PDA

View Full Version : Makkal thilagam mgr part 4



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

oygateedat
24th March 2013, 06:49 PM
http://i47.tinypic.com/t05ljd.jpg

idahihal
24th March 2013, 07:10 PM
http://i50.tinypic.com/j9yhc9.jpg

idahihal
24th March 2013, 07:13 PM
http://i50.tinypic.com/1znpzz9.jpg

idahihal
24th March 2013, 07:15 PM
http://i46.tinypic.com/2qv61s7.jpg

idahihal
24th March 2013, 07:16 PM
http://i49.tinypic.com/5yf09c.jpg

idahihal
24th March 2013, 07:30 PM
http://i45.tinypic.com/ng4if9.jpg

idahihal
24th March 2013, 07:37 PM
http://i45.tinypic.com/zoazj8.jpg

idahihal
24th March 2013, 07:41 PM
http://i47.tinypic.com/33b0l80.jpg

idahihal
24th March 2013, 07:50 PM
http://i50.tinypic.com/105pnhw.jpg

idahihal
24th March 2013, 07:52 PM
http://i48.tinypic.com/df8uth.jpg

idahihal
24th March 2013, 07:55 PM
http://i47.tinypic.com/w2jfqw.jpg

idahihal
24th March 2013, 07:57 PM
http://i46.tinypic.com/3465lpy.jpg

Richardsof
24th March 2013, 07:59 PM
courtesy- jaafna - mgr movies.

http://i45.tinypic.com/10wp4bc.jpg

Richardsof
24th March 2013, 08:00 PM
http://i49.tinypic.com/65wunr.jpg

Richardsof
24th March 2013, 08:01 PM
raja theatre - jafna
http://i45.tinypic.com/n2ftwj.jpg

idahihal
24th March 2013, 08:06 PM
http://i49.tinypic.com/2gvm32o.jpg

idahihal
24th March 2013, 08:09 PM
http://i47.tinypic.com/2cdtzkg.jpg

oygateedat
24th March 2013, 09:21 PM
http://i49.tinypic.com/hvz7rn.jpg

ainefal
24th March 2013, 09:37 PM
https://www.youtube.com/watch?v=QyJXd_XZ4OA


AAYIRATHIL ORUVAN

ainefal
24th March 2013, 09:39 PM
https://www.youtube.com/watch?v=jS03UV-5EK8


AAYIRATHIL ORUVAN - 1

ainefal
24th March 2013, 09:42 PM
https://www.youtube.com/watch?v=ih34q-OaWkA


AAYIRATHIL ORUVAN - 2

ainefal
24th March 2013, 09:44 PM
https://www.youtube.com/watch?v=yuIUASXagM0


AAYIRATHIL ORUVAN - 3

ainefal
24th March 2013, 10:22 PM
https://www.youtube.com/watch?v=YOmNAuxd5mM


AAYIRATHIL ORUVAN - 4

oygateedat
24th March 2013, 10:30 PM
http://i49.tinypic.com/ixfv2p.jpg
http://i49.tinypic.com/skwbp4.jpg

http://i46.tinypic.com/16kddmo.jpg

ujeetotei
24th March 2013, 10:35 PM
http://i50.tinypic.com/2e1ytc4.jpg
அள்ளிக்கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு

பல அபூர்வமான படங்களை வெளிட்ட ஜெய்சங்கர் அவர்களுக்கு எனது நன்றி. தங்களின் படங்கள் இங்கு மட்டும் அல்ல வேறு பல தளங்களில் தங்களின் படம் பதிவிட படுகிறது.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
24th March 2013, 10:36 PM
கடந்த 08-03-2013 அன்று சென்னை "மஹாலக்ஷ்மி" திரை அரங்கில், மக்கள் திலகத்தின் "நினைத்ததை முடிப்பவன்" திரைப்படம் 8 மாத இடைவெளியில், மீண்டும் தினசரி 3 காட்சிகளாக, வெளியிடப்பட்டு தொடர்ந்து மகத்தான வசூல் சாதனை புரிந்து, 2வது வாரமாக (15-03-13 முதல்) பகல் காட்சியாக மாற்றப்பட்டு, மகத்தான வசூல் சாதனை புரிந்தது.

முதல் வாரத்தில் மட்டும் வசூலான தொகை : ரூபாய் 88,000.

குறிப்பு : 1. இத்திரைப்படம் தனியார் தொலைகாட்சிகளில் அடிக்கடி ஒளி பரப்பப்படுகிறது.

2. சுமாரான PRINIT.

3. குறுகிய இடைவெளியில் திரையிடப்பட்டது

4. விளம்பரம் ஏதுமின்றி. டிஜிட்டல் செய்யப்படாமல், ஆரவாரமின்றி வெளியிடபட்டது..


இதன் மூலம் என்றென்றும் வசூல் பேரரசர் நமது மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சிதலைவர், பாரத், பாரத ரத்னா
எம் ஜி ஆர். மட்டுமே என்று தெளிவாகிறது.



மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கு ஓர் இனிய செய்தி : விரைவில் சென்னை மஹாலக்ஷ்மி திரை அரங்கில் பொன்மனசெம்மலின் "சக்கரவர்த்தி திருமகள்" திரையிடப்படுகிறது.

29-03-13 or 05-04-13 முதல் என்று உறுதி செய்யப்படாத தகவல்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்


தகவலுக்கு நன்றி செல்வகுமார் சார்.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

oygateedat
24th March 2013, 10:39 PM
today at coimbatore, fun cinemas 'nadodi mannan' housefull.

ujeetotei
24th March 2013, 10:44 PM
https://www.youtube.com/watch?v=ih34q-OaWkA


AAYIRATHIL ORUVAN - 2

தலைவர் சொல்வார் சர்வாதிகாரி (மனோகர்) அவர்களை பார்த்து, தங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றென்றும் நிலைத்து நிற்க.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ainefal
24th March 2013, 10:51 PM
http://www.youtube.com/watch?v=9Qobfc0bQzg&feature=youtu.be


AAYIRATHIL ORUVAN - 5

ujeetotei
24th March 2013, 10:56 PM
today at coimbatore, fun cinemas 'nadodi mannan' housefull.

கொங்கு நாட்டில் வீராங்கன் முற்றுகை.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

idahihal
24th March 2013, 11:02 PM
பல அபூர்வமான படங்களை வெளியிட்ட ஜெய்சங்கர் அவர்களுக்கு எனது நன்றி. தங்களின் படங்கள் இங்கு மட்டும் அல்ல வேறு பல தளங்களில் தங்களின் படம் பதிவிட படுகிறது.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png
ரூப் சார்,
பல வலைத்தளங்களிலும் பதிவிடப்படும் செய்திக்கு நன்றி. எல்லா தளங்களும் மக்கள் திலகத்தின் புகழ்பாட வேண்டும் என்பதுவே எனது / நமது விருப்பம். நான் பதிவு செய்யும் படங்களை மக்கள் திலகத்தின் புகழ்பரப்பும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

idahihal
24th March 2013, 11:05 PM
http://i49.tinypic.com/ixfv2p.jpg
http://i49.tinypic.com/skwbp4.jpg

http://i46.tinypic.com/16kddmo.jpg
ரவிச்சந்திரன் சார், உண்மையிலேயே இது மிகவும் அபூர்வமான ஆவணம். வெளியிட்டமைக்கு நன்றி.மக்கள் திலகத்தின் மாண்பினை விளக்கும் இது போன்ற பல செய்திகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

idahihal
24th March 2013, 11:09 PM
courtesy- jaafna - mgr movies.

http://i45.tinypic.com/10wp4bc.jpg
காவல்காரன் படத்தின் 100வது நாள் புகைப்படம் அபூர்வமானது. என் அண்ணன் படத்தின் ஒப்பனையுடன் அவ்விழாவில் மக்கள் திலகம் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இது வரை பார்க்காத புகைப்படம் . நன்றி.

mgrbaskaran
24th March 2013, 11:09 PM
LAST SONG FROM MADURAYAI METTA SUNDARA PANDIYAN -1978

http://youtu.be/bMKijer7fZg


தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

தன மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்




ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்




கோட்டையிலே நமது கொடி பறந்திடல் வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்


புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவிடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்




கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள கயவராலே தாழ்ந்தது இங்கே


நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தடைகள் எல்லாம் உடைந்திடும் இங்கே


வீரமுண்டு வெற்றியுண்டு
விளையாடும் ககளமிங்கே உண்டு


வா வா என் தோழா


பூனைகள் இனம் போல பதுங்குதல் இழிவாகும்
புலியினம் நீ என வாராய்


வீரமுண்டு வெற்றியுண்டு
விளையாடும் ககளமிங்கே உண்டு


வா வா என் தோழா



தென் பாங்கு தென்றல் பண் பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ


நீர் வாழும் மீன்கள் நிலம் வீசல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ


வா வா என் தோழா


inthap paadal thamil eelaththin viduthalip paadalukkaa ezuthap paddatho

mgrbaskaran
24th March 2013, 11:14 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RDARFimmHLg

அமுதத் தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர் குலமும் வணங்கும்
புகழின் புரட்சி தலைவன் நீ


இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ -சிறு
இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ


ஞானம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
உன்னை ஒரு கணமும் என்னை மறு கணமும்
உள்ளம் நினைப்பதென்ன


நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு
என்னை அழைப்பதென்ன
ஊஞ்சல் அசைந்து வரும் நீல விழி இரண்டின்
வர்ணம் சிவப்பதென்ன


எதுகை அது எனது இருகை அதில் எனது
பெண்மை ஆடட்டுமே
ஒரு கை குழல் தழுவ மறு கை உடல் தழுவ
இன்பம் தேடட்டுமே


வைகை எனை நெருங்கி
வைகை அணை மதுரை
வைகை அணை போலவே


மங்கை எனும் அமுத கங்கை
பெருகுவது நீந்திக் கரை காணவே


thanks for the original uploaders

idahihal
24th March 2013, 11:30 PM
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படப் பாடல்களைப் பதிவேற்றம் செய்த திரு. பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. மக்கள் திலகத்தின் கடைசி படம் . பல முறை திரையில் பார்த்து மகிழ்ந்த படம். ரிலீஸ் ஆன அன்றே நான் பார்த்த மக்கள் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று. ஆனால் தற்போது நல்ல பிரிண்ட்டில் பார்க்க இயலவில்லை. எந்த ஒரு டிவிடியிலும் கலர் சரியாக இல்லை. எங்கவீட்டுப் பிள்ளை போன்ற அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் வந்த படங்களைக் கூட பளபளவென்ற கலரில் குறைந்தபட்சம் விசிடி அல்லது டிவிடி வடிவத்திலாவது பார்க்க முடிகிறது. ஆனால் கடைசி காலகட்டங்களில் வந்த படங்களான ஊருக்கு உழைப்பவன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் , போன்றவற்றை நல்ல பிரிண்ட்டில் பார்க்க இயலவில்லை. இது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. மக்கள் திலகத்தின் படங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நல்ல பிரதி வைத்திருப்போர் இப்பணியினை செய்ய முன்வரவேண்டும். குறைந்தபட்சம் டிவிடியிலாவது பாதுகாக்க வேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள்.

mgrbaskaran
24th March 2013, 11:39 PM
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படப் பாடல்களைப் பதிவேற்றம் செய்த திரு. பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. மக்கள் திலகத்தின் கடைசி படம் . பல முறை திரையில் பார்த்து மகிழ்ந்த படம். ரிலீஸ் ஆன அன்றே நான் பார்த்த மக்கள் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று. ஆனால் தற்போது நல்ல பிரிண்ட்டில் பார்க்க இயலவில்லை. எந்த ஒரு டிவிடியிலும் கலர் சரியாக இல்லை. எங்கவீட்டுப் பிள்ளை போன்ற அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் வந்த படங்களைக் கூட பளபளவென்ற கலரில் குறைந்தபட்சம் விசிடி அல்லது டிவிடி வடிவத்திலாவது பார்க்க முடிகிறது. ஆனால் கடைசி காலகட்டங்களில் வந்த படங்களான ஊருக்கு உழைப்பவன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் , போன்றவற்றை நல்ல பிரிண்ட்டில் பார்க்க இயலவில்லை. இது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. மக்கள் திலகத்தின் படங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நல்ல பிரதி வைத்திருப்போர் இப்பணியினை செய்ய முன்வரவேண்டும். குறைந்தபட்சம் டிவிடியிலாவது பாதுகாக்க வேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள்.
நன்றி

நானும் மக்கள் திலகத்தின் 40 படங்கள் வீடியோ caset இல் வைத்திருந்தேன்.
ஆனால் மழையில் எல்லாம் நனைந்து பழுதாகி விட்டன

ஆனாலும் உங்கள் photos சூப்பர் , காணக் கிடைக்காத பொக்கிஷம்

idahihal
25th March 2013, 12:09 AM
An article from net
அம்மாவிடம் அளவில்லாத அன்பு கொண்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சினிமாவிலும், அரசியலிலும் அவர் உச்சத்தைத் தொட்டபின் தாய் சத்யாவின் பெயரில் எவ்வளவோ அறப்பணிகள் செய்திருக்கிறார். ஆனால் தன் உயிரினும் மேலான தாய்க்காக ஆத்மார்த்தமாக அவர் செய்த முதல் காரியம் கேரளாவில் உள்ள தன் சொந்த ஊரான மருதூரில் அவருக்காக நாடகத்தில் நடித்துக் கிடைத்த காசில் ஒரு ஓட்டு வீட்டைக் கட்டிக் கொடுத்ததுதான்.

கேரளாவில் தாய் வழிச் சொத்து என்பது குலவழக்கம். அப்படி அம்மா வழியில் வந்த இருபது செண்ட் நிலத்தில்தான் எம்.ஜி.ஆர். அந்த வீட்டைக் கட்டியிருக்கிறார். அவரது வீட்டில் இருந்து சற்றுத் தள்ளி மற்றொரு பாகத்தில் அம்மா சத்யாவின் உடன்பிறந்த தங்கை மகள் கமலாதேவி குடும்பத்துடன் வசித்து வருகிறார்
.


எம்.ஜி.ஆருக்கு தங்கை முறையிலான கமலா தேவியம்மாள் நிறத்திலும் சாயலிலும் அப்படியே எம்.ஜி.ஆரை உரித்து வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆரும் தாய்வழிச் சாயல் என்பது அவரைப் பார்த்தபார்த்ததும் தெரிந்தது.





அண்ணன் அப்பொழுது சினிமாவில் பெரிய பிரபலமாகவில்லை. பொன்முடி', `போஜன்'னு சில படங்கள்ல மட்டும் நடித்திருந்தார். அந்த ஸ்டில்களையெல்லாம் கொண்டு வந்து எங்களுக்குக் காட்டுவார். ஒருநாள் இரண்டு நாள்தான் இருப்பார்; போய்விடுவார்.



பெரிய அண்ணன் சக்ரபாணிக்கு அப்பொழுது கல்யாணமாகியிருந்தது. சின்ன அண்ணனுக்குத்தான் கல்யாணம் ஆகலை. சின்ன அண்ணனுக்கு சொந்தத்துலயே பார்கவின்னு ஒரு பொண்ணைப் பார்த்தாங்க பெரியம்மா. சின்ன அண்ணன் பெரிய ஹீரோ ஆகிற வரைக்கும் கல்யாணம் வேண்டாம்னு அடம்பிடித்துக்-கொண்டிருந்தார். உடனே தனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஒரு நாடகமாடி பெரிய அண்ணனை வச்சு எம்.ஜி.ஆர். அண்ணனை ஊருக்கு வரவழைச்சாங்க பெரியம்மா.

வந்த இடத்துல கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. இந்த வீட்லதான் அந்த கல்யாணம் நடந்தது. கல்யாணம் முடிஞ்சு பத்து நாள் மட்டும்தான் சின்ன அண்ணன் இந்த வீட்ல இருந்தாங்க.

மகன் நாடகத்துல நடிச்ச காசுல கட்டித் தந்த வீடுன்னு பெரியம்மாதான் பிடிவாதமா இந்த வீட்ல ரொம்ப நாள் இருந்தாங்க. அப்புறம் வற்புறுத்தித்தான் இரண்டு அண்ணனும் அம்மாவை கூட்டிட்டுப் போனாங்க. இந்த ஊர்ல இருந்தப்பதான் அப்பா, இரண்டு அக்கா, பாலகிருஷ்ணன்னு மற்றொரு அண்ணன் என நாலுபேர் இறந்ததால சின்ன அண்ணன் இங்க வரத் தயங்கும்.



எம்.ஆர்.ராதா சின்ன அண்ணனைச் சுட்டபொழுது ஊர்க்காரங்க எல்லாம் பார்க்கப் போனாங்க. அப்படிப் போன `கண்டு மேஸ்திரி'ங்கிற ஒருத்தர்கிட்டதான் இந்த வீட்டை பார்த்துக்கற பொறுப்பை அண்ணன் ஒப்படைச்சார். அம்மா சமைத்த இடம், படுத்த இடம்னு எதையும் மாத்தக்கூடாதுன்னு சொல்லித் தந்தார். இப்பொழுதும் அந்த வீட்டைப் பார்த்துக்கறது அவரோட வாரிசுகள்தான். நாங்க அந்தப் பக்கம் போவதே இல்லை.


முன்பு எம்.ஜி.ஆர். அண்ணன்கூட நடித்த அசோகன், நம்பியார், பாடகர் டி.எம்.எஸ். எல்லாம் இந்தப் பக்கம் வந்து வீட்டைப் பார்த்துட்டு போய் அண்ணனிடம் விபரம் சொல்வாங்க. மற்றபடி மூகாம்பிகை கோயிலுக்கு போகும்போது ஒரேயொரு தடவை மட்டும் அண்ணன் இங்கு வந்தார்.

வீட்டின் கிணற்றுச் சுவரில் `சத்யா விலாசம்' என்று எழுதியிருந்த இடத்தை தன் கைகளால் தடவிப் பார்த்துவிட்டுப் போனவர்தான் திரும்பி வரவே இல்லை'' என்று தணிந்த குரலில் சொல்லி முடித்தார் தங்கை.

அவரது மகன் கிருஷ்ணதாஸ் தன் மாமா கட்டிய வீட்டிற்குள் நம்மை அழைத்துச் சென்றார். முன்புறம் சுமாராக இருந்தாலும் பின்புறமெல்லாம் இடிந்துபோய் இருந்தது.

சென்னையில் உள்ள மதிப்புள்ள சொத்துக்களுக்காக அவரது சட்டப்படி வாரிசுகள் எல்லாம் குத்து, வெட்டு என்று சண்டையிட்டு வர, உயிரினும் மேலாக அவர் மதித்த தாய் சத்யா வாழ்ந்த இல்லம் சிதிலமடைந்து கிடப்பதை பார்த்ததும் இதயத்தில் சிறு முள்ளாய் ஒரு உறுத்தல்!

- வீரகேரளம் சரவணன்
குமுதம்

14-01-09 கவர் ஸ்டோரி

ainefal
25th March 2013, 12:13 AM
http://i46.tinypic.com/15xp9qw.jpg

Thanks to Thiru.Madakkulam Prabhakaran and Thiru.Ashok Kumar

idahihal
25th March 2013, 12:18 AM
"எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் "
===================




1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.



2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !



3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர்

ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.



4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.



எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.



6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.



7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.



8. தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமிழ்ச்சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.



9. ஒரு மனிதனின் எண்ணமும்,நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.



10. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குடோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கக் கூடியவை.



11. கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தைக் காட்ட முடியும்.



12. கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.



13. பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும்.பிறர் ரசிப்பதற்காகக அல்ல! ஆடலும் அது போலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.



14. கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல. தரத்தை மட்டுமல்ல, அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.



15. குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.



16. கலை எப்போதும் நிரந்தரமாய் இருக்கும். ஆனால் கலைஞர்கள் நிரந்தரமாய் இருக்கமாட்டார்கள்.



17. இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால் தான் எதிர்காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.



18. சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்

19. ஒரே கட்சி ஆட்சி தான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி , இது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக கூற விரும்புகிறேன்.



20. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.



21. உயர்ந்த கல்வி கற்கும் போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.



22. பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்ற உத்தரவு போட வேண்டும். இசைத் தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது. மாணவர்களும் அந்தப் பாடல் பாட வேண்டும்.



23. நமது நாடு, நமது மக்கள், நமது மொழி என்ற உணர்வு நமக்கு வேண்டும்.



24. நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால் நாம் அதைத் துடைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.



25. கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும் ; அப்போது தான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.
26. மதத்தின் பெரால் பிரச்சனைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால் தான் பிரச்சனைகள் வருகின்றன.



27. உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.



28. நமக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம் ; ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும்.



29. கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக் காரர்கள் தான்.



30. இளைஞர்கள் அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது.



31. நீதித்துறையில் அரசியல் கட்சி வரக்கூடாது. வந்து விட்டால் நீதி செத்துவிடும்.



32. நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்.



33. சக்தி குறைந்தர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.



34. சொந்தக் காலில் நிற்பது நல்லது மட்டுமல்ல. நடைமுறைக்குத் தேவையானதும் ஆகும்.



35. ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பது தான் தியாகம்.



36. நம்மை நாமே ஆண்டு கொள்கிற மக்களாட்சியின் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும்

வர்க்கத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.



37. மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்து நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆகவே மக்களுக்குத் தொண்டு செய்கிறோமே தவிர எஜமானர்கள் அல்ல என்ற வகையில் அரசு அலுவலர்களும், மற்றர்வர்களும் அந்தப் பணியைச் செய்தால் தான் நிலைமை சீர்படும்; எந்தத் திட்டமும் நிறைவேறும்.



38. உடலைப் பேணிக் காப்பது, தேகப் பயிற்சி செய்வது, உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத் தூய்மையைப் பெறுவது, எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது ; தற்காப்புக்கேற்ற ஒரு கலையைக் கற்பது இவைகள் எல்லாமே மாணவர்களின் கடமை ஆகும்.



39. எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மை தான் நிலைக்கும் என்பதை மனிதற்கொண்டு விமர்சியுங்கள்



40. மக்களையே மகிழ்விக்கவே நடிக்கிறோம். அவர்களால் தான் கலைஞர்களின் வாழ்க்கைச் சக்கரமே சுழல்கிறது. அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால் அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.



41. வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான, பயங்கர விஷவாயு ஆகும்.



42. ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் ஆகும்.ஆனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுவத்துவதற்குச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் உள்ள உரிமையைப் பயன்படுத்த அதே ஜனநாயகம் அனுமதிக்காது.



43. சராசரி மனிதனின் எண்ணங்கசளையும்,அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத எவனும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ உரிமையோ கிடையாது.



44. என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும் போது அன்போடு பேசுவதற்குக் காரணமே, அவர்ளது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம் என்பதனாலும் தான்.



45. அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத் தான் சொந்தம் ; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.



46. மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காகப் பெற்றோரைத் துன்பப்படுத்தக் கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப் படக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.



47. சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடிவரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.



48. கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.



49. திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான் அஸ்திவாரம்.



50. ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால் தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.



51. நீங்கள் உண்பவற்றில் மிகச்சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.



52. கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.



53. எல்லோரும் நமக்கு வேண்டிவர்கள் தான் ; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.



54. நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.



55. கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும்.



56. சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன்கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.



57. மக்களுக்கம் அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைக் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும்



58. உழைக்கும் வர்க்கம் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது ; ஆனால் அதற்கு முன்பே நாமே கொடுக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.



59. ஒரு மொழியை நாம் புரிந்து கொள்ள முடியாதபோது அந்த மொழியை கட்டாயப்படுத்தக்கூடாது.



60. ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.



61. இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்குப் பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.



62. என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?



63. அரசியலை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. வாக்குரிமை எப்போது தரப்படுகிறதோ அப்போதே ஒவ்வொருவரும் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள்.



64. சமுதாயத்தின் கட்டுப்பாடுகள்.ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.



65. தன்னலம் தேவை தான். ஆனால் அது பொதுநலமாகப் பரிணமிக்க வேண்டும்.
நன்றி யாழ் இணையம் வலைத்தளம்

ainefal
25th March 2013, 12:23 AM
http://www.youtube.com/watch?v=hsQ5NAK8ZdM&feature=youtu.be


AAYIRATHIL ORUVAN - 6

Richardsof
25th March 2013, 06:31 AM
கோவை நகரில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் அரங்கு நிறைந்த காட்சி என்ற தகவல் தந்த நண்பர் ரவிச்சந்திரன் சார்
சரித்திர நாயகனின் சாதனைக்கு மற்றுமோர் எடுத்து காட்டு.

மூன்று நாட்களில் மூன்று காட்சிகளில் ரூபாய் 30,000 மேல் வசூல் .
மக்கள் திலகம் - உண்மையிலே வசூல் சக்ரவர்த்திதான் . அன்றும் - இன்றும் என்றும்

ujeetotei
25th March 2013, 09:55 AM
http://i46.tinypic.com/15xp9qw.jpg

Thanks to Thiru.Madakkulam Prabhakaran and Thiru.Ashok Kumar

Sailesh Sir thanks for uploading this image. Convey my regards to Prabhakaran and Ashokkumar.

Richardsof
25th March 2013, 03:43 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/2c378e86-5e2d-4bce-b055-9cdd78c37016_zpscfc4fd03.jpg

Richardsof
25th March 2013, 03:51 PM
http://i48.tinypic.com/nvb1vs.jpg

Richardsof
25th March 2013, 04:10 PM
1972
BHARATH AWARD

http://i48.tinypic.com/a172ue.jpg

Richardsof
25th March 2013, 04:15 PM
PURATCHI THALAIVAR M.G.R DOCTORATE FUNCTION

http://i45.tinypic.com/9kyr03.jpg

Richardsof
25th March 2013, 04:20 PM
1988- BHARATHARATHNA AWARD

http://i49.tinypic.com/27xjcbm.jpg

Richardsof
25th March 2013, 04:34 PM
EVERGREEN HERO

http://i47.tinypic.com/21dik4m.jpg

Stynagt
25th March 2013, 04:42 PM
1972
bharath award

http://i48.tinypic.com/a172ue.jpg

nice photo..very kind of you vinodh sir

Richardsof
25th March 2013, 04:44 PM
சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த "ரிக்ஷாக்காரன்" வரலாறு படைத்த படமாகும்.

படித்த இளைஞன் ஒருவன், ரிக்ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான் படத்தின் மையக்கரு. நவரசங்களும் கொண்ட கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்ற வகையில் சத்யா மூவிஸ் கதை இலாகா உருவாக்க, திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் அமைத்தார். வசனத்தை ஆர்.கே.சண் முகம் எழுத, டைரக்ஷனை எம். கிருஷ்ணன் கவனித்தார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். மற்றும், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், "சோ", ஐசரி வேலன், பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, ஜெய குமாரி, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தனர்.

29_5_1971_ல் வெளிவந்த "ரிக்ஷாக்காரன்" பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. சண்டைக்காட்சிகள், புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில் வாலி இயற்றிய, "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு", "பொன்னழகை சிந்தும் பெண்மை", "ஆணிப்பொன் தேர்கொண்டு", "கடலோரம் வாங்கிய காற்று", அவிநாசிமணி எழுதிய "கொல்லிமலை காட்டுக்குள்ளே" ஆகிய பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.

சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் 142 நாட்களும், கிருஷ்ணாவில் 142 நாட்களும், சரவணாவில் 104 நாட்களும் ஓடியது.
தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, "பாரத்" விருதை வழங்கியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக பாரத் விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.தான்.

Richardsof
25th March 2013, 05:04 PM
காலத்தை வென்றவன்"
-பா.ஜெகதீசன்-

அண்மையில் சென்னையில் திரையிடப்பட்டுள்ள 'நாடோடி மன்னன்' ...... "இந்தப் படம் வெற்றிப் பெற்றால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நாடோடி'- "நாடோடி மன்னன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர். உதிர்த்த வார்த்தைகள் இவை!
தமிழக திரையரங்குகளில் படம் வெளியாகி, முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் எம்.ஜி.ஆர். போஸ்டரைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்: "நீங்கள் நாடோடியும் அல்ல. மன்னனும் அல்ல. மன்னாதி மன்னன்!'. ரசிகர்களின் வாக்கு பொய்க்கவில்லை. "நாடோடி மன்னன்' படம், வெற்றி பெற்று எம்.ஜி.ஆரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்று, "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்' என்று, ரசிகனை நோக்கி எம்.ஜி.ஆரைப் பாட வைத்தது.

நாடோடி மன்னன் படம் வெளியாகி 50 ஆண்டுகளாகிற இன்றைய நிலையிலும் அந்தப் பாட்டின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை. இப்போதும் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெளியான முதல் நாளே ஹவுஸ்புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர்.

வசூலிலும் இப்போது வெளிவந்துள்ள புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்போது போலவே 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான போதும், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் இந்தப் படம்தான். ஒரு கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் படம்!

"தமிழக திரைப்படத்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக' எனச் சொல்கிற சிறப்பு நாடோடி மன்னன் படத்துக்கு வசூலில் மட்டும் அல்ல. பலவற்றிலும் உண்டு.
எம்.ஜி.ஆர். தயாரித்த முதல் சொந்த படம். எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம். எம்.ஜி.ஆர். இயக்கிய முதல் படம். தமிழில் வெளியான முதல் "பகுதி வண்ணப் படம் (பார்ட்லி கலர்)'. சரோஜா தேவி கதாநாயகியாக அறிமுகம்... என பல "முதல்... முதல்'களின் சிறப்புகள் வெளிப்பட்ட படம் இது. பிரம்மாண்டமான செட்டுகள், கண்ணதாசனின் எழுச்சியூட்டும் வசனங்கள், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், சந்திரபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள், "தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எந்தக் காலத்திலும் நம்மைத் தூங்க விடாத பாடல்கள்... என பல சிறப்பம்சங்கள் இந்தப் படத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்புகளுடைய நாடோடி மன்னன் படம் மீண்டும் ரிலீசாகி ஓடும் வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கிற்குப் போனோம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் படம் வெளியாகி இருப்பதுபோல திரையரங்கே விழாக்கோலமாய் இருந்தது. எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடுவது போன்ற போஸ்டர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேனர்களுக்கும் குறைவில்லை. சேரில் கூட்டம் நிறைந்து பலர் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். புதுப் படத்தைப் பார்க்கப் போவதைபோல பரபரப்பாய் இருக்கிறது கூட்டம். "படத்தைப் போடு படத்தை போடு' என உக்கிரக் கோஷம். படம் போடப்படுகிறது!

திரையில் எம்.ஜி.ஆர் தோன்றுகிற காட்சி. திரைக்கு முன்னால் உள்ள சுவரில் வரிசையாக தயாராக வைக்கப்பட்டுள்ள சூடங்களை ரசிகர்கள் கொளுத்துகிறார்கள். விசில் சத்தம் அமர்ந்திருப்பவர்களின் காதைக் கிழிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை படத்தின் முக்கியமான கட்டங்களில் விசில் சத்தம் நிற்கவே இல்லை. குறிப்பிட்ட அந்தக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். பேசும் "பன்ச்' டயலாக்குகள் சில:

"நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்'

"என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு'

ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக் காட்சியை வெகு இயல்பாக எடுத்திருப்பதை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பர்... சூப்பர்... என எத்தனை தடவை சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள். அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு உயிர்போய் உயிர் வருகிறது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகி உள்ள படத்திற்கு இத்தனை உயிர்ப்பா? எனச் சிலிர்த்தபடியே தியேட்டரை விட்டு வர மனதில்லாமல் வெளியில் வந்தோம். இதே ஈர்ப்புடன் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான நடிகர் சத்யராஜ் பேசுகிறார்:

""1958-ல் நாடோடி மன்னன் படம் ரிலீசானது. நான் 1954-ல்ல பிறந்தேன். படம் ரிலீசானபோது எனக்கு 4 வயசுதான் என்பதால் அந்தப் படத்தை ரிலீசான அன்றே பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் உண்டு. ஆனால், அதுக்குப் பிறகு நாடோடி மன்னன் படத்தை பதினைஞ்சுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன்.

உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நாடோடிமன்னன் ஆகிய மூன்று படங்களுக்கு இன்னும் டிவி ரைட்ஸ்க்கு கொடுக்கவில்லை. இதனால் கடந்த பத்துப் பதினைந்து வருஷமாக நாடோடி மன்னன் படத்தைப் பார்க்க முடியவில்லை. ஆல்பர்ட் தியேட்டர்ல போட்டதும் போய் பார்த்துவிட்டு வந்தேன்.

தலைவர் படத்தையெல்லாம் வீட்டுல உட்கார்ந்து முறுக்கு தின்னுக்கிட்டு டிவியில பார்க்கக்கூடாது. ரசிகர்களோட சேர்ந்து விசிலடிச்சி, கைதட்டி பார்க்கணும். அப்பதான் தலைவர் படம் பார்த்தாப்போல இருக்கும்.

நாடோடி மன்னன் படத்துக்கு ஏகப்பட்ட சிறப்பு இருக்கு. எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் எடுத்த படங்கள்ல இந்தப் படமும் ஒண்ணு. இந்தப் படத்துல வர்ற "தூங்காதே தம்பி தூங்காதே' பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல "தினம் அல்லும் பகலுமே வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டமில்லையென அலட்டிக்கொண்டார்' என்ற வரி ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதில் எவ்வளவு பெரிய பகுத்தறிவு கருத்து இருக்கு.

எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் பற்றி பேசுறப்ப எனக்கொரு ஆதங்கம் எப்போதும் உண்டு. தலைவர் என்னை கூப்பிட்டு எம்.ஜி.ஆர். பிச்சர்ஸ் எடுக்கிற அடுத்த படத்துல நடிக்கிறியான்னு கேட்டார். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாரும் எம்.ஜி.ஆர் பிச்சர்ஸில நடித்ததில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கைகூடாமலே போய்விட்டது. அதுக்குள்ள தலைவர் நம்மைவிட்டுப் போய்விட்டார். அதுக்குப் பிறகு படம் எடுக்கப்படவில்லை.

நாடோடி மன்னனைத் தொடர்ந்து பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்தால் ஓடுமான்னு கேட்டீங்கன்னா... அடிச்சு சொல்வேன் நிச்சயமா ஓடாது.'' என்கிறார் சத்யராஜ்.
எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்துக் காந்த சக்தி சத்யராஜை மட்டுமல்ல எல்லோரையும் என்றென்றைக்கும் கவர்ந்துகொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர் பாடலைக் கொண்டே சொன்னால்: "காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ.'

Richardsof
25th March 2013, 05:06 PM
நாடோடி மன்னன்!

சென்னையில் மீண்டும் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் திரைப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. எம்.ஜி,ஆரின் உருவப் படத்திற்கு அவரது ரசிகர்கள் ஆரத்தி எடுக்கிறார்கள்.

சென்னை: "நாடோடி மன்னன் படத்தில் ஏழை மக்களுக்காக பேசிய வசனங்களை தமிழக முதல்வரானதும் நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.,' என்று நடிகை சரோஜா தேவி புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.என்.ராஜம் நடித்த "நாடோடி மன்னன்' படம் 1958ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் கடந்த சில ஆண்டுகளாக தியேட்டர்களில் திரையிடப்படாமல் இருந்தது. தற்போது சென்னையில் நான்கு தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் 49ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஏழு நாயகிகள் கலந்து கொண்டனர். விழாவில் நடிகை சரோஜாதேவி பேசும் போது, ""எம்.ஜி.ஆரைப் போல சிறந்த மனிதர் கிடையாது. மனித நேயம் உள்ள மகா மனிதன். "நாடோடி மன்னன்' படத்தில், "நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்' என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில் சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார். எம்.ஜி.ஆர்., இறக்கவில்லை. எல்லார் நெஞ்சத்திலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திகழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல திகழவேண்டும், வாழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல வாழ வேண்டும். எனது கடைசி மூச்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டிருப்பேன். தமிழக மக்களை மறக்க மாட்டேன்,'' என்றார்.
அன்று எம்.ஜி.ஆருடன் கதாநாயகிகளாக நடித்த நடிகைகளான எம்.என்.ராஜம், பத்மினி, சரோஜாதேவி, ராஜசுலோசனா மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோருடன் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனும் நாடோடிமன்னன் படத்தினை இரசிக்கின்றார்கள்.
நடிகை பத்மினி பேசும் போது, ""மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன். "மருதநாட்டு இளவரசி, ராஜா தேசிங்கு, அரசிளங்குமரி, ராஜ ராஜன்' என 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்., அவரே ஒரு சரித்திரம்,'' என்றார். நடிகை எம்.என்.ராஜம் பேசும் போது, ""இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது படம் இன்று தான் வெளியானது போல் இருக்கிறது. படம் வெளியாகி 49 ஆண்டுகள் ஆகிவிட்டன. எம்.ஜி.ஆர்., புகழ் இன்னும் நுõறாண்டுகளுக்கு மேல் இருக்கும். "நாடோடி மன்னன்' படத்தில் ஒரு சீனில் "என்னை நம்புகிறாயா சகோதரி' என்று எம்.ஜி.ஆர்., என்னிடம் வசனம் பேசுவார். அதற்கு "நான் மட்டுமல்ல நாடே நம்பும்' என்று பதில் சொல்வேன். எம்.ஜி.ஆர்., முதல்வரானதும் ஒரு முறை என்னிடம் பேசும் போது "நாடே என்னை நம்பும் என்று சொன்னாய்; முதல்வராகி விட்டேன்' என்று சந்தோஷமாக கூறினார். அதனை மறக்க முடியாது,'' என்றார்.

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேசும் போது, ""நான் வாழும் வாழ்க்கையில் சிறப்பு இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர்., தான் காரணம். உயிருள்ள வரை எம்.ஜி.ஆரின் நினைவு என்னை விட்டு போகாது,'' என்றார். நடிகை மஞ்சுளா பேசும் போது, ""இன்று எனது பேத்திக்கு பிறந்த நாள். அதில் பங்கு கொள்ளாமல் இங்கு வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் மீது அத்தனை மரியாதை வைத்திருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம். எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இணைந்து நடித்த படத்தில் சரோஜாதேவியின் படத்தை நீக்கிவிட்டு என் படத்தை ஒட்டி வைப்பேன். அப்படியிருந்த நான் எம்.ஜி.ஆருடன் "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்தேன். அதன்பிறகு நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இன்றைக்கும் நான் சாப்பிடும் போது பெருமாளேன்னு நினைக்கும் போது எம்.ஜி.ஆரையும் நினைத்துக் கொள்வேன்,'' என்றார். நடிகை ராஜசுலோசனா பேசும் போது, ""ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்., அவரைப்போல இனி ஒருவரை பார்க்க முடியாது,'' என்றார்.

திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பேசும் போது, ""எம்.ஜி.ஆருக்கு ஏராளமான பாடல்களை பாடியுள்ளேன். நான் பாடியதைப் போல உலகத்தில் யாரும் பாட முடியாது. "நான் பார்த்திலே அவர் ஒருத்தரைத்தான் நல்ல அழகனென்பேன்' என்றால் அது எம்.ஜி.ஆரைத்தான் சொல்வேன். எம்.ஜி.ஆர் சரோஜாதேவி சினிமாவில் பொருத்தமான ஜோடியாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருந்தனர். எம்.ஜி.ஆர்., படத்தில் சொன்ன நல்ல விஷயங்களை நிஜத்தில் அவர் ஆட்சியில் செய்து காட்டினார்,'' என்றார். திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசும் போது, ""சரித்திரம் படைத்தவர், சாதனையாளர். அவரோடு பணி புரிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., மக்களின் மனதில் என்றென்றும் வாழ்வார்,'' என்றார். விழாவில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜஸ்ரீ, சச்சு உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து "நாடோடி மன்னன்' படம் பார்த்து மகிழ்ந்தனர்.

