PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

Richardsof
19th July 2013, 05:29 AM
http://youtu.be/XEdKocD47k8

Richardsof
19th July 2013, 05:51 AM
இந்திய அளவில் பிற மொழி நடிகர்களுடன் மிக நட்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறிப்பாக ஹிந்தி நடிகர் சசி கபூருடன் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை வரும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு தவறாமல் செல்லும்
வழக்கமும் சசி கபூருக்கு இருந்ததாகவும் தெரிகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சஷி கபூர் இடையிலான அந்த நட்பின் அடையாளமாக இருக்கிரது இந்த புகைப்படம்.

சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திலகத்தின் கைகளை உரிமையுடன் பிடித்து அழைத்து செல்லும் சஷி கபூரும், சிறிது வெட்கம், மகிழ்ச்சி என்று உற்சாகத்துடன் செல்லும் எம்.ஜி.ஆர் அவர்களும் இருக்கும் இந்த அரிதான புகைப்படம்
http://i43.tinypic.com/3169gm8.jpg

Richardsof
19th July 2013, 06:00 AM
AN ARTICLE FROM SIVATHAMBI- NET

எம்.ஜி.ஆரின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனிதன் மேல்நிலைப்பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதிய வைக்கப்பெற்றது. அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவராகவே அவர் போற்றப்பட்டார்.

இதனால், தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படிநிலையினரிடையே அவர் ஒரு உதாரணபுருஷராகவே போற்றப்பட்டார். தம் நிலையிலுள்ள ஒருவர் மேல்நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் அச்சமூகமட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள்.
இதனால் தன்னம்பிக்கையும் சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையுமுள்ள ஓர் இளைஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது. எம்.ஜி.ஆர். தனது கவர்ச்சியின் தளமாக, தமிழ் பற்றிய நிiலாட்டினைக் கொள்ளவில்லை. இன்றும்கூட கலைஞர் கருணாநிதியோடு தொடர்புபுபுறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்.ஜி.ஆரோடு பொறுத்திப் பார்க்கப்படுவதில்லை. அவருடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதன் பற்றியதாவே இருந்தது. இன்று அவர் இல்லாத நிலையிற் பார்க்கும்பொழுது அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

எம்.ஜி.ஆரை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது, அதனைத் தளமாகக் கொண்டு வளர்ந்து தனக்கென ஓரிடத்தினை வகுத்துக்கொண்டார் என்றே கூறல் வேண்டும். மேலும்,அண்ணா கலைஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்கத்தையே இவர் ஏற்படுத்தினார் என்று கொள்ளல் வேண்டும் (தமிழ்ப் பண்பாட்டில் சினிமா : க.சிவத்தம்பி : பக்கம் 13) என 2004 ஆம் ஆண்டு வெளியான தமது நூலின் முதல் பதிப்பில், தமது எம்.ஜி.ஆர. குறித்த ஆதாரமான கட்டுரை எழுதப்பட்டு 24 ஆண்டுகளின் பின் அவரது பார்வையை மீளுறுதி செய்கிறார் சிவத்தம்பி.

Richardsof
19th July 2013, 06:05 AM
எம்.ஜி.ஆரின் வறிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான பாசம் மற்றும் பரிவு என்பது வறுமையும் பட்டிணியும் குறித்துப் பட்டறிந்து பெற்ற அவர் அனுபவத்தில் இருந்துதான் உருவாகியது. அது அவரது வெள்ளந்தியான அரசியலிலும் திரைப்படங்களிலும் அவரது ஆட்சியின் கீழான சடூகத் திட்டங்களிலும் பிரதிபலித்தது. அவர் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படம் முன்வைத்த சமூகத் திட்டங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையொத்ததாக இருப்பதை எவுரும் இன்று அவதானிக்க முடியும். இதனை அவர் தேர்ந்த கருத்தியல் அடிப்படையிலிருந்தல்ல, தனது இயல்பான தேர்வுகளில் இருந்துதான் செய்கிறார். திரும்பத் திரும்ப பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் அவரும் இணைந்தது தற்செயலானது இல்லை. அது திட்டமிட்ட நடவடிக்கை.

தனிமனித வாழ்வில் தன்னலமறுப்பையும் தியாகத்தையும் போற்றிய தமிழக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திராவிடத் தலைவர்கள் மீது பேரன்புகொண்டவர் அவர். அண்ணாதுரை, காமராஜ், ஜீவா மற்றும் கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்கள் மீதான அவரது பேரன்பு அவரது நடத்தைகளில் வெளிப்பட்டது.

அவரது ஈகைக் குணம் என்பது வெறுமனே ஐதீகம் இல்லை. இன்று அனைத்தும் வெளிப்படையாகவும் ஸ்தூலமாகவும் இருக்கிறது.
வறிய மக்களிடம் அவர் அன்பு காட்டினார். தாம் நம்பியவற்றுக்கென அவர் அள்ளிக் கொடுத்தார். மரபான பழமையான பெண்மையைப் போற்றினார். அவரது திரைப்படம் - வாழ்வு - நடத்தை என்பதற்கு இடையிலான இடைவெளி, அவர் காலத்திய பிற அரசியல் தலைவர்களோடும் நடிகர்களோடும், ஏன் இன்றைய அரசியல் தலைவர்களோடும் நடிகர்களோடும் ஒப்பிட முன்னுதாரணம் இல்லாதது. அவரது திரைப்படங்கள் வெற்றிபெற்றதிலும், அவர் மக்கள் மனங்களில் கோலோட்சியதிலும் இவையணைத்தும் மிகப்பேரும் பங்காற்றின.

ஈழவிடுதலைப் போராட்டத்திலும் ஈழவிடுதலையிலும் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த ஈடுபாடு எவரும் அறியாதது. அவரது கடப்பாடும் ஈகைக் குணமும் வெளிப்பட்ட தருணம் குறித்து தனது நூலில் (விடுதலை : எம்.ஜி.ஆரும் புலிகளும்: விடுதலைக்குவித்திட்ட மாமனிதர் : அன்டன் பாலசிங்கம் : 2003) அன்டன் பாலசிங்கம் விரிவாக எழுதுகிறார். விடுதலைப் புலிகளுக்குத் தமிழக அரசின் சார்பாக நிதி கொடுப்பது தொடர்பான செய்தி வெளியானபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் அவரது தூண்டுதலின் பேரில் ராஜீவ்காந்தியும் அதனைத் தடுக்கிறார்கள். ராஜீவ்காந்தியையும் மீறி ஆறு கோடி ரூபாய் வரையிலான உதவியை எம்.ஜி.ஆர்.தனது சொந்தப்பணத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்குத் தருகிறார்.

அன்றிருந்த இந்திய அரசியல் சூழலில் இந்தச் செயலின் பின் விளவுகளின் பாரதூரத்தன்மையை எவரும் அறிய முடியும்.
An article from sivathambi- net

masanam
19th July 2013, 06:19 AM
இந்திய அளவில் பிற மொழி நடிகர்களுடன் மிக நட்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறிப்பாக ஹிந்தி நடிகர் சசி கபூருடன் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை வரும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு தவறாமல் செல்லும்
வழக்கமும் சசி கபூருக்கு இருந்ததாகவும் தெரிகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சஷி கபூர் இடையிலான அந்த நட்பின் அடையாளமாக இருக்கிரது இந்த புகைப்படம்.

சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திலகத்தின் கைகளை உரிமையுடன் பிடித்து அழைத்து செல்லும் சஷி கபூரும், சிறிது வெட்கம், மகிழ்ச்சி என்று உற்சாகத்துடன் செல்லும் எம்.ஜி.ஆர் அவர்களும் இருக்கும் இந்த அரிதான புகைப்படம்
http://i43.tinypic.com/3169gm8.jpg

இந்த படத்தில் மக்கள் திலகத்தின் புன்னகையுடனான முகபாவம்..மிகவும் அருமை.
வினோத் ஸார், பதிவுக்கு நன்றி.

siqutacelufuw
19th July 2013, 09:23 AM
மக்கள் திலகம் எம.ஜி.ஆர். இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாக எடுக்கப்பட்ட "தேவதாஸ்" படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும் என்றாராம் வாலி. அதற்கு எம்.ஜி.ஆர்,
"ஆண்டவனே!(எம்.ஜி.ஆர் வாலியை இப்படி அழைப்பாராம்) எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..அது - நானா முயன்று முன்னின்று உருவாகிக் கொண்டதல்ல..படத்துக்குப் படம் அது இயற்கையா எற்பட்டுடுச்சு...கண்ணதாசன், பட்டுக்கோட்டை, நீங்க - இப்படி கவிஞர்களும், நான் கருத்தாழம் மிக்க பாடல்களைப் பாடற மாதிரியே எழுதிடீங்க..எந்த பாட்டுலயும் சமூகத்துக்கு ஒரு சேதி இருக்கற மாதிரி பாடிட்டு ஒரு குடிகாரனா கதைக்கே தேவைப்பட்டாலும் நான் வந்தா எப்படி? இயல்பாவே எனக்கு அந்த பழக்கம் கிடையாது! குடிகாரனா நடிக்கிறது வேற;குடிச்ச மாதிரி நடிக்கிறது வேற..நான் இந்த ரெண்டாவது வேஷத்தை பல படத்துல பண்ணியிருக்கேன் - அதுவும் வில்லனின் வில்லங்கங்களை கண்டுபிடிக்க...நீங்க பார்த்து இருக்கலாம்..அவன் மதுக் கிண்ணத்தை என் கிட்ட கொடுத்தா கூட, அதை பக்கத்துல இருக்கற பூந்தொட்டில கொட்டிட்டு - சாப்ட மாதிரி சமாளிப்பேன்.."

எம்.ஜி.யார் அவ்வளவு தூரம் தன்னிலை விளக்கம் தந்தும் வாலி விடவில்லையாம். "அண்ணே!நீங்களும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச படம் 'கூண்டுக்கிளி';விந்தனோட கதை வசனத்துல, ராமண்ணா டைரக்க்ஷன்ல வந்த படம்..அதுல - நீங்க சிகரெட் பிடிக்கறீங்களே - ஒரு காட்சில? அது எப்படி?

எம்.ஜி.யார் சொன்னாராம், "அப்பல்லாம் - நான் பொது வாழ்க்கைல அவ்வளோ தீவிரமா ஈடுபடல...ஒரு நல்ல நடிகன்..ஒரு நல்ல மனிதன் - என்கிற அளவிலதான் என்னைப் பற்றி அபிப்பிராயம் இருந்தது..வளர வளர "வாத்யா"ராயிட்டேன் - உழைக்கும் வர்க்கத்துக்கு ! அந்த சிகரெட் பிடிக்கிற சீன் கூட - பின்னாளில் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது!"

எம்.ஜி.ஆரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டாராம் கவிஞர் வாலி

Thanks to Mr. Chandran Veerasamy


GOOD INFORMATION AT THE RIGHT TIME.

THANK YOU SAILESH SIR

Ever Yours

S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
19th July 2013, 11:20 AM
மக்கள் திலகத்தின் இந்த வார திரைப் படங்கள் .

19.7.2013

மதுரை - அரவிந்த் - தேடி வந்த மாப்பிள்ளை


கோவை - ராயல் - இதய வீணை

கோவை - சிவகிரி - தெய்வத்தாய்.

நாகர்கோயில்- தங்கம் - நாடோடி மன்னன் .

Stynagt
19th July 2013, 11:22 AM
எங்கள் தங்கம் நடித்த 'எங்கவீட்டு பிள்ளை' படம் எல்லா நடிகர்களையும் ஏங்க வைத்த படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எப்படி ஒரு நடிகரால் மாறி மாறி இதில் இயற்கை நடிப்பை காட்டமுடிந்தது என்ற பிரமிப்பு அனைவருக்கும் இருந்தது..இன்னுமொரு செய்தி..'நான் ஆணையிட்டால்..அது நடந்து விட்டால் பாடலில் வரும்..ஒரு காட்சியில் புரட்சித்தலைவர் எலெக்ட்ரிக் சுறுசுறுப்பில் பிரமாதமாக நடித்திருப்பார்..
http://i43.tinypic.com/2j4rb6c.png
அதில் முத்தாய்ப்பாக, ஒரு சுற்று சுற்றி இரண்டு கால்களையும், ஒரு கையையும் தரையில் ஊன்றி, ஒரு கையை உயர்த்தும் காட்சியில், திரு. திலீப்குமார் மற்றும் திரு. என்.டி.ஆர். அவர்களால் நடிக்க முடியாமல் அந்த ஸ்டெப் தவிர்க்கப்பட்டது..
http://i41.tinypic.com/2d017wy.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th July 2013, 11:41 AM
http://i44.tinypic.com/29xafkj.jpg

பாடல் தலைவரும், பாட்டுக்கு தலைவரும் இணைந்த இனிய புகைப்படத்தை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
19th July 2013, 12:06 PM
எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த உதவிய வரிகளுக்குச் சொந்தமான வாலியின் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். ஒரு சில நாட்களுக்கு முன் தான் பாடலாசிரியர் ஆத்மநாதன் அவர்கள் காலமானார். அந்த செய்தி மக்களிடம் சென்று சேர்வதற்குள்ளாகவே வாலியின் மறைவு. தொடர்ச்சியாக தமிழ்த்திரையிசையுலகம் சந்தித்து வரும் பேரிழப்புகள் இந்த ஆண்டை மிகவும் துயரமான ஆண்டாக மாற்றி வருகின்றன.

அவரது ஆன்மா சாந்தியடையவும் அவர் குடும்பத்தார் இந்த துயரைத் தாங்கும் வலிவினைப் பெறவும் இறைவனை வேண்டுவோம்.



திரு. ராகவேந்திரா அவர்கள் அறிவது ,


கவிஞர் வாலி அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும் என்கின்ற அதீத ஆவலால், சற்று உணர்ச்சிவசப்பட்டு, "மக்கள் திலகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த உதவிய வரிகளுக்கு
சொந்தக் காரர் கவிஞர் வாலி " என்ற உடன்பாடில்லாத வார்த்தைகளை உபயோகபடுத்தி
உள்ளீர்கள்.


அன்றைய கால கட்டத்தில் மக்கள் திலகம் உட்பட இதர பல நடிகர்கள் நடித்த படங்களுக்கும், இன்றைய தலைமுறை நடிகர் தனுஷ் படங்கள் வரை, வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுதியிருக்கிறார். அப்படிப் பார்த்தால், பொன்மனசெம்மலை விடுத்து, எவராவது ஒருவர் (தனித்து நின்று, எந்த அரசியல் கட்சியையும் சாராமல்) மக்களால் தேர்ந்தேடுக்கப்படும் குறைந்தபட்ச "மாநகர அல்லது நகர மன்ற உறுப்பினாராகவது" ஆகியிருக்க வேண்டும்.


இதில் புரட்சித் தலைவரை தவிர வேறு எந்த நடிகரும், அரசியலில் அங்கீகரிக்கப்படவில்லை.

அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது, தமிழக மக்கள் அவர் மேல் கொண்டிருந்த அதிக அன்பு மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடு. அவர் மேல், மக்களால் திணிக்கப்பட்ட அந்த உயர் நிலையினை அடைய மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும், கடின உழைப்பும் அளப்பரியது, என்பதை நாடறியும்.


கவிஞர் வாலியின் பாடல்களில், பல தருணங்களில் , மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், சில திருத்தங்கள் செய்து, அப்பாடல்கள் பிரபலமடைவதற்கு வழி வகுத்தவர் நமது இதய தெய்வம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களே ! இது பற்றி, கவிஞர் வாலி தமது வரலாற்றினை சில ஏடுகளில் எழுதும்போது குறிப்பிட்டுள்ளார்.

காலஞ்சென்ற , பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிஞர் கா. மு. ஷெரிப், பாபநாசம் சிவன்,
கு. மா. பாலசுப்ரமணியன், தஞ்சை ராமையா தாஸ், உடுமலை நாராயண கவி, ஆலங்குடி சோமு, அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், மாயவநாதன் கவிஞர் முத்துக்கூத்தன், ஆத்மநாதன் முதற்கொண்டு கலைஞர் மு. கருணாநிதி, புலவர் புலமைபித்தன், கவிஞர் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், அவிநாசிமணி உட்பட பல கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்று நேயர்களால்இன்று வரை வானொலி மூலம், விரும்பி கேட்கப்படுவது மட்டுமல்லாமல், ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளிக்கிணங்க மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பி வருவது நிதர்சனமான உண்மை. அந்த வரிசையில் கவிஞர் வாலியின் கருத்துள்ள பாடல்களும் இடம் பெற்றுள்ளது என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.


மக்கள் திலகத்தின் கலையுலக வளர்ச்சிக்கும் அரசியல் வளர்ச்சிக்கும் பல்வேறு கால கட்டங்களில் பல கலைஞர்கள் துணை புரிந்திருந்தாலும், அவரது வெற்றிக்கு காரணமே மக்களின் அமோக ஆதரவுதான். இந்த அமோக ஆதரவினை மென்மேலும் பெருக்கிக்கொண்டு அமரராகி 25 ஆண்டுகளுக்கு பின்பும், இனியென்றும் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் தனிப்பெரும் சாதனை புரிந்து வருபவர்தான் எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள்.

http://i43.tinypic.com/33dbjt1.jpg

எனவே, இந்த திரியில், மக்கள் திலகத்தைப் பற்றி செய்திகளை பதிவிடும்போது எங்களைப் போன்றவர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, சற்று கவனமாக பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனெனில் நாங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல அவரை என்றும் வணங்கும் பக்தர்கள்.


உங்களன்பு சகோதரன் :

சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன் .

Stynagt
19th July 2013, 12:51 PM
திரு. ராகவேந்திரா அவர்கள் அறிவது ,


கவிஞர் வாலி அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும் என்கின்ற அதீத ஆவலால், சற்று உணர்ச்சிவசப்பட்டு, "மக்கள் திலகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த உதவிய வரிகளுக்கு
சொந்தக் காரர் கவிஞர் வாலி " என்ற உடன்பாடில்லாத வார்த்தைகளை உபயோகபடுத்தி
உள்ளீர்கள்.


அன்றைய கால கட்டத்தில் மக்கள் திலகம் உட்பட இதர பல நடிகர்கள் நடித்த படங்களுக்கும், இன்றைய தலைமுறை நடிகர் தனுஷ் படங்கள் வரை, வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுதியிருக்கிறார். அப்படிப் பார்த்தால், பொன்மனசெம்மலை விடுத்து, எவராவது ஒருவர் (தனித்து நின்று, எந்த அரசியல் கட்சியையும் சாராமல்) மக்களால் தேர்ந்தேடுக்கப்படும் குறைந்தபட்ச "மாநகர அல்லது நகர மன்ற உறுப்பினாராகவது" ஆகியிருக்க வேண்டும்.


இதில் புரட்சித் தலைவரை தவிர வேறு எந்த நடிகரும், அரசியலில் அங்கீகரிக்கப்படவில்லை.

அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது, தமிழக மக்கள் அவர் மேல் கொண்டிருந்த அதிக அன்பு மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடு. அவர் மேல், மக்களால் திணிக்கப்பட்ட அந்த உயர் நிலையினை அடைய மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும், கடின உழைப்பும் அளப்பரியது, என்பதை நாடறியும்.


கவிஞர் வாலியின் பாடல்களில், பல தருணங்களில் , மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், சில திருத்தங்கள் செய்து, அப்பாடல்கள் பிரபலமடைவதற்கு வழி வகுத்தவர் நமது இதய தெய்வம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களே ! இது பற்றி, கவிஞர் வாலி தமது வரலாற்றினை சில ஏடுகளில் எழுதும்போது குறிப்பிட்டுள்ளார்.

காலஞ்சென்ற , பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிஞர் கா. மு. ஷெரிப், பாபநாசம் சிவன்,
கு. மா. பாலசுப்ரமணியன், தஞ்சை ராமையா தாஸ், உடுமலை நாராயண கவி, ஆலங்குடி சோமு, அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், மாயவநாதன் கவிஞர் முத்துக்கூத்தன், ஆத்மநாதன் முதற்கொண்டு கலைஞர் மு. கருணாநிதி, புலவர் புலமைபித்தன், கவிஞர் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், அவிநாசிமணி உட்பட பல கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்று நேயர்களால்இன்று வரை வானொலி மூலம், விரும்பி கேட்கப்படுவது மட்டுமல்லாமல், ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளிக்கிணங்க மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பி வருவது நிதர்சனமான உண்மை. அந்த வரிசையில் கவிஞர் வாலியின் கருத்துள்ள பாடல்களும் இடம் பெற்றுள்ளது என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.


மக்கள் திலகத்தின் கலையுலக வளர்ச்சிக்கும் அரசியல் வளர்ச்சிக்கும் பல்வேறு கால கட்டங்களில் பல கலைஞர்கள் துணை புரிந்திருந்தாலும், அவரது வெற்றிக்கு காரணமே மக்களின் அமோக ஆதரவுதான். இந்த அமோக ஆதரவினை மென்மேலும் பெருக்கிக்கொண்டு அமரராகி 25 ஆண்டுகளுக்கு பின்பும், இனியென்றும் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் தனிப்பெரும் சாதனை புரிந்து வருபவர்தான் எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள்.

http://i43.tinypic.com/33dbjt1.jpg

எனவே, இந்த திரியில், மக்கள் திலகத்தைப் பற்றி செய்திகளை பதிவிடும்போது எங்களைப் போன்றவர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, சற்று கவனமாக பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனெனில் நாங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல அவரை என்றும் வணங்கும் பக்தர்கள்.


உங்களன்பு சகோதரன் :

சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன் .
என் போன்ற எம்ஜிஆர் பக்தர்களின் உணர்வுகளை பிரதிபலித்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...அன்றைக்கு எம்ஜிஆர் இல்லை என்றால் வாலி இல்லை என்ற நிலைதான் இருந்தது..இதையேதான் திரு..வாலி அவர்களும்..எனக்கு முகவரி தந்த முதல்வர் என்று உறுதிபடுத்தினார்..மேலும் வாலிபக்கவிஞர் வாலியின் திறைமையை அறிந்ததால் தனது படங்களில் அவரது பாடல்கள் இடம்பெற செய்திருந்தார்..இருந்தாலும் அவரது பாடல்கள் தலைவரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த உதவியது என்பதை ஏற்க முடியாது..அரசியலில் தலைவரின் உழைப்பு அனைவரும் அறிந்தது..அறிஞர் அண்ணா மறைந்தபோது மக்கள் திலகம் நினைத்திருந்தால் அன்றே முதல்வராக அமர்ந்திருப்பார்..ஆனால் அந்த பதவியை விரும்பிய தன் நண்பருக்கு கொடுத்து அழகு பார்த்தார்..எனவே எந்த கவிஞர் எழுதியிருந்தாலும், எழுதாவிட்டாலும் கால தேவதை, மக்கள் காவலனை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டிய ஒன்று நிகழ்ந்திருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th July 2013, 01:01 PM
http://i41.tinypic.com/1582nuh.jpg

கொங்கு மண்டலத்தை குத்தகை எடுத்திருக்கும் மக்கள் திலகத்தின் காவியங்கள் தெய்வத்தாய் மற்றும் இதயவீணை திரைப்படங்கள் வெளியீட்டை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் பணி சிறக்க வாழ்த்துக்கள்..கோவையில் குறுகிய காலங்களில் ஒரு நடிகரின் திரைப்படங்கள் இத்தனை முறை திரையிடப்பட்டிருப்பது கின்னஸ் சாதனை ஆகும்..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
19th July 2013, 01:11 PM
http://i39.tinypic.com/16gzmzo.jpg

oygateedat
19th July 2013, 01:14 PM
http://i40.tinypic.com/r1nejp.jpg

Stynagt
19th July 2013, 01:50 PM
http://i39.tinypic.com/16gzmzo.jpg

Hard and Nice work..thank u Ravi sir..

oygateedat
19th July 2013, 03:54 PM
http://i42.tinypic.com/2ce6pw1.jpg

Stynagt
19th July 2013, 05:59 PM
இன்றைய (19.07.2013) மாலைமலரில் மக்கள் திலகம்-வாலிபக்கவிஞர் பற்றிய தகவல்கள்
http://i41.tinypic.com/333ecyg.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th July 2013, 06:06 PM
http://i42.tinypic.com/2ce6pw1.jpg

உத்தம தலைவனின் 'உண்மையான உள்ளத்தை' உரைக்கும் கவிஞர் வாலியின் எண்ணத்தை உன்னதமாய் இத்திரியில் பதிவிட்ட திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம்..

oygateedat
19th July 2013, 07:08 PM
http://i40.tinypic.com/2958ohu.jpg

Richardsof
19th July 2013, 07:15 PM
இனிய நண்பர் திரு பம்மல் சார்


மக்கள் திலகத்தை பற்றி குமுதம் ஜங்ஷன் இதழில் திரு வாலி அவர்கள் எழதிய கவிதை அருமை .
வரிக்கு வரி உயிர் பெறும் சத்திய வார்த்தைகள் .
பதிவிட்டமைக்கு நன்றி .

iufegolarev
19th July 2013, 07:39 PM
https://www.youtube.com/watch?v=3ynta9HPzIQ

iufegolarev
19th July 2013, 07:43 PM
https://www.youtube.com/watch?v=EYv45Zs9bzA

iufegolarev
19th July 2013, 07:54 PM
https://www.youtube.com/watch?v=g3VxzkzmTPk

iufegolarev
19th July 2013, 07:55 PM
https://www.youtube.com/watch?v=qjJ3YVjffrI

Richardsof
19th July 2013, 08:36 PM
Courtesy-thirumathi jothi / kumudham snehidhi

சிநேகிதி ஆசிரியருக்கு,

இப்போது எனக்கு வயது ஐம்பத்தொன்று.

என் வலது பக்கம் நான்கு வருடங்களுக்கு முன் பக்க வாத நோயால் செயலிழந்து போனது. இந்தக் கடிதத்தைக்கூட இடது கையால்தான் சற்றே நடுக்கமான எழுத்துக்களால் எழுதி அனுப்பியுள்ளேன். என் இடது மார்பை புற்றுநோய் காரணமாக மூன்று வருடங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட்டார்கள். இதுபோன்ற ஒரு கஷ்டமான நேரத்தில், குமுதம் சிநேகிதி எனக்குக் காட்டும் அன்பாலும், ஆறுதலான வார்த்தைகளாலும், தன்னம்பிக்கை மொழிகளாலும்தான், நான் புதுப் பிறவி எடுத்ததுபோல வாழ்கின்றேன்.

நான் எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோவில் பதினான்கு வருடங்கள் பணிபுரிந்தவள். அந்த நாட்களில் அவரை நேரில் பார்த்து, பேசி அவரின் குண இயல்புகளைக் கண்டு வியந்தவள் நான். என் ஒரே மகனுக்கும் சத்யா என்று அவருடைய அன்புத் தாயின் பெயரை வைத்திருக்கிறேன்!’

_ என்று மிக உருக்கமாக எழுதிய ஒரு கடிதம் நம் கவனத்தைக் கவர..

மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டி பொள்ளாச்சியில் வசிக்கும் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

ஜோதி பிரபா மிக மரியாதையாக தலைவர் என்றுதான் எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப்பிடுகிறார். எம்.ஜி.ஆர். மீது அப்படியரு அபிமானம், மரியாதை, அன்பு, விசுவாசம்!
http://i40.tinypic.com/2gsoa39.jpg
எம்.ஜி.ஆர். உபயோகப்படுத்திய தொப்பியையும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவர் வைத்திருந்த ஒரு புத்தர் சிலையையும் தன் பூஜை அறையில் வைத்திருக்கிறார் இந்த வாசகி. இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் அவரை நினைத்து வணங்கித்தான் மற்ற காரியங்களையே ஆரம்பிக்கிறார்.

ஜோதி பிரபா எம்.ஜி.ஆரோடு தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘எனது சித்தப்பா இராமலிங்கம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்.. சித்தப்பா மூலமாகத்தான் நான் சத்யா ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் ஒரே பெண்தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.

இராமலிங்க அடிகளார் மீது எம்.ஜி.ஆருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அதனால் என் சித்தப்பாவை ‘இராமலிங்கம்’ என்று அழைக்காமல் ‘வள்ளலாரே’ என்றுதான் அழைப்பார்.

அவர் முதலமைச்சர் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ந்து பதினாலு வருடங்கள், நான் அவரிடம் வேலை பார்த்தேன். முதலமைச்சர் ஆனபின்பும், தொடர்ந்து மிச்சமுள்ள தன் படங்களை நடித்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.

தான் ஒரு சி.எம். என்ற பந்தாவே இல்லாமல் நடிக்க வருவார். ஸ்டுடியோ தொழிலாளிகளின் மீது பழைய அன்பும், பாசமும் குறையாது பழகுவார். எந்தச் சூழ்நிலையிலும் தனது எளிமையையும், இரக்க குணத்தையும் விட்டு வெளியே வரவே மாட்டார்.

அவர் முதலமைச்சர் ஆன பின்பு, அவர் சத்யா ஸ்டுடியோவுக்குள் வந்தால், அவருக்கு வரும் எல்லா போன் கால்களுக்கும் பதில் சொல்லவே எனக்கு நேரம் சரியாக இருக்கும். சிலசமயம் மதியம் உணவுகூட சாப்பிடாமல் இருப்பேன். ஞாபகமாக வந்து ‘சாப்பிட்டாயா? முதலில் போய்ச் சாப்பிடு.. அப்புறம்தான் வேலை’ என்பார்.

யார் தப்பு செய்தாலும் உடனே கண்டித்து விடுவார்.. அப்புறம் பத்து நிமிடங்கள் கழித்து அவர்களைக் கூப்பிட்டுச் சமாதானப்படுத்துவது அவரின் இயல்பு! எத்தனையோ சினிமாப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வந்து போகும் இடத்தில் அமைதியான, அலட்டல் இல்லாத ஒரு பெண்ணாக நான் வேலை செய்வதை எல்லோரிடமும் பாராட்டிப் பேசுவார்.

தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆரிடம் அதிகாரத் தோரணையே கிடையாது. ஆடம்பரமும் கூட கிடையாது. தன்னைப் பிடிக்காத வர்களைக் கூட தன் பழக்கத்தால், தன் அணுகு முறையால், தன்னிடமே வரும்படி செய்து விடுவார். வயதில் பெரியவர்களுக்கு அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மிகவும் மரியாதை கொடுப்பார். மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்.

சத்யா மூவிஸ் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு டெய்லர், மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென இறந்து விட்டார். அவருக்குத் திருமண வயதில் மூன்று பெண்கள். அந்தப் பெண்களுக்கு எம்.ஜி.ஆர்.தான் முன்னே நின்று செலவு செய்து விளம்பரம் கூட இல்லாமல் திருமணம் செய்து வைத்தார்.
http://i43.tinypic.com/2gvkhu0.jpg
அங்கு வேலை செய்யும் பொழுது நான் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டேன். அவர் தன் காரையே தந்து உடனே என்னை மருத்துவமனைக்கு எடுத்துப் போகச் சொன்னார். மேனேஜர், உதவியாளர் போன்றவர்களையும் என்னுடன் மருத்துவமனையிலேயே இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்.

நான் வேலைக்குத் திரும்பியதும், ‘உனக்கு நரம்புத் தளர்ச்சி வரும் அளவுக்கு என்ன கவலை.. என்ன பிரச்சனை? இந்த இருபது. வயதில் இப்படியெல்லாம் வரக்கூடாது. உனக்கு என்ன உதவி வேண்டும் சொல்’’ என்று கேட்டபொழுது நான் மிகவும் நெகிழ்ந்து நின்றேன்..!

அவர் ஸ்டுடியோவில் இருக்கும் பொழுது குருவிக்காரர்களும், நரிக்குறவர்களும் அவரைப் பார்க்க அடிக்கடி வருவார்கள். ஒரு தடவை ஒரு காவலாளி அவர்களை உள்ளே விட மறுத்தார். இதைக் கவனித்த தலைவர் காவலாளியைக் கண்டித்து விட்டு, உடனே அவர்களை உள்ளே கூப்பிட்டார். சரிசமமாக அவர்களுடன் உட்கார்ந்து சிரித்துப் பேசி, அவர்களுக்குப் பல பரிசுகளும் கொடுத்து, சாப்பிட வைத்து அனுப்பினர்.

தலைவருக்கு ‘‘அம்மா’’ மீது மிகவும் பாசம். இது அவருடைய பல படங்களிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு வருடமும் அவர் தன் அம்மாவின் நினைவு நாளன்று மௌன விரதம் இருப்பார். முக்கியமான விஷயங்களை எழுதிக் காட்டுவார்.

தனது செயினில் இருந்த தன் அம்மா படம் பதித்த டாலரின் மீது தினமும் சந்தனம் வைத்து அதையும் பனியனுக்குள் வைத்துக் கொள்வார். தலைவருக்கு கடவுள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சத்யா ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் நிறைய பரிசுகள் வழங்கி அத்தனை பேர் மனசையும் கொள்ளை கொள்வார்.

சென்னையில் இருந்தால், எந்த நேரமாக இருந்தாலும், வீட்டுக்குப் போய் விடுவார். தலைவருக்கு மீன் உணவு ரொம்பவும் பிடிக்கும். அதைப் போல கீரை உணவையும் விரும்புவார். டீ, காபிக்கு பதிலாக பால் குடிப்பார். மது, புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஒடிக்கோலன் போட மிகவும் பிடிக்கும்.

தன் ராமாவரம் தோட்டத்தில் அடிக்கடி பெரிய விருந்து கொடுப்பார். எந்த விருந்தாக இருந்தாலும், எந்த உணவாக இருந்தாலும் வேகமாகச் சாப்பிட்டு விட்டு முதல் ஆளாக எழுந்து விடுவார். சமையல் கட்டுக்கும், பாத்திரம் சுத்தம் செய்யும் இடத்துக்கும் போய் அங்கு வேலை செய்யும் பெண்களுக்குச் சாப்பாடு இருக்கிறதா? சாப்பிட்டார்களா? என்று தனிப்பட்ட முறையில் கவனிப்பார். இது எந்தத் தலைவரும் சாதிக்க முடியாத எளிமையான அணுகுமுறை!

நான் அங்கே வேலைக்குப் போன புதிது... அந்த சமயம், அரசியலில் கலைஞருக்கும், தலைவருக்கும் இறுக்கமான ஒரு சூழ்நிலை இருந்த நேரம். கலைஞர் போனில் பேசினார். டெலிபோன் ஆபரேட்டராக நான் இருந்ததால் அவரது தொலைபேசி அழைப்பை நான்தான் கேட்டேன். உடனே தலைவரிடம் ‘‘கருணாநிதி பேசினார்’’ என்று நான் பாட்டுக்குச் சொல்லி விட்டேன். உடனே தலைவர் என்னைக் கண்டித்து, ‘‘கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். பெயரெல்லாம் சொல்லக்கூடாது.. உன்னை விட வயதில் பெரியவர்கள் பெயரைச் சொல்வது தவறு!’’ என்றார்.

தலைவர் வீட்டிலேயே வளர்ந்த அவரது. அண்ணன் மகளுக்குப் பிறந்த நாள் வந்தது. சரியாக தலைவர் வெளியிலிருந்து வீடு திரும்பிய சமயம் இருக்கும்படியாக பார்த்து மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டிக் கொண்டாட ஆரம்பித்தனர்

‘‘ஏற்றிய ஒளியை பிறந்த நாள் அன்று அணைப்பது தவறு.... கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்! நமக்குத் தேவையில்லை. நமது பண்பாட்டுப்படி விளக்கேற்றி விட்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம். இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்துக்களையும்தான் நாம் பெற வேண்டும்!’’ என்று சொல்லிக் கண்டித்தார்.

திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். தனக்கென்று எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் வைத்துக் கொள்ளாத ஒரு மனைவி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தன் கணவரின் நலம் மட்டுமே.

தலைவர் துரோகம் செய்பவர்களை விட்டு ஒதுங்கி விடுவார். அல்லது ஒதுக்கி விடுவார். சினிமாத் துறையில் நஷ்டப்பட்ட எத்தனையோ நல்லவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்.

தான தருமங்கள், படிக்க உதவி, வேலைவாய்ப்பு, எளிய மக்களுக்கு நலவாழ்வு இந்த இலட்சியத்தை கடைசி வரை கை விடவில்லை.

அனைத்து மதத்தினரையும் அரவணைத்து அரசியல் நடத்தினார். தனிப்பட்ட வாழ்விலும் அதையேதான் கடைப் பிடித்தார். அதனால்தான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த பொழுது இவர் குணமடைய பள்ளி வாசல்களிலும், கிறித்துவ தேவாலயங்களிலும் இந்துக்கள் கோயில்களிலும் இடைவிடாது பிரார்த்தனைகள் நடந்தன!..

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அது தலைவர் ஒருவருக்கு மட்டுமே வாய்த்த நிஜம்! என்று எம்.ஜி.ஆரின் நினைவலைகளில் நெகிழ்கிறார் ஜோதி பிரபா கிருஷ்ணன்.

ainefal
19th July 2013, 09:14 PM
http://i41.tinypic.com/29bisrr.jpg

உலகம் சுற்றும் வாலிபன் பட தயாரிப்பு வேலைகள் தொடங்கியபோது எம்.ஜி.ஆர். வாலியிடம், “இந்தப் படத்தில் உங்களுக்கு பாடல் எழுத சான்ஸ் தரப் போவதில்லை” என்று விளையாட்டாக சொன்னார். வாலியும் விடவில்லை, சிரித்தபடியே, “என்னுடைய பெயர் இடம்பெறாமல் உங்களுடைய படமே வெளிவராது” என்று சொல்லிவிட்டார்.

சிறிது நேரத்தின் பின் எம்.ஜி.ஆர். “அது எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டிருக்கிறார். அதற்கு வாலி சிரித்துக்கொண்டே,.

“என்னுடைய பெயர் இல்லாமல் நீங்கள் படத்தை வெளியிடுவதானால், ‘உலகம் சுற்றும்" பன் " என்றுதான் வெளியிட வேண்டும். உங்கள் படத்தின் பெயரிலேயே ‘வாலி’ இருக்கிறதே…” என்றாராம் .

Thanks to Mr. Chandran Veerasamy

idahihal
19th July 2013, 10:29 PM
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் மூலம் நாமக்கல் கவிஞர் மக்கள் திலகம் ஆட்சியைப் பிடிக்க வித்திட்டார்.
மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே
பாடல் மூலம் தஞ்சை ராமைய்யா தாஸ் அவர்கள் மக்கள் திலகம் முதலமைச்சராக வர அடித்தளம் அமைத்தார்.
நானே போடப்போறேன் சட்டம் பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
என்ற வரிகள் மூலம் பட்டுக்கோட்டையார் மக்கள் திலகம் ஆட்சிக் கட்டிலில் அமர உதவினார்.
நாடோடிமன்னன் பட வசனங்கள் மூலம் கண்ணதாசன் மக்கள் திலகம் ஆட்சிக்கட்டிலில் அமர உதவினார்.
ஆர்.எம்.வீரப்பன் மக்கள் திலகத்தை வடிவமைத்து அவரை இதய தெய்வமாக்கினார். இன்னும் நிறைய இப்படிப் பட்ட கதைகள் விடலாம். அவற்றை ஏன் பாக்கி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

idahihal
19th July 2013, 11:26 PM
மேலே உள்ள காமெடிக்கு சற்றும் சளைக்காத மற்றொரு காமெடி உங்கள் பார்வைக்கு
http://www.youtube.com/watch?v=ftU5AYZTLQs

Richardsof
20th July 2013, 04:40 AM
http://i44.tinypic.com/ztfbpv.jpg

Richardsof
20th July 2013, 05:31 AM
திரு வாலி அவர்கள் மக்கள் திலகத்திற்கு எழதிய காதல்

பாடல்களில் முதல் 15 இடம் பிடித்த பாடல்கள் .

என் விருப்பம் .

1.இந்த புன்னகை என்ன விலை - தெய்வத்தாய்

2.தொட்டால் பூ மலரும் - படகோட்டி

3.பெண் போனால் ..இந்த பெண் போனால் - எங்க வீட்டு பிள்ளை .

4.எங்கிருந்தோ ஆசைகள் - சந்திரோதயம்

5.நான் பார்த்ததிலே அவள் - அன்பே வா

6.மெல்லப்போ .. மெல்லப்போ - காவல்காரன்

7.நீயேதான் எனக்கு மணவாட்டி - குடியிருந்த கோயில்

8.தங்க பதக்கத்தின் மேல ..ஒரு முத்து- எங்கள் தங்கம்

9.நாம் ஒருவரை ஒருவர் ...- குமரிகோட்டம்

10.அழகிய தமிழ் மகள் - ரிக்ஷாக்காரன்

11.மாலை நேர தென்றல் - நீரும் நெருப்பும்

12.கண்ணன் எந்தன் காதலன் ..........ஒரு தாய் மக்கள்

13.பன்சாயீ ...காதல் பறைவகள் --உலகம் சுற்றும் வாலிபன்

14.நீல நயனங்களில் ------நாளை நமதே

15.மயங்கும் வயது - கணவன்

oygateedat
20th July 2013, 06:35 AM
Courtesy-thirumathi jothi / kumudham snehidhi

சிநேகிதி ஆசிரியருக்கு,

இப்போது எனக்கு வயது ஐம்பத்தொன்று.

