PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

Richardsof
16th May 2013, 01:16 PM
திரைப்பட விநியோகஸ்தர்களின் ''அமுத சுரபியாக '' இடம் பெற்ற

nsc -p என்ற எல்லைக்குட்பட்ட நகரங்களும் - அரங்குகளும் -

- ஒரு கண்ணோட்டம் .

பல்லாவரம் - - ஜனதா - லக்ஷ்மி
-
தாம்பரம் - வித்யா - நேஷனல்

வில்லிவாக்கம்- ராயல் - நாதமுனி

காஞ்சிபுரம் - ராஜா - கிருஷ்ணா

வேலூர் அப்சரா - தாஜ் -ராஜா -கிரவுன் -நேஷனல்

திருவண்ணாமலை - மீனாக்ஷி - பாலசுப்ரமணியம்

திருப்பத்தூர் - மீனாக்ஷி - நியூ சினிமா ckc


கடலூர் - பாடலி - ரமேஷ் - கமர் -முத்தையா -

விழுப்புரம் - சீதாராம் - கண்ணன் - முருகா

சிதம்பரம் - லேனா - வடுகநாதன்

புதுவை ராஜா - அஜந்தா - கந்தன் -


மேற்கண்ட 11 இடங்களில்தான் முதல் வெளியீட்டில் எல்லா

படங்களும் வெளியாகும் .

குறிப்பாக வட ஆற்காடு - தென் ஆற்காடு இரண்டு மாவட்டங்கள்

முதல் வெளியீட்டில் குறிப்பாக மக்கள் திலகத்தின் படங்கள்

வெளிவந்த எல்லா படங்களும் திரையரங்கில் திருவிழா போல்

காட்சியும் , மக்கள் வெள்ளமும் பார்ப்பதற்கு ஒரே

கண்கொள்ளகாட்சி யாக இருந்தது .

மக்கள் திலகத்தின் பல படங்கள் இந்த வட -தென் ஆற்காடு

மாவட்டங்களில் மக்கள் திலகம் கோட்டையாகவே இருந்தது

குறிப்பிடத்தக்கது .

பின்னர் அரசியல் கோட்டையாக மாறியதும் - இன்றும்

கோட்டையாக திகழ்வதும்

மக்கள் திலகத்தின் கலை உலக - அரசியல் உலக

புகழ் கொடி கட்டி பறக்கிறது என்றால்

மக்கள் திலகத்தின் சாதனையை என்னவென்று சொல்ல ...

oygateedat
16th May 2013, 03:19 PM
thank u mr.kaliaperumal for uploading the photos taken at pondichery.

masanam
16th May 2013, 03:55 PM
Congrats Masanam Sir and Sowri sir on completing 100 posts.

Sir
Thank you very much for your wishes.

masanam
16th May 2013, 04:23 PM
நீரும் நெருப்பும் படத் தொடர்பான விமர்சனம், விடீயோ மற்றும் தகவல்கள் எல்லாம் அருமை...வினோத் ஸார்.

masanam
16th May 2013, 04:33 PM
எம்.ஜி.ஆரா, கொக்கா?

ஓர் இசையமைப்பாளர் ஒரு பாடலுக்கு இசை அமைத்திருந்தார். அதை பிரத்யேக ஸ்பீக்கர் மூலம் எம்.ஜி.ஆருக்குப் போட்டுக் காட்டி, “ஓகேவா சார்?” என்று கேட்டார். “இதென்ன, இந்த ஸ்பீக்கர்லாம் வேண்டாம். ஒரு சின்ன காசெட்ல பதிஞ்சு சிம்பிளா போட்டுக் காட்டுங்க!” என்று கேட்டார் எம்.ஜி.ஆர். இசையமைப்பாளரும் அப்படியே அந்தப் பாடலை ஒரு சின்ன டூ-இன்-ஒன்னில் போட்டுக் காண்பிக்க, “அருமையா இருக்கு. ஓகே!” என்றார் எம்.ஜி.ஆர். “இந்தப் பாடலை அந்த ஸ்பீக்கர்ல கேட்டிருந்தீங்கன்னா இன்னும் அருமையா இருக்குமே?” என்று இசையமைப்பாளர் ஆதங்கத்துடன் சொல்ல, எம்.ஜி.ஆர். சிரித்துக்கொண்டே, “சாதாரண ஜனங்க சின்ன பாக்கெட் ரேடியோவிலதான் இந்த பாட்டைக் கேட்பாங்க. அவங்களுக்கு இது பிடிக்குமா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும்னா நானும் இப்படிக் கேட்டாத்தானே தெரியும்?” என்றாராம்.

அங்கேதான் நிற்கிறார் எம்.ஜி.ஆர்.!
(taken from facebook)

Richardsof
16th May 2013, 07:23 PM
மதுரை - சென்ட்ரல் அரங்கில்


17.5.2013 முதல்

மக்கள் திலகத்தின்

''ரிக்ஷாக்காரன் ''


மதுரை
ராம் அரங்கில்

இதயக்கனி


வேலூர்

கணேஷா அரங்கில்


குமரிக்கோட்டம்

ujeetotei
16th May 2013, 08:31 PM
Thanks Vinod Sir for the movie news of MGR re releases this week.

Urimaikural re release video clip second part.

http://www.mgrroop.blogspot.in/2013/05/re-release-urimaikural-ii.html

oygateedat
16th May 2013, 08:37 PM
http://i41.tinypic.com/dljqfr.jpg

oygateedat
16th May 2013, 08:44 PM
http://i42.tinypic.com/10xsyrs.jpg

Georgevob
16th May 2013, 09:11 PM
Dear Roop Sir,

Thanks a million for your kind wishes.

SO nice of you

Regards
SRS

ujeetotei
16th May 2013, 10:09 PM
குன்றனைய புகழ்கொண்ட குணக்குன்றே
முடியரசர்க் கில்லாத செல்வாக்கு எல்லாம்
முழுமையுடன் பெற்று விளங்கும் முழு மதியே!
படிமிசை நீ பெற்ற கீர்த்தியெல்லாம்
பார்க்கின்றாள் -வானிருக்கும் சத்யா அன்னை
மடிமிசை உனைச் சுமந்த நாள் நினைத்து -மகிழ்ச்சியில்
வடிக்கின்றாள் கண்ணீர் தன்னை!

கொன்றாலும் நிலைத்திருக்கும் தருமம் என்று
குருடர்களுக்கு எடுத்துரைத்த மறு பிறப்பே !
வென்றாலும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தன்மதியே !

தென்னாடும்,தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்.

Who wrote this poem?

ainefal
16th May 2013, 10:24 PM
http://www.youtube.com/watch?v=_WPWqF9zhLw

ujeetotei
16th May 2013, 10:28 PM
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே

I find many lyrics of MGR movies especially duet songs with this kind of words. MGR maintained his body to be apt for the words. More can be written for the word Illamai alone.

Anybody here provide same word from the movie lyrics.

The above word comes in Ooruku Uzhaipavan.


உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை - நேற்று இன்று நாளை.

ainefal
16th May 2013, 11:05 PM
https://www.youtube.com/watch?v=to6aYHl81DI

Richardsof
17th May 2013, 05:23 AM
மக்கள் திலகம் நடித்த ''ஒரு தாய் மக்கள் ''-1971

நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வந்த படம் .

முதலில் இந்த படத்தில் மக்கள் திலகம் - சரோஜாதேவி - ஜெய்சங்கர் நடித்த் சில காட்சிகள் 1966ல் படமாக்கப்பட்டது .

பின்னர் 1969ல் சில மாற்றங்கள் [ஜெய்சங்கர் - சரோஜாதேவி மாற்றப்பட்டு ஜெயா - முத்துராமன் ] ஏற்பட்டு 1971ல் படம் வெளியானது .
http://i42.tinypic.com/2w53vc4.jpg
எல்லா பாடல்களும் சூப்பர் .

குறிப்பாக கண்ணன் எந்தன் காதலன் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பும் இளமையும் அருமை .
http://youtu.be/0ey-yfi4kik

Richardsof
17th May 2013, 05:48 AM
திரு ரூப் சார்

மக்கள் திலகத்தை புகழ்ந்து கவியரசுவும் . வாலியும் - மற்ற வர்களும் இயற்றிய சில பாடல் வரிகள் .

ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்

அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி

அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்
கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்

சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ

தொடரும் .......

idahihal
17th May 2013, 06:46 AM
குன்றனைய புகழ்கொண்ட குணக்குன்றே
முடியரசர்க் கில்லாத செல்வாக்கு எல்லாம்
முழுமையுடன் பெற்று விளங்கும் முழு மதியே!
படிமிசை நீ பெற்ற கீர்த்தியெல்லாம்
பார்க்கின்றாள் -வானிருக்கும் சத்யா அன்னை
மடிமிசை உனைச் சுமந்த நாள் நினைத்து -மகிழ்ச்சியில்
வடிக்கின்றாள் கண்ணீர் தன்னை!

கொன்றாலும் நிலைத்திருக்கும் தருமம் என்று
குருடர்களுக்கு எடுத்துரைத்த மறு பிறப்பே !
வென்றாலும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தன்மதியே !

தென்னாடும்,தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்.

Who wrote this poem?
ரூப் சார்,
கலைஞர் கருணாநிதி அவர்களின் கவிதை தான் இது. மக்கள் திலகத்தை புகழ்ந்து அவர் எழுதியது மட்டுமல்ல அவரால் தான் உயர்வடைந்ததாகவும் ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார்.

ujeetotei
17th May 2013, 07:35 AM
ஆம் கலைஞர் கவிதை தான். இந்த கவிதை எந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது? விவரம்? எனக்கு தெரிந்து இந்த கவிதை தலைவர் பாரத் பட்டம் பெற்ற போது வாசித்தது என்று நினைக்கிறேன். நிச்சியமாக தெரியவில்லை.

ujeetotei
17th May 2013, 07:41 AM
திரு ரூப் சார்

மக்கள் திலகத்தை புகழ்ந்து கவியரசுவும் . வாலியும் - மற்ற வர்களும் இயற்றிய சில பாடல் வரிகள் .

ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்

அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி

அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்
கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்

சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ

தொடரும் .......

பல பாடல் வரிகள் தலைவர் உயர்வாக சித்தரிக்கும் விதத்தில் இருக்கும் நான் சொன்னது தலைவரை இளமை என்னும் வார்த்தை கொண்டு எத்தனை முறை உபயோக படுத்தி உள்ளார்கள், எந்த படத்தில். எனக்கு தெரிந்தவைகளை சொல்லியிருக்கிறேன்.

Richardsof
17th May 2013, 09:21 AM
ஒரு தாய் மக்கள்

9-12-1971

சென்னை

பிளாசா - 40 நாட்கள்

மகாராணி - 48 நாட்கள்

மகாலட்சுமி - 43 நாட்கள்

நூர்ஜஹான் - 36 நாட்கள்



பெங்களூர்

நடராஜ் - 21 நாட்கள்

சிவாஜி - 21 நாட்கள்

அபேரா - 21 நாட்கள்

Georgevob
17th May 2013, 12:54 PM
எஸ்வி சார்

முக்கியமானதை விட்டுடீங்களே

எங்கள் தங்கம் திரைப்படத்தில் பாடலாசிரியர்..நான் அளவோடு ரசிப்பவன் என்று எழுதி..அதை தூக்கலாக எப்படி முடிப்பதென்று அறியாதிருக்க அங்கு வந்த கருணாநிதி அவரின் நிலை கண்டு..என்ன என்று கேட்க அவர் தன நிலையை கூற....உடனே....."எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று முடியுங்கள் என்று கூற....அருமையான வரி அல்லவா அது !

masanam
17th May 2013, 01:13 PM
மேஜர்தாசனின் 'தி​ரைச் சு​வை' நூலிலிருந்து...

நட்பின் பண்புக்கு உதாரணம்
எம்.ஜி.ஆரும் கலைஞரும் - கவிஞர் வாலி (அதிலிருந்து சில பகுதிகள்..)

கேள்வி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எத்தனை படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறீர்கள். அதில் உங்களுக்கே பிடித்த இரு பாடல்களைக் கூறுங்களேன் என்றேன்.
கவிஞர் வாலி : 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக 63 படங்களில் பாடல்களை எழுதியிருக்கி​றேன். 'படகோட்டி' படத்தில் இடம்பெற்ற 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...' என்ற பாட்டும். 'தரைமேல் பிறக்கவைத்தான்....' என்ற பாட்டும்தான் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு என்றார்.

கேள்வி : நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு எத்தனை படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறீர்கள். அதில் மிகவும் பிடித்த பாட்டு?
கவிஞர் வாலி : நடிகர் திலகத்திற்கு 66 படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறேன். அவைகளில் 'பேசும் தெய்வம்' படத்தில் இடம்பெற்ற 'அழகுதெய்வம் மெல்லமெல்ல' என்ற பாட்டுதான் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.

கேள்வி : உங்களுடைய அருமை நண்பர் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல்களில் மிகவும் பிடித்தமான பாட்டு என்று உங்களிடம் ஏதாவது கூறியிருக்கிறாரா?
கவிஞர் வாலி : 'கற்பகம்' படத்தில் நான் எழுதிய 'பக்கத்து வீட்டு பருவ மச்சான்' என்ற பாட்டுதான் கவிஞர் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்தப் பாட்டு. இதை அவர் என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்.

கேள்வி : கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?
கவிஞர் வாலி : கவிஞரின் எல்லா பாடல்களுமே எனக்குப் பிடிக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் 'சுமைதாங்கி' படத்தில் 'மயக்கமா... கலக்கமா...' என்ற பாட்டும். 'அவன்தான் மனிதன்' படத்தில் 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா...' என்ற பாட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார் வலி.

வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் 'குயில்' நாடகத்தில் கதாநாயகியாக நடித்த ரமண திலகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் வாலி. அந்த அன்பு மனைவி கடந்த 14-9-2009 அன்று திடீரென்று இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 65. இவர்களுக்கு பாலாஜி (40) என்ற ஒரே ஒரு செல்ல மகன்.

கேள்வி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - கலைஞர் கருணாநிதி இவர்களின் நட்பின் பண்புக்கு ஒரு உதாரணம் கூறுங்களேன்??
கவிஞர் வாலி : எம்.ஜி.ஆர். குண்டடிபட்டு இறைவனருளால் மீண்டும் நல்லபடியாக வந்த நேரம். அப்போது மேகலா பிக்சர்சின் 'எங்கள் தங்கம்' படத்திற்காக 'நான் செத்துப் பிழைச்சவன்டா - எமனை பார்த்து சிரிச்சவன்டா என்ற பாடல் எழுதிக்கொண்டு அதை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக நானும் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டுடியோவில் 'நீரும் நெருப்பும்' படத்திற்காக ஒப்பனை செய்து கொண்டிருந்த அறைக்குச் சென்றோம். மாறன் அவர்கள் வெளியே தங்கிவிட்டார். நான் மட்டும் எம்.ஜி.ஆரிடம் அந்தப் பாட்டை பாடிக் காண்பித்தேன். சந்தோஷப்பட்டார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

"வாலி...நாட்டுக்காக உயிரை துச்சமா நினைச்சவங்களைப் பத்தி இந்தப் பாட்டுலே எழுதியிருக்கீங்க... இருந்தாலும் நம்ம தமிழ்மொழிக்காகத் தண்டவாளத்திலே தலைவெச்சுப்படுத்தவரு நம்ம கலைஞர். அவரைப் பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுலே சேர்த்திடுங்க என்றார். நான் பிரமித்துப்போனேன். உடனே இரண்டாவது சரணத்தில் 'ஓடும் ரெயிலை இடைமறித்து, அதன் பாதையிலே தனது தலைவைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து - தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது என்று எழுதினேன். கட்டிமுத்தமிட்டு அனுப்பினார்.

இதே படத்தில் இன்னொரு பாட்டில் 'நான் அளவோடு ரசிப்பவன்..." என்று முதல் வரியை எழுதிவிட்டு இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், வாலி... இரண்டாவது வரியை 'எதையும் அளவின்றி கொடுப்பான்' என்று போட்டா நல்லாயிருக்குமே. நம்ம எம்.ஜி.ஆர்தான் வாரிவாரி வழங்குகின்ற வள்ளலாச்சே என்றார். அதன்படியே அடுத்த வரியை சேர்த்தேன். பிறகு அடுத்தடுத்த வரிகளை மிகவும் ஈசியாக எழுதினேன்.

நீங்க கேட்ட கேள்விக்கு இந்த ஒரு உதாரணமே நச்சுன்னு இருக்கும். இதெல்லாம் நடந்த உண்மை என்றார். ஏராளமான எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த நேரம் நடிகர் திலகம் படங்களுக்கு நான் பாட்டெழுத ஆரம்பித்த சமயம் மக்கள் திலகம் எம.ஜி.ஆர். அதைப் பற்றி நினைத்துக் கோபப்படவோ, அவருக்கு பாட்டு எழுதக்கூடாது என்றோ என்னிடம் கூறியதே கிடையாது. அதற்கு ஒரு உதாரணம் சிவாஜியின் நெருங்கின நண்பர் பெரியண்ணன் என்பவர் சாந்தி பிலிம்ஸ் சார்பாக 'அன்புக் கரங்கள்' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். அப்போது சிவாஜியிடம் என்னை பெரியண்ணன் அறிமுகப்படுத்தினார். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு 'அன்புக் கரங்கள்' படத்தில் பாடல் எழுத ஒப்பந்தமானேன். 'அன்புக் கரங்கள்' படத்தில் நான் பாடல் எழுதுவது குறித்து படத்தில் முழுப் பக்க விளம்பரத்தில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. அன்று 'தாழம்பூ' படத்தின் படப் பிடிப்பில் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் கிண்டலாக 'உங்க அன்புக் கரங்கள்' எப்போ ரிலீஸ் என்றார். உடனே நான் 'உங்க அன்புக் கரங்களிலிருந்து என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது' என்று கூறியதும் கண்கள் பனிக்க எம்.ஜி.ஆர். என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். நீங்க எப்போவும் பிசியாக இருக்கணும். எல்லா கலைஞர்களுக்கும் பாடல்களை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று மானசீகமாக வாழ்த்தினார். அவருடைய அந்த வாழத்துதான் என்னை இன்றும் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.

ainefal
17th May 2013, 01:58 PM
https://www.youtube.com/watch?v=R9LBatZ_Ybw


THAIKU PIN THARAM

ainefal
17th May 2013, 02:05 PM
http://www.youtube.com/watch?v=shHmJigYZrA&feature=youtu.be


THAIKU PIN THARAM - 1

Stynagt
17th May 2013, 03:54 PM
http://i41.tinypic.com/dljqfr.jpg

எழில் வேந்தன் படத்தை இயற்கை காட்சிகளுடன் இணைத்து எழிலூட்டும் பணியை இடைவிடாது செய்யும் இனிய நண்பர் திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி..தங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்தும் அன்பன் கலியபெருமாள்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
17th May 2013, 07:20 PM
சங்கே முழங்கு

4.2.1972

வெல்லிங்டன் - 56 நாட்கள்

கிருஷ்ணா -69 நாட்கள்

சரவணா -42 நாட்கள்

கமலா - 36 நாட்கள்


பெங்களூர்

நடராஜ் -28 நாட்கள்

சிவாஜி -28 நாட்கள்

அபேரா -28 நாட்கள்

http://i44.tinypic.com/aob98z.jpg
சங்கே முழங்கு

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .

இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் வசனத்தில் வந்த படம் .

கண்ணதாசனின் பாடல்கள் எல்லாமே இனிமை .

கோர்ட் காட்சிகளில் மக்கள் திலகம் - வி கே ராமசாமி - அசோகன்

சம்பந்த பட்ட காட்சிகளில் எம்ஜியாரின் குறுக்கு விசாரணை - நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் ,

மக்கள் திலகம் - ஹெலன் நடனம் - பாடல் காட்சிகள் சூப்பர்.

நாலு பேருக்கு நன்றி - பாடல் கட்சியில் மக்கள் திலகத்தின் உணர்ச்சி மிக்க மௌன நடிப்பு பிரமாதம் .

அழகில் நீ ஒரு கலை

இரண்டு கண்கள் பேசும் மொழியில் ..

இரண்டு பாடல்கள் இனிமை .


பொம்பள சிரிச்சா போச்சு பாடலில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடனம் ரசிகர்களுக்கு விருந்து .

Richardsof
17th May 2013, 07:35 PM
http://www.youtube.com/watch?v=lFGiq9fQauc&feature=share&list=PL8F17B1B6A46FB849

masanam
17th May 2013, 07:54 PM
சங்கே முழங்கு

4.2.1972

வெல்லிங்டன் - 56 நாட்கள்

கிருஷ்ணா -69 நாட்கள்

சரவணா -42 நாட்கள்

கமலா - 36 நாட்கள்


பெங்களூர்

நடராஜ் -28 நாட்கள்

சிவாஜி -28 நாட்கள்

அபேரா -28 நாட்கள்

http://i44.tinypic.com/aob98z.jpg
சங்கே முழங்கு

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .

இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் வசனத்தில் வந்த படம் .

கண்ணதாசனின் பாடல்கள் எல்லாமே இனிமை .

கோர்ட் காட்சிகளில் மக்கள் திலகம் - வி கே ராமசாமி - அசோகன்

சம்பந்த பட்ட காட்சிகளில் எம்ஜியாரின் குறுக்கு விசாரணை - நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் ,

மக்கள் திலகம் - ஹெலன் நடனம் - பாடல் காட்சிகள் சூப்பர்.

நாலு பேருக்கு நன்றி - பாடல் கட்சியில் மக்கள் திலகத்தின் உணர்ச்சி மிக்க மௌன நடிப்பு பிரமாதம் .

அழகில் நீ ஒரு கலை

இரண்டு கண்கள் பேசும் மொழியில் ..

இரண்டு பாடல்கள் இனிமை .


பொம்பள சிரிச்சா போச்சு பாடலில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடனம் ரசிகர்களுக்கு விருந்து .

சங்கே முழங்கில் மக்கள் திலகம் பஞ்சாபி வேடத்தில் படு பொருத்தமாக இருப்பார்.

Richardsof
17th May 2013, 07:57 PM
http://youtu.be/Snacf19GVNo

http://youtu.be/8tjDGgJnpMY

masanam
17th May 2013, 08:05 PM
http://youtu.be/Snacf19GVNo

http://youtu.be/8tjDGgJnpMY

(சொன்ன உடனே வழங்கிய) மக்கள் திலகம் பஞ்சாபி வேடத்தில் தோன்றும்
சிலர் குடிப்பது போல நடிப்பார், தமிழில் அது ஒரு இனிய கலை - பாடல்கள் பார்க்க இனிமை.

idahihal
17th May 2013, 09:58 PM
http://i42.tinypic.com/30a6pl5.jpg

mahendra raj
17th May 2013, 10:00 PM
http://youtu.be/Snacf19GVNo

http://youtu.be/8tjDGgJnpMY

This 'drunken song' bit beats all of MGR's purported inebriated songs for its fast paced movements and vibrant music with Helen, the Hindi actress-cum- dancer. I vividly recall the background situation of this song. That was the time when the DMK government was contemplating legalizing the sale of spirits and alcohol. Although MGR was in the DMK he was not in favour with the decision of the government. He discussed with Kaviarasar Kannadhasan who wrote this piece to reflect the evils of drinking and also to convey the subtle message of MGR's stand. Who can be a better person to write on alcohol other than Kannadhasan?!

idahihal
17th May 2013, 10:05 PM
http://i40.tinypic.com/2vtnucw.jpg

idahihal
17th May 2013, 10:28 PM
http://i40.tinypic.com/2v16dye.jpg

idahihal
17th May 2013, 11:03 PM
http://i40.tinypic.com/nq5uma.jpg

idahihal
17th May 2013, 11:15 PM
http://i42.tinypic.com/30vj2tf.jpg
ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 18ஆம் நினைவு தினம்
19-05-2013

idahihal
17th May 2013, 11:46 PM
http://i40.tinypic.com/30l06cj.jpg

Richardsof
18th May 2013, 09:12 AM
நீண்ட இடைவெளிக்கு பின் திரிக்கு வருகை புரிந்துள்ள இனிய நண்பர் ஜெய் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் .

மக்கள் திலகத்தின் அபூர்வ செய்திகள் - நிழற் படங்கள்

தொடர்ந்து வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் .

Richardsof
18th May 2013, 09:19 AM
மக்கள் திலகம் அவர்களின் ''ராமன் தேடிய சீதை ''

13.4.1972 அன்று வெளிவந்தது .