நன்றி: தினமலர்

Richardsof
25th March 2013, 08:58 PM
கடை எட்டாவது வள்ளல்....ஒருமறுபதிவு


சங்க காலத்தில் கடையேழு வள்ளல்கள் இருந்ததாக தமிழ் வரலாறு கூறுகிறது.
இந்த கலிகாலத்திலும் அப்படி வாரிவாரி வழங்கிய வள்ளல்தான்...புரட்சித்தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப் படும் 'மக்கள்திலகம் எம்ஜியார்!'

மக்கள்திலகம் என்ற பேருக்கேற்ப இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். அரசியலில் அவர் பெயரை ஆதாயத்துக்காக பயன் படுத்துவோர் ஒரு புறமிருக்க, எந்தவித எதிர்பார்ப்புமின்றி அவர் பெயரைச் சொன்னாலே பொங்கி, பூரித்து, மெய்சிலிர்த்து நிற்க ஒரு மாபெரும் கூட்டமே இருக்கு. இதைத்தான் அரசியல்வாதிகள் வோட்டுவங்கி என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் நைச்சியமாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

இவ்வகையான ஏமாற்று வித்தைகளையெல்லாம் சட்டை செய்யாமல் இன்றும்...அவர் மறைந்து 25 ஆண்டுகள் கழிந்தபின்னும் அவரது பிறந்தநாள், நினைவுநாட்களில் சொந்த செலவில் ஷாமியானா கட்டி மேஜை போட்டு அவர் படம் வைத்து மாலைபோட்டு காலையிலிருந்து மாலைவரை அவரது படப் பாடல்களை ஒலிபரப்பி அஞ்சலி செலுத்தும் பாமரமக்கள்தான் எம்ஜியார் சேர்த்து வைத்த மாபெரும் சொத்து!!

அவரது தனிப்பட்ட குணங்கள் எப்படியிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு மேலேறி நிற்பது அவரது வள்ளல் குணம்தான்.

அரசு ஊழியர்களிடம் அவர் காட்டிய பரிவு,பாசம் பற்றி பொதுப்பணித்துறையிலிருந்து ஓய்வு பெற்ற எங்க வீட்டு ரங்கமணி அடிக்கடி நினைவு கூர்வார். அப்படி அவர் கூறிய இரண்டு சம்பவங்கள் உங்களுக்காக.

தலைநகரில் தமிழ்நாடு இல்லத்தில் பொறுப்பிலிருந்த பொறியாளர் எம்ஜியார் அங்கு வந்த போது அவருக்கான அறையில் சகல ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து முடித்திருந்தார்.
அதில் மகிழ்ந்து போனவர் தன் பாதுகாவலரை விட்டு பொறியாளரை அழைத்து வரச்சொன்னார்.

அவர் வந்ததும் அவரைப்பாராட்டி தன் பாக்கெட்டில் கைவிட்டு வந்த பணத்தை பொறியாளரிடம் நீட்டினார். அதிர்ந்து போனவர் செய்வதறியாமல் திகைத்தார்!! முதலமைச்சரிடமிருந்தே பணம் வாங்குவதா? அதுவும் ஓர் அரசு ஊழியர்!

அவரது தயக்கத்தைப் பார்த்த பாதுகாவலர் வாங்கிக்கொள்ளும்படி சைகை காட்டினார். காரணம் அப்போது அவர் முதலமைச்சரில்லை...மக்கள்திலகம் எம்ஜியார்!!!

பின்னொரு சமயம் வெளியூருக்கு காரில் செல்லும் போது திடீரென்று அவருக்கு எங்காவது ஓய்வு எடுக்கவேண்டியிருந்தது. வழியில் பல்லடம் என்னும் ஊரிலுள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இன்ஸ்பெக்ஷன் பங்ளாவுக்குள்(ib)கார் நுழைந்தது. சிஎம் காரைக்கண்டதும் ஓடோடி வந்த உதவிப் பொறியாளர் சிஎம்க்கான அறை மற்றும் குளியலறைகளை தயார் செய்தார்.

எம்ஜியார் அறைக்குள் நழைந்ததும் நேரே பாத்ரூமுக்குத்தான் சென்றார். அங்கு ரெண்டு பெரிய பக்கெட்டுகள் நிறைய தண்ணீர் நிரப்பியிருந்தது. வெளியே வந்ததும் உதவிப்பொறியாளரைப் பார்த்து, 'குழாயில் ஏன் தண்ணீர் வரவில்லை?' என்று கேட்க அவர், 'மோட்டார் ரிப்பேர் சார்!' என்க, 'ஏன் ரிப்பேர் செய்யவில்லை?' என்று விடாமல் வினவ, 'கோவையிலிருந்து மெக்கானிக் வரவேண்டும்.' என்று உடம்பெல்லாம் பதற பதிலளித்தவர்...கடைசியாக அந்த ஹைவேஸ் என் ஜினியர் சொன்னதுதான் ஹைலைட், முதலமைச்சரிடமே, 'சார்! சார்! எங்க டி.இ.கிட்ட சொல்லிடாதீங்க சார்!'என்றார். எம்ஜியார் குபுக்கென்று சிரித்துவிட்டு அவரிடம் அவரது குடும்பம், பிள்ளைகள் படிப்பு எல்லாம் அக்கறையாக விசாரித்துவிட்டு, வழக்கம்போல் சட்டைப்பையிலிருந்து வந்த பணத்தையும் கொடுத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.

பொறியாளர் நெகிழ்ந்து நின்றார். வெளியில் வந்து காரில் ஏறப்போகும் போது திரும்பி பொறியாளரைப் பார்த்து குறும்பாக சிரித்துக்கொண்டே, 'அடுத்த முறை வரும் போது குழாயில் தண்ணீர் வர வேண்டும்! இல்லாவிட்டால் உங்க டி.இ. கிட்ட சொல்லிடுவேன்!!' என்றாரே பார்க்கலாம்!!

இப்போது இப்படி நடந்தால் அந்த பொறியாளர் எந்த தண்ணியில்லா காட்டுக்கோ? யாரறிவார் பராபரமே!
இந்த மனிதாபிமானம்தான் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெறக் காரண்மோ?

நன்றி - திரு நானானி

Richardsof
26th March 2013, 05:18 AM
மக்கள் திலகம் அவர்கள் சாதரான நடிகனா இருந்து படிப்படியா முன்னேறி, தன்னிகரில்லா நடிகர்னு ஒரு முப்பது ஆண்டுகள் தலைசிறந்த நடிகனா ஆட்சி புரிந்து, கடைசி பத்து வருஷம் தமிழக முதல்வரா வாழ்ந்து அவரு விட்டு போனது எத்தனையோ! கண்ணதாசன் அவருக்குன்னு எழுதனமாதிரி, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் என் பேச்சிருக்கும்னு' இன்னைக்கும் அவரு பேரின் ம்ந்திரசக்தி எப்படிங்கிறதை சமீபத்தில திருப்பி ரீலீஸ் பண்ணின 'நாடோடி மன்னன்' படம் பதினாலு வாரங்கள் தொடர்ந்து ஓடினதே சாட்சி! அவ்ர் யானை மாதிரி, இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன் , ஆயிரத்தில் ஒருவன்!

சரி உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ஜஸ்டின் அப்படின்னு. அவரோட சண்டை காட்சிகள் எப்பவுமே பிரமாதமா இருக்கும்! அதாவது இப்பவும் படங்கள் வருது, அதிலே எதிரியை தாக்கறேன்னு ரத்தகளோபரமா இருக்கு, வன்முறைகளை தூண்டிவிடுகிற மாதிரி தான் வருது! அதாவது ஒருத்தன் எதிரின்னா அடிச்சி காலிப்பண்ணு, அப்படிங்கிற ரீதியிலே, பயங்கர ஆயுதங்களோட ஒரே ராசாபாசமா இருக்குது! ஆனா எம்ஜிஆர் படங்கள் எல்லாமே பாருங்க! அப்படி ராசாபாசம் எதுவும் தெரியாது! சண்டைங்கிறது ஆபத்தான வேளைகளில் தன்னை தற்காத்து கொள்ள வைத்திருக்கும் இன்னொரு கலை மாதிரி இருக்கும். அதிலே சண்டை போட அவரு எடுத்து வைக்கும் ஸ்டெப்பு, ஸ்டைல், ஆக்ஷன் எல்லாமே பார்க்க சந்தோஷமா இருக்கும். அதாவது குதுகூலமா சின்ன பசங்க கண்ணை மூடாம, பெரியவங்களும், சின்னவங்களும் சேர்ந்து பார்த்து மகிழ்ச்சியா பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும்! அது தான் அவருடய படங்களுக்கு கிடைச்ச வெற்றி!

அப்படிதான் இந்த படத்திலே முதல்ல ஆர்எஸ் மனோகரோட போடற சண்டையிலே, எம்ஜிஆரை லதா துப்பாக்கியாலே சுட்டு தப்பிக்க வச்சிட்டு,
அதுக்கப்பறம் மேஜையிலே பலம் யாரு காட்டறதுன்னு வைக்கும் ஸ்டெப்புகள், அப்பறம் கைநெகத்திலே கண்ணத்தை கிழிச்சு இரண்டு கட்டைவிரலை வச்சிக்கிட்டு சண்டை போட்டுக் காமிக்கும் லாவகமே தனி! அப்ப எல்லாம் இந்த மாதிரி புதுசா ஸ்டைலா சண்டை போட அவருக்கிட்ட புது ஆளுங்க வருவாங்க, அதிலே ஜஸ்டின் ஒருத்தரு, அப்பறம் மொட்டத்தலை ஷெட்டின்னு ஒரு நடிகர்! இதோ இப்ப இந்த இரண்டு கிளிப்பு, ஒன்னு மனோகரோட, இன்னொன்னு ஜஸ்டினோட! அப்பறம் எதிரியை அடிச்சி போட்டுட்டு ஓடறதுங்கிறது அவருடய வழக்கமே கிடையாது! அடிபட்டவன் திருந்தனும், அதுக்கு அடிச்சிட்டு அவனுக்கே தண்ணி எல்லாம் கொடுத்து சிகிச்சை பண்ணுவாரு!

அப்பறம் எதிரி பக்கம் நியாம் இருந்தா, அதுக்கு துணை போவாரு! இதிலேயும் அப்படிதான் அரைகுறையா ஆட சொல்லி வற்புறுத்தன ஜஸ்டினை அடிச்சிட்டு,
அப்பறம் அவரு பக்கத்து நியாத்தை தெரிஞ்சு பணத்தை கொடுத்துட்டு சந்திரகலாவை மீட்டு காதலிப்பார்! இது மாதிரி ஆபத்துகள், ஆக்ஸிடண்டான கட்டங்கள்ல கதாநாயகியை காப்பாத்தி, கடைசியிலே அவங்களையே காதலிச்சி கல்யாணம் பண்ணி அவங்களுக்கு கலங்கம் எதும் வரமா பார்த்துக்கிற எம்ஜியார் ஃபார்முலாவை தான் கமலு தேவர் மகன்லேயும் செஞ்சு காமிச்சிருப்பாரு, ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிப்பற! ஆக இன்னைக்கு எந்த நடிகர்களா இருந்தாலும் சரி, அன்னைக்கு சில நல்ல வழி என்ற எம்ஜிஆர் போட்டு கொடுத்த ஃபார்முலாக்களை விட்டு அகன்றதே இல்லை!

அது மாதிரி காதல் கொள்வதில் அவருக்கு உண்டான பிரத்யோகமான ட்ரேட் மார்க்குகள் உண்டு! இந்த படத்திலே சந்திரகலாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு,
அதுக்கு ஆசீர்வாதம் வாங்குகிற காட்சிகள் அமைப்பு சமுதாயத்தின் எல்லா மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும்! இந்த படத்திலே கல்யாணம் முடிச்சு ஜேசுதாஸ் வாயஸ்ல ஒரு அருமையான பாட்டுக்கு ஹாங்காங் சுத்தி போட்ல ஆடிப்பாடி காட்சிகள், அப்பறம் இந்த வெளி நாடு போன அங்கே அப்ப அதியமா இருந்த டால்ஃபின் மீன் காட்சிகள், டிஸ்னிலேன்டு, எக்ஸ்போ 70, இது எல்லாம் அப்படியே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி படம் புடிச்சு கொண்டு வந்தாங்க!


நம்ம ஊரு பத்தலைன்னு, வெளியிலே தாய்லேந்துல படம் புடிக்க வந்து அந்தவூரு பொண்ணை போட்டு கனவு காண வச்சு ஒரு துள்ளலா பாட்டு ஒன்னயும் பாடவச்சி தூள் கிளப்பி இருப்பாரு நம்ம தலைவரு!

நன்றி - வெளிகண்ட நாதர் - இனைய தளம்

Richardsof
26th March 2013, 05:50 AM
http://youtu.be/oXrxuNJH0IQ

masanam
26th March 2013, 11:05 AM
உலகம் சுற்றும் வாலிபன் பட மக்கள் திலகத்தின் படங்கள் அருமை. வினோத் அவர்களுக்கு நன்றி.

adiram
26th March 2013, 01:48 PM
// சரி உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ராமதாஸ், ஜஸ்டின் அப்படின்னு. //

Ramadoss...??. In which roll..?

oygateedat
26th March 2013, 10:22 PM
http://i45.tinypic.com/muk9hd.jpg

ainefal
26th March 2013, 10:56 PM
https://www.youtube.com/watch?v=3vEE35I2thw


பழம்பெரும் நடிகை சுகுமாரி அவர்கள் காலமானார். Our heartfelt condolences.

Richardsof
27th March 2013, 05:43 AM
உலக சினிமா நூற்றாண்டு விழா - இந்த ஆண்டு நடை பெறும்நிலையில்
உலகளவில் நமது மக்கள் திலகம் சினிமா துறையில் பதித்த சாதனைகளை நினைவு கூறுவது
நமது கடமையாகும் .
http://i46.tinypic.com/2v9q9uw.jpg

இந்திய திரை பட துறையில் பல நடிகர்கள் வெவ்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர் .
மக்கள் திலகத்தின் சாதனைகள் -1947-1977
ஒரே மொழியில் தமிழ் படங்களில் மக்கள் திலகம் 115 படங்களில் கதா நாயகனாக நடித்தவர் .
இந்தியா - இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா நாடுகளில் புகழ் பெற்ற நடிகர் .
உலகளவில் அதிக ரசிக மன்றங்களை பெற்ற நடிகர்
ஒரு அரசியல் இயக்கத்தில் தொண்டராக சேர்ந்து - கட்சி பதவி - சட்ட மன்ற மேலவை உறுப்பினர் பதவி பெற்று 1967 தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினாராக வெற்றி பெற்றவர் .
30 வருடங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் ஹீரோ வாக ,திரை உலக சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் .
பல வெள்ளி விழா , வெற்றிவிழா , நூறு நாட்கள் படங்கள் தந்தவர் .
தன்னுடைய வாழ் நாளில் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - தொழிலாளர்கள் - திரைப்பட கலை வல்லுனர்கள் - அனைத்து தரப்பினரையும் வாழ வைத்தவர் .

சமுதாய சீர் திருத்தத்தை தன்னுடைய படங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு நல்ல படங்களை மக்களுக்கு வழங்கியவர் .
1977 -2013 இந்த இடைப்பட்ட 36 வருடங்களில் அவரது படங்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஓடி கொண்டு வருவது உலக சாதனையாகும் .
ஒரு இந்திய மொழியின் தமிழ் கதாநாயகனாக புகழ் பெற்று , இந்திய அரசாங்கத்தின் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்க பட்ட நடிகர் மக்கள் திலகம் எம்ஜியார் உலகளவில் புகழ் பெற்று
மறைந்து 25 ஆண்டுகள் பின்னாலும் அவரது உலகமெங்கும் உள்ள கோடிக் கணக்கான ரசிகர்கள் இன்றும் அவரை தெய்வமாக , உலக சினிமா வரலாற்றில் புகழ் பெற்ற நடிகராக , மனித நேய பண்பாளராக ,பூஜித்து வருவது உலக சினிமா நூற்றான்று விழா கொண்டாடும் இத்தருணத்தில் மிகவும் பொருத்தமான ''world famous indian actor mgr '' என்றால் அது மிகையாகது .

Richardsof
27th March 2013, 06:00 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/dd427477-6a6b-497f-b822-7d9b04d77dfe_zps3e5ddd1a.jpg

Richardsof
27th March 2013, 06:12 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/6b048f5a-88b0-4955-a9d8-b568cfa7c763_zpsda8d5dc2.jpg

ujeetotei
27th March 2013, 07:24 AM
https://www.youtube.com/watch?v=3vEE35I2thw


பழம்பெரும் நடிகை சுகுமாரி அவர்கள் காலமானார். Our heartfelt condolences.

சுமார் 2500 தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துக் கொண்டவர். தலைவருடன் சில படங்களில் நடித்து உள்ளார். மதுரை வீரன் முதல் படம் என்று நினைக்கிறேன். நேற்று இன்று நாளை படத்தில் அவர் லதாவிற்கு தாயாக வருவார் ஐசரிவேலன் லதாவிடம் கேள்வி கேட்க சுகுமாரி அவர்கள் முந்திக் கொண்டு பதில் சொல்வார். ஐ.நா. சபை பற்றி என்ன நினைக்கிறிங்க? அந்த சபையிலே என் பெண்ணே ஆட கூப்பிட்டங்க நான் தான் அனுப்ப வில்லை என்பார்கள். ரசித்து சிரித்தேன்.

எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Stynagt
27th March 2013, 02:06 PM
உலக சினிமா நூற்றாண்டு விழா - உலக சினிமாவின் தரத்தை உயர்த்திய உன்னத நடிகர்..தனது நடிப்பின் மூலம் சமுதாய மாற்றம் ஏற்படுத்திய தன்னிகரில்லா தலைவர்..ஆம் தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்லை ஏற்படுத்தி அனைவருக்கும் வழிகாட்டியான மகத்தான தலைவர் அவர்..அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி சினிமா உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த புரட்சிதலைவர்..எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையே தன்னுடைய கொள்கையை, நல்ல கருத்துகளை தனது திரைப்படங்களில் புகுத்தி அனைவருக்கும் நல்வழி காட்டியவர். அவருடைய படங்கள் சமுதாயத்தையே ஈர்த்தபோது என்னையும் ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லை.. சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் அனைத்து தரப்பினரையும் ஈர்த்த நடிகர் நடிகப்பேரரசர் ஒருவர்தான். இந்த பெருமையை அடைய அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல..சிறு சிறு பாத்திரங்கள் மூலம் தோன்றி..அந்த பாத்திரங்களிலே முத்திரை பதித்து அந்த கால கட்டத்தில் திரையில் ஜொலித்த நட்சத்திரங்களின் ஒளியை மங்க செய்த சந்திரன் அவர். அவருடைய ஒவ்வொரு படங்களும் அவரே செதுக்கிய சிலைகள்..அதனால்தான் அத்திரைப்படங்கள் வெறும் படங்களாக மட்டுமல்லாமல் பாடங்கள் ஆயிற்று..மக்கள் திலகத்தின் படங்கள் அனைத்தும் வைரக்ரீடத்தில் பதிக்கப்பட்ட ரத்தினங்கள் என்றாலும் கோஹினூர் வைரம் என என்னை ஈர்த்த படங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்:

1. மோகினி
http://i45.tinypic.com/241vvab.jpg
மக்கள் திலகமும் அவர் தம் துணைவியாரும் இணைந்து நடத்த ஈடில்லா திரைக்காவியம்..தலைவரின் அழகிய முகமும், துள்ளுகின்ற அவருடைய நடிப்பும் அனைவரையும் ஈர்க்கும். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றிருந்த தலைவர்..திரையுலகில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருந்த காலம்..அந்த காலகட்டத்தில் கூட தன்னுடைய புரட்சி வசனங்களை, பொது நல கருத்துகளை இடம் பெற செய்திருந்தார். படத்தின் இறுதி கட்டத்தில் அவர் குகையில் வீரமாக பேசும் வசனத்தைக் கண்டு பிரம்மித்து போனேன். அந்த காலங்களில் கூட அப்போதிருந்த சூப்பர் ஸ்டார்கள் கூட இவ்வளவு வீரமாகவும் புரட்சிகரமாகவும் வசனங்களை பேசியதாகவும் வரலாறு இல்லை. தான் வளர்ந்து வரும் கால கட்டத்தில் கூட பேசிய வசனங்களை கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்கும்..தலைவருடைய வழக்கமான பாணி இந்த திரைப்படத்தில் தெரியும். அவரை பார்த்து இப்படித்தான் கதாநாயகர்கள் நடிக்கவேண்டும் என்று அப்போதைய சூப்பர் ஸ்டார்கள் கற்றுகொண்ட படம்.