என் வலது பக்கம் நான்கு வருடங்களுக்கு முன் பக்க வாத நோயால் செயலிழந்து போனது. இந்தக் கடிதத்தைக்கூட இடது கையால்தான் சற்றே நடுக்கமான எழுத்துக்களால் எழுதி அனுப்பியுள்ளேன். என் இடது மார்பை புற்றுநோய் காரணமாக மூன்று வருடங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட்டார்கள். இதுபோன்ற ஒரு கஷ்டமான நேரத்தில், குமுதம் சிநேகிதி எனக்குக் காட்டும் அன்பாலும், ஆறுதலான வார்த்தைகளாலும், தன்னம்பிக்கை மொழிகளாலும்தான், நான் புதுப் பிறவி எடுத்ததுபோல வாழ்கின்றேன்.

நான் எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோவில் பதினான்கு வருடங்கள் பணிபுரிந்தவள். அந்த நாட்களில் அவரை நேரில் பார்த்து, பேசி அவரின் குண இயல்புகளைக் கண்டு வியந்தவள் நான். என் ஒரே மகனுக்கும் சத்யா என்று அவருடைய அன்புத் தாயின் பெயரை வைத்திருக்கிறேன்!’

_ என்று மிக உருக்கமாக எழுதிய ஒரு கடிதம் நம் கவனத்தைக் கவர..

மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டி பொள்ளாச்சியில் வசிக்கும் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

ஜோதி பிரபா மிக மரியாதையாக தலைவர் என்றுதான் எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப்பிடுகிறார். எம்.ஜி.ஆர். மீது அப்படியரு அபிமானம், மரியாதை, அன்பு, விசுவாசம்!
http://i40.tinypic.com/2gsoa39.jpg
எம்.ஜி.ஆர். உபயோகப்படுத்திய தொப்பியையும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவர் வைத்திருந்த ஒரு புத்தர் சிலையையும் தன் பூஜை அறையில் வைத்திருக்கிறார் இந்த வாசகி. இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் அவரை நினைத்து வணங்கித்தான் மற்ற காரியங்களையே ஆரம்பிக்கிறார்.

ஜோதி பிரபா எம்.ஜி.ஆரோடு தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘எனது சித்தப்பா இராமலிங்கம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்.. சித்தப்பா மூலமாகத்தான் நான் சத்யா ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் ஒரே பெண்தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.

இராமலிங்க அடிகளார் மீது எம்.ஜி.ஆருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அதனால் என் சித்தப்பாவை ‘இராமலிங்கம்’ என்று அழைக்காமல் ‘வள்ளலாரே’ என்றுதான் அழைப்பார்.

அவர் முதலமைச்சர் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ந்து பதினாலு வருடங்கள், நான் அவரிடம் வேலை பார்த்தேன். முதலமைச்சர் ஆனபின்பும், தொடர்ந்து மிச்சமுள்ள தன் படங்களை நடித்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.

தான் ஒரு சி.எம். என்ற பந்தாவே இல்லாமல் நடிக்க வருவார். ஸ்டுடியோ தொழிலாளிகளின் மீது பழைய அன்பும், பாசமும் குறையாது பழகுவார். எந்தச் சூழ்நிலையிலும் தனது எளிமையையும், இரக்க குணத்தையும் விட்டு வெளியே வரவே மாட்டார்.

அவர் முதலமைச்சர் ஆன பின்பு, அவர் சத்யா ஸ்டுடியோவுக்குள் வந்தால், அவருக்கு வரும் எல்லா போன் கால்களுக்கும் பதில் சொல்லவே எனக்கு நேரம் சரியாக இருக்கும். சிலசமயம் மதியம் உணவுகூட சாப்பிடாமல் இருப்பேன். ஞாபகமாக வந்து ‘சாப்பிட்டாயா? முதலில் போய்ச் சாப்பிடு.. அப்புறம்தான் வேலை’ என்பார்.

யார் தப்பு செய்தாலும் உடனே கண்டித்து விடுவார்.. அப்புறம் பத்து நிமிடங்கள் கழித்து அவர்களைக் கூப்பிட்டுச் சமாதானப்படுத்துவது அவரின் இயல்பு! எத்தனையோ சினிமாப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வந்து போகும் இடத்தில் அமைதியான, அலட்டல் இல்லாத ஒரு பெண்ணாக நான் வேலை செய்வதை எல்லோரிடமும் பாராட்டிப் பேசுவார்.

தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆரிடம் அதிகாரத் தோரணையே கிடையாது. ஆடம்பரமும் கூட கிடையாது. தன்னைப் பிடிக்காத வர்களைக் கூட தன் பழக்கத்தால், தன் அணுகு முறையால், தன்னிடமே வரும்படி செய்து விடுவார். வயதில் பெரியவர்களுக்கு அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மிகவும் மரியாதை கொடுப்பார். மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்.

சத்யா மூவிஸ் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு டெய்லர், மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென இறந்து விட்டார். அவருக்குத் திருமண வயதில் மூன்று பெண்கள். அந்தப் பெண்களுக்கு எம்.ஜி.ஆர்.தான் முன்னே நின்று செலவு செய்து விளம்பரம் கூட இல்லாமல் திருமணம் செய்து வைத்தார்.
http://i43.tinypic.com/2gvkhu0.jpg
அங்கு வேலை செய்யும் பொழுது நான் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டேன். அவர் தன் காரையே தந்து உடனே என்னை மருத்துவமனைக்கு எடுத்துப் போகச் சொன்னார். மேனேஜர், உதவியாளர் போன்றவர்களையும் என்னுடன் மருத்துவமனையிலேயே இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்.

நான் வேலைக்குத் திரும்பியதும், ‘உனக்கு நரம்புத் தளர்ச்சி வரும் அளவுக்கு என்ன கவலை.. என்ன பிரச்சனை? இந்த இருபது. வயதில் இப்படியெல்லாம் வரக்கூடாது. உனக்கு என்ன உதவி வேண்டும் சொல்’’ என்று கேட்டபொழுது நான் மிகவும் நெகிழ்ந்து நின்றேன்..!

அவர் ஸ்டுடியோவில் இருக்கும் பொழுது குருவிக்காரர்களும், நரிக்குறவர்களும் அவரைப் பார்க்க அடிக்கடி வருவார்கள். ஒரு தடவை ஒரு காவலாளி அவர்களை உள்ளே விட மறுத்தார். இதைக் கவனித்த தலைவர் காவலாளியைக் கண்டித்து விட்டு, உடனே அவர்களை உள்ளே கூப்பிட்டார். சரிசமமாக அவர்களுடன் உட்கார்ந்து சிரித்துப் பேசி, அவர்களுக்குப் பல பரிசுகளும் கொடுத்து, சாப்பிட வைத்து அனுப்பினர்.

தலைவருக்கு ‘‘அம்மா’’ மீது மிகவும் பாசம். இது அவருடைய பல படங்களிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு வருடமும் அவர் தன் அம்மாவின் நினைவு நாளன்று மௌன விரதம் இருப்பார். முக்கியமான விஷயங்களை எழுதிக் காட்டுவார்.

தனது செயினில் இருந்த தன் அம்மா படம் பதித்த டாலரின் மீது தினமும் சந்தனம் வைத்து அதையும் பனியனுக்குள் வைத்துக் கொள்வார். தலைவருக்கு கடவுள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சத்யா ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் நிறைய பரிசுகள் வழங்கி அத்தனை பேர் மனசையும் கொள்ளை கொள்வார்.

சென்னையில் இருந்தால், எந்த நேரமாக இருந்தாலும், வீட்டுக்குப் போய் விடுவார். தலைவருக்கு மீன் உணவு ரொம்பவும் பிடிக்கும். அதைப் போல கீரை உணவையும் விரும்புவார். டீ, காபிக்கு பதிலாக பால் குடிப்பார். மது, புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஒடிக்கோலன் போட மிகவும் பிடிக்கும்.

தன் ராமாவரம் தோட்டத்தில் அடிக்கடி பெரிய விருந்து கொடுப்பார். எந்த விருந்தாக இருந்தாலும், எந்த உணவாக இருந்தாலும் வேகமாகச் சாப்பிட்டு விட்டு முதல் ஆளாக எழுந்து விடுவார். சமையல் கட்டுக்கும், பாத்திரம் சுத்தம் செய்யும் இடத்துக்கும் போய் அங்கு வேலை செய்யும் பெண்களுக்குச் சாப்பாடு இருக்கிறதா? சாப்பிட்டார்களா? என்று தனிப்பட்ட முறையில் கவனிப்பார். இது எந்தத் தலைவரும் சாதிக்க முடியாத எளிமையான அணுகுமுறை!

நான் அங்கே வேலைக்குப் போன புதிது... அந்த சமயம், அரசியலில் கலைஞருக்கும், தலைவருக்கும் இறுக்கமான ஒரு சூழ்நிலை இருந்த நேரம். கலைஞர் போனில் பேசினார். டெலிபோன் ஆபரேட்டராக நான் இருந்ததால் அவரது தொலைபேசி அழைப்பை நான்தான் கேட்டேன். உடனே தலைவரிடம் ‘‘கருணாநிதி பேசினார்’’ என்று நான் பாட்டுக்குச் சொல்லி விட்டேன். உடனே தலைவர் என்னைக் கண்டித்து, ‘‘கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். பெயரெல்லாம் சொல்லக்கூடாது.. உன்னை விட வயதில் பெரியவர்கள் பெயரைச் சொல்வது தவறு!’’ என்றார்.

தலைவர் வீட்டிலேயே வளர்ந்த அவரது. அண்ணன் மகளுக்குப் பிறந்த நாள் வந்தது. சரியாக தலைவர் வெளியிலிருந்து வீடு திரும்பிய சமயம் இருக்கும்படியாக பார்த்து மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டிக் கொண்டாட ஆரம்பித்தனர்

‘‘ஏற்றிய ஒளியை பிறந்த நாள் அன்று அணைப்பது தவறு.... கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்! நமக்குத் தேவையில்லை. நமது பண்பாட்டுப்படி விளக்கேற்றி விட்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம். இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்துக்களையும்தான் நாம் பெற வேண்டும்!’’ என்று சொல்லிக் கண்டித்தார்.

திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். தனக்கென்று எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் வைத்துக் கொள்ளாத ஒரு மனைவி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தன் கணவரின் நலம் மட்டுமே.

தலைவர் துரோகம் செய்பவர்களை விட்டு ஒதுங்கி விடுவார். அல்லது ஒதுக்கி விடுவார். சினிமாத் துறையில் நஷ்டப்பட்ட எத்தனையோ நல்லவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்.

தான தருமங்கள், படிக்க உதவி, வேலைவாய்ப்பு, எளிய மக்களுக்கு நலவாழ்வு இந்த இலட்சியத்தை கடைசி வரை கை விடவில்லை.

அனைத்து மதத்தினரையும் அரவணைத்து அரசியல் நடத்தினார். தனிப்பட்ட வாழ்விலும் அதையேதான் கடைப் பிடித்தார். அதனால்தான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த பொழுது இவர் குணமடைய பள்ளி வாசல்களிலும், கிறித்துவ தேவாலயங்களிலும் இந்துக்கள் கோயில்களிலும் இடைவிடாது பிரார்த்தனைகள் நடந்தன!..

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அது தலைவர் ஒருவருக்கு மட்டுமே வாய்த்த நிஜம்! என்று எம்.ஜி.ஆரின் நினைவலைகளில் நெகிழ்கிறார் ஜோதி பிரபா கிருஷ்ணன்.

Dear Vinod Sir,

Very Nice article about our makkal thilagam.

Tk u Sir,

Regds,

S.RAVICHANDRAN

oygateedat
20th July 2013, 06:52 AM
http://i42.tinypic.com/34gt37n.jpg

idahihal
20th July 2013, 08:41 AM
Courtesy-thirumathi jothi / kumudham snehidhi

சிநேகிதி ஆசிரியருக்கு,

இப்போது எனக்கு வயது ஐம்பத்தொன்று.

என் வலது பக்கம் நான்கு வருடங்களுக்கு முன் பக்க வாத நோயால் செயலிழந்து போனது. இந்தக் கடிதத்தைக்கூட இடது கையால்தான் சற்றே நடுக்கமான எழுத்துக்களால் எழுதி அனுப்பியுள்ளேன். என் இடது மார்பை புற்றுநோய் காரணமாக மூன்று வருடங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட்டார்கள். இதுபோன்ற ஒரு கஷ்டமான நேரத்தில், குமுதம் சிநேகிதி எனக்குக் காட்டும் அன்பாலும், ஆறுதலான வார்த்தைகளாலும், தன்னம்பிக்கை மொழிகளாலும்தான், நான் புதுப் பிறவி எடுத்ததுபோல வாழ்கின்றேன்.

நான் எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோவில் பதினான்கு வருடங்கள் பணிபுரிந்தவள். அந்த நாட்களில் அவரை நேரில் பார்த்து, பேசி அவரின் குண இயல்புகளைக் கண்டு வியந்தவள் நான். என் ஒரே மகனுக்கும் சத்யா என்று அவருடைய அன்புத் தாயின் பெயரை வைத்திருக்கிறேன்!’

_ என்று மிக உருக்கமாக எழுதிய ஒரு கடிதம் நம் கவனத்தைக் கவர..

மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டி பொள்ளாச்சியில் வசிக்கும் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

ஜோதி பிரபா மிக மரியாதையாக தலைவர் என்றுதான் எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப்பிடுகிறார். எம்.ஜி.ஆர். மீது அப்படியரு அபிமானம், மரியாதை, அன்பு, விசுவாசம்!
http://i40.tinypic.com/2gsoa39.jpg
எம்.ஜி.ஆர். உபயோகப்படுத்திய தொப்பியையும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவர் வைத்திருந்த ஒரு புத்தர் சிலையையும் தன் பூஜை அறையில் வைத்திருக்கிறார் இந்த வாசகி. இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் அவரை நினைத்து வணங்கித்தான் மற்ற காரியங்களையே ஆரம்பிக்கிறார்.

ஜோதி பிரபா எம்.ஜி.ஆரோடு தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘எனது சித்தப்பா இராமலிங்கம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்.. சித்தப்பா மூலமாகத்தான் நான் சத்யா ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் ஒரே பெண்தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.

இராமலிங்க அடிகளார் மீது எம்.ஜி.ஆருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அதனால் என் சித்தப்பாவை ‘இராமலிங்கம்’ என்று அழைக்காமல் ‘வள்ளலாரே’ என்றுதான் அழைப்பார்.

அவர் முதலமைச்சர் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ந்து பதினாலு வருடங்கள், நான் அவரிடம் வேலை பார்த்தேன். முதலமைச்சர் ஆனபின்பும், தொடர்ந்து மிச்சமுள்ள தன் படங்களை நடித்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.

தான் ஒரு சி.எம். என்ற பந்தாவே இல்லாமல் நடிக்க வருவார். ஸ்டுடியோ தொழிலாளிகளின் மீது பழைய அன்பும், பாசமும் குறையாது பழகுவார். எந்தச் சூழ்நிலையிலும் தனது எளிமையையும், இரக்க குணத்தையும் விட்டு வெளியே வரவே மாட்டார்.

அவர் முதலமைச்சர் ஆன பின்பு, அவர் சத்யா ஸ்டுடியோவுக்குள் வந்தால், அவருக்கு வரும் எல்லா போன் கால்களுக்கும் பதில் சொல்லவே எனக்கு நேரம் சரியாக இருக்கும். சிலசமயம் மதியம் உணவுகூட சாப்பிடாமல் இருப்பேன். ஞாபகமாக வந்து ‘சாப்பிட்டாயா? முதலில் போய்ச் சாப்பிடு.. அப்புறம்தான் வேலை’ என்பார்.

யார் தப்பு செய்தாலும் உடனே கண்டித்து விடுவார்.. அப்புறம் பத்து நிமிடங்கள் கழித்து அவர்களைக் கூப்பிட்டுச் சமாதானப்படுத்துவது அவரின் இயல்பு! எத்தனையோ சினிமாப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வந்து போகும் இடத்தில் அமைதியான, அலட்டல் இல்லாத ஒரு பெண்ணாக நான் வேலை செய்வதை எல்லோரிடமும் பாராட்டிப் பேசுவார்.

தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆரிடம் அதிகாரத் தோரணையே கிடையாது. ஆடம்பரமும் கூட கிடையாது. தன்னைப் பிடிக்காத வர்களைக் கூட தன் பழக்கத்தால், தன் அணுகு முறையால், தன்னிடமே வரும்படி செய்து விடுவார். வயதில் பெரியவர்களுக்கு அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மிகவும் மரியாதை கொடுப்பார். மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்.

சத்யா மூவிஸ் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு டெய்லர், மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென இறந்து விட்டார். அவருக்குத் திருமண வயதில் மூன்று பெண்கள். அந்தப் பெண்களுக்கு எம்.ஜி.ஆர்.தான் முன்னே நின்று செலவு செய்து விளம்பரம் கூட இல்லாமல் திருமணம் செய்து வைத்தார்.
http://i43.tinypic.com/2gvkhu0.jpg
அங்கு வேலை செய்யும் பொழுது நான் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டேன். அவர் தன் காரையே தந்து உடனே என்னை மருத்துவமனைக்கு எடுத்துப் போகச் சொன்னார். மேனேஜர், உதவியாளர் போன்றவர்களையும் என்னுடன் மருத்துவமனையிலேயே இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்.

நான் வேலைக்குத் திரும்பியதும், ‘உனக்கு நரம்புத் தளர்ச்சி வரும் அளவுக்கு என்ன கவலை.. என்ன பிரச்சனை? இந்த இருபது. வயதில் இப்படியெல்லாம் வரக்கூடாது. உனக்கு என்ன உதவி வேண்டும் சொல்’’ என்று கேட்டபொழுது நான் மிகவும் நெகிழ்ந்து நின்றேன்..!

அவர் ஸ்டுடியோவில் இருக்கும் பொழுது குருவிக்காரர்களும், நரிக்குறவர்களும் அவரைப் பார்க்க அடிக்கடி வருவார்கள். ஒரு தடவை ஒரு காவலாளி அவர்களை உள்ளே விட மறுத்தார். இதைக் கவனித்த தலைவர் காவலாளியைக் கண்டித்து விட்டு, உடனே அவர்களை உள்ளே கூப்பிட்டார். சரிசமமாக அவர்களுடன் உட்கார்ந்து சிரித்துப் பேசி, அவர்களுக்குப் பல பரிசுகளும் கொடுத்து, சாப்பிட வைத்து அனுப்பினர்.

தலைவருக்கு ‘‘அம்மா’’ மீது மிகவும் பாசம். இது அவருடைய பல படங்களிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு வருடமும் அவர் தன் அம்மாவின் நினைவு நாளன்று மௌன விரதம் இருப்பார். முக்கியமான விஷயங்களை எழுதிக் காட்டுவார்.

தனது செயினில் இருந்த தன் அம்மா படம் பதித்த டாலரின் மீது தினமும் சந்தனம் வைத்து அதையும் பனியனுக்குள் வைத்துக் கொள்வார். தலைவருக்கு கடவுள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சத்யா ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் நிறைய பரிசுகள் வழங்கி அத்தனை பேர் மனசையும் கொள்ளை கொள்வார்.

சென்னையில் இருந்தால், எந்த நேரமாக இருந்தாலும், வீட்டுக்குப் போய் விடுவார். தலைவருக்கு மீன் உணவு ரொம்பவும் பிடிக்கும். அதைப் போல கீரை உணவையும் விரும்புவார். டீ, காபிக்கு பதிலாக பால் குடிப்பார். மது, புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஒடிக்கோலன் போட மிகவும் பிடிக்கும்.

தன் ராமாவரம் தோட்டத்தில் அடிக்கடி பெரிய விருந்து கொடுப்பார். எந்த விருந்தாக இருந்தாலும், எந்த உணவாக இருந்தாலும் வேகமாகச் சாப்பிட்டு விட்டு முதல் ஆளாக எழுந்து விடுவார். சமையல் கட்டுக்கும், பாத்திரம் சுத்தம் செய்யும் இடத்துக்கும் போய் அங்கு வேலை செய்யும் பெண்களுக்குச் சாப்பாடு இருக்கிறதா? சாப்பிட்டார்களா? என்று தனிப்பட்ட முறையில் கவனிப்பார். இது எந்தத் தலைவரும் சாதிக்க முடியாத எளிமையான அணுகுமுறை!

நான் அங்கே வேலைக்குப் போன புதிது... அந்த சமயம், அரசியலில் கலைஞருக்கும், தலைவருக்கும் இறுக்கமான ஒரு சூழ்நிலை இருந்த நேரம். கலைஞர் போனில் பேசினார். டெலிபோன் ஆபரேட்டராக நான் இருந்ததால் அவரது தொலைபேசி அழைப்பை நான்தான் கேட்டேன். உடனே தலைவரிடம் ‘‘கருணாநிதி பேசினார்’’ என்று நான் பாட்டுக்குச் சொல்லி விட்டேன். உடனே தலைவர் என்னைக் கண்டித்து, ‘‘கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். பெயரெல்லாம் சொல்லக்கூடாது.. உன்னை விட வயதில் பெரியவர்கள் பெயரைச் சொல்வது தவறு!’’ என்றார்.

தலைவர் வீட்டிலேயே வளர்ந்த அவரது. அண்ணன் மகளுக்குப் பிறந்த நாள் வந்தது. சரியாக தலைவர் வெளியிலிருந்து வீடு திரும்பிய சமயம் இருக்கும்படியாக பார்த்து மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டிக் கொண்டாட ஆரம்பித்தனர்

‘‘ஏற்றிய ஒளியை பிறந்த நாள் அன்று அணைப்பது தவறு.... கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்! நமக்குத் தேவையில்லை. நமது பண்பாட்டுப்படி விளக்கேற்றி விட்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம். இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்துக்களையும்தான் நாம் பெற வேண்டும்!’’ என்று சொல்லிக் கண்டித்தார்.

திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். தனக்கென்று எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் வைத்துக் கொள்ளாத ஒரு மனைவி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தன் கணவரின் நலம் மட்டுமே.

தலைவர் துரோகம் செய்பவர்களை விட்டு ஒதுங்கி விடுவார். அல்லது ஒதுக்கி விடுவார். சினிமாத் துறையில் நஷ்டப்பட்ட எத்தனையோ நல்லவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்.

தான தருமங்கள், படிக்க உதவி, வேலைவாய்ப்பு, எளிய மக்களுக்கு நலவாழ்வு இந்த இலட்சியத்தை கடைசி வரை கை விடவில்லை.

அனைத்து மதத்தினரையும் அரவணைத்து அரசியல் நடத்தினார். தனிப்பட்ட வாழ்விலும் அதையேதான் கடைப் பிடித்தார். அதனால்தான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த பொழுது இவர் குணமடைய பள்ளி வாசல்களிலும், கிறித்துவ தேவாலயங்களிலும் இந்துக்கள் கோயில்களிலும் இடைவிடாது பிரார்த்தனைகள் நடந்தன!..

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அது தலைவர் ஒருவருக்கு மட்டுமே வாய்த்த நிஜம்! என்று எம்.ஜி.ஆரின் நினைவலைகளில் நெகிழ்கிறார் ஜோதி பிரபா கிருஷ்ணன்.
அருமையான பதிவு. பாராட்டுக்கள். வினோத் சார் மேலும் மேலும் இது போன்ற அரிய தகவல்களைப் பதிவிட வேண்டுகிறேன்.

Richardsof
20th July 2013, 08:44 AM
நடிகர் திலகம் நினைவு நாள் 21.7.2013

மக்கள் திலகம் அவர்கள் நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றியும்

நட்பை பற்றியும் பல முறை பெருமையாக நினைவு

கூர்ந்துள்ளார் .

நடிகர் திலகத்தின் ''ஜல்லிக்கட்டு '' திரைப்பட நூறாவது நாள்

விழா- மக்கள் திலகம் திலகம் கலந்து கொண்ட கடைசி திரைப்பட விழா.


மக்கள் திலகம் ''பாரத் '' பட்டம் - பாராட்டு விழாவில்
பேசிய உரை .

http://i41.tinypic.com/33ma16r.jpg
http://i39.tinypic.com/ohu4jc.jpg

http://i43.tinypic.com/2elh6k4.jpg

Richardsof
20th July 2013, 08:54 AM
JALLIK KATTU -100TH DAY CELEBRATION . MAKKAL THILAGAM WITH NADIGAR THILAGAM .

1987.

http://i49.tinypic.com/34dsawp.jpg

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/203a596a-e76a-4aab-af38-ddfa4009e2ec_zps42b3d012.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/203a596a-e76a-4aab-af38-ddfa4009e2ec_zps42b3d012.jpg.html)

oygateedat
20th July 2013, 10:49 AM
INVITATION RECEIVED FROM MR.KALAIVANAN.

http://i39.tinypic.com/2znqrsw.jpg

Richardsof
20th July 2013, 01:39 PM
1994- BANGALORE -MAKKAL THILAGAM MOVIES - RERELEASED THEATRE CUTOUTS-



http://i43.tinypic.com/2ppkaw5.jpg

Stynagt
20th July 2013, 01:47 PM
http://i42.tinypic.com/34gt37n.jpg

அழகிய கவிதை..அழகான பதிவு..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
20th July 2013, 02:55 PM
கவிஞர் வாலி ராணி வார இதழில் நான்கு வாரங்கள் மக்கள் திலகத்துடன் தமக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை எழுதினார். நமது திரி நண்பர்களுக்காக அதை இங்கு பதிவிடுகிறேன்.

http://i39.tinypic.com/2n0t4pu.jpg

oygateedat
20th July 2013, 02:57 PM
http://i43.tinypic.com/2ekkiae.jpg

oygateedat
20th July 2013, 03:02 PM
http://i39.tinypic.com/107vybk.jpg

oygateedat
20th July 2013, 03:05 PM
http://i41.tinypic.com/wimwx4.jpg

Richardsof
20th July 2013, 03:18 PM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்


மறைந்த பாடலாசிரியர் வாலி அவர்களின் பேட்டியின்

பதிவுகள் அருமை .

iufegolarev
20th July 2013, 03:44 PM
மேலே உள்ள காமெடிக்கு சற்றும் சளைக்காத மற்றொரு காமெடி உங்கள் பார்வைக்கு
http://www.youtube.com/watch?v=ftU5AYZTLQs


திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கு,

இந்த அறிவு ஜீவிகளை போல எவ்வளவோ பேர் இன்னும் இந்த புவியில் உலவிக்கொண்டுதான் இருக்கிறார்...என்னமோ கௌண்டமணி செந்தில் கதைபோல கதைவிடும் இந்த அற்ப புத்திக்காரன் யார் ?

இவனும் இவனுடைய யோகானந்த்-லேனா செட்டியார் கதை என்ற பெயரில் இவன் கூறும் பிதற்றலும் !!!

iufegolarev
20th July 2013, 04:14 PM
......

oygateedat
20th July 2013, 05:38 PM
http://i43.tinypic.com/dr59vo.jpg

oygateedat
20th July 2013, 05:41 PM
http://i43.tinypic.com/25k29e0.jpg

oygateedat
20th July 2013, 05:43 PM
http://i39.tinypic.com/2ugcn4z.jpg

oygateedat
20th July 2013, 05:47 PM
http://i44.tinypic.com/qpjsbp.jpg

iufegolarev
20th July 2013, 05:51 PM
நடிகர் திலகம் நினைவு நாள் 21.7.2013

மக்கள் திலகம் அவர்கள் நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றியும்

நட்பை பற்றியும் பல முறை பெருமையாக நினைவு

கூர்ந்துள்ளார் .

நடிகர் திலகத்தின் ''ஜல்லிக்கட்டு '' திரைப்பட நூறாவது நாள்

விழா- மக்கள் திலகம் திலகம் கலந்து கொண்ட கடைசி திரைப்பட விழா.


மக்கள் திலகம் ''பாரத் '' பட்டம் - பாராட்டு விழாவில்
பேசிய உரை .

http://i41.tinypic.com/33ma16r.jpg
http://i39.tinypic.com/ohu4jc.jpg

http://i43.tinypic.com/2elh6k4.jpg

அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு

தங்களுடைய திரியில் இன்று தங்கள் பதிவிட்டிருக்கும் நடிகர் திலகம் பற்றி மக்கள் திலகம் அவர்கள் தன மனதில் உள்ள எண்ணங்களை உரைத்த பதிப்பு, மிகவும் நன்று !!!

தக்க தருணத்தில் 2அவது முறையாக வெளியிட்டுளீர்கள்.

தங்களுடைய முதல் பதிவு சில நாட்களுக்கு முன்பு, குமுதம் ஆசிரியருக்கு நடிகர் திலகம் கண்டனம் தெரிவித்த பதிவு. அதுவும் நன்று...!

யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய பதிவு என்றுமே இருந்ததில்லை. ஆனால் சமீபகாலமாக ஒரு சிலர் வேண்டுமென்றே வம்புக்கிழுத்து சண்டையிடும் நோக்கத்தோடு பதிவு செய்கிறார்கள். அதற்க்கு தூபம் போடும் வகையில் சில நல்லவர்களும் அந்த பதிவுகளுக்கு "ஆமாஞ்சாமி " போடுகிறார்கள் ! .

ஒரு அளவு வரை பொறுமையாக இருக்கலாம். ஆனால், நம் பொறுமையை இயலாமை என்று எண்ணிவிடக்கூடாது என்பதற்காகதான் சில சந்தர்ப்பங்களில் பதிலுக்கு நாமும் பதிவு இடும் நிலை உருவாகிறது.

உங்களுடைய இந்த பதிவு ஒன்று போதும்...!

நடிகர் திலகத்தின் மேல் மக்கள் திலகம் வைத்திருக்கும் அன்பும், மதிப்பும் இதன் மூலம் வெளிச்சத்திருக்கு வந்துள்ளது..!

இரு தரப்பினர்க்கும் இது ஒரு நல்ல விஷயம்.

திரு.mgr அவர்களே நடிகர் திலகம் அவர்களின் சிறப்பை பற்றி இந்த விழாவில் பலர் முனிலையில் கூறியிருப்பது மிகவும் சிறந்த ஒரு உதாரணம்.

இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவன் வாக்கை மெய்பிக்கும் வகையிலும், "உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தெய்வம்" என்று வாய்க்கு வாய் வெறும் கூற்றோடு நிருத்திகொள்பவர்கள், மற்றவரை வேண்டுமென்றே வம்புக்கு இழுபவர்கள், அவர்கள் மக்கள் திலகத்தின் அறிவுரைப்படி நிஜமாகவே நடகிரார்களோ இல்லையோ....நான் அவரை அந்த ஒரு சிலரை போல தெய்வமாக நினைப்பவன் அல்ல.....இருந்தாலும் எப்போது எனது கண்கள் திரு.mgr அவர்கள் பொதுமேடையில் கூறிய இந்த பதிவை பார்த்ததோ, எப்பொழுது திரு.MGR அவர்கள் தான் கூறுவது தனது தாயின் மீது ஆணை என்று சொன்னாரோ அதை படித்தவுடன் அப்பொழுதே முடிவுசெய்துவிட்டேன், அந்த கண்ணியத்தை காப்பாற்ற எனது பதிவை நீக்கி விடுவதுதான் முறை என்று ! ...!

இதற்க்கு மேலும் "இயற்கை" "செயற்கை" என்று மற்றவர் இகழ் பாடுவார்களேயானால் அவர்கள் திரு MGR அவர்களை அவமானபடுதுவதோடு மட்டும் அல்லாமல், அவரையே ஏமாற்றுவதற்கும் சமமாகும் என்பது தான் உண்மை.

மீண்டும் ஒருமுறை தங்களுடைய பதிப்பிற்கு கோடானுகோடி நன்றி...எஸ்வி சார் !

oygateedat
20th July 2013, 07:14 PM
அன்பு நண்பர் திரு வினோத் இன்று திரு ஆரூர்தாஸ் தினத்தந்தியில் எழுதி வரும் தொடரை நமது திரியில் பதிவு செய்திருந்தார். படிக்க வசதியாக அதை இங்கே மீண்டும் பதிவிடுகிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்


‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தின் மறுபாதித் திரைக்கதையை மதிய உணவு இடைவேளைக்குப் பின் எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

நான் எதிர்பார்த்தபடி எம்.ஜி.ஆர். என்னை அவ்வளவாகப் பாராட்டவில்லை. பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் ஒரே வார்த்தையில் ஏதோ ஒப்புக்கு சொல்லவேண்டும் என் பதற்காகச் சொல்லியது போல ‘நல்லாயிருக்கு’ என்று சொன்னார்.

என் எழுத்துக்கள் எம்.ஜி.ஆருக்குப் பிடித்திருந்ததோ இல்லையோ, ஆனால் என்னை அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை என்னிடம் அவர் பேசியதிலிருந்தும், அவருடைய முகபாவங்களின் மூலமாகவும், மனோதத்துவ ரீதியாகவும் நான் நன்கு புரிந்து கொண்டேன்.

தேவர் அண்ணனுக்கும் அது விளங்காமல் இல்லை.

திரும்பி வரும்பொழுது தேவரண்ணன் என்னைக் கேட்டார்:–

‘அப்பா! எம்.ஜி.ஆர். எடுத்த உடனே, கதை கேக்குறதை விட்டுட்டு, சிவாஜியைப் பத்தியே உங்கிட்டே கேட்டாரே, அது ஏன்னு நீ புரிஞ்சிக்கிட்டியா?’.

‘நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன் அண்ணே. எம்.ஜி.ஆருக்கு என்னை அறவே பிடிக்கலே. இது முந்தியே எனக்குத் தெரிஞ்சிருந்து – நான் எழுதத் தொடங்குவதற்கு முன்னால எம்.ஜி.ஆரும் நீங்களும் மறுபடியும் ஒண்ணா சேந்திட்டிங்கன்னு வச்சிக்குங்க, சத்தியமா இந்தப் படத்துக்கு எழுத நான் சம்மதிச்சிருக்க மாட்டேன்’.

‘சோத்துக்கு இல்லேன்னாலும் சுயமரியாதையை விடக்கூடாது’ அப்படிங்குற கொள்கை உள்ளவன் நான். என்னை, தலைமுடியிலேருந்து கால் அடிவரையிலும் ஒங்களுக்கு நல்லா தெரியும்.

எம்.ஜி.ஆர். ரெண்டாவது தடவையா தேவர் பிலிம்சுக்கு வர்றதுக்கு முந்தியே நான் ஒங்ககிட்டே வந்திட்டேன். அவர் இந்தப்படத்துல நடிக்கப்போறார்னு நீங்க எங்கிட்டே சொன்னதுலேருந்தே எம்மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சி.

பரவாயில்லே. எழுதுனதை எழுதிட்டேன். அடுத்த படத்துலேயும் அவர்தான் நடிக்கப்போறார்னா வேண்டாம். இதோட என்னை விட்டுடுங்க.

ரெண்டாவது – எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட ‘சீன்ஸ்’ ஷூட்டிங் நடக்கும்போது நான் செட்டுக்கு வரணும் – வருவேன்னு தயவு
செஞ்சி எதிர்பார்க்காதீங்க. வரமாட்டேன்.

இந்தப்படத்தைப் பொறுத்தவரைக்கும் எம்.ஜி.ஆர்.தான் ஒங்களுக்கு முக்கியம். அவருக்கு அடுத்தபடிதான் நாங்க. அவரை வச்சித்தான் வியாபாரம். நாங்க வெறும் துணைப் பாத்திரங்கள். இந்தப்படத்துல ஒங்களுக்கு நல்ல லாபம் கிடைக் கணும்னு என் மாதாவை மனசார வேண்டிக்குறேன். நீங்களும் ஒங்க முருகன்கிட்டே எனக்காக வேண்டிக்கிட்டு என்னை விட்டுடுங்க’.

கூறி முடித்தேன், கும்பிட்டேன்.

கார் தேவர் பிலிம்ஸ் அலுவலகத்தில் வந்து நின்றது. நான் சொன்னேன்:–

‘அண்ணே! இதோ பைல் இருக்கு. வச்சிக்குங்க. நான் போய் வீட்டுல எறங்கிக்கிறேன்’.

‘ஒரு நிமிஷம் எங்கூட மேலவா. பைல் வண்டியிலே இருக்கட்டும்’.

‘வர்றேன், பைல் எங்கிட்டே எதுக்கு? அது உங்களுக்குத்தானே?’.

‘நீ வா சொல்றேன்’ என்று என் கையைப் பிடித்து காரிலிருந்து இறக்கி மாடிக்கு அழைத்துக்கொண்டு போனார்.

அறையில் அமர்ந்தோம். அண்ணன் பேசினார்.

‘நான் சொல்லப்போறதைக் கொஞ்சம் பொறுமையா கேட்டுக்க. குறுக்கே எதுவும் பேசாதே. அந்த பைலை உன் வீட்டுக்குக் கொண்டுபோய் வழக்கம்போல மாதாகிட்டே வச்சி இந்தப்படம் நல்லா வரணும்னு வேண்டிக்க.

வர்ற அமாவாசை அன்னிக்கு நம்ம திட்டப்படி வாகினியில பூஜையோட ஷூட்டிங் ஆரம்பமாகி, ஒரே மாசத்துல படத்தை முடிச்சு தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணியாகணும்.

பூஜைக்கு நீ வரமாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டின்னா இந்தப்படமே எனக்கு வேண்டாம். எம்.ஜி.ஆருக்கேத்த வேற கதை பார்த்துக்குறேன். நீ எழுதுனது அப்படியே இருக்கட்டும். அதைப்பத்தி அப்புறம் யோசிக்கலாம்.

பூஜைக்கு வழக்கம்போல காலையிலே நானே உன் வீட்டுக்கு வந்து உன்னை அழைச்சிக்கிட்டுப் போறேன்.

பூஜை முடிஞ்சதும் பாட்டுத்தானே எடுக்கப்போறோம். அதுக்கு முன்னால ஒரு சின்ன சீன். அதோட நீ போயிடலாம். அதுக்கப்பறம் நீ சொன்ன மாதிரி எம்.ஜி.ஆர். இல்லாதப்போவெல்லாம் ஷூட்டிங்குக்கு வந்து வசனம் சொல்லிக்கொடு.

எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட சீனுக்கெல்லாம் மாரிமுத்தை வச்சு சமாளிச்சி, எப்படியாவது இந்தப் படத்தை முடிச்சுக்கிறேன். தயவு செஞ்சி...’ என்பதற்குள் நான் குறுக்கிட்டு: அண்ணனின் இரு கரங்களையும் இறுகப் பற்றிக்கொண்டு, ‘அண்ணே! எங்கிட்டே தயவு செஞ்சிங்குற அந்த ஒரு வார்த்தையை மட்டும் இப்போ இல்லே – எப்பவுமே சொல்லாதீங்க. அது ரொம்ப தப்பு. பூஜைக்கு நான் வரணும். அவ்வளவுதானே?’.

‘ஆமா’.

‘வர்றேன், என்ன ஆனாலும் சரி. நிச்சயமா வருவேன். ஆனா ஒரு நிபந்தனை. அதுக்கு மேல அங்கே நான் இருக்கமாட்டேன். நீங்களும் என்னை வற்புறுத்தக்கூடாதுன்னு ஒங்களை அன்போட கேட்டுக்குறேன்’.

‘இல்லே, வற்புறுத்தமாட்டேன். நீ இருக்கியோ இல்லியோ அது உன் இஷ்டம். அப்பா! இப்போதான் என் மனசுக்கு ஆறுதல். ராத்திரி நிம்மதியா தூங்குவேன்’.

அன்று அமாவாசை! காலை ஆறு மணி! கையில் கோப்புகளுடன் வீட்டு வாசலில் அண்ணனுக்காகத் தயாராகக் காத்திருந்தேன். சற்று நேரத்திற்குள் அண்ணனின் ராசியான எம்.எஸ்.இசட். 1879 ‘செவர்லட்’ கார் வந்து நின்றது. ஏறி அமர்ந்து கொண்டேன். அண்ணன் கேட்டார்.

‘மாதாகிட்டே பைலை வச்சி நல்லா வேண்டிக்கிட்டியா?’

‘வேண்டிக்கிட்டேண்ணே’.

‘ரொம்ப சந்தோஷம்’.

கோடம்பாக்கம் வடபழனி கோவிலின் முன்பு கார் நின்றது. இறங்கி உள்ளே போனோம். தண்டபாணி குருக்கள் தயாராக நின்று அண்ணனை வரவேற்று, மூலவர் முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கர்ப்பக்கிரகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அண்ணன் என்னிடமிருந்த பைல்களை வாங்கிக் குருக்களிடம் கொடுக்க, அவர் அதைப் பெற்றுக்கொண்டு விக்ரகத்தின் பாதத்தில் சாய்த்து வைத்தார்.

குருக்கள் பிசைந்த ஈரச் சந்தனத்தை எடுத்து விக்ரகத்தின் இரு தோள்களிலும் அப்பினார். கையை நீட்டினார். அண்ணன் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து என் மோதிரத்தையும் கொடுக்கச் சொன்னார். கொடுத்தேன்.

எங்கள் இரண்டு பேர் மோதிரங்களையும் முருகனின் இரு தோள்களிலும் அப்பியிருந்த சந்தனத்தில் பதித்துவிட்டு தாம்பாளத்தை எடுத்தார்.

அதில் இருந்த வில்வ இலை, செவ்வரளி, மரிக்கொழுந்து மல்லி, ரோஜா, சம்பங்கி முதலிய மலர்களின் இதழ்களை நான்கு விரல்களால் எடுத்துத் தூவியபடி ‘அபிராமி அந்தாதி’யின் செய்யுளான ‘கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும் கழுபிணி இல்லாத உடலும்’ என்று ஆரம்பித்து –

‘அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே – அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே’ என்று பாடி முடித்தார்!

அவருடைய கனத்த அந்த வெண்கலக் குரலைக் கேட்டதும் ‘இசை அரசு’ எம்.எம்.தண்டபாணி தேசிகரின் நினைவு எனக்கு வந்தது.