மக்கள் திலகத்தின் அட்டகாசமான உடைகள்

காஷ்மீரில் படமாக்கப்பட்ட இனிய பாடல்கள்


புதுமையான கதைஅமைப்பு

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் அளவிற்கு எல்லா அம்சங்களும் இருந்தும் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .


ஆறுதல் . இலங்கையில் மிகப்பெரிய வெற்றி

கொழும்பு - கேபிடல் அரங்கில் 105 நாட்கள் ஓடியது .



சென்னை

மிட்லண்ட் -64 நாட்கள்

கிருஷ்ணா -64 நாட்கள்

சரவணா - 50 நாட்கள்

பெங்களூர்

நடராஜ் - 28 நாட்கள்

சிவாஜி - 28 நாட்கள்

அபேரா - 28 நாட்கள்

http://youtu.be/-gOLa_lZ9c0

vasudevan31355
18th May 2013, 10:52 AM
Sheela speak about MGR. Cinema Express April 2013

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-36.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-36.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/mgr.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/mgr.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-24.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-24.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-18.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4-18.jpg.html)

Richardsof
18th May 2013, 11:28 AM
இனிய நண்பர் வாசு சார்


நடிகை ஷீலா அவர்களின் பேட்டி - பதிவு அருமை .


பாசம் - புதிய பூமி இரண்டு படங்களிலும் ஷீலா அவர்கள்

நன்றாக நடித்து இருந்தார் .

பாசம் படத்தில் ஷீலா - கல்யாண்குமார் பாடல் காட்சி மிகவும்

அருமையாக இருந்தது .


http://youtu.be/dT1GM18diKg

http://youtu.be/hJbmC2IANYc

Richardsof
18th May 2013, 01:12 PM
நான் ஏன் பிறந்தேன் -1972.

மக்கள் திலகம் அவர்கள் நடித்த குடும்ப சித்திரம் .

ஒரு குடும்ப தலைவனாக - தொழிலதிபரின் அலுவலக நிர்வாகியாக மிகவும் திறம்பட நடித்து இருப்பார் .

தன்னுடைய வீட்டை விற்கும் காட்சியிலும்

வேலை தேடி அலையும் காட்சியிலும்

தான் திருமணமானவன் என்பதை வேலையில் சொல்ல முடியாத நெருக்கடி காட்சியிலும்

காஞ்சனாவிடம் நேர்மையுடன் பழகும் காட்சியிலும்

மக்கள் திலகம் பிரமாதமாக நடித்திருப்பார் .

சங்கர் - கணேஷ் இசைஅமைப்பில் வந்த முதல் மக்கள் திலகத்தின் படம் .


அனைத்து பாடல்களும் தேனிசை - அமுத கீதங்கள் .


படம் சுமாரான வெற்றி பெற்றது .


நான் ஏன் பிறந்தேன் படம் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் மக்கள் திலகத்திற்கு இந்திய அரசாங்கத்தின்

சிறந்த நடிகருக்கான ''பாரத் '' பட்டம் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது .


1972 ஆண்டு மக்கள் திலகத்திற்கு மிகவும் ராசியான - சரித்திர புகழ் - வரலாற்று புகழ் கிடைத்த ஆண்டு

என்று சொல்லலாம் .


சென்னை

குளோப்- 67 நாட்கள்

கிருஷ்ணா -67 நாட்கள்

சரவணா- 50 நாட்கள்

பழனியப்பா -50 நாட்கள்

பெங்களூர் -மே 1973- தாமதமாக வெளியீடு

நடராஜ் -28 நாட்கள்

சிவாஜி -28 நாட்கள்

அபேரா -28 நாட்கள்



1.பாரத் பட்டம்

2.புரட்சித்தலைவர் - பட்டம்

3.ஒரு நடிகர் - மாநில கட்சி ஆரம்பித்த சாதனை .

4.மக்கள் திலகத்தின் புகழ் இந்தியா மட்டுமல்லாமல் அகில உலகமெங்கும் புகழ் பரவியது .

5.சென்னை நகரில் 4 அரங்குகளில் 100 நாட்கள் - தேவரின் ''நல்லநேரம் '' மட்டுமே ஓடியது .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு 1972 ஆண்டு ''உலக புகழ் எம்ஜியார்'' ஆண்டு என்பதில் மிக்க மகிழ்ச்சி .

Richardsof
18th May 2013, 01:51 PM
http://youtu.be/SjQtzQDlbMs (http://youtu.be/SjQtzQDlbMs)

Stynagt
18th May 2013, 05:06 PM
அங்கமெல்லாம் தங்கமென மின்னும் எங்கள் ஆண்டவனின் அட்டகாசமான வண்ண ஆல்பம் (136 படங்கள்) பொலிவுடன் இப்பொழுது அச்சாகிறது..முன்பதிவிற்கு முந்துங்கள்....அனைவரையும் மயக்கும், யாரும் பார்த்திராத சோலோ ஸ்டில் உங்கள் கைகளில் தவழும் நாள் 16.06.2013...

http://i43.tinypic.com/28c386g.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th May 2013, 05:09 PM
http://i41.tinypic.com/33y5nvs.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
18th May 2013, 05:18 PM
http://i41.tinypic.com/jpilx0.jpg

Richardsof
18th May 2013, 05:40 PM
அரசகட்டளை

19.5.1967

46 வது ஆண்டு நிறைவு .

மக்கள் திலகம் அவர்கள் குண்டடிபட்டபிறகு வந்த முதல் படம் .

ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் - இனிமையான பாடல்கள்

மக்கள் திலகம் - வீரப்பா

மக்கள் திலகம் - நம்பியார்

மக்கள் திலகம் - மனோகர்

மோதும் கத்தி சண்டைகள் அனைத்தும் பிரமாதம் .

மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .

குறிப்பாக இந்த படத்தில் அவரின் ஸ்டைல் - படு அமர்க்களம் .

சுமாராக ஓடிய படம்

http://i40.tinypic.com/2wcmuxv.jpg

http://youtu.be/WkG2AfH9XWg

Richardsof
18th May 2013, 05:49 PM
http://i41.tinypic.com/bf2sg4.jpg

ainefal
18th May 2013, 09:26 PM
http://www.youtube.com/watch?v=k_5XESuexPo&feature=youtu.be

THAIKU PIN THARAM - 2

ainefal
18th May 2013, 09:49 PM
https://www.youtube.com/watch?v=px9RoEGN2bc

Richardsof
19th May 2013, 06:09 AM
COURTESY;

STORY WRITER - AROOR DAS- DAILY THANDHI

துருவ நட்சத்திரங்களின் நடுவில் இரு பருவ நட்சத்திரம்!


நாடோடி மன்னனில் பானுமதி நடித்த அந்தப் பாத்திரத்திற்குப் பதிலாகப் புதியதோர் பாத்திரத்தைப் படைத்து, அதில் எந்த நடிகையை நடிக்க வைத்துப் படத்தை நிறைவு செய்வது என்ற சிந்தனையில் ஈடுபட்டார் எம்.ஜி.ஆர். தனது ஆலோசகரும், மரியாதைக்குரியவருமான கே.சுப்ரமணியத்தை அழைத்து அவருடைய கருத்தையும் கேட்டார்.

அவர், எம்.ஜி.ஆருக்கு உதவி புரியவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அவருடைய கன்னட மொழி கச்சதேவயானியில் நடித்திருந்த சரோஜாதேவியைப் பரிந்துரைத்ததுடன் படத்தையும் போட்டுக்காட்டினார்.

கச்சதேவயானிக்கு முன்பாகவே சரோஜாதேவி காளிதாஸ் என்ற படத்தில் அறிமுகமாகி நடித்திருந்தார். அதுதான் அவருடைய முதல் படம் ஆகும். பிரபல கன்னட நடிகரும், கர்நாடக சங்கீத வித்துவானும் தயாரிப்பாளருமான ஸி.ஹொன்னப்பா பாகவதரின் படம் தான் இந்த காளிதாஸ்.

கே.சுப்ரமணியம் எடுத்திருந்த கச்சதேவயானி படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு சரோஜாதேவியைப் பிடித்துப்போகவே, அவரை ஒப்பந்தம் செய்துகொண்டு நாடோடி மன்னன் படப்பிடிப்பைத் தொடர்ந்தார்.

சரோஜாதேவியின் அதிர்ஷ்ட காலம் ஆரம்பமாகி விட்டது! அதற்கு அறிகுறியாக அவர் சம்பந்தப்பட்ட பிற்பகுதிக் காட்சிகளை கேவா கலரில் எம்.ஜி.ஆர். படமாக்கினார்.

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே என்று எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் பாடும் அந்த டூயட் பாடலை அவர் அற்புதமாகப் படமாக்கிக் காட்டினார்.

அப்பொழுதெல்லாம் ஈஸ்ட்மேன் கலர் பிலிம் வரவில்லை. அதனால்தான் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ அதிபரும், டைரக்டருமான டி.ஆர்.சுந்தரம் தனது அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை கேவா கலரில் தயாரித்தார். 1956&ல் வெளிவந்து வெற்றி பெற்ற அந்தப் படம்தான் முழுவதுமாக கேவா கலரில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆகும்.

அப்பொழுது டி.ஆர்.சுந்தரம் பேட்டி கொடுத்து பத்திரிகையில் வந்த அந்தச் செய்தி இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் கூறியது இதுதான்:

எம்.ஜி.ஆரும், பானுமதியும் இயற்கையாகப் பெற்றிருக்கும் உடல் கலருக்காகத்தான் என் முதல் கலர் படத்தில் அவர்களை நடிக்க வைத்தேன்.

அவர் கூறியது முற்றிலும் உண்மை. எம்.ஜி.ஆர். எலுமிச்சம்பழ நிறம் என்றால், பானுமதி இளம் மஞ்சள் நிற மேனி கொண்டவர். அதன் காரணமாகத்தான் அந்நாட்களில் அவர்களது ஜோடிப் பொருத்தம் அவ்வளவு அழகாக அமைந்தது என்பேன்.

முதல் படமான நாடோடி மன்னன், அதை அடுத்து திருடாதே, மாடப்புறா ஆகிய மூன்று படங்களுக்குப்பிறகு, எம்.ஜி.ஆருக்கு முதன் முதலாக நான் கதை வசனம் எழுதிய தேவர் பிலிம்சின் வெற்றிப்படமான தாய் சொல்லைத் தட்டாதே படத்திலிருந்துதான் சரோஜாதேவி & எம்.ஜி.ஆர். இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் ஏற்பட்டு காதல் காட்சிகளில் நடித்து, இளைஞர்களின் இதயங்களைத் தங்கள் வசம் இழுத்து அவர்களை மகிழ்வித்தனர்.

சரோஜாதேவியுடன் ஜோடி சேர்ந்த போது அவருடனான காதல் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நெருக்கமாக நடிக்கத் தொடங்கினார்.

ஹீரோ, ஹீரோயினுக்குள் நடிப்புக்கு அப்பாற்பட்டு ஒரு பிடிப்பு இல்லாவிட்டால், அவர்கள் சினிமாவில் நடிக்கும் காதல் காட்சிகள் செயற்கையாக & டிக்காக்ஷன் குறைந்த காபி போல சுவை குறைவாக இருக்கும்! ரசிகர்களிடம் எடுபடாது.

1959&66 காலக்கட்டத்தில் தான் சரோஜாதேவியின் பருவமேனியில் மெருகு கூடி பளபளத்தது! மழை மேகங்கண்ட மயில் போல அவர் அழகுத்தோகை விரித்து ஆடினார்!

களையும் இளமையும் கைகோர்த்துக் கொண்டு அவருடைய அந்தக் கவர்ச்சியைச் செழிக்கச் செய்தது. அத்துடன் புகழும், செல்வமும் சேர்ந்து அவருக்குப் பூரிப்பைக் கொடுத்தது!

பொதுவாகவே, புகழுக்கும், பொருளுக்கும் ஒரு பூரிப்பு உண்டு. அது அழகையும், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கும்!

சரோஜாதேவியின் பளிச் சென்று ஒளிவீசும் பவுர்ணமி முழு நிலா முகத்தில், அந்த அகன்ற கண்களும், அழகிய முத்துச்சரப் பற்களும் இயற்கை அவருக்கு வழங்கிய நன்கொடை! அதனால்தான் ஒளிப்பதிவாளர்கள் அவரது முகத்தை அவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்கள்!

அழகு வேறு! - கவர்ச்சி வேறு! இரண்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

அழகு வணங்க வைக்கும்!
கவர்ச்சி தொடத்தூண்டும்!

இதற்கு எடுத்துக்காட்டு, சாவித்திரி, சரோஜாதேவி!

சாவித்திரியிடம் குடும்பப்பாங்கான ஓர் அழகைக் கண்டேன்!

சரோஜாதேவியிடம் அழகுடன்கூட ஆளை மயக்கும் கவர்ச்சியைக் கண்டேன்!

சரோஜா என்னும் பெயரில் இரண்டு மலர்கள் இருக்கின்றன!

சரோஜா என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு தாமரை என்று பொருள். சரோஜாவின் முதல் எழுத்தான சவை நீக்கிவிட்டால் அது ரோஜா என்று ஆகிவிடும்!

இது சரோஜாதேவிக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கலைக்கு ரசனை மிக முக்கியம். ரசிக்கத் தெரியாதவன் சிறந்த சிருஷ்டிகர்த்தாவாக முடியாது. பத்தோடு பதினொன்றாக இருப்பார்களே தவிர முத்தோடு மாணிக்கமாக முடியாது. கம்பனின் ரசனையில் பிறந்தவள் சீதை! காளிதாசனின் ரசனையில் உருவானவள் சகுந்தலை!

ரசித்தால் பசிக்கும்! பசித்தால் புசிக்கலாம். ஒரு படைப்பாளிக்கு முதல் மூலதனமே ரசனை தான். அதன் விளைவுதான் கற்பனை.

51 ஆண்டுகளுக்கு முன்பு

1962-ல் நான் கதை & வசனம் எழுதிய தேவர் பிலிம்ஸ் தாயைக்காத்த தனயன் படத்தில் எம்.ஜி.ஆர். & சரோஜாதேவி நடிக்கும் முதல் இரவு காட்சியன்று வரும். அதில் சரோஜாதேவி பேரைச்சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா என்ற பாட்டைப்பாடி ஆடுவார்.

அந்தப்பாட்டின் எடுப்பிற்கு இணைப்பாக இருவரும் மாறி மாறிக் கேள்வியும் பதிலுமாக வசனம் பேசுவார்கள். அந்தக் காட்சியைப் பார்த்தால் அதில் என் காதல் கைவண்ணம் தெரியும்.

1963&ல் அன்னை இல்லம் படத்தில் சிவாஜி&தேவிகாவுடன் வீணையை வைத்துக்கொண்டு சரி கம பதநி என்னும் சப்த ஸ்வர ஏழு எழுத்துக்களுக்கும் ஒரு காதல் விளக்கம் கொடுப்பார். அதில் காதல் பற்றிய எனது புதிய கற்பனையைக் கேட்கலாம். அது என் இளமையின் எழுச்சியில் பிறந்தது!

1966&ல் தேவர் பிலிம்ஸ் தனிப்பிறவி படத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிடம் கடிகாரத்தில் உள்ள சிறிய முள், பெரிய முட்களை ஒப்பிட்டு காதல் கலந்த ஒரு வசனம் பேசுவார். அது என் இளம் வயதுக் கற்பனையில் உருவான இனிய காதல் உணர்வுகள்!

50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி நடித்து நான் வசனம் எழுதிய ஏவி.எம். அன்பே வா!

சிவாஜிசரோஜாதேவி நடித்து நான் வசனம் எழுதிய சிவாஜி பிலிம்ஸ் புதிய பறவை.

இவை இரண்டுமே காதல் காவியங்கள்! அந்த நாட்களில் எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கு அந்த இரண்டு படங்களையும் நான் பார்க்கும்போதும் வெவ்வேறு இரு வசனகர்த்தாக்கள் எழுதியது போல் வேறுபட்டு இருப்பதைப் பார்த்து நானே வியந்து போகிறேன்.

அந்த அளவிற்கு நான் எம்.ஜி.ஆரோடு எம்.ஜி.ஆராகவும் & சிவாஜியோடு சிவாஜியாகவும் ஐக்கியமாகி இருந்து அவர்களுக்காக எழுதியிருக்கிறேன்.

இப்பொழுது மீண்டும் சரோஜாதேவியிடமே வருகிறேன்.

1959-ல் அதுவரையில் கதை & வசனகர்த்தாவாக மட்டுமே இருந்த ஸ்ரீதர் முதன் முதலாக இயக்கிய Òகல்யாணப்பரிசுÓ படத்தில்தான் சரோஜாதேவி கூடப்பிறந்த அக்காவுக்காக தன் காதலைத் தியாகம் செய்யும் அருமையான குணச்சித்திரப் பாத்திரத்தில் தோன்றி அற்புதமாக நடித்து அதன் மூலம் முழு நிறைவு பெற்ற ஒரு நல்ல நடிகையாகி உயர்ந்தார்.

அதே சமயத்தில்தான் நான் முதன் முதலாக கதை&வசனம் எழுதிய தேவர் பிலிம்ஸ் வாழ வைத்த தெய்வம் படத்தில் அதே ஜெமினிகணேசனுடன் கதாநாயகியாக நடித்தார்.

என்னுடைய அந்த முதல் கதை&வசனப் படத்தில்தான் முதன் முதலாக அவரை நான் சந்தித்தேன்.

ஸ்ரீதர் தன் கல்யாணப்பரிசு படத்தில் சரோஜாதேவியை மிக அழகாகச் செதுக்கிக் காட்டினார்! அது பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழாப் படமாக அமைந்து ஸ்ரீதருக்கும், சரோஜாதேவிக்கும் புகழ் கொடுத்தது.

அதை அடுத்து சரோஜாதேவி சிவாஜியுடன் சேர்ந்து நடித்து 1960&ல் வெளிவந்த Òவிடிவெள்ளிÓ படத்தை ஸ்ரீதர் இயக்கினார்.

அதன் பிறகு ஸ்ரீதர் இயக்கிய எந்தப் படத்திலும் சரோஜாதேவி நடிக்கவில்லை.

1961-ல் ஸ்ரீதர் சித்ராலயா என்னும் சொந்தப்பட நிறுவனம் தொடங்கி ஜெமினியோடு வைஜயந்திமாலாவை நடிக்க வைத்தார். அந்தப் படம்தான் தேன் நிலவு.

1959-ல் சரோஜாதேவி என்னும் சிலையைச் செதுக்கிய அதே ஸ்ரீதர், 1965&ல் தனது Òவெண்ணிற ஆடைÓ படத்தில் இன்னொரு எழிற்சிற்பத்தையும் வண்ணத்தில் வடித்துக்காட்டினார்.

அவர்தான் செல்வி ஜெயலலிதா! அப்போது அவருக்கு 16 வயது!

சரோஜாதேவி! ஜெயலலிதா!

இந்த இரண்டு எழிற்சிற்பங்களும் இறுதியில் எம்.ஜி.ஆரின் கலைக்கூடத்தில்தான் சேர்ந்து இடம் பெற்றுப் பெயரும் புகழும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உருவத்திலும், உயரத்திலும் களையிலும் கவர்ச்சியிலும் எம்.ஜி.ஆருக்கு சரோஜாதேவியும், ஜெயலலிதாவும் பொருந்தியது போல வேறு யாரும் அவ்வளவாகப் பொருந்தவில்லை. அதனால்தான் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி 26 படங்களும், ஜெயலலிதா 28 படங்களும் நடித்துச் சாதனை புரிந்தனர். இவ்விருவருக்கும் ஏற்றாற்போல எம்.ஜி.ஆர். தனது ஒப்பனையையும், உடைகளையும் ஒழுங்காகவும், அழகாகவும் அமைத்துக்கொண்டு அந்த ராணிகளுக்கேற்ற ராஜாவாகத் திரைப்படங்களில் திகழ்ந்தார்!

எந்த தேவர் பிலிம்சில் 1958&ல் தன் 16&17&வது வயதில் சரோஜாதேவி என் முதல் படமான வாழ வைத்த தெய்வத்தில் கதாநாயகியாக நடித்தாரோ& அதே தேவர் பிலிம்சில், அதே 16, 17&வது வயதில் செல்வி ஜெயலலிதா 1966&ல் நான் வசனம் எழுதிய தனிப்பிறவி படத்தில் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்தார்!

தேவர் பிலிம்சிலும், என் வசனத்திலும் அவர் முதன் முதலாக நடித்த வெற்றிப்படம் தனிப்பிறவி

எந்த இடத்திற்கு எவர் எப்போது எப்படி வருவார் என்பது, வாழ்க்கையில் நாம் தொகுத்துக் கொள்வது அல்ல. வானத்தில் அது ஏற்கனவே வகுத்து வைக்கப்பட்டிருக்கிறது.

அதிசயங்கள் (Miracles) மண்ணில் நடப்பதை விட, விண்ணில்தான் அதிகமாக நிகழ்கின்றன. ஏனெனில் அங்குதான் சூரியனும் சந்திரனும், கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கோள்களும் இருக்கின்றன. அந்த வெளிச்சத்தில் இறைவன் இருக்கிறான்.

***

எம்.ஜி.ஆரின் நிறம் பற்றிய, நான் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. அதைக் கூறுகிறேன்:

எம்.ஜி.ஆருக்கு நிறைய படங்கள் நான் எழுதிக்கொண்டிருந்த அந்நாட்களில், எனது இளம் பருவத்தில், என் தாயாரைப் போன்ற சுருள் முடி கொண்டிருந்து அதில் நேர் வகிடு எடுத்து அழகாக, ஒழுங்காக வாரிவிட்டிருப்பேன். அதைப்பார்த்து எம்.ஜி.ஆர். சொல்வார்:

உங்களுக்கு இருக்கிற இந்த அழகான சுருள் முடி மட்டும் எனக்கு அமைந்திருந்தால், நான் இப்படி என் தலையில் விக் வைத்திருக்க மாட்டேன்.

அதற்கு நான் இப்படி பதில் சொல்வேன்:

உங்கள் தாயாரைப் போலவே உங்களுக்கும் இருக்கிற இந்த எலுமிச்சம்பழ கலர் மட்டும் எனக்கு அமைந்திருந்தால், நான் கதை & வசன கர்த்தா ஆகி இருக்கமாட்டேன். உங்களுக்குப் போட்டியாக ஒரு சிறந்த நடிகனாகி இருப்பேன்.

இதைக்கேட்டு அவர், நல்லவேளை, நான் பிழைத்தேன்! என்று கூறி ஒரு குழந்தைபோல கலகலவென்று சிரிப்பார்.

இதையே சிவாஜியும் சொல்வார்:

நீ எழுத்தாளன். ஒனக்கு ஏன் இந்த அழகான கர்லிங் ஹேர் கிராப்?

நான் அழகா இருக்கிறதுனாலதான் அழகழகான தமிழ் வசனம் எழுதி, ஒங்களைப் பேச வச்சி ஒங்க மொழியை அழகுபடுத்துறேன்.

ஆமா, ஒன்னை ஒண்ணு கேட்டுத் தெரிஞ்சிக்கணும். இந்த திருவாரூர்காரங்கள்ளாம் ஏன் நேர் வகிடு எடுத்துக்கிறீங்க? பொண்ணுங்கமாதிரி? நீ, மூனாகானா, முரசொலி மாறன், அரங்கண்ணல் எல்லாருமே நேர்வகிடு கோஷ்டி!

அதற்கு நான் இப்படி குறும்பாக பதில் சொல்வேன்:&

இப்படி நேர் வகிடு எடுத்து கிராப் சீவிக்கிட்டு வந்தாத்தான் எங்க திருவாரூர் போர்டு ஹைஸ்கூல்ல அட்மிஷன் கிடைக்கும்.

அதற்கு அவர் சொல்வார்:&

ஓகோ! அப்படின்னா ஒங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டரும் நேர் வகிடு எடுத்துத்தான் கிராப் சீவி இருப்பாரா?.

நான்:& கரெக்டா கேட்டீங்க! எங்க ஸ்கூல்ல நான் ஜூனியர் ஸ்டூடண்டாகவும், கலைஞர் சீனியராகவும் படிச்ச அந்தக் காலத்துல மரியதாஸ்னு ஒரு ஹெட்மாஸ்டர் இருந்தார்.

அவரும் எங்க மாதிரி நேர் வகிடு தான் எடுத்திருப்பாரு. வேணுன்னா கலைஞரைக் கேட்டுப்பாருங்க.

அவர்:& தஞ்சாவூர்க்காரன்ல. அந்தக் கொழுப்பும், குறும்பும் விட்டுப்போகுமா?.