Richardsof
27th March 2013, 05:59 PM
மக்கள் திலகம் அவர்களின் நாடோடி மன்னன் திரைப்படம் வரும் 29-3-2013 முதல்

பாபநாசம் - அய்யம்பேட்டை - வேல்முருகன் அரங்கில் தினசரி 3 காட்சிகள் .

நமது நண்பர் திரு சுப்பு அவர்கள் தனது சுற்று பயணத்தின் போது கண்ட தகவல் .
நன்றி சுப்பு சார் .

oygateedat
27th March 2013, 09:06 PM
உலக சினிமா நூற்றாண்டு விழா - இந்த ஆண்டு நடை பெறும்நிலையில்
உலகளவில் நமது மக்கள் திலகம் சினிமா துறையில் பதித்த சாதனைகளை நினைவு கூறுவது
நமது கடமையாகும் .
http://i46.tinypic.com/2v9q9uw.jpg

இந்திய திரை பட துறையில் பல நடிகர்கள் வெவ்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர் .
மக்கள் திலகத்தின் சாதனைகள் -1947-1977
ஒரே மொழியில் தமிழ் படங்களில் மக்கள் திலகம் 115 படங்களில் கதா நாயகனாக நடித்தவர் .
இந்தியா - இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா நாடுகளில் புகழ் பெற்ற நடிகர் .
உலகளவில் அதிக ரசிக மன்றங்களை பெற்ற நடிகர்
ஒரு அரசியல் இயக்கத்தில் தொண்டராக சேர்ந்து - கட்சி பதவி - சட்ட மன்ற மேலவை உறுப்பினர் பதவி பெற்று 1967 தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினாராக வெற்றி பெற்றவர் .
30 வருடங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் ஹீரோ வாக ,திரை உலக சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் .
பல வெள்ளி விழா , வெற்றிவிழா , நூறு நாட்கள் படங்கள் தந்தவர் .
தன்னுடைய வாழ் நாளில் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - தொழிலாளர்கள் - திரைப்பட கலை வல்லுனர்கள் - அனைத்து தரப்பினரையும் வாழ வைத்தவர் .

சமுதாய சீர் திருத்தத்தை தன்னுடைய படங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு நல்ல படங்களை மக்களுக்கு வழங்கியவர் .
1977 -2013 இந்த இடைப்பட்ட 36 வருடங்களில் அவரது படங்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஓடி கொண்டு வருவது உலக சாதனையாகும் .
ஒரு இந்திய மொழியின் தமிழ் கதாநாயகனாக புகழ் பெற்று , இந்திய அரசாங்கத்தின் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்க பட்ட நடிகர் மக்கள் திலகம் எம்ஜியார் உலகளவில் புகழ் பெற்று
மறைந்து 25 ஆண்டுகள் பின்னாலும் அவரது உலகமெங்கும் உள்ள கோடிக் கணக்கான ரசிகர்கள் இன்றும் அவரை தெய்வமாக , உலக சினிமா வரலாற்றில் புகழ் பெற்ற நடிகராக , மனித நேய பண்பாளராக ,பூஜித்து வருவது உலக சினிமா நூற்றான்று விழா கொண்டாடும் இத்தருணத்தில் மிகவும் பொருத்தமான ''world famous indian actor mgr '' என்றால் அது மிகையாகது .

Mr.Vinod Sir,

Thank u.

idahihal
27th March 2013, 10:07 PM
உலக சினிமா நூற்றாண்டு விழா!
திரைப்படம் என்ற மகத்தான சாதனத்தை அதன் இலக்கணம் வழுவாமல் மக்களுக்காக மக்களை நெறிப்படுத்துவதற்காக பயன்படுத்திய ஒரே உலக நடிகர் மக்கள் திலகம் மட்டுமே.
20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் தன் அயராத உழைப்பினால் உயர்ந்து சிம்மாசனத்தை அடைந்து கடைசிவரை அந்த சிம்மாசனத்தை விட்டு இறங்காமல் , மண்ணுலகை விட்டு மறைந்து 25 ஆண்டுகள் ஆனபின்னும் அவரது சிம்மாசனத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். தான் சார்ந்த துறையின் சகல தொழில்நுட்பங்களிலும் தன்னிகரில்லா தேர்ச்சி பெற்று ஒப்பற்ற இடம் பிடித்தவர் உலக அளவில் வேறு ஒருவரும் இல்லை.
தனக்கென்று ஒரு பாணி, இயற்கை நடிப்பு, கொண்ட கொள்கையில் இருந்து வழுவாத நெறி, உலக இதிகாசங்களை விஞ்சும் அறவுரைகள் என்று படங்களை பாடங்களாய் ரசிகர் உள்ளங்களை கோயில்களாக மாற்றிய மனித தெய்வம் புரட்சித் தலைவர், மக்கள் திலகம், மன்னாதி மன்னன், ஊருக்கு உழைப்பவன், எம்.ஜி.ஆர். மட்டுமே. அதனால் தான் அவர் மனித சமுதாயத்திற்கே கலங்கரை விளக்கமாக இன்றும் திகழ்கிறார்.
திரையுலகில் இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் விருது பெற்றார். மனிதப் பண்புகளால் இந்தியாவின் சிறந்த மனிதருக்கான பாரத ரத்னா விருது பெற்றார்.
தான் சந்தித்த ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தன்னை விதைத்தவர், ஆலவிருட்சமாய் இன்றும் அனைவர் இதயங்களிலும் வீற்றிருப்பவர் அவர் ஒருவரே.
நடிப்பு, நல்ல இசை ஞானம், இலக்கிய இலக்கணப் புலமை, ஒளிப்பதிவுத் திறன், படத்தொகுப்புப் பணியில் தேர்ச்சி, இயக்கும் திறன் உள்ளிட்ட அனைத்திலும் அவருக்கு நிகர் அவரே.
அதிர்ஷ்டத்தால் உயர்இடம் பிடிக்கவில்லை. பல ஆண்டு போராட்டத்திற்குப் பின் இடம் பிடித்தார். பின் அத்தனை படங்களிலும் தனி இடம் பிடித்தார். அவரது அனைத்து படங்களும் இன்றும் அனைவர் நெஞ்சங்களிலும் கொலுவிருக்கும். இருப்பினும் எனது மனத்தில் இடம் பிடித்த முதல் 25 திரைப்படங்கள்
1. நாடோடி மன்னன்
2. எங்க வீட்டுப் பிள்ளை
3. உலகம் சுற்றும் வாலிபன்
4. பாசம்
5. பெற்றால் தான் பிள்ளையா
6. நாடோடி
7. அன்பே வா
8. நீதிக்குத் தலைவணங்கு
9. ராஜாதேசிங்கு
10. திருடாதே
11.மாட்டுக்கார வேலன்
12. மதுரை வீரன்
13. அடிமைப்பெண்
14. ரிக் ஷாக்காரன்
15. நம்நாடு
16. ஒளிவிளக்கு
17. பறக்கும் பாவை
18. அரசகட்டளை
19. பல்லாண்டு வாழ்க
20. வேட்டைக்காரன்
21. ஆயிரத்தில் ஒருவன்
22. பணம் படைத்தவன்
23. நினைத்ததை முடிப்பவன்
24. பெரிய இடத்துப் பெண்
25. நல்லவன் வாழ்வான்.
சமீப காலம் வரை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் (கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை) எங்கள் ஊரில் குறைந்த பட்சம் ஆண்டுக்கு 30 படங்களுக்குக் குறைவில்லாமல் தொடர்ந்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த திரைப்படங்கள் மக்கள் திலகத்தின் படங்கள் மட்டுமே. அது மட்டுமல்ல. அவர் நடித்த படங்களில் பெரிய பேனரில் வெளிவந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவரால் பெரிய நிலை அடைந்த தயாரிப்பாளர்கள் தான் அதிகம். அவரால் உயர்ந்த தயாரிப்பாளர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், எண்ணில் அடங்காதவர்கள்.
உலக அளவில் ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே எம்.ஜி.ஆர்.
அவரது இடம் யாராலும் எட்ட முடியாத இடம்.
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.

idahihal
27th March 2013, 10:46 PM
http://i47.tinypic.com/wrxf92.jpg
தெலுங்கு தெரிந்தவர்கள் தயவு செய்து மொழிபெயர்த்து உதவவும்.

Richardsof
28th March 2013, 05:49 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள்

இனிய நண்பர் திரு ஜெய்

உலக சினிமா நூற்றாண்டு விழா - மக்கள் திலகத்தின் கலை உலக சாதனைகள் பற்றிய உங்களின் கட்டுரை மிகவும் அருமை .ஒவ்வொரு வரிகளும் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் வைர வரிகள் .
மக்கள் திலகத்தின் புரட்சிகரமான நடிப்பும் , கொள்கை பிடிப்பும் , மக்கள் மனதில் நிலயான இடத்தை பிடித்தும் இன்றும் வாழ்கிறார் என்றால் அது உலகளவில் மக்கள் திலகம் ஒருவரே .

இந்த சாதனை உலக சினிமா நூற்றாண்டு விழா நடை பெறும் நேரத்தில் மக்கள் திலகம் அவர்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் பரிசு .

Richardsof
28th March 2013, 06:19 AM
மக்கள் திலகத்தின் சரித்திர - ராஜா -ராணி -இஸ்லாமிய -கிறிஸ்துவ கதா பாத்திரத்தில் நடித்த மக்கள் திலகத்தின் சிறந்த படங்கள் .
01.மருத நாட்டு இளவரசி
02.மந்திரிகுமாரி
03.சர்வதிகாரி
04.மர்மயோகி
05.ஜெனோவா
06.குலேபகாவலி
07.அலிபாபாவும் 40 திருடர்களும்
08.சக்கரவர்த்தி திருமகள்
09.புதுமைபித்தன்
10.நாடோடி மன்னன்
11.பாக்தாத் திருடன்
12.மன்னாதி மன்னன்
13.அரசிளங்குமரி
14.ராஜாதேசிங்கு
15.காஞ்சித்தலைவன்
16.அரசகட்டளை
17.அடிமை பெண்
18.மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
19.மகாதேவி
20.விக்கிரமாதித்தன்
21.ராஜராஜன்
22.கலை அரசி
23.மதுரைவீரன்
24.ராஜகுமாரி
25.ஆயிரத்தில் ஒருவன்

Richardsof
28th March 2013, 06:28 AM
மக்கள் திலகத்தின் வண்ண படங்களில் சிறந்த படங்கள் .

01.படகோட்டி
02.எங்கவீட்டு பிள்ளை
03.அன்பேவா
04.பறக்கும் பாவை
05.ரகசிய போலீஸ் 115
06.குடியிருந்த கோயில்
07.ஒளிவிளக்கு
08.நம்நாடு
09.மாட்டுக்காரவேலன்
10.என் அண்ணன்
11.தேடிவந்த மாப்பிள்ளை
12.எங்கள் தங்கம்
13.குமரி கோட்டம்
14.ரிக்ஷாக்காரன்
15.நீரும் நெருப்பும்
16.நல்ல நேரம்
17.நான் ஏன் பிறந்தேன்
18.இதயவீணை
19.உலகம் சுற்றும் வாலிபன்
20.உரிமைக்குரல்
21.சிரித்து வாழ வேண்டும்
22.நினைத்தை முடிப்பவன்
23.இதயக்கனி
24.பல்லாண்டு வாழ்க
25.மீனவநண்பன்

Richardsof
28th March 2013, 06:37 AM
மக்கள் திலகத்தின் கருப்பு -வெள்ளை படங்களில் மிக சிறந்த படங்கள் .
தாய்க்கு பின் தாரம்
மலைக்கள்ளன்
நல்லவன் வாழ்வான்
தாய் சொல்லை தட்டாதே
திருடாதே
தாயை காத்த தனயன்
குடும்ப தலைவன்
பாசம்
பணத்தோட்டம்
என்கடமை
தெய்வத் தாய்
வேட்டைக்காரன்
பணக்கார குடும்பம்
பணம் படைத்தவன்
கலங்கரை விளக்கம்
ஆசை முகம்
சந்திரோதயம்
நாடோடி
பெற்றால்தான் பிள்ளையா
விவசாயி
காவல்காரன்
நான் ஆணையிட்டால்
கண்ணன் என் காதலன்
புதிய பூமி
கணவன்
ஒரு தாய் மக்கள்
அன்னமிட்டகை

ujeetotei
28th March 2013, 07:40 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள்

இனிய நண்பர் திரு ஜெய்

உலக சினிமா நூற்றாண்டு விழா - மக்கள் திலகத்தின் கலை உலக சாதனைகள் பற்றிய உங்களின் கட்டுரை மிகவும் அருமை .ஒவ்வொரு வரிகளும் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் வைர வரிகள் .
மக்கள் திலகத்தின் புரட்சிகரமான நடிப்பும் , கொள்கை பிடிப்பும் , மக்கள் மனதில் நிலயான இடத்தை பிடித்தும் இன்றும் வாழ்கிறார் என்றால் அது உலகளவில் மக்கள் திலகம் ஒருவரே .

இந்த சாதனை உலக சினிமா நூற்றாண்டு விழா நடை பெறும் நேரத்தில் மக்கள் திலகம் அவர்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் பரிசு .


உலக சினிமா நூற்றாண்டு விழா

Our beloved Leader who entered movie field in 1936 due to poverty became the King of Kings and he retired the field when the people made him the real King of Kings in Tamil Nadu Politics. In a way MGR did not say good bye to cinema but destiny had another plan for our MGR.

His acting skill (natural acting) he portrayed in Rajakumari 1947 continued till his last film Maduraiyai Meeta Sundarapandian. M.R.Radha once said in an interveiw that MGR is the only actor not copying any world actor and his performance is original.

MGR's portraying dual action, giving a vast difference between two characters such as Enga Veetu Pillai, Neerum Nerupum, Nadodi Mannan, Ninathathi Mudipavan etc. was new concept in those days. His social themes the do gooder, saviour of the poor and the protector of downtrodden belief in egalitarian society (Dravida philosophy) earned him highest position in Tamil film world.

His philosophical songs had tons of life principles. That he followed what he preached.

ujeetotei
28th March 2013, 07:47 AM
Like others I too had a list of MGR's greatest movies.

1. Ayirathil Oruvan
2. Padagotti
3. Petral Than Pillaiya
4. En Thangai
5. Pasam
6. Nam Nadu
7. Nadodi Mannan
8. Adimai Penn
9. Ulagam Sutrum Valiban
10.Engal Veetu Pillai
11.Neerum Nerupum
12.Uzhaikum Karangal
13.Neethiku Thalaivanangu
14.Nadodi
15.Anbay Vaa
16.Oli Vilakku
17.Mattukara Velan
18.Marmayogi
19.Ninathathai Mudipavan
20.Nalla Neram
21.Ithayakani
22.Pallandu Vazhga
23.Thirudathae
24.Rickshawkaran
25.Maduraiyai Meeta Sundarapandian

It is difficult to reduce the number to 25. Hope I did some justice to my choice.

Richardsof
28th March 2013, 08:44 AM
புரட்சி நடிகர் எம்ஜியார்
அவர்கள் நடித்த முதல் படம் [ -இன்ஸ்பெக்டர் வேடம் ]
சதிலீலாவதி வெளியான நாள் இன்று ..

77 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் பேசப்படும்
ஒரே நட்சத்திரம்
மக்கள் திலகம் .
இது உலக சினிமா வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சாதனை .

உலகளவில் பல நாட்டு மொழியில் , பல நட்சத்திரங்கள் பல்வேறு உலக தர படங்களில் நடித்திருந்தாலும் அவர்கள் ஒரு கால கட்டத்திற்கு பிறகு மக்களால் மறக்க பட்டவர்கள் .

இன்றும் மக்களால் போற்றப்படும் மக்கள் திலகமாக வாழ்ந்து வரும் நமது இதய தெய்வம் எம்ஜியார் நடித்த சதிலீலாவதி
வெளியான நாள் இன்று - மறக்க முடியாத நாள் .

siqutacelufuw
28th March 2013, 10:13 AM
It is most unfortunate to omit the name of our beloved God MGR in the World Cinema on the occasion of its Centenary Celebrations.

The contributions made by our beloved God towards Indian Cinema is something enormous.

As has been righty pointed out by our colleague Mr. Vinoth, he was the only actor who had highest number of Fans' Association, which were formed for the social cause to fulfil the requirements of down-trodden people.

This apart, our beloved God MGR is still retain the title of 'COLLECTION KING or COLLECTION EMPEROR', even after his death of 25 years.

No actor in the World, can break this Record since it is proven fact that his films alone are being re-released several times, without any time gap and set every time a new Record.

Though he had acted in 115 films (as compared to other Actors this number is less) as HERO, he maintains the No.1 position in the Tamil Cine Field since 1950. Upto my knowledge, nobody even in the world, created such Record.

Morevover, 90% of his movies out of the said 115, were quite successful. However, the remaining 10% were commercially hit and did not swindle the concerned Film Producers and Distributors. This Statement of fact was openly declared by them.

He was the only ROLE MODEL for the Actor turned out to be Political Leader and ruled the State / country for Mr. Ronald Reagon (the former President of USA and Mr. Arnold Schwarzenegger (the present Governor of California State, USA). Being a Role Model, for the Hollywood Actors, itself is a world achievement.

He was the only actor who conveyed useful messages to the Public thorugh his movies and set an example for others in leading a life with rightousness.

He was the only actor in the World, who utilized the Media effectively.

He is the only actor who still live in the hearts of people.

He was the only HERO who had more than 17 new films on hand, at his 60th year of Age, during the time of his separation from the Cine-field, on account of his assumed office as Chief Minister of a State, duly elected by the people.

He was the only Actor, in the World, who won the election, when he was hospitalized (in the year 1967) and without personal canvassing. This was narrated at that time, with the special heading and quoting as WON FROM THE BED.

He was the only Actor in the World, considered as Best Humanitarian.

Above all, HE IS THE ONLY ACTOR IN THE WORLD WHO HAS REPEATED AUDIENCE ALWAYS. .

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் - ஆதவன் மறைவதில்லை என்கின்ற நமது பொன்மனசெம்மலின் படப் பாடல்தான் இவைகளுக்கெல்லாம் பதில்.

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
28th March 2013, 06:46 PM
கோவை நகரில் மக்கள் திலகத்தின் தொடர் சாதனைகள்

கடந்த வரம் FUN சினிமா அரங்கில் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் படம்

நாளை முதல் கோவை - சாரதா அரங்கில் 2 வது வாரமாக தொடர்கிறது .

http://i50.tinypic.com/zuryj7.jpg

Richardsof
28th March 2013, 07:09 PM
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - பெற்றால்தான் பிள்ளையா

1966 ல் வந்த படம் .
மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய பேட்டியில் ஒரு முறை தான் நடித்த படங்களில் தனக்கு பிடித்த படம்
பெற்றால்தான் பிள்ளையா என்று கூறியிருந்தார் .

