பூக்களில்

http://www.youtube.com/watch?v=SRiqAIqUWsc

rajeshkrv
10th August 2014, 05:56 AM
பழைய பக்கங்களை படித்து கொண்டிருந்தபோது சோவை பற்றிய கட்டுரை படித்தேன்.. உடனே எனக்கு நினைவு வந்தது சோவின் நகைச்சுவை காட்சி
பொம்மலாட்டம் திரையிலிருந்து ...

எத்தனையோ நகைச்சுவை காட்சிகளில் சோ நடித்திருந்தாலும் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களின் படங்களில் இன்னும் தூள் கிளப்புவார்

அப்படி கிளப்பிய காட்சிதான் இது.. அதுவும் எப்படி காதலிப்பது என்று இவர் ஜெய்க்கு நடத்தும் பாடம் இருக்கிறதே
கண்டுக்க கண்டுக்க

காட்சி 37:20’ல் தொடங்கும்
http://www.dailymotion.com/video/xrht09_dvd-rip-bommalattam_shortfilms

Richardsof
10th August 2014, 06:19 AM
சில தினங்களுக்கு முன் கிருஷ்ணா ஜி ஆயிரத்தில் ஒருவனாகமதுர கான திரியில் ....


மதுர கான திரியில் ....இன்று ராஜேஷ் சார் ''இரண்டாயிரத்தில் ஒருவன் ''- பாராட்டுக்கள் .


அமுத சுரபியாய் அள்ளி அள்ளி தந்த ராஜேஷ் அவர்கள் நம் எல்லோரின் இளமைக்கு விருந்தாக இன்னும்

பல சேவைகள் புரிவார் என்று எதிர் பார்க்கிறேன் .

இரண்டாயிரத்தில் ஒருவனுக்கு இன்றைய ஸ்பெஷல் பாடல் ..

திரு ராஜேஷ் அவர்களுக்காக ........

http://youtu.be/kcrfFfz8Tqw

rajeshkrv
10th August 2014, 06:27 AM
எஸ்.வி சார். வாழ்த்துக்களுக்கு நன்றி .பாடல் அற்புதம் உலகெங்கும் ஒரே மொழி தானே இசை மொழி அது நம் நட்பு மொழி

RAGHAVENDRA
10th August 2014, 07:50 AM
ராஜேஷ் ...

மனதை மயக்கும் மதுர கானங்களின் தங்கள் தொடர் பங்களிப்பின் மூலம் தங்களுடைய 2000 பதிவுகளைக் கடந்ததை அறிய முடிந்தது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
10th August 2014, 07:56 AM
பொங்கும் பூம்புனல்

இந்த பதிவில் இடம் பெறும் பாடல் மிக அபூர்வமானது என கருதுகிறேன். 1963ம் ஆண்டு வெளிவந்த கைதியின் காதலி திரைப்படத்திலிருந்து ஏ.எல்.ராகவன் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய இனிய பாடல்.. (அல்லது T.S.ராஜேஸ்வரியா.. ஏனெனில் படத்தின் டைட்டில் இரண்டு ராஜேஸ்வரிகளைப் பின்னணிப் பாடகர்களின் பட்டியலில் இடுகிறது. இந்த டி.எஸ்.ராஜேஸ்வரி யார் எனத் தெரியவில்லை. மேலும் இந்த பட்டியல் ஒரிஜினல் அல்ல. டிவிடி நிறுவனத்தார் தயாரித்தது போல் தோன்றுகிறது. யாரிடமாவது இசைத்தட்டு அல்லது பாட்டுப் புத்தகம் இருந்தால் தெரிந்து கொள்ளலாம்)..

மிகவும் அருமையான பாடல். கே.வி.எம். என்றாலே மெலடி என்ற இலக்கணத்தில் அடங்கும் இன்னொரு பாடல்.

தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள்.

https://www.mediafire.com/?tga0jnsg6z3dd6k

rajeshkrv
10th August 2014, 07:58 AM
வாசு ஜி. ஆம் நிறைய பதிவுகள் செய்வதில்லை .. இந்த திரியில் தான் அதிகம் பதித்துள்ளேன் என்று நினைக்கிறேன்

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சார்... அந்த குங்கும தும்பிகள் பாட்ட கேளுங்க ...

RAGHAVENDRA
10th August 2014, 08:00 AM
பொங்கும் பூம்புனல்

கைதியின் காதலி திரைப்படத்திலிருந்து மற்றொரு அபூர்வமான பாடல். வந்து வந்து ஒவ்வொண்ணா போகுது... பாடகர் திலகத்தின் பசுமையான குரலில்

http://www.mediafire.com/listen/gx1o0h08131xj5e/VandhuVandhuOvvonnaKaidhiyinKadhali.mp3

RAGHAVENDRA
10th August 2014, 08:04 AM
மலையாள மொழியில் இசையமைப்பு என்றுமே தொன்மையை விட்டுக்கொடுத்ததில்லை. இசைக் கருவிகள் புதியதாய் இருந்தாலும் அவற்றையும் பழமையின் சிறப்பிற்கே பயன்படுத்தி வந்துள்ளனர் என நான் எண்ணுகிறேன். அந்த வரிசையில் இந்த குங்குமத் தும்பிகளும் அடங்கும்.

ராஜேஷ், வாசு தாங்களிருவரும் வேற்று மொழிப் பாடல்களிலிருந்து அபூர்வமான இனிய பாடல்களைக் கொண்டு வருகிறீர்கள். கிருஷ்ணா வினோத்தும் பின் தொடர்கிறார்கள். தங்களனைவருக்கும் பாராட்டுக்கள்

rajeshkrv
10th August 2014, 08:26 AM
மலையாள மொழியில் இசையமைப்பு என்றுமே தொன்மையை விட்டுக்கொடுத்ததில்லை. இசைக் கருவிகள் புதியதாய் இருந்தாலும் அவற்றையும் பழமையின் சிறப்பிற்கே பயன்படுத்தி வந்துள்ளனர் என நான் எண்ணுகிறேன். அந்த வரிசையில் இந்த குங்குமத் தும்பிகளும் அடங்கும்.


ராஜேஷ், வாசு தாங்களிருவரும் வேற்று மொழிப் பாடல்களிலிருந்து அபூர்வமான இனிய பாடல்களைக் கொண்டு வருகிறீர்கள். கிருஷ்ணா வினோத்தும் பின் தொடர்கிறார்கள். தங்களனைவருக்கும் பாராட்டுக்கள்

ராகவ் ஜி ஆம் மலையாள பாடல்கள் மெலோடியை விட்டுக்கொடுத்தே இல்லை .. பாடலை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி

Richardsof
10th August 2014, 09:08 AM
இனிய நண்பர் திரு ராஜேஷ் சார்

இனிய நண்பர் திரு வாசு அவர்கள் சென்னை பயணத்தில் இருப்பதால் திரியின் நண்பர் திரு ராஜேஷ்
அவர்களின் 2000 பதிவிற்கான இனிய வாழ்த்துக்களை தெரிவிக்கும்படி அலைபேசி மூலம் எனக்கு
தகவல் கூறினார் .

http://youtu.be/4cfDheNyeuQ

Richardsof
10th August 2014, 09:45 AM
http://i59.tinypic.com/2vjwv1y.jpg

http://youtu.be/cRLisPHehIk

Richardsof
10th August 2014, 10:00 AM
http://i61.tinypic.com/1zggcpe.jpg

http://youtu.be/I9rrI7Apnk4

chinnakkannan
10th August 2014, 10:04 AM
ராஜேஷ்..வாழ்த்துக்கள்..2000க்கு :) நன்றி.. அந்த எந்தன் உயிர்க் காதலன் கண்ணன் கண்ணன் நல்ல பாட்டு..எனக்குப் பிடிக்கும்..

RAGHAVENDRA
10th August 2014, 12:07 PM
சகோதர சகோதரி பாசம் என்பதற்கு என்று ஒதுக்கப் பட்ட இந்த ரக்ஷா பந்தன் நாளையொட்டி உலகெங்கிலும் உள்ள நம் சகோதரிகளுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாழ்வில் தாங்களெல்லாம் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ வேண்டும் என இறைவனிடம் நம் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொண்டு தங்களுக்காக இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறோம்.

https://www.youtube.com/watch?v=sltxkZQvcfU

RAGHAVENDRA
10th August 2014, 01:56 PM
MSV'S MUSIC IS BASED ON CHORDS... ONE VERSION..
NO, NO.. HIS MUSIC IS NOT BASED ON ANY PARTICULAR ASPECT OF THE THEORY OF MUSIC .. ANOTHER VERSION...

DEAR GOPAL,
YOUR ATTENTION PLEASE. தங்களுடைய இசையறிவிற்கு சரியான தீனி .... எம்எஸ்விடைம்ஸ் இணையதளத்தில் தாங்கள் ஏன் பங்கு கொள்ளக் கூடாது.. ஆக்கபூர்வமான விஷயங்கள் விவாதங்கள்... இசையின் நுணுக்கங்கள்.. இவற்றையெல்லாம் அங்கே ஆழமாக விவாதிக்கலாமே...

www.msvtimes.com/forum

Gopal.s
10th August 2014, 02:52 PM
My Hearty wishes to dear brother Rajesh for his land mark with qualitative contributions.

gkrishna
10th August 2014, 06:37 PM
dear rajesh sir

all the best for your 2000 post

endrum natpudan

krishna

gkrishna
10th August 2014, 06:41 PM
dear madhu sir

your post on sankar ganesh music in both malayalayam (lasharchanai kandu) and tamil (ponnoviyum ondru - kumari pennin ullathile) excellant

dear rajesh sir

your post on kunguma thumbigal song is also good .enjoyed both the songs

thanks

regards

gk

Gopal.s
10th August 2014, 06:59 PM
வீ.குமார்.

வரதராஜுலு குமார் 1934 இல் பிறந்தவர்(1996 இல் மறைவு).முதலில் இசையில் நாட்டமில்லாமல் இருந்தவர்,பிறகு ஆர்மோனியம் கற்று சிறிதே கர்நாடக இசை கற்று ,எங்கோ குமாஸ்தாவாக பணியாற்றியவர்,பிறகு நாடகங்களுக்கு இசையமைக்க தொடங்கி, இன்னொரு குமாஸ்தா கே.பாலச்சந்தரின் ,ராகினி creations நாடகங்களுக்கு இசையமைத்தது வாழ்வின் திருப்பு முனை.அவரோடு சேர்ந்தே நீர்க்குமிழி அறிமுகம்,.

நீர்க்குமிழியில் அனுபவம் இல்லை என்பதால் அனுபவஸ்தர் ஆர்.குலசேகர முதலியார் என்கிற ஆர்.கே.சேகரை(திலீப் என்ற ரகுமானின் அப்பா) இணை சேர்த்து ,இறங்கி வெற்றி கண்டார். தொடர்ந்து நாணல்,மேஜர் சந்திரகாந்த்,எதிர் நீச்சல்,இரு கோடுகள் என்ற தொடர் வெற்றிகள்.

இவரை ஆதரித்தவர்கள் கே.பாலசந்தர் வீ. ஸ்ரீனிவாசன் (முக்தா),என்.எஸ்.மணியம்.(கே.பீ.சிஷ்யர்).அப்போத ு உச்சத்தில் இருந்த கே.வீ.மகாதேவன்,எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்களுடன் பட உலகில் இணையாக தனக்கென ஒரு பாணி ஏற்படுத்தி வெற்றி பெற்றார்.

ஓரளவு ஹிந்துஸ்தானி,மேற்கத்திய இசை இவற்றிலும் பரிச்சயம் கொண்டு ,அழகாக படங்களில் பயன் படுத்தினார். இவரது நேர்மையும் ,வாய்மையும் இவரை கை விட்டு ,மாயவ நாதன் என்ன கதியானாரோ ,அங்கேயே கொண்டு நிறுத்தியது. அரங்கேற்றம் என்ற மெகா வெற்றி படத்துடன் கே.பீ யை மன கசப்புடன் பிரிந்தவர்,பிறகு பார்க்கவே இல்லை என்று கேள்வி.பட உலகம் ,இவருக்கு செய்த ஒரே பிரதி பலன் ,நிறைய சம்பள பாக்கி.உதாசீனம்.