நான்:& அண்ணே! கார் ஹெட் லைட் மாதிரியான ஒங்க பெரிய கண்ணும், மடக்கி கவுத்து வச்ச குடை மாதிரி எடுப்பான உங்க மூக்கும், வாய்க்குள்ள இருக்கிற அந்தத் தமிழ் நாக்கும் கடவுள் ஒங்களுக்குக் கொடுத்த வரப்பிரசாதம்!. அந்த மாதிரி ஆண்டவர் எனக்குக் கொடுத்த கிப்ட், இந்த அழகான கர்லிங் ஹேர் கிராப்! இன்னொண்ணு சொல்லட்டுமா...?.

அவர்:& சொல்லு. நீ என்ன சொன்னாலும் எனக்கு நல்லாயிருக்கும், சொல்லு.

நான்:& நம்ம யூனிட் ஒரு யுனிவர்சிட்டி! இதுக்கு நீங்கதான் பிரின்ஸிபல்! ஒங்ககிட்டே முதல் முதல்லே பாசமலர் எம்.ஏ. டிகிரி கிளாஸ்ல எனக்கு அட்மிஷன் கிடைச்சதே இந்த கர்லிங் கிராப்பை வச்சித்தான். என் கிராப்ல நீங்க மயங்கி என்னை ஒங்களோட சேத்துக்கிட்டீங்க. இதுதான் உண்மை.

அவர்:& நான் தெரியாத்தனமா உங்கிட்டே வாயைக் குடுத்திட்டேன். என்னை விட்டுடு. வசனத்தைச் சொல்லு.

வேறுபட்டிருந்த அந்த இரு துருவங்களுமே என்னை விரும்பியதற்குக் காரணம், என் எழுத்துக்கள் மட்டுமல்ல. பேச்சும்தான். ஏனென்றால் இப்படியெல்லாம் குதர்க்கமாகவும், குறும்பாகவும் பேசி அவர்களை மகிழ வைப்பதற்கு அன்றைக்கு என்னைத்தவிர அவர்களுக்கு வேறு யாருமே கிடையாது. அதோடுகூட அவர்களுக்கு நான் ஒரு அவுட்&லெட் ஆகவும் இருந்தேன்.

அவுட்லெட் என்றால் வெளியேற்றும் வடிகால். எல்லாவற்றையுமே அந்த இருவரும் என்னிடம் சொல்வார்கள்.

அனைவருமே அவர்களை விட்டு ஒரு அடி தூரம் ஒதுங்கியே இருந்தார்கள். நான் ஒருவன் மட்டுமே அவர்களின் நெஞ்சோடு நெருங்கி இருந்தேன் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்து எனக்கு நானே பெருமைப்பட்டுக்கொள்கிறேன். இது என் பூர்வªஜன்ம புண்ணியம்!

சற்றும் மிகை இன்றி சத்தியமாக ஓர் உண்மையை இங்கு கூறுகிறேன்.

1961 முதல் 67 வரையிலான அந்த எனது பொற்காலக் கட்டத்தில், உண்ணவும், உறங்கவும் போதிய நேரமின்றி இரவு - பகலாக எழுதி எழுதிக் குவித்துக் களைத்துப்போன அந்த நாட்களில், எம்.ஜி.ஆரின் தோள் மீது சாய்ந்தும், சிவாஜியின் மடி மீது தலை வைத்துப் படுத்தும் நான் தூங்கியிருக்கிறேன். நான் எழுச்சி பெற்று முழு வீச்சில் இருந்தபொழுது, அடுத்தடுத்து நான் எழுதிய 49 படங்கள் வெளிவந்தன.

Richardsof
19th May 2013, 06:28 AM
TO DAY THIRUMATHI JANAKI M.G.R NINAIVU NAAL. 19-5-2013

http://i42.tinypic.com/31364wn.jpg

Richardsof
19th May 2013, 06:40 AM
http://youtu.be/AkQXdGobuFU

oygateedat
19th May 2013, 09:04 AM
SECOND WEEK AT COIMBATORE DELITE

http://i40.tinypic.com/bf2how.jpg

oygateedat
19th May 2013, 09:08 AM
http://i39.tinypic.com/30xkebs.jpg

Richardsof
19th May 2013, 10:09 AM
மக்கள் திலகம் - மஞ்சுளா தோன்றும் அபூர்வ படம் .வெளிவராத

''வெள்ளிக்கிழமை '' படத்தில் இடம் பெற்ற காட்சி .

http://i43.tinypic.com/wvbv9l.jpg

Richardsof
19th May 2013, 11:22 AM
http://youtu.be/DZHTsrvj8CU

Richardsof
19th May 2013, 12:07 PM
இந்திய சினிமா 100வது ஆண்டுவிழா பற்றிய செய்திகள்

இன்று ;'' டைம்ஸ் ஆப் இந்தியா '' வெளியிட்டுள்ள குறிப்பில்

தமிழ் படங்கள் பற்றிய செய்திகள் ஒன்றுமே இடம் பெறவில்லை . வருந்தக்க தக்க விஷயமாகும் .

ஒருநடு நிலை ரசிகனாக என்னுடைய பார்வையில்

மறக்க முடியாத தமிழ் சாதனை படங்கள் .

முதல் பட்டியல் -20

1.சந்திரலேகா

2. அபூர்ப்வ சகோதரர்கள்

3. ஹரிதாஸ்

4. சர்வதிகாரி

5. மர்மயோகி

6. என்தங்கை

7. பராசக்தி

8. மனோகரா

9. மலைக்கள்ளன்

10.நாடோடிமன்னன்

11.உத்தமபுத்திரன்

12.வஞ்சிகோட்டை வாலிபன்

13.கல்யாண பரிசு

14.வீரபாண்டிய கட்டபொம்மன்

15.பாகபிரிவினை

16.அலிபாபாவும் 40 திருடர்களும்

17. மதுரை வீரன்

18.கொஞ்சும் சலங்கை

19.குலேபகாவலி

20.சபாஷ் மீனா

adiram
19th May 2013, 12:33 PM
eswee sir,

1972-il Sri Krishnavil release aana 'naan yen pirandhen' padam eppadi Maharaniyil 67 days odiyadhu?.

Stynagt
19th May 2013, 12:46 PM
SECOND WEEK AT COIMBATORE DELITE

http://i40.tinypic.com/bf2how.jpg

மார்த்தாண்டன்-வீராங்கன் கூட்டணி எப்போதும் வெற்றி...வெற்றி...வெற்றி... வெற்றி தொடர்கிறது....நாடோடி மன்னனை தன்னகத்தே கொண்ட கொங்கு மண்டலம் வாழ்க..தகவல் தந்து தலைவனின் புகைப்படத்தை ஈபிள் கோபுரத்தில் வைத்த நண்பர் திரு..திருப்பூராருக்கு நன்றி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th May 2013, 12:51 PM
TO DAY THIRUMATHI JANAKI M.G.R NINAIVU NAAL. 19-5-2013

http://i42.tinypic.com/31364wn.jpg

ஆண்டவனைப் போற்றி அன்னையை வணங்குவோம்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

idahihal
19th May 2013, 01:18 PM
http://i39.tinypic.com/5e9tmb.jpg

masanam
19th May 2013, 01:30 PM
இந்திய சினிமா 100வது ஆண்டுவிழா பற்றிய செய்திகள்

இன்று ;'' டைம்ஸ் ஆப் இந்தியா '' வெளியிட்டுள்ள குறிப்பில்

தமிழ் படங்கள் பற்றிய செய்திகள் ஒன்றுமே இடம் பெறவில்லை . வருந்தக்க தக்க விஷயமாகும் .

ஒருநடு நிலை ரசிகனாக என்னுடைய பார்வையில்

மறக்க முடியாத தமிழ் சாதனை படங்கள் .

முதல் பட்டியல் -20

1.சந்திரலேகா

2. அபூர்ப்வ சகோதரர்கள்

3. ஹரிதாஸ்

4. சர்வதிகாரி

5. மர்மயோகி

6. என்தங்கை

7. பராசக்தி

8. மனோகரா

9. மலைக்கள்ளன்

10.நாடோடிமன்னன்

11.உத்தமபுத்திரன்

12.வஞ்சிகோட்டை வாலிபன்

13.கல்யாண பரிசு

14.வீரபாண்டிய கட்டபொம்மன்

15.பாகபிரிவினை

16.அலிபாபாவும் 40 திருடர்களும்

17. மதுரை வீரன்

18.கொஞ்சும் சலங்கை

19.குலேபகாவலி

20.சபாஷ் மீனா

டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஹிந்தி சினிமாவின் நூறு ஆண்டு நிறைவை ஒட்டி வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
தமிழ் சினிமா எண்பது ஆண்டைத் தான் நிறைவு செய்கிறது.

masanam
19th May 2013, 01:33 PM
http://i39.tinypic.com/5e9tmb.jpg
அரிய புகைப்படமாக் உள்ளது. படத்தைப் பற்றிய விளக்கமும் தந்தால் நல்லது ஜெய்சங்கர் ஸார்.

Richardsof
19th May 2013, 02:23 PM
[QUOTE=adiram;1044444]eswee sir,

1972-il Sri Krishnavil release aana 'naan yen pirandhen' padam eppadi Maharaniyil 67 days odiyadhu?.

welcome adiram sir

you are correct. by oversight maharani placed instead of krishna . corrected in previous posting.

idahihal
19th May 2013, 05:36 PM
http://i41.tinypic.com/acbcr9.jpg

idahihal
19th May 2013, 06:06 PM
http://i43.tinypic.com/9frx20.jpg

idahihal
19th May 2013, 06:07 PM
http://i40.tinypic.com/9sfewi.jpg

idahihal
19th May 2013, 06:08 PM
http://i43.tinypic.com/2vjwxz4.jpg

idahihal
19th May 2013, 06:10 PM
http://i39.tinypic.com/358nl75.jpg

idahihal
19th May 2013, 06:13 PM
http://i44.tinypic.com/21max6c.jpg

idahihal
19th May 2013, 06:16 PM
http://i43.tinypic.com/2w2fzog.jpg

oygateedat
19th May 2013, 06:17 PM
http://i39.tinypic.com/2rcydf9.jpg

idahihal
19th May 2013, 06:18 PM
http://i43.tinypic.com/2dj70xe.jpg

idahihal
19th May 2013, 06:19 PM
http://i43.tinypic.com/j6smlt.jpg

idahihal
19th May 2013, 06:20 PM
http://i43.tinypic.com/axejhh.jpg

idahihal
19th May 2013, 06:21 PM
http://i40.tinypic.com/e8adzr.jpg

idahihal
19th May 2013, 06:26 PM
http://i40.tinypic.com/5xjv2v.jpg

idahihal
19th May 2013, 06:27 PM
http://i41.tinypic.com/2wr1yye.jpg

idahihal
19th May 2013, 07:25 PM
http://www.youtube.com/watch?v=6gDPgMFyp7s

idahihal
19th May 2013, 07:26 PM
http://www.youtube.com/watch?v=mXBOXRffLqY

idahihal
19th May 2013, 07:37 PM
http://www.youtube.com/watch?v=DZHTsrvj8CU

idahihal
19th May 2013, 07:52 PM
தற்போது முரசு டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது
மக்கள் திலகத்தின்
தாயைக்காத்த தனயன்

ujeetotei
19th May 2013, 08:38 PM
மக்கள் திலகம் - மஞ்சுளா தோன்றும் அபூர்வ படம் .வெளிவராத

''வெள்ளிக்கிழமை '' படத்தில் இடம் பெற்ற காட்சி .

http://i43.tinypic.com/wvbv9l.jpg

Thank you Vinod Sir for uploading this rare image from unreleased movie. Thanks for Tirpur Ravichandran for his creative work and the news about second week of Marthandan in Coimbatore.

ujeetotei
19th May 2013, 08:39 PM
I think the song is Nerungi nerungi which was later used in Netru Indru Nalai.

oygateedat
19th May 2013, 09:05 PM
http://i42.tinypic.com/3495p1y.jpg

Stynagt
19th May 2013, 09:29 PM
தற்போது (19.05.2013 09.00 p.m.) தமிழகம் ஆண்ட தலைவனின் [SIZE=6]தாயைகாத்த தனயன் திரைப்படம் முரசு தொலைக்காட்சியில்...தாய் கண்ணம்பாவிடம் தன் காதலி கிடைக்கவில்லை என சோக நடிப்பில் ..இயற்கை நடிப்பில்...பின்னி எடுக்கிறார்...

அரிய புகைப்படங்களை அடுக்கடுக்காய் பதிவு செய்யும் அருமை நண்பர் திரு ஜெய்..அவர்களுக்கும் கிரியேடிவ் வேலை செய்து தலைவரின் படத்துக்கு மெருகூட்டும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
19th May 2013, 09:52 PM
http://i40.tinypic.com/f0431v.jpg

ujeetotei
19th May 2013, 10:57 PM
http://i40.tinypic.com/f0431v.jpg

A picture is worth thousand words with Tirupur Ravichandran picture turns to poem.

Richardsof
20th May 2013, 05:19 AM
http://i39.tinypic.com/2im9o7.jpg

மக்கள் திலகத்தின் புகழுக்கு மற்றுமோர் ''வைர கிரீடம்''


நம் பம்மலார் திரு சுவாமிநாதன் அவர்களின் பெட்டகத்திலிருந்து

நம் மக்கள் திலகத்திற்கு '' பருவ இதழ்''

விரைவில் ......

இது வரை பார்த்திராத நம் மக்கள் திலகத்தின் பட விளம்பரங்கள்

ஆவணங்கள்

அரிய செய்திகள்

கோடிக்கணக்கான மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு

விருந்து படைக்கிறார் நம் பம்மலார்

விரைவில் .......

idahihal
20th May 2013, 05:39 AM
பம்மலாரின் புதிய முயற்சிக்கு மக்கள் திலகத்தின் கோடானு கோடி ரசிகர்களின் ஆதரவு என்றும் தொடரும்
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

idahihal
20th May 2013, 05:40 AM
பிரதீப் பாலு சார்,
வள்ளலின் வரலாறு வெளியாகும் தேதியினைத் தெரிவிக்கவும்.

vasudevan31355
20th May 2013, 07:38 AM
விஜயலக்ஷ்மி பிலிம்ஸ் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் எம்ஜியார்.

http://www.oocities.org/vijayalakshmifilms/mgr.jpg

Richardsof
20th May 2013, 08:39 AM
மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் - அழகிய வண்ண காட்சிகளின் பின்னணியில் மக்கள் திலகத்தின் படங்கள் -அபூர்வ தகவல்கள்

படங்கள் என்று வழங்கிய இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள்

திரு ஜெய்சங்கர் - திரு ரவிச்சந்திரன் - திரு வாசுதேவன்

அனைவருக்கும் நன்றி .

Richardsof
20th May 2013, 08:58 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

நீங்கள் குறிப்பிட்டது போல் '' தாயைகாத்த தனயன் ''-1963

படத்தில் மக்கள் திலகம் அவர்கள் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை பல இடங்களில் வெகு அழகாக நடித்து இருப்பார் .

காதலியை முதல் பார்வையில் கவரும் விதம்

தாயிடம் தனது காதலை வெளிபடுத்தும் இடம்

ஆவேசமான சண்டை காட்சி - தேவருடன் மோதும் கம்பு சண்டை

புலியிடம் போராடும் காட்சிகளில் வெளிபடுத்தும்

மிரட்சி - ஆவேசம்

காதல் காட்சிகளில் கனி ரசம்

சோகத்தில் இழையோடும் பாடலில் நடிப்பு

நடைமுறை வாழ்க்கையில் ஒரு சராசரி மனிதன் சந்திக்கும்

இயல்பான ஒன்றை மக்கள் திலகம் மிகவும் யதார்த்தமாக

நடித்து வெற்றி காண்கிறார் .

''முத்தமிழ் வித்தகர் ''- மக்கள் திலகம் எம்ஜியார் .

இதற்கு மேலும் தமிழில் ஒரு உயர் வார்த்தையில்லை .

Richardsof
20th May 2013, 09:21 AM
ஜெய் சார்

வள்ளலின் வரலாறு வீடியோ தொகுப்பு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது .

உரிமைக்குரல்

இதயக்கனி

இரண்டு பத்திரிகைகளின் மக்கள் திலகம் விழா - அடுத்த மாதம்

சென்னையில் நடை பெறுகிறது .

மக்கள் திலகம் மலர் மாலை -2 தமிழ் திரை களஞ்சியம் தயாரிப்பில் உள்ளது .

விரைவில் மக்கள் திலகம் மலர்மாலை - பருவ இதழ் நம் கைகளில் தவழுள்ளது .

சன்லைப் - முரசு - ஜெயா தொலைகாட்சிகளில் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்படுகிறது .

கோவை - நாடோடிமன்னன் - 2 வது வாரம் .

மதுரையில் ரிக்ஷாக்காரன் - இதயக்கனி ஓடிகொண்டிருக்கிறது .

மக்கள் திலகத்தின் மங்கா புகழ் -

பள்ளி முதல் பல்கலைகழகம் வரை

பார் முழுவதும்
கொண்டாடும் எந்நாளும் திருநாளே

Stynagt
20th May 2013, 10:12 AM
http://i40.tinypic.com/f0431v.jpg

ஆயிரம் அர்த்தம் சொல்லும் அழகான வார்த்தையில்
அவனி போற்றும் சந்திரனை அற்புதமாய் காட்டிய
அன்பு நண்பர் ரவிச்சந்திரன் ஆண்டாண்டு காலம் வாழ்க !!

அன்பன் கலியபெருமாள்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
20th May 2013, 10:10 PM
https://www.youtube.com/watch?v=k_5XESuexPo

THAIKU PIN THARAM - 2

ainefal
20th May 2013, 10:32 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yUj5zeXW510


THAIKU PIN THARAM - 3

Richardsof
21st May 2013, 05:42 AM
மே 21-1973

மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றித்திருநாள்

.http://i44.tinypic.com/f3xdg0.jpg

திண்டுக்கல் இடைத்தேர்தல் மூலம் அண்ணா திமுக என்ற இயக்கத்துக்கு கிடைத்த முதல் வெற்றி .

மக்கள் திலகம் நிறுவிய இயக்கம் 40 ஆண்டுகள் மேலாக இன்றும்

மக்கள் ஆதரவுடன் ஆட்சியில் நீடிப்பது அவரது அரசியல் புகழின் சக்தி நிருபணமாகிறது .

உலக அரசியல் வரலாற்றில் மக்கள் திலகத்தின் பெயர் என்றென்றும் முதன்மை இடத்தில இருப்பது உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான எம்ஜியார் ரசிகர்களுக்கு பெருமை .

Richardsof
21st May 2013, 05:53 AM
http://i41.tinypic.com/15yd8y.jpg

இன்று திரு ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம்

Richardsof
21st May 2013, 06:29 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/20686433-accb-457b-bcbf-27ada5ed65f4_zpsfc776da8.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/20686433-accb-457b-bcbf-27ada5ed65f4_zpsfc776da8.jpg.html)

Richardsof
21st May 2013, 09:11 AM
மக்கள் திலகம் எம்ஜியார்

அவர் திரைப்படத்தில் நடித்த நேரத்திலும் , அரசியலில் பணியாற்றிய நேரத்திலும் திரை உலகைவிட்டு அரசியலில் 1987 வரை வாழ்ந்த நேரத்திலும் , அவர் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் ஒரு சிலர் அவரின் புகழை ஏற்று கொள்ளாவிட்டாலும் அவரை மறைமுகமாக தாக்கி வருவது வியப்பாக உள்ளது .

எம்ஜியார் ஒரு சிறந்த நடிகரே இல்லை .

எம்ஜியார் வைத்து படம் எடுத்தவர்கள் நட்டமடைந்தார்கள் .

எம்ஜியார் காமிரா பின்னால் நடிப்பவர் .

எம்ஜியார் பிறரை காயப்படுத்தி மருந்து தடவுவார் .

நேர்மையான அரசியல் இல்லாதவர் .

என்றெல்லாம் மக்கள் திலகத்தை பற்றி [அ ] நாகரீகமாகவும் -

பதிவிடும் நண்பர்களின் மன நிலையினை என்னவென்று சொல்லுவது .அதுவும் மிகவும் அறிவாளி -படிப்பாளி - நாலும் தெரிந்தவன் -இலக்கியவாதி - என்றெல்லாம் சொல்லபடும் நண்பர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அவர்களது ''இயலாமை- அறியாமை - புரியாமை - நமக்கு தெளிவாக புரிகிறது .

அன்றும் - இன்றும் -என்றும்

மக்கள் திலகத்தின்

மக்கள் சக்தி

திரை உலக சாதனை

அரசியல் வெற்றி

ரசிகர்களின் பேராதரவு

என்னவென்று வரலாறு பதிவிட்டு கொண்டுதான் வருகிறது .


நண்பர்களின் உள்மனது நம் மக்கள் திலகத்தின் நினைவுகள்
பற்றியே சிந்தித்து கொண்டு வருவதே -ஒரு பெரிய வெற்றி .

எம்ஜியார் அவர்கள் குறை கூறும் நண்பர்கள் உள்ளத்திலும் குடியிருப்பது''குடியிருந்த கோயில் '' சாதனையே.

masanam
21st May 2013, 09:58 AM
மக்கள் திலகம் எம்ஜியார்

அவர் திரைப்படத்தில் நடித்த நேரத்திலும் , அரசியலில் பணியாற்றிய நேரத்திலும் திரை உலகைவிட்டு அரசியலில் 1987 வரை வாழ்ந்த நேரத்திலும் , அவர் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் ஒரு சிலர் அவரின் புகழை ஏற்று கொள்ளாவிட்டாலும் அவரை மறைமுகமாக தாக்கி வருவது வியப்பாக உள்ளது .

எம்ஜியார் ஒரு சிறந்த நடிகரே இல்லை .

எம்ஜியார் வைத்து படம் எடுத்தவர்கள் நட்டமடைந்தார்கள் .

எம்ஜியார் காமிரா பின்னால் நடிப்பவர் .

எம்ஜியார் பிறரை காயப்படுத்தி மருந்து தடவுவார் .

நேர்மையான அரசியல் இல்லாதவர் .

என்றெல்லாம் மக்கள் திலகத்தை பற்றி [அ ] நாகரீகமாகவும் -

பதிவிடும் நண்பர்களின் மன நிலையினை என்னவென்று சொல்லுவது .அதுவும் மிகவும் அறிவாளி -படிப்பாளி - நாலும் தெரிந்தவன் -இலக்கியவாதி - என்றெல்லாம் சொல்லபடும் நண்பர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அவர்களது ''இயலாமை- அறியாமை - புரியாமை - நமக்கு தெளிவாக புரிகிறது .

அன்றும் - இன்றும் -என்றும்

மக்கள் திலகத்தின்

மக்கள் சக்தி

திரை உலக சாதனை

அரசியல் வெற்றி

ரசிகர்களின் பேராதரவு

என்னவென்று வரலாறு பதிவிட்டு கொண்டுதான் வருகிறது .


நண்பர்களின் உள்மனது நம் மக்கள் திலகத்தின் நினைவுகள்
பற்றியே சிந்தித்து கொண்டு வருவதே -ஒரு பெரிய வெற்றி .

எம்ஜியார் அவர்கள் குறை கூறும் நண்பர்கள் உள்ளத்திலும் குடியிருப்பது''குடியிருந்த கோயில் '' சாதனையே.

esvee ஸார்,
தங்களின் உணர்வுகளையும் கருத்தையும் நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
எது எப்படியோ, தமிழ்த் திரையில் யார் முதலிடத்தில் இருந்தார்,
அரசியலில் யார் வெற்றி பெற்று உச்ச நிலை தொட்டார் என்பது வரலாறு.
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவோர்கள் வரலாற்றை மறந்து/மறைத்து கண்ணை மூடிக் கொண்டு உண்மை இல்லாதவைகளை சொல்கின்றனர். எம்ஜிஆர் என்ற மூன்று எழுத்து மந்திரம் என்றுமே வெற்றி மந்திரம்.

Richardsof
21st May 2013, 10:04 AM
மதிப்பிற்குரிய சாரதா அவர்களின் இணயதளத்தில் கண்ட அற்புதமான பதிவு - மக்கள் திலகத்தின் பாடல் .

நன்றி திருமதி சாரதா அவர்களே .

மெல்லிசை மன்னரின் மனத்தை மயக்கும் இசையில் டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடிய ஏராளமான பாடல்கள் என்றென்றும் நம் மனத்தில் உறந்து, நிறைந்து நிற்கின்றன........