உண்மையிலே அப்படம் மக்கள் திலகத்தின் உணர்ச்சிகரமான -இயல்பான -எல்லா பரிமாணங்களிலும் சிறப்பாக நடித்திருப்பார் .
நவரசம் எனப்படும் அத்தனை முக பாவங்களும் இந்த படத்தில் காணலாம் .

என்ன ஒரு சோகம் - ஏக்கம் - கருணை - அன்பு - வீரம் - அத்தனை நடிப்பு காட்டி நம் உள்ளங்களை கொள்ளை அடித்தவர் நமது மக்கள் திலகம் .

ainefal
28th March 2013, 10:49 PM
https://www.youtube.com/watch?v=ir_DlvAT2P8


AAYIRATHIL ORUVAN - 7

ainefal
28th March 2013, 10:50 PM
https://www.youtube.com/watch?v=MRL9PXNcGV8


AAYIRATHIL ORUVAN - 8

ujeetotei
29th March 2013, 07:19 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/marriage_zps95eb7aa9.jpg

Mr.K.Swaminathan's wedding. Mr.Jeppiaar welcoming the Guests. Dr.MGR & Dr.Ma.Po.Si are present. Mr.Swaminathan is the son of Veteran Drama Artiste Mr.Gundu Karupiah and brother of Actor Gundu Kalyanam. He was the manager of AIADMK Party office at Avvai Shanmugham Salai from 1972 to 1989 and thereafter is the Manager of MGR Memorial House in T.Nagar.

Photo provided by Kumar Rajendran.



http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
29th March 2013, 07:22 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zps23e07a60.jpg

Photo from Kumar Rajendran


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
29th March 2013, 07:26 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/us_zpsda9e830c.jpg

MGR's US visit in 1986.

image provided by Kumar Rajendran

ujeetotei
29th March 2013, 07:31 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgr_anna_zps59391b36.jpg

A very rare photo of MGR speaking while his Mentor watching.

Photo provided by Kumar Rajendran



http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
29th March 2013, 07:36 AM
Rare images continues.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgrdmk_zps85ba28c0.jpg

MGR speaking in a DMK meeting.



http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
29th March 2013, 07:37 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgrmaran_zpsd1c88d33.jpg

ujeetotei
29th March 2013, 07:37 AM
Image provided by Kumar Rajendran

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgrdis_zpsd3f99da7.jpg

MGR free dispensary

ujeetotei
29th March 2013, 07:43 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/3_zps38633c4e.jpg

Creative work.

ainefal
29th March 2013, 03:40 PM
http://www.dailymotion.com/video/xu075s_dvd-rip-ninaithathai-mudippavan-1974-tamil-movie_shortfilms#.UVVmjBdnpKg

NINAITHADHAI MUDIPAVAN - 1



http://www.dailymotion.com/video/xu076d_dvd-rip-ninaithathai-mudippavan-1974-tamil-movie-0_shortfilms#.UVVoBRdnpKg


NINAITHADHAI MUDIPAVAN - 2



http://www.dailymotion.com/video/xu09xo_dvd-rip-ninaithathai-mudippavan-1974-tamil-movie-1_shortfilms#.UVVoRxdnpKg


NINAITHADHAI MUDIPAVAN - 3

ainefal
29th March 2013, 03:43 PM
http://www.dailymotion.com/video/xu0boj_dvd-rip-thozhilali-1974-tamil-movie_shortfilms#.UVVoiRdnpKg


THOZHILALI - 1


http://www.dailymotion.com/video/xu0c5j_dvd-rip-thozhilali-1974-tamil-movie-0_shortfilms#.UVVotRdnpKg

THOZHILALI - 2

http://www.dailymotion.com/video/xu0cob_dvd-rip-thozhilali-1974-tamil-movie-1_shortfilms#.UVVo8BdnpKg

THOZHILALI - 3

ainefal
29th March 2013, 03:47 PM
http://www.dailymotion.com/video/xu0egm_dvd-rip-vivasahaye-tamil-movie_shortfilms#.UVVpURdnpKg


VIVASAYEE - 1

http://www.dailymotion.com/user/namkumari/1#video=xu0evq


VIVASAYEE - 2


http://www.dailymotion.com/user/namkumari/1#video=xu0f5t


VIVASAYEE - 3

ainefal
29th March 2013, 04:10 PM
http://www.dailymotion.com/user/namkumari/30#video=xs9tkb

KODUTHU VAITHAVAL - 1


http://www.dailymotion.com/user/namkumari/30#video=xs9tkg

KODUTHU VAITHAVAL - 2


http://www.dailymotion.com/user/namkumari/30#video=xs9tr0

KODUTHU VAITHAVAL -3

ujeetotei
29th March 2013, 10:16 PM
http://www.dailymotion.com/video/xu075s_dvd-rip-ninaithathai-mudippavan-1974-tamil-movie_shortfilms#.UVVmjBdnpKg

NINAITHADHAI MUDIPAVAN - 1



http://www.dailymotion.com/video/xu076d_dvd-rip-ninaithathai-mudippavan-1974-tamil-movie-0_shortfilms#.UVVoBRdnpKg


NINAITHADHAI MUDIPAVAN - 2



http://www.dailymotion.com/video/xu09xo_dvd-rip-ninaithathai-mudippavan-1974-tamil-movie-1_shortfilms#.UVVoRxdnpKg


NINAITHADHAI MUDIPAVAN - 3


Sailesh Sir thanks for uploading Ninaithathai Mudipavan dialogs.

Hereafter you are known as Punch Basu.

ujeetotei
29th March 2013, 11:07 PM
தலைவர் டி.ஆர்.ராமண்ணா இருவரின் உழைப்பில் வந்த படங்கள்.

http://www.mgrroop.blogspot.in/2013/03/directors-iv.html


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
29th March 2013, 11:42 PM
Punch dialog from Marmayogi.

http://www.mgrroop.blogspot.in/2010/05/punch-dialogs-ii.html

ainefal
30th March 2013, 01:44 AM
http://i46.tinypic.com/16b0gg2.jpg


CONGRATS MGR ROOP SIR 700..800

Richardsof
30th March 2013, 05:29 AM
இனிய நண்பர் ரூப் சார்

மக்கள் திலகம் திரியில் உங்களின் அருமையான 700 பதிவுகள் கடந்தமைக்கு மிக்க நன்றி .

1962 ல் வந்த மக்கள் திலகம் அவர்களின் பாசம் - சென்னை - paragon தியேட்டர் விளம்பரம் அருமை .


http://i47.tinypic.com/ne7ol.jpg

ujeetotei
30th March 2013, 10:38 AM
இனிய நண்பர் ரூப் சார்

மக்கள் திலகம் திரியில் உங்களின் அருமையான 700 பதிவுகள் கடந்தமைக்கு மிக்க நன்றி .

1962 ல் வந்த மக்கள் திலகம் அவர்களின் பாசம் - சென்னை - paragon தியேட்டர் விளம்பரம் அருமை .


http://i47.tinypic.com/ne7ol.jpg

Thank you for the wishes Vinod sir and especially for the creative wishes for Sailesh Sir.

Thanks Vinod Sir about Paragon theater info of Pasam.

Richardsof
30th March 2013, 10:39 AM
எனக்கு ஏன் எம்ஜியாரின் நடிப்பு பிடிக்கும்

சினிமா என்ற ஒரு கற்பனை உலகில் நான் பலதரப்பட்ட நடிகர்களின் அற்புதமான பல்வேறு நடிப்பு திறன்களை பார்த்து வியந்து இருக்கிறேன் .

என்னுடைய பார்வையில் தமிழ் நடிகர் திரு எம்ஜியார் அவர்களின்

30 வயதில் கதாநாயகன் - ராஜகுமாரி

37 வயதில் மலைக்கள்ளன் படத்தில் சிறப்பான நடிப்பு

41 வயதில் நாடே போற்றிய நாடோடி மன்னன் - இமாலய புகழ்

47 வயதில் எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் சூப்பர் ஹிட்

50 வயதில் மரணத்தை வென்று - குரல் பாதிக்க பட்டு காவல்காரன் - மாபெரும் வெற்றி

50 வயதுக்கு பிறகு

ஒளிவிளக்கு

குடியிருந்த கோயில்

ரகசிய போலீஸ் 115

அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - இதயக்கனி

நீதிக்குதலை வணங்கு - மீனவநண்பன் - மதுரையை மீட்டசுந்தரபாண்டியன் வந்த படங்கள் ஒரு சரித்திர சாதனை படைத்தது .


இனி நடிப்புக்கு வருகிறேன்


நாடகத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் நடிப்பு துறையில் ஒருவகையில் உதவியது .

அவரது நடிப்பில் மிளிரும்

இயற்கையான முக பாவங்கள்

குரலில் சம சீரான வெண் குரல்

பல மாறுபட்ட வித்தியாசமான நடிப்பு .

எல்லாவற்றிகும் மேலாக

ரசிகனை ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட

அவரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்

short & sweet காதல் - வீரம் - - காட்சிகள்

ரசிகனை 3 மணி நேரம் மகிழ்ச்ச்சியில் திளைக்க வைத்து மீண்டும் மீண்டும் அவரின் படத்தை பார்க்க வாய்த்த சாதுரியம் .

இந்த நிலையான புகழ் பெற்ற முதல் நடிகர் எம்ஜியார்
.
Uncomparabale hero in the workd flim history

ujeetotei
30th March 2013, 10:55 AM
A creative art work by Karupaiah Ranjith.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zps34ecdff8.jpg

siqutacelufuw
30th March 2013, 11:00 AM
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செயிது விடல் - தொடர் பகுதி : 6
----------------------------------------------------------------------------------------------------------------------


ஏற்கனவே இந்த தலைப்பில் - நடிகை டி.வி. குமுதினி, எல்லிஸ் ஆர். டங்கன், கண்ணதாசன், நடிகை பானுமதி, நடிகர் சந்திரபாபு ஆகியோரை குறிப்பிட்டு எழுதியதை தொடர்ந்து, ஒரு பத்திரிகை உதவி ஆசிரியர் வாழ்வில் நடந்த சம்பவத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் அவர். அவருக்கு நெருக்கமாக விளங்கி வந்த நடிகரைப் பற்றி அவர் சார்ந்திருந்த பத்திரிகையில் அதிகமாக செய்திகளையும் அவரது படங்களையும் வெளியிட்டு வந்தார். அதே சமயம் நமது எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களை வெளியிடா விட்டாலும், அவருக்கு உரிய அளவில் கிடைக்க வேண்டிய விளம்பரத்தைக் கூட தராமல் இருந்தார். இது தவிர, மற்றபடி அந்த உதவி ஆசிறியரின் உயர் பண்புகள் பழகும் தன்மை காரணமாக, நமது பொன்மனச்செம்மல் அவர்கள் இதைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.

அந்த உதவி ஆசிரியரின் சகோதரிக்கு திருமணம் ஏற்பாடாகீயது. திருமணத்துக்கு நேரில் சென்று எம்.ஜி. ஆர். அவர்களை அழைக்க அவர் தயங்கினார். அழைப்பிதழை பொம்மை மாத இதழ் ஆசிரியர் சாரதி அவர்களிடம் அளித்து, அதை மக்கள் திலகத்திடம் எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொம்மை சாரதி அவர்களும் அந்த அழைப்பிதழை புரட்சித்தலைவரிடம் தந்தார். எப்போதும் போல சகஜமாக நம் வரலாற்று நாயகனும் வாங்கிக் கொண்டார்

திருமணம் நடைபெறவிருந்த முன் தினம் எம். ஜி. ஆர். அவர்களின் அலுவகத்திலிருந்து பொம்மை சாரதி அவர்களுக்கு அழைப்பு வந்தது. அவரும் போனார். எம். ஜி. ஆர். அவர்களின் அலுவக மேனேஜர் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் பொம்மை சாரதி அவர்களிடம் ஒரு கவரைத் தந்து, "அதனை அந்தப் பத்திரிகை உதவி ஆசிரியரிடம் சேர்த்து விடும்படி எம்.ஜி.ஆர். அவர்கள் உங்களிடம் சொல்லச் சொன்னார்" என்று கூறினார்

திருமணத்துக்கு சென்ற பொம்மை சாரதி அவர்கள்,அந்த பத்திரிக்கை நண்பரிடம், "எம்.ஜி.ஆர். அவர்கள் உங்களிடம் தரச் சொன்னார்கள்"என்று அந்தக் கவரை கொடுத்தார். பிரித்துப் பார்த்த அந்த நண்பர் அப்படியே திகைத்துப் போய் விட்டார். அவர் சிறிதும் எதிர்பாராத நிலையில் ஒரு பெரிய தொகை அதில் இருந்தது.

இதில் குறிப்பிடத் தக்க ஒரு விஷயம், அந்தப் பத்திரிக்கை நண்பரின் நெருங்கிய நடிகராக விளங்கியவரிடமிருந்து, ஒரு வாழ்த்து செய்தி கூட வரவில்லை. இதையும், அந்த பத்திரிக்கை நண்பர் தன்னிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார் என்று பொம்மை சாரதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

================================================== ==========================================
பொம்மை - மாத இதழ் ஆசிரியர் சாரதி அவர்கள் எழுதிய "வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்" என்ற புத்தகத்திலிருந்து ஒரு ஆதார தகவல்

அந்த பிரபல நடிகர் யார் என்று குறிப்பிடாமல் வாசகர்களின் யூகத்துக்கு விட்டு விட்டார், பொம்மை சாரதி அவர்கள்.

================================================== ==========================================

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
30th March 2013, 11:09 AM
CONGRATULATIONS ROOP KUMAR SIR

for having crossed 700 Postings.

http://i46.tinypic.com/rw315j.jpg

Ever yours

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
30th March 2013, 12:35 PM
EVEN TODAY - NEW TAMIL MOVIES ADVERTISEMENT MAKKAL THILAGAM PIC AND MATTER IS REQUIRED TO THE PRODUCERS TO PROMOTE THEIR BUSINESS

DIRECTOR AND ACTOR RAJAKUMARAN IN HIS OWN MOVIE ''THIRUMATHI TAMIZH''ADVT CAME IN DAILYTHANDHI TODAY .

http://i47.tinypic.com/2hrl7r5.jpg

Richardsof
30th March 2013, 04:33 PM
Mgr in thalaivan - 1970

அறிவுக்கு வேலை கொடு ..

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

Richardsof
30th March 2013, 04:37 PM
http://youtu.be/KqFQbzCfSl8

Richardsof
30th March 2013, 08:29 PM
முரசு தொலைக்காட்சியில் நாளை இரவு 7.30 மணிக்கு
மக்கள் திலகம் நடித்த

தாய்க்குத்தலை மகன் ஒளிபரப்ப உள்ளது .

Richardsof
30th March 2013, 08:41 PM
உலக திரைப்பட வரலாற்றில்

இந்திய திரைப்பட வரலாற்றில்

முதல் முறையாக உலக புகழ் பெற்ற

மக்கள் திலகத்தின் திரைப்பட 134 படங்களில் தோன்றிய

ஒவ்வொரு படத்திலும் இடம் பெற்ற

மக்கள் திலகத்தின்
http://i49.tinypic.com/16bd65y.jpg
அழகு முகம்

எல்லா நவரசமும் நிறைந்த படக்காட்சிகள்

பக்கத்திற்கு பக்கம்

ஈடு இணையில்லாத கலை வேந்தனின்

உலக அளவில் பெயர் பெற்ற பல நடிகர்கள் அனைவரையும் மிஞ்சி

ஒரு உன்னதமான நடிப்பு வேந்தரின் பட ஆல்பம்

யாருமே செய்ய நினைக்காத

இந்த அரிய படைப்பினை நமக்கு விரைவில் கண்ணுக்கும் ..... மனதுக்கும்

ainefal
30th March 2013, 10:03 PM
https://www.youtube.com/watch?v=WP6CB5VQxR8


AAYIRATHIL ORUVAN - 9

ainefal
30th March 2013, 10:04 PM
https://www.youtube.com/watch?v=3r0Ka4-rupM


AAYIRATHIL ORUVAN - 10

ainefal
30th March 2013, 10:04 PM
https://www.youtube.com/watch?v=6to5qCaA-No


AAYIRATHIL ORUVAN - 11

idahihal
30th March 2013, 10:32 PM
http://i45.tinypic.com/259l6hc.jpg

idahihal
30th March 2013, 10:34 PM
http://i50.tinypic.com/y2zi1.jpg

idahihal
30th March 2013, 10:35 PM
http://i45.tinypic.com/2eumu4m.jpg

idahihal
30th March 2013, 10:46 PM
http://i45.tinypic.com/dnikpj.gif
http://i50.tinypic.com/5b3gwh.jpg

http://i45.tinypic.com/dnikpj.gif

idahihal
30th March 2013, 10:56 PM
http://i45.tinypic.com/npo2lt.jpg

idahihal
30th March 2013, 10:59 PM
http://i48.tinypic.com/w82wic.jpg
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தினை இயக்கும் எம்.ஜி.ஆர்.

idahihal
30th March 2013, 11:00 PM
http://i49.tinypic.com/2m83vag.jpg

idahihal
30th March 2013, 11:02 PM
http://i46.tinypic.com/21eq9zq.jpg

idahihal
30th March 2013, 11:03 PM
http://i49.tinypic.com/2iia6b4.jpg

idahihal
30th March 2013, 11:04 PM
http://i46.tinypic.com/106wjts.jpg

idahihal
30th March 2013, 11:05 PM
http://i45.tinypic.com/k9x3id.jpg

idahihal
30th March 2013, 11:07 PM
http://i50.tinypic.com/25zsby1.jpg
ஒளிவிளக்கு படத்தில் மக்கள் திலகம்

idahihal
30th March 2013, 11:09 PM
http://i48.tinypic.com/3149qx1.jpg

idahihal
30th March 2013, 11:12 PM
http://i45.tinypic.com/slodpv.jpg

idahihal
30th March 2013, 11:16 PM
http://i48.tinypic.com/awvqjp.jpg
நான் ஏன் பிறந்தேன் படத்தில் எம்.ஜி.ஆர்.

idahihal
30th March 2013, 11:18 PM
http://i50.tinypic.com/148duhj.jpg
பிலிம்பேர் பரிசளிப்பு விழாவில் எம்.ஜி.ஆர்.

idahihal
30th March 2013, 11:44 PM
http://i45.tinypic.com/9a06td.jpg

idahihal
30th March 2013, 11:46 PM
http://i50.tinypic.com/21jbn0x.jpg

idahihal
30th March 2013, 11:49 PM
http://i48.tinypic.com/21ls9aa.jpg

idahihal
30th March 2013, 11:53 PM
http://i49.tinypic.com/27yyp5.jpg

Richardsof
31st March 2013, 06:49 AM
மக்கள் திலகம் திரியில் ஆயிரம் பதிவுகள் கடந்த நண்பர்கள் வரிசையில் [ திருப்பூர் ரவிச்சந்திரன் சார் , வேலூர் ராமமூர்த்தி சார் ] இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்கள் 1000 பதிவுகள் வெற்றிகரமாக கடந்து திரியில் பல மக்கள் திலகத்தின் நிழற் படங்கள்செய்திகள் வீடியோ என்று பதிவிட்டு

விரைவில் மக்கள் திலகம் MGR PART- 5 திரியினை துவக்க இருக்கும் ஜெய் சார்

உங்களுக்கு எல்லோர் சார்பாக வாழ்த்துக்கள் .


http://i46.tinypic.com/2s15eg4.gif

RAGHAVENDRA
31st March 2013, 11:20 AM
Dear Jaishankar
My hearty congratulations on your landmark number of postings dedicated to M.G.R. Keep the pace and wish you achieve more such landmarks.

