PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

Russellail
5th October 2013, 06:14 PM
ஆயிரம் யானை பலமிருக்கும், அல்லிக்கொடி போல் மனமிருக்கும், தாயின் பாசம் நிறைந்திருக்கும், தலைவன் என்று நான்குமறை உரைக்கும்.
http://i41.tinypic.com/2ahaxjn.jpg
http://i39.tinypic.com/sngtpt.jpg

Richardsof
5th October 2013, 06:26 PM
http://i42.tinypic.com/2vunfop.jpg

ujeetotei
5th October 2013, 09:08 PM
MGR - PADMINI - 1960

MGR - JAYALALITHA -1968

SIMILAR SONGS


http://youtu.be/bttPZOAroiI

http://youtu.be/4Jb3wwI6dHg

Super Sir.

ujeetotei
5th October 2013, 09:15 PM
MGR A to Z.

http://www.mgrroop.blogspot.in/2013/10/an-to-z-wonder.html

ujeetotei
5th October 2013, 09:19 PM
பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.

பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை.

பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.

அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.

எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.

முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.

1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.

சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.

நான் வணக்கம் தெரிவித்தேன்.

பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.

வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன்.

சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.

(அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன்.

‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.

அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.

இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.

- நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)

ujeetotei
5th October 2013, 09:24 PM
திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் எங்கே சந்தித்தேன்? எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பையும் அதை ஒட்டிய சம்பவத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு நாள் அடையாறிலுள்ள ஆலமரத்தைப் பார்க்க எனக்கு டியூஷன் மாஸ்டராக இருந்த திரு.ஜே. சந்தானகிருஷ்ணன் அவர்களோடு போயிருந்தேன். எம்ஜி.சக்ரபாணி அவர்களின் குமாரர் எம்.சி.ராமமூர்த்திக்கும் இவர் தான் ஆசிரியர்.

‘இங்கேதான் எம்.சி.ராமமூர்த்தியின் வீடு இருக்கிறது. அவனையும் பார்த்துவிட்டுப் போகலாம் வா’ என்று என்னை எம்.ஜி.சக்ரபாணியின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.

திரு. எம்.ஜி.ஆர். அப்போது தனது சகோதரருடன் அடையாறு காந்தி நகரில் வசித்து வந்தார். நாங்கள் ராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது, அந்த அறைக்குள் திடீரென எம்.ஜி.ஆர். வந்தார். அப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்.

பொன்னிற மேனி, திறந்த மார்பு, இடுப்பில் வேஷ்டி. கருகருவென அடர்ந்து வளர்ந்திருந்த முடியை ஒரு துவாலையால் துவட்டியபடி வந்தார் அவர். ‘பையன் யார்?’ என்று என் ஆசிரியரிடம் கேட்டார். அவர் விபரம் சொன்னார். சொன்னதும் நன்றாகப் படிக்கிறாயா? என்று கேட்டார்.

என் தந்தையார் எங்களை பெரும்பாலும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத்தான் அனுமதிப்பார். பிளட் அண்ட் ஸான்ட், டயர்ன் பவர், டார்ஜான், மற்றும் ஏரால் பிளைன் போன்றவர்களின் சாகசப் படங்களாகவே அவை இருக்கும்.

சற்றேறக் குறைய எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களும் அம்மாதிரி சாகசங்களை வெளிப்படுத்தும் படங்களாக இருந்ததால் அந்த ஆங்கில நடிகர்களின் மீது எனக்கு இருந்த மோகம் இவர் மீதும் இருந்தது. தமிழ் நாட்டின் ஏரால் பிளைன் என்றே நாங்கள் அழைப்போம்.

எனவே முதன் முதலாக – அதுவும் சற்றும் எதிர்பாராமல் அவரது வீட்டிலேயே எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்ததும், அவர் அன்போடு என்னைப் பற்றி விசாரித்ததும் எனக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டது.

அதன்பிறகு நான் படித்து முடித்து தந்தைக்கு உதவியாக படத்தோழிலுக்கு வந்த பிற்பாடு எம்.ஜி.ஆரிடம் எனது பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் தந்தையார் ஒரு வண்ணப்படம் எடுக்க முடிவு செய்தார். எங்களைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் அசோகன் ‘ அண்ணே அண்ணன் எம்.ஜி.ஆரைப் போட்டு ஒரு படம் எடுங்கண்ணே’ என்று என்னிடமும் என் சகோதரரிடமும் சொல்லுவார். அவர் அப்போது எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்து வந்தார்.

தொழில் ரீதியாக சின்னாப்பத் தேவரோடு ஏற்பட்ட பழக்கத்தினால் நான் அடிக்கடி தேவரைப் பார்க்க அவரது செட்டுக்குப் போவேன். அங்கே எம்.ஜி.ஆர்., அசோகன் இருப்பார்கள். நான் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாகப் பழக தேவரும், அசோகனும்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

எங்கள் தந்தையார் பிரம்மாண்டமான அளவில் வண்ணப்படம் எடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்த போது எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைத்து எடுத்தால் என்ன என்று நாங்களும் நினைத்தோம். தந்தையும் சம்மதிக்கவே எம்.ஜி.ஆரைச் சந்தித்து எண்ணத்தைச் சொன்னோம்.

அவர் மகிழ்ச்சியுடன் எங்கள் எண்ணத்தை ஏற்றார். ‘அன்பே வா’ இப்படித்தான் ஆரம்பமாயிற்று. இதன் பிறகு அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். அப்போதுதான் அவரது லட்சிய வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும், அவரது பல நற்பண்புகளையும் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது.

‘வசதியாக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அதில் எளிமை இருக்க வேண்டும். ஆடம்பரம் கூடாது’ என்பார். இம்மாதிரி எடுத்ததற்கெல்லாம் அவர் புத்திமதி சொல்லும் போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனல் போ போகத்தான் அதன் அருமையையும், பெருமையையும் உணர ஆரம்பித்தேன்.

இப்படித் தன்னிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் நல்ல பண்புகளை, நல்ல பணழக்கங்பகளை அவர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தி வந்திருக்கிறார்.

தன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கூட ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தன் பட உலக ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்துவிட்டு வீரமும் ஒழுக்கமும், படிப்பினையும் வளர்த்துக் கொண்ட ரசிகர்கள் ஆயிரமாயிரம் உண்டு. படங்களில் மட்டும் அவர் நல்லவராகத் தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் அவற்றைக் கடைபிடித்து வந்ததுதான், மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை மலைபோல் குவித்தது.

இப்போதும் நானோ அவரோ சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் முதலாளி என்று சொல்லிக் கொள்ள போட்டி போடுவோம். பெரும்பலும் அவர் முந்திக் கொண்டு விடுவார்.


முதல் அமைச்சராக பதவி ஏற்ற போது அவரை வாழ்த்தி மாலை அணிவிக்கச் சென்ற போது ‘ இப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு முதலாளி’ என்று சொன்னேன்.

A.V.M. Saravanan

orodizli
5th October 2013, 09:35 PM
mr.வினோத் சார் அவர்கள் மக்கள்திலகம் தோளில் அணிகலன்கள் சூட பற்பல தரபட்ட நற்-உழைப்பினை நல்குகிறார்...நாமும் அவரோடு சேர்ந்து வித்தியாசமான MGR ., புகழ் மாலையை தொடுபோம்... எத்தனை நடிகர்கள் & நடிகையர்கள் திரைப்படங்கள் பேசும்-படம் தோன்றிய காலத்தில் இருந்து வந்தாலும், MGR அவர்களின் இணையற்ற " உலகம் சுற்றும் வாலிபன் " - திரைப்பட முதல் வெளியீடு ஆனபொழுது சுவரொட்டி ஏதும் சென்னை நகரில் ஓட்டபடாமலேயே மாபெரும் ஈடில்லாத வெற்றியை அடைந்த யாராலும் நம்ப முடியாத நிகழ்வு - உலக அளவில் வேறு எங்கும் நடந்திருக்கிறதா? இது ஒன்றே MGR -ரின் செல்வாக்கு -க்கு உதாரணமாக விளங்கும்...

ujeetotei
5th October 2013, 09:46 PM
மறக்க முடியாதவை....
தாய்க்கு முதல் பிரசவம்;காதலிக்கு முதல் முத்தம்;
மனைவிக்கு முதல் இரவு;
கணவனுக்கு முதல் சம்பளம்;

ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கு மறக்க முடியாதது அவன் எழுதி, திரைக்கு வந்த முதல் திரைப்படம்.

திரைக்கதை எழுதச் சந்தர்ப்பம் தேடி அலைந்த என் கடும் தவம் கலையும் கடைசி மூச்சில், நான் கண்டுகொண்ட மக்கள் திலகத்தின் முதல் தரிசனத்தில், கிடைத்த வரமே என் முதல் திரைப்படம்!

அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில், எம்.ஏ. இறுதியாண்டு மாணவர்க்கு நான் பயிற்ற வேண்டிய பாடம் - 'தமிழ் நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும்'. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி பற்றிப் பேசுகிறேன்.

அந்த நாடகக் குழுவிலே ஓர் இளைஞன். அவன் மேடையிலே வேடமிட்டு வந்தால் அவனை மொய்க்கும் கண்கள் மதுவுண்ட வண்டுகளாகும் - அவனது அழகும் குரலும் அப்படி.

கண்பட்டதோ என்னவோ அன்று மேடையில் அவன் பாடும்போது தொண்டை கரகரக்கிறது. திடுக்கிடுகிறான். காளைப் பருவத்தின் தலைவாசலில் நாடகக் கலைஞர்களுக்கு ஒரு கண்டம். 'மகரக் கட்டு' - தொண்டை உடைந்து குரல் கெட்டுப் போகும். குரல் கெட்டுப் போனால் தலைமை வேடம் கிடைக்காது; துணை வேடம்தான்.

எந்த மேடையில் கொலு வீற்றிருந்தோமோ அங்கே கோலேந்தி நிற்பதா? கூடாது' என்று அழுகிறது அந்த இளைஞனின் 'ஆத்மா'. அந்த நடிகன் மறுநாள் கம்பெனியை விட்டுக் காணாமல் போகிறான்!
குரல் உடைந்த்ததால் அந்தக் கலைஞன் உடனே மனம் உடைந்து போகவில்லை. குத்துச்சண்டை, குஸ்தி, கத்திச்சண்டை, கம்புச் சண்டை என்று தன் கட்டுடலை வளர்த்து திரும்பவும் கொலுவேறுகிறான் - நாடக மேடையில் அல்ல, அதன் விசுவரூபமான திரைப்படங்களில், திரைப்படங்களில் மட்டுமா? தமிழகத்து மக்களின் இதயகப் கொலுவிலெல்லாம் ஏறி அமர்கிறான்!

இப்பொழுது நான் குறிப்பிடுவது யாரை என்று மாணவர்களே உங்களுக்குத் தெரியும்; எம்.ஜி.ஆர்.தான்.

பிறருக்கு உதவுவது அவரது பிறவிக் குணம்; துணிச்சல் அவரது தொட்டில் பழக்கம்; தீமையை எதிர்த்து நிற்பது அவர் தாயிடம் கேட்ட கீதை; தொட்டால் மண்ணும் பொன்னாகும் அவர் கைராசி - என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போழுது ஒரு மாணவர் எழுந்து, 'நீங்கள் மிகையாகப் புகழ்கிறீர்கள். இதெற்கெல்லாம் என்ன ஆதாரம்?' என்று என்னை வழிமறிக்கிறார்!

ஆதாரத்திற்கு ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டிய ஒரு அவசியம் ஏற்படுகிறது; சொல்கிறேன்.

சென்னை அருணாசலம் ஸடுடியோ. படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ஆரைப் பார்க்க கொடுத்து வைத்த பலபேர் அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் நடித்து அப்போது வெளியாகி உள்ள ஒரு படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எம்.ஜி.ஆர். ஆர்வம் காட்டுகிறார்.

'அற்புதமான கதை' ஒருவர் ஐஸ் வைக்கிறார். 'ஒவ்வொரு காட்சியும் ஜோர்' - ஒருவர் சோப்பு போடுகிறார்! 'சண்டைக்காட்சிகள் தூள்' என்று ஒருவர், 'பாடல்கள் எல்லாம் பிரமாதம்' என்று ஒருவர் - இப்படி அவரைச் சுற்றி பல காக்காய்கள் பறக்கின்றன!

இந்த முகஸ்துதியில் மரத்துப்போனவர் எம்ஜி.ஆர். தன் அருகில் நின்ற ஒருவரின் மௌனத்தைக் கலைத்து எம்.ஜி.ஆர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டு வைக்கிறார்.
கேட்டதும தான் தாமதம்! அந்த நபர் அந்தப் படத்தை அக்குவேர் ஆணிவேராக பிரேதப் பரிசோதனை பண்ணத் தொடங்குகிறார். குறைகளை எல்லாம் கூசாமல் குத்திக் காட்டுகிறார். 'அந்த அதிகப் பிரசங்கி'யின் அருகில் நின்று கொண்டிருந்த அவரது சகோதரர் மா. ராஜாங்கம் (அப்பொழுது உத்தம பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து பின்னர் திண்டுக்கல் எம்.பி.யாகி அஸ்தமித்த இந்தி எதிர்ப்பு போராட்ட வீ ரர்) பேசாதே என்று ஜாடையாக அந்த முந்திரிக் கொட்டையின் பின் சட்டையைப் பிடித்து இரகசியமாகச் சுண்டுகிறார்.

எம்.ஜி.ஆரோ அந்த இங்கிதம் தெரியாதவர் பேச்சை வெகு ஈடுபாட்டோடு கேட்கிறார். எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதையைக் கண்டதும் ராஜாங்கத்துக்கு சற்று நம்பிக்கை வருகிறது. அண்ணே 'இவர் என் சட்டகர்' பேரு ஏ.எஸ்.பிரகாசம். பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராக இருக்கிறார்.

கதையெல்லாம் எழுதுவார். 'சுண்டிப் பாருங்க, செல்லுற காசா இருந்தா வாங்கிக்கங்க' என்று எனக்கு சிபாரிசு செய்யத் தொடங்குகிறார்.

'சுண்டவே வேணாம். இவர் செல்லுற காசுதான். நான் அனுப்பினேன்னு நீங்க வீரப்பாவை (ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆர். அப்படித்தான் சொன்னார்) போய்ப் பாருங்க' என்று எளிதில் திறவாத திரையுலக இரும்புக் கோட்டையை எனக்குத் திறந்து விடுகிறார்.

மண்ணுக்கேற்ற மதியூக மந்திரி - என் மரியாதைக்கும் நன்றிக்கும் உரிய ஆர்.எம்.வி.யின் சத்யா மூவிஸ் கதவு, தட்டுவதற்குள் திறக்கிறது. திரையுலகில் என் கன்னி முயற்சி 'கண்ணன் என் காதலன்' என்ற படம் பிறக்கிறது.

திரைக்கு கதை எழுதச் சந்தர்ப்பம் கேட்டு நான் இதற்கு முன் எத்தனையோ கதவுகளைத் தட்டி இருக்கிறேன், திறந்ததில்லை. பிறருக்கு உதவுவது அவரின் பிறவிக் குணம்; தொட்டால் மண்ணும் பொன்னாகும் அவர் கைராசி - என்பதற்கு கோடியில் நான் ஒரு சாட்சி.

இந்த மறக்க முடியாத முதல் சந்திப்போடு படப் பிடப்பின் வேளையில் நான் நிழலாடி நின்றபோது - துணிச்சல் அவர் தொட்டில் பழக்கம், தீமையை எதிர்த்து நிற்பது அவர் தாயிடம் கேட்ட கீதை - என்பதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ நிகழ்ச்சிகள்!

வகுப்பு முடியும் மணி அடிக்கிறது. விளக்கத்தை முடித்து நான் வெளியேறுகிறேன்.

A.S.Prakasam

ujeetotei
5th October 2013, 09:53 PM
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். அம்பத்தூரில் நான் டி.எஸ்.பி.ஆக இருந்தேன். அப்போது ராமாவரம் தோட்டத்துக்குப் பாதுகாப்புக்காகப் போயிருந்தேன். காலை நேரம். என்னுடைய சில நண்பர்கள் அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள். டிபனுக்கு சாப்பிட அழைத்தார்கள். போனேன். சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இடியாப்பமும் தேங்காய்ப்பாலும் டிபன். பிரமாதமாயிருந்தது. ருசித்துச் சாப்பிட்டுச் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்ததை எம்.ஜி.ஆர். மாடியிலிருந்து இறங்கி வந்தபோது கேட்டிருக்கிறார்.


பதினைந்து நாட்கள் கழித்து போலிஸ் மைக்கில் ஒரு தகவல். என்னை ராராவரம் தோட்டத்துக்கு வரச்சொன்னார்கள். உடனே என்னவோ ஏதோ என்று அவசரமாகப் போனேன். எம்.ஜி.ஆரின் பி.ஏ. மாணிக்கம்தான் இருந்தார். 'இன்னிக்குக் காலையில் இடியாப்பம் பண்ணியிருக்கோம், அம்பத்தூர் டி.எஸ்.பியைக் கூப்பிட்டுச் சாப்பிடச்சொல்' னு சொல்லிட்டுப் போயிருக்கார் சின்னவர்' என்று சொன்னார் மாணிக்கம். 'என்ன இது இதுக்காகவா வரச்சொன்னீங்க?' என்று நான் தயங்கினதும், நீங்க சாப்பிடாமப் போனா சின்னவர்கிட்ட என்னால பதில் பேசமுடியாதுன்னு உட்கார வச்சுட்டார். சாதாரண சாப்பாட்டு விஷயத்தில்கூட எம்.ஜி.ஆர் காட்டின அக்கறை வியக்க வைத்துவிட்டது.

ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ராமநாதன்

ujeetotei
5th October 2013, 09:54 PM
சத்யராஜ் (நடிகர்)

நீங்கள் யாரோட ரசிகர்?

ஒரு நொடிகூட யோசிக்காம சொல்லுவேன் எம்.ஜி.ஆருன்னு.

'வாழ்க்கை என்பது வெறுமனே வாழ்வதற்கல்ல, கொண்டாடுவதற்குன்னு ரஜனீஷ் சொன்னது மாதிரி, சினிமாங்கிறது கூட வெறுமனே பாக்கிறதுக்கு மட்டுமில்ல பார்த்து சந்தோஷமடையறதுக்கு, உற்சாகமடையறதுக்கு.

இதை எப்பவும் என்னால எம்.ஜி.ஆர். படங்கள்ல மட்டும்தான் பார்க்க முடியுது. அவர் நடிப்பைப் பார்த்தா தெம்பு வரும். தைரியம் வரும். அதனால எனக்குப் பிடித்த நடிகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். சினாமாவில் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர். தரும் உற்சாகத்தை வேறு எந்த நடிகராலும் தரமுடியாது. அதனாலேயே என்னோட நடிப்புல அவரோட சாயல் இருக்குன்னு யார் சொன்னாலும் அதை சந்தோஷமா பாராட்டா ஏத்துக்குவேன்.

orodizli
5th October 2013, 09:58 PM
HATS OFF TO MR. ROOP SIR, your messages, articles about puratchithalaivar- so enthusiasm type contents... makkalthilagam got several positive attitude kinds... A-Z expansions of letters too cheerful, smart, distinction aspects...

ujeetotei
5th October 2013, 09:59 PM
எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி!

திரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர். 'தனது பாணி' என்று தனி முத்திரையைப் பதித்தவர். சினிமாவை எடுத்துக்கொண்டால் அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாவார். ஆனால் கடைசியில் அவரே வெற்றி பெறுவார்.

அரசியலிலும் எம்.ஜி.ஆர். சாதனை இதுவே! தி.மு.கழகம் அவரைத் தூக்கி எறிந்தபோது, 'நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது' என்று கேலி பேசப்பட்டது. வீழ்ந்துவிடவில்லை அவர். சில ஆண்டுகளிலிலேயே தி.மு.க.வை தூக்கி அடித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆகிவிட்டார்!

பிறகு இந்திரா காந்தி அவரது ஆட்சியைக் கலைத்தபோது எம்.ஜி.ஆரின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று தப்புக்கணக்கு போடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரோ, தி.மு.க. - இந்திரா காங்கிரஸ் கூட்டணியை வெற்றி கண்டு மீண்டும் முதல் அமைச்சர் ஆனார். இப்படி தோல்விகளையும், தொய்வுகளையும் தாங்கிக்கொண்டு வாகை சூடியவர் அவர்.

ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபிறகும் அவருக்கு பிரச்னைகள் ஏற்படாமலில்லை. கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் வெடித்ததையும் எதிர்கொண்டார். தன் கண் எதிரே கோஷ்டி சேர்த்த அமைச்சர்களையும், கட்சித்தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து அவர்களது அகம்பாவத்தை மட்டம் தட்டி மக்கள்முன் வெறும் செல்லாக்காசாக்கிக்காட்டினார்.