'மின்மினியை கண்மையாய் கொண்டவளை'
'முத்துக்குளிக்க வாரீகளா'
'சொர்க்கம் பக்கத்தில்'
'நினைத்ததை நடத்தியே முடிப்பவன்'
;துள்ளுவதோ இளமை'
'நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என'

இப்படியே அடுக்க்கிக்கொண்டே போகலாம். மிக நீண்ட பட்டியல் அது.

அந்த வரிசையில் அவர்கள் இருவரும் மெல்லிசை மன்னர் மற்றும் 'கவியரசர்' கண்ணதாசன் உழைப்பில் கலக்கிய பாடல்தான் இது. கதாநாயகியான ஜெயலலிதா இருக்க, இன்னொரு கதாநாயகியான 'வெண்ணிற ஆடை' நிர்மலாவுடன் எம்.ஜி.ஆர். நடித்த அருமையான டூயட் பாடல்.

வயலினில் நீண்ட முன்னிசையுடன் (pre-lude) துவங்கி, ஃப்ளுட் பிட்டுடன் முன்னிசை முடிய, ஈஸ்வரியின் குரலில் பஞ்சமத்தில் துவங்கும் பல்லவி..., தாளத்துக்கு பாங்கோஸ்...

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளித்திரிகின்ற மேகம் தொட்டுத்தழுவாதோ
(உடன் ‘பாங்கோஸ்‘ நடையில் ஒரு மாற்றம்)
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ

(இதே தாளக்கட்டுத்தான் பின்னர் டி.எம்.எஸ். 'செங்கனி மங்கையின் மீது செவ்வரி வண்டாடும்' என்ற வரிகளில் ஒலிக்கும்)

பல்லவி முடிந்து இடையிசையில் (inter-lude) ட்ரம்பெட்டில் நீண்ட ஒரு நடை (கிட்டத்தட்ட இடையிசை முழுக்க) , கூடவே பாங்கோஸ் அணைப்புடன் ட்ரம்ஸில் பிரஷ் கொண்டு ஸ்ட்ரோக், ட்ரம்பெட் ஆதிக்கம் முடிந்து சின்ன ஆர்மோனிய பிட்டுடன் இடையிசை முடிய, சரணத்தில் டி.எம்.எஸ்...

பொன்னழகு பெண் முகத்தில்
கண் விழுந்தால் என்னாகும்
(ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ட்ரம்பெட் டச், பின்னர் தாளக்கட்டு அடங்க)
பொன்னாகும் பூவாகும் தள்ளாடும்
(அருமையான பாங்கோஸின் வேகத்துடன்)
செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்

(தொடர்ந்து தபேலாவுடன் ஈஸ்வரி மற்றும் டி.எம்.எஸ்...)

சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகில் எதனை எடுத்து செல்லும்
தொடுக்கும் கரங்கள் துடிக்க துடிக்க எடுத்து முடிக்கச் சொல்லும்
மலர் கிள்ளலாம்.. கையில் அள்ளலாம்..
கதை சொல்லலாம்... வண்ணக் கண்ணமெல்லாம்...
இன்னும் என்ன வந்து விடு
சொல்லி விடு சொல்லி விடு

செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்

இடையிசை முழுக்க ஃப்ளூட்டில் பயணித்து, பின்னர் ஆர்மோனியத்தில் முடிய
அப்படியே பாங்கோஸ் சட்டென்று அடங்கி, தபேலாவுடன் ஈஸ்வரி மற்றும் டி.எம்.எஸ். குரல்களில்...

அருவி விழுந்து நதியில் நடந்து கடலில் கலந்ததென்ன
பருவம் அளந்து மடியில் விழுந்து பழகும் கதைகள் சொல்ல
நதி வந்தது... கடல் கொண்டது...
சுவை கண்டது... என்ன சொந்தமிது....
கொஞ்ச வரும் வஞ்சியரின் நெஞ்சமிது...
(உடன் பஞ்சமத்தில் ஈஸ்வரி...)
ஆடவந்தேன் மேடையிலே
ஆடிவிட்டேன் உன்மனதில்
ஆடுவதை காண வந்தேன்
ஆடவைத்தேன் உன்மனதை

(இருவரும் சேர்ந்து)

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளித்திரிகின்ற மேகம் தொட்டுத்தழுவாதோ
(உடன் பண்க்கோஸ் நடையில் ஒரு மாற்றம்)
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ

'மெல்லிசை மாமன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்
'கவியரசர்' கண்ணதாசன்
'குரல் வித்தகர்' டி.எம்.சௌந்தர்ராஜன்
'துள்ளலிசைப்பாடகி' எல்.ஆர்.ஈஸ்வரி

ஆகியோர் இணைந்து உருவாக்கிய அற்புதப் பாடல்.
1968 ல் உருவானது. அதே சமயம் நாளைய தலைமுறைக்கும் இளமையோடு இருக்கும் பாடல்.

http://youtu.be/WEPgXGH6j9w

Stynagt
21st May 2013, 10:16 AM
திரு. வினோத் சார்

தலைவரின் சாதனைகள், கொடைத்தன்மை, இயற்கை, உற்சாகம் மற்றும் வீரம் கலந்த நடிப்பு, பகைவருக்கும் அருளும் குணம் இவை அனைத்தும் யாவரும் அறிந்தவையே...உலகில் 75 சதவீதம் நல்லவர்கள் இருந்தால் அதில் 25 சதவீதம் தீயவர்கள் இருந்தே தீர வேண்டும்..அதுதான் உலக நியதி..அந்த தீயவர்கள் உலகத்தை மாசு படுத்தும் புல்லுருவிகள்..அவர்கள் சொல்வதையெல்லாம் இந்த உலகம் கேட்காது..அவர்கள் தலைவரின் மங்கா புகழின் மேல் உள்ள பொறாமையால் அப்படி பேசுகிறார்கள் என்பதை இந்த உலகம் எப்பொழுதோ புரிந்து கொண்டது...எனவே அப்படிப்பட்டவர்கள் கூற்றினை தயவு செய்து இனிமேல் பதிவு செய்ய வேண்டாம் என்று உங்களை பணிவுடன் கேட்டுகொள்கிறேன்...தீயார் சொல் கேளாமல் இருப்பது சால சிறந்தது...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
21st May 2013, 10:36 AM
21.5.1970

மக்கள் திலகம் அவர்களின் ''என் அண்ணன் '' 44வது ஆண்டு உதய தினம் .

மாட்டுக்காரவேலன் படம் தென்னாடெங்கும் வெற்றிகரமாக 127 வது நாளாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் .

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு

சண்டைகாட்சிகள்

விறுவிறுப்பான காட்சிகள்

இனிமையான பாடல்கள்

என்று ரசிகர்களுக்கு விருந்து தந்த படம் .
http://youtu.be/p4sEwW4mZ_0

சென்னை

மிட்லண்ட் -105- நாட்கள்

கிருஷ்ணா -86- நாட்கள்

மேகலா -70- நாட்கள்

நூர்ஜஹான் -57 - நாட்கள்


பெங்களூர்

ஸ்வஸ்திக் - 42 நாட்கள்


நியூ சிடி - 42 நாட்கள்

லக்ஷ்மி - 42 நாட்கள் .

masanam
21st May 2013, 10:48 AM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/en_annan_100days_thumb25255B225255D_zps92a32836.jp g (http://s1318.photobucket.com/user/masanam7/media/en_annan_100days_thumb25255B225255D_zps92a32836.jp g.html)

ujeetotei
21st May 2013, 01:18 PM
மே 21-1973

மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றித்திருநாள்

.http://i44.tinypic.com/f3xdg0.jpg

திண்டுக்கல் இடைத்தேர்தல் மூலம் அண்ணா திமுக என்ற இயக்கத்துக்கு கிடைத்த முதல் வெற்றி .

மக்கள் திலகம் நிறுவிய இயக்கம் 40 ஆண்டுகள் மேலாக இன்றும்

மக்கள் ஆதரவுடன் ஆட்சியில் நீடிப்பது அவரது அரசியல் புகழின் சக்தி நிருபணமாகிறது .

உலக அரசியல் வரலாற்றில் மக்கள் திலகத்தின் பெயர் என்றென்றும் முதன்மை இடத்தில இருப்பது உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான எம்ஜியார் ரசிகர்களுக்கு பெருமை .

Thanks for remainding the victory day Sir.

ujeetotei
21st May 2013, 01:45 PM
Malaysia Function 2013 video part now uploaded in MGR Blog

http://www.mgrroop.blogspot.in/2013/05/malaysia-function-2013-part-3.html

Richardsof
21st May 2013, 03:25 PM
http://i41.tinypic.com/2uqolmo.jpg

masanam
21st May 2013, 03:49 PM
http://i41.tinypic.com/2uqolmo.jpg
என் அண்ணன் பட வெளியீடு தொடர்பான அரிய ஆவணம். நன்றி எஸ்வி ஸார்.

Richardsof
21st May 2013, 04:29 PM
http://i39.tinypic.com/6h8axf.jpg

பிரபல இயக்குனர் பிஎஸ் ரங்கா அவர்களின் இயக்கத்தில்

மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த பட்டிக்காட்டு பொன்னையா படம் சுமாராக ஓடியது .

எல்லா பாடல்களும் மிகவும் சுமார் ரகம் .

மக்கள் திலகம் வெளி நாடு சுற்று பயணம் செய்தபோது அவசரகோலத்தில் படம் முடிக்கப்பட்டு வெளிவந்தது .

Richardsof
21st May 2013, 04:37 PM
http://i39.tinypic.com/qx1gz7.jpg

Richardsof
21st May 2013, 05:39 PM
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !! (நான் ஒரு மேடை )


http://youtu.be/ysK_d2aWGTg

masanam
21st May 2013, 05:53 PM
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !! (நான் ஒரு மேடை )


http://youtu.be/ysK_d2aWGTg

மக்கள் திலகம் என்றாலே வேகம், சுறுசுறுப்பு, துள்ளல்...

Richardsof
21st May 2013, 06:00 PM
தமிழக முதல்_அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்

http://i43.tinypic.com/a4ucl0.jpg


14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல்_அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30_ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:_

1. எம்.ஜி.ஆர் _ முதல்_அமைச்சர்.

2. நாஞ்சில் மனோகரன் _ நிதி.

3. நாராயணசாமி முதலியார் _ சட்டம்.

4. எட்மண்ட் _ உணவு

5. பண்ருட்டி ராமச்சந்திரன் _ பொதுப்பணி.

6. ஆர்.எம்.வீரப்பன் _ செய்தி, பொதுமக்கள் தொடர்பு

7. அரங்கநாயகம் _ கல்வி.

8. பெ.சவுந்தரபாண்டியன் _ அரிஜன நலம்.

9. காளிமுத்து _ ஊராட்சி.

10. ராகவானந்தம் _ தொழிலாளர் நலம்.

11. பொன்னையன் _ போக்குவரத்து.

12. பி.டி.சரசுவதி _ சமூக நலம்.

13. ஜி.குழந்தைவேலு _ விவசாயம்.

14. கே.ராஜா முகமது _ கைத்தறி.

(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)

பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8_15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் "எம்.ஜி.ஆர். வாழ்க" என்று குரல் எழுப்பினர். 9_15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

கவர்னர் வந்ததும், முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9_15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

கவர்னர் பட்வாரி, முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார். அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார்.

பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் "போட்டோ" படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார். பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள்.

ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் "புரட்சித் தலைவர் வாழ்க" என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார்.

அவர் கூறியதாவது:_

அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.

அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாகவும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத "உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும், வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன்.

எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11_15 மணிக்கு, முதல்_அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.

எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் "நெருக்கடி நிலை"யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது "மிசா"வில் கைது செய்யப்பட்டார். மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார்.

அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.

Richardsof
21st May 2013, 07:35 PM
1965 -ENGA VEETTU PILLAI

MAKKAL THILAGAM IN ACTION - REEL-1965

http://i41.tinypic.com/ehzm7b.jpg

REAL - CHIEF MINISTER PURATCHI THALAIVAR MGR- 1977


http://i44.tinypic.com/fn7az7.jpg

வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!

ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை

http://i41.tinypic.com/2z8yix5.jpg

oygateedat
21st May 2013, 10:02 PM
http://i41.tinypic.com/6oehid.jpg

masanam
21st May 2013, 10:24 PM
எஸ்வி ஸார், மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை ஸ்டில்லையும், முதல்வராகப் பதவியேற்கும் படத்தையும் ஒப்பீடாகப் பதிந்தது அருமை.

masanam
21st May 2013, 10:25 PM
http://i41.tinypic.com/6oehid.jpg

எட்டாம் வள்ளல் மக்கள் திலகம்...

Richardsof
22nd May 2013, 05:00 AM
நன்றி திரு மாசனம் சார்

1958- நாடோடி மன்னனில் மக்கள் திலகம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

1965ல் எங்க வீட்டு பிள்ளையில் மக்கள் திலகம் கதைக்கு ஏற்றவாறு ''நான் ஆணையிட்டால்'' பாடலை பாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் . இது சினிமா

நிஜ வாழ்க்கையில் அரசியலில் 1977ல்
தமிழக முதல்வராகி '' நான் ஆணையிட்டால்' என்ற பாடலுக்கு
உயிர் கொடுத்து அற்புத சாதனை படைத்தார் . இது வரலாறு .

உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடந்திராத அதிசயம்

எட்டாவது வள்ளலின் திக்கெட்டும் புகழ் பரப்பும்
ரசிகர்களுக்கு நம் இதய தெய்வம் ஒரு ''வரலாற்று நாயகன் ''.

.

Richardsof
22nd May 2013, 08:17 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/4b8259a9-6335-41d7-b933-e520aea27e6d_zpsa8d85337.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/4b8259a9-6335-41d7-b933-e520aea27e6d_zpsa8d85337.jpg.html)

Jeev
22nd May 2013, 08:28 AM
http://i39.tinypic.com/qx1gz7.jpg

நாளை நமதே இலங்கையில் மிக பெரிய வெற்றி படம்.

சமந்தா 150 நாட்களுக்கு மேல்
ஈரோஸ் 88 நாட்கள்
ராணி - யாழ்ப்பாணம் 100 நாட்களுக்கு மேல்

Between 1974 & 1978 முதல் வெளியீட்டில் இலங்கையில் மாபெரும் வெற்றி பெற்ற MGR படங்கள்

1. உலகம் சுற்றும் வாலிபன்
2. நாளை நமதே
3. நல்ல நேரம்
4. இதயக்கனி
5. ராமன் தேடிய சீதை

Richardsof
22nd May 2013, 08:37 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/f59385ca-d15f-4585-852c-5d3210b58fed_zpsab15b610.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/f59385ca-d15f-4585-852c-5d3210b58fed_zpsab15b610.jpg.html)

Richardsof
22nd May 2013, 09:04 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/af6f6c01-e436-4702-8a40-10e3449301fe_zpsb5764ec9.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/af6f6c01-e436-4702-8a40-10e3449301fe_zpsb5764ec9.jpg.html)

Richardsof
22nd May 2013, 12:32 PM
திண்டுக்கல் இடைத்தேர்தல் 1973

ஒட்டு எண்ணிக்கையும் -மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கொண்டாட்டமும் .


திண்டுக்கல் இடைதேர்தல் ஒட்டு எண்ணிக்கை அன்று பிற்பகல் வரை நிலவரம் ஒன்றும் தெரியாத சூழ் நிலையில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நாங்கள் ஒன்று கூடி பெங்களூர் ''தினசுடர்'' மாலை பத்திரிகை அலுவலகம் முன்பு கூடினோம் . அந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பெங்களூர் நகர எல்லா பகுதியிலிருந்தும் சுமார் 300 பேர் வந்திருந்தனர். அதே நேரத்தில் சிவாஜி ரசிகர்களும் - திமுக -அதிமுக தொண்டர்களும் மொத்தமாக 500 பேர்கள் மேல் கூடியிருந்தனர்.

பக்கத்தில் pti அலுவலகமும் இருந்ததால் அங்கும் மக்கள் வெள்ளம் கூடியிருந்தது .


Pti அருகில் ஸ்ரீ சினிமா அரங்கத்தில் மக்கள் திலகத்தின் ''நாடோடிமன்னன்'' படம்
தினசரி 3காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது .

முதல் கட்ட எண்ணிக்கை நிலவரப்படி அதிமுக வேட்பாளர் மாயதேவர் அவர்கள் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முந்துகிறது என்றவுடன் மக்கள் திலகம் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர் .

பின்னர் ஒவ்வொரு மணி நேரமும் வாக்குகள் வித்தியாசம் 20,30, 40 ஆயிரம் என்று .மின்னல் வேகத்தில் வித்தியாசம் சென்றது .

இரவு 10 மணியளவில் 1,00,000 வாக்குகள் வித்தியாசம் என்றதும் மக்கள் வெள்ளம் அனந்த வெள்ளத்தில் மகிழ்ச்சியினை கொண்டாடி ஊர்வலமாக ''ஸ்ரீ' அரங்கத்தினுள் சென்று பிரமாண்டமாக கொண்டாடினர் .


இந்த இனிய அனுபவம் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு என்றென்றும் இனிய
மக்கள் திலகத்தின் - அதிமுகவின் இமாலய வெற்றியின் - நினைவுகள் என்றால் அது மிகையல்ல .

ஒரு நடிகராக ''உலகம் சுற்றும்வாலிபன்''- அரசியல் களத்தில் '' திண்டுக்கல்''

என்ற உலக புகழ் தந்த '' இரட்டை இலை '' என்ற இரண்டு விருந்து கொடுத்த

மக்கள் திலகத்தின் சாதனையை மறக்க முடியுமா ?

masanam
22nd May 2013, 12:51 PM
திண்டுக்கல் இடைத்தேர்தல் 1973

ஒட்டு எண்ணிக்கையும் -மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கொண்டாட்டமும் .


திண்டுக்கல் இடைதேர்தல் ஒட்டு எண்ணிக்கை அன்று பிற்பகல் வரை நிலவரம் ஒன்றும் தெரியாத சூழ் நிலையில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நாங்கள் ஒன்று கூடி பெங்களூர் ''தினசுடர்'' மாலை பத்திரிகை அலுவலகம் முன்பு கூடினோம் . அந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பெங்களூர் நகர எல்லா பகுதியிலிருந்தும் சுமார் 300 பேர் வந்திருந்தனர். அதே நேரத்தில் சிவாஜி ரசிகர்களும் - திமுக -அதிமுக தொண்டர்களும் மொத்தமாக 500 பேர்கள் மேல் கூடியிருந்தனர்.

பக்கத்தில் pti அலுவலகமும் இருந்ததால் அங்கும் மக்கள் வெள்ளம் கூடியிருந்தது .


Pti அருகில் ஸ்ரீ சினிமா அரங்கத்தில் மக்கள் திலகத்தின் ''நாடோடிமன்னன்'' படம்
தினசரி 3காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது .

முதல் கட்ட எண்ணிக்கை நிலவரப்படி அதிமுக வேட்பாளர் மாயதேவர் அவர்கள் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முந்துகிறது என்றவுடன் மக்கள் திலகம் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர் .

பின்னர் ஒவ்வொரு மணி நேரமும் வாக்குகள் வித்தியாசம் 20,30, 40 ஆயிரம் என்று .மின்னல் வேகத்தில் வித்தியாசம் சென்றது .

இரவு 10 மணியளவில் 1,00,000 வாக்குகள் வித்தியாசம் என்றதும் மக்கள் வெள்ளம் அனந்த வெள்ளத்தில் மகிழ்ச்சியினை கொண்டாடி ஊர்வலமாக ''ஸ்ரீ' அரங்கத்தினுள் சென்று பிரமாண்டமாக கொண்டாடினர் .


இந்த இனிய அனுபவம் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு என்றென்றும் இனிய
மக்கள் திலகத்தின் - அதிமுகவின் இமாலய வெற்றியின் - நினைவுகள் என்றால் அது மிகையல்ல .

ஒரு நடிகராக ''உலகம் சுற்றும்வாலிபன்''- அரசியல் களத்தில் '' திண்டுக்கல்''

என்ற உலக புகழ் தந்த '' இரட்டை இலை '' என்ற இரண்டு விருந்து கொடுத்த

மக்கள் திலகத்தின் சாதனையை மறக்க முடியுமா ?
நடிகர் அரசாண்டது என்பதை உலக வரலாற்றில் முதன்முதலில் நிகழ்த்தியது மக்கள் திலகம் தான்.
திரைத்துறையிலும் அரசியல் அரங்கிலும் முதலிடம் பெற்று,
சாதனை என்றால் அது மக்கள் திலகம் தான்
என்று வரலாற்றில் பதிவு செய்தவரும் பொன்மனச் செம்மல் தான்.

Richardsof
22nd May 2013, 12:57 PM
திண்டுக்கல் ஒட்டு எண்ணிக்கையில் அதிமுக வெற்றி உறுதி என்றவுடன்

ஒட்டு எண்ணிக்கை நடந்த இடத்திலிருந்து முரசொலி மாறன் வேகமாக வெளியேறி சென்றபோது நிருபர்களிடம் அவர் கூறியது

''நாளை நடிகை ஜெயலலிதா எம்ஜியார் பக்கம் சேர்ந்தாலும் அவரைவெற்றி பெற செய்வார்கள் இந்த மக்கள் என்று கோபமாக கூறி வெளியேறினார் .

இந்த சம்பவம் நடந்தது [மே -1973]

அவர் கூறியது போல் ஜனவரி -1989 மற்றும் மே-1991 தமிழக தேர்தலில் ஜெயாவை வெற்றி பெற செய்தனர் .

masanam
22nd May 2013, 01:14 PM
மக்கள் திலகம் மட்டுமே சட்டமன்ற தேர்தலில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, முதல்வராகி அதிலும் சாதனையைப் படைத்தவர்.

Richardsof
22nd May 2013, 02:49 PM
1947 இல் வெளிவந்த ராஜகுமாரி படம் அவருக்கு நல்ல நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பின்னர் 1950 களில் திரையுலகம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கி கொண்டாடியது. 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன் படம் எம்.ஜி.ஆரை உயரத்தில் கொண்டு நிறுத்தியது. பின்னர் அரசியல் களத்திலும் கோலோச்ச தொடங்கினார். 1977முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடமையிலிருந்தார். மூன்று தடவை தொடர்ச்சியாக இவர் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சானார்.

முதன்முறையாக திரைப்பட நடிகர் ஒருவர் இந்திய மாநிலம் ஒன்றின் முதலமைச்சராக பதவியேற்ற பெருமை எம்.ஜி.ஆரையே சாரும். 1984ம் ஆண்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வர் எனும் பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. இவரது கலைச்சேவை, பொதுச்சேவைக்கு கிடைத்த செல்வாக்கு, கௌரவம் என்பன அத்தேர்தலை அதிமுக வெற்றிகரமாக எதிர்நோக்க பெரிதும் உதவியது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கையை கடைப்பிடிக்கும் திராவிட கட்சியில் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரை கடவுள் போன்றே போற்றினார்கள். தமிழ் மொழிக்கு என தனியே ஒரு தமிழ் பல்கலைக்கழகம் வேண்டுமென 1921ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, நடைமுறை சாத்தியமாக்கினார் எம்.ஜி.ஆர்.

1981ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் முயற்சியில் தான் தமிழக அரசால் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகளில், பாரத் விருது, பாரத ரத்னா விருது, என்பன குறிப்பிடத்தக்கன. இதில் பத்மசிறீ விருதை அவர் ஏற்க மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

யுத்த தேவைகளுக்காக நிதியுதவி செய்த முதலாவது அரசியல் தலைவர் எனும் பெருமையும் எம்.ஜி.ஆரை சாரும். 1962ம் ஆண்டு, சீனாவுடனான யுத்தத்தின் போது ரூ.75,000 யுத்த நிதியுதவியாக இந்திய இராணுவத்திற்கு கையளித்தார். அதோடு இலங்கையிலிருந்து தமிழீழம் தனி நாடாக சுதந்திரம் பெறவேண்டுமென வெளிப்படையாகயே வி.புலிகளுக்கு நிதியுதவி செய்தவ எம்.ஜி.ஆர் ஆவார்.