கட்டிக் கற்பூரத்தை ஏற்றி தீபாராதனை செய்தார். அண்ணன் கன்னத்தில் போட்டுக்கொண்டார். நான் என் எண்ணத்தில் போட்டுக்கொண்டேன்!

குருக்கள் பைல்களை எடுத்து அண்ணனிடம் கொடுத்தார். அண்ணன் அதை வாங்கி தன் கண்களில் ஒற்றிக்கொண்டு என்னிடம் கொடுத்தார். நான் அவரது பாதந்தொட்டுப் பணிவுடன் பெற்றுக் கொண்டேன்.

‘பைலைக் கொண்டுபோய் உன் கையாலேயே தம்பி திருமுகத்துகிட்டே கொடு’ என்றார்.

அங்கிருந்து புறப்பட்டோம்.

வாகினி ஸ்டூடியோ!

வழக்கமாக தேவர் பிலிம்ஸ் படப்பிடிப்பிற்கென்று ஒதுக்கப்படும் ஏழாம் எண் தளம்!

டைரக்டர் திருமுகம் தயாராக இருந்தார். பைல்களை அவரிடம் கொடுத்தேன். வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

நீண்ட காலத்திற்குப்பிறகு தேவர் பிலிம்சில் எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்பதால் பட விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் மற்றும் அண்ணனால் அழைக்கப்பட்ட நண்பர்களும் ஆக நிறைய பேர் பூஜைக்கு வந்திருந்தனர்.

ஒப்பனை முடிந்து எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் உள்ளே வந்தார்கள்.

குறிப்பிட்ட வேளையில் வழக்கம்போல நாகிரெட்டியார் வந்தார். வழக்கம்போல அவருடைய ராசியான கரங்களால் கேமராவின் பித்தானை அழுத்தி படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.

‘வெற்றி! வெற்றி!’ என்று கூறிக்கொண்டு ஒருபுறமிருந்து எம்.ஜி.ஆர். ஓடிவந்தார்.

எதிர்ப்புறமிருந்து ஓடிவந்த சரோஜாதேவி, ‘எனக்குந்தான் வெற்றி!’ என்று கூறியவாறு எம்.ஜி.ஆரின் அருகில் வந்து நின்று, ‘எங்கப்பா நம்ம கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டாரு’ என்றார்.

‘கட்–ஓகே!’ முதல் ஷாட் முடிந்தது.

‘வெற்றி! வெற்றி’யை அடுத்து, பாட்டு ஆரம்பிப்பதற்கு முன்பு வரையில் இடையில் உள்ள வசனங்கள் இப்பொழுது பேசப்படவேண்டும்.

எம்.ஜி.ஆர். கேட்டார்:–

‘அடுத்த வசனங்கள் என்ன? ஆசிரியர் எங்கே?’

‘இதோ இங்கேதான் இருக்கான். தாசு! அண்ணன் கூப்பிடுறாரு. வந்து வசனம் சொல்லு’ என்றார் அண்ணன்.

எம்.ஜி.ஆரின் அருகில் வந்தேன். கும்பிட்டேன் – கும்பிட்டார். உதவியாளர் மாரிமுத்துவிடமிருந்து வசனங்கள் படி எடுக்கப்பட்ட காகிதங்களை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்னதாக அந்தக் காட்சிக்கான சூழலை விளக்கிக் கூறினேன்.

கதாநாயகனுக்கு தந்தை இல்லை. நாயகிக்கு தாய் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து மணந்து கொள்ள முடிவு செய்து ஓர் இடத்தில் சந்திக்கின்றனர். அப்போது நாயகி சொல்கிறார்:– இதுதான் அந்த வசனம்:–

சரோஜாதேவி:– ‘ஒரு நல்ல நாளாப்பாத்து ஒங்கம்மாவை எங்க வீட்டுக்கு அனுப்பி எங்கப்பாகிட்டே என்னைப் பெண் கேக்கச் சொல்லுங்க’ என்க, அதற்கு எம்.ஜி.ஆர். சொல்கிறார்...

எம்.ஜி.ஆர்: ‘எங்கப்பா இறந்ததுலேருந்து, எங்க அம்மா எந்த ஒரு மங்கல காரியத்துலேயும் பங்கெடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா, கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுனம்னு சொல்லுவாங்க.

ஆனா நான் விடிஞ்சதும் எங்கம்மா முகத்துலதான் விழிக்கிறேன். அதனாலதான் எனக்கு வெற்றி மேல வெற்றி கிடைக்குது. எனக்கு தாய் தான் தெய்வம்! அந்தத்தாய் சொல்லைத் தட்டமாட்டேன்’.

இந்த வசனங்களை நான் படித்துவிட்டு அடுத்த வசனத்தைத் தொடங்குவதற்குள் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டு: ‘அந்த வசனத்தை இன்னொரு தடவை படிங்க’ என்றார்.

நான் என் கையிலிருந்த வசனக்காகிதத்தைப் பார்க்காமலேயே அவர் முகத்தை நோக்கியவாறு மேற்கண்ட வசனத்தைக் கூறத்தொடங்கினேன்.

எங்கே நான் சரியாகச் சொல்லமாட்டேனோ என்று எண்ணிய எம்.ஜி.ஆர்...

‘பேப்பரைப் பார்த்துப்படிங்க’ என்றார்.

‘தேவை இல்லேண்ணே. ஒரு வசனத்தை நான் எழுதினாலோ, அல்லது எடுத்துச் சொன்னாலோ அது அப்படியே எனக்கு மனப்பாடம் ஆகிவிடும்.

இந்தப் படத்திற்கு நான் எழுதியிருக்கிற எல்லா வசனங்களுமே எனக்கு மனப்பாடமாகி விட்டது. எந்த ஒரு காட்சியைக் கேட்டாலும் அதன் வசனங்களை வாயாலேயே சொல்வேன். பார்த்துப் படிக்க வேண்டிய அவசியம் இல்லே.

இந்த பேப்பரை நீங்க கையிலே வச்சிக்குங்க. இதுல எழுதியிருக்கிற வசனத்தை நான் சொல்றேன். சரியா இருக்கான்னு ‘செக்’ பண்ணுங்க’ என்றேன்.

இதைக்கேட்டதும் சற்று திகைப்படைந்த எம்.ஜி.ஆர்:– ‘அப்படின்னா ஒங்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்குன்னு நினைக்கிறேன். மகிழ்ச்சி. சரி, இன்னொரு தடவை சொல்லுங்க’ என்றார்.

சொன்னேன்.

அதற்கு அவர்... ‘பாட்டு ஆரம்பிக்கிறதுக்கு இது ஒரு சாதாரண எடுப்புக் காட்சி தானே. அதுக்குப்பதிலா, எந்த நோக்கத்துல, எதுக்காக, இந்த இடத்துல இந்த வசனத்தை எழுதியிருக்கீங்க?’ என்றார்.

அதற்கு நான் இப்டிச் சொன்னேன்:–

‘கணவனை இழந்த கைம்பெண்களைப் பாக்குறதும், அவுங்க எதிர்ல வந்தா ஒதுங்கிக்கிறதுமான – முட்டாள்தனமான மூடப்பழக்கத்தைக் கண்டிக்கிறதுக்கும் –

ஒரு பிள்ளைக்குத் தன் தாய்கிட்டே இருக்குற பாசத்தைச் சொல்லித் தாய்மையைப் பெருமைப்படுத்துறதுக்கும், ‘தாய் சொல்லைத் தட்டாதே’ அப்படிங்குற பேரை – அதாவது டைட்டிலை கதாநாயகன் வாயாலே சொல்ல வைக்குறதுக்காகவும்தான் இந்த சிச்சுவேஷனை நான் பயன்படுத்திக்கிட்டு இப்படி எழுதியிருக்கேன்’ என்றேன்.

அதற்கு எம்.ஜி.ஆர். சொன்னார்:–

‘சமூகப் படங்கள்ள கதைக்குப் பொருந்துறது மாதிரி, இதாட்டம் நல்ல சீர்திருத்தக் கருத்துக்களை வசனங்கள் மூலமா சொல்லலாமா? சொல்ல முடியுமா?’.

சொல்ல முடியும். அவசியம் சொல்லணும். நான் சொல்லுவேன். நிறைய சொல்லியும் இருக்கேன். அண்ணனுக்கு நான் ஏற்கனவே எழுதின என் முதல் படமான வாழவைத்த தெய்வம் படத்துல.

‘சிற்றூரும் வரப்பெடுத்த வயலும், ஆறு தேக்கிய நல்வாய்க்காலும் வகைப்படுத்தி நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும் நிறை உழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?...’ அப்படிங்குற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனோட கவிதை வரிகளை கதாநாயகன் ஜெமினிகணேசன் வாயாலே சொல்ல வச்சிருக்கேன்’.

‘ஆமாமா. அந்தசீன்ல தியேட்டர்ல ரசிகர்கள் கைதட்டுனாங்க’ என்றார் அருகில் இருந்த தேவரண்ணன்.

இதோடு எம்.ஜி.ஆர். என்னை விடவில்லை. தொடர்ந்தார். என்னைத் துளைத்தார்.

‘நீங்க முற்போக்கு எண்ணங் கொண்டவரா?’

‘ஆமா, என் வீடு இருக்கிற தியாகராயநகர் நாதமுனி தெருவுல நிறைய பிராமணர்கள் வசிக்கிறாங்க. அது ஒரு அக்ரகாரம் மாதிரி. நான் பூஜை அறையில் என் மாதாவைக் கும்பிட்டுட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டு தெருவுல வரும்போது எதிர்ல ஒத்தை பிராமணர் வந்தாலோ, இல்லே ‘கணவரை இழந்த கைம்பெண்கள் வந்தாலோ, அதைக் கொஞ்சங்கூடப் பொருட்படுத்தமாட்டேன். நான்பாட்டுக்க போய்க்கிட்டே இருப்பேன். அது மட்டுமில்லே, ‘என்ன மாமா சவுக்கியமா? மாமி! நன்னாருக்கேளா’ன்னு கேட்டு நின்னு விசாரிசிட்டுப்போவேன். போற காரியம் நல்லபடியாவே நடக்கும். ஒண்ணும் ஆகாது.

அண்ணே! ஒங்களுக்குத் தெரியாதது ஒண்ணும் இல்லே. எல்லாம் தெரிஞ்சவர் நீங்கங்குறது எனக்குத் தெரியும். ஆனாலும் ஒங்களுக்கு ஒண்ணு சொல்றேன்.

எல்லாருமே சகுனம் பாக்குறது அவனவன் வீட்டுக்குள்ளே இல்லே. ஏன்னா, உள்ளே கணவனை இழந்த அக்கா தங்கச்சிங்க, அம்மாங்க இருப்பாங்க. அவுங்க எதிர்ல வரக்கூடாதுன்னு எவனாவது ஒருத்தன் சொல்வானா? அப்படிச்சொன்னா, அவனை அடிச்சிக்கொன்னுடணும். உயிரோட வச்சிருக்கக் கூடாது. ஏன்னா அவன் மிகக் கொடியவன்!

(தேவரண்ணனைக் காட்டி) இதோ இருக்காரே அண்ணன். இவருக்கு அப்பா இல்லே. அம்மா மட்டுந்தான். அதுவும் எப்படி? தும்பைப்பூ மாதிரி வெள்ளை வெளேர்னு புடவை கட்டிக்கிட்டு நிப்பாங்க. அவுங்க அந்தக் காலத்து அம்மா! அப்படித்தான்.

அதுக்காக அண்ணன் அவுங்களைப் பார்க்காம இருக்காரா? தினமும் ஒரு தடவை போய் அவுங்களைப் பாக்காம இருக்கமாட்டாரு. இன்னிக்குக்கூட விடியக்காலையிலேயே அம்மாகிட்டே போய் அவுங்க காலைத்தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு அப்புறம்தான் முருகன் கிட்டே போனாரு.

என்னைப் பொறுத்த வரைக்கும் – ஒரு சினிமா படத்துல சீர்திருத்தக் கருத்துக்கள் – அறிவுரைகள் சொல்றதுக்கான ஒரு சிச்சுவேஷன் இருந்தா அதை நான் நல்லா பயன்படுத்திக்குவேன். சில சந்தர்ப்பத்துல கதைக்கு அப்பாற்பட்டு அப்படிப்பட்ட காட்சிகளை நான் உருவாக்கிக்கிறதும் உண்டு. நான் டயலாக்குல டிராமா பண்றவன்!

அண்ணே! கடைசியா ஒண்ணு சொல்றேன். ஒரு படத்துல வசனங்களை வெறும் ஒப்புக்காக நான் எழுதமாட்டேன். என் எழுத்துல உப்பும் இருக்கும். உயிரும் இருக்கும். இதை நான் சொல்றதைவிட ஒங்க வாயால நீங்க சொல்லி நான் அதைக் கேக்கணும். அதுக்கான காட்சிங்க பின்னால வந்துகிட்டிருக்கு.

சிவாஜிக்கு நான் எழுதுன முதல் படம் ‘பாசமலர்’ – தங்கை மேல அண்ணனுக்கு இருக்குற பாசத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒங்களுக்கு நான் எழுதுற இந்த முதல் படம் ‘தாய் சொல்லைத் தட்டாதே’. தாய்ப்பாசத்தை அடிப்படையாகக் கொண்டது.

அந்தத் தங்கைப்பாசம் வெற்றியடைஞ்சது மாதிரி இந்தத் தாய்ப்பாசமும் நிச்சயம் வெற்றி பெறும்கிற நம்பிக்கை எனக்கு உண்டு’.

என்னுடைய இந்த விளக்கங்களைக் கேட்ட எம்.ஜி.ஆர். உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கி, ஒரு நொடிப்பொழுதில் என்னை வெடுக்கென்று இழுத்துத் தன்னுடன் இறுக அணைத்துக்கொண்டு என் முதுகில் தட்டிக்கொடுத்தார்!

இந்தத் திடீர்க்காட்சியைக் கண்டு திகைத்து தேவரண்ணன் மகிழ்ந்து மலர்ந்து நின்றார்.

எம்.ஜி.ஆரின் அந்த அணைப்பு – தழுவல், ஒரு காதலன் காதலிக்கு இடையில் நிகழ்ந்தது போன்ற உணர்வில் என் நெஞ்சம் நெகிழ்ந்தது!

எதிர்பாராத இந்த இன்ப நிலையிலிருந்து மீள எனக்குச் சற்று அவகாசம் தேவைப்பட்டது.

எம்.ஜி.ஆர். சொன்னார்:–

‘இந்த வசனம் எனக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கு. அதனால தான் ஒங்களை அப்படி கேட்டேன்’.

‘இல்லேண்ணே, ஒங்களைச் சந்திக்கிறதுக்கு முந்தியே எழுதிட்டேன்’ என்றேன்.

இது எதையும் கவனிக்காமல் சரோஜாதேவி சற்றுத் தூரத்தில் அமர்ந்து கையில் கண்ணாடியுடன் முகத்தை ‘டச் அப்’ செய்து கொண்டிருந்தார் – அடுத்து வரும் பாட்டு ஷாட்டுக்காக.

நாயகனும், நாயகியும் வசனம் பேசி முடித்ததும் அதன் தொடர்பான –

‘ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் உருவில் அழகாய் அமைந்தவனாம்’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலுக்கான படப்பிடிப்பு தொடங்கியது. இனி எனக்கு அங்கு வேலை இல்லை என்பதால் எம்.ஜி.ஆர். அருகில் நான் சென்றேன்.

‘அண்ணே! நான் புறப்படுறேன்’.

‘எங்கே...?’

‘நெப்டியூன் ஸ்டூடியோவுல சிவாஜி நடிச்சி நான் வசனம் எழுதுற ‘படித்தால் மட்டும் போதுமா’ படம் ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு. அங்கே போகணும்’.

‘பரவாயில்லே. அதை அப்புறம் பாத்துக்கலாம். மத்தியானம் அண்ணன் என்னோட சாப்பிடுறாரு. நீங்களும் என்னோட சாப்பிடணும். சாயந்திரம் வரைக்கும் இங்கேயே என்னோட இருங்க’.

‘சரிண்ணே!’

காடைக்கு வைத்த கண்ணியில், கவுதாரி வந்து மாட்டிக்கொண்டதைப் போல கதையே மாறிவிட்டது! காட்சியும் வேறாகி விட்டது!

தப்பிவிடவேண்டும் என்று எண்ணியிருந்த நான், இனி தப்பவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்!

எம்.ஜி.ஆரைப்பற்றி என் மனமுற்றத்தில் தவறான புள்ளிகள் வைத்து நான் போட்டிருந்த அந்தத் தப்புக்கோலம் முற்றிலுமாக அழிந்தே போய்விட்டது.

அனுபவமின்மை – அத்துடன்கூட இளமை எழுச்சியின் காரணமாக நான் சற்று அவசரப்பட்டு விட்டேன்.

எம்.ஜி.ஆர். என்னை வென்றுவிட்டார்!

நான் அவரிடம் தோற்றுப்போய்விட்டேன்!

ஆனால், அந்தத் தோல்வி எனக்கு இன்பமாக இருந்தது!. இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் அந்தத் தூய உள்ளத்திடம் தோற்றுப்போக நான் தயாராக இருந்தேன்!.

(‘அண்ணனின் அருமை பெருமை’
– அடுத்த வாரம்)

தேவரண்ணன் சொன்ன ‘ஜோசியம்’

தாய் சொல்லைத்தட்டாதே படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் போது அருகில் தேவரண்ணனும் இருந்தார். எனது எழுத்தில் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர். என்னைத்தழுவி பாராட்டிய போது அதைப்பார்த்த அண்ணன் முகம் மலர்ந்தது. பின்னர் என்னைத் தனியே அழைத்துச் சென்று சொன்னார்...

‘அப்பா! நீ நெனைச்சதுக்கு நேர்மாறாயிடுச்சு. இனிமே, நான் வேண்டான்னு சொன்னாலும் எம்.ஜி.ஆர். உன்னை விடப்போறதில்லை. அந்த அளவுக்கு உன்னை அவருக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. ஒரே மாசத்துல நம்ம படம் முடிஞ்சிடும். அப்படித்தான் ‘ஷெட்யூல்’ போட்டு எம்.ஜி.ஆர். அதுக்கேத்தபடி தினமும் கால்ஷீட் கொடுத்திருக்காரு.

எம்.ஜி.ஆர். சீக்கிரம் படத்தை முடிக்க மாட்டார்னு அவருக்கு இருக்கிற அந்தக் கெட்டப்பேரு, நம்ம ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்தோட போயிடும். படபடன்னு வெளிப்படங்கள் வர ஆரம்பிக்கும். அவ்வளவுக்கும் உன்னைத்தான் எழுதச் சொல்லப்போறாரு. நீ வேணுன்னா பாரு – நான் சொல்றதுதான் நடக்கும். அந்த அளவுக்கு முதல் நாளே அவர் மனசுல இடம் பிடிச்சிட்டே. இன்னியோட உன்னைப்பத்தின என் கவலை போயிடுச்சி. இனி நீ உண்டு. அவர் உண்டு’.

அன்று காலை வரையில் ஒரு கிளை நதியாக இருந்த நான், இப்பொழுது எம்.ஜி.ஆர். என்னும் பெருநதியில் ஓர் உபநதியாகச் சேர்ந்து இரண்டறக் கலந்துவிட்டேன்!

அன்று தேவரண்ணன் சொன்ன அந்த ‘அனுபவ ஜோசியம்’ அப்படியே பலித்து எனக்குப் பலன் அளித்தது.

‘பாசமலர்’ படத்திற்குப்பிறகு எப்படி நான் சிவாஜிக்கு ‘ஆஸ்தான ஆசிரியர்’ ஆனேனோ – அதே போல இந்த ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கும் ‘ஹவுஸ் ரைட்டர்’ என்று ஆங்கிலத்தில் சொல்லும் ‘அவை எழுத்தாளர்’ ஆகி, அடுத்தடுத்து எம்.ஜி.ஆர். நடித்த அனைத்துப் படங்களுக்கும் எழுதினேன்!

ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர். – சிவாஜி இருவருக்கும் இடையில் நான் வசமாக மாட்டிக்கொண்டு திணறித் திண்டாடிப்போனேன்!

oygateedat
20th July 2013, 07:30 PM
எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமானவர் வாலி

http://i41.tinypic.com/wgys1u.jpg

* எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களுக்கு வாலி பாடல் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆருக்காக ‘படகோட்டி’ படத்தில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் பிரபலம். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப்பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’, ‘ரிக்ஷாக்காரன்’ என எம்.ஜி.ஆரின் எல்லா வெற்றிப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் கொள்கைகளை விளக்கும் கருத்துக்களை பாடல்களில் அற்புதமாக சேர்த்து அவருடைய பேரன்பை பெற்றவர்.

* வாலி முதன் முதலில் 1958–ம் ஆண்டு ‘அழகர்மலை கள்ளன்’ என்ற படத்தில், ‘‘நிலவும் தாரையும் நீயம்மா; உலகம் ஒருநாள் உனதம்மா’’ என்ற தாலாட்டு பாடலை எழுதினார். அந்த பாடலை பாடியவர் பி.சுசீலா.

* எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராக விளங்கியவர் வாலி. எம்.ஜி.ஆர், வாலியை ‘ஆண்டவனே’ என்றுதான் அன்புடன் அழைப்பார். எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய முதல் பாடல் ‘‘சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான்’’. இந்த பாடல் இடம் பெற்ற படம் ‘‘நல்லவன் வாழ்வான்’’. இந்த படம் 1961–ம் ஆண்டு ஆகஸ்டு 31–ந் தேதி வெளியானது.

* வாலி வீட்டில் தயாராகும் தோசை, மிளகாய் பொடிக்கு எம்.ஜி.ஆர். தீவிர ரசிகர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

* எம்.ஜி.ஆருக்கு ‘நல்லவன் வாழ்வான்’ தொடங்கி ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை 52 படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார்.

* ‘அடிமைப்பெண்’ படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பாடிய ‘அம்மா என்றால் அன்பு’ பாடல் வாலி எழுதியதுதான்.

From daily thanthi

pammalar
20th July 2013, 08:02 PM
Thanks for movie review of Puthiya Bhoomi Pammalar Sir.

'முத்தார' இதழின் "புதிய பூமி" விமர்சனப் பதிவுக்கு சத்தான பாராட்டை வழங்கிய தங்களுக்கு எனது நன்றி முத்தாரங்கள். ரூப்குமார் சார்..!

iufegolarev
20th July 2013, 08:03 PM
நடிகர் திலகம் நினைவு நாள் 21.7.2013

மக்கள் திலகம் அவர்கள் நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றியும்

நட்பை பற்றியும் பல முறை பெருமையாக நினைவு

கூர்ந்துள்ளார் .

நடிகர் திலகத்தின் ''ஜல்லிக்கட்டு '' திரைப்பட நூறாவது நாள்

விழா- மக்கள் திலகம் திலகம் கலந்து கொண்ட கடைசி திரைப்பட விழா.


மக்கள் திலகம் ''பாரத் '' பட்டம் - பாராட்டு விழாவில்
பேசிய உரை .

http://i41.tinypic.com/33ma16r.jpg
http://i39.tinypic.com/ohu4jc.jpg

http://i43.tinypic.com/2elh6k4.jpg

அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு

தங்களுடைய திரியில் இன்று தங்கள் பதிவிட்டிருக்கும் நடிகர் திலகம் பற்றி மக்கள் திலகம் அவர்கள் தன மனதில் உள்ள எண்ணங்களை உரைத்த பதிப்பு, மிகவும் நன்று !!!

தக்க தருணத்தில் 2அவது முறையாக வெளியிட்டுளீர்கள்.

தங்களுடைய முதல் பதிவு சில நாட்களுக்கு முன்பு, குமுதம் ஆசிரியருக்கு நடிகர் திலகம் கண்டனம் தெரிவித்த பதிவு. அதுவும் நன்று...!

யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய பதிவு என்றுமே இருந்ததில்லை. ஆனால் சமீபகாலமாக ஒரு சிலர் வேண்டுமென்றே வம்புக்கிழுத்து சண்டையிடும் நோக்கத்தோடு பதிவு செய்கிறார்கள். அதற்க்கு தூபம் போடும் வகையில் சில நல்லவர்களும் அந்த பதிவுகளுக்கு "ஆமாஞ்சாமி " போடுகிறார்கள் ! .

ஒரு அளவு வரை பொறுமையாக இருக்கலாம். ஆனால், நம் பொறுமையை இயலாமை என்று எண்ணிவிடக்கூடாது என்பதற்காகதான் சில சந்தர்ப்பங்களில் பதிலுக்கு நாமும் பதிவு இடும் நிலை உருவாகிறது.

உங்களுடைய இந்த பதிவு ஒன்று போதும்...!

நடிகர் திலகத்தின் மேல் மக்கள் திலகம் வைத்திருக்கும் அன்பும், மதிப்பும் இதன் மூலம் வெளிச்சத்திருக்கு வந்துள்ளது..!

இரு தரப்பினர்க்கும் இது ஒரு நல்ல விஷயம்.

திரு.mgr அவர்களே நடிகர் திலகம் அவர்களின் சிறப்பை பற்றி இந்த விழாவில் பலர் முனிலையில் கூறியிருப்பது மிகவும் சிறந்த ஒரு உதாரணம்.

இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவன் வாக்கை மெய்பிக்கும் வகையிலும், "உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தெய்வம்" என்று வாய்க்கு வாய் வெறும் கூற்றோடு நிருத்திகொள்பவர்கள், மற்றவரை வேண்டுமென்றே வம்புக்கு இழுபவர்கள், அவர்கள் மக்கள் திலகத்தின் அறிவுரைப்படி நிஜமாகவே நடகிரார்களோ இல்லையோ....நான் அவரை அந்த ஒரு சிலரை போல தெய்வமாக நினைப்பவன் அல்ல.....இருந்தாலும் எப்போது எனது கண்கள் திரு.mgr அவர்கள் பொதுமேடையில் கூறிய இந்த பதிவை பார்த்ததோ, எப்பொழுது திரு.MGR அவர்கள் தான் கூறுவது தனது தாயின் மீது ஆணை என்று சொன்னாரோ அதை படித்தவுடன் அப்பொழுதே முடிவுசெய்துவிட்டேன், அந்த கண்ணியத்தை காப்பாற்ற எனது பதிவை நீக்கி விடுவதுதான் முறை என்று ! ...!

இதற்க்கு மேலும் "இயற்கை" "செயற்கை" என்று மற்றவர் இகழ் பாடுவார்களேயானால் அவர்கள் திரு MGR அவர்களை அவமானபடுதுவதோடு மட்டும் அல்லாமல், அவரையே ஏமாற்றுவதற்கும் சமமாகும் என்பது தான் உண்மை.

மீண்டும் ஒருமுறை தங்களுடைய பதிப்பிற்கு கோடானுகோடி நன்றி...எஸ்வி சார் !

pammalar
20th July 2013, 08:15 PM
'மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள்'
பதிவுக்கு நன்றி..பம்மலார் ஸார்.

மிக்க நன்றி, masanam சார்..!

oygateedat
20th July 2013, 08:17 PM
http://i39.tinypic.com/2nusvm8.jpg

pammalar
20th July 2013, 08:35 PM
மக்கள் திலகத்தின் ''புதிய பூமி '' முத்தாரம் இதழின் விளம்பரம் மற்றும் விமர்சனம் ஒரிஜினல் பேப்பர் பதிவுகள் அருமை. நன்றி பம்மலார் சார்.


இனிய நண்பர் திரு பம்மல் சார்

மக்கள் திலகத்தை பற்றி குமுதம் ஜங்ஷன் இதழில் திரு வாலி அவர்கள் எழதிய கவிதை அருமை.
வரிக்கு வரி உயிர் பெறும் சத்திய வார்த்தைகள்.
பதிவிட்டமைக்கு நன்றி .

தங்களின் அன்பான, மனம் திறந்த தொடர் பாராட்டுக்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள், esvee சார்..!

ainefal
20th July 2013, 08:40 PM
http://i43.tinypic.com/2gw5qbb.jpg

pammalar
20th July 2013, 08:43 PM
நடிகர் திலகம் நினைவு நாள் 21.7.2013

மக்கள் திலகம் அவர்கள் நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றியும்

நட்பை பற்றியும் பல முறை பெருமையாக நினைவு

கூர்ந்துள்ளார் .

நடிகர் திலகத்தின் ''ஜல்லிக்கட்டு '' திரைப்பட நூறாவது நாள்

விழா- மக்கள் திலகம் திலகம் கலந்து கொண்ட கடைசி திரைப்பட விழா.


மக்கள் திலகம் ''பாரத் '' பட்டம் - பாராட்டு விழாவில்
பேசிய உரை .

http://i41.tinypic.com/33ma16r.jpg
http://i39.tinypic.com/ohu4jc.jpg

http://i43.tinypic.com/2elh6k4.jpg

டியர் esvee சார்,

1971-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த நடிகராக 'பாரத்' பட்டம் பெற்ற மக்கள் திலகத்துக்கு, அவரது உடன்பிறவா அன்புத்தம்பியான நடிகர் திலகம், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நடத்திய பாராட்டு விழாவினை, நடிகர் திலகத்தின் நினைவு நாள் அஞ்சலிப் பதிவாக, மக்கள் திலகம் திரியில் வெளியிட்டு, இரு திலகங்களின் உண்மையான ரசிகர்களுக்கும், குறிப்பாக இரு திலகங்களையும் நேசிக்கும் நேர்மையான ரசிகர்களுக்கும், பெரும் பரவசத்தை உண்டாக்கி விட்டீர்கள்..!

இரு திலகங்களுமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். இந்த விழாவில், நடிகர் திலகம் பற்றியும் அவர்தம் நடிப்பு குறித்தும் மக்கள் திலகம் கூறியுள்ள கருத்துக்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. பொன்மனச்செம்மல் என்று அவரை சும்மாவா சொன்னார்கள்..!

மக்கள் திலகத்தின் ரசிகராகிய தங்களின் இந்த தெளிந்த நீரோடை போன்ற உன்னதப் பதிவுக்கு, நடிகர் திலகத்தின் ரசிகனான என் சார்பிலும், அனைத்து நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பிலும், மக்கள் திலகத்துக்கு புத்தகம் வெளியிட்டவன் என்ற முறையிலும், மென்மேலும் தொடர்ந்து மக்கள் திலகத்துக்கு வரும் காலங்களில் பல புத்தகங்களை வெளியிடப் போகிறவன் என்ற முறையிலும், அனைத்து மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பிலும், சுருங்கக்கூறின் இரு திலகங்களின் ரசிகர்கள் சார்பிலும் எனது எண்ணிலடங்கா நன்றிகளைத் தெரிவித்து தங்களை இதயபூர்வமாக பாராட்டுகின்றேன் !

வாழ்க இரு திலகங்களின் புகழ் !!!

பாசத்துடன்,
பம்மலார்.

ujeetotei
20th July 2013, 08:44 PM
http://i43.tinypic.com/2gw5qbb.jpg

Thank you Sailesh Sir for uploading the unfinished MGR movie Andru Sinthiya Ratham.

pammalar
20th July 2013, 11:38 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் உடன்பிறவா அருமைத்தம்பி
நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பன்னிரெண்டாம் ஆண்டு நினைவாஞ்சலி
[21.7.2001 - 21.7.2013]

மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 24

நடிகர் திலகம் குறித்து மக்கள் திலகம்

வரலாற்று ஆவணம் : நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) [பதிப்பாசிரியர் : திரு. எம்.ஜி.ஆர்] : ஆகஸ்ட் 1962


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ca1c8dd5-0be7-4492-ae44-0327c9d101d6.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/ca1c8dd5-0be7-4492-ae44-0327c9d101d6.jpg.html)


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/a9565dd9-8986-4936-9669-6707e273085a.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/a9565dd9-8986-4936-9669-6707e273085a.jpg.html)


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/f210d605-24a9-4135-bb64-2ed81b3781e9.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/f210d605-24a9-4135-bb64-2ed81b3781e9.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/c20b6147-ce7c-4b70-8b52-ee8c3d4a0a9d.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/c20b6147-ce7c-4b70-8b52-ee8c3d4a0a9d.jpg.html)

21.7.2013 : 'உலகப் பெருநடிகர்' என முன்னாள் தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களாலும், அந்த 'அண்ணாவின் இதயக்கனி'யான பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களாலும் வாழ்நாள் முழுவதும் பாராட்டப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

Richardsof
21st July 2013, 07:14 AM
இனிய நண்பர் திரு சுப்பு

உங்களின் மன மாற்றத்திற்கு நன்றி .மக்கள் திலகத்தின் நடிப்பு - சண்டை காட்சிகள் -மற்றும் அவருடைய திரைப்பட நுண்ணறிவு
என்று எல்லா துறையிலும் முழு கவனத்துடன் செயல் பட்டதன்
மூலம் அடைந்த வெற்றி , புகழ் இரண்டும் இன்று வரை நிலைத்திருக்கிறது .

அவருடைய பொன் மனம் , மனம் திறந்து பாராட்டுதல் , ஈகை , யார் மனமும் புண் படாமல் நாகரீகமாக பேசிய மக்கள் திலகத்தின் கடந்த கால பேட்டிகள் , உரைகள்
அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது வரலாறு படைத்த உண்மை .

மக்கள் திலகம் திரியில் இனி வரும் பதிவுகளில் மக்கள் திலகத்தின் சிறப்புகளையும் , உங்களுக்கு பிடித்த அவரின்
படங்கள் - பாடல்கள் - தகவல்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் .
நட்புடன்
வினோத்

Richardsof
21st July 2013, 07:16 AM
இனிய நண்பர் திரு ஷைலேஷ் சார்

ஸ்ரீதரின் ''அன்று சிந்திய ரத்தம் '' [ 1963 ]முதல் நாள் பட பிடிப்பில் எடுக்கப்பட்ட மக்கள் திலகத்தின் ஸ்டில் மிகவும் அருமை .
பதிவிட்ட உங்களுக்கு நன்றி

Richardsof
21st July 2013, 07:22 AM
இனிய நண்பர் திரு பம்மலார் சார்

நடிகர் திலகத்தின் நினைவு நாள் பதிவில் மக்கள் திலகத்தின்

கட்டுரையை பதிவிட்டமைக்கு , மனம் திறந்து பாராட்டிய உங்களுக்கு நன்றி .
நடிகன் குரலில் மக்கள் திலகம் அவர்களின் கட்டுரை மிகவும் அருமை . நடிகர் திலகத்தை மனம் திறந்து நீண்டதொரு விளக்கமான கட்டுரை மூலம் பாராட்டி இருப்பது மக்கள் திலகத்தின் பெருமையினை காட்டுகிறது .

அரிய ஆவணம் மூலம் எங்களை பரவசபடுத்திய உங்களுக்கு
நன்றி

நட்புடன்
வினோத்

Richardsof
21st July 2013, 10:14 AM
மக்கள் திலகம் அவர்களின் ''நாடோடி '' மிகவும் சீர் திருத்த படம் .

ஜாதி வெறி மூலம் சமூகத்தில் நிலவும் அவல நிலைகளை

அன்றே தெளிவாக கூறிய படம் .

[http://youtu.be/8anhn9hUg2M

Richardsof
21st July 2013, 10:34 AM
1978 ம் ஆண்டு தனது கார் ஓட்டுனர் கோவிந்தன் மறைவு இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்லும் முதல்வர் புரட்சித்தலைவர்தலைமை அலுவலகத்திலிருந்து சென்னை கிருஷ்ணாம்பேட்டை இடுகாடு வரை நடந்தே சென்று அஞ்சலி செலுத்திய மனித புனிதர்.

http://i39.tinypic.com/m9ypar.jpg

courtesy- face book

siqutacelufuw
21st July 2013, 11:17 AM
அன்பு நண்பர் திரு. சுப்பு அவர்கள் அறிவது,

தாங்கள் குறிப்பிட்ட கீழ் கண்ட வரிகள் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.

"எப்போது எனது கண்கள் திரு.mgr அவர்கள் பொதுமேடையில் கூறிய இந்த பதிவை பார்த்ததோ, எப்பொழுது திரு.MGR அவர்கள் தான் கூறுவது தனது தாயின் மீது ஆணை என்று சொன்னாரோ அதை படித்தவுடன் அப்பொழுதே முடிவுசெய்துவிட்டேன், அந்த கண்ணியத்தை காப்பாற்ற எனது பதிவை நீக்கி விடுவதுதான் முறை என்று ! ..."

பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளாகிய இன்று முதல், மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் திரிகளில் எங்கள் புரட்சித்தலைவருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் தங்கள் பதிவுகள் இருக்கும் எனவும், நடிகர் திலகம் திரியில் "மக்கள் திலகம்" பற்றிய சில எதிர்மறையான கருத்துக்கள் பதிவிடும் போது அதையும் ஆட்சேபிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

தங்களிடம் ஏற்பட்ட இந்த மன மாற்றத்துக்கு உறுதுணையாக இருந்த எனதருமை உடன்பிறவா சகோதரர் திரு. வினோத் அவரகளுக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ஒரு சிறு வேண்டுகோள் : மக்கள் திலகம் திரி அன்பர்கள் எவரும் வீணாக வம்புக்கு வருவதில்லை. நடிகர் திலகம் திரியில், எங்களில் பலரும் இதுவரை பதிவிட்டதே கிடையாது. மக்கள் திலகம் திரியில் வந்து, அவரைபற்றியே எதிர் மறையான கருத்துக்களை பதிவிடும் போது, அதற்கு பதிலளிக்கும் பட்சத்தில், சில உணர்ச்சிப் பூர்வமான பதிவுகள் இருப்பது இயற்கையே. அதற்காக எவர் மீதும் தாக்குதல் கூடாது. தங்களின் கோபத்தில் எந்த வித நியாமும் இல்லை.

இந்தப் போக்கினையும்,பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளாகிய இன்று முதல், தாங்கள் கைவிட வேண்டும் என்று, ஒரு மூத்த சகோதரன் என்ற முறையில் தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

http://i40.tinypic.com/dwqplg.jpg

தங்களன்பு சகோதரன்

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

குறிப்பு :

பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களைத் தாக்கி அறிக்கை விடத் தயாராகவிருந்த அப்போதைய நடிகர் ஒருவரை இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் எப்படி அந்த அறிக்கை வர விடாமால் செய்தார் என்றும், மறைத்திரு சிவாஜிகணேசன் அவர்களுக்கு ஆதவாக கண்ணியவான் பொன்மனச்செம்மல் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய புது தகவல் தொடர்கிறது.

siqutacelufuw
21st July 2013, 11:22 AM
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களோடு பட படங்களில் நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் நடித்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர் தன் படங்களில் நடிப்பதை தவிர்த்திருக்கிறார். அதனால் கோபமுற்ற ராதா அவர்கள், "சிவாஜிகணேசனை சும்மா விட மாட்டேன், அவனை என்ன செய்கிறேன் பார்" என்று பலர் முன் ஸ்டுடியோக்களிலேயே கூறியிருக்கிறார்.

அது சமயம், திருச்சியில் தன் பிறந்த நாளை பெரிய விழாவாக ஊர்வலம் நடத்தி மறைதிரு. சிவாஜி அவர்கள் கொண்டாடினார். அதை எம். ஆர். ராதா கடுமையாக விமர்சித்து, "சிவாஜி என்ன்ன கடவுளா ? ஜனங்களெல்லாம் சிரமப்பட்டு ஊர்வலத்தில் வர, சிவாஜி உயரமான ஒரு இடத்திலிருந்து கையசைப்பாராம், இதையெல்லாம் வளர விடக்கூடாது. அதனால், அவனைக் கண்டித்து கடுமையான அறிக்கை விடப் போகிறேன்' என்று மறைதிரு. ராதா அவர்கள் கூறிய செய்தி, எம். ஆர். ராதா அவர்களின் உதவியாளர் கஜபதி அவர்கள் மூலமாக மக்கள் திலகத்து எட்டியது.

உடனே, நமது பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள், திரு. கஜபதி அவர்களிடம், "இந்த மாதிரி எல்லாம் அறிக்கை விட வேண்டாமென்று அண்ணனிடம் (எம். ஆர். ராதாவிடம்) சொல்லுங்கள். தம்பி கணேசன் இப்போதுதான் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார். தன்னை மேலும் முன்னேற்றப் படுத்திக்கொள்ள இது போல் விழாக்கள் நடத்துகிறார்.
நடத்தி விட்டு போகட்டும். தவிர, தம்பி கணேசன் ஒரு தமிழன். அவருக்கு தர்ம சங்கடம் உண்டாக்கும் எந்த வேலையையும் செய்ய வேண்டாமென்று நான் (எம். ஜி. ஆர்.) சொன்னதாக ராதா அண்ணனிடம் சொல்லுங்கள்.
இது மாதிரி எண்ணங்களை அவர் வளர்த்துக் கொள்ளக்கூடாது என்று நம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் கூறினார்.

இச்சம்பவம், எம். ஆர். ராதா அவர்களுக்கும், நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கும் நல்லுறவு நிலவி வந்த கால கட்டத்தில் நடைபெற்றது.

http://i41.tinypic.com/a3nh1x.jpg

ஆதாரம் : ப்ரியா பாலு எழுதிய "சாதனை நாயகன் எம். ஜி. ஆர்." என்ற நூலிலிருந்து

தங்கத் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களின் பெருந்தன்மையை என்னென்று சொல்வது ?

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
================================================== ======================================

Marionapk
21st July 2013, 11:24 AM
Respected esvee Sir, Thank you very much for your wonderful writeup on nadigarthilagam through makkalthilagam's wonderful speech

siqutacelufuw
21st July 2013, 11:26 AM
பொதுவாக, நம் தமிழக மக்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ளவர்கள். ஆழ்ந்த நாட்டுபற்று உடையவர்களும் கூட. தேசிய ஒருமைப் பாட்டில் நன்னம்பிக்கை கொண்டவர்கள்.