அதே சமயம் கட்டாயங்கள் ஏற்பட்டபோதும் தனது அரசியல் வாரிசு யார் என்பதை அவர் சொல்ல மறுத்தார். 'தலைமைப் பதவி தானாகக் கனிந்து உருவாக வேண்டிய ஒரு விஷயம். நான் யார் வாரிசு அரசியல் நியமிக்க என்று சொல்லாமல் சொன்னார்.

இதையெல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு புதிர், அவர் ஒரு தனி சாதனையாளர், அவர் ஒரு அதிசயம் என்றுதான் எடைபோட முடிகிறது.

எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம்தான் என்ன? உண்மையில் யுகப்புரட்சியை உண்டாக்கிய பல தலைவர்களைப்போல, அடித்தள மக்களை வசப்படுத்தி வைத்திருந்ததே எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி ரகசியம்.

உலக சரித்திரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர். தோன்றமுடியாது!

{1987 ல் எம்.ஜி.ஆர் இறந்தபோது 03.01.1988 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்கம் இது)

ujeetotei
5th October 2013, 10:00 PM
HATS OFF TO MR. ROOP SIR, your messages, articles about puratchithalaivar- so enthusiasm type contents... makkalthilagam got several positive attitude kinds... A-Z expansions of letters too cheerful, smart, distinction aspects...

The A to Z wonder credit goes to K.Ramadurai Sir. I just posted the article.

orodizli
5th October 2013, 10:15 PM
திருவாளர்கள் as. பிரகாசம், சத்யராஜ் கூறியிருப்பது நூற்றுக்கு,நூறு சதவீதம் சரியானது- என்ற உண்மை மக்கள்திலகம் அவர்களோடு சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் தொடர்பு இல்லாதவர்களுக்கும் இது நடைபெற்ற உண்மை தகவல் என நம்பிக்கை கொள்ளவதே புரட்சி நடிகரின் மாண்பு தான்...வைரத்தை எத்தனை பக்கம், பக்கமாக பட்டை தீட்டினாலும் தீட்சணியமான ஒளியை தரும் என்பது ஆன்றோர் அனைவரும் அறிந்ததே!!! புத்தகம் வாங்க போன இடத்தில கூட அவர் எத்தகைய அணுகுமுறையை தயவு - தாட்சணியமன்றி கடை பிடித்திரிகிறார் - என அறியும்பொழுது எழும் வியப்பானது அடங்கவே வெகு நேரம் பிடிக்கும்...

ujeetotei
5th October 2013, 10:35 PM
திருவாளர்கள் as. பிரகாசம், சத்யராஜ் கூறியிருப்பது நூற்றுக்கு,நூறு சதவீதம் சரியானது- என்ற உண்மை மக்கள்திலகம் அவர்களோடு சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் தொடர்பு இல்லாதவர்களுக்கும் இது நடைபெற்ற உண்மை தகவல் என நம்பிக்கை கொள்ளவதே புரட்சி நடிகரின் மாண்பு தான்...வைரத்தை எத்தனை பக்கம், பக்கமாக பட்டை தீட்டினாலும் தீட்சணியமான ஒளியை தரும் என்பது ஆன்றோர் அனைவரும் அறிந்ததே!!! புத்தகம் வாங்க போன இடத்தில கூட அவர் எத்தகைய அணுகுமுறையை தயவு - தாட்சணியமன்றி கடை பிடித்திரிகிறார் - என அறியும்பொழுது எழும் வியப்பானது அடங்கவே வெகு நேரம் பிடிக்கும்...

That is MGR.

orodizli
5th October 2013, 10:43 PM
திரை உலக வரலாற்றை ஆழ்ந்து நோக்கும்பொழுது சில, பல ஆச்சரிய, அதிசய, விசித்திர, வினோத தகவல்கள் பல்துறை நிபுணர்களாலும் வர பெற்றிருக்கிறோம் ! - அவற்றில் புதிய திரை படங்கள் வெளிவரும்பொழுது percentage - terms, minimum guarantee system- ( MG.,), fixed hire system- ( FH .,), theatre lease or rental , என பல வகை முறையில் படங்களை திரையெடுகின்றனர் ...இதில் முதல் வாரம் பட விநியோகஸ்தருக்கு 75% or 70% - திரை அரங்க உரிமையாளருக்கு 25% or 30% என விகிதம் பிரித்து கொள்ளப்பட்டு அவ்வாறே ஒரு வாரம், வாரமாக சதவிகிதம் ஒருபக்கம் குறைந்து ஒரு பக்கம் கூடி கொண்டு வரும்... இதில் மறு வெளியீடு என்று பார்த்தால் - மக்கள்திலகம் நடித்த திரை படங்களே அதிக விலையோ or terms 60% இக்கு குறையாமல் எல்லா இடங்களிலும் திரையிட பட்டுள்ளதே - MGR படத்துக்குள்ள மவுஸ்--- வெளிபடுகிறது !!!

masanam
5th October 2013, 10:47 PM
மக்கள் திலகத்தின் மறைவைத் தொடர்ந்து ஆனந்த விகடனில் வெளி வந்த தலையங்கம் வரலாற்று உண்மையை சுருக்கமாக எடுத்து கூறியது.
பதிவுக்கு நன்றி எம்ஜிஆர் ரூப் ஸார்.

Russellail
6th October 2013, 07:58 AM
[FONT=Verdana][SIZE=5]அழகெனும் ஓவியம் இங்கே. இலக்கிய காவியம் இங்கே; என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே - நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே. ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை - நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை. புத்தனின் முகமோ உலகின் தலைசிறந்த தத்துவ சுடரோ. http://i40.tinypic.com/20kyyc0.jpg

Stynagt
6th October 2013, 09:48 AM
எம்ஜிஆர் போல் நடனம் ஆடுவது மிகவும் சிரமம். எவ்வளவு கடினமான நடனம் என்றாலும் அதைக்கற்றுகொண்டு திறம்பட ஆடக்கூடியவர் என்று அவரை இயக்கிய நடன இயக்குனர்களே கூறுகின்றனர். உதாரணமாக மன்னாதி மன்னன், கன்னித்தாய், தனிப்பிறவி, குடியிருந்த கோயில், கலங்கரை விளக்கம், அன்பே வா, ரிக்ஷாக்காரன், நேற்று இன்று நாளை என பெரும்பாலான படங்களில் தன்னுடைய நடனத் திறமையை வெளிப்படுத்தியவர். பெரிய இடத்துப்பெண்ணில் மேலை நாட்டு நடனத்தில் அசத்தி தொடர்ந்து தெய்வத்தாய் உள்ளிட்ட பல படங்களில் அதைப் பயன்படுத்தி வெற்றிகண்டவர். குடியிருந்த கோயில் திரைப்படத்தில் அவர் ஆடிய பஞ்சாபி நடனத்தின் சிறப்பும் அழகும் இன்றுவரை திரையில் காணமுடியவில்லை

http://i39.tinypic.com/2m3sbir.jpg

http://i43.tinypic.com/351etme.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Idhayakkani magazine

Richardsof
6th October 2013, 09:49 AM
மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற ''ஆயிரம் நிலவே வா '' மிகவும் புகழ் பெற்ற பாடல் .

புலவர் புலமை பித்தனின் இலக்கிய நயத்துடன் தூய தமிழில் காதலர்களின் உணர்வுகளை பிரதிபலித்த

காவிய பாடல் .அறிமுகபாடகர் திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம்- சுசீலா இருவரின் தேன் குரலில் வெளியான இந்த

பாடல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்றென்றும் விரும்பி கேட்கிற பாடல் .


மேடை கச்சேரிகளில் உலகமெங்கும் இந்த பாடல் பல முறை இசைக்கப்பட்டுள்ளது .



வெளிநாட்டில் நடந்த இந்த மேடை கச்சேரியில் பாடலை பாடும் பாடகர்கள் தங்களை மறந்து , அனுபவித்து

பாடும் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் பாடல் .............



http://youtu.be/04e3FUSzRxA

Richardsof
6th October 2013, 09:52 AM
MAKKAL THILAGATHIN DANCE PERFORMANCE IN KALANKARAI VILAKKAM


http://youtu.be/VeYx6Rup8LU

Stynagt
6th October 2013, 10:03 AM
மக்கள் திலகத்தின் திரைப்படங்களில் நடனப்பென்மணியாக அறிமுகமாகி பின்னர் சிறந்த நடன இயக்குனராக பலகாலம் திரைத்துறையில் கோலோச்சிய திருமதி புலியூர் சரோஜா அவர்கள் புரட்சித்தலைவரின் சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
http://i39.tinypic.com/2uyluoo.jpg
இதில் விடுபட்டது நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில் கண்ணை நம்பாதே பாடல்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Idhayakkani magazine

Stynagt
6th October 2013, 11:00 AM
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி உலகமக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் என்ற பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி உலக மக்களிடையே மனித நேயத்தை வளர்த்த பாரத ரத்னாதான் நம் புரட்சித்தலைவர்.

http://i42.tinypic.com/nppgnp.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Idhayakkani magazine

Stynagt
6th October 2013, 11:09 AM
புரட்சித்தலைவருக்கு இந்தியா மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரியா, பிரான்ஸ், குவைத், லண்டன், சவுதி அரேபியா, துபாய், இலங்கை மட்டுமல்லாது இன்னும் பிற நாடுகளில், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் ரசிகர்களும், எம்ஜிஆர் மன்றங்களும் நிறைந்திருக்கின்றன. சமீபத்தில் நிகழ்ந்த வெளிநாடு வாழ் எம்ஜிஆர் ரசிகர்களின் சந்திப்பு இம்மாத இதயக்கனி இதழில் வெளிவந்தது. அவற்றில் சில காட்சிகள்:

http://i44.tinypic.com/mhrpsg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Idhayakkani magazine

Stynagt
6th October 2013, 11:11 AM
http://i44.tinypic.com/2rrv1jl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Idhayakkani magazine

Stynagt
6th October 2013, 11:14 AM
http://i44.tinypic.com/1zch1f6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Idhayakkani magazine

Stynagt
6th October 2013, 11:26 AM
புரட்சித்தலைவர் குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தை அனைத்து குழந்தைகளும் பயன்பெறுமாறு விரிபடுத்தி வெற்றிகண்டவர். எதிரணியினர், இது நிறைவேற்ற முடியாத திட்டம், தேவையற்ற திட்டம் என எள்ளி நகையாடியபோதும், நிதிசுமையிலும், இத்திட்டத்தை திறம்பட நடத்தி, உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றும் உன்னத திட்டம் இதுவென பாரோர் பாராட்டிய பவித்ரமான திட்டம்.

http://i41.tinypic.com/2v7tpjt.jpg

http://i43.tinypic.com/2lnegrl.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Idhayakkani magazine

Stynagt
6th October 2013, 11:30 AM
http://i41.tinypic.com/jacqhy.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Idhayakkani magazine

Stynagt
6th October 2013, 02:10 PM
புரட்சிநடிகர் எம்ஜிஆர் அவர்கள் ஸ்ரீ முருகனில் ருத்ரதாண்டவ நடனத்தை தொடங்கி, மதுரை வீரன், குலேபகாவலி, மன்னாதி மன்னன், ராஜாதேசிங்கு ஆகிய திரைப்படங்களில் தனது நடன முத்திரையைப் பதித்து எல்லாம் அறிந்த எம்ஜிஆர் எனும் பெயர் பெற்றார்.
http://i40.tinypic.com/zjzb6v.jpg
நாட்டியப்பேரொளி பத்மினியுடன், நடனம் ஆடவே நடிகர்கள் அச்சப்பட்ட காலத்தில் துணிச்சலுடன் பரத நாட்டியம் ஆடி புகழ் பெற்றார். அது ராஜா தேசிங்கு படத்திலும் குறவன் குறத்தி நடனமாகவும், மதுரை வீரனில் கள்ளர் நடனமாகவும் தொடர்ந்தது. ஸ்ரீ முருகனுக்கு பிறகு உழைக்கும் கரங்களில் தலைவர் ஆடிய ருத்ர தாண்டவம் பரபரப்பாய் பேசப்பட்டது.
http://i41.tinypic.com/qmz2jb.jpg
அதே போல் சமூகப்படங்களிலும் மேல் நாட்டு நடனத்தை அறிமுகப்படுத்தியும் , தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான நடனங்களை அறிமுகப்படுத்தியும் ரசிகர்களை தன்வசப்படுத்தியது மட்டுமல்லாது தலைசிறந்த நாட்டிய நடிகைகளான விஜயலட்சுமி, ஜெயலலிதா, லதா ஆகியோருக்கு இணையாக நடனம் ஆடி அனைவரின் பாராட்டுதலையும் பெற்ற ஒரே நடிகர் மக்கள் திலகம் என்றால் அது மிகையாகாது.
மேலும் இத்திரியின் அன்பர்கள் தலைவர் ஆடிய நடனம் பற்றிய தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
6th October 2013, 04:04 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

மக்கள் திலகத்தின் நடனத்தின் சிறப்பை பற்றி விரிவாக நீங்கள் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பரதநாட்டியம் - மேலைநாட்டு நடனம் இரண்டிலும் தன்னுடைய தனி முத்திரையை காட்டி ரசிகர்கள் நெஞ்சத்தை கொள்ளை அடித்திருப்பார் .

மக்கள் திலகத்தின் நடனத்தின் போது அவருடைய முக பாவங்கள் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம் .நடன அசைவுகள் எப்போதுமே விறுவிறுப்பாக இருக்கும் .

எனக்கு தெரிந்த வரையில் மக்கள் திலகம் ஒரு ஆல் ரவுண்டர் .


பெரிய இடத்து பெண்- அன்று வந்ததும் அதே நிலா

தெய்வத்தாய் - ஒரு பெண்ணை பார்த்து

பணத்தோட்டம் - ஒருவர் ஒருவராய் பிறந்தோம்

என்கடமை - யாரது யாரது சொந்தமா

தொழிலாளி - வளர்வது கண்ணுக்கு ....

எங்கவீட்டு பிள்ளை - பெண் போனால் ........

கலங்கரை விளக்கம் - பல்லவன் பல்லவி ....

ஆசை முகம் - என்னை காதலித்தால் மட்டும் ....

அன்பே வா - நாடோடி ..ஓடி .....

நான் ஆணையிட்டால் - நல்லவேளை நான் பிழைத்த கொண்டேன்

பறக்கும் பாவை - சுகம் எதிலே ..... மது ரசமா

தனிப்பிறவி - ஒரே முறைதான் உன்னோடு

காவல்காரன் - நினைத்தேன் வந்தாய்

குடியிருந்த கோயில் - ஆடலுடன் பாடலை கேட்டு

ரகசிய போலீஸ் 115 - என்ன பொருத்தம் இந்த .....

பட்டியல் தொடரும்

Richardsof
6th October 2013, 04:20 PM
நம்நாடு - நினைத்தை நடத்தியே ....

தேடிவந்த மாப்பிள்ளை - தொட்டு காட்டவா

எங்கள் தங்கம் - ஒரு நாள் கூத்துக்கு ...

சங்கே முழங்கு - பொம்பளை சிரிச்சா போச்சி

ராமன் தேடிய சீதை - திருவளர் செல்வியோ

உலகம் சுற்றும் வாலிபன் - பச்சைக்கிளி .. முத்துச்சரம் ..

உரிமைக்குரல் - நேற்று பூத்தாளே ......

நினைத்தை முடிப்பவன் - தானே .. தானே ,, தானே மேனி ....

நாளை நமதே - நானொரு மேடை பாடகன் ...

நீதிக்கு தலை வணங்கு - கனவுகளே .. ஆயிரம் ....

இன்றுபோல் என்றும் வாழ்க - என் யோக ஜாதகம்

மேற் கண்ட பாடல்களில் மக்கள் திலகத்தின் எழிலான தோற்றமும் , சுறுசுறுப்பான நடனமும்
என்றென்றும் மறக்க முடியாத பாடல்களாகும் .

உலக திரைப்பட வரலாற்றில் நம் மக்கள் திலகம் படைத்த சாதனைகள் இந்த தலை முறை
மட்டுமல்ல எதிர்கால தலைமுறையினரும் கண்டு மகிழ்வார்கள் என்பதற்கு இந்த பாடல்
காட்சிகளே சான்று .

Richardsof
6th October 2013, 05:00 PM
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மக்கள் திலகத்தின் அழகினை வர்ணித்தது எம்ஜிஆரின் ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்தாகும் .எத்தனை உவமைகள் - பாடல்கள் . அத்தனையும்
உண்மைதானே .உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பாக்கியம் . எம்ஜிஆருக்கு மட்டும் கிடைத்து .

முக்கியமான பாடல் வரிகள் ...


அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்


நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா

தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
தேக்கு மரம் உடலைத் தந்தது

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்
உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
பழகும் விதமும் புரிந்தவனாம்
பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்

வடிவேல் முருகன் என் வந்தான் -
குறவள்ளி என்றே நான்
எதிர் கொண்டேன்மடி மேல்
காதல் துயில் கொண்டேன் -
அவன்மார்பினிலே நான் குடி கொண்டேன்
யாருக்கு யார் என் எழுதியவன் -
என்னைஅவனுக்குத்தான் என எழுதிவிட்டான்
நேருக்கு நேரே பார்க்க வைத்தான் -
மனம்நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தான்..தவிக்க வைத்தான்..

கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
மதயானை வடிவமே நடமாடும்
வீரனேமலர் போன்ற உள்ளமே வா -

இப்படி ஒரு நடிகரின் தனி ஆளுமையை புகழ்ந்து உலகில் எந்த ஒரு மொழியிலோ , நாட்டிலோ மக்கள் திலகத்திற்கு அமைந்தது போல் வேறு அமையவில்லை .

Richardsof
6th October 2013, 05:22 PM
1960 களில் எம்ஜிஆரை பற்றி திரை உலகில் ஒரு சிலரின் கருத்து

எம்ஜிஆருக்கு சமூக படங்களில் நடிக்க தெரியாது

எம்ஜிஆருக்கு மேல் தட்டு ரசிகர்கள் கிடையாது

எம்ஜிஆர் வயதானவர் ...

எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சொந்தமானவர்

திரை உலகில் அவருக்கு எதிர்காலமில்லை .... என்றெல்லாம் ஒரு சிலரால் பதிவு செய்யப்பட்டது . காரணம் 1959 ஆண்டு முழுவதும் மக்கள் திலகம் விபத்து காரணமாக ஓய்வில் இருந்தார் .

பிரபல திரைப்பட நிறுவனங்கள் - பிரபல நடிகர்கள் இந்த தருணத்தை பயன் படுத்தி கொண்டதையும் கவனிக்க வேண்டும் .

திருடாதே - 1961 மக்கள் திலகம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார் .

சமூக படத்தில் தன்னால் சிறப்பாக நடித்து வெற்றி பெற முடியும் என்பதை நிருபித்து காட்டினார் .

பின்னாளில் படத்திற்கு படம் வித்தியாசமான தன்னுடைய நடிப்பினை வழங்கி வெற்றி மேல் வெற்றி குவித்து திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்பதை அகில உலகமே பாராட்டிய வரலாறு
மறக்க முடியாது .