அதோடு தீ, வெள்ளம், சூறாவாளி போன்ற இயற்கை அழிவுகளில் சிக்கிய பிரதேசங்களின் மீள் நிவாரண பணிகளுக்காகவும் தனிப்பட்ட முறையில் அதிக நிதியுதவி செய்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் போதே, 1987ம் ஆண்டு டிச.24ம் திகதி எம்.ஜி.ஆர் மறைவை எய்தினார். எம்.ஜி.ஆர் மீது கொண்டிருக்கும் தனிப் பற்றுதல் காரணமாக மட்டுமே, அதிமுகவுக்கு ஆதரவு வழங்குபவர்கள் இன்று வரை தொடர்கின்றனர்.

courtesy-kalapam

masanam
22nd May 2013, 03:25 PM
அரசியலுக்கு அப்பாற்பட்டும், மககள் திலகத்தைப் போற்றுபவர்கள் ஏராளம்.

siqutacelufuw
22nd May 2013, 05:09 PM
சென்னை மாவட்ட எம் ஜி ஆர். மன்ற மூத்த உறுப்பினரும், கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரும், அனைத்துலக எம். ஜி..ஆர். பொது நல சங்க துணைத் தலைவருமாகிய, திரு. க. இ . பாஸ்கரன் - பா. அவ்வை செல்வி அவர்களின் குமாரத்தி

செல்வி சண்முகப்ரியா B.Sc. (Nutrition) அவர்களுக்கும்,

திருமதி தமிழரசி மாணிக்கம் அவர்களின் குமாரன்

செல்வன் மா. கணேசன், M.B.A. SAP (FICO) அவர்களுக்கும்,

கடந்த 20-05-2013 திங்கள்கிழமையன்று மதுரை திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ள வி எஸ் ஆர். ராமதிலகம் மஹாலில், திருமணம்,. வெகு விமர்சையாக,
பரமக்குடி மஞ்சள்பட்டினம் தெய்வத்திரு வீ . கருப்பையா பிள்ளை - அம்மணி அம்மாள், தெய்வத்திரு. க. இருளப்ப பிள்ளை - செண்பகம் அம்மாள் மற்றும் மதுரை திருமங்கலம் தெய்வத்திரு. வீ. மாயாண்டி பிள்ளை - ராமுத்தாய் அம்மாள், தெய்வத்திரு. மா. வீரபத்திர பிள்ளை - ரத்தினம் அம்மாள்
ஆகியோரின் பரிபூரண நல்லாசியுடன், சீரும் சிறப்புடனும், நடை பெற்றது.

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திரளாக வந்திருந்து சிறப்பித்து, மணமக்களை, எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ, வாழ்த்திய, எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த எம். ஜி. ஆர். பக்தர்கள், அன்பர்கள் அனைவரையும், திரு. க. இ . பாஸ்கரன் அவர்களின் புதல்வன் திரு. பா. கவின்குமார், திரு. க. இ . பாஸ்கரன் அவர்களின் சகோதரர் பழனிகுமார் மற்றும் திரு. மா. ராஜேஷ்கண்ணன், செல்வி. ரா. சசிகலா ஆகியோர் இன்முகத்துடன் உபசரித்து வரவேற்றனர்.

மணமக்களுக்கு, மக்கள் திலகம் திரியின் பதிவிடுவோர் மற்றும் பார்வையிடுவோர் சார்பில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

http://i44.tinypic.com/2ugfbww.jpg

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்., எங்கள் இறைவன்

siqutacelufuw
22nd May 2013, 05:14 PM
மக்கள் தலைவர் என்றால் அது எம். ஜி. ஆர். தான் -


நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர் . அவர்கள் பற்றி, திரு. E.v.k.s. இளங்கோவன் அவர்கள், அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல். ஏ. சதாசிவம் மணிமண்டப திறப்பு விழா . கூட்டம் ஒன்றில் பேசியது .


26-05-13 தேதியிட்ட குமுதம் ரிபோர்ட்டர் இதழில் பிரசுரமானது :


விவரம் தொடர்கிறது.

:



அன்பன் : சௌ செல்வகுமார்



என்றும் எம்.ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

ujeetotei
22nd May 2013, 06:25 PM
மக்கள் திலகம் மட்டுமே சட்டமன்ற தேர்தலில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, முதல்வராகி அதிலும் சாதனையைப் படைத்தவர்.
MGR has to reborn to break this record in Tamil Nadu.

Stynagt
22nd May 2013, 06:28 PM
http://i41.tinypic.com/6oehid.jpg

வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் வாரி வழங்கி
எட்டாவது வள்ளலென எட்டா புகழ் பெற்ற
எங்கள் தங்கத்தை பூந்தோட்டத்தில் வைத்த அருமை நண்பர்
திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

Stynagt
22nd May 2013, 06:34 PM
திண்டுக்கல் இடைத்தேர்தல் 1973

ஒட்டு எண்ணிக்கையும் -மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கொண்டாட்டமும் .


திண்டுக்கல் இடைதேர்தல் ஒட்டு எண்ணிக்கை அன்று பிற்பகல் வரை நிலவரம் ஒன்றும் தெரியாத சூழ் நிலையில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நாங்கள் ஒன்று கூடி பெங்களூர் ''தினசுடர்'' மாலை பத்திரிகை அலுவலகம் முன்பு கூடினோம் . அந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பெங்களூர் நகர எல்லா பகுதியிலிருந்தும் சுமார் 300 பேர் வந்திருந்தனர். அதே நேரத்தில் சிவாஜி ரசிகர்களும் - திமுக -அதிமுக தொண்டர்களும் மொத்தமாக 500 பேர்கள் மேல் கூடியிருந்தனர்.

பக்கத்தில் pti அலுவலகமும் இருந்ததால் அங்கும் மக்கள் வெள்ளம் கூடியிருந்தது .


Pti அருகில் ஸ்ரீ சினிமா அரங்கத்தில் மக்கள் திலகத்தின் ''நாடோடிமன்னன்'' படம்
தினசரி 3காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது .

முதல் கட்ட எண்ணிக்கை நிலவரப்படி அதிமுக வேட்பாளர் மாயதேவர் அவர்கள் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முந்துகிறது என்றவுடன் மக்கள் திலகம் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர் .

பின்னர் ஒவ்வொரு மணி நேரமும் வாக்குகள் வித்தியாசம் 20,30, 40 ஆயிரம் என்று .மின்னல் வேகத்தில் வித்தியாசம் சென்றது .

இரவு 10 மணியளவில் 1,00,000 வாக்குகள் வித்தியாசம் என்றதும் மக்கள் வெள்ளம் அனந்த வெள்ளத்தில் மகிழ்ச்சியினை கொண்டாடி ஊர்வலமாக ''ஸ்ரீ' அரங்கத்தினுள் சென்று பிரமாண்டமாக கொண்டாடினர் .


இந்த இனிய அனுபவம் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு என்றென்றும் இனிய
மக்கள் திலகத்தின் - அதிமுகவின் இமாலய வெற்றியின் - நினைவுகள் என்றால் அது மிகையல்ல .

ஒரு நடிகராக ''உலகம் சுற்றும்வாலிபன்''- அரசியல் களத்தில் '' திண்டுக்கல்''

என்ற உலக புகழ் தந்த '' இரட்டை இலை '' என்ற இரண்டு விருந்து கொடுத்த

மக்கள் திலகத்தின் சாதனையை மறக்க முடியுமா ?


திண்டுக்கல் வெற்றியை திரைப்படம் போல் முன் நிறுத்தி
நினைக்க நினைக்க நெஞ்சில் திகட்டாத இன்பம் தந்த
திரு. வினோத் சார் அவர்களுக்கு நன்றி...அந்த வேளையில் நான் இல்லையே.... அந்த நாள் வந்திடாதோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்களே ஐயா....
நீங்கள் அந்த வேளையில் இருந்து இப்பிறவி பெற்ற பயனை அடைந்து விட்டீர்கள்..நாங்கள்?

Stynagt
22nd May 2013, 06:37 PM
சென்னை மாவட்ட எம் ஜி ஆர். மன்ற மூத்த உறுப்பினரும், கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரும், அனைத்துலக எம். ஜி..ஆர். பொது நல சங்க துணைத் தலைவருமாகிய, திரு. க. இ . பாஸ்கரன் - பா. அவ்வை செல்வி அவர்களின் குமாரத்தி

செல்வி சண்முகப்ரியா B.Sc. (Nutrition) அவர்களுக்கும்,

திருமதி தமிழரசி மாணிக்கம் அவர்களின் குமாரன்

செல்வன் மா. கணேசன், M.B.A. SAP (FICO) அவர்களுக்கும்,

கடந்த 20-05-2013 திங்கள்கிழமையன்று மதுரை திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ள வி எஸ் ஆர். ராமதிலகம் மஹாலில், திருமணம்,. வெகு விமர்சையாக,
பரமக்குடி மஞ்சள்பட்டினம் தெய்வத்திரு வீ . கருப்பையா பிள்ளை - அம்மணி அம்மாள், தெய்வத்திரு. க. இருளப்ப பிள்ளை - செண்பகம் அம்மாள் மற்றும் மதுரை திருமங்கலம் தெய்வத்திரு. வீ. மாயாண்டி பிள்ளை - ராமுத்தாய் அம்மாள், தெய்வத்திரு. மா. வீரபத்திர பிள்ளை - ரத்தினம் அம்மாள்
ஆகியோரின் பரிபூரண நல்லாசியுடன், சீரும் சிறப்புடனும், நடை பெற்றது.

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திரளாக வந்திருந்து சிறப்பித்து, மணமக்களை, எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ, வாழ்த்திய, எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த எம். ஜி. ஆர். பக்தர்கள், அன்பர்கள் அனைவரையும், திரு. க. இ . பாஸ்கரன் அவர்களின் புதல்வன் திரு. பா. கவின்குமார், திரு. க. இ . பாஸ்கரன் அவர்களின் சகோதரர் பழனிகுமார் மற்றும் திரு. மா. ராஜேஷ்கண்ணன், செல்வி. ரா. சசிகலா ஆகியோர் இன்முகத்துடன் உபசரித்து வரவேற்றனர்.

மணமக்களுக்கு, மக்கள் திலகம் திரியின் பதிவிடுவோர் மற்றும் பார்வையிடுவோர் சார்பில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

http://i44.tinypic.com/2ugfbww.jpg

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்., எங்கள் இறைவன்

மணமக்கள் இருவரும் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்கவென புதுச்சேரி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அனைத்துலக அறக்கட்டளையின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறோம்.

ujeetotei
22nd May 2013, 06:38 PM
' இரட்டை இலை '' என்ற இரண்டு விருந்து கொடுத்த
when this dialog was said by Isari Velan in Ithayakani movie I did not know the real meaning behind, now I understand the real meaning.

Richardsof
22nd May 2013, 06:45 PM
நன்றி திரு kpv சார்

இன்று நினைத்தாலும் நம் மக்கள் திலகத்தின் - அரசியல் சினிமா நினைவுகள் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது .
உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது இன்னும் சற்று மன நிறைவு தருகிறது .

Richardsof
22nd May 2013, 06:49 PM
நமது மக்கள் திலகத்தின் ரசிகர் திரு பாஸ்கரின் மகள் செல்வி சண்முகப்ரியா - செல்வன் கணேசன் தம்பதியருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க
என்று வாழ்த்துகிறோம் .

ujeetotei
22nd May 2013, 06:55 PM
நமது மக்கள் திலகத்தின் ரசிகர் திரு பாஸ்கரின் மகள் செல்வி சண்முகப்ரியா - செல்வன் கணேசன் தம்பதியருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க
என்று வாழ்த்துகிறோம் .

One small correction, Baskar Sir is not a MGR Fan but a MGR Devotee.

Richardsof
22nd May 2013, 07:07 PM
1973 - மே மாத அரசியல் - சினிமா - நிலவரம் .

உலகம் சுற்றும் வாலிபன் பிரமாண்ட வெற்றி

திண்டுக்கல் இடைதேர்தல் அமோக வெற்றி

அகில இந்தியாவின் பத்திரிகைகள் நமது மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு - குறித்து அருமையான தலையங்கம் எழுதினார்கள்

மக்கள் திலகத்தின் வெற்றியினை ஜீரணிக்க முடியாதவர்கள்

வழக்கம் போல குறை கூறினார்கள் .

தயாரிப்பாளர்கள் பலர் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்க

போட்டி போட்டனர்

அரசியல் பிரமுகர்கள் அண்ணா திமுகவில் தினமும் இணைந்த வண்ணம் இருந்தனர் .

அதே நேரத்தில் ஆளும் கட்சியினர் மறைமுக தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தி தோல்வி கண்டே தோய்ந்து போனார்கள் .


மக்கள் திலகம் ஒரே நேரத்தில் 10 படங்கள் மேல் ஒப்பந்தம் ஆனார் .


1973 - திண்டுக்கல் விதை ......

1974 - புதுவை - கோவை மேற்கு வளர்ந்து

1977 - நாடாளுமன்ற தேர்தலில் பூத்துக்குலுங்கி செடியாகி

1977 - சட்டசபை தேர்தலில் கனி தரும் மரமாக வளர்ந்து


2013 - இன்று ஆலமரமாக விருத்தி அடைந்தது என்றால்

அது

நமது தெய்வம்

மக்கள் திலகம் அவர்களின் உழைப்பு -

புரட்சித்தலைவரின் நேர்மை

செல்வாக்கு

புகழ்

இரட்டை இலை சின்னம்

தமிழ் நாட்டுக்கு அவர் செய்த எண்ணிலடங்கா சேவை

ஏழைகளின் நன்றி

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு

என்றால் அது - உண்மை - உண்மை .

ujeetotei
22nd May 2013, 07:17 PM
சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு கச்சேரி.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgr_yesudass_zps2754b06d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mgr_yesudass_zps2754b06d.jpg.html)

என்னை மறந்து பாடிக் கொண்டிருக்கிறேன். நான் கச்சேரியில் பாடிக்கொண்டிருக்கும் போது ஒரு வி.வி.ஐ.பி. வந்தார். எந்தவித ஆரவாரமும் இல்லாமல் தனது வருகையால் கச்சேரிக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக அனைவரிடமும் தன் விரலசைவாலேயே அமைதியாக இருக்கும் படி கட்டளையிட்டு இருக்கையில் அமர்ந்தார். அவர் ஆணையிட்டால் என்ன நடக்கும் என்பது தான் உலகறிந்ததாயிற்றே. அவர் வந்த சுவடே தெரியவில்லை. நான் அவர் வந்ததை அறியாமலே பாடிக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு பாடல் ராம நாமம் நல்ல நாமம். பாடல் முடிந்தவுடன் பலத்த கைதட்டல். மற்ற பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை விட அந்தப் பாடலுக்கு மிகுந்த வரவேற்பு. காரணம் புரியாமல் நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அதற்குப் பிறகு தான் புரிந்தது. நான் தசரத ராமனைப் பற்றிப் பாடினேன். அதை ராமவரம் ராமனைப் பற்றிப் பாடியதாக நினைத்து மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஆம் வந்திருந்த வி.வி.ஐ.பி. சாட்சாத் எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்திதான்.
சொன்னவர் பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்.

Richardsof
22nd May 2013, 07:39 PM
நேற்று இன்று நாளை -1974.

1971ல் நடிகர் அசோகன் அவர்கள் தன்னுடைய மகன் அமல்ராஜ்

பெயரில் துவக்கிய படம் .

மக்கள் திலகம் அவர்களின் நேரிடை பார்வையில் எல்லா பாடல்களும் மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் இனிமையான பாடல்கள் உருவாகி வந்தன .

அசோகனின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு

1971 இறுதியில் மக்கள் திலகம் தான் நடிக்கும்

உலகம் சுற்றும் வாலிபன்

இதயவீணை

ராமன் தேடிய சீதை

நினைத்ததை முடிப்பவன்

4 படங்கள் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தும் போது

அசோகனுக்கு ஒரு செலவில்லாமல் ''நீ என்னென்ன சொன்னாலும் கவிதை '' பாடலை படமாக்கினார் .

1972 மக்கள் திலகம் தனி இயக்கம் கண்ட போது அசோகன் அவர்களின் நிலையில் தடுமாற்றமும் -தெளிவில்லாமல்
போனதும் படபிடிப்பு தள்ளி போனது .

1974 மே மாதத்தில் மக்கள் திலகம் பரிபூர்ண ஒத்துழைப்பு கொடுத்து படத்தை வெற்றிகரமாக ,எல்லா எதிர்ப்பையும் தவிடு பொடியாக்கி ''நேற்று இன்று நாளை '' படம் - வசூல் ரீதியாக மாபெரும் சாதனை புரிந்தது என்ற வரலாற்றை உருவாக்கினார் .

இதை புரியாத ஒரு சிலர் கட்டிய கதை - கதையாகவே முடிந்து போனது .
நடிகர் அசோகனின் குடும்பத்துக்கு இன்றும் வருமானம் தரும் படம் நேற்று இன்று நாளை .

masanam
22nd May 2013, 08:14 PM
நேற்று இன்று நாளை -1974.

1971ல் நடிகர் அசோகன் அவர்கள் தன்னுடைய மகன் அமல்ராஜ்

பெயரில் துவக்கிய படம் .

மக்கள் திலகம் அவர்களின் நேரிடை பார்வையில் எல்லா பாடல்களும் மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் இனிமையான பாடல்கள் உருவாகி வந்தன .

அசோகனின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு

1971 இறுதியில் மக்கள் திலகம் தான் நடிக்கும்

உலகம் சுற்றும் வாலிபன்

இதயவீணை

ராமன் தேடிய சீதை

நினைத்ததை முடிப்பவன்

4 படங்கள் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தும் போது

அசோகனுக்கு ஒரு செலவில்லாமல் ''நீ என்னென்ன சொன்னாலும் கவிதை '' பாடலை படமாக்கினார் .

1972 மக்கள் திலகம் தனி இயக்கம் கண்ட போது அசோகன் அவர்களின் நிலையில் தடுமாற்றமும் -தெளிவில்லாமல்
போனதும் படபிடிப்பு தள்ளி போனது .

1974 மே மாதத்தில் மக்கள் திலகம் பரிபூர்ண ஒத்துழைப்பு கொடுத்து படத்தை வெற்றிகரமாக ,எல்லா எதிர்ப்பையும் தவிடு பொடியாக்கி ''நேற்று இன்று நாளை '' படம் - வசூல் ரீதியாக மாபெரும் சாதனை புரிந்தது என்ற வரலாற்றை உருவாக்கினார் .

இதை புரியாத ஒரு சிலர் கட்டிய கதை - கதையாகவே முடிந்து போனது .
நடிகர் அசோகனின் குடும்பத்துக்கு இன்றும் வருமானம் தரும் படம் நேற்று இன்று நாளை .

உண்மை தெரியாமல் (மற்றொரு திரியில்) பதிவிட்ட நண்பர்களுக்கு உணர்த்திடும் வகையில், இவ்விசயத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள்.நேற்று இன்று நாளை மக்கள் திலகத்தின் சாதனைப் படங்களுள் ஒன்று.

oygateedat
22nd May 2013, 09:21 PM
http://i42.tinypic.com/2zfmsd0.jpg

oygateedat
22nd May 2013, 09:24 PM
http://i42.tinypic.com/2u8ijpd.jpg

idahihal
22nd May 2013, 09:38 PM
http://i39.tinypic.com/33uud5h.jpg

oygateedat
22nd May 2013, 09:39 PM
http://i40.tinypic.com/30ky2r5.jpg

idahihal
22nd May 2013, 09:39 PM
http://i39.tinypic.com/33uud5h.jpg
http://i39.tinypic.com/e89ymt.jpg
THANKS TO ACTOR VINCENT ASHOKAN FOR SHARING THE ABOVE TWO RARE IMAGES IN HIS FACE BOOK

oygateedat
22nd May 2013, 09:42 PM
http://i44.tinypic.com/xbs5e.jpg

idahihal
22nd May 2013, 09:44 PM
http://i44.tinypic.com/5js08z.jpg

oygateedat
22nd May 2013, 09:45 PM
http://i41.tinypic.com/14xc7z8.jpg

idahihal
22nd May 2013, 09:46 PM
அருமையான பின்னணிப் படங்களுடன் என்றும் முன்னணி நட்சத்திரமான மக்கள் திலகத்தை இணைத்து கலைநயத்துடன் அசத்தும் ரவிச்சந்திரன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். கோவையைக் கலக்கும் மக்கள் திலகத்தின் மணியான படங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டமைக்கு நன்றி.

oygateedat
22nd May 2013, 09:48 PM
http://i41.tinypic.com/aovwjm.jpg

oygateedat
22nd May 2013, 09:49 PM
thank u mr.jai

idahihal
22nd May 2013, 09:51 PM
http://i41.tinypic.com/rh3o12.jpg

oygateedat
22nd May 2013, 09:56 PM
http://i44.tinypic.com/346x6c6.jpg

oygateedat
22nd May 2013, 10:42 PM
http://i39.tinypic.com/nqctoy.jpg

ainefal
22nd May 2013, 11:41 PM
' இரட்டை இலை '' என்ற இரண்டு விருந்து கொடுத்த
when this dialog was said by Isari Velan in Ithayakani movie I did not know the real meaning behind, now I understand the real meaning.

எல்லோரும் விருந்தை ஓத எலையில் தான் போடுவாங்க. அனால் நீங்களோ நீதி தவறாத நிர்வாகம் உழல் ஒழிப்பில் வெற்றி என்கிற இரட்டை இலையில் விருந்து போட்டுடிங்க அண்ணே

Richardsof
23rd May 2013, 05:11 AM
மக்கள் திலகம் மலர் மாலை -1

தமிழ் திரை களஞ்சியம்


இரண்டாம் பதிப்பு விரைவில் உங்கள் பார்வையில் ....



மக்கள் திலகத்தின் 40 வண்ணப்படங்களின் அட்டகாசமான

ஸ்டில்ஸ் - உயர தர அச்சில் . 94 படங்கள் கறுப்புவெள்ளையில் .

நம் பம்மலாரின் கை வண்ணத்தில்


தயாரிப்பில் இருக்கும்

1. மக்கள் திலகம் மலர் மாலை -2 - தகவல் களஞ்சியம்

2. மக்கள் திலகம் ''பருவ இதழ்'' - காலாண்டு பதிப்பு .

3. மக்கள் திலகம் '' எங்கவீட்டு பிள்ளை '' பொன்விழா மலர்.

4. மக்கள் திலகம் ''கோடியில் ஒருவன் ''

மக்கள் திலகம் ரசிகர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் .


இதர விபரங்கள் விரைவில் .........

Richardsof
23rd May 2013, 05:17 AM
http://i44.tinypic.com/5js08z.jpg

thanks jai

very rare stills

anbevaa.

Netru indru nalai - pooja day -1971

Richardsof
23rd May 2013, 05:19 AM
[
ONE MORE STILL NETRU INDRU NALAI- POOJA DAY

[QUOTE=esvee;1044616]http://i39.tinypic.com/2im9o7.jpg

Richardsof
23rd May 2013, 05:44 AM
மக்கள் திலகம் அவர்களின் ''உழைக்கும் கரங்கள் ''

23.5.1976

38வது ஆண்டு உதயம் .
http://i41.tinypic.com/2ymzlnn.jpg

மக்கள் திலகத்தின்'' நீதிக்கு தலை வணங்கு '' படம் 9 வது வாரமாக ஓடிகொண்டிருந்த போது வந்த படம் .

நாஞ்சில் மனோகரன் வசனத்தில் இயக்குனர் சங்கரின் கைவண்ணத்தில் வெளியான கிராமிய கதை படம் .

மக்கள் திலகம் ஆரம்பத்தில் அப்பாவியாகவும் பிறகு களை எடுக்கும் சமூக ஆர்வலாராகவும் நடித்து இருந்தார் .

ஒரு காட்சில் சிவனாக தோன்றி ருத்ர தாண்டவம் நடனம் சிறப்பாக ஆடி இருந்தார் .

மான் கொம்பு சண்டை மிகவும் பிரமாதம் .

வசனங்கள் அன்றைய காலகட்டத்தில் அரசியல் நெடியுடன் வந்து காட்சிக்கு காட்சி கைதட்டல் பெற்ற படம் .

தங்கவேலு - கண்ணன் - நாகேஷ் - தேங்காய் -கூட்டணி பிரமாதம் .

படம் முழவதும் கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்பட்டது .


மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்தான வெற்றி படைப்பு.



சென்னை - சாந்தம் அரங்கில் வந்த முதல் தமிழ் படம் .

Richardsof
23rd May 2013, 05:49 AM
http://youtu.be/jox_ESw6I0A

Richardsof
23rd May 2013, 06:13 AM
'ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து'' என்று, தான் பாடல் எழுதவந்தது பற்றி வர்ணிக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரைக்கும் தன்னை நீட்டித்துக் கொண்டிருக்கிற கவிஞர்.

எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் தரமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம்.

''பிறவி கம்யூனிஸ்ட் நான். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் யுத்தக்காரன். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சி. பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவன். சினிமாவில் பாட்டெழுதுவது என் லட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல.. என் முகங்களில் ஒன்று'' என்று சிரிக்கிறார்.

உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, வெடித்துக் கிளம்புகிற சிரிப்பு என அத்தனையும் பளிச் வெள்ளை!

''பஞ்சாலைக் கூலித் தொழிலாளி நான். புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -

நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?
தாய் யார்? மகன் யார்? தெரியார்;
தந்தை என்பார் அவர் யார்- யார்?
உறவார்? பகை யார்?
உண்மையை உணரார்;
உனக்கே நீ யாரோ?
வருவார்; இருப்பார்;
போவார்; நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?

'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...

இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் தரப்பட்டாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சிகர எண்ணங்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். எம்.ஜி.ஆர். என்கிற சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற -

நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே - ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே!

என்கிற பாடல். இன்றைக்கும் கேட்ட விநாடி சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல் அது.

பஞ்சபூதங்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-

காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது - மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனித இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே...
என்று 'இதயக்கனி' படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை.

என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மயக்கமே உண்டு.

எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே...
என்கிற, 'நீதிக்குத் தலைவணங்கு' பாட்டு வரிகளை குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு அரசாங்கம் தந்த உச்சகட்ட அங்கீகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை. 'அடிமைப் பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' பாடலில் வரும் -

பொய்கையெனும்
நீர்மகளும்
பூவாடை போர்த்து
நின்றாள்
தென்றலெனும்
காதலனின்
கைவிலக்க வேர்த்து
நின்றாள்
என்ன துடிப்போ
அவள் நிலை
நீயுணர மாட்டாயோ
அந்த நிலையில் தந்த சுகத்தை
நான் உணரக் காட்டாயோ?
என்கிற வரிகள் விரகத்தின் தவிப்பை விளக்கினால், ஆண் - பெண் உறவை இலக்கியத்தரமாகச் சித்திரித்தது -

சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துகளைச்
சேர்த்திடும் காலமிது
தேன்கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது

என்கிற வரிகள். காதலோடு நிறுத்திக்கொண்டுவிட முடியாதபடி என் சமூகச்சிந்தனை என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.. அதுதான் என்னை இயக்குவது.

புண்ணிய பூமி என்று இந்தியாவைச் சொல்கிறோம். இங்கு இல்லை என்பதே இல்லை. இந்தத் திருநாட்டில் கங்கை உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை. வயல் எங்கும் உண்டு. உண்ணச் சோறு இல்லை. இந்த தேசத்தைத் துன்பங்கள் ஆள்கின்றன. வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன. இதுதான் புண்ணிய பூமியா? இந்த ஆதங்கத்தில்தான் -

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு
மாறவில்லை - நம்
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லை.
இது நாடா, இல்லை வெறும் காடா? - இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா...
என்று 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் எழுதினேன்.

வயித்துக்காக மனுஷன் இங்கே
கயித்தில் ஆடுறான் பாரு;
ஆடி முடிச்சு இறங்கி வந்தா
அப்புறம்தாண்டா சோறு
என்று 'நல்லநேரம்' படத்துக்கு நான் எழுதிய பாட்டு திரையரங்குக்கு வெளியே கேட்டாலும் கண்ணீரை வரவழைப்பதற்கு என் சமூக அக்கறைதான் காரணம்.

இரும்பாக இறுகுகிற நான்தான் மெழுகாகக் குழையவும் முடியும். எரிமலை வரிகளை எழுதிவிட்டு,

பாடும்போது நான் தென்றல்காற்று

என்றும் எழுதமுடிகிறது.

தனிப்பட்ட முறையில் எந்த உணர்வு மனதை ஆட்கொண்டிருந்தாலும் பாடல் எழுதுவதற்கான சூழல் சொல்லப்பட்டவுடன் கதாபாத்திரமாக மாறித்தான் எழுதுவேன்.

Richardsof
23rd May 2013, 08:45 AM
நேற்று இன்று நாளை - 1974.

மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்காக .....


மக்கள் திலகம் அவர்களின் அபரிதமான அரசியல் -சினிமா வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட அன்றைய ''சக்திகள்'' நேற்று இன்று நாளை படத்தை வெளியிடாமல் இருப்பதற்கு என்னென்ன யுக்திகளை கையாள முடியுமோ அத்தனையும் உண்டாக்கி


விநியோகஸ்தர்கள் -

திரைஅரங்கு உரிமையாளர்கள்

எம்ஜியார் மன்ற நிர்வாகிகள்

எல்லோரையும் மிரட்டி - அராஜககம் செய்து - வன்முறையை கட்டவிழ்த்து

படம் வராது என்ற சூழ் நிலையில் இருந்தது .

வேறு எந்த நடிகராக இருந்தாலும் நிலைமையை சந்திக்க முடியாமல் சரண் அடைந்திருப்பார்கள் .

கட்டுக்கோப்பான மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - மன்ற பொறுப்பாளர்கள் ஒன்று பட்டு விநியோகஸ்தர்கள் -

திரைஅரங்கு உரிமையாளர்கள்

இருவருக்கும் அரணாக நின்று படத்தை திரையிட முழு ஆதரவு தந்தனர் .

பறக்கும் படை என்ற போர்வையில் - ஆளும் கட்சி ஆதரவுடன் சென்னை அயனாவரம் - சயானி அரங்கத்தை சூறையாடினார்கள் .

பல இடங்களில் வன்முறை தலை விரித்தாடியாது .


12.7.1974 அன்று படம் வெளியானது .

தமிழகமெங்கும் 40 அரங்குகளில் திருவிழா போல் மக்கள் - ரசிகர்கள் வெள்ளத்தில் மூழ்கினார்கள் .

படம் மிக பெரிய வெற்றி பெற்றது .

மக்கள் திலகம் தன்னுடைய பொறுமையினாலும் , ரசிகர்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமலும் படம் வெளிவர பல யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றார் .

ஒரு பக்கம் கோவை - மேற்கு சட்டமன்ற இடை தேர்தல் மூலம் முதல் அண்ணாதிமுக சட்ட மன்ற உறுப்பினர் செல்கிறார் .

மக்கள் திலகம் ஆதரவு பெற்ற கோவை நாடாளுமன்ற இடைதேர்தலில்
கம்யுனிஸ்ட் வேட்பாளர் வெற்றி .

புதுவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி

புதுவை மாநில ஆட்சியை முதல் முறையாக அதிமுக கைப்பற்றியது

அரசியலில் வெற்றி மேல் வெற்றி

திரை உலகில் சாதனை மேல் சாதனை


இப்போது கூறுங்கள்


ஒரு மக்கள் திலகத்தின் ரசிகனுக்கு இந்த அளவிற்கு விருந்து மேல் விருந்து

தந்து ''எல்லா புகழும் ஒருவருக்கே [இதயதெய்வம் எம்ஜியார் ] என்றென்றும்

என்று சொல்லும் அளவிற்கு நம்மை ஆக்கிவிட்ட வள்ளலின் பெருமை என்னவென்று சொல்ல ?

1974 ல்
அரசியல் ரீதியாக வெற்றி மேல் வெற்றி

உரிமைக்குரல் - 200 நாட்கள் - இமாலயவேற்றி

நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - மிகப்பெரிய வெற்றி .

இப்போது சொல்லுங்கள் .....


நாம் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் .

Stynagt
23rd May 2013, 10:22 AM
நேற்று இன்று நாளை - 1974.

மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்காக .....


மக்கள் திலகம் அவர்களின் அபரிதமான அரசியல் -சினிமா வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட அன்றைய ''சக்திகள்'' நேற்று இன்று நாளை படத்தை வெளியிடாமல் இருப்பதற்கு என்னென்ன யுக்திகளை கையாள முடியுமோ அத்தனையும் உண்டாக்கி


விநியோகஸ்தர்கள் -

திரைஅரங்கு உரிமையாளர்கள்

எம்ஜியார் மன்ற நிர்வாகிகள்

எல்லோரையும் மிரட்டி - அராஜககம் செய்து - வன்முறையை கட்டவிழ்த்து

படம் வராது என்ற சூழ் நிலையில் இருந்தது .

வேறு எந்த நடிகராக இருந்தாலும் நிலைமையை சந்திக்க முடியாமல் சரண் அடைந்திருப்பார்கள் .

கட்டுக்கோப்பான மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - மன்ற பொறுப்பாளர்கள் ஒன்று பட்டு விநியோகஸ்தர்கள் -

திரைஅரங்கு உரிமையாளர்கள்

இருவருக்கும் அரணாக நின்று படத்தை திரையிட முழு ஆதரவு தந்தனர் .

பறக்கும் படை என்ற போர்வையில் - ஆளும் கட்சி ஆதரவுடன் சென்னை அயனாவரம் - சயானி அரங்கத்தை சூறையாடினார்கள் .

பல இடங்களில் வன்முறை தலை விரித்தாடியாது .


12.7.1974 அன்று படம் வெளியானது .

தமிழகமெங்கும் 40 அரங்குகளில் திருவிழா போல் மக்கள் - ரசிகர்கள் வெள்ளத்தில் மூழ்கினார்கள் .

படம் மிக பெரிய வெற்றி பெற்றது .

மக்கள் திலகம் தன்னுடைய பொறுமையினாலும் , ரசிகர்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமலும் படம் வெளிவர பல யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றார் .

ஒரு பக்கம் கோவை - மேற்கு சட்டமன்ற இடை தேர்தல் மூலம் முதல் அண்ணாதிமுக சட்ட மன்ற உறுப்பினர் செல்கிறார் .

மக்கள் திலகம் ஆதரவு பெற்ற கோவை நாடாளுமன்ற இடைதேர்தலில்
கம்யுனிஸ்ட் வேட்பாளர் வெற்றி .

புதுவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி

புதுவை மாநில ஆட்சியை முதல் முறையாக அதிமுக கைப்பற்றியது

அரசியலில் வெற்றி மேல் வெற்றி

திரை உலகில் சாதனை மேல் சாதனை


இப்போது கூறுங்கள்


ஒரு மக்கள் திலகத்தின் ரசிகனுக்கு இந்த அளவிற்கு விருந்து மேல் விருந்து

தந்து ''எல்லா புகழும் ஒருவருக்கே [இதயதெய்வம் எம்ஜியார் ] என்றென்றும்

என்று சொல்லும் அளவிற்கு நம்மை ஆக்கிவிட்ட வள்ளலின் பெருமை என்னவென்று சொல்ல ?

1974 ல்
அரசியல் ரீதியாக வெற்றி மேல் வெற்றி

உரிமைக்குரல் - 200 நாட்கள் - இமாலயவேற்றி

நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - மிகப்பெரிய வெற்றி .

இப்போது சொல்லுங்கள் .....


நாம் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் .

நேற்று இன்று நாளை பற்றி தவறான தகவல் தருபவர்களுக்கு சரியான சவுக்கடி..இப்படம் அன்றைக்கு ஏற்படுத்திய மிகப்பெரிய வெற்றியை அழகாக படம் பிடித்து காட்டியதற்கு நன்றி வினோத் சார்..அன்று மட்டுமல்ல இன்றும் எங்களுக்கு சோறு போடுகிறது என்று திரு அசோகன் புதல்வரே சொல்லும்போது இதைவிட இப்படத்திற்கு வேறென்ன பெருமை வேண்டும்...ஏளனம் செய்த ஏமாளிகள் புறமுதுகு காட்டி ஓடினர்...ஓடுகின்றனர்..



உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
23rd May 2013, 04:05 PM
நேற்று இன்று நாளை


திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!


மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.
மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!

நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?
“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை.

தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.
ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.

Richardsof
23rd May 2013, 04:26 PM
மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே...

தமிழ் நூல்கள்

1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))


12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))


27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))


51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985))
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))


66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)


84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

ஆங்கில நூல்கள் (English Books)

1.Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))
2.All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))
3.Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))
4.Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))
5.The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))
6.M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))
7.The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))

முழு விபரங்கள் கிடைக்கப் பெறாத நூல்கள்

1. வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993))
2. தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)
3.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967))
4. ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)
5. இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967))
6. தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)
7. எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)
8. அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)
9. அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)
10. அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)


11. எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)
12. எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?
13. வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)
14. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)
15. புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)
16. யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)
17. தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)
18. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.
19. Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)
20. C.M. Speech's



*****

masanam
23rd May 2013, 04:56 PM
மக்கள் திலகம் பற்றிய நூல்கள் பட்டியலைப் படித்த பொழுது மக்கள் தலைவனுடைய வீச்சு தெரிகிறது.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு சரித்திரம்..

பட்டியலைத் தொகுத்து வழங்கிய எஸ்வி அவர்களுக்கு நன்றி.

Stynagt
23rd May 2013, 06:45 PM
1974 - புதுச்சேரி

http://i42.tinypic.com/2rzxac4.jpg

புரட்சி நடிகர் புரட்சித்தலைவரான பின்பு அவருடைய முழு உழைப்பையும் தமிழருக்காக கொடுத்த ஆண்டு..மக்கள் திலகம் தனிக்கட்சி ஆரம்பித்தபோது அது நிலைக்காது என்று சொன்னவர்கள் எத்தனை பேர்...அவர்கள் முகத்தில் கரியை பூசிய ஆண்டு அது...அதற்கு எம்ஜிஆர் அவர்கள் உழைத்த உழைப்பு எவ்வளவு....ஒரு தனி மனிதனால் இது சாத்தியமா என்று மலைக்க தோன்றுகிறது...திமுகவில் தலைவர் இருந்ததால் எம்ஜிஆர் கட்சி திமுக என்றும் ..எம்ஜிஆர் சின்னம் உதய சூரியன் என்றும் மக்கள் மனதில் பதிந்திருந்தது...அதை எப்படி மாற்றுவது..இரட்டை இல்லை சின்னத்தை எப்படி மக்கள் மனதில் பதிய வைப்பது என்று தலைவர் சிந்தித்த வருடம்.....இப்போது இருக்கும் மீடியாக்கள் போல அப்போது இல்லை..செய்தித்தாள் தான் முக்கிய மீடியா..அடுத்தது பொதுகூட்டங்கள்தான்..

அப்போது நடந்த நிகழ்வு..கட்சி ஆரம்பித்த உடன் திண்டுக்கல்லில் ஒரு பொது கூட்டத்தில் பேசும்போது தலைவர் அவர்கள் நமது சின்னம் என்ன என்று கேட்டதும்...கூட்டத்தில் ஒரு சிலர் 'உதய சூரியன்' என்றனர்...அதிர்ச்சி அடைந்த எம்ஜிஆர் என் மக்களுக்கு நான் எப்படி சின்னத்தை போய் சேர்ப்பேன் என்று சிந்தித்தார்.கடுமையாக உழைத்தார்...அந்த உழைப்பை இது வரையிலும்...இனிமேலும் உழைத்தவர் யாரும் இல்லை..ஒரே நேரத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல், கோவை மேற்கு சட்டமன்ற இடைதேர்தல், புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலுடன் புதுச்சேரி பொது தேர்தல்.. ஒரு தனி ஆள் தன் ரசிகர் கூட்டத்தை மட்டுமே பக்க பலமாக கொண்டு பம்பரமாக சுழன்றால் அன்றி எதிலும் வெற்றி பெற முடியாது..நம் தலைவர் அனைத்து இடங்களுக்கும் இரவு பகல் பாராமல் கண்ணுறக்கமின்றி பிரசாரம் செய்து இந்த உலகமே வியக்கும் வண்ணம் வெற்றி பெற்றார்..

பத்து வயதில் நான் செய்த பிரசாரம்...எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் நமது தெய்வத்தின் ரசிகன்..என்னை சுற்றிலும் அன்று இருந்தவர்கள் 100க்கு 75 சதவீதம் எம்ஜிஆர் ரசிகர்கள்..பெரும்பாலும் ஒரு இடத்தில் ஒரு 10 பேர் இருந்தால் அதில் 7 பேர் தலைவரின் ரசிகராய் இருப்பார்கள்..மீதி இருக்கும் சதவீதம்தான் மற்ற ரசிகர்கள்...அதனால் சிறு வயதில் ஏற்படும் வாக்கு வாதங்களில் மற்ற ரசிகர்கள் தோல்வியே காணுவர்..ஏன் என்றால் தலைவரை பற்றியும் அவருடைய திரைப்படங்கள் பற்றியும் பேச நிறைய பாயிண்ட் கிடைக்கும்..அதனால் எம்ஜிஆர் ரசிகர்களே அன்றைக்கும் வெற்றி காணுவர்...அது இன்று வரை தொடர்கிறது...மேலும் அப்போது வரும் மறு வெளியீடுகளில் கூட புதுப்படங்களை விட எம்ஜிஆர் படங்கள் நிறைய நாட்கள் ஓடும்.வசூல் கூடும்.. இந்த வாக்கு வாதங்கள் பள்ளி வகுப்பறை முதல் கல்லூரி வகுப்பறை வரை தொடர்ந்தது..எல்லா இடங்களிலும் வெற்றிதான்...புதுச்சேரிதான் நம் தங்கத்தலைவரை முதன் முதலாய் ஆட்சி கட்டிலில் அமர்த்திய ஊர் முதன்முதலாக புதுச்சேரியில், இப்போது இருக்கும் நடேசன் நகரில் தலைவர் கூட்டம்..அப்போதெல்லாம் ஆள் சேர்க்க வேண்டிய அவசியமில்லை..தலைவர் கூட்டம் என்றால் ஆண்களும், பெண்களும் குறிப்பாக சிறுவர்களும் இளைஞர்களும் பேரார்வத்துடன் வண்டிகளில் ஏறிகொள்வர்..அப்போது எனக்கு 10 வயது நானும் எங்கள் வீட்டில் குடியிருந்த ஒரு பெண்மணியும் நடந்தே போனோம். ஒரு 5 கிலோமீட்டர் தூரம் இருக்கும்..தலைவரை காண போகிறோம் என்ற ஆர்வத்தில் தூரமே தெரியவில்லை...மேடைக்கும் நான் இருந்த இடத்திற்குமே தொலைவு ஒரு 1/2 கிலோ மீட்டர் இருக்கும்...மிக தொலைவில்தான் காண முடிந்தது..முதன் முதலாக அவரை பார்த்ததும் என் கால்கள் தரையில் இல்லாத போன்ற உணர்வு..இதுவரை திரைப்படங்களிலே பார்த்து வந்த வள்ளலை நேரில் காணும் பாக்கியம்..அன்று அவருக்கு விழுந்த மாலைகள் இதுவரை புதுச்சேரியில் யாருக்கும் விழவில்லை..இனிமேலும் விழ வாய்ப்பில்லை... அதிலும் பூக்காரர்கள் பெரும்பாலும் எம்ஜிஆர் ரசிகர்கள்..எவ்வளவு ஆள் உயர மாலைகள்..அப்போதிருந்த அந்த பக்தி கூட்டத்தை, பாச கூட்டத்தை இதுவரை நான் காணவில்லை.....தெய்வத்தை தரிசித்த திருப்தியில் திரும்பி வந்தேன்..தேர்தல் பிரசாரத்தின்போது கையில் அதிமுக கொடியிடனும், பிளாஸ்டிக் இரட்டை இலையை சட்டை பொத்தானில் குத்திக்கொண்டு ' போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து' நமது சின்னம் இரட்டை இல்லை சின்னம்..' வாழ்க எம்ஜிஆர் போன்ற கோஷங்களுடன் நானும் என்போன்ற சிறுவர்களும் ஓட்டு கேட்டதும் இன்றும் என் கண்ணில் நிழலாடுகிறது...எவ்வளவு ஆர்வம்..எந்த பிரதிபலனும் இல்லாமல்..அந்த தங்க தலைவனுக்காக என்னுடன் இன்னும் சிறு வயதுடைய சிறுவர்கள் போட்ட கோஷத்தை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது...என் தந்தை காங்கிரஸ்காரர் ..அதனால் என் தாயும் காங்கிரசுக்கு ஓட்டு போட்டுவிட போகிறார் என்று என் தாயிடம் நான் இரட்டை இலைக்கு ஓட்டு போட சொல்லி ஒரு வாரமாய் அழுது..அம்மா..எம்ஜிஆர் நல்லவர்மா..அவருக்கு ஓட்டு போடுமா என்று கெஞ்சியதை இப்போது நினைத்து பார்க்கிறேன்..என் தாயும் டேய் எனக்கும் தெரியும்டா..எம்ஜிஆர்தான் நல்லவர்..அவருக்குதான் ஓட்டு போடுவேன்...நீ பயபடாதே என்று சொன்னது...அப்படியே பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது...

அப்போது நான் சிறுவன் ஆகையால் யார் யார் எதிரில் இருக்கிறார் என்று தெரியாது.எனக்கு வேண்டியது எம்ஜிஆர் ஜெயிக்க வேண்டும்...யார் யார் தேர்தலில் நின்றார்கள் என்று நான் வளர்ந்த பின்பு அறிந்து கொண்டது...எதிர்களத்தில் அரசியலில் கிங் மேகராக இருந்த அரசியல் பீஷ்மராக ஸ்தாபன காங்கிரசில் பெருந்தலைவர் காமராஜர், கவிஞர் கண்ணதாசன் ஜெயகாந்தன்,மேலும், சிவாஜி கணேசன், மேஜர், சோ, சசி குமார், ஒய்.ஜி., ஸ்ரீகாந்த் என்ற நட்சத்திர கூட்டம்...ஒரு பக்கம் இவரை அரசியில் இருந்தோ அல்லது நிரந்தரமாகவோ ஒழித்திட வேண்டும் என்று நினைத்த, தரம் தாழ்ந்து விமர்சித்த திமுக...மற்றொரு பக்கம் இந்திரா காங்கிரஸ்..ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆர் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தலைவர் வ. சுப்பையாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்...எம்ஜிஆர் அவர்களுக்கு பிரசாரம் செய்ய திரு ஐசரி வேலன், தேங்காய் சீனிவாசன் போன்ற நகைச்சுவை நடிகர்கள் வந்திருந்தனர்..அதை கூட எதிர்கட்சியினர் ஏளனமாக பேசினார்..எதிரிகளின் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கி எம்ஜிஆர் கூட்டணி அமோக வெற்றி பெற்றி அதிமுக ஆட்சிகட்டிலில் அமர்ந்தது...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

Stynagt
23rd May 2013, 06:51 PM
http://i41.tinypic.com/aovwjm.jpg

வீறு நடைபோடும் வீராங்கனின் 2வது வார வெற்றியை அழகாய் பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி..சற்று முன்பு 3வது வாரம் தொடர்கிறது என்று தகவல் தந்தமைக்கும் நன்றி...சரித்திரத்தை திரும்ப வைக்கும் சாமர்த்தியம் நம் சாதனை நாயகனுக்கே உண்டு...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

Stynagt
23rd May 2013, 07:18 PM
மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே...

தமிழ் நூல்கள்

1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))


12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))


27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))


51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985))
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))


66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)


84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

ஆங்கில நூல்கள் (English Books)

1.Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))
2.All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))
3.Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))
4.Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))
5.The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))
6.M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))
7.The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))

முழு விபரங்கள் கிடைக்கப் பெறாத நூல்கள்

1. வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993))
2. தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)
3.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967))
4. ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)
5. இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967))
6. தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)
7. எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)
8. அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)
9. அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)
10. அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)


11. எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)
12. எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?
13. வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)
14. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)
15. புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)
16. யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)
17. தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)
18. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.
19. Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)
20. C.M. Speech's



*****
நன்றி வினோத் சார்..இது கின்னஸ் சாதனை...புரட்சி நடிகராய் இருந்து புரட்சி தலைவராய் மாறிய ஒரு முதலமைச்சருக்கு இத்தனை புத்தகங்களா...அதுவும் 2007ம் ஆண்டு வலையில் வெளியிடப்பட்ட பட்டியல் இது...அதற்கு பிறகு நிறைய புத்தகங்கள் வெளிவந்துவிட்டன..அதுமட்டுமல்லாமல் அவரை பற்றி மற்றவர்கள் எழுதிய கட்டுரைகள், பேட்டிகள், அவர் செய்த உதவிகளை பற்றி மற்றவர்கள் சொன்னவை..இன்னும் பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்..உலகத்திலே இவ்வளவு அதிகமான புத்தகங்கள், கட்டுரைகள், பேட்டிகள் ஆகியவற்றில் வந்த ஒரே முதலமைச்சர்..ஒரே தலைவர் எம்ஜிஆர்தான்...இவற்றை தொகுத்து கின்னஸ் சாதனைக்கு கொண்டு செல்ல நாம் முயற்சிக்க வேண்டும்.

மேலும் சில புத்தகங்கள்..