இப்படிப்பட்ட தமிழக மக்களிடையே, தான் இணைத்துக்கொண்ட கட்சிக்காக, அதன் கொள்கைகள் காரணமாக, ராணி லலிதாங்கி, காத்தவராயன், அன்று சிந்திய ரத்தம் உட்பட பல பட வாய்ப்புக்களை இழந்தார். சில சரித்திர படங்களிலும், பல சமூகப் படங்களிலும் மட்டுமே நடித்து பெரும் புகழ் பெற்றது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் அந்த தமிழக மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் பெற்று, ஆட்சிக்கட்டிலில், அமரர் ஆகும் வரை, வீற்றிருந்தார், நம் ஒப்பற்ற தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள். இது ஒரு சாதனை என்றால்,

ஒவ்வொரு பொது தேர்தலிலும், முன்னர் பெற்ற சதவிகித வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்று, அதிக எண்ணிக்கையில் சட்ட மன்ற உறுப்பினர்களை பெற்று, எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றியே பெற்ற ஒரே முதல்வர் என்பது, தமிழக அரசியல் வரலாற்றில், அதை விட பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும். http://i44.tinypic.com/bitab5.jpg

குறிப்பு : பொதுவாக, ஒரு முறை ஆட்சியில் இருக்கும் போது, அதிருப்தி பெருகி, அது தேர்தலில் பதிவிடும் வாக்குகளில் பிரதிபலித்து எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அந்த அதிருப்திக்கும் இடம் கொடுக்காமல், மக்கள் மன மகிழ்ச்சியோடு, முழு திருப்தியோடு, வாக்களித்து, ஒவ்வொரு தேர்தலிலும், அவரை அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்த்தினர், என்பது குறிப்பிடத்தக்கது.


சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
21st July 2013, 11:42 AM
பொதுவாக, நம் தமிழக மக்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ளவர்கள். ஆழ்ந்த நாட்டுபற்று உடையவர்களும் கூட. தேசிய ஒருமைப் பாட்டில் நன்னம்பிக்கை கொண்டவர்கள்.

இப்படிப்பட்ட தமிழக மக்களிடையே, தான் இணைத்துக்கொண்ட கட்சிக்காக, அதன் கொள்கைகள் காரணமாக, ராணி லலிதாங்கி, காத்தவராயன், அன்று சிந்திய ரத்தம் உட்பட பல பட வாய்ப்புக்களை இழந்தார். சில சரித்திர படங்களிலும், பல சமூகப் படங்களிலும் மட்டுமே நடித்து பெரும் புகழ் பெற்றது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் அந்த தமிழக மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் பெற்று, ஆட்சிக்கட்டிலில், அமரர் ஆகும் வரை, வீற்றிருந்தார், நம் ஒப்பற்ற தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள். இது ஒரு சாதனை என்றால்,

ஒவ்வொரு பொது தேர்தலிலும், முன்னர் பெற்ற சதவிகித வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்று, அதிக எண்ணிக்கையில் சட்ட மன்ற உறுப்பினர்களை பெற்று, எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றியே பெற்ற ஒரே முதல்வர் என்பது, தமிழக அரசியல் வரலாற்றில், அதை விட பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும். http://i44.tinypic.com/bitab5.jpg

குறிப்பு : பொதுவாக, ஒரு முறை ஆட்சியில் இருக்கும் போது, அதிருப்தி பெருகி, அது தேர்தலில் பதிவிடும் வாக்குகளில் பிரதிபலித்து எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அந்த அதிருப்திக்கும் இடம் கொடுக்காமல், மக்கள் மன மகிழ்ச்சியோடு, முழு திருப்தியோடு, வாக்களித்து, ஒவ்வொரு தேர்தலிலும், அவரை அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்த்தினர், என்பது குறிப்பிடத்தக்கது.


சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

உண்மையிலும் உண்மை.
மக்கள் திலகத்தின் வாக்கு வங்கி என்பது அத்தகைய பலம் வாய்ந்தது.
மூன்று முறை தொடர்ந்து முதல்வராகுவது என்பது எவ்வளவு பெரும் சாதனை..

idahihal
21st July 2013, 01:42 PM
அன்பு நண்பர் திரு. சுப்பு அவர்கள் அறிவது,

தாங்கள் குறிப்பிட்ட கீழ் கண்ட வரிகள் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.

"எப்போது எனது கண்கள் திரு.mgr அவர்கள் பொதுமேடையில் கூறிய இந்த பதிவை பார்த்ததோ, எப்பொழுது திரு.MGR அவர்கள் தான் கூறுவது தனது தாயின் மீது ஆணை என்று சொன்னாரோ அதை படித்தவுடன் அப்பொழுதே முடிவுசெய்துவிட்டேன், அந்த கண்ணியத்தை காப்பாற்ற எனது பதிவை நீக்கி விடுவதுதான் முறை என்று ! ..."

பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளாகிய இன்று முதல், மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் திரிகளில் எங்கள் புரட்சித்தலைவருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் தங்கள் பதிவுகள் இருக்கும் எனவும், நடிகர் திலகம் திரியில் "மக்கள் திலகம்" பற்றிய சில எதிர்மறையான கருத்துக்கள் பதிவிடும் போது அதையும் ஆட்சேபிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

தங்களிடம் ஏற்பட்ட இந்த மன மாற்றத்துக்கு உறுதுணையாக இருந்த எனதருமை உடன்பிறவா சகோதரர் திரு. வினோத் அவரகளுக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ஒரு சிறு வேண்டுகோள் : மக்கள் திலகம் திரி அன்பர்கள் எவரும் வீணாக வம்புக்கு வருவதில்லை. நடிகர் திலகம் திரியில், எங்களில் பலரும் இதுவரை பதிவிட்டதே கிடையாது. மக்கள் திலகம் திரியில் வந்து, அவரைபற்றியே எதிர் மறையான கருத்துக்களை பதிவிடும் போது, அதற்கு பதிலளிக்கும் பட்சத்தில், சில உணர்ச்சிப் பூர்வமான பதிவுகள் இருப்பது இயற்கையே. அதற்காக எவர் மீதும் தாக்குதல் கூடாது. தங்களின் கோபத்தில் எந்த வித நியாமும் இல்லை.

இந்தப் போக்கினையும்,பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளாகிய இன்று முதல், தாங்கள் கைவிட வேண்டும் என்று, ஒரு மூத்த சகோதரன் என்ற முறையில் தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

http://i40.tinypic.com/dwqplg.jpg

தங்களன்பு சகோதரன்

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

குறிப்பு :

பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களைத் தாக்கி அறிக்கை விடத் தயாராகவிருந்த அப்போதைய நடிகர் ஒருவரை இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் எப்படி அந்த அறிக்கை வர விடாமால் செய்தார் என்றும், மறைத்திரு சிவாஜிகணேசன் அவர்களுக்கு ஆதவாக கண்ணியவான் பொன்மனச்செம்மல் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய புது தகவல் தொடர்கிறது.
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இது தங்களது கருத்து மட்டுமல்ல. பெரும்பான்மையான மக்கள் திலகத்தின் ரசிகர்களின் ஏகோபித்த கருத்து. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் சிறந்த நடிகர் என்பதில் மக்கள் திலகத்தின் அபிமானிகளிடத்தில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மக்கள் திலகத்தோடு ஒப்பிட்டு அவரை விடத் தகுதியானவர் இவர் போன்ற விமர்சனங்கள் வரும் போது அதை ஏற்றுக் கொள்ள எங்களால் முடியாது. வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் திறமை சாலிகள். அவற்றிற்கிடையே ஒப்புமை தேவையில்லை என்பதே எங்களது கருத்து. ஒவ்வொருவரும் அவருக்குப் பிடித்ததைப் பார்த்து ரசிக்கிறோம். பாராட்டுகிறோம். புகழ் பாடுகிறோம். அதுவரையில் யாதொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் போட்டி மனப்பான்மை குறுக்கிடும் போது தேவையற்ற சர்ச்சைகள், விவாதங்கள் தோன்றி பிணக்கை ஏற்படுத்துகின்றன. இது தேவையற்றது என்பது எங்களது கருத்து மட்டுமல்ல மக்கள் திலகத்தின் கருத்துமாகும். நடிகர் திலகத்தைப் பாராட்டி அவர் சிறந்த நடிகர் என்று மக்கள் திலகம் கூறுவது அவரது பெருந்தன்மை. அந்த சம்பிரதாயமான வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு அவரை விட இவர் தான் சிறந்த நடிகர் என்பதாகப் பொருள் கொள்வது மடமை. இருவரது நடிப்பும் இரண்டு வேறு வேறு பரிமாணங்களைக் கொண்டது. இனிப்புப் பண்டங்கள் பலவிதமான இருப்பது ரசித்துச் சுவைப்பவரின் ரசனைக்காகக் தான். இந்த இனிப்பு தான் சுவையானது அது சுவையற்றது என்பது அர்த்தமற்ற வாதம். தயவு செய்து அது போன்ற வாதங்களை முன்வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அப்படி ஒரு நிலை வருமானால் அது இருசாரருக்கும் நன்மை பயக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

siqutacelufuw
21st July 2013, 02:07 PM
http://i43.tinypic.com/2gw5qbb.jpg

WHAT A SYTEE ? MARVELLOUS POSE OF WORLD's 8th WONDER
GOT ASTNOSHED FOR A WHILE.

REALLY A SUPERB STILL.
THANK YOU SAILESH SIR.


Ever Yours : S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

ainefal
21st July 2013, 02:33 PM
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Pdh-Kqwka20

idahihal
21st July 2013, 02:46 PM
http://i40.tinypic.com/auuvpf.jpg
கூண்டுக்கிளி படத்திலிருந்து

Richardsof
21st July 2013, 02:50 PM
மக்கள் திலகம் திரிக்கு வருகை புரிந்துள்ள திரு ரமேஷ் அவர்களுக்கு நன்றி . நடிகர் திலகம் அவர்களுக்கு நினைவஞ்சலி பற்றிய கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி .

Richardsof
21st July 2013, 03:01 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/4753f681-f0ba-43cc-af68-737b1376cecd_zps14b383f4.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/4753f681-f0ba-43cc-af68-737b1376cecd_zps14b383f4.jpg.html)

iufegolarev
21st July 2013, 03:10 PM
நடிகர் திலகத்தைப் பாராட்டி அவர் சிறந்த நடிகர் என்று மக்கள் திலகம் கூறுவது அவரது பெருந்தன்மை. அந்த சம்பிரதாயமான வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு அவரை விட இவர் தான் சிறந்த நடிகர் என்பதாகப் பொருள் கொள்வது மடமை. இருவரது நடிப்பும் இரண்டு வேறு வேறு பரிமாணங்களைக் கொண்டது. இனிப்புப் பண்டங்கள் பலவிதமான இருப்பது ரசித்துச் சுவைப்பவரின் ரசனைக்காகக் தான். இந்த இனிப்பு தான் சுவையானது அது சுவையற்றது என்பது அர்த்தமற்ற வாதம். தயவு செய்து அது போன்ற வாதங்களை முன்வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அப்படி ஒரு நிலை வருமானால் அது இருசாரருக்கும் நன்மை பயக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கு,

வணக்கங்கள் !

கோடிட்ட வார்த்தைகளுக்கு முன்பாக நீங்கள் கூறுவது முற்றிலும் சரியான கருத்துக்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.


மேலே கோடிட்டு காட்டியுள்ள வரிகள் முக்கியமாக வரிகள்.

மக்கள் திலகம் கூறியது " பெருந்தன்மை " என்று பதிவிட்டிருக்கிறீர்கள். அந்த சம்பிரதாயமான வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு அவரை விட இவர் தான் சிறந்த நடிகர் என்பதாகப் பொருள் கொள்வது மடமை என்றும் கூறியுள்ளீர்கள்.

" பெருந்தன்மை ", "சம்ப்ரதாயம்" என்றால் அதில் உண்மை உள்ளதென்று அர்த்தமா? இல்லை என்று அர்த்தமா என்று மட்டும் இங்கு அனைவர்க்கும் விளக்குங்கள் !

அப்படி உண்மை இல்லை என்பது உங்கள் கருதேன்றால், மக்கள் திலகம் பொய் கூறுகிறார் என்று நீங்கள் கூறுகிறீர்களா ?

காரணம் இதே போல பெருந்தன்மையை நடிகர் திலகமும் பல நேரங்களில், அதுவும் முக்கியமாக மக்களின் பேராதரவு பெற்ற பத்திரிகை குமுதம் ஆசிரியருக்கு கண்டன கடிதம் எழுதி தெரிவித்தும் உள்ளார்...அதாவது திரு.mgr சிறந்த நடிகர் என்று..! நாங்களும் உங்களுடைய கருத்தின்படியே கூறவிரும்பவில்லை !

அப்படி நீங்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் பார்த்தால் பெருந்தன்மையாக நடிகர் திலகம் பலமுறை கூறியுள்ள சம்பிரதாயமான இது போன்ற விஷயங்களை மனதில் வைத்து நடிகர் திலகத்தை விட மக்கள் திலகம் தான் சிறந்த நடிகர் என்பதை உங்களில் சிலர் பொருள் கொள்வதும் மடமையே என்று நாங்களும் பதிவிட்டால் ?

ஆகவே தாங்கள் எங்களுக்கு என்ன அறிவுரைக்க விரும்புகிறீர்களோ அதை தாங்கள் உங்களைசேர்ந்த சிலருக்கும் அறிவுரைக்கதான் வேண்டும், அதை விட்டு ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது எந்தவித ஞாயம் அல்லவே !

இருவரும் இருவழிகளில் வெற்றிகரமாக பயணித்தவர்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது என்பதில் தங்களை போலவே நானும் நம்புகிறேன்.

"இயற்கை" "செயற்கை" என்று குறிப்பிட்டு அந்த ஒரு சிலர் இனியும் எழுதுவார்களேயானால், அதற்க்கு தூபம் போடும் வகையில் சிலர் ஆமோதிபார்களேயானால் , மதிப்பிற்குரிய மக்கள் திலகம் அவர்கள் தாயின் மீது ஆணையிட்டு கூறிய கருத்தை அவர்கள் அவமதிப்பது மட்டுமல்லாமல் அவரையே அவமானபடுதுவதுமாகும் என்பது நான் கூறிதான் எல்லோரும் அறியவேண்டும் என்றில்லை.

நேரத்தை ஒதுக்கி இதை படித்தமைக்கு மிக்க நன்றி..

வணக்கத்துடன்
சுப்பு

iufegolarev
21st July 2013, 03:53 PM
அன்பு நண்பர் திரு. சுப்பு அவர்கள் அறிவது,

தாங்கள் குறிப்பிட்ட கீழ் கண்ட வரிகள் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.

"எப்போது எனது கண்கள் திரு.mgr அவர்கள் பொதுமேடையில் கூறிய இந்த பதிவை பார்த்ததோ, எப்பொழுது திரு.MGR அவர்கள் தான் கூறுவது தனது தாயின் மீது ஆணை என்று சொன்னாரோ அதை படித்தவுடன் அப்பொழுதே முடிவுசெய்துவிட்டேன், அந்த கண்ணியத்தை காப்பாற்ற எனது பதிவை நீக்கி விடுவதுதான் முறை என்று ! ..."

பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளாகிய இன்று முதல், மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் திரிகளில் எங்கள் புரட்சித்தலைவருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் தங்கள் பதிவுகள் இருக்கும் எனவும், நடிகர் திலகம் திரியில் "மக்கள் திலகம்" பற்றிய சில எதிர்மறையான கருத்துக்கள் பதிவிடும் போது அதையும் ஆட்சேபிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

தங்களிடம் ஏற்பட்ட இந்த மன மாற்றத்துக்கு உறுதுணையாக இருந்த எனதருமை உடன்பிறவா சகோதரர் திரு. வினோத் அவரகளுக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ஒரு சிறு வேண்டுகோள் : மக்கள் திலகம் திரி அன்பர்கள் எவரும் வீணாக வம்புக்கு வருவதில்லை. நடிகர் திலகம் திரியில், எங்களில் பலரும் இதுவரை பதிவிட்டதே கிடையாது. மக்கள் திலகம் திரியில் வந்து, அவரைபற்றியே எதிர் மறையான கருத்துக்களை பதிவிடும் போது, அதற்கு பதிலளிக்கும் பட்சத்தில், சில உணர்ச்சிப் பூர்வமான பதிவுகள் இருப்பது இயற்கையே. அதற்காக எவர் மீதும் தாக்குதல் கூடாது. தங்களின் கோபத்தில் எந்த வித நியாமும் இல்லை.

இந்தப் போக்கினையும்,பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளாகிய இன்று முதல், தாங்கள் கைவிட வேண்டும் என்று, ஒரு மூத்த சகோதரன் என்ற முறையில் தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

http://i40.tinypic.com/dwqplg.jpg

தங்களன்பு சகோதரன்

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

குறிப்பு :

பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களைத் தாக்கி அறிக்கை விடத் தயாராகவிருந்த அப்போதைய நடிகர் ஒருவரை இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் எப்படி அந்த அறிக்கை வர விடாமால் செய்தார் என்றும், மறைத்திரு சிவாஜிகணேசன் அவர்களுக்கு ஆதவாக கண்ணியவான் பொன்மனச்செம்மல் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய புது தகவல் தொடர்கிறது.

அன்பு சகோதரர் பேராசிரியர் அவர்களுக்கு

முதற்க்கண் என்னை சகோதரராக பாவித்து அன்பு சகோதரர் என்று முடித்து ஒரு நல்லுறவு ஆரம்பித்த தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி உரித்தாகட்டும். இந்த சகோதரத்துவம் மென் மேலும் சிறந்து வளர்ந்து நம் இரு ரசிகர்களிடமும் விரிவடைய என்னுடைய வாழ்த்துக்களையும் மக்கள் திலகம் போற்றிய நடிகர்திலகத்தின் நினைவு நாளில் அவ்விரு புண்ணிய ஆன்மாக்களிடமும் ஆத்மார்த்தமாக வேண்டுகிறேன்..!

அண்ணனிண்டம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன் ! நான் திரியில் பதிவிட துடன்குவதர்க்கு முன் என்ன நடந்ததென்பது நான் அறிந்திருக்க ஞாயமில்லை என்று ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நான் பதிவிட தொடங்கிய காலகட்டத்திலிருந்து பார்த்தீர்களேயானால், என்னுடைய பதிவில் விதண்டாவாதங்களை என்றுமே நான் துவக்கி வைத்ததில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துகொள்கிறேன். தாங்கள் எந்த திரியில் வேண்டுமானாலும் இதை ஆராய்ந்து அறிந்து தெரிந்து கொள்ளலாம்.

தாங்கள் மிகவும் சரியாக குறிப்பிட்டிருப்பதுபோல எதிர் மறையான கருத்துக்களை பதிவிடும் போது, அதற்கு பதிலளிக்கும் பட்சத்தில், சில உணர்ச்சிப் பூர்வமான பதிவுகள் இருப்பது இயற்கையே. அதன்பட்சத்தில், நான் துவக்காத எதிர்மறை கருத்துக்களுக்கு, என்னுடைய பதிவை அதில் கூறப்படும் உண்மைகளை தாக்கும் விதத்தில் எழுதினால் அது எந்த திரியானாலும் ஓரளவுவரை போருத்துபோகலாம்...மேலும் மேலும் சிலர் தூபம் போட்டால், அந்த தூபத்தால் உசுபேறி மீண்டும் மறைமுக தாக்குதலில் ஈடுபடும்போது அதற்க்கு மேலும் பேசாமலே இருந்துவிட்டால், அது என்னுடைய இயலாமை என்றாகிவிடும் அல்லவா ? அப்படி ஒரு நிலை தவிர்பதர்காகதான் நானும் சில சமயம் உங்கள் திரிக்கே வந்து பதில் உரைதிருக்கிரேன்..அதை நான் மறுக்கவில்லை. ! ஆனால் தொடக்கம் என்னிடம் இருந்து அல்லவே அல்ல என்பது மட்டும் உண்மை. ! இதை நீங்களும் அறிவீர்கள், உங்கள் திரியில் ஒரு சிலரும் அறிவார்கள்..அதை நானும் அறிவேன்...!

போனது போகட்டும், இனி முதலாவது நண்பர்கள் " இயற்க்கை" "செயற்கை" "வேறு எந்த நடிகரும்" என்பது போன்ற வார்த்தைகளை திரை உலக விஷயங்களை பற்றி எழுதும்போது எழுதாமல் அவர் அவர் தலைவரின் சிறப்புக்கள்,
பெருமைகள், அருமைகள் ஆகியவற்றை எழுதினால் இதுபோல தாக்குதல் என்பது வராமல் காப்பாற்ற படும் என்று நம்புகிறேன், நீங்களும் நம்புவீர்கள் என்று நினைகிறேன்..!

மக்கள் திலகத்தின் அரசியல், ஆட்சி பற்றி வரும்போது அதை நானாகட்டும், திரு.ராகவேந்திரன், திரு. வாசுதேவன், திரு.பம்மலர் ஆகியோர் வரவேற்று நல்ல முறையில்தான் பதிவிடுகிறோம் என்பதை அனைவரும் அறிவர்..

அன்பு சகோதரர்க்கு இன்னொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...எந்த திரியில் மக்கள் திலகத்தை பற்றி தேவையில்லாமல் எதிர்மறை கருத்து வரும்போதெல்லாம் நான் நிச்சயமாக கண்டனம் தெரிவித்ததுண்டு, அது நாகரீகம் அல்ல என்று பதிவிட்டதும் உண்டு. அன்பு நண்பர் திரு.எஸ்வி மற்றும் திரு.மாசனம் அவர்கள் இதற்க்கு சாட்சி.

நன்றாக வாழ்ந்து மக்கள் மனதில் தெய்வங்களை போல என்றென்றும் நிலைத்து வாழும் மனித தெய்வங்களாகிய இரு திலகங்களை தேவையில்லாமல் வம்புகிழுப்பது யாராக இருந்தாலும் தவறுதான் சகோதரரே !

தங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி ..இதை படித்தமைக்கு, படித்து புரிந்தமைக்கு உங்களின் சகோதரனின் மனமார்ந்த நன்றி.

வளர்க இருதிலகங்களின் புகழ் !

Richardsof
21st July 2013, 04:01 PM
இனிய நண்பர் திரு பேராசிரியர் செல்வகுமார் சார்
http://i42.tinypic.com/mmzriq.jpg
இன்று உங்களின் 400வது பதிவு -வாழ்த்துக்கள் .

மக்கள் திலகத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அளவிற்கறிய

பாசம் - பக்தி உண்மையிலே பாராட்டுக்குரியது .

மக்கள் திலகம் திரியில் நமது நண்பர்கள் அனைவரும் மக்கள் திலகத்தின் சாதனைகளை பெருமையுடன் பதிவிட்டு வருவது
மகிழ்ச்சிக்குரியது .

நடிகர் திலகம் திரியின் நண்பர்கள் திரு பம்மலார், திரு ராகவேந்திரன் திரு வாசுதேவன் , திரு சுப்பு ஆகியோர் தங்களின் பங்களிப்பில் மக்கள் திலகத்தின் படங்கள் - ஆவணங்கள் -தகவல்கள் பதிவுகள் வரவேற்கத்தக்கது .

ஒரு சில பதிவுகள் மனகசப்பினை தரும் அளவிற்கு சென்றதால்
அதனை மீண்டும் எதிர் காலத்தில் தொடராமல் இருக்க நண்பர் சுப்பு வும் -நீங்களும் இன்று ஆக்கபூர்வமான பதிவுகளுடன் வந்திருப்பது மகிழ்ச்சி . நன்றி .

நண்பர் திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டது போல் இரண்டு திலகங்கள் -இரண்டு விதமான இனிப்ப்பானவர்கள் .
நடிப்பு என்ற சர்க்கரை மூலம் இருவரும் விதவிதமான இனிப்புகளை வழங்கி நம்மை எல்லாம் ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்டுள்ளனர் .
இந்த நிலையின் கசப்பு எதற்கு ?

வேற்றுமையை மறந்து நாம் எல்லோரும் எதிர் காலத்தில்
ஒற்றுமையுடன் மக்கள் திலகத்தின் மகத்தான பெருமைகளை
பதிவிடுவோம் .
நடிகர் திலகம் திரியின் நண்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு
கொடுப்போம் .திரு பம்மலாரின் ஆவணங்கள் நமக்கு கிடைப்பது வரப்பிரசாதமாகும் .இதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளும் , நேரமும் விலைமதிப்பில்லாதவை .

நம்மிடம் கிடைக்காத பல விளம்பரங்கள் - நிழற்படங்கள் -
செய்திகள் என்று அவர் மூலம் கிடைப்பது என்றால்
உண்மையிலே மக்கள் திலகத்தின் வரலாறு விரைவில்
முழுமை பெறும் அளவிற்கு ஆவணங்கள் கிடைப்பது
நமக்கெல்லாம் அது ஒரு பொக்கிஷமாகும் என்பதில் துளியும் சந்தேகமில்லை .

மக்கள் திலகம் மலர் மாலை - புத்தகம் மூலம் மாபெரும்
புரட்சி செய்த பம்ம்லாரின் அடுத்தடுத்து வரும் மாலைகள்
மூலம் நம்முடைய கனவுகள் எல்லாம் நிறைவேறும் .

மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து நம் நண்பர்கள் எல்லோரும் புதிய வேகத்துடன் ஒன்றுபட்டு பயணிப்போம் என்று கேட்டு கொள்கின்றேன் .

திரு ரவிச்சந்திரன் சார் - உங்கள் உடல் நலன் பூர்ண குணமடைந்தது குறித்து மகிழ்ச்சி . தொடர்ந்து அசத்துங்கள் .

திரு கலியபெருமாள் சார்

மக்கள் திலகத்தின் அருமையான பதிவுகளை நீங்கள் தொடர்ந்து பதிவிட்டு வரவும் .

திரு ஜெய் சங்கர் சார்
பணி சுமைகளுக்கு இடையே பல்வேறு பதிவுகள் வழங்கி வரும் உங்களுக்கும் , உதவி புரியும் மாஸ்டர் வள்ளிநாயகம்
அவர்களுக்கும் நன்றி .
திரு சைலேஷ் சார்*
மக்கள் திலகத்தின் *வீடியோ *பதிவுகள் *அருமை .தொடர்ந்து *மக்கள் திலகத்தின் முக்கியமான காட்சிகளின் தொகுப்பை வழங்குவீர்கள் *என்று எதிர்பார்க்கிறேன் .



இனிய நண்பர் ரூப் சார்*
மக்கள் திலகத்தின் *செய்திகள் - கட்டுரைகள் *என்று உங்களின் பதிவுகள் *எல்லாம் அருமையான பதிவுகள் . தொடர்ந்து பதிவிடுங்கள் .











திரு செல்வகணேஷ் சார் [masanam]

மக்கள் திலகத்தின் மீது பற்று வைத்திருக்கும் உங்களின் பதிவு
அருமை . தொடருங்கள் சார் .










திரு சுப்பு சார்

மக்கள் திலகத்தின் சண்டை பிரியரான உங்களின் ரசனைக்கு
பாராட்டுக்கள் .உங்கள் மனதில் தேங்கி இருக்கும் சுவையான
மக்கள் திலகத்தின் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் .


திரு ராகவேந்திரன் சார்

மக்கள் திலகம் திரியில் நீங்கள் தரும் தகவல்கள் - படங்கள் -செய்திகள்
பதிவுக்கு நன்றி . தொடர்ந்து உங்களின் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .

திரு வாசுதேவன் சார்

அசத்தலான படங்கள் - வீடியோ என்று யாரும் எதிர் பார்க்காத நேரத்தில்
வந்து அசத்தும் உங்களின் அடுத்த வரவை எதிர்பார்க்கிறேன் .

திரு பம்மலார் சார்

அன்புடன் நீங்கள் வழங்கபோகும் தகவல்களுக்கு முன் கூட்டியே நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

நண்பர்கள் எல்லோருடய ஒத்துழைப்புடன் மக்கள் திலகம் திரி
சிறப்பாக வாதம் - விவாதம் தவிர்த்து நட்பு ரீதியாக
தொடந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கையுடன்

என்றும் நட்புடன்
வினோத்

masanam
21st July 2013, 04:34 PM
வினோத் ஸார்,
தங்களின் பதிவுக்கு நன்றி.

Richardsof
21st July 2013, 06:37 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் part 5
http://i42.tinypic.com/2eek6z8.jpg
இந்த திரிக்கு 5 ஸ்டார் அந்தஸ்து கிடைத்திருக்கிறது

என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கின்றேன் .

திரு ஜெய்சங்கர் துவக்கி வைத்த திரிக்கு கிடைத்த வெற்றி .

மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட எல்லா நண்பர்களுக்கும்

பார்வையாளர்களுக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக

நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

ainefal
21st July 2013, 08:24 PM
http://i43.tinypic.com/35359co.jpg

Congrats Professor Sir - 400...500

Richardsof
21st July 2013, 08:37 PM
MAKKAL THILAGAM MGR IN ''MALAIKKALLAN''

22-7-1954

60TH YEAR BEGINING.

http://i42.tinypic.com/ape59h.jpg

http://i42.tinypic.com/dcfrf6.jpg

Richardsof
21st July 2013, 08:42 PM
Malaikallan 1954

M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)


The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).

The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)

Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.

All the versions of Malaikallan were box office hits and the best of them was Azad, the Hindi version. This film broke all box office records and proved to be a moneyspinner. Naidu was a no-nonsense person who never tolerated indiscipline and believed in calling a spade a spade. While launching Azad (1955), he approached Dilip to play the lead. The tragedy king of Hindi Cinema was amused that a Tamil film producer based in Coimbatore, whom he had never heard of before, should have come all the way to Bombay to engage him to play a swashbuckling role in his first Hindi film production! Naidu, who would never take ‘no' for an answer, persuaded Dilip to work in the Hindi version. He also brought on board Meena Kumari which proved to be one of the memorable movies of Hindi Cinema. During that period, there were no star-hotels in Coimbatore, and Naidu took Dilip around many bungalows in the city and the rooms in Pakshiraja Studios. Dilip chose to stay in the studio and so did Meena Kumari — something incredible today.

The pleasing music score by C. Ramchandra was also a major attraction with lyrics by Rajendra Krishan. Songs such as ‘Radha na bole re', ‘Apalam chapalam' and ‘Kitna haseen hai mausam' were hits. Naidu used some of these tunes in some versions of the film.

Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.

Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.

Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.

randor guy

Richardsof
21st July 2013, 08:49 PM
திருப்புமுனை திரைப்படங்கள் -27
எம். ஜி. ராமச்சந்திரன் நடித்து இரண்டே படங்கள்தான் 1954ம் ஆண்டு வெளியானது. ஒன்று சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ""கூண்டுக்களி'', அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.
இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்.

கதைச்சுருக்கம்
"ராபின் ஹுட்'டைப் போல ஏழைகளின் தோழனான மலைக்கள்ளன் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தான். அவன் கள்வன் அல்ல போலீஸ்காரர்களும், அவனுக்கு வேண்டாதவர்களும், அந்த நல்லவனுக்குக் கொடுத்த பட்டம் தான் அது. அவனோ ஏழைகளுக்கு உதவினான், பொதுநலத் தொண்டு புரிந்தான். அவன் மலைக்கள்ளனாக மாறுவதற்கு அவன் குடும்பத்திற்குள் நடந்த நிகழ்ச்சிகளே காரணம். பச்சோந்திகளுக்குப் பாடம் புகட்டினான். வஞ்சகர்களை வீழ்த்தி வெற்றி கண்டான்.
விமர்சன சுருக்கம்
மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.
கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.
ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான். அப்போது எம்.ஜி.ஆர். தூய்மையான கதர் ஆடை, கழுத்தில் துளசிமாலையுடன் காட்சியளிப்பார். சிவாஜி தி.மு.க. நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.
நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.
கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
வசனம்: மு. கருணாநிதி
இசை: சுப்பையா நாயுடு
தயாரிப்பு: பட்சிராஜா
டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

Richardsof
21st July 2013, 08:53 PM
ராஜகுமாரியைத் தொடர்ந்து மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி (தமிழின் முதல் ஏ சர்டிபிகேட் படம்) ஆகிய படங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால் இந்த ஆண்டில் அவர் நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் வெளி வந்து எம்ஜியாருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் ராபின் ஹூட் பாணியிலான கதாபாத்திரம் நல்ல இமேஜைக் கொடுத்தது. அதன்பின் 1977ஆம் ஆண்டு தமிழக முதல்வராகும் வரை திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக விளங்கினார்.

idahihal
21st July 2013, 09:03 PM
தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது
மக்கள் திலகத்தின் மகத்தான காவியம்
தாயின் மடியில்
மக்கள் திலகத்தின் உருக்கமான நடிப்பில் பார்த்து மகிழுங்கள்
பின்வரும் இணைப்பிலும் இப்படத்தினைக் கண்டு மகிழலாம்
http://tamiltv.tv/murasu-tv-live/

idahihal
21st July 2013, 09:04 PM
நன்முத்துக்களாய் 400 பதிவுகள் தந்த பேராசிரியர் செல்வக்குமார் அவர்களுக்கு
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

oygateedat
21st July 2013, 09:10 PM
http://i44.tinypic.com/2mq6rex.jpg

oygateedat
21st July 2013, 09:28 PM
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களோடு பட படங்களில் நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் நடித்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர் தன் படங்களில் நடிப்பதை தவிர்த்திருக்கிறார். அதனால் கோபமுற்ற ராதா அவர்கள், "சிவாஜிகணேசனை சும்மா விட மாட்டேன், அவனை என்ன செய்கிறேன் பார்" என்று பலர் முன் ஸ்டுடியோக்களிலேயே கூறியிருக்கிறார்.

அது சமயம், திருச்சியில் தன் பிறந்த நாளை பெரிய விழாவாக ஊர்வலம் நடத்தி மறைதிரு. சிவாஜி அவர்கள் கொண்டாடினார். அதை எம். ஆர். ராதா கடுமையாக விமர்சித்து, "சிவாஜி என்ன்ன கடவுளா ? ஜனங்களெல்லாம் சிரமப்பட்டு ஊர்வலத்தில் வர, சிவாஜி உயரமான ஒரு இடத்திலிருந்து கையசைப்பாராம், இதையெல்லாம் வளர விடக்கூடாது. அதனால், அவனைக் கண்டித்து கடுமையான அறிக்கை விடப் போகிறேன்' என்று மறைதிரு. ராதா அவர்கள் கூறிய செய்தி, எம். ஆர். ராதா அவர்களின் உதவியாளர் கஜபதி அவர்கள் மூலமாக மக்கள் திலகத்து எட்டியது.

உடனே, நமது பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள், திரு. கஜபதி அவர்களிடம், "இந்த மாதிரி எல்லாம் அறிக்கை விட வேண்டாமென்று அண்ணனிடம் (எம். ஆர். ராதாவிடம்) சொல்லுங்கள். தம்பி கணேசன் இப்போதுதான் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார். தன்னை மேலும் முன்னேற்றப் படுத்திக்கொள்ள இது போல் விழாக்கள் நடத்துகிறார்.
நடத்தி விட்டு போகட்டும். தவிர, தம்பி கணேசன் ஒரு தமிழன். அவருக்கு தர்ம சங்கடம் உண்டாக்கும் எந்த வேலையையும் செய்ய வேண்டாமென்று நான் (எம். ஜி. ஆர்.) சொன்னதாக ராதா அண்ணனிடம் சொல்லுங்கள்.
இது மாதிரி எண்ணங்களை அவர் வளர்த்துக் கொள்ளக்கூடாது என்று நம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் கூறினார்.

இச்சம்பவம், எம். ஆர். ராதா அவர்களுக்கும், நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கும் நல்லுறவு நிலவி வந்த கால கட்டத்தில் நடைபெற்றது.

http://i41.tinypic.com/a3nh1x.jpg

ஆதாரம் : ப்ரியா பாலு எழுதிய "சாதனை நாயகன் எம். ஜி. ஆர்." என்ற நூலிலிருந்து

தங்கத் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களின் பெருந்தன்மையை என்னென்று சொல்வது ?

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
================================================== ======================================

Prof. Selvakumar sir,

Thank u.

Regds,

S.RAVICHANDRAN

RAGHAVENDRA
21st July 2013, 09:40 PM
President's Silver Medal (Tamil) for 1954

Malaikallan

http://iffi.nic.in/Dff2011/2nd_nff/2nd_nff_1955_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/2nd_nff/2nd_nff_1955_img_16.jpg

Images quoted and reproduced from Directorate of Film Festivals of India website.

ujeetotei
21st July 2013, 09:44 PM
President's Silver Medal (Tamil) for 1954

Malaikallan

http://iffi.nic.in/Dff2011/2nd_nff/2nd_nff_1955_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/2nd_nff/2nd_nff_1955_img_16.jpg

Thank you very much Raghavendra Sir for uploading the certificate for Malai Kallan.

ujeetotei
21st July 2013, 09:45 PM
Below article was provided by MGR Devotee Mr.Thiyagarajan alias Tenali Rajan.

பகுதி 1

அன்பே வா - எம் ஜி ஆர் - ஷூட்டிங்க் - விகடன் பொக்கிஷ பக்கங்கள்
சென்னை விமான நிலையத்தில் அன்பர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எண்ணற்ற பூமாலைகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ன் கழுத்தைத் தழுவுகின்றன. 'காரவல்’ டெல்லிக்குப் புறப்படப்போவதை அசரீரிக் குரல் அறிவிக்கிறது.

மக்கள் திலகத்துடன் சிம்லாவுக்குச் செல்லும் குழுவினர் சுமார் 20 பேரும் 'காரவல்’ நோக்கி நடக்கிறார்கள். எல்லோரும் ஏவி.எம். ஸ்டுடியோவின் வண்ணத் தயாரிப்பான 'அன்பே வா’ படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்கள். 'காரவல்’ டெல்லியை அடைந்தபோது நன்கு இருட்டிவிட்டது.

''கால்கா வரை ரயிலில் செல்கிறோம். அங்கிருந்து சிம்லாவுக்கு காரில் போகிறோம். 'இம்பாலா’ கார்கள் மூன்று இங்கிருந்தே நம்மைத் தொடர்ந்து வரும். இரவு 10-30 மணிக்கு ரயில் புறப்படுகிறது. 'ஜல்தி... ஜல்தி’ என்று துரிதப்படுத்தினார் டெல்லி ஏவி.எம். அலுவலகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன்.
ரயில் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் சரோஜா தேவி, நடுங்கும் குரலில் எம்.ஜி.ஆரைப் பார்த்து, ''என்னங்க! கால்காவுல 'க்ளவுஸ்’ கிடைக்குமா?'' என்று கேட்டார்.

''இங்கேயே கிடைக்குமே'' என்றார் எம்.ஜி.ஆர்.
'இங்கே எப்படிக் கிடைக்கும்?’ என்பதைப் போல் எம்.ஜி.ஆரைப் பார்த்தார் சரோஜா தேவி. உடனே எம்.ஜி.ஆர். வெள்ளை நிற 'க்ளவுஸ்’ இரண்டை எடுத்து வந்து சரோஜா தேவியிடம் கொடுத்தபோது, ''அடடே... நீங்களே வெச்சிருக்கீங்களா! தேங்க்ஸ்'' என்று வாங்கிக்கொண்டார்.

''எம்.ஜி.ஆரிடம் நிறைய 'க்ளவுஸ்’ இருக்கும்போல் இருக்கிறதே'' என்று எம்.ஜி.ஆருடன் வந்திருந்த அவருடைய டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் அவர்களிடம் சொன்னேன். ''அதை ஏன் கேக்கறீங்க? ஊட்டியில 'அன்பே வா’ ஷூட்டிங் நடக்கிறப்போ, அதில் சம்பந்தப்பட்ட அத்தனை தொழிலாளர்களுக்கும் ஸ்வெட்டரும் பனிக் குல்லாவும் வாங்கிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அவர்களுக்கெல்லாம் ஒரே குஷி'' என்றார் டாக்டர்.

'சென்னையில் உள்ள ரிக்ஷாக்காரர்கள் அத்தனை பேருக்கும் மழை கோட்டு வாங்கிக் கொடுத்தவருக்கு, இது ஒரு பிரமாதமா?’ என்று எண்ணிக்கொண்டேன்.
'பிளெஸ்ஸிங்டன் கோர்ட்’ என்பது அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கள் சறுக்கி விளையாடு வதற்காக ஏற்படுத்தப்பட்ட பனிக்கட்டிச் சறுக்கு முற்றம். தென் கிழக்கு ஆசியாவிலேயே இத்தகைய சறுக்கு மேடை சிம்லாவில் மட்டுமே உள்ளது. மலைச் சரிவுகளைப் பின்னணியாகக்கொண்டு, இயற்கைச் சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த அழகிய இடத்துக்கு அருகில் போய் நிற்கும்போது, நம் உள்ளம் குளிர்கிறது.

உடல் 'வெடவெட’வென்று நடுங்குகிறது. இந்த அருமையான இடத்தை இப்போது சர்க்கார் பஸ் ஸ்டாண்டாக மாற்றப்போகிறார்களாம். இந்த சேதியைக் கேட்ட போது எம்.ஜி.ஆர். பதறிப்போய் ''இதென்ன பைத்தியக்காரத்தனம்? பஸ் ஸ்டாண்டுக்கு வேறு இடம் இல்லாமலா போய்விட்டது? இது ரொம்ப அக்கிரமம். விகடனில் இதைப் பற்றி எழுதுங்கள் சார்'' என்றார்.