எம்ஜிஆரின் புகழ் இன்று எந்த அளவிற்கு சென்றுள்ளது என்பதை நம் இனிய நண்பர்

திரு பம்மலார் கூறிய தகவல்கள்


அம்பத்தூர் முதல் ஆஸ்திரியா

விருதுநகர் முதல் வியட்நாம்

அமெரிக்கா - பிரான்ஸ் - மலேசியா - லண்டன்

கன்னியாகுமரி - கோவை - துபாய் என்று எல்லா எல்லைகளை தாண்டி மக்கள் திலகத்தின்

தீவிர ரசிகர்கள் '' உலகம் சுற்றும் வாலிபன் '' தலைப்பிற்கு ஏற்றவாறு ரசிகர்கள் வியாபித்திருப்பது

எம்ஜியாரின் புகழை - ரசிகர்களின் ஆதரவை நினைத்து பெருமை பட வேண்டும் .

orodizli
6th October 2013, 05:55 PM
பாடல்- நடன காட்சிகளில் விடுபட்ட வரிசையில் பின் வரும் திரைப்படங்களையும் சேர்த்து கொள்ளலாம்... 1) கலங்கரை விளக்கம் - என்ன உறவோ 2) நாடோடி - திரும்பி வா 3) ஒளிவிளக்கு - நாங்க புதுசா 4) இதயக்கனி - தொட்ட இடமெல்லாம் 5) தேடி வந்த மாப்பிள்ளை - சொர்கத்தை தேடுவோம் 6) சிரித்து வாழ வேண்டும் - உலகம் ஒரு ,& மேரா 7) தேர் திருவிழா - சித்தாடை 8) நினைத்ததை முடிப்பவன் - கண்ணை நம்பாதே 9) நேற்று இன்று நாளை - இன்னொரு வானம்,நெரு 10) மதுரை வீரன் - ஏச்சி பிழைக்கும் ...

oygateedat
6th October 2013, 06:15 PM
http://s11.postimg.org/z6grglcz7/uyy.jpg (http://postimg.org/image/t5j2jiqcv/full/)

oygateedat
6th October 2013, 06:17 PM
http://s8.postimg.org/4yanudnlh/6ji88.jpg (http://postimage.org/)

oygateedat
6th October 2013, 06:40 PM
http://s22.postimg.org/ipjq4apy9/GRRR.jpg (http://postimg.org/image/ynsfufk65/full/)

Russellail
6th October 2013, 07:15 PM
பாடல்- நடன காட்சிகளில் விடுபட்ட வரிசையில் பின் வரும் திரைப்படங்களையும் சேர்த்து கொள்ளலாம்.1) கலங்கரை விளக்கம் - என்ன உறவோ 2) நாடோடி - திரும்பி வா 3) ஒளிவிளக்கு - நாங்க புதுசா 4) இதயக்கனி - தொட்ட இடமெல்லாம் 5) தேடி வந்த மாப்பிள்ளை - சொர்கத்தை தேடுவோம் 6) சிரித்து வாழ வேண்டும் - உலகம் ஒரு, 7) தேர் திருவிழா - சித்தாடை 8) நினைத்ததை முடிப்பவன் - கண்ணை நம்பாதே, 9) நேற்று இன்று நாளை - இன்னொரு வானம்,10) மதுரை வீரன் - ஏச்சி பிழைக்கும் ...
http://i40.tinypic.com/15gqvi9.jpg பணத்தோட்டம் படத்தில் வரும் இந்தப்பாடலுக்கான தலைவரின் அட்டகாசமான நடனத்தை அனைவரும் பாருங்கள்

https://www.youtube.com/watch?v=EsKcsULcPmk

fidowag
6th October 2013, 07:41 PM
http://i42.tinypic.com/mvonmc.jpg

கடந்த சில மாதங்களுக்கு முன்பு , மதுரையில் நடைபெற்ற அரசு பொருட்காட்சி நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட வளைவு.
http://i40.tinypic.com/34jdq3d.jpg


http://i43.tinypic.com/v6mag1.jpghttp://


[IMG]http://i39.tinypic.com/9tigev.jpg

http://i42.tinypic.com/33u72xk.jpg

http://i40.tinypic.com/2djcfpw.jpg

சென்ற ஜூன் மாதம் , மதுரையிலிருந்து திரு. எஸ். குமார் மற்றும் பக்தர்கள் தம் குடும்பத்தினருடன் புரட்சி தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னைக்கு விஜயம் செய்தனர். அப்போது மக்கள் தலைவரின் புனித சமாதியில் , படையல் இட்டு, வணங்கி, தலைவரின் அருள் பெற முற்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். பின்னர் சமாதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

http://i43.tinypic.com/35bhufc.jpg




சென்னை காமராஜர் அரங்கில் , பொன்மான செம்மலின் பிறந்த நாளை முன்னிட்டு , இதயக்கனி இதழ் சார்பாக , சென்ற ஜூன் மாதம் நடந்த விழாவின் போது , மதுரை மாநகர பக்தர்கள் திரு.எஸ். குமார் மற்றும் திரு. போஸ் ஆகியோர் அமைத்திருந்த பேனர்.

புகைப்படங்கள் உதவி: திரு. எஸ். குமார்., மதுரை.

மக்கள் திலகமே மகான்.

ஆர். லோகநாதன்.

idahihal
6th October 2013, 07:57 PM
அன்பு நண்பர்களே,
மக்கள் திலகம் படத்தில் இடம் பெற்ற நடனங்கள் பற்றிய கட்டுரை அருமை. இருப்பினும் அவையாவும் பானை சோற்றுக்கு பதம் என்ற அளவிலேயே உள்ளன. இன்னும் பல அருமையான நடனக் காட்சிகள் சொல்லிக் கொண்டே போகலாம். நினைக்கும் போதும் பார்க்கும் போதும் இனிக்கும் அவற்றில் ஒரு சிலவற்றை நானும் பட்டியலிடுகின்றேன். (விடுபட்டவைகளே)
ராஜாதேசிங்கு ... கானாங்குருவி காட்டுப்புறா
குலேபகாவலி ... மாயா வலையில் வீழ்ந்து (வித்தார கள்ளியெல்லாம்)
கன்னித்தாய் ... என்றும் பதினாறு வயது பதினாறு
விக்ரமாதித்தன் ... பாடு பட்டுக் காத்த நாடு கெட்டுப் போகுது கேடுகெட்ட கும்பலாலே
தாய்க்குத் தலைமகன் ... இப்படியே இருந்து விட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம்

idahihal
6th October 2013, 07:58 PM
அரசுப் பொருட்காட்சி மற்றும் மக்கள் திலகத்தின் நினைவிடம் தொடர்பான அருமையான புகைப்படங்களைத் தந்த நண்பர் லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

ujeetotei
6th October 2013, 08:38 PM
On the dance part in my opinion MGR dancing in his late 40s or in 50s is not a great performance but dancing and flexing his body at the age of 60 is great keeping in mind that he is not a professional dancer. Below is video clip showing how well MGR flexes his body and see how long the extends his legs.


http://www.youtube.com/watch?v=7qpJRll1CbQ

oygateedat
6th October 2013, 10:11 PM
http://s12.postimg.org/ix191ykrh/xxx.jpg (http://postimg.org/image/77x9dztsp/full/)

orodizli
6th October 2013, 10:35 PM
எங்கள் தங்கம் - தங்க பதக்கத்தின் மேலே, தாய்க்கு தலை மகன்- பார்த்து கொண்டது, முகராசி- முகத்தை காட்டி & உனக்கும் எனக்கும், பணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை, குடியிருந்த கோயில் - என்னை தெரியுமா, என் அண்ணன் - ஆயிரம், & சலக்கு, குமரிகோட்டம் - வந்தனையா, நீரும் நெருப்பும் - மாலை நேர, சங்கே முழங்கு - சிலர் குடிப்பது போல, நேற்று இன்று நாளை- நெருங்கி,நெருங்கி ரகசிய போலீஸ்-115 - கண்ணே, மணியே சிரித்து வாழ வேண்டும் - மேரா நாம் அப்துல் ரஹ்மானா, நினைத்ததை முடிப்பவன் - ஒருவர் மீது, உரிமைக்குரல் - பொண்ணா பொறந்தா, மீனவ நண்பன் - பட்டத்து ராஜாவும், சக்கரவர்த்தி திருமகள் - ஆட வாங்க அண்ணாத்தே, தாயின் மடியில் - ராஜாத்தி, புதிய பூமி - விழியே, தேர் திருவிழா - அடிகட்டுமா, கண்ணன் என் காதலன் - கெட்டிகாரியின், & கண்கள் இரண்டும் கணவன் - நான் உயிர் பிழைத்தேன், ராமன் தேடிய சீதை - நல்லது கண்ணே, தாழம்பூ - தூவானம், போன்ற .......இன்னும் நிறைய திரைப்படங்களில் ஆடல்- வேந்தன் புரட்சி நடிகரின் தித்திக்கும், பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க தூண்டும் ஆடல்,பாடல் காட்சிகளை கண்டு கொண்டே இருக்கலாம்...

orodizli
6th October 2013, 10:52 PM
sattellite - தொலைகாட்சிகளில் அநேகம் பெயர்கள் விரும்பி கேட்டு மகிழ்வதில் முதல்லிடத்தில் மக்கள்திலகம் - அவர்களின் திரை பட பாடல் காட்சிகளே மிக முக்கிய பங்கு வகிக்கிறது என சொன்னால் அது மிகையல்ல... television rating point - ( TRP ) -இது TV -யில், காணும் நேயர்களின் அளவீடு என கூறபடுகிறது, அவ்வட்டாரத்தில்... அந்த முக்கிய தொலைகாட்சியில் பணியாற்றும் நண்பர் கூறியது--- நிகழ்ச்சிகளில் பழைய திரை பட பாடல் காட்சிகளை அதிக நபர்கள் விரும்புகின்றனர்...அதிலும் மக்கள் திலகம் MGR -பாடல் காட்சிகளையே பெரும் பாண்மையோர் கேட்கின்றனர் எனும் இப்பொழுதும் நடைபெறுகிற தகவல்களை கூறுகின்றனர்...இந்த உண்மை செய்தியானது நமக்கெல்லாம் மிகுந்த ஆனந்தத்தை தருகின்ற விஷயமல்லோவோ...

Richardsof
7th October 2013, 05:17 AM
''கை '' வாழ்வின் நம்பிக்கை

கை பற்றிய பல பாடல்கள் வந்திருந்தாலும் மக்கள் திலகத்தின் இந்த மூன்று பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவி என்றென்றும் ஒலிக்கும் பாடலாக அமைந்துள்ளது .
http://youtu.be/Y9_VuL3qKgo
தனிப்பிறவி - இந்த படத்தில் இடம் பெற்ற ''உழைக்கும் கைகளே '' மே தின பாடலில் மக்கள் திலகம் உழைப்பின் அருமைகளையும் , கையின் சிறப்புகளையும் பாடி சிறப்பிதிருப்பார் .
http://youtu.be/6FECtV85p4A
அன்னமிட்ட கை - வாழ்வில் முன்னேற்றம் - ஏழைகளின் உழைப்பு , சமத்துவம் பற்றி மிகவும்
பெருமையாக பாடி இருப்பார் .
http://youtu.be/WlLVvG8yJnM
இன்றுபோல் என்றும் வாழ்க - இது நாட்டை காக்கும் கை - உன் வீட்டை காக்கும் கை என்று

நம்பிக்கை பற்றியும் , வாழ்வியல் பற்றியும் பாடி இருப்பார் .

இந்த மூன்று பாடலும் நம்பிக்கை - உழைப்பு - நாட்டின் முன்னேற்றம் - பற்றிய சமூக சிந்தனை
தூண்டும் பாடல் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் திரைப்பட துறையை எந்த அளவிற்கு சமூக முன்னேற்றத்திற்கு
ஈடுபடுத்தி வெற்றி அடைந்தார் என்பதை இந்த பாடல்கள் நிரூபிக்கின்றன .

Richardsof
7th October 2013, 05:48 AM
பெங்களூரில் சமீபத்தில் ''மன அழுத்த'' விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது .
பல்வேறு அமைப்பினரும் , நிபுணர்களும் கூடி தங்கள் கருத்துக்களையும் , மன அழுத்தம் வராமல்
இருக்க இன்றைய சமூதாயம் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் கருத்துக்களை பரிமாறி கொண்டனர் .

பெரும்பாலான இன்றைய இளைய தலைமுறையினர் தங்களை எப்படி எல்லாம் மாற்றிக்கொண்டு

1. நவ நாகரீகம்

2. எல்லை மீறிய ஆசை

3. போதைக்கு அடிமை

4. பண ஆசை

5. தகுதிக்கு மீறிய செலவுகள்

6. கட்டுப்பாடில்லாத உறவுகள்

7. உறவுகளை நீக்குதல்

8. மேல்தட்டு என்ற ஆணவம்

9. அதிகாரம்

10. பொய்

மேற்கண்ட மாய வலையில் சிக்கி தவிக்கும் இன்றைய சமுதாய மக்களுக்கு பல அறிவுரைகள்
தீர்வுகள் வழங்கப்பட்டன .

நிகழ்ச்சியில் பல வெளிநாட்டு வீடியோ அறிவுரைகள் கிளிப்பிங்காக போடப்பட்டது .

இறுதியில் விழா ஒருங்கிணைப்பாளர் பேசும்போது

''மன அழுத்தம் '' குறைந்து மக்கள் நலமுடன் வாழ பல வழிகள் இருந்தாலும் அன்றே தமிழ் படங்களில் பல பாடல்கள் வந்துள்ளதை பற்றி பட்டியலிட்டார் .

கண் போன போக்கிலே .. கால் போகலாமா ......

நல்ல நல்ல நிலம் பார்த்து .... நாமும் ......

ஆறு மனமே ஆறு இந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஏன் என்ற கேள்வி இங்கு ..........

போன்ற பாடல்கள் மேற்கோள் காட்டி அந்த பாடல்களை ஒளி பரப்பினார்கள் .

மொழி தெரியாதவர்கள் கூட இந்த பாடலின் கருத்துக்களை ஆங்கில சப் -டைட்டில் மூலம் அறிந்து
மிகவும் நெகிழ்ந்து போனார்கள் .

மொத்ததில் தமிழ் பாடல்கள் மூலம் ஒரு சமூதாயம் முன்னேறினால் அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றி .

masanam
7th October 2013, 09:39 AM
''கை '' வாழ்வின் நம்பிக்கை


வினோத் ஸார்,
மக்கள் திலகத்தின் 'கை' பாடல்கள் அருமையான பதிவு.

மக்கள் திலகத்தின் படங்கள் எல்லாமே எதிர்மறை கருத்துக்கள் இல்லாமல், பார்க்கும் ரசிகர்களுக்கு நம்பிக்'கை' தருபவை.

Russellfcv
7th October 2013, 10:23 AM
Thedivandha maapillai in coimbatore shanmuga ?

Richardsof
7th October 2013, 02:55 PM
மக்கள் திலகத்தின் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகள் எப்போதும் விறுவிறுப்பாகவும் ,படம் காண்போரின் ஆர்வம் அதிகமாக இருக்கும் .

காவல்காரன் படத்தில் இடம் பெற்ற இந்த இறுதி கட்ட காட்சியில்

அருமையான திருப்பங்கள்

நட்சத்திர பட்டாளங்கள்

மெல்லிசை மன்னரின் இசை

மக்கள் திலகத்தின் நடிப்பு
http://youtu.be/pW9OLSAXZV4
எல்லாமே அருமை .

Richardsof
7th October 2013, 03:13 PM
குடியிருந்த கோயில் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி -

மக்கள் திலகத்தின் அட்டகாசமான சண்டை காட்சியும் - நடிப்பும்
இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் காட்சி அளிக்கிறது .

http://youtu.be/bK3MUiUDrUw

Richardsof
7th October 2013, 03:22 PM
ரகசிய போலீஸ் 115

கிளைமாக்ஸ் காட்சி - புதுமையான காட்சிகளுடன் மக்கள் திலகத்தின் கண்ணைகவரும் சண்டை காட்சிகள் ,

http://youtu.be/gnbWjL-6l8w

Richardsof
7th October 2013, 03:27 PM
Dear mahendra sir

let me know the another song from ipev?

mahendra raj
7th October 2013, 03:40 PM
Sorry Esvee, I made a mistake as I didn't see you have already posted as the third song from IPEV. That's the reason I deleted the post. Again, Esvee, only 3 songs about Kai by MGR? Surprising because he always gave prominence to the hands in most of his movies. Of course, the other Kai is 'Nambikkai' as espoused by him in his other songs.

Richardsof
7th October 2013, 04:09 PM
மக்கள் திலகத்தின் '' நம்பிக்கை '' பாடல்கள்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ---------

எங்கே போய் விடும் காலம் ..............

உன்னை அறிந்தால் .. நீ உன்னை .........

அன்பு மலர்களே ,,, நம்பி இருங்களேன்

தம்பிக்கு ஒரு பாட்டு ........

ஓடி ஓடி உழைக்கனும்

Richardsof
7th October 2013, 04:46 PM
ONE OF THE BEST CLIMAX MOVIE OF MAKKAL THILAGAM .

http://youtu.be/reXmZ1WhFao

Stynagt
7th October 2013, 05:19 PM
http://s8.postimg.org/4yanudnlh/6ji88.jpg (http://postimage.org/)

நீதிக்குத்தலைவணங்கு திரைக்காவியத்தின் அமோக வெற்றியை அறிவித்த அருமை நண்பர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் வசூல் சக்ரவர்த்தி எங்கள் எம்ஜிஆர்தான் என்று முழங்கும் முழக்கமே அது. தங்களின் படைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. அனைத்தும் எழில் கொஞ்சும் இணையில்லா பதிவுகள். மீண்டும் நன்றி..சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th October 2013, 05:41 PM
விதவிதமான நடன காட்சிகளையும், புதுமையான கிளைமாக்ஸ் காட்சிகளையும், பதிவுகளில் பலவிதங்களையும் கையாண்டும் இத்திரியை உற்சாகத்துடன் கொண்டு செல்லும் திரு. வினோத் அவர்களுக்கு பாராட்டுகள்.

தலைவரின் நினைவிட புகைப்படங்களை வழங்கிய திரு. லோகநாதன் அவர்களுக்கும், திரு. சுஹராம் அவர்களின் வித்தியாசமான பதிவுகளுக்கும், திரு. தெனாலி ராஜன் மற்றும் திரு. ஜெய்ஷங்கர் அவர்களின் நடன பதிவுகளுக்கும், மிக்க நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellail
7th October 2013, 05:41 PM
ஊருக்கு நீ உழைத்தால் உன்னருகே அவன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும் ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர் பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே தினமும் குடியிருப்பான்.

http://i40.tinypic.com/2e3rgh5.jpg

Stynagt
7th October 2013, 07:09 PM
http://i39.tinypic.com/2aethxc.jpg

அழகு...அட்டகாசம்....கம்பீரம்...பிரம்மாண்டம்.. ..

The only Stunning Hero in the world.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellfcv
7th October 2013, 07:42 PM
FRANCE MGR PERAVAI recently conducted a function in France...

See the pics ....in the following link..

http://www.indiaglitz.com/channels/tamil/events/45404.html

Richardsof
7th October 2013, 08:27 PM
courtesy - tamildesam

கவியரசர், புவியரசர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி எழுதிய தத்துவப்பாடல்கள் இரண்டினையும் இங்கே கேட்கலாமா?

தொகையறா:

“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”

பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?

மனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!

இதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.

இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?

அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!

“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!”

சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?

மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….

சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.

ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!

இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!

இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!

பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!

“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”

மீதியைப் பார்த்தோம்!

ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!

மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!

எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.

நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?

Richardsof
7th October 2013, 08:29 PM
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!”

‘நீதி இருட்டினில் மறையட்டும்! என்னதான் நடக்கும் நடக்கட்டும்! – நீ ஏன் பயப்படுகிறாய்? எல்லாமே தன்னாலே வெளிவரும்! தயக்கம் கொள்ளாதே! ஒரு தலைவன் இருக்கிறான் – அதனால் மயக்கம் கொள்ளாதே!

அவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே!
அவனது வீடு இருப்பது முன்னாலே!
நடுவினிலே நீ விளையாடு!
தினமும் நல்லதை நினைத்தே போராடு!
விளைவுகள்! நல்லனவாய் விளைந்திடும்!

எப்படி?

“உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”

இப்படித்தான்….!

உலகினிலே திருடர்கள் சரிபாதியாய்; ஊமையராய், குருடர்களாய், ஆமைச் சமூகத்தில் ஊமை முயல்களாய் சரிபாதியினரும் இருக்கின்றனர்.

இங்கே நீதி எப்படிக் கிட்டும்? ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்!’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி!’ என்றே புரட்சித்தலைவரைக் கவிஞரின் கவிதைவரிகள் உரைக்க வைத்தது.

‘மனம் கலங்காதே! மதி மயங்காதே!’ என்று ஊருக்கு உபதேசம் செய்தபடியேதானே எம்.ஜி.ஆரும் இறுதிவரையிலும் இருந்தார்.

தன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, தன்மானத்தை உறுதியாகக் கொண்டு; வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வகையில் கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று, இரட்டை வரல்களைக் காட்டி, இரட்டைஇலைச் சின்னத்தால் வென்றுதானே, இருக்கின்ற வரையில் அவர் புகழோடு வாழ்ந்தார்.

இவற்றிலெல்லாம் கண்ணதாசன் சொன்ன வாக்கு… ஆமாம் நம் கவிஞர் வாக்கு…. எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையில் பாடிய வாக்கு…. எல்லாமே தானே பலித்துள்ளன.

Russellail
7th October 2013, 08:30 PM
உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!
http://i43.tinypic.com/2i5kxf.jpg

oygateedat
7th October 2013, 08:52 PM
http://i39.tinypic.com/2aethxc.jpg

அழகு...அட்டகாசம்....கம்பீரம்...பிரம்மாண்டம்.. ..

The only Stunning Hero in the world.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


Dear Kaliaperumal Sir,

Very excellent.

Tk u

Regards,

S.RAVICHANDRAN

oygateedat
7th October 2013, 08:57 PM
http://s2.postimg.org/6z0qpx8q1/gff.jpg (http://postimg.org/image/aimofqbfp/full/)

oygateedat
7th October 2013, 09:14 PM
http://s8.postimg.org/amkq71y2d/fddd.jpg (http://postimg.org/image/wlr4u9ewh/full/)

fidowag
7th October 2013, 09:37 PM
சன் லைப் தொலைக்காட்சியில் இன்று இரவு 7 மணிக்கு புரட்சி நடிகரின் ' கலை அரசி ' ஒளி பரப்பாகியது.

மக்கள் திலகமே மகான்.