1. வரலாறு படைத்த வள்ளல் .. எழுத்தாளர் மேகலா சித்ரவேல்
2. மக்கள் தங்கம் - எழுத்தாளர் மேகலா சித்ரவேல்
3. எட்டாவது வள்ளல்
4. கே.பி. ராமகிருஷ்ணன் எழுதிய நூல்
5. ஸ்டண்ட் நடிகர் சங்கர் எழுதிய நூல்
6. சபீதா ஜோசப் எழுதிய புத்தகங்கள்

இன்னும் யார் யாருக்கு என்ன புத்தகங்கள் தெரியுமோ அதை பதிவு செய்யவும் வேண்டுகிறேன்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
23rd May 2013, 07:19 PM
கோவை நகரில் நாடோடிமன்னன் வெற்றிகரமாக 3 வது வாரம்

தொடர்வது மக்கள் திலகத்தின் சாதனைக்கு ஒரு மைல் கல் .

திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் இன்று முதல்

மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை ''

தகவல் அனுப்பிய திரு ரவி சார் - மதுரை - திரு கதிரேசன்

ஆகியோருக்கு நன்றி .

Richardsof
23rd May 2013, 07:25 PM
http://i35.tinypic.com/viprv5.jpg

இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


நீங்கள் சொன்னது போல உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும்

இல்லாத அளவிற்கு அதிக புத்தகம் நம்முடைய மக்கள்

திலகத்திற்கு மட்டுமே என்பது பெருமைக்குரியது .


சமீபத்தில் வெளியான நமது இனிய நண்பர் திரு பம்மலார்

அவர்களின் புதுமையான - உலக தரம் வாய்ந்த -டிஜிட்டல்

பதிப்பான ''மலர்மாலை -1- தமிழ் திரைகளஞ்சியம்

புத்தகம் ஒரு வரலாற்று சாதனை புரிந்துள்ளது .

மக்கள் திலகத்தின் நண்பர்களின் ஆதரவோடு இன்னும் பல

புதுமை படைப்புகள் வர உள்ளது .

''எங்கும் வெற்றி - எதிலும் வெற்றி - என்றென்றும் வெற்றி ''

இது நம் மக்கள் திலகத்தின் தாரக மந்திரம் -

அவர் புகழ் நம் பம்மலார் படைப்புகள் -

எதிர்கால வரலாறு பேசும் -

''பம்மலார் -எம்ஜியார் ''

masanam
23rd May 2013, 07:41 PM
கோவை நகரில் நாடோடிமன்னன் வெற்றிகரமாக 3 வது வாரம்

தொடர்வது மக்கள் திலகத்தின் சாதனைக்கு ஒரு மைல் கல் .

திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் இன்று முதல்

மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை ''

தகவல் அனுப்பிய திரு ரவி சார் - மதுரை - திரு கதிரேசன்

ஆகியோருக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் திரைப்படம் தமிழ் நாட்டின் ஏதாவது திரையரங்கில் தினமும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.
நாடோடி மன்னன் அன்றும் என்றும் சாதனை ஓட்டம் தான்.

Richardsof
23rd May 2013, 08:11 PM
http://i39.tinypic.com/10z94rl.jpg

http://youtu.be/U7d0vUKfQyA

ujeetotei
23rd May 2013, 08:17 PM
நன்றி வினோத் சார்..இது கின்னஸ் சாதனை...புரட்சி நடிகராய் இருந்து புரட்சி தலைவராய் மாறிய ஒரு முதலமைச்சருக்கு இத்தனை புத்தகங்களா...அதுவும் 2007ம் ஆண்டு வலையில் வெளியிடப்பட்ட பட்டியல் இது...அதற்கு பிறகு நிறைய புத்தகங்கள் வெளிவந்துவிட்டன..அதுமட்டுமல்லாமல் அவரை பற்றி மற்றவர்கள் எழுதிய கட்டுரைகள், பேட்டிகள், அவர் செய்த உதவிகளை பற்றி மற்றவர்கள் சொன்னவை..இன்னும் பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்..உலகத்திலே இவ்வளவு அதிகமான புத்தகங்கள், கட்டுரைகள், பேட்டிகள் ஆகியவற்றில் வந்த ஒரே முதலமைச்சர்..ஒரே தலைவர் எம்ஜிஆர்தான்...இவற்றை தொகுத்து கின்னஸ் சாதனைக்கு கொண்டு செல்ல நாம் முயற்சிக்க வேண்டும்.

மேலும் சில புத்தகங்கள்..

1. வரலாறு படைத்த வள்ளல் .. எழுத்தாளர் மேகலா சித்ரவேல்
2. மக்கள் தங்கம் - எழுத்தாளர் மேகலா சித்ரவேல்
3. எட்டாவது வள்ளல்
4. கே.பி. ராமகிருஷ்ணன் எழுதிய நூல்
5. ஸ்டண்ட் நடிகர் சங்கர் எழுதிய நூல்
6. சபீதா ஜோசப் எழுதிய புத்தகங்கள்

இன்னும் யார் யாருக்கு என்ன புத்தகங்கள் தெரியுமோ அதை பதிவு செய்யவும் வேண்டுகிறேன்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Thanks Vinod Sir for giving the details of books on our Thalaivar. According to Malliga Prabhakaran (who owns a Library in the name of MGR) had collected some 1000 books and magazines and states that MGR book titles comes to 600.

அப்பலோ டு அமெரிக்கா book was published by my friend Vellaisamy who does not have a single copy with him today. Many books from 1960s are lost.

ujeetotei
23rd May 2013, 08:20 PM
On such book I had reviewed.

http://bookonsrimgr.blogspot.in/2012/03/puratchi-thalaivar-mgr.html

ujeetotei
23rd May 2013, 08:21 PM
MGR interviews in book form and review in srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2010/02/mgr-interview-book-review.html

ujeetotei
23rd May 2013, 08:23 PM
MGR Book written by Mohandoss, MGR The Man and the Myth.

http://www.mgrroop.blogspot.in/2010/06/mgr-book-review-mgr-man-and-myth.html

ujeetotei
23rd May 2013, 08:25 PM
A book on Nadodi Mannan.

http://www.mgrroop.blogspot.in/2011/01/nadodi-mannan-book-review.html

ujeetotei
23rd May 2013, 08:27 PM
Makkal Thilagam MGR Book written by Mekala Chitravel

http://www.mgrroop.blogspot.in/2011/04/makkal-thangam-mgr-book-review.html

ujeetotei
23rd May 2013, 08:28 PM
Makkal Thilagam MGR Samuga Sirpi.

http://www.mgrroop.blogspot.in/2011/04/makkal-thilagam-mgr-book.html

ujeetotei
23rd May 2013, 08:30 PM
A story written by MGR himself.

http://www.mgrroop.blogspot.in/2011/04/mgr-story.html

Richardsof
23rd May 2013, 08:32 PM
மக்கள் திலகத்தின் புத்தகங்கள் பற்றிய விபரங்கள் அளித்துவரும் இனிய நண்பர் திரு ரூப் அவர்களுக்கு நன்றி .

ujeetotei
23rd May 2013, 08:33 PM
http://www.mgrroop.blogspot.in/2011/10/puratchi-thalaivar-book.html

Puratchi Thalaivar Puthiyathalaimuraku book written by Sowdhamini Sowmiyan.

ujeetotei
23rd May 2013, 08:36 PM
Dharani Kanda Thanipiravi by A.Sankar Rao who worked as still photographer in many MGR movies. In this book we can get info about Ulagam Sutrum Vaaliban shooting incidents.

http://www.mgrroop.blogspot.in/2011/12/new-mgr-book.html

Richardsof
23rd May 2013, 08:36 PM
http://i39.tinypic.com/33p35t0.jpg http://i39.tinypic.com/v9oyd.jpghttp://i40.tinypic.com/fyomg.jpghttp://i40.tinypic.com/2vjprw3.jpg

ujeetotei
23rd May 2013, 08:37 PM
MGR Jewel of the Massess written by Roopa Swaminathan a rare book about our Thalaivar in English.


http://www.mgrroop.blogspot.in/2011/12/mgr-jewel-of-masses.html

Richardsof
23rd May 2013, 08:39 PM
http://i39.tinypic.com/f59fr9.jpghttp://i41.tinypic.com/2mbfxw.jpg
http://i42.tinypic.com/65oq2x.jpghttp://i41.tinypic.com/xqf75t.jpghttp://i40.tinypic.com/6qa041.jpg

ujeetotei
23rd May 2013, 08:40 PM
எல்லோருக்கும் பிடித்த எம்.ஜி.ஆர்.

http://lh4.ggpht.com/-Amzrcjkso4s/T05ctPIZw5I/AAAAAAAABjo/CmAplZATSpY/s1600-h/cover_1%25255B4%25255D.jpg

http://www.mgrroop.blogspot.in/2012/02/another-mgr-book.html

ujeetotei
23rd May 2013, 08:43 PM
தலைவரின் மெய்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய இரண்டாவது புத்தகம்.

மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர்.

http://www.mgrroop.blogspot.in/2012/04/new-mgr-book.html

ujeetotei
23rd May 2013, 08:44 PM
Review of this above book in Cinema Express

http://www.mgrroop.blogspot.in/2012/05/manitha-punithar-mgr.html

ujeetotei
23rd May 2013, 08:45 PM
Engal Thangam MGR written by Major Dasan.

http://www.mgrroop.blogspot.in/2012/05/engal-thangam-mgr-book.html

masanam
23rd May 2013, 08:51 PM
Both MGR Roop Sir and Vinod Sir are competitively giving information about books on Makkal Thilagam MGR.
Great Job.

ujeetotei
23rd May 2013, 08:52 PM
(புகழுக்குப்பின்) in 1961

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற ஒரு திறமைசாலியைக் கண்டான். அந்தத் திறமைசாலி மாடு பிடிப்பதில் மாவீரன். இவனுக்கு அவன் மீது அளவற்ற பற்று ஏற்பட்டது. அந்த திறமைசாலிக்கு ஒரு நாள் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு திறமைசாலியைப் போற்றிப் புகழ்ந்தனர் மக்கள். சிறுவனும் உள்ளம் பூரித்துத் திறமைசாலியைப் போற்றினான்.


அந்தத் திறமைசாலியை ஒரு முறையாவது தொட்டு மகிழ வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டால் அதுவே தன் வாழ்வில் பெறக்கூடிய பெரும் பாக்கியமாகக் கருதினான். அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்காக அவன் எடுத்த முயற்சி மிகப் பெரியதாக இருந்தது.

காலம் சுழன்றது.

இப்போது சிறுவன் வாலிபனானான். இவனுக்கு இருந்த ஆர்வத்தால் இவனே பெரிய திறமைசாலியானான். சந்தர்ப்பமும் கிடைத்தது திறமையைக் காட்ட…

நாளடைவில் மிகப் பிரபலமானவனாக மாறி, ஏராளமான புகழ் மாலைகள் சூட்டப்பட்டான்.

ஒரு நாள் இந்த புதிய திறமைசாலியான வாலிபனுக்கு மாபெரும் வரவேற்பு விழா நடந்தது. இவனை பலரும் சூழ்ந்து கொண்டார்கள். எல்லாருக்கும் தர்மம் செய்து கொண்டே வந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் அவனிடம் காசு கேட்டதோடு உன் புகழாவது நிலையானதாக இருக்கட்டும் என்று வாழ்த்துக் கூறவே, வாலிபன் அவனை உற்று நோக்கினான்.

அவனுக்குத் திகைப்பாகி விட்டது. காரணம் இது தான். முன்பு யாரைத் தொடுவதைப் பெரிய பாக்கியமாக இவன் கருதினானோ, அவனே தான் இப்போது இவனிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.

வருவான், போவான் என்பவை வாழ்க்கையின் இரு வினை முற்றுக்கள். அவை திரும்பத் திரும்ப வரும் போகும் இதுவே இயற்கை.

ஆகவே கலைஞர்களைப் பொறுத்த வரையில் திறமையைக் காண்பிப்பதிலே போட்டியேற்படுவதில் தவறில்லை. ஆனால் இன்னொருவனுடைய திறமை தன்னுடைய அழிவுக்குக் காரணமென்று நினைப்போமானால் – நம்மையும் நம்மை ஆட்டிப்படைக்கிற சக்தியையும் ஏமாற்றுகிறோம் என்று தான் பொருள்.

நமது தலைவர் எழுதிய கதை.

ujeetotei
23rd May 2013, 08:55 PM
நன்றி Masanam சார். இன்னும் பல புத்தகங்கள் உள்ளன நேரம் இல்லாததால் அவற்றை நான் தலைவர் வலைப்பூவில் பதிக்கவில்லை.

ujeetotei
23rd May 2013, 08:57 PM
சமநீதி பத்திரிக்கையில் வெளிவந்த சில கேள்வி பதில் பகுதிகள்.

தாங்கள் அளிக்கும் நன்கொடைகள் நல்ல முறையில் செலவழிக்கப் பட்டிருக்கின்றனவா? என்று தாங்கள் கவனிப்பதுண்டா?

எம்.ஜி.ஆர் பதில் - சிலவற்றைப் பற்றிச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் வேதனை தருவதாயிருக்கும் சிலர் நான் நம்பும்படியான பொய்களைச் சொல்லிப் பலனைப் பெற்றதண்டு. அதை அறிந்த நான் எச்சரிக்கையாக இருக்க முயன்றதன் விளைவாக உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நான் பயன்பட முடியாமற் போனதும் உண்டு.

அரசியல், கலை இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?

எம்.ஜி.ஆர் பதில் - அரசியல் மேடை அரசியலுக்காக உள்ளது. சமூக, பொருளாதாரத்தைப் பாதுகாக்க இயங்கும் ஒரு அமைப்பு அரசியல். கலை மேடை கலைக்காக உள்ளது. மனித உணர்ச்சிகளை நேர்மையான வகையில் உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், சோர்வுற்ற மனித உள்ளத்திற்கு அமைதியைக் கொடுக்கவும், மறந்துவிட்ட பண்பினை நினைவு படுத்தவும் தெரிய வேண்டிய உண்மைகளை உணர்த்தவும், வாழ வேண்டிய முறைகளை வகுத்துக் கொடுக்கவும், வாழ்க்கை நிலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமத்துவ போதனை செய்யவும் உள்ளது கலை.

ujeetotei
23rd May 2013, 08:59 PM
சிறந்த பேச்சாளராக விளங்க நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை பற்றி விரிவாக விளக்கவும்?

எம்.ஜி.ஆர் பதில் - ஒரு கொள்கையில் பரிபூரண நம்பிக்கை வேண்டும். அந்தக் கொள்கை பற்றிய விரிவான - ஆழமான விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும், எந்த மொழியில் கருத்துக்களை வெளியிட விரும்புகின்றோமோ அந்த மொழியில் பேசும்போது வார்த்தைப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும். நமது பேச்சைக் கேட்கின்றவர்கள் அதிசயத்தோடு கவனிக்காமல் அக்கறையோடு கவனிக்கும்படி பேச வேண்டும்.

ujeetotei
23rd May 2013, 09:04 PM
MGR Thamizharae by Sa.Rasu, M.A. Ph.D, a laudable work of finding the roots of MGR’s ancestry re publihsed after 26 years by Megathudan Pathippagam, No.7, Chinnappa Ravuther Street, Triplicane, Chennai-600 005. Total number of pages 240, price of the book is Rs.120/-

A very important book that every MGR Fan should have.

ujeetotei
23rd May 2013, 09:05 PM
Marakka Mudiyatha Makkal Thilakam by Stunt N.Sankar (Stunt assistant to Fight Master Shyam Sundar and also worked as Fight Master for MGR movies) total number of pages 160, price of the book is Rs.60/- published by Annai Puthakalayam, 3, Sivagnanam Salai, T.Nagar, Chennai-600 017.

Marakka Mudiyatha Makkal Thilakam by Stunt N.Sankar (Stunt assistant to Fight Master Shyam Sundar and also worked as Fight Master for MGR movies) total number of pages 160, price of the book is Rs.60/- published by Annai Puthakalayam, 3, Sivagnanam Salai, T.Nagar, Chennai-600 017.

First is by Stunt N.Sankar who worked as stunt man in many MGR movies and the second book is by Art Director Angamuthu who made awesome sets in Ulagam Sutrum Vaaliban.

ujeetotei
23rd May 2013, 09:06 PM
A book by Director Mahendran. It is hard cover book.

Makkal Thilagam Cinemavil Ennai Vithaithavar by Director Mahendran, total number of pages 160 hardbound price of the book is Rs.125/- published by Nakkheeran Publications, 105, Jani Jahan Khan Road, Royapettah, Chennai-600 014.

Some incidents he had already written in Daily Thanthi.

ujeetotei
23rd May 2013, 09:07 PM
Makkal Aasan MGR by Rangavasan, published by Kaaliswari Pathipagam, No.4/2, Sundaram Street, T.Nagar, Chennai-600 017, total number of pages 160, price of the book is Rs.50/-

Varalaru Padaitha Vallal by Mekala Chitravel, Published by Vijaya Pathippagam, 20, Raja Street, Coimbatore – 641 001. Total number of pages 280, price is Rs.140/-

ujeetotei
23rd May 2013, 09:08 PM
Manitha Neyathal Maraiyathavar by Peru Thulasi Palanivel, published by Nakkheeran Publications, 105, Jani Jahan Khan Road, Royapettah, Chennai-600 014. Total number of pages 104, price of the book is Rs.65/-

Vaazhnthu Kaatiya Vallal MGR – Interesting anecdotes from the life of MGR remembered by Bommai Saarathi, published by Narmadha Pathipagam, Chennai-17, pages 168, price of the book is Rs.70/-

ujeetotei
23rd May 2013, 09:09 PM
Makkal Thilagam MGR Ennum Ma Manithar by Sri Shenbaga Publishers, Old No.24, Krishna Street, T.Nagar, Chennai- 600 017, pages 128, price of the book is Rs.35/-

ujeetotei
23rd May 2013, 09:10 PM
All these books were published and released in 2012.

ujeetotei
23rd May 2013, 09:18 PM
Some of MGR answers from MGR Paetigal.

கேள்வி - நடிப்பு துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?
எம்.ஜி.ஆர். பதில் – வறுமை


கேள்வி - நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் நாடோடி மன்னன் சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

எம்.ஜி.ஆர். பதில் – நான் விரும்புவதை என் தொழிலில் செய்து கட்டவேண்டும் என்பது எனது நீங்காத ஆசையாகும். ஒரு வேளை என் விருப்பம் தவறாகவும் இருந்து விடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்ததில் படம் எடுக்க இதுதான் காரணம்.

ujeetotei
23rd May 2013, 09:19 PM
கேள்வி - பழைய உங்களது படம் ஒன்றை பார்த்தேன். அதில் கழுத்தில் ருத்திராட்சை மாலையுடன் இருக்கிறீர்கள். ஏதேனும் ஜெபம் செயது கொண்டிருந்தீர்களா?

எம்.ஜி.ஆர். பதில் – நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொணடிருந்தேன. இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒரு சின்னத் திருத்தம் அது ருத்ராடசை மாலை அல்ல. தாமரை மணி மாலை. திருப்பதியில் நானே வாங்கிய மாலை அது.

These questions were asked by Jayalalitha.

ujeetotei
23rd May 2013, 09:19 PM
MGR answer about Rajkapoor.

கேள்வி – நடிப்பு கருவூலம் ராஜ்கபூர் நடித்த சங்கம் படம் போல் சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் சிறந்த பாடல்கள் அமைந்த ஒரு படத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அளிப்பீர்களா?

எம்.ஜி.ஆர். பதில் – அவருடைய பெயர் ராஜ்கபூர், என்னுடைய பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். ஒருவரைப் போல் இன்னொருவர் ஆக முடியாது. கூடாது. ஒவ்வொருக்கும தனக்கென்று ஒரு பாணி, தனக்கென்று ஒரு பாதை இருந்தே ஆக வேண்டும்.

ujeetotei
23rd May 2013, 09:20 PM
கேள்வி – நீங்கள் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டீர்களா?

எம்.ஜி.ஆர். பதில் – அது நான் விரும்பாத பதவி. நான் விரும்பி இருந்தால், அண்ணா காலத்திலேயே மந்திரி ஆகி இருப்பேன். மந்திரி பதவியை நான் ஏற்க மறுத்ததால்தான், மந்திரி பதவிக்குரிய அந்தஸ்து கொண்ட சிறுசேமிப்பு துணைத் தலைவர் பதவியை எனக்கு கொடுத்தார்.

கேள்வி – உங்களுக்கு சேரும் கூட்டமெல்லாம் நீங்கள் பிரபல சினிமா நடிகர் என்பதால் இருக்கலாம அல்லவா?

எம்.ஜி.ஆர். பதில் – நான் நடிகன், ஆனால் என்னைப்போல எத்தனையோ நடிகர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் என் போலவே இயக்கம் ஆரம்பித்தால் ஒவ்வொருவருக்கும் இப்படிக் கூட்டம் சேரும் என்று சொல்ல முடியுமா?

oygateedat
23rd May 2013, 10:03 PM
http://i44.tinypic.com/2rzs9xl.jpg

oygateedat
23rd May 2013, 10:07 PM
http://i41.tinypic.com/4h7f4n.jpg

oygateedat
23rd May 2013, 10:10 PM
http://i39.tinypic.com/2w1tv1v.jpg

oygateedat
23rd May 2013, 10:12 PM
http://i40.tinypic.com/fbhiqo.jpg

oygateedat
23rd May 2013, 10:21 PM
http://i40.tinypic.com/34xj8mx.jpg

idahihal
24th May 2013, 12:05 AM
மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே...

தமிழ் நூல்கள்

1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))


12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))


27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))


51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985))
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))


66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)


84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

ஆங்கில நூல்கள் (English Books)

1.Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))
2.All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))
3.Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))
4.Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))
5.The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))
6.M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))
7.The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))

முழு விபரங்கள் கிடைக்கப் பெறாத நூல்கள்

1. வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993))
2. தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)
3.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967))
4. ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)
5. இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967))
6. தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)
7. எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)
8. அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)
9. அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)
10. அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)


11. எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)
12. எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?
13. வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)
14. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)
15. புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)
16. யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)
17. தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)
18. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.
19. Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)
20. C.M. Speech's



*****
எம்.ஜி.ஆர் என்னும் மாமனிதரின் புகழ்ப்பாதையை விளக்கும் எண்ணற்ற நூல்களின் பட்டியலை அடுக்கடுக்காகத் தரும் திரு.வினோத் அவர்களுக்கும், திரு.ரூப்குமார் அவர்களுக்கும் நன்றி.

ainefal
24th May 2013, 12:22 AM
[QUOTE=esvee;1045819]மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே...

தமிழ் நூல்கள்


http://i44.tinypic.com/30wv68l.jpg


பல கோடி நன்றி

Richardsof
24th May 2013, 05:05 AM
http://i42.tinypic.com/91cqao.jpg

Richardsof
24th May 2013, 05:08 AM
http://i44.tinypic.com/amcfmd.jpg

Richardsof
24th May 2013, 05:24 AM
MAKKAL THILAGAM - MUTHURAMAN IN ''PAITHTHIYAKKAARAN '' DRAMA WHICH WAS HELD AT SINGAPORE -1972.

http://i44.tinypic.com/214xg7k.jpg

Richardsof
24th May 2013, 05:28 AM
http://i44.tinypic.com/311tfgk.jpg

Richardsof
24th May 2013, 05:31 AM
http://i39.tinypic.com/2cxsxh2.jpg

Richardsof
24th May 2013, 05:48 AM
மக்கள் திலகத்தின் கீழ் கண்ட படங்கள் பற்றிய விமர்சனங்களை

நமது நண்பர்கள் இங்கே பதிவிடலாம் .


மாடப்புறா

கலைஅரசி

விக்கிரமாதித்தன்

தாலிபாக்கியம் -

Richardsof
24th May 2013, 05:54 AM
http://i40.tinypic.com/53nvvr.jpg

Richardsof
24th May 2013, 05:55 AM
http://i44.tinypic.com/10znv39.jpg

Richardsof
24th May 2013, 05:57 AM
http://i41.tinypic.com/289j4g2.jpg

Richardsof
24th May 2013, 05:58 AM
http://i39.tinypic.com/2rrpdap.jpg

idahihal
24th May 2013, 07:54 AM
http://i44.tinypic.com/auvb74.jpg
வினோத் சார்,
மிக மிக அபூர்வமான புகைப்படம் மற்றும் செய்தி. மேலும் சிங்கப்பூர் கலைநிகழ்ச்சி குறித்த படங்களையும் செய்திகளையும் பதிவிட வேண்டுகிறேன்.