பஞ்சாப் அழகு ஜோடிகள் சறுக்கி விளையாடும் அபூர்வ காட்சியை எம்.ஜி.ஆரும் சரோஜா தேவி யும் கண்கொட்டாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர். ''என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நீங்கள்கூடச் சறுக்கலாம். ரொம்ப சுலபம். நாலு தடவை கீழே விழுந்தால் தன்னால் வந்துவிடும்'' என்று எம்.ஜி.ஆருக்குத் தைரியம் கூறினார் சிம்லா தமிழர் ஒருவர். ''அது சரி, நான் கீழே விழுவதைப் படமெடுத்துக் காட்டினால், சிரிப்பார்களே'' என்றார் எம்.ஜி.ஆர்.

எப்படியோ எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் சறுக்கி விளையாடும் காட்சியை இரண்டே நாட்களில் படமாக்கி முடித்துவிட்டார்கள்.

ujeetotei
21st July 2013, 09:45 PM
பகுதி 2

சிம்லாவுக்கு 13 மைல் தூரத்தில் 'குஃப்ரி’ (ரிuயீக்ஷீவீ) என்றோர் இடம் இருக்கிறது. 8,600 அடி உயரத்தில் உள்ள அந்த மலை உச்சியில் போய் நின்று பார்த்தால், தூரத்தில் இமய மலைச் சிகரங்கள் மீது வெள்ளைப் பனி உறைந்துகிடப்பது தெரிகிறது. அந்த இயற்கை எழிலில் மயங்கிப் பரவசத்தில் நின்ற எம்.ஜி.ஆரிடம் ''என்ன பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

''இமயத்தைக் காணும்போது நாம் எவ்வளவு சிறியவர்களாகிவிடுகிறோம் பார்த்தீர்களா?'' என்றார்.

அந்தச் சமயம் திடீரென்று நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி இரண்டு மூன்று ஜீப்புகள் வேகமாக வந்தன. அவற்றில் இருந்து இறங்கிய ராணுவ வீரர்கள் பரபரப்புடன் ஓடி வந்து ''வணக்கம் அண்ணே'' என்று புரட்சி நடிகரைப் பார்த்து வணங்கினர்.

''அடடே! நம் ஊர்க்காரர்களா? வாங்க... வாங்க... வணக்கம், வாழ்க. நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டைவிட்டு வந்து எத்தனை வருஷமாச்சு? சௌக்கியமா இருக்கீங்களா? இடையில எப்பவாவது ஊருக்குப் போய் வந்தீங்களா?'' என்று அன்புடன் விசாரித்தார்.

எம்.ஜி.ஆரைக் கண்டதும் தமிழ்நாட்டையே நேரில் பார்த்தது போன்ற உற்சாகம் அந்த வீரர்களுக்கு. மக்கள் திலகத்தின் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள். சிலர் மார்போடு அவரைத் தழுவிக்கொண்டார்கள். கடைசியில், எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டதும் வாழ்வின் பயன் பெற்ற திருப்தியுடன் ''போய் வருகிறோம்'' என்று கூறிப் புறப்பட்டனர்.

மக்கள் திலகம் அவர்களைக் கையைத் தட்டி அழைத்து, ''ஆமாம், விலாசத்தைக் கொடுக்காமல் புறப்பட்டுவிட்டீர்களே... என்ன அர்த்தம்? இப்போது எடுத்துக்கொண்ட போட்டோவை உங்களுக்கு அனுப்ப வேண்டாமா?'' என்று கேட்டபோது, அந்த வீரர்கள் நன்றிப் பெருக்குடன் எம்.ஜி.ஆரைப் பார்த்த காட்சியைப் படம் எடுக்கவில்லையே என்று தோன்றியது.

'புதிய வானம்-புதிய பூமி’ என்ற பாட்டைப் பாடியவண்ணம் எம்.ஜி.ஆர். உல்லாசமாக நடந்துவரும் காட்சியை, குஃப்ரி மலைச் சிகரத்தில் படமாக்கினார்கள். வாலி எழுதிய இந்தப் பாட்டுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது அந்த இடம். எம்.ஜி.ஆர். தமது கைகளை வீசி வானத்தையும் பூமியையும் காட்டிப் பாடிக்கொண்டு இருந்த சமயம், வானத்தில் பட்சிகள் கூட்டம் ஒன்று சிவ்வெனச் சிறகடித்துப் பறந்து சென்றது. பட்சிகள் பறக்கும் அந்த அழகிய காட்சியை 'அன்பே வா’ படத்தில் சேர்த்துவிட வேண்டும் எனத் துடித்தார் தயாரிப்பாளர் சரவணன்.

''அடடா! என்ன அழகான காட்சி? டைரக்டர் சார், இந்தப் பறவைகளை ஏதாவது செய்ய வேண்டுமே...'' என்றார் அவர்.

''சுட்டுச் சாப்பிடலாம் சார்?'' என்றார் ஒரு சாப்பாட்டு ரசிகர்.

''அவற்றை ஏற்கெனவே ஷூட் செய்தாயிற்று, கவலைப்படாதீர்கள்'' என்றார் டைரக்டர்.

போகும் வழியில் மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே 'பளிச் பளிச்’ என்று வெயில் அடித் துக்கொண்டு இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர்., ''வெயிலெல்லாம் வீணாகப்போகிறதே, இன்னும் கூட இரண்டு ஷாட் எடுக்கலாமே? கொஞ்சம் காரை நிறுத்தப்பா. மாணிக்கம்... பின்னாலே டைரக்டர் சார் வண்டி வருது. நிறுத்தி இன்னும் ஏதாவது எடுக்கப்போறாங்களானு கேளு'' என்றார்.

''ஒன்றும் இல்லை; நேராக சிம்லா போக வேண்டியதுதான்'' என்று டைரக்டர் பதில் கூறிவிடவே எம்.ஜி.ஆருக்குச் சப்பென்று ஆகிவிட்டது.

''காலை முதல் கொஞ்சம்கூட ஓய்வு இன்றி மலைச் சரிவில் ஓடி ஆடி வேலை செய்தீர்களே... களைப்பாக இல்லையா? இன்னமும் ஷூட்டிங் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?'' என்றேன்.

''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது'' என்றார் எம்.ஜி.ஆர்.


தொடரும்.

ujeetotei
21st July 2013, 09:46 PM
பகுதி 3

'மால்’ என்பது சிம்லா நகரின் மலைச் சிகரத்தில் அமைந்துள்ள ஓர் அழகு வாய்ந்த இடம். இங்கேயும் இரண்டு மூன்று நாள் ஷூட்டிங் நடைபெற்றது. கொழுகொழுவென்ற திபெத் நாட்டு அநாதைக் குழந்தைகள் இந்தச் சாலை வழியாக நடந்துபோகிறார்கள்.

''பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே...
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே...''

என்று பாடிக்கொண்டு வரும் எம்.ஜி.ஆர். அந்தப் பிள்ளைகளில் இருவரைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுகிறார்.

அடுத்தாற்போல்,
''நல்லவரெல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது...''

என்ற அடியைப் பாடும்போது, அங்குள்ள காந்தி மகாத்மாவின் சிலையைப் பார்த்துக் கும்பிடுகிறார்.

அன்று மாலை நான் எம்.ஜி.ஆரிடம் ''தாங்கள் மகாத்மாவை வணங்கும் காட்சி என்னைப் புல்லரிக்கச் செய்துவிட்டது. இந்தக் காட்சியைப் படத்தில் பார்க்கும் பொதுமக்கள் பெரிதும் ரசிப்பார்கள்'' என்றேன்.

''காந்தியிடம் எனக்கு எப்போதுமே பக்தி உண்டு. என் வீட்டில் நான் கும்பிடும் என் தாயாரின் படத்துடன் காந்தியின் படத்தையும் வைத்திருக்கிறேன். உலகத்தில் அந்த மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும் புத்தரும்கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்'' என்றார்.

சிம்லாவில் உள்ள திபெத் அநாதைக் குழந்தைகள் இல்லத்தை பிரிட்டிஷ்காரர் ஒருவர் நடத்திவருகிறார். உயரமான மலை உச்சி மீது அமைந்துள்ள அந்த இல்லத்தைப் பார்க்க வரும்படி எங்களை அந்த வெள்ளைக்காரர் கேட்டுக்கொண்டார். அந்த அநாதை இல்லத்துக்குச் செல்லும் பாதையில் கார் போக முடியாதாகையால், எங்களை அழைத்துச் செல்வதற்கு என அந்த வெள்ளைக்காரர் ஜீப் அனுப்பி இருந்தார்.

செங்குத்தான அந்தப் பாதையில் எங்கள் ஜீப் முக்கி முனகிக்கொண்டு மேலே ஏறியபோது, நாங்கள் பிராணத் தியாகம் செய்வதற்குத் தயாராகிவிட்டோம். ஓர் இடத்தில் அந்த ஜீப் பின்னுக்குப் போய் 'டர்ன்’ எடுத்தபோது பின் பக்கம் திரும்பிப் பார்த்தோம். அதல பாதாளத்துக்கும் எங்களுக்கும் இடையே அரை அங்குலம் இடைவெளிதான். மயிர்இழையில் ஊசலாடிக்கொண்டு இருந்த ஜீப்பை அந்த டிரைவர் ஒரு பிரேக் போட்டு நிறுத்தி, மீண்டும் முன்னால் கொண்டுபோனபோது, எம்.ஜி.ஆர். 'முருகா’ என்று கத்திவிட்டார்.

அந்த அநாதைக் குழந்தைகள் இல்லத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, எம்.ஜி.ஆர். அந்த வெள்ளைக்காரரின் கையைப் பிடித்துக் குலுக்கினார். அப்போது அவருடைய கையில் இருந்த 100 ரூபாய் நோட்டுக் கற்றை ஒன்று வெள்ளைக்காரரின் கைக்கு மாறியது.

''இந்தக் குழந்தைகள் இல்லத்துக்கு இதைப் பயன்படுத்துங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர். 'எவ்வளவு கொடுக்கிறோம் என்று கணக்குத் தெரியாமலே இப்படி அள்ளிக் கொடுக்கிறாரே’ என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் 'எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?’ என்று நான் அவரைக் கேட்கவில்லை. ஏனெனில், கேட்டாலும் அவர் சொல்ல மாட்டார் என்பது எனக்குத் தெரியும்.

வளமும் வனப்பும் மிக்க சிம்லாவிலும் குஃப்ரியிலும் உள்ள வண்ண வண்ணமான இயற்கைக் காட்சிகளுக்கு இடையே எம்.ஜி. ஆரை ஓடவிட்டு, ஆடவிட்டு, பாடவிட்டுக் கண்ணுக்கு இனிய கலர் படமாக ஆக்கிய பிறகு தான், தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் பூரண திருப்தி. 'அன்பே வா’ படத்தில் வரப்போகும் அந்த எழில்மிகு இயற்கைக் காட்சிகளைப் பற்றியோ, எம்.ஜி.ஆரின் புதுமை மிக்க உல்லாச நடிப்பைப் பற்றியோ நான் இங்கே ஒன்றும் கூறப்போவது இல்லை. ஏனெனில், நீங்களே அவற்றை எல்லாம் படத்தில் பார்க்கப்போகிறீர்களே!

திரும்பி வரும்போது கால்கா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் ஜன நடமாட்டமே இல்லை. எம்.ஜி.ஆருக்கு ஒரே குஷி. பிளாட்ஃபாரத்தில் அப்படியும் இப்படியும் உற்சாகத்தோடு அலைந்தார். ''அடடா! இவ்வளவு சுதந்திரமாகத் தென்னாட்டில் நடந்து போக முடியுமா? இதற்குள் ஆயிரம் பேர் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டு இருப்பார்களே. எனக்கு இந்த இடம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது தெரியுமா?'' என்று சிறு குழந்தைபோல் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.


தொடரும்.

ujeetotei
21st July 2013, 09:47 PM
கடைசி பகுதி

பகுதி 4

''டெல்லியில் நான் காந்தி சமாதி, நேரு சமாதி, காந்தியின் உயிர் பிரிந்த இடம் இந்த மூன்றையும் பார்த்துவிட்டு மறுநாள்தான் சென்னைக்குப் போகப் போகிறேன்'' என்றார் எம்.ஜி.ஆர்.

மறுநாள் பகல் 11 மணி சுமாருக்கு ராஜ்காட்டுக்குப் புறப்படுவதற்காக நாங்கள் அசோகா ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கியபோது, எம்.ஜி.ஆரை நோக்கி ஒரு பெரும் கூட்டம் 'திமுதிமு’வென்று ஓடி வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தத் தொழிலா ளர்கள், எம்.ஜி.ஆர். வந்திருக்கும் செய்தியை எப்படியோ தெரிந்துகொண்டு, காலையில் இருந்தே அந்த ஹோட்டல் வாசலில் காத்திருந்தனர்.

ராஜ்காட்டுக்குச் செல்லும்போது, ''இவர்களுக்கு எல்லாம் உங்களிடம் இத்தனை அன்பு எப்படி உண்டாயிற்று?'' என்று கேட்டேன்.

''அரண்மனை போன்ற இந்த அசோகா ஹோட்டல் மாடியில் இருந்து நான் 'லிஃப்டில்’ இறங்கி வருகிறேன். ஆனாலும், இவர்களுக்கு என்னைக் கண்டு துளியும் பொறாமை ஏற்படவில்லை. அதற்குப் பதில் என்னிடம் அன்பும் நம்பிக்கையும்கொண்டு இருக்கிறார்கள். நான் இத்தனை அந்தஸ்தில் வாழ்வதே அவர்களுக்காகத்தான் என்று எண்ணுகிறார்கள்'' என்றார்.

கார் ராஜ்காட்டில் போய் நிற்கிறது. முதலில் காந்தி சமாதிக்குச் சென்று அந்தச் சமாதி மீது மலர் வளையத்தைப் பக்தியோடு வைத்து வணங்குகிறார் எம்.ஜி.ஆர். பிறகு, சமாதியை ஒருமுறை வலம் வந்து, மௌனமாக உட்கார்ந்துகொள்கிறார். சிறிது நேரம் கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் ஈடுபடுகிறார்.

உணர்ச்சிப் பெருக்கினால் அவர் கண்களில் நீர் பெருகி வழிகிறது. பின்னர், மெதுவாக எழுந்து நேருஜியின் சமாதிக்குச் செல்கிறார். நாமும் அவரைப் பின்பற்றிச் செல்கிறோம். சமாதியை வலம் வருகிறோம். மலர் வளையங்கள் வைத்து வணங்குகிறோம். இந்த நாட்டின் உய்வுக்காகப் பெரும் தலைவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். அன்று மாலை காந்திஜி கொல்லப்பட்ட நேரத்திலேயே, அந்த இடத்துக்குப் போய்க் கண்ணீர் சிந்திவிட்டுத் திரும்பினோம்.

மறுநாள் காலை 6 மணிக்கு டெல்லியைவிட்டுப் புறப்பட்ட 'காரவல்’ 9 மணிக்குள் சென்னையை அடைந்துவிட்டது. வானத்தில் இருந்து பூமியில் இறங்கி நடந்தபோது, குளிரெல்லாம் போய்க் கதகதவென்று இருந்தது. ''எப்படி இருக்கிறது?'' - புன்சிரிப்போடு கேட்டார் எம்.ஜி.ஆர்.

''பழைய வானம்... பழைய பூமி என்று பாடலாம் போல் இருக்கிறது'' என்றேன் நான்.

idahihal
21st July 2013, 09:58 PM
அன்பு ராகவேந்திரன் அவர்களுக்கு,
மலைக்கள்ளன் படத்திற்கு ஜானதிபதி அவர்களது வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டமைக்கான சான்றிதழினைப் பதிவிட்டமைக்கு நன்றி. அபூர்வமான ஆவணம். தொடரட்டும் தங்கள் பணி.

oygateedat
21st July 2013, 10:08 PM
http://i42.tinypic.com/2eatsvm.jpg

oygateedat
21st July 2013, 10:12 PM
Thiru Raghavendra Sir

Thank u very much for uploading the certificate

for makkal thilagam's excellent movie 'Malai Kallan',

the first tamil movie which was honoured by

the President of India with SILVER MEDAL.

Regds,

S.Ravichandran

ujeetotei
21st July 2013, 10:12 PM
Congrats Professor Selvakumar Sir on completing 400 posts.

masanam
22nd July 2013, 04:27 AM
Thank you very much for 400 valuable posts in Makkal Thilagam Thread..Selvakumar Sir.

Richardsof
22nd July 2013, 05:21 AM
1954 ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய மக்கள் திலகத்தின்
''மலைக்கள்ளன்'' படத்திற்கு கிடைத்த குடியரசு தலைவரின் வெள்ளி பதக்க ஆவணத்தை வெளியிட்ட நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி .

Richardsof
22nd July 2013, 05:26 AM
தமிழகத்தின் திரையுலகம் பற்றி தெரியாமல் இருந்த குகநாதன் வாழ்க்கையில் 'மலைக்கள்ளன்' படம் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.



இதுபற்றி குகநாதன் கூறியதாவது:-



'சினிமாவுக்கும் எங்கள் பரம்பரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எம்.ஜி.ஆர்.தான் நான் சினிமாவுக்கு வர முழுக்காரணம். பள்ளித் தோழர்களுடன் வீட்டுக்குத் தெரியாமல் 'மலைக்கள்ளன்' படம் பார்க்கச் சென்றேன். மலைக்கள்ளன் கதாபாத்திரமும், பாடல்களும் என்னை மிகவும் கவர்ந்தன.



என்னையும் அறியாமல் எம்.ஜி.ஆர். மீது ஒருவித பற்று ஏற்பட்டது. அதனால் அந்த படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்தேன். எம்.ஜி.ஆரைப்பற்றி தெரிந்து கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சியில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி ஆகியோர் பற்றித் தெரிந்து கொண்டேன்.



'மலைக்கள்ள'னைத் தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் நடித்த பல படங்களை பார்த்தேன். ஆனால், எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய தாக்கத்தை வேறு யாரும் ஏற்படுத்தவில்லை.

masanam
22nd July 2013, 06:22 AM
மலைக்கள்ளன் President Award குறித்த ஆவணத்திற்கு நன்றி ராகவேந்திரா ஸார்.

அனைத்து கடந்த கால தேசிய விருதுகள் குறித்த தகவல்கள்
http://dff.nic.in/NFA_archive.asp -லிருந்து பெறலாம்.

Richardsof
22nd July 2013, 08:45 AM
http://i39.tinypic.com/2n88z8h.jpg

Richardsof
22nd July 2013, 08:48 AM
http://i44.tinypic.com/1zv33ol.jpg
http://i42.tinypic.com/2hwoeti.jpg

Richardsof
22nd July 2013, 08:57 AM
http://i44.tinypic.com/2mg6xzp.jpg

siqutacelufuw
22nd July 2013, 09:42 AM
400 பதிவுகள் கண்ட எனக்கு தங்கள் பதிவுகள் மூலம், வாழ்த்துக்கள் கூறிய அனைத்து

நல்லிதயங்களுக்கும் நன்றியை நவில்கிறேன்.


அலைபேசியில் அழைத்து, வாழ்த்து கூறிய உடன்பிறவா சகோதரர்கள் திரு. வினோத், திரு. வேலூர் ராமமூர்த்தி மற்றும் அன்புச்சகோதரர் திரு. பம்மல் சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது பணிவான நன்றி !.

http://i44.tinypic.com/nb67us.jpg

எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
22nd July 2013, 09:44 AM
நம் பாரத திருநாட்டின் முதல் குடிமகனாம், குடியரசுத் தலைவரின் முதல் பதக்கம் அதுவும் வெள்ளிப்பதக்கம் பெற்ற "மலைக்கள்ளன்" திரைப்படத்திற்கான இந்திய அரசாங்க சான்றிதழ் நகலை பதிவிட்டமைக்கு அன்பு சகோதரர் திரு. ராகவேந்திரா அவர்களுக்கு எனது சிரம் தாழ்த்தி கரம் கூப்பி நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

இது ஒரு அபூர்வ ஆவணம். இந்த பொக்கிஷத்தை பேணிக்காத்து தக்க சமயத்தில்

வெளியிட்டமைக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள் கலந்த நன்றி !

http://i40.tinypic.com/2lblyt2.jpg

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
22nd July 2013, 09:47 AM
பெரும் வெற்றி பெற்று, வசூல் சாதனை புரிந்து, ஆறு மொழிகளில் தயாரான "மலைக்கள்ளன்" திரைப்படத்தை தயாரித்து, தமிழ் மொழியில் 59 வருடங்களுக்கு முன் இதே நாளில், வெளியிட்ட பக்ஷிராஜா மறைதிரு ஸ்ரீ ராமுலு அவர்களை, இத்தருணத்தில் நினைவு கூர்ந்து

அவரின் நிழற் படத்தையும் பதிவிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

http://i40.tinypic.com/ztu62u.jpg

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
22nd July 2013, 09:56 AM
'''நல்லவரெல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது...''

என்ற அடியைப் பாடும்போது, அங்குள்ள காந்தி மகாத்மாவின் சிலையைப் பார்த்துக் கும்பிடுகிறார்.

அன்று மாலை நான் எம்.ஜி.ஆரிடம் ''தாங்கள் மகாத்மாவை வணங்கும் காட்சி என்னைப் புல்லரிக்கச் செய்துவிட்டது. இந்தக் காட்சியைப் படத்தில் பார்க்கும் பொதுமக்கள் பெரிதும் ரசிப்பார்கள்'' என்றேன்.

''காந்தியிடம் எனக்கு எப்போதுமே பக்தி உண்டு. என் வீட்டில் நான் கும்பிடும் என் தாயாரின் படத்துடன் காந்தியின் படத்தையும் வைத்திருக்கிறேன். உலகத்தில் அந்த மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும் புத்தரும்கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்'' என்றார்.

http://i42.tinypic.com/30jlmpt.jpg

================================================== ========
மகாத்மா காந்தியிடம் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, அவரது வழியில்,

அரசியலில் தூய்மையும், நேர்மையும் கடைப்பிடித்த எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். தான் உண்மையான காந்தியவாதி. ஓர் இலட்சியவாதியும் கூட.


நன்றி திரு. ரூப் அவர்களே !

ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த ARTICLE திரு. மணியன் அவர்கள் எழுதியதாக இருக்கும் என யூகிக்கிறேன்.

oygateedat
22nd July 2013, 02:59 PM
http://i41.tinypic.com/160zmg1.jpg

oygateedat
22nd July 2013, 03:02 PM
http://i44.tinypic.com/fdfupv.jpg

oygateedat
22nd July 2013, 03:10 PM
http://i40.tinypic.com/2wf4j2b.jpg

Stynagt
22nd July 2013, 03:36 PM
கவிஞர் வாலி ராணி வார இதழில் நான்கு வாரங்கள் மக்கள் திலகத்துடன் தமக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை எழுதினார். நமது திரி நண்பர்களுக்காக அதை இங்கு பதிவிடுகிறேன்.

http://i39.tinypic.com/2n0t4pu.jpg

ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரையை சரியான நேரத்திலும், தன்னுடைய பதிவு தெளிவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மிகவும் நேர்த்தியாக பதிவிடும் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் அயராத உழைப்பு..அவர் இதய தெய்வத்தின் மேல் வைத்த பக்தியைக் காட்டுகிறது...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
22nd July 2013, 04:56 PM
மக்கள் திலகத்தின் சிறை வாசம் :

1958ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி அன்றைய பிரதமர் நேரு அவர்கள் சென்னை வந்த போது அவருக்கு கறுப்புக் கொடி காட்டுவதென்று, பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி. மு. க. சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
அதன் விளைவாக பெரும் பரபரப்பும் கிளர்ச்சி சூழ்நிலையும் நிலவியது.


ஜனவரி 3ம் தேதியே கைது படலம் தொடங்கியது. போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர்களை வழி அனுப்ப வந்த நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள், கே.ஆர். ராமசாமி அவர்கள், எஸ். எஸ். ராஜேந்திரன் அவர்கள், டி. வி. நாராயணசுவாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது சென்னை மத்திய சிறையில் நம் புரட்சித்தலைவருடன் இருந்த "தில்லை வில்லளான்" ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் .....

சென்னையில் நேரு அவர்கள் வந்த போது, கழக சார்பில் கறுப்புக்கொடி காட்டத்
திட்டமிட்டோம். அப்பொழுது கழக முக்கியத் தோழர்களை முன் கூட்டியே கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்டு சென்னையில் மத்திய சிறையில் வைக்கபட்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் எம். ஜி. ஆர்., எஸ். எஸ். ஆர்., டி. வி. என்., முன்னாள் மேயர் முனுசாமி, ராஜாராம் எம். பி. , சண்முகம் எம். எல். ஏ. நான் மற்றும் சிலர். எங்களை சுமார் தினங்கள் வைத்திருந்து வழக்கு ஏதுமின்றி விட்டு விட்டனர்.

அப்பொழுது எம். ஜி. ஆர். அவர்களை நீண்ட நாள் சிறையில் விட படத் தயாரிப்பாளர்களும், மற்றவர்களும், விரும்ப வில்லை. அவர்கள் பெரும் முயற்சியெடுத்து அவர் எங்களை விட முன்னதாக வெளியில் செல்ல வைத்து விட்டனர்.

அப்படி அவர் நடிப்புக்கு செல்லாமல் தனித்து விடப்பட்டால், எப்படியிருப்பார் என்பதைக் காணும் நல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்று கண்டு களித்த கணிப்பை இன்று சொல்வது பொருத்தம் என்று கருதுகிறேன்.
அவர் சிறைக்கு வந்ததும் எங்களையெல்லாம் 'சி' வகுப்புக்கு அழைத்துச் சென்றார்கள். நாங்கள் செல்ல மறுத்தோம். பிறகு பலவந்தபடுத்தி அனுப்பினார்கள். ஆனால், அவரை 'பி' பிரிவுக்கு அனுப்பச் சம்மதித்தனர். ஆனால், எல்லோருக்கும் ஒரே வகுப்பு கிடைத்தாலே, தானும் இருக்க முடியும் என்றார் அவர். அதன் பிறகு எல்லோருக்கும் 'பி' வகுப்பு சிறைக்கு அனுமதி தந்தனர்.

அவர் உள்ளே இருக்கின்றார் என்றவுடன், நண்பர்கள் பழங்களாக அனுப்பத் தொடங்கி விட்டனர்.
மேலும், எங்களுக்கு சட்டப்படி உள்ளே அனுமதிக்கப்படும் எல்லாப் பொருட்களும் ஏராளமாக வந்து குவிய வைத்து விட்டனர். அவைகளை காலையில் எழுந்தவுடன் எல்லா நண்பர்களுக்கும் பகிர்ந்தளித்து மிகுதியை 'சி' வகுப்பில் உள்ள நம் தோழர்கள் .... மற்றவர்களுக்கு அளித்து விட்டு பிறகே தான் உண்பதைக் கவனித்தார். அவரது, பகிர்ந்தளிக்கும் பெருங்குணம் சிறையிலும் மிளிர்ந்தது கண்டு மகிழ்ந்தேன்.

காலையில் பல் துலக்கியவுடன் அடியேன் ( "தில்லை வில்லளான்" ) உண்டது.பத்து தினங்களும் 'ஆப்பிள்' தான். பழங்களுக்குக் காவலும், பொறுப்பும் டி. வி. என். அவர்கள் தான்.

அவர் (எம். ஜி. ஆர்.) சிறைக்கு வந்த அன்றே, அந்த வகுப்பில் உள்ள அனைவருடனும் சரளமாகப் பழகி விட்டார். ஒவ்வொருவருடைய 'வரலாறே' அவருக்கு 'அத்துப்படி' யாகி விட்டது. அவர் அந்த தோழர்களுடன் எப்படிப் பழகியிருந்தால், அவர் சிறையை விட்டு, வெளியில் செல்லும் பொழுது, ஒரு 'சிறை விருந்து' நடத்தினார்கள் பாருங்கள் ..... அந்த வகுப்பில் உள்ள எல்லா கைதிகளும் அன்று தேங்காய் சாதம் செய்து விருந்து படைத்தார்கள். அதை உண்டு முடித்து விட்டு ஒரு உரையையும் நிகழ்த்தினார்.

அவர் விடுதலையாகி வெளியில் சென்று விட்டார். ஆனால், அவருக்கென்று வந்து குவிந்த தின்பண்டங்களும், பழ வகைகளும், எங்களுக்கு மேலும் பத்து தினங்களுக்கு உதவின. அது மட்டுமா ? வெளியில் சென்றவர், மீண்டும் ஒரு முறை வந்து விசாரித்து விட்டு போனார்.

அவர் வள்ளல். அவர் சிறைபடத் தேவையில்லை. ஆனால், கொண்ட கொள்கைக்காக, கட்சியின் கட்டளைக்காக சிறைக்கு வந்தார். அந்த அளவு இலட்சியவாதி எம். ஜி. ஆர்.

எம்.ஜி. ஆருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.

[IMG]http://i40.tinypic.com/2ez37mr.jpg

================================================== ============================

இந்த தில்லை வில்லாளன் தி. மு. க. வின் நிறுவன கால உறுப்பினர்களில் ஒருவர். பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புக்கு பாத்திரமானவர். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய திராவிட நாடு, காஞ்சி போன்ற வார ஏடுகளில் பொறுப்பு ஏற்று பணியாற்றியவர்.


"தன் சிறைவாசம் பற்றி எம். ஜி. ஆர். எப்போதும் வெளியில் கூறிக் கொண்டதில்லை".

பின்னாளில், நமது புரட்சிதலைவர் அவர்கள், 1962ம் ஆண்டு சீனப் படையெடுப்பின் போது

பிரதமர் நேரு அவர்களின் வானொலி உரையைக் கேட்டு யுத்த நிதியாக, நாட்டிலேயே, முதல் நபராக ரூபாய் 75,000 தொகையை அளித்தார். இது அந்தக் காலத்தில், மிக மிகப் பெரிய தொகை.


தான் சார்ந்திருந்த கட்சியின் கொள்கைக்கும் கட்டுப்பட்டு, நாட்டு பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு, தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்து செயல்பட்ட நமது மக்கள் திலகத்தின் பெருமையை என்னென்று சொல்வது ?

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
22nd July 2013, 05:33 PM
President's Silver Medal (Tamil) for 1954

Malaikallan

http://iffi.nic.in/Dff2011/2nd_nff/2nd_nff_1955_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/2nd_nff/2nd_nff_1955_img_16.jpg

Images quoted and reproduced from Directorate of Film Festivals of India website.

மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் பெற்ற குடியரசுத்தலைவரின் விருதினை பதிவிட்டு எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய திரு. ராகவேந்திரா அவர்களுக்கு எங்கள் தங்கத்தின் ரசிகர்கள் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்..

Stynagt
22nd July 2013, 05:54 PM
மக்கள் திலகத்தின் சிறை வாசம் :

1958ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி அன்றைய பிரதமர் நேரு அவர்கள் சென்னை வந்த போது அவருக்கு கறுப்புக் கொடி காட்டுவதென்று, பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி. மு. க. சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
அதன் விளைவாக பெரும் பரபரப்பும் கிளர்ச்சி சூழ்நிலையும் நிலவியது.


ஜனவரி 3ம் தேதியே கைது படலம் தொடங்கியது. போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர்களை வழி அனுப்ப வந்த நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள், கே.ஆர். ராமசாமி அவர்கள், எஸ். எஸ். ராஜேந்திரன் அவர்கள், டி. வி. நாராயணசுவாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது சென்னை மத்திய சிறையில் நம் புரட்சித்தலைவருடன் இருந்த "தில்லை வில்லளான்" ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் .....

சென்னையில் நேரு அவர்கள் வந்த போது, கழக சார்பில் கறுப்புக்கொடி காட்டத்
திட்டமிட்டோம். அப்பொழுது கழக முக்கியத் தோழர்களை முன் கூட்டியே கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்டு சென்னையில் மத்திய சிறையில் வைக்கபட்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் எம். ஜி. ஆர்., எஸ். எஸ். ஆர்., டி. வி. என்., முன்னாள் மேயர் முனுசாமி, ராஜாராம் எம். பி. , சண்முகம் எம். எல். ஏ. நான் மற்றும் சிலர். எங்களை சுமார் தினங்கள் வைத்திருந்து வழக்கு ஏதுமின்றி விட்டு விட்டனர்.

அப்பொழுது எம். ஜி. ஆர். அவர்களை நீண்ட நாள் சிறையில் விட படத் தயாரிப்பாளர்களும், மற்றவர்களும், விரும்ப வில்லை. அவர்கள் பெரும் முயற்சியெடுத்து அவர் எங்களை விட முன்னதாக வெளியில் செல்ல வைத்து விட்டனர்.

அப்படி அவர் நடிப்புக்கு செல்லாமல் தனித்து விடப்பட்டால், எப்படியிருப்பார் என்பதைக் காணும் நல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்று கண்டு களித்த கணிப்பை இன்று சொல்வது பொருத்தம் என்று கருதுகிறேன்.
அவர் சிறைக்கு வந்ததும் எங்களையெல்லாம் 'சி' வகுப்புக்கு அழைத்துச் சென்றார்கள். நாங்கள் செல்ல மறுத்தோம். பிறகு பலவந்தபடுத்தி அனுப்பினார்கள். ஆனால், அவரை 'பி' பிரிவுக்கு அனுப்பச் சம்மதித்தனர். ஆனால், எல்லோருக்கும் ஒரே வகுப்பு கிடைத்தாலே, தானும் இருக்க முடியும் என்றார் அவர். அதன் பிறகு எல்லோருக்கும் 'பி' வகுப்பு சிறைக்கு அனுமதி தந்தனர்.

அவர் உள்ளே இருக்கின்றார் என்றவுடன், நண்பர்கள் பழங்களாக அனுப்பத் தொடங்கி விட்டனர்.
மேலும், எங்களுக்கு சட்டப்படி உள்ளே அனுமதிக்கப்படும் எல்லாப் பொருட்களும் ஏராளமாக வந்து குவிய வைத்து விட்டனர். அவைகளை காலையில் எழுந்தவுடன் எல்லா நண்பர்களுக்கும் பகிர்ந்தளித்து மிகுதியை 'சி' வகுப்பில் உள்ள நம் தோழர்கள் .... மற்றவர்களுக்கு அளித்து விட்டு பிறகே தான் உண்பதைக் கவனித்தார். அவரது, பகிர்ந்தளிக்கும் பெருங்குணம் சிறையிலும் மிளிர்ந்தது கண்டு மகிழ்ந்தேன்.

காலையில் பல் துலக்கியவுடன் அடியேன் ( "தில்லை வில்லளான்" ) உண்டது.பத்து தினங்களும் 'ஆப்பிள்' தான். பழங்களுக்குக் காவலும், பொறுப்பும் டி. வி. என். அவர்கள் தான்.

அவர் (எம். ஜி. ஆர்.) சிறைக்கு வந்த அன்றே, அந்த வகுப்பில் உள்ள அனைவருடனும் சரளமாகப் பழகி விட்டார். ஒவ்வொருவருடைய 'வரலாறே' அவருக்கு 'அத்துப்படி' யாகி விட்டது. அவர் அந்த தோழர்களுடன் எப்படிப் பழகியிருந்தால், அவர் சிறையை விட்டு, வெளியில் செல்லும் பொழுது, ஒரு 'சிறை விருந்து' நடத்தினார்கள் பாருங்கள் ..... அந்த வகுப்பில் உள்ள எல்லா கைதிகளும் அன்று தேங்காய் சாதம் செய்து விருந்து படைத்தார்கள். அதை உண்டு முடித்து விட்டு ஒரு உரையையும் நிகழ்த்தினார்.

அவர் விடுதலையாகி வெளியில் சென்று விட்டார். ஆனால், அவருக்கென்று வந்து குவிந்த தின்பண்டங்களும், பழ வகைகளும், எங்களுக்கு மேலும் பத்து தினங்களுக்கு உதவின. அது மட்டுமா ? வெளியில் சென்றவர், மீண்டும் ஒரு முறை வந்து விசாரித்து விட்டு போனார்.

அவர் வள்ளல். அவர் சிறைபடத் தேவையில்லை. ஆனால், கொண்ட கொள்கைக்காக, கட்சியின் கட்டளைக்காக சிறைக்கு வந்தார். அந்த அளவு இலட்சியவாதி எம். ஜி. ஆர்.

எம்.ஜி. ஆருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.

[IMG]http://i40.tinypic.com/2ez37mr.jpg

================================================== ============================

இந்த தில்லை வில்லாளன் தி. மு. க. வின் நிறுவன கால உறுப்பினர்களில் ஒருவர். பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புக்கு பாத்திரமானவர். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய திராவிட நாடு, காஞ்சி போன்ற வார ஏடுகளில் பொறுப்பு ஏற்று பணியாற்றியவர்.


"தன் சிறைவாசம் பற்றி எம். ஜி. ஆர். எப்போதும் வெளியில் கூறிக் கொண்டதில்லை".

பின்னாளில், நமது புரட்சிதலைவர் அவர்கள், 1962ம் ஆண்டு சீனப் படையெடுப்பின் போது

பிரதமர் நேரு அவர்களின் வானொலி உரையைக் கேட்டு யுத்த நிதியாக, நாட்டிலேயே, முதல் நபராக ரூபாய் 75,000 தொகையை அளித்தார். இது அந்தக் காலத்தில், மிக மிகப் பெரிய தொகை.


தான் சார்ந்திருந்த கட்சியின் கொள்கைக்கும் கட்டுப்பட்டு, நாட்டு பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு, தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்து செயல்பட்ட நமது மக்கள் திலகத்தின் பெருமையை என்னென்று சொல்வது ?

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

தங்களின் பதிவுகள் எண்ணிக்கையில் நானூறு என்றாலும் அவற்றின் மதிப்பு நான்காயிரத்தை தாண்டும்..நம் தலைவனின் சிறைவாசத்தை பதிவிட்ட தங்களின் உழைப்பிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...தங்களின் பதிவைக் காண விழையும் அன்பன் வி. கலியபெருமாள்

Stynagt
22nd July 2013, 05:59 PM
http://i44.tinypic.com/1zv33ol.jpg
http://i42.tinypic.com/2hwoeti.jpg

திரு. வினோத் சார்..திருமதி லதா அவர்களின் கட்டுரை மிக அருமை..தங்களுக்கு மிக்க நன்றி..

Stynagt
22nd July 2013, 06:08 PM
நேற்று முதல் (22.07.2013) புதுச்சேரி நியூடோனில் தினசரி நான்கு காட்சிகளாக புரட்சி நடிகராகவும்-மக்கள் திலகமாகவும் இரு வேடங்களில் அசத்தும் 'குடியிருந்த கோயில்' வெற்றி நடை போடுகிறது..

http://i42.tinypic.com/8xlv8j.jpg

Stynagt
22nd July 2013, 06:12 PM
புதுச்சேரி வீதியின் சுவர்களை அலங்கரிக்கும் நம் மன்னவனின் போஸ்டர்கள்
http://i44.tinypic.com/32zht1c.jpg

Richardsof
22nd July 2013, 06:22 PM
மக்கள் திலகத்தின் ''குடியிருந்த கோயில் ''- புதுவை

''இதய வீணை '' - கோவை

தேடிவந்த மாப்பிளை - மதுரை

நாடோடிமன்னன் - நாகர்கோயில்

படங்கள் இந்த வாரம் தமிழகத்தில் நடைபெறுகிறது .

தகவல் -

நன்றி
திரு கலியபெருமாள்

திரு ரவிச்சந்திரன்

திரு கருப்பையா

Stynagt
22nd July 2013, 06:59 PM
http://i44.tinypic.com/2mq6rex.jpg

இடைவிடாத மழையிலும் நம் இதயம் கவர் நாயகனின் '
இதய வீணை' திரைக்காவியம் இணையில்லா வெற்றிகண்ட
இனிப்பான செய்தி தந்த இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு
இதயங்கனிந்த நன்றி..

இடையறாத மழையிலும் 3 நாட்களில் ஐம்பதாயிரம்
வசூல் மழை பொழிந்து புதியதோர் சாதனை படைக்கும்
நம் புனிதனின் புகழ் இமயம் முதல் குமரி வரை என்ன-
உலகம் முழுவதும் பரவுமென்று உளமார வாழ்த்தும்
உங்கள் அன்பன் வி. கலியபெருமாள்..

Stynagt
22nd July 2013, 07:00 PM
http://i44.tinypic.com/34pdrq1.jpg

oygateedat
22nd July 2013, 07:39 PM
http://i42.tinypic.com/c2req.jpg

oygateedat
22nd July 2013, 07:45 PM
http://i40.tinypic.com/2qbha21.jpg

oygateedat
22nd July 2013, 07:46 PM
http://i39.tinypic.com/28moc5v.jpg

oygateedat
22nd July 2013, 07:57 PM
பெரும் வெற்றி பெற்று, வசூல் சாதனை புரிந்து, ஆறு மொழிகளில் தயாரான "மலைக்கள்ளன்" திரைப்படத்தை தயாரித்து, தமிழ் மொழியில் 59 வருடங்களுக்கு முன் இதே நாளில், வெளியிட்ட பக்ஷிராஜா மறைதிரு ஸ்ரீ ராமுலு அவர்களை, இத்தருணத்தில் நினைவு கூர்ந்து

அவரின் நிழற் படத்தையும் பதிவிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

http://i40.tinypic.com/ztu62u.jpg

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு

நன்றி சார் ஸ்ரீ ராமுலு நாயுடு அவர்களின் புகைப்படத்தை பதிவு செய்தமைக்கு. கோவைக்கு பெருமையை தேடித்தந்த அவரின் மற்றுமொரு புகைப்படத்தை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

http://i40.tinypic.com/otlqow.jpg

oygateedat
22nd July 2013, 08:05 PM
http://i44.tinypic.com/34pdrq1.jpg

Thank u Mr.Kaliaperumal Sir for updating the information on screening of our beloved god's movies at pondicherry every now and then. I appreciate your sincere efforts taken on this matter.