idahihal
31st March 2013, 01:20 PM
வாழ்த்திய அன்பு உள்ளங்கள் திரு. வினோத் மற்றும் திரு.ராகவேந்திரா ஆகியோருக்கு நன்றிகள்.

idahihal
31st March 2013, 01:38 PM
http://i46.tinypic.com/m7838i.jpg

idahihal
31st March 2013, 01:42 PM
உலக திரைப்பட வரலாற்றில்

இந்திய திரைப்பட வரலாற்றில்

முதல் முறையாக உலக புகழ் பெற்ற

மக்கள் திலகத்தின் திரைப்பட 134 படங்களில் தோன்றிய

ஒவ்வொரு படத்திலும் இடம் பெற்ற

மக்கள் திலகத்தின்
http://i49.tinypic.com/16bd65y.jpg
அழகு முகம்

எல்லா நவரசமும் நிறைந்த படக்காட்சிகள்

பக்கத்திற்கு பக்கம்

ஈடு இணையில்லாத கலை வேந்தனின்

உலக அளவில் பெயர் பெற்ற பல நடிகர்கள் அனைவரையும் மிஞ்சி

ஒரு உன்னதமான நடிப்பு வேந்தரின் பட ஆல்பம்

யாருமே செய்ய நினைக்காத

இந்த அரிய படைப்பினை நமக்கு விரைவில் கண்ணுக்கும் ..... மனதுக்கும்
வினோத் சார்,
தங்களது அருமையான புத்தக வெளியீட்டை அதீத ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இன்றே அந்த நன்னாள் வந்துவிடாதா?

idahihal
31st March 2013, 01:47 PM
http://i46.tinypic.com/2lvn2uw.jpg
தரணி போற்றும் தனிப்பிறவி

idahihal
31st March 2013, 01:51 PM
http://i50.tinypic.com/2hhg66c.jpg

idahihal
31st March 2013, 01:52 PM
http://i47.tinypic.com/6xt4kz.jpg

idahihal
31st March 2013, 01:55 PM
http://i47.tinypic.com/2hnoscg.jpg

idahihal
31st March 2013, 02:20 PM
http://i49.tinypic.com/206ewlh.jpg
http://i45.tinypic.com/2gy80hy.jpg
http://i45.tinypic.com/35hq078.jpg
மேலே உள்ள கட்டுரை எனக்காக ஏற்கனவே வினோத் சார் அவர்களால் இத்திரியில் பதிவு செய்யப்பட்டதுதான். இருப்பினும் இதன் தொடர்ச்சியாக இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் எழுதிய கடிதம் குமுதம் வாரஇதழில் பிரசுரமானது. அப்போது அதனை பதிவு செய்ய இயலவில்லை. இப்போது பதிவு செய்கிறேன். பார்வைக்காக மீண்டும் அக்கடிதம் இங்கே.
http://i48.tinypic.com/2yknc5l.jpg

Richardsof
31st March 2013, 03:26 PM
இன்று ஜெயா தொலைக்காட்சியில் ஆட்டோகிராப் நிகழ்ச்சியில் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பேட்டியில் மக்கள் திலகத்தை பற்றி கூறிய கருத்துக்கள் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது .
எத்தனை பெரிய மனம் படைத்த வள்ளல் .
1959ல் நடைப்பெற்ற சம்பவங்களை அருமையாக விவரித்தார் . மக்கள் திலகத்தின் மனித நேயம் பற்றி அறியும் போது உண்மையிலேயே அவர் ஒரு தனிப்பிறவி என்பது நிருபணமாகிறது .

அடுத்த வாரமும் மக்கள் திலகத்தின் நினைவுகள் தொடரும் .

Richardsof
31st March 2013, 03:29 PM
ஏப்ரல் மாதத்தில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
01. மாய மசீந்திரா -1939
02. தமிழ் அறியும் பெருமாள் -1942
03. ராஜகுமாரி -1947
04. மருத நாட்டு இளவரசி -1950
05. குமாரி -1952
06. பணக்காரி - 1954
07. மதுரை வீரன் - 1956
08. ராஜராஜன் - 1957
09. பாக்தாத் திருடன் -1960
10. தாயை காத்த தனயன் -1962
11. கலை அரசி - 1963
12. பணக்கார குடும்பம் -1964
13. நாடோடி -1966
14. கண்ணன் என் காதலன் -1968
15. ராமன் தேடிய சீதை - 1972.

Richardsof
31st March 2013, 04:09 PM
மக்கள் திலகம் படங்கள் - ஒரு கண்ணோட்டம் . என்னுடைய பார்வையில் .............

மக்கள் திலகம் எம்ஜியார் கதாநாயகனாக நடித்த படங்கள் -115

மக்கள் திலகத்தின் சிறந்த படம் - நாடோடிமன்னன் -1958

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு படம் - பெற்றால்தான் பிள்ளையா -1966

மக்கள் திலகத்தின் சிறந்த பொழுது போக்கு படம் - அன்பே வா -1966

மக்கள் திலகத்தின் சிறந்த நகைச்சுவை படம் - சபாஷ் மாப்பிளே -1961

மக்கள் திலகத்தின் சிறந்த சரித்திரப்படம் - மர்மயோகி -1951

மக்கள் திலகத்தின் சிறந்த சமூக படம் - திருடாதே -1961

மக்கள் திலகத்தின் சிறந்த இரட்டைவேட சிறப்பு படம் - எங்கவீட்டு பிள்ளை - 1965

மக்கள் திலகத்தின் சிறந்த துப்பறியும் படம் - ரகசிய போலீஸ் 115. -1968

மக்கள் திலகத்தின் சிறந்த தேசபக்தி படம் - நம்நாடு -1969

மக்கள் திலகத்தின் சிறந்த இஸ்லாமிய காப்பியம் - அலிபாபாவும் 40 திருடர்களும்

மக்கள் திலகத்தின் சிறந்த ராஜ -ராணி படம் - சக்ரவர்த்தி திருமகள் -1957

http://i47.tinypic.com/2rntvu1.jpg

மக்கள் திலகத்தின் சிறந்த பிரமாண்டமான படம் - உலகம் சுற்றும் வாலிபன் -1973

மக்கள் திலகத்தின் சிறந்த காதல் காவியம் - பணக்கார குடும்பம் -1964

மக்கள் திலகத்தின் சிறந்த கௌ பாய் படம் - வேட்டைக்காரன் -1964

மக்கள் திலகத்தின் சிறந்த கற்பனை காவியம் - அடிமைப்பெண் -1969

மக்கள் திலகத்தின் சிறந்த நாவல் காவியம் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978

மக்கள் திலகத்தின் சிறந்த நடிகருக்கான விருது தந்த படம் - ரிக்ஷாக்காரன் -1971

மக்கள் திலகத்தின் சிறந்த ஜனாதிபதி விருது தந்த படம் - மலைக்கள்ளன் -1954

மக்கள் திலகத்தின் சிறந்த மேலைநாட்டு படம் போல் வந்த படம் - ஆயிரத்தில் ஒருவன் -1965

மக்கள் திலகத்தின் சிறந்த காதல் கீதங்கள் - ராமன் தேடிய சீதை - 1972

மக்கள் திலகத்தின் சிறந்த சண்டை காட்சிகள் - நீரும் நெருப்பும் -1971

மக்கள் திலகத்தின் சிறந்த குழந்தைகள் படம் - நல்ல நேரம் -1972

மக்கள் திலகத்தின் சிறந்த கருப்பு வெள்ளை படம் - அரசகட்டளை -1967

மக்கள் திலகத்தின் சிறந்த வண்ணப்படம் - ஒளிவிளக்கு -1968

மக்கள் திலகத்தின் படங்களை பார்க்கும்போது கிடைக்கும் ஒரு புத்துணர்வு

மக்கள் திலகத்தின் பாடல்கள் - நடிப்பு பார்க்கும் போது கிடைக்கும் ஆனந்தம்

உலகில் எந்த ஒரு நடிகராலும் , வேற்று மொழி யாலும் தர முடியாது .


நண்பர்களே

உங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் .

ujeetotei
31st March 2013, 07:13 PM
http://i49.tinypic.com/206ewlh.jpg
http://i45.tinypic.com/2gy80hy.jpg
http://i45.tinypic.com/35hq078.jpg
மேலே உள்ள கட்டுரை எனக்காக ஏற்கனவே வினோத் சார் அவர்களால் இத்திரியில் பதிவு செய்யப்பட்டதுதான். இருப்பினும் இதன் தொடர்ச்சியாக இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் எழுதிய கடிதம் குமுதம் வாரஇதழில் பிரசுரமானது. அப்போது அதனை பதிவு செய்ய இயலவில்லை. இப்போது பதிவு செய்கிறேன். பார்வைக்காக மீண்டும் அக்கடிதம் இங்கே.
http://i48.tinypic.com/2yknc5l.jpg

நன்றி ஜெய்சங்கர். இன்று இந்த கடிதத்தை தான் வலைப்பூவில் போடலாம் என்று இருந்தேன். நீங்கள் முன்னதாக பதிவு செய்து விட்டீர்கள்.

ujeetotei
31st March 2013, 07:14 PM
தலைவரை பற்றி கவிஞர் முத்துலிங்கம்.

எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப் போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா?''


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
31st March 2013, 08:38 PM
எங்களை சந்திக்க போன வருடம் சிங்கப்பூர் வாழும் திரு.ஸ்ரீதர் அவர்கள் வந்திருந்தார். நாங்கள் என்றால் (எம்.ஜி.சி.பி.பிரதீப், மணிவண்ணன், பி.எஸ்.ராஜ்) நானும் அவரிடம் உரையாடினோம். அங்கே கலை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். சென்ற வருடம் 25வது நினைவு நாள் முன்னிட்டு ஒரு புத்தகமும் வெளியிட போவதாக தெரிவித்தார். அதற்காக தலைவரின் சில படங்களை தேர்வு செய்யவும் இந்தியா வந்திருந்தார்.

நமது தலைவரை 1970களில் சந்தித்து இருக்கிறார். உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு சமயம். இவரும் இவருடைய சில நண்பர்களும் தலைவரை சந்தித்த போது அனைவரிடமும் நலம் விசாரித்து இவர்களின் நோக்கம் பற்றியும் தெரிந்து கொள்கிறார்.

தன்னுடைய நண்பர் இந்தியா வந்து ஒரு கலை நிகழ்ச்சி நடத்த போவதாக சொல்ல என்ன நிகழ்ச்சி என்று திருப்பி கேட்டு இருக்கிறார் தலைவர் அதற்கு அவர் நண்பர் டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸ் போல நாங்கள் பாட இருக்கிறோம் என்று பெருமையாக சொல்ல அதற்கு தலைவர் சிரித்து, இவர்களை போல பாட நீங்கள் ஏன் இத்தனை தூரம் வர வேண்டும் இவர்கள் போல பாட இவர்களே இருக்க நீங்கள் ஏன் பாட வேண்டும்? அதற்கு பதிலாக நாங்கள் (தமிழ்நாட்டில்) பார்க்காத வற்றை நீங்கள் உங்கள் நிகழ்ச்சியில் காண்பித்தால் எங்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் நல்லது என்றார். தலைவர் எப்படி சிந்தித்து இருக்கிறார் பாருங்கள்.


திரு.ஸ்ரீதர் அவர்கள் அதை குறிப்பிட்டு எப்படி யோசிக்கிறார் பாருங்கள் அவரை போல ஒருவர் இனி பிறக்க போவதில்லை என்றார்.

போன முறை போட்ட புத்தகத்தை காட்டினார். என்ன வேடிக்கை என்றால்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/marmayogi_mgr_zpsf760b8ed.jpg


இந்த படம் தான் அட்டை படத்தில் இருந்தது அதிலுள்ள srimgr.com water mark கூட அழிக்கபடாமல் அட்டையில் போட்டு இருந்தார்கள்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ainefal
31st March 2013, 09:08 PM
http://i48.tinypic.com/296epoz.jpg


congrats Jaisankar Sir on reaching the milestone

idahihal
31st March 2013, 09:20 PM
மக்கள் திலகம் பற்றி மற்றுமொரு வலைத்தளம்
http://www.actormgr.blogspot.in

ainefal
31st March 2013, 10:07 PM
http://www.youtube.com/watch?v=5QG8zr23tWw&feature=youtu.be


AAYIRATHIL ORUVAN - 12

ainefal
31st March 2013, 10:20 PM
http://www.youtube.com/watch?v=FUB_Mo-r-14&feature=youtu.be


AAYIRATHIL ORUVAN - 13

ujeetotei
31st March 2013, 10:29 PM
Congrats Jaishankar on completing 1000 posts with predominant posts containing rare images of our Thalaivar.

Richardsof
1st April 2013, 05:49 AM
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டு பரிசு .


14.4.2013

பெங்களூர் நகரில்

மக்கள் திலகத்தின் மகத்தான நடிப்பில் உருவான 134 படங்களிளின்

பல தரப்பட்ட நடிப்பின் புகைப்படங்கள் அடங்கிய நூல் பெட்டகம்

உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக இந்த புத்தகம்

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் ஒன்றுகூடும் அன்று

''மக்கள் திலகம் -திரைக் களஞ்சியம் '' வெளியீட்டு விழா .

பரந்த மனம் படைத்த படைப்பாளி -
பார் போற்றும் பாசமலரின் -ஒரு மலர்
அந்த மலர் தொடுத்த புகழ் மாலை
மணம் பரப்பும் வாசமிகு மக்கள் திலகம் தோட்டம் .
அந்த மலருக்கு -
தென்றலாக
நன்றி கூற வார்த்தையில்லை .

நட்புடன்
வினோத்

siqutacelufuw
1st April 2013, 06:14 PM
அரிய புகைப்படங்களை உள்ளடக்கி 1000 பதிவுகளை மேற்கொண்டு வெற்றி நடை போடும் அன்பு நண்பர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்


http://i48.tinypic.com/k9evkp.jpg

அன்புடன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்

எங்கள் இறைவன்

siqutacelufuw
1st April 2013, 07:19 PM
மக்கள் திலகத்தின் அன்பர்கள் ஆனந்த கொண்டாட்டம் :

சென்ற வாரம், கோவை fun cinemas complex ல், இரவு காட்சியில் மட்டும் திரையிடப்பட்ட நமது பொன்மனசெம்மலின் "நாடோடி மன்னன்" - 7 காட்சிகளின் மொத்த வசூல் ரூபாய் 60,000/-.

இணைந்த 2வது வாரமாக, 800 இருக்கைகள் கொண்ட கோவை சாரதா அரங்கில் நேற்றைய தினம் (31-03-13), அரங்கு நிறைந்து,
பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ticket கிடைக்காமல் திரும்பி சென்றனர்..

கோவை மாநகரில், சாரதா அரங்கில் கடந்த வெள்ளி முதல்
(29-03-13) திரையிடப்பட்டு, இன்று (01-04-13) பகல் காட்சியுடன், ரூபாய் 1,00,000 வசூல் செய்து தமிழ் திரை உலகில் ஒரு புதிய வரலாற்று சாதனை
நிகழ்த்தியுள்ளார் நம் புரட்சி தலைவர்.

"நாடோடி மன்னன்" இடைவெளியின்றி, திரையிடபட்டு மிகப் பெரிய வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. இந்த மகத்தான வெற்றியை ஈட்டு தந்திருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்றும் நிரந்தர வசூல் பேரரசர் நமது அன்புக்குரிய எம். ஜி. ஆர். அவர்கள்தான்.

http://i50.tinypic.com/hu3mth.jpg


கோவையிலிருந்து இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்ட இனிய நண்பர்கள் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் மற்றும் திரு. வி.பி. ஹரிதாஸ் அவர்களுக்கு, தமிழ் நாடு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் (சென்னை) சார்பில் நன்றி.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
1st April 2013, 08:07 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் - கோவை நகர சாதனைகள் செய்திகள் அருமை .

7 காட்சிகளில் ரூ 60,000 மற்றும் சாரதா அரங்கில் 1 லட்சம் மேல் வசூலாகி இருப்பது சாதனை .

55 ஆண்டுகளாக நாடோடிமன்னன் வெற்றி பவனி - சரித்திர சாதனை .

நன்றி செல்வகுமார் சார்

Richardsof
1st April 2013, 08:20 PM
மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் - மதுரை நகரில்

மதுரை - ஜீவா அரங்கில் தினசரி 3 காட்சிகள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .

கடந்த வாரம் இதே அரங்கில் அடிமைப்பெண் ஓடியது .

Scottkaz
1st April 2013, 08:32 PM
http://i45.tinypic.com/23hx8jk.jpg

ainefal
1st April 2013, 10:14 PM
https://www.youtube.com/watch?v=boZcocgsoV4


AAYIRATHIL ORUVAN - 14

ainefal
1st April 2013, 10:15 PM
https://www.youtube.com/watch?v=l2G6_jwEbP0


AAYIRATHIL ORUVAN - 15

ainefal
1st April 2013, 10:57 PM
https://www.youtube.com/watch?v=jV04hYFjQ80


AAYIRATHIL ORUVAN - 16

ainefal
1st April 2013, 11:27 PM
http://www.youtube.com/watch?v=d9BHw2k6Fi0&feature=youtu.be


AAYIRATHIL ORUVAN - 17

ainefal
2nd April 2013, 12:05 AM
http://i49.tinypic.com/v45pqc.jpg


Thanks to Mr. Madakkulam Prabhakaran

Richardsof
2nd April 2013, 05:43 AM
மக்கள் திலகத்தின் நிர்வாக திறமையினை புகழ்ந்து ஆனந்த விகடனின் வந்த தலையங்கத்தை பதிவிட்ட திரு சைலேஷ் அவர்களுக்கு நன்றி .
அரசியல் நிர்வாகத்தில் எந்த ஒரு மாநில முதல்வரும் செய்ய முடியாத பல புரட்சிகரமான திட்டங்களையும் , அன்றாட நிர்வாக பிரச்ச்ச்னைகளை தீர்த்தவிதம் மிகவும் பாராட்டுக்குரியது .

அரசியல் - சினிமா இரண்டு துறைகளிலும் மக்கள் திலகம் கையாண்ட விதம் உலகில் எந்த ஒரு மனிதரும் சாதிக்க முடியாத சாதனை யாகும் .

Richardsof
2nd April 2013, 05:50 AM
மக்கள் திலகம் நடித்த மருத நாட்டு இளவரசி இன்று 2.4.2013 63வது ஆண்டு உதயம் .

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பிலும் சண்டை காட்சிகளும் நிறைந்த படம் .
ராஜகுமாரி படத்திற்கு பின் இந்த படம் அவருக்கு பெயரையும் புகழையும் தந்த படம்

Richardsof
2nd April 2013, 06:01 AM
1958 நாடோடிமன்னன் திரைப்படத்திலே தன்னுடைய அரசியல் நிலையை அறிவித்த புரட்சி நடிகர்
1977 தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் மிக சிறந்த நிர்வாகத்தை தந்த புரட்சித்தலைவர்
http://youtu.be/FOQad32D26U

ujeetotei
2nd April 2013, 07:59 AM
http://i49.tinypic.com/v45pqc.jpg


Thanks to Mr. Madakkulam Prabhakaran

Thank you Sailesh Sir for uploading this article.

Richardsof
2nd April 2013, 10:45 AM
AVM and Gemini were two of the most prolific producers turning out social drama in the South Indian languages as well as in Hindi. While the thespian actor Shivaji Ganesan delivered mind boggling soliloquies on screen, many of the politically inclined writers and actors of the south Indian screen began to use the medium for reaching out to people. The DMK stalwarts, Annadurai, Karunanidhi and MG Ramachandran did not even resort to subtlety. "Naan anaittal adu nadandu vital..." sang MGR, (if I could be the decision maker, the poor of this world will not suffer....") The very titles of the films were chosen with care; Rickshakaran (Rickshaw Driver), Muttukara Velan (cowherd Velan) and En Kadamai (my duty) to convey his identification with the masses. No wonder he was hailed Makkal Thilagam (gem amongst people). Just how effective was the use of the medium was amply proved with the party coming to power and MGR getting voted Chief Minister of the state.