Richardsof
24th May 2013, 08:15 AM
chennai - theatre

http://i40.tinypic.com/1iny2v.jpg

Richardsof
24th May 2013, 08:28 AM
http://i44.tinypic.com/auvb74.jpg
வினோத் சார்,
மிக மிக அபூர்வமான புகைப்படம் மற்றும் செய்தி. மேலும் சிங்கப்பூர் கலைநிகழ்ச்சி குறித்த படங்களையும் செய்திகளையும் பதிவிட வேண்டுகிறேன்.

1972 ஏப்ரல் மாதம் - சிங்கப்பூரில் இந்திய நடிகர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


இந்தி முன்னனி நடிகர்கள் மற்றும் நம் மக்கள் திலகம் - முத்துராமன்

நாகேஷ் - ஜெயலலிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர் .


சிங்கப்பூரில் மக்கள் திலகத்திற்கு விமான நிலையத்திலும் , அவர் தங்கியிருந்த

ஓட்டலிலும் கட்டுங்கடங்காத கூட்டம் .


கலை நிகழ்சிகள் பல நடந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பாதவண்ணம் ஒரு சிறிய நாடகம் - அதில் மக்கள் திலகம் நடிக்க போகிறார் என்றதும் மக்கள் வெள்ளம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் .


''பைத்தியக்காரன்'' என்ற 15 நிமிட நாடகத்தில் மக்கள் திலகம் மேடையில் தோன்றியவுடன் மக்களின் கைதட்டல் விண்ணை பிளந்தது . நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் அந்நிய மண்ணில் நாடக வேடத்தில் தோன்றி சிறப்பாக நடித்து கை தட்டல் வாங்கிய அனுபவம் புதுமை .

ujeetotei
24th May 2013, 08:56 AM
1972 ஏப்ரல் மாதம் - சிங்கப்பூரில் இந்திய நடிகர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


இந்தி முன்னனி நடிகர்கள் மற்றும் நம் மக்கள் திலகம் - முத்துராமன்

நாகேஷ் - ஜெயலலிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர் .


சிங்கப்பூரில் மக்கள் திலகத்திற்கு விமான நிலையத்திலும் , அவர் தங்கியிருந்த

ஓட்டலிலும் கட்டுங்கடங்காத கூட்டம் .


கலை நிகழ்சிகள் பல நடந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பாதவண்ணம் ஒரு சிறிய நாடகம் - அதில் மக்கள் திலகம் நடிக்க போகிறார் என்றதும் மக்கள் வெள்ளம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் .


''பைத்தியக்காரன்'' என்ற 15 நிமிட நாடகத்தில் மக்கள் திலகம் மேடையில் தோன்றியவுடன் மக்களின் கைதட்டல் விண்ணை பிளந்தது . நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் அந்நிய மண்ணில் நாடக வேடத்தில் தோன்றி சிறப்பாக நடித்து கை தட்டல் வாங்கிய அனுபவம் புதுமை .

Thank you Vinod Sir and Jaishankar for this post.

Stynagt
24th May 2013, 11:00 AM
Engal Thangam MGR written by Major Dasan.

http://www.mgrroop.blogspot.in/2012/05/engal-thangam-mgr-book.html


MGR Roop Sir, Thanks for your excellent work to register the books about our beloved leader MGR, I request you to kindly try to take these records for guinness, if possible..

ainefal
24th May 2013, 11:14 AM
http://i44.tinypic.com/2wduc1s.jpg

Stynagt
24th May 2013, 11:39 AM
MAKKAL THILAGAM - MUTHURAMAN IN ''PAITHTHIYAKKAARAN '' DRAMA WHICH WAS HELD AT SINGAPORE -1972.

http://i44.tinypic.com/214xg7k.jpg

அரிய ஆவணங்களையும் நான் அறியாத அபூர்வ செய்திகளையும் வெளியிடும் திரு. வினோத் சார் அவர்களுக்கு கோடி நன்றி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
24th May 2013, 11:43 AM
1972 ஏப்ரல் மாதம் - சிங்கப்பூரில் இந்திய நடிகர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்தி முன்னனி நடிகர்கள் மற்றும் நம் மக்கள் திலகம் - முத்துராமன் நாகேஷ் - ஜெயலலிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர் . சிங்கப்பூரில் மக்கள் திலகத்திற்கு விமான நிலையத்திலும் , அவர் தங்கியிருந்த ஓட்டலிலும் கட்டுங்கடங்காத கூட்டம் . கலை நிகழ்சிகள் பல நடந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பாதவண்ணம் ஒரு சிறிய நாடகம் - அதில் மக்கள் திலகம் நடிக்க போகிறார் என்றதும் மக்கள் வெள்ளம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் .





''பைத்தியக்காரன்'' என்ற 15 நிமிட நாடகத்தில் மக்கள் திலகம் மேடையில் தோன்றியவுடன் மக்களின் கைதட்டல் விண்ணை பிளந்தது . நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் அந்நிய மண்ணில் நாடக வேடத்தில் தோன்றி சிறப்பாக நடித்து கை தட்டல் வாங்கிய அனுபவம் புதுமை .



Sir, Thiru TMS Dravida Selvam has seen this Drama. "I saw this drama live in singapore national stadium , with my parents and brother , i was 10 years old that time"

Richardsof
24th May 2013, 12:21 PM
THE HINDU: MGR - The hero who loved them

The hero who loved them



COIMBATORE,


MGR fans gather in front of Royal Theatre in Coimbatore to watch 'Rickshawkaran'.




Royal Theatre plays host to a very special guest. It is MGR, and the people are flocking in to see their thalaivar in his blockbusters. K. Jeshi is struck by the intensity of love his fans still have for him

It's festive at Royal Theatre on Big Bazaar Street. MGR beams out of the Rickshawkaaran poster. His fans wear matching smiles on their faces, and look worshipfully at the poster.

Some of them scramble all the way up and garland their MGR, who is dressed in blue with his signature scarf worn around the neck. Others are content to watch. "Whether he is alive or dead, our Thalaivar lives in our hearts," says C. Venugopal. He has come all the way from Vellalore to catch the re-run of Rickshawkaaran. "I have watched it over 100 times but there is magic every time my Thalaivar appears on screen," he adds.

Fans for life

Fans are dressed in their best, they whistle, and clap for every dialogue MGR speaks. When their hero romances Manjula in the songs 'Azhagiya Tamil Magal Ival' and 'Kadal Oram Vaangiya Kaatru', they start dancing. "He always spoke for the poor. He never forgot us. He is the only leader to have ruled for a 13-year term," adds R. Sekhar from SIHS Colony, near Singanallur. "My father was associated with the party right from 1972. MGR survived three murder attempts and emerged victorious to serve the needy. He is immortal," he adds. Sekhar wakes up every day to a larger-than-life photograph of MGR that hangs at his home.

Movies with a message

Most MGR films highlighted social issues, struck a chord with the audience, and became super hits. His film Padagoti dealt with problems of the fishermen community, Sirithu Vaazha Vendum highlighted the minorities, Ulagam Sutrum Vaaliban spoke on using science for development and Thozhilaali dealt with the working class. In Rikshawkaaran, he fights for justice when a rickshawkaaran is killed. "The message he conveys is the worth of human life, he may be rich or poor, but he has the right to live. He also talks about women's empowerment," says Venugopal. They add that their idol worked to uplift society through his films and even when he became the chief minister. "He expressed his anger over the disparity towards poor in his dialogues. Even today, a percentage of earnings from his properties go to the poor. He still has the power to enthrall people."

A night shift duty at the hospital and relatives camping at home haven't stopped K. Mayil from Puliakulam to catch the morning show of Rickshawkaaran. "I grew up watching MGR films. I know all the scenes, songs and the dialogues from Rickshawkaaran, Oli Vilakku, Aayirithil Oruvan, Thaaikku Pin Thaaram, Naadodi Veeran… I don't watch any of the new films. MGR films make me forget all my worries. Every film has a message for society. I feel so sad that he is no more," she says wiping away her tears.

For P. Gopal from Chinniyampalayam, it's MGR's journey that draws him to the icon. "He came up the hard way, worked for the poor and set an example for good deeds and thoughts."

"There is only one hero ever and that is my MGR," says K. Karuppama, who refuses to take her eyes off MGR as he sings 'Kadaloram…'

Royal Theatres came up with the idea to re-run old MGR films as the other films hardly ran for three days. "We found ourselves releasing new films on Friday and taking them off on Sundays, because of less crowds. One of the film distributors suggested we re-run MGR films. It was an eye-opener," says RHR Ratnavelu. They showed seven MGR films for seven days — Nam Naadu, Adimai Pen, Maatukaara Velan, Ayirathil Oruvan, Kaavalkaaran, Kumari Kottam and En Annan — and every film opened to a rousing reception. "We saw huge crowds. It was encouraging. Whenever they see a MGR poster, they come here."

Ratnavelu remembers MGR as a friend who visited their home and dined with them. "He lived for the public. In one of his films, Marudha Naatu Ilavarasi, when the heroine, a princess played by V.N. Janaki, (who later became his wife) asks the hero to elope with her, he rejects the offer and says… "My people are important to me." He always keeps a promise. He promised to lay the foundation stone for our Hotel Thai. Though ill, he kept his word."

MGR's films Engu Veetu Pillai and Thaikku Pin Thaaram ran for more than 100 days at Royal Theatres even when it was first released. "MGR planned three mass entertainers in a year. Every film ran for more than 10 weeks."

Royal Theatres have lined up a number of MGR blockbusters for re-run in the coming days.

Richardsof
24th May 2013, 12:28 PM
FROM NET

Was MGR starrer Kalai Arasi the first Indian film to feature an alien?
Posted by Karthik
I recently came across a few tweets by @allusirish, on sci-fi films in India.
Our prev gen of filmmakers were better of than us. “Karuda Rathrikal” starring MGR, Bhanumathi was an alien visitation film in 1960.. (Link)
Satyajit Ray & Columbia Pics attempted 2 make a film “The Alien” in 1960 with Marlon Brando based on a Bengali short story..

While the Ray-ET connection was news to me, it apparently was very old news. I felt like a complete idiot knowing it for the first time, now!
But, what interested me more is the fact that there was a 60s film featuring an alien, that too, in Tamil. The film was not Karuda Rathirigal, as Allu Sirish tweeted (which he corrected later, himself)…it was a 1963 film titled ‘Kalai Arasi’ (Queen of Arts).
I’m really glad that Rajshri films owns the rights to this film and have made the entire film available online, free! I saw the film online and a number of things captured my attention.
1. Even though the film was released in 1963, the film may have commenced in the late 50s, as explained in this site about MGR.
‘kalai arasi’ was unfortunately many years in the making. This is evident by the fact that Pattukkottai Kalyanasundaram was among the lyricists, and he had passed away way back in 1959. The surmise that the movie was commenced much earlier gains further credence when we observe that singers such as P.Leela, Jikki and Ratnamala, who had slipped into oblivion by the advent of the 60s, find place in the album. Hence the making of the movie must have commenced in the late 50s. The reasons for the inordinate delay in proceeding with making the movie are not known. Legend has it that towards the end, MGR had become so busy with his schedules that the producers of ‘kalaiarasi’ had to resort to a hunger strike at the gate of MGR’s office to persuade him to spare some dates to complete ‘kalaiarasi’.
2. The alien space ship makes its appearance 2.30 minutes into the film!! It’s a typically 50s style space ship with 2 aliens inside and uses sound effects and shaky video effects to convey alien-ness. Fascinating!

3. MGR’s nemesis, M N Nambiar is one of the aliens!! They speak in Tamil and wear tight shorts! They look like slightly better dressed humans.

4. The word used to describe planets is ‘Mandalam’ and this is interesting, since later, Tamil popular literature used the word, ‘Graham’…as in ‘Vetru graha vaasigal’ (strange planet’s inhabitants – if transliterated), to denote aliens. Mandalam is used in conjunction with moon – as in, Chandra Mandalam. It’s quite amazing that this was the word used to denote planets…or did they denote some other form of celestial body, I wonder!
5. Nambiar’s sidekick asks him where they are heading. Nambiar says, ‘Poo Mandalam’ (or ‘Boo Mandalam’, denoting Boologam or Poovulagam – Earth in Tamil). His reason for the visit? It seems their planet hasn’t seen any progress in the field of arts, as much as progress in science!! So, the plan is to kidnap Banumathi…who is the Kalai Arasi (Queen of Arts) and let her teach arts (namely, singing) to their planet’s inhabitants. In this picture, Nambiar is seen threatening Banumathi with dire consequences (dump you off the ship?).

6. The aliens are not introduced formally – their alien planet’s name remains a mystery!
7. The aliens have something like a television where they watch parts of Earth where arts flourish. Part of this television watching included a Hindi song and dance sequence they see through the screen!

8. There is absolutely no mention of oxygen and related issues..something that is paramount in most other alien flicks. So, aliens walk into earth and humans walk into alien land with no problems with breathing whatsoever.
9. MGR has a fantastic hand combat-style fight scene with the alien left behind! MGR may be the first Indian film hero to fight an alien, that too with bare hands! This happens just after MGR discovers the alien transceiver!
tr
10. There is a scene of alien space craft sighting too! Villagers notice a space craft flying and ask MGR what it is. He very casually responds, ‘It’s a flying saucer’. The way he responds makes it seem like he’s seen them all! MGR’s sister asks him where they are from. He says that they are from a different ‘Mandalam’ (Planet?).

11. MGR hitches a ride in an alien space ship to rescue his lady love, Banumathi, who has been abducted by aliens! He takes on the garb of a court jester to stay on in the alien land. And, he even manages to have fencing duel with Nambiar, the evil minister of alien land!

It is then I realized that if you substitute the alien angle with, say a neighboring kingdom, the story remains exactly same. Yes, replace aliens with people from a neighboring kingdom and change the space ship to a chariot from that kingdom…the story works perfectly. It looks like the film’s script writer, T E Gnanamoorthi and director A Kasilingam were looking for a change of routine from the usual kingdom-raja-rani type stories and cooked up this incredible plot back in the late 50s! It’s amazing that they conceived all this back then when the first human to travel in space (Yuri Gagarin) was in 1961! In fact, in the film’s climax, as MGR and Nambiar are engaged in their usual combat in the space ship, it is Banumati, the film’s heroine, who steers the space ship back to planet Earth…in the first photo below she seems to be struggling, but if you notice the next picture, she has mastered the art mighty fast!! And to think the first woman on space was Valentina Tereshkova…in the same year as the film released…1963!!


This is a gem of a film that needs to be archived with a lot more care, in whatever form it is in. Is this the first Indian film ever to feature an alien and alien space ship? Even if it is not, hats off to the people who made this film back when sophisticated special effects were unheard of. The effects no doubt look tacky for our present-day eyes fed on Avatar, but just imagine how people in the 50s made and reacted to this film! Incredible achievement!

Richardsof
24th May 2013, 12:48 PM
http://i44.tinypic.com/qtj7.jpg


http://i43.tinypic.com/2dcc18g.jpg

Richardsof
24th May 2013, 02:57 PM
நம் நாட்டின் சரித்திரத்தில் ஜவஹர்லால் நேரு, எம்.ஜி.ஆர் இருவரும் மிகப் பிரபலமானவர்கள், மக்களால் பெருமளவில் விரும்பப் பட்டவர்கள், துதிக்கப் பட்டவர்கள். இவர்களின் பெயர் மட்டுமே மக்கள் மனத்தில் பெரும் உணர்வெழுச்சியை உண்டாக்கும் வல்லமை பெற்றது.

இவர்கள் எவ்வாறு இந்த அளவுக்கு பாபுலாரிடியைப் பெற்றார்கள் என்று சற்றே ஆராய்ந்தோமானால், அத்தகைய நிலை தன்னிச்சையாகத் தோன்ற வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. அத்தகைய பெருமையை அடைய வேண்டுமானால் அதற்கான சிறப்பு முயற்சியை மேற்கொண்டு, அதற்கேற்ற உழைப்பை அளிக்க வேண்டும்.

மேற்கூறிய இருவரும் systemmatic-காக தங்களைப் பற்றிய ஒரு உயர் நிலை உணர்வினை மக்கள் மனத்தில் பதித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அத்தகைய படிவத்தை உரம் போட்டு, நீரூற்றி வளர்த்தும் வந்திருக்கிறார்கள். அவர்களின் பெருமைகளை நான் குறைத்துச் சொல்லவில்லை.

இத்தகைய முயற்சிக்கு முழுமுதல் தேவை - மனித மனத்தின் இயல்புகள், செயல்பாடுகள், நிறைகுறைகள் (idiosyncrasies, susceptibilities, propensities, thought process and patterns of behaviour) முதலியவற்றைப் பற்றிய முழுப் புரிதலும் உங்கள் வசப் பட்டிருக்க வேண்டும். எந்த வகையில் அணுகினால் மக்கள் மத்தியில் எத்தகைய எதிர்வினை ஏற்படும் என்பதைக் கண்டு கொண்டு, அதற்கேற்றதொரு தோற்றத்தை மக்கள் கண்முன் அளிக்க வேண்டும். இந்தக் கலையில் அவர்கள் இருவரும் முழுத் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினார்கள் என்பது திண்ணம்!


ஜவஹர்லால் நேருவை எடுத்துக் கொண்டால் அவர் உடை உடுத்துவதில் ஒரு தனித்துவம் பெற்ற ஸ்டைலை மேற்கொண்டார். பளீரென்ற உடை, குல்லாய், ரோஜாப்பூ, சிரித்த முகம் இவை நேருவை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அவர், திறமை வாய்ந்த செய்தி ஒருங்கிணைப்பாளர்கள் உதவியால் செய்தித் தாள், வானொலி முதலிய ஊடகங்களில் தன்னைப் பற்றிய படிமம் எப்போதுமே positive-ஆக இருக்கும்படி கவனித்துக் கொண்டார். நம் நாடு விடுதலை பெற பலர் பலவித தியாகங்கள் செய்திருந்தாலும், தன்னலமில்லா உழைப்பை அளித்திருந்தாலும், எல்லோருமே நேரு பெற்ற பெயரைப் பெறவில்லையே! அவரைச் சுற்றி இருந்தவர்கள் தவறு செய்ததாக அறியப் பட்டலும், அதில் சிறிது அழுக்கு கூட நேரு மேல் ஒட்டாது பார்த்துக் கொண்டார்கள். கஷ்மீர் விஷயத்திலும், சீனாவுடனான அணுகு முறையிலும் பெரியதொரு blunder-களை அவர் இழைத்திருந்தாலும், அவருடைய படிமம் அவரைக் காப்பாற்றியது. இன்று வரை நேரு என்றொரு காந்த சக்தி நம்மை ஆட்கொண்டிருக்கிறது!

எம்.ஜி.ஆர் தன் இமேஜை சினிமா மூலம் மிக்க அறிவாற்றலுடன் வளர்த்துக் கொண்டார். அவர் ஒரு போதும் அண்ணனாக நடிக்கமாட்டார். ஏழை பங்காளனாகவே தோன்றுவார். திரையில் தோன்றும் எம்ஜியார் புகை பிடிக்க மாட்டர், மது அருந்த மாட்டார். அவர் ஏழையாகத் தான் நடிப்பார். ஆனால் பணக்காரப் பெண் ஒருவர் அவரைச் சுற்றுவார். அவர் ஏற்கும் பாத்திரங்கள் நற்குணங்களின் முழு உருவகமாக இருக்கும். அவர் தோன்றும் திரைப்படத்தின் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் நுணுக்கமாகக் கவனித்து, தன் இமேஜுக்குக் குந்தகமில்லாமல் பார்த்துக் கொள்வார்.

courtesy - net

masanam
24th May 2013, 05:25 PM
மக்கள் திலகம் தன் இமேஜை கண்டிப்பாக கடைசி வரை குந்தகம் வராமல் காத்துக் கொண்டார்.
பார்க்கும் ரசிகனுக்கு அழுகை, சோகம், எதிர்மறை தாக்கம் வராத வகையில் தன்னுடைய படங்களின் உருவாக்கத்தில் மக்கள் திலகத்தின் பங்கு இருந்த்து.

எஸ்வி ஸார், தினம் தினம் மக்கள் திலகத்தின் தகவல்களை அள்ளி வழங்கும் தங்களுக்கு நன்றி.

Richardsof
24th May 2013, 05:55 PM
நன்றி திரு மசானம் அவர்களே .

மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் - விளம்பரங்கள் - இணையதள தகவல்கள் - அமுத சுரபியாக தேட தேட வந்து கொண்டிருக்கிறது .

ஒரு தனி மனிதரின் புகழ் - நம் மக்கள் திலகத்துக்கு உள்ளது போல் உலகில் வேறு யாருக்குமில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

http://i41.tinypic.com/4r9sup.jpg

நாம் என்றென்றும் பெருமைப்பட்டுகொள்ளும் விதமாக மக்கள் திலகத்தின் எல்லையில்லா புகழ் இந்த தலைமுறை அறிந்து கொண்டதுபோல் எதிர்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள நிச்சயம் இந்த மக்கள் திலகம் திரி பங்கு வகிக்கும் என்பது உறுதி .

Richardsof
24th May 2013, 06:33 PM
எம்.ஜி.ஆர். படங்கள்!
கண்ணதாசன் பாடல்கள்!
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

வினாக்களுக்கான விடைகள்!

கண்டறியப்பட வேண்டும்!

எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

நினைத்துப் பாருங்கள்!

masanam
24th May 2013, 07:27 PM
எம்.ஜி.ஆர். படங்கள்!
கண்ணதாசன் பாடல்கள்!
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

வினாக்களுக்கான விடைகள்!

கண்டறியப்பட வேண்டும்!

எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

நினைத்துப் பாருங்கள்!

உண்மையில் பிரமிப்பு தான். மக்கள் திலகம் நடித்ததோ 135.
அதிலும் கதாநாயகனாய் 115 தான்.
ஆனால் அவர் தொட்ட உச்சம் மக்கள் திலகத்தின் வெற்றி சாதனை.
இன்றும் தேர்தலில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் உச்சரிக்கப்படுகிறது என்பதே மக்கள் திலகத்தின் செல்வாக்கு எத்தகையது எனபதை காட்டுகிறது.

காலத்தை வென்றவன்..காவியம் ஆனவன்..மக்கள் திலகம்.

Richardsof
24th May 2013, 08:19 PM
நண்பர்களுக்கு


என்னுடைய முந்தைய பதிவில் இடம் பெற்ற தகவல்கள்

''புரட்சித்தலைவர் வரலாறு '' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்.

எந்த இடத்திலும் நடிகர் திலகத்தை பற்றி எந்தவிதமான தவறான செய்திகள் இடம் பெறவில்லை .
மக்கள் திலகத்தின் செல்வாக்கை - புகழை- ஒரு சிலாரால் ஜீரணிக்க முடியாதவர்கள் - புரிந்து கொள்ளாதவர்கள்

விரும்பாதவர்கள் பதிவுகளை - எண்ணங்களை -தொடரப்போகும்

வீம்பு கணைகளை பற்றி கவலை பட வேண்டாம் .

நமக்கு மக்கள் திலகம் சொல்லி தந்த வைர வரிகள்



''
இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை..''.

Richardsof
24th May 2013, 08:32 PM
மக்கள் திலகம் எம்ஜியார் - எங்கள் கடவுள்



கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?
கண்ணுக்கு தெரிக்கின்றதா ?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம் வருகின்றதா?
உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா
வெளியே தெரிகின்றதா ?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா
உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா?
சஞ்சலம் வருகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது
நீதி சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!
காக்கவும் தயங்காது!
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்

ainefal
24th May 2013, 09:02 PM
https://www.youtube.com/watch?v=euDB-JyFr0M

இன்று கலைஞர் தொலைகாட்சியில் புரட்சிதலைவர் பாடல்கள்


புரட்சி தலைவர் குரலில் திரு டி எம் எஸ் படிய அணைத்து பாடல்களும் பிரமிக்க வைக்கிறது. அது இப்படி தான் தெரியவில்லை எல்லா பாடலும் அந்த காட்சி அமைப்புக்கு தகுந்ததாக உள்ளது. நாம் இப்படி ஒரு பாடகர் கிடைத்ததற்கு கண்டிப்பாக புண்ணியம் செய்து இருக்கிறோம். திரு டி எம் எஸ் இன்னும் பல ஆண்டுகள் நாள் உடல் நலத்தோடு வழ வேண்டும் என்பதே தமிழர்களின் எண்ணம்.

oygateedat
24th May 2013, 09:36 PM
makkal thilagathin 'kumarikkottam' at chennai mahalakshmi.


Msg from prof.selvakumar