Regds,

S.RAVICHANDRAN

siqutacelufuw
22nd July 2013, 08:21 PM
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த "ஜூனியர் விகடன்" இதழில் கேள்வி - பதில் பகுதியில்,



A. தமிழகத்தை ஆண்ட மிகச்சிறந்த,

B. ஆட்சிக்கு வந்த பின்பும் சொத்து சேர்க்காத முதல்வர்கள் யாவர் ?

என்ற கேள்விக்கு
1. பெருந்தலைவர் காமராஜர்,

2. பேரறிஞர் அண்ணா
3. புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்.

என்று அவர்கள் ஆட்சி புரிந்த காலவரிசைப்படி பதிலளிக்கப்பட்டுள்ளது.

இது உண்மையிலேயே ஒவ்வொரு எம். ஜி. ஆர். அன்பனும், ரசிகனும், பக்தனும் பெருமை பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம்.. .

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்று 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை சுமார் 9 வருடங்கள் சிறப்பாக ஆட்சி புரிந்தார்.

அவரது பதவிக்காலம் நம் பாரத நாடு சுதந்திரம் பெற்று சில வருடங்களே ஆகியிருந்த நிலையில், எண்ணற்ற மக்கள் நல திட்டங்கள் சுதந்திர இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் அமல்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை. மேலும், அப்போது மக்கள் தொகை குறைவு. இயற்கை வளங்கள் அதிகம். மத்தியில், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்த காரணத்தால், திட்டங்கள் பல எளிதில், எந்த வித தங்கு தடையுமின்றி நிறைவேற்றப்பட்டன, இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். மேலும், 2 பிரதமர்களை உருவாக்கி 'KING MAKER' என போற்றப்பட்டதால், அவரின் செல்வாக்கு, மத்திய அரசில் ஓங்கி உயர்ந்திருந்த நிலையில், பல திட்டங்களுக்கு எந்தவித சிக்கலின்றி அனுமதி கிடைத்தது.

இந்த அனுகூலங்கள், பிற்காலத்தில் அரியணையேறிய பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இவ்வளவுக்கு பின்பும், 1967ல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தோல்வி அடைந்ததுக்கான காரணிகளாக அன்றைய தினம் பத்திரிகைகளால் படம் பிடித்துக் காட்டப்பட்டவை வருமாறு :


1. 1964-67 கால காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த மனகசப்பு

2. வறட்சியால், மாநிலத்தில் பசி, பஞ்சம் மற்றும் பட்டினி தாண்டவமாடியது

3. மக்கள் திலகத்தின் உறுதியான 'தி.மு.க. ஆதரவு' நிலை மற்றும் எழுச்சியான அறிக்கையுடன் கூடிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுவரொட்டிகள்

4. பேரறிஞர் அண்ணா அவர்களின் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், அவரின் கண்ணியமான 1962-67 கால பாராளுமன்ற நடவடிக்கைகள்

5. மக்களின் ஆட்சி மாற்ற எண்ணம்

1954ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால், தமிழக முதல்வராக முடியாத நிலை இருந்தது. அது சமயம், குடியாத்தம் சட்ட மன்றத்துக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க., எவரையும் வேட்பாளராக நிறுத்தாமல், காமராஜர் அவர்கள் எளிதில் முதல்வராக உதவியது. இது, பேரறிஞர் அண்ணா அவர்களின் மிகப் பெரிய பெருந்தன்மையை காட்டுகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 மார்ச் மாதம் 6ம் தேதி, ஆட்சிப் பொறுப்பினை ஏற்று 02-02-1969 வரை, மிகக் குறுகிய காலமே (சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே) ஆண்டார். அதற்குள், காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. 1967-1969 இடைப்பட்ட அந்த குறுகிய காலத்தில், எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்த போழ்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் வருமாறு :


1. ஒரு ரூபாய் படியரிசி திட்டம் கொண்டு வந்தது.

2. சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தியது.

3. சென்னை மாகாணம் "தமிழ் நாடு" மாநிலம் என்று உதயமாகியது. .

4. தமிழ் சொற்களை அரசு ஆவணங்களில் பயன் படுத்த உத்தரவிட்டது

5. பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயப் பாடம் என்பதை நீக்கி ஆணையிட்டது மட்டுமல்லாமல், விருப்பமானவர்கள் மட்டும் படித்துக் கொள்ளலாம் என்று விலக்களித்தது.

6. அரசுப் பேருந்துகளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அவர் எழுதிய திருக்குறள் இடம் பெறச் செய்து அதன் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்தியது.

7. இளைஞர்களை சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்த "சீரணி" இயக்கம் கண்டது.

8. திருக்குறள் ஆராய்ச்சிக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், பல்கலைகழகங்களுக்கு தனி நிதி ஒதுக்கினார்.

9. தமிழறிஞர்களுக்கு அரசு சார்பில் சிலையமைத்தது.

10. விலைவாசி உயர்வினை கட்டுக்குள் கொண்டு வந்தது.

11. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கொணரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விரிவு படுத்தியது. இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால் புரட்சித் தலைவரைப்போல் பொற்கால ஆட்சியை வழங்கியிருப்பார்.


பிளவு பட்ட காங்கிரசின் ஒரு பிரிவான இந்திரா காங்கிரஸ் கட்சியை ஆதரித்தாலும், மற்றொரு பிரிவான ஸ்தாபன காங்கிரஸ் - ஜனசங்கம் கட்சிகள் உள்ளடக்கிய "ஜனதா" கட்சி 1977ல் மத்தியில் ஆட்சி கைப்பற்றியிருந்த காலத்திலும், பின்னர் 1980ல் அவரது ஆட்சியை பறித்து அவரை தங்கள் எதிரியாக பாவித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்த கால கட்டத்திலும், அதற்கும் பின்பும் புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சி நிகழ்த்திட்ட சாதனைகளின் பட்டியில் வருமாறு :



1. பூரண மது விலக்கு திட்டத்தை தொடக்க காலத்தில் அமல் படுத்தினார்.

2. ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தினை 01-07-1982
முதல் கொண்டு வந்தார்.

3. அழகுத் தமிழில் சீர் திழுத்த எழுத்துக்களை, 19-10-1978 அன்று நடைமுறைப்படுத்தினார்.

4. வழி வழியாக அனுபவிக்கப்பட்ட கிராம முன்சீப் பதவியினை ஒழித்து அதற்கு பதிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர்களை, தமிழக அரசு ஊழியர்களாக நியமித்தார்.

5. தன்னிறைவு திட்டம் தொடங்கினார்.

6. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்து மட்டுமல்லாமல், முக்கிய நகரங்களை HEAD QUARTERS CITY ஆக மாற்றினார்.

7. புதிய போக்கு வரத்து கழங்களை துவக்கி, இன்றைய தினம் தமிழக மூலை முடுக்கெல்லாம்,போக்குவரத்து வசதி ஏற்படுத்தினார். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்க, 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார்.

8. அதே போன்று, குக்கிராமங்களுக்கெல்லாம் மின்னொளி வசதி அளித்தார்.

9. காவல் துறைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். (Under Management Concept - It is known as DE-CENTRALIZATION)

10. வீட்டுக்கொரு விளக்கு என்ற அடிப்படையில் இலவச மின்சாரம் அளித்திட்டார்.

11 .நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிக்கு, வானம் பொய்த்த போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில் (ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு செட்டுகளுக்கு புதிதாக மின்சாரம் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார்.

மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.

12. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.

13. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.

14. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையும், காலணியும், வழங்க வகை செய்தார்.

15. இலவச பல்பொடி வழங்கும் திட்டத்தை கொணர்ந்தார்.

16. விலைவாசி உயர்வில்லாமால், இறுதி நாட்கள் வரை தனிக்கவனம் செலுத்தினார். அதனை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

17. பண்டிகை காலங்களில், கூடுதல் அரிசி நியாய விலைக் கடைகளில் வழங்கினார்.

18. முதியோருக்கு, இலவச வேஷ்டி, சேலை, மற்றும் பென்சன் (PENSION) வழங்கி சிறப்பித்தார்.

19. எழுச்சிக் கவிஞர் பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயரில் பல்கலைகழகங்களை ஏற்படுத்தினார்.

20. தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் பல்கலைகழகம் உருவாக்கினர்.

21. மகளிருக்காக "அன்னை தெரேசா" பல்கலை கழகம், கொடைக்கானலில், நிறுவினார்.

22. சுய நிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி, அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற் கொள்ளச் செய்தார். ஆசிரியர்கள் பலரும் இதன் மூலம் வேலை வாய்ப்பினை பெற்றனர்.

23. ஏழை மாணவ - மாணவியர் பயன் தக்க வகையில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறையை புகுத்தினார்.

24. கரும்பு சர்க்கரையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை நாட்டிலேயே முதன் முதலில் நம் தமிழகத்தில், கரூர் மாநகரத்தில் ஏற்படுத்தினார்.

25. திரையரங்குகளில் COMPOUND TAX முறையை அமல் படுத்தி, தமிழ் திரை உலகினை அழிவிலிருந்து மீட்டார்.
26. ஆங்கில படங்கள் திரையிடும் தமிழக அரங்குகளில், கட்டாயம் 3 மாதமாவது தமிழ் திரைப்படங்களை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

27. அரசு அலுவலகங்களில், கோப்புக்களில், குறிப்புக்களை தமிழில் இடம் பெறச் செய்தார்.

28. அரசு நிர்வாகத்தில், அரசியல் குறுக்கீடு இல்லாமல் பார்த்துகொண்டார்.

29. மின்சார தேவையை கருத்தில் கொண்டு, "குந்தா" போன்ற அனல் மின் நிலையங்கள் அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட அரசு உதவியினை வழங்கினார்.

30. முதன் முதலில் மாநில கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வித்திட்டார்.

31. சாதிக் கட்சிகளை ஊக்குவிக்காமல், மக்கள் ஆதரவுடன், அவைகளை தலை தூக்கிடாமல் செய்தார்.
(உதாரணமாக - இந்துக்களில் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் வசிக்கும்
அருப்புக்கோட்டையில் தானே நின்று மகத்தான வெற்றி பெற்றார். அது போன்று நெல்லையில், கிறிஸ்தவ
இனத்தை சார்ந்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை நிற்கவைத்து வெற்றி பெறச செய்தார். அதே போல்,
பாளையங்கோட்டையில், நாஞ்சில் மனோகரன் அவர்களை வெற்றி பெறச் செய்தார்.

தமிழகத்தில் பல தொகுதிகளில் இதே போன்று, தொகுதிக்கு புதியவர்களையும், மிக
மிக சாதாரணமானவர்களையும், பெரும்பான்மை இனத்தை சாராதவர்களையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து
வெற்றி பெறச் செய்து, ஒரு புரட்சிகரமான சாதனையை ஏற்படுத்த நமது புரட்சித் தலைவரால் மட்டுமே
முடியும்),

32. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற "இனபடுகொலையை" கண்டித்து, அரசு சார்பில் பொது 'BANDH' நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து, ஒரு தீர்வு காண விதை விதைத்தார்.

33. தமிழகத்துக்கு கூடுதல் அரிசியும் உணவும் மத்திய தொகுப்பிலிருந்து வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டு 09-02-1983 அன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

34. தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து மாநிலத்தில், தண்ணீர் பஞ்சத்தை போக்கினார்.

35. அண்டை மாநிலமான கர்நாடக முதல்வர்களுடன் (மறை திரு. தேவராஜ் அர்ஸ் மற்றும் மறை திரு. குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே போன்றோருடன்) நல்லுறவு பூண்டு, காவிரி நீர் பெற்று, விவசாயத் தொழிலை மேம்படச் செய்தார்.

36. தமிழக மக்களின் நல் வாழ்விற்காக மத்தியில் ஆட்சி புரிந்த மாற்றுக் கட்சியினருடனும், சுமூக உறவு கொண்டு, மக்கள் நல திட்டங்கள் பல கொண்டு வந்தார்.

37. நாட்டிலேயே மகளிருக்கான காவல் நிலையங்களை தமிழகத்தில் முதன் முதலில் ஏற்படுத்தி, முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

38. சந்தேக கேஸ் என்கின்ற பிரிவை குற்றவியலில் இருந்து நீக்கினார்.

39. சைக்கிளில் இருவர் செல்லலாம் என்று அனுமதித்தார்.

40. விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்து குற்றம் இரு பாலருக்கும் பொதுவானது என்று உணர்த்தினார்.

41. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.


42.. "ஹரிஜன்" என்ற சொல்லை விடுத்து, "ஆதி திராவிடர்" என்று மாற்றி அழைக்கச் செய்தார்.

43. குக்கிராமங்களில் வாழும் மக்களின் நலனுக்காக, மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்கு வரத்துக்கு வழி வகுத்தார்.

44. சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதற்கென்று தனி வாரியம் அமைத்தார்.

45. நலிந்த பிரிவு மக்களுக்காக 3 ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டிகொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினார்.

46. பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம் அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைன்கர்கள் இன்றும் பயன் பெற்றுறுக் கொண்டிருக்கின்றனர்.

47. வணிகர்களுக்கு "ஒரு முறை வரி விதிப்பு" திட்டத்தை அமல்படுத்தி வீண் தொல்லைகளிலிருந்து விடுதலை அளித்தார்.

48. கிராமக் கை வினைக் கலைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

49. விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான். (இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது).

50. அரசு ஊழியர்களுக்கு, ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஒய்வூதிய திட்டம் (GRATUITY CUM SUPERANNUATION SCHEME) அறிமுகப்படுத்தினார்.

51. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீபெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலார் உட்பட, விபத்து நிவாரண திட்டத்தை அமல் படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.

52. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.

53. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்த வழி செய்யும் திட்டம் துவக்கினார்.

54. காவலர்களுக்கு, தனி வீட்டு வசதி கழகம் அமைத்து, அவர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார்.

55. உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தினை துவக்கினார்.

56. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுடன், ஆதரவற்ற விதவை தாய் மார்களின் பெண்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ருபாய் 1,000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார்.

56. விதவை மறுமணம் செய்து கொண்ட 1,500 தம்பதியருக்கு ருபாய் 5,300 வரை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

57. தாழ்த்தப்பட்டோரை, மாற்று இனத்தவர் மணம் புரிந்தவர்களுக்கும் ருபாய் 4,300 வீதம் வழங்க உத்தரவிட்டார்.

58. பத்தாயிரம் ஏழைத் தாய் மார்களுக்கு உதவ தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

59. ஏழை விதவை தாய் மார்களின் குழந்தைகள் 15,126 பேருக்கு 1979 முதல் 1983 வரை இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார்.

60. மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணி புரியும் மகளிர்க்கு தாங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார்.

இப்படி சாதனைகள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் ---

தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.


1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம் தலைவரின் மகத்தான சாதனை.

இது தவிர, மத்திய அரசின் நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3 வது இடத்தை பெற்றது.


1977-78ல் (அவர் ஆட்சி பொறுப்பு ஏற்ற புதிதில்) தமிழகத்தில் 2424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி 1983-84 ம் வருடத்தில் 3344 மெகா வாட்டாக இருந்தது.

20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.

அரிசி விலை குறைப்பு :

கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ. 1.75 ஆக குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார். இது தவிர, ஒரு கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார். http://i39.tinypic.com/dr6ovt.jpg

பின் குறிப்பு :

1. புரட்சித் தலைவர் ஆட்சி காலத்தில், இயற்கை வளங்கள் குறைந்து, மக்கள் தொகை பெருமளவுக்கு (GEOMETRIC PROGRESSION முறையில்) பெருகியது.

2. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா - இவர்கள் இருவரும் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற போது, சாதாரண நிலையில் இருந்து அதே நிலையினில் கடைசி வரை இருந்தனர்.

ஆனால், நம் மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களோ, நன்கு சம்பாதிக்கக் கூடிய நடிப்பு தொழிலை விட்டொழித்து மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மிக உயர்ந்த நிலையிலிருந்து, எளிமையின் மொத்த உருவமாக திகழ்ந்து, கடைசி யில் சாதாரண நிலையில் ஐக்கிய மானார். அன்பன் :
சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

ujeetotei
22nd July 2013, 08:31 PM
http://i40.tinypic.com/2ez37mr.jpg

================================================== ============================

இந்த தில்லை வில்லாளன் தி. மு. க. வின் நிறுவன கால உறுப்பினர்களில் ஒருவர். பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புக்கு பாத்திரமானவர். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய திராவிட நாடு, காஞ்சி போன்ற வார ஏடுகளில் பொறுப்பு ஏற்று பணியாற்றியவர்.


"தன் சிறைவாசம் பற்றி எம். ஜி. ஆர். எப்போதும் வெளியில் கூறிக் கொண்டதில்லை".

பின்னாளில், நமது புரட்சிதலைவர் அவர்கள், 1962ம் ஆண்டு சீனப் படையெடுப்பின் போது

பிரதமர் நேரு அவர்களின் வானொலி உரையைக் கேட்டு யுத்த நிதியாக, நாட்டிலேயே, முதல் நபராக ரூபாய் 75,000 தொகையை அளித்தார். இது அந்தக் காலத்தில், மிக மிகப் பெரிய தொகை.


தான் சார்ந்திருந்த கட்சியின் கொள்கைக்கும் கட்டுப்பட்டு, நாட்டு பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு, தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்து செயல்பட்ட நமது மக்கள் திலகத்தின் பெருமையை என்னென்று சொல்வது ?

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் [/QUOTE]

நன்றி செல்வகுமார் சார்.

தலைவர் இந்த சிறை வாசத்தை தன்னுடைய சுயசரிதையில் கூட குறிப்பிடவில்லை. தலைவர் கட்சி ஆரம்பித்த வேளையில் எதிர்கட்சிக்காரர் இவர் (எம்.ஜி.ஆர்.) எந்த போராட்டத்திலாவது சிறை சென்று இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. இதே நிகழ்ச்சியை திரு.எஸ்.எஸ்.ஆர். அவர்களும் மேறப்டி சிறைவாசத்தை தலைவருடன் கழித்ததை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொன்றும் நினைவிற்கு வருகிறது. புரட்சித்தலைவராகவும் மற்றும் முதல்வராகவும் இருந்து நேரத்தில் வேலை செய்தவர்களுடன் (சிலர்) நான் உரையாடிய போது அவர்கள் தெரிவித்த தகவல்கள் இதுவரை எந்த செய்தி தாளிலும் வேறு எந்த புத்தகத்திலும் வந்தது இல்லை அந்நிகழ்ச்சிகளை கேட்ட போது தலைவர் சினிமாவில் ஒரு சதாவிதம் தான் கதாநாயக சாகஸம் காட்டி இருக்கிறார் என்பது புரிந்தது. தலைவர் சொல்லாத நிகழ்ச்சிகள் பல உள்ளன.

ujeetotei
22nd July 2013, 08:57 PM
செல்வகுமார் தாங்கள் குறிப்பிட்ட

விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 1008 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான். (இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது)

http://mgrroop.wordpress.com/2011/04/15/108-also-known-as/

ujeetotei
22nd July 2013, 09:00 PM
பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம் அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைன்கர்கள் இன்றும் பயன் பெற்றுறுக் கொண்டிருக்கின்றனர்.

மற்றும் college முடித்து அரசாங்க வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதவர்களுக்கு மாதம் ரூ.150/- கொடுக்கப்பட்டது. மேற்கண்ட இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் என் சகோதரர் இத்திட்டதால் பயன் பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ujeetotei
22nd July 2013, 09:04 PM
National Rural Health Mission Report, published by Ministry of Health and Family Welfare last year.

http://www.mgrroop.blogspot.in/2012/05/nrhm-report.html

ujeetotei
22nd July 2013, 09:08 PM
தலைவருடைய 3 முறை ஆட்சி காலத்தில் பஸ் கட்டணம் ஒரு முறை தான் ஏற்றப்பட்டது. எனக்கு நினைவு தெரிந்து நான் 30 பைசா கொடுத்து பள்ளிகூடத்திற்கு பஸ்ஸில் சென்று வந்தேன் அதன் பின்னர் 5வது படிக்கும் போது 40 பைசா ஆனது அதன் பின்னர் நான் 8வது படிக்கும் வரை அதாவது அவர் மறையும் வரை பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

Stynagt
22nd July 2013, 10:49 PM
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த "ஜூனியர் விகடன்" இதழில் கேள்வி - பதில் பகுதியில்,



A. தமிழகத்தை ஆண்ட மிகச்சிறந்த,

B. ஆட்சிக்கு வந்த பின்பும் சொத்து சேர்க்காத முதல்வர்கள் யாவர் ?

என்ற கேள்விக்கு
1. பெருந்தலைவர் காமராஜர்,

2. பேரறிஞர் அண்ணா
3. புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்.

என்று அவர்கள் ஆட்சி புரிந்த காலவரிசைப்படி பதிலளிக்கப்பட்டுள்ளது.

இது உண்மையிலேயே ஒவ்வொரு எம். ஜி. ஆர். அன்பனும், ரசிகனும், பக்தனும் பெருமை பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம்.. .

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்று 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை சுமார் 9 வருடங்கள் சிறப்பாக ஆட்சி புரிந்தார்.

அவரது பதவிக்காலம் நம் பாரத நாடு சுதந்திரம் பெற்று சில வருடங்களே ஆகியிருந்த நிலையில், எண்ணற்ற மக்கள் நல திட்டங்கள் சுதந்திர இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் அமல்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை. மேலும், அப்போது மக்கள் தொகை குறைவு. இயற்கை வளங்கள் அதிகம். மத்தியில், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்த காரணத்தால், திட்டங்கள் பல எளிதில், எந்த வித தங்கு தடையுமின்றி நிறைவேற்றப்பட்டன, இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். மேலும், 2 பிரதமர்களை உருவாக்கி 'KING MAKER' என போற்றப்பட்டதால், அவரின் செல்வாக்கு, மத்திய அரசில் ஓங்கி உயர்ந்திருந்த நிலையில், பல திட்டங்களுக்கு எந்தவித சிக்கலின்றி அனுமதி கிடைத்தது.

இந்த அனுகூலங்கள், பிற்காலத்தில் அரியணையேறிய பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இவ்வளவுக்கு பின்பும், 1967ல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தோல்வி அடைந்ததுக்கான காரணிகளாக அன்றைய தினம் பத்திரிகைகளால் படம் பிடித்துக் காட்டப்பட்டவை வருமாறு :


1. 1964-67 கால காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த மனகசப்பு

2. வறட்சியால், மாநிலத்தில் பசி, பஞ்சம் மற்றும் பட்டினி தாண்டவமாடியது

3. மக்கள் திலகத்தின் உறுதியான 'தி.மு.க. ஆதரவு' நிலை மற்றும் எழுச்சியான அறிக்கையுடன் கூடிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுவரொட்டிகள்

4. பேரறிஞர் அண்ணா அவர்களின் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், அவரின் கண்ணியமான 1962-67 கால பாராளுமன்ற நடவடிக்கைகள்

5. மக்களின் ஆட்சி மாற்ற எண்ணம்

1954ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால், தமிழக முதல்வராக முடியாத நிலை இருந்தது. அது சமயம், குடியாத்தம் சட்ட மன்றத்துக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க., எவரையும் வேட்பாளராக நிறுத்தாமல், காமராஜர் அவர்கள் எளிதில் முதல்வராக உதவியது. இது, பேரறிஞர் அண்ணா அவர்களின் மிகப் பெரிய பெருந்தன்மையை காட்டுகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 மார்ச் மாதம் 6ம் தேதி, ஆட்சிப் பொறுப்பினை ஏற்று 02-02-1969 வரை, மிகக் குறுகிய காலமே (சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே) ஆண்டார். அதற்குள், காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. 1967-1969 இடைப்பட்ட அந்த குறுகிய காலத்தில், எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்த போழ்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் வருமாறு :


1. ஒரு ரூபாய் படியரிசி திட்டம் கொண்டு வந்தது.

2. சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தியது.

3. சென்னை மாகாணம் "தமிழ் நாடு" மாநிலம் என்று உதயமாகியது. .

4. தமிழ் சொற்களை அரசு ஆவணங்களில் பயன் படுத்த உத்தரவிட்டது

5. பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயப் பாடம் என்பதை நீக்கி ஆணையிட்டது மட்டுமல்லாமல், விருப்பமானவர்கள் மட்டும் படித்துக் கொள்ளலாம் என்று விலக்களித்தது.

6. அரசுப் பேருந்துகளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அவர் எழுதிய திருக்குறள் இடம் பெறச் செய்து அதன் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்தியது.

7. இளைஞர்களை சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்த "சீரணி" இயக்கம் கண்டது.

8. திருக்குறள் ஆராய்ச்சிக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், பல்கலைகழகங்களுக்கு தனி நிதி ஒதுக்கினார்.

9. தமிழறிஞர்களுக்கு அரசு சார்பில் சிலையமைத்தது.

10. விலைவாசி உயர்வினை கட்டுக்குள் கொண்டு வந்தது.

11. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கொணரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விரிவு படுத்தியது. இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால் புரட்சித் தலைவரைப்போல் பொற்கால ஆட்சியை வழங்கியிருப்பார்.


பிளவு பட்ட காங்கிரசின் ஒரு பிரிவான இந்திரா காங்கிரஸ் கட்சியை ஆதரித்தாலும், மற்றொரு பிரிவான ஸ்தாபன காங்கிரஸ் - ஜனசங்கம் கட்சிகள் உள்ளடக்கிய "ஜனதா" கட்சி 1977ல் மத்தியில் ஆட்சி கைப்பற்றியிருந்த காலத்திலும், பின்னர் 1980ல் அவரது ஆட்சியை பறித்து அவரை தங்கள் எதிரியாக பாவித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்த கால கட்டத்திலும், அதற்கும் பின்பும் புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சி நிகழ்த்திட்ட சாதனைகளின் பட்டியில் வருமாறு :



1. பூரண மது விலக்கு திட்டத்தை தொடக்க காலத்தில் அமல் படுத்தினார்.

2. ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தினை 01-07-1982
முதல் கொண்டு வந்தார்.

3. அழகுத் தமிழில் சீர் திழுத்த எழுத்துக்களை, 19-10-1978 அன்று நடைமுறைப்படுத்தினார்.

4. வழி வழியாக அனுபவிக்கப்பட்ட கிராம முன்சீப் பதவியினை ஒழித்து அதற்கு பதிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர்களை, தமிழக அரசு ஊழியர்களாக நியமித்தார்.

5. தன்னிறைவு திட்டம் தொடங்கினார்.

6. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்து மட்டுமல்லாமல், முக்கிய நகரங்களை HEAD QUARTERS CITY ஆக மாற்றினார்.

7. புதிய போக்கு வரத்து கழங்களை துவக்கி, இன்றைய தினம் தமிழக மூலை முடுக்கெல்லாம்,போக்குவரத்து வசதி ஏற்படுத்தினார். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்க, 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார்.

8. அதே போன்று, குக்கிராமங்களுக்கெல்லாம் மின்னொளி வசதி அளித்தார்.

9. காவல் துறைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். (Under Management Concept - It is known as DE-CENTRALIZATION)

10. வீட்டுக்கொரு விளக்கு என்ற அடிப்படையில் இலவச மின்சாரம் அளித்திட்டார்.

11 .நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிக்கு, வானம் பொய்த்த போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில் (ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு செட்டுகளுக்கு புதிதாக மின்சாரம் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார்.

மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.

12. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.

13. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.

14. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையும், காலணியும், வழங்க வகை செய்தார்.

15. இலவச பல்பொடி வழங்கும் திட்டத்தை கொணர்ந்தார்.

16. விலைவாசி உயர்வில்லாமால், இறுதி நாட்கள் வரை தனிக்கவனம் செலுத்தினார். அதனை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

17. பண்டிகை காலங்களில், கூடுதல் அரிசி நியாய விலைக் கடைகளில் வழங்கினார்.

18. முதியோருக்கு, இலவச வேஷ்டி, சேலை, மற்றும் பென்சன் (PENSION) வழங்கி சிறப்பித்தார்.

19. எழுச்சிக் கவிஞர் பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயரில் பல்கலைகழகங்களை ஏற்படுத்தினார்.

20. தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் பல்கலைகழகம் உருவாக்கினர்.

21. மகளிருக்காக "அன்னை தெரேசா" பல்கலை கழகம், கொடைக்கானலில், நிறுவினார்.

22. சுய நிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி, அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற் கொள்ளச் செய்தார். ஆசிரியர்கள் பலரும் இதன் மூலம் வேலை வாய்ப்பினை பெற்றனர்.

23. ஏழை மாணவ - மாணவியர் பயன் தக்க வகையில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறையை புகுத்தினார்.

24. கரும்பு சர்க்கரையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை நாட்டிலேயே முதன் முதலில் நம் தமிழகத்தில், கரூர் மாநகரத்தில் ஏற்படுத்தினார்.

25. திரையரங்குகளில் COMPOUND TAX முறையை அமல் படுத்தி, தமிழ் திரை உலகினை அழிவிலிருந்து மீட்டார்.
26. ஆங்கில படங்கள் திரையிடும் தமிழக அரங்குகளில், கட்டாயம் 3 மாதமாவது தமிழ் திரைப்படங்களை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

27. அரசு அலுவலகங்களில், கோப்புக்களில், குறிப்புக்களை தமிழில் இடம் பெறச் செய்தார்.

28. அரசு நிர்வாகத்தில், அரசியல் குறுக்கீடு இல்லாமல் பார்த்துகொண்டார்.

29. மின்சார தேவையை கருத்தில் கொண்டு, "குந்தா" போன்ற அனல் மின் நிலையங்கள் அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட அரசு உதவியினை வழங்கினார்.

30. முதன் முதலில் மாநில கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வித்திட்டார்.

31. சாதிக் கட்சிகளை ஊக்குவிக்காமல், மக்கள் ஆதரவுடன், அவைகளை தலை தூக்கிடாமல் செய்தார்.
(உதாரணமாக - இந்துக்களில் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் வசிக்கும்
அருப்புக்கோட்டையில் தானே நின்று மகத்தான வெற்றி பெற்றார். அது போன்று நெல்லையில், கிறிஸ்தவ
இனத்தை சார்ந்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை நிற்கவைத்து வெற்றி பெறச செய்தார். அதே போல்,
பாளையங்கோட்டையில், நாஞ்சில் மனோகரன் அவர்களை வெற்றி பெறச் செய்தார்.

தமிழகத்தில் பல தொகுதிகளில் இதே போன்று, தொகுதிக்கு புதியவர்களையும், மிக
மிக சாதாரணமானவர்களையும், பெரும்பான்மை இனத்தை சாராதவர்களையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து
வெற்றி பெறச் செய்து, ஒரு புரட்சிகரமான சாதனையை ஏற்படுத்த நமது புரட்சித் தலைவரால் மட்டுமே
முடியும்),

32. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற "இனபடுகொலையை" கண்டித்து, அரசு சார்பில் பொது 'BANDH' நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து, ஒரு தீர்வு காண விதை விதைத்தார்.

33. தமிழகத்துக்கு கூடுதல் அரிசியும் உணவும் மத்திய தொகுப்பிலிருந்து வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டு 09-02-1983 அன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

34. தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து மாநிலத்தில், தண்ணீர் பஞ்சத்தை போக்கினார்.

35. அண்டை மாநிலமான கர்நாடக முதல்வர்களுடன் (மறை திரு. தேவராஜ் அர்ஸ் மற்றும் மறை திரு. குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே போன்றோருடன்) நல்லுறவு பூண்டு, காவிரி நீர் பெற்று, விவசாயத் தொழிலை மேம்படச் செய்தார்.

36. தமிழக மக்களின் நல் வாழ்விற்காக மத்தியில் ஆட்சி புரிந்த மாற்றுக் கட்சியினருடனும், சுமூக உறவு கொண்டு, மக்கள் நல திட்டங்கள் பல கொண்டு வந்தார்.

37. நாட்டிலேயே மகளிருக்கான காவல் நிலையங்களை தமிழகத்தில் முதன் முதலில் ஏற்படுத்தி, முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

38. சந்தேக கேஸ் என்கின்ற பிரிவை குற்றவியலில் இருந்து நீக்கினார்.

39. சைக்கிளில் இருவர் செல்லலாம் என்று அனுமதித்தார்.

40. விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்து குற்றம் இரு பாலருக்கும் பொதுவானது என்று உணர்த்தினார்.

41. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.


42.. "ஹரிஜன்" என்ற சொல்லை விடுத்து, "ஆதி திராவிடர்" என்று மாற்றி அழைக்கச் செய்தார்.

43. குக்கிராமங்களில் வாழும் மக்களின் நலனுக்காக, மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்கு வரத்துக்கு வழி வகுத்தார்.

44. சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதற்கென்று தனி வாரியம் அமைத்தார்.

45. நலிந்த பிரிவு மக்களுக்காக 3 ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டிகொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினார்.

46. பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம் அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைன்கர்கள் இன்றும் பயன் பெற்றுறுக் கொண்டிருக்கின்றனர்.

47. வணிகர்களுக்கு "ஒரு முறை வரி விதிப்பு" திட்டத்தை அமல்படுத்தி வீண் தொல்லைகளிலிருந்து விடுதலை அளித்தார்.

48. கிராமக் கை வினைக் கலைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

49. விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான். (இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது).

50. அரசு ஊழியர்களுக்கு, ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஒய்வூதிய திட்டம் (GRATUITY CUM SUPERANNUATION SCHEME) அறிமுகப்படுத்தினார்.

51. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீபெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலார் உட்பட, விபத்து நிவாரண திட்டத்தை அமல் படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.

52. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.

53. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்த வழி செய்யும் திட்டம் துவக்கினார்.

54. காவலர்களுக்கு, தனி வீட்டு வசதி கழகம் அமைத்து, அவர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார்.

55. உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தினை துவக்கினார்.

56. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுடன், ஆதரவற்ற விதவை தாய் மார்களின் பெண்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ருபாய் 1,000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார்.

56. விதவை மறுமணம் செய்து கொண்ட 1,500 தம்பதியருக்கு ருபாய் 5,300 வரை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

57. தாழ்த்தப்பட்டோரை, மாற்று இனத்தவர் மணம் புரிந்தவர்களுக்கும் ருபாய் 4,300 வீதம் வழங்க உத்தரவிட்டார்.

58. பத்தாயிரம் ஏழைத் தாய் மார்களுக்கு உதவ தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

59. ஏழை விதவை தாய் மார்களின் குழந்தைகள் 15,126 பேருக்கு 1979 முதல் 1983 வரை இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார்.

60. மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணி புரியும் மகளிர்க்கு தாங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார்.

இப்படி சாதனைகள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் ---

தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.


1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம் தலைவரின் மகத்தான சாதனை.

இது தவிர, மத்திய அரசின் நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3 வது இடத்தை பெற்றது.


1977-78ல் (அவர் ஆட்சி பொறுப்பு ஏற்ற புதிதில்) தமிழகத்தில் 2424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி 1983-84 ம் வருடத்தில் 3344 மெகா வாட்டாக இருந்தது.

20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.

அரிசி விலை குறைப்பு :

கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ. 1.75 ஆக குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார். இது தவிர, ஒரு கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார். http://i39.tinypic.com/dr6ovt.jpg

பின் குறிப்பு :

1. புரட்சித் தலைவர் ஆட்சி காலத்தில், இயற்கை வளங்கள் குறைந்து, மக்கள் தொகை பெருமளவுக்கு (GEOMETRIC PROGRESSION முறையில்) பெருகியது.

2. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா - இவர்கள் இருவரும் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற போது, சாதாரண நிலையில் இருந்து அதே நிலையினில் கடைசி வரை இருந்தனர்.

ஆனால், நம் மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களோ, நன்கு சம்பாதிக்கக் கூடிய நடிப்பு தொழிலை விட்டொழித்து மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மிக உயர்ந்த நிலையிலிருந்து, எளிமையின் மொத்த உருவமாக திகழ்ந்து, கடைசி யில் சாதாரண நிலையில் ஐக்கிய மானார். அன்பன் :
சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

தலைவரின் அரசியல் சாதனைகளை அழகாக எடுத்துக்கூறிய பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி..தாங்கள் கூறியவை தலைவரின் சாதனைகளில் ஒரு சில என்றாலும், தங்கள் பட்டியலில் நான் அறியாத செய்திகள் நிறைய இருந்தன..எனக்கு தெரிந்த, அனைவரும் அறிந்த சில செய்திகளை சொல்ல கடமைபட்டுள்ளேன்.. மக்கள் திலகம் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் பேரறிஞர் அண்ணா மீதும் மட்டற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்..அதே போல் அறிஞர் அண்ணா அவர்களும், தன்னிடத்தில் நிறைய தம்பிகளை வைத்திருந்தாலும் தலைவரை மட்டுமே தன்னுடைய இதயக்கனி என்று குறிப்பிட்டார்..தம்பி..நீ பணம் தர தேவையில்லை, உன் முகத்தை காட்டு அதுவே போதும்..அதுவே லட்சத்திற்கு சமம் என்று பெருமைபட்டுகொண்டார்...மேலும் தி.மு.க..பட்டி தொட்டி எங்கும் கொண்டு போக வேண்டுமென்றால் அது எம்ஜிஆர் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் உணர்ந்தார்...

அனைவருக்கும் இது தெரிந்த செய்தி என்றாலும்..தி.மு.க. யாரால் பட்டி தொட்டியெங்கும் வளர்ந்தது என்பதற்கு இது பெரிய சான்று என்பதால் இதை மீண்டும் நினைவுகூர்கிறேன். ஒரு முறை அண்ணா அவர்கள் தன் நண்பர்களுடன் அம்பாசடர் காரில் சென்னையில் இருந்து திருச்சியை அடுத்த ஊருக்கு திருமணம் ஒன்றிற்கு செல்லும்போது துவரங்குறிச்சியை நெருங்கும்போது விடிந்து விடுகிறது..அண்ணா அவர்கள் தேநீர் அருந்தலாம் வண்டியை நிறுத்துங்கள் என்கிறார்..வண்டியை நிறுத்தியவுடன்.. அண்ணா வண்டியில் இருந்து கீழே இறங்குகிறார். பெருங்கூட்டம் கூடி விடுகிறது..அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் காரில் கட்டியிருந்த கருப்பு சிவப்பு கொடியைப் பார்த்து விட்டு..அண்ணாவைப்பார்த்து 'நீங்கள் எம்ஜிஆர் கட்சிதானே' என்று கேட்டதும்..அண்ணா திகைத்து விட்டார்..அப்போதுதான் அவருக்கு மக்கள் திலகத்தின் மக்கள் செல்வாக்கு மேலும் புரிந்தது..அதிலிருந்து மக்கள் திலகத்தை கழகத்தின் தீவிர பிரச்சாரத்திற்கு பயன்படுத்திகொண்டார்.அண்ணா அரியணை ஏற தலைவர் எவ்வாறெல்லாம் பாடுபட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்..

அதே போல் மக்கள் திலகம் பெருந்தலைவர் மேல் மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார்..பெருந்தலைவரின் எளிமை அவரை வெகுவாக கவர்ந்தது..அதனால்தான் அவர் தி.மு.கவில் இருக்கும்போதே துணிச்சலாக 'காமராஜர் என் தலைவர்' அண்ணா என் வழிகாட்டி என்றார்..அப்போது தி.மு.கவில் இருந்த சிலர்..அண்ணாவிடம் அவர் மாற்று கட்சி தலைவரை..தலைவர் என்கிறார்..அவர்மீது நடவடிக்கை எடுங்கள் என்றபோது..பேரறிஞர் பெருந்தன்மையாக..ராமச்சந்திரன் எண்ணம் எனக்கு தெரியும்..என்று அனைவரையும் அமைதிபடுத்தினார்..மக்கள் திலகம், பெருந்தலைவரை யாரும் தாக்கி பேச கூடாது என்று தன் கட்சியினருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். பெருந்தலைவரே ஒரு சூழ்நிலையில் 'வேட்டைக்காரன் வருவான்' ஏமாந்து விடாதீர்கள் என்று சொன்னபோது கூட அவர் மீது இருந்த மரியாதையை மாற்றி கொள்ளவில்லை..இன்னும் சொல்லபோனால் 1969ல் நடைபெற்ற நாகர்கோயில் எம்.பி.இடைதேர்தலில் கூட காமராஜர் போட்டியிடுகிறார் என்று தெரிந்து..அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கே தலைவர் செல்லவில்லை..அந்த அளவிற்கு அவரை நேசித்தார். அவர் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார்..எத்தனை பேருக்கு இந்த பெருந்தன்மை வரும்..அதனால்தான் இன்னும் அவர் மக்கள் மனதில் வாழ்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களிடம் 'யார் சிறந்த முதல்வர்' என்று சர்வே எடுத்தபோது புரட்சிதலைவர்தான் முதல் இடத்தில் இருந்தார்..அண்ணா மற்றும் காமராஜர் அடுத்தடுத்த இடங்களில் இருந்தனர்..கருணாநிதி மற்றும் ஜெயலலிதா கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டனர்....பேரறிஞர் அண்ணா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிறந்த முதலமைச்சர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..ஏழை மக்களின் துயரம் போக்கிய அண்ணாவும், கல்வி கண் தந்த காமராஜரும் பல அரிய திட்டங்கள் தீட்டி, சிறந்த முதலமைச்சர்களாக விளங்கினர்..ஆனால்
ஏன் எம்ஜிஆர் மட்டும் இன்றளவும் முதல் இடத்தில் இருக்கிறார். பேரறிஞர்
அண்ணா மற்றும் பெருந்தலைவர் காமராஜ் ஆகியோர்..தாங்கள் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை..வந்தார்கள்..நல்ல முறையில் ஆட்சி செய்தார்கள்..கையில் எதையும் எடுத்துக்கொண்டும் போகவில்லை (சொத்து சேர்த்துவிட்டு போகவில்லை) ..இன்னும் சொல்ல போனால் பெருந்தலைவர் தன் தாய் கேட்டும்வீட்டில் இன்னொரு குடிநீர் குழாய் இணைப்பு போட கூட அனுமதிக்கவில்லை..அவ்வளவு எளிமையாய் வாழ்ந்துவிட்டு சென்றார்..