COURTESY- 100TH YEAR TAMIL CINEMA

adiram
2nd April 2013, 11:08 AM
Saw Ananda Vikatan thalaiyangam.

Another inportant matter, M.G.R. aatchiyil vilaivaasi uyaraveyillai.

avar vazhiyil elimaiyaaga aatchi nadaththaamal, thaanthondrith thanamaaga aadambara aatchi nadaththuvathaal Jayalalithaa aatchiyil vilaivaasigal vinnaith thodum alavu uyarndhu vittana.

M.G.R. peyarai solli aatchi nadaththubavargal ellaam M.G.R. aagivida mudiyaadhu.

mgrbaskaran
2nd April 2013, 03:44 PM
http://i49.tinypic.com/v45pqc.jpg


thanks to mr. Madakkulam prabhakaran

thalivar the great

mgrbaskaran
2nd April 2013, 03:46 PM
அரிய புகைப்படங்களை உள்ளடக்கி 1000 பதிவுகளை மேற்கொண்டு வெற்றி நடை போடும் அன்பு நண்பர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்


http://i48.tinypic.com/k9evkp.jpg

அன்புடன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்

எங்கள் இறைவன்

well done திரு.ஜெய்சங்கர்

Stynagt
2nd April 2013, 05:14 PM
புதுச்சேரியில் ரகசிய போலீஸ் - 115ன் திடீர் விஜயம்..
http://i45.tinypic.com/10qlxqr.jpg
02.04.2013 செவ்வாய் முதல் புதுச்சேரி நியூடோன் திரையரங்கில்..
எந்த வித விளம்பரமும் இல்லாமல் திடீர்னு போட்டு விட்டார்கள். நான் முன்பு அவர்களிடம் கேட்டிருந்தேன். தியேட்டர் சரியில்லாத காரணத்தால் இந்த தியேட்டரில் தலைவரின் படத்தை போடாதீர்கள் என்று..ஆனால் ருசி கண்ட பூனை போல தலைவரின் எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் ஒன்றுக்கு பத்தாக லாபம் பார்த்து விட்டு அவர்களால் இருக்க முடியவில்லை.புதிய படங்களைப்போட்டால் லாபம் வரவில்லை அதனால் தலைவரின் படத்தை போட்டு வசூலை அள்ளிவிடலாம் என்று போட்டிருக்கிறார்கள்

Stynagt
2nd April 2013, 05:17 PM
http://i45.tinypic.com/mcrb7m.jpg

ainefal
2nd April 2013, 10:34 PM
http://www.youtube.com/watch?v=td-vNao9FwA&feature=youtu.be


KODUTHU VAITHAVAL

ainefal
2nd April 2013, 11:54 PM
http://i46.tinypic.com/fktims.jpg


Thanks to Mr. Kumar Rajendran

ainefal
2nd April 2013, 11:55 PM
http://i45.tinypic.com/1zl5g1e.jpg


Thanks to Mr. Kumar Rajendran

Richardsof
3rd April 2013, 05:16 AM
மக்கள் திலகம் அவர்கள் நடத்திய ' நடிகன் குரல் ' சினிமா இதழில் வெளிவந்த நாடோடிமன்னன் மற்றும் பவானி பட விளம்பரங்கள் அருமை .
1957ல் வந்த விளம்பரம் . பாதுகாத்து வைத்து வழங்கிய திரு குமார் ராஜேந்திரன் மற்றும் பதிவிட்ட திரு சைலேஷ் அவர்களுக்கும் நன்றி .

கொடுத்து வைத்தவள் படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ராதா உரையாடல் மிகவும் அருமை .

இன்றைய தலைமுறையினர் அவசியம் பின்பற்ற வேண்டிய சமுதாய சீர் திருத்த கருத்துக்கள் .

Richardsof
3rd April 2013, 05:22 AM
கலியபெருமாள் சார்

மக்கள் திலகத்தின் சில படங்கள் இந்த வாரம் வசூலில் சக்கை போடு போட்டு வருவது அவரது வெற்றி சரித்திரத்தை காட்டுகிறது .

கோவை - மதுரை நகரத்தில் நாடோடிமன்னன் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டு வருகிறது .
அடுத்த வாரம் ஈரோடு , திருப்பூர் நகருக்கு நாடோடிமன்னன் வருவதாக தகவல் .
புதுவை நகரில் ரகசிய போலீஸ் 115 சத்தமில்லாமல் வந்திருப்பது அவருடைய படத்திற்கு என்றென்றுமே வரவேற்பு உள்ளது என்பது தெரிகிறது .

Richardsof
3rd April 2013, 05:34 AM
ரகசிய போலீஸ் 115 - 1968 பொங்கல் முன்பு வந்த சூப்பர் ஹிட் படம்

எனக்கு பிடித்த இந்த காட்சியில் மக்கள் திலகம் மிகவும் அழகாக ஒரு துப்பறியும் அதிகாரியாக இந்த காட்சியில் நடித்திருப்பார் . பின்னணி இசையும் வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் அசோகன் காட்சியும் , கண்ணில் தெரிகின்ற வானம் என்ற அருமையான பாடலும் விவரிக்க முடியாத இன்பம் தரும் காட்சிகள் .
http://youtu.be/xgEPHCdxhBo

Stynagt
3rd April 2013, 10:51 AM
நன்றி வினோத். சார்....விளம்பரம் இல்லாமல் திடீர் என்று ரகசிய ஏஜென்ட் ராமு விஜயம் செய்தாலும் அவரைக் காண ரசிகர் கூட்டம் குவிந்தது..படத்தில் சில காட்சிகளை படம் பிடித்தேன்.. உங்கள் பார்வைக்கு.. நமது தெய்வத்தின் நடிப்பு இயல்பாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது..இந்த படம் துப்பறியும் படமாக இருந்தாலும் காதல் காட்சிகள் மிகவும் நளினமாக சொல்லப்பட்டிருக்கிறது. கண்ணே கனியே பாடலில் ஜெ..வுடனும் கண்ணில் தெரிகின்ற வானம் பாடலில் வெ. நிர்மலாவுடனும் பாடும் காதல் காட்சிகளை காணுங்கள்...எந்த நடிகராலும் இந்த அளவிற்கு காதல் காட்சிகளில் நடிக்க முடியாது என்பதுதான் என்னுடைய திண்ணமான எண்ணம்.

http://i50.tinypic.com/sf8678.jpg

Stynagt
3rd April 2013, 10:53 AM
http://i46.tinypic.com/a11gtw.jpg

Stynagt
3rd April 2013, 10:56 AM
http://i48.tinypic.com/117hflz.jpg

Stynagt
3rd April 2013, 10:59 AM
http://i50.tinypic.com/2nrlu8x.jpg

Stynagt
3rd April 2013, 11:01 AM
http://i49.tinypic.com/24wev40.jpg

Stynagt
3rd April 2013, 11:03 AM
http://i49.tinypic.com/14jloj8.jpg

Stynagt
3rd April 2013, 11:05 AM
http://i45.tinypic.com/11qmxl2.jpg

Stynagt
3rd April 2013, 11:30 AM
http://i48.tinypic.com/33b1q2t.jpg

Stynagt
3rd April 2013, 11:33 AM
http://i50.tinypic.com/2jfc8ly.jpg

Stynagt
3rd April 2013, 11:55 AM
http://i46.tinypic.com/2gv95qo.jpg

Stynagt
3rd April 2013, 11:57 AM
http://i48.tinypic.com/10eqwkn.jpg

adiram
3rd April 2013, 11:58 AM
// ரகசிய போலீஸ் 115 - 1968 பொங்கல் முன்பு வந்த சூப்பர் ஹிட் படம் //

Is it a 100 days movie..?.

If so, in which theatres..?. any ads?.

Stynagt
3rd April 2013, 12:01 PM
http://i46.tinypic.com/o873w0.jpg

Stynagt
3rd April 2013, 12:05 PM
http://i50.tinypic.com/2072w4k.jpg

Stynagt
3rd April 2013, 12:19 PM
http://i45.tinypic.com/2cehxjo.jpg

Richardsof
3rd April 2013, 12:28 PM
11.1.1968 அன்று வந்த மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115

திருச்சி - ஜூபிடர் மற்றும் சேலம் - பேலஸ் இரண்டு அரங்கில் 100 நாட்கள் ஓடியது . அன்றைய தினத்தந்தி பேப்பரில் விளம்பரம் வந்துள்ளது .


சென்னை - கோவை - மதுரை போன்ற நகரங்களில் 10 வாரங்கள் மேல் ஓடியது .

20 அரங்குகள் 50 நாட்கள் ஓடியது .


ரகசிய போலீஸ் 115 ஓடிக்கொண்டிருந்த 43 வது நாளில் தேர் திருவிழா படமும் 11 வது வாரத்தில் குடியிருந்தகோயில் படமும் வந்த நேரத்தில்

ரகசிய போலீஸ் 115 பல இடங்களில் நூறு நாட்கள் ஓடுவது தடைப்பட்டது .
1968ல் வசூலில் இடம் பெற்ற 5 படங்களில் இடம் பெற்றது .

1. குடியிருந்தகோயில்

2. ஒளிவிளக்கு

3. தில்லானா மோகனாம்பாள்

4. ரகசிய போலீஸ் 115

5. பணமா பாசமா.

Stynagt
3rd April 2013, 12:51 PM
http://i50.tinypic.com/d7ih2.jpg

Stynagt
3rd April 2013, 12:52 PM
http://i46.tinypic.com/19sh0n.jpg

Stynagt
3rd April 2013, 04:24 PM
வினோத் சார்,
மதியம் வீட்டுக்கு லஞ்சுக்கு போனபோது தலைவரின் குடியிருந்த கோயில் படத்தின் 'நான் யார் நான் யார்' பாடல் ஒளிபரப்பானது (சன் லைப்). எத்தனையோ தடவை இந்த பாடலை பார்த்திருந்தாலும் இன்னும் எனக்கு ஒரு புதிய பாடலாகவே தோன்றுகிறது. இந்த பாடலில் தலைவரின் நடிப்பை பார்த்து பிரம்மித்து போனேன். இந்த ஒரு பாடிலிலே நவரசத்தையும் காட்டுகிறார்..எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஒரு பாடலின் நடிப்பின் முன் வேறு யாரும் நிற்க முடியாத நடிப்பு..அதை பார்க்க பார்க்க மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமா என்று நினைக்கும்போதே இன்னொரு சேனல் (முரசு) அதே பாடலை ஒளிபரப்பியது. இந்த பாடல் மட்டும் குண்டடி படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டதா.. 1967 மற்றும் 1968ல் வெளிவந்த படங்களில் சில காட்சிகள் குண்டடி படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டவை என்று நினைக்கிறேன்..அடிமைப்பெண் படத்தில் கூட சில காட்சிகள் முன்பு எடுக்கட்டபட்டவை என்று நினைக்கிறேன்..அதே போல ரகசிய போலீஸ் படத்திலும் ஜஸ்டின் சண்டை காட்சி அப்படி எடுக்கப்பட்டதா..இது என் நீண்ட நாள் ஐயம்..தீர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Richardsof
3rd April 2013, 04:30 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/31f0b611-5680-497c-ba42-e232f41f0219_zps94124cc3.jpg

Richardsof
3rd April 2013, 04:38 PM
இனிய நண்பர் கலியபெருமாள் சார்

ரகசிய போலீஸ் 115 படத்தில் இடம் பெற்ற ஜஸ்டின் சண்டைகாட்சி 1966லே [குண்டடி படுவதற்கு முன் ] படமாக்கப்பட்டது .

அதே போல்

புதிய பூமி
அன்னமிட்டகை
ஒருதாய் மக்கள்
குமரிக்கோட்டம்
அரசகட்டளை
காவல்காரன்
குடியிருந்த கோயில்
நம்நாடு
தலைவன்

போன்ற படங்கள் 1966ல் சில காட்சிகள் படமாக்கப்பட்டது .
அதன் விவரம் பின்னர் பதிவிடுகிறேன் .

Richardsof
3rd April 2013, 04:43 PM
Naan yaar naan yaar song - before gun shot.1966

part of the song - naam oruvarai oruvar song - before gun shot.1966

aadi vaaa- aadivaa - arasakattalai - before gun shot -1966

Stynagt
3rd April 2013, 05:25 PM
[QUOTE=esvee;1031392]இனிய நண்பர் கலியபெருமாள் சார்

ரகசிய போலீஸ் 115 படத்தில் இடம் பெற்ற ஜஸ்டின் சண்டைகாட்சி 1966லே [குண்டடி படுவதற்கு முன் ] படமாக்கப்பட்டது .

அதே போல்

புதிய பூமி
அன்னமிட்டகை
ஒருதாய் மக்கள்
குமரிக்கோட்டம்
அரசகட்டளை
காவல்காரன்
குடியிருந்த கோயில்
நம்நாடு
தலைவன்

போன்ற படங்கள் 1966ல் சில காட்சிகள் படமாக்கப்பட்டது .
அதன் விவரம் பின்னர் பதிவிடுகிறேன் .[/QUOTE
Very Kind of you for your information sir..I am expecting more information...Thanks

Stynagt
3rd April 2013, 05:27 PM
மிகவும் நன்றி வினோத் சார்..அரசகட்டளை படம் 75% சதவீதம் குண்டடி படுவதற்கு முன்பு என்று நினைக்கிறேன்..ஒரு சில காட்சிகள் மட்டுமே பிறகு எடுக்கப்பட்டது என்று கருதுகிறேன்

Stynagt
3rd April 2013, 06:02 PM
ஆயிரம் பதிவுகள் கண்ட அதிசய மனிதர் திரு. ஜெய் அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவனின் அருள் கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறேன்
http://i46.tinypic.com/2ds07zr.jpg
அன்பன் வி. கலியபெருமாள்

Richardsof
3rd April 2013, 06:18 PM
இனிய நண்பர் கலியபெருமாள் சார்

1967 ஜனவரி 12 .......

மக்கள் திலகம் அவர்களுக்கு ஏற்பட்ட சம்பவம் ...
சாதாரண அதிர்ச்சி இல்லை . அவருடைய உயிருக்கே முடிவுரை அளவிற்கு பேர் அதிர்ச்சி தந்த சம்பவம் .

தாய்க்கு தலைமகன் கடைசிப் படமாக இருந்திருக்க நிலை ஏற்பட்டிருக்கும் .

மக்கள் திலகத்தின் தர்மம் தலை காத்தது .

மறுப்பிறவி கண்டார் நம் தனிப்பிறவி .

ஆனாலும்

மக்கள் திலகத்தின் அரசியல் - கலை உலக புகழ் எதிர்ப்பாளர்கள் கண்ட கனவு

குரல் வளம் இழந்தார்

மீண்டும் நடிக்க முடியாது

டப்பிங் கொடுக்க வேண்டும்

சினிமா மார்க்கெட் சரிந்து விடும்

ரசிகர்கள் அவருடைய புதியகுரல் - நடிப்பு ஏற்கமாட்டார்கள்

இதனையெல்லாம் எதிர்ப்பாளர்களின் கனவை கனவாகவே மாற்றி விட்டார் .


1967- 1977

என்ன ஒரு இமாலய சாதனை .

தன்னுடைய சொந்த குரலில் சற்று மாற்றம் இருப்பினும் , ரசிகர்களும் , மக்களும் அவரை
மனப் பூர்வமாக ஏற்று வெற்றி மேல் வெற்றி அவருக்கு கொடுத்து வந்தது உலக சாதனையாகும் .
பத்து ஆண்டுகளில் [1967-1977] 4 வெள்ளிவிழா படங்கள் மற்றும் 20 நூறு நாட்கள் படங்கள்
1971ல் சிறந்த நடிகர் பாரத் விருது என்று எண்ணிலடங்கா புகழுக்கு சொந்தக்காரர் நம் மக்கள் திலகம் அவர்கள் .

Richardsof
3rd April 2013, 08:53 PM
http://youtu.be/o5FPVrwXfA8


THANKS PRADEEP SIR

Richardsof
4th April 2013, 09:16 AM
Makkal thilagam m.g.r movie

oru thai makkal - at mahalakshmi theatre from 12 th april 2013.

Stynagt
4th April 2013, 10:23 AM
ரகசிய போலீஸ் 115 படத்தை நேற்றும் பார்த்தேன்..அப்போது சில காட்சிகளை படம் பிடித்தேன்..பல முறை பார்க்க தூண்டும் படங்களில் இந்த படமும் ஒன்று. வெண்ணிற ஆடை நிர்மலா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது..எம்.ஜி.ஆர்.-நிர்மலா சந்திப்பு காட்சிகளில் தலைவர் நகைச்சுவை நடிப்பில் பின்னி எடுக்கிறார்..மேலும் இருவரின் காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கும் படி உள்ளது. முடிவில் நிர்மலா இரக்கப்பட வைக்கிறார்.
http://i50.tinypic.com/2ljkv9w.jpg

Stynagt
4th April 2013, 10:27 AM
http://i45.tinypic.com/2yv6rk0.jpg

Stynagt
4th April 2013, 10:33 AM
http://i49.tinypic.com/2njyfro.jpg

Stynagt
4th April 2013, 10:40 AM
கமலாதேவி..கமலாதேவி..என்று தலைவர் கூப்பிடும் அழகே தனிதான்..இந்த படத்தில் தலைவர் ரொம்ப ஜாலியாக நடித்துள்ளார்
http://i48.tinypic.com/wurm95.jpg

Stynagt
4th April 2013, 10:44 AM
http://i45.tinypic.com/ezlglx.jpg

Richardsof
4th April 2013, 10:49 AM
kaliya perumal sir


super 400 postings . congratulations.

Stynagt
4th April 2013, 10:52 AM
http://i47.tinypic.com/30k7ytv.jpg

Stynagt
4th April 2013, 10:52 AM
Very...very..thanks..vinodh sir.

Stynagt
4th April 2013, 11:00 AM
http://i48.tinypic.com/rgw2lf.jpg

Stynagt
4th April 2013, 11:10 AM
கவிதை சொல்லும் காதல் காட்சிகள்..
http://i45.tinypic.com/2hro8ky.jpg
கொஞ்ச நேரமே வந்து போனாலும் நம் நெஞ்சத்தில் நிற்கிறார் நிர்மலா

Stynagt
4th April 2013, 11:14 AM
http://i47.tinypic.com/2l90b29.jpg

Richardsof
4th April 2013, 11:20 AM
http://youtu.be/eyj5VA3wnSE

Stynagt
4th April 2013, 11:22 AM
http://i50.tinypic.com/352p3me.jpg

Stynagt
4th April 2013, 11:29 AM
சரியான நேரத்தில் வெ.நிர்மலாவின் பேட்டியை பதிவிறக்கம் செய்த வினோத் சார் அவர்களுக்கு நன்றி. திருமதி சரோஜாதேவி போலவே தலைவரிடத்தில் பக்தியும் மரியாதையும் கொண்டவர் நிர்மலா அவர்கள்..பல்லாண்டு வாழ்க..

Richardsof
4th April 2013, 12:58 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/37949f5c-28a0-4290-aa0e-f9106648322a_zpsf0f9b8cd.jpg

siqutacelufuw
4th April 2013, 01:17 PM
திரு கலியபெருமாள் அவர்கள் அறிவது :

நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் சுடப்படுவதற்கு முன்னே, நடித்த மேலும் சில காட்சிகள் :


1. "அடிமைப்பெண்" திரைப்படத்தில், நமது மக்கள் திலகம் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி மற்றும், அபிநய சரஸ்வதி திருமதி. சரோஜா தேவி - புன்னகை அரசி திருமதி கே. ஆர். விஜயா அவர்களுடன் இணைந்து நடித்த சில காட்சிகள்.