ஆர். லோகநாதன்.

fidowag
7th October 2013, 09:46 PM
http://i41.tinypic.com/117910h.jpg

கடந்த 19-09-2013 அன்று , சென்னை எம்.ஆர்.சி.நகர்,மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற , திரு. எம்.ஜி. சக்ரபாணி வழி பேரன் திரு.பிரதீப் அவர்களின் குடும்ப மணநாள் வரவேற்பு நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது. மேடையில் மணமக்களுடன் திருவாளர்கள் லோகநாதன், செல்வகுமார், தமிழ் நேசன் (மதுரை), பி.எஸ். ராஜு , இளங்கோவன், ஆகியோர்.

http://i39.tinypic.com/k30zuh.jpg


http://i42.tinypic.com/n2k5et.jpg

திருவாளர்கள் :சுப்பிரமணி, இளங்கோ, லோகநாதன், செல்வகுமார் , பிரதீப், ஹயாத், ராமமுர்த்தி( வேலூர் ).

http://i40.tinypic.com/2lxvugw.jpg

திருவாளர்கள்: சுப்பிரமணி, இளங்கோ, லோகநாதன், செல்வகுமார், பிரதீப், ஹயாத், ராமமூர்த்தி, சைதை சேகர், பி .எஸ். ராஜு ஆகியோர்.

fidowag
7th October 2013, 10:58 PM
http://i42.tinypic.com/xlaxc5.jpg

திருவாளர்கள்:ராமமூர்த்தி,வேலூர் பக்தர்கள், பிரதீப், லோகநாதன் ஆகியோருடன் திருமதி ஜெயந்தி கண்ணப்பன்.

http://i42.tinypic.com/2cf848i.jpg

http://i42.tinypic.com/2cf848i.jpg

திருவாளர்கள்:ரமேஷ், சைதை சேகர், சுப்பிரமணி, லோகநாதன், வேலூர் பக்தர்கள் ஆகியோருடன் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் , நடிகை ராஜஸ்ரீ, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி .

http://i43.tinypic.com/30925xv.jpg

திருவாளர்கள்: சுப்பிரமணி,லோகநாதன்,வேலூர் பக்தர்களுடன் நடிகைகள் எஸ்.என்.பார்வதி,ஏ .சகுந்தலா, ராஜஸ்ரீ, திருமதி ஜெயந்தி கண்ணப்பன், பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி.

http://i42.tinypic.com/2e3crkh.jpg

திருவாளர்கள்:சுப்பிரமணி, ஹயாத், ராஜ்குமார், செல்வகுமார் ஆகியோருடன் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.

fidowag
7th October 2013, 11:00 PM
http://i42.tinypic.com/2nk00mw.jpg

நடிகை நிர்மலாவுடன் திரு.லோகநாதன்.


எங்கள் தெய்வம் எம்.ஜி. ஆர்.

ஆர். லோகநாதன்.

orodizli
7th October 2013, 11:01 PM
மக்கள் திலகத்தின் - நேர் மறை திரை பட பாடல்களை வெகு சிறப்பாக பகுப்பாய்வு செய்து நமது உள்ளங்களில் நீக்கமற நிறைந்துள்ளிர்கள் ; கோவையில் " நீதிக்கு தலை வணங்கு " - பெற்ற மகத்தான வசூல் விவரம் நன்று... சராசரியாக நாள் ஒன்றுக்கு இன்றைய - காலகட்டத்தில் 12000/ என்பது சாதாரண விஷயமில்லை... அதனால் தான் MGR - அவர்கள் என்றும் " king of kings " - என போற்ற படுகிறார்...பாடல்களை எந்த பாடலாசிரியர் இயற்றினாலும் - மக்கள்திலகம் மனம் - மனசாட்சி திருப்தி அடைந்தே சம்மதம் கொடுத்திருக்கிறார், என்று எல்லா இசையமைப்பாளர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் கூறியிருப்பதை சினிமாவை நோக்கும்,& நேசிக்கும் அனைவரும் உணர்வர்...

orodizli
7th October 2013, 11:14 PM
Dear Kaliaperumal Sir,

Very excellent.

Tk u

Regards,

S.RAVICHANDRAN

அடடா ! என்ன ஒரு போஸ் ! என்ன ஒரு அழகு! என்ன ஒரு கம்பீரம்! என்ன ஒரு தேஜஸ்! என்ன ஒரு ஜாஜ்வல்யம்! - நிருத்திய சக்கரவர்த்தி ! என்றால் என்ன சும்மாவா? சொன்னார்கள் ...அதற்கு நூற்றுக்கு, நூறு சதவீதம் பொருந்தியிருபபதனால் - தானே! இந்த உடம்பு குண்டடிபட்டு ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பிறகு எடுக்க பட்ட படம் எனில் எவராலும் நம்ப முடிகிறதா? - அனால் அது தானே உண்மை- medical miracle - படைதிட்டவரும் நம்மவர்தானே!.....புரட்சி நடிகர் mgr பதிவிட்ட படங்களில் உள்ளவர்கள் விபரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே!!!

orodizli
7th October 2013, 11:25 PM
குடியிருந்த கோயில் - கிளைமாக்ஸ் எவரேனும் மறக்க முடியுமா? ஒரு சாதாரண ரசிகனுக்கும் எப்பொழுதும் பிடிக்கும் கதையான திருடன், போலீஸ் - அடுத்து என்ன காட்சி வரும் என்ற திடிக்கிடும் திருப்பங்கள், பட- தொகுப்பு என்றால் என்ன? அக்கு வேறாக ஆணி வேறாக என சொல்லும்படி எடிட்டிங் - துறை மக்கள்திலகம் - அவர்களின் சுறுசுறுப்பிற்கு ஈடு இணையில்லாத ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து கையாள பட்டிருக்கும் ...

fidowag
7th October 2013, 11:50 PM
இன்று இரவு சன் லைப் தொலைகாட்சியில் எனக்கு பிடித்த பாட்டு நிகழ்ச்சியில் நடிகர் திரு. ஒய்.ஜி. மகேந்திரன் மக்கள் திலகத்தின் கணவன் படத்திலிருந்து மயங்கும் வயது என்ற பாடலை தேர்வு செய்து ஒளி பரப்பினார். அப்போது தலைவரின் இசை ஆர்வத்தையும் ,பாடல்கர் தேர்வு செய்யும் விதத்தையும் ,இசை அமைப்பாளரின் திறமையை வெளிக்கொணரும் அறிவாற்றலையும் அபாரமாக பாராட்டினார்.தலைவருக்கு காதல் பாடல்கள் அமைந்தது போல் வேறு எவருக்கும் தமிழ் திரையுலகில் அவ்வளவு பொருந்தியது இல்லை என்று எடுத்துரைத்தார்.


இன்னொரு பாடலான பெரிய இடது பெண்ணில் வரும் கட்டோடு குழலாட என்ற பாடலை சிறப்பித்து பேசி, அதை தன தாயாருக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அதை சுட்டிக்காட்டி தன தாயாரிடம் அந்த பாடலை பாடி பல காரியங்கள் சாதித்து கொண்டது பற்றி பேசி பாடலை ஒளி பரப்பினார்.

நன்றி திரு.ஒய்.ஜி. மகேந்திரன் அவர்களே.

மக்கள் திலகம் அன்றும் இன்றும் என்றும் மகான்.

ஆர். லோகநாதன்.

Richardsof
8th October 2013, 08:57 AM
THANKS TO - MS PRABHA MADAM - BANGALORE - HARDCORE MAKKAL THILAGAM MGR FAN .

MAKKAL THILAGAM MGR IN THANI PIRAVI AT MYSORE - 1966


http://i43.tinypic.com/mhrgaa.jpg

Richardsof
8th October 2013, 09:01 AM
MUGARASI - song book cover

http://i44.tinypic.com/25q4pqh.jpg

Richardsof
8th October 2013, 09:03 AM
http://i42.tinypic.com/b4x4j4.jpg

Richardsof
8th October 2013, 09:07 AM
http://i40.tinypic.com/fm019i.jpg



THEDI VANTHA MAPPILAI AND NADODI

Richardsof
8th October 2013, 09:09 AM
KUDIYIRUNTHAKOIL AND ORU THAI MAKKAL

http://i44.tinypic.com/tuuo.jpg

Richardsof
8th October 2013, 09:13 AM
http://i41.tinypic.com/281rnd2.jpg

ujeetotei
8th October 2013, 10:16 AM
KUDIYIRUNTHAKOIL AND ORU THAI MAKKAL

http://i44.tinypic.com/tuuo.jpg

Super.

ujeetotei
8th October 2013, 10:25 AM
இன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு தினம்.

13.4.1930 - 8.10.1959.

நமது புரட்சித்தலைவர் அவர்களின் பல திரைபடத்திற்கு பாடல் எழுதியவர். மறக்க முடியாத தத்துவ பாடல்கள் - தூங்காதே தம்பி தூங்காதே, சும்மா கிடந்த நிலத்தை (நாடோடி மன்னன்), திருடாதே பாப்பா (திருடாதே). சின்ன பயலே (அரசிளங்குமரி)

ujeetotei
8th October 2013, 10:26 AM
http://www.youtube.com/watch?v=LTCihMCfSCU

ujeetotei
8th October 2013, 10:28 AM
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா


(சின்னப்பயலே ..)


ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
- உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி

வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க


வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ
வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே


(சின்னப்பயலே ..)

ujeetotei
8th October 2013, 10:29 AM
http://www.youtube.com/watch?v=tUEB_61rhZI

ujeetotei
8th October 2013, 10:31 AM
தூங்காதே தம்பி… தூங்காதே…
தூங்காதே தம்பி… தூங்காதே…
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே


தூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே


நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பலச் சரித்திர கதை சொல்லும் சிறை கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பலச் சரித்திர கதை சொல்லும் சிறை கதவும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்


தூங்காதே தம்பி… தூங்காதே…


நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்


சிலர் அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்


விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்


விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்


தூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே


ஓர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்...


ஓர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்

கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்



இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா


தூங்காதே தம்பி… தூங்காதே…
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே


தூங்காதே தம்பி… தூங்காதே…
தம்பி… தூங்காதே…

ujeetotei
8th October 2013, 10:33 AM
http://www.youtube.com/watch?v=UzN8Fs2AYc4

மிக சிறந்த பாடல்

ujeetotei
8th October 2013, 10:33 AM
திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...


வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...


வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே


திருடாதே... பாப்பா திருடாதே...


சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ


தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ


திருடாதே... பாப்பா திருடாதே...


திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது


திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது


திருடாதே... பாப்பா திருடாதே...


கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது


இனி எடுக்குற அவசியம் இருக்காது


இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...

பதுக்குற வேலையும் இருக்காது

ஒதுக்குற வேலையும் இருக்காது...


உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
கெடுக்குற நோக்கம் வளராது
மனம் கீழும் மேலும் புரளாது


உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா

கெடுக்குற நோக்கம் வளராது


திருடாதே... பாப்பா திருடாதே...


வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
திறமை இருக்கு மறந்துவிடாதே


திருடாதே... பாப்பா திருடாதே...

ujeetotei
8th October 2013, 10:41 AM
http://www.youtube.com/watch?v=EHrYimJsSsU

தாயித்து தாயித்து

மகாதேவி

ujeetotei
8th October 2013, 10:43 AM
http://www.youtube.com/watch?v=0avlBeVJ8d4

Nadodi Mannan

ujeetotei
8th October 2013, 10:44 AM
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு -
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே

மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு
பொண்ணை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் -
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளயட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
நமக்கு காலம் இருக்குது பின்னே

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
சேகரித்தால் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி


அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

Richardsof
8th October 2013, 10:47 AM
Pattukottai's lyrics and MGR


MADURAI: At a time when all prominent political leaders would have completed their whirlwind election campaign tour by Monday evening, the focus automatically shifts to April 13. The day carries so much significance as it is going to decide the fortunes of major political parties of Tamil Nadu.

One really wonders how many would remember that April 13 was the birthday of one of Tamil Nadu's leading poet and lyricist, the inimitable people's poet Pattukkottai Kalyanasundaram, who had penned some wonderful philosophy-tinged, radical lyrics and helped former Chief Minister M. G. Ramachandran's charisma transcend across time space conundrums.

MGR once referred ‘Pattukottai' as the most crucial person in catapulting his iconicity and took him to the masses. In fact, in one of MGR's iconic films in the late 50s, Nadodi Mannan, which was produced and directed by MGR himself under the banner Emgeeyar Pictures, ‘Pattukottai' had penned a song (Summa Kedandha Nilathai Kothi) which not only speaks about everyday travails of the peasantry and working classes, but also gives hope to them through the protagonist himself singing Naane Poda Poaren Sattam Podhuvil Nanmai Purindhidum Thittam Nadu Nalam Perum Thittam (I am going to draft laws that will bring welfare in general and also for the nation).

Songs like these, with their reproducibility and wider reach, gave the most important fillip to his popularity and “ideals.”These songs became the most effective form of communication with the masses and gave hope to his fans and followers.

Robert L. Hardgrave, the American scholar who studied his films and iconicity, has said, “What I believe is the most important aspect, is that MGR provided hope to a section of very poor and powerless people. Through his films, and various other advertising means, he appeared as somebody they felt they could trust and rely on, somebody that stood on their side.”

The songs of ‘Pattukottai' like Thayaththu Thayaththu from Mahadevi and Seermevum Gurupadham from Chakravarthi Thirumagal were rendered in dialogue mode and had so much of philosophical overtones with radical and atheistic tinges.

More songs of ‘Pattukottai' like Kuruku Vazhiyil Vazhvu Thedidum Kuruttu Ulagamada, Yetramunna Yetram Idhile Irukkudhu Munnetram, Chinna Payale Chinna Payale from Arasilangkumari and Thirudathe Papa from Thirudathe stood the test of time and made him to be identified as a revolutionary actor.

Not only MGR, Chief Minister M. Karunanidhi said that if death had not conquered him early, he would have rendered even more number of honey-sweet songs.

“His heart was a Tamil garden, where both self-respect theories and communist ideals bloomed.” It was Mr. Karunanidhi who built a memorial for the radical poet who died young.

MGR's charisma has always been a burning topic for social scientists who have tried to analyse the various ways and forms that were involved in the “construction” of his iconicity. Political Scientist Atul Kohli, for example, describes a scene from Madurai in 1984.

The AIADMK in Madurai was virtually indistinguishable from the name and image of MGR. City streets were dominated by larger-than-life posters of MGR, clad in his Tamil ‘lungi' and wearing the dark sunglasses that became his political trademark.

Gaudy posters, garlanded pictures, loud music from MGR's old films, and tapes of MGR's voice on loudspeakers were encountered throughout the city.

At meetings, he addressed the audience as “my blood brothers and sisters”, and managed to create an atmosphere of trust and friendship; his film image transcended various boundaries and still is ruling the roost among the masses.

courtesy - the hindu

ujeetotei
8th October 2013, 10:48 AM
1981ஆம் ஆண்டு, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு (மறைவுக்குப்பின்) வழங்கப்படுவதாக, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். விருது வழங்கும் விழாவுக்கு, கல்யாணசுந்தரத்தின் மனைவி கவுரவாம்பாள் வந்திருந்து விருதைப் பெற்றுக் கொண்டார்.

siqutacelufuw
8th October 2013, 02:03 PM
http://i39.tinypic.com/2aethxc.jpg

அழகு...அட்டகாசம்....கம்பீரம்...பிரம்மாண்டம்.. ..

The only Stunning Hero in the world.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

இது பிரம்மாண்டத்தின் அடையாளம் அல்ல ! இதுவே பிரம்மாண்டம்.


இந்த அழகு ஒன்று போதும்,நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்.


உலக நடிகர்களிலேயே அழகான நடிகரான நமது பொன்மனசெம்மலின் கம்பீரமான நிழற்படத்தை பதிவு செய்த அருமை சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

orodizli
8th October 2013, 02:55 PM
புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்களின் வெளியிடு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றபொழுது கன்னடத்தில் வந்த விளம்பரங்களை வினோத் சார் வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது... நம் அனைவரின் நன்றியை உள்ளப்பூர்வமாக திருமதி பிரபா மேடத்திற்கு தெரிவியுங்கள் சார், ரூப் சாரின் 1400 - பதிவுகளுக்கு பாராட்டுக்கள்... அடிமைப்பெண் - ஸ்டில் -க்கு பேராசிரியர் விளிதிருக்கும் வரிகளுக்கு, பாராட்டுக்கள்... பட்டுக்கோட்டை - கல்யாண சுந்தரம் இன்னும் சில ஆண்டுகள் நீடித்திருந்தால் அவருடைய புகழும் மென் மேலும் வளர்ந்திருக்கும்...மக்கள்திலகம் - அவர்களுக்கும் தான் சொல்ல நினைத்த கருத்துக்களை சுவைபட மக்களுக்கு வழங்க ஏதுவாய் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை... அதற்கு இயற்கையும் ஆசி அளிக்க வில்லை...

Richardsof
8th October 2013, 03:22 PM
மக்கள் திலகம் அவர்களின் ''எங்கள் தங்கம் '' இன்று 43 ஆண்டுகள் நிறைவு நாள் .


9.10.1970 அன்று வெளியான மக்கள் திலகத்தின் எங்கள் தங்கம் - மிகப்பெரிய வெற்றி படம் .

மக்கள் திலகம் வித்தியாசமான வேடத்தில் நடித்த படம் .

மக்கள் திலகம் அவர்களின் இரண்டு மாறுவேட நடிப்பு அருமை

1. ஒரு நாள் கூத்துக்கு மீசை யை .........

2. விண்வெளி பயணம் பற்றிய பாடல் ....


இனிமையான பாடல்கள் .

தங்க பதக்கத்தில் மேலே ......

நான் அளவோடு ரசிப்பவன் ....

டோன்ட் டச் மீ மேடம் எக்ஸ் .....

நான் செத்து பிழைச்சவண்டா ....

மக்கள் திலகம் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் வெளிநாட்டில் இருந்தபோது வந்த படம் .

மேகலா நிறுவனத்தை வாழவைத்த படம் . இன்றும் அமுதசுரபியாக திகழும் எங்கள் தங்கம் .

Richardsof
8th October 2013, 03:30 PM
http://i44.tinypic.com/2dv3hk.jpg

Richardsof
8th October 2013, 03:33 PM
http://i39.tinypic.com/2mc6ebq.jpg

Richardsof
8th October 2013, 03:39 PM
http://i40.tinypic.com/14lhwk4.jpg

Richardsof
8th October 2013, 03:45 PM
http://youtu.be/EuZchIymXJk

Richardsof
8th October 2013, 03:49 PM
http://youtu.be/xDTbETzE69E

mahendra raj
8th October 2013, 06:20 PM
https://www.facebook.com/photo.php?fbid=612003802184615&set=a.123638997687767.22693.100001250028883&type=1&relevant_count=1&ref=nf

A rare comradeship image of MGR-Ashokan-Nagesh taken in conjunction with 'Ulagam Sutrum Vaaliban'.

Stynagt
8th October 2013, 06:36 PM
எங்கள் தங்கம் நடித்த எங்கள் தங்கம் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது

நாற்பது ஆண்டு கால நண்பர் என்று வாயளவில் பேசும் அப்போதைய நண்பரின் கடனைத்தீர்க்க இலவசமாக நடித்துகொடுத்த படம்.
http://i39.tinypic.com/1zxl169.jpg
எம்ஜிஆர் பார்முலாவிலிருந்து சற்று விலகி வித்தியாசமான தோற்றத்தில் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம்.

http://i42.tinypic.com/vhbx5f.jpg

எம்ஜிஆர் ரசிகர்களே எதிர்பாராவிதமாக மொட்டைத்தலையுடன் கதாகாலட்சேபம் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்த காவியம். அந்த தோற்றத்திலும், அழகும், பொலிவும், அசத்தலான நடிப்பும் ஒரு சேர அமைந்து அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாது, அந்த பாடலையும் மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஊடகமாகப் பயன்படுத்தினார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th October 2013, 06:48 PM
எங்கள் தங்கம்

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வச்சான் பாடலில் ஒப்பனையும், சுறுசுறுப்பான நடனமும் இன்றைக்கும் பார்ப்பதற்கு, இவரால் எப்படி இப்படி முடிகிறது என்று வியக்க வைக்கும். கூடு விட்டு கூடு பாயும் அவரின் வேடம் கனகச்சிதமாகப் பொருந்தும்.
http://i39.tinypic.com/33ehcbd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th October 2013, 07:02 PM
எங்கள் தங்கம்

தலைவரின் தமிழ்ப்பற்றை விளக்கும் தரமான படம்..
http://i43.tinypic.com/zx33mh.jpg
ஜெயலலிதா: என்ன விறகு வண்டி போல் இருக்கிறது

தலைவர்: விறகு வண்டிதான்..தமிழின விரோத சக்திகளை எரிக்க விறகு ஏற்றிக்கொண்டு வரும் வண்டிதான்.

ஜெயலலிதா: என்ன ஒரு தமிழ் ஆசை!