ஆனால் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களோ தான் 1936 முதல் 1978 வரை திரைப்படத்துறையில் முதல் இடத்தில் இருந்துகொண்டு சம்பாத்தித்த அனைத்தையும் தமிழக மக்களுக்கே செலவிட்டு, போகும்போது தான் இருந்த இடத்தை கூட காது கேளாதோர் பள்ளிக்கு எழுதிவிட்டு சென்றார். வரும்போது பெரும் செல்வத்தைக்கொண்டு வந்து..போகும்போது ஒன்றையும் சேர்த்து வைக்காது சென்ற உத்தம தலைவர்..அதனால்தான் அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் வாழும் தெய்வமாக இருக்கிறார்...

ஈழத்தமிழர்களுக்கு தலைவர் எவ்வளவோ உதவிகள் செய்திருந்தாலும், அந்த இயக்கம் தோன்ற காரணமாக தலைவர் அவர்கள் 1982ம் ஆண்டு திரு. பிரபாகரனிடம் முதல் தவணையாக அன்றே..2 கோடியை கொடுத்தார் என்பதை திரு. பிரபாகரன் அவர்களே பேட்டியில் சொன்னதை இப்போது நினைவு கூர்கிறேன்..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

pammalar
23rd July 2013, 03:29 AM
டியர் esvee சார்,

தாங்கள் வழங்கிய இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது இனிய நன்றிகள் !

அலைபேசி மூலம் அன்பான பாராட்டுதல்களை அளித்த அன்புச்சகோதரர் பெங்களூரு சி.எஸ்.குமார் அவர்களுக்கும், அருமைச்சகோதரர் பேராசிரியர் அவர்களுக்கும் எனது அகம் குளிர்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd July 2013, 03:34 AM
மலைக்கள்ளனுக்கு மணிவிழா

மக்கள் திலகத்தின் "மலைக்கள்ளன்" காவியத்துக்கு மணிவிழா ஆண்டு துவக்கம்

[22.7.1954 - 22.7.2013]

வைரவிழா துவக்க சிறப்புப் பதிவு

சிங்காரச் சென்னையில் சிருங்கார மலைக்கள்ளன்

CULT CLASSIC என்கின்ற செல்லுலாய்ட் காவிய அந்தஸ்தில் என்றென்றும் போற்றப்படும் கலைச்செம்மலின் "மலைக்கள்ளன்" முதல் வெளியீட்டில், 22.7.1954 வியாழக்கிழமையன்று சென்னையில் காஸினோ, பிரபாத், சரஸ்வதி ஆகிய மூன்று திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.

சென்னையைப் பொறுத்தவரை, 'காஸினோ'வில் 22.7.1954 முதல் 3.11.1954 வரை 105 நாட்கள் மெகாஹிட் ரேஞ்சில் ஓடியது. 4.11.1954 வியாழனன்று 'காஸினோ' திரையரங்கில் "பெத்த மனுஷுலு" என்கின்ற தெலுங்கு மொழித் திரைப்படம் வெளியானது.

'பிரபாத்' திரையரங்கில் 22.7.1954 முதல் 24.10.1954 வரை 95 அபார வெற்றி நாட்கள். தீபாவளித் திருநாளான 25.10.1954 திங்களன்று தீபாவளி வெளியீடாக நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் ALL TIME GREAT மேடை நாடகமான "ரத்தக்கண்ணீர்"-ன் வெள்ளித்திரைவடிவம், நேஷனல் பிக்சர்ஸ் திரு.பெருமாள் முதலியார் அவர்களின் தயாரிப்பில், 'பிரபாத்' திரையரங்கில் வெளியானது.

'சரஸ்வதி'யில் 22.7.1954 தொடங்கி 24.9.1954 முடிய 65 வெற்றி நாட்கள். 25.9.1954 சனிக்கிழமையன்று 'சரஸ்வதி'யில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாகவும், நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடித்த வைத்யா ஃபிலிம்ஸாரின் ஹாஸ்யச் சித்திரமான "வைரமாலை" திரைப்படம் வெளியானது.

எனவே, மக்கள் திலகத்தின் மகத்தான மாணிக்கப் படைப்பான "மலைக்கள்ளன்", முதல் வெளியீட்டில், சென்னையில் ஓடிய நாட்கள் Crisp-ஆக:

காஸினோ - 105 நாட்கள்
பிரபாத் - 95 நாட்கள்
சரஸ்வதி - 65 நாட்கள்

மொத்தத்தில், சென்னை மற்றும் தென்னகமெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ரேஞ்சில் ஓடி ஒரு பாக்ஸ்-ஆபீஸ் புரட்சியை உருவாக்கிய திரைக்காவியம் "மலைக்கள்ளன்".

குறிப்பு:
"மலைக்கள்ளன்" திரைக்காவியத்தை CULT CLASSIC எனப் புகழ்ந்ததால் மற்ற திரைப்படங்கள் காவியங்கள் அல்ல என்று பொருள்கொள்ள வேண்டாம். மக்கள் திலகத்தை இதயதெய்வமாக பூஜிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் அவரது 134 திரைப்படங்களுமே திரைக்காவியங்கள்தான்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd July 2013, 04:02 AM
உண்மைகளை மறைத்து பொய்களைத் திரித்து உலவவிடும் ஏமாற்றுக்காரர்களைப் பற்றி எண்ணும்போதெல்லாம் எனக்கு மக்கள் திலகத்தின் இந்த "மலைக்கள்ளன்" பாடல்தான் மனதில் முணுமுணுக்கும்...!

"எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே"


http://www.youtube.com/watch?v=iw3zAZn_iss

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd July 2013, 04:18 AM
எங்கும்-எதிலும்-எப்பொழுதும் வாய்மை எனப் போற்றப்படும் உண்மையே நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதனை மிக நேர்த்தியாக வலியுறுத்தும் கலைச்செம்மலின் கானம்

"உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்"


http://www.youtube.com/watch?v=iXWeIt6zFYE

"எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது"

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
23rd July 2013, 05:39 AM
இனிய நண்பர்கள் பேராசிரியர் திரு செல்வகுமார்

திரு கலியபெருமாள்

திரு ரூப்குமார்

மக்கள் திலகத்தின் 10 ஆண்டு கால ஆட்சியின் சமூக நல திட்டங்கள் ,ஏழை மக்களுக்கு பயன் பெரும் அளவிற்கு உதவிகள்
புரிந்திட்ட சாதனைகள் என்று பட்டியல் இட்டு சிறப்பு பதிவுகள் செய்த உங்களுக்கு பாராட்டுக்கள் .

மக்கள் திலகம் 1977ல் ஆட்சி கட்டில் அரியணை அமரும்போது
பல அரசியல் விமர்சகர்கள் -பத்திரிகைகள் -எதிர்கட்சி தலைவர்கள் எல்லோரும் ''இவர் என்ன சாதிக்க போகிறார் ?
நிர்வாக அனுபவமில்லை -நடிகர்தானே என்று ஏளனமாக
கருதினார்கள் .

புரட்சிதலைவர் தான் ஒரு ஒரு சிறந்த நிர்வாகி
தொலைநோக்கு பார்வையாளர்
ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர்ந்திட பல திட்டங்கள்
கல்வி தரத்தில் மாறுதல்
மதிய உணவு திட்டம் - விரிவாக்கம்
1977-1987 வரை ஒரே சீரான -மக்களுக்கு பாதிக்காத வண்ணம்
விலைவாசி கட்டுக்குள் வைத்த நிர்வாகம் .

மத்தியில் ஆளும் கட்சியின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தமிழ் நாட்டின் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு பல் வேறு பிரச்சனைக்கு தீர்வு கண்ட தீர்க்கதர்சி .

நதி நீர் பிரச்னையில் சுமூக தீர்வு கண்ட தலைவர் .
http://i40.tinypic.com/wcbu3r.jpg
ஒரு சாதரான நடிகராக அறிமுகமாகி , மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறி ,அரசியல் - சினிமா - மனித நேயம்
என்ற மூன்று துறைகளிலும் தன்னுடய முத்திரையை பதித்த
மூன்றெழுத்து எம்ஜியார் அவர்களின் அரசியல் பக்குவம்
ராஜதந்திரம் -திரைப்படத்தில் பேசிய வசனங்களுக்கு உயிர் கொடுத்த சாணக்கியர் என்று

இன்றும் அரசியல் நோக்கர்கள் -விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள் .
குறை காண்போர்கள் -எந்த காலத்திலும் தங்களுடைய கருத்துக்களை மாற்றி கொள்ள மாட்டார்கள் .

மக்கள் திலகத்தின் 10 ஆண்டு கால ஆட்சி - பொற்கால ஆட்சி
என்பதில் மாற்று கருத்து கிடையாது .

பெருந்தலைவரின் சிறப்பான திட்டங்கள்

அண்ணாவின் திராவிட அரசின் புரட்சிகரமான திட்டங்கள்

புரட்சி தலைவரின் ''அடிமட்ட ஏழைகளின் ''-முன்னேற்ற திட்டங்கள்

மக்களால் மறக்க முடியாத மூவேந்தர்கள் .

Richardsof
23rd July 2013, 06:00 AM
இனிய நண்பர் திரு பம்மலார் சார்

''மலைக்கள்ளன்''- படம் சென்னை நகர காசினோ-பிரபாத் - சரஸ்வதி அரங்குகளில் ஓடிய நாட்கள் குறித்து விரிவான பதிவுகள் செய்த உங்களுக்கு பாராட்டுக்கள் .

மலைக்கள்ளன் படத்தில் பெற்ற இடம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடல் நேற்றும் - இன்றும் - நாளையும் எல்லோருக்கும் என்றும் பொருந்தும் காவிய பாடல் .

கணவன் படத்தில் இடம் பெற்ற ''உண்மையின் சிரிப்பை ''
பாடல் மிகவும் அருமை .

இதயக்கனியில் மக்கள் திலகம் பாடும் பாடலில்


காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
அமைதி நிலவுமே- என்ற இந்த வைர
வரிகளுக்கு உங்கள் பதிவுகள் மூலம் மனமகிழ்வு நிலவும் என்று நம்புகிறேன் .

siqutacelufuw
23rd July 2013, 10:49 AM
திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது,

]நமது ஒப்பற்ற தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலம்
(30-06-1977 முதல் 23-12-1987 வரை) முழுவதும், தான் தீட்டிய புரட்சிகரமான மக்கள் நல திட்டங்கள் மூலம், மக்கள் முழு பயனை பெறுகின்றார்களா (குறிப்பாக சமுதாயத்தின் அடித்தள மக்களை சென்று அடைகிறாதா), என்பதில் தனிக் கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், தமிழக அரசின் நியாய விலைக் கடைகளில் (RATION SHOP), எல்லாப் பொருட்களும் ஒரே நேரத்தில் கிடைக்குமாறு, பார்த்துக் கொண்டது, தன் ஆட்சிக் காலம் முழுவதும் இப்பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொண்டதும், மக்கள் திலகத்தின் அரசியல் ஆட்சி அமைப்பின் தனிசிறப்பு.


அவரது மந்திரி சபையில் நிதி அமைச்சர்களாக பணி புரிந்த மறைதிரு. நாராயணசாமி முதலியார் மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் வரவு-செலவு திட்டம் தயாரிக்கும் தருணத்தில், தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணத்தால், சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப் பட்டிருக்கும். ஆனால், அவை சட்டப் பேரவையில் தாக்கல்
செய்யப்படும் போது, விலை உயர்த்தப்பட்டிருக்காது.

இதற்கு காரணம், புரட்சித்தலைவரின், விருப்பபடி, மக்களின் மீது எந்தவிதமான சுமையும் ஏற்றப்படக்கூடாது என்கின்ற கரிசனம் தான்.

இதை பல முறை, மறைதிரு. நெடுஞ்செழியன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.


நமது பொன்மனசெம்மலின், இன்று வரை முறியடிக்கப்படாத திரையுலக சாதனைகளை தொடர்ந்து, அரசியலிலும், தமது சாதனைகளால் பேசப்படுகிறார், போற்றப்படுகிறார் என்றால், மேற்கூறிய அவரது தொலை நோக்குப்பார்வையுடன்
கூடிய அணுகுமுறை தான்.[/SIZE] .
http://i40.tinypic.com/28velpe.png


அன்புடன் :

சௌ. செல்வகுமார்


என்றும் எம்..ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

iufegolarev
23rd July 2013, 11:15 AM
.....

masanam
23rd July 2013, 11:52 AM
செல்வகுமார் ஸார்,
பாரத் ரத்னா மக்கள் திலகத்தின் ஆட்சி குறித்து நிறைய தகவல்களுடன் தங்களது பதிவு அருமை.

Stynagt
23rd July 2013, 11:57 AM
படம் சொல்லும் பாடம்

குடியிருந்த கோயில் - தாய்மையின் சிறப்பை கூறும் பாடம்.

ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சி..நிறைந்தது அரங்கு மட்டுமல்ல..என் மனதும்தான்..இந்த படத்தில் முரட்டு வேடம் மற்றும் ஆர்ப்பாட்ட நடிப்பில் புரட்சி நடிகராகவும், அமைதியான வேடத்தில் மக்கள் திலகமாகவும் அசத்துகிறார்..
http://i44.tinypic.com/x5pbtd.jpg
அதுவும் அந்த 'பாபு' கேரக்டரில் நடிப்பில் பல பரிணாமங்களை காட்டுகிறார்..இந்த வேடத்தில் இவருடைய நடிப்பு பிரமிப்பூட்டுகிறது..இப்போது பார்க்கும்போதும் புதிதாக ரிலீஸ் ஆன ஒரு விறு விறுப்பான ஒரு புதிய படத்தின் பாதிப்பை ஏற்படுத்துகிறது..படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் திலகமும் புரட்சி நடிகரும் போட்டி போட்டு நடிக்கின்றனர்..ஒரு நடிகரால் இரண்டு பாத்திரங்களுக்கு இடையில் இவ்வளவு வித்தியாசம் காட்ட முடியுமா..முடியும் என்று நிரூபித்திருக்கிறார் புரட்சி தலைவர்..
ரயில்வே ரெகார்ட் அலுவலகத்தில் ஓட்டை பிரித்து இறங்கி சண்டை போடும் காட்சியில் என்ன வேகம், துள்ளல், ஆக்ஷன் என பிரம்மிப்பூடுகிறார்..
http://i39.tinypic.com/2dhfshu.jpg
அதற்கு எதிர்மாறாக அமைதியான, நிதான பாத்திரமாக 'ஆனந்த்' கேரக்டரில் மென்மையாக நடிக்கிறார்...பாபுவாக நடிப்பவரா இவர் என்று அதிசயிக்க வைக்கிறார்.
http://i44.tinypic.com/2md1ti.jpg
அவர் நடனமும், வி.கே. ராமசாமியிடம் அவர் நிகழ்த்தும் நகைச்சுவை காட்சிகளும், காதல் காட்சிகளில் ஏற்படுத்தும் அழகும் பார்க்க பார்க்க திகட்டாதவை. வீட்டிற்கு வந்து தன் தாயிடம் தனக்கு கல்யாணம் செய்து வைக்க அவர் பேசும் வசனங்களும், நடிப்பும் எப்படி இவரால் இப்படி முடிகிறது என்று வியக்க வைக்கிறது..'எம்மா நான் உங்க மகன்மா' எங்கிட்ட வாங்க முடியுமா விஷயத்தை' என்று சொல்லும்போது அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது..
http://i42.tinypic.com/34tcvv8.jpg

...தொடரும்..

siqutacelufuw
23rd July 2013, 12:04 PM
சென்னை மகாலட்சுமி அரங்கில் கடந்த 05-07-13 முதல் திரையிடப்பட்ட "சக்கரவர்த்தி திருமகள்" திரைப்படம், 11-07-13 வரை ஒரு வாரத்தில் ரூபாய் 76,000/- வரை வசூல் செய்துள்ளது.

56 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இந்த "கறுப்பு-வெள்ளை" படம், மீண்டும் மீண்டும்
திரையிடப்பட்டு சென்னை நகர அரங்குகளை வலம் வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.


http://i42.tinypic.com/2qcnls4.jpg



அன்புடன் :

சௌ. செல்வகுமார்



என்றும் எம்..ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

Stynagt
23rd July 2013, 12:23 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ..இந்த திரியில் தேவையில்லாமல் வேண்டுமென்றே மூக்கை நுழைப்பவர்களுக்கும், அரை வேக்காடுகளுக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை வேண்டிகொள்கிறேன்...அதுதான் அவர்களுக்கு தெரிந்த நாகரீகம்..ஏன் என்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று ஒரு சிறு குழந்தைக்கு கூட தெரியும்..அவர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பதால்தான் அவரை மூன்று முறை ஆட்சி கட்டிலில் வைத்து அழகு பார்த்தார்கள். மேலும் தமிழ் மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் காமராஜர் கொண்டு வந்து, சரிவர நிறைவேற்ற படாமல் இருந்த மதிய உணவு திட்டத்தை மீண்டும் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்து இந்தியாவிலே..ஏன்..ஆசியாவிலே எடுத்துக்காட்டான திட்டம் என்று unescoவே பாராட்டும்படியான புரட்சிகர திட்டத்தை கொண்டு வந்தாரே..அதுதான் பொற்கால ஆட்சி..
தமிழ் தமிழ் என்று கூறியவர்கள் தமிழுக்கு ஒன்றும் செய்யாத போது..தமிழுக்கென்று பல்கலை கழகம் கட்டினாரே அது பொற்கால ஆட்சி..பாரதியார், பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, அன்னை தெரசா பல்கலை கழகங்கள் கண்டாரே அது பொற்கால ஆட்சி..இன்றைக்கு அனைவரும் ஒத்துகொண்ட சித்த மருத்துவத்தின் சிறப்பை அன்றே உணர்த்தி அதை மேன்மைபடுத்தினாரே அது பொற்கால ஆட்சி..இன்று எல்லோராலும் போற்றப்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அன்றே கொண்டு வந்தாரே..அது பொற்கால ஆட்சி...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..எல்லாவற்றையும் பேராசிரியர் செல்வகுமார் சொல்லியிருக்கிறார்..அதில் எதுவெல்லாம் நீண்டகால, தொலை நோக்கு திட்டங்கள் என்று படித்து தெரிந்து கொள்ளலாம்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

iufegolarev
23rd July 2013, 12:32 PM
கலியபெருமாள் அவர்களே...!

யார் அரவேக்காடு என்பதை யார் எப்படி புரிந்து எப்படி எழுதுகிறார்கள் என்பதை படிபவர்களுக்கு நன்றாக விளங்கும்...!

என்னுடைய கருத்தை பதிவிட்டதில் என்ன அநாகரீகத்தை கண்டுவிடீர்கள் தாங்கள் ? யாரையாவது இழிசொல் எழுதினென, வைதேனா, மரியாதைகுறைத்து உங்களைபோல எழுதினென அல்லது ஒரு மயிரிழயாவது இழிவாக எழுதினேனா?

கூறுங்கள் கலியபெருமாள் அவர்களே ?

தமிழில் என்ன வார்த்தையை எதற்கு உபயோகபடுத்தவேண்டும் என்று தெரிந்து அதன்படிதான் பிரயோகம் செய்கிறீர்களா தாங்கள் ?

முதலில் எழுதியிருப்பதை சரிவர படித்து புரிந்துகொள்ளாமல் முட்டாள்தனமான பிதற்றலை, தாக்குவதாக தவறாக நினைத்துகொண்டு ஒரு closed mindset உடன் பதில் பதிவிடுவதை விடுத்து , நின்ற நிலைக்கு வாருங்கள்...அந்தரத்தில் மிதக்காதீர்கள்..!

தங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கும் அதைவிட அதிக தாக்கம் நிறைந்த பதிலடி என்னால் எழுத்தின் மூலம் கொடுக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம் நண்பரே...!

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு முடிவை எடுத்து யார் என்ன கேவலாமான முறையில் தூண்டினாலும் அதை பொருட்படுத்தாது கண்ணியமாக என் பார்வையில்...என் கருத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து அதன்படி நடக்கிறேன்..!

இப்போதும் நான் நீங்கள் எழுதியதை தவறாக நினைக்கவில்லை..! உங்களுடைய அறியாமையும் அபரிதமான அன்பும் தான் அப்படி தூண்டுகிறது என்பது நன்றாக உணர்ந்தவன் நான்..!

ஆகவே பதிவிட விரும்புவதை நேராக எனக்கு பதிவிடுங்கள்..! மறைமுக விளாசல் தேவை இல்லை !

அதைவிடுத்து எனதருமை மூத்த சகோதரர் பேராசிரியர் அவர்களை எதற்கு தூண்டி சாட்சிக்கு அழைகிறீர்கள்

Stynagt
23rd July 2013, 12:35 PM
குடியிருந்த கோயில் - தாய்மையின் சிறப்பை கூறும் பாடம்.

தாய்ப்பாசம்-பிள்ளைப்பாசம்..பண்டரிபாய் அவர்களும் புரட்சித்தலைவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்..

http://i41.tinypic.com/2dj1hjs.jpg
தாயுடன் இருக்கும் ஒரு பிள்ளையின் பாசத்தை ஆனந்தும்..தன் தாயின் கடிதத்தை படித்து..அம்மா..என்று சொல்லும்போதும்..குண்டடிபட்டு தாயிடம் சிகிச்சை பெற்று..நான் உங்கள் மகனாகவே இருக்க கூடாதா என்று பாபுவும் உருகி நடித்திருக்கிறார்கள்..வீட்டில் எடுத்து வந்த தாயின் படத்தை வைத்துகொண்டு தாய்ப்பாசம் கிடைக்காத ஒரு மகன் ஏக்கத்துடன் பார்க்கும் நடிப்பிலும்..நம்பியார் படத்தை தூக்கி எறிந்த பின்பு அவருக்கு ஒரு அறை விட்டு 'பாஸ்' என்று நடிக்கும் நடிப்பிலும், பண்டரிபாய் தன் தாய் என்று தெரிந்ததும் 'அம்மா'.......என்று உணர்ச்சி பொங்கும் நடிப்பிலும்..முத்திரை பதிக்கிறார்...
http://i39.tinypic.com/qs0a3t.jpg

http://i42.tinypic.com/119ozle.jpg
...தொடரும்..

siqutacelufuw
23rd July 2013, 12:39 PM
சென்னை மகாலட்சுமி அரங்கில் கடந்த 12-07-13 முதல் திரையிடப்பட்ட "ஒளி விளக்கு " திரைப்படம், 18-07-13 வரை ஒரு வாரத்தில் ரூபாய் 98,000/- வரை வசூல் செய்துள்ளது.


திரையுலக வரலாற்றில், ஒரு பழைய திரைப்படம், 9 மாத இடைவெளியில், அதுவும் இதே அரங்கில் வெளியாகி, இவ்வளவு பெரிய தொகை வசூல் செய்தது ஒரு புரட்சிகரமான சாதனை.

இந்த சாதனையை உலகிலேயே நம் மக்கள் திலகம் ஒருவரால் மட்டுமே படைக்க முடியும்.

என்றும் வசூல் பேரரசர், வசூல் சக்கரவர்த்தி, வசூல் திலகம், வசூல் மன்னன் நம் பாரத ரத்னா புரட்சிதலைவர் மட்டுமே. !

http://i40.tinypic.com/2vnos5e.jpg

ஓங்குக எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். புகழ் !


அன்பன் : சௌ. செல்வகுமார் .


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

siqutacelufuw
23rd July 2013, 12:53 PM
குடியிருந்த கோயில் - தாய்மையின் சிறப்பை கூறும் பாடம்.

தாய்ப்பாசம்-பிள்ளைப்பாசம்..பண்டரிபாய் அவர்களும் புரட்சித்தலைவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்..

http://i41.tinypic.com/2dj1hjs.jpg
தாயுடன் இருக்கும் ஒரு பிள்ளையின் பாசத்தை ஆனந்தும்..தன் தாயின் கடிதத்தை படித்து..அம்மா..என்று சொல்லும்போதும்..குண்டடிபட்டு தாயிடம் சிகிச்சை பெற்று..நான் உங்கள் மகனாகவே இருக்க கூடாதா என்று பாபுவும் உருகி நடித்திருக்கிறார்கள்..வீட்டில் எடுத்து வந்த தாயின் படத்தை வைத்துகொண்டு தாய்ப்பாசம் கிடைக்காத ஒரு மகன் ஏக்கத்துடன் பார்க்கும் நடிப்பிலும்..நம்பியார் படத்தை தூக்கி எறிந்த பின்பு அவருக்கு ஒரு அறை விட்டு 'பாஸ்' என்று நடிக்கும் நடிப்பிலும், பண்டரிபாய் தன் தாய் என்று தெரிந்ததும் 'அம்மா'.......என்று உணர்ச்சி பொங்கும் நடிப்பிலும்..முத்திரை பதிக்கிறார்...
http://i39.tinypic.com/qs0a3t.jpg

http://i42.tinypic.com/119ozle.jpg
...தொடரும்..


Dear Kaliyaperumal Sir,
This film 'KUDIYIRUNTHA KOIL' made me to become MGR FAN (later turned out to be his Strong Devotee on seeing his many other films and political achievements made by him as Chief Minister of Tamil Nadu)

I cherish the old and sweet memories, when I saw this film at Globe Theatre, Chennai, at the time of its original release on
15th March 1968. I was only 12 years old at that time.


Ever yours : S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

Stynagt
23rd July 2013, 12:57 PM
http://i40.tinypic.com/2qbha21.jpg

மக்கள் திலகத்தின் 'மலைக்கள்ளன்' திரைப்படத்தின் அழகிய புகைப்படங்களை தெளிவாகவும், தலைவரின் உடற்கட்டை சிறப்பாய் எடுத்துக்காட்டும் விதத்திலும் மிகவும் சிரத்தை எடுத்து பதிவிடும் உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது..வளர்க உங்கள் பணி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
23rd July 2013, 01:15 PM
குடியிருந்த கோயில் - தொடர்ச்சி

புரட்சி நடிகர் 'நான் யார்..நான் யார்...என்ற அந்த ஒரு பாடலில் நவரச நடிப்பையும் காட்டி விடுகிறார்.
http://i42.tinypic.com/2nqt8w0.jpg

http://i43.tinypic.com/1znlj5k.jpg
இந்த பாடலை பார்க்கும்போது 'எப்படி ஐயா..இப்படி...என்று நேரில் பார்த்து கேட்கவேண்டும் போல இருக்கிறது..அப்படி ஒரு அபார நடிப்பு..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
23rd July 2013, 01:15 PM
http://i40.tinypic.com/o9hixi.jpg

Stynagt
23rd July 2013, 01:17 PM
http://i42.tinypic.com/2n7i7er.jpg

Stynagt
23rd July 2013, 01:18 PM
http://i41.tinypic.com/2r7sndi.jpg

Stynagt
23rd July 2013, 01:20 PM
http://i39.tinypic.com/34s2g0h.jpg

Stynagt
23rd July 2013, 01:21 PM
http://i39.tinypic.com/2s10k0o.jpg

Stynagt
23rd July 2013, 01:47 PM
குடியிருந்த கோயில் - தொடர்ச்சி

தமிழக திரைப்பட வரலாற்றில் இசைக்குழுக்களில் அதிகம் பாடபெற்று சாதனை படைத்த துள்ளுவதோ இளமை பாடல்...இசையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் பாடல்..
http://i42.tinypic.com/2ptcqd0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
23rd July 2013, 01:57 PM
குடியிருந்த கோயில் - தொடர்ச்சி

ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே

ஆடாத மனங்களையும் ஆட வைக்கும் பாடல்...தமிழ் திரையுலக வரலாற்றில் பஞ்சாபி நடனத்தில் இவ்வளவு சிறப்பான பாடலே இல்லை எனலாம்..என்ன ஒரு துடிப்பான நடனம்..பஞ்சாபி முறையில் அந்த வேடமும் நடனமும், நடனத்தில் வேகமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது..
சிறந்த நடன நடிகையான திருமதி விஜயலட்சுமியுடன் நடனம் ஆட யாருமே தயங்குவர்..ஆனால் எதையுமே சவாலாக எடுத்துகொள்ளும் மக்கள் திலகம் அவருக்கு இணையாக இந்த நடனத்தை ஆடியிருக்கிறார்..அவருடைய துள்ளல் காட்சிகளை காணுங்கள்..புரட்சித்தலைவரின் நடன திறமைக்கு இது ஒரு சான்று..

http://i41.tinypic.com/5k0hh1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
23rd July 2013, 01:59 PM
http://i39.tinypic.com/18dbux.jpg

Stynagt
23rd July 2013, 02:01 PM
http://i44.tinypic.com/9te4xx.jpg

Stynagt
23rd July 2013, 02:06 PM
http://i44.tinypic.com/2wcpfa1.jpg

Stynagt
23rd July 2013, 02:08 PM
http://i43.tinypic.com/f4nt54.jpg

Richardsof
23rd July 2013, 02:08 PM
திருமதி மஞ்சுளா இன்று காலமானார் .
http://i39.tinypic.com/309r4og.jpg

மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் -1971 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி

இதயவீணை

உலகம் சுற்றும் வாலிபன்

நேற்று இன்று நாளை

நினைத்ததை முடிப்பவன்

5 படங்களின் நடித்தார் . பின்னர் தமிழ் , தெலுங்கு ,கன்னடம்

மொழி படங்களில் நடித்தார் .

அவரின் மறைவுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக

ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம் .

Stynagt
23rd July 2013, 02:09 PM
http://i39.tinypic.com/2j4bwaa.jpg

Stynagt
23rd July 2013, 02:11 PM
பஞ்சாபி நடனத்தில் அந்தரத்தில் பறக்கும் எம்ஜிஆர்..
http://i40.tinypic.com/5wxe8.jpg

Stynagt
23rd July 2013, 02:14 PM
http://i44.tinypic.com/349f6s3.jpg

Stynagt
23rd July 2013, 02:16 PM
மக்கள் திலகத்தின் மீது மாறாத பாசம் வைத்திருந்த திருமதி. மஞ்சுளா மறைவு என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது..மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக அவரின் மறைவுக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்..

oygateedat
23rd July 2013, 02:45 PM
பொன்மனச்செம்மல் அவர்களுடன் ஐந்து வண்ணக்காவியங்களில் நடித்து புகழ்பெற்ற திருமதி.மஞ்சுளா அவர்கள் இன்று தமது 59-ம் வயதில் காலமானார். அன்னார் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
23rd July 2013, 02:57 PM
http://i39.tinypic.com/ztvi8o.jpg

Richardsof
23rd July 2013, 03:03 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்



மக்கள் திலகத்தின் குடியிருந்தகோயில் படத்தை நீங்கள்

அனுபவித்து ரசித்த காட்சிகளை மிகவும் தெளிவாக

காட்சிகளுடன் பதிவிட்டிருப்பது அருமை .

Richardsof
23rd July 2013, 03:09 PM
MY FAVOURITE SCENE FROM KUDIYIRUNTHA KOIL


http://youtu.be/4blYF2Rau_c

oygateedat
23rd July 2013, 03:42 PM
http://i40.tinypic.com/2ly2zbl.jpg

oygateedat
23rd July 2013, 03:50 PM
http://i43.tinypic.com/okc08k.jpg

Stynagt
23rd July 2013, 04:27 PM
பாஸ்......................................Sup er Action..
http://i43.tinypic.com/27x01v8.jpg

Stynagt
23rd July 2013, 04:39 PM
http://i44.tinypic.com/k3snl4.jpg

Stynagt
23rd July 2013, 04:49 PM
http://i39.tinypic.com/119ufrn.jpg

masanam
23rd July 2013, 04:52 PM
MY FAVOURITE SCENE FROM KUDIYIRUNTHA KOIL


http://youtu.be/4blYF2Rau_c

குடியிருந்த கோவில் திரைப்படத்தில் மக்கள் திலகத்தின் உணர்ச்சிமய நடிப்பில் அமைந்த காட்சி விடீயோ பதிவுக்கு நன்றி வினோத் ஸார்.

Stynagt
23rd July 2013, 05:02 PM
விரைவில் வருகிறது..புதுச்சேரி நியூடோனில்...
மணிவண்ணன்-கரிகாலன் மிரட்டும்
நீரும் நெருப்பும்
http://i40.tinypic.com/2my2p0k.jpg

வாள் வீச்சுக்கென்றே பிறந்த வாத்தியார்

Stynagt
23rd July 2013, 06:53 PM
இன்றும் திரையுலகை ஆளும் இறைவன்

சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிகொண்டிருக்கும் தனுஷ் நடித்த மரியான் படத்திலும் தலைவரின் தாக்கம் தொடர்கிறது..
இரண்டு காட்சிகளில் தலைவரின் திரைப்பட பாடல் ஒலிக்கிறது..ஒரு காட்சியில் உரிமைக்குரல் காவியத்தில் வரும் 'கல்யாண வளையோசை' பாடல் ஒலிக்கும்..இன்னொரு காட்சியில் ஆயிரத்தில் ஒருவனின் ' நாணமோ இன்னும் நாணமோ' பாடல் ஒலிக்கிறது..கதாநாயகன் கதாநாயகியுடன் டூரிங் டாகிசில் புரட்சித்தலைவரின் படகோட்டி திரைப்படம் பார்ப்பார்..எல்லோரும் ஆரவாரத்துடன் 'தொட்டால் பூமலரும்' பாடலை விரும்பி ரசித்து பார்ப்பார்கள்..
http://i41.tinypic.com/2iavokm.png

அந்த பாடலை ஸ்க்ரீன் முழுவதும் காட்டியபோது..புதுச்சேரி பாலாஜி தியேட்டரில், திரையரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது..இன்னும் மக்களை ஆண்டுகொண்டிருக்கும் ஆண்டவன்தான் நம் இதய தெய்வம்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் .எம்ஜிஆர்.

Richardsof
23rd July 2013, 06:56 PM
kaliyaperumal sir

advance video scene ''neerum neruppum ''

makkal thilagam -in super action

http://youtu.be/BfJlIXfZIU0

Stynagt
23rd July 2013, 07:10 PM
நம் நட்சத்திர நாயகனின் திரிகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ஆகிய இரண்டும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற செய்தி தேனினும் இனிய செய்தி..இந்த தகுதி பெற அயராது பாடுபட்ட பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு.வினோத், திரு.ரவிச்சந்திரன், திரு. ஜெய்ஷங்கர், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. மாசானம், திரு. ரூப், திரு. சைலேஷ் பாபு, திரு. எம்ஜிஆர் பாஸ்கரன் மற்றும் நம் திரியின் அனைத்து நண்பர்களுக்கும், மேலும் இந்த திரியை பார்த்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும், நம் இதய தெய்வத்தின் பக்தர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் .எம்ஜிஆர்.

ujeetotei
23rd July 2013, 08:03 PM
My heart felt condolence to Manjula family.

ujeetotei
23rd July 2013, 08:29 PM
Azhagiya Tamil Magal Ival

http://www.mgrroop.blogspot.in/2013/07/manjula.html

ujeetotei
23rd July 2013, 09:02 PM
Happened to see that it is very rare occurence a MGR movie running 100 days in Mayavaram. I have only two ad showing mayavaram theater.

One is Rickshawkaran

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/rickshawkaran2_zpse5a57b6e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/rickshawkaran2_zpse5a57b6e.jpg.html)

ujeetotei
23rd July 2013, 09:02 PM
Another movie is Ulagam Sutrum Vaaliban.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/usv_zps8e209877.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/usv_zps8e209877.jpg.html)

ujeetotei
23rd July 2013, 09:03 PM
How many MGR movies had crossed 100 days in Mayavaram centre, can anyone tell me?

ujeetotei
23rd July 2013, 09:05 PM
I had the list of MGR movie release mainly in cities and towns. Anybody having theater list in other B and C centres.

ainefal
24th July 2013, 12:02 AM
http://i44.tinypic.com/ac6bkm.jpg

oygateedat
24th July 2013, 04:22 AM
FROM MAALAI MALAR NEWS PAPER

http://i42.tinypic.com/96cfaq.jpg

oygateedat
24th July 2013, 04:24 AM
FROM DAILY THANTHI TAMIL DAILY

http://i44.tinypic.com/1zmnyxe.jpg

Richardsof
24th July 2013, 05:51 AM
http://i41.tinypic.com/hv57no.jpg

Richardsof
24th July 2013, 06:00 AM
courtesy- ilango - net

சின்ன வயதில் அதாவது பள்ளிக்கூடம் செல்லும் நாளிலிருந்து நான் எம்ஜிஆர் ரசிகன். படம் பார்ப்பதோடு சரி. கல்லூரிக்கு சென்ற பின்னர் விவரம் தெரிந்த பின்புதான் சிவாஜி,ஜெமினி, எம்.ஆர்.ராதா நடித்த படங்களை பார்த்தேன்.

அப்போதெல்லாம் ரசிகர்களில் சிலர் படம் வெளியான,முதல் நாளே,முதல் காட்சியை பார்த்து விட்டு ஏதோ வீர தீர செயலை செய்தது போல பெருமையாக சொல்லுவார்கள்.அவர்கள் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்று தோன்றும்.உடனே அவர்கள் தாங்கள் வாங்கிய சினிமா தியேட்டரின் டிக்கட்டை எடுத்து காண்பிப்பார்கள்.அல்லது தியேட்டரில் மட்டுமே விற்கப்படும் பாட்டு புத்தகத்தை எடுத்து நீட்டுவார்கள். இன்னும் சில ரசிகர்கள் தெருவில் உள்ள மன்றத்திலேயே பழியாக கிடப்பார்கள்..எம்ஜிஆர் படங்கள் ரிலீசாகும் தினம் மன்றத்தை அலங்கரிப்பது, மன்றத்திலிருந்து படம் வெளிவந்த தியேட்டர் வரை ஊர்வலமாக செல்வது என்று ரொம்பவும் அமர்க்களப் படுத்துவார்கள். இதனால் பள்ளிப் படிப்பை கோட்டை விட்டவர்களும் உண்டு.

அப்போது எம்ஜிஆர்- சிவாஜி இருவரும் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த நேரம். இரண்டு பேருக்குமே ஏராளமான ரசிகர்கள். தி.மு.கவில் எம்ஜிஆர் என்றால் காங்கிரஸில் சிவாஜி. இருவரது ரசிகர்களும் அப்படியே இருந்தார்கள். எம்ஜிஆர் மன்றத்திற்கு அருகிலோ அல்லது எதிரிலோ., சிவாஜி ரசிகர் மன்றம் இருக்கும். இதனால் இரண்டு மன்ற ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் வந்து போகும்.

எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் சிவாஜிக்கும், சிவாஜிக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் எம்ஜிஆருக்கும் நடித்தார்கள். இருந்தாலும் எம்ஜிஆர்-சரோஜாதேவி, சிவாஜி-பத்மினி, ஜெமினி-சாவித்திரி ஜோடிகள் அப்போது பிரசித்தம்.ஜெமினியும் சாவித்திரியும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகி விட்டனர். அதிலும் எம்ஜிஆர் ரசிகர்கள் சரோஜாதேவியை சொந்த அண்ணியாகவே நினைத்தனர்.அப்போது அந்தநேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் இளைஞர்களாக இருந்ததும் ஒரு காரணம். அதற்கு தகுந்தாற் போல எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நெருங்கி நடித்தனர்.
http://i44.tinypic.com/2924qd5.jpg

”காவேரி கரை இருக்கு கரைமேலே பூவிருக்கு” “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்”
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (எஙக வீட்டுப் பிள்ளை),”ஏதோ ஏதோ ஒரு மயக்கம்”(குடும்ப தலைவன்),”தொட்டு விடத் தொட்டு விட தொடரும்”(தர்மம் தலை காக்கும்),”அன்று வந்ததும் இதே நிலா” -இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு”(நீதிக்குப் பின் பாசம்),”தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்” (படகோட்டி), ”ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரை பந்தலிட்டு” (பணத்தோட்டம்), ,”கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”(பறக்கும் பாவை),”ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்”(தெய்வத்தாய்),- என்று எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் பாடல்களை பாடிக்கொண்டே போகலாம்.

Richardsof
24th July 2013, 06:14 AM
courtesy- ranga rajan -net
ஆயிரத்தில் ஒருவன்

1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம்.

கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.



எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதேங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்கவரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக்கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோதரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

அவரல்லவோ சூப்பர்மான்? இப்போதைய நடிகர்கள் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.

எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.

ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!

கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை”, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்”, “ஆடாமல் ஆடுகிறேன்”, “ஏன் என்ற கேள்வி”, “ஓடும் மேகங்களே”, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.

எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.

எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.

ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.

ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.

ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்ட படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று. இந்த படம் தான் அவரை கோடி மக்களின் தலைவனாக உருவாக்கியது.

நான் ஒரு வைத்தியன் ... இந்த சமுதாயத்திற்கு வைத்தியம் பார்ப்பது மட்டும் தான் என் தொழில்.