2. "அன்னமிட்ட கை" திரைப்படத்தில் சில ஆரம்ப காட்சிகள்,


3. "புதிய பூமி" படத்தில் நமது பொன்மனசெம்மலுடன் , ஜெயலலிதா உணவை பகிர்ந்து கொள்ளும் நகைச்சுவை காட்சி


4. "குடியிருந்த கோயில்" திரைப்படத்தில் - ஆடலுடன் பாடலை கேட்டு ( உலக சினிமா வரலாற்றில் 'பாங்காரா' நடனத்துடன் இடம்
பெற்ற ஒரே பாடல்) என்ற பாடல் காட்சி , நீயேதான் எனக்கு மணவாட்டி மற்றும் நான் யார் நான் யார் நீ யார் ? பாடல் காட்சிகள்,

ரயில்வே ஆவணங்கள் பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெறும், படத்தின் முதல் சண்டைக் காட்சி மற்றும் இரு நாயகர்களும் சந்திக்கும்
அருமையான காட்சி


5. "அரசகட்டளை" படத்தின் 60 சதவிகித காட்சிகள்


6. "ராஜா வீட்டு பிள்ளை" என்ற திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட "ராஜா வீட்டு பெண்ணானாலும் நியாயம் இருக்கணும்" என்ற பாடல் காட்சி.

(பின்பு இத்திரைப்படம் ஜெய்சங்கர் - ஜெயலலிதா ஜோடி நடிப்பில் வெளியானது)


குறிப்பு : "நம் நாடு" மற்றும் "தலைவன்" ஆகிய திரைப்படங்களின் எந்த காட்சிகளும் எடுக்கப்படவில்லை.


தகவல்கள் அளித்து உதவியவர் - திரு. ஏ.எஸ். கலைமணி, கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு, சென்னை.


திரு. கலைமணி அவர்களுக்கு நன்றி

அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

siqutacelufuw
4th April 2013, 01:51 PM
CONGRATULATIONS Mr. KALIYA PERUMAL FOR YOUR HARD EFFORTS IN CROSSING THE 400th POST.

WISHING YOU ALL THE BEST FOR YOUR CONTINUED POSTINGS.


http://i50.tinypic.com/wwga54.jpg

Always yours : S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

Stynagt
4th April 2013, 04:48 PM
திரு கலியபெருமாள் அவர்கள் அறிவது :

நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் சுடப்படுவதற்கு முன்னே, நடித்த மேலும் சில காட்சிகள் :


1. "அடிமைப்பெண்" திரைப்படத்தில், நமது மக்கள் திலகம் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி மற்றும், அபிநய சரஸ்வதி திருமதி. சரோஜா தேவி - புன்னகை அரசி திருமதி கே. ஆர். விஜயா அவர்களுடன் இணைந்து நடித்த சில காட்சிகள்.


2. "அன்னமிட்ட கை" திரைப்படத்தில் சில ஆரம்ப காட்சிகள்,


3. "புதிய பூமி" படத்தில் நமது பொன்மனசெம்மலுடன் , ஜெயலலிதா உணவை பகிர்ந்து கொள்ளும் நகைச்சுவை காட்சி


4. "குடியிருந்த கோயில்" திரைப்படத்தில் - ஆடலுடன் பாடலை கேட்டு ( உலக சினிமா வரலாற்றில் 'பாங்காரா' நடனத்துடன் இடம்
பெற்ற ஒரே பாடல்) என்ற பாடல் காட்சி , நீயேதான் எனக்கு மணவாட்டி மற்றும் நான் யார் நான் யார் நீ யார் ? பாடல் காட்சிகள்,

ரயில்வே ஆவணங்கள் பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெறும், படத்தின் முதல் சண்டைக் காட்சி மற்றும் இரு நாயகர்களும் சந்திக்கும்
அருமையான காட்சி


5. "அரசகட்டளை" படத்தின் 60 சதவிகித காட்சிகள்


6. "ராஜா வீட்டு பிள்ளை" என்ற திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட "ராஜா வீட்டு பெண்ணானாலும் நியாயம் இருக்கணும்" என்ற பாடல் காட்சி.

(பின்பு இத்திரைப்படம் ஜெய்சங்கர் - ஜெயலலிதா ஜோடி நடிப்பில் வெளியானது)


குறிப்பு : "நம் நாடு" மற்றும் "தலைவன்" ஆகிய திரைப்படங்களின் எந்த காட்சிகளும் எடுக்கப்படவில்லை.


தகவல்கள் அளித்து உதவியவர் - திரு. ஏ.எஸ். கலைமணி, கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு, சென்னை.


திரு. கலைமணி அவர்களுக்கு நன்றி

அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

விரிவான தகவல் தந்த திரு. கலைமணி அவர்களுக்கும் திரு. செல்வகுமார் சார் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி..ஒளிவிளக்கு படத்தில் கூட சில காட்சிகள் இருக்கும் என்று நினைக்கிறேன்..சரியா..

Scottkaz
4th April 2013, 07:21 PM
http://i46.tinypic.com/124zy85.jpg

best wishes thiru kaliyaperumal sir

complete 400 posting

Richardsof
4th April 2013, 07:45 PM
ரகசிய போலீஸ் 115
1966 - பறக்கும் பாவை படத்திற்கு பின் வந்த வண்ணப்படம் .

மக்கள் திலகம் அவர்கள் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் . எதிரிகளின் முகாமில் இருந்து தப்பித்து மக்கள் திலகம் ஓடும் அறிமுக சண்டை காட்சியில் படு பிரமாதமாக நடித்திருப்பார் .பின்னணி இசையும் பிரமாதம் .

உயர் காவல் துறை அதிகாரி திருச்சி சௌந்தரராஜன் மக்கள் திலகத்திடம் கொள்ளை கூட்டத்தை பற்றியும் அவர்களது புகைப்படங்களை கட்டும்போதும் உன்னிப்பாக கவனித்து தன்னுடைய முக பாவத்தினை அருமையாக காட்டியிருப்பார் .

ஓட்டல் அறையில் நுழைந்தது முதல் மக்கள் திலகம் தன்னுடைய அறை முழுவதையும் நோட்டமிடும் காட்சி சூப்பர் .பின்னனி இசையும் அருமை . ஜஸ்டின் சண்டை காட்சி சொல்லவே தேவையில்லை .
மக்கள் திலகம் ஆப்பிள் வைத்து ஜஸ்டினுடன் மோதும் காட்சியில் நடிப்பு பிரமாதம் . என்ன ஒரு சுறுசுறுப்பு .
வேகம் -சிரித்த முகம் .ஜெயலலிதா அறிமுகம் - நாடகநடிகர் வேடம் என்று மக்கள் திலகம் ஜெயா வீட்டில் நுழையும் நேரத்தில் அசோகனை சந்திக்கும் காட்சியில் அவரது நடிப்பும் அசோகனின் மிரட்சியும் சூப்பர் .
முதல் காதல் பாடல் '' கண்ணே கனியே '' பாடல் மக்கள் திலகம் காதல் நவரச நடிப்பும் இளமை துள்ளல் நடிப்பும் சூப்பர் .

வெண்ணிற ஆடை அறிமுக பாடலில் '' உன்னை எண்ணி என்னை மறந்தேன் '' பாடலின் போது மக்கள் திலகம் வெளிபடுத்தும் நடிப்பு அபாரம் . பின் வெண்ணிற ஆடை நிர்மலா சந்திக்கும் காட்சி மற்றும்
''கண்ணில் தெரிகின்ற வானம் '' பாடல் காட்சியில் படமாகப்பட்டவிதமும் மக்கள் திலகத்தின் நடன அசைவுகளும் கண்ணுக்கு விருந்து .

வீட்டில் மக்கள் திலகம் - ஜெயா பாடும் ஊடல் பாடல் '' என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் '' பாடலில் துள்ளி ஓடி , நடனமாடும் நம் மக்கள் திலகம் நம்மை மீண்டும் மீண்டும் படம் பார்க்க வைத்து விட்டார் .

தமிழ் இலக்கிய பாடல் - ''பால் தமிழ் பால் '' மக்கள் திலகமும் ஜெயாவும் மிகவும் பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்ப்பர்கள் .

ஜெயிலில் இருக்கும் மக்கள் திலகத்தை போலி இன்ஸ்பெக்டராக வரும் நம்பியார் சந்திக்கும் காட்சியும் அதை தொடர்ந்து அவரை வேறு இடத்திற்கு அழைத்து செல்லும் காட்சி - அங்கு நடக்கும் சண்டைகாட்சி மிகவும் திரில்லிங் .

கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் திலகம் அவர்களின் சண்டைகாட்சி அற்புதம் .

மொத்தத்தில் ரகசிய போலீஸ் 115 - ரசிகர்களுக்கு என்றென்றும் தித்திக்கும் விருந்து .

Richardsof
4th April 2013, 08:15 PM
1500 பதிவுகள் .....

இனிய நண்பர் ராமமூர்த்தி சார்

மிக குறுகிய நாட்களில் பல அருமையான பதிவுகள் வழங்கிய உங்களுக்கு மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .

தொடர்ந்து பல அரிய ஆவணங்கள் இங்கு பதிவிடுவீர்கள் என்று எதிர் பார்க்கிறோம் .

என்றும் அன்புடன்
வினோத்

Richardsof
4th April 2013, 08:26 PM
பாக்யராஜ் அவர்களின் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலில் புரட்சித்தலைவரின் புகழ் பாடலும் காட்சிகளும் புதுமை .

http://youtu.be/mkpRWypy2KM

Richardsof
4th April 2013, 08:39 PM
மக்கள் திலகத்தின் அருமையான நாட்டிய நடன காட்சி - மன்னாதி மன்னன் -1960

http://youtu.be/tFvxoi3eEE0

oygateedat
4th April 2013, 09:05 PM
NADODI MANNAN COLLECTION AT COIMBATORE SARATHA Rs.1,50,000/- FOR LAST 7 DAYS

oygateedat
4th April 2013, 09:08 PM
congrats mr.jai for crossing 1000 posts.

oygateedat
4th April 2013, 09:11 PM
thiru ramamoorthi

congrats for crossing 1500 posts

oygateedat
4th April 2013, 09:12 PM
mr kaliyaperumal

congrats for reaching 400 posts.

ujeetotei
5th April 2013, 07:50 AM
Congrats Kaliaperumal Sir on completing 400 posts and Vellore Ramamurthy Sir on completing 1500 posts (mostly photos in and around Vellore).

ujeetotei
5th April 2013, 07:51 AM
திரு கலியபெருமாள் அவர்கள் அறிவது :

நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் சுடப்படுவதற்கு முன்னே, நடித்த மேலும் சில காட்சிகள் :


1. "அடிமைப்பெண்" திரைப்படத்தில், நமது மக்கள் திலகம் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி மற்றும், அபிநய சரஸ்வதி திருமதி. சரோஜா தேவி - புன்னகை அரசி திருமதி கே. ஆர். விஜயா அவர்களுடன் இணைந்து நடித்த சில காட்சிகள்.


2. "அன்னமிட்ட கை" திரைப்படத்தில் சில ஆரம்ப காட்சிகள்,


3. "புதிய பூமி" படத்தில் நமது பொன்மனசெம்மலுடன் , ஜெயலலிதா உணவை பகிர்ந்து கொள்ளும் நகைச்சுவை காட்சி


4. "குடியிருந்த கோயில்" திரைப்படத்தில் - ஆடலுடன் பாடலை கேட்டு ( உலக சினிமா வரலாற்றில் 'பாங்காரா' நடனத்துடன் இடம்
பெற்ற ஒரே பாடல்) என்ற பாடல் காட்சி , நீயேதான் எனக்கு மணவாட்டி மற்றும் நான் யார் நான் யார் நீ யார் ? பாடல் காட்சிகள்,

ரயில்வே ஆவணங்கள் பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெறும், படத்தின் முதல் சண்டைக் காட்சி மற்றும் இரு நாயகர்களும் சந்திக்கும்
அருமையான காட்சி


5. "அரசகட்டளை" படத்தின் 60 சதவிகித காட்சிகள்


6. "ராஜா வீட்டு பிள்ளை" என்ற திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட "ராஜா வீட்டு பெண்ணானாலும் நியாயம் இருக்கணும்" என்ற பாடல் காட்சி.

(பின்பு இத்திரைப்படம் ஜெய்சங்கர் - ஜெயலலிதா ஜோடி நடிப்பில் வெளியானது)


குறிப்பு : "நம் நாடு" மற்றும் "தலைவன்" ஆகிய திரைப்படங்களின் எந்த காட்சிகளும் எடுக்கப்படவில்லை.


தகவல்கள் அளித்து உதவியவர் - திரு. ஏ.எஸ். கலைமணி, கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு, சென்னை.


திரு. கலைமணி அவர்களுக்கு நன்றி

அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

Thanks for the information Sir.

ujeetotei
5th April 2013, 07:51 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/invitation_zps9548b468.jpg

MGR Function in Malaysia.

MGR Narpani Illam.

ujeetotei
5th April 2013, 07:53 AM
"அன்னமிட்ட கை" திரைப்படத்தில் சில ஆரம்ப காட்சிகள்,

Annamitakai shot in 1966 and released in 1972! The movie was under long time production.

ujeetotei
5th April 2013, 07:54 AM
Annamitakai is the last black and white movie of our Thalaivar.

Richardsof
5th April 2013, 08:27 AM
ரூப் சார்

மக்கள் திலகம் அவர்கள் 1969 முதல் தொடர்ந்து வண்ணப்படங்கள் தந்த நேரத்தில் 1970ல் தலைவன் - 1971ல் ஒருதாய் மக்கள்
1972ல் அன்னமிட்ட கை மூன்று கருப்புவெள்ளை படங்கள் வந்தது .
அன்னமிட்டகை ஆறு வருடங்கள் தயாரிப்பில் இருந்து வந்தது .

Richardsof
5th April 2013, 08:29 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/invitation_zps9548b468.jpg

MGR Function in Malaysia.

MGR Narpani Illam.

ரூப் சார்

மலேசியா தலை நகரில் மக்கள் திலகம் பிறந்த நாள் செய்தி தகவலுக்கு நன்றி .

Richardsof
5th April 2013, 08:40 AM
மதுரை மண்ணில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் தொடர் ஓட்டம் ...

அன்று - 1958 மதுரை - தங்கம் வரலாறு படைத்தது .


நேற்று - மதுரை ஜீவா அரங்கில்


இன்று - .மீனாக்ஷி பாரடைஸ்


55 ஆண்டுகள் ......

மதுரை நகர் சுற்றி தொடர்ந்து வலம் புரியும் மக்கள் திலகத்தின்
வரலாற்று படங்கள் ...

அடுத்த நூற்றாண்டும் இந்த சாதனை தொடரும் .

Richardsof
5th April 2013, 08:53 AM
மதுரை: முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு மதுரையைச் சேர்ந்த ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றார். புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட அமரர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டன.

எம்.ஜி. ஆரை கடவுளாகவே வணங்கினர் நிறையபேர். இன்றும் அவரைக் கடவுளாக நினைத்து வணங்கும் அவரது 'பக்தர்கள்' ஏராளம் உள்ளனர். மதுரை அரும்பனூர் பகுபதியைச் சேர்ந்த ஜோதிடர் மாசானம் (47) . இவரும் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்தான். இவர் அரும்பானூர் பகுதியில் எம்.ஜி.ஆருக்குக் கோயில் கட்டியுள்ளார்.

இந்த கோவிலில், மற்ற கோவில்களில் வழக்கமாக நடைபெறும் முக்கால பூசைகள் , சிறப்பு அபிஷேகம் போன்றவை நடத்தப்படுகின்றது. மேலும், இந்த கோவில்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் இருந்து தத்துவ பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கிறது. இந்த கோவிலுக்கு பொது மக்கள் ஏராளமாக வந்து தரிசனம் செய்கின்றனர். சிலர் நேர்த்திக் கடன் செலுத்துவதும் நடக்கிறதாம்.


இதுகுறித்து மாசானம் கூறுகையில், "ஏழை மக்களின் ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர். இந்த உலகிலிருந்து மறைந்தாலும், அவர் மக்கள் மனங்களில் வாழ்கிறார். மனிதராகப் பிறந்து மகான்களாக மறைந்த ஏசுநாதருக்கும் மகாத்மா காந்திக்கும் கோயில் இல்லையா... அப்படித்தான் எம்ஜிஆருக்கும் கோயில் கட்டியிருக்கிறோம்" என்றார்.

Stynagt
5th April 2013, 10:46 AM
3வது நாளாக நேற்றும் ரகசிய போலீஸ் 115ன் சில காட்சிகள்..நேற்று நல்ல கூட்டம்..இந்த திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையாகவே இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் நடிப்பில் பல பாவங்களை காட்டி நம்மை அசத்துகிறார் நம் தலைவர்.
http://i50.tinypic.com/2hn4cc9.jpg

Stynagt
5th April 2013, 10:48 AM
கண்ணே கனியே பாடலின் ஒளிப்பதிவு அருமை .
http://i50.tinypic.com/of4kle.jpg

Stynagt
5th April 2013, 10:50 AM
http://i45.tinypic.com/2r6dyqp.jpg

Stynagt
5th April 2013, 10:51 AM
http://i46.tinypic.com/30n90d0.jpg

Stynagt
5th April 2013, 10:54 AM
http://i46.tinypic.com/2pze4bd.jpg

ainefal
5th April 2013, 01:32 PM
http://i46.tinypic.com/ra2jxj.jpg


congrats MGR Ramamoorthi Sir 1500-1600.

Richardsof
5th April 2013, 01:33 PM
மக்கள் *திலகத்தின் ரசிகர்களின் *நீண்ட நாள் *கனவு .






http://i45.tinypic.com/34dj69s.jpg



மக்கள் திலகம் *அவர்கள் *நடித்த *சதிலீலாவதி *முதல் *மதுரையை மீட்ட *சுந்தரபாண்டியன் *படம் வரை *134 *படங்கள் *வந்துள்ளது .




ஆரம்ப *கால * சில *படங்களின் *ஸ்டில்ஸ் *சரிவர *கிடைக்காமல் *இருந்தது .




மக்கள் திலகம் *திரை உலகில் *இருந்தவரை [ 1936-1977] *அவரது *பட செய்திகள் , படங்கள் , விளம்பரங்கள் *என்று *அந்தந்த *கால *கட்டங்களில் *பல்வேறு *பத்திரிகைகளில் , சினிமா இதழ்களில் *வந்துள்ளன .




1977க்கு *பின் *இன்று *வரை *மக்கள் திலகத்திற்கு *பல *சினிமா *இதழ்கள் *தொடர்ந்து *வந்தன - வந்து *கொண்டிருக்கின்றன .








இருந்தாலும் *மக்கள் திலகத்தின் *ரசிகர்களின் *நீண்ட நாள் *கனவான*




மக்கள் திலகம் பட *ஆல்பம்*




134 படங்களின் சோலோ *படத்துடன் , மிக அழகிய *மக்கள் திலகத்தின் *அழகான *எழிலான*




சிரித்த முகமாக*
அரசனாக*
வீரனாக*
நவ ரச *நடிப்பு *நாயகனாக *தோன்றும்*




134 படங்களின் *134 வகையான *ஸ்டில்*




மிக உயர்தர *அச்சில் , தரமான *பேப்பரில் ,




150 *பக்கங்களுடன் *மக்கள் திலகம் *மலர் மாலை -1 *என்ற *தலைப்பில் * 14.4.2013 *அன்று *இந்த புத்தகம் * வெளிவர *உள்ளது .








மக்கள் திலகத்தின் *ரசிகர்களின் கனவை *நனவாக்கிய *படைப்பாளி*
பற்றிய * தகவல் * மற்றும் *இனிய *இதர *செய்திகள் ..... விரைவில்*