தலைவர்: ஆசை அல்ல..வெறி...நான் சாகும்போதும் தமிழ்ப்பிடித்து சாகவேண்டும்..என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்..

அவர் நினைத்தது நடந்தது..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th October 2013, 07:11 PM
எங்கள் தங்கம்

http://i43.tinypic.com/2nsm651.jpg

தங்கப் பதக்கத்தின் மேலே பாடலில் தலைவர் அழகு கொள்ளை கொள்ளும்..டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம் கொண்ட அழகான பாடல். இந்த சென்ஸ் அதிகம் அறிந்ததால்தான் எம்ஜிஆர் ஸ்டைல் என்ற ஒன்றே உருவானது. உடையும், நடனமும் சேர்ந்து திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் பாடல்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th October 2013, 07:38 PM
பட்டுக்கோட்டையாரின் நினைவுதினத்தை நினைவுகூர்ந்த திரு. ரூப் அவர்களுக்கு நன்றி..
http://i44.tinypic.com/120ni12.jpg
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, மிகச்சிறந்த பொதுவுடைமைவாதியாகிய பட்டுக்கோட்டையார் தன்னுடைய கொள்கையை யார் மூலம் பரப்ப முடியும், யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்று ஆராய்ந்து, அது புரட்சிநடிகர் ஒருவரால் மட்டுமே முடியும் என முடிவும் செய்து, தன்னுடைய புரட்சிப்பாடல்கள் அனைத்தையும் புரட்சித்தலைவரின் வாய்வழியே இவ்வையத்திற்கு எடுத்துரைத்தார்.
http://i41.tinypic.com/dy2il5.jpg

அதனால்தான் புரட்சியாரின் வாய் வழியே வந்த பட்டுகோட்டையாரின் பாடல்கள் அனைத்தும் இன்றும் சாகா வரம் பெற்றன.

ujeetotei
8th October 2013, 07:55 PM
https://www.facebook.com/photo.php?fbid=612003802184615&set=a.123638997687767.22693.100001250028883&type=1&relevant_count=1&ref=nf

A rare comradeship image of MGR-Ashokan-Nagesh taken in conjunction with 'Ulagam Sutrum Vaaliban'.

The link is not working sir.

ujeetotei
8th October 2013, 07:59 PM
Director ASA Samy about our Makkal Thilagam.

http://www.mgrroop.blogspot.in/2013/10/an-enigma.html

ujeetotei
8th October 2013, 08:10 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/pip_zps4f1ee127.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/pip_zps4f1ee127.jpg.html)

MGR movie title cards

ujeetotei
8th October 2013, 08:12 PM
Ashok Kumar

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/ashokkumar_zps63b8c86f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/ashokkumar_zps63b8c86f.jpg.html)

oygateedat
8th October 2013, 09:14 PM
http://s22.postimg.org/jtqtd0qy9/dsss.jpg (http://postimage.org/)

oygateedat
8th October 2013, 09:31 PM
இன்று தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள்.

ராஜ் degital - ரகசிய போலீஸ் 115 - 8 PM

பாலிமர் channel - தாயைக்காத்த தனயன் 2 PM

oygateedat
8th October 2013, 09:53 PM
http://s2.postimg.org/e88j3dgk9/ger.jpg (http://postimg.org/image/b1dzjqw45/full/)

Stynagt
8th October 2013, 10:07 PM
http://s22.postimg.org/jtqtd0qy9/dsss.jpg (http://postimage.org/)

OUR GOLD IS EVER GOLD
ALL ARE TOLD HE IS PURE GOLD
HIS HEART IS NOTHING BUT VERY BOLD
PLEASE GROW UP CHILDREN LIKE HIS MOLD!

Thank You Ravi Sir..

xanorped
8th October 2013, 10:09 PM
http://www.youtube.com/watch?v=8mGCb1kPrto&feature=c4-overview&list=UU8MiBfTgmoRvbB1w17wZWQg


MGR Documentry -MGR VALLALIN VARALARU

orodizli
8th October 2013, 10:11 PM
எங்கள் தங்கம் - பெயரே ஹிட்... துவக்கத்தில் இரண்டு mgr -கள் தோன்றும் காட்சியே அமர்க்களம், அப்புறம் அண்ணன்- தங்கை சென்டிமென்ட் - கொள்ளை கூட்டம் - அதை கண்டுபிடிக்க நூதனமான திட்டம் -சுபம் என ஜன ரஞ்சக படைப்பு...இடையில் கதாகாலெட்சப - கல,கல காட்சிகள் பாடல்கள் காட்சி சூப்பர் ... மக்கள் திலகத்தின் சுய வாழ்க்கையின் சம்பந்த பட்ட முக்கிய பாடல்- நான் செத்து பொழச்சவன்டா! ...எல்லாம் சரியான கலவையில் அமைந்த மா-பெரும் வெற்றி படைப்பு...இதில் mgr அவர்கள் அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த திரு மு.க & மாறன் இருவரும் இபொருளாதரத்தில் மேம்பட செய்ததற்காக mgr அவர்களுக்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்தனர் ...என கூற பட்டது...
ணைந்து தயாரித்த படம் என்பதாலும், திமுக - கட்சியின் பல வருட கடனை- இப்படத்தின் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும் என்ற நிலையில்- தான் சம்பளம் ஏதும் வாங்காமல் நடித்ததால், கதாநாயகி- ஜெயலலிதா அவர்களும் மற்றும் சிலரும் ஊதியம் வாங்காமல் நடித்து கொடுத்தனர்...அப்பொழுது இத்திரைப்படம் வெளியாகி மகத்தான வெற்றியடைந்து சுமார் 23-லட்சங்கள் கடனை அடைத்து தயாரிப்பாளர்களையும் -

orodizli
8th October 2013, 10:25 PM
எங்கள் தங்கம் திரைப்படமானது அப்பொழுது மட்டுமல்லாமல் இப்பொழுதும் - சூரிய தொலைகாட்சியினரிடம் - தான் ஒளி பரப்பு உரிமை, விநியோக உரிமை, திரை அரங்குகளில் திரையிடும் உரிமை என எல்லாம் அவர்களிடத்தில் உள்ளது...இன்றும் அது கற்பக விருட்சமாக அவர்களுக்கு பயனளிக்கிறது ...இது போல அரசியலில் ஒன்று சேர்ந்து இருக்கும்போதும், எதிராக இருக்கும்பொழுதும் - நடைபெற்று கொண்டிருப்பதும் ஒரு உலக - அதிசயமே!!!

Richardsof
9th October 2013, 06:53 AM
http://i41.tinypic.com/16hkbjq.jpg

Richardsof
9th October 2013, 09:05 AM
http://i39.tinypic.com/why32e.jpg

Richardsof
9th October 2013, 09:10 AM
http://i40.tinypic.com/2zp8eu0.jpg

Richardsof
9th October 2013, 09:14 AM
http://i43.tinypic.com/2istw9.jpg

Richardsof
9th October 2013, 09:39 AM
இனிய நண்பர் திரு பிரதீப் சார்

''வள்ளலின் வரலாறு '' வீடியோ தொகுப்பு டிரைலெர் மிகவும் அருமை .

மக்கள் திலகத்தை பற்றிய தங்களின் பதிவுகளை இங்கே தொடர்ந்து
பதிவிடவும் .

Stynagt
9th October 2013, 09:45 AM
http://i43.tinypic.com/2istw9.jpg

திரு. வினோத் சார்..இதுவரை பார்த்திராத புரட்சியார் ரசிகன் மற்றும் நாடோடி மன்னன் இதழ்களைப் பதிவு செய்து எங்களைப் பரவசத்தில் ஆழ்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி. உலகிலே ஒரு நடிகரைப்பற்றி அதிக இதழ்கள் வெளிவந்தது, வந்துகொண்டிருப்பது நம் தலைவருக்காக மட்டுமே..இதிலும் கின்னஸ் சாதனை படைக்கிறார் நம் புரட்சியார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Richardsof
9th October 2013, 11:03 AM
1972 - அக்டோபர் புரட்சி - மக்கள் திலகத்தின் புகழின் இமாலய வெற்றி


புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து நீக்கிய செய்தி அறிந்ததும் அரசியல் - திரை உலக பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் . ரசிகர்கள் மிகவும் கொதித்து எழுந்தார்கள் . சாதாரண பொது மக்களும் அடிமட்ட ஏழைகளும் அதிர்ந்து போனார்கள் .
மக்கள் திலகம் அவர்கள் எந்தவித ஆத்திரம் இல்லாமல் மக்களையும் தன்னுடைய ரசிகர்களையும் நம்பி அடுத்த கட்ட நடவடிக்கைகக்கு தயாரானார் . மக்கள் திலகத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்றைய வலிமையான ஆளும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் - சட்ட மன்ற - பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஒருவர் கூட மக்கள் திலகத்திற்கு ஆதரவாக கட்சியை விட்டு வெளியே வரவில்லை

மக்கள் திலகத்திற்கு ஆதரவாக தமிழ் நாடே பொங்கி எழுந்தது . சாலையில் சென்ற அனைத்து வாகனங்கள் மீதும் மக்கள் திலகத்தின் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டு சென்றதை நாடு முழுவதும் ஆதரவு அலை வீசியதை அன்றைய நாளேடுகள் - வார ஏடுகள் இந்திய - மற்றும் வெளிநாடுகளில் செய்தியாகவும் எம்ஜிஆரின் மாஸ் பற்றிய கட்டுரையாகவும் வந்தது .
ஒரு நடிகருக்கு ஒரு மாநிலத்தில் இந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு - ரசிகர்கள் செல்வாக்கு உள்ளதை வைத்து எம்ஜிஆர் - விரைவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க போகிறார் என்று
நாடே உணர்ந்து கொண்டது .

மக்கள் திலகத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகுவதை ஒரு சிலரால் ஜீரணிக்க முடியவில்லை . சில பத்திரிகைகள் எம்ஜிஆரின் செய்திகளை இருட்டடிப்பு செய்தார்கள் .

எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் மிரட்டப்பட்டார்கள் . விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டார்கள் . ரசிக மன்ற நிர்வாகிகள் தாக்கப்பட்டார்கள் - பொய் வழக்குகள் போடப்பட்டது .

மக்கள் திலகம் எதற்கும் அஞ்சவில்லை . நம்பிக்கையுடன் போராடி வெற்றி கண்டார் .
மக்கள் திலகத்தின் இதய வீணை படம் வெளிவருவதில் [6.10.1972 வரவேண்டிய படம் ] தள்ளி போடப்பட்டது .
அன்றைய சூழ் நிலையில் இதயவீணை படத்திற்கு மேலும் ஒரு பாடல் படமாக்கப்பட்டது .
ஒரு வாலுமில்லே .. நாலு காலுமில்லே என்ற பாடல் படமாக்கப்பட்டு 20.10.1972 அன்று வருவதாக
விளம்பரம் வந்தது .
9.10 -1972 முதல் 16-10 1972 அரசியல் உலகிலும் திரை உலகிலும் ஒரு வித பரப்பரப்பான சூழ் நிலை
நிலவியது . ஒரே கேள்வி ..... எம்ஜிஆர் என்ன செய்ய போகிறார் ......

தொடரும் .......

Richardsof
9th October 2013, 02:39 PM
http://i41.tinypic.com/2ll2czk.jpg

Richardsof
9th October 2013, 02:41 PM
http://i41.tinypic.com/n1rmsh.jpg

Richardsof
9th October 2013, 02:43 PM
http://i39.tinypic.com/hsqnbn.jpg

Richardsof
9th October 2013, 02:45 PM
http://i39.tinypic.com/2vrwsxy.jpg

orodizli
9th October 2013, 02:47 PM
மக்கள்திலகம் - அவர்களின் வாழ்வில் பொன்னான, அனால் புயலான நேரமாக கருதப்பட்ட மாதம்தான் அக்டோபர் - மாதம் 1972 - ஆண்டு துவங்கி சில காலம் கடந்து ஆண்ட காலம் - வந்தது...வினோத் சார் கூறியுள்ள படி அக்டோபர் மாதம் 9 -தேதி முதல் 16 -தேதி வரை இந்தியாவின் திரை & அரசியல் உலகமே அல்லோல பட்ட நாட்கள் எனில் மிகை ஆகாது...வேறு யாரேனும் ஒருவராக இருந்திருந்தால் ஒன்று- நாட்டை விட்டு போய் இருக்க வேண்டும்...அல்லது உலகத்தை விட்டே சென்ற்ருகக வேண்டும் ? ! - இதுதான் பொதுவாக நடந்திருக்கும்...அனால் மக்கள்திலகம் - தான் என்றும் எதிர் நீச்சலிட்டே பழக்க பட்டவராயிற்றே ! முழுமையான எதிர்ப்பில் - நெருப்பாற்றில் புடம் போடப்பட்ட தங்கமாய் -தக,தகவென ஜொலித்து - அனைத்திலும் வெற்றியை நுகர்ந்து அதற்கான விடையையும் தந்தது நாம் அறிந்த விஷயம் தானே!!!

Richardsof
9th October 2013, 02:47 PM
http://i42.tinypic.com/2eofnki.jpg

Richardsof
9th October 2013, 02:50 PM
http://i39.tinypic.com/23s936q.jpg

Stynagt
9th October 2013, 04:37 PM
http://i39.tinypic.com/23s936q.jpg

திரு. வினோத் சார்.தாங்கள் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துகொண்டே இருக்கிறீர்கள். ஒவ்வொரு பதிவும், ஆவலையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகின்றன. சுமார் 40 ஆண்டு காலம் இந்த பொக்கிஷங்களைஎல்லாம் பாதுகாத்து தற்போது உங்களிடம் ஒப்படைத்திருக்கும் மேடம் பிரபா அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த, நன்றியைக் காணிக்கையாக்கும் பாராட்டுதலைத் தெரிவித்துவிடுங்கள் சார். இந்த போற்றுதற்கரிய செயலுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் ஈடாகாது.
http://i40.tinypic.com/2vxg3fq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

masanam
9th October 2013, 05:01 PM
மக்கள் திலகத்தின் படங்கள் எல்லாம் அருமை.
அனைத்து பதிவுகளுக்கும் வினோத் ஸார்..

mahendra raj
9th October 2013, 05:28 PM
The link is not working sir.

I too realized that after seeing your post, MGR Roop. I think some images cannot be copied from FB but can be copied in Documents. I tell you what - you give me your email and I will send it to you. Thereafter see whether you can convert it and post it here.

Richardsof
9th October 2013, 06:28 PM
இனிய நபர்கள் திரு கலியபெருமாள்/ திரு செல்வகணேஷ்

மக்கள் திலகத்தின் அரிய ஆவணங்களை பாதுகாத்து வைத்து நம் மக்கள் திலகம் திரிக்கு

தந்து உதவிய பிரபா மேடம் வணக்கத்திற்குரியவர்கள் . திரைஉலகம் - திரைசெய்தி

புரட்சியார் ரசிகன் - நாடோடிமன்னன் - மன்னாதி மன்னன் போன்ற மக்கள் திலகத்தின் புகழ்

பாடிய இந்த புத்தகங்களை 40 ஆண்டுகள் மேலாக பாது காத்து வைத்து இருந்தது மிகவும்

பாராட்டுக்குரியதாகும் .

Stynagt
9th October 2013, 06:35 PM
எம்.ஜி.ஆரின் சாதனைகள்
இந்த கட்டுரை தமிழ் தேசம் என்னும் இணைய தளத்திலிருந்து எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டது. இது கட்டுரை அல்ல. 1972ம் ஆண்டு நடந்த அக்டோபர் புரட்சியில் ஒரு உத்தமத் தலைவனுக்காக,அவருடைய உண்மைத்தொண்டர்கள் நிகழ்த்திய உணர்ச்சிப்போராட்டம். இதைப் படிக்கும்போது நீங்களும் உணர்ச்சிவசப்படப் போவது உண்மை.

போராட்டமே வாழ்க்கை!

”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போரட்டமாகவே இருக்கிறது!”

இப்படிச் சொன்னவர், புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்தான்!

இதை அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் சர்வ சாதாரணமாக, பேச்சோடு பேச்சாகச் சொன்னார். ஆனால், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள்தாம் எத்தனை எத்தனை!

‘எம்.ஜி.ஆர்!’ என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?

அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் எத்தனை!

அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் நீந்திய நெருப்பு ஆறுகள் எத்தனை!

அவர் ஏறி இறங்கிய இமயக் கொடுமுடிகள் எத்தனை! அவர் தாண்டி வந்த சஹாராப் பாலைவனங்கள் தாம் எத்தனை! எத்தனை!

ஏழு வயதிற்குள் எத்தனை நாள் வறுமைத் தீயில் வாடி இருக்கிறார்!

கதாநாயகன் ஆவதற்குள் பட்ட துன்பங்கள்

ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து, நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு ஒரு நாடறிந்த நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெறுவதற்குள் அவர் பட்ட அல்லல்கள் எத்தனை! ஆசிரியர்களிடம் பெற்ற பிரம்படிகள் எத்தனை!

நாடக உலகிலிருந்து திரைப்பட உலகில் புகுவதற்காக அவர் நடந்து நடந்து தேய்ந்த செருப்புகள் எத்தனை!

‘சதி லீலாவதி’ என்னும் படத்தில் ஒரு சாதாரண வேடத்தில் அறிமுகமாகி, ‘ராஜகுமாரி’ என்னும் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடிப்பதற்குள் இடையில் அவர் அடைந்த இன்னல்கள் எத்தனை! சந்தித்த ஏற்ற இறக்கங்கள் எத்தனை!

ராஜகுமாரி படத்தை அடுத்து பல படங்களில் சரித்திர காலக் கதாநாயகன் வேடம் தாங்கியே நடித்து வந்த அவரது திரைஉலக வாழ்க்கை, சமூகப்படங்கள் தயாராகி மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கிய ஒரு கால கட்டத்தோடு முடித்துவிட்டதாக ஆரூடம் சொன்னவர்கள் எத்தனை பேர்!

சமூகப்பட நாயகனாகவும் தம்மால் சிறப்பாக நடிக்க முடியும்; எந்த வேடத்திலும் தம்மால் ஒளிவீசிப் பிரகாசிக்க முடியும் என்று அவர் நிரூபித்ததை நாடறியும். இன்று அது வரலாறு.

ஆனால் அப்படி நிரூபிப்பதற்குள் அவர் சந்தித்த சோதனைகள் எத்தனை!

ஆரம்ப காலத்தில் கதர் வேட்டி, கதர் சட்டை அணிந்து சிறிய ருத்ராட்ச மாலையைக் கழுத்தில் தரித்துக் காங்கிரஸ்காரராக இருந்தார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து, அவரது அறிவார்ந்த பேச்சாலும், ஆணித்தரமான எழுத்தாலும் கவரப்பட்டு, அவர் காட்டிய மெய்யன்பால் திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாய் உழைத்தார். உயர்ந்தார். அண்ணாவின் ‘இதயக்கனி’ யாகவும் மாறினார்.

ஆனால் அந்த இதயக்கனியை கன்றிவிடும்படி கல்லால் அடித்தவர்களும், சொல்லால் அடித்தவர்களும் எத்தனை பேர்! அவர்களை எதிர்த்துக் கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை.

ஊரறிந்த நடிகர் ஆகி, ஒப்பற்ற ‘புரட்சி நடிகர்’ ‘மக்கள் திலகம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட காலத்திலுங்கூட அவர் சென்ற வழி மலர் தூவப்பட்ட பாதையாகவா இருந்தது? கல்லும், முள்ளும் நிரம்பி அவை அவர் காலைக் குத்திக் கிழித்துக் குருதியைக் கொட்டச் செய்தனவே!

கால் முறிந்தாலும் மனம் முரியாதவர்!

1959 ஆம ஆண்டில், தஞ்சை மாவட்டம் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ என்னும் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சண்டைக்காட்சியில் அவர் கால் எலும்பு முறிந்தது. அதனால் அவர் படுத்த படுக்கையானார். அந்த நிலையலேயே சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சில மாதங்கள் ஓய்வு பெறவும் நேர்ந்தது.

அப்பொழுது அவரது ‘அன்பார்ந்த’ எதிரிகள் என்ன சொன்னார்கள்? ‘முடிந்தது எம்.ஜி.ஆரின் கதை! இனிமேல் அவரால் முடியாது! ஒடிந்துவிட்ட அவர் கால் இனிமேல் ஒன்றுகூடாது. முறிந்த எலும்பு ஒன்றுகூடி அவர் எழுந்து நடந்தாலும் முன்போல அவரால் சண்டைக்காட்சிகளில் ஓடி ஆடி நடிக்க முடியாது” என்றுதான் கூறினார்கள்.

சண்டைக்காட்சிகளில் எம்.ஜி.ஆரின் அருகில் நிற்க முடியாதவர்களெல்லாம் அதை அறிந்து மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்.

ஆனால், நடந்தது வேறு. ஆம்; மீண்டும் தமிழ்த்திரை உலகில் மிகச்சிறந்து நடிகராகத் தலை நிமிர்ந்து நின்றார்.