தோல்வியை எதிரணிக்கு பரிசளித்வன் நான் இது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படம் வெளியாகும் போது எம்.ஜி. ஆர் ரசிகர்கள் எப்படி இருந்தார்களோ... அதே நிலை தான் இப்போதும் பார்க்க முடிகிறது.

Richardsof
24th July 2013, 09:10 AM
How many MGR movies had crossed 100 days in Mayavaram centre, can anyone tell me?



இனிய நண்பர் திரு ரூப் சார்

மாயவரம் நகரில் மக்கள் திலகத்தின் மூன்று படங்கள் ஓடியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் உள்ளது .

1. மதுரை வீரன் -1956

2. ரிக்ஷாக்காரன் - 1971

3. உலகம் சுற்றும் வாலிபன் - 1973.


திருச்சி

தஞ்சை

குடந்தை

மாயவரம்

கரூர்

பட்டுக்கோட்டை

திரையிட்ட 6 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய படம்

உலகம் சுற்றும் வாலிபன் .

Richardsof
24th July 2013, 09:17 AM
http://youtu.be/xh9U-BFwCJw

siqutacelufuw
24th July 2013, 10:45 AM
1971ல் வெளிவந்த, மக்கள் திலகத்தின் " ரிக்க்ஷாக்காரன் " திரைப்படத்தினை யொட்டி, புரட்சித் தலைவரின் புகழ் பாடிய "திரை உலகம் " பத்திரிகையில் (15-05-1971 பதிப்பு) நடிகை மஞ்சுளா விடுத்த வேண்டுகோள்

http://i41.tinypic.com/xe0s42.jpg


இயற்கை எய்திய நடிகை மஞ்சுளாவுக்கு, இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களின் புகழ் பாடுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்கம் (பதிவெண்: 304/2007) சார்பாக, அஞ்சலி.

அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

siqutacelufuw
24th July 2013, 10:51 AM
1971ல் வெளிவந்த, மக்கள் திலகத்தின் " ரிக்க்ஷாக்காரன் " திரைப்படத்தினை யொட்டி, புரட்சித் தலைவரின் புகழ் பாடிய "திரை உலகம் " பத்திரிகை (15-05-1971 பதிப்பு) வெளியிட்ட சிறப்பு மலரில், நடிகை மஞ்சுளாவின் பேட்டி http://i42.tinypic.com/vhc8li.jpg



http://i44.tinypic.com/2e3zp0g.jpg



அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th July 2013, 11:49 AM
மக்கள் திலகத்தின் மாண்புகளைப் பற்றி "கலைப்பூங்கா" பத்திரிகையின் சமீபத்திய பதிப்பில் வெளியான பெருமை மிகு செய்தி

http://i41.tinypic.com/11kds3c.jpg

http://i42.tinypic.com/s4nmsn.jpg


அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
24th July 2013, 11:49 AM
1971ல் வெளிவந்த, மக்கள் திலகத்தின் " ரிக்க்ஷாக்காரன் " திரைடப்படத்தினை யொட்டி, புரட்சித் தலைவரின் புகழ் பாடிய "திரை உலகம் " பத்திரிகையில் (15-05-1971 பதிப்பு) நடிகை மஞ்சுளா விடுத்த வேண்டுகோள்

http://i41.tinypic.com/xe0s42.jpg


இயற்கை எய்திய நடிகை மஞ்சுளாவுக்கு, இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களின் புகழ் பாடுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்கம் (பதிவெண்: 304/2007) சார்பாக, அஞ்சலி.


அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

திருமதி மஞ்சுளா அவர்களின் வேண்டுகோள் மற்றும் பேட்டியினை சரியான நேரத்தில் பதிவிட்ட பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
24th July 2013, 12:26 PM
மக்கள் திலகம் '' தலைவன் '' படம் 44வது ஆண்டு துவக்கம் .

24.7. 1970 அன்று வெளியான மக்கள் திலகத்தின் படம் .
http://i43.tinypic.com/dlqr8g.jpg
துப்பறியும் அதிகாரியாக மக்கள் திலகம் நடித்த படம்

படத்தின் ஆரம்ப காட்சிகளில் மக்கள் திலகத்தின் யோகா மற்றும்
மூச்சு பயிற்சி பற்றிய காட்சிகள் அற்புதம் .


அறிவுக்கு வேலை கொடு ....


பாய் விரித்தது பருவம் ....

ஓடையிலே ஒரு தாமரைபூ

நீராழி மண்டபத்தில் .. தென்றல் ....

பழமொழி கலவை பாடல் ....


மக்கள் திலகத்தின் பொழுது போக்கு படங்களில் ஒன்று .

இனிமையான பாடல்கள் - சண்டை காட்சிகள் என்று

ரசிகர்களுக்கு விருந்து தந்த படம் .

சென்னை

குளோப்- 42 நாட்கள்

மகாராஜா -35 நாட்கள்

சரவணா - 35 நாட்கள்

நூர்ஜெஹான் - 35 நாட்கள் .

Richardsof
24th July 2013, 12:49 PM
http://youtu.be/A8ea57Ek__A

http://youtu.be/aX-ezEHLXEY

http://youtu.be/yeATVRtV1Ns

http://youtu.be/FLts4Udjek8

oygateedat
24th July 2013, 02:01 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,

மக்கள் திலகத்தோடு நடித்த காலம்சென்ற மஞ்சுளா அவர்கள் திரை உலகம் ஏட்டில் விடுத்த செய்தியை வெளியிட்ட தங்களுக்கு நன்றி பல.

அன்புடன்


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Stynagt
24th July 2013, 04:07 PM
கலை மன்னன்

ஸ்டைல் மன்னன்

மக்கள் திலகம் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தினார்..சிகை அலங்காரம், உடைகள், அதற்கேற்ற நடிப்பு என்று தனி ஸ்டைலையே ஏற்படுத்தினார்...அதே சமயம் அந்த உடைகள் மற்றும் நடிப்பு அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருப்பதை பார்த்துகொண்டார்..அவருடைய உடைகளை அவருடைய ரசிகர்களும் தலைவரின் உடையை பார்த்தால், சிகை அலங்காரத்தை பார்த்தால் அது எந்த படம் என்று சொல்லிவிடலாம், இந்த சிகை அலங்காரத்தை பார்த்தல் என்ற அளவிற்கு படத்திற்கு படம் வித்தியாசம் காட்டினார்.. அதனால்தான் இன்றும் அவருடைய படங்கள் ரசிக்கும்படியாக இருந்து வசூலை குவிக்கின்றன..
சில படங்களை பார்ப்போம்:

நாடோடி மன்னன்:
http://i39.tinypic.com/sv1i5s.jpg

http://i42.tinypic.com/2cmrnb.jpg

http://i43.tinypic.com/jka8ep.jpg
இதில் நாடோடி-மன்னன் ஆன பின்பு உடைகள் மிகவும் வித்தியாசமாகவும், அவர் கட்டுடலை காட்டும் வண்ணம் அழகாக இருக்கும்..அந்த உடைகளை பாரத்தாலே இது நாடோடி மன்னன் படம் என்று சொல்லிவிடலாம்..அந்த உடைகள் தலைவரின் இன்னொரு படத்தில் காண முடியாது..

......அடுத்து ....அலிபாபா

oygateedat
24th July 2013, 07:10 PM
http://i44.tinypic.com/2zg6gwk.jpg

oygateedat
24th July 2013, 07:28 PM
http://i40.tinypic.com/10eold0.jpg

oygateedat
24th July 2013, 07:33 PM
http://i40.tinypic.com/2njj5ua.jpg

oygateedat
24th July 2013, 07:42 PM
http://i39.tinypic.com/2r720rk.jpg

oygateedat
24th July 2013, 07:45 PM
http://i41.tinypic.com/2iqj2x5.jpg

ujeetotei
24th July 2013, 08:45 PM
இனிய நண்பர் திரு ரூப் சார்

மாயவரம் நகரில் மக்கள் திலகத்தின் மூன்று படங்கள் ஓடியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் உள்ளது .

1. மதுரை வீரன் -1956

2. ரிக்ஷாக்காரன் - 1971

3. உலகம் சுற்றும் வாலிபன் - 1973.


திருச்சி

தஞ்சை

குடந்தை

மாயவரம்

கரூர்

பட்டுக்கோட்டை

திரையிட்ட 6 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய படம்

உலகம் சுற்றும் வாலிபன் .
Of the above mentioned list of centres I have Trichy town centres and here MGR movies did a good performance on par with Madurai.

In Trichy nearly 43 movies had crossed 100 days.

Madurai Veeran has 100 days run in Pattukottai Murugaiah,

In Thanjavur I find movies like Madurai Veeran, Nadodi Mannan, Enga Veetu Pillai, Kudieruntha Kovil, Adimaipenn, Rickshawkaran, Ulagam Sutrum Vaaliban, Urimaikural

In Karur Madurai Veeran, Nadodi Mannan, Ulagam Sutrum Vaaliban.

ujeetotei
24th July 2013, 08:56 PM
Another movie to reach 100 days in Pattukottai is Ulagam Sutrum Vaaliban.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/usv_zps8e209877.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/usv_zps8e209877.jpg.html)

ujeetotei
24th July 2013, 09:01 PM
In Kumbakonam the following movies had 100 days run.

Madurai Veeran, Kudieruntha Kovil, Oli Vilakku, Nam Nadu, Rickshawkaran, Ulagam Sutrum Vaaliban, Urimaikural.

ujeetotei
24th July 2013, 09:07 PM
Olivilakku ad showing Madurai, Trichy, Kumbakonam centre.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/4_zps76d2f7a0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/4_zps76d2f7a0.jpg.html)

idahihal
25th July 2013, 12:44 AM
Dear Prof. Selvakumar sir
மக்கள் திலகத்தின் பொற்கால ஆட்சியின் சாதனைத் துளிகளை அழகுற வரிசைப்படுத்தியிருந்தீர்கள். மிக மிக அருமையாக இருந்தது. இதே திரியில் 3வது பாகம் அல்லது 4ஆம் பாகத்தில் அவர் தம் ஈகைத் திறனை வெளிப்படுத்தும் விதமாக அவர் வாரி வழங்கிய செய்திகளில் சிறு துளியை (மீதி வெளியுலகம் அறியாதது) எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். அதனை மறு பதிவு செய்ய வேண்டுகிறேன்.(தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை.)மற்ற நண்பர்களும் அறிந்து கொள்ள இது பெரிய வாய்ப்பாக இருக்கும்.

Richardsof
25th July 2013, 05:19 AM
இனிய நண்பர் திரு ரூப் சார்

மக்கள் திலகத்தின் பல படங்கள் தமிழ் நாட்டில் முக்கியமான நகரங்களில் வெற்றி நடை போட்டுள்ளது .

முதல் வெளியீட்டில் மக்கள் திலகத்தின் படங்கள் கீழ் கண்ட
35 இடங்களில் வழக்கமாக வெளி வரும் .

சென்னை - தாம்பரம் - பல்லாவரம் -வில்லிவாக்கம் -காஞ்சிபுரம்

வேலூர் - திருவண்ணாமலை - திருப்பத்தூர்

கடலூர் - சிதம்பரம் -விழுப்புரம் - பாண்டி-விருத்தாசலம்

சேலம் - தர்மபுரி

கோவை - ஈரோடு - பொள்ளாச்சி - உடுமலை - திருப்பூர் -ஊட்டி

மதுரை - திண்டுக்கல் -ராமநாதபுரம் - பழனி - விருதுநகர் -காரைக்குடி

நெல்லை -தூத்துக்குடி - நாகர்கோயில்

திருச்சி -கரூர் - தஞ்சை -குடந்தை - மாயவரம் -பட்டுக்கோட்டை

புதுக்கோட்டை .


தென்னிந்திய திரை பட வரலாற்றில் முதல் முறையாக 18 இடங்களில் 20 அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம்

''உலகம் சுற்றும் வாலிபன் ''

மாவட்ட வாரியாக

சென்னை-3
செங்கை -1
வடஆற்காடு-1
பாண்டி-1
சேலம் -1
கோவை -2
மதுரை -2
நெல்லை -2
கன்னியாகுமரி -1
திருச்சி - தஞ்சை -6

36 இடங்களில் , 39 அரங்கில் வெளியான இந்த படம் எல்லா அரங்கிலும் 50 நாட்களை கடந்தது .

அரசியல் நிர்பந்தம் -நெருக்கடி -மிரட்டல்கள் காரணமாக
மற்ற 19 அரங்கில் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பு இருந்தும்
9,10,11,12 வாரங்களில் படம் எடுக்கப்பட்டுவிட்டது .

கடலூர் - திருவண்ணமலையில் இணைந்த 100 நாட்கள் ஓடியது .

பெங்களூர் நகரில் முதல் முறையாக மூன்று அரங்கில்
100 நாட்கள் ஓடிய படம்
நடராஜ் -105

சிவாஜி -105

அபேரா -105

மெஜஸ்டிக் -50

சாந்தி - 28.

Richardsof
25th July 2013, 06:04 AM
ACTRESS MANJULA 'S LAST FUNCTION AT MAKKAL THILAGAM MGR IN NADODIMANNAN RERELEASE FUNCTION AT CHENNAI -2005.

http://i43.tinypic.com/28wfew2.jpg

http://i42.tinypic.com/jgihrc.jpg

masanam
25th July 2013, 06:26 AM
இனிய நண்பர் திரு ரூப் சார்

மக்கள் திலகத்தின் பல படங்கள் தமிழ் நாட்டில் முக்கியமான நகரங்களில் வெற்றி நடை போட்டுள்ளது .

முதல் வெளியீட்டில் மக்கள் திலகத்தின் படங்கள் கீழ் கண்ட
35 இடங்களில் வழக்கமாக வெளி வரும் .

சென்னை - தாம்பரம் - பல்லாவரம் -வில்லிவாக்கம் -காஞ்சிபுரம்

வேலூர் - திருவண்ணாமலை - திருப்பத்தூர்

கடலூர் - சிதம்பரம் -விழுப்புரம் - பாண்டி-விருத்தாசலம்

சேலம் - தர்மபுரி

கோவை - ஈரோடு - பொள்ளாச்சி - உடுமலை - திருப்பூர் -ஊட்டி

மதுரை - திண்டுக்கல் -ராமநாதபுரம் - பழனி - விருதுநகர் -காரைக்குடி

நெல்லை -தூத்துக்குடி - நாகர்கோயில்

திருச்சி -கரூர் - தஞ்சை -குடந்தை - மாயவரம் -பட்டுக்கோட்டை

புதுக்கோட்டை .


தென்னிந்திய திரை பட வரலாற்றில் முதல் முறையாக 18 இடங்களில் 20 அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம்

''உலகம் சுற்றும் வாலிபன் ''

மாவட்ட வாரியாக

சென்னை-3
செங்கை -1
வடஆற்காடு-1
பாண்டி-1
சேலம் -1
கோவை -2
மதுரை -2
நெல்லை -2
கன்னியாகுமரி -1
திருச்சி - தஞ்சை -6

36 இடங்களில் , 39 அரங்கில் வெளியான இந்த படம் எல்லா அரங்கிலும் 50 நாட்களை கடந்தது .

அரசியல் நிர்பந்தம் -நெருக்கடி -மிரட்டல்கள் காரணமாக
மற்ற 19 அரங்கில் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பு இருந்தும்
9,10,11,12 வாரங்களில் படம் எடுக்கப்பட்டுவிட்டது .

கடலூர் - திருவண்ணமலையில் இணைந்த 100 நாட்கள் ஓடியது .

பெங்களூர் நகரில் முதல் முறையாக மூன்று அரங்கில்
100 நாட்கள் ஓடிய படம்
நடராஜ் -105

சிவாஜி -105

அபேரா -105

மெஜஸ்டிக் -50

சாந்தி - 28.

வினோத் ஸார்,
மக்கள் திலகம் பட வெளியீடு தமிழக திரையரங்கங்கள் பற்றிய புள்ளிவிவரம் தந்தமைக்கு நன்றி.

Richardsof
25th July 2013, 09:42 AM
http://i41.tinypic.com/2hzn5w8.jpg

ULAGAM SUTRUM VALIBAN - 1970

RATHNA - CHANDRAKALA

VIMALA- MANJULA

oygateedat
25th July 2013, 02:46 PM
ஆந்திரா மாநிலம் - திருப்பதியில் மக்கள் திலகத்தின்

வெற்றி காவியம்

மாட்டுக்கார வேலன்.

எனது அன்பு நண்பர் திரு சிவகுமார் அவர்கள் திருப்பதியில்
நேற்று தமது கைபேசியில் எடுத்தது.

http://i44.tinypic.com/oivv4z.jpg

oygateedat
25th July 2013, 02:48 PM
http://i43.tinypic.com/mcvsjc.jpg

Richardsof
25th July 2013, 02:59 PM
இனிய நண்பர் திரு ரவிசந்திரன் சார்


ஆந்திரா மாநிலம் கோயில் நகரமான திருப்பதியில்

மக்கள் திலகத்தின் சூப்பர் ஹிட் வெள்ளி விழா படமான

''மாட்டுக்கார வேலன் '' தினசரி 4 காட்சிகளாக


''ஸ்ரீ வெங்கடேஸ்வர '' அரங்கில் வெற்றிகரமாக ஓடிவரும்

செய்தியினை பதிவிட்ட உங்களுக்கு நன்றி

ujeetotei
25th July 2013, 03:15 PM
http://i43.tinypic.com/mcvsjc.jpg

Thank you Tirupur Ravichandran Sir for uploading Thirupathi release of Mattukara Velan.

masanam
25th July 2013, 03:58 PM
மக்கள் திலகத்தின் வெற்றிச் சித்திரம் மாட்டுக்கார வேலன் - திருப்பதி வெளியீட்டின் போஸ்டர் படத்தினைப் பதிந்து
தகவல் தந்ததற்கு நன்றி ரவிச்சந்திரன் ஸார்.

oygateedat
25th July 2013, 04:45 PM
http://i42.tinypic.com/2dmnmf.jpg

oygateedat
25th July 2013, 04:46 PM
http://i39.tinypic.com/ipxgyx.jpg

oygateedat
25th July 2013, 04:48 PM
http://i42.tinypic.com/2lb2jvm.jpg

oygateedat
25th July 2013, 04:56 PM
http://i44.tinypic.com/2s12n0m.jpg

oygateedat
25th July 2013, 05:22 PM
http://i39.tinypic.com/103fzw1.jpg

Stynagt
25th July 2013, 05:28 PM
ஆந்திரா மாநிலம் - திருப்பதியில் மக்கள் திலகத்தின்

வெற்றி காவியம்

மாட்டுக்கார வேலன்.

எனது அன்பு நண்பர் திரு சிவகுமார் அவர்கள் திருப்பதியில்
நேற்று தமது கைபேசியில் எடுத்தது.

http://i44.tinypic.com/oivv4z.jpg

மொழி மற்றும் மாநிலம் கடந்த மாட்டுக்கார வேலன்

இதய தெய்வம், புரட்சி நடிகர், புரட்சித்தலைவர், மக்கள் திலகம், நடிக பேரரசர், உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம், பாரத், பாரத் ரத்னா என்று போற்றப்படும் நம் ஆண்டவன் நடித்த வெள்ளி விழாக்காவியமான 'மாட்டுக்கார வேலன் திரைப்படம் ஆந்திர மாநிலம் வெங்கடேஸ்வரா திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடைபோடுகிறது...இந்த போஸ்டரை பார்க்கும்போது நானும் என்னை போன்ற இதய தெய்வத்தின் பக்தர்கள் அடைந்த மகிழ்ச்சி, கடலை விட பெரியது..இயந்திர மயமான இக்காலகட்டத்தில், புதுப்படங்கள் படமெடுக்காத பாம்புகள் போல ஓரிரு நாட்களில் பெட்டிக்குள் முடங்கும் இந்த கலியுகத்தில், நம் கலியுக கர்ணனின் திரைப்படம் திருப்பதியில் வெற்றிகொடி நாட்டுவது நம் போன்றோருக்கும்.ஏன்.உலகில் எங்கெங்கு தமிழர்கள் வாழ்கின்றாரோ அனைவருக்கும் பெருமை..இத்தகைய பெருமையை தமிழருக்கு தேடித்தர நம் தலைவனால் மட்டுமே முடியும்..இதுவரை தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் ஆகியவற்றில் நம் தெய்வத்தின் புகழ் பாடிய பதிவுகள்..ஏழுமலையானின் தேசத்திலும் தொடர்வதை நினைக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை..ஒன்று மட்டும் நிச்சயம்..ஆந்திரா என்ன உலகின் எந்த மூலையில் தலைவர் படத்தை ரி-ரிலீஸ் செய்தால்கூட அந்தந்த மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வசூலில் சாதனை படைப்பது திண்ணம் ..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..

Richardsof
25th July 2013, 05:45 PM
MAKKAL THILAGAM - MANJULA - BEST DUET SONGS

http://youtu.be/3WPVIJTUY_8

http://youtu.be/M1kfaQ4tzwE

Richardsof
25th July 2013, 05:47 PM
http://youtu.be/bkkT9ENdGic

http://youtu.be/aX0mPBa8Rwc

http://youtu.be/lRTtdf7CT_w

Stynagt
25th July 2013, 07:04 PM
http://i44.tinypic.com/2s12n0m.jpg
அழகு ஓவியத்தை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பார்கள்..அந்த வகையில் இதய தெய்வத்தால் அறிமுகப்படுத்தபட்டவர்கள், அவருடன் நடித்தவர்கள், அவருடன் நடித்த பிறகே அனைவராலும் போற்றப்பட்ட நிலைதான் அன்றைய திரையுலகம் கண்ட உண்மை. அந்த வகையில் திருமதி மஞ்சுளா அவர்களை நம் ஆண்டவன் அறிமுகப்படுத்திய ரிக்ஷாக்காரன் திரைக்காவியம்... அகில இந்தியாவை ஆண்டது.... பாரத் பட்டம் வென்றது..அதனால்தான் அவரும் தனது நன்றியுரையில் தலைவருடன் நடித்ததால்தான் தனக்கு வாய்ப்புகள் குவிந்ததாக அறிவித்தார்..அவர் தன்வாழ்நாளில் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாக எண்ணி வாழ்ந்தார்..திருமதி மஞ்சுளா அவர்கள் மட்டுமல்ல மலைக்கள்ளனில் திருமதி பானுமதி தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் லதா, பத்மபிரியா வரை..தலைவருடன், அறிமுகமாகியதாலும் , தலைவருடன் நடித்ததாலும் புகழ் பெற்றார்கள் என்றால் அது மிகையாகாது..


அஷ்டாவதானி

திருமதி பானுமதி அவர்கள் தமிழ், தெலுங்கு இன்னும் பிற மொழிகள் பலவற்றில் நடித்திருந்தாலும் 'ஜனாதிபதி பதக்கம்' பெற்ற மலைக்கள்ளன், தமிழில் முதல் வண்ணப்படமான 'தலைவரின் அலிபாபா 40 திருடர்கள் மற்றும் தமிழக மக்களின் மனதை கொள்ளையடித்த நாடோடி மன்னன் படங்களுக்கு பிறகுதான் நட்சத்திரமாக மின்னினார்கள்..

அபிநய சரஸ்வதி

அதேபோல் தலைவரின் கொள்கைப்படமான நாடோடி மன்னன் திரைக்காவியத்தில் அறிமுகப்படுதியதன் விளைவாக அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி தமிழ்த்திரையுலகில் வெற்றினாயகியாக வளம் வந்தார்..அந்த நன்றியை மறக்காத அவரும் இன்னும் நம் தலைவனை ஆண்டவனாகப் போற்றி வணங்கி வருகிறார்..மூச்சிலும் பேச்சிலும் தெய்வம்...தெய்வம்...என்று உணர்வுபொங்க வாழ்த்துகிறார்...புரட்சித்தலைவருடன் சரோஜாதேவி அவர்கள் சேர்ந்து மிகப் பொருத்தமான ஜோடி என தமிழகமே வியக்கும் வண்ணம் உலா வந்தார்கள்..

கலைச்செல்வி

இன்று தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் செல்வி. ஜெயலலிதா நம் ஆண்டவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்திற்குப் பிறகுதான் தமிழ்த் திரைவானில் தாரகையாக உலா வர முடிந்தது..தலைவருடன் மட்டும் 28 படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று, இன்று தமிழக மக்களையே ஆள்கின்றார்..இந்த புகழுக்கெல்லாம் சொந்தக்காரர் யார் என்பதை சொல்லவும் வேண்டுமோ..

..தொடரும்..

Richardsof
25th July 2013, 08:15 PM
மக்கள் திலகத்தின் ''இதயக்கனி '' திரைப்படம்

http://i44.tinypic.com/2hex3cz.png



மதுரை - அலங்கார் அரங்கில் 26.7.2013 முதல்




http://i42.tinypic.com/2iv1b1t.png
பவனி வருகிறார் .

oygateedat
25th July 2013, 09:05 PM
திரு வினோத் அவர்களுக்கு,

தாங்கள் பதிவிட்ட, மக்கள் திலகத்தோடு காலம்சென்ற மஞ்சுளா அவர்கள் நடித்த பாடல்கள் வீடியோ தொகுப்பு அருமை. மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் அனைவரும் மிக மிக விரும்பி ரசித்த அற்புதமான பாடல்கள். பதிவிட்ட தங்களுக்கு நன்றி.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

-----------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------

oygateedat
25th July 2013, 09:31 PM
http://i39.tinypic.com/11jup6u.jpg

Richardsof
26th July 2013, 05:32 AM
மக்கள் திலகத்தின் பாடல் -சாதனை

''இதயக்கனி '' படத்தில் இடம் பெற்ற
http://youtu.be/Fi_I4UgfOAA
தென்னகமாம் இன்ப திரு நாட்டில் என்று துவங்கும் இந்த

பாடலை சீர்காழி கோவிந்தராஜன் - டி.எம்..எஸ் - ஜானகி

மூவரின் இனிய குரலில் புலமைபித்தனின் பாடலை

மெல்லிசை மன்னரின் இசையில் படமாகப்பட்டவிதம் அருமை .

காவேரி உற்பத்தியாகும் தலைக்காவேரி யில் துவங்கி

காவேரி ஆறு பாயும் கர்நாடகம் - தமிழக எல்லைகளை

பசுமையான வயல்கள் - நீர் பாயும் கல்லணை - திருச்சி -தஞ்சை

மாவட்டம் பகுதிகளை அழகாக படம் பிடித்து மீண்டும்

சத்யா காபி தோட்டம் என்று கர்நாடக மாநிலம் குடகு எஸ்டேட்

காட்சியில் மக்கள் திலகம் அறிமுகமாகும்

''நீங்க நல்ல இருக்கணும் '' பாடலில்

மக்கள் திலகம் - ரத்னா - எஸ் .வி .சுப்பையா -ஐசரிவேலன்

நடித்த புகழ் பெற்ற பாடல் சூப்பர் .


திரை உலக வரலாற்றில் முதல் முறையாக மக்கள் திலகம்

மிகவும் துணிச்சலாக தன்னுடய அரசியல் இயக்கமான

அண்ணா திமுக கட்சியின் சின்னத்தையும் , கொடியினையும்

பாடல் முழுவதும் அறிமுகபடுத்தியது மாபெரும் சாதனையாகும் .

மக்கள் திலகத்தின் தனிப்பட்ட பெருமைகளையும் , அதே நேரத்தில் காவேரி நதியுடன் அவருடைய பெருமைகளை
ஒப்பிட்டும் சமுதாய ஒற்றுமையை விளக்கியும் ,நதியின் பெருமையும் கூறி ,மக்கள் திலகம் - காவேரி என்ற ஒப்பீடு
கடந்து அண்ணா திமுக கட்சியின் கொடி, சின்னம் ,கொள்கை
என்ற மூன்றையும் ஒரே பாடல் மூலம் மக்களுக்கு
விருந்தளித்தவர் நம் மக்கள் திலகம் .

திரைப்பட சாதனத்தை தன பக்கம் ஈர்த்து , தன்னுடைய அரசியல் -சினிமா இரண்டையும் சரியான நேரத்தில்
சரியான இடத்தில பயன் படுத்தி வெற்றி கண்ட தலைவர்
நம் மக்கள் திலகம் .

இன்று பார்த்தாலும் இந்த பாடல் கண்ணுக்கும் மனதிற்கும்
உற்சாகம் தரும் பாடல் . அரசியல் காரணமாக சன் டிவி -கே டிவி - முரசு - சன் லைப் ஊடகங்கள் இந்த பாடலை தணிக்கை அல்லது நீக்கி விட்டு ஒளி பரப்புவர்கள் .

ஒரு பாடல் மூலம் ஒரு வரலாறு படைக்க முடியும் என்றால்

அது மக்கள் திலகத்தின் பாடல் என்று வரலாறு நமக்கு

என்றென்றும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் .

masanam
26th July 2013, 06:12 AM
மக்கள் திலகம் - மஞ்சுளா டூயட் பாடல்களின் வீடியோ பதிவு அருமை.
லில்லி மலருக்கு கொண்டாட்டம் - மக்கள் திலகத்தின் நடனம் மற்றும் முகபாவனை அசத்தல்..
நன்றி வினோத் ஸார்..

Richardsof
26th July 2013, 08:12 AM
இனிய நண்பர் திரு செல்வகணேஷ் சார்


என்னுடைய பதிவுகளுக்கு உடனுக்குடன் பாராட்டி பதிவுகள்

வழங்கிடும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி .

Richardsof
26th July 2013, 09:27 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/b8543837-3a35-4a21-8a15-a7fb73d281e0_zpseb5e42d1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/b8543837-3a35-4a21-8a15-a7fb73d281e0_zpseb5e42d1.jpg.html)

oygateedat
26th July 2013, 03:00 PM
makkal thilagathin

super hit movie

urimaikkural

now at ktv

Richardsof
26th July 2013, 04:41 PM
courtesy- pulavar pulamaipithan-biography.

ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து'' என்று, தான் பாடல் எழுதவந்தது பற்றி வர்ணிக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரைக்கும் தன்னை நீட்டித்துக் கொண்டிருக்கிற கவிஞர்.

எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் தரமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம்.

''பிறவி கம்யூனிஸ்ட் நான். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் யுத்தக்காரன். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சி. பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவன். சினிமாவில் பாட்டெழுதுவது என் லட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல.. என் முகங்களில் ஒன்று'' என்று சிரிக்கிறார்.

உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, வெடித்துக் கிளம்புகிற சிரிப்பு என அத்தனையும் பளிச் வெள்ளை!

''பஞ்சாலைக் கூலித் தொழிலாளி நான். புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -

நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?
தாய் யார்? மகன் யார்? தெரியார்;
தந்தை என்பார் அவர் யார்- யார்?
உறவார்? பகை யார்?
உண்மையை உணரார்;
உனக்கே நீ யாரோ?
வருவார்; இருப்பார்;
போவார்; நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?

'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...

இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் தரப்பட்டாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சிகர எண்ணங்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். எம்.ஜி.ஆர். என்கிற சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற -
http://i41.tinypic.com/2gt5lc3.jpg
நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே - ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே!

என்கிற பாடல். இன்றைக்கும் கேட்ட விநாடி சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல் அது.

பஞ்சபூதங்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-

காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது - மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனித இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே...
என்று 'இதயக்கனி' படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை.

என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மயக்கமே உண்டு.

எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே...
என்கிற, 'நீதிக்குத் தலைவணங்கு' பாட்டு வரிகளை குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு அரசாங்கம் தந்த உச்சகட்ட அங்கீகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை. 'அடிமைப் பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' பாடலில் வரும் -

பொய்கையெனும்
நீர்மகளும்
பூவாடை போர்த்து
நின்றாள்
தென்றலெனும்
காதலனின்
கைவிலக்க வேர்த்து
நின்றாள்
என்ன துடிப்போ
அவள் நிலை
நீயுணர மாட்டாயோ
அந்த நிலையில் தந்த சுகத்தை
நான் உணரக் காட்டாயோ?
என்கிற வரிகள் விரகத்தின் தவிப்பை விளக்கினால், ஆண் - பெண் உறவை இலக்கியத்தரமாகச் சித்திரித்தது -

சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துகளைச்
சேர்த்திடும் காலமிது
தேன்கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது

என்கிற வரிகள். காதலோடு நிறுத்திக்கொண்டுவிட முடியாதபடி என் சமூகச்சிந்தனை என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.. அதுதான் என்னை இயக்குவது.

புண்ணிய பூமி என்று இந்தியாவைச் சொல்கிறோம். இங்கு இல்லை என்பதே இல்லை. இந்தத் திருநாட்டில் கங்கை உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை. வயல் எங்கும் உண்டு. உண்ணச் சோறு இல்லை. இந்த தேசத்தைத் துன்பங்கள் ஆள்கின்றன. வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன. இதுதான் புண்ணிய பூமியா? இந்த ஆதங்கத்தில்தான் -

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு
மாறவில்லை - நம்
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லை.
இது நாடா, இல்லை வெறும் காடா? - இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா...
என்று 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் எழுதினேன்.

வயித்துக்காக மனுஷன் இங்கே
கயித்தில் ஆடுறான் பாரு;
ஆடி முடிச்சு இறங்கி வந்தா
அப்புறம்தாண்டா சோறு
என்று 'நல்லநேரம்' படத்துக்கு நான் எழுதிய பாட்டு திரையரங்குக்கு வெளியே கேட்டாலும் கண்ணீரை வரவழைப்பதற்கு என் சமூக அக்கறைதான் காரணம்.

இரும்பாக இறுகுகிற நான்தான் மெழுகாகக் குழையவும் முடியும். எரிமலை வரிகளை எழுதிவிட்டு,

பாடும்போது நான் தென்றல்காற்று

என்றும் எழுதமுடிகிறது.

siqutacelufuw
26th July 2013, 04:52 PM
அன்புள்ளம் கொண்ட அருமைச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது,

பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும். ! இது பழமொழி.


மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த எந்த நடிகையும் சோடை போனதில்லை. இது அந்த காலத்து நடிகை பானுமதி முதல், புரட்சித்தலைவரின் கடைசிப்படமான "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் நடித்த பத்மப்ரியா வரை அனைத்து நடிகைகளுக்கும் பொருந்தும்.

அற்புதமான விவரங்களுடன், ஆதாரப்பூர்வமாக தாங்கள் அளித்து வரும் உண்மை தகவல்களில்,

1. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து, மன உளைச்சல் அடைந்து மரணமடைந்த, நடிகை சாவித்திரி அவர்கள் தயாரிபில் வெளிவந்த "பிராப்தம்" படத்தில் நடித்த நடிகை சந்திரகலாவும்,

http://i39.tinypic.com/2qwk0td.jpg

2. மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்டமாக ஓரிரு படங்களை தயாரித்து, மனக்கஷ்டமும்,

பண நஷ்டமும் அடைந்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் தயாரிப்பில் வெளியான "வைர நெஞ்சம்" முதலான படங்களில் நடித்த நடிகை பத்மப்பிரியாவும்,


http://i43.tinypic.com/33kg6ef.jpg


இடம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.


ஆவலுடன், தங்கள் பதிவை ,எதிர் நோக்கும்,

தங்களன்பு : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th July 2013, 05:02 PM
திரு. கலியபெருமாள் அவர்கள் கூறியது போல்,

மறு வெளியீட்டில்,1970ல் வெளிவந்த "மாட்டுக்கார வேலன்" படம் அண்டை மாநிலமான "ஆந்திரா " வில் அதுவும் தினசரி 4 காட்சிகளுடன் ஓடுகிறது என்றால், "மக்கள் திலகத்தின்" மகிமையை என்னென்று சொல்வது ?


இந்திய திரையுலக வரலாற்றில், ஏன் உலக திரைப்பட வரலாற்றில், இப்படிப்பட்ட (repeated audience கொண்ட) சாதனையை நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களை தவிர எவராலும் நிகழ்த்த முடியாது என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. !


இந்த பதிவினை வெளியிட்டு எங்களை பரவசப்படுத்திய அன்பு சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி நவில வார்த்தைகளே இல்லை. .


ஓங்குக நமது பொன்மனசெம்மலின் புகழ் !

தங்களன்பு : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
26th July 2013, 05:36 PM
பொன்மனச்செம்மல்

மக்கள் திலகம்

நாடு போற்றிய நல்லவர்

நடித்த இதய வீணை

கோவை ராயல் திரை அரங்கில் ஒரு வார வசூல்

ரூபாய் 70000.

Stynagt
26th July 2013, 06:04 PM
மோதிரக்கை - தொடர்ச்சி

டி.ஆர்.ராஜகுமாரி
http://i44.tinypic.com/zwlfk.jpg
பேரழகி என்றும் தென்னிந்தியாவின் முதல் கனவுக்கன்னி என்று பெயர் எடுத்த திருமதி ராஜகுமாரி அவர்கள் அந்த கால நடிகர்கள் தியாகராஜா பாகவதர், சின்னப்பா ஆகியோருடன் நடித்திருந்தாலும் நம் சாதனை மன்னன் சரித்திர நாயகன் நடித்த மாபெரும் வெற்றிசித்திரமான குலேபகாவலி திரைக்காவியத்திற்குப் பிறகுதான் திரைவானில் சிறந்த நட்சத்திரமாக அந்தஸ்து பெற்று அனைத்து படங்களிலும் உலா வந்தார்..தொடர்ந்து, புதுமைப்பித்தன், பாசம், பெரிய இடத்துப்பெண் போன்ற படங்களில் தலைவருடன் நடித்ததால் நாடறிந்த நடிகையானார்.

நாட்டிய பேரொளி
http://i41.tinypic.com/29m1t1h.jpg
திருமதி. பத்மினி அவர்கள் சிறு சிறு வேடங்களிலும், கதாநாயகியாகவும் நடித்து வந்த காலங்களில் அவ்வளவாக புகழ் பெறவில்லை. புரட்சி நடிகருடன் சேர்ந்து மதுரைவீரன் என்னும் மகத்தான காவியத்தில் நடித்து, அந்த படம் வெள்ளிவிழா கண்ட பிறகுதான் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அவர் பிரபலமானார்..நம் நாட்டின் பாரம்பரிய கதையாகிய மதுரைவீரன்-வெள்ளையம்மா பாத்திரத்திற்கு பிறகுதான் அவர் பட்டி தொட்டியெங்கும் தெரியலானார்..தொடர்ந்து, விக்கிரமாதித்தன், மன்னாதி மன்னன், ராணி சம்யுக்தா, அரசிளங்குமரி, ரிக்ஷாக்காரன் போன்ற படங்கள் அவருக்கு புகழ் சேர்த்தன..
http://i40.tinypic.com/15y8ck0.jpg

http://i44.tinypic.com/29auxaf.jpg

திருமதி. அஞ்சலிதேவி

புரட்சி நடிகருடன் மர்மயோகியில் தொடங்கி உரிமைக்குரல் வரை நடித்த திருமதி அஞ்சலிதேவி நம் சரித்திர நாயகனின் சக்கரவர்த்தி திருமகள் படத்தின் வழியே தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நடிகையாகி பல படங்களில் நடித்து நிலையானதொரு இடம் பிடித்தார்.
http://i43.tinypic.com/2n13tk.jpg


திருமதி ராஜசுலோச்சனா
http://i42.tinypic.com/xgjo9j.jpg
சிறு சிறு வேடங்களிலும், ஒரு சில படத்தில் நடன நடிகையாகவும் நடித்த இவர் புகழ் பெற நம் புரட்சிநடிகரே காரணமானார். அரசிளங்குமரியில் கதாநாயகியாக நடித்தவுடன் அனைவருக்கும் அறிந்த நட்சத்திரமானார்..நல்லவன் வாழ்வான் படத்திலும் இவரே ஜோடியாகி இன்னும் புகழ் பெற்றார்..
...தொடரும்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
26th July 2013, 06:23 PM
பொன்மனச்செம்மல்

மக்கள் திலகம்

நாடு போற்றிய நல்லவர்

நடித்த இதய வீணை

கோவை ராயல் திரை அரங்கில் ஒரு வார வசூல்

ரூபாய் 70000.
இகமதை ஆண்ட இதய தெய்வத்துடன் மஞ்சுளா நடித்த
இதய வீணை திரைப்படத்தின் இணையிலா வெற்றி கண்டு -நம்
இதயங்கள் காணும் இன்பத்திற்கு ஏது இணை?

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

Stynagt
26th July 2013, 06:25 PM
அன்புள்ளம் கொண்ட அருமைச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது,

பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும். ! இது பழமொழி.


மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த எந்த நடிகையும் சோடை போனதில்லை. இது அந்த காலத்து நடிகை பானுமதி முதல், புரட்சித்தலைவரின் கடைசிப்படமான "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் நடித்த பத்மப்ரியா வரை அனைத்து நடிகைகளுக்கும் பொருந்தும்.

அற்புதமான விவரங்களுடன், ஆதாரப்பூர்வமாக தாங்கள் அளித்து வரும் உண்மை தகவல்களில்,

1. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து, மன உளைச்சல் அடைந்து மரணமடைந்த, நடிகை சாவித்திரி அவர்கள் தயாரிபில் வெளிவந்த "பிராப்தம்" படத்தில் நடித்த நடிகை சந்திரகலாவும்,

http://i39.tinypic.com/2qwk0td.jpg

2. மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்டமாக ஓரிரு படங்களை தயாரித்து, மனக்கஷ்டமும்,

பண நஷ்டமும் அடைந்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் தயாரிப்பில் வெளியான "வைர நெஞ்சம்" முதலான படங்களில் நடித்த நடிகை பத்மப்பிரியாவும்,


http://i43.tinypic.com/33kg6ef.jpg


இடம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.


ஆவலுடன், தங்கள் பதிவை ,எதிர் நோக்கும்,

தங்களன்பு : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அற்புதமான கட்டுரையால் நினைவுபடுத்திய திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.