எனது பிரிய இசையமைப்பாளர்களில் ஒருவர்.

இவரின் மறக்க முடியாத பாடல்கள்.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா , நீரில் நீந்திடும், கன்னி நதியோரம்- நீர்க்குமிழி.

குயில் கூவி துயில் எழுப்ப, என்னதான் பாடுவது,விண்ணுக்கு மேலாடை- நாணல்.

நேற்று நீ சின்ன பப்பா , கல்யாண சாப்பாடு போடவா, ஒரு நாள் யாரோ -மேஜர் சந்திரகாந்த்.

வெற்றி வேண்டுமா, அடுத்தாத்து அம்புஜத்தை, சேதி கேட்டோ , தாமரை கன்னங்கள் -எதிர் நீச்சல் .

தம்பி வாடா அடிச்சது, தொட்டதா தொடாததா,பறவைகள் சிறகினால்,நந்தன் வந்தான்-நினைவில் நின்றவள்.

முந்துங்கள் இடத்துக்கு, புன்னகை மன்னன் - இரு கோடுகள்.

மயக்கத்தை தந்தவன்,நீ ஆட ஆட அழகு,நல்ல நாள் பார்க்கவோ,வா வாத்யாரே- பொம்மலாட்டம் .

அத்தான் நிறம் சிகப்பு,கண்ணொரு பக்கம் , விளக்கே நீ கொண்ட -நிறை குடம்.

கண்ணான கண்ணுறங்கு, முள்ளுக்கு ரோஜா சொந்தம், எங்கெல்லாம் வளையோசை, தித்திக்கின்றதா முத்தமிட்டது- வெகுளி பெண் .

நான் உன்னை வாழ்த்தி, நித்தம் நித்தம் ஒரு - நூற்றுக்கு நூறு.

காதோடுதான், உனக்கென்ன குறைச்சல் - வெள்ளி விழா.

ஆண்டவனின் தோட்டத்திலே ,மூத்தவள் நீ கொடுத்தாய்,ஆரம்ப காலத்தில் -அரங்கேற்றம்.

புன்னகையோ பூ மழையோ - டெல்லி டு மெட்ராஸ்.

கண்ணெல்லாம் உன் வண்ணம் - ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு .

நான் ரோமாபுரி ராணி, பாடாத பாட்டு- சவாலுக்கு சவால்.

ஆள தொட்டு தோள தொட்டு - மாப்பிள்ளை அழைப்பு.

தாகம் அது பருவத்தில் ஒரு வகை,பட்டெடுத்து விரிக்கவா - உனக்கும் எனக்கும்.

பனி மலரோ குளிர் நிலவோ - பொன் வண்டு.

உன்னிடம் மயங்குகிறேன் ,எழுதாத பாடல் ஒன்று- தேன் சிந்தும் வானம்.

வாழ்வில் சௌபாக்கியம் ,என்னோடு என்னன்னவோ - தூண்டில் மீன்.

இனங்களிலே என்ன இனம் - நல்ல பெண்மணி.

நாள் நல்ல நாள் - பணக்கார பெண்.

தேவன் ஏசுவின் வேதம், மாணவன் நினைத்தால் - ராஜ நாகம்.

மதனோத்சவம் ரதியோடுதான்,ஐயராத்து பொண்ணு சொன்னா- சதுரங்கம்.

Gopal.s
10th August 2014, 07:10 PM
கே.சொர்ணா.

அதிர்ஷ்டக்கட்டை இசையமைப்பாளரின் (வீ.குமார்) அதிர்ஷ்டக்கட்டை மனைவி கே.சொர்ணா. (சொர்ணலதா அளவு ,இவர் புண்ணியம் செய்யவில்லை) . வாய்ப்பு தேடும் பாடகியாக அறிமுகமாகி குமாரின் மனைவியானவர். open Voice ,Husky Voice என்று எல்லாவற்றிலும் பாடும் திறமையிருந்தும் , வாய்ப்பு மறுக்க பட்டவர் .இவர் கணவரே ,இவருக்கு சில வாய்ப்புகளே கொடுத்தார்.ஆனாலும் ,அத்தனை வாய்ப்பையும் பயன் படுத்தி இவர் வெற்றி கண்டார்.

மறக்க முடியாத பாடல்கள் .

சேதி கேட்டோ - எதிர் நீச்சல்.

கண்ணெல்லாம் உன் வண்ணம் - ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு .

இனங்களிலே என்ன இனம்- நல்ல பெண்மணி.

நாள் நல்ல நாள் - பணக்கார பெண்.

தாகம் அது பருவத்தில் - உனக்கும் எனக்கும்.

என்னோடு என்னென்னவோ ரகசியம்- தூண்டில் மீன்.

ஒரு பார்வை பார்க்கும் போது - நங்கூரம்.

Gopal.s
10th August 2014, 07:39 PM
நாதநாமகிரியா.

இந்த ராகம் அப்படியே கம்பீர ஓட்டம். இந்த ராகத்தை கேட்கும் போது ,பக்தி,உருக்கம், வீரம்,தன்னம்பிக்கை நிறைந்த கேள்விகள் மனதில் உருவாகும்.

இது மாயா மாளவ கௌளை ராகத்தின் ஜன்யமே என்றாலும், பல பாடல்களில் விற்பன்னர்களுக்கே இது மாயாவா, நாதமா என்று சந்தேகம் கிளப்பும் வகையில் உறவு.(மதுரை மரிகொழுந்து).இசையமைப்பாளர்கள் அபூர்வமாகவே கையாண்ட ராகம். ஆனால் கர்நாடக composer களுக்கு அல்வா போல.ஹிந்துஸ்தானியில் பைரவ் இன இணை.

அந்த படத்தில் ,புராண பட மேதை, ஒரு இளம் நடிகரை வைத்து பரீக்ஷித்தார்.ஆனாலும்,இதே வேடத்தில் முன்பே நடித்திருந்த ,நடிக மேதை தேவரை ,வீரபாகு தேவர் என்ற முருகனின் அண்ணனாக போட்டு ,அவர் பாத்திரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்த பின்பே,விநியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைத்து படம் வெற்றியானது. (சம்பந்தமில்லாமல் மாற்றணி நண்பர்களால் தொல்லைக்குள்ளான படங்களில் ஒன்று. ).அந்த படத்தில் வெற்றியின் மிதப்பில் யானை கம்பீரத்துடன் civilian march ஒத்த வீர நடை போடும் வீரபாகுவால் ,மனதில் என்றும் நின்ற பாடல் "வெற்றி வேல் வீர வேல்".

அந்த படம் இயக்குனர்திலகம், அருட்செல்வர் பாதையில் பயணித்து, திரை இசை திலகம் துணையுடன் வெற்றி கண்டு, இரு திலகங்களையும் முந்திய வசூல் கண்டார் 1971 இல். (இதற்கு முன்பே 1963 கற்பகம்,1968 பணமா பாசமா வில் இந்த சாதனைகள் செய்தவர்)அந்த படத்தில் ,இந்த குறிப்பிட்ட பாடல் ஆதி பராசக்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையான மறக்க முடியாத ஒன்று. (மற்றது மாயி மகமாயி).அபிராம பட்டரின் நிலா வரும் போடா சவாலில் "சொல்லடி அபிராமி ".

இது ஒரு முக்கிய நடிகருக்கு திருப்பு முனை படம். நடிகர்திலகத்தின் பெருந்தன்மை ஊரறிந்த ஒன்று. சுலபமாக நற்பெயர் வாங்கி புகழ் பெற வேண்டிய பாத்திரத்தில் ,அவரையே இரட்டை வேடம் ஏற்க சொல்லி நண்பர்கள் வலியுறித்திய போதும் ,அப்போது வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்துக்கு இந்த பாத்திரத்தை விட்டு கொடுத்தார்.நான் வாழ வைப்பேன் என்று சொல்லி சூப்பர் ஸ்டார் ஐ வாழ வைத்து,ரசிகர் கூட்டத்தை பரவலாக்க துணையானார். அந்த படத்தில் கால் ஊனமான தங்கைக்கு ஆறுதல் சொல்வதாக அமைந்த இசைஞானி-பாடகர்திலகத்தின் அபூர்வ முத்து ."எந்தன் பொன் வண்ணமே".

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--nadanamakriya.html

rajeshkrv
11th August 2014, 03:38 AM
2000 பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த வாசு ஜி, கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, சி.கா எல்லோருக்கும் நன்றிகள்..

rajeshkrv
11th August 2014, 03:48 AM
வி.குமார் அடேயப்பா மெலோடி கிங் என்ற பட்டம் இவருக்கு பொருந்தும்.. எப்படிப்பட்ட பாடல்கள் ..

எப்பவுமே ஓப்பனிங் பாடல் இசையரசிக்குத்தான்...

இதோ புன்னகை மன்னன் பூவிழி கன்னன் பாடல் தெலுங்கில் ...

செளகாரின் வேடத்தில் ஜமுனா .. ஜெயந்தி தன் வேடத்தை தெலுங்கிலும் செய்தார்
இசையரசியும் ஜமுனாராணி அங்கேயும்

https://www.youtube.com/watch?v=pP774k7z4S0


கன்னடத்தில் இதோ இசையரசியும் வாணிஜெயராமும்

https://www.youtube.com/watch?v=rkWbXhVtd84

madhu
11th August 2014, 05:25 AM
கே.சொர்ணா.

மறக்க முடியாத பாடல்கள் .
நாள் நல்ல நாள் - பணக்கார பெண்.


கோபால் ஜி...

"நாள் நல்ல நாள்" பாடலை டி.எம்.எஸ்ஸுடன் பாடியது வாணி ஜெயராம் என்று நினைவு.

vasudevan31355
11th August 2014, 07:07 AM
நேற்றே நிலாவை நம்ம SSS தயவில் பார்த்து ரசித்தாகி விட்டது..

அடுத்த ரிக்வெஸ்டை மெதுவாக வைக்கலாம் என்று வரலக்ஷ்மி.. வரலக்ஷ்மி

( சிக்கா.. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் எஸ்.வரலக்ஷ்மி சொந்தக் குரலில் பாடும் "காதலாகினேன்.. எவர் ஏது சொன்ன போதும் நான்... காத..லாகினேன்" பாட்டு கேட்டதுண்டா ? )

இருக்கட்டும்.. வரலக்ஷ்மி விரதம் அன்றைக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன் என் அடுத்த ரிக்வெஸ்டை.

ஜெய்சங்கர் நடித்து வெளிவராமல் போன "கதா நாயகன்" என்ற படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடும் ஒரு அருமையான பாட்டு..

"சில நேரங்களில் சில மனிதர்களை
சிந்தித்து பார்த்தால் சிரிப்பு வரும்
என்ன கோலமோ என்ன கொள்கையோ
இதயம் சிலருக்கு இரண்டல்லவோ"

என்று ஆரம்பித்து

"சந்திரனுக்கு செல்பவனுக்கு சாம்பார் சாதம் இல்லை.. அங்கு இல்லை
சந்ததி என்று ஒன்பது பிள்ளை இனிமேல் பிறந்தால் தொல்லை.. என்றும் தொல்லை
சோழன் காலக் குடுமி... இதில் காரில் என்ன பவனி
அடி பெண்ணே கொஞ்சம் கவனி
நீயும் ஆண்பாதி பெண் பாதி அவதாரமோ"

என்றெல்லாம் stanzas வரும்..

சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாடலுக்கான படம் தெரியாமல் நான் தேடிக்கொண்டு இருந்த சமயம் நம்ம ராகவ்ஜிதான் கண்டு பிடித்து சொன்னார்.

இந்தப் பாட்டு எங்கேயாச்சும் கிடைச்சா மதுர கானங்கள் திரிக்கு மடக்கி இழுத்துக் கொண்டு வாருங்கள்.