குண்டடிப் பட்டாலும் குன்றாதவர்

1967 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். குண்டு பாய்ந்த நிலையில் எம்.ஜி.ஆர். இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதை அறிந்து நாடே திடுக்கிட்டது. தாய்க்குலம் அழுது புலம்பியது. இளைஞர் கூட்டம் பெருந்துன்பமுற்றது.

அப்பொழுதும் அவர் விரோதிகள் என்ன சொன்னார்கள்?

”முடிந்தது எம்.ஜி.ஆர் கதை இனி மேல் அவர் பிழைக்கமாட்டார்” என்று சிலர் அற்ப மகிழ்ச்சி கொண்டார்கள்.

மறுநாள் அந்தச் செய்தி வந்தது ”எம்.ஜி.ஆரின் தொண்டைக்கருகில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது; அவர் உயிருக்கு ஆபத்தில்லை! என்பதே அது.

அப்போதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்?

”பிழைத்து எழுந்தாலும் அவரால் முன்போலப் பேச முடியாது; பேச முடியாவிட்டால் எப்படி நடிக்க முடியும்?” என்று கூறி தங்கள் குரூரமான மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்!

எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுச்சிதறல் ஓர் ஓராமாய் ஒதுங்கிவிட்டது. அவர் தும்மியபோது தானாகவே அது வெளியே வந்துவிட்டது. இப்படி மறுபிறவியெடுத்த எம்.ஜி.ஆரின் தொண்டைப்புண் ஆறே மாத்த்தில் ஆறியது. அவரால் பேச முடிந்தது. ஆனால், குரல், குழந்தைகள் பேசும் மழலைபோல் சற்றுத் தெளிவின்றி அமைந்தது; ஆனால், அவரது கோடான கோடி ரசிகர்களும், உடன் பிறப்புக்களும் அக்குறையை எண்ணி அவர்மீது கொண்டிருந்த அன்பிலிருந்து சற்றும் மாறவில்லை. அது கண்டு எதிரிகள் வியப்பால் செயலற்றனர்.

1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுத் தூக்கி எறியப்பட்டார்.

அவர் செய்த தவறு என்ன? கணக்குக் கேட்டார். ஆம், கட்சிக்கணக்கைக் கேட்டார்; சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்று கணக்கு காட்ட வேண்டும் என்று கேட்டார்.

அதனால் கட்சித் தலைமை சீறியது. அவரைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தது. பின்னர் நிரந்தரமாகவே நீக்கிவிட்டதாகவும் அறிவித்தது!

அப்பொழுதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்? ”இன்றோடு முடிந்தது எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு” என்று கொக்கரித்தார்கள்.

‘கட்சியால் எம்.ஜி.ஆர் வளர்ந்தாரா, எம்.ஜி.ஆரால் கட்சி வளர்ந்ததா? என்று பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் ஆராய்ச்சி நடத்தின.

ஆனால், எம்.ஜி.ஆரின் நிலை என்ன?

எம்.ஜி.ஆர். மீண்டும் இமயம்போல் எழுந்து நின்றார்.

புரட்சி நடிகர் புரட்சித் தலைவராக மாறினார். அண்ணாவின் பெயரால் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஐந்தே ஆண்டுகளில் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி, கட்சியை வளர்த்தார். 1987இல் தமிழகத்தின் ஆட்சியிலும் அமர்ந்தார்.

ஆனால், அந்த ஐந்தாண்டுகளுக்குள் அவர் சந்தித்த போராட்டங்கள்தான் எத்தனை.

முதல் போராட்டம்

1967 ஆம் ஆண்டில், தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.

அப்போது கழுத்தில் கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலகத்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது.

தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.

அதிக வாக்கு யாரால் கிட்டியது?

அதுவரை தி.மு.க.வுக்குப் பெருமளவில் வாக்களிக்காத தாய்க்குலம், குண்டடிப்பட்டுக் கட்டிடப்பட்ட நிலையில் இருந்த புரட்சித் தலைவரின் தோற்றத்தைப் பார்த்து முதன் முறையாக தி.மு.க.வுக்கு வாக்களித்தது. அதனால் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்றகடிக்கப்பட்டுத் தி.மு.க ஆட்சியில் அமர முடிந்துது.

ஆக, எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு.க.வை ஆளுங்கட்சியாக ஆக்கியது புரட்சித்தலைவர் மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலமும், இளைஞர்களும் கொண்டிருந்த அபரிமிதமான அன்பு என்று சொன்னால் அதிக மிகையில்லை.

தி.மு.க.வுக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று கனவு கூட காணவில்லை.

தலைவரின் தவறான கணிப்பு!

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969 – இல் நோயுற்று மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத் தலைவராக உயர்த்திக்கொண்டார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டார். ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.

ஆட்சியின் சரிவுக்கு அடித்தளங்கள்

இதற்கிடையில் தி.மு.கழக ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜி .ஆருக்கு வேதனை அளிப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன. கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.

நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்ள். புரட்சித்தலைவருக்குப் புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நடவடிக்கைகள் புரட்சித்தலைவரை மிகவும் வேதனைப்படுத்தின.

இந்நிலையில் தி.மு.கழக அரசு பூரண மது விலக்குக் கொள்கையை அடியோடு கைவிட்டது. அதாவது மது விலக்குச் சட்டம் இரத்து ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இதைப் பகிரங்கமாய் எதிர்த்தனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கட்டுப்பாடு கருதி தி.மு.கழகப் பொதுக்குழுவில் மதுவிலக்குச் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் தாய்க்குலத்திற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்த்தார். அதைக் கலைஞரிடமும் எடுத்துரைத்தார். அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.

அடுத்து, மத்திய அரசை ஆளுகின்ற தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் போக்கு பிடிக்காத்தால் திடீரென்று ஒருநாள் ”உறவு முறிந்தது” என்று கருணாநிதி அறிவித்தார்.

மேற்குறித்த நடவடிக்கைகள் கழக ஆட்சிக்குப் பிற்காலத்தில் பெரிய இடையூற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது எம்.ஜி. ஆரின் கணிப்பாய் இருந்தது.

அந்த அக்டோபர் 10 – ஆம் நாள்!

இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்ப்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப பணியாய் இருக்கும்.

அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”

கணக்குக் கேட்டால் கட்சியை விட்டுச் செல் என்பதா?

எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் கலைஞருக்குக் கட்டுபட்டவர்கள்தாம் . இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.

தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.

அவர்களுள் சிலர் தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதாக்க் கூறினார்கள்.

”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.

அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.

இனி, அந்த அக்டோபர் 10 – ஆம் தேதிக்குப் பின்னர் அறிவோம்.

புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.

அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.

நெஞ்சில் எழுந்த நினைவலைகள்

சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.

அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.

முதன்முதலாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற அண்ணாவின் ஆணைப்படி அல்லும் பகலும் தாம் உழைத்தது;

அண்ணா தம்மைத் ‘தம் இதயக்கனி’ என்று சிறப்பித்தது.

சில முடிவுகளில் ‘எம்.ஜி.ஆரின் கருத்து என்ன’ என்று கேட்டு அண்ணா செயல்பட்டது; இக்கட்டான சூழ்நிலையில் கலைஞரை முதல்வராக்கியது.

கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் தாம் உதவியது. அதன் பின்னர் கழக அரசு அண்ணாவின் பாதையை விட்டு விலகிச் சென்றதும், அதைத் தொடர்ந்து நடந்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் முதலியனவெல்லாம் உள்ளத்திரையில் அடுத்தடுத்து எழுந்தன.

நெருங்கிய நண்பர்களெல்லாம் தனி இயக்கம் தொடங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற மறவர்களோ தாங்கள் இனி எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தானைத் தலைவனின் கட்டளையை எதிர்பார்த்திருந்தனர். எம்.ஜி.ஆரோ அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் பிளவுபடுவதா? அதற்குத் தாமே காரணமாய் இருக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கழகத் தலைமைக்கும், புரட்சித் தலைவருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அருமை நண்பர்கள் எங்கே?

வழ்க்கமாகப் பொழுது விடிவதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். இல்லத்தின் முன்பு அவர் முகதரிசனம் காணவும் உதவி பெறவும், அரசியல் ஆலோசனை பெறவும், கூட்டம் கூடியிருக்கும். அன்று எஸ்.எம். துரைராஜ், கே.ஏ.கிருஷ்ணசாமி,அனகாபுத்தூர் இராமலிங்கம், ஆளந்தூர் மோகனரங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் வரவில்லை. இது எம்.ஜி. ஆருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

என்ன ஆனார்கள் என் நண்பர்கள்? என்னிடம் உதவி பெற்றவர்கள், என் உதவியால் பதவி பெற்றவர்கள் எங்கே? நேரில் வர இயலாவிட்டாலும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கலாமே! பதவியில் இருக்கும் கருணாநிதியை எதிர்க்க அஞ்சுகிறார்களோ? அவர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படுகிறார்களோ? என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்.

ஆனால், அரசியலைப் பிழைப்பாக்க் கொண்ட சிலர் தான் அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளாய் இருந்தார்களே தவிர, சாதாரணத் தொண்டர்கள் அப்படி இருக்கவில்லை.

தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடிகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள்.
நான்காம் நாளன்று பற்பல ஊர்களிலிருந்து, தோழர்கள் லாரி, வேன், பஸ், இரயில் எனப் பல வாகனங்களில் ஏறி சென்னையை நோக்கிப் படையெடுத்தது போலச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.

அலை கடல் எழுந்ததோ?

ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டுவிட்டனர். அவர்களுள் பெரும்பாலானோர் புரட்சித் தலைவரின் வீடு எங்கே இருக்கிறது என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சென்னை அவ்வை சண்முகம் சாலையிலிருந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தை அறிவார்கள்; சத்யா ஸ்டுடியோவை அறிவார்கள்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் எம்.ஜி.ஆர் இல்லை என அறிந்ததும் அலை அலையாகத் திரண்டு தோழர்கள், அடுத்து சத்யா ஸ்டுடியோவுக்குச் சென்று, சாலைகளில் குழுமினார்கள்.

காலை ஏழு மணிமுதல் திரளத் தொடங்கிய கூட்டம் எட்டு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் பெருகியது; அடையாறு சந்திப்பு, இராஜா அண்ணாமலைபுரம், கேசவப் பெருமாளபுரம், கிரீன்வேஸ் சாலை, ராபர்ட்சன் பேட்டை, நாராயணசாமித்தோட்டம், மந்தைவெளி போன்ற பகுதிகளிலெல்லாம் பரவி மகாசமுத்திரம்போல விரிந்துகிடந்தது- போக்குவரத்து நிலை குலைந்துவிட்டது!.

”எங்கே மக்கள் தலைவர்? பொன்மனச் செம்மல் எங்கே? புரட்சித் தலைவரின் முகத்தைக் காணாமல், அவருடைய புன்சிரிப்பைப் பார்க்காமல், அவருடைய குரலைக் கேட்காமல்,நாங்கள் போக மாட்டோம், போகமாட்டோம்!” என்று அவர்கள் முழங்கினார்கள்.

சத்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மனாபன் கூட்டத்தைப் பார்த்துச் செயலற்றவரானார். ”புரட்சித் தலைவர் இங்கே இல்லை!’ என்று அவர் கூறினார். ஆனால், பொங்குமாங் கடலெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கலையவில்லை.

”தலைவரை வரச்சொல்லு! தலைவரை வரச் சொல்லு!” என்று பெரும் முழக்கமிட்டது.

உடனே உள்ளே சென்ற பத்மநாபன் ராமாவரம் தோட்டத்திற்குத் தொலைபேசியில் செய்தியைக் கூறினார்.

”இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை யென்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்!” என்ற தொலைபேசியில் கூறினார் பத்மநாபன்.

செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டுக் காரில் விரைந்து வந்தார்.

புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் ”புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க!” என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.

புரட்சித் தலைவர் அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.

அன்பு வெள்ளத்தில் எம்.ஜி.ஆர்!

அடையாறு சந்திப்பை அடைந்தபோதே அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை நின்ற மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, ‘இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன். வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர். அதற்குதப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.

அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள். கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து முன்னேறிச செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.

எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நினுற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே?

எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.

தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.

‘மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மக்கள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

நாங்கள் உங்கள் பின் இருப்போம்!

அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.

அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்.

கருத்தறியும் சுற்றுப்பயணம்

எம்.ஜி.ஆர் தாம் கூறியபடியே மறுநாளே பொது மக்களின் கருத்தை அறியும் தம சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.

ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும்.

அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர். அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னறிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.

பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.

அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிர்க்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப்பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.

மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.

அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காக்க் கண்விழித்துக் காத்திருந்தது.

காஞ்சியில் கரைபுரண்ட மக்கள் வெள்ளம்

நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள் கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.

....இது முடியவில்லை. முடிந்தால் தொடருங்கள். நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
9th October 2013, 06:57 PM
உண்மையில் ஏன் எம்.ஜி.ஆர் 38 வருடங்களுக்கு முன்னால் அ.தி.மு.கவைத் தொடங்கினார்

கருணாநிதி என்ற தீய சக்தியை அரசியலிலிருந்து அகற்றவும், அண்ணா உருவாக்கிய தி.மு.கவின் அசல் நோக்கங்களைக் காப்பாற்றவும்தான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவைத் தொடங்கினார் என்பதை 1972லிருந்து 1987ல் எம்.ஜி.ஆர் பல முறைத் திரும்பத் திரும்ப சொல்லி வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இருக்கும்வரையில் கருணாநிதியால் ஒரு தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கவேமுடியவில்லை என்பதும் இன்னொரு முக்கிய வரலாற்றுச் செய்தி.

1972ல் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியுடன் கருணாநிதிக்கும் அவரது ஆட்சிக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் அளித்தார். அவற்றுக்கெல்லாம் சட்டமன்றத்தில் கருணாநிதி அளித்த மழுப்பலான பதில்களை அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. பிரதமர் இந்திரா காந்தி நீதிபதி சர்க்காரியா கமிஷனை நியமித்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கச் செய்தார். சர்க்காரியா கருணாநிதி அரசு ஊழல்களைச் செய்திருப்பதாக தெளிவாக அறிவித்தது. அதன் அடிப்படையில் கருணாநிதி மீதும் அவரது சகாக்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளைத் திரும்பப் பெற செய்ய, கருணாநிதி படாத பாடு பட்டார். அப்போது அவரது கூட்டாளியாக இருந்த ஜனதா கட்சி ஆட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் வழக்குகளை திரும்பப் பெற மறுத்துவிட்டார். மறுபடியும் வழக்கு போட்ட இந்திரா காந்தி காலிலேயே விழுந்துதான் கருணாநிதி அந்த வழக்குகளைத் தொடர விடாமல் தப்பிக்க முடிந்தது.

1980ல் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டு எம்.பி.தேர்தலில் ஜெயித்தபின்னர், எம்.ஜி.ஆர் அரசைக் கலைக்கும்படி இந்திராவை கருணாநிதிதான் வற்புறுத்தினார். 356ம் பிரிவின் கீழ் மாநில அரசைக் கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கக்கூடாது என்று தி.மு.க அரசு கலைக்கப்படும்போதெல்லாம் சத்தம் போடும் கருணாநிதி அதே 356ஐ எம்.ஜி.ஆருக்கு எதிராகப் பயன்படுத்தத் தயங்கவே இல்லை.

ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக் கலைப்புக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் அணி படு தோல்வி அடைந்தது. அதன்பின்னர் காங்கிரஸ் அ.தி.மு.க பக்கம் போய்விட்டது. அடுத்த 13 வருடங்கள் அ.தி.மு.கவுடன் தானிருந்தது.

அப்போது சர்க்காரியா கமிஷன் தொடர்பான ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க காங்கிரசிடம் சரணாகதி அடைந்த கருணாநிதி இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தன் குடும்பத்தினரும் மாட்டிவிடாமல் தடுப்பதற்கு காங்கிரசிடம் சரணாகதி அடையும் நிலையில் இருக்கிறார்.

அதிக இடங்கள் தேவை, ஜெயித்தால் கூட்டணி ஆட்சி; ஆட்சியில் காங்கிரசுக்கும் பங்கு; துணை முதல்வர் பதவி உண்டு என்ற கோரிக்கைகளை 1980லும் பேசியது. அப்போது அத்தனை கோரிக்கைகளையும் ஒப்புக் கொண்டு, காங்கிரசுடன் சேர்ந்து குறைந்த பட்சப் பொது திட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டு தேர்தல் அறிக்கையையும் கருணாநிதி வெளியிட்டார். கூட்டணி ஜெயித்தால் முதல்வர் பதவியும் தி.மு.கவுக்கு இல்லாமற் போய்விடுமோ என்ற அளவுக்கு தி.மு.கவினருக்கு பயம் இருந்தது. இந்திராவே பகிரங்கமாக, நாங்கள் ஜெயித்தால் கருணாநிதிதான் முதல்வர் என்று அறிவித்தார். ஆனால் நடந்தது என்ன. புரட்சித்தளைவரே மீண்டும் முதல்வரானார். தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி படு தோல்வியடைந்தது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Richardsof
9th October 2013, 06:58 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


அருமையான மீள் பதிவு . 1972 நடந்த சம்பவங்களின் முழுமையான பதிவு .

உலக அரங்கில் மக்கள் திலகத்தின் புகழை உலகளவில் எடுத்து சென்ற பெருமை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு உண்டு .

1972- அக்டோபர் புரட்சிக்கு பின் இன்று வரை தன்னுடைய ரசிகர்களின் விழிகளுக்கும்
எண்ணங்களுக்கும் , இதயத்திலும் , நிறைந்திருக்கும் அளவிற்கு சாதனைகள் புரிந்து
வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் - என்று கோடிக்கணக்கான ரசிகர்களின்
சொல்வது மூலம் மக்கள் திலகத்திற்கு பெருமை உண்டு .

Stynagt
9th October 2013, 07:08 PM
இரட்டை இலை அதிமுக சின்னமாகிய வரலாறு

http://i44.tinypic.com/igxit2.jpg

எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற கட்சியை தொடங்கிய ஒருவருட காலத்திற்குள்ளாகவே திண்டுக்கல் தொகுதியில் பாராளுமன்ற இடைத்தேர்தல் வந்தது. திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்துவந்த எம்.ஜி.ஆருக்கு தன்னுடைய வலிமையையும், மக்கள் செல்வாக்கினையும் காட்டியாக வேண்டிய காலக்கட்டம். அதிமுக என்ற குழந்தையை முதலில் சந்திக்கப் போகும் தேர்தல் என்பதால் ஊடகங்களும், மக்களும், அரசியல் தலைவர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தார்கள். திண்டுக்கல்லில் மாயாண்டித் தேவர் (மாயத்தேவர்) என்ற வழக்கறிஞரை வேட்பாளராக தேர்வு செய்தார்.

அதிமுகவின் முதல் வேட்பாரளான மாயத்தேவர் தேர்தலுக்கு சின்னங்களை தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. டிஜிட்டல் பேனர்களோ, தொலைக்காட்சிகளோ, போஸ்டர்களோ புழக்கம் இல்லாத காலத்தில் மதிநுட்பம் வாய்ந்த தேவர் தேர்ந்தெடுத்துதான் இரட்டை இலை சின்னம். தேவர் சிந்தனை செய்தது சுவர் விளம்பரங்களுக்கு ஏற்ற எளிமையான சின்னம் வேண்டும் என்பதையும், மக்களுக்கு எளிதில் நினைவில் நிற்கும் வகையான சின்னம் வேண்டும் என்பதுதான். எம்.ஜி.ஆர் ஆலோசனையும், தலையீடலும் இன்றி கட்சியின் வேட்பாளர் தேர்ந்தெடுத்த சின்னத்தை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொண்டார் என்றால் அதில் தேவரின் சிந்தனையும், எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையும் இருக்கிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

ujeetotei
9th October 2013, 07:11 PM
I too realized that after seeing your post, MGR Roop. I think some images cannot be copied from FB but can be copied in Documents. I tell you what - you give me your email and I will send it to you. Thereafter see whether you can convert it and post it here.

Sure sir my email id is replytomgr@live.in

Richardsof
9th October 2013, 07:16 PM
இரட்டை இலை விருந்து படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .


1972 பொறுத்தவரை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ராசியான ஆண்டாகும் .

திரை உலகில் வெற்றி மேல் வெற்றி . 1972 ஆண்டில் நடித்து கொண்டிருந்த படங்களின் எண்ணிக்கை

10 படங்கள் . 1972ல் இந்திய அரசாங்கத்தின் சிறந்த நடிகருக்கான ''பாரத் '' பட்டம் பெற்றது .

அரசியல் உலகில் புரட்சி தலைவராக உதயமானது . அவரின் புகழ் உலகமெங்கும் பரவியது .

1972ல் துவங்கி வெற்றி மேல் வெற்றி என்று திரை - அரசியல் இரட்டை விருந்தினை தன்னுடைய ரசிகர்களுக்கு வழங்கி மகிழ்ந்தவர் நம் மக்கள் திலகம் .

xanorped
9th October 2013, 08:27 PM
http://4.bp.blogspot.com/-8LuxnRF1zoA/UNdWThFvtrI/AAAAAAAAIK0/Xsh0ORKqc1A/s640/38.jpg

xanorped
9th October 2013, 08:29 PM
http://dd508hmafkqws.cloudfront.net/sites/default/files/styles/article_node_view/public/24ELLIS-DUNGAN-25-09-2013.jpg


Elis.R.Duncan,S.S.Vasan & Makkal THilagam

xanorped
9th October 2013, 08:31 PM
http://www.frontline.in/multimedia/dynamic/01603/18FL_MK_MANTHIRI_K_1603419g.jpg

xanorped
9th October 2013, 08:33 PM
http://4.bp.blogspot.com/-EUAnIESBPQ8/Ug6D_jo9YgI/AAAAAAAAMDs/UKTI5mZAxaU/s1600/tamil-actor-arun-vijay-childhood-photos+(8).jpg

xanorped
9th October 2013, 08:36 PM
http://latchuart.files.wordpress.com/2012/04/01-mgrasbond2.jpg?w=980

Richardsof
9th October 2013, 08:42 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ca9a3787-7c59-4e31-979c-a3cabff0e8ae_zps1cf9c75c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ca9a3787-7c59-4e31-979c-a3cabff0e8ae_zps1cf9c75c.jpg.html)

Richardsof
9th October 2013, 08:55 PM
http://youtu.be/v7cOEgcrHaI

http://youtu.be/KlV79WShF0s

Richardsof
9th October 2013, 09:03 PM
http://youtu.be/FGJHW0LUYe0

siqutacelufuw
9th October 2013, 09:13 PM
http://i43.tinypic.com/whehz7.jpg

CONGRATULATIONS, MY DEAR PRADEEP SIR for your crossing 100 valuable postings in this Thread.

Expecting from you more rare images and news about our beloved God M.G.R.

Onguga Aalayam Kanda Aandavan M.G.R.

Ever Yours : S.Selvakumar

Endrum M.G.R.
Engal iraivan

idahihal
9th October 2013, 09:28 PM
http://dd508hmafkqws.cloudfront.net/sites/default/files/styles/article_node_view/public/24ELLIS-DUNGAN-25-09-2013.jpg


Elis.R.Duncan,S.S.Vasan & Makkal THilagam
Congratulations Pradeep sir for crossing 100 valuable postings. and thank you very much for this rare picture. Could you please let us know the occasion of this photo . We are awaiting very eagerly your DVD documentation "Vallalin Varalaru". Please let us know the date of release.
V.Jaisankar/

idahihal
9th October 2013, 09:32 PM
வினோத் சார்,
நாடோடி மன்னன், திரைஉலகம் பதிவுகள் மிக மிக அருமை. மிகுந்த வேலை பளுவின் காரணமாக பதிவுகள் அதிகம் மேற்கொள்ள இயலவில்லை. விரைவில் அடிக்கடி முன்போல் பதிவுகளுடன் தங்களைச் ச்ந்திக்கிறேன். நன்றி.

oygateedat
9th October 2013, 10:06 PM
Congrats Mr.Pradeep Balu Sir for crossing 100 posts.

Regds,

S.RAVICHANDRAN

oygateedat
9th October 2013, 10:09 PM
Dear Vinod Sir,

Your postings from nadodi mannan and thirai ulagam magazines are very excellent.

Regds,

S.RAVICHANDRAN

orodizli
9th October 2013, 10:26 PM
திருவாளர்கள் வினோத் & கலிய பெருமாள் விநாயகம் - இவர்களின் பதிவுகள் அருமை. kpv சாரின் அக்டோபர் புரட்சி நினைவூட்டல் மடல் அற்புதம், அபாரம்!!! 1972 - வருடம் பரத் விருது விழா கொண்டாட்டம் நடந்து நிறைவடைந்த வேளையில் திருஷ்டி -பரிகாரமாய் கட்சியை விட்டு வெளியேற்றிய நிகழ்வு நடந்தது...ஆனால் இறைவன் மக்கள் வழியே ஆசிர்வாதங்கள் வழங்கி திரை-உலகில் மட்டும் மக்கள்திலகம் புக்ழுட்சியை அடைந்தால் போறாது, அரசியல் - உலகிலும் புகழின் எல்லையை அடைய வேண்டுமென விரும்பியதாலே என்னவோ மிக முக்கிய,அதி முக்கிய இரு பெரும் தீவிர துறைகளிலும் MGR - அவர்கள் கோலோச்ச இயன்றது - இவையெல்லாம் புரட்சி தலைவர் -ஆக உயர்வு பெற்றது - மக்கள் திலகம் அவர்களின் ரசிகர்கள், ரசிகையர்கள், அபிமானிகள், அனுதாபிகள், தொண்டர்கள், வெறியர்கள், பக்தர்கள் என எல்லோருக்கும் பெருமையும், மதிப்பும், மரியாதையும் வந்து அடைந்து கொண்டே இருக்கிறது...

orodizli
9th October 2013, 10:52 PM
திரு பிரதீப் பாலு சார் 100 - பதிவுகளை கடந்ததற்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்... யார், யாரோ சாதனை, சரித்திரம், சகாப்தம் -என்றெல்லாம் பறை சாற்றிகொண்டிருக்கிறார்களே - அப்பொழுது 1972 - ஆண்டு mgr ., அவர்களின் வாழ்வில் நடந்தேறிய அத்தியாங்களை ஒரு துளி அளவு கூட உணராதவர்கள் - என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டுமே தவிர, அவர்களுடைய - அறியாமையை அறிவிலி தன்மை என உணர்தல் வேண்டும்..." சொல்றவங்க சொன்னா , சொன்னபடி கேப்பாங்க ", என நேற்று - இன்று - நாளை திரைபடத்தில் வசனம் பேசுவார் புரட்சி தலைவர் - அதை நிஜத்திலும் நூற்றுக்கு, நூறு உண்மையாக்கி காட்டினார் - நம் கொள்கை கோமான் அவர்கள்! இந்நிகழ்ச்சி அகிலம், உலகம், அண்டம்,பேரண்டம், பிரபஞ்சம் - என வேறு எங்கேயும் நிகழ்ந்திருக்குமா? ஆதலால்தான் ஒரு திரைபடத்தில் வசனம் வரும்- உலகத்திற்கு ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு mgr என்று...அது சரிதானே ...

orodizli
9th October 2013, 10:55 PM
Congratulations Pradeep sir for crossing 100 valuable postings. and thank you very much for this rare picture. Could you please let us know the occasion of this photo . We are awaiting very eagerly your DVD documentation "Vallalin Varalaru". Please let us know the date of release.
V.Jaisankar/[/SIZE]

this function makkalthilagam with amarar s.s.vaasan - maattukkara velan pooja -beginning day ?

Richardsof
10th October 2013, 06:17 AM
எம்.ஜி.ஆரின் தனித் தன்மையைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து நேசிக்கின்ற பேருள்ளம் அவருக்கு இருந்தது. கலைத் துறையில் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர். திரைப்படத் துறையில் அவருக்குத் தெரியாத தொழில்நுட்பமே கிடையாது. மிகச் சிறந்த இசை உணர்வு கொண்டவர். மிகச் சிறந்த நடன திறமை கொண்டவர். நகைச்சுவை உணர்வோடு நடிப்பதென்றால் அதிலும் அவருக்கு நிகர் கிடையாது.
told by actress jayalalitha
http://i39.tinypic.com/66humh.jpg

xanorped
10th October 2013, 07:12 AM
http://3.bp.blogspot.com/-nFIns0PiVOw/UMy3IYjd14I/AAAAAAAAH70/cNN2geW3V6Y/s1600/13.jpg


Makkal THilagam M.G.R in his niece Mrs Sathyabamma Rajan's Marriage

xanorped
10th October 2013, 07:17 AM
http://www.snehasallapam.com/forum2/174-kk_vin-collections-44.html

ujeetotei
10th October 2013, 08:11 AM
Pradeep Sir congrats on crossing 100 posts in Makkal thilagam thread.

Richardsof
10th October 2013, 08:19 AM
http://i40.tinypic.com/2ztav0g.jpg

Richardsof
10th October 2013, 08:20 AM
http://i41.tinypic.com/10qvzmq.jpg

Richardsof
10th October 2013, 08:21 AM
http://i44.tinypic.com/168v04y.jpg

Richardsof
10th October 2013, 08:24 AM
http://i42.tinypic.com/2irugb8.jpg

ujeetotei
10th October 2013, 08:25 AM
Eagerly waiting for the release of Vallalin Varalaru.

Richardsof
10th October 2013, 08:26 AM
http://i42.tinypic.com/2qvqlfo.jpg

Richardsof
10th October 2013, 08:28 AM
http://i42.tinypic.com/mbpfzl.jpg

Richardsof
10th October 2013, 08:47 AM
1972- THIRAI ULAGAM - MAGAZINE - SPECIAL MALAR - MAKKAL THILAGAM MGR BHARATH AWARD

http://i43.tinypic.com/2en9po2.jpghttp://i39.tinypic.com/2ai0nwz.jpg

Stynagt
10th October 2013, 10:45 AM
எம்ஜிஆர்-கருணாநிதி பற்றி கவியரசு கண்ணதாசன்
http://i44.tinypic.com/21e1e9t.jpg
திமுகவில் எம்ஜிஆர் நீக்கம் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.
இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலக்கியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடைசியில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

oygateedat
10th October 2013, 11:16 AM
from today (10.10.2013)

mannathi mannan

at coimbatore delite theatre



from tomorrow (11.10.2013)

oli vilakku

at coimbatore royal theatre

Richardsof
10th October 2013, 01:58 PM
53 ஆண்டுகள் முன்பு வந்த மக்கள் திலகத்தின் மன்னாதி மன்னன்
கோவை நகரில் விஜயம் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .

ஓய்வில்லாமல் ஒளிவிளக்கு படம் ஆண்டுதோறும் கோவை நகரில் வெளியாகி வெற்றி நடை போடுவது சாதனையே.

orodizli
10th October 2013, 02:32 PM
எஸ்வி சாரின் மக்கள்திலகம் - வெளி வராத, வெளி வந்த திரை படங்களின் விளம்பர வர்ணனை சுவையோ சுவை...kpv - சாரின் கவியரசு கண்ணதாசன் அவர்களின் புரட்சி நடிகர் கட்சியை விட்டு நீக்கம்- தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை அருமையோ அருமை... 10 -10 -1972 இதே நாளில் தமிழ்நாடு, மற்றும் இந்தியா முழுவதும் ஏற்பட்ட அதிர்வலைகள் எப்படிப்பட்ட ஒரு யுகபுரட்சியை தோன்ற காரணமாயிருந்தது = என மனதில் எண்ணினாலே மயிர் கூச்செறியும் உணர்வை காணலாம்...எங்கும் அறிவிக்க படாத பந்த் போலவே நடந்ததை மனதில் அசை போடுவோம்......

Russellail
10th October 2013, 05:33 PM
வினோத் சார்,
நாடோடி மன்னன், திரைஉலகம் பதிவுகள் மிக மிக அருமை. மிகுந்த வேலை பளுவின் காரணமாக பதிவுகள் அதிகம் மேற்கொள்ள இயலவில்லை. விரைவில் அடிக்கடி முன்போல் பதிவுகளுடன் தங்களைச் ச்ந்திக்கிறேன். நன்றி.

வீர நடையாளனோ யானை படையாளனோ. மக்கள் இடர் வெல்லும் கொடைவள்ளல், அன்றும் இன்றும் என்றுமே ஒளிவிளக்கு. அவனியெல்லாம் புகழ் மணக்கும் மக்கள் திலகம். அவர் அழகின் முன்னாலே மயங்காத மனம் யாவும் மயங்கும், அவர் உறவு கொண்டாலே உணர்ந்து கொண்டாலே. அவர் அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம்.
http://i44.tinypic.com/28btaq9.jpg

siqutacelufuw
10th October 2013, 05:37 PM
53 ஆண்டுகள் முன்பு வந்த மக்கள் திலகத்தின் மன்னாதி மன்னன்
கோவை நகரில் விஜயம் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .

ஓய்வில்லாமல் ஒளிவிளக்கு படம் ஆண்டுதோறும் கோவை நகரில் வெளியாகி வெற்றி நடை போடுவது சாதனையே.


சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :

ஒரு சிறு திருத்தம் :

53 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த நமது மக்கள் திலகத்தின் "மன்னாதி மன்னன்" மீண்டும் மீண்டும், நீண்ட இடைவெளியில்லாமல் கோவை நகரில் திரையிடப்படுகிறது என்று இருக்க வேண்டும்.

ஒளிவிளக்கு காவியமும் ஓய்வில்லாமல் திரை அரங்குகளை வலம் வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியே.

தகவலை தந்த திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
10th October 2013, 09:07 PM
சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :

ஒரு சிறு திருத்தம் :

53 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த நமது மக்கள் திலகத்தின் "மன்னாதி மன்னன்" மீண்டும் மீண்டும், நீண்ட இடைவெளியில்லாமல் கோவை நகரில் திரையிடப்படுகிறது என்று இருக்க வேண்டும்.

ஒளிவிளக்கு காவியமும் ஓய்வில்லாமல் திரை அரங்குகளை வலம் வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியே.

தகவலை தந்த திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

அன்பு நண்பர்களே,

மன்னாதி மன்னன் திரைக்காவியம் இதே டிலைட் திரை அரங்கில் 21.09.2012 அன்று திரையிடப்பட்டு 7 நாட்கள் ஓடியது.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

---------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------------------

oygateedat
10th October 2013, 09:13 PM
http://s8.postimg.org/mr6sfxj05/VDDD.jpg (http://postimg.org/image/brll4bskx/full/)

oygateedat
10th October 2013, 09:16 PM
http://s18.postimg.org/df2rpsaih/G56.jpg (http://postimg.org/image/ccsl78rp1/full/)

oygateedat
10th October 2013, 09:37 PM
http://s14.postimg.org/5xlhe19jl/gfdd.jpg (http://postimage.org/)

oygateedat
10th October 2013, 09:49 PM
http://s23.postimg.org/sokrkp8gr/bdty.jpg (http://postimg.org/image/ei50pgxlj/full/)

orodizli
10th October 2013, 10:26 PM
மக்கள்திலகத்தின் திரை - அரசியல் உலகங்களின் கோட்டையாக இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கும் கோவை -மாநகரில் மன்னாதி மன்னன் - தொலைகாட்சிகளிலும் சற்றும் இடைவெளி அல்லாமல் ஒளி - பரப்ப படுகிறது, அவ்வாறே திரை அரங்குகளிலும் திரையிட படுகிறது...எனில் mgr -ரின் charisma - செல்வாக்கு அவருடைய சொல்வாக்கு போலவே ஒரு நூல் கூட குறையாமல் விளங்கி கொண்டிருக்கிறது என்பது - உள்ளங்கை நெல்லிக்கனி ... ஒளி விளக்கு - கும் எப்பொழுதும் போல ஓளி உமிழ்ந்து கொண்டே இருக்கிறது...இதற்கு பெயர்தான் சாதனை, சரித்திரம் அய்யா மார்களே! சில அறிவு-ஜீவிகள் விஷயம் புரிந்தும் புரியாத மாதிரி பிதற்றி கொண்டிருப்பவர்களை - என்ன சொல்ல?.......

orodizli
10th October 2013, 10:40 PM
ஒளி விளக்கு - திரைப்படம் வரும் தீபாவளி திருநாளுக்கு திருச்சி-மாநகரில் திரையிட பட ஏற்பாடுகள் நடக்கின்றன என தகவல் தெரிவிகின்றனர்... மக்கள்திலகத்தின் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக ஓடுவது தி.மு.க கட்சியினரால் தான் என்பதை, அக்கட்சியை விட்டு தடாலடியாக நீக்க பட்ட பிறகும், தன்னுடைய திரைப்படங்கள் எல்லாம் அமோக வெற்றியுடன் ஓடி -அந்த விதண்டா வாதத்தை இறைவன் கருணை கொண்டும், பொது மக்களின் ஆதரவை கொண்டும் தகர்த்தெறிந்தார்...இதை போன்றதொரு இமாலய எதிர்ப்பு...பக்கத்தில் ஆந்தராவிலோ,தொலைவில் அமெரிக்காவிலோ ஏற்படவில்லை...இதுதான் புரட்சி தலைவருக்கும்- மற்றவர்களுக்கும் இருக்கும் மகத்தான வித்தியாசம்!!!

orodizli
10th October 2013, 10:54 PM
படங்கள் - பாடங்களாக திகழ்ந்தது மக்கள்திலகம் அவர்கள் நடித்த திரைப்படங்கள் தான் - படித்தவருக்கும், பாமரர்களுக்கும் போதனையை வகுப்பு ஆசிரியர் சொல்லி கொடுப்பதை போல படங்களில் உவமை, உவமானங்களோடு சொல்லி தந்ததால் தான் வாத்தியார் என மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்டார்...இந்த ஒரு பெருமை - மகிமை, மாண்பு திரையில் முகம் காட்டிய வேறு எவருக்கேனும் நிகழ்ததுண்டா ?!எந்த ஒரு செயலிலும் ஆத்மார்ந்தமான மன நிறைவு - யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் வாய்க்காது என்பார்கள்...ஆதனால்தான் mgr அவர்கள் எந்த ஒரு செயலிலும் ஒரு செய்தியை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல் வெளி படுத்தி மக்களுக்கு பிரயோஜனம் இருக்க வேண்டுமென பாடு பட்டார் ...

xanorped
11th October 2013, 09:49 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/01154/25mp_Chinnappa_Dev_1154054g.jpg

Richardsof
11th October 2013, 11:25 AM
http://i44.tinypic.com/64fitl.jpg

Richardsof
11th October 2013, 11:27 AM
http://i44.tinypic.com/okpws2.jpg

Stynagt
11th October 2013, 11:42 AM
நூறாவது காவியம் படைத்த ஒளிவிளக்கின் வழிவந்து
நூறாம் பதிவை நிறைவு செய்த தாங்கள்
நூறாண்டு காலம் நலமுடன் வாழ்கவென
நூற்றாண்டு காணும் மன்னவன் பக்தனாய் வாழ்த்துகிறேன்!
http://i41.tinypic.com/5u3dle.jpg
பாராட்டுகள் திரு. பிரதீப் சார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
11th October 2013, 11:46 AM
http://i39.tinypic.com/1zxa4ao.jpg

Richardsof
11th October 2013, 11:49 AM
http://i42.tinypic.com/5ci1ax.jpg

Richardsof
11th October 2013, 11:52 AM
http://i41.tinypic.com/258w0n4.jpg

Richardsof
11th October 2013, 11:57 AM
http://i42.tinypic.com/2n15aow.jpg

Richardsof
11th October 2013, 11:58 AM
http://i41.tinypic.com/2vknmls.jpg

Stynagt
11th October 2013, 11:59 AM
உலகம் புகழ் நாயகனின் புகழ் பரப்பும் இதழ்கள் அன்று முதல் இன்று வரை வந்தவண்ணம் உள்ளன. இன்றும் வெளிவந்து வெற்றி நடை போடும் இம்மாத உரிமைக்குரல் இதழின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:

http://i42.tinypic.com/2nvbdyx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
11th October 2013, 12:50 PM
திரை உலகம் / திரைசெய்தி / கலைப்பூங்கா / நம்நாடு / சமநீதி / காந்தம்

புரட்சியார் ரசிகன் / மன்னாதி மன்னன் / மன்றம் / தென்றல் /நாடோடி மன்னன்

மக்கள் திலகத்திற்கு கடந்த காலதில் வெளி வந்த சில சினிமா இதழ்கள் .

தற்போது வந்து கொண்டிருக்கும் மாத இதழ்கள்

இதயக்கனி

உரிமைக்குரல்


சிறப்பு மலர்


மக்கள் திலகம் மலர் மாலை - 1

இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களின் அயராத உழைப்பின் மூலம் வெளியான

மக்கள் திலகம் ஆல்பம் - பரப்பரப்பான விற்பனையில் உலகம் முழுவதும் சென்றடைந்திருப்பது

வரவேற்க தக்க சாதனை .

அடுத்த மலர் மாலை -2 தகவல் களஞ்சியம் - மக்கள் திலகத்தின் அரிய தகவல்கள் - படங்கள்

விளம்பரங்கள் - இதுவரை பார்க்காத அபூர்வ படங்கள் என்று மலர் மாலை -2 தயாரிப்பில்

உள்ளது .

2014 - மக்கள் திலகத்தின் பிறந்த நாள் அன்று மலர் மாலை -2 உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கையில் தவழ போகிறது .