மது சார்,

இழுத்துக் கொண்டு வந்தாகி விட்டது. இதோ நீங்கள் கேட்ட 'கதாநாயகன்' படப்பாடல்

'சில நேரங்களில் சில மனிதர்களை'
சிந்தித்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.

நான் அப்போது மிகவும் விரும்பிக் கேட்ட பாடல். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி மது சார்.

http://www.mediafire.com/download/3yadw89sfdwqzav/Kadhanayagan+-+Sila+Nerangalil.mp3

(இப்பாடலை இணையத்தில் தந்து உதவி செய்த அன்பு நண்பர் பாடல் பிரியன் அவர்களுக்கு நமது திரியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!)

madhu
11th August 2014, 07:09 AM
வி.குமாரின் இசையில் அர்த்தமுள்ள இனிமையான பாடல்கள் நிறைந்த படம் அதிர்ஷ்டம் அழைக்கிறது.
பாவம்.. படத்துக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லை.. வெகு நாட்கள் ஓடி வசூலைக் குவிக்காமல் போனது..

Eternal beauty ஸ்ரீவித்யா அய்யராத்து பெண்ணாக வந்து முத்துராமனை எண்ணிப்பாட அவரோ
ஏசுவின் வழி செல்லும் ஜெயசுதாவைக் காதலிக்கிறார். சுசீலா, டி.எம்.எஸ்ஸின் இனிய குரல்களைக்
கேட்க என்ன தவம் செய்தேன் ?

http://youtu.be/ZPQvgQBYLXI?list=UUt7EFLq-vYQWV3ZKF_XSlag

வாலியின் படத்தில் கண்ணதாசனின் புத்தகத் தலைப்பு.. அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
என்று டி.எம்.எஸ் குரலில் கேட்கும் தேங்காய் சீனிவாசன்

http://youtu.be/fGS19Qmp00o?list=UUt7EFLq-vYQWV3ZKF_XSlag

பாடகர் ஜேசுதாஸும் பாடகி சுவர்ணாவும் திரையிலே தோன்றிப் பாடிய பாடல்

ஆனந்த திருமணம்

http://youtu.be/2wQHLdrrGck

அப்புறம்.. சுசீலாவின் குரலில் " இந்த வீட்டில் தலையை நீட்டும் அடுத்த வீட்டு வாழை"

ஒரு குடும்பம் இங்கே கோவிலானது

http://youtu.be/CEKyMfd4Vsw

vasudevan31355
11th August 2014, 07:13 AM
மது சார்,

உங்கள் மூலம் எங்களுக்கு 'அதிர்ஷ்டம் அழைக்கிறது'. அற்புதம். இப்போதுதான் சொர்ணா பாடலை எடுத்தேன். எனக்கு சிரமமில்லாமல் செய்து விட்டீர்கள். நன்றி!

madhu
11th August 2014, 07:14 AM
வி.குமாரின் இசையமைப்பில் இன்னொரு அருமையான படம் வெகுளிப்பெண் என்று ஞாபகம்.

"கண்ணான கண்ணுறங்கு", "முள்ளுக்கு ரோஜா சொந்தம்", "எங்கெல்லாம் வளையோசை", "தித்திக்கின்றதா முத்தமிட்டது", " நீதான் மோகினியோ" என்ற பாடல்கள் எல்லாமே இனிமைதான்.

RAGHAVENDRA
11th August 2014, 07:43 AM
நண்பர்களே,
மனதை மயக்கும் மதுரகானங்களால் இன்றும் மக்கள் மனதில் சிரஞ்சீவியாய் நிலைத்திருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா வரும் 16.08.2014 சனிக்கிழமை அன்று மாலை சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நுழைவுச் சீட்டு பற்றிய விவரங்கள் கீழே உள்ள நிழற்படத்தில் காணும் தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம்.

https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/t1.0-9/10544360_773591322691542_1006500887922427685_n.jpg

Gopal.s
11th August 2014, 07:54 AM
வி.குமாரின் இசையமைப்பில் இன்னொரு அருமையான படம் வெகுளிப்பெண் என்று ஞாபகம்.

"கண்ணான கண்ணுறங்கு", "முள்ளுக்கு ரோஜா சொந்தம்", "எங்கெல்லாம் வளையோசை", "தித்திக்கின்றதா முத்தமிட்டது", " நீதான் மோகினியோ" என்ற பாடல்கள் எல்லாமே இனிமைதான்.

மது,



ரொம்ப நன்றி. சொர்ணா குரல் சிறிது வாணியின் குரலின் பிரதி போல உள்ளதால் நேர்ந்த குழப்பம். நாள் நல்ல நாள் வாணியே.



வெகுளி பெண் விடுபட்டது ,சற்றே நினைவுகளின் தடம் புரளல். திருத்தி விட்டேன் ,அசல் பதிவிலேயே.

Richardsof
11th August 2014, 08:10 AM
CONGRATULATIONS VASU SIR


http://i61.tinypic.com/123se2u.jpg

http://i60.tinypic.com/maw4sg.jpg

http://youtu.be/_YI8AHFvMcg

rajeshkrv
11th August 2014, 08:12 AM
வாசு ஜி காலை வணக்கம் வாங்கோ வாங்கோ....

வி.குமாரின் இசையை மறக்க முடியுமா .. எத்தனை எத்தனை பாடல்கள் .எத்தனை முத்துக்கள்

பொதுவாகவே வி.குமார் வாலி கூட்டணி ஏ கிளாஸ்.

கண்ணதாசனுடனுன் பணியாற்றினார்
அப்படி வி.குமார் கண்ணதாசன் கூட்டணியில் எனக்கு மிகவும் பிடித்த படம் ஆயிரம் பொய்

அதில் புலவர் சொன்னதும் பொய்யே பாடலை பாடகர் திலகும் இசையரசியும் இசைத்த அற்புத காதல் பாடல்

https://www.youtube.com/watch?v=yuh5jpLmvus

தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை பாடல் இசையரசியின் குரலில் மிகவும் அழகான பாடல்

http://www.dailymotion.com/video/x16nwue_thillaiyile-sabapathy-aayiram-poi-1969_shortfilms

vasudevan31355
11th August 2014, 08:24 AM
கோ/மது சார்,

எனது இன்னொரு பிரியமான பாடகி சொர்ணாவை பெருமைப்படுத்தியதற்கு நன்றி! என்னால் மறக்கவே முடியாத இன்னொரு பாடகி சொர்ணா. சொர்ணாவின் பாடல்கள் என் சேமிப்புக் கிடங்கில் உள்ளன.

இன்னும் சில அபூர்வங்கள்.

இளமைக் கோவில் ஒன்று- ஜானகி சபதம்

ஓ..மம்மா... டியர் மம்மா- 'மங்கள நாயகி' சுசீலாம்மாவுடன்

மாவில மாப்பிள்ள மண்ணாங்கட்டி போல- 'மங்கள நாயகி'

இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் - நல்ல பெண்மணி

பட்டத்து ராஜன் வந்தது போல - நல்ல பெண்மணி

ஆட்டுக்கு வால அளந்து வச்சவன் புத்திசாலி - 'புத்திசாலிகள்'. (ஜமுனா ராணி, பி.பி.எஸ். எஸ்.வி.பொன்னுசாமி, பி.டி.சம்பந்தம் இவர்களுடன்) செம பாட்டு.

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்னு- பத்தாம் பசலி (பாடகர் திலகத்துடன்)

பனி மலரோ- பொன்வண்டு (பாடகர் திலகத்துடன்)

முத்தம் முத்தம் செந்தேனல்லவோ- 'புத்திசாலிகள்'.(பாடகர் திலகத்துடன்)

கனவுகளே ஓராயிரம் கனவுகளே- ராஜநாகம்

மாமியார்க்குக் கல்யாணம்- 'புத்திசாலிகள்'.

vasudevan31355
11th August 2014, 08:27 AM
காலை வணக்கம் ராஜேஷ் சார்.

தங்களது முத்துமுத்தான 2000 பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.( சரக்கு அத்தனையும் முறுக்கு)

இசையரசியின் புகழை எட்டுத் திக்கும் பரவச் செய்யும் தங்கள் சேவை பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டது.

vasudevan31355
11th August 2014, 08:34 AM
பொதுவாகவே வி.குமார் வாலி கூட்டணி ஏ கிளாஸ்.

கண்ணதாசனுடனுன் பணியாற்றினார்
அப்படி வி.குமார் கண்ணதாசன் கூட்டணியில் எனக்கு மிகவும் பிடித்த படம் ஆயிரம் பொய்

அதில் புலவர் சொன்னதும் பொய்யே பாடலை பாடகர் திலகும் இசையரசியும் இசைத்த அற்புத காதல் பாடல்

தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை பாடல் இசையரசியின் குரலில் மிகவும் அழகான பாடல்

http://www.dailymotion.com/video/x16nwue_thillaiyile-sabapathy-aayiram-poi-1969_shortfilms

ராஜேஷ் சார்,

புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே

என்னுடைய மிக விருப்பமான அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.

இப்பாடல் சென்சார் ஆவதற்கு முன் பிரச்னைக்கு உள்ளானது.

பாடலில் சில வரிகளை மாற்றி விடும்படி அதிகாரிகள் கூறி விட்டனராம்.

பிரச்சனைக்குரிய வரிகள்.

என்னதான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம்
இங்குதான் தோன்றியது முத்தமிழ் சங்கம்
பொன்னிலே தோய்த்தெடுத்த பூவையர் அங்கம்

இதுவரி பிரச்சனை இல்லை.

அடுத்த வரிதான்.

'போதையில் ஆடவைக்கும் ஆடவர் அங்கம்'

பின்

'போதையில் ஆடவைக்கும் ஆடலரங்கம்'

என்று மாற்றி விட்டார்கள்.

ஆனால் என்ன ஒரு அழகான பாடல். நன்றி சார்.

rajeshkrv
11th August 2014, 08:35 AM
காலை வணக்கம் ராஜேஷ் சார்.

தங்களது முத்துமுத்தான 2000 பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.( சரக்கு அத்தனையும் முறுக்கு)

இசையரசியின் புகழை எட்டுத் திக்கும் பரவச் செய்யும் தங்கள் சேவை பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டது.

ஆஹா வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் வாங்கியதுபோல் ஆகிவிட்டது... இசையரசியையும் பாடகர் திலத்தையும் எட்டு திக்கும் கொண்டுசெல்வதில் அணில் போல் சேவை செய்ய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில் அளவில்லாத ஆனந்தம்

vasudevan31355
11th August 2014, 08:36 AM
'தில்லையிலே' உச்சரிப்பில் ஒருதடவை 'தில்.....லையிலே' என்று சொக்க வைப்பது மாதிரி ஒரு இழு இழுப்பார் பாருங்கள் சுசீலாம்மா. அற்புதம்.

vasudevan31355
11th August 2014, 08:52 AM
ராஜேஷ் சார்,

'உன்னைச் சுற்றும் உலகம்' படத்தில் நம் அரசியின் அரிதான ஒரு பாடல்.

சீதாவைத் தேடி ஸ்ரீராமன் வந்தான்
நீதானே என் வாழ்வு என்றான்

விதுபாலா வின்சென்ட் ஜோடியில். சரியா ராஜேஷ் சார்.

அதை விடுவோம். என்ன ஒரு அருமையான பாடல். வசீகரிக்கும் குரல்.
அழகான டியூன்.

மை கொண்ட கண்ணும்
மலர் கொண்ட குழலும்

சூப்பர்.

நடுவில் கமல் பிளே பாய். அது யார் சார் ஜோடி? 'குமாஸ்தாவின் மகள்' குள்ளச்சி உஷா போலவும் தெரிகிறது. 'கவர்ச்சிக் கன்னி' மாயா போலவும் தெரிகிறது.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kiiC5ahbo2c

rajeshkrv
11th August 2014, 08:59 AM
சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் .. ஆஹா என்ன அருமையான பாடல் நினைவூட்டலுக்கு நன்றி ..
விதுபாலா .. இன்னொரு நல்ல நடிகை .... எல்லா பாத்திரங்களையும் அற்புதமாக செய்வார்..

கமல் கூட ஆடுவது யாரென்று தெரியவில்லை .. ராகவ் ஜி, கோபால் ஜி, எஸ்.வி ஜி சொல்லுவார்கள் என்று நம்புவோம்

rajeshkrv
11th August 2014, 09:10 AM
அன்பு என்னாளும் தாயகலாம் பிள்ளை இல்லாமலே
தங்கை உள்ளத்தை நான் கொள்ளலாம் அண்ணன் சொல்லமலே
கண்கள் தாலட்டினால் யாரும் உறவாகலாம்

... ஆஹா என்ன அருமையான டியூன், இசையரசி பாடும் இந்த வரிகள் மெய் சிலிர்க்க வைக்கும்

பாடகர் திலகம் மட்டும் சளைத்தவரா .. தூள் கிளப்பியிருப்பார்

http://www.youtube.com/watch?v=amB7c8u7ii8

vasudevan31355
11th August 2014, 09:38 AM
மேலை வானத்து மேகங்களே
பாலம் போடுங்களேன்
கடலின் கீழ் உள்ள முத்துக்களே
கரையில் வாருங்களேன்.

ஆஹா! "ஓஹோ"பாடல். நடிகர் திலகம், ஜெயசித்ரா அண்ணன் தங்கை கூட்டணி. உடன் ஜெயகணேஷ்.

தமிழ்ப்ப் பாடலகளில் இன்னொரு நல்முத்து இப்பாடல்.

vasudevan31355
11th August 2014, 09:42 AM
andru

http://static.manoramaonline.com/ranked/online/MM/English/Multimedia/Slideshow/News/3541821442_Sukumari%203.jpg

indru

http://www.thehindu.com/multimedia/dynamic/00737/30TVMW_VIDHUBALA_737175e.jpg

gkrishna
11th August 2014, 09:55 AM
நண்பர் வாசு சார் அவர்களுக்கு இனிய காலை வணக்கம்

5000 உபயோகமுள்ள தகவல்கள் நிறைந்த பதிவுகளை அள்ளி வழங்கிய நண்பர் வாசு சார் அவர்களுக்கு வாழ்த்துகள்

வாசு சார் அவர்களின் உணர்ச்சிகள் படத்தின் பாடல் பதிவில் நடிகை லலிதஸ்ரீ பற்றி குறிப்பிட்டு இருந்தார் . இது சம்பந்தமாக எனது நண்பர் ஒருவருக்கு இவரின் மேல் தகவல் மற்றும் இன்றைய தகவல் பற்றி எழுதி கேட்டு இருந்தேன். அவர் அனுப்பிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்

லலிதாஸ்ரீ- இவரது இயற்பெயர் சுபத்ரா. திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவர்தான் கமலஹாசன் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து ஆர்.சி,சக்தியின் இயக்கத்தில் உருவான “உணர்ச்சிகள்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் மலையாளத்தில் நடித்த முதல்படம் வெளிவரவில்லையென்றாலும் 1976-லிருந்து இதுவரை ஆறு மொழிகளில் 460 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். 1984 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில் இவர் உச்சத்திலிருந்தவர். வருடத்திற்கு 34 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். புகழ்பெற்ற மலையாள நகைச்சுவை நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாருடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன்பின் படிப்படியாக படங்கள் குறைய ஆரம்பித்தது. ”பலராம் வெசர்ஸ் தாராதாஸ்” என்ற படம் இவர் கடைசியாக நடித்தது. படங்கள் குறையத் துவங்கியதும் தந்தை காலமானதும் இவரது தாயாருக்குக் கேரளாவில் வசிக்க விருப்பம் குறைந்துவிட இவரது அக்கா ஒருவருடனும் தம்பி ஒருவருடனுமாக சென்னைக்குப் புலம்பெயர நேரிட்டது.

நடிகை ஜெயபாரதி இவருக்காக பல உதவிகள் செய்தவர். ஜெயபாரதி ஏராளமான படங்களுடன் உச்சலிருந்த காலகட்டத்தில் அவர் நடிக்கும் பல படங்களில் லலிதாஸ்ரீக்கு வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்துள்ளார். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் பகதூரிடம் ஜெயபாரதி லலிதாஸ்ரீயைப் பற்றி தெரிவித்து அவரது பல படங்களில் ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்துள்ளார். பகதூரும் பல வகைகளில் இவருக்கு உதவிகள் புரிந்துள்ளார். இவ்விருவருக்கும் இவர் கடமைப்பட்டுள்ளதாக பல பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார்.

இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உட்பட 6 மொழித் திரைப்படங்களுக்கு மொழிமாற்றுப்பணிகளும் செய்து வருகிறார். தற்போது சென்னையில் அழகு நிலையம் ஒன்றை ஸ்தாபித்து அதனை நடத்தி வருகிறார். இவரது கணவர் பெயர் விஜயசாரதி. இவர்களுக்குக் குழந்தையில்லை. அதனால் விஜி என்ற விஜி விஜயகுமார் என்பவரது மகள் சுஜித்ரா என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார். சுஜித்ராவும் லலிதாஸ்ரீயும் இணைந்தே அழகு நிலையத்தை நடத்தி வருகின்றனர்.

இவர் நடித்த படங்கள் சில:-

தேவி கருமாரியம்மன் [தமிழ்], உணர்ச்சிகள் [தமிழ்], அலாவுதீனும் அற்புத விளக்கும் [தமிழ்], அப்ராஜிதா, அன்னியருடே பூமி, விட பறயும் மும்பே, மழு, அனுராஹக் கோடதி, ஈ யுகம், கடமத்தச்சன், முகூர்த்தம் 11.30, இத்திரிப்பூவே சுவந்நப்பூவே, தத்தம்மே பூச்சா பூச்சா, ஸ்வப்னமே நினக்கு நந்நி.

1979-இல் வெளிவந்த அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் “சைனபா” என்ற கதாபாத்திரத்தில் லலிதாஸ்ரீ
அன்றும் இன்றும் http://antrukandamugam.files.wordpress.com/2014/08/lalithasree-alavudinum-arputha-vilakkum-1979.jpg?w=593&h=338http://antrukandamugam.files.wordpress.com/2014/08/lalitha-sree-1.jpg?w=593&h=453

chinnakkannan
11th August 2014, 10:02 AM
வி.குமார், சொர்ணாக்கா, நாத நாமக்ரியா என தகவல் கள் தந்த கோபால் சாருக்கு நன்றி..

என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கிறது நல்லபாடல்..

நான் வாழ வைப்பேன் - ரஜினிக்கு ஒரு மிகப் பெரிய ப்ரேக் கொடுத்த படம் என்றால் மிகையில்லை..எந்தன் பொன் வண்ணமே பிடிக்கும்.. டபக்கென துள்ளல் பாட்டு ஆகாயம் மேலே பாதாளம்கீழே ஆனந்த உலகம் நடுவினிலே.. அதுவும் பிடிக்கும்

மை கொண்ட கண்ணும்
மலர் கொண்ட குழலும் // இதுவும் அழகுப் பாட்டு.. நன்றி வாசு சார்..

ராஜேஷ் கறுப்பு வெள்ளைக் கட்டழகி விதுபாலாவை பற்றி ப்பேசியாகிவிட்டது..இப்படிக் கேட்டால் வாசு சார் இப்படித் தான் இ.புகைப்படம் போட்டுபயமுறுத்துவார்..இருந்தாலும் நேரம் இரவு நேரம் என காலங்கார்த்தால மனதில் அந்தப் பாடல் ஹம்மிங்க் செய்கிறது..

லலிதா ஸ்ரீ பற்றி எனக்கு நினைவில்லை க்ருஷ்ணா ஜி தகவலுக்கு நன்றி (சாயல் ஜெ.சி மாதிரி இல்லை)

vasudevan31355
11th August 2014, 10:02 AM
ராஜேஷ் சார்,

இசையரசி மலையாளத்தில் பின்னி எடுத்த ஒரு பாடல்.

'தீர்த்தயாத்ரா' படத்தில்

'சந்த்ரகலாதரன்னு கண் குளிர்க்கான் தேவி' (மாணிக்க வீணையேந்தும் டைப்பில்)

கேட்க கேட்க அவ்வளவு சுகம். நிறுத்த மனமே வரலை.


http://www.youtube.com/watch?v=EZd73Zn43xE&feature=player_detailpage

vasudevan31355
11th August 2014, 10:05 AM
அஹோ! வாரும் பிள்ளாய் கிருஷ்ணா அவர்களே! ஓம் லலிதாயஸ்ரீ நமஹ.:)

JamesFague
11th August 2014, 10:06 AM
Mr Vasu JI

See the majectic walk of NT in the Ratha Pasam Song. Amazing.

Regards

vasudevan31355
11th August 2014, 10:08 AM
சின்னக்கண்ணன் சாரை இதைவிட இனிமேல் யாரும் பயமுறுத்த முடியாது.:)

http://matineestars.com/malayalam/tv-actress/lalitha-sree/lalitha-sree-2.jpg

rajeshkrv
11th August 2014, 10:08 AM
5000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் சிங்கம் வாசுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

கிருஷ்ணா ஜி , லலிதஸ்ரீ பற்றி உணர்ச்சிகள் பாடல் போதும் நானும் அவரது “இன்னாள்தே தாராம்” நிகழ்ச்சியின் லிங்க் கொடுத்திருந்தேன்...

சி. கா .. விதுபாலா இன்றும் ஒருவித மெச்சூரிட்டி அழகு தான்...

வாசு ஜி.. தீர்த்தயாத்ரா ...ஏ.டி.உம்மரின் இசையில் இசையரசியின் அற்புத கானம்.. கவியூர் பொன்னம்மா பார்க்க ஃபடாபட் ஆடும் நடனம்
பர்வத நந்தினி இன்னிவள் கதம்படி ஊர்வசி மேனக சுந்தரி மார் ரம்ப திலோத்தம நர்த்தகி மார்.. என்ன அருமையான பாடல்
கார் சிடியில் ரிபீட் செய்து ரிபீட் செய்து சிடியை தேய்த்துவிட்டேன் ...அவ்வளவு பிடித்த பாடல்

rajeshkrv
11th August 2014, 10:13 AM
வாசு ஜி , கிருஷ்ணா ஜி, சி.கா
ஜெயப்பிரதாவின் அறிமுகம் சிரி சிரி முவ்வா
இசையரசிக்கு 3’வது முறையாக தேசிய விருது பெற்று தந்த பாடல்

மகாதேவன் ஐயாவின் அற்புத இசை

ஜும்மந்தி நாதம் சையந்தி பாதம்...

http://www.youtube.com/watch?v=6ZKt-oZ_hgI

ஹிந்தியில் சர்க்கம் .. டஃப்லி வாலே டஃப்லி பஜா

http://www.youtube.com/watch?v=uucUbkOn4p8

rajeshkrv
11th August 2014, 10:14 AM
ஜெயப்பிரதா என்ன அழகு.... சதயஜித்ரே பாராட்டிய இண்டியன் பியூட்டி .. (லக்*ஷ்ணம்)

vasudevan31355
11th August 2014, 10:15 AM
ஒரே ஒரு விதையைத் தூவினால் எங்கள் ராஜேஷா(சா)ரிடம் இருந்து 1000 விதைகள் விருந்தாகக் கிடைக்கின்றனவே! கோடு கிழித்தால் உடனே ரோடு.

chinnakkannan
11th August 2014, 10:17 AM
//அஹோ! வாரும் பிள்ளாய் கிருஷ்ணா அவர்களே! ஓம் லலிதாயஸ்ரீ நமஹ.// ஹி ஹி..:) ஆமாம் அந்த எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தை தானோ.. லலிதா பத்தி நாட் மச் டாக்ட் இல்லியோ.. (ஹப்பாடி பத்த வச்சாச்சு :) )

chinnakkannan
11th August 2014, 10:20 AM
வாசுசார்.. ஒரு சின்னப் போஸ்ட் எழுதுவதற்குள் இப்படி பயமுறுத்தலாகுமா..எனிவே இன்னிக்கு காயத்ரி ஜபமோன்னோ..தைரியம் மனசுல இருக்கு..


ராஜேஷ்.. ஓகே.. நான் வி.பா ஆட்டைக்கு வரலை :) ஆமா சிரி சிரி முவ்வா தேவியில் ரிலீஸ் ஆன போது பார்க்க முடியவில்லை.. அப்புறமும்.. ஜெயப்ரதாவை என் கண்கள் சந்தித்தது மன்மத லீலையில் தான்..

rajeshkrv
11th August 2014, 10:20 AM
ஒரே ஒரு விதையைத் தூவினால் எங்கள் ராஜேஷா(சா)ரிடம் இருந்து 1000 விதைகள் விருந்தாகக் கிடைக்கின்றனவே! கோடு கிழித்தால் உடனே ரோடு.

அண்ணன் காட்டிய வழியம்மா

Richardsof
11th August 2014, 10:20 AM
ennai maranthu vidaatheergal rasigargale********

http://i57.tinypic.com/5xsz07.jpg

rajeshkrv
11th August 2014, 10:21 AM
வாசுசார்.. ஒரு சின்னப் போஸ்ட் எழுதுவதற்குள் இப்படி பயமுறுத்தலாகுமா..எனிவே இன்னிக்கு காயத்ரி ஜபமோன்னோ..தைரியம் மனசுல இருக்கு..


ராஜேஷ்.. ஓகே.. நான் வி.பா ஆட்டைக்கு வரலை :) ஆமா சிரி சிரி முவ்வா தேவியில் ரிலீஸ் ஆன போது பார்க்க முடியவில்லை.. அப்புறமும்.. ஜெயப்ரதாவை என் கண்கள் சந்தித்தது மன்மத லீலையில் தான்..

ஹ்ம்ம் . மன்மத லீலையில் ஆரம்பித்ததாக்கும் உமது லீலை :)

rajeshkrv
11th August 2014, 10:22 AM
முன்பு வாசு ஜி ஸ்ரீப்பிரியா பற்றி சொல்லும் கிளாமராக, தாராளாமாக நடித்தவர் என்று சொல்லியிருந்தார், இருந்தாலும் ஆண்களை டம்மியாக்கி பெண்களுக்கு முக்கியத்துவமான பாத்திரங்களை செய்ததில் ஜெய்சித்ராவும் ஸ்ரீப்பிரியாவும் உண்டு .. என்பது என் தாழ்மையான கருத்து

vasudevan31355
11th August 2014, 10:22 AM
ஜெயப்பிரதா என்ன அழகு.... சதயஜித்ரே பாராட்டிய இண்டியன் பியூட்டி .. (லக்*ஷ்ணம்)

சாமுத்ரிகா

Richardsof
11th August 2014, 10:23 AM
http://i61.tinypic.com/2z3rxtt.jpg

gkrishna
11th August 2014, 10:23 AM
வாசு ஜி , கிருஷ்ணா ஜி, சி.கா
ஜெயப்பிரதாவின் அறிமுகம் சிரி சிரி முவ்வா
இசையரசிக்கு 3’வது முறையாக தேசிய விருது பெற்று தந்த பாடல்

மகாதேவன் ஐயாவின் அற்புத இசை

ஜும்மந்தி நாதம் சையந்தி பாதம்...


ஹிந்தியில் சர்க்கம் .. டஃப்லி வாலே டஃப்லி பஜா



லலிதா ஸ்ரீ பற்றி உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி

சிரி சிரி முவ்வ - தமிழில் சிரிக்கும் சலங்கை என்று டப் ஆன நினைவு
மிக அருமையான படம் மற்றும் பாடல் .
இந்த ஜுவந்தி நாதம் பாடலை இரவு நேரத்தில் தனியாக கேட்டு பாருங்கள்
அப்படியே மனது எங்கோ செல்லும்
இப்போது அடிகடி ஜெமினி லைப் இல் இந்த பாடலை கேட்கிறேன்

பாடலில் இசைஅரசியின் குரலில் ஒருவித சோகம் இருக்கும்
இதற்கு திரு விஸ்வநாத் ஓர் பேட்டியில் விளக்கம் கூறி இருந்த நினைவு
'கதாநாயகியிடம் அருமையான பரதம் என்ற கலை குடி புகுந்து உள்ளது
ஆனால் வாய் பேச முடியாத ஊமை .மேலும் சித்தி கொடுமை
ஆனால் இதை எல்லாம் மீறி அவள் காணும் கனவு தன பரதத்தின் மேல் உள்ள காதல் இதை எல்லாம் வெளிப்படும் போது சோகம் வரத்தானே செய்யும் .ஆனால் நாங்கள் rerecording போது காட்சி அமைப்பையும் கதாநாயகி யார் என்பதை மட்டும் தான் கூறினோம் .சுசீலா அம்மாவின் கற்பனையில் உதித்த மெருகு அது '

chinnakkannan
11th August 2014, 10:24 AM
ஜெயப் ப்ரதா பற்றிப் பேச்சு வந்ததனால்..இன்னொரு தங்கப் பதுமை - ஜொலிக்கும் ஜீஹி சாவ்லா..

ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஹீரோ..ஜூஹி சாவ்லா அறிமுகம் ஜூலி என்று..

ஒருஅழகான பாட்டு (படத்தில் நிறையப் பாடல்களும் அழகு) மனதில் நின்றது..

ஒரு மின்னல் போல என் முன்னால் போவது யாரு
என்ன பேரு..என்ன ஊரு
அவள் கண்ணில் நானும் நிலா பார்க்கிறேனே..

நல்ல பாட்டு..முழுக்க வர்ணிப்பு தான் ஜூஹியை.. பார்த்திருக்கிறீர்களா..

vasudevan31355
11th August 2014, 10:24 AM
//அஹோ! வாரும் பிள்ளாய் கிருஷ்ணா அவர்களே! ஓம் லலிதாயஸ்ரீ நமஹ.// ஹி ஹி..:) ஆமாம் அந்த எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தை தானோ.. லலிதா பத்தி நாட் மச் டாக்ட் இல்லியோ.. (ஹப்பாடி பத்த வச்சாச்சு :) )

வந்துட்டாருய்யா வேலை வைக்க வந்துட்டாருய்யா :):)

rajeshkrv
11th August 2014, 10:26 AM
லலிதா ஸ்ரீ பற்றி உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி

சிரி சிரி முவ்வ - தமிழில் சிரிக்கும் சலங்கை என்று டப் ஆன நினைவு
மிக அருமையான படம் மற்றும் பாடல் .
இந்த ஜுவந்தி நாதம் பாடலை இரவு நேரத்தில் தனியாக கேட்டு பாருங்கள்
அப்படியே மனது எங்கோ செல்லும்
இப்போது அடிகடி ஜெமினி லைப் இல் இந்த பாடலை கேட்கிறேன்

பாடலில் இசைஅரசியின் குரலில் ஒருவித சோகம் இருக்கும்
இதற்கு திரு விஸ்வநாத் ஓர் பேட்டியில் விளக்கம் கூறி இருந்த நினைவு
'கதாநாயகியிடம் அருமையான பரதம் என்ற கலை குடி புகுந்து உள்ளது
ஆனால் வாய் பேச முடியாத ஊமை .மேலும் சித்தி கொடுமை
ஆனால் இதை எல்லாம் மீறி அவள் காணும் கனவு தன பரதத்தின் மேல் உள்ள காதல் இதை எல்லாம் வெளிப்படும் போது சோகம் வரத்தானே செய்யும் .ஆனால் நாங்கள் rerecording போது காட்சி அமைப்பையும் கதாநாயகி யார் என்பதை மட்டும் தான் கூறினோம் .சுசீலா அம்மாவின் கற்பனையில் உதித்த மெருகு அது '

100% உண்மை .. இளம் விதவையும் கூட என்று நினைக்கிறேன்... ஞாபகமில்லை
ஆம் சிரிக்கும் சலங்கையில் ஜும்மென்று நாதம் என்று ஒலித்தது..

Richardsof
11th August 2014, 10:28 AM
THUNIVE THUNAI -1976

PRABHA

http://i61.tinypic.com/16jgayr.jpg

vasudevan31355
11th August 2014, 10:29 AM
கிருஷ்ணா சார்!

தங்கள் வாழ்த்திற்கு நன்றி! மறந்து போன பல தென்னக திரைப்படக் கலைஞர்களைப் பற்றிய நினைவுகளுக்காக நீங்கள் பல்வேறு சிரமப்பட்டு பலரிடம் தொடர்பு கொண்டு அளித்து வரும் பதிவுகள் மெச்சத் தகுந்தவை.
நிஜமாகவே அனைவரும் பாராட்டி மகிழ வேண்டிய சேவை.

என் உளப்பூர்வமான நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

Richardsof
11th August 2014, 10:29 AM
http://i62.tinypic.com/rh1zr9.jpg

gkrishna
11th August 2014, 10:30 AM
சிரி சிரி முவ்வக்கு முன் அந்துலேனி கத (தமிழ் அவள் ஒரு தொடர்கதை )
படத்தில் ஜெயப்ரதவை பார்க்கணும் சார் கருப்பு வெள்ளையில் என்ன அழகு தெரியுமா ? இந்த பாலச்சந்தர் எங்கிருந்து தான் heroine கொண்டு வாருவார்னே தெரியாது
அவள் ஒரு தொடர்கதை சுஜாதா ,படபட் ஜெயலக்ஷ்மி,விநோதனி என்ற ரீனா,மரோசரித்ரா சரிதா நிழல் நிஜமாகிறது ஷோபா

chinnakkannan
11th August 2014, 10:31 AM
காலையில் இருந்து எஸ்வி சார் ஒரு மார்க்கமாகத் தான் இருக்கார் :)

vasudevan31355
11th August 2014, 10:31 AM
ஹ்ம்ம் . மன்மத லீலையில் ஆரம்பித்ததாக்கும் உமது லீலை :)

ராஜேஷ் சார்!

உங்க கமெண்ட்டைப் பார்த்து சிரிப்பை உண்மையாகவே அடக்க முடியல.
பார்க்க பார்க்க சிரிப்பு வருது என்று இசையரசி பாடுவதைப் போல.

chinnakkannan
11th August 2014, 10:32 AM
//ஹ்ம்ம் . மன்மத லீலையில் ஆரம்பித்ததாக்கும் உமது லீலை // போங்க சார்.. நான் அப்போல்லாம் நான் ச்ச்சின்னக் கண்ணனாக்கும்..

rajeshkrv
11th August 2014, 10:34 AM
பிரபாவும் நல்ல நடிகை, பல நல்ல வேடங்கள் செய்தார். ஜெகன் மோகினி, பெண் ஜென்மம் என பல படங்கள்
சமீபத்தில் அவன் இவனில் ஆர்யாவின் அம்மாவாக நடித்தார்

எல்லோருக்கும் பிடித்த ஒரு கோவிலின் பாடல்
http://www.youtube.com/watch?v=NzEDhUvja1o

அதே போல் மக்கள் அதிகம் கேட்டிராத ஒரு கதா கால்ட்ஷேப பாடல்
பிரபாவுக்கு இசையரசியும் உடன் ஒலிக்கும் குரல் நடிகை சண்முக சுந்தரியினுடையது.

கேட்டு பாருங்கள் .. இசையரசி சும்மா பட்டைய கிளப்பியிருப்பாங்க ( நவராத்திரி தெருக்கூத்திற்கு பிறகு இது தான்)

http://www.youtube.com/watch?v=5PVExRQqMn0

rajeshkrv
11th August 2014, 10:35 AM
//ஹ்ம்ம் . மன்மத லீலையில் ஆரம்பித்ததாக்கும் உமது லீலை // போங்க சார்.. நான் அப்போல்லாம் நான் ச்ச்சின்னக் கண்ணனாக்கும்..

அட நாராயணா நாங்கள் இப்பவும் நீங்கள் சின்ன கண்ணன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறோம் .. இல்லையா???:think:

gkrishna
11th August 2014, 10:36 AM
THUNIVE THUNAI -1976

PRABHA



ஆனால் எஸ்வி சார் பிரபா தமிழ் இல் நடிப்பில் பிரபலம் ஆகவில்லை
ஒரு நாள் 1977 -78 காலகட்டத்தில் மாலை முரசு நாள் இதழ் போஸ்டர் 'பிரபல நடிகை விபசார வழக்கில் கைது ' என்று படித்தவுடன் அடித்து பிடித்து பேப்பர் வாங்கி பார்த்தால் இவர் பெயர் போட்டு 'நடிகை ஜெயபிரபா (துணிவே துணை புகழ்) என்று போட்டு இருந்தார்கள்
இது எவ்வளுவு தூரம் உண்மை என்று தெரியவில்லை . என் நினைவில் இருந்து எழுதுகிறேன் .
இந்த ஜெய பிரபா மற்றும் சந்திர மோகன் நடித்து ஒரு படம் கருப்பு வெள்ளை தெலுகு 1980 கால் கட்டம் மிக அருமையாக இருக்கும் சந்திர மோகன் பட்டை frame கண்ணாடி அணித்து கொண்டு வருவார்

rajeshkrv
11th August 2014, 10:36 AM
சிரி சிரி முவ்வக்கு முன் அந்துலேனி கத (தமிழ் அவள் ஒரு தொடர்கதை )
படத்தில் ஜெயப்ரதவை பார்க்கணும் சார் கருப்பு வெள்ளையில் என்ன அழகு தெரியுமா ? இந்த பாலச்சந்தர் எங்கிருந்து தான் heroine கொண்டு வாருவார்னே தெரியாது
அவள் ஒரு தொடர்கதை சுஜாதா ,படபட் ஜெயலக்ஷ்மி,விநோதனி என்ற ரீனா,மரோசரித்ரா சரிதா நிழல் நிஜமாகிறது ஷோபா

முதலில் ஒப்பந்தமானது சிரி சிரி முவ்வாக்கு தான் ஆனால் வெளி வந்தது அந்துலேனி கதா .. ஜெயப்பிரதா அழகு ஆனால் சுஜாதா நடிப்பில் சாப்பிட்டு விட்டார்

gkrishna
11th August 2014, 10:37 AM
பிரபாவும் நல்ல நடிகை, பல நல்ல வேடங்கள் செய்தார். ஜெகன் மோகினி, பெண் ஜென்மம் என பல படங்கள்
சமீபத்தில் அவன் இவனில் ஆர்யாவின் அம்மாவாக நடித்தார்

எல்லோருக்கும் பிடித்த ஒரு கோவிலின் பாடல்

அதே போல் மக்கள் அதிகம் கேட்டிராத ஒரு கதா கால்ட்ஷேப பாடல்
பிரபாவுக்கு இசையரசியும் உடன் ஒலிக்கும் குரல் நடிகை சண்முக சுந்தரியினுடையது.

கேட்டு பாருங்கள் .. இசையரசி சும்மா பட்டைய கிளப்பியிருப்பாங்க ( நவராத்திரி தெருக்கூத்திற்கு பிறகு இது தான்)


அருமையான நினைவூட்டல் ராஜேஷ் சார்
மிக்க நன்றி

gkrishna
11th August 2014, 10:38 AM
முதலில் ஒப்பந்தமானது சிரி சிரி முவ்வாக்கு தான் ஆனால் வெளி வந்தது அந்துலேனி கதா .. ஜெயப்பிரதா அழகு ஆனால் சுஜாதா நடிப்பில் சாப்பிட்டு விட்டார்

100% correct rajesh sir

chinnakkannan
11th August 2014, 10:40 AM
//அட நாராயணா நாங்கள் இப்பவும் நீங்கள் சின்ன கண்ணன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறோம் .. இல்லையா???// இப்பவும் தான்..:)

gkrishna
11th August 2014, 10:43 AM
எஸ்வி சார்
ஜெயமாலினி அறிமுகம் ஆன புதிதில் தன்னை ஜோதியின் தங்கை என்றே எல்லோரிடும் சொல்வார் . ஆனால் இதை ஜோதி மறுத்து எனக்கு தங்கையே கிடையாது என்று தமிழ் பிலிமாலய இதழில் படித்த நினைவு
ஆனால் இருவரும் ராஜேந்தரின் 'அந்த கானா கட்டை கருவாட்டுக்கு கழுத்திலே வெள்ளை இந்த மானா மதுரை மினாவுக்கு வாங்கிடு முல்லை " ராகம் தேடும் பல்லவி னு நினைவு

rajeshkrv
11th August 2014, 10:43 AM
பிரபா தான் மலையாளத்தில் நானும் ஒரு பெண் படம் செய்தார்.
அதிலும் கண்ணா கருமை நிற கண்ணா உண்டு .. இதோ இசையரசியின் குரலில்

படத்துக்கு இசை தேவராஜன் மாஸ்டர் . சுதர்சனம் மாஸ்டரின் டியூனை அப்படியே வைத்து கொண்டு இந்த பாடலுக்கு இசை சுதர்சனம் என்று பெயர் பலகையில் போட்டு கெளரவித்தார்கள்

http://www.youtube.com/watch?v=PJZXen27m1U

gkrishna
11th August 2014, 10:45 AM
http://imedia.movies.com.pk/cb/images_celebrities/large/avatar8733.jpg

இன்றைய ஜெய பிரபா

rajeshkrv
11th August 2014, 10:46 AM
சரி நித்திரை என்னை அழைக்கிறது.. நீங்கள் சம்பாஷணைகளை தொடருங்கள்
நாளை சந்திகிறேன்

chinnakkannan
11th August 2014, 10:47 AM
குட் நைட் ராஜேஷ் ஜி..ம்ம்

gkrishna
11th August 2014, 10:48 AM
பிரபா தான் மலையாளத்தில் நானும் ஒரு பெண் படம் செய்தார்.
அதிலும் கண்ணா கருமை நிற கண்ணா உண்டு .. இதோ இசையரசியின் குரலில்

படத்துக்கு இசை தேவராஜன் மாஸ்டர் . சுதர்சனம் மாஸ்டரின் டியூனை அப்படியே வைத்து கொண்டு இந்த பாடலுக்கு இசை சுதர்சனம் என்று பெயர் பலகையில் போட்டு கெளரவித்தார்கள்



excellant ராஜேஷ் சார்
பாதி எழுதி review செய்து கொண்டு இருந்தேன்
தகவல் கொடுத்து விட்டீர்கள்
டொராண்டோ எக்ஸ்பிரஸ் ஸ்பீட் சார் நீங்கள்

Good night rajesh sir

Richardsof
11th August 2014, 10:49 AM
TODAY'S LAST PIC

DREAM GIRL... STILL

http://i61.tinypic.com/2mxh6v6.jpg


http://youtu.be/IIE6JlDsISg

gkrishna
11th August 2014, 10:56 AM
ராஜேஷ் சார்!

உங்க கமெண்ட்டைப் பார்த்து சிரிப்பை உண்மையாகவே அடக்க முடியல.
பார்க்க பார்க்க சிரிப்பு வருது என்று இசையரசி பாடுவதைப் போல.

வாசு சார்
ஒருத்தர் வந்து நீதிக்கு தலை வணங்கு என்று சொல்வார் பாருங்கள் :)
(எஸ்வி சார் நான் உங்களை சொல்லவில்லை தயவு செய்து கோபித்து கொண்டு விடாதீர்கள் . உங்கள் படங்கள் ஒவ்வொன்றும் பாடங்கள்
இன்னிக்கு இவ்வளவுதானா எஸ்வி சார் dream கேர்ள் போட்டோ போட்டு ராஜேஷ் சார் க்கு ச்வீட் dream சொல்கீறீர்கள்)

vasudevan31355
11th August 2014, 11:00 AM
https://i.ytimg.com/vi/wyOhYHEJxWY/maxresdefault.jpg

gkrishna
11th August 2014, 11:05 AM
வந்துட்டாருய்யா வேலை வைக்க வந்துட்டாருய்யா :):)
Originally Posted by chinnakkannan
ஆமாம் அந்த எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தை தானோ.. லலிதா பத்தி நாட் மச் டாக்ட் இல்லியோ..

சி க சார்
லலிதா னு நீங்கள் சொல்வது 'தூக்கு தூக்கி ' லலிதா வை தானே

நல்லா கவனீங்க வாசு சார்
இரண்டு உதடு நடுவில் ஏதோ தெரிகிறேதே . (:mrgreen:)

vasudevan31355
11th August 2014, 11:14 AM
வினோத் சார்,

http://www.centerforinquiry.net/images/blog_images/nickell-trumpcard.jpg

அதகளம். trump card. புரியுதா? புரியுமே!புரியுமே!

vasudevan31355
11th August 2014, 11:21 AM
கிருஷ்ணா சார்,

சி,காவை சாதரணமா நெனச்சுடாதீங்க. ஒண்ணுமே தெரியாம அப்பாவி மாதிரி முழி முழிப்பார்.:) அப்புறம் நம்மை முழிக்க வைப்பார். கட்ட கடைசியில் நம்மை சிரிப்பு போலிஸ் ஆக்கி விடுவார்.:) என்னவாக்கும் நான் சொல்றது.:)

ஆமாம். 'தங்கப்பதக்கம்' படத்தில் தலைவர் ஜோடி ஒய்.விஜயாதானே!:)
நான் எஸ்.ஆர்.விஜயான்னு நெனச்சேனாக்கும்.:)

ஐயையோ! தவளை தவளை... தன் வாயால கெடும்.:) கிருஷ்ணா சார்! எஸ்.ஆர்.விஜயா யாராக்கும் என்று சி.க. நம்மை காய விடப் போகிறார்.:) இது தேவையா?:)

vasudevan31355
11th August 2014, 11:24 AM
சி க சார்
லலிதா னு நீங்கள் சொல்வது 'தூக்கு தூக்கி ' லலிதா வை தானே



ஐயோ பாவம் கிருஷ்ணா சார் நீங்கள்.:)

Gopal.s
11th August 2014, 11:31 AM
ஜோதி லக்ஷ்மி- செக்ஸ் பாம் என்று சொல்லத்தக்க நம்மூர் கவர்ச்சி.இவர் இளம் பிராயத்திலிருந்து நடிக்கிறார்.வெவ்வேறு காலகட்டங்களில் இவர் அழகு வெவ்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தது. எனக்கு பிடித்த பின் பரிமாணங்கள் பின்னாட்களில்.

1963 வானம்பாடி.

https://www.youtube.com/watch?v=Z12Xa2R_BmE

1968 பூவும் போட்டும்.

https://www.youtube.com/watch?v=G9g29W9VYBk

1970 எதிரொலி.

https://www.youtube.com/watch?v=rO8a1GpQHxQ

Richardsof
11th August 2014, 11:36 AM
கண்டு கொண்டேன் ...கண்டு கொண்டேன் ....கண்டு கொண்டேன் ... தேவரே
http://i62.tinypic.com/110kfmr.jpg
நூறு ஆயுசு .

chinnakkannan
11th August 2014, 11:45 AM
ஜோ.ல வில் முக்கியமான் “ தங்கம் தங்கம் உன்னுருவம் தாங்காதினிமேல் என் பருவம்” விட்டதை வன்மையாக்க் கண்டிக்கிறேன் :)

//சி,காவை சாதரணமா நெனச்சுடாதீங்க. ஒண்ணுமே தெரியாம அப்பாவி மாதிரி முழி முழிப்பார்.அப்புறம் நம்மை முழிக்க வைப்பார். கட்ட கடைசியில் நம்மை சிரிப்பு போலிஸ் ஆக்கி விடுவார். என்னவாக்கும் நான் சொல்றது.// வாசு சார் நான் அப்படி எல்லாம் இல்லையாக்கும்.. //தூக்குத்தூக்கி லலிதா தானே// க்ருஷ்ணா சார்..அவரே.. கணவனே கண்கண்ட தெய்வத்தில் ஒரு நாகப்பாம்பு நடனம் அப்புறம் உன்னைக் க்ண் தேடுதேயில் அவரும் விக்கி காண்பவரையும் விக்க வைத்தார் :)

ஆமாம் எஸ்.ஆர். விஜயா யாராக்கும் :)

கார்ட்டூன் புதிர்கள் இந்தச் சிற்றறிவை எட்டவில்லை என்பதை ...

ravi200101
11th August 2014, 11:51 AM
இது படு படு அபத்தமான வாதம். நான் 1984 வரை மாணவ பருவத்தில் இருந்தவன். 1976- 1981- பீ.டெக்.1982-1984- எம்.டெக் .முழுக்க முழுக்க ஹாஸ்டல்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள். நானோ எல்லோரிடமும் சரளமாக உரையாடி ரசனை அறிபவன். கிட்டத்தட்ட 90% ஜானகியின் முழு வெறுப்பாளர்கள். இளைய ராஜாவின் அற்புதமான இசையால் , வேறு வழியில்லாமல் பல்லை கடித்து அந்த மிமிக்ரி சகித்தோம்.

I too did my B.tech between 1981 - 1985 but i could not notice any such veruppu against SJ. In fact their were quite a lot of SJ fans. I am a hard core fan of PS but the fact was during the college days SJ and Illayaraja's songs are very popular among the youth especially the romantic and sexy songs . PS was not as popular as SJ in this period and slowly she was losing the market to the new generation singers in which SJ was the lead.

chinnakkannan
11th August 2014, 11:52 AM
கொஞ்சூண்டு வலையில் தேடியதில் அகப்பட்டது..:)

**

தமிழக ரசிகர்களை தங்கள் நடனத்தால் கவர்ந்த "திருவாங்கூர் சகோதரிகள்" லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் பின்னர் நடிப்பிலும் முத்திரை பதித்தனர்.

திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932லும், பத்மினி 1934லும், ராகினி 1938லும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன்பிள்ளை. தாயார் பெயர் சரசுவதி அம்மாள்.

நடனப் பயிற்சி

மூன்று சகோதரிகளில் முதலில் பத்மினிதான் நடனப் பயிற்சி பெற்றார். பிறகு லலிதாவுக்கும் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நடன ஆசிரியரிடம் முறைப்படி நடனம் பயின்றனர்.

சில ஆண்டுகள் கழித்து, ராகினியும் நடனப் பயிற்சி பெற்றார்.

கல்பனா

40களில், இந்தியாவிலேயே நடனத்தில் புகழ் பெற்று விளங்கியவர் உதயசங்கர். இவர் சிதார் மேதை ரவிசங்கரின் சகோதரர்.

ரவிசங்கர் சென்னை வந்திருந்தபோது, பத்மினியும், ராகினியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முழுக்க முழுக்க நடனங்கள் கொண்ட "கல்பனா" என்ற இந்தி திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோவில் ரவிசங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு லலிதாபத்மினிக்கு ரவிசங்கர் வாய்ப்பளித்தார்.

"கல்பனா" மூலமாக லலிதாவும், பத்மினியும் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்கள்.

வேதாள உலகம்

இந்த சமயத்தில், காரைக்குடியில் ஏவி.எம். ஸ்டூடியோ இயங்கி வந்தது. "நாம் இருவர்" என்ற மெகாஹிட் படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, "வேதாள உலகம்" என்ற படத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் தயாரித்து வந்தார். இது இசை நாட்டியத் திரைப்படம்.

"இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?" என்று லலிதா பத்மினியிடம் ஏவி.எம். கேட்டார்.

"நடனம் மட்டும் ஆடுகிறோம். நடிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை" என்று சகோதரிகள் கூறினார்கள்.

இதற்கு ஏவி.எம். சம்மதித்து, பவளக்கொடி இசை நாட்டிய நாடகம், பாம்பாட்டி நடனம் முதலியவற்றில் லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார்.

1948 ஆகஸ்டு மாதம் வெளியான "வேதாள உலக"த்தின் சிறப்பு அம்சமாக, லலிதா பத்மினியின் நடனங்கள் அமைந்தன. நடனங்களை வழுவூர் ராமையாப்பிள்ளை அருமையாக அமைத்திருந்தார்.

வேதாள உலகத்தைத் தொடர்ந்து, தங்கள் படத்தில் லலிதா பத்மினியின் நடனம் இடம் பெறவேண்டும் என்று ஒவ்வொரு பட அதிபரும் விரும்பினர்.

லலிதா பத்மினி நடனம் இடம் பெறாத படமே அநேகமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓடாத படங்களையும் ஓட வைக்க, லலிதா பத்மினி நடனங்கள் உதவின.

அந்தக் காலக் கட்டத்தில் பத்மினியை விட லலிதாதான் கவர்ச்சிகரமாக இருப்பார். நடன நாடகங்களில், லலிதா பெண்ணாக ஆட, பத்மினி ஆண் வேடத்தில் (மீசையோடு) ஆடுவார். இதனால், இந்த நடன சீசனில், லலிதாவின் கையே ஓங்கியிருந்தது.

vasudevan31355
11th August 2014, 11:52 AM
கார்ட்டூன் புதிர்கள் இந்தச் சிற்றறிவை எட்டவில்லை என்பதை ...

சி.க.சார்,

கார்ட்டூன் பதிவுகள் 'வினோத' 'தேவ' ரகசியம். சொன்னால் இருவர் மண்டை உடைந்து சுக்குநூறாகிவிடும். ஜெய் வேதாளம்.:)

chinnakkannan
11th August 2014, 11:53 AM
பிரசன்னா

1950ல் பட்சிராஜா ஸ்டூடியோவினர் "பிரசன்னா" என்ற மலையாளப்படத்தைத் தயாரித்தனர். இதில், முதன் முதலாக வேடம் தாங்கி லலிதாவும், பத்மினியும் நடித்தனர். லலிதா கதாநாயகி. டி.எஸ்.பாலையா கதாநாயகன். பத்மினி சிறிய வேடம் ஒன்றில் நடித்தார்.

லலிதா கேரள உடையில் கவர்ச்சிகரமாகத் தோன்றி நடித்தார். படம், கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் சக்கை போடு போட்டது.

ஏழைபடும்பாடு

இதன்பிறகு, தமிழ்ப்படங்களிலும் லலிதா பத்மினி சகோதரிகள் நடிக்கத் தொடங்கினர். பட்சிராஜா ஸ்டூடியோவில், கே.ராம் நாத் டைரக்ஷனில் உருவான "ஏழைபடும்பாடு" (1950) படம்தான் இவர்கள் நடித்த முதல் படம்.

பிரதான குணச்சித்திர வேடத்தில் வி.நாகையா நடித்தார். இளைஞனாக நடித்த வி.கோபாலகிருஷ்ணனின் காதலைப் பெறப் போட்டி போடும் பெண்களாக லலிதாவும், பத்மினியும் நடித்தனர். இந்தப் படத்தில், பத்மினியை விட லலிதாவின் நடிப்புதான் சிறப்பாக இருந்தது.

படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், நடனங்களும் தொடர்ந்தன. அதில், ராகினியும் பங்கு கொண்டார்.

காஞ்சனா

லலிதா பத்மினி இருவரும் அற்புதமாக நடித்த படம் "காஞ்சனா." (1952)

இந்தப் படத்தையும் பட்சிராஜா ஸ்டூடியோதான் தயாரித்தது. டைரக்ஷன்: ஸ்ரீராமுலு நாயுடு.

பிரபல பெண் எழுத்தாளர் லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) "காஞ்சனையின் கனவு" என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கதைதான், "காஞ்சனா" என்ற பெயரில் படமாகியது.

கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி, இளம் ஜமீன்தார். அவருக்கும் தாசி குலத்தில் பிறந்த பானுவுக்கும் (பத்மினி) காதல் ஏற்படுகிறது. மனைவி என்ற அந்தஸ்தை தரமுடியாவிட்டாலும், மனைவி போலவே அவளிடம் பாசத்தைப் பொழிகிறார், ராமசாமி.

"எவ்வளவு காலம் பிரமச்சாரியாக இருப்பாய்? ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்" என்று ராமசாமியிடம் தாயார் வற்புறுத்துகிறார். தன் தோட்டத்தில் வேலை செய்யும் ஏழையின் மகளான காஞ்சனாவை (லலிதா) மணந்து கொள்கிறார், ராமசாமி.

காஞ்சனா, பானு இருவரிடமும் சம அன்பு செலுத்துகிறார், ராமசாமி. இதனால் ஏற்படும் சிக்கல்களை படம் சித்தரித்தது.

படத்தின் இறுதியில் பத்மினி இறந்து விடுவார். அவருக்காக லலிதாவும் கண்ணீர் சிந்துவார்.

பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, லலிதா, பத்மினி, கே.ஆர்.ராமசாமி மூவரும் அற்புதமாக நடித்திருந்தனர்.

என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனத்திலும் உருவான மணமகள் (1951) படத்திலும் லலிதாவும், பத்மினியும் சேர்ந்து நடித்தனர். சூப்பர்ஹிட் படம் இது.

இதற்கிடையே லலிதாவும், பத்மினியும் தனித்தனியாகவும் நடிக்கலானார்கள்.

chinnakkannan
11th August 2014, 11:55 AM
1951ல் வெளிவந்த "ஓர் இரவு" படத்தின் கதாநாயகியாக லலிதா நடித்தார்

வாசு சார்..இதில் தானே துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..பாட்டு..?

chinnakkannan
11th August 2014, 11:57 AM
லலிதா ராகினி இருவரும் பத்மினிக்கு முன்னாலேயே இயற்கை எய்தினார்கள் தானே..பத்மினி அமெரிக்கா தெரியும்..மற்றவர்கள்..?

chinnakkannan
11th August 2014, 11:59 AM
தேவதாஸ்" படத்தில், ஏ.நாகேஸ்வரராவும், சாவித்திரியும் அற்புதமாக நடித்தனர். அத்தகைய படத்தில் தாசி சந்திரமுகி வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்து பெயர் பெற்றார், லலிதா.

"கணவனே கண்கண்ட தெய்வம்" படத்தில், ஜெமினிகணேசனை காதலித்து தோல்வி அடையும் நாக தேவதை வேடத்தை கச்சிதமாக செய்திருந்தார். மயக்க மருந்து குடித்ததால், "உன்னைக் கண் தேடுதே..." என்று விக்கலுடன் அவர் பாடிய பாடல் மிகப்பிரபலம்.

//தேவ தாஸ் நான் பார்த்ததில்லை..//

gkrishna
11th August 2014, 12:18 PM
http://antrukandamugam.files.wordpress.com/2013/11/ore-iravu.jpg?w=593http://antrukandamugam.files.wordpress.com/2013/11/lalitha-devadas-telugu.jpg?w=412http://antrukandamugam.files.wordpress.com/2013/11/lalitha-digambara-samiyar.jpg?w=593http://antrukandamugam.files.wordpress.com/2013/11/lalitha-padmini-digambara-samiyar-1.jpg?w=593

gkrishna
11th August 2014, 12:32 PM
லலிதா ராகினி இருவரும் பத்மினிக்கு முன்னாலேயே இயற்கை எய்தினார்கள் தானே..பத்மினி அமெரிக்கா தெரியும்..மற்றவர்கள்..?

லலிதா – (பிறப்பு-1930- மறைவு-1982) வயது-52. திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரில் மூத்தவர். இவர் நடித்த படங்கள் குறைவு தான் என்றாலும் ஒவ்வொன்றும் பேசப்பட்ட படங்கள். இவர் அறிமுகமான படம் ஆதித்தன் கனவு (1938). தூக்குத்தூக்கி, ஓர் இரவு, மருமகள், காவேரி, சிங்காரி, மந்திரி குமாரி,திகம்பர சாமியார் போன்ற பல தமிழ்ப் படங்களிலும் வெள்ளி நக்ஷத்திரம்(1943) அம்மா (1952), காஞ்சனா (1952) பூங்கதிர் (1953), மின்னல் படையாளி (1959), அத்யாபிகா (1968) போன்ற மலையாளப் படங்களிலும் இந்தி மற்றும் தேவதாஸ் போன்ற பல தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

ராகினி- (பிறப்பு-1937-இறப்பு-30.12.1976) பழம்பெரும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபல நடிகை. திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளில் மூவரில் இளையவர். பத்மினி அளவுக்கு இவர் சோபிக்க முடியவில்லை என்றாலும் பல படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் ஜே.பி.சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு போன்ற பல பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார். இவர் தனது 36-ஆவது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 30.12.1976-ஆம் ஆண்டு இறந்தார்.இவரது கணவர் பெயர் மாதவன் தம்பி. லக்ஷ்மி, பிரியா என இரு மகள்கள்.

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன், தூக்குத் தூக்கி, மாங்கல்ய பாக்கியம், காவேரி, சிங்காரி, மந்திரி குமாரி, பரிசு, கோடீஸ்வரன், ஏழைப்பங்காளன், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற படங்கள் இவர் நடித்து வெளிவந்தவற்றில் சில.

பத்மினி (ஜூன் 12, 1932 – செப்டம்பர் 24, 2006) வயது-74.பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.

Gopal.s
11th August 2014, 12:37 PM
I too did my B.tech between 1981 - 1985 but i could not notice any such veruppu against SJ. In fact their were quite a lot of SJ fans. I am a hard core fan of PS but the fact was during the college days SJ and Illayaraja's songs are very popular among the youth especially the romantic and sexy songs . PS was not as popular as SJ in this period and slowly she was losing the market to the new generation singers in which SJ was the lead.

This is what exactly I am trying to prove. Ilayaraja ,by plan, sidelined Suseela as she had reprimanded him during early 1970s during one of the concerts ,which was not forgotten by Raja, as he always act like a snake under the grass.(his own Philosophy). So,Audience had no other choice except go along with Janaki to listen to I.R's exemplary music. My close circle of 20 Friends ,atleast 18 of them referred her as mimicry kezhavi. I know well.(infact,Equal opportunity was not given to both to choose.Though Suseela songs with IR were equally popular,she was not in IR's preferred list).Anycase,I hate your comparison of Suseela with others. If you make anymore post in this regard ,then you will see my full vigour.(Calling Janaki voice sexy????!!!! Don't get on my nerves. Pl.Dont call yourself a Suseela Fan.)

gkrishna
11th August 2014, 12:54 PM
ஜோதி லக்ஷ்மி- செக்ஸ் பாம் என்று சொல்லத்தக்க நம்மூர் கவர்ச்சி.இவர் இளம் பிராயத்திலிருந்து நடிக்கிறார்.வெவ்வேறு காலகட்டங்களில் இவர் அழகு வெவ்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தது. எனக்கு பிடித்த பின் பரிமாணங்கள் பின்னாட்களில்.

1963 வானம்பாடி.
1968 பூவும் போட்டும்.
1970 எதிரொலி.



'பின் பரிமாணங்கள்' - அருமையான தமிழ் வார்த்தை
அகத்தியத்திலும் தொல்காப்பியத்திலும் மற்றும் பல இலக்கிய இலக்கண நூற்களில் தேடி பார்த்தேன்
இந்த வார்த்தைக்கு கிடைத்த சரியான அர்த்தம் 'ஏதும் இல்லை'

chinnakkannan
11th August 2014, 12:57 PM
க்ருஷ்ணா ஜி.. ராகினி லலிதா பற்றிய விரிவான செய்திகளுக்கு நன்றி.. ராகினி வெகு சின்ன வயதிலா இறந்தார்..ம்ம்..எனக்குத் தூக்குத் தூக்கி ம்ட்டும் நினைவு.. அந்தக் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் இருவரும் அபாரமான நாட்டியம் (பத்மினி ராகினி)

லலிதா - ஓர் இரவு மர்மப்படமா என்ன..

vasudevan31355
11th August 2014, 01:08 PM
இன்றைய ஸ்பெஷல் (50 ஆவது பதிவு)

இரண்டு நாட்கள் ஊரில் இல்லாததால் இன்றைய ஸ்பெஷல் போட இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும்.

இன்றைய ஸ்பெஷலில் எவர் கிரீன் பாடல் ஒன்று. 'ஆரவல்லி' திரைப்படத்தில் ஜிக்கி, ஏ.எம்.ராஜா பாடிய பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல் வெஸ்ட்ரனைத் தழுவி இருந்தாலும். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நாம் அனைவரும் கிறங்கிப் போவது உண்மை.

http://i1.ytimg.com/vi/EjhDkVc33I4/maxresdefault.jpg

படம்: ஆரவல்லி (1957)

நடிகர்கள்: எஸ்.ஜி.ஈஸ்வர், ஜி.வரலஷ்மி, மைனாவதி, வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.மோகனா, 'காக்கா' ராதாகிருஷ்னன், ஏ.கருணாநிதி

திரைக்கதை வசனம்: வி.என்.சம்பந்தம்

தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ்

இசை: ஜி.ராமநாதன்

இயக்கம்: கிருஷ்ணராவ்

http://www.indian-heritage.org/flmmusic/images/aaravalli1957.jpg

http://www.inbaminge.com/t/a/Aaravalli/folder.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/13/Jikki_singer.png

https://i.ytimg.com/vi/kGPO7CCU8eA/hqdefault.jpg

சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கன்னி என் ஆசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என் ஆசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா
என் கண்கள் தேடும் உண்மைதானே
சொல் நிலவே என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்

ஆஆஆஆ....ஆ


http://www.youtube.com/watch?v=kGPO7CCU8eA&feature=player_detailpage

gkrishna
11th August 2014, 01:22 PM
க்ருஷ்ணா ஜி.. ராகினி லலிதா பற்றிய விரிவான செய்திகளுக்கு நன்றி.. ராகினி வெகு சின்ன வயதிலா இறந்தார்..ம்ம்..எனக்குத் தூக்குத் தூக்கி ம்ட்டும் நினைவு.. அந்தக் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் இருவரும் அபாரமான நாட்டியம் (பத்மினி ராகினி)

லலிதா - ஓர் இரவு மர்மப்படமா என்ன..
சி க சார்

ஓர் இரவு காதலும் மர்மமும் இணைந்த மறைந்த அறிஞ்ர் அண்ணாவின் கதை

ராகினியின் உத்தமபுத்திரன் 'கொண்டாட்டம் மனதுக்குள்ளே கொண்டாட்டம் ','காத்திருப்பன் கமல கண்ணன் (சின்ன கண்ணன்)'
'சிங்கார பைங்கிளியே' ,நவக்ரஹம் ஸ்ரீகாந்த் ('கேட்கணுமா பேச்சு திங்கலையா சோறு ') மிகவும் ரசித்த ஒன்று

எஸ் ஆர் விஜய - பதினாறு வயதினிலே டாக்டர் சத்தியஜித் மனைவியாக வருவார் ,நிறைய படங்களில் கௌண்டமணி ஜோடியாக நடித்து இருப்பார் உதட்டிற்கு மேல் ஒரு மச்சம் இருக்கும் - என் கிட்ட போட்டோ இல்லை வாசு சார் ஹெல்ப் ப்ளீஸ்

chinnakkannan
11th August 2014, 01:31 PM
//ராகினியின் உத்தமபுத்திரன் 'கொண்டாட்டம் மனதுக்குள்ளே கொண்டாட்டம் ','காத்திருப்பன் கமல கண்ணன் (சின்ன கண்ணன்)'// நன்றி :) க்ருஷ்ணாஜி.. ஓ நல்லபாடல்கள்..நவக்ரஹத்தில கொஞ்சம் நடுத்தர வயது ரோல் மூக்குக் கண்ணாடி ராகினி.. நினைவிருக்கிறது.. ஷோபனா யாரின் மகள்?

ஓர் இரவு அறிஞர் அண்ணாவின் கதை எனத் தெரியும்..படித்ததில்லை..

எஸ்.ஆர்.விஜயா..ம்ம் புகையாக நினைவு..

chinnakkannan
11th August 2014, 01:33 PM
சின்னப் பெண்ணான போதிலே அழகான பாடல் வாசு சார்..மதுண்ணா ஓடி வருவார்..க்யோ செரா செரா என்ற பாடலைத்தழுவியது என..

ravi200101
11th August 2014, 01:34 PM
This is what exactly I am trying to prove. Ilayaraja ,by plan, sidelined Suseela as she had reprimanded him during early 1970s during one of the concerts ,which was not forgotten by Raja, as he always act like a snake under the grass.(his own Philosophy). So,Audience had no other choice except go along with Janaki to listen to I.R's exemplary music. My close circle of 20 Friends ,atleast 18 of them referred her as mimicry kezhavi. I know well.(infact,Equal opportunity was not given to both to choose.Though Suseela songs with IR were equally popular,she was not in IR's preferred list).Anycase,I hate your comparison of Suseela with others. If you make anymore post in this regard ,then you will see my full vigour.(Calling Janaki voice sexy????!!!! Don't get on my nerves. Pl.Dont call yourself a Suseela Fan.)

Please note i have no interest in comparison's . But this is a public forum and anybody can make a statement like what you do. But i find in this thread rankings being given by individuals for musicians / singers which pave the way for such comparison's. Every body has their own likings and dislikes . Their are fans of singers /musicians of various types in the forum and using words like Kezhavi, etc, to ascertain ones view point is not in good taste et all.

vasudevan31355
11th August 2014, 01:36 PM
கிருஷ்ணா சார்/சி.க சார்,

லலிதா பற்றிய விவரங்களை பிளந்து கட்டி விட்டீர்கள் இருவரும். இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா? அருமை.

இப்போது சில லலிதாவின் புகைப்படங்கள்.

http://www.betsywoodman.com/wordpress/wp-content/uploads/2013/02/Sisters-cousins-Chandran-Ev-2.jpg

http://www.betsywoodman.com/wordpress/wp-content/uploads/2013/02/Gopalakrishna-Travancore-Sisters-2.jpg

http://www.betsywoodman.com/wordpress/wp-content/uploads/2013/01/Lalitha-Practicing.jpg

Thanks to pazhayathu.blogspot.in.

vasudevan31355
11th August 2014, 01:39 PM
சின்னப் பெண்ணான போதிலே அழகான பாடல் வாசு சார்..மதுண்ணா ஓடி வருவார்..க்யோ செரா செரா என்ற பாடலைத்தழுவியது என..


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xZbKHDPPrrc

gkrishna
11th August 2014, 01:50 PM
க்யோ செரா செரா என்ற பாடலைத்தழுவியது என..


சார் இந்த பாட்டு எந்த படம்

vasudevan31355
11th August 2014, 01:51 PM
ஜஸ்ட் ரிலாக்ஸ்

http://i1323.photobucket.com/albums/u585/padminifan/vlcsnap-2012-10-26-06h45m46s119.jpg

gkrishna
11th August 2014, 01:53 PM
இப்போது சில லலிதாவின் புகைப்படங்கள்.

Thanks to pazhayathu.blogspot.in.

படங்களை எங்கையோ இருந்து பிடிக்கிறீங்க பாருங்க வாசு சார்
சூப்பர்

chinnakkannan
11th August 2014, 01:57 PM
கலக்கல் படங்கள் நன்றி வாசு சார்.. :) நாட்டியத்தைப் பற்றி ப் பேச்சு வந்ததால் இந்த உஷா ராஜேந்தரின் சகோதரி தானே சுவர்ணமுகி.. (ம்ம் இன்னிக்கு ரெண்டாவது பத்த வைப்பு :) )