Stynagt
11th October 2013, 12:53 PM
http://i42.tinypic.com/ra29nt.jpg

Stynagt
11th October 2013, 12:54 PM
http://i44.tinypic.com/e5miap.jpg

Stynagt
11th October 2013, 01:18 PM
உன்பார்வையில் நல்லவர்கள் நன்மை கண்டனர்
தீயவர்கள் தீய்ந்து மாண்டனர்
கண்ணுக்கு தெரியா எதிரிகள் காணாமல் போயினர் - காரணம்
நீர் தர்மதேவன்.

http://i44.tinypic.com/165m5v.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: urimaikkural

Stynagt
11th October 2013, 01:20 PM
http://i42.tinypic.com/fciqtj.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: urimaikkural

Stynagt
11th October 2013, 01:22 PM
http://i40.tinypic.com/29mvxcn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: urimaikkural

Stynagt
11th October 2013, 01:27 PM
http://i44.tinypic.com/2i9qccw.jpg

http://i44.tinypic.com/2h3rn61.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: urimaikkural Magzine

Stynagt
11th October 2013, 01:51 PM
உலகமெங்கும் புரட்சித்தலைவரின் ரசிகர்களும், தலைவரின் பெயரில் உள்ள நற்பணி மன்றங்களும், ரசிகர் மன்றங்களும், பேரவைகளும் தலைவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மட்டுமல்லாது ஆண்டு முழுவதும் நிகழ்சிகள் நடத்தி தலைவரின் புகழ் பாடி வருகின்றனர். கடந்த மாதம் 28ம் தேதி பாரிசில், பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை சார்பில், அதன் தலைவர் முருகு பத்மநாபன் தலைமையில் மனிதப் புனிதர் எம்ஜிஆர் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக, நடிகர் திரு. ராஜேஷ், இதயக்கனி இதழ் ஆசிரியர் திரு. விஜயன், டாக்டர் அமுத குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கடல் கடந்து நம் காவிய நாயகனுக்கு எடுத்த விழாவின் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு:
http://i39.tinypic.com/2a7hb0x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani magazine

Stynagt
11th October 2013, 01:55 PM
http://i42.tinypic.com/o9jxb9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani magazine

Stynagt
11th October 2013, 01:58 PM
http://i44.tinypic.com/mbnzep.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani magazine

Stynagt
11th October 2013, 02:00 PM
http://i39.tinypic.com/302ng2a.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani magazine

Stynagt
11th October 2013, 02:03 PM
http://i41.tinypic.com/143l2pu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani magazine

Richardsof
11th October 2013, 02:17 PM
[http://youtu.be/lH8JI_gy68c

Richardsof
11th October 2013, 03:22 PM
Makkal thilagam in parakkum pavai

at madurai

aravindh theatre

from today .

Stynagt
11th October 2013, 04:36 PM
பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை சார்பில் நடைபெற்ற மனிதப் புனிதர் எம்ஜிஆர் விழாவின் தொடர்ச்சி...
http://i39.tinypic.com/2vxo9p5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani magazine

Stynagt
11th October 2013, 04:38 PM
http://i44.tinypic.com/fyd1k3.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani magazine

Stynagt
11th October 2013, 04:43 PM
http://i39.tinypic.com/2evrdig.jpg

http://i42.tinypic.com/b4dmir.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani magazine

Richardsof
11th October 2013, 04:56 PM
http://i44.tinypic.com/rsbx2h.jpg

siqutacelufuw
11th October 2013, 05:42 PM
திரை உலகம் / திரைசெய்தி / கலைப்பூங்கா / நம்நாடு / சமநீதி / காந்தம்

புரட்சியார் ரசிகன் / மன்னாதி மன்னன் / மன்றம் / தென்றல் /நாடோடி மன்னன்

மக்கள் திலகத்திற்கு கடந்த காலதில் வெளி வந்த சில சினிமா இதழ்கள் .

தற்போது வந்து கொண்டிருக்கும் மாத இதழ்கள்

இதயக்கனி

உரிமைக்குரல்


சிறப்பு மலர்


மக்கள் திலகம் மலர் மாலை - 1

இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களின் அயராத உழைப்பின் மூலம் வெளியான

மக்கள் திலகம் ஆல்பம் - பரப்பரப்பான விற்பனையில் உலகம் முழுவதும் சென்றடைந்திருப்பது

வரவேற்க தக்க சாதனை .

அடுத்த மலர் மாலை -2 தகவல் களஞ்சியம் - மக்கள் திலகத்தின் அரிய தகவல்கள் - படங்கள்

விளம்பரங்கள் - இதுவரை பார்க்காத அபூர்வ படங்கள் என்று மலர் மாலை -2 தயாரிப்பில்

உள்ளது .

2014 - மக்கள் திலகத்தின் பிறந்த நாள் அன்று மலர் மாலை -2 உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கையில் தவழ போகிறது .

புரட்சித் தலைவரின் புகழ் பரப்பி வந்த ஏடுகளில் விடுபட்ட பத்திரிகைகளின் பெயர்கள் :

1. காஞ்சீயன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த " ஜேம்ஸ் பாண்ட்"
2. ஜெயவேந்தன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் அவர்களை ஆசிரியர்களாக் கொண்டு வெளிவந்த "எழில் வேந்தன் எம்.ஜி. ஆர்."

நம் நாடு, தென்றல், சமநீதி மற்றும் மன்றம் போன்ற பத்திரிகைகள் அரசியல் சார்புடையவையாக வெளிவந்தது.

என்றென்றும் எம்.ஜி. ஆர். என்ற மாத இதழ் சமீப காலமாய் வந்து கொண்டிருக்கிறது.



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
11th October 2013, 06:38 PM
http://i44.tinypic.com/rsbx2h.jpg

வீரமுண்டு வெற்றியுண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா!....

நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்....

என்று அழைப்பது போல் இருக்கிறது. வீரமான பதிவு..நன்றி வினோத் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

orodizli
11th October 2013, 07:26 PM
திரை செய்தி - இதழை சில தடவைகள் படிக்க நேர்ந்தது . மிகுந்த பல்-சுவையுடன் விளங்கிய இதழ் இது... என்றென்றும் mgr - மாத இதழ் கடந்த 5 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன் ...மக்கள்திலகம் , & புரட்சி தலைவர் , பெயர்களிலும் புத்தகங்கள் வெளி வந்தது... எத்தனை புத்தகங்கள் வெளி வந்த, வந்து கொண்டிருக்கும் பொழுதும் அத்தனையும் விற்று தீர்ந்து விடுகிறது அல்லவா?! - அதுதான் மகிமை - மகோன்னதம் என கூறபடுகிறது புத்தக விற்பனையாளர்களால்........

idahihal
11th October 2013, 11:45 PM
மக்கள் திலகத்தின் மகத்துவத்தைப் பறைசாற்றிய அன்றைய இதழ்களை அழகாக பதிவிடும் வினோத் சார் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. முழு புத்தகத்தையும் பதிவேற்ற வேண்டுகிறேன். இதே வேண்டுகோள் ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கும். பல அபூர்வமான புத்தகங்களின் அட்டை படங்களை மட்டும் பதிவேற்றம் செய்துள்ளீர்கள். அதன் உள் பக்கங்களையும் பதிவேற்ற செய்ய வேண்டுகிறேன். நன்றி.

idahihal
11th October 2013, 11:49 PM
கோவையைக் கலக்கும் மன்னாதி மன்னன் புத்தக வடிவிலும் கலக்க விருக்கிறார்.
நாடோடி மன்னன் (விலை ரூ.100-/) , மதுரை வீரன் (விலை ரூ.120/-) திரைப்படங்களின் கதை வசனத்தை நூல் வடிவில் வெளியிட்டுள்ள கண்ணதாசன் பதிப்பகம் விரைவில் மன்னாதி மன்னன் கதை வசனத்தையும் வெளியிட உள்ளது. ஏனோ நான் ஏன் பிறந்தேன் புத்தகம் மட்டும் இன்னும் விரைவில் அறிவிப்போடே நிற்கிறது.
http://i44.tinypic.com/nfjtkm.jpg

Richardsof
12th October 2013, 08:33 AM
http://i43.tinypic.com/2vukkyf.jpg

Richardsof
12th October 2013, 08:35 AM
http://i39.tinypic.com/2ccseb9.jpg

Richardsof
12th October 2013, 08:36 AM
http://i42.tinypic.com/2dqj3vq.jpghttp://i43.tinypic.com/2hnykap.jpg

Richardsof
12th October 2013, 08:43 AM
http://i44.tinypic.com/21kksjt.jpghttp://i43.tinypic.com/2ugme1k.jpg

Richardsof
12th October 2013, 09:20 AM
http://i41.tinypic.com/29zud5i.jpg

Richardsof
12th October 2013, 09:21 AM
http://i40.tinypic.com/23s6wb9.jpghttp://i41.tinypic.com/11huz3m.jpg

Richardsof
12th October 2013, 09:26 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/0e7812b9-48be-46d0-a424-c4eed32be69a_zps81083df8.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/0e7812b9-48be-46d0-a424-c4eed32be69a_zps81083df8.jpg.html)http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Scan20014_zps3d20519e.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Scan20014_zps3d20519e.jpg.html)

Richardsof
12th October 2013, 01:46 PM
பெங்களுர் தமிழ் சங்கத்தில் முதல் முறையாக நமது மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் இனிய நண்பருமான திரு ஸ்ரீதரன் அவர்கள் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பதை
மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .

26-1-2014 அன்று மக்கள் திலகத்தின் பிறந்தநாள் விழாவும் ,

1964ல் வந்த மக்கள் திலகத்தின் 7 படங்களின் பொன்விழா நிறைவு விழாவும்

ஏழைகளுக்கு உதவிகளும்

பெங்களுர் தமிழ் சங்கத்தில் நடைபெற உள்ளது .

விழா தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் .

siqutacelufuw
12th October 2013, 03:25 PM
பெங்களுர் தமிழ் சங்கத்தில் முதல் முறையாக நமது மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் இனிய நண்பருமான திரு ஸ்ரீதரன் அவர்கள் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பதை
மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .

26-1-2014 அன்று மக்கள் திலகத்தின் பிறந்தநாள் விழாவும் ,

1964ல் வந்த மக்கள் திலகத்தின் 7 படங்களின் பொன்விழா நிறைவு விழாவும்

ஏழைகளுக்கு உதவிகளும்

பெங்களுர் தமிழ் சங்கத்தில் நடைபெற உள்ளது .

விழா தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் .


Dear Vinoth Sir,

Please convey our appreciation and congratulations to Mr. Sridharan, on his (S)election as the Secretary of Bangalore Tamil Association.

It is a great pride for all our MGR Devotees.

On this happy occasion, let us all join together in wishing him all success.


Onguga Aalayam Kanda Aandavan M.G.R. Pugazh !

Ever Yours
S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

oygateedat
12th October 2013, 07:50 PM
http://s10.postimg.org/hokl3vadl/12102013_FE_1210_MN_PG45_Cni.jpg (http://postimage.org/)

oygateedat
12th October 2013, 07:59 PM
http://s13.postimg.org/8jixwievr/554.jpg (http://postimage.org/)

oygateedat
12th October 2013, 08:49 PM
http://s23.postimg.org/pl1nybpob/xxx.jpg (http://postimage.org/)

Scottkaz
12th October 2013, 09:04 PM
மக்கள்திலகம் பக்தர்களுக்கு ஒரு துயரமான செய்தி நமது திரியின் நண்பர் திரு சைலேஷ் பாசு அவர்களின் தெய்வத்தாய் 11-10-2013 அன்று 2-11 மணியளவில் இயற்கை எய்தினார்


அவர்களின் நல்லடக்கம் 15-10-2013 அன்று சென்னையில் நடைபெற உள்ளது நமது மக்கள்திலகத்தின் அன்பர்கள் அனைவரும் அந்த தெய்வத்தாயின் இறுதி ஊர்வலதில் களந்து கொள்ள வேண்டுகிறேன்


address No. 4 Dr. Guruswamy road, chetpet, madras 600031, from dasaprakash the cutting before pachaiyappas college,Opp:Anna auditorium, vasanth Paartments [ old natesan art pictures]


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

ujeetotei
12th October 2013, 09:17 PM
Now showing Neethiku Pin Pasam in Murasu.

ujeetotei
12th October 2013, 09:19 PM
May her soul rest in peace.

orodizli
12th October 2013, 10:11 PM
deeply condolence- convey to mr. sailesh basu for his mother's sad demise......from; makkal thilagam MGR., - thread viewers....

orodizli
12th October 2013, 10:14 PM
Hearty congratulations to - TAMIL SANGAM, bangalore mr. sridharan..... kindly convey it to him sri. vinoth sir.....

ujeetotei
12th October 2013, 10:19 PM
Superb family movie Neethiku Pin Pasam.

orodizli
12th October 2013, 10:24 PM
ஒரு தாய் மக்கள் - வெளியீட்டு சிறப்பு மலர் - திரை உலகம் - சஞ்சிகை - அற்புத தென் சொட்டும் விருந்து!!! இந்த வகை அரிய ஆவணங்களை கண்ணை இமை காப்பது போல காத்து இப்பொழுது பிரசுரித்திருக்கும் பாசமுள்ள உள்ளங்களுக்கு திரி பார்வையாளர்கள் சார்பாக நன்றியை தெரிவிக்க வேண்டுகிறேன்...இதை போன்ற எண்ணற்ற சான்றுகள், தகவல்கள் ஏராளமான ரசிகர்கள், பக்தர்களிடம் உண்டு என நம்புகிறோம்...அவற்றை இங்கு எல்லோரும் கண்டு களித்து - பார்க்காத - பார்க்க இயலாத நல் நெஞ்சதினருக்கும் பகிரலாம்...

orodizli
12th October 2013, 10:37 PM
நீரும் நெருப்பும் - படத்தில் இரு மக்கள்திலகம் தோற்றத்தினை குறிக்கும் வகையில் இங்கும் அணில் குல்லா , அங்கும் அணில் குல்லா - என ரமியமாக கூறுவார், sa . அசோகன் ...அது போல இன்று முரசு tv -யில் நீதிக்கு பின் பாசம் - sun life tv -யில் நாளை நமதே, ஜெயா max tv -யில் புரட்சி நடிகரின் காதல் பாடல்கள் என்றவாறு ஒளி பரப்பாகியது... எத்தனை பார்வையாளர்கள் சோம்பி கிடந்தாலும் - மன கவலை பீடிதிருந்தாலும் - அவற்றை சூரியனை கண்ட பனி விலகுவதை போல விலகும் தன்மையை அளிக்க வல்ல அரு மருந்து ------- மக்கள் திலகம் அவர்களின் திரை பட பாடல்கள் தாம் என்றால் அது மிஹை ஆகாது.......

orodizli
12th October 2013, 10:53 PM
தான் நடித்த திரை படங்களை பார்த்து ரசிக்கும் சாமானிய இரசிகர்கள், இரசிகைகள் - இவர்களை பெரிய அளவில் பெருமை படுத்தியவர் யார்? தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியை அவர் அதில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரித்து வைக்க தூண்டியவர் யார்? பின்பு தான் அதே கட்சியினரால் நீக்க பட்ட பொழுதும், புதிய கட்சியை தொடங்கிய பொழுது அமோக ஆதரவை திரை ரசிகர்களையும், தாய்மார்களையும், ஏனைய பொது மக்களையும் நல்லாசிகள் - அவர்கள் வழியாக கிடைக்க எத்தனித்தது யார்? அவரை அரசியலில் பின் தொடர்ந்த தொண்டர்களை சிறப்பு பெற செய்தது யார்? தான் இவ்வுலகத்தை விட்டு மறைந்த பின்னரும் தன்னை பின் தொடர்ந்த கோடானுகோடி உள்ளங்களை வென்றவர் யார்? --- அத்தனைக்கும் ஒரே விடை அமரர் மக்கள் திலகம் - தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?!

idahihal
12th October 2013, 11:49 PM
சைலேஷ்பாசு அவர்களது தாயாரின் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதிபெற எல்லோரும் பிரார்த்திப்போம். அன்னையை இழந்து வாடும் திரு. சைலேஷ்பாசு அவர்களுக்கு மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

idahihal
12th October 2013, 11:53 PM
வினோத் சார்,
திரைஉலகம் பதிவுகள் பொக்கிஷம். தங்கம் கூட வாங்கிவிடலாம். ஆனால் தங்கத்தலைவனின் புகழ்பாடும் அந்நாள் திரைஉலகம் பத்திரிக்கையை இத்தனை ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்த திருமதி. பிரபா அவர்களுக்கும் அவற்றை அரும்பெரும் முயற்சி எடுத்து பதிவேற்றம் செய்த உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் தெரிவித்தாலும் போதாது. இது வரை பலரும் பார்த்திராத அற்புதமான பதிவுகள். சொர்ணம் அவர்களது பேட்டி இது வரை படித்திராதது. இது போன்ற இன்னும் பல அபூர்வமான தகவல்கள், பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நன்றி.

Richardsof
13th October 2013, 08:57 AM
1970 - THIRAI ULAGAM

http://i40.tinypic.com/wvwf2w.jpg

Richardsof
13th October 2013, 08:58 AM
http://i44.tinypic.com/29lz5td.jpg

Richardsof
13th October 2013, 09:00 AM
1972- THIRAI ULAGAM

http://i39.tinypic.com/vpdfm1.jpg

Richardsof
13th October 2013, 09:04 AM
http://i44.tinypic.com/w8p0gi.jpg

Richardsof
13th October 2013, 09:10 AM
http://i44.tinypic.com/2lve978.jpg

Richardsof
13th October 2013, 09:17 AM
இனிய நண்பர் திரு சைலேஷ் அவர்களின் தாயார் மறைவுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம் .

siqutacelufuw
13th October 2013, 09:23 AM
மக்கள்திலகம் பக்தர்களுக்கு ஒரு துயரமான செய்தி நமது திரியின் நண்பர் திரு சைலேஷ் பாசு அவர்களின் தெய்வத்தாய் 11-10-2013 அன்று 2-11 மணியளவில் இயற்கை எய்தினார்


அவர்களின் நல்லடக்கம் 15-10-2013 அன்று சென்னையில் நடைபெற உள்ளது நமது மக்கள்திலகத்தின் அன்பர்கள் அனைவரும் அந்த தெய்வத்தாயின் இறுதி ஊர்வலதில் களந்து கொள்ள வேண்டுகிறேன்


address No. 4 Dr. Guruswamy road, chetpet, madras 600031, from dasaprakash the cutting before pachaiyappas college,Opp:Anna auditorium, vasanth Paartments [ old natesan art pictures]


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்


It is very sad to note the demise of the mother of Mr. Sailesh Basu. On behalf of ANAITHTHULAGA M.G.R. PODHU NALA SANGAM and on behalf of the Hubbers in this Thread, let us all pray our beloved God to give enough strength to Mr. Sailesh Basu, to tolerate this irreparable loss and her Soul may rest in peace.


Thank you Mr. Ramamurthy for the information given by you. We shall participate in the funeral, on the aforesaid date.

S. Selvakumar

Onguga Aalayam Kanda Aandavan M.G.R. Pugazh

siqutacelufuw
13th October 2013, 09:43 AM
1970 - THIRAI ULAGAM

http://i40.tinypic.com/wvwf2w.jpg

வினோத் சார்,

தங்களின் அற்புதமான பதிவுகளுக்கு மிக்க நன்றி !

என்னிடமுள்ள பழைய திரை உலக சிறப்பு மலர்களில் (சுமார் 15) இடம் பெற்ற முக்கிய செய்திகளை (தாங்கள் பதிவிடாத செய்திகள்) பின்னர் பதிவிடுகிறேன்.

பொக்கிஷங்களை போற்றி பாதுகாத்து வரும் பிரபா மேடம் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கவும்.

நமது பொன்மனச்செம்மல் அவர்களை வழியனுப்ப வந்த முக்கிய நபர்களின் நிழற்படங்களில், காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களும் உடனிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் அன்புடன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
13th October 2013, 11:08 AM
மக்கள்திலகம் பக்தர்களுக்கு ஒரு துயரமான செய்தி நமது திரியின் நண்பர் திரு சைலேஷ் பாசு அவர்களின் தெய்வத்தாய் 11-10-2013 அன்று 2-11 மணியளவில் இயற்கை எய்தினார்


அவர்களின் நல்லடக்கம் 15-10-2013 அன்று சென்னையில் நடைபெற உள்ளது நமது மக்கள்திலகத்தின் அன்பர்கள் அனைவரும் அந்த தெய்வத்தாயின் இறுதி ஊர்வலதில் களந்து கொள்ள வேண்டுகிறேன்


address No. 4 Dr. Guruswamy road, chetpet, madras 600031, from dasaprakash the cutting before pachaiyappas college,Opp:Anna auditorium, vasanth Paartments [ old natesan art pictures]


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

உருவம் தந்து உயிர் தந்து உன்னதமாய் உங்களை
உருவாக்கிய தங்கள் அன்புத் தாய் - இறைவன்
திருவடியில் இதமாய் இளைப்பாற எல்லாம் வல்ல
ஆண்டவனை இறைஞ்சும்

தங்கள் சகோதரர்
வி. கலியபெருமாள்


தகவலுக்கு நன்றி. திரு. ராமமூர்த்தி